Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL மண்வாசம் - Tamil novels

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:
PHOTO-2021-06-01-11-10-43.jpg
மண்வாசம் - 1

இரண்டு வருடங்களாக மழை இல்லாமல் பொய்த்துப் போன பூமி அது.வழக்கத்திற்கு மாறாக அங்கு மக்களின் கூட்டம் எல்லையம்மன் கோவிலில் காணப்பட்டது,ஆங்காங்கே சிறுவர்கள் விளையாடுவதும்,பெண்களின் கூக்குரல் சத்தமும் வேட்டிசட்டை அணிந்த ஆண்களின் நடமாட்டமும் இருந்தன. கோவில் அர்ச்சகர் சுவாமியை பூக்களால் அலங்கரித்துக்கொண்டிருந்தார். ஆங்காங்கே பெண்கள் பொங்கல் வைக்கத்துவங்கினர். எல்லை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டவுடனே மழையோ வெளுத்து வாங்கியது. மழையில்லாமல் விவசாயத்திற்கு கஷ்டமாகியிருந்தன இந்த இரண்டு வருடமும். சொட்டு நீர் பாசனம் மூலம் சில திராட்சை தோட்டமும்,மற்றும் கிழங்கு வகைகளும் ஒரு சிலர் கம்பு பயிர் ஆகியவற்றை தான் இதுவரை பயிரடபட்டன. தற்போது மழை வந்துள்ளதால் இனி இந்த ஊரின் சாபக்கேடு நீங்கியது. இனி பருவக்காலத்தில் மழை நன்றாக பெய்யும் எனவே மேலும் பல பயிர்களை பயிரடலாம் என முடிவு செய்தனர் அவ்வூர் மக்கள்.


அவ்வூரின் பெயர் திருவலங்காடனூர். முன்பு செழிப்பான பச்சைபசேலன்ற பயிர்கள் விளையும் பூமியது. ஆனால் என்ன ஆயிற்றோ சரியாக தெரியவில்லை மழையன்றி பொய்த்து போயிற்று இரண்டு வருடமாய். அவ்வப்போது சாரல் வீசிவிட்டு செல்வதோடு சரி மற்றப்படி பருவக்காலத்தில் மழையில்லாது வரண்டு போயிற்று. இனி அந்த கவலை இல்லை வழுமையாக பயிரிடும் வாழை, தக்காளி ,கேழ்வரகு என்று அனைற்றையும் பயிரிட மக்கள் தயாராகினர்.
“அம்மா,எல்லையம்மன் தாயே எப்படியோ எங்கள் ஊருக்கு மழை பொழிய வச்சிட்ட ரொம்ப நன்றி” என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தாள் கயல்விழி. பி.எஸ்.ஸி வேளாண்மை துறை முதலாவது ஆண்டு சேர்ந்து படித்துவருகிறாள்.

அவள் பிராத்தனை செய்வதை தூரத்தில் இருந்து ஒரு ஆடவன் கவனித்துக்கொண்டிருந்தான். அவன் வேறுயாருமல்ல அந்த கிராமத்திற்கு புதிதாய் வந்த மருத்துவர் டாக்டர் பாண்டியன். பாண்டியன் சிறுவயதில் இங்கு வளர்ந்தவர் தான் என்றாலும் நகரத்திற்கு குடிபெயர்ந்து பிறகு வளர்ந்து மருத்துவபடிப்பு முடித்துவிட்டு மீண்டும் இந்த கிராமத்திற்கே வந்துள்ளார்.இவனது முழுப்பெயர் ரத்தினவேல் பாண்டியன். ஆனால் சுருக்கமாக பாண்டியன் என்று மக்கள் அழைத்து வந்தனர்.
கயல்விழி அங்கிருந்து அகன்று செல்லும் வரையில் அவனது பார்வையிலிருந்து விலகவில்லை. ஆனால் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது கூட அவள் அறிந்திருக்கவில்லை.சற்று நேரம் கழித்து தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் வீட்டைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் அழகான மற்றும் பழமையான திண்ணை அடங்கிய தொட்டிகட்டி வீடு. எந்நேரமும் அவளது வீட்டில் தையல் மிஷின் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கும். தைப்பது வேறுயாருமல்ல அவளது விதவை தாய் தான். கணவன் இறந்த பிறகு பெற்றோர் வீட்டில் தஞ்சம்.அடைந்த பேதை பெண்ணவள். தன் மகளை படிக்க வைத்து ஆளாக்க தன் கைத்தொழிலை ஆயுதமாக எடுத்துக்கொண்டு போறாடிக்கொண்டிருக்கிறாள். கயல்விழியோ தாயின் கஷ்டத்தையும் வயதான தாத்தா பாட்டியையும் புரிந்து நடந்துக்கொள்கிறாள்.
எந்த கஷ்டத்தையும் இதுவரை அவள் தந்ததே இல்லை. முடிந்த அளவு அணுசரனையோடு நடந்துக்கொள்வாள். பி.எஸ்.ஸி அக்ரிகல்சர் இவளுடைய கனவு. இவ்வூரிற்கு தன்னால் முடிந்த விவசாயத்தின் நுனுக்கங்களை சொல்லிக்கொடுத்து பயனடையச்செய்யவேண்டும் என்பதே இவளது குறிக்கோள்.


“ஏய் கயல்விழி படிச்சியாடி”என்று தாயின் குரலில் தெளிந்தவள். ஐயோ நாளைக்கு எக்ஸாம்க்கு இன்னும் படிக்கவேயில்லை என்பதை நியாபகம் கொண்டு படிக்க தயாராகினாள். 32வது பக்கத்தில் படித்துக்கொண்டு இருக்கும் போது நியாபகத்திற்கு ஒன்று எட்டியது.

‘வாட் இஸ் சர்பேஸ் இரிகேஷன்’என்ற கேள்வியை வாசித்துவிட்டு சிந்திக்க துவங்கினாள், ம்ம் அன்னைக்கு மேம் ஏதோ சொன்னாங்களே இதை பற்றி. ஆங் நியாபகம் வந்தாச்சு. மனசுல பதியவச்சிப்போம். என்றபடி படித்துக்கொண்டு இருந்தாள். பொதுவாக அவளுக்கு புரிந்து படிப்பதில் ஆர்வம் அதிகம். வேளாண்மை பிடித்த துறை என்பதால் அதை சந்தோஷமாக தன் கடமை உணர்ந்து படிக்கின்றாள்


கயல்விழியின் தாய் லட்சுமி தன் மகளுக்கு உடனே திருமணம் முடிக்க வேண்டும் என்று எண்ணத்துவங்கினர். காரணம் ஒன்றும் பெருசில்லை. திருமணம் முடித்துவிட்டால் தன் பாரம் குறையும் என்று தான் .பெண்கேட்டு வந்தால் உடனே மணம் முடித்துவிடவேண்டும் என்று நினைக்க. அதற்கு ஏற்றாற்போல் லட்சுமியின் நாத்தனார் தன் மூத்த மகனுக்கு பெண்கேட்டு வந்தார்.

“லட்சுமி நீயும் தனியா எம்புட்டு நாள் கஷ்டப்படுவ. அவள் படிச்சது எல்லாம் போதும். உன் பாரமும் தீரட்டும் சீக்கிரமே என் பையன் எழிலரசனுக்கும் கயல்விழிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாமே” என்க

அதற்கு லட்சுமி முதலில் தயங்கினாள்..
‘என்னதான் இருந்தாலும் என் மகளை இரண்டாம்தாரமா எப்படி கட்டிக்கொடுக்கிறது. அவள் சின்ன பொண்ணு ஆச்சே. அவள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு பதில் சொல்லுவோம் என்று நினைத்து’

“அண்ணி எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க. நான் கயல் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லுறேன்” என்றதும்.

“ஏன் லட்சுமி இரண்டாம்தாரமா தரணுமேனு யோசிக்கிறியா” என்று பட்டென்று போட்டு உடைக்கவும். பதில் சொல்ல இயலாது தயங்கினாள். அதற்குள் கயல் கல்லூரியிலிருந்து வந்தாள்.

“வாடி என் மருமகளே இப்பதான் வரியா?” என்றதும்

“ஆமாம் அத்தை எப்படி இருக்கீங்க ,நீங்க என்ன விஷயமா வந்துருக்கீங்க. இது என்ன கையில் தாம்பூலம் எல்லாம்” என்று ஆச்சியத்துடன் பார்க்க..

“எல்லாம் நல்ல விஷயம்தான் மா. அப்றமா உங்கள் அம்மா உன் கிட்ட சொல்லுவா” என்று சொல்லிவிட்டு சரி நான் கிளம்புறேன் என்று நடையைக்கட்ட..

