Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 25
வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்..
" உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த ரெட்டவடம்லாம் எதுக்கு.. குடு பீரோவுலே வெச்சுடறேன்.. இந்த பாரு குமாரி.. நீ தான் ஆத்து மூத்த மாட்டுப் பொண்ணு.. எல்லாருக்கும் வேண்டிய நீதான் கவனுச்சுக்கனும்.. புரியறதா.. வா.. அடுப்புல பாலக் காச்சி எல்லாருக்கும் காபி போட்டு குடு.. எப்டி உங்கம்மா வளத்திருக்கான்னு பாக்கறேன்.. " அடுக்களைக்குள் கொண்டு விட்டாள்..
" ம்ம்ம்.." கண்களை விரித்து தலை அசைத்தாள் சுகுமாரி..
தட்டுத் தடுமாறி பாலைகாச்சி காபி கலந்து கொண்டு வந்தாள்.. கூடத்தில் பட்டாளமாய் உட்காந்திருக்க கொஞ்சம் தடுமாற்றத்துடன் அனைவருக்கும் கொடுத்தாள்.. வாங்கிக் குடித்த பர்வதம் முகம் சுறுங்கியது.. " ஏன்டி , உங்காத்ல சக்கரை போட்டெல்லாம் காபி குடிக்க மாட்டேளா.. ஹூம் கசந்து வழியறது.. ஒரு காபி கூட போட்டுத் தர சொல்லித்தரலையா உங்கம்மா.. மண்டபத்ல அத்தன ஜம்பமா பேசினா.. இவ்வளவுதான் அவோ லட்சனமா.. தலைலெழுத்து.. " தலை அடித்துக் கொள்ள.. அவசரத்தில் சக்கரை கலக்காதது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது சுகுமாரி.
" ம.. மன்னுச்சுக்கோங்கோ.. அவசரத்துல மறந்துட்டேன்.." கொஞ்சம் அவமானமாய் இருந்தது..
" ஹூம்.. நன்னாத்தான் இருக்கு.. சக்கரை டப்பாவை இங்க வெச்சுட்டு குரு மூர்த்திக்கு காபிய கொண்டு குடு.. பாவம் புள்ளை களச்சு போயிருக்கான்.. போ.." பர்வதம் மிரட்ட அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..
" ஹூம்.. நானும்தான் பொண்ண பெத்துருக்கேன்.. கோமதி என்னமா வேலை பாப்பா.. எந்த வேலையா இருந்தாலும் சட்டுனு முடிச்சுட்டு வந்துடும் என் குழந்தை.. இத மாதிரியா... ஹூம்.. பிரமஹத்தி.."
பர்வதத்தின் அதிர்ந்த குரல் சுகுமாரிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. விழுங்கிக் கொண்டாள்.. குருமூர்த்தி வெட்டி முறித்தது போல் கட்டிலில் மல்லாந்து கிடக்க.. அவனை அழைத்து பானத்தை கொடுத்தாள்.. வாங்கியவன் அயர்வாய் அவளைப் பார்த்தான்...
" சுகு.. காலெல்லாம் ஒரே வலி.. கொஞ்சம் கால அமுக்கி விடு.. " கட்டளையிட்டான்.. கட்டிலின் மேல் அமரப் போனவளை கண்களால் சுட்டான்.. " கீழ உட்காரு.."
தரையில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கிவிட்டாள்.. தன் பிஞ்சு விரல்கள் நோக..! நேரம் ஆக பர்வதத்தின் குரல் அவளை அதிரச் செய்தது.... " டீ குமாரி.. என்னடி பண்ணின்டு இருக்கே.. உள்ள உனக்கென்ன வேலை.. வாடி இங்க.." பதறி பாதியில் எழுந்தாள்.. அவன் முறைத்தான்..
" அ.... அம்மா கூப்படறா.. வந்துடறேன்.. " பாவமாய் பார்த்தாள்.. அவன் வெறித்துவிட்டு திரும்பிப் படுத்தான்.. அவசரமாக வெளியில் ஓடி வந்தாள்..
" காபிய குடுத்தமா வந்தமான்னு இல்லாதைக்கு என்ன பண்ணின்டு இருக்கே.. ம்ம்ம்...நான் சொன்னாத்தான் உள்ள போனும்.. இங்க ஆயிரத்தெட்டு வேலைய வெச்சுண்டு அங்க என்ன குழசல்..." பர்வதம் கண்களை உருட்டினாள்.. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலை ஆட்டினாள் சுகுமாரி..
" எம்பொண்ணு கோமதிக்கிட்ட கேட்டுண்டு ரவைக்கு சாப்பாடு பண்ணிடு.. உந்தோப்பனார் குடுத்துவிட்டு கட்டுசாதமெல்லாம் ஊசிப் போயிடுத்து.. பழயதக் குடுத்துப்புட்டு ஜம்பம் வேறே.. ஹூம்.. அதக் கொண்டு போய் கொல்லைல கொட்டிட்டு சூடா பொங்கலும் , இட்லியும் பண்ணிடு.. இருபத்தி ரெண்டு பேர் இருக்கா.. "
" தலையத் தலைய ஆட்டிண்டு நிக்காதைக்கு போ.. போயி வேலையப் பாரு.. கோமதி.. கண்ணு.. அவளுக்கு எப்டி சமைக்கனும்னு கத்துக்குடு.. ஒன்னுந்தெரியாதவள தலைல கட்டிட்டா.. நீதானே கண்ணு பிரமாதமா பண்ணுவியே.. போம்மா.. போய் பாத்துக்கோ.." தன் மகள் கோமதியிடம் அன்பு பொங்க கூறினாள் பர்வதம்..
" ம்ம்.. சரிம்மா.. மன்னி வா.. " பெருமை பொங்க கூட்டிக் கொண்டு நடந்தாள் கோமதி.. பர்வதத்தின் ஆறாவது குழந்தை.. ஒரே செல்வமகள்..!
பாதி தெரிந்தும் தெரியாமலும் கோமதி ஏதோ சொல்லிக் கொடுக்க , நன்றாக சமைக்கும் சுகுமாரி குழம்பிப் போனாள்.. " உப்பு இவ்ளோ போட்டா கரிக்குமே.. காரம் ரொம்ப ஜாஸ்தி.. சாம்பாருக்கு இவ்ளோ ஆகாதே.. " சுகுமாரி கேட்க கோபமானாள் கோமதி.
" நான் சொல்றத செய்.. நேக்கு தெரியாதா.. என்னமோ கரைகண்டவ மாதிரி பேசறியே.. ம்ம்ம்.." முறைத்தாள்..
எதற்கு வம்பென்று அவள் கூறிய அளவைப் போட்டு சமைத்து முடித்தாள் சுகுமாரி.. அனைவரும் அமர ஒற்றை ஆளாய் பரிமாறினாள்.. சாப்பிட்டவர்கள் முகம் அஷ்டகோணலாக , லோகநாயகி பர்வதத்தை சீண்ட ஆரம்பித்தாள்...
" ஏன்டி பர்வதம்.. உன் நாட்டுப் பொண்ணுக்கு நடக்கத்தான் தெரியாதுன்னு பாத்தா , சமைக்கக் கூட தெரிலீயேடி.. இப்டி காரத்தையும் உப்பையும் அள்ளிக் கொட்டினா உடம்பு என்னதுக்கு ஆறது.. பாவம்டி நீ.. நோக்கு வாச்சது அவ்ளவு தான்.. என்னமோ போ.."
பர்வதம் எரிமலையானாள்..
" ஏன்டி , நோக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தும் பண்ண வராதா.. எம்பொண்ணுட்டயே கத்துக்க ஆகலேன்னா எதுக்கு லாயக்கு நீ.. ஹூம்.. எல்லாம் என் தலையெழுத்து.."
