Srija Venkatesh
Member
- Messages
- 60
- Reaction score
- 123
- Points
- 18
அத்தியாயம் 14.
அமைச்சருக்கு குழந்தை பிறந்த அன்று அவரைப் பார்த்தது தான். பிறகு அவர் அரச சபை, மன்னரோடு சந்திப்பு, அதோடு மக்கள் நலப்பணி என மிகவும் பரபரப்பாக இருந்தார் அமைச்சர். ஆனால் தித்தனுக்கு ஒரே குழப்பம். அதோடு யோசனை வேறு. தன் நண்பர்களோடு கலந்து பேசினான். அன்று அமைச்சர் ஒற்றறிதலில் தேர்ந்த பெண்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறியிருந்ததால் உடனே செண்பகப் பொழிலில் இருந்து பிரம்ம நாயகியையும் முல்லையையும் வரவழைப்பது என முடிவு செய்து கொண்டார்கள். அதோடு தித்தன் மனவி கல்யாணியும் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே இல்லத்தில் வசித்தால் தான் திட்டமிட முடியும். இப்போது இருக்கும் வீடு அமைச்சரின் இல்லத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் தள்ளி இருந்தது. பக்கத்தில் இருந்தால் தான் நல்லது என அபிப்பிராயப்பட்டார்கள். இது குறித்து அமைச்சரிடம் பேசலாம் என முடிவு செய்து உள்ளே சென்றார்கள். தித்தன், வேலன் மற்றும் தங்கமணி வந்திருக்கிறார்கள் என்றதுமே உமையாள் தேவியார் தனது அறைக்கு வரச் சொன்னார். தயங்கியபடியே சென்றனர் மூவரும். தேக்குமரத்தொட்டிலில் படுத்திருந்தது ஒரு மாதமே ஆன குழந்தை. அருகில் ஒரு நாற்காலியில் களைப்பாக அமர்ந்திருந்தார் அமைச்சரின் மனைவி. அது அவரின் தனியிடம் என்பதால் தயக்கமின்றிப் பேசினார்.
"என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? சொல்லுங்கள்! ஒற்றறிய பெண்ணை ஏற்பாடு செய்து விட்டீர்களா?" என்றார்.
"அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன் தாயே! செண்பகப் பொழிலில் என் தங்கைகள் இருவர் ஏற்கனவே ஒற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதோடு என் மனைவியும் வந்து விட்டால் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால்....தங்குவது...." என இழுத்தான் தித்தன்.
"உம்! நம் இல்லத்திலேயே பக்கவாட்டில் சிற்றில் இருக்கிறது அல்லவா? அதில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம். மற்ற இரு பெண்களும் என்னுடனே தங்கட்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் காதலில் நிலை மறந்து விட்டால் என்ன செய்ய?" என்று சொல்லிச் சிரித்தார். இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் முன்னால் சொன்ன செய்திகளை நினைவில் வைத்திருந்து சொல்லும் அந்தப் பெண்மணிய மரியாதையோடு பார்த்தனர் மூவரும். தங்கமணிக்கும், வேலனுக்கும் வெட்கம் தாங்கவில்லை. நெளிந்தார்கள். சிரித்து விட்டான் தித்தன். கூடவே நகைத்தார்கள் உமா தேவியார்.
"போகட்டும்! எப்படி அவர்களை அழைத்து வரப் போகிறீர்கள்?" என்றார்.
"இப்போது இருக்கும் நிலையில் எங்கள் மூவராலும் செல்ல முடியாது. ஊரில் எங்களது நண்பன் வேங்கையன் இருக்கிறான் தாயே! அவனுக்கு ஓலை அனுப்பி விட்டால் அனைவரையும் பாதுகாப்பாக குதிரையில் அழைத்து வந்து விடுவான். அதற்குத் தேவையான குதிரைகளுக்குத்தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை." என்றான் தித்தன்.
"அது ஒன்றும் பிரச்சனை இல்லை! நம்மிடம் இருக்கும் குதிரைகளில் மூன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்கு இப்போது தானே பிரசவம் ஆகியிருக்கிறது? சிறுகுழந்தையை வைத்துக்கொண்டு குதிரையில் பயணிக்க முடியாது. ஆகையால் அவளுக்கு மட்டும் பல்லக்கு ஏற்பாடு செய்து விடு தித்தா! இங்கிருந்து பல்லக்கு, குதிரைகள் அவற்றை வழி நடத்திச் செல்ல நம்பிக்கையான ஆள், இவர்களை ஏற்பாடு செய்து விடு. இன்னும் இரு தினங்களில் செல்ல வேண்டும். அடுத்த வாரத்துக்குள் உங்கள் பெண்கள் அனைவரும் நம் இல்லத்தில் இருக்க வேண்டும்." என்றார்.
