Srija Venkatesh
Member
- Messages
- 60
- Reaction score
- 123
- Points
- 18
அத்தியாயம் 9:
திட்டமிட்டபடி வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான். தங்கமணி, வேலன் மற்றும் தித்தன் அவவரவர் குதிரைகளில் மதுரை நோக்கிப் பயணப்பட்டார்கள். அப்போது பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது தித்தனால். அது வரையிலும் செண்பகப் பொழிலை விட்டு வெளியே சென்றிராத தித்தனுக்கு மதுரையைக் காண வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. கல்வி கற்கும் காலத்தில் ஆயுதப்பயிற்சிகளோடு சேர்த்து அவனது குரு அவனுக்கு தமிழும் கற்பித்தார். மதுரைக் காஞ்சி, புற நானூறு போன்ற போர், வீரம் பற்றிக் கூறும் நூல்களை படிக்க ஏற்பாடு செய்தார். அவற்றில் மதுரையைப் பற்றிய வர்ணனை, அதன் அழகு, அங்கு இருக்கும் உயர்ந்த மாடங்கள் என படிக்கப் படிக்க மதுரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது தித்தனுக்கு. இப்போது தான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
திங்கள் அன்று காலை கிளம்பியவர்கள் செவ்வாய்க் கிழமை மதிய நேரத்தில் மதுரையின் புற நகர்ப்பகுதியை அடைந்து விட்டார்கள். வைகை தண்ணீரே இல்லாமல் காட்சியளித்தது. மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான் தித்தன். நண்பகல் வெயில் வாட்டியெடுத்தது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே சில மனிதர்கள் தென்பட்டார்கள். தாகத்துக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் கூட இல்லை. ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு மேலே சென்றான். ஒரு தெருவில் சோறும், கறிக்குழம்பும் ஒருவன் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே குதிரையை நிறுத்தினான் வேலன்.
"இதற்கு மேல் பசி தாங்காது எனக்கு! வா! உணவு உண்டு விட்டுப் போகலாம்" என்றான் வேலன்.
மௌனமாக குதிரையை திண்ணையில் இருந்த மரத்தூணோடு சேர்த்துக் கட்டி விட்டு கடையை நோக்கி நடந்தார்கள். ஆறிப் போன சோற்றில் சூடான கறிக்குழம்பை ஊற்றினான் கடைக்காரன். சுவை பரவாயில்லை.
"ஏனப்பா? இது மதுரை தானா? நான் மாடக் கூடல் என்றும், உறங்கா நகரம் என்றும் புகழப்படும் மதுரை தானா இது? இப்படி இருக்கிறதே?" என்றான் தங்கமணி.
கசப்பாக சிரித்தான் கடைக்காரன்.
"அதெல்லாம் பழம் பெருமையப்பா! பகைவர்களின் இடையறாத தாக்குதலால் நாட்டின் பொருளாதாரமே அழிந்து விட்டது. மழை இல்லை என்பதால் பயிர்கள் விளையவே இல்லை. ஆனை கட்டிப் போரடித்த மதுரை மாடு கட்டிக் கூடப் போரடிக்க முடியாமல் இருக்கிறது." என்றான் அந்த கடைக்காரன்.
"ஏனப்பா உன் பெயர் என்ன?" என்றான் தித்தன்.
"கூடலழகன்! பெயருக்கொன்றும் குறைச்சல் இல்லை! ஆனால் இல்லத்தில் தான் அழகு இல்லை" என்றான் வெறுப்பாக.
"ஏன் இத்தனை விரக்தி? காலம் மாறாமலா போய் விடும்? என்றான் தங்கமணி மீண்டும்.
"ஹூம்! இத்தனை ஆண்டுகள் மாறாத காலம் இனி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? ஆமாம்! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான் கூடலழகன்.
"நாங்கள் தெற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊர் செண்பகப் பொழில். வேலை தேடி மதுரை வந்தோம்." என்றான் வேலன்.
குழம்பு ஊற்றிக்கொண்டே சிரித்தான் கடைக்காரன்.
"நல்ல புத்திசாலிகளப்பா நீங்கள்! மதுரையே பஞ்சத்தில் இருக்கும் போது வேலை தேடி வந்திருக்கிறீர்களே? நாங்களே எங்கே சென்று பஞ்சம் பிழைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் வந்தீர்களே?" என்றான்.
மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"பாண்டிய நாட்டின் நிலை அத்தனை மோசமாகவா இருக்கிறது?" என்றான் தங்கமணி.
"பாண்டிய நாடு எங்கே இருக்கிறதப்பா? முன் ஒரு காலத்தில் தெற்கே கொற்கை வரை பரவியிருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் இப்போது மதுரையை பாதுகாப்பதே இயலாத காரியமாக இருக்கும் போது மற்ற பகுதிகளை எப்படி கவனிப்பார் மன்னர்?" என்றான்.
"நீ சொல்வதும் சரி தான். அப்படியானால் உங்கள் எதிர்காலம் பற்றி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா?"
"எதிர்காலமா? எங்களுக்கா? ஹூம்! ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு. இல்லை எங்காவது புலம் பெயர்ந்து செல்ல வேண்டியது தான்."
"அதை நீ இப்போதே செய்யலாமே?" என்றான் வேலன்.
"அது எப்படி முடியும் இளைஞனே? மன்னர் முன் வந்து அழைத்துச் சென்றால் தானே மனதுக்கு நிம்மதியாக இருக்கும்? மதுரை வேண்டுமானால் இப்போது இப்படி இருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னர் தன் குடிமக்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அவரது குடையின் கீழ் தான் நாங்கள் எப்போதும் இருப்போம்." என்றான்.
