பெண்ணே 28
சபரிக்கு பலமாக அடிபட்டிருக்க சரியான நேரத்தில் மருந்துவமனையில் சேர்த்து காபாற்றிவிட்டனர். வி.ஐ.பி அறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த புவி ஒருவித பதட்டத்தில் தக்ஷினாக்கா காத்திருந்தான். குண்டு பயங்கர சத்தமாக வெடிக்க ஒரு கனமான பொருள் அவள் தலையில் பட்டு தையல் போடும் அளவிற்கு காயமாகிருந்தது அதிலிருந்து லேசான வயிற்று வலி ஆராம்பிக்க அவளே சற்று பயந்துவிட்டாள். அவள் அடிக்கடி வயிற்றை பிடிக்க அதை பார்த்த புவி என்னவென்று விசாரித்தவன் அவளை கடிந்துக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்தான். அவளுக்கு லேசாக ப்ளீடாகி இருக்க டாக்டரை படுத்தியெடுத்தவன் மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர் என அறிந்துக்கொண்ட பின் தான் மூச்சே விட்டான். இருந்தும் புவிக்கு பயம் போகவில்லை. கழிப்பறையில் இருந்து வந்தவள் கலைப்பாக அமர அவள் தலையில் இருந்த கட்டை வருடிவிட்டான். புவிக்கும் கையில் புள்ளட் உரசிசெல்ல காயம் பட்டுருந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகாமல் தப்பித்துவிட்டனர்.
"வலிக்குதா தீ… வேற எங்கயாச்சும் அடி பட்டிருக்கா?" என அவளை ஆயிரமாவது முறையாக புவி ஆராய தலையை சாய்த்து சிரித்தாள் அவள்.
"போதும்டா புவி… எத்தன டைம் கேட்ப அதுதான் பேபிஸ்ச ஸ்கேன் பண்ணி பாத்தாச்சுல" என காதை பிடித்து திருக அவள் வயிற்றில் உதைத்தது குழந்தை.
"பாரேன் மாமு அவங்க அப்பாவ அடிச்சா இதுங்களுக்கு கோபம் வருது" என தக்ஷினா ஆச்சரியமாக சொல்லி சிரித்தாள்.
"நான் உன்ன தான் கேட்டேன் தீ. நீ நல்லா இருக்கியா…? பஸ்ட் எனக்கு நீ தான் முக்கியம்" என அவள் வயிற்றில் மென்மையாக வருடிவிட்டான்.
"ம்ம்… ஐயம் பிரிட்டி பைன்… பேபிஸ்சும் பிரிட்டி பிரிட்டி பைன்… ஆனா… என் ஸ்டொமக் தான் கத்துது... "
"ஏன் என்னாச்சு?"
"பசிக்குதுடா லூசே… போ போய் ஏதாச்சும் வாங்கிட்டு வா… மாமு உனக்கு பதில் செல்றதுக்கே நிறைய சாப்பிடனும் போல…" என அவன் மண்டையில் தட்டினாள் தக்ஷினா.
புவி அவளை இறுக்கமாக அனைத்துக்கொள்ள "ஹேய் விடு விடு… பாப்பாக்கு வலிக்க போகுது" என தள்ளி விட்டவளை முறைத்தான் அவன்.
பின்னே பலரை அடித்து தூக்கி வீசுபவள் கடினமான பயிற்சிகளை முடித்து பல கலைகளில் சிறந்து விளங்குபவள் தன் குழந்தைகளை மயிலிறகால் வருடினாள் கூட வலிக்குமோ என்று பயந்தால் அவனும் என்ன தான் சொய்வான். இன்னும் ஒருவாரம் மட்டும் முப்பையில் தங்கி பார்மாலிடீஸ் முடிக்க வேண்டி இருக்க அங்கேயே ஒரு ரூம் புக் செய்தான் புவி.
சென்னையில் உள்ள ஆர்.ஆர் கல்லூரியின் பின்புறம் இருந்த காட்டில் ஒரே நாளில் நூறு பிணங்களுக்கும் மேல் கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண் பிணங்களே அதிகம்.
அப்பெண்கள் அநேகமானவர்கள் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களாக தான் இருக்க வேண்டும் என்று பேசபட்டது. அக்கல்லூரி பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை பலர் கைது செய்யபட்டு விசாரணையில் இருந்தனர்.
அன்றே ஆர்.ஆர்காக வேலை பார்த்த ரவுடிகள் ஆங்காங்கே என்கவுண்டரில் சுட்டிக் கொல்லப்பட்டனர்.
அன்று அந்த பிளக் அமேரிக்கனை அடித்து அவனிடம் வாங்கிய உண்மைகளை வைத்து வெளிநாட்டுக்கு கடத்த பட இருந்த ஐம்பது பெண்களை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வெளி நாடுகளுக்கு கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
அவன் தான் ஆயுஷ்க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதை சொன்னான். அவனையும் முக்கிய ஆதாரமாக கோர்டில் ஒப்படைத்து விட்டனர்.