யோசித்தான் தித்தன். உமாதேவியார் சொல்வது போல செய்து விடலாம். ஆனால் நம்பிக்கையான ஆள் வேண்டுமே? அரண்மனைப் பணிப்பெண்கள் வரை சேர் ஒற்றர்களின் கரம் நீண்டிருக்கும் போது, யாரை நம்புவது? இந்நேரம் எனது பெயரும், என் நண்பர்களின் பெயரும் அவர்களது தலைமை வரை போயிருக்கும். மன்னருக்கு நெருக்கமான அமைச்சரைக் கொல்ல முயன்றவர்கள் எனக்குக் குறி வைக்க மாட்டார்களா என்ன? அப்படியானால் என் மனைவி, தங்கைகள் என அனைவரது உயிருமே ஆபத்தில் தான் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக ஒருவனை நம்புவதை விட நானோ அல்லது வேலனோ சென்றால் என்ன?
"என்ன யோசிக்கிறாய் தித்தா?"
"தேவி! நானே சென்று அழைத்து வருவது நல்லது என நினைக்கிறேன்." என்றான்.
இடை மறித்தான் தங்கமணி.
"தாயே! வேலனுக்கும் தித்தனுக்கும் இங்கே அதிக வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் போய் அழைத்து வருகிறேன். வரும் போது வேங்கையனும் இருப்பான் என்பதால் பாதுகாப்புக்குக் கவலை இல்லை." என்றான்.
அவ்வாறே செய்யலாம் என முடிவு எடுத்தார்கள். அதற்குத் தேவையான பொன், ஆட்கள் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு தங்கமணியே செல்வதால் ஓலை தேவையில்லை எனவும் பேசினார்கள். மறு நாள் காலையில் தங்கணி ஒரு குதிரையில் பயணித்தான். ஒரு குதிரையில் பல்லக்கு அதைத் தூக்கும் ஆட்களில் ஒருவன், இரண்டாவது குதிரையில் பல்லக்குத் தூகிகளில் இருவர், மூன்றாவது குதிரையில் நாலாவதில் பல்லக்குத் தூக்கும் ஆள் எனப் பயணித்தார்கள். வரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி அவர்களை அனுப்பினார்கள் தித்தனும் வேலனும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மனைவி குழந்தையைப் பார்க்காலம் என்ற எண்ணம் இனிக்க தங்கள் பணியைத் தொடரச் என்றான் தித்தன்.
அதே நேரத்தில் மதுரை நகரின் மையத்தில் இருந்த ஒரு மண்டபம். அதில் மூவர் வீற்றிருந்தனர். அதில் ஒரு பெண் மிகவும் களைப்புற்றவளைப் போலக் காணப்பட்டாள். அவர்கள் வேறு யாருமல்ல வர்த்தினியும் பூந்துறையானும் தான். பக்கத்தில் அமர்ந்திருந்தது தான் அவர்களின் தலைவன் என ஊகிக்க முடிந்தது. அவனது தோற்றம் சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. நரைத்த தாடி மீசை. தலையில் ஒரு முடி கூட இல்லை. முகத்திலும் கை கால்களிலும் சுருக்கம். ஆனால் கண்களில் கூர்மை. நாலாபுறமும் பார்த்தபடி சுழன்றன அவனது கண்கள். அவன் பேசும் போது உதடுகள் அசைகிறதா இல்லையா? என்பதை உற்றுக் கவனித்தால் தான் தெரியும்.
"அமைச்சனையும் அவன் மனைவியையும் கொல்லும் திட்டம் எப்படி தோற்றது?" என்றான் அந்த வயதானவன். குரலிலோ முகத்திலோ கோபமே தெரியவில்லை என்றாலும் அந்தக் குரலில் இருந்த அமைதியே இருவரையும் வெருட்டியது.
"தவறு நேர்ந்து விட்டது தலைவா! மங்கையும், அமுதாவும் தாங்களே சென்று கொடுத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்ப்படுவோமோ என எண்ணி மற்றொரு பணிப்பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் பெயர் பவளமாலையாம். அவள் போன நேரம் அங்கே மருத்துவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட மருந்தே இல்லை அது என அடையாளம் க்ண்டு கொண்டு விட்டார். அதனால் அவர்கள் தப்பித்து விட்டார்கள்." என்றாள் வர்த்தினி.
சற்று நேரம் அமைதியாக இருந்தான் தலைவன் எனப்பட்டவன்.
"உம்! போகட்டும் இனி மங்கையையும் அவள் தமக்கையையும் என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும் அல்லவா வர்த்தினி?" என்றான்.
திக்கென்றது பூந்துறையானுக்கு. ஆனால் வர்த்தினியோ அலட்டிக்கொள்ளவேயில்லை. தலையை மட்டும் ஆட்டினாள்.
"அடுத்து...நமது இலக்கு தித்தன் குடும்பம் தான். அரச குடும்பத்தை செண்பகப் பொழிலுக்கு அழைத்துப் போய் அங்கே பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அது மட்டும் நடக்கக் கூடாது. அது போன்ற ஒரு எண்ணம் பாண்டியனுக்கு வரவே கூடாது. அவன் இங்கேயே இருந்து சேர மன்னனிடம் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவனது தோல்வியை வருங்காலத்தவர்கள் கேவலமாகப் பேச வேண்டும்." என்றான்.