அதன் பிறகு இதர விஷயங்களை பேசி விட்டு காசையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார்கள் மூவரும். கொடுங்கண்ணனாரின் இல்லம் அரண்மனையை ஒட்டி இருந்தது. குதிரையில் செல்லும் போது தான் மதுரை மாநகரம் எவ்வளவு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது எனப் புரிந்தது. மீனாட்சியம்மையின் கோயில் தான் நகரின் இதயம். அதைச் சுற்றிய நான்கு வீதிகள். வெளிச்சுற்றில் அரண்மனை மற்றூம் முக்கிய அதிகாரிகளின் இல்லங்கள். அதைத் தொடர்ந்து கடை வீதி. ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக அங்காடி வீதி இருந்தது. தங்க நகைக்கென ஒரு வீதி, வெண்கலப் பாத்திரங்கள் விற்பதற்கென தனி வீதி, துணிமணிகள் விற்பதற்கென ஒன்று என மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் வாழ்வதற்கு என தனியாக வீடுகள், விவசாயப் பெருமக்கள் வாழ குடியிருப்புகள், ஆயர் குல மக்களுக்கு என குடியிருப்பு என பாண்டிய மன்னர்களின் அறிவுத்திறமையையும், திட்டமிடும் திறமையையும் பறை சாற்றியது மதுரை.
மெதுவாக குதிரையை செலுத்திக்கொண்டு சென்றார்கள். வழி நெடுக பார்த்துக்கொண்டே போனதில் ஒரு விஷயம் புரிந்தது தித்தனுக்கு. ஒரு காலத்தில் செல்வத்தில் மிதந்த மதுரை மக்கள் இப்போது அத்தனை செழுமையாக இல்லை என்பது தான் அது. வீடுகளும், மாடங்களும் இருந்தன. ஆனால் அவைகள் பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்து கிடந்தன. இன்னும் சில இடங்களில் மதில் சுவர்களில் விரிசல் விழுந்து அவற்றில் செடி கொடிகள் முளைத்திருந்தன.
கொடுங்கண்ணனாரின் இல்லம் சற்றே பெரிதாகக் காணப்பட்டது. வாயிலில் காவலன் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான். அவனிடம் சென்று தாங்கள் செண்பகப் பொழிலில் இருந்து வருவதாகவும் அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்கள்.
"என்ன விஷயமாக பார்க்க வேண்டும்? நிதி உதவி தேவையா?" என்றான்.
"இல்லை! எங்களை குரு விந்தையன் அனுப்பினார் என்று சொல்! அமைச்சருக்குத் தெரியும்." என்றான் தித்தன்.
உள்ளே சென்ற காவலன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் சென்றான். படிகளேறிச் சென்றனர் மூவரும். பெரிதாக விரிந்திருந்தது கூடம். அதன் கிழக்குச் சுவரின் பக்கம் நடு நாயகமாக பெரிய வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலியில் அமர்ந்திருந்தார் அமைச்சர் கொடுங்கண்ணனார். அவர் மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மூவரும் மிகவும் பணிவுடன் நிண்றனர்.
"செண்பகப் பொழிலில் குரு நாதர் நலமாக இருக்கிறாரா?"
"இறைவன் அருளால் நலமாக இருக்கிறார் ஐயா! என் பெயர் தித்தன், இவர்கள் என் நண்பர்கள் பெயர் வேலன், இவன் தங்கமணி. குருநாதர் கொடுத்த ஓலையை பத்திரமாகக் கொண்டு வந்தோம் ஐயா."
"நல்லது! எங்கே ஓலை?"
தன் இடுப்பிலிருந்து எடுத்துக்கொடுத்தான் வேலன். அதனை பய பக்தியோடு வாங்கிப் படித்தார் அமைச்சர். அவரது முக பாவம் எதையும் வெளிக்காட்டவே இல்லை. படித்து முடித்து விட்டு மூவரையும் ஏறிட்டார்.
"உம்! சாதகப் பலன் இப்படி மாறுபாடாக இருக்கிறதா? உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் என குருநாதர் எழுதியிருக்கிறாரே? அப்படியானால் இளவசரர் சடையவர்மரின் ஜனன பலன் கூடத் தெரியும் அல்லவா?"
"ஆம் ஐயா!"
"அதைக் குறித்து குரு நாதர் ஏதேனும் விசேஷமாகப் பேசினாரா?"
மௌனம் காத்தனர் வேலனும், தங்கமணியும்.
"ஆம் ஐயா! விதியை மதியால் வெல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று சொன்னார்."
"ஓ! அப்படியானால்?"
"பொதுப்பலன் படி அவரால் மதுரையில் அதிக காலம் வாழ முடியாது. ஆனால் அவரது சாதகப்படி பெரிய தலைநகரத்தில் மன்னராக ஆளும் யோகம் அவருக்கு இருக்கிறது. இதனை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் குருநாதர்." என்றான் தித்தன்.
"சபாஷ்! மிக்க மகிழ்ச்சி! அவர் எழுதிய ஓலையிலிருந்து அவர் உத்தேசித்திருக்கும் காரியம் என்ன என்பது எனக்குப் புரிகிறது. உங்களையும் அதில் பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார் குருநாதர். உங்களுக்கு சம்மதம் தானே?"
"நாட்டுக்காக உழைப்பதில் எங்களுக்குப் பெருமையே ஐயா" என்றான் தங்கமணி.
