Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 13
ஜெயசிம்மன் ரத்னபுரியில் இல்லை என்பதையும் அவன் எங்கே போனான் என்பதையும் அறியாத வீரனும், தீரனும் நிலை குலைந்து போயினர்.நீலவேணியை மணப்பதற்கு பூரண உரிமையுள்ள ஜெயசிம்மன் திருமணத்திற்கு மறுக்க மாட்டான் என்றே இருவரும் நினைத்திருந்தனர். விரைவிலேயே ரத்னபுரிக்கு வந்து சேர்ந்த ஜெயசிம்மனும் தன்னை சந்திக்க நினைத்த இரு சகோதரர்களையும் தவிர்த்து வந்தான்.
ஜெயசிம்மனின் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருப்பதை தெரிந்து கொண்ட தீரன் தன் தம்பியை அழைத்து ஜெயசிம்மனிடம் பேசும் படி அறிவுறுத்தியிருந்தான். தன் அண்ணனின் அறிவுறுத்தலை ஏற்று தன்னிடம் பேச்சு நடத்த வந்த வீரனிடம் தனக்கும் நீலவேணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தான் நீலவேணியை காதலிக்கவே இல்லை என்றும் அவளுடைய கர்ப்பத்திற்கு காரணகர்த்தா தான் இல்லையென்றும் அபாண்டமாக பொய் கூறினான் ஜெயசிம்மன்.
அவனது பொய்யை கேட்ட வீரனுக்கு ரத்தம் கொதித்தது. தன் தங்கையின் கற்பை இழிவுபடுத்தி பேசிய ஜெயசிம்மனின் நாவை அறுத்து அவனது உயிர் பறவையை விண்ணில் பறக்க விட அவனது இதயம் துடித்தது. ஆனால் அவனை தண்டித்தால் கெடப் போவது தன் தங்கையின் வாழ்க்கைதான் என்பதால் தன்னுடைய கோபத்தை அடக்கி கொண்டு " இறுதியாக என்ன சொல்கிறாய் ஜெய சிம்மா? என் தங்கையை உன்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா?" என்றான் வீரன்.
"என்னை மன்னித்து விடுங்கள். யாரிடமோ கெட்டு போன உங்கள் தங்கையை நான் மணந்து கொள்வது சரியல்ல ! வீண் பழி சுமத்தி என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள், "என்றான் ஜெயசிம்மன் .
"யார் வாழ்க்கையோடு யார் விளையாடுவது? என் தங்கையின் வாழ்வை சீரழித்து விட்டு நல்லவன் போல் நடிக்கிறாயா? என் அண்ணன் என்னை பொறுமையாக பேசும் படி சொல்லி அனுப்பினான். அதனால் நான் உன்னிடம் பொறுமையோடு பேசிக் கொண்டி ருக்கிறேன். இதே மாதிரி என் அணணனிடம் நீ பேசியிருந்தால் உன் தலைஇந்நேரம் தரையில் உருண்டி ருக்கும்." என்றான் வீரன் கோபத்தோடு
அவனது கோபத்திற்கு சற்றும் அசராத ஜெயசிம்மன் " ஒரு அப்பாவியை நீங்கள் அச்சுறுத்தி பணிய வைக்க முயல்கிறீர்கள். நான் ஒரு அப்பாவி. நீதி நேர்மைக்கு பயந்தவன். உங்கள் தங்கை வேறு யாரிடமோ ஏமாந்து விட்டு அப்பாவியான என்னுடைய பெயரைச் சொல்லி தப்பிக்க நினைக்கிறாள். அவள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?" என்றான் அமைதியாக .
தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மறுக்கும் அவனிடம் இனி வாதாடி பயனில்லை என்பதை உணர்ந்த வீரன் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினான்.
தன் தம்பி சொன்னவற்றை கவனமாக கேட்டு கொண்டிருந்தான் தீரன். அவனுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்டிப்பாக ஜெயசிம்மன் சொன்னவற்றை தன் தங்கை நீலவேணி கேட்க நேர்ந்தால் அவமானத்தில் உயிரையே விட்டு விடுவாள் என்பதால் அந்த விசயத்தை தன் தங்கையிடம் சொல்லாமல் மறைத்து விட முடிவு செய்தான்.