" ஆமம்மா.. உப்புக்கும் காரத்துக்கும் அளவு சொன்னா அவ இஷ்டத்துக்கு போடறா.. எம்பேற கெடுத்துடுவா போலவே.. இனி நீ ஆச்சு உன் மாட்டுப் பொண்ணு ஆச்சு.. இனிமே நேக்கு சொல்லாதே.. நீயே பாத்துக்கோ.. ஹூம் வாய்ல வெக்க விளங்கலே.." தன் பங்கிற்கு கோமதி தூற்றிவிட்டு எழுந்தாள்..
அனைவரும் பாதி வயிருடன் எழுந்திருக்க சுகுமாரிக்கு கண்களில் நீர் கொண்டது..
" எல்லாத்தையும் கொண்டு மாட்டுக்கு கொட்டு.. மனூஷா சாப்படற மாதிரியா இருக்கு.. கர்மம்.." பர்வதம் அர்ச்சித்துவிட்டு நகர்ந்தாள்.. கலக்கத்தில் உணவருந்தாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள்..
இரவு பதினொன்றைத் தாண்ட , ஊர் நியாயத்தையும் , வெற்றுப் பேச்சையும் பேசிவிட்டு அனைவரும் படுக்க , பர்வதம் சுகுமாரியை அறைக்குள் உறங்க அனுமதி தந்தாள்.. உடலெல்லாம் கலைத்துப் போக மெதுவாக நடந்து உள்ளே நுழைந்தாள் சுகுமாரி.. அவளுக்காய் காத்திருந்தவன் அவள் வர புன்னகைத்து அர்த்தமாய் பார்த்தான்.. அன்று இரவு அரைகுறை உறக்கத்துடன் கடக்க.. விடியக் காலையில் சத்தமாக எழுப்பினாள் கோமதி..
" மன்னி... மன்னி... இன்னும் என்ன தூங்கிண்டு இருக்கே.. மணி ஆயிடுத்து... எந்திரி.. போய் லெஷ்மிய குளிப்பாட்டிட்டு பாலக் கரந்துண்டு வா.. அம்மாக்கு காலைல அஞ்சு மணிக்கு காபி குடிக்கற பழக்கம்.." கூறிவிட்டு அவள் சென்று உறக்கத்தைத் தொடர , தலை சுற்ற தட்டுத் தடுமாறி எழுந்த சுகுமாரி குளித்து முழுகி , பாத்திரத்துடன் தொழுவத்திற்குள் நுழைந்தாள்..
இதுவரை மாட்டிடம் பால் கறந்த பழக்கமில்லாமல் பயத்துடன் நின்றாள்.. லக்ஷ்மி அவளை அன்புடன் பார்க்க மெல்லிய சந்தோஷத்துடன் அதற்கு தடவிக் கொடுத்தாள்.. குறுகிய நேரத்தில் அது சுகுமாரியிடம் ஒட்டிக் கொள்ள , அதை குளிப்பாட்டி பொட்டிட்டு மடுவை பிடித்து பால் கரந்தாள்.. அதற்குத் தீணி வைத்துவிட்டு, அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க , அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்..
வழக்கம்போல் அவளை ஏசியபடி அவளது உபசரனைகளை ஏற்றுக் கொண்டனர்.. நாட்கள் ஓடியது.. சமைப்பது வீட்டு வேலைகளைச் செய்வது , எல்லோரையும் கவனிப்பது மட்டுமே அவளின் தலையாயக் கடமையாக விதிக்கப்பட்டது.. ஊதியமில்லா சேவகன் போல் இரவுபகல் பாராமல் உழைத்தாள்.. பர்வதத்தின் குத்தல் பேச்சையும் , கோமதியின் திமிரையும் , குருமூர்த்தியின் அலட்சிய போக்கையும் பொறுத்துக் கொண்டு அனுசரித்து நடக்க ஆரம்பித்தாள்.. எல்லோரும் உண்டது போக மிச்சத்தை சாப்பிட்டாள்..
வீட்டு மாப்பிள்ளையாய் இருந்த சடகோபன் மட்டும் சுகுமாரியிடம் கொஞ்சம் கனிவாய் நடந்து கொண்டான்..
கோமதி கர்பமானாள்.. உள்ளமெல்லாம் பூரித்துப் போக பர்வதம் தன் மகளை அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக் கொண்டாள்.. கோமதியை கவனிக்கும் பொறுப்பும் சுகுமாரியின் தலையில் விழுந்தது.. சின்னப் பெண் என்று பாராமல் அனைவரும் அவளை ஏவினர்..
ஒருபுறம் உடல் உளைய மறுபுறம் மனம் புழுங்க வாய் பேசாமல் ஜடம் போல் இருந்தாள்.. மகிழ்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் போனது.. அவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை குரு மூர்த்தி.. அவனுக்கு அவள் உடல் தேவைப்பட்டது அவ்வளவே.. அதுவுமின்றி அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.. அடிக்கடி இரவு வெளியில் சென்று வருவதும் , பல நாட்கள் இரவில் வராமலும் இருந்தான்..
சுகுமாரிக்கு கொஞ்சம் கொஞ்சம் அவன் நடத்தை மீது சந்தேகம் வர ஆரம்பித்தது.. நடுஇரவில் அவன் வரும் பொழுது அவன் மீது அடிக்கும் மல்லிகைப் பூ வாசமும் ஜவ்வாது வாசமும் அவன் தவறு செய்வதை ஊர்ஜிதப் படுத்தியது.. அவன் தீண்ட அருவருப்பாய் இருந்தது.. அதையும் மீறி அவனது அத்துமீறல் அவளை ரணமாக்கியது..
சில நாட்கள் செல்ல.. இரவில் அவனுடன் உறங்க பர்வதமோ , கோமதியோ விடுவதில்லை.. அறையின் வாயில் கதவிற்கு முன்னால் கோமதி படுத்துக் கொண்டு அவளை உள்ளே செல்ல தடையாக இருந்தாள்..
உள்ளுக்குள் கலவரம் மூண்டிருந்தது சுகுமாரிக்கு.. தன் கணவன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற பயம் அவளை அலைக்கழித்தது..
ஒருநாள் இரவு...
வழக்கம்போல அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு பின்னரவு அவள் அறைக்குள் செல்ல எண்ண அங்கு வாசலில் கோமதி படுத்துக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..
அவளை எழுப்ப மனமின்றி ஒரு ஓரமாக தாண்டிச் செல்ல , பர்வதத்தின் குரல் அவளை வெலவெலக்கச் செய்தது..
" அடியே.. கூறுகெட்டவளே.. அறிவில்ல.. கர்பவதிப் பொண்ண தாண்டறயே உனக்கு கூறு இருக்கா.. புள்ளைய வயத்துல சுமந்துண்டு இருக்கா எம்பொண்ணு , அவளத் தாண்டி உன் பாவத்த சேக்கறியா.. என் பரம்பரையே நாசமாப் போகனும்னு நெனைக்கறியா.. வந்து ஒரு வருஷம் ஆயுடுத்து.. உனக்குத்தான் வயத்துல ஒன்னும் மொலைக்கலே.. அதுக்காக எம்பொண்ணு வயத்துல வளர்ரத
அழிக்கப் பாக்கறியே படுபாவி.. நீ நன்னா இருப்பியா.. அப்படி என்னடி சல்லாபம் வேண்டி இருக்கு.. சீ... " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த , அனைவரும் எழுந்து கொண்டனர்.. சுற்றி எல்லோரும் அவளை அசிங்கமாகப் பார்க்க கூசியது சுகுமாரிக்கு.. அங்கேயே செத்துவிடமாட்டோமா எனத் தோன்றியது.. இதயத்தை கிழித்த கூரிய வார்த்தைகளை கேட்க இயலாமல் காதுகளை மூடிக் கொண்டாள். கண்களில் நீர் பொழிந்தது.
" என்னடி முழுச்சுண்டு இருக்கே.. எம்பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. தப்பு பண்ணிட்டேன்னு.. ம்ம்ம்.." பர்வதம் கண்களை உருட்ட , சுயமரியாதை அத்தனையும் மனதில் புதைத்து கோமதியின் கால்களைப் பற்றினாள் சுகுமாரி.. கோமதிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்து போனது.. அன்றிலிருந்து சமையல்கட்டே படுக்கை அறை ஆனது சுகுமாரிக்கு..
