Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 18
வாழை இலையை அகல் விளக்கின் வெளிச்சத்தில் காட்டியதும் அதில் திடிரென எழுத்துகள் தோன்றுவதை ஜெயசிம்மன் திகைப்போடு பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் மனைவி நித்ராதேவி வேரற்ற மரம் போல் மயங்கி சாய்ந்தாள்.அவள் மயங்கி விழுவதை கண்ட ஜெயசிம்மன் உடனே ஓடி வந்து அவளைத் தாங்கி பிடித்தான். அவளது கன்னத்தில் தனது விரல்களால் கட்டியவன் "நித்ராதேவி! உனக்கு என்னவானது? உனது கண்களை திறந்து என்னைப் பார்" என்றான்.
அரிஞ்சயன் தனக்கு முன்பாக வைத்திருந்த கமண்டலத்தை எடுத்து ஜெயசிம்மனிடம் நீட்டினான். "மகனே! இதில் நீர் இருக்கிறது. இதை உன் மனைவியின் முகத்தில் தெளித்து அவளது மயக்கத்தை தெளியவை!" என்றான்.
அரிஞ்சயன் சொன்னது போலவே செய்தான் ஜெயசிம்மன். சற்று நேரத்தில் மயக்கத்தி விருந்து விடுபட்டு தன் கண்கள் மெல்ல திறந்தாள் நித்ராதேவி. "அனைவரும் அரசியை சுற்றி கும்பலாக நிற்காமல் சற்று விலகி நில்லுங்கள். சுத்தமான காற்று அவருக்கு கிடைக்கட்டும்" என்றான் ஆதித்தன்.
அவனை நன்றியோடு பார்த்தான் ஜெயசிம்மன் . கண் திறந்து பார்த்த நித்ராதேவி தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து நின்றாள். மர்மயோகியை பார்த்து மீண்டும் வணங்கியவள் "என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி .உங்களை பார்க்க வந்த இடத்தில் என்னை மீறி நான் மயங்கி விழுந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விட்டேன்" என்றாள் நித்ராதேவி.
" எல்லாம் கடவுளின் சித்தம்பெண்ணே! எந்த இடத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது கடவுளின் திருவுளப் படியே நடக்கும். என்னை காண நீங்கள் இருவரும் இங்கு வந்ததும் நீ மயங்கி விழுந்ததும் இறைவனின் சித்தம். இதற்காகவெல்லாம் நீ கலங்க வேண்டியதில்லை பெண்ணே! எங்கே உன் கையை கொஞ்சம் நீட்டு. உன் விசயத்தில் எனக்கொரு சிறு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதை நான் உன் அனுமதியுடன் நிவர்த்தி செய்து கொள்ள நினைக்கிறேன்." என்றான் அரிஞ்சயன் .
நித்ராதேவி ஜெயசிம்மனை பார்த்தாள். அவன் கண்களால் அவளுக்கு அனுமதியளித்தான்.நித்ராதேவி தன்னுடைய கையை நீட்டினாள். அவளுடைய மணக்கட்டை பிடித்தபடி தன் கண்களை மூடினான்மர்மயோகி.பைராகியின் புண்ணியத்தால் அவன் கற்று கொண்டிருந்த நாடிப் பிரயோகம் இப்போது உதவிக்கு வந்தது. கவனமாக அவளது நாடித்துடிப்பை கணக்கிட்டவன் அவள் கையை கீழே விட்டான். பிறகு தன் கண்களை திறந்து ஜெயசிம்மனைப் பார்த்து மந்தகாசப் புன்னகை புரிந்தவன்" மகனே! ஓலையின் கடவுளின் வாக்கியமாக என்ன ஆருடம் வந்தது?" என்றான்.
" ஒரு புதிய உதயம் பிறக்கப்போகிறது என்று ஓலையில் கண்டிருந்தது சுவாமி !" என்றான் ஜெய சிம்மன் குழப்பத்துடன் .
" உண்மையாகவே இப்போது உனக்கு புதிய உதயம் பிறக்கப்போகிறது மகனே!"