இந்தியாவில் ஆர்.ஆர் மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டு உடல் உறுப்பு திருட்டுக்கு துணையாக இருந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ஆர்.ஆர்க்கு சொந்தமான இடங்கள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது. அவர்கள் செய்த முறைகேடுக்கு அனுமதி வழங்கிய அரசியல்வாதிகள் கேள்விகளால் துளைக்க பட்டனர்.
அனைவரும் அவர்களை அழைத்து பாராட்டினர் பேசினர். பிரஸ் மீடியா இன்ஸ்டாகிராம் என அனைத்தும் அவர்களை புகழ்ந்து தள்ளியது. ஒரு கர்பிணி பெண் தலைமையில் இத்தனை பெரிய ஆப்ரேசன் நடந்தது மக்களிடையே பெரிதாக் பேசப்பட்டது. பிரஸ் மீட்டில் இதையை கேள்வியாக கேட்க "தாய்மை என்றுமே பெண்களை பலவீனம் ஆக்குவதில்லை. முன்ன விட இன்னும் நான் உறுதியா இருக்கேன்" என அவள் பேசியது சிறந்த உந்துசக்தியாக பல கர்பிணிகளை எழுந்து நிற்கவைத்தது.. பெண்களுக்கு பெரும் எடுத்துக்காட்டானாள்.
புவி காரை தஷினா வீட்டில் நிறுத்த அவளோ விமலனை காணபோகும் சந்தோஷத்தில் பரபரப்பாக இருந்தாள். அவனை பார்த்தே பலமாதங்கள் ஆகிருந்தது… எப்போதாவது போனில் பேசுவான். அவன் கோபம் அவளுக்கு தெரியாததா… குழந்தையை பற்றி மறைத்ததனால் முன்பைவிட இன்னும் கோபம் கூடி இருக்குமோ? எப்படி சமாளிப்பது? என யோசித்துக் கொண்டே வர பக்கத்தில் புவி விமலனை எண்ணி வருத்தத்துடன் வந்தான். அவனுடன் பேசி எட்டு மாதங்கள் ஆகிவிட்டதல்லவா.
இவளை பார்த்ததும் புவியை மட்டும் வரவேற்ற சாந்தினி முஞ்சை தூக்கி வைத்துக்கொள்ள மாடியில் இருந்து கிட்டதட்ட ஓடி வந்த விமலன் சற்று தயங்கி நின்றான். "குழந்தைகள் உண்டானதையும் மறைத்து விட்டாளே" என்ற கோபம் அவனுக்கு.
தக்ஷினாவோடு பேசுவதா? வேண்டாமா? என்று விமலன் யோசிக்க அவனை கண்டதும் வயிற்றை பிடித்துக் கொண்டு தடதடவென அவனிடம் ஒடிவந்த தக்ஷினாவை பார்த்து எல்லா யோசனையும் காற்றில் பறக்கவிட்டவன் ஒடி வந்து அனைத்துக் கொண்டான். அவள் ஓடியதை பார்த்து சாந்தினியும் விமலனும் அவளை கடிந்துக்கொள்ள அவர்களிடம் செல்லம் கொஞ்சியே சமாதானம் படுத்தினாள். தனியாக நின்ற புவியை முத்துவேல் அனைத்துக்கொள்ள நலன் விசாரிப்புக்கு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
புவி அவளை இங்கு விட்டுவிட்டு அவர்கள் வாழப்போகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுவிட்டான்.
"தீ இப்போ குழந்தைகளும் வந்துட்டாங்க இது உன்னோட பேமிலி… நீ தான் முடிவெடுக்கணும்" ஓய்வாக அமர்ந்திருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான் விமலன்.
"ம்ம் கரெக்ட் தான் விமி நானும் அத யோசிச்சேன். பட் எனக்கு இந்த தாலி சென்டிமென்ட்லாம் கிடையாது பாக்கலாம் இப்போதைக்கு எனக்கு பேபிஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் ஆசை. ராதிகா கேஸ் முடிஞ்சோன வேலைய விட போறேன்"
"அத நான் பார்த்திக்கிறேன். நீ பஸ்ட் ரெஸ்ட் எடு… அதுவும் உனக்கு டிவின்ஸ் ரொம்ப இலச்சி போயிட்ட தீ ஓழுங்க சாப்பிடுறியா? இல்லையா? இந்த புவி எருமை உன்ன நல்லா பாத்துக்கிறானா?"
"ச்ச மாமு என்னையும் பேபிசயும் எப்படி பாத்துக்கிறான் தெரியுமா விமி. எனக்கு சாப்பாடு சேராம வாமிட் வந்திரும். அப்போலாம் அவன் தான் க்ளீன் பண்ணுவான் திரும்ப எனக்கு பிடிச்ச மாதிரி சமச்சி தருவான். நான் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் நம்ம சாந்தினி மாதிரி எல்லாத்தையும் பொறுத்துப்பான்" என அவன் புராணம் பாட ஆரம்பிக்க "இது எப்போ?" என்று சிரித்து வைத்தான் விமலன்.
"சரி விமி ராதிகா கேஸ்ல நான் கேட்டிருந்தது என்னாச்சி?"
"ஒரு சின்ன க்ளுவ் கிடைச்சிருந்துச்சு அதை வச்சி விசாரிச்சேன். அன்னைக்கு அபி ராதிகாவோட பாட்டு நோட்ஸ்ச வீட்டுக் எடுத்துட்டு வந்து பாத்துட்டு இருந்தா. அதில ராதிகா அவளுக்கு பிடிச்சவங்கள பத்தி எழுதி வச்சிருப்பா போல அதுல தான் ஒரு எஃப் இசட் பைக் பத்தி எழுதிருந்தா" என ஆரம்பித்தவன் அனைத்தையும் சொன்னான்.
"சோ பைக்ல வந்த கொலைகாரனோட மோதிரம் தான் அவள் பேக்கல விழுந்திருக்கனும்"
"ஆமா அவன் வந்தப்போவே அவன் கையில அத ராதிகா பார்த்திருக்கா. அதையும் அந்த கத்தியையும் அவன்கிட்ட கொடுக்கலாம்னு இருந்த அன்னைக்கு தான் அவள கடத்திருக்காங்க அப்படிதான் எழுதியிருந்தது. நானும் அந்த பைக் கார் பத்தி விசாரிச்சு பாத்தேன்… தீ பட் ஒன்னுமே கிடைக்கல"
"வேற எதாச்சும் கிடைச்சதா?"
"ப்ச் விட மாட்டியே… நீ ரூம்க்கு போ நைட் பேசிக்கலாம்"
"இல்ல விமி எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்கு… நான் அந்த ஆயுஷ் வீட்டுல துருவ் கையில் அந்த மோதிரம் இருக்க போட்டோவ பாத்தேன்"
"ஒரே மாதிரி மோதிரம் நிறைய பேர்கிட்ட இருக்கும் தீ. பஸ்ட் இந்த மோதிரம் போட்ருந்தவன் தான் சத்தியாவ கொன்னவனு எப்படி சொல்ற? அண்ட் துருவ்க்கும் இதுக்கும் எப்படி ரிலேட் பண்ற"
"கெஸிங் தான் விமி துருவ் ஏன் செஞ்சிருக்க கூடாது. அவன் யோகியன்லாம் இல்ல பச்ச பொறுக்கி தான்"
"அப்பறம் இந்த கேஸ்ல மோதிரத்தை ஆதாரமா நான் எடுத்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நோட் பண்ணியா அந்த சத்தியா அவ எங்கெல்லாம் அந்த மோதிரகாரன பார்த்து போசினேன்னு அவ லவ்வர்கிட்ட சொன்னாலோ கரெக்டா அந்த இடத்தில ரெண்டு சிசிடிவி இருந்துருக்கு ஆனா அது என்ன ஆச்சுனே தெரியல. நான் ரொம்ப நாள் கழிச்சி தான் அத கண்டுபிடிச்சேன். அந்த மோதிரத்த ஒரு சாதாரண ஆளால வாங்கிட முடியாது அதே மாதிரி சத்தியாவோட ஒர்ஜினல் அட்டாப்சி ரிப்போர்ட் படி பாத்தா கில்லர்ஸ் பெரிய பணபலம் உள்ளவங்கனு தெரிஞ்சது. நீயே யோசியேன்… அது எல்லாமே அவன் கூட மேட்ச் ஆகுது. எப்படி இருந்தாலும் மோதிரகாரன் தான் நம்ம தேடுரவன் அதுக்கு ஆதாரம் ராதிகாகிட்டயே இருக்கு"
"ஆமா தீ பட் அந்த கத்தில ராதிகாவோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தான் இருக்கு. அப்படி பாத்தாலும் துருவ் தான் டாக்டர் இல்லையே"
"ப்ச் சந்திப் அவன் ஒரு டாக்டர் தான ஆனா அவன் சரியான முட்டாள் விமி. இந்த கேஸ்ல ஒரு இன்டலிஜன்ட் இன்வால் ஆகிருகான். எனக்கு ரோகன் பக்டே மேல தான் டவுட். ஒரு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அவன் ஆர்.ஆர்ல தான் இருந்துருக்கான். அவனும் அவனுங்க பிரண்ட் தான்"
"இப்போ என்ன பண்ணலாம். இத ப்ரூவ் பண்ற அளவுக்கு நம்ம கிட்ட ஆதாரமே இல்லயே? பப்ளிக்கே நம்மளால கேஸ்ச முடிக்க முடியாம ஆர்.ஆர்ற சாக்கா வச்சி அவங்கள பிளேம் பண்றோம்னு சொல்லிடுவாங்க. பஸ்ட் நமக்கு அவனுங்க எங்க இருங்காங்கனே தெரியாது. ஆர்.ஆர் அழிஞ்சாலும் அவனுங்கிட்ட இன்னும் நிறையவே பணம் இருக்கும். கண்டிப்பா வேற எதாவுது கண்ட்ரில இருந்துகிட்டு இதே தப்பதான் பண்ணுவானுங்க"
"அதுக்கு அவனுங்க உயிரோட இருக்கனும். நாளைக்கு என்கூட ஏர்போர்ட் வா விமி முக்கியமான வேலை இருக்கு" என்றவள் எழுந்து சென்று விட விமலனுக்கு தான் எதுவுமே புரியவில்லை.
அதியன் ஆராதனாவை கையில் தாங்கினான் தினமும் அவளை பார்க்க வருபவன் இரவு தூங்க மட்டும் தான் வீட்டிற்கு செல்வான். டெலிவரி டைம் நெருங்க நெருங்க அவனுக்கு பயமாக இருந்தது. அவள் மூச்சுவிட சிரமபடும் போதெல்லாம் அதியனுக்கும் மூச்சை அடைக்கும். இப்போது கூட வெண்ணீரை ஒரு பக்கெட்டில் ஊத்தி பதமாக நீர் கலந்தவன் வீங்கியிருந்த அவள் காலை மசாஜ் செய்துக்கொண்டு இருந்தான்.
"அத்தான் போதும் எழுந்திரிங்க"
"இப்போ எப்படி இருக்கு… பப்பி?"
"ம்ம்… அதெல்லாம் பரவால்ல உங்க பொண்ணு தான் என்ன உதைக்கிறா"
"எங்க இரு நான் என்னனு கேட்கிறேன்" என்றவன் அவள் உப்பிய வயிற்றிடம் கதை பேச குழந்தையின் அசைவு அதிகமாக இருந்தது.
"சரி டா செல்லம்… இனி அம்மாவ டிஸ்ரப் பண்ண கூடாது.. சொல்லிட்டேன்டி ஆரு போதுமா?"
"க்கும் நீங்க சொன்ன உடனே கேட்டிருவாளா? ஸ்ஸ்ஸ் பாருங்க நல்லா உதைக்கிறா" என அவள் சினுங்க "உன்ன மாதிரி அடம் பண்றாளோ?" அவன் சீரியசாக சொல்ல அவன் காதை திருகினாள் ஆரா.
"அத நீங்க சொல்லிறிங்களா… ப்பா அடம்பிடிக்கிறதுல யாராலையும் உங்கள மிஞ்ச முடியாது"
"அப்படி என்னடி நான் அடம் பிடிச்சேன்? ம்ம் ஒரு உம்மா கேட்டா கூட தரமுடியாதுனு நீ தான் அடம் பிடிப்ப"
"ரொம்ப தான் தரலனாலும் விடுற ஆளுதான் அத்தான் நீங்க. இருங்க ஒரு நாள் வந்து அடம் பிடிக்கிற அன்னைக்கு கடிச்சி வைக்கிறேன்"
"ஈஈஈஈ… செல்ல குட்டி அப்படிலாம் சொல்லாதடா? பாரு நான் எவ்வளவு குட் பாய்னு" என்றவன் அவள் இதழை கடித்து வைக்க அவனை முறைக்க முயன்று தோற்றாள் ஆராதனா.
அன்று இரவே அவளுக்கு பிரசவ வலி வந்துவிட அதியனை போலவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. நர்ஸ் குழந்தையை கையில் கொடுக்க அதனை வாங்காமல் ஆரா கண்விழித்த பின் தான் நடுங்கும் கையால் குழந்தையை வாங்கினான். ஆராதனா குழந்தையை வாங்கியவுடன் இருவருக்கும் கண்கள் கலங்கியது.
அவளை அமர வைத்தவன் குழந்தையை தூக்கி கொடுக்க அழகான செப்பு வாயை திறந்து பால் குடித்தாள் அவர்களின் செல்ல மகள். குழந்தையை பார்த்தாலே ஆராவுக்கு பால் ஊரி உடையை நனைத்தது. நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால் குழந்தையும் நன்றாக குடித்தாள். எல்லோரும் மிகுந்த சந்தோஷமாக இருந்தனர். அண்ணன் மகளை கண்டு புவிக்கும் எப்போது தன் மக்களை பார்ப்போம் என்று ஆசையாக இருந்தது. தக்ஷினா குழந்தையை பார்க்க வர மருந்துவமனை வாசனை அவளுக்கு ஒத்துக்கவில்லை அதனால் சற்று நேரத்திலே அவளை அனுப்பிவிட்டனர்.
வருவாள்…
www.sahaptham.com
சபரிக்கு பலமாக அடிபட்டிருக்க சரியான நேரத்தில் மருந்துவமனையில் சேர்த்து காபாற்றிவிட்டனர். வி.ஐ.பி அறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த புவி ஒருவித பதட்டத்தில் தக்ஷினாக்கா காத்திருந்தான். குண்டு பயங்கர சத்தமாக வெடிக்க ஒரு கனமான பொருள் அவள் தலையில் பட்டு தையல் போடும் அளவிற்கு காயமாகிருந்தது அதிலிருந்து லேசான வயிற்று வலி ஆராம்பிக்க அவளே சற்று பயந்துவிட்டாள். அவள் அடிக்கடி வயிற்றை பிடிக்க அதை பார்த்த புவி என்னவென்று விசாரித்தவன் அவளை கடிந்துக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்தான். அவளுக்கு லேசாக ப்ளீடாகி இருக்க டாக்டரை படுத்தியெடுத்தவன் மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர் என அறிந்துக்கொண்ட பின் தான் மூச்சே விட்டான். இருந்தும் புவிக்கு பயம் போகவில்லை. கழிப்பறையில் இருந்து வந்தவள் கலைப்பாக அமர அவள் தலையில் இருந்த கட்டை வருடிவிட்டான். புவிக்கும் கையில் புள்ளட் உரசிசெல்ல காயம் பட்டுருந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகாமல் தப்பித்துவிட்டனர்.
"வலிக்குதா தீ… வேற எங்கயாச்சும் அடி பட்டிருக்கா?" என அவளை ஆயிரமாவது முறையாக புவி ஆராய தலையை சாய்த்து சிரித்தாள் அவள்.
"போதும்டா புவி… எத்தன டைம் கேட்ப அதுதான் பேபிஸ்ச ஸ்கேன் பண்ணி பாத்தாச்சுல" என காதை பிடித்து திருக அவள் வயிற்றில் உதைத்தது குழந்தை.
"பாரேன் மாமு அவங்க அப்பாவ அடிச்சா இதுங்களுக்கு கோபம் வருது" என தக்ஷினா ஆச்சரியமாக சொல்லி சிரித்தாள்.
"நான் உன்ன தான் கேட்டேன் தீ. நீ நல்லா இருக்கியா…? பஸ்ட் எனக்கு நீ தான் முக்கியம்" என அவள் வயிற்றில் மென்மையாக வருடிவிட்டான்.
"ம்ம்… ஐயம் பிரிட்டி பைன்… பேபிஸ்சும் பிரிட்டி பிரிட்டி பைன்… ஆனா… என் ஸ்டொமக் தான் கத்துது... "
"ஏன் என்னாச்சு?"
"பசிக்குதுடா லூசே… போ போய் ஏதாச்சும் வாங்கிட்டு வா… மாமு உனக்கு பதில் செல்றதுக்கே நிறைய சாப்பிடனும் போல…" என அவன் மண்டையில் தட்டினாள் தக்ஷினா.
புவி அவளை இறுக்கமாக அனைத்துக்கொள்ள "ஹேய் விடு விடு… பாப்பாக்கு வலிக்க போகுது" என தள்ளி விட்டவளை முறைத்தான் அவன்.
பின்னே பலரை அடித்து தூக்கி வீசுபவள் கடினமான பயிற்சிகளை முடித்து பல கலைகளில் சிறந்து விளங்குபவள் தன் குழந்தைகளை மயிலிறகால் வருடினாள் கூட வலிக்குமோ என்று பயந்தால் அவனும் என்ன தான் சொய்வான். இன்னும் ஒருவாரம் மட்டும் முப்பையில் தங்கி பார்மாலிடீஸ் முடிக்க வேண்டி இருக்க அங்கேயே ஒரு ரூம் புக் செய்தான் புவி.
சென்னையில் உள்ள ஆர்.ஆர் கல்லூரியின் பின்புறம் இருந்த காட்டில் ஒரே நாளில் நூறு பிணங்களுக்கும் மேல் கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண் பிணங்களே அதிகம்.
அப்பெண்கள் அநேகமானவர்கள் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களாக தான் இருக்க வேண்டும் என்று பேசபட்டது. அக்கல்லூரி பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை பலர் கைது செய்யபட்டு விசாரணையில் இருந்தனர்.
அன்றே ஆர்.ஆர்காக வேலை பார்த்த ரவுடிகள் ஆங்காங்கே என்கவுண்டரில் சுட்டிக் கொல்லப்பட்டனர்.
அன்று அந்த பிளக் அமேரிக்கனை அடித்து அவனிடம் வாங்கிய உண்மைகளை வைத்து வெளிநாட்டுக்கு கடத்த பட இருந்த ஐம்பது பெண்களை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வெளி நாடுகளுக்கு கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
அவன் தான் ஆயுஷ்க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதை சொன்னான். அவனையும் முக்கிய ஆதாரமாக கோர்டில் ஒப்படைத்து விட்டனர்.
இந்தியாவில் ஆர்.ஆர் மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டு உடல் உறுப்பு திருட்டுக்கு துணையாக இருந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ஆர்.ஆர்க்கு சொந்தமான இடங்கள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது. அவர்கள் செய்த முறைகேடுக்கு அனுமதி வழங்கிய அரசியல்வாதிகள் கேள்விகளால் துளைக்க பட்டனர்.
அனைவரும் அவர்களை அழைத்து பாராட்டினர் பேசினர். பிரஸ் மீடியா இன்ஸ்டாகிராம் என அனைத்தும் அவர்களை புகழ்ந்து தள்ளியது. ஒரு கர்பிணி பெண் தலைமையில் இத்தனை பெரிய ஆப்ரேசன் நடந்தது மக்களிடையே பெரிதாக் பேசப்பட்டது. பிரஸ் மீட்டில் இதையை கேள்வியாக கேட்க "தாய்மை என்றுமே பெண்களை பலவீனம் ஆக்குவதில்லை. முன்ன விட இன்னும் நான் உறுதியா இருக்கேன்" என அவள் பேசியது சிறந்த உந்துசக்தியாக பல கர்பிணிகளை எழுந்து நிற்கவைத்தது.. பெண்களுக்கு பெரும் எடுத்துக்காட்டானாள்.
புவி காரை தஷினா வீட்டில் நிறுத்த அவளோ விமலனை காணபோகும் சந்தோஷத்தில் பரபரப்பாக இருந்தாள். அவனை பார்த்தே பலமாதங்கள் ஆகிருந்தது… எப்போதாவது போனில் பேசுவான். அவன் கோபம் அவளுக்கு தெரியாததா… குழந்தையை பற்றி மறைத்ததனால் முன்பைவிட இன்னும் கோபம் கூடி இருக்குமோ? எப்படி சமாளிப்பது? என யோசித்துக் கொண்டே வர பக்கத்தில் புவி விமலனை எண்ணி வருத்தத்துடன் வந்தான். அவனுடன் பேசி எட்டு மாதங்கள் ஆகிவிட்டதல்லவா.
இவளை பார்த்ததும் புவியை மட்டும் வரவேற்ற சாந்தினி முஞ்சை தூக்கி வைத்துக்கொள்ள மாடியில் இருந்து கிட்டதட்ட ஓடி வந்த விமலன் சற்று தயங்கி நின்றான். "குழந்தைகள் உண்டானதையும் மறைத்து விட்டாளே" என்ற கோபம் அவனுக்கு.
தக்ஷினாவோடு பேசுவதா? வேண்டாமா? என்று விமலன் யோசிக்க அவனை கண்டதும் வயிற்றை பிடித்துக் கொண்டு தடதடவென அவனிடம் ஒடிவந்த தக்ஷினாவை பார்த்து எல்லா யோசனையும் காற்றில் பறக்கவிட்டவன் ஒடி வந்து அனைத்துக் கொண்டான். அவள் ஓடியதை பார்த்து சாந்தினியும் விமலனும் அவளை கடிந்துக்கொள்ள அவர்களிடம் செல்லம் கொஞ்சியே சமாதானம் படுத்தினாள். தனியாக நின்ற புவியை முத்துவேல் அனைத்துக்கொள்ள நலன் விசாரிப்புக்கு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
புவி அவளை இங்கு விட்டுவிட்டு அவர்கள் வாழப்போகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுவிட்டான்.
"தீ இப்போ குழந்தைகளும் வந்துட்டாங்க இது உன்னோட பேமிலி… நீ தான் முடிவெடுக்கணும்" ஓய்வாக அமர்ந்திருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான் விமலன்.
"ம்ம் கரெக்ட் தான் விமி நானும் அத யோசிச்சேன். பட் எனக்கு இந்த தாலி சென்டிமென்ட்லாம் கிடையாது பாக்கலாம் இப்போதைக்கு எனக்கு பேபிஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் ஆசை. ராதிகா கேஸ் முடிஞ்சோன வேலைய விட போறேன்"
"அத நான் பார்த்திக்கிறேன். நீ பஸ்ட் ரெஸ்ட் எடு… அதுவும் உனக்கு டிவின்ஸ் ரொம்ப இலச்சி போயிட்ட தீ ஓழுங்க சாப்பிடுறியா? இல்லையா? இந்த புவி எருமை உன்ன நல்லா பாத்துக்கிறானா?"
"ச்ச மாமு என்னையும் பேபிசயும் எப்படி பாத்துக்கிறான் தெரியுமா விமி. எனக்கு சாப்பாடு சேராம வாமிட் வந்திரும். அப்போலாம் அவன் தான் க்ளீன் பண்ணுவான் திரும்ப எனக்கு பிடிச்ச மாதிரி சமச்சி தருவான். நான் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் நம்ம சாந்தினி மாதிரி எல்லாத்தையும் பொறுத்துப்பான்" என அவன் புராணம் பாட ஆரம்பிக்க "இது எப்போ?" என்று சிரித்து வைத்தான் விமலன்.