"அப்படியானால் தலைவா! நம்மால் இப்போதே மன்னனையும், அரசியையும் எளிதாகக் கொலை செய்ய முடியுமே? ஏன் செய்யவில்லை?" என்றான் பூந்துறையான். தலைவனின் பார்வை பூந்துறையான் மேல் படிந்தது. அந்தப் பார்வையிலேயே பயம் வர கண்களைத் தழைத்துக்கொண்டான் பூந்துறையான்..
"முட்டாள்! நம் நோக்கம், நிதானம் என எதுவும் தெரியாமல் பேசுகிறாயே? " என்றான் தலைவன்.
"இவனுக்கு விளக்கம் நான் சொல்லிக்கொள்கேறேன் தலைவா! உங்களது நேரம் மிகவும் முக்கியம். இப்படி விரயம் செய்ய முடியாது. ஆகையால் நான் யோசித்து வைத்திருக்கும் திட்டத்தைச் சொல்கிறேன்." என்றாள் வர்த்தினி. மீண்டும் ஒரு தலையசைப்பு தலைவனிடமிருந்து.
"கஜராஜனுக்குத் துணையாக இருப்பவர்களை நன்றாகவே கவனித்துப் பாதுகாப்பாக வைப்போம். யானையின் தந்தம் வெளியில் தெரியும், ஆனால் பற்கள் தெரியாது. ஆனால் உண்ணப் பயன்படுவது பற்களே! தந்தம் அல்ல. அதனால் மீகாமனை வலையில் சிக்க வைத்துப் பிடித்து விடுகிறேன்." என்றாள்.
கேட்டுக்கொண்டிருந்த பூந்துறையானுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. என்ன சொல்கிறாள் இவள்? கஜராஜனா? அது யார்? யானையின் தந்தத்துக்கும் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? பைத்தியம் பிடித்து உளறுகிறாள். தலைவனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறாள் என எண்ணியபடியே தலைவனைப் பார்த்தான். வாயைப் பிளந்து விட்டான். சுருக்கங்கள் நிறைந்த அந்த முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது.
"சபாஷ் வர்த்தினி! நல்ல திட்டம்! அப்படியே செய்! ஆகையால் இரவு நேரம் நாளை என்னை வந்து பார். அழிவும் தருகிறேன்." என்று சொல்லி விட்டு போய் விட்டார். நடையிலும் அத்தனை தளர்ச்சி. அவர் சென்றதும் பூந்துறையானை நோக்கினாள் வர்த்தினி.
"நமக்கு வேலைகள் அதிகம் உள்ளன. அமுதாவையும், மங்கையையும் உறங்கச் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்கிறாயா?" என்றாள்.
உறங்கச் செய்வது என்றால் இருவரையும் இல்லாமல் ஆக்க வேண்டும் எனப் புரிந்தது பூந்துறையானுக்கு. ஆனாலும் பெண் கொலை புரிய மனம் இல்லை. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்ட வர்த்தினி "சரி! அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் வருவார்கள். இதை அவர்கள் உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தப் பழத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உடனே வேலை செய்யாது. குறைந்தது 8 மணி நேரம் ஆகும்." வர்த்தினி பேசிக்கொண்டிருக்கும் போதே அமுத தேவியும், மங்கையும் வந்து விட்டார்கள். இருவரும் அரண்மனைப் பணிப்பெண்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
"தலைவர் என்ன சொன்னார்?" என்றாள் அமுதா எடுத்த எடுப்பில்.
"கத்தாதே அமுதா! திட்டம் தோற்றதற்கு நீங்கள் காரணமல்ல என தலைவர் புரிந்து கொண்டு விட்டார். ஆனால் இனியும் நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஆபத்து. ஆகையால் உங்களை சேர நாட்டுக்குச் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். அங்கே சென்றதும் செங்கம் புழையாரிடம் இந்த ஓலையைக் கொடுக்குமாறு கூறினார்." என்று சொல்லி துணிச் சுருளில் பொதிந்த ஒரு ஓலையைக் கொடுத்தாள் வர்த்தினி. அயர்ந்தே போனான் பூந்துறையான். இவள் உண்மையிலேயே பெண் தானா? இல்லை நயவஞ்சகத்தின் மொத்த உருவமா?
மங்கைக்கும், அமுத தேவிக்கும் முகம் மலர்ந்தது. கை நீட்டி அதை வாங்கிக்கொண்டனர்.