" என்ன சொல்கிறீர்கள் சுவாமி? உங்கள் பேச்சின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லையே?"
"தெளிவாகவே கூறுகிறேன். உன் வம்சத்தை விருத்தி செய்ய அந்த சுந்தரேஸ்வரக் கடவுள் திருவுளம் கொண்டு விட்டான். இந்த நாட்டை ஆள உனக்கொரு மகன் பிறக்கப் போகிறான்" என்றான் அரிஞ்சயன் .இதற்கு முன்னால் ஜெயசிம்மனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் அவனுக்கு அவை இறந்த போது அதிக துக்கம் ஏற்படவில்லை. இதை ஏற்கனவே அறிந்திருந்த அரிஞ்சயன் பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரியாத நிலையிலும் ஜெயசிம்மனை கனப்படுத்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த விரும்பினான்.
தன் மனைவிக்கு என்னவோ ஏதோ என்று திகைத்துப் போய் நின்றிருந்த ஜெயசிம்மன்மர் மயோகியின் சொல்லால் மகிழ்ச்சியின் உச்சிக்குப் போனான். அதுவும் அவர் நாடாளஆண்மகன் பிறக்கப் போகிறான் என்று சொன்னதை கேட்டதும் அவனுக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஜெயசிம்மன் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் நின்றிருந்தான் என்றால் நித்ராதேவியோ வெட்கத்தில் பூரித்துப் போய் நின்றிருந்தாள். அவனது பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் நித்ராதேவி.
மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த ஜெயசிம்மன் "சுவாமி! நீங்கள் சொல்வது உண்மை தானா?" என்றான் திக்கி திணறியபடி.
"நாடி பொய் சொல்லாது மகனே! அப்படி நாடி பொய் சொன்னாலும் உன் மனைவியின் நாணம் பொய் சொல்லாது அப்பனே" என்றான் மர்மயோகி குறும்பு புன்னகையுடன் .
ஜெயசிம்மன் மகிழ்ச்சியான செய்தியை சொன்ன மகானை உடனேகனப்படுத்த விரும்பினான். சட்டென்று தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றியவன் "என் மகிழ்ச்சியை எப்படி வெளிகாட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஏதோ இந்த எளியவனால் முடிந்த பரிசை தருகிறேன். மறுக்காமல் பெற்று கொள்ளுங்கள் சுவாமி "
"உலக வாழ்வை துறந்த இந்த துறவிக்கு எதற்கு பொன்னும் பொருளும்.ஈசனின் அன்பும் அருளுமே எல்லோருக்கும் தேவை. அதை நீயே வைத்து கொள் மகனே" என்றான் அரிஞ்சயன்.
"இல்லை. இதை நான் திரும்ப பெற மாட்டேன். இதை நீங்கள் வாங்கி கொள்ளத்தான் வேண்டும்" என்றான் ஜெயசிம்மன் விடா பிடியாக .
அவனுக்கு அருகே நின்ற நித்ராதேவியும் அந்த முத்துமாலையை வாங்கி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். மர்மயோகி யோ சலிப்புடன் " இவற்றையெல்லாம் நான் உயிர் கொல்லிகள் என்றுதான் அழைப்பேன். இவற்றையெல்லாம் நான் கைகளாலும் தீண்டுவதில்லை. தம்பதி சமேதராக இருவரும் அன்புத் தொல்லை செய்கிறீர்கள். அதை நான் பெற்றுக் கொள்ள மறுத்தால் உங்கள் மனம் வேறு சங்கடப்படும். என் சிஷ்ய பிள்ளையிடம் அதை கொடுத்து விடுங்கள்" என்றான்.
ஆதித்தன் முன் வந்து ஜெயசிம்மன் கொடுத்த முத்துமாலையை பெற்றுக் கொண்டான்.
"முத்துகளின் வெண்ணிறத்தை பார்த்தால் அவை பாண்டி நாட்டு முத்துகள் போல தோன்றுகின்றதே?" என்றான் அரிஞ்சயன் .
"உங்களின் கணிப்பு சரிதான் சுவாமி.!அவை பாண்டி நாட்டின் முத்துகள் தான்."
