Savitha Nagaraj
Saha Writer
- Messages
- 8
- Reaction score
- 0
- Points
- 1
அத்தியாயம்-6
ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த ஸ்ருதி, சிறிது தொலைவிலேயே சாலை ஓரத்தில் நிற்கும் விஜய்யை கண்டுவிட "ஆத்தி... இன்னைக்கு அந்த பைக்கு என்ன பிரச்னையோ தெரியலயே, எதுவா இருந்தா நமக்கு என்ன, நாம அப்படியே கவனிக்காத மாதிரி போய்டலாம்" என நினைத்தவாறு சாலையில் பார்வை பாதிக்க, அவள் எதிர்பாராதவாறு அவளது வண்டி வரும் திசை முன் லிப்ட் என்றபடி தன் வலது கை கட்டை விரல் உயர்த்தி நின்றிருந்தான் விஜய்.
இதற்கு முன் இரண்டு முறையும் அவளாக சென்று அவனுக்கு உதவியிருக்க இன்று, அவனாகவே வந்து அவளிடம் உதவி கேட்டு நிற்பான் என சிறிதும் எண்ணவில்லை ஸ்ருதி. யோசனை முடியும் முன்னரே அவனை, அவளது ஸ்கூட்டி நெருங்கி இருக்க, இன்று அவனுக்கு லிப்ட் குடுக்கமால் தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்து வண்டியை நிறுத்தினாள்.
"நீங்களா.....நான் உங்கள கவனிக்கல. எங்க இங்க நின்னுட்டு இருக்கிங்க?" என்றாள் அவனை அப்போது தான் பார்த்ததை போல !
அடியே.. நானே பல வேஷம் போடுறவன், என்கிட்டயே நீ பகல் வேஷம் போடுறியா? பத்தடி தூரத்துலயே என்ன பாத்துட்டு, நைஸ்சா பாக்காத மாதிரி நீ போறத கவனிச்சிட்டு தான் நானே லிப்ட் கேட்டு உன் வண்டி முன்னால வந்து நின்னேன் என அவன் மைன்ட் வாய்ஸ் கொடுக்க, வெளியே சிரித்த முகத்துடன் "ஹ்ம்ம்.. பரவாயில்ல ஸ்ருதி, பைக்ல பெட்ரோல் காலி அதான் நின்னுட்டு இருக்கேன். கொஞ்சம் லிப்ட் தரீங்களா?"
"அது... என்னோட பிரண்ட் என் வீட்டுக்கு வந்து எனக்காக வெயிட் பண்றா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும், அதுனால என்னால இன்னைக்கு உங்களுக்கு லிப்ட் தர முடியாதே" என்று இன்ஸ்டன்ட்டாக ஒரு பொய்யை உரைத்தாள் ஸ்ருதி.
"ஓ... பரவாயில்லை ஸ்ருதி. நீங்க உங்க வீட்டு கிட்டயே என்னை இறக்கி விடுங்க நான் அங்கிருந்து நடந்து போயிடுறேன்" என்று அவன் கூற, இதற்கு மேலும் அவளால் மறுக்க முடியவில்லை.
இருவரும் மெளனமாக பயணத்தை தொடர "இங்க எவ்ளோ நேரமா நின்னுட்டு இருக்கிங்க?" என்று மௌனைத்தை கலைத்து ஸ்ருதி விஜயிடம் வினவினாள்.
இப்போ எதுக்கு இந்த கேள்வி என்ற யோசனையுடனே "ஒரு கால் மணி நேரமா நின்னுருப்பேன் ஸ்ருதி" என பதிலளித்தான் விஜய்.
"அவ்ளோ நேரமாவா! அது வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் கூடவா வரலை? இத்தனை நேரம் நின்னதுக்கு கொஞ்சம் தூரம் நடந்துருந்தா பஸ் ஸ்டாப் வந்துருக்கும் நீங்க பிஸ்லயே போயிருக்கலாமே" என்று அவள் சந்தேகத்தை கேட்க
நல்லவேலை அவன் என்ன பதில் சொல்லலாம் என யோசித்தவாறு முழித்ததை, அவள் கண்களுக்கு தெரியாமல் காத்தது அந்த கருப்பு நிற கூலர்.