"இப்போதே நீங்கள் புறப்படுங்கள்! மீண்டும் அரண்மனைக்குப் போனால் அங்கே உங்களை விசாரிக்கவும் ஆட்கள் வரக் கூடும். உங்களுக்குத் தேவையான பொன்னும், துணிகளும் இதில் உள்ளன. அதோடு சில பழங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் வழியில் ஊருக்குள் செல்ல வேண்டாம். பழத்தோடு சில கிழங்குகளையும் அவித்து வைத்திருக்கிறேன். உணவுப்பிரச்சனை இல்லை." என்றாள் வர்த்தினி. அவற்றை வாங்கிக்கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டனர் இரு பெண்களும். அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பூந்துறையான். அவன் மனம் இரக்கப்பட்டது.
"வர்த்தினி! அவர்கள் அந்தப் பழத்தை உண்ணவில்லையே?"
"இன்று இரவுக்குள் எப்படியும் உண்பார்கள்."
மௌனமானான் பூந்துறையான். அவனுக்கு வர்த்தினியின் திட்டம் புரிந்தது. உணவுக்காக ஊருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பெண்கள் இரவுக்குள் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கட்டாயம் உண்பார்கள். அந்த விஷம் வேலை செய்ய எட்டு மணி நேரம் ஆகும். இரவு உறக்கத்திலோ அல்லது மறு நாள் காலையிலோ காட்டு வழியில் பயணம் செய்யும் போது இறந்து போவார்கள். உடலை காட்டு விலங்குகள் இழுத்துச் சென்று விடும். ஆகையால் இப்படி இரு பெண்கள் இருந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடும். அரண்மனையைப் பொறுத்தவரை இரு பெண்கள், அவர்கள் சேர ஒற்றர்களாகவும் இருக்கலாம். அவர்களைக் காணவில்லை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்றிருக்கக் கொடும். அவ்வளவு தாம். விஷயம் முடிந்தது.
உடல் நடுங்கியது பூந்துறையானுக்கு. அவன் சிறந்த வீரன் தான். எப்போதுமே நேருக்கு நேர் மோதுவான். அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஆனால் இது போல தங்கள் ஆட்களில் இருவரை சூழ்ச்சி செய்து கொல்வது மட்டுமல்ல, அதைக் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் செய்து முடித்த வர்த்தினியை நினைத்து பயமாக இருந்தது.
"நீ உண்மையிலேயே பெண் தானா வர்த்தினி?" என்றான். அவனை முறைத்தாள் அவள்.
"எதற்கு உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சி?"
"இல்லை! இப்படி இரக்கமோ, கருணையோ இல்லாமல் இருக்கிறாயே?" என்றான்.
"என்னிடம் யாரும் அவற்றை எதிர்பார்க்க வேண்டாம். இப்போது நாம் கிளம்பலாம். நமது திட்டம் புரிந்தது அல்லவா உனக்கு?"என்றாள்.
தயங்கினான் பூந்துறையான். அந்த இரு பெண்களும் என்ன ஆவார்கள் என்பது தான் புரிந்ததே தவிர, தலைவனும், இவளும் பேசியது எதுவுமே புரியவில்லையே? அதைச் சொன்னால் என்னயும் கொன்று விடுவாளோ என்னவோ? இவளுக்கு உதவிக்கு ஆட்கள் தேவையில்லை என தலைவனே சொல்லும் போது, நான் எம்மாத்திரம்? என எண்ணிக் கொண்டு பேசாமல் நின்றான்.
"புரியவில்லை அப்படித்தானே?" என்றாள்.
மௌனமே பதிலாக வந்தது.
"உன்னைப் போன்ற கோழையை நான் பார்த்ததே இல்லை. உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். சிறு பெண்ணான என்னிடம் பயப்படுகிறாயே? உனக்கு வெட்கமில்லை?" என்றாள்.
நீயா சிறுபெண். அரக்கி அல்லவா நீ? என மனதில் நினைத்துக்கொண்டான் ஆனால் சொல்லவில்லை.
"பயமில்லை வர்த்தினி! எச்சரிக்கை அவ்வளவு தான். உண்மையிலேயே நீயும் தலைவரும் பேசிக்கொண்டது புரியத்தான் இல்லை!" என்றான்.
"இங்கே அதைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல. நமது இடத்துக்குப் போவோம்." என்று சொல்லி விட்டு நடக்கும் அந்தப் பெண்ணை பயத்தோடு தொடர்ந்தான் பூந்துறையான்.
அதே நேரத்தில் குரு விந்தையனிடமிருந்து ஒரு ரகசிய ஓலையைப் பெற்றிருந்தான் தித்தன். அதைப் படித்ததும் அவன் கண்களில் நெருப்பு.