" எல்லாம் பூர்வாசிரம தொழிலின் வாசனை. வேறு ஓன்றுமில்லை. ஆமாம் மகனே? நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய் என்று சொல்லவேயில்லையே?"
"நான் உங்களை சந்திக்க வந்த காரணம் தான் இப்போது நிவர்த்தியாகி விட்டதே சுவாமி?"
"அப்படியானால் நீ குழந்தை வரம் கேட்டுத்தான் என்னை நாடி வந்தாயோ?"
"ஆமாம் சுவாமி "
"இதற்கு முன்னால் நீ என்னை அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாய். நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். அது ஏன் என்று உனக்கு தெரியுமா?"
"அது எனக்கு எப்படி சுவாமி தெரியும்? துறவிக்கு வேந்தன் அரும்பு என்பதால் நீங்கள் என்னை சந்திக்க மறுத்திருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன் சுவாமி "
"இல்லை மகனே! அப்படி நான் மண்டைகம் பிடித்தவனல்ல. நீ எனக்கு அழைப்பு விடுத்த அன்று இரவு என் ஞானதிருஷ்டியில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு அழகான பெண் உனக்கு ஏதோ ஒரு சாபம் கொடுப்பது போல் ஒரு காட்சி என் மனக்கண்ணில் தோன்றியது. சாபம் உள்ள இடத்தில் இந்த சாது கால் வைக்க மாட்டான். உன் மனைவி கர்ப்பிணியானதன் மூலமாக அந்த சாபம் நிவர்த்தியாகி விட்டதென்று நான் நினைக்கிறேன். இனி நான் உன் அரண்மனைக்கு வர எந்த தடையுமில்லை." என்றான் அரிஞ்சயன் .இரவு பார்த்திபன் சொன்ன கதையிலிருந்து நீலவேணியின் பகுதியில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து சாமர்த்தியமாக கையாண்டான் மர்மயோகி.
யோகியின் கனவில் நீலவேணி வந்ததிலிருந்து அவளது சாபம் உண்மை என்று நம்பிய ஜெயசிம்மன் இப்போது யோகி தனக்கு துணையாக இருப்பதால் அவளை நினைத்து தான் அதிகமாக பயப்பட வேண்டியதில்லை என்று தைரியமும் அடைந்தான்.
"உங்களின் வருகைக்காக என்னுடைய அரண்மனையின் வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கும் சுவாமி " என்றான் ஜெயசிம்மன்
தம்பதி சமேதராக இருவரும் விடை பெற்று கிளம்பினார்கள். அரசனை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கூட்டமும் மெல்ல கரைய ஆரம்பித்தது.
முற்றிலும் தனிமை சூழ்ந்த பிறகு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அரிஞ்சயன்.
அவனது மவுனத்தை கலைத்தது ஆதித்தனின் குரல் .
"அண்ணா! புது புது வித்தைகளை எங்கே கற்றீர்கள்?இந்த வாழை இலையில் எழுத்துகள் எப்படி தோன்றின.? அதை பார்த்து ஜெயசிம்மன் மட்டுமல்ல. நானுமே திகைத்து தான் போனேன்." என்றான் ஆதித்தன்.
"ஆதித்தா ! அது ஒன்றும் பிரம்ம வித்தையல்ல. அந்த காய்ந்து போன வாழை இலையில் நான் ஏற்கனவே எலுமிச்சை சாறால் " புது உதயம் பிறக்கப்போகிறது " என்று எழுதி வைத்திருந்தேன். அந்த எழுத்துகள் காற்றில் கரைந்து விட்டதால் கண்ணுக்கு தெரியவில்லை. அதுவே தீப்பிழப்பின் வெப்பம் மேலே பட்டதும் அந்த எழுத்துகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டன. இதில் அதிசயமோ அற்புத மோ எதுவும் இல்லை. எல்லாமே விஞ்ஞானத்தின் விளையாட்டு தான் " என்றான் அரிஞ்சயன் .