“மா, என்ன விஷயம் சொல்லேன்” என்று நச்சரித்தாள் கயல்…

“அது வந்து எழிலுக்கு உன்னை பெண்கேட்டு வந்துருக்காங்க. உனக்கு சம்மதமா” என்று வினவ..

“என்னது கல்யாணமா? மா விளையாடாதிங்க நான் படிக்கணும். இந்த கிராமத்துக்கு எதாவது செய்யணும். நான் ஒன்னும் சும்மா டைம்பாஸ்க்கு காலேஜ் போகல புரியுதா. நீ வேண்டாம்னு சொல்லிட்டா உடனே படிக்கிறதை நிப்பாட்டி வீட்டில் இருக்கிறதுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை .இந்த பேச்சை இதோட மறந்திடு மா. ஐயம் வெரி சாரி” என்று சொல்லிவிட்டு தனது புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள்


நாட்கள் வெகுவாக கடந்துக்கொண்டே போனது.
தன் வயது தோழிகளுடன் வயல்வெளி பக்கம் நடந்துச்சென்றுக்கொண்டிருந்தாள். மழை பொழிந்ததன் காரணமாக பச்சைபசேலன்ற காட்சி கண்களுக்கு விருந்தளித்தது. அப்போது அளவுக்கு அதிகமான நீர்பாசனத்தினால் பயிர் சற்று அழுகிக்கொண்டு இருப்பதை கவனித்தாள்.

“ஐயா, பயிர் இப்படி நாசமாகாமல் இருக்கணும்னா நான் ஒரு வழி சொல்லட்டுமா” என்றதும். அந்த நிலத்தின் உரிமையாளரும் விவசாயியுமான ராமலிங்கம் அவளிடம் என்ன என்பதுபோல் கேட்க…

“ஒன்னுமில்லை ஐயா, மேற்பரப்பில் நீர்பாசனம் செய்தால் மண்ணுக்கும் பயிருக்கும் எவ்வளவு நீர் தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி நீரை குட்டையாக வெளியேற்றிவிடும். உங்கள் பயிரும் பாதுகாப்பா அழுகாமல் இருக்கும். முயற்சி பண்ணி பாருங்க என்று ஆலோசனை தந்துவிட்டு தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு நடந்துவந்துக்கொண்டிருந்தாள்.
இதை தூரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த பாண்டியன் அவளது பேச்சினை பார்த்து அசந்துப்போய்.
“இவள் ஒரு அக்ரிகல்சர் டாக்டர் போலருக்கு” என்று மனதிற்குள் பாராட்டிவிட்டு புறப்பட்டான்.

சிறுவயதில் அவளை பார்த்ததுண்டு. கை சப்பியவாறு ஒரு ப்ராக் அணிந்துக்கொண்டு எண்ணெய் வைக்காத தலையுடன் சுற்றித்திரிந்தவள். இன்று அவளோ முடியை பறக்கவிட்டப்படி கோதிக்கொண்டே அழகான சல்வார் அணிந்து மாடர்ன் மங்கையாக சுற்றி வருகிறாளே என்று வியப்பு அவனுக்கு. இப்படி எத்தனை நாள் தான் அவளை பார்த்துக்கொண்டே நாட்களை கடத்துவது. போய் காதலை சொல்லிவிடுவோமா என்று மனம் ஏங்கியது. ஆனால் படிக்கிற பொண்ணு வேற…இப்ப போய் காதல் அது இதுனா நல்லாவா இருக்கும். பாவம் அவள் நல்லா படிக்கட்டும். கிராமத்து பைங்கிளியாய் அழகாய் வலம்வந்துக்கொண்டிருக்கும் அவளை காதலால் கட்டிப்போட விருப்பம் இல்லை அவனுக்கு. கொஞ்ச நாள் போகட்டும் பிறகு போய் காதலை சொல்லிப்போம் என்று விட்டுவிட்டான். ஆனால் என்றாவது ஒருநாள் காதலை சொல்லியேத்தீருவான். அதுவரை மண்வாசம் போல் அவளை நுகர்ந்தவாறே நாட்களை கடத்தப்போகிறான் பாண்டியன்.

“நீயின்றி நானில்லை…
உனக்கான காத்திருப்பும் சுகமே
என் கண்மணியே!
காத்திருப்பேன் காதலை சொல்ல
மண்வாசம் போல் நீ என்றும்
எனக்குள் இருக்க...
மழையாய் உன்னுடன் இருப்பேனடி”
இப்படி அவனுக்குள் கவிதையாய் அவளை வர்ணித்தப்படி நாட்களை கடத்திக்கொண்டு இருக்கிறான் பாண்டியன். அன்று அழைப்பேசி மணி அடித்தது. எடுத்து காதில் வைத்தவன்.

“மா சொல்லுங்கள் என்ன விஷயமா கூப்டிங்க” என்று வினவியவுடன்.

“பாண்டி,என்ன நீ மெடிக்கல் கேம்புன்னு போயிட்டு இப்ப என்னடானா அங்கேயே டேரா போட்ட. எப்போ நீ சென்னைக்கு வரப்போகிற.” என்று அழுத்தமாய் கேட்ட தாய் சிவகாமியிடம்.

“மா,ரத்தினவேல் பாண்டியன் எங்கேயும் போயிடமாட்டேன் இங்கே தானே இருக்கேன் கிராமத்துல. சின்னவயசுல நான் விளையாடி திரிந்த கிராமம் தானே. நல்ல பரிட்சயமான மக்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.”என்று சிரித்தவாறே கூறினான்.


“ஆமாம் ஆமாம் ரொம்ப பரிட்சயம் தான். ஆளைப்பாரு. சரி சரி ஊருக்கு வந்துட்டு போயேன்டா. உன்னை டாக்டருக்கு படிக்க வச்சதே சேவை பண்றதுக்கு தான். அது எனக்கு புரியுது. இருந்தாலும் எங்களை கண்டுக்காமல் நீ அங்கேயே இருந்தால் எப்படி டா” என்றுரைக்க.

“சரிதான் மா, ஆனால் கேம்புக்கு வந்த இடத்தில் எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு பழைய நியாபகம் எல்லாம் வருது ரொம்ப நல்லாருக்கு மா, அதான் இங்கேயே இருந்துட்டேன். மா,உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா இரண்டு வருஷமா மழையே இல்லாமல் இருந்த இந்த ஊருக்கு மழை நல்லா கொட்டி தீர்த்துருச்சு. இப்ப எல்லாமே பசுமையா அழகா இருக்கு மா,நீங்க வீடியோ கால் பண்றப்ப உங்களுக்கு நான் காட்டுறேன்” என்க

“அது சரி டா திருவலங்காடனூர் நல்லா செழிப்பான கிராமம் ஆச்சே இந்த இரண்டு வருஷம் மழை இல்லாமல் போனதுக்கு என்னடா காரணம்?எதாவது சாபக்கேடு போலருக்கு”என்றவுடன் இந்த முறை சற்று கோபத்துடன்.

“மா நீங்களும் இப்படி பேசினால் எப்படி? வேற எதாவது வானிலை மாற்றமா கூட இருக்கலாம். எதுக்கு எடுத்தாலும் தெய்வக்குத்தம் சாபக்கேடு அப்டினு முடிவு பண்ணா எப்படி” என்க.


“நீ படிச்சவன், இதெல்லாம் நம்ப மாட்ட நாங்க அப்படி இல்லையே டா.” என்றதும்.

“சரி படிச்சவன் அம்மா மாதிரி நடந்துக்கோ. சரி அதெல்லாம் இருக்கட்டும். வீடு கட்டுமான பணி எப்படி போயிட்டு இருக்கு. இப்ப பில்டிங் எதுவரைக்கும் வந்துருக்கு.” என்று கேட்டவுடன்.

“அதுவா எல்லாம் லாப்டர் வரை வந்துருக்கு டா,எங்கே கடக்கால் போட்டப்போ வந்தவன் தானே நீ அதுக்கப்புறம் வரவேயில்லை சார். அதுக்கு தான் சொல்றேன் வந்துப்போடா னு” என்று சிவகாமி சலித்துக்கொள்ள.


“வரேன் வரேன் நாளைக்கே கிளம்பி வரேன் போதுமா போனை வை. அப்பாவையும் அண்ணன் அண்ணி தங்கச்சி எல்லாரையும் கேட்டதாக சொல்லு.”