நாட்கள் முட்களாய் நகர.. குரு மூர்த்தி வீட்டிற்கு வருவதை அவ்வப் பொழுது தவிர்த்திருந்தான்.. வந்தாலும் அவனது காம வேட்கையைத் தணித்துக் கொள்ள இவளை உபயோகப் படுத்திக் கொண்டான்.. சில நேரங்களில் பகலென்றும் பாராமல்..! அறையைவிட்டு வெளிவரும் சுகுமாரிக்கு அனைவரது கேளியான அசிங்கப் பார்வை ஊசியாய் குத்தியது.. கல்யாணமாகாத நாலு மச்சினன்களின் ஜாடையான கிண்டல் பேச்சும் , அவளை பார்த்தவிதமும் தலைகுனிய வைத்தது..
குருமூர்த்தியின் ஆரப்பாட்டம் அதிகமாக பொறுக்க இயலாமல் ஒரு நாள் பர்வதத்திடம் கூறினாள்.. " அ.. அம்மா.. அ.. அவர் போ... போக்கே.. சரி.. இல்ல.." தட்டுத் தடுமாற..
" யாரோட போக்க சொல்றே... நீ ரொம்ப நல்லவளோ.. யாரடி சொல்றே.. ம்ம்ம்.." பர்வதம் கர்ஜிக்க..
" அ... அவர் தான்.. வேளைகெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரார்.. அவர் மேலே.. எதேதோ வாசன வர்ரது... அவர.. கொஞ்சம்.. கண்டிச்சு..." சுகுமாரி நிறுத்தும் முன்னே எரிமலையானாள் பர்வதம்..
" என் பிள்ள சொக்கத் தங்கம்.. அவனையே குறை சொல்றியே உன் நாக்கு அழுகிப் போகாது.. ஆம்பளைனா நாலு எடத்துக்கு போய்ட்டு வரத்தான் செய்வான்.. பொண்டுசட்டி மாதிரி ஆத்லயா உட்காந்து இருப்பான்.. அவன் போக்க சொல்ல நீ யாருடி.. பெரிய கரைகண்டவளோ.. ஒரு புள்ளைய பெத்துகுடுக்க வழியக் காணும்.. அவன குறை சொல்றியோ.. இதுதான் முதலும் கடைசியும்.. இனியும் அவனப் பத்தி பேசினியோ.. உங்காத்துக்கு உன்ன துரத்திப்புடுவேன்.. சொன்னபடி நகையப் போட வக்கில்லே உங்கப்பனுக்கு.. வாய் மட்டும் நீளறது.. வாய மூடிண்டு போடி... வந்துட்டா.. " ஆங்காரியாய் கத்தினாள்..
அதற்குமேல் பேச வழியின்றி ஊமையானாள் சுகுமாரி..
கோமதிக்கு பெண்குழந்தை பிறந்தது.. அதற்கு சுந்தரவல்லி எனப் பெயர் வைத்து அமர்க்களமாக பண்டிகை வைத்துக் கொண்டாடினாள் பர்வதம்..
சுந்தரவல்லிக்கு இரண்டரை வயது நிறைய.. சூள் கொண்டாள் சுகுமாரி..
நாட்கள் நகர , வயிற்றின் சுமையும் ஏற அதனுடன் வேலைகளை செய்து வந்தாள்.. கவனிக்க ஆள் இல்லை.. அதே இளக்கார பார்வை , அதே மிஞ்சிய சாப்பாடு என நாட்கள் நகர்ந்தது.. பெற்றவர்களைக் காண வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. குருமூர்த்தியிடம் சொல்லியும் எந்த பிரயோஜமும் இல்லாமல் போனது..
பெண்கள் சவகாசம் மட்டுமின்றி வேறு சில கெட்ட பழக்கங்களும் அவனை சிதைக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் நோய்வாய்ப் பட ஆரம்பித்தான்.. சுகுமாரியின் பெற்றோர் இரண்டு மூன்று முறை வந்து பார்த்து சென்ற போதும் அவர்களுடன் அவளை அனுப்ப சம்மதிக்கவில்லை பர்வதம்..
சீமந்தத்தை செலவு செய்து மண்டபத்தில் நடத்திவிட்டு அவளை அழைத்துப் போக கட்டளை இட்டாள் பர்வதம்.. வேறுவழியின்றி கடனை வாங்கி சுகுமாரிக்கு சீமந்தம் நடத்தி அவளை அழைத்துப் போனார்கள்..
அழகான ஆண்பிள்ளை பிறந்தது.. மகிழ்ந்து போயினர் சுப்ரமண்யமும் ருக்மணியும்.. பையன் வீட்டிற்கு செய்தி அனுப்பியும் யாருமே வரவில்லை.. தகுந்த சீரோடு மாப்பிள்ளைக்கு தங்க அணிகலனும் வைத்து பெண்ணையும் குழந்தையையும் கூட்டி வருமாறு மறுசெய்தி சொல்லிவிட்டாள் பர்வதம்.. குருமூர்த்தி கூட தன் குழந்தையை பார்க்க வரவில்லை..
சோர்ந்து போனாள் சுகுமாரி.. மேலும் மேலும் சுமையேற நொடிந்து போனார் சுப்ரமண்யம்.. இருந்த நிலத்தை விற்று அத்தனை சீரையும் செய்து சுகுமாரியை கொண்டு விட்டார்..
பச்சை உடம்புக்காரி எனப் பாராமல் அந்தக் கூட்டம் அவளை ஏவ ஆரம்பித்தது.. குழந்தையையும் கவனித்துக் கொண்டு மற்றவர்கள் தேவையையும் நிறைவேற்றி மாடுபோல வேலை செய்தாள் சுகுமாரி.. உடல் மெலிந்து போனது..!
ஒருவருடம் செல்ல , குருமூர்த்தி காசநோயில் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானான்.. நெஞ்சம் அடித்துக் கொண்டது சுகுமாரி.. கல்லானாலும் கணவன் என்ற ஸ்தானம் அவளை நிலைகுலையச் செய்தது.. குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகாத நிலையில் அவன் நோய்வாய்ப் பட்டதைக் கண்டு குழந்தையை தூற்ற ஆரம்பித்தாள் பர்வதம்..
" எந்த நேரத்ல பொறந்ததோ சனியன் அப்பன இப்டி படுக்கைல போட்டுடுத்தே.. அடியே குமாரி இந்த தரித்திரத்த அவன்கிட்ட விடாதே.. சீ.."
நாட்கள் நகர நகர குருமூர்த்தியின் நிலை கவலைக்கிடமானது.. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனின்றி ஒரு நாள் கண்களை மூடினான் குருமூர்த்தி..
நிற்கதியான சுகுமாரி கதறி அழுதாள்.. பிள்ளையைக் கண்டு அரற்றினாள்..
பெற்ற பிள்ளைய பறிகொடுத்த பர்வதத்திற்கு வெறி ஏறியது.. " இந்த பீடை எப்பப் பொறந்ததோ அப்பவே எம்பையனுக்கு சனி பிடுச்சுடுத்து.. நன்னா இருந்தவன் அல்பாய்சுல போய்ட்டானே.. வந்த ஒரு வருஷத்துல அப்பன முழுங்கிடுத்தே.. இது இனிமே என்வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது.. தூக்கிண்டு வெளில போ.. போய்த்தொலை.. தரித்திரம் தர்த்ரம்.." குழந்தை நடேசன் மீது தன் ஆத்திரம் அத்தனையும் கொட்டித் தீர்த்தாள் பர்வதம்.. கோமதியும் சேர்ந்து கொண்டு சுகுமாரியை கரித்துக் கொட்டினாள்..