"உங்களது நாட்டுப்பற்று பாராட்டத்தக்கது. ஆனால் எனக்கு அமைச்சராக பணிகள் மிக அதிகம். அதிலும் நாடு இப்போது இருக்கும் நிலையில் என்னால் இதற்கென நேரம் ஒதுக்கவே முடியாது. ஆகையால் குருநாதர் உத்தேசித்திர்க்கும் மிகப்பெரிய செயலை நீங்கள் தனியாகத்தான் செய்ய வேண்டும். அவ்வப்போது என்னால் ஆலோசனை மட்டுமே கூற முடியும்." என்றார் கொங்கண்ணனார்.
"புரிகிறது ஐயா! எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறோம்."
"நல்லது! புத்திசாலிகளாகத்தான் காணப்படுகிறீர்கள். உங்களை நம்பலாம் என குருநாதரும் எழுதியிருக்கிறார். எனவே இந்தப் பொறுப்பை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். எடுத்த காரியம் முடியும் வரை நீங்கள் மதுரையிலேயே தங்குங்கள். உங்களுக்கு வீடு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்."
"நன்றி ஐயா"
"ஒரு விஷயம், சேர ஒற்றர்களும், சோழ ஒற்றர்களும் எங்கும் சுற்றித் திரிகிறார்கள். இந்நேரம் இளவரசரின் ஜாதகப் பலன் அவர்கள் வரை எட்டியிருக்கும். பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிப்பதே அவர்கள் நோக்கம். ஆகையால் மிக்க கவனமாகச் செயலாற்ற வேண்டும். மன்னருக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதற்கு முன் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பல விவரங்களைக் கேட்பார் மன்னர். எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அப்போது தான் வேலை எளிதாகும். "
"அப்படியே செய்கிறோம் ஐயா"
"உம்! நீங்கள் மூவரும் மதுரைக்கு புதிதாக வேலை தேடி வந்தவர்கள். அதை மறக்க வேண்டாம். உங்களது செயல் பேச்சு எல்லாமே அதை ஒட்டித்தான் அமைய வேண்டும். திட்டமிடுதலை எக்காரணம் கொண்டும் இரவில் செய்யாதீர்கள்."
"ஐயா? இரவில் திட்டமிடுதல் தானே வழக்கம்?" என்றான் வேலன்.
"நீ நினைப்பது போல பகைவர்களின் ஒற்றர்களும் நினைப்பார்ர்கள் என்பதால் தான் இரவில் திட்டமிட வேண்டாம் என்றேன் புரிகிறதா?" என்றார் சற்றே எரிச்சல் கலந்த குரலில்.
"புரிந்தது ஐயா!"
"பகலில், அதுவும் உங்கள் வீட்டில் வைத்து திட்டமிட வேண்டாம். ஊருக்குப் பொதுவான மண்டபம், அல்லது கோயில் பிராகாரம் இவற்றில் அமர்ந்து பேசுங்கள். அப்படி நீங்கள் பேசும் போது ஏதோ ரகசியத் திட்டம் தீட்டுகிறீர்கள் என யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. ஆகையால் இயல்பாகப் பேசுங்கள். உங்களுக்கு அருகாமையில் யாரேனும் நடமாடினால் நீங்கள் பொதுவாகப் பேசுங்கள்." என்றார் அமைச்சர்.
கொடுங்கண்ணனார் ஏன் மன்னருக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறார் என புரிந்தது தித்தனுக்கு. அறிவுக்கூர்மை மிக்கவர் அதோடு சூழ்நிலைகளை கணித்து அதற்கேற்றபடி நடக்கவும் தெரிந்தவர் என்பதால் மன்னர் தன் அருகிலேயே வைத்திருக்கிறார் போல என எண்ணிக் கொண்டான் தித்தன்.
"சரி! எனக்கு பணிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேராக காவலர் குடியிருப்பு செல்லுங்கள். அங்கே அமுதன் என்று ஒரு அதிகாரி இருப்பான். அவனுக்கு நான் ஓலை தருகிறேன். அதைக் கொடுத்தால் நீங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வான். பெண்களும் வர இருக்கிறார்கள் என குருநாதர் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு அமுதன் காட்டும் வீட்டில் தங்குங்கள். பிறகு ஒரு வளாகத்துக்குள்ளேயே மூன்று வீடுகள் இருக்குமாறு ஏற்பாடு செய்து தருகிறேன்." ஆனால் தித்தன் மட்டுமே தன் குடும்பத்தோடு தங்கலாம். வேலனும், தங்கமணியும் பெண்களை மட்டும் தனியாகத்தான் தங்க வைக்க வேண்டும். உங்களுக்குத் திருமணமாகவில்லை எனத் தெரிந்தும் கொண்டேன்." என்றார்.
விரைவாக முடிவெடுக்கும் அவரது திறமையை வியந்தார்கள் மூவரும்.
"உமையாள்" என்று குரல் கொடுத்தார் அமைச்சர்.
நிறைமாத கர்ப்பிணியான ஒரு இளம் மங்கை ஓலையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"நீ ஏன் வந்தாய் உமையாள்? யாராவது செவிலியிடம் ஓலையைக் கொடுத்தனுப்பு என்று சொல்லத்தானே வந்தேன்."
சிரித்தாள் அமைச்சரின் மனைவி.
"இதில் எனக்கொன்றும் சிரமமில்லை அத்தான். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்போதே ஓலையைத் தயார் செய்து விட்டேன். ஆனால் எனக்கொரு ஐயம்."
"கேள்"
"இன்னும் ஓரிரு மாதங்களில் பெண்களும் வரப்போகிறார்கள் எனச் சொன்னீர்கள் அல்லவா? அப்படியானால் எனக்கு உதவியாக அவர்களை நம் வீட்டுக்குப் பக்கத்திலயே குடி வைத்து விடலாமே? " என்றாள்.