கையறு நிலையில் இருந்தார்கள் இரண்டு சகோதரர்களும்.
"இப்போது நாம் என்ன செய்வது?" என்றான் வீரன் கசப்பான புன்னகையுடன் .
" என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓற்றர் படை தலைவன் நேற்று ஒரு தகவலைக் கொண்டு வந்தான் - சிங்கபுரத்தின் இளவரசி நித்ராதேவியை திருமணம் செய்து கொள்வதாக ஜெயசிம்மன் வாக்களித்திருப்பதாகவும் அவளை அடிக்கடி தனிமையில் சந்திப்பதாகவும் தகவல் கூறினான்"
"அப்படியானால் மலையமானுக்கு பிறகு சிங்கபுரத்தின் அரசனாக ஜெயசிம்மன் தான் வருவான். அவனது வாழ்க்கையில் வாராது வந்த வாய்ப்பு .அதிர்ஷ்டம் ஜெயசிம்மன் மாளிகை கதவை தட்டுகிறது. இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அவனைத் தேடி வந்திருக்கும் போது அவன் நீலவேணியை திருமணம் செய்து கொள்ள நிச்சயமாக சம்மதிக்க மாட்டான் "
"நீ சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். அவனது இடத்தில் நான் இருந்தாலும் இதையே தான் செய்வேன்"
" இதை தடுக்க ஒரு வழிதான் இருக்கிறது"
"என்ன அது?"
"நித்ராதேவியை எனக்கு பெண் கேட்பது " என்ற வீரனை அன்போடு பார்த்தான் தீரன்.தங்கையின் வாழ்வை காப்பாற்ற குறையுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் தன் தம்பியின் தியாகத்தை நினைத்து அவனது உள்ளம் நெகிழ்ந்தது.
"அது காலம் கடந்த முயற்சி.ஜெயசிம்மனுக்கு முன்பாக நாம் அவளை பெண் கேட்டிருந்தாலும் கூட நம் மீதான முன்பகையால் மலையமான் நமக்கு பெண் தர மறுத்திருப்பான். இப்போது நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. ஜெயசிம்மனும் நித்ராதேவியும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கி விட்டனர். அதை மலையமான் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அவனது மவுனம் சம்மததிற்கு அறிகுறி.இந்த நிலையில் நாம் தலையிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்." என்றான் தீரன்.
"எனக்கும் சூழ்நிலை நன்றாகவே புரிகிறது. இப்போது நாம் என்ன செய்வது?"
"சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா விரைவில் நடக்க இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு அதில் கலந்து கொள்ள நாடெங்கும் இருந்து வருவார்கள். அந்த கொண்டாட்டங்கள் முடியட்டும் நாம் தினமும் வழிபடும் அந்த சுந்தரேஸ்வர ரே இந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுவார்" என்றான் தீரன் யோசனையுடன் .
"அப்படியே செய்வோம்.அதுவரை அமைதியாக இருப்போம்." என்றான் வீரன் அமைதியாக .
அவர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா தொடங்கியது. நாட்டின் வெவ்வேறு பாகங்களில் உள்ள மக்கள் அனைவரும் சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள அலை அலையாக குவிய ஆரம்பித்தனர். பக்கத்து நாட்டிலிருந்து வந்த பக்தர்களை கூட சோதனை எதுவுமின்றி ரத்னபுரி உள்ளே அனுமதித்து கொண்டிருந்தது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மலையமானும், ஜெயசிம்மனும் தங்களின் காரியத்தில் இறங்கினர். தன் வீரர்களுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து பக்தர்களின் வேடத்தில் ரத்ன புரிக்குள் ஊடுருவச் செய்தனர் இருவரும் . வாடகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வியாபாரிகள் புரவி வணிகர்களாக வே டமிட்டு ரத்னபுரிக்குள் நுழைந்தனர்.
ரத்னபுரியை அடுத்திருந்த காட்டு பகுதியில் அவர்கள் ஓவ்வொருவராக தலைமறைவாகி தங்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டு பகுதியில் தங்கியிருப்பதை பார்த்த பளியர் குலத் தலைவன் அதை பற்றி எச்சரிக்கை செய்து ரத்னபுரியின் அரண்மனைக்கு செய்தி அனுப்பினான். வெளியூரை சேர்ந்தவர்கள் சத்திரத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் காட்டு பகுதியில் தங்கியிருப்பதாக நினைத்த இரு சகோதரர்களும் அந்த தகவலை அலட்சியம் செய்தனர். அவர்களுக்கு தங்கள் தங்கையை பற்றிய கவலையே மிகப் பெரிதாக இருந்தது. திருவிழா முடிந்த அசதியில் ரத்னபுரி மக்கள் களைத்து போயிருந்தார்கள்.
இதற்காகவே காத்திருந்த ஜெயசிம்மன் சிங்கபுரத்திலிருந்து ரத்னபுரிக்கு திரும்பி வந்தான்.தனக்கு ஆதரவு கொடுக்கும் உள்ளூர் ஆதரவாளர்களையும், காட்டில் பதுங்கி கிடந்தவர்களில் சிலரையும் தன் மாளிகைக்கு வரவழைத்தவன் சதி திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான்.முதல் வேலையாக வீரனுக்கு நீலவேணியை பற்றிப் பேச வேண்டும். யாருக்கும் சொல்லாமல் தனியாக வரவேண்டும் என்று தூது சென்றவனிடம் சொல்லி அனுப்பினான். வேதனையில் வாடும் தன் அண்ணனுக்கு நல்ல சேதி ஓன்றை சொல்லி இன்ப அதிர்ச்சி தருவோம் என்று தன் வீரத்தை நம்பி தனியாக வந்த வீரனை தன் மாளிகையில் தன் ஆட்களை வைத்து படுகொலை செய்தான் ஜெயசிம்மன் . அடுத்ததாக தன்னுடைய கூலிப்படைகளை ஒன்றிணைத்து கொண்டவன் தீரனின் மீது தாக்குதலை தொடங்கினான். தன் தங்கையின் செயலால் நொந்து போயிருந்த தீரன் தன் தம்பியும் கொல்லப்பட்டதால் திகைத்து போனான்.
ஜெயசிம்மனின் ஆட்கள் உள் நாட்டிலேயே வீடுகளை எரித்து மக்களை தாக்குவதை அறிந்த தீரன் தன் படைகளை திரட்டினான். அந்த நேரத்தில் ரணதீரனின் உதவியை கேட்கலாம் என்று அவனுக்கு தோன்றவேயில்லை. உள்நாட்டு கலகத்தை தானே அடக்கி விடலாம் என்று தன் படைகளுடன் கிளம்பியவன் தன் தங்கை நீலவேணிக்கு ஒரு சத்தியத்தை செய்து கொடுத்தான். உன் வாழ்வை பாழ்படுத்திய அந்த ஜெயசிம்மனை போரில் தோற்கடித்து அவனை சிறைபிடித்து உனக்கே மணம் முடித்து வைப்பேன் என்பது தான் அவனது சத்தியம். ஜெயசிம்மனை கொல்லாமல் உயிரோடு சிறைபிடிப்பதே அவனுடைய லட்சியமாக இருந்தது.
தீரனை வீழ்த்த வேண்டும் என்று வெகு கவனமாக திட்டமிட்டு வைத்திருந்த ஜெயசிம்மனின் போர் யுக்திகளுக்கு முன்னால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தீரனின் போர் வியூகங்கள் செயல் இழந்தன. இந்த போரில் தன் தங்கை வாழ வேண்டும் என்பதற்காக தீரன் எப்படியும் தன்னை கொல்ல மாட்டான் என்று தெரிந்து கொண்ட ஜெயசிம்மன் இரக்கமேயில்லாமல் அவனை கொல்ல திட்டம் தீட்டினான்.ஜெயசிம்மனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்த தீரன் அவனது முன்னேற்பாடான திட்டங்களால் திக்குமுக்காடிப் போனான். அவனை போர் முனையில் கொல்வதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்த போதெல்லாம் நீலவேணியின் முகத்தை நினைத்து அதை தவிர்த்து விடுவான் தீரன்.
தீரன் மட்டும் சற்று பொறுமையாக இருந்து தன் உயிர் நண்பனான ரணதீரனை உதவிக்கு அழைத்திருந்தால் ஜெயசிம்மனின் கதி அதோகதியாகி இருக்கும். தீரனின் அதீதமான தன்னம்பிக்கை அவனுக்கே அபாயமாக வந்து முடிந்தது.ஜெயசிம்மனின் வாள் தன் மார்பில் பாய்ந்து மரணப்படுக்கையில் கிடந்த போது கூட தீரனின் எண்ணம் முழுக்க நீலவேணியே நிறைந்திருந்தாள். "என்னை மன்னித்து விடு நீலவேணி " என்ற முணக லோடு அவனது உயிர் பறவை உடலை விட்டுப் பறந்தது. இருந்த ஒரு தடைகல்லும் நீங்கி விட்ட மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தான் ஜெய சிம்மன் .அவன் எதிர்பார்க்காத ஒரு விசயம் ரணதீரனின் ரூபத்தில் வந்தது. தன் உயிர் நண்பனான தீரன் ஜெயசிம்மனால் கொல்லப்பட்டதை அறிந்த ரணதீரன் தன் படைகளை திரட்ட ஆரம்பித்தான். எல்லோரும் ஜெயசிம்மனால் ரணதீரனை சமாளிக்க முடியாது என்று நினைத்த போது தன்னை காப்பாற்றி கொள்ள இதுவரை யாரும் எடுக்காத ஒரு புது வகை ஆயுதத்தை கையில் எடுத்தான் ஜெயசிம்மன் .அது மதம் கடவுள் என்னும் ஆன்மீக ஆயுதம். தன்னை தற்காத்து கொள்ள ஆன்மீகத்தையும் ஆண்டவனையும் துணைக்கு அழைத்து கொண்டான் ஜெய சிம்மன்.
அவனது புதுவிதமான ஆன்மீகவியூகத்தில் சிக்கி தவித்தான் ரணதீரன். இதுவரை அவன் அப்படி ஒரு வியூகத்தை சந்தித்ததேயில்லை.
ஜெயசிம்மன் ரத்னபுரியில் இல்லை என்பதையும் அவன் எங்கே போனான் என்பதையும் அறியாத வீரனும், தீரனும் நிலை குலைந்து போயினர்.நீலவேணியை மணப்பதற்கு பூரண உரிமையுள்ள ஜெயசிம்மன் திருமணத்திற்கு மறுக்க மாட்டான் என்றே இருவரும் நினைத்திருந்தனர். விரைவிலேயே ரத்னபுரிக்கு வந்து சேர்ந்த ஜெயசிம்மனும் தன்னை சந்திக்க நினைத்த இரு சகோதரர்களையும் தவிர்த்து வந்தான்.
ஜெயசிம்மனின் மனநிலையில் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருப்பதை தெரிந்து கொண்ட தீரன் தன் தம்பியை அழைத்து ஜெயசிம்மனிடம் பேசும் படி அறிவுறுத்தியிருந்தான். தன் அண்ணனின் அறிவுறுத்தலை ஏற்று தன்னிடம் பேச்சு நடத்த வந்த வீரனிடம் தனக்கும் நீலவேணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் தான் நீலவேணியை காதலிக்கவே இல்லை என்றும் அவளுடைய கர்ப்பத்திற்கு காரணகர்த்தா தான் இல்லையென்றும் அபாண்டமாக பொய் கூறினான் ஜெயசிம்மன்.
அவனது பொய்யை கேட்ட வீரனுக்கு ரத்தம் கொதித்தது. தன் தங்கையின் கற்பை இழிவுபடுத்தி பேசிய ஜெயசிம்மனின் நாவை அறுத்து அவனது உயிர் பறவையை விண்ணில் பறக்க விட அவனது இதயம் துடித்தது. ஆனால் அவனை தண்டித்தால் கெடப் போவது தன் தங்கையின் வாழ்க்கைதான் என்பதால் தன்னுடைய கோபத்தை அடக்கி கொண்டு " இறுதியாக என்ன சொல்கிறாய் ஜெய சிம்மா? என் தங்கையை உன்னால் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா?" என்றான் வீரன்.
"என்னை மன்னித்து விடுங்கள். யாரிடமோ கெட்டு போன உங்கள் தங்கையை நான் மணந்து கொள்வது சரியல்ல ! வீண் பழி சுமத்தி என் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள், "என்றான் ஜெயசிம்மன் .
"யார் வாழ்க்கையோடு யார் விளையாடுவது? என் தங்கையின் வாழ்வை சீரழித்து விட்டு நல்லவன் போல் நடிக்கிறாயா? என் அண்ணன் என்னை பொறுமையாக பேசும் படி சொல்லி அனுப்பினான். அதனால் நான் உன்னிடம் பொறுமையோடு பேசிக் கொண்டி ருக்கிறேன். இதே மாதிரி என் அணணனிடம் நீ பேசியிருந்தால் உன் தலைஇந்நேரம் தரையில் உருண்டி ருக்கும்." என்றான் வீரன் கோபத்தோடு
அவனது கோபத்திற்கு சற்றும் அசராத ஜெயசிம்மன் " ஒரு அப்பாவியை நீங்கள் அச்சுறுத்தி பணிய வைக்க முயல்கிறீர்கள். நான் ஒரு அப்பாவி. நீதி நேர்மைக்கு பயந்தவன். உங்கள் தங்கை வேறு யாரிடமோ ஏமாந்து விட்டு அப்பாவியான என்னுடைய பெயரைச் சொல்லி தப்பிக்க நினைக்கிறாள். அவள் செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?" என்றான் அமைதியாக .
தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மறுக்கும் அவனிடம் இனி வாதாடி பயனில்லை என்பதை உணர்ந்த வீரன் கோபத்தோடு அங்கிருந்து கிளம்பினான்.
தன் தம்பி சொன்னவற்றை கவனமாக கேட்டு கொண்டிருந்தான் தீரன். அவனுக்கு இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்டிப்பாக ஜெயசிம்மன் சொன்னவற்றை தன் தங்கை நீலவேணி கேட்க நேர்ந்தால் அவமானத்தில் உயிரையே விட்டு விடுவாள் என்பதால் அந்த விசயத்தை தன் தங்கையிடம் சொல்லாமல் மறைத்து விட முடிவு செய்தான்.
கையறு நிலையில் இருந்தார்கள் இரண்டு சகோதரர்களும்.
"இப்போது நாம் என்ன செய்வது?" என்றான் வீரன் கசப்பான புன்னகையுடன் .
" என்ன செய்வதென்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓற்றர் படை தலைவன் நேற்று ஒரு தகவலைக் கொண்டு வந்தான் - சிங்கபுரத்தின் இளவரசி நித்ராதேவியை திருமணம் செய்து கொள்வதாக ஜெயசிம்மன் வாக்களித்திருப்பதாகவும் அவளை அடிக்கடி தனிமையில் சந்திப்பதாகவும் தகவல் கூறினான்"
"அப்படியானால் மலையமானுக்கு பிறகு சிங்கபுரத்தின் அரசனாக ஜெயசிம்மன் தான் வருவான். அவனது வாழ்க்கையில் வாராது வந்த வாய்ப்பு .அதிர்ஷ்டம் ஜெயசிம்மன் மாளிகை கதவை தட்டுகிறது. இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு அவனைத் தேடி வந்திருக்கும் போது அவன் நீலவேணியை திருமணம் செய்து கொள்ள நிச்சயமாக சம்மதிக்க மாட்டான் "
"நீ சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். அவனது இடத்தில் நான் இருந்தாலும் இதையே தான் செய்வேன்"
" இதை தடுக்க ஒரு வழிதான் இருக்கிறது"
"என்ன அது?"
"நித்ராதேவியை எனக்கு பெண் கேட்பது " என்ற வீரனை அன்போடு பார்த்தான் தீரன்.தங்கையின் வாழ்வை காப்பாற்ற குறையுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் தன் தம்பியின் தியாகத்தை நினைத்து அவனது உள்ளம் நெகிழ்ந்தது.
"அது காலம் கடந்த முயற்சி.ஜெயசிம்மனுக்கு முன்பாக நாம் அவளை பெண் கேட்டிருந்தாலும் கூட நம் மீதான முன்பகையால் மலையமான் நமக்கு பெண் தர மறுத்திருப்பான். இப்போது நிலமை வேறு மாதிரியாக இருக்கிறது. ஜெயசிம்மனும் நித்ராதேவியும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கி விட்டனர். அதை மலையமான் கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அவனது மவுனம் சம்மததிற்கு அறிகுறி.இந்த நிலையில் நாம் தலையிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்." என்றான் தீரன்.