"பைராகியின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவன் கண்டுபிடித்து வைத்திருக்கும் புதுப்பு து போர் கருவிகளை பயன்படுத்தி பார்த்தேன். அவற்றில் பயிற்சிமேற்கொண்டேன். ஆனால் இந்த மாதிரி விசயங்களில் போதுமான கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருந்து விட்டேன். அவை இப்போது நன்றாகவே நமக்கு உதவுகின்றன." என்றான் ஆதித்தன். அவன் குரலில் வருத்தம் இழையோடியது.
"என்னை விடவும் உனக்கு இந்த வித்தைகளை கற்று தரவே பைராகி விரும்பினான். நீ போதுமான ஆர்வம் காட்டாததால் அவன் என் பக்கம் திரும்பி விட்டான்" என்று சொல்லி சிரித்தான் அரிஞ்சயன் .
"அடுத்தமுறை பைராகியை சந்திக்கும் போது அவனை பேசிக் கொள்கிறேன்" என்றான் ஆதித்தன் பொய் கோபத்துடன் .
" என்னுடைய கவலை வேறு ஆதித்தா! ஜெய சிம்மனை கொல்ல நினைக்கிறான் பார்த்திபன்.நாம் அவனது செயலுக்கு உடன்பட்டால் பிறக்கும் குழந்தை தன் தகப்பனை இழக்கும். தகப்பனின் அன்பே தெரியாமல் வாழ வேண்டிய சூழல் உருவாகும். .காலம் முழுவதும் தன் தகப்பனை விழுங்கியவன் என்ற அவப்பெயரோடு அந்த குழந்தை வாழ வேண்டியதாக இருக்கும். நித்ராதேவியின் வயிற்றில் வளரும் குழந்தை நம் திட்டத்திற்கான முதல் தடை. தன் குழந்தையால் உயிர் தப்பி விட்டான் ஜெயசிம்மன் " என்றான் அரிஞ்சயன் .
ஆதித்தன் திகைத்து நின்றான்.
வாழை இலையை அகல் விளக்கின் வெளிச்சத்தில் காட்டியதும் அதில் திடிரென எழுத்துகள் தோன்றுவதை ஜெயசிம்மன் திகைப்போடு பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் மனைவி நித்ராதேவி வேரற்ற மரம் போல் மயங்கி சாய்ந்தாள்.அவள் மயங்கி விழுவதை கண்ட ஜெயசிம்மன் உடனே ஓடி வந்து அவளைத் தாங்கி பிடித்தான். அவளது கன்னத்தில் தனது விரல்களால் கட்டியவன் "நித்ராதேவி! உனக்கு என்னவானது? உனது கண்களை திறந்து என்னைப் பார்" என்றான்.
அரிஞ்சயன் தனக்கு முன்பாக வைத்திருந்த கமண்டலத்தை எடுத்து ஜெயசிம்மனிடம் நீட்டினான். "மகனே! இதில் நீர் இருக்கிறது. இதை உன் மனைவியின் முகத்தில் தெளித்து அவளது மயக்கத்தை தெளியவை!" என்றான்.
அரிஞ்சயன் சொன்னது போலவே செய்தான் ஜெயசிம்மன். சற்று நேரத்தில் மயக்கத்தி விருந்து விடுபட்டு தன் கண்கள் மெல்ல திறந்தாள் நித்ராதேவி. "அனைவரும் அரசியை சுற்றி கும்பலாக நிற்காமல் சற்று விலகி நில்லுங்கள். சுத்தமான காற்று அவருக்கு கிடைக்கட்டும்" என்றான் ஆதித்தன்.
அவனை நன்றியோடு பார்த்தான் ஜெயசிம்மன் . கண் திறந்து பார்த்த நித்ராதேவி தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து நின்றாள். மர்மயோகியை பார்த்து மீண்டும் வணங்கியவள் "என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி .உங்களை பார்க்க வந்த இடத்தில் என்னை மீறி நான் மயங்கி விழுந்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்து விட்டேன்" என்றாள் நித்ராதேவி.