என்று சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்துவிட்டு மெடிக்கல் கேம்ப் நடக்கும் இடத்திற்குச் சென்றான். அங்கே இவனுக்காக பல நோயாளிகள் காத்துக்கிடந்தனர்.
….​
 
Last edited by a moderator:
மண்வாசம்-2
நோயாளிகளை கவனித்துவிட்டு தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தான் வரும் வழியில் ஒரு வீட்டில் தன் மகனுக்கு தலைசீவிக்கொண்டிருந்த தாயை கவனித்தான் அவனரியாமல் உதட்டில் சிரிப்பு எட்டிப்பார்த்தது தன்னைக்காணாத தாயின் ஏக்கம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு வேலை இருந்தாலும் பரவாயில்லை, சென்னைக்கு கிளம்பியே ஆகணும் என்ற கட்டாயத்தில் பெட்டிக்கட்டிக்கொண்டிருந்தான் ரத்தினவேல் பாண்டியன். அப்போது வெளியே ஏதோ சண்டையிடுவது போல் சத்தம் கேட்டது. இவனோ பார்த்துவிட்டு வரலாம் என்று வெளியே வந்தான்.
அங்கு ஒரு கணவன் மனைவி சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
“டேய் குடிக்கார பையலே தினமும் குடிச்சிட்டு வந்து இப்படி உசுர வாங்கி தொலையுற. வீட்டில் வயசு பொண்ணு இருக்காளே எதாவது நகை நட்டு சேர்த்து வைப்போம் அப்டிங்கிற எண்ணமாச்சு உனக்கு இருக்கா இல்லையா” என்று கோபத்தின் உச்சியில் கத்திக்கொண்டிருந்தாள் பாதிகப்பட்ட அந்த பெண்.
“ரொம்ப பேசாத டி அடிச்சிடுவேன்” என்று அவனும் ஆவேசத்தில் கத்த ஆரம்பிக்க அருகில் இருந்த அவர்களுடைய மகள் அழுதபடி நின்றிருந்தாள். இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த பாண்டியன் அவர்கள் அருகில் சென்றான்.
“தம்பி வேணாம். புருஷன் பொண்டாட்டி விவகாரம். நமக்கு எதுக்கு கம்முனு விடுங்க” என்று தடுத்தார் ஒருவர்.
“அதுக்குனு இப்படி கூட்டமா நின்று வேடிக்கை பார்ப்பது மட்டும் நாகரிகமா?வீட்டுக்குள்ளே நடக்கிற விவகாரம் வேற. பொது இடத்தில் இப்படி நடக்கிறது வேற.” என்று சொல்லிவிட்டு கையோங்கி நின்றிருந்த அந்த குடிகாரனின் கரங்களை அவன் பற்றியபடி இருக்கமாக பிடித்தான். ரத்தினவேல் பாண்டியனின் பிடியோ அவ்வளவு உடும்பு பிடிப்போல் இருந்தது. கைகளை உதறிதள்ளிட்டு
“யோவ் நீ ஏன் குறுக்கால வர.. தள்ளு அங்கிட்டு” என்று கோபத்துடன் கொப்பளித்தவனை பளார் என்று அரைந்தவன்..
“பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறது இல்லாமல் என்னை வேற மரியாதை இல்லாமல் பேசுறியா ராஸ்கல். ஒழுங்காக உன் மனைவி கிட்ட மன்னிப்பு கேளு” என்று அதட்டல் போட்டவுடன் ஒருமுறை ஏறிட்டவன்.
“மன்னிச்சிரு”என்று மனைவியிடம் கேட்டு அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.
எல்லாம் இந்த குடி பண்ணுகிற வேலை என்னைக்கு தான் டாஸ்மாக் எல்லாம் மூடப்போறாங்களோ அன்னைக்கு தான் சிலபேருக்கு விடிவுகாலம் பிறக்கப்போகுது என்று புலம்பலுடன் அவரவர் வேலையை கவனிக்க சென்றனர். ஆனால் இதையெல்லாம் நம் கதாநாயகி கயல் பார்த்துக்கொண்டிருந்தாள். நேரே அவன் எதிரில் கண்முன்னே வந்து…
“டாக்டர் சார். நீங்க உண்மைலயே க்ரேட். எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு மட்டுமே இருந்துட்டு இருந்த நேரத்தில் அந்த அக்காவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனீங்க பாருங்க அந்த நல்ல மனசு யாருக்கு வரும். நீங்க நல்ல டாக்டர் அப்டிங்கிறத தாண்டி ஒரு நல்ல மனுஷன்.” என்று நேருக்கு நேர் பாராட்டிவிட்டு சென்றாள்.
அவள் பேசுவாளா என்று எல்லாம் கனவில் கூட நினைக்காத பாண்டியன். இன்று அவளே நேரில் வந்து பாராட்டியது அவனுக்கு மிகவும் ஆசுவாசமாய் இருந்தது. ஒருமுறை தன் மூச்சை இழுத்து விட்டுவிட்டு உள்ளே சென்று தனது பெட்டி படுக்கையுடன் தயாராகி வெளியே வந்தான். திருவலங்காடனூரின் தூய்மையான காற்றை நாசியில் நுகர்ந்தவாறே நடந்தான்.
ஒரு ஆட்டோவை பிடித்து ரயில் நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான். சுற்றிலும் பசுமையான அந்த இயற்கையை ரசித்தப்படியே ஆட்டோவில் இதமான இன்னிசை ஒன்றை கேட்டுக்கொண்டு வந்தான்.
“சார் வந்தாச்சு ரயில்வே ஸ்டேஷன்” என்றவுடன் இறங்கி ஆட்டோ டிரைவருக்கு காசை தந்துவிட்டு ரயில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தான். டிக்கேட் வாங்கிக்கொண்டு தனது இருக்கையில் அமர்ந்தான். முன்பதிவு செய்திருந்தால் இந்த கூட்ட நெரிசலில் அல்லாட தேவையிருக்காது. ஆனால் தனது அம்மா சிவகாமி உடனே வரச்சொன்னதால் இந்த பாடு.
“டீ காபி, சூடான சமோசை” என்று விற்பனையாளர்கள் கூவிக்கொண்டு. இருக்கும் கூக்குரலும்.
“இது என் சீட் உன் சீட்” என்று சண்டையிடுவதுமாக இருந்தது ஒருபக்கம்.கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் பாண்டியன் அமர்ந்திருந்தான்.
அவனுடைய வாழ்க்கை எல்லாம் ரங்கராட்டினம் போல் மனதில் சுற்றிக்கொண்டு இருந்தது. சாதாரண மிடில் கிளாஸ் பேமிலியில் பிறந்தவனுக்கு மெடிக்கல் எல்லாம் ஒரு கனவு தான். ஆனால் விடாப்பிடியாக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று. கவுன்சிலிங் மூலம் கவர்மெண்ட் காலேஜில் மெடிக்கல் படிக்க சீட் கிடைத்தது.
படிப்பு…அவனுக்குள் ஒரு துடிப்பாக இருந்தது. கனவை நோக்கி அவன் மனது பயணித்துக்கொண்டிருந்தது. எப்போதும் நல்ல மதிப்பெண் எடுப்பவன் தான் அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அவனுடைய படிப்பை பற்றின கவலையெல்லாம் இருந்ததே இல்லை. நன்றாக படித்து தேர்ச்சி பெற்றான். இன்று அவன் ரத்தினவேல் பாண்டியன் எம்.பி.பி.எஸ் என்று நினைக்கும்போதே பூரித்தது அவனுடைய பெற்றோருக்கு. படித்து முடித்தவுடன் கிராமத்திற்கு வந்து சேவை செய்ய துணிந்தான். ஆம் நகரத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இருக்கின்றனர் ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் பாவம் ஆத்திர அவசரத்திற்கு எங்கு போவார்கள் என்று நினைத்து தான் இப்படி ஒரு முடிவை எடுத்தான்.

கண்களை திறந்து சற்று நேரம் ஜன்னலில் வேடிக்கை பார்க்கத்துவங்கினான். ஆங்காங்கே தெரியும் ஓட்டு வீடுகளும் அங்கிருக்கும் குழந்தைகள் ரயிலை பார்த்து ஆனந்தமாக கையசைப்பதும் கண்டு ரசித்தான். சிறுவயதில் தானும் ரயிலை பார்த்து கையசைத்து மகிழ்ந்த காட்சி அவன் நினைவுக்கு எட்டியது. நேரம் இப்படியே கடந்துக்கொண்டே இருக்க….யாரோ “அம்மா” என்று அழைக்கப்படும் சத்தம் கேட்டது. அது சற்று வலியில் வெளிவந்த குரல் தான். ஒரு மருத்துவனாக அவனால் யூகிக்க முடிந்தது.