"எனக்கும் சூழ்நிலை நன்றாகவே புரிகிறது. இப்போது நாம் என்ன செய்வது?"
"சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா விரைவில் நடக்க இருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு அதில் கலந்து கொள்ள நாடெங்கும் இருந்து வருவார்கள். அந்த கொண்டாட்டங்கள் முடியட்டும் நாம் தினமும் வழிபடும் அந்த சுந்தரேஸ்வர ரே இந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டுவார்" என்றான் தீரன் யோசனையுடன் .
"அப்படியே செய்வோம்.அதுவரை அமைதியாக இருப்போம்." என்றான் வீரன் அமைதியாக .
அவர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழா தொடங்கியது. நாட்டின் வெவ்வேறு பாகங்களில் உள்ள மக்கள் அனைவரும் சுந்தரேஸ்வரரின் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள அலை அலையாக குவிய ஆரம்பித்தனர். பக்கத்து நாட்டிலிருந்து வந்த பக்தர்களை கூட சோதனை எதுவுமின்றி ரத்னபுரி உள்ளே அனுமதித்து கொண்டிருந்தது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த மலையமானும், ஜெயசிம்மனும் தங்களின் காரியத்தில் இறங்கினர். தன் வீரர்களுக்கு மஞ்சள் ஆடை அணிவித்து பக்தர்களின் வேடத்தில் ரத்ன புரிக்குள் ஊடுருவச் செய்தனர் இருவரும் . வாடகைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வியாபாரிகள் புரவி வணிகர்களாக வே டமிட்டு ரத்னபுரிக்குள் நுழைந்தனர்.
ரத்னபுரியை அடுத்திருந்த காட்டு பகுதியில் அவர்கள் ஓவ்வொருவராக தலைமறைவாகி தங்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டு பகுதியில் தங்கியிருப்பதை பார்த்த பளியர் குலத் தலைவன் அதை பற்றி எச்சரிக்கை செய்து ரத்னபுரியின் அரண்மனைக்கு செய்தி அனுப்பினான். வெளியூரை சேர்ந்தவர்கள் சத்திரத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் காட்டு பகுதியில் தங்கியிருப்பதாக நினைத்த இரு சகோதரர்களும் அந்த தகவலை அலட்சியம் செய்தனர். அவர்களுக்கு தங்கள் தங்கையை பற்றிய கவலையே மிகப் பெரிதாக இருந்தது. திருவிழா முடிந்த அசதியில் ரத்னபுரி மக்கள் களைத்து போயிருந்தார்கள்.
இதற்காகவே காத்திருந்த ஜெயசிம்மன் சிங்கபுரத்திலிருந்து ரத்னபுரிக்கு திரும்பி வந்தான்.தனக்கு ஆதரவு கொடுக்கும் உள்ளூர் ஆதரவாளர்களையும், காட்டில் பதுங்கி கிடந்தவர்களில் சிலரையும் தன் மாளிகைக்கு வரவழைத்தவன் சதி திட்டத்தை விவரிக்க ஆரம்பித்தான்.முதல் வேலையாக வீரனுக்கு நீலவேணியை பற்றிப் பேச வேண்டும். யாருக்கும் சொல்லாமல் தனியாக வரவேண்டும் என்று தூது சென்றவனிடம் சொல்லி அனுப்பினான். வேதனையில் வாடும் தன் அண்ணனுக்கு நல்ல சேதி ஓன்றை சொல்லி இன்ப அதிர்ச்சி தருவோம் என்று தன் வீரத்தை நம்பி தனியாக வந்த வீரனை தன் மாளிகையில் தன் ஆட்களை வைத்து படுகொலை செய்தான் ஜெயசிம்மன் . அடுத்ததாக தன்னுடைய கூலிப்படைகளை ஒன்றிணைத்து கொண்டவன் தீரனின் மீது தாக்குதலை தொடங்கினான். தன் தங்கையின் செயலால் நொந்து போயிருந்த தீரன் தன் தம்பியும் கொல்லப்பட்டதால் திகைத்து போனான்.