" எல்லாம் கடவுளின் சித்தம்பெண்ணே! எந்த இடத்தில் என்ன நடக்க வேண்டுமோ அது கடவுளின் திருவுளப் படியே நடக்கும். என்னை காண நீங்கள் இருவரும் இங்கு வந்ததும் நீ மயங்கி விழுந்ததும் இறைவனின் சித்தம். இதற்காகவெல்லாம் நீ கலங்க வேண்டியதில்லை பெண்ணே! எங்கே உன் கையை கொஞ்சம் நீட்டு. உன் விசயத்தில் எனக்கொரு சிறு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதை நான் உன் அனுமதியுடன் நிவர்த்தி செய்து கொள்ள நினைக்கிறேன்." என்றான் அரிஞ்சயன் .
நித்ராதேவி ஜெயசிம்மனை பார்த்தாள். அவன் கண்களால் அவளுக்கு அனுமதியளித்தான்.நித்ராதேவி தன்னுடைய கையை நீட்டினாள். அவளுடைய மணக்கட்டை பிடித்தபடி தன் கண்களை மூடினான்மர்மயோகி.பைராகியின் புண்ணியத்தால் அவன் கற்று கொண்டிருந்த நாடிப் பிரயோகம் இப்போது உதவிக்கு வந்தது. கவனமாக அவளது நாடித்துடிப்பை கணக்கிட்டவன் அவள் கையை கீழே விட்டான். பிறகு தன் கண்களை திறந்து ஜெயசிம்மனைப் பார்த்து மந்தகாசப் புன்னகை புரிந்தவன்" மகனே! ஓலையின் கடவுளின் வாக்கியமாக என்ன ஆருடம் வந்தது?" என்றான்.
" ஒரு புதிய உதயம் பிறக்கப்போகிறது என்று ஓலையில் கண்டிருந்தது சுவாமி !" என்றான் ஜெய சிம்மன் குழப்பத்துடன் .
" உண்மையாகவே இப்போது உனக்கு புதிய உதயம் பிறக்கப்போகிறது மகனே!"
" என்ன சொல்கிறீர்கள் சுவாமி? உங்கள் பேச்சின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லையே?"
"தெளிவாகவே கூறுகிறேன். உன் வம்சத்தை விருத்தி செய்ய அந்த சுந்தரேஸ்வரக் கடவுள் திருவுளம் கொண்டு விட்டான். இந்த நாட்டை ஆள உனக்கொரு மகன் பிறக்கப் போகிறான்" என்றான் அரிஞ்சயன் .இதற்கு முன்னால் ஜெயசிம்மனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் அவனுக்கு அவை இறந்த போது அதிக துக்கம் ஏற்படவில்லை. இதை ஏற்கனவே அறிந்திருந்த அரிஞ்சயன் பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரியாத நிலையிலும் ஜெயசிம்மனை கனப்படுத்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த விரும்பினான்.
தன் மனைவிக்கு என்னவோ ஏதோ என்று திகைத்துப் போய் நின்றிருந்த ஜெயசிம்மன்மர் மயோகியின் சொல்லால் மகிழ்ச்சியின் உச்சிக்குப் போனான். அதுவும் அவர் நாடாளஆண்மகன் பிறக்கப் போகிறான் என்று சொன்னதை கேட்டதும் அவனுக்கு ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. ஜெயசிம்மன் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் நின்றிருந்தான் என்றால் நித்ராதேவியோ வெட்கத்தில் பூரித்துப் போய் நின்றிருந்தாள். அவனது பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் நித்ராதேவி.
மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த ஜெயசிம்மன் "சுவாமி! நீங்கள் சொல்வது உண்மை தானா?" என்றான் திக்கி திணறியபடி.
"நாடி பொய் சொல்லாது மகனே! அப்படி நாடி பொய் சொன்னாலும் உன் மனைவியின் நாணம் பொய் சொல்லாது அப்பனே" என்றான் மர்மயோகி குறும்பு புன்னகையுடன் .