"உம்! செய்யலாம் தான். ஆனால் தித்தனின் மனைவியும் இப்போது தான் குழந்தை பெற்றிருக்கிறாள். ஆகையால் அவளால் உனக்கு எப்படி உதவ முடியும் எனத் தெரிவில்லையே?"
"இன்னமும் நல்லதாகப் போயிற்று! நம் குழந்தையோடு விளையாட தோழன் கிடைத்தான் என எண்ணுகிறேன். அதோடு, வேலனும், தங்கமணியையும் காதலிகளை அணுகாத வண்ணம் நான் பார்த்துக்கொள்ளவும் செய்வேன்." என்றாள் உமையாள்.
சிரித்து விட்டார் கொடுங்கண்ணனார்.
" நீ மனதில் நினைத்து விட்டால் அதை எப்படியாவது சாதித்துக் கொள்வாய். சரி இப்போதைக்கு இவர்கள் காவலர் குடியிருப்பில் தங்கட்டும். பெண்கள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஓலை எழுதி அதனை தித்தன் கைகளில் அளித்தார்.
"அமுதனுக்குக் கூட நீங்கள் எந்த விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவனைப் பொறுத்தவரை நீங்கள் என் வீட்டுக் காவலுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய வீரர்கள். அவ்வளவு தான்."
"புரிந்தது ஐயா"
"நீங்கள் செல்லலாம்!" என்று எழுந்தார்.
மூவரும் வெளியில் வந்தனர். காவலர் குடியிருப்புக்கு எப்படிச் செல்வது எனக் கேட்டுக் கொண்டு புறப்பட்டனர். சற்றே தொலைவில் அமைந்திருந்தது அந்த இடம். அங்கு சென்று அமுதன் என்பவரைப் பற்றி விசாரித்தார்கள்.
"நான் தான் அமுதன். இங்கு பணி புரியும் அதிகாரி. உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு ஒல்லியான ஒருவன் வந்தான்.
"ஐயா! நாங்கள் அமைச்சர் கொடுங்கண்ணனார் வீட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய காவலர்கள். அவர் உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்." என்று சொல்லி ஓலையைக் கொடுத்தான் தித்தன். அதனை வாசித்து விட்டு பதிலே பேசாமல் நடந்தான் அமுதன்.
"ஐயா! என்ன இது? எதுவுமே சொல்லாமல் போனால் எப்படி?" என்றான் தங்கமணி.
"நீ தான் அமைச்சரிடமிருந்தே ஓலை வாங்கி வந்து விட்டயே? என்னால் அதை மீறவா முடியும்? உங்களுக்கு வீடு காட்டுகிறேன் வா" என்று அழைத்தான். அவனது பேச்சில் எரிச்சல் தெரிந்தது.மூவரும் அவனைத் தொடர்ந்தனர்.
சற்று தொலைவில் மிகவும் பழசாகத் தோன்றிய ஒரு சிறு வீட்டின் முன்னால் போய் நின்றான் அமுதன்.
"சொக்கா! சொக்கா" என்று அழைத்தான்.
அமுதனை விட ஒல்லியான ஒருவன் வெளியில் வந்து வணங்கினான்.
"இவர்கள் இங்கே தான் தங்கப் போகிறார்கள். ஆகையால் நீ வேறு இடம் பார்த்துக்கொள்" என்றான் அமுதன்.
"ஐயா! இப்படி திடீர் எனச் சொன்னால் நான் எங்கு செல்வேன்?" என்றான் சொக்கன் பரிதாபமாக.
"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இவர்கள் மூவரும் என்னைக் கேட்காமல் நேராக அமைச்சரிடமே வேலை கேட்டு வாங்கிக்கொண்டார்கள். போதாதென்று இவர்களுக்கு வீடு கொடு என கட்டளை வேறு. நான் என்ன தான் செய்ய? வீடு எதுவும் காலி இல்லை என அமைச்சரிடம் நான் சொல்லவா முடியும்?" என்றான் அமுதம் கோபமாக.
"ஐயா! என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. குழந்தை வேறு இருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு நான் எங்கே செல்வேன்? தயவு செய்யக் கூடதா?" எனக் கெஞ்சினான் சொக்கன். பரிதாபமாக இருந்தது அவனைப் பார்க்க.
"ஐயா! எங்களுக்காக வீட்டில் குடியிருப்பவரை விரட்ட வேண்டாம். நாங்கள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறோம். " என்றான் வேலன். அதனை ஆமோதித்தார்கள் தித்தனும் தங்கமணியும்.
"சரி தான். ஆனால் நான் உங்களுக்கு வீடு கொடுக்கவில்லயென நீங்கள் அமைச்சரிடம் புகார் சொன்னால் என் வேலை போய் விடுமே?"
"அப்படிச் சொல்ல மாட்டோம் ஐயா! சத்தியம்" என்றான் தித்தன்.
சொக்கன் அவர்கள் காலிலேயே விழுந்து விட்டான்.
"ஐயாமாரே! உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்? நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என்றான்.
"நான் உங்களுக்கு வீடு தரவில்லை என்ற வார்த்தை வரவே கூடாது. நான் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதை வேண்டாம் என்று விட்டீர்கள் நினைவிருக்கட்டும்" என்று சொல்லி விட்டு போய் விட்டான் அமுதன்.
சொக்கனிடம் விடைபெற்றுக் கொண்டு மூவரும் வீடு தேடிப் புறப்பட்டார்கள்.