“ஐயோ என் மகளுக்கு பிரசவ வலி வந்துடுச்சு யாராவது டாக்டர் இருந்தால் வாங்களேன்” என்று ஒரு தாய் கதறிக்கொண்டே வர..பாண்டியன் தான் கொண்டு வந்த மெடிக்கல் முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு பிரசவம் பார்க்க முன்வந்தான்.
“அண்ணே…என்னால முடியல…வலிக்குது. எப்படியாச்சும் என் புள்ளையையும் என்னையும் காப்பாத்துங்க” என்று பாண்டியனை பார்த்து வலியில் கதறினாள் அந்தப்பெண்.

“ஒன்றுமில்லை பயப்படாதிங்க நான் இருக்கேன்” என்று ஆறுதலோடு அவளுக்கு மருத்துவ உதவி செய்தான் ரத்தினவேல் பாண்டியன். குழந்தை வீல் என்று கத்திக்கொண்டு அழுதது. தாயோடு இணைந்த தொப்புள் கொடியை துண்டித்து பிறகு அந்த குழந்தையை ஒரு டவலில் சுற்றி பாதி மயக்கத்தில் இருக்கும் தாயின் முகத்திற்கு நேரே குழந்தையை காண்பித்தான் ரத்தினவேல் பாண்டியன்.

அந்தப்பெண் கைகூப்பி “நன்றி” என்பது போல் கண்கலங்க.. அவன் புன்னகையித்தபடி அந்த குழந்தையை அதனுடைய பாட்டியிடம் கொடுத்துவிட்டு அவனுடைய இருக்கைக்கு வந்து அமர்ந்தான்.ஒரு மருத்துவனின் தேவை என்ன என்பது இந்த மாதிரி சூழலில் தான் தெரியும். பொதுவாக மருத்துவம் என்று மக்கள் நாடி வரும்போது மருத்துவர்களை தான் மக்கள் கடவுளாக எண்ணுகிறார்கள். ஆனால் சிலர் கார்ப்பரேட் மருத்துவர்கள் மருத்துவத்தை வியாபாரமாக்கி விடுகிறார்கள். அவர்களுக்கு முன்னால் ரத்தினவேல் பாண்டியன் உயர்ந்து நிற்கிறான் என்று சொன்னால் அது மிகையாகாது.

ரயில் பேசன்பிரிட்ஜ் வந்தடைந்ததும் கூவத்தின் நாத்தம் மூக்கை துளைத்தது. சென்னையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவல்லவா அடையாளம். சென்னை சென்ட்ரலில் வந்து நின்றது ரயில். ப்ளாட்பாரத்தில் பெட்டியை நகர்த்திக்கொண்டு வெளியே வந்தான். ஒரு ஆட்டோவை பிடித்து அயனாவாரத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்தடைந்தான்.

“டேய் அண்ணா…ஒரேடியாக கிராமத்தில் செட்டில் ஆயிடலாம்னு ஐடியாவா” என்று செல்லமாக கோபித்துக்கொண்ட தன் தங்கையை சமாதானப்படுத்திவிட்டு கைகால்களை கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான். ரொம்ப நாள் கழித்து அம்மாவின் கையால் சோறு சாப்பிடும் பாக்கியத்தை அனுபவித்தான்.

ஒர் இரு வாரங்கள் அங்கேயே இருந்து தனது வீடு கட்டிட வேலையை பார்வையிட்டான். பிறகு கிராமத்திற்கு கிளம்பும் நாள் வந்தது.
“அண்ணே நானும் திருவலங்காடனூருக்கு வரேன். அழைச்சுட்டு போ” என்று கெஞ்சிய தங்கையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். ஊர்வந்தவுடன் இறங்கி ஆட்டோவை பிடித்து அவன் வசிக்கும் வீட்டிற்கு வரும் வழியில் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெறுத்து நோக்கினான்.

திடுக்கிட்டு போய் கண்களை உருட்டினான்….இந்த புள்ளை கயல்விழிக்கூட சுத்திட்டு இருந்த தோழியாச்சே… என்ன ஆச்சு இந்த புள்ளைக்கு என்று யோசித்தான்.
“அண்ணே இறந்து போன இந்த பொண்ணு உனக்கு தெரியுமா” என்று தங்கை ராதா கேட்கவும் ஆம் என்பது போல் தலையை அசைத்தான்.

“என்னவாக இருக்கும்” என்று ராதா கேட்க...

“தெரியவில்லை” என்று தோள்களை குலுக்கினான். ஆனால் நல்ல இருந்த பொண்ணுக்கு திடிரென்று என்ன ஆயிருக்கும் என்ற குழப்பம் அவனுக்குள் நிலவியது. வீடு வந்து இறங்கியதும்.

“ராதா நீ உள்ளே போ, உனக்கும் எனக்கும் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்” என்று வெளியே கிளம்பினான். ரயிலில் வந்த அசதி ஒரு பக்கம் ,பசி ஒருபக்கம் எனவே அவனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க இயலவில்லை. தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டான். அங்கிருக்கும் ஒரு டீ கடையில் வண்டியை நிப்பாட்டி….

“அண்ணே…ஒரு டீ ஸ்ட்ராங்கா” என்று ஆர்டர் செய்துவிட்டு பென்ச்சில் அமர்ந்தான். அந்த டீ கடைக்காரர்.

“நீங்க அந்த டாக்டர் தம்பி தானே” என்று கேட்க

“ஆமாம்” என்றான்.

“உங்களுக்கு விஷயமே தெரியாதா. போனவாரம் தான் அந்த சுசீலா புள்ள வயித்துவலியில் ரொம்ப அவஸ்தை பட்டுச்சு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போர வழியில் செத்துருச்சு. பாவம் சின்ன பொண்ணு வாழவேண்டிய பொண்ணு. நீங்க மட்டும் இருந்திருந்தால் அந்த பொண்ணை காப்பாத்திருக்கலாம். நீங்க இல்லாததுனால பக்கத்து ஊர் ஆஸ்பிட்டல் கொண்டு போகிற வழியில் அந்த புள்ளை இறந்துடுச்சு”.

“ஏன் கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் இருக்கே. அங்கே அழைச்சிட்டு. போயிருக்கலாமே” என்றான் சந்தேகமாக..

“அட அது ஏன் தம்பி கேக்குறீங்க அங்கே ஒரே ஒரு நர்ஸ் தான் இருக்கும். டாக்டரே காணோம்”
“அச்சோ…பாவம்” நான் இருந்திருந்தால் கண்டிப்பாக காப்பாற்ற முயற்சி பண்ணிருப்பேன். ‘அன்று ரயிலில் நான் இருந்ததால் இரண்டு உயிரை காப்பாற்ற முடிந்தது. அன்று நான் இல்லாததால் ஒரு உயிர் போனது’ என்று. நினைத்து வருந்தியவன். தேநீர் அருந்திவிட்டு பக்கத்தில் இருக்கும் டிபன் கடையில் உணவு வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

வீட்டிற்குள் நுழைந்து தங்கை ராதாவுக்கும் அவனுக்கும் உணவை பறிமாறி உண்டு விட்டு சற்று நேரம் அசதியில் கண்ணயர்ந்தான். பிறகு கிளம்பி பஞ்சாயத்து ரூரல் டெவலப்மெண்ட் ஆபிஸரை சந்திக்க சென்றான். பாண்டியன் எங்கு சென்றாலும் அவ்வூரில் மரியாதை தான். எனவே உடனே பஞ்சாயத்து ரூரல் டெவலப்மெண்ட் ஆபிஸர் அவனை அழைத்து நாற்காலியில் அமரும் படி சொல்லிவிட்டு வந்த விஷயம் என்னவென்று கேட்டறிந்தார்.

“சார், போனவாரம் திருவலங்காடனூரில் ஒரு பொண்ணு இறந்துருக்கு கேள்விப்பட்டு இருப்பீங்க நினைக்கிறேன்” என்க

“ஆமாம் ஆமாம் கேள்விபட்டேன்” என்றதும்.

“சார் அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க” என்றதும்.

“வயித்துவலியாம் அப்படித்தான் நினைக்கிறேன் ஆஸ்பிட்டல் போற வழியில் இறந்துருக்கு நினைக்கிறேன்” என்றார் ஆபிஸர் தலையை சொரிந்து.