ஜெயசிம்மன் மகிழ்ச்சியான செய்தியை சொன்ன மகானை உடனேகனப்படுத்த விரும்பினான். சட்டென்று தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றியவன் "என் மகிழ்ச்சியை எப்படி வெளிகாட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. ஏதோ இந்த எளியவனால் முடிந்த பரிசை தருகிறேன். மறுக்காமல் பெற்று கொள்ளுங்கள் சுவாமி "
"உலக வாழ்வை துறந்த இந்த துறவிக்கு எதற்கு பொன்னும் பொருளும்.ஈசனின் அன்பும் அருளுமே எல்லோருக்கும் தேவை. அதை நீயே வைத்து கொள் மகனே" என்றான் அரிஞ்சயன்.
"இல்லை. இதை நான் திரும்ப பெற மாட்டேன். இதை நீங்கள் வாங்கி கொள்ளத்தான் வேண்டும்" என்றான் ஜெயசிம்மன் விடா பிடியாக .
அவனுக்கு அருகே நின்ற நித்ராதேவியும் அந்த முத்துமாலையை வாங்கி கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். மர்மயோகி யோ சலிப்புடன் " இவற்றையெல்லாம் நான் உயிர் கொல்லிகள் என்றுதான் அழைப்பேன். இவற்றையெல்லாம் நான் கைகளாலும் தீண்டுவதில்லை. தம்பதி சமேதராக இருவரும் அன்புத் தொல்லை செய்கிறீர்கள். அதை நான் பெற்றுக் கொள்ள மறுத்தால் உங்கள் மனம் வேறு சங்கடப்படும். என் சிஷ்ய பிள்ளையிடம் அதை கொடுத்து விடுங்கள்" என்றான்.
ஆதித்தன் முன் வந்து ஜெயசிம்மன் கொடுத்த முத்துமாலையை பெற்றுக் கொண்டான்.
"முத்துகளின் வெண்ணிறத்தை பார்த்தால் அவை பாண்டி நாட்டு முத்துகள் போல தோன்றுகின்றதே?" என்றான் அரிஞ்சயன் .
"உங்களின் கணிப்பு சரிதான் சுவாமி.!அவை பாண்டி நாட்டின் முத்துகள் தான்."
" எல்லாம் பூர்வாசிரம தொழிலின் வாசனை. வேறு ஓன்றுமில்லை. ஆமாம் மகனே? நீ எதற்காக என்னை சந்திக்க வந்தாய் என்று சொல்லவேயில்லையே?"
"நான் உங்களை சந்திக்க வந்த காரணம் தான் இப்போது நிவர்த்தியாகி விட்டதே சுவாமி?"
"அப்படியானால் நீ குழந்தை வரம் கேட்டுத்தான் என்னை நாடி வந்தாயோ?"
"ஆமாம் சுவாமி "
"இதற்கு முன்னால் நீ என்னை அரண்மனைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தாய். நான் அதை ஏற்க மறுத்து விட்டேன். அது ஏன் என்று உனக்கு தெரியுமா?"
"அது எனக்கு எப்படி சுவாமி தெரியும்? துறவிக்கு வேந்தன் அரும்பு என்பதால் நீங்கள் என்னை சந்திக்க மறுத்திருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன் சுவாமி "
"இல்லை மகனே! அப்படி நான் மண்டைகம் பிடித்தவனல்ல. நீ எனக்கு அழைப்பு விடுத்த அன்று இரவு என் ஞானதிருஷ்டியில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு அழகான பெண் உனக்கு ஏதோ ஒரு சாபம் கொடுப்பது போல் ஒரு காட்சி என் மனக்கண்ணில் தோன்றியது. சாபம் உள்ள இடத்தில் இந்த சாது கால் வைக்க மாட்டான். உன் மனைவி கர்ப்பிணியானதன் மூலமாக அந்த சாபம் நிவர்த்தியாகி விட்டதென்று நான் நினைக்கிறேன். இனி நான் உன் அரண்மனைக்கு வர எந்த தடையுமில்லை." என்றான் அரிஞ்சயன் .இரவு பார்த்திபன் சொன்ன கதையிலிருந்து நீலவேணியின் பகுதியில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்து சாமர்த்தியமாக கையாண்டான் மர்மயோகி.
யோகியின் கனவில் நீலவேணி வந்ததிலிருந்து அவளது சாபம் உண்மை என்று நம்பிய ஜெயசிம்மன் இப்போது யோகி தனக்கு துணையாக இருப்பதால் அவளை நினைத்து தான் அதிகமாக பயப்பட வேண்டியதில்லை என்று தைரியமும் அடைந்தான்.
"உங்களின் வருகைக்காக என்னுடைய அரண்மனையின் வாசல்கள் எப்போதும் திறந்தே இருக்கும் சுவாமி " என்றான் ஜெயசிம்மன்
தம்பதி சமேதராக இருவரும் விடை பெற்று கிளம்பினார்கள். அரசனை வேடிக்கை பார்க்க கூடியிருந்த கூட்டமும் மெல்ல கரைய ஆரம்பித்தது.
முற்றிலும் தனிமை சூழ்ந்த பிறகு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான் அரிஞ்சயன்.
அவனது மவுனத்தை கலைத்தது ஆதித்தனின் குரல் .
"அண்ணா! புது புது வித்தைகளை எங்கே கற்றீர்கள்?இந்த வாழை இலையில் எழுத்துகள் எப்படி தோன்றின.? அதை பார்த்து ஜெயசிம்மன் மட்டுமல்ல. நானுமே திகைத்து தான் போனேன்." என்றான் ஆதித்தன்.
"ஆதித்தா ! அது ஒன்றும் பிரம்ம வித்தையல்ல. அந்த காய்ந்து போன வாழை இலையில் நான் ஏற்கனவே எலுமிச்சை சாறால் " புது உதயம் பிறக்கப்போகிறது " என்று எழுதி வைத்திருந்தேன். அந்த எழுத்துகள் காற்றில் கரைந்து விட்டதால் கண்ணுக்கு தெரியவில்லை. அதுவே தீப்பிழப்பின் வெப்பம் மேலே பட்டதும் அந்த எழுத்துகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விட்டன. இதில் அதிசயமோ அற்புத மோ எதுவும் இல்லை. எல்லாமே விஞ்ஞானத்தின் விளையாட்டு தான் " என்றான் அரிஞ்சயன் .
"பைராகியின் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவன் கண்டுபிடித்து வைத்திருக்கும் புதுப்பு து போர் கருவிகளை பயன்படுத்தி பார்த்தேன். அவற்றில் பயிற்சிமேற்கொண்டேன். ஆனால் இந்த மாதிரி விசயங்களில் போதுமான கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருந்து விட்டேன். அவை இப்போது நன்றாகவே நமக்கு உதவுகின்றன." என்றான் ஆதித்தன். அவன் குரலில் வருத்தம் இழையோடியது.
"என்னை விடவும் உனக்கு இந்த வித்தைகளை கற்று தரவே பைராகி விரும்பினான். நீ போதுமான ஆர்வம் காட்டாததால் அவன் என் பக்கம் திரும்பி விட்டான்" என்று சொல்லி சிரித்தான் அரிஞ்சயன் .
"அடுத்தமுறை பைராகியை சந்திக்கும் போது அவனை பேசிக் கொள்கிறேன்" என்றான் ஆதித்தன் பொய் கோபத்துடன் .
" என்னுடைய கவலை வேறு ஆதித்தா! ஜெய சிம்மனை கொல்ல நினைக்கிறான் பார்த்திபன்.நாம் அவனது செயலுக்கு உடன்பட்டால் பிறக்கும் குழந்தை தன் தகப்பனை இழக்கும். தகப்பனின் அன்பே தெரியாமல் வாழ வேண்டிய சூழல் உருவாகும். .காலம் முழுவதும் தன் தகப்பனை விழுங்கியவன் என்ற அவப்பெயரோடு அந்த குழந்தை வாழ வேண்டியதாக இருக்கும். நித்ராதேவியின் வயிற்றில் வளரும் குழந்தை நம் திட்டத்திற்கான முதல் தடை. தன் குழந்தையால் உயிர் தப்பி விட்டான் ஜெயசிம்மன் " என்றான் அரிஞ்சயன் .
ஆதித்தன் திகைத்து நின்றான்.