அவனின் பதிலுக்காக அவள் சைடு மிர்ரரில் அவனது முகம் பார்த்தவாறு காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளின் முதல் கேள்வியை ஒதுக்கிவிட்டு அடுத்ததுக்கு மட்டும் பதில் உரைத்தான் "நீங்க கேக்குறதும் சரி தான் ஸ்ருதி, உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு கைல காசு இல்ல, கிளம்புற அவசரத்துல பர்ஸ்சை வீட்லயே மறந்து வெச்சிட்டேன் அதான் பஸ்ல போகல" என பதில் உரைத்தவன், அடுத்து அவள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போக அதில் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
ஸ்ருதியின் வீடு இருக்கும் தெருவில் அவர்கள் நுழைய "இங்கயே நிறுத்துங்க ஸ்ருதி நான் இறங்கிடுறேன்" என்ற அவனது குரலில் வண்டியை நிறுத்தி அவனை இறக்கிவிட்டவள், அவனிடம் விடைபெற்று வீடு சென்றாள்.
வீடு வந்தவள் அசதியில் அப்படியே ஹாலில் இருந்த இருக்கையில் அமர, அவளின் அன்னை தனலட்சுமி கிச்சனில் நின்றவாறே, ஹாலில் பிரணவுடன் அமர்ந்திருக்கும் சாருவை கண்களால் ஸ்ருதிக்கு சைகை காட்ட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் அதன் அர்த்தம் விளங்கிட எழுந்து அன்னையிடம் சென்றாள் "மா... மறந்துட்டேன் மா" என்றாள் வருத்தத்துடன்.
"மறந்துட்டியா? என்ன டி, அண்ணா அண்ணி கல்யாண நாளுக்கு சர்ப்ரைஸ்சா கேக் வெட்டலாம் நான் ஆர்டர் குடுத்து சாயங்காலம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்போ மறந்துட்டேன் சொல்ற"
"ஆர்டர் எல்லாம் காலைலயே கொடுத்தாச்சு ம்மா... அதை வாங்கிட்டு வர தான் மறந்துட்டேன், இப்போ என்ன அடுத்த தெருல இருக்க கடைல தான் ஆர்டர் பண்ணிருக்கேன், ரெண்டே நிமிஷம் தான் போய் வாங்கிட்டு வரேன்" என்றவாறு வீட்டிலிருந்து கிளம்பினாள் ஸ்ருதி.
"அண்ணா சீக்கிரம் சில்லறைய தாங்க ண்ணா..." என்று அந்த கடைக்காரரிடம் கேட்டு கொண்டிருந்தான் விஜய்.
"அட இரு தம்பி ரெண்டு முட்டை பப்ஸ் வாங்கிட்டு இருநூறு ரூபா குடுத்தா நானும் சில்லறைக்கு எங்க போவேன்" என்றார் கடைக்காரன் கடுப்புடன்.
"என்ன ண்ணா... இந்த ஏரியாலயே உங்க கடை தான் பெரியகடை, அதுவும் இல்லாம உங்க கடைக்கு தான் கஸ்டமர் ஜாஸ்தியா வருவாங்க, உங்க கிட்டயே சில்லறை இல்லனு சொன்னா எப்படி ண்ணா..." என்று சில பல ஐஸ்சுகளை வைத்து சில்லறை வாங்கியவன், அதனை சரிபார்த்தவாறு திரும்ப அவன் முன்னால் நின்றிருந்தாள் ஸ்ருதி.
"டேய் விஜய்...பைக் எடுத்துட்டு வந்துட்டேன் வா டா போலாம்..." விஜய்,ஸ்ருதி இருவரும் குரல் வந்த திசை நோக்க அங்கே வினோத், விஜயின் பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.
"வினோத்து... பைக் பெட்ரோல் போட்டு எடுத்துட்டு வந்துட்டியா டா"
"நீ எப்போ டா பெர்டோல் போட சொன்ன? பைக் அங்க நிறுத்தி இருக்கேன் அதை எடுத்துட்டு வானு மட்டும் தானே சொன்ன" என்று பைக்ல் அமர்ந்தவாறே வினோத் கத்த, அது தெளிவாக ஸ்ருதியின் செவியை சென்