“அப்படினா கிராமத்தில் இருக்கும் டிஸ்பேன்சரியில் டாக்டர் இருக்கணுமே எங்கள்” என்றான் கேள்வியை எழுப்பியபடி.

“யப்பப்பா அதெல்லாம் எதாவது லீவுல இருந்திருப்பாங்க” என்று பதிலுரைத்தவரை பார்த்து.

“அப்படினா ஒரு டிஸ்பென்சரிக்கு ஒரு டாக்டர் தானா? அவங்க லீவு போட்டால் நோயாளிகளை பார்க்க வேறு டாக்டர் எதுவும் இல்லை அப்படிதானே” என்றதும் ஆமாம் என்று தலையசைக்க….பாண்டியன் கோபத்தை தன் கட்டுக்குள் வைத்தபடி.

“சார் 10,000 மக்களக்கு 1186 டிஸ்பென்சரி இருக்கணும் பஞ்சாயத்து ரூரல் டெவலப்மேண்ட் கன்ட்ரோல் ல …அப்படினா எத்தனை டாக்டர்ஸ் இருக்கணும். இதெல்லாம் கவனிக்காமல் ஏன் இருக்கீங்க. கிராமத்துக்காக சேவை செய்யத்தானே இந்த பஞ்சாயத்து போர்டு ரூரல் டெவலெப்மண்டு எல்லாம். அப்படி இருக்கிறப்ப இப்படி தான் எதையும் கண்டுக்காமல் மக்களை தவிக்க விடுறதா?” என்று கேள்வி கேட்கும்போது அவரால் எதுவும் பேசமுடியவில்லை.

“சீக்கிரமே டிஸ்பென்சரிக்கு டாக்டர் வரும்படி பாத்துக்குறேன்” என்று ஆறுதலாய் சொல்லி அவனை அனுப்பி வைத்தார் ஆபிஸர். அவனும் மனநிறைவோடு வீட்டை நோக்கி பயணித்தான்.
 
அத்தியாயம் -3
❤️❤️❤️❤️❤️❤️❤️
அவன் புகார் செய்துவிட்டு வந்தபின் டிஸ்பென்சரிக்கு புதியதாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவனுடைய பேச்சுக்கு இந்த அளவு மரியாதை கிடைக்கும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதில் என்ன பெருமை வேண்டியிருக்கு. மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதி தானே.

“டாக்டர் ஐயா…டாக்டர் ஐயா” என்று உரக்க கத்திக்கொண்டு ஒரு பெண் தன் குழந்தையை அழைத்து வந்தாள்.

“என்ன ஆச்சு மா”? என்றான் பாண்டியன்.

“என் குழந்தைக்கு நேத்துல இருந்து வயித்து வலி சரியா சாப்பிடவும் மாட்டேங்குறா” என்றதும்.

“பதற்ற படாதிங்க பூச்சி மருந்து வயித்தை சுத்தப்படுத்த கொடுத்துருக்கீங்களா இதுவரைக்கும்” என்று கேட்டவுடன்.

“அதெல்லாம் கொடுத்துருக்கேன்” என்றார் அந்த பெண்மணி சற்று பதற்றத்துடன்.

“சரி நான் ஒருசில மருந்து எழுதி தரேன். இருந்தாலும் டவுன்ல போய் ஒரு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க பார்ப்போம்” என்றபடி எழுதி கொடுத்தான். அவரும் அதை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

தனது மருத்துவ க்ளினிக்கிலிருந்து கிளம்பி வீட்டுக்குள் நுழைந்தான். அங்கு ராதாவோ நம் கதாநாயகி கயலுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

கயல்விழியின் காதுகளில் இருந்த தோடுகள் யாவும் அங்குமிங்கும் அசைந்துக்கொண்டிருந்தன. என்ன இது இப்படி ஓர் ஆச்சரியம். கயல் எப்படி இங்கே? என்று யோசித்தவனாய் அவன் வந்திருப்பதை அறிவுறுத்த தனது தொண்டையை சரி செய்தான்.

திரும்பி பார்த்த ராதா "அண்ணே வந்துட்டியா வா வா" என்றபடி எழுந்து தண்ணீர் மொண்டு எடுத்து வந்து தந்தாள். ஜாடையில் இருவரும் பேசிக்கொண்டனர்.
"இவர் தான் உங்கள் அண்ணன்"? என்று அவளும்.

"ஆம் இவரே தான்" என்றபடி ராதாவும் தலையசைக்க...

"டாக்டர் சார் ,நானும் ராதாவும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஆக்சுவலி நீங்க தான் இவளோட அண்ணன்னு எனக்கு தெரியாது" என்று புன்னகையித்தாள் கயல்.

"ஓ...அது சரி நீங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ் ஆனதும் ஒருவகையில் நல்லது தான்" என்க...

"என்ன நல்லது" என்று விழித்த கயலிடம்

"ஒன்றுமில்லை ஒன்றுமில்லை" என்று சொல்லி சமாளித்துவிட்டு விடைப்பெற்று தன் அறைக்குள் சென்றான். அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டபடியே கயலை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான்.

"சரி டி அப்போ நானும் கிளம்புறேன்" என்று கயல் கிளம்பி வீட்டுக்குள் நுழைந்தாள். அங்கு மாடத்தில் விளக்கேற்றிக்கொண்டிருக்கும் பாட்டியிடம்.

"என்ன பாட்டி இன்னைக்கும் விளக்கு வைக்கிற நேரம் தான் வந்திருக்கேனோ ரொம்ப மோசம்ல நான்" என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு இருக்க...

"ஹாஹா... ரொம்ப வாய் டி உனக்கு" என்று தாத்தா காதை முறுக்க...

"ஆ..தாத்தா வலிக்குது." என்று அவரிடமிருந்து விடுவித்துக்கொண்டு தன் தாய் லட்சுமி இருக்கும் இடத்திற்கு சென்றாள். லட்சுமி தைத்துக்கொண்டிருக்கும் அந்த புது துணியின் வாடையை நுகர்ந்தவாறே..

"என்ன மா இன்னைக்கு தைக்கிற ஆர்டர் நிறைய இருக்கு போலருக்கு. நான் எதாவது உதவி பண்ணவா" என்று கேட்டதும்..

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இட்லி மாவுக்கு அரிசி உளுந்து எல்லாம் ஊற வச்சிருக்கேன். நீ கடையில் போய் ஆட்டி எடுத்துட்டு வந்திடு" என்றதும்.

"ம்ம்க்கும் இப்பதான் வீட்டுக்குள் நுழையறேன் அதுக்குள்ள வெளியே போற வேலையா" என்று சளித்துக்கொண்டு அரிசி ஊறவைச்ச டப்பாவை சுமந்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்...

போகும் வழியில் ஒரு கூடாரம் இருப்பதை கண்டாள். மரங்கள் எல்லாம் மறைத்துக்கொண்டதால் அதை சரியாக அவளால் கவனிக்க முடியவில்லை, ஆனால் அங்கிருந்த குழாய் வழியாக அசுத்தமான நீர் வெளியேறிக்கொண்டிருந்ததை அவளால் பார்க்க முடிந்தது.

சரியாக உற்று கவனிக்கும் போது அது சாயப்பட்டரையிலிருந்து வெளியே வரும் தேவையற்ற ரசாயான நீர் என்பது அவள் புரிந்துக்கொண்டாள். அப்படியென்றால் இது எங்கு சென்று கலக்கிறது என்று யோசித்துப்பார்க்க அது நேரே பக்கத்தில் இருக்கும் வயல்வெளிகளில் கலந்துக்கொண்டிருப்பதை கவனித்தாள்.

'அச்சோ நேரம் வேறு ஆயிடுச்சு போய் மாவு அரைக்கனும்' என்று நினைவுக்கு வந்தவளாய் கடையை அடைந்தாள்'

"அண்ணே ஒருகிலோ அரைக்கணும்" என்று அவரிடம் தந்தவாறு எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

'இந்த ரசாயன நீரெல்லாம் வயலில் கலந்துடுச்சுனா அப்போ அது மூலமாக விளையும் பயிறு அப்போ அதை சாப்பிடுறவங்க கதி? இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டிருக்க...

"அம்மாடி மாவு அரைச்சாச்சு" என்று கொடுத்தவுடன் அவரிடம் அதற்குரிய காசினை திணித்துவிட்டு அங்கிருந்து நடையை கட்டினாள். வீட்டை நோக்கி நடக்கத்துவங்கினாள் மீண்டும் அந்த சாயப்பட்டறையை கடந்து தான் சென்றாள்.