ஜெயசிம்மனின் ஆட்கள் உள் நாட்டிலேயே வீடுகளை எரித்து மக்களை தாக்குவதை அறிந்த தீரன் தன் படைகளை திரட்டினான். அந்த நேரத்தில் ரணதீரனின் உதவியை கேட்கலாம் என்று அவனுக்கு தோன்றவேயில்லை. உள்நாட்டு கலகத்தை தானே அடக்கி விடலாம் என்று தன் படைகளுடன் கிளம்பியவன் தன் தங்கை நீலவேணிக்கு ஒரு சத்தியத்தை செய்து கொடுத்தான். உன் வாழ்வை பாழ்படுத்திய அந்த ஜெயசிம்மனை போரில் தோற்கடித்து அவனை சிறைபிடித்து உனக்கே மணம் முடித்து வைப்பேன் என்பது தான் அவனது சத்தியம். ஜெயசிம்மனை கொல்லாமல் உயிரோடு சிறைபிடிப்பதே அவனுடைய லட்சியமாக இருந்தது.
தீரனை வீழ்த்த வேண்டும் என்று வெகு கவனமாக திட்டமிட்டு வைத்திருந்த ஜெயசிம்மனின் போர் யுக்திகளுக்கு முன்னால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தீரனின் போர் வியூகங்கள் செயல் இழந்தன. இந்த போரில் தன் தங்கை வாழ வேண்டும் என்பதற்காக தீரன் எப்படியும் தன்னை கொல்ல மாட்டான் என்று தெரிந்து கொண்ட ஜெயசிம்மன் இரக்கமேயில்லாமல் அவனை கொல்ல திட்டம் தீட்டினான்.ஜெயசிம்மனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்த தீரன் அவனது முன்னேற்பாடான திட்டங்களால் திக்குமுக்காடிப் போனான். அவனை போர் முனையில் கொல்வதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்த போதெல்லாம் நீலவேணியின் முகத்தை நினைத்து அதை தவிர்த்து விடுவான் தீரன்.
தீரன் மட்டும் சற்று பொறுமையாக இருந்து தன் உயிர் நண்பனான ரணதீரனை உதவிக்கு அழைத்திருந்தால் ஜெயசிம்மனின் கதி அதோகதியாகி இருக்கும். தீரனின் அதீதமான தன்னம்பிக்கை அவனுக்கே அபாயமாக வந்து முடிந்தது.ஜெயசிம்மனின் வாள் தன் மார்பில் பாய்ந்து மரணப்படுக்கையில் கிடந்த போது கூட தீரனின் எண்ணம் முழுக்க நீலவேணியே நிறைந்திருந்தாள். "என்னை மன்னித்து விடு நீலவேணி " என்ற முணக லோடு அவனது உயிர் பறவை உடலை விட்டுப் பறந்தது. இருந்த ஒரு தடைகல்லும் நீங்கி விட்ட மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தான் ஜெய சிம்மன் .அவன் எதிர்பார்க்காத ஒரு விசயம் ரணதீரனின் ரூபத்தில் வந்தது. தன் உயிர் நண்பனான தீரன் ஜெயசிம்மனால் கொல்லப்பட்டதை அறிந்த ரணதீரன் தன் படைகளை திரட்ட ஆரம்பித்தான். எல்லோரும் ஜெயசிம்மனால் ரணதீரனை சமாளிக்க முடியாது என்று நினைத்த போது தன்னை காப்பாற்றி கொள்ள இதுவரை யாரும் எடுக்காத ஒரு புது வகை ஆயுதத்தை கையில் எடுத்தான் ஜெயசிம்மன் .அது மதம் கடவுள் என்னும் ஆன்மீக ஆயுதம். தன்னை தற்காத்து கொள்ள ஆன்மீகத்தையும் ஆண்டவனையும் துணைக்கு அழைத்து கொண்டான் ஜெய சிம்மன்.
அவனது புதுவிதமான ஆன்மீகவியூகத்தில் சிக்கி தவித்தான் ரணதீரன். இதுவரை அவன் அப்படி ஒரு வியூகத்தை சந்தித்ததேயில்லை.