திட்டமிட்டபடி வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான். தங்கமணி, வேலன் மற்றும் தித்தன் அவவரவர் குதிரைகளில் மதுரை நோக்கிப் பயணப்பட்டார்கள். அப்போது பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது தித்தனால். அது வரையிலும் செண்பகப் பொழிலை விட்டு வெளியே சென்றிராத தித்தனுக்கு மதுரையைக் காண வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது. கல்வி கற்கும் காலத்தில் ஆயுதப்பயிற்சிகளோடு சேர்த்து அவனது குரு அவனுக்கு தமிழும் கற்பித்தார். மதுரைக் காஞ்சி, புற நானூறு போன்ற போர், வீரம் பற்றிக் கூறும் நூல்களை படிக்க ஏற்பாடு செய்தார். அவற்றில் மதுரையைப் பற்றிய வர்ணனை, அதன் அழகு, அங்கு இருக்கும் உயர்ந்த மாடங்கள் என படிக்கப் படிக்க மதுரையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது தித்தனுக்கு. இப்போது தான் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
திங்கள் அன்று காலை கிளம்பியவர்கள் செவ்வாய்க் கிழமை மதிய நேரத்தில் மதுரையின் புற நகர்ப்பகுதியை அடைந்து விட்டார்கள். வைகை தண்ணீரே இல்லாமல் காட்சியளித்தது. மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான் தித்தன். நண்பகல் வெயில் வாட்டியெடுத்தது. தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே சில மனிதர்கள் தென்பட்டார்கள். தாகத்துக்கு ஒரு தண்ணீர்ப் பந்தல் கூட இல்லை. ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு மேலே சென்றான். ஒரு தெருவில் சோறும், கறிக்குழம்பும் ஒருவன் விற்றுக் கொண்டிருந்தான். அங்கே குதிரையை நிறுத்தினான் வேலன்.
"இதற்கு மேல் பசி தாங்காது எனக்கு! வா! உணவு உண்டு விட்டுப் போகலாம்" என்றான் வேலன்.
மௌனமாக குதிரையை திண்ணையில் இருந்த மரத்தூணோடு சேர்த்துக் கட்டி விட்டு கடையை நோக்கி நடந்தார்கள். ஆறிப் போன சோற்றில் சூடான கறிக்குழம்பை ஊற்றினான் கடைக்காரன். சுவை பரவாயில்லை.
"ஏனப்பா? இது மதுரை தானா? நான் மாடக் கூடல் என்றும், உறங்கா நகரம் என்றும் புகழப்படும் மதுரை தானா இது? இப்படி இருக்கிறதே?" என்றான் தங்கமணி.
கசப்பாக சிரித்தான் கடைக்காரன்.
"அதெல்லாம் பழம் பெருமையப்பா! பகைவர்களின் இடையறாத தாக்குதலால் நாட்டின் பொருளாதாரமே அழிந்து விட்டது. மழை இல்லை என்பதால் பயிர்கள் விளையவே இல்லை. ஆனை கட்டிப் போரடித்த மதுரை மாடு கட்டிக் கூடப் போரடிக்க முடியாமல் இருக்கிறது." என்றான் அந்த கடைக்காரன்.
"ஏனப்பா உன் பெயர் என்ன?" என்றான் தித்தன்.
"கூடலழகன்! பெயருக்கொன்றும் குறைச்சல் இல்லை! ஆனால் இல்லத்தில் தான் அழகு இல்லை" என்றான் வெறுப்பாக.
"ஏன் இத்தனை விரக்தி? காலம் மாறாமலா போய் விடும்? என்றான் தங்கமணி மீண்டும்.
"ஹூம்! இத்தனை ஆண்டுகள் மாறாத காலம் இனி மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? ஆமாம்! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான் கூடலழகன்.
"நாங்கள் தெற்குப்பகுதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊர் செண்பகப் பொழில். வேலை தேடி மதுரை வந்தோம்." என்றான் வேலன்.
குழம்பு ஊற்றிக்கொண்டே சிரித்தான் கடைக்காரன்.
"நல்ல புத்திசாலிகளப்பா நீங்கள்! மதுரையே பஞ்சத்தில் இருக்கும் போது வேலை தேடி வந்திருக்கிறீர்களே? நாங்களே எங்கே சென்று பஞ்சம் பிழைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் வந்தீர்களே?" என்றான்.
மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"பாண்டிய நாட்டின் நிலை அத்தனை மோசமாகவா இருக்கிறது?" என்றான் தங்கமணி.
"பாண்டிய நாடு எங்கே இருக்கிறதப்பா? முன் ஒரு காலத்தில் தெற்கே கொற்கை வரை பரவியிருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் இப்போது மதுரையை பாதுகாப்பதே இயலாத காரியமாக இருக்கும் போது மற்ற பகுதிகளை எப்படி கவனிப்பார் மன்னர்?" என்றான்.
"நீ சொல்வதும் சரி தான். அப்படியானால் உங்கள் எதிர்காலம் பற்றி ஏதாவது யோசித்திருக்கிறீர்களா?"
"எதிர்காலமா? எங்களுக்கா? ஹூம்! ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு. இல்லை எங்காவது புலம் பெயர்ந்து செல்ல வேண்டியது தான்."
"அதை நீ இப்போதே செய்யலாமே?" என்றான் வேலன்.
"அது எப்படி முடியும் இளைஞனே? மன்னர் முன் வந்து அழைத்துச் சென்றால் தானே மனதுக்கு நிம்மதியாக இருக்கும்? மதுரை வேண்டுமானால் இப்போது இப்படி இருக்கலாம். ஆனால் பாண்டிய மன்னர் தன் குடிமக்களை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அவரது குடையின் கீழ் தான் நாங்கள் எப்போதும் இருப்போம்." என்றான்.
அதன் பிறகு இதர விஷயங்களை பேசி விட்டு காசையும் கொடுத்து விட்டுக் கிளம்பினார்கள் மூவரும். கொடுங்கண்ணனாரின் இல்லம் அரண்மனையை ஒட்டி இருந்தது. குதிரையில் செல்லும் போது தான் மதுரை மாநகரம் எவ்வளவு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது எனப் புரிந்தது. மீனாட்சியம்மையின் கோயில் தான் நகரின் இதயம். அதைச் சுற்றிய நான்கு வீதிகள். வெளிச்சுற்றில் அரண்மனை மற்றூம் முக்கிய அதிகாரிகளின் இல்லங்கள். அதைத் தொடர்ந்து கடை வீதி. ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக அங்காடி வீதி இருந்தது. தங்க நகைக்கென ஒரு வீதி, வெண்கலப் பாத்திரங்கள் விற்பதற்கென தனி வீதி, துணிமணிகள் விற்பதற்கென ஒன்று என மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. காவலர்கள் வாழ்வதற்கு என தனியாக வீடுகள், விவசாயப் பெருமக்கள் வாழ குடியிருப்புகள், ஆயர் குல மக்களுக்கு என குடியிருப்பு என பாண்டிய மன்னர்களின் அறிவுத்திறமையையும், திட்டமிடும் திறமையையும் பறை சாற்றியது மதுரை.
மெதுவாக குதிரையை செலுத்திக்கொண்டு சென்றார்கள். வழி நெடுக பார்த்துக்கொண்டே போனதில் ஒரு விஷயம் புரிந்தது தித்தனுக்கு. ஒரு காலத்தில் செல்வத்தில் மிதந்த மதுரை மக்கள் இப்போது அத்தனை செழுமையாக இல்லை என்பது தான் அது. வீடுகளும், மாடங்களும் இருந்தன. ஆனால் அவைகள் பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்து கிடந்தன. இன்னும் சில இடங்களில் மதில் சுவர்களில் விரிசல் விழுந்து அவற்றில் செடி கொடிகள் முளைத்திருந்தன.
கொடுங்கண்ணனாரின் இல்லம் சற்றே பெரிதாகக் காணப்பட்டது. வாயிலில் காவலன் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான். அவனிடம் சென்று தாங்கள் செண்பகப் பொழிலில் இருந்து வருவதாகவும் அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனவும் கூறினார்கள்.
"என்ன விஷயமாக பார்க்க வேண்டும்? நிதி உதவி தேவையா?" என்றான்.
"இல்லை! எங்களை குரு விந்தையன் அனுப்பினார் என்று சொல்! அமைச்சருக்குத் தெரியும்." என்றான் தித்தன்.
உள்ளே சென்ற காவலன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் சென்றான். படிகளேறிச் சென்றனர் மூவரும். பெரிதாக விரிந்திருந்தது கூடம். அதன் கிழக்குச் சுவரின் பக்கம் நடு நாயகமாக பெரிய வேலைப்பாடுகள் கொண்ட நாற்காலியில் அமர்ந்திருந்தார் அமைச்சர் கொடுங்கண்ணனார். அவர் மன்னருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் மூவரும் மிகவும் பணிவுடன் நிண்றனர்.
"செண்பகப் பொழிலில் குரு நாதர் நலமாக இருக்கிறாரா?"
"இறைவன் அருளால் நலமாக இருக்கிறார் ஐயா! என் பெயர் தித்தன், இவர்கள் என் நண்பர்கள் பெயர் வேலன், இவன் தங்கமணி. குருநாதர் கொடுத்த ஓலையை பத்திரமாகக் கொண்டு வந்தோம் ஐயா."
"நல்லது! எங்கே ஓலை?"
தன் இடுப்பிலிருந்து எடுத்துக்கொடுத்தான் வேலன். அதனை பய பக்தியோடு வாங்கிப் படித்தார் அமைச்சர். அவரது முக பாவம் எதையும் வெளிக்காட்டவே இல்லை. படித்து முடித்து விட்டு மூவரையும் ஏறிட்டார்.
"உம்! சாதகப் பலன் இப்படி மாறுபாடாக இருக்கிறதா? உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும் என குருநாதர் எழுதியிருக்கிறாரே? அப்படியானால் இளவசரர் சடையவர்மரின் ஜனன பலன் கூடத் தெரியும் அல்லவா?"
"ஆம் ஐயா!"
"அதைக் குறித்து குரு நாதர் ஏதேனும் விசேஷமாகப் பேசினாரா?"
மௌனம் காத்தனர் வேலனும், தங்கமணியும்.
"ஆம் ஐயா! விதியை மதியால் வெல்ல வேண்டிய சந்தர்ப்பம் இது என்று சொன்னார்."
"ஓ! அப்படியானால்?"
"பொதுப்பலன் படி அவரால் மதுரையில் அதிக காலம் வாழ முடியாது. ஆனால் அவரது சாதகப்படி பெரிய தலைநகரத்தில் மன்னராக ஆளும் யோகம் அவருக்கு இருக்கிறது. இதனை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் குருநாதர்." என்றான் தித்தன்.
"சபாஷ்! மிக்க மகிழ்ச்சி! அவர் எழுதிய ஓலையிலிருந்து அவர் உத்தேசித்திருக்கும் காரியம் என்ன என்பது எனக்குப் புரிகிறது. உங்களையும் அதில் பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார் குருநாதர். உங்களுக்கு சம்மதம் தானே?"
"நாட்டுக்காக உழைப்பதில் எங்களுக்குப் பெருமையே ஐயா" என்றான் தங்கமணி.
"உங்களது நாட்டுப்பற்று பாராட்டத்தக்கது. ஆனால் எனக்கு அமைச்சராக பணிகள் மிக அதிகம். அதிலும் நாடு இப்போது இருக்கும் நிலையில் என்னால் இதற்கென நேரம் ஒதுக்கவே முடியாது. ஆகையால் குருநாதர் உத்தேசித்திர்க்கும் மிகப்பெரிய செயலை நீங்கள் தனியாகத்தான் செய்ய வேண்டும். அவ்வப்போது என்னால் ஆலோசனை மட்டுமே கூற முடியும்." என்றார் கொங்கண்ணனார்.
"புரிகிறது ஐயா! எங்களால் சாதிக்க முடியும் என நம்புகிறோம்."
"நல்லது! புத்திசாலிகளாகத்தான் காணப்படுகிறீர்கள். உங்களை நம்பலாம் என குருநாதரும் எழுதியிருக்கிறார். எனவே இந்தப் பொறுப்பை உங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். எடுத்த காரியம் முடியும் வரை நீங்கள் மதுரையிலேயே தங்குங்கள். உங்களுக்கு வீடு கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்."
"நன்றி ஐயா"
"ஒரு விஷயம், சேர ஒற்றர்களும், சோழ ஒற்றர்களும் எங்கும் சுற்றித் திரிகிறார்கள். இந்நேரம் இளவரசரின் ஜாதகப் பலன் அவர்கள் வரை எட்டியிருக்கும். பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிப்பதே அவர்கள் நோக்கம். ஆகையால் மிக்க கவனமாகச் செயலாற்ற வேண்டும். மன்னருக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அதற்கு முன் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பல விவரங்களைக் கேட்பார் மன்னர். எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். முறையாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அப்போது தான் வேலை எளிதாகும். "
"அப்படியே செய்கிறோம் ஐயா"
"உம்! நீங்கள் மூவரும் மதுரைக்கு புதிதாக வேலை தேடி வந்தவர்கள். அதை மறக்க வேண்டாம். உங்களது செயல் பேச்சு எல்லாமே அதை ஒட்டித்தான் அமைய வேண்டும். திட்டமிடுதலை எக்காரணம் கொண்டும் இரவில் செய்யாதீர்கள்."
"ஐயா? இரவில் திட்டமிடுதல் தானே வழக்கம்?" என்றான் வேலன்.
"நீ நினைப்பது போல பகைவர்களின் ஒற்றர்களும் நினைப்பார்ர்கள் என்பதால் தான் இரவில் திட்டமிட வேண்டாம் என்றேன் புரிகிறதா?" என்றார் சற்றே எரிச்சல் கலந்த குரலில்.
"புரிந்தது ஐயா!"
"பகலில், அதுவும் உங்கள் வீட்டில் வைத்து திட்டமிட வேண்டாம். ஊருக்குப் பொதுவான மண்டபம், அல்லது கோயில் பிராகாரம் இவற்றில் அமர்ந்து பேசுங்கள். அப்படி நீங்கள் பேசும் போது ஏதோ ரகசியத் திட்டம் தீட்டுகிறீர்கள் என யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது. ஆகையால் இயல்பாகப் பேசுங்கள். உங்களுக்கு அருகாமையில் யாரேனும் நடமாடினால் நீங்கள் பொதுவாகப் பேசுங்கள்." என்றார் அமைச்சர்.
கொடுங்கண்ணனார் ஏன் மன்னருக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறார் என புரிந்தது தித்தனுக்கு. அறிவுக்கூர்மை மிக்கவர் அதோடு சூழ்நிலைகளை கணித்து அதற்கேற்றபடி நடக்கவும் தெரிந்தவர் என்பதால் மன்னர் தன் அருகிலேயே வைத்திருக்கிறார் போல என எண்ணிக் கொண்டான் தித்தன்.
"சரி! எனக்கு பணிக்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேராக காவலர் குடியிருப்பு செல்லுங்கள். அங்கே அமுதன் என்று ஒரு அதிகாரி இருப்பான். அவனுக்கு நான் ஓலை தருகிறேன். அதைக் கொடுத்தால் நீங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வான். பெண்களும் வர இருக்கிறார்கள் என குருநாதர் எழுதி இருக்கிறார். இப்போதைக்கு அமுதன் காட்டும் வீட்டில் தங்குங்கள். பிறகு ஒரு வளாகத்துக்குள்ளேயே மூன்று வீடுகள் இருக்குமாறு ஏற்பாடு செய்து தருகிறேன்." ஆனால் தித்தன் மட்டுமே தன் குடும்பத்தோடு தங்கலாம். வேலனும், தங்கமணியும் பெண்களை மட்டும் தனியாகத்தான் தங்க வைக்க வேண்டும். உங்களுக்குத் திருமணமாகவில்லை எனத் தெரிந்தும் கொண்டேன்." என்றார்.
விரைவாக முடிவெடுக்கும் அவரது திறமையை வியந்தார்கள் மூவரும்.
"உமையாள்" என்று குரல் கொடுத்தார் அமைச்சர்.
நிறைமாத கர்ப்பிணியான ஒரு இளம் மங்கை ஓலையைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
"நீ ஏன் வந்தாய் உமையாள்? யாராவது செவிலியிடம் ஓலையைக் கொடுத்தனுப்பு என்று சொல்லத்தானே வந்தேன்."
சிரித்தாள் அமைச்சரின் மனைவி.
"இதில் எனக்கொன்றும் சிரமமில்லை அத்தான். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். அப்போதே ஓலையைத் தயார் செய்து விட்டேன். ஆனால் எனக்கொரு ஐயம்."
"கேள்"
"இன்னும் ஓரிரு மாதங்களில் பெண்களும் வரப்போகிறார்கள் எனச் சொன்னீர்கள் அல்லவா? அப்படியானால் எனக்கு உதவியாக அவர்களை நம் வீட்டுக்குப் பக்கத்திலயே குடி வைத்து விடலாமே? " என்றாள்.
"உம்! செய்யலாம் தான். ஆனால் தித்தனின் மனைவியும் இப்போது தான் குழந்தை பெற்றிருக்கிறாள். ஆகையால் அவளால் உனக்கு எப்படி உதவ முடியும் எனத் தெரிவில்லையே?"
"இன்னமும் நல்லதாகப் போயிற்று! நம் குழந்தையோடு விளையாட தோழன் கிடைத்தான் என எண்ணுகிறேன். அதோடு, வேலனும், தங்கமணியையும் காதலிகளை அணுகாத வண்ணம் நான் பார்த்துக்கொள்ளவும் செய்வேன்." என்றாள் உமையாள்.
சிரித்து விட்டார் கொடுங்கண்ணனார்.
" நீ மனதில் நினைத்து விட்டால் அதை எப்படியாவது சாதித்துக் கொள்வாய். சரி இப்போதைக்கு இவர்கள் காவலர் குடியிருப்பில் தங்கட்டும். பெண்கள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஓலை எழுதி அதனை தித்தன் கைகளில் அளித்தார்.
"அமுதனுக்குக் கூட நீங்கள் எந்த விஷயமாக வந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவனைப் பொறுத்தவரை நீங்கள் என் வீட்டுக் காவலுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் புதிய வீரர்கள். அவ்வளவு தான்."
"புரிந்தது ஐயா"
"நீங்கள் செல்லலாம்!" என்று எழுந்தார்.
மூவரும் வெளியில் வந்தனர். காவலர் குடியிருப்புக்கு எப்படிச் செல்வது எனக் கேட்டுக் கொண்டு புறப்பட்டனர். சற்றே தொலைவில் அமைந்திருந்தது அந்த இடம். அங்கு சென்று அமுதன் என்பவரைப் பற்றி விசாரித்தார்கள்.
"நான் தான் அமுதன். இங்கு பணி புரியும் அதிகாரி. உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டுக்கொண்டு ஒல்லியான ஒருவன் வந்தான்.
"ஐயா! நாங்கள் அமைச்சர் கொடுங்கண்ணனார் வீட்டுக்கு நியமிக்கப்பட்ட புதிய காவலர்கள். அவர் உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்." என்று சொல்லி ஓலையைக் கொடுத்தான் தித்தன். அதனை வாசித்து விட்டு பதிலே பேசாமல் நடந்தான் அமுதன்.
"ஐயா! என்ன இது? எதுவுமே சொல்லாமல் போனால் எப்படி?" என்றான் தங்கமணி.
"நீ தான் அமைச்சரிடமிருந்தே ஓலை வாங்கி வந்து விட்டயே? என்னால் அதை மீறவா முடியும்? உங்களுக்கு வீடு காட்டுகிறேன் வா" என்று அழைத்தான். அவனது பேச்சில் எரிச்சல் தெரிந்தது.மூவரும் அவனைத் தொடர்ந்தனர்.
சற்று தொலைவில் மிகவும் பழசாகத் தோன்றிய ஒரு சிறு வீட்டின் முன்னால் போய் நின்றான் அமுதன்.
"சொக்கா! சொக்கா" என்று அழைத்தான்.
அமுதனை விட ஒல்லியான ஒருவன் வெளியில் வந்து வணங்கினான்.
"இவர்கள் இங்கே தான் தங்கப் போகிறார்கள். ஆகையால் நீ வேறு இடம் பார்த்துக்கொள்" என்றான் அமுதன்.
"ஐயா! இப்படி திடீர் எனச் சொன்னால் நான் எங்கு செல்வேன்?" என்றான் சொக்கன் பரிதாபமாக.
"என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? இவர்கள் மூவரும் என்னைக் கேட்காமல் நேராக அமைச்சரிடமே வேலை கேட்டு வாங்கிக்கொண்டார்கள். போதாதென்று இவர்களுக்கு வீடு கொடு என கட்டளை வேறு. நான் என்ன தான் செய்ய? வீடு எதுவும் காலி இல்லை என அமைச்சரிடம் நான் சொல்லவா முடியும்?" என்றான் அமுதம் கோபமாக.
"ஐயா! என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. குழந்தை வேறு இருக்கிறது. அவர்களை அழைத்துக்கொண்டு நான் எங்கே செல்வேன்? தயவு செய்யக் கூடதா?" எனக் கெஞ்சினான் சொக்கன். பரிதாபமாக இருந்தது அவனைப் பார்க்க.
"ஐயா! எங்களுக்காக வீட்டில் குடியிருப்பவரை விரட்ட வேண்டாம். நாங்கள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்கிறோம். " என்றான் வேலன். அதனை ஆமோதித்தார்கள் தித்தனும் தங்கமணியும்.
"சரி தான். ஆனால் நான் உங்களுக்கு வீடு கொடுக்கவில்லயென நீங்கள் அமைச்சரிடம் புகார் சொன்னால் என் வேலை போய் விடுமே?"
"அப்படிச் சொல்ல மாட்டோம் ஐயா! சத்தியம்" என்றான் தித்தன்.
சொக்கன் அவர்கள் காலிலேயே விழுந்து விட்டான்.
"ஐயாமாரே! உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்? நீங்கள் நீடூழி வாழ வேண்டும்" என்றான்.
"நான் உங்களுக்கு வீடு தரவில்லை என்ற வார்த்தை வரவே கூடாது. நான் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதை வேண்டாம் என்று விட்டீர்கள் நினைவிருக்கட்டும்" என்று சொல்லி விட்டு போய் விட்டான் அமுதன்.
சொக்கனிடம் விடைபெற்றுக் கொண்டு மூவரும் வீடு தேடிப் புறப்பட்டார்கள்.