வீட்டிற்குள் நுழைந்தவள் "அம்மா மாவு அறைச்சிட்டேன் இந்தாங்க" என்று தந்துவிட்டு தன் அறைக்குள் சென்று மறைந்தாள். ஒருவித களைப்பு வாட்டி வதைத்ததால் மெத்தையில் பொத்தென்று விழுந்தாள்.

அவளுடைய கைப்பேசி மணி அடித்தது. யார் இந்த நேரத்தில் என்று யோசித்துக்கொண்டே அழைப்பை எடுத்தாள். அது வேறுயாருமல்ல அவளுடைய அத்தை மகன் எழிலரசன்.

"இந்தாடி மாமன் மகளே என்ன எந்த பதிலும் காணும். லட்சுமி அத்தை நம்ப கல்யாணத்தை பற்றி பேசுனாங்களா இல்லையா" என்று கேட்டு வைத்தான் எடுத்த எடுப்பிலேயே.

"மாமா,நான் சொல்ல வேண்டியது எல்லாம் அம்மா கிட்ட சொல்லியாச்சு நீ உங்கள் லட்சுமி அத்தை கிட்டயே கேட்டுக்க. எனக்கு போன் பண்ணி எதுக்கு கேக்குற" என்று கேட்டாள் விட்டென்று.

"அதெல்லாம் சரிதான் இருந்தாலும் உனக்கு கல்யாணத்துல சம்மதமான்னு நேரடியாக கேட்டுத் தெரிஞ்சிக்கலாமேனு போன் பண்ணேன்" என்க...

"அப்படியா? அது சரி நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கணுமே பதில் சொல்லுவியா " என்று கேட்க...

"கேளு " என்றான் கம்பீரமாக .

"ஆமாம் உன் முதல் மனைவி இறந்ததுக்கு என்ன காரணம்"என்றாள் துடுக்காக..

"ஏன் உனக்கு தெரியாதோ " என்றான் மிடுக்காக.

"கேள்வி கேட்டால் பதில் நீ தான் சொல்லணும்" என்றவுடன்.

"அவளுக்கு கேன்சர் அதான் அல்பாய்சில் போய்ட்டா. நான் என்ன பண்ண முடியும்"என்று வினவியவனை மீண்டும் தன் கேள்வியால் கட்டிப்போட்டாள்

"சரி அவுங்க இறந்துட்டாங்க என்று என்னை கட்டிக்கிற நாளைக்கு நானும் போய்ட்டா வேற ஒருத்தியை தேடிப்பியா" என்று கேட்டவுடன் கோபத்தில் வார்த்தைகள் தடுமாறியது அவனுக்கு.

'இங்கே பாரு கயலு இரண்டாவது கல்யாணம் பண்ணப்போறேனு தரைக்குறைவா பேசாத ஏன் உன்னை விட்டா வேற பெண்ணே கிடைக்காதா? ஏதோ என் மாமன் பொண்ணு இருக்காளே கட்டிக்கலானு நினைச்சா நீ ரொம்ப ஓவரா தான் போற" என்றவனிடம்.

"இங்கே பாரு மாமா உனக்கு என்னை விட்டா நிறைய பெண் அமையலாம். உன்னுடைய வசதி அப்படி ஆனால் எனக்கு அப்படி இல்லை. நான் நல்லா படிச்சு மார்க் வாங்கி வேலைக்கு போனாதான் என் அம்மாவோட கஷ்டத்தை கொஞ்சம் தீர்க்க முடியும். அதுமட்டுமின்றி நான் இந்த கிராமத்துக்கு எதாவது செய்யணும் நினைக்கிறேன்" என்று வார்த்தைகளை அவன் முன்பு கொட்டித் தீர்த்தாள் .

"அது சரி அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணமாட்டேன் சொல்றதுக்கும் என்ன சம்மதம். நீ ஆசைப்படுற எல்லாத்தையும் நிறைவேற்ற நான் இருக்கேன்" என்று அவன் வாக்குறுதி அளித்தவுடன் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியானாள்.

"உன்னை தான் கேக்குறேன். பதில் எதுவும் காணோம்" என்ற அவனது குரலில் தெளிந்தவள்.

"சாரி மாமா எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும் அதனால் கொஞ்சம் யோசித்து பதில் சொல்றேன்" என்று போனை வைத்துவிட்டாள்.

திருமணம் வேண்டாம் என்றவள் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனும் போனை வைத்துவிட்டு கனவு உலகத்தில் சென்றான்.

இரண்டு நாள் கழிந்தது...

தனது மெடிக்கல் கேம்பிற்கு வந்த நோயாளியான அந்த சிறுமிக்கு கேன்சர் இருப்பதாக ஸ்கேன் ரிப்போர்ட் கூறியது. அதைப்பார்த்த பாண்டியனுக்கு அதிர்ச்சி மிளிர்ந்தது.

"என்ன கேன்ஸரா"? என்று அந்த ரிப்போர்டை இன்னொரு முறை பார்த்தான்.

"ஆமாங்க ஐயா இப்ப எதாவது வழி பண்ணி என் புள்ளைக்கு கேன்சரை குணப்படுத்துங்க" என்று அந்த பெண் கதறியவுடன் சுயநினைவுக்கு வந்தவன்.

"பயப்படாதிங்க கீமோ தெரபி பண்ணா எல்லாம் சரியாகிடும். இது ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அதனால பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாளைக்கு ஸ்பெஷலிஸ்ட் வரச்சொல்றேன்" என்று கூறி அனுப்பி வைத்துவிட்டு எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான்.

அப்போது எதர்ச்சையாக நம் கதாநாயகி அவன் இருக்கும் அறைக்கதவை தட்டினாள்.
"யஸ் கம் இன்..." என்று இவன் குரல் தந்ததும் அறையினுள் நுழைந்தாள் கயல்விழி.

"என்ன கயல் இந்த பக்கம்" என்று விசாரித்தான் பாண்டியன்.

"டாக்டர், என் தோழி சுசிலா இறந்ததுக்கு கேன்சர் ஒரு காரணம் என்று கேள்விபட்டேன். அவள் ஆரம்பத்திலிருந்து அதை கவனிக்காமல் விட்டுருக்கா. அதான் அவளை காப்பாற்ற முடியாது போயிடுச்சு" என்றவுடன்..

"என்ன அது கேன்சர் கேஸ் தானா?" என்று அதிர்ந்தான்.

"ஆமாம் டாக்டர்" என்றவளை எதிர்நோக்கியபடி

"டாக்டர் வேண்டாம் பாண்டியன்னு கூப்பிடுங்க இல்லைனா ரத்தினவேல் பாண்டியன் என்று கூப்பிடுங்க" என்றான் உதட்டில் ஒரு சிறிய புன்னகையை உதிர்த்தப்படி

அவர்களுடைய பேச்சு திசை மாறுவதை உணர்ந்தவள்..

"அ...அது வந்து மிஸ்டர் பாண்டியன்." என்று ஆரம்பிக்க அவன் முகம் பிரகாசமானது.

"சொல்லு...கயல்" என்றான்.

"இல்லை, எங்கே ஊரில் இதுக்கு முன்னாடி என் எழில் மாமா மனைவிக்கும் கேன்சர் இருந்து தான் இறந்துப்போனாங்க...இதுவரை மூன்று கேன்சர் கேஸ். இப்படி ஆகுறதுக்கு என்ன காரணம்னு சரியாக தெரியல" என்று சொல்லியபடி எதையோ சிந்திக்க துவங்கினாள்.

"கயல்..என்ன யோசனை"...என்றான் புன்னகையித்தபடி..

"ஒன்றுமில்லை' என்று எழுந்தாள்.

"என்ன எதையோ சொல்ல வந்து எழுந்துட்ட உக்காரு பேசுவோம்" என்றவனை ஏறெடுத்து பார்த்தவள்.

"மிஸ்டர் பாண்டியன் நான் நைட் கால் பண்றேன். இப்ப கிளம்புறேனே " என்றபடி விடைப்பெற்று சென்றாள்.

'என்ன இது என்னால சொல்ல வந்த விஷயத்தை முழுசா சொல்ல முடியல. டாக்டர் என்று அழைத்தவளை பெயரிட்டு அல்லவா அழைக்க சொல்கிறார். நானும் அவர் சொல்ற மாதிரி கேக்குறேன். என்ன ஆச்சு எனக்கு?, ஐயோ ச்சு சரி போவோம் வீட்டுக்கு" என்று நடையை கட்டினாள்.