அமைச்சருக்கு குழந்தை பிறந்த அன்று அவரைப் பார்த்தது தான். பிறகு அவர் அரச சபை, மன்னரோடு சந்திப்பு, அதோடு மக்கள் நலப்பணி என மிகவும் பரபரப்பாக இருந்தார் அமைச்சர். ஆனால் தித்தனுக்கு ஒரே குழப்பம். அதோடு யோசனை வேறு. தன் நண்பர்களோடு கலந்து பேசினான். அன்று அமைச்சர் ஒற்றறிதலில் தேர்ந்த பெண்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறியிருந்ததால் உடனே செண்பகப் பொழிலில் இருந்து பிரம்ம நாயகியையும் முல்லையையும் வரவழைப்பது என முடிவு செய்து கொண்டார்கள். அதோடு தித்தன் மனவி கல்யாணியும் வந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே இல்லத்தில் வசித்தால் தான் திட்டமிட முடியும். இப்போது இருக்கும் வீடு அமைச்சரின் இல்லத்திலிருந்தும், அரண்மனையிலிருந்தும் தள்ளி இருந்தது. பக்கத்தில் இருந்தால் தான் நல்லது என அபிப்பிராயப்பட்டார்கள். இது குறித்து அமைச்சரிடம் பேசலாம் என முடிவு செய்து உள்ளே சென்றார்கள். தித்தன், வேலன் மற்றும் தங்கமணி வந்திருக்கிறார்கள் என்றதுமே உமையாள் தேவியார் தனது அறைக்கு வரச் சொன்னார். தயங்கியபடியே சென்றனர் மூவரும். தேக்குமரத்தொட்டிலில் படுத்திருந்தது ஒரு மாதமே ஆன குழந்தை. அருகில் ஒரு நாற்காலியில் களைப்பாக அமர்ந்திருந்தார் அமைச்சரின் மனைவி. அது அவரின் தனியிடம் என்பதால் தயக்கமின்றிப் பேசினார்.
"என்னிடம் சொல்ல என்ன தயக்கம்? சொல்லுங்கள்! ஒற்றறிய பெண்ணை ஏற்பாடு செய்து விட்டீர்களா?" என்றார்.
"அதைப் பற்றிப் பேசத்தான் வந்தேன் தாயே! செண்பகப் பொழிலில் என் தங்கைகள் இருவர் ஏற்கனவே ஒற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதோடு என் மனைவியும் வந்து விட்டால் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால்....தங்குவது...." என இழுத்தான் தித்தன்.
"உம்! நம் இல்லத்திலேயே பக்கவாட்டில் சிற்றில் இருக்கிறது அல்லவா? அதில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம். மற்ற இரு பெண்களும் என்னுடனே தங்கட்டும். அது தான் அவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் காதலில் நிலை மறந்து விட்டால் என்ன செய்ய?" என்று சொல்லிச் சிரித்தார். இத்தனை விஷயங்களுக்கு மத்தியிலும் முன்னால் சொன்ன செய்திகளை நினைவில் வைத்திருந்து சொல்லும் அந்தப் பெண்மணிய மரியாதையோடு பார்த்தனர் மூவரும். தங்கமணிக்கும், வேலனுக்கும் வெட்கம் தாங்கவில்லை. நெளிந்தார்கள். சிரித்து விட்டான் தித்தன். கூடவே நகைத்தார்கள் உமா தேவியார்.
"போகட்டும்! எப்படி அவர்களை அழைத்து வரப் போகிறீர்கள்?" என்றார்.
"இப்போது இருக்கும் நிலையில் எங்கள் மூவராலும் செல்ல முடியாது. ஊரில் எங்களது நண்பன் வேங்கையன் இருக்கிறான் தாயே! அவனுக்கு ஓலை அனுப்பி விட்டால் அனைவரையும் பாதுகாப்பாக குதிரையில் அழைத்து வந்து விடுவான். அதற்குத் தேவையான குதிரைகளுக்குத்தான் என்ன செய்வது எனத் தெரியவில்லை." என்றான் தித்தன்.
"அது ஒன்றும் பிரச்சனை இல்லை! நம்மிடம் இருக்கும் குதிரைகளில் மூன்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உன் மனைவிக்கு இப்போது தானே பிரசவம் ஆகியிருக்கிறது? சிறுகுழந்தையை வைத்துக்கொண்டு குதிரையில் பயணிக்க முடியாது. ஆகையால் அவளுக்கு மட்டும் பல்லக்கு ஏற்பாடு செய்து விடு தித்தா! இங்கிருந்து பல்லக்கு, குதிரைகள் அவற்றை வழி நடத்திச் செல்ல நம்பிக்கையான ஆள், இவர்களை ஏற்பாடு செய்து விடு. இன்னும் இரு தினங்களில் செல்ல வேண்டும். அடுத்த வாரத்துக்குள் உங்கள் பெண்கள் அனைவரும் நம் இல்லத்தில் இருக்க வேண்டும்." என்றார்.