"சரி விமி ராதிகா கேஸ்ல நான் கேட்டிருந்தது என்னாச்சி?"
"ஒரு சின்ன க்ளுவ் கிடைச்சிருந்துச்சு அதை வச்சி விசாரிச்சேன். அன்னைக்கு அபி ராதிகாவோட பாட்டு நோட்ஸ்ச வீட்டுக் எடுத்துட்டு வந்து பாத்துட்டு இருந்தா. அதில ராதிகா அவளுக்கு பிடிச்சவங்கள பத்தி எழுதி வச்சிருப்பா போல அதுல தான் ஒரு எஃப் இசட் பைக் பத்தி எழுதிருந்தா" என ஆரம்பித்தவன் அனைத்தையும் சொன்னான்.
"சோ பைக்ல வந்த கொலைகாரனோட மோதிரம் தான் அவள் பேக்கல விழுந்திருக்கனும்"
"ஆமா அவன் வந்தப்போவே அவன் கையில அத ராதிகா பார்த்திருக்கா. அதையும் அந்த கத்தியையும் அவன்கிட்ட கொடுக்கலாம்னு இருந்த அன்னைக்கு தான் அவள கடத்திருக்காங்க அப்படிதான் எழுதியிருந்தது. நானும் அந்த பைக் கார் பத்தி விசாரிச்சு பாத்தேன்… தீ பட் ஒன்னுமே கிடைக்கல"
"வேற எதாச்சும் கிடைச்சதா?"
"ப்ச் விட மாட்டியே… நீ ரூம்க்கு போ நைட் பேசிக்கலாம்"
"இல்ல விமி எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்கு… நான் அந்த ஆயுஷ் வீட்டுல துருவ் கையில் அந்த மோதிரம் இருக்க போட்டோவ பாத்தேன்"
"ஒரே மாதிரி மோதிரம் நிறைய பேர்கிட்ட இருக்கும் தீ. பஸ்ட் இந்த மோதிரம் போட்ருந்தவன் தான் சத்தியாவ கொன்னவனு எப்படி சொல்ற? அண்ட் துருவ்க்கும் இதுக்கும் எப்படி ரிலேட் பண்ற"
"கெஸிங் தான் விமி துருவ் ஏன் செஞ்சிருக்க கூடாது. அவன் யோகியன்லாம் இல்ல பச்ச பொறுக்கி தான்"
"அப்பறம் இந்த கேஸ்ல மோதிரத்தை ஆதாரமா நான் எடுத்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நோட் பண்ணியா அந்த சத்தியா அவ எங்கெல்லாம் அந்த மோதிரகாரன பார்த்து போசினேன்னு அவ லவ்வர்கிட்ட சொன்னாலோ கரெக்டா அந்த இடத்தில ரெண்டு சிசிடிவி இருந்துருக்கு ஆனா அது என்ன ஆச்சுனே தெரியல. நான் ரொம்ப நாள் கழிச்சி தான் அத கண்டுபிடிச்சேன். அந்த மோதிரத்த ஒரு சாதாரண ஆளால வாங்கிட முடியாது அதே மாதிரி சத்தியாவோட ஒர்ஜினல் அட்டாப்சி ரிப்போர்ட் படி பாத்தா கில்லர்ஸ் பெரிய பணபலம் உள்ளவங்கனு தெரிஞ்சது. நீயே யோசியேன்… அது எல்லாமே அவன் கூட மேட்ச் ஆகுது. எப்படி இருந்தாலும் மோதிரகாரன் தான் நம்ம தேடுரவன் அதுக்கு ஆதாரம் ராதிகாகிட்டயே இருக்கு"
"ஆமா தீ பட் அந்த கத்தில ராதிகாவோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தான் இருக்கு. அப்படி பாத்தாலும் துருவ் தான் டாக்டர் இல்லையே"
"ப்ச் சந்திப் அவன் ஒரு டாக்டர் தான ஆனா அவன் சரியான முட்டாள் விமி. இந்த கேஸ்ல ஒரு இன்டலிஜன்ட் இன்வால் ஆகிருகான். எனக்கு ரோகன் பக்டே மேல தான் டவுட். ஒரு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அவன் ஆர்.ஆர்ல தான் இருந்துருக்கான். அவனும் அவனுங்க பிரண்ட் தான்"
"இப்போ என்ன பண்ணலாம். இத ப்ரூவ் பண்ற அளவுக்கு நம்ம கிட்ட ஆதாரமே இல்லயே? பப்ளிக்கே நம்மளால கேஸ்ச முடிக்க முடியாம ஆர்.ஆர்ற சாக்கா வச்சி அவங்கள பிளேம் பண்றோம்னு சொல்லிடுவாங்க. பஸ்ட் நமக்கு அவனுங்க எங்க இருங்காங்கனே தெரியாது. ஆர்.ஆர் அழிஞ்சாலும் அவனுங்கிட்ட இன்னும் நிறையவே பணம் இருக்கும். கண்டிப்பா வேற எதாவுது கண்ட்ரில இருந்துகிட்டு இதே தப்பதான் பண்ணுவானுங்க"
"அதுக்கு அவனுங்க உயிரோட இருக்கனும். நாளைக்கு என்கூட ஏர்போர்ட் வா விமி முக்கியமான வேலை இருக்கு" என்றவள் எழுந்து சென்று விட விமலனுக்கு தான் எதுவுமே புரியவில்லை.
அதியன் ஆராதனாவை கையில் தாங்கினான் தினமும் அவளை பார்க்க வருபவன் இரவு தூங்க மட்டும் தான் வீட்டிற்கு செல்வான். டெலிவரி டைம் நெருங்க நெருங்க அவனுக்கு பயமாக இருந்தது. அவள் மூச்சுவிட சிரமபடும் போதெல்லாம் அதியனுக்கும் மூச்சை அடைக்கும். இப்போது கூட வெண்ணீரை ஒரு பக்கெட்டில் ஊத்தி பதமாக நீர் கலந்தவன் வீங்கியிருந்த அவள் காலை மசாஜ் செய்துக்கொண்டு இருந்தான்.
"அத்தான் போதும் எழுந்திரிங்க"
"இப்போ எப்படி இருக்கு… பப்பி?"
"ம்ம்… அதெல்லாம் பரவால்ல உங்க பொண்ணு தான் என்ன உதைக்கிறா"
"எங்க இரு நான் என்னனு கேட்கிறேன்" என்றவன் அவள் உப்பிய வயிற்றிடம் கதை பேச குழந்தையின் அசைவு அதிகமாக இருந்தது.
"சரி டா செல்லம்… இனி அம்மாவ டிஸ்ரப் பண்ண கூடாது.. சொல்லிட்டேன்டி ஆரு போதுமா?"
"க்கும் நீங்க சொன்ன உடனே கேட்டிருவாளா? ஸ்ஸ்ஸ் பாருங்க நல்லா உதைக்கிறா" என அவள் சினுங்க "உன்ன மாதிரி அடம் பண்றாளோ?" அவன் சீரியசாக சொல்ல அவன் காதை திருகினாள் ஆரா.
"அத நீங்க சொல்லிறிங்களா… ப்பா அடம்பிடிக்கிறதுல யாராலையும் உங்கள மிஞ்ச முடியாது"
"அப்படி என்னடி நான் அடம் பிடிச்சேன்? ம்ம் ஒரு உம்மா கேட்டா கூட தரமுடியாதுனு நீ தான் அடம் பிடிப்ப"
"ரொம்ப தான் தரலனாலும் விடுற ஆளுதான் அத்தான் நீங்க. இருங்க ஒரு நாள் வந்து அடம் பிடிக்கிற அன்னைக்கு கடிச்சி வைக்கிறேன்"
"ஈஈஈஈ… செல்ல குட்டி அப்படிலாம் சொல்லாதடா? பாரு நான் எவ்வளவு குட் பாய்னு" என்றவன் அவள் இதழை கடித்து வைக்க அவனை முறைக்க முயன்று தோற்றாள் ஆராதனா.
அன்று இரவே அவளுக்கு பிரசவ வலி வந்துவிட அதியனை போலவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. நர்ஸ் குழந்தையை கையில் கொடுக்க அதனை வாங்காமல் ஆரா கண்விழித்த பின் தான் நடுங்கும் கையால் குழந்தையை வாங்கினான். ஆராதனா குழந்தையை வாங்கியவுடன் இருவருக்கும் கண்கள் கலங்கியது.
அவளை அமர வைத்தவன் குழந்தையை தூக்கி கொடுக்க அழகான செப்பு வாயை திறந்து பால் குடித்தாள் அவர்களின் செல்ல மகள். குழந்தையை பார்த்தாலே ஆராவுக்கு பால் ஊரி உடையை நனைத்தது. நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால் குழந்தையும் நன்றாக குடித்தாள். எல்லோரும் மிகுந்த சந்தோஷமாக இருந்தனர். அண்ணன் மகளை கண்டு புவிக்கும் எப்போது தன் மக்களை பார்ப்போம் என்று ஆசையாக இருந்தது. தக்ஷினா குழந்தையை பார்க்க வர மருந்துவமனை வாசனை அவளுக்கு ஒத்துக்கவில்லை அதனால் சற்று நேரத்திலே அவளை அனுப்பிவிட்டனர்.
வருவாள்…
போகாதடி என் பெண்ணே! - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...