" இவ வந்த வேளை தாம்மா.. எங்கண்ணனுக்கு இப்டி ஆய்டுத்து.. எப்போ காலடி எடுத்து வெச்சாளோ அப்பவே இந்தாத்து சந்தோஷம் போயிடுத்து.. இனி இவ இந்தாத்துக்குள்ள இருந்தா நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா போக வேண்டியதது தான்.. இவள ஆத்ல சேக்காதே.. அந்த மாட்டுத் தொழுவத்துல இருக்கச் சொல்லு... இவ திமிருக்கு அது தான் தண்டனை.. மாட்டோட மாடா கெடக்கட்டும்... அப்பத்தான் புத்தி வரும் இவளுக்கு.. "
அந்த சூழலில் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எங்கு செல்வது என மனம் புழுங்கி தவித்துப் போனாள் சுகுமாரி.. ஈமக் காரியம் எல்லாம் முடிய ,மாட்டுத் தொழுவத்தில் ஓர் வேலைக்காரி போல் ஆனாள்..
கொள்ளையிலே பாத்திரம் கழுவ துணி துவைக்க மாட்டைக் கழுவஎன எல்லா வேலையையும் அவள் தலையில் கட்டினர்.. என்றாவது ஒரு நாள் தன்னையும் தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மீந்து போன சாதத்தை சாப்பிட்டு வாழ்ந்தாள் சுகுமாரி..
நாட்கள் மெள்ள நகர , தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தான் நடேசன்.. கஷ்டத்திலும் அவனது பிஞ்சு மொழி அவளை மனம் குளிரச் செய்தது.. அவனது கள்ளச் சிரிப்பில் கரைந்து போனாள்.. இப்படியே சில நாள் செல்ல..
அன்று...
வேலையில் மூழ்கி இருந்த சுகுமாரி கவனிக்காத பொழுது நடேசன் தத்தி தத்தி நடந்து வீட்டின் உள்ளே சென்றான்.. அங்கு சுந்தரவல்லி விளையாட்டாய் அவனைக் கொஞ்ச.... அவ்வளவே...
ஆவேசமாக வெளியில் வந்தாள் கோமதி..
" ஏன்டி.. உனக்கு அவ்வளவு திமிராப் போயிடுத்தா.. உன் குழந்தைய உள்ள அனுப்ச்சு ஒறவு கொண்டாடப் பாக்கறியா.. அப்படியே நீயும் ஒட்டிக்கலாம்னு.. அந்த சனியன் எங்க எல்லாரோட உயிரையும் எடுத்துண்டு போறதுக்கா.. எம்பொண்ணு சின்ன குட்டின்னு அவளோ ஸ்நேகம் பண்ண வெச்சு சாதுச்சிடலாம்னு நெனப்போ.. அம்மா.. இங்க வா... " அவள் கத்திய கத்தில் வீடே அங்கு திரண்டது..
பர்வதம் தன் பங்கிற்கு சத்தமிட.. அதற்கு மேல் பொறுக்காத சுகுமாரி முதன் முறையாக எதிர்த்து பேசினாள்..
" அப்படி என்ன என் குழந்தை பண்ணிடுத்து.. எதோ தெரியாம உள்ள வந்துட்டான்.. நான் கவனிக்கலை.. அவன் உன் அண்ணன் பையன் தானே.. அவனுக்கும் இந்தாத்ல உரிமை உண்டு தானே.. " சுகுமாரி படபடவென பேச வெறித்தாள் கோமதி..
" பாத்தியாம்மா இவ திமிர.. உரிமை உண்டாமே.. அந்த குழந்தைய வெச்சு சொத்துல பங்கு வாங்கிக்கலாம்னு திட்டம் போட்ருக்கா.. எவ்ளோ நெஞ்சழுத்தம் பாரு.." தன் நந்துருணித் தனத்தை ஆரம்பித்தாள் கோமதி.. கண்கள் சிவந்தாள் பர்வதம்..
" புள்ளையே போய்ட்டான்.. அவன் பெத்தது இங்கெதுக்கு.. பங்கு போட நீயாருடி.. பிச்சக்கார குடும்பத்துல பொறந்துட்டு எஞ்சொத்த ஏப்பம் விட பாக்கறியா... மொதல்ல உன் புள்ளைய தூக்கிண்டு இங்கேத்து வெளிய போடி.. பாவம் பாத்து சோத்தப் போட்டா எஞ்சோத்துலயே கைய வெக்கறியா வீணாப் போனவளே... டி கோமதி அவ பெத்தத தூக்கி வெளில வீசுடி.. தூக்கிண்டு போட்டும்.." பர்வதம் கத்த உள்ளே ஓடினாள் கோமதி...
" ஏய்.. நில்லுடி.. எங்குழந்தை மேல கைய வெச்சே.. அப்பறம் உன் கை இருக்காது.... "உக்ரமானாள் சுகுமாரி.
அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து வெலவெலத்துப் போயினர்..
வேகமாக உள்ளே நுழைந்து நடேசனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கம்பீரமாக வெளியில் வந்தாள் சுகுமாரி..
"உங்கள மாதிரி கேடுகெட்டவாகிட்ட இருந்தா என் குழந்தையும் கெட்டுப் போயிடும்.. என் ஆத்துக்காரர் வாழ்ந்த இடத்துல இருக்கனும் , சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் , பிச்சைகாரி மாதிரி நீங்கள்ளாம் நடத்தினப்பையும் இத்தன நாள் வாயப் பொத்திண்டு இருந்தேன்.. உங்க சொத்துபத்துக்காக இல்லே.. மனசு மாறி என்னையும் குழந்தையையும் ஏத்துப்பேள்னு நம்பினேன்.. எப்போ என் குழந்தையையே தூக்கி எறியத் துணிஞ்சேளே இனிமே உங்க சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம்.. என் குழந்தைய ராஜாமாதிரி வளக்க நேக்கு தெரியும்.. எப்பாடு பட்டாலும் என் குழந்தைய வளத்து காமிப்பேன்.. அந்த வைராக்யம் நேக்கு இருக்கு.. இனிமே உங்க யாரு முகத்லையும் முழிக்க மாட்டேன்.. இது சத்யம்.. உறவு அத்து போயாச்சு.. இனிமே என் குழந்தை வாழ்க்கைல கேடு செய்யனும் நெனச்சேள்
இந்த சுகுமாரி ஆங்காரி ஆயிடுவேன் ஜாக்ரதை.." மூச்சிறைக்கக் கூறிவிட்டு அவர்கள் முகத்தில் விழிக்காமல் நடேசனை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சுகுமாரி..!
பேயறைந்தது போல் அனைவரும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்..!
பவித்ராவும் பங்கஜமும் அதிர்ச்சி விலகாது பார்த்துக் கொண்டிருக்க , நடேசன் கண்களில் நீர் மெள்ள வழிந்து ஓடியது.. சுகுமாரியின் கால்களை கட்டிக் கொண்டார்..
" அம்மா.. நீ.. நீ இத்தன கொடுமையைத் தாங்கிண்டு என்ன வளத்தியா.. ஒரு... ஒரு வார்த்தை கூட இது வர சொன்னதில்லையே... " அவர் கலங்க அவரது தலையை மென்மையாக வருடினாள் சுகுமாரி..
" எல்லாம் உனக்காகத்தான் நடேசா.. என் குழந்தைய யார் எது சொன்னாலும் என்னால தாங்க முடியாது.. மறுபடியும் அதே குடும்பத்துல எப்டி என் பேத்திய குடுப்பேன்.. சொல்லு.."
பாட்டி கேட்க.. அத்தனைபேரிடத்திலும் அமைதி மட்டுமே பதிலாக வந்தது..!!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
அத்யாயம் - 25
வீட்டில் நுழைந்த கையாய் சுகுமாரியை வேலை வாங்க ஆரம்பித்தாள் பர்வதம்..
" உங்காத்ல ஒக்காந்துண்டு இருக்கறா மாதிரி இங்க இருக்கப்படாது புரியறதா.. போய் சாதாரண உடைய உடித்திண்டு இத பீரோல வெச்சுட்டு வா.. கசங்கிடப் போறது.. நகையெல்லாம் நாள்கிழமைக்கு போட்டுக்கலாம்.. இந்த ரெட்டவடம்லாம் எதுக்கு.. குடு பீரோவுலே வெச்சுடறேன்.. இந்த பாரு குமாரி.. நீ தான் ஆத்து மூத்த மாட்டுப் பொண்ணு.. எல்லாருக்கும் வேண்டிய நீதான் கவனுச்சுக்கனும்.. புரியறதா.. வா.. அடுப்புல பாலக் காச்சி எல்லாருக்கும் காபி போட்டு குடு.. எப்டி உங்கம்மா வளத்திருக்கான்னு பாக்கறேன்.. " அடுக்களைக்குள் கொண்டு விட்டாள்..
" ம்ம்ம்.." கண்களை விரித்து தலை அசைத்தாள் சுகுமாரி..
தட்டுத் தடுமாறி பாலைகாச்சி காபி கலந்து கொண்டு வந்தாள்.. கூடத்தில் பட்டாளமாய் உட்காந்திருக்க கொஞ்சம் தடுமாற்றத்துடன் அனைவருக்கும் கொடுத்தாள்.. வாங்கிக் குடித்த பர்வதம் முகம் சுறுங்கியது.. " ஏன்டி , உங்காத்ல சக்கரை போட்டெல்லாம் காபி குடிக்க மாட்டேளா.. ஹூம் கசந்து வழியறது.. ஒரு காபி கூட போட்டுத் தர சொல்லித்தரலையா உங்கம்மா.. மண்டபத்ல அத்தன ஜம்பமா பேசினா.. இவ்வளவுதான் அவோ லட்சனமா.. தலைலெழுத்து.. " தலை அடித்துக் கொள்ள.. அவசரத்தில் சக்கரை கலக்காதது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது சுகுமாரி.
" ம.. மன்னுச்சுக்கோங்கோ.. அவசரத்துல மறந்துட்டேன்.." கொஞ்சம் அவமானமாய் இருந்தது..
" ஹூம்.. நன்னாத்தான் இருக்கு.. சக்கரை டப்பாவை இங்க வெச்சுட்டு குரு மூர்த்திக்கு காபிய கொண்டு குடு.. பாவம் புள்ளை களச்சு போயிருக்கான்.. போ.." பர்வதம் மிரட்ட அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..
" ஹூம்.. நானும்தான் பொண்ண பெத்துருக்கேன்.. கோமதி என்னமா வேலை பாப்பா.. எந்த வேலையா இருந்தாலும் சட்டுனு முடிச்சுட்டு வந்துடும் என் குழந்தை.. இத மாதிரியா... ஹூம்.. பிரமஹத்தி.."
பர்வதத்தின் அதிர்ந்த குரல் சுகுமாரிக்கு கலக்கத்தை உண்டு பண்ணியது. விழுங்கிக் கொண்டாள்.. குருமூர்த்தி வெட்டி முறித்தது போல் கட்டிலில் மல்லாந்து கிடக்க.. அவனை அழைத்து பானத்தை கொடுத்தாள்.. வாங்கியவன் அயர்வாய் அவளைப் பார்த்தான்...
" சுகு.. காலெல்லாம் ஒரே வலி.. கொஞ்சம் கால அமுக்கி விடு.. " கட்டளையிட்டான்.. கட்டிலின் மேல் அமரப் போனவளை கண்களால் சுட்டான்.. " கீழ உட்காரு.."
தரையில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கிவிட்டாள்.. தன் பிஞ்சு விரல்கள் நோக..! நேரம் ஆக பர்வதத்தின் குரல் அவளை அதிரச் செய்தது.... " டீ குமாரி.. என்னடி பண்ணின்டு இருக்கே.. உள்ள உனக்கென்ன வேலை.. வாடி இங்க.." பதறி பாதியில் எழுந்தாள்.. அவன் முறைத்தான்..
" அ.... அம்மா கூப்படறா.. வந்துடறேன்.. " பாவமாய் பார்த்தாள்.. அவன் வெறித்துவிட்டு திரும்பிப் படுத்தான்.. அவசரமாக வெளியில் ஓடி வந்தாள்..
" காபிய குடுத்தமா வந்தமான்னு இல்லாதைக்கு என்ன பண்ணின்டு இருக்கே.. ம்ம்ம்...நான் சொன்னாத்தான் உள்ள போனும்.. இங்க ஆயிரத்தெட்டு வேலைய வெச்சுண்டு அங்க என்ன குழசல்..." பர்வதம் கண்களை உருட்டினாள்.. என்ன சொல்வதெனத் தெரியாமல் தலை ஆட்டினாள் சுகுமாரி..
" எம்பொண்ணு கோமதிக்கிட்ட கேட்டுண்டு ரவைக்கு சாப்பாடு பண்ணிடு.. உந்தோப்பனார் குடுத்துவிட்டு கட்டுசாதமெல்லாம் ஊசிப் போயிடுத்து.. பழயதக் குடுத்துப்புட்டு ஜம்பம் வேறே.. ஹூம்.. அதக் கொண்டு போய் கொல்லைல கொட்டிட்டு சூடா பொங்கலும் , இட்லியும் பண்ணிடு.. இருபத்தி ரெண்டு பேர் இருக்கா.. "
" தலையத் தலைய ஆட்டிண்டு நிக்காதைக்கு போ.. போயி வேலையப் பாரு.. கோமதி.. கண்ணு.. அவளுக்கு எப்டி சமைக்கனும்னு கத்துக்குடு.. ஒன்னுந்தெரியாதவள தலைல கட்டிட்டா.. நீதானே கண்ணு பிரமாதமா பண்ணுவியே.. போம்மா.. போய் பாத்துக்கோ.." தன் மகள் கோமதியிடம் அன்பு பொங்க கூறினாள் பர்வதம்..
" ம்ம்.. சரிம்மா.. மன்னி வா.. " பெருமை பொங்க கூட்டிக் கொண்டு நடந்தாள் கோமதி.. பர்வதத்தின் ஆறாவது குழந்தை.. ஒரே செல்வமகள்..!
பாதி தெரிந்தும் தெரியாமலும் கோமதி ஏதோ சொல்லிக் கொடுக்க , நன்றாக சமைக்கும் சுகுமாரி குழம்பிப் போனாள்.. " உப்பு இவ்ளோ போட்டா கரிக்குமே.. காரம் ரொம்ப ஜாஸ்தி.. சாம்பாருக்கு இவ்ளோ ஆகாதே.. " சுகுமாரி கேட்க கோபமானாள் கோமதி.
" நான் சொல்றத செய்.. நேக்கு தெரியாதா.. என்னமோ கரைகண்டவ மாதிரி பேசறியே.. ம்ம்ம்.." முறைத்தாள்..
எதற்கு வம்பென்று அவள் கூறிய அளவைப் போட்டு சமைத்து முடித்தாள் சுகுமாரி.. அனைவரும் அமர ஒற்றை ஆளாய் பரிமாறினாள்.. சாப்பிட்டவர்கள் முகம் அஷ்டகோணலாக , லோகநாயகி பர்வதத்தை சீண்ட ஆரம்பித்தாள்...
" ஏன்டி பர்வதம்.. உன் நாட்டுப் பொண்ணுக்கு நடக்கத்தான் தெரியாதுன்னு பாத்தா , சமைக்கக் கூட தெரிலீயேடி.. இப்டி காரத்தையும் உப்பையும் அள்ளிக் கொட்டினா உடம்பு என்னதுக்கு ஆறது.. பாவம்டி நீ.. நோக்கு வாச்சது அவ்ளவு தான்.. என்னமோ போ.."
பர்வதம் எரிமலையானாள்..
" ஏன்டி , நோக்கு சமைக்க சொல்லிக் கொடுத்தும் பண்ண வராதா.. எம்பொண்ணுட்டயே கத்துக்க ஆகலேன்னா எதுக்கு லாயக்கு நீ.. ஹூம்.. எல்லாம் என் தலையெழுத்து.."
" ஆமம்மா.. உப்புக்கும் காரத்துக்கும் அளவு சொன்னா அவ இஷ்டத்துக்கு போடறா.. எம்பேற கெடுத்துடுவா போலவே.. இனி நீ ஆச்சு உன் மாட்டுப் பொண்ணு ஆச்சு.. இனிமே நேக்கு சொல்லாதே.. நீயே பாத்துக்கோ.. ஹூம் வாய்ல வெக்க விளங்கலே.." தன் பங்கிற்கு கோமதி தூற்றிவிட்டு எழுந்தாள்..
அனைவரும் பாதி வயிருடன் எழுந்திருக்க சுகுமாரிக்கு கண்களில் நீர் கொண்டது..
" எல்லாத்தையும் கொண்டு மாட்டுக்கு கொட்டு.. மனூஷா சாப்படற மாதிரியா இருக்கு.. கர்மம்.." பர்வதம் அர்ச்சித்துவிட்டு நகர்ந்தாள்.. கலக்கத்தில் உணவருந்தாமல் அங்கேயே அமர்ந்து கொண்டாள்..
இரவு பதினொன்றைத் தாண்ட , ஊர் நியாயத்தையும் , வெற்றுப் பேச்சையும் பேசிவிட்டு அனைவரும் படுக்க , பர்வதம் சுகுமாரியை அறைக்குள் உறங்க அனுமதி தந்தாள்.. உடலெல்லாம் கலைத்துப் போக மெதுவாக நடந்து உள்ளே நுழைந்தாள் சுகுமாரி.. அவளுக்காய் காத்திருந்தவன் அவள் வர புன்னகைத்து அர்த்தமாய் பார்த்தான்.. அன்று இரவு அரைகுறை உறக்கத்துடன் கடக்க.. விடியக் காலையில் சத்தமாக எழுப்பினாள் கோமதி..
" மன்னி... மன்னி... இன்னும் என்ன தூங்கிண்டு இருக்கே.. மணி ஆயிடுத்து... எந்திரி.. போய் லெஷ்மிய குளிப்பாட்டிட்டு பாலக் கரந்துண்டு வா.. அம்மாக்கு காலைல அஞ்சு மணிக்கு காபி குடிக்கற பழக்கம்.." கூறிவிட்டு அவள் சென்று உறக்கத்தைத் தொடர , தலை சுற்ற தட்டுத் தடுமாறி எழுந்த சுகுமாரி குளித்து முழுகி , பாத்திரத்துடன் தொழுவத்திற்குள் நுழைந்தாள்..
இதுவரை மாட்டிடம் பால் கறந்த பழக்கமில்லாமல் பயத்துடன் நின்றாள்.. லக்ஷ்மி அவளை அன்புடன் பார்க்க மெல்லிய சந்தோஷத்துடன் அதற்கு தடவிக் கொடுத்தாள்.. குறுகிய நேரத்தில் அது சுகுமாரியிடம் ஒட்டிக் கொள்ள , அதை குளிப்பாட்டி பொட்டிட்டு மடுவை பிடித்து பால் கரந்தாள்.. அதற்குத் தீணி வைத்துவிட்டு, அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க , அடுத்தடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்..
வழக்கம்போல் அவளை ஏசியபடி அவளது உபசரனைகளை ஏற்றுக் கொண்டனர்.. நாட்கள் ஓடியது.. சமைப்பது வீட்டு வேலைகளைச் செய்வது , எல்லோரையும் கவனிப்பது மட்டுமே அவளின் தலையாயக் கடமையாக விதிக்கப்பட்டது.. ஊதியமில்லா சேவகன் போல் இரவுபகல் பாராமல் உழைத்தாள்.. பர்வதத்தின் குத்தல் பேச்சையும் , கோமதியின் திமிரையும் , குருமூர்த்தியின் அலட்சிய போக்கையும் பொறுத்துக் கொண்டு அனுசரித்து நடக்க ஆரம்பித்தாள்.. எல்லோரும் உண்டது போக மிச்சத்தை சாப்பிட்டாள்..
வீட்டு மாப்பிள்ளையாய் இருந்த சடகோபன் மட்டும் சுகுமாரியிடம் கொஞ்சம் கனிவாய் நடந்து கொண்டான்..
கோமதி கர்பமானாள்.. உள்ளமெல்லாம் பூரித்துப் போக பர்வதம் தன் மகளை அலுங்காமல் குலுங்காமல் பார்த்துக் கொண்டாள்.. கோமதியை கவனிக்கும் பொறுப்பும் சுகுமாரியின் தலையில் விழுந்தது.. சின்னப் பெண் என்று பாராமல் அனைவரும் அவளை ஏவினர்..
ஒருபுறம் உடல் உளைய மறுபுறம் மனம் புழுங்க வாய் பேசாமல் ஜடம் போல் இருந்தாள்.. மகிழ்ச்சி என்பது மருந்துக்குக் கூட இல்லாமல் போனது.. அவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை குரு மூர்த்தி.. அவனுக்கு அவள் உடல் தேவைப்பட்டது அவ்வளவே.. அதுவுமின்றி அவனது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது.. அடிக்கடி இரவு வெளியில் சென்று வருவதும் , பல நாட்கள் இரவில் வராமலும் இருந்தான்..
சுகுமாரிக்கு கொஞ்சம் கொஞ்சம் அவன் நடத்தை மீது சந்தேகம் வர ஆரம்பித்தது.. நடுஇரவில் அவன் வரும் பொழுது அவன் மீது அடிக்கும் மல்லிகைப் பூ வாசமும் ஜவ்வாது வாசமும் அவன் தவறு செய்வதை ஊர்ஜிதப் படுத்தியது.. அவன் தீண்ட அருவருப்பாய் இருந்தது.. அதையும் மீறி அவனது அத்துமீறல் அவளை ரணமாக்கியது..
சில நாட்கள் செல்ல.. இரவில் அவனுடன் உறங்க பர்வதமோ , கோமதியோ விடுவதில்லை.. அறையின் வாயில் கதவிற்கு முன்னால் கோமதி படுத்துக் கொண்டு அவளை உள்ளே செல்ல தடையாக இருந்தாள்..
உள்ளுக்குள் கலவரம் மூண்டிருந்தது சுகுமாரிக்கு.. தன் கணவன் தன்னைவிட்டு போய்விடுவானோ என்ற பயம் அவளை அலைக்கழித்தது..
ஒருநாள் இரவு...
வழக்கம்போல அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு பின்னரவு அவள் அறைக்குள் செல்ல எண்ண அங்கு வாசலில் கோமதி படுத்துக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள்..
அவளை எழுப்ப மனமின்றி ஒரு ஓரமாக தாண்டிச் செல்ல , பர்வதத்தின் குரல் அவளை வெலவெலக்கச் செய்தது..
" அடியே.. கூறுகெட்டவளே.. அறிவில்ல.. கர்பவதிப் பொண்ண தாண்டறயே உனக்கு கூறு இருக்கா.. புள்ளைய வயத்துல சுமந்துண்டு இருக்கா எம்பொண்ணு , அவளத் தாண்டி உன் பாவத்த சேக்கறியா.. என் பரம்பரையே நாசமாப் போகனும்னு நெனைக்கறியா.. வந்து ஒரு வருஷம் ஆயுடுத்து.. உனக்குத்தான் வயத்துல ஒன்னும் மொலைக்கலே.. அதுக்காக எம்பொண்ணு வயத்துல வளர்ரத
அழிக்கப் பாக்கறியே படுபாவி.. நீ நன்னா இருப்பியா.. அப்படி என்னடி சல்லாபம் வேண்டி இருக்கு.. சீ... " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த , அனைவரும் எழுந்து கொண்டனர்.. சுற்றி எல்லோரும் அவளை அசிங்கமாகப் பார்க்க கூசியது சுகுமாரிக்கு.. அங்கேயே செத்துவிடமாட்டோமா எனத் தோன்றியது.. இதயத்தை கிழித்த கூரிய வார்த்தைகளை கேட்க இயலாமல் காதுகளை மூடிக் கொண்டாள். கண்களில் நீர் பொழிந்தது.