யோசித்தான் தித்தன். உமாதேவியார் சொல்வது போல செய்து விடலாம். ஆனால் நம்பிக்கையான ஆள் வேண்டுமே? அரண்மனைப் பணிப்பெண்கள் வரை சேர் ஒற்றர்களின் கரம் நீண்டிருக்கும் போது, யாரை நம்புவது? இந்நேரம் எனது பெயரும், என் நண்பர்களின் பெயரும் அவர்களது தலைமை வரை போயிருக்கும். மன்னருக்கு நெருக்கமான அமைச்சரைக் கொல்ல முயன்றவர்கள் எனக்குக் குறி வைக்க மாட்டார்களா என்ன? அப்படியானால் என் மனைவி, தங்கைகள் என அனைவரது உயிருமே ஆபத்தில் தான் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக ஒருவனை நம்புவதை விட நானோ அல்லது வேலனோ சென்றால் என்ன?
"என்ன யோசிக்கிறாய் தித்தா?"
"தேவி! நானே சென்று அழைத்து வருவது நல்லது என நினைக்கிறேன்." என்றான்.
இடை மறித்தான் தங்கமணி.
"தாயே! வேலனுக்கும் தித்தனுக்கும் இங்கே அதிக வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் போய் அழைத்து வருகிறேன். வரும் போது வேங்கையனும் இருப்பான் என்பதால் பாதுகாப்புக்குக் கவலை இல்லை." என்றான்.
அவ்வாறே செய்யலாம் என முடிவு எடுத்தார்கள். அதற்குத் தேவையான பொன், ஆட்கள் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டு தங்கமணியே செல்வதால் ஓலை தேவையில்லை எனவும் பேசினார்கள். மறு நாள் காலையில் தங்கணி ஒரு குதிரையில் பயணித்தான். ஒரு குதிரையில் பல்லக்கு அதைத் தூக்கும் ஆட்களில் ஒருவன், இரண்டாவது குதிரையில் பல்லக்குத் தூகிகளில் இருவர், மூன்றாவது குதிரையில் நாலாவதில் பல்லக்குத் தூக்கும் ஆள் எனப் பயணித்தார்கள். வரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறி அவர்களை அனுப்பினார்கள் தித்தனும் வேலனும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மனைவி குழந்தையைப் பார்க்காலம் என்ற எண்ணம் இனிக்க தங்கள் பணியைத் தொடரச் என்றான் தித்தன்.
அதே நேரத்தில் மதுரை நகரின் மையத்தில் இருந்த ஒரு மண்டபம். அதில் மூவர் வீற்றிருந்தனர். அதில் ஒரு பெண் மிகவும் களைப்புற்றவளைப் போலக் காணப்பட்டாள். அவர்கள் வேறு யாருமல்ல வர்த்தினியும் பூந்துறையானும் தான். பக்கத்தில் அமர்ந்திருந்தது தான் அவர்களின் தலைவன் என ஊகிக்க முடிந்தது. அவனது தோற்றம் சர்வ சாதாரணமாகக் காணப்பட்டது. நரைத்த தாடி மீசை. தலையில் ஒரு முடி கூட இல்லை. முகத்திலும் கை கால்களிலும் சுருக்கம். ஆனால் கண்களில் கூர்மை. நாலாபுறமும் பார்த்தபடி சுழன்றன அவனது கண்கள். அவன் பேசும் போது உதடுகள் அசைகிறதா இல்லையா? என்பதை உற்றுக் கவனித்தால் தான் தெரியும்.
"அமைச்சனையும் அவன் மனைவியையும் கொல்லும் திட்டம் எப்படி தோற்றது?" என்றான் அந்த வயதானவன். குரலிலோ முகத்திலோ கோபமே தெரியவில்லை என்றாலும் அந்தக் குரலில் இருந்த அமைதியே இருவரையும் வெருட்டியது.
"தவறு நேர்ந்து விட்டது தலைவா! மங்கையும், அமுதாவும் தாங்களே சென்று கொடுத்தால் அடையாளம் கண்டு கொள்ளப்ப்படுவோமோ என எண்ணி மற்றொரு பணிப்பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பெண் பெயர் பவளமாலையாம். அவள் போன நேரம் அங்கே மருத்துவர் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட மருந்தே இல்லை அது என அடையாளம் க்ண்டு கொண்டு விட்டார். அதனால் அவர்கள் தப்பித்து விட்டார்கள்." என்றாள் வர்த்தினி.
சற்று நேரம் அமைதியாக இருந்தான் தலைவன் எனப்பட்டவன்.
"உம்! போகட்டும் இனி மங்கையையும் அவள் தமக்கையையும் என்ன செய்ய வேண்டும் என உனக்குத் தெரியும் அல்லவா வர்த்தினி?" என்றான்.
திக்கென்றது பூந்துறையானுக்கு. ஆனால் வர்த்தினியோ அலட்டிக்கொள்ளவேயில்லை. தலையை மட்டும் ஆட்டினாள்.
"அடுத்து...நமது இலக்கு தித்தன் குடும்பம் தான். அரச குடும்பத்தை செண்பகப் பொழிலுக்கு அழைத்துப் போய் அங்கே பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவப் பார்க்கிறார்கள். அது மட்டும் நடக்கக் கூடாது. அது போன்ற ஒரு எண்ணம் பாண்டியனுக்கு வரவே கூடாது. அவன் இங்கேயே இருந்து சேர மன்னனிடம் தோற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அவனது தோல்வியை வருங்காலத்தவர்கள் கேவலமாகப் பேச வேண்டும்." என்றான்.
"அப்படியானால் தலைவா! நம்மால் இப்போதே மன்னனையும், அரசியையும் எளிதாகக் கொலை செய்ய முடியுமே? ஏன் செய்யவில்லை?" என்றான் பூந்துறையான். தலைவனின் பார்வை பூந்துறையான் மேல் படிந்தது. அந்தப் பார்வையிலேயே பயம் வர கண்களைத் தழைத்துக்கொண்டான் பூந்துறையான்..
"முட்டாள்! நம் நோக்கம், நிதானம் என எதுவும் தெரியாமல் பேசுகிறாயே? " என்றான் தலைவன்.
"இவனுக்கு விளக்கம் நான் சொல்லிக்கொள்கேறேன் தலைவா! உங்களது நேரம் மிகவும் முக்கியம். இப்படி விரயம் செய்ய முடியாது. ஆகையால் நான் யோசித்து வைத்திருக்கும் திட்டத்தைச் சொல்கிறேன்." என்றாள் வர்த்தினி. மீண்டும் ஒரு தலையசைப்பு தலைவனிடமிருந்து.
"கஜராஜனுக்குத் துணையாக இருப்பவர்களை நன்றாகவே கவனித்துப் பாதுகாப்பாக வைப்போம். யானையின் தந்தம் வெளியில் தெரியும், ஆனால் பற்கள் தெரியாது. ஆனால் உண்ணப் பயன்படுவது பற்களே! தந்தம் அல்ல. அதனால் மீகாமனை வலையில் சிக்க வைத்துப் பிடித்து விடுகிறேன்." என்றாள்.
கேட்டுக்கொண்டிருந்த பூந்துறையானுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. என்ன சொல்கிறாள் இவள்? கஜராஜனா? அது யார்? யானையின் தந்தத்துக்கும் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? பைத்தியம் பிடித்து உளறுகிறாள். தலைவனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப் போகிறாள் என எண்ணியபடியே தலைவனைப் பார்த்தான். வாயைப் பிளந்து விட்டான். சுருக்கங்கள் நிறைந்த அந்த முகத்தில் மெல்லிய புன்னகை இருந்தது.
"சபாஷ் வர்த்தினி! நல்ல திட்டம்! அப்படியே செய்! ஆகையால் இரவு நேரம் நாளை என்னை வந்து பார். அழிவும் தருகிறேன்." என்று சொல்லி விட்டு போய் விட்டார். நடையிலும் அத்தனை தளர்ச்சி. அவர் சென்றதும் பூந்துறையானை நோக்கினாள் வர்த்தினி.
"நமக்கு வேலைகள் அதிகம் உள்ளன. அமுதாவையும், மங்கையையும் உறங்கச் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்கிறாயா?" என்றாள்.
உறங்கச் செய்வது என்றால் இருவரையும் இல்லாமல் ஆக்க வேண்டும் எனப் புரிந்தது பூந்துறையானுக்கு. ஆனாலும் பெண் கொலை புரிய மனம் இல்லை. அவனது தயக்கத்தைப் புரிந்து கொண்ட வர்த்தினி "சரி! அதை நான் பார்த்துக்கொள்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் வருவார்கள். இதை அவர்கள் உண்ணக் கொடுக்க வேண்டும். இந்தப் பழத்தில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உடனே வேலை செய்யாது. குறைந்தது 8 மணி நேரம் ஆகும்." வர்த்தினி பேசிக்கொண்டிருக்கும் போதே அமுத தேவியும், மங்கையும் வந்து விட்டார்கள். இருவரும் அரண்மனைப் பணிப்பெண்கள் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை.
"தலைவர் என்ன சொன்னார்?" என்றாள் அமுதா எடுத்த எடுப்பில்.
"கத்தாதே அமுதா! திட்டம் தோற்றதற்கு நீங்கள் காரணமல்ல என தலைவர் புரிந்து கொண்டு விட்டார். ஆனால் இனியும் நீங்கள் இங்கே இருந்தால் உங்களுக்கு ஆபத்து. ஆகையால் உங்களை சேர நாட்டுக்குச் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். அங்கே சென்றதும் செங்கம் புழையாரிடம் இந்த ஓலையைக் கொடுக்குமாறு கூறினார்." என்று சொல்லி துணிச் சுருளில் பொதிந்த ஒரு ஓலையைக் கொடுத்தாள் வர்த்தினி. அயர்ந்தே போனான் பூந்துறையான். இவள் உண்மையிலேயே பெண் தானா? இல்லை நயவஞ்சகத்தின் மொத்த உருவமா?
மங்கைக்கும், அமுத தேவிக்கும் முகம் மலர்ந்தது. கை நீட்டி அதை வாங்கிக்கொண்டனர்.
