- Messages
- 906
- Reaction score
- 1,132
- Points
- 93
அடித்து ஊற்றியது மழை. ஷவரின் அடியில் நின்றாலும் இந்த அடித்து ஊற்றும் மழையில் கிடைக்கிற ஆனந்தம் கிடைக்காதென்று சொட்டச்சொட்ட நனைந்தாள் அதிதி. அடைமழையில் உடை நனைந்து, மகிழ்ச்சிக் கரையுடைத்து வளைந்தாடுபவளை அக்குடிலில் இருந்து ரசித்துப் பார்த்தான் விக்ரமன்.
அவள் மழையில் ஆடிய ஆட்டத்தில் அவனே மழையாகிப்போனதை அறியாதவள் மழை நின்ற பிறகு அவனை ஈரமாக்கும் பொருட்டு கட்டியணைத்தாள். அவர்களிருவரும் இருந்த உலகின் வெப்பம் தணிந்தது. ஆனால், அவர்கள் உடலின் வெப்பம் தணிய மறுத்து, துணை சேர துணிந்தது. இறுதியில் வெற்றியும் கண்டது.
வானும் மண்ணும் கொண்ட கூடலை மனிதர்கள் இல்லையென்று பொய் சொல்லக்கூடுமென சான்றை உண்டாக்கியது இயற்கை. ஆம், மண்மணம்!
இரவில் தங்கள் இருப்பை உணர்த்த, மழைக்காலப் பாடகர்கள் தங்கள் பாட்டு கச்சேரியைத் தொடங்கினர். தவளைகளின் 'தரிகிடத் தத்தோம்' இசையை செவியிலும், மண்வாசனையை நாசியிலும் உணர்ந்தவர்கள் நடுஜாமம் பனிரெண்டு மணிக்கு தங்கள் கண்களைத் திறந்தனர்.
தன்னவளுக்காய் அடுப்படியில் குத்துக்காலிட்டு அமர்ந்து, கருப்பட்டி காப்பியை தயாரித்தான் விக்ரமன். உடன் பதமாக நிலக்கடலையும் வறுத்தான். காப்பியை அருந்தியவள் நிலக் கடலையை ரசித்துக் கொரித்தாள்.
மழையில் நனைந்து இரண்டு நாள் காய்ச்சலில் விழுந்தவளை தாயாய் நலம் பேணினான் விக்ரமன். அவனின் அக்கறையில் விரைவில் உடல்நலம் தேறினாள் அதிதி. உடன் இந்த உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்தப்பெண் தான் தான் எனவும் எண்ணிக் கொண்டாள்.
அங்கிருந்த ஒரு வாரமும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் போன்றே இருவரும், இனி இறந்தாலும் பரவாயில்லை என எண்ணும் அளவிற்கு அன்பையும், ஆனந்தத்தையும் ஆழ்ந்து அனுபவித்தனர்.
அந்த நாட்களுக்குப் பின் தனக்கு தனிமை வேண்டும் நேரமெல்லாம் அவளை அழைத்துக்கொண்டு, அக்குடிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரமன். நாச்சியம்மை இதனை கண்டும் காணாமலும் இருந்தார்.
மனதில் ஸ்ருதிக்கு வன்மம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயேப் போட்டு புதைத்துக் கொண்டாள். பின்னே, நாச்சியம்மையை பகைத்து அவளால் அவ்வீட்டில் வாழ முடியுமா என்ன?
வந்த புதிதிலேயே ஸ்ருதிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை கண்டுகொண்ட அதிதி, கீர்த்தியும் ராதாவும் தன்னிடம் பாசமாக இருப்பதைக் கண்டு சற்றே மனம் ஆறுதலாக உணர்ந்தாள்.
அதேபோல் வீட்டில் இருந்த மற்றவர்களும் அவளிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டனர். காரணம், நாச்சியம்மையின் உத்தரவு.
ஆனால், இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒருவன் அதிதியை கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல, கௌதமன் தான்.
எப்பொழுது முதன்முதலாக அதிதியை கண்டானோ, அப்போதே அவனுக்கு அதிதி மீது தீராத ஆசை ஏற்பட்டுவிட்டது. தன் அன்னை அதிதியை தனக்குத் தான் திருமணம் செய்து வைக்கப் போகிறார் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்கு அவர் திடீரென விக்ரமனிடம் அதிதியை அழைத்து வருமாறு கூறியது ஏமாற்றத்தை உண்டாக்கியது.
அதிதி தனக்கானவள் என்னும் எண்ணம் அவன் மனதில் ஆழப் புதைந்திருந்த காரணத்தால், அதிதி விக்ரமனுடன் டைனிங் டேபிள், வெளியிடங்கள் என பேசிச் சிரிக்கும் போதெல்லாம் பொறாமை உணர்வால் வெந்து தணிந்தான்.
இதனால் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியிலேயே இருந்து வந்தான்.