" என்னடி முழுச்சுண்டு இருக்கே.. எம்பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.. தப்பு பண்ணிட்டேன்னு.. ம்ம்ம்.." பர்வதம் கண்களை உருட்ட , சுயமரியாதை அத்தனையும் மனதில் புதைத்து கோமதியின் கால்களைப் பற்றினாள் சுகுமாரி.. கோமதிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்து போனது.. அன்றிலிருந்து சமையல்கட்டே படுக்கை அறை ஆனது சுகுமாரிக்கு..
நாட்கள் முட்களாய் நகர.. குரு மூர்த்தி வீட்டிற்கு வருவதை அவ்வப் பொழுது தவிர்த்திருந்தான்.. வந்தாலும் அவனது காம வேட்கையைத் தணித்துக் கொள்ள இவளை உபயோகப் படுத்திக் கொண்டான்.. சில நேரங்களில் பகலென்றும் பாராமல்..! அறையைவிட்டு வெளிவரும் சுகுமாரிக்கு அனைவரது கேளியான அசிங்கப் பார்வை ஊசியாய் குத்தியது.. கல்யாணமாகாத நாலு மச்சினன்களின் ஜாடையான கிண்டல் பேச்சும் , அவளை பார்த்தவிதமும் தலைகுனிய வைத்தது..
குருமூர்த்தியின் ஆரப்பாட்டம் அதிகமாக பொறுக்க இயலாமல் ஒரு நாள் பர்வதத்திடம் கூறினாள்.. " அ.. அம்மா.. அ.. அவர் போ... போக்கே.. சரி.. இல்ல.." தட்டுத் தடுமாற..
" யாரோட போக்க சொல்றே... நீ ரொம்ப நல்லவளோ.. யாரடி சொல்றே.. ம்ம்ம்.." பர்வதம் கர்ஜிக்க..
" அ... அவர் தான்.. வேளைகெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரார்.. அவர் மேலே.. எதேதோ வாசன வர்ரது... அவர.. கொஞ்சம்.. கண்டிச்சு..." சுகுமாரி நிறுத்தும் முன்னே எரிமலையானாள் பர்வதம்..
" என் பிள்ள சொக்கத் தங்கம்.. அவனையே குறை சொல்றியே உன் நாக்கு அழுகிப் போகாது.. ஆம்பளைனா நாலு எடத்துக்கு போய்ட்டு வரத்தான் செய்வான்.. பொண்டுசட்டி மாதிரி ஆத்லயா உட்காந்து இருப்பான்.. அவன் போக்க சொல்ல நீ யாருடி.. பெரிய கரைகண்டவளோ.. ஒரு புள்ளைய பெத்துகுடுக்க வழியக் காணும்.. அவன குறை சொல்றியோ.. இதுதான் முதலும் கடைசியும்.. இனியும் அவனப் பத்தி பேசினியோ.. உங்காத்துக்கு உன்ன துரத்திப்புடுவேன்.. சொன்னபடி நகையப் போட வக்கில்லே உங்கப்பனுக்கு.. வாய் மட்டும் நீளறது.. வாய மூடிண்டு போடி... வந்துட்டா.. " ஆங்காரியாய் கத்தினாள்..
அதற்குமேல் பேச வழியின்றி ஊமையானாள் சுகுமாரி..
கோமதிக்கு பெண்குழந்தை பிறந்தது.. அதற்கு சுந்தரவல்லி எனப் பெயர் வைத்து அமர்க்களமாக பண்டிகை வைத்துக் கொண்டாடினாள் பர்வதம்..
சுந்தரவல்லிக்கு இரண்டரை வயது நிறைய.. சூள் கொண்டாள் சுகுமாரி..
நாட்கள் நகர , வயிற்றின் சுமையும் ஏற அதனுடன் வேலைகளை செய்து வந்தாள்.. கவனிக்க ஆள் இல்லை.. அதே இளக்கார பார்வை , அதே மிஞ்சிய சாப்பாடு என நாட்கள் நகர்ந்தது.. பெற்றவர்களைக் காண வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. குருமூர்த்தியிடம் சொல்லியும் எந்த பிரயோஜமும் இல்லாமல் போனது..
பெண்கள் சவகாசம் மட்டுமின்றி வேறு சில கெட்ட பழக்கங்களும் அவனை சிதைக்க ஆரம்பித்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் நோய்வாய்ப் பட ஆரம்பித்தான்.. சுகுமாரியின் பெற்றோர் இரண்டு மூன்று முறை வந்து பார்த்து சென்ற போதும் அவர்களுடன் அவளை அனுப்ப சம்மதிக்கவில்லை பர்வதம்..
சீமந்தத்தை செலவு செய்து மண்டபத்தில் நடத்திவிட்டு அவளை அழைத்துப் போக கட்டளை இட்டாள் பர்வதம்.. வேறுவழியின்றி கடனை வாங்கி சுகுமாரிக்கு சீமந்தம் நடத்தி அவளை அழைத்துப் போனார்கள்..
அழகான ஆண்பிள்ளை பிறந்தது.. மகிழ்ந்து போயினர் சுப்ரமண்யமும் ருக்மணியும்.. பையன் வீட்டிற்கு செய்தி அனுப்பியும் யாருமே வரவில்லை.. தகுந்த சீரோடு மாப்பிள்ளைக்கு தங்க அணிகலனும் வைத்து பெண்ணையும் குழந்தையையும் கூட்டி வருமாறு மறுசெய்தி சொல்லிவிட்டாள் பர்வதம்.. குருமூர்த்தி கூட தன் குழந்தையை பார்க்க வரவில்லை..
சோர்ந்து போனாள் சுகுமாரி.. மேலும் மேலும் சுமையேற நொடிந்து போனார் சுப்ரமண்யம்.. இருந்த நிலத்தை விற்று அத்தனை சீரையும் செய்து சுகுமாரியை கொண்டு விட்டார்..
பச்சை உடம்புக்காரி எனப் பாராமல் அந்தக் கூட்டம் அவளை ஏவ ஆரம்பித்தது.. குழந்தையையும் கவனித்துக் கொண்டு மற்றவர்கள் தேவையையும் நிறைவேற்றி மாடுபோல வேலை செய்தாள் சுகுமாரி.. உடல் மெலிந்து போனது..!
ஒருவருடம் செல்ல , குருமூர்த்தி காசநோயில் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானான்.. நெஞ்சம் அடித்துக் கொண்டது சுகுமாரி.. கல்லானாலும் கணவன் என்ற ஸ்தானம் அவளை நிலைகுலையச் செய்தது.. குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகாத நிலையில் அவன் நோய்வாய்ப் பட்டதைக் கண்டு குழந்தையை தூற்ற ஆரம்பித்தாள் பர்வதம்..
" எந்த நேரத்ல பொறந்ததோ சனியன் அப்பன இப்டி படுக்கைல போட்டுடுத்தே.. அடியே குமாரி இந்த தரித்திரத்த அவன்கிட்ட விடாதே.. சீ.."
நாட்கள் நகர நகர குருமூர்த்தியின் நிலை கவலைக்கிடமானது.. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனின்றி ஒரு நாள் கண்களை மூடினான் குருமூர்த்தி..
நிற்கதியான சுகுமாரி கதறி அழுதாள்.. பிள்ளையைக் கண்டு அரற்றினாள்..
பெற்ற பிள்ளைய பறிகொடுத்த பர்வதத்திற்கு வெறி ஏறியது.. " இந்த பீடை எப்பப் பொறந்ததோ அப்பவே எம்பையனுக்கு சனி பிடுச்சுடுத்து.. நன்னா இருந்தவன் அல்பாய்சுல போய்ட்டானே.. வந்த ஒரு வருஷத்துல அப்பன முழுங்கிடுத்தே.. இது இனிமே என்வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது.. தூக்கிண்டு வெளில போ.. போய்த்தொலை.. தரித்திரம் தர்த்ரம்.." குழந்தை நடேசன் மீது தன் ஆத்திரம் அத்தனையும் கொட்டித் தீர்த்தாள் பர்வதம்.. கோமதியும் சேர்ந்து கொண்டு சுகுமாரியை கரித்துக் கொட்டினாள்..