"இப்போதே நீங்கள் புறப்படுங்கள்! மீண்டும் அரண்மனைக்குப் போனால் அங்கே உங்களை விசாரிக்கவும் ஆட்கள் வரக் கூடும். உங்களுக்குத் தேவையான பொன்னும், துணிகளும் இதில் உள்ளன. அதோடு சில பழங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்! எக்காரணம் கொண்டும் வழியில் ஊருக்குள் செல்ல வேண்டாம். பழத்தோடு சில கிழங்குகளையும் அவித்து வைத்திருக்கிறேன். உணவுப்பிரச்சனை இல்லை." என்றாள் வர்த்தினி. அவற்றை வாங்கிக்கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டனர் இரு பெண்களும். அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் பூந்துறையான். அவன் மனம் இரக்கப்பட்டது.
"வர்த்தினி! அவர்கள் அந்தப் பழத்தை உண்ணவில்லையே?"
"இன்று இரவுக்குள் எப்படியும் உண்பார்கள்."
மௌனமானான் பூந்துறையான். அவனுக்கு வர்த்தினியின் திட்டம் புரிந்தது. உணவுக்காக ஊருக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பெண்கள் இரவுக்குள் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கட்டாயம் உண்பார்கள். அந்த விஷம் வேலை செய்ய எட்டு மணி நேரம் ஆகும். இரவு உறக்கத்திலோ அல்லது மறு நாள் காலையிலோ காட்டு வழியில் பயணம் செய்யும் போது இறந்து போவார்கள். உடலை காட்டு விலங்குகள் இழுத்துச் சென்று விடும். ஆகையால் இப்படி இரு பெண்கள் இருந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போய் விடும். அரண்மனையைப் பொறுத்தவரை இரு பெண்கள், அவர்கள் சேர ஒற்றர்களாகவும் இருக்கலாம். அவர்களைக் காணவில்லை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்றிருக்கக் கொடும். அவ்வளவு தாம். விஷயம் முடிந்தது.
உடல் நடுங்கியது பூந்துறையானுக்கு. அவன் சிறந்த வீரன் தான். எப்போதுமே நேருக்கு நேர் மோதுவான். அல்லது தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பான். ஆனால் இது போல தங்கள் ஆட்களில் இருவரை சூழ்ச்சி செய்து கொல்வது மட்டுமல்ல, அதைக் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமல் செய்து முடித்த வர்த்தினியை நினைத்து பயமாக இருந்தது.
"நீ உண்மையிலேயே பெண் தானா வர்த்தினி?" என்றான். அவனை முறைத்தாள் அவள்.
"எதற்கு உனக்குத் தேவையில்லாத ஆராய்ச்சி?"
"இல்லை! இப்படி இரக்கமோ, கருணையோ இல்லாமல் இருக்கிறாயே?" என்றான்.
"என்னிடம் யாரும் அவற்றை எதிர்பார்க்க வேண்டாம். இப்போது நாம் கிளம்பலாம். நமது திட்டம் புரிந்தது அல்லவா உனக்கு?"என்றாள்.
தயங்கினான் பூந்துறையான். அந்த இரு பெண்களும் என்ன ஆவார்கள் என்பது தான் புரிந்ததே தவிர, தலைவனும், இவளும் பேசியது எதுவுமே புரியவில்லையே? அதைச் சொன்னால் என்னயும் கொன்று விடுவாளோ என்னவோ? இவளுக்கு உதவிக்கு ஆட்கள் தேவையில்லை என தலைவனே சொல்லும் போது, நான் எம்மாத்திரம்? என எண்ணிக் கொண்டு பேசாமல் நின்றான்.
"புரியவில்லை அப்படித்தானே?" என்றாள்.
மௌனமே பதிலாக வந்தது.
"உன்னைப் போன்ற கோழையை நான் பார்த்ததே இல்லை. உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். சிறு பெண்ணான என்னிடம் பயப்படுகிறாயே? உனக்கு வெட்கமில்லை?" என்றாள்.
நீயா சிறுபெண். அரக்கி அல்லவா நீ? என மனதில் நினைத்துக்கொண்டான் ஆனால் சொல்லவில்லை.
"பயமில்லை வர்த்தினி! எச்சரிக்கை அவ்வளவு தான். உண்மையிலேயே நீயும் தலைவரும் பேசிக்கொண்டது புரியத்தான் இல்லை!" என்றான்.
"இங்கே அதைப் பற்றிப் பேசுவது நல்லதல்ல. நமது இடத்துக்குப் போவோம்." என்று சொல்லி விட்டு நடக்கும் அந்தப் பெண்ணை பயத்தோடு தொடர்ந்தான் பூந்துறையான்.
அதே நேரத்தில் குரு விந்தையனிடமிருந்து ஒரு ரகசிய ஓலையைப் பெற்றிருந்தான் தித்தன். அதைப் படித்ததும் அவன் கண்களில் நெருப்பு.