ஆனால், அதிதியை தனித்துப் பார்க்கும் நேரமெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் அவளை தாபப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இது தெரியாமல் அதிதியும் அவனைக் காணும் போது கள்ளங் கபடமில்லாமல் சிரித்து வைப்பாள்.
அவள் மழையில் ஆடிய ஆட்டத்தில் அவனே மழையாகிப்போனதை அறியாதவள் மழை நின்ற பிறகு அவனை ஈரமாக்கும் பொருட்டு கட்டியணைத்தாள். அவர்களிருவரும் இருந்த உலகின் வெப்பம் தணிந்தது. ஆனால், அவர்கள் உடலின் வெப்பம் தணிய மறுத்து, துணை சேர துணிந்தது. இறுதியில் வெற்றியும் கண்டது.
வானும் மண்ணும் கொண்ட கூடலை மனிதர்கள் இல்லையென்று பொய் சொல்லக்கூடுமென சான்றை உண்டாக்கியது இயற்கை. ஆம், மண்மணம்!
இரவில் தங்கள் இருப்பை உணர்த்த, மழைக்காலப் பாடகர்கள் தங்கள் பாட்டு கச்சேரியைத் தொடங்கினர். தவளைகளின் 'தரிகிடத் தத்தோம்' இசையை செவியிலும், மண்வாசனையை நாசியிலும் உணர்ந்தவர்கள் நடுஜாமம் பனிரெண்டு மணிக்கு தங்கள் கண்களைத் திறந்தனர்.
தன்னவளுக்காய் அடுப்படியில் குத்துக்காலிட்டு அமர்ந்து, கருப்பட்டி காப்பியை தயாரித்தான் விக்ரமன். உடன் பதமாக நிலக்கடலையும் வறுத்தான். காப்பியை அருந்தியவள் நிலக் கடலையை ரசித்துக் கொரித்தாள்.
மழையில் நனைந்து இரண்டு நாள் காய்ச்சலில் விழுந்தவளை தாயாய் நலம் பேணினான் விக்ரமன். அவனின் அக்கறையில் விரைவில் உடல்நலம் தேறினாள் அதிதி. உடன் இந்த உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்தப்பெண் தான் தான் எனவும் எண்ணிக் கொண்டாள்.
அங்கிருந்த ஒரு வாரமும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் போன்றே இருவரும், இனி இறந்தாலும் பரவாயில்லை என எண்ணும் அளவிற்கு அன்பையும், ஆனந்தத்தையும் ஆழ்ந்து அனுபவித்தனர்.
அந்த நாட்களுக்குப் பின் தனக்கு தனிமை வேண்டும் நேரமெல்லாம் அவளை அழைத்துக்கொண்டு, அக்குடிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரமன். நாச்சியம்மை இதனை கண்டும் காணாமலும் இருந்தார்.
மனதில் ஸ்ருதிக்கு வன்மம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயேப் போட்டு புதைத்துக் கொண்டாள். பின்னே, நாச்சியம்மையை பகைத்து அவளால் அவ்வீட்டில் வாழ முடியுமா என்ன?
வந்த புதிதிலேயே ஸ்ருதிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை கண்டுகொண்ட அதிதி, கீர்த்தியும் ராதாவும் தன்னிடம் பாசமாக இருப்பதைக் கண்டு சற்றே மனம் ஆறுதலாக உணர்ந்தாள்.
அதேபோல் வீட்டில் இருந்த மற்றவர்களும் அவளிடம் நல்ல முறையிலேயே நடந்து கொண்டனர். காரணம், நாச்சியம்மையின் உத்தரவு.
ஆனால், இவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒருவன் அதிதியை கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல, கௌதமன் தான்.
எப்பொழுது முதன்முதலாக அதிதியை கண்டானோ, அப்போதே அவனுக்கு அதிதி மீது தீராத ஆசை ஏற்பட்டுவிட்டது. தன் அன்னை அதிதியை தனக்குத் தான் திருமணம் செய்து வைக்கப் போகிறார் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்கு அவர் திடீரென விக்ரமனிடம் அதிதியை அழைத்து வருமாறு கூறியது ஏமாற்றத்தை உண்டாக்கியது.
அதிதி தனக்கானவள் என்னும் எண்ணம் அவன் மனதில் ஆழப் புதைந்திருந்த காரணத்தால், அதிதி விக்ரமனுடன் டைனிங் டேபிள், வெளியிடங்கள் என பேசிச் சிரிக்கும் போதெல்லாம் பொறாமை உணர்வால் வெந்து தணிந்தான்.
இதனால் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியிலேயே இருந்து வந்தான்.
ஆனால், அதிதியை தனித்துப் பார்க்கும் நேரமெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் அவளை தாபப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இது தெரியாமல் அதிதியும் அவனைக் காணும் போது கள்ளங் கபடமில்லாமல் சிரித்து வைப்பாள்.