" இவ வந்த வேளை தாம்மா.. எங்கண்ணனுக்கு இப்டி ஆய்டுத்து.. எப்போ காலடி எடுத்து வெச்சாளோ அப்பவே இந்தாத்து சந்தோஷம் போயிடுத்து.. இனி இவ இந்தாத்துக்குள்ள இருந்தா நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா போக வேண்டியதது தான்.. இவள ஆத்ல சேக்காதே.. அந்த மாட்டுத் தொழுவத்துல இருக்கச் சொல்லு... இவ திமிருக்கு அது தான் தண்டனை.. மாட்டோட மாடா கெடக்கட்டும்... அப்பத்தான் புத்தி வரும் இவளுக்கு.. "
அந்த சூழலில் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது எங்கு செல்வது என மனம் புழுங்கி தவித்துப் போனாள் சுகுமாரி.. ஈமக் காரியம் எல்லாம் முடிய ,மாட்டுத் தொழுவத்தில் ஓர் வேலைக்காரி போல் ஆனாள்..
கொள்ளையிலே பாத்திரம் கழுவ துணி துவைக்க மாட்டைக் கழுவஎன எல்லா வேலையையும் அவள் தலையில் கட்டினர்.. என்றாவது ஒரு நாள் தன்னையும் தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் மீந்து போன சாதத்தை சாப்பிட்டு வாழ்ந்தாள் சுகுமாரி..
நாட்கள் மெள்ள நகர , தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தான் நடேசன்.. கஷ்டத்திலும் அவனது பிஞ்சு மொழி அவளை மனம் குளிரச் செய்தது.. அவனது கள்ளச் சிரிப்பில் கரைந்து போனாள்.. இப்படியே சில நாள் செல்ல..
அன்று...
வேலையில் மூழ்கி இருந்த சுகுமாரி கவனிக்காத பொழுது நடேசன் தத்தி தத்தி நடந்து வீட்டின் உள்ளே சென்றான்.. அங்கு சுந்தரவல்லி விளையாட்டாய் அவனைக் கொஞ்ச.... அவ்வளவே...
ஆவேசமாக வெளியில் வந்தாள் கோமதி..
" ஏன்டி.. உனக்கு அவ்வளவு திமிராப் போயிடுத்தா.. உன் குழந்தைய உள்ள அனுப்ச்சு ஒறவு கொண்டாடப் பாக்கறியா.. அப்படியே நீயும் ஒட்டிக்கலாம்னு.. அந்த சனியன் எங்க எல்லாரோட உயிரையும் எடுத்துண்டு போறதுக்கா.. எம்பொண்ணு சின்ன குட்டின்னு அவளோ ஸ்நேகம் பண்ண வெச்சு சாதுச்சிடலாம்னு நெனப்போ.. அம்மா.. இங்க வா... " அவள் கத்திய கத்தில் வீடே அங்கு திரண்டது..
பர்வதம் தன் பங்கிற்கு சத்தமிட.. அதற்கு மேல் பொறுக்காத சுகுமாரி முதன் முறையாக எதிர்த்து பேசினாள்..
" அப்படி என்ன என் குழந்தை பண்ணிடுத்து.. எதோ தெரியாம உள்ள வந்துட்டான்.. நான் கவனிக்கலை.. அவன் உன் அண்ணன் பையன் தானே.. அவனுக்கும் இந்தாத்ல உரிமை உண்டு தானே.. " சுகுமாரி படபடவென பேச வெறித்தாள் கோமதி..
" பாத்தியாம்மா இவ திமிர.. உரிமை உண்டாமே.. அந்த குழந்தைய வெச்சு சொத்துல பங்கு வாங்கிக்கலாம்னு திட்டம் போட்ருக்கா.. எவ்ளோ நெஞ்சழுத்தம் பாரு.." தன் நந்துருணித் தனத்தை ஆரம்பித்தாள் கோமதி.. கண்கள் சிவந்தாள் பர்வதம்..
" புள்ளையே போய்ட்டான்.. அவன் பெத்தது இங்கெதுக்கு.. பங்கு போட நீயாருடி.. பிச்சக்கார குடும்பத்துல பொறந்துட்டு எஞ்சொத்த ஏப்பம் விட பாக்கறியா... மொதல்ல உன் புள்ளைய தூக்கிண்டு இங்கேத்து வெளிய போடி.. பாவம் பாத்து சோத்தப் போட்டா எஞ்சோத்துலயே கைய வெக்கறியா வீணாப் போனவளே... டி கோமதி அவ பெத்தத தூக்கி வெளில வீசுடி.. தூக்கிண்டு போட்டும்.." பர்வதம் கத்த உள்ளே ஓடினாள் கோமதி...
" ஏய்.. நில்லுடி.. எங்குழந்தை மேல கைய வெச்சே.. அப்பறம் உன் கை இருக்காது.... "உக்ரமானாள் சுகுமாரி.
அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து வெலவெலத்துப் போயினர்..
வேகமாக உள்ளே நுழைந்து நடேசனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கம்பீரமாக வெளியில் வந்தாள் சுகுமாரி..
"உங்கள மாதிரி கேடுகெட்டவாகிட்ட இருந்தா என் குழந்தையும் கெட்டுப் போயிடும்.. என் ஆத்துக்காரர் வாழ்ந்த இடத்துல இருக்கனும் , சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னுதான் , பிச்சைகாரி மாதிரி நீங்கள்ளாம் நடத்தினப்பையும் இத்தன நாள் வாயப் பொத்திண்டு இருந்தேன்.. உங்க சொத்துபத்துக்காக இல்லே.. மனசு மாறி என்னையும் குழந்தையையும் ஏத்துப்பேள்னு நம்பினேன்.. எப்போ என் குழந்தையையே தூக்கி எறியத் துணிஞ்சேளே இனிமே உங்க சொந்தமும் வேண்டாம் பந்தமும் வேண்டாம்.. என் குழந்தைய ராஜாமாதிரி வளக்க நேக்கு தெரியும்.. எப்பாடு பட்டாலும் என் குழந்தைய வளத்து காமிப்பேன்.. அந்த வைராக்யம் நேக்கு இருக்கு.. இனிமே உங்க யாரு முகத்லையும் முழிக்க மாட்டேன்.. இது சத்யம்.. உறவு அத்து போயாச்சு.. இனிமே என் குழந்தை வாழ்க்கைல கேடு செய்யனும் நெனச்சேள்
இந்த சுகுமாரி ஆங்காரி ஆயிடுவேன் ஜாக்ரதை.." மூச்சிறைக்கக் கூறிவிட்டு அவர்கள் முகத்தில் விழிக்காமல் நடேசனை தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் சுகுமாரி..!
பேயறைந்தது போல் அனைவரும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்..!
பவித்ராவும் பங்கஜமும் அதிர்ச்சி விலகாது பார்த்துக் கொண்டிருக்க , நடேசன் கண்களில் நீர் மெள்ள வழிந்து ஓடியது.. சுகுமாரியின் கால்களை கட்டிக் கொண்டார்..
" அம்மா.. நீ.. நீ இத்தன கொடுமையைத் தாங்கிண்டு என்ன வளத்தியா.. ஒரு... ஒரு வார்த்தை கூட இது வர சொன்னதில்லையே... " அவர் கலங்க அவரது தலையை மென்மையாக வருடினாள் சுகுமாரி..
" எல்லாம் உனக்காகத்தான் நடேசா.. என் குழந்தைய யார் எது சொன்னாலும் என்னால தாங்க முடியாது.. மறுபடியும் அதே குடும்பத்துல எப்டி என் பேத்திய குடுப்பேன்.. சொல்லு.."
பாட்டி கேட்க.. அத்தனைபேரிடத்திலும் அமைதி மட்டுமே பதிலாக வந்தது..!!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/