மீண்டும் அந்த சாயப்பட்டரையை கடக்க நேர்ந்தது. தான் என்ன சொல்ல வந்தோம் என்று நினைவுக்கு எட்டியது. அப்போ இந்த மூன்று கேன்சர் கேஸ்க்கும் இந்த சாயப்பட்டரை ஏன் காரணமாக இருக்கக்கூடாது. நிச்சயம் இது தான் காரணம். இதை அந்த பாண்டியன் கிட்ட சொல்லியே ஆகணும். இதற்கு ஒரு தீர்வு கிடைக்கனும் ' என்று நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள்.

😇stay tuned
 
அத்தியாயம் -4

இரவின் பிடியில் அந்த நிலவு மங்கை மட்டுமா இல்லை இல்லை நம் கதையின் நாயகி கயலும் தான். படுத்துக்கொண்டு தனக்கு மேல் தெரியும் மின்விசிறியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு அழைப்பு விடுக்க நினைத்தவளுக்கோ ஒரே பதட்டம். ஆனாலும் சொல்ல நினைத்ததை தொலைப்பேசியில் சொல்லியே ஆகணும். என்று அவனுக்கு அழைப்பு மணி விடுத்தாள். போனை எடுத்து காதில் திணித்தவன்.

"ஹலோ , சொல்லுங்கள் கயல் உங்கள் கால் காக தான் வெயிட்டிங். இப்பதான் நினைச்சன் நீங்க கால் பண்ணிட்டிங்க" என்றதும்.

"மிஸ்டர் பாண்டியன் அது வந்து நடுவுல எதுவும் பேசி டிஸ்டர்ப் பண்ணிடாதிங்க நான் சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம். ஸோ கவனமாக கேளுங்க" என்றாள் திட்டவட்டமாக..

உன் கட்டளையே சாசனம் என்பது போல் அவன் அமைதியான பின் பேச்சை துவங்கினாள்.
"நான் நம்ப கிராமத்தில் ஒரு சாயப்பட்டறை இருக்கிறதை கவனிச்சேன். ரசாயன கழிவு நீர் எல்லாம் பயிரோட போய் கலக்குது. அதனால் இப்படி நிறைய கேன்சர் கேஸஸ் வரலாம். நம்ப இதை உடனே தடுத்தாகனும். அதுக்கு உங்கள் உதவியும் தேவைப்படுது" என்று பேச்சை நிப்பாட்ட அவனோ ஒரு பெருமூச்சு விட்டப்படி

"கயல் யூ டோன்ட் வொரி நம்ப கேஸ் போட்டு ஸ்டே வாங்கிடலாம் கவலைப்படாதிங்க. என் ப்ரெண்டு லாயர் தான் நான் அவள் மூலமாக கேஸ் போடுறேன். மெடிக்கல் ப்ரூப் சப்மிட் பண்ணி விரல் விட்டு ஆட்டிடுறேன்" என்றுரைத்தவனை...

"சபாஷ்...பாண்டியன்" என்று உரக்க சத்தமிட்டவள்..ஐயோ எல்லாரும் எழுந்திருக்கப்போறாங்க என்று நாக்கை கடித்தவள்.

"குட் நைட் போனை வச்சிடவா" என்று கேட்க அவனோ வேண்டாம் என்பது போல் சிணுங்கினான் சிறுபிள்ளை போல்.

"என்ன ஹீரோ சார் இன்னும் கொஞ்சம் நேரம் பேசணும் எதிர்பாக்குறீங்களோ"என்று சந்தேகமாய் கேட்க...

"ஆமாம் பேசணும் என்று ஆசையாக தான் இருக்கிறது. ஆனால் அக்ரிகல்சர் டாக்டர் பேசமாட்டாங்க போலருக்கு" என்று நக்கலாக உரைக்க..

"ம்ம்ம் அது சரி அது என்ன அக்ரிகல்சர் டாக்டர்" என்றாள் தன் திருத்திய புருவத்தை உயர்த்தியபடி.

"ஹாஹா ஏன் நீ மட்டும் என்னை ஹீரோ சார்னு கூப்பிடலையா ?, அந்த மாதிரி தான்" என்று நகைத்தான். அவனுடைய சிரிப்பு சத்தத்தில் பக்கத்தில் இருந்த ராதா எழுந்துவிட்டாள்....

"அண்ணே நீ இன்னும் தூங்கலையா" என்று வினவியவளை...

"ஏன் அண்ணே முழிச்சிட்டு இருந்தா உனக்கு தூக்கம் வராதோ. தொல்லை பண்ணாம படுத்து தூங்கு டி என் அன்பு தங்கச்சி"என்று அவளை சமாதானம் செய்துவிட்டு...

"யூ கன்டினியூ கயல்" என்க...

"சரிங்க பாண்டியன் அந்த சாயப்பட்டறை அட்ரஸ் அனுப்புறேன் நோட் பண்ணிக்கோங்க " என்றுரைக்க..

"ம்ம்ம் சொல்லு கயல்.." என்று விலாசத்தை குறித்துக்கொண்டு மீதியை தான் கவனித்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு

"அப்றம்" என்று ஆரம்பித்தான் மீண்டும்.

"ஆத்தி... நீங்க தூங்க விடமாட்டிங்க போலயே பை "என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.

"அச்சோ போச்சு போனை கட் பண்ணிட்டாளே கிராதகி வேலை ஆகணும்னா மட்டும் போனை பண்றா " என்று தனக்குள் நொடித்துக்கொண்டு போனை ஓரம் வைத்துவிட்டு உறக்கத்திற்கு சென்றான்.

மறுநாள் பொழுது இனிதே கழிந்தது. ஸ்டே ஆர்டர் வாங்குவதை பற்றி தன் தோழியிடம் விசாரித்தான். அவளும் எல்லாம் கேட்டுவிட்டு நடப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் கவலை வேண்டாம் என்று உறுதியளிக்க..

இவர்கள் ஆசைப்படி ஸ்டே கிடைத்தது. தற்காலிகமாக அந்த சாயப்பட்டறை அங்கு செயல்பட அனுமதி இல்லை என்று கோர்ட் உத்தரவு இட்டது.

அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு சிலர் பாண்டியனிடம் கோபித்துக்கொண்டனர்.
"எங்கள் வயித்து பிழைப்பை கெடுத்துட்ட " என்று குற்றம் சாட்டினர். அப்போது கூட பொறுமையாக இருந்தான் பாண்டியன்.

"அண்ணே நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க உங்கள் எல்லாருக்கும் வேற வேலை ஏற்பாடு பண்ணி தரேன்" என்று கூறிய பாண்டியனை ஆச்சரியமாக பார்த்தனர்.

"என்ன சொல்றீங்க தம்பி" என்று கூட்டத்தில் ஒருவன் கேட்க.

"ஆமாம் , இந்த சாயப்பட்டறை இவ்வளவு நாள் இருந்ததுல என்னென்ன பிரச்சனை தெரியுமா? இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை ஆனால் உயிர் போனால் என்ன செய்வீர்கள்" என்றான் நிதானத்துடன்.

அவன் பேச்சில் ஏதோ தெளிவு இருப்பதை உணர்ந்தவர்கள் என்ன என்பது போல் கேட்டனர்.

"இதுவரை இரண்டு பேர் கேன்சரில் இறந்துருக்காங்க ,சமீபத்தில் ஒரு சிறுமிக்கு கேன்சர் அறிகுறி கண்டுபிடிச்சேன் இந்த கிராமத்தில். இன்னும் எத்தனை பேருக்கு கேன்சர் இருக்குனு கூட தெரியாது. இவ்வளவு நாள் நச்சுத்தன்மையை பக்கத்திலேயே வச்சிட்டு இருந்துருக்கீங்க. சாயபட்டறை கழிவு பயிரோட போய் சேருது. அது இவ்வளவு நாள் உங்களுக்கு தெரியல..இனிமேலாவது கவனமாக இருங்கள்" என்று சொல்லி முடிக்க அடுத்து கயல் ஆரம்பித்தாள்...

"உண்மை தான் மண்ணுக்கு மரியாதை தந்து வெறும் காலோடு வயலில் வேலை செய்றப்ப, ரசாயன நச்சுக்கள் மட்டும் கலந்தா எப்படி?, இதெல்லாம் கவனிக்காமல் விட்டது தப்பு. பயிர் விளைவிக்கிறது மட்டும் கடமை இல்லை அதை பாதுகாக்குறதும் நம்ம பொறுப்பு" என்று தன் பங்குக்கு அவளும் புரியவைத்தாள்.

எல்லாம் புரிந்துக்கொண்டு தலையசைத்தனர் ஊர் மக்கள்.அத்தோடு விட்டுவைக்கவில்லை அவ்வூரின் இளைஞர்கள் பட்டாளத்தை ஒரு அணியாக சேர்த்தான் பாண்டியன்...

"நல்லா கேட்டுக்கங்க இந்த ஊரில் இனி ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்தும் பொறுப்பு உங்களுடையது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே செதறிக் கிடக்கும் மக்காத ப்ளாஸ்டிக் கவர்களையும் பாட்டிலையும் திரட்டி அதே குப்பை தொட்டியில் போடவும். இது நம்ப நல்லதுக்காக தான் செய்றோம். இந்த பணியில் நானும் இருக்கேன்." என்று சொல்லும்போது நானும் உங்களுடன் இருக்கேன் என்றாள் கயல்...

கயலை பார்த்து புன்முறுவலுடன் "ம்ம்ம்" என்றபடி வேலையை துவங்கினான் .

"சும்மா சொல்லக்கூடாது இந்த டாக்டர் தம்பியும் கயலும் சேர்ந்து இந்த ஊருக்கு நல்லது பண்றாங்க. இப்படியெல்லாம் சொல்றதுக்கும் செய்றதுக்கும் தான் இவ்வளவு நாள் ஆளில்லாமல் போயிடுச்சு" என்று ஊர் மக்கள் அவர்கள் காதுபட தெரிவித்தனர்.

சிதறிக்கிடக்கும் ப்ளாஸாடிக்கை பொறுக்கிக்கொண்டிருந்த நம்ப கயலை அவளுடைய மாமன் எழிலரசன் பார்த்துவிட்டு...

"ஏய் கயலு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. எனக்கு பொண்டாட்டியா வரப்போறவள் இப்படியா ரோட்டில் குப்பை பொறுக்கிறது ச்சி ச்சி" என்று முகத்தை சுளிக்க...

"மாமா இது உனக்கு தேவையில்லாத விஷயம் சும்மா கம்முனு போவியா. வந்துட்ட நல்லா பாசத்தை காட்டுறதுக்கு. நான் ஊர் மக்கள் நல்லாருக்கனும்னு செய்றேன். சொல்லப்போனால் சந்தோஷமா செய்றேன். நீ தேவையில்லாமல் பிரச்சனை பண்ணாத போயிடு" என்று முகத்தை அந்த பக்கம் திருப்பிக்கொள்ள...

அவனோ இருசக்கர வாகனத்தை முறுக்கிக்கொண்டு விட்டென்று பறந்துவிட்டான்.

"கயலு நான் க்ளீனிக் போறேன் டைம் ஆயிடுச்சு நீயும் வீட்டுக்கு கிளம்பு. இதெல்லாம் ஒரே நாளில் முடிக்கிற வேலை இல்லை கயல்...நாளைக்கு கொஞ்சம் சுத்தம் பண்ணலாம்" என்று கிளம்பிவிட்டான் ரத்தினவேல் பாண்டியன்.

"மிஸ்டர் பாண்டியன்" என்று தனக்கே உரிய மெல்லிய குரலில் அழைத்தாள்.

"என்ன " என்று கேட்டான் புருவத்தை உயர்த்தியபடி.

"இல்லை எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. ஸ்தெதஸ்கோப் மாட்டி என்னோட ஆர்ட் பீட் கேட்கணும் னு கொஞ்சம் தருவீங்களா" என்று கேட்டவுடன்

தன் கழுத்தில் மாட்டியிருந்ததை கழட்டி அவளுக்கு தந்தவன் எப்படி பயன்படுத்தனும் என்பதை விவரிக்க அவளுடைய இதயத்தில் வைத்து காண்பித்தான்...

"ஐ....நல்லாருக்கு என் ஆர்ட் பீட் நானே கேக்குறது. குடுங்க குடுங்க இப்ப நானே வச்சு பாக்குறேன்" என்று சிறுபிள்ளை போல் அதை வைத்து தன் இதயத்துடிப்பை கேட்டு மகிழ்ந்தாள்...

"சூப்பர்ல....செம்ம ஃபீல் இதயத்துடிப்பை கேக்குறது செம்மையா இருக்கு பாண்டியன்" என்று குஷியில் குதித்தாள்.

"போதும் போதும் டைம் ஆகுது கயல் குடு" என்று அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

'உன் இதயத்தை நான் எப்போவோ எடுத்துக்கிட்டேன் கயல் தினமும் நீ எனக்குள்ள துடிச்சிட்டே தான் இருக்க ' என்று நினைத்துக்கொண்டு தனக்கு தானே சிரித்தான்.

அவள் இதயத்தை தொட்ட..அந்த ஸ்தெதஸ்கோப் அவன் கழுத்தில் மாலையாக தொங்கிக்கொண்டு இருந்தது. அதை அவ்வப்போது தொட்டு வருடினான்.

"சார் பேஷண்ட் வெயிட்டிங்" என்று செவிலியர் குரல் கொடுக்க நோயாளிகளை கவனிக்க தயாரானான்...

"டாக்டர் ஐயா, என்றபடி ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்".

"சொல்லுங்கள் என்ன பிரச்சனை" என்றதும்.

"ஐயா அது வந்து கருவை கலைக்கணும். ஏற்கனவே ஒரு பொம்பள புள்ள இரண்டாவது பெண்ணா இருந்தால் இன்னும் கஷ்டம் அதான் வேண்டாமே என்று வந்தேன்" என்றதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

"அப்படியா, சரி இதே மாதிரி உங்கள் தாய் நினைச்சிருந்தா நீங்க இவ்வளவு பெரிய மனுஷியாக ஆயிருப்பீங்களா. மனசாட்சி இருக்கா மா உனக்கு. எத்தனையோ பேரு குழந்தை வரம் தேடி கோவிலுக்கும் ஆஸ்பிட்டலுக்கும் அலைந்து கஷ்டப்படுறாங்க. நீங்க என்னடா னா இப்படி வந்து நிக்கிறீங்க. ச்ச... உங்கள் அறியாமையை நினைச்சா கவலையா இருக்கிறது. என்னால அந்த பாவத்தை பண்ண முடியாது. சாரி நீங்க கிளம்பலாம்" என்று அனுப்பி வைத்தவன். தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள நீரினை எடுத்து பருகினான்.

நாட்கள் உருண்டோடியது.

ராதாவிற்கு பெற்றோரின் நியாபகம் வந்துவிட்டதால் ஊருக்கு கிளம்பி சென்றுவிட்டாள். வழக்கம் போல் பாண்டியன் தனிமையில் வீட்டில் இருந்தான். அவனுக்கு இது ஒன்றும் கஷ்டமில்லை.. இன்னும் சவுகரியமாக இருந்தது அவனுக்கு. அவ்வப்போது கயலுடன் போனில் உரையாடுவதற்கு தொந்தரவு இல்லாமல் போயிற்று.

ஆனால் இதுவரை இன்னும் காதலை அவளிடம் சொல்லவில்லை. எங்கே காதலை சொன்னால் இருக்கும் நட்பும் கெட்டுப்போய்விடுமோ என்று தயங்கினான்.

ஆனால் கயல்விழியிற்கு அவனது எண்ணம் சற்று புரியத்துவங்கியது என்றாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பழகினாள். எழில் மீது துளியளவும் அவளுக்கு இஷ்டமில்லை என்றாலும் பெரியவர்களை எதிர்க்க மனமில்லாமல் எதுவும் செய்யாது விட்டுவிட்டாள்.

இவர்களின் நிச்சயதார்த்தம் பற்றி பெரியவர்கள் தீர்மானித்தனர். நிச்சயம் தானே ? இப்பவே தாலியா கட்டப்போறான் பார்த்துப்போம். என்று விட்டுவிட்டாள். நிச்சயதார்த்தம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்பதும் பேசி தீர்மானித்தனர்.

நிச்சயம் தடபுடலாக இல்லை என்றாலும் உறவினர்கள் மத்தியில் நடத்தி வைக்க தீர்மானித்தனர். ஒருபக்கம் கயலுக்கு பக்கென்று இருந்தது. இதை பாண்டியனிடம் தெரிவித்தாள்.

"எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது" என்று சொல்லி வைக்க அவன் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.

"ஏன் எதுவும் சொல்லமாட்டேங்குறீங்க பாண்டியன்" என்றதற்கு.

"சொல்ல வேண்டிய நேரத்தில் எல்லாம் சொல்றேன்" என்று குதர்க்கமா சொல்லிவிட்டு பாண்டியன் இடத்தை விற்று அகன்றான்.

கயல் - எழில் நிச்சயம் நடக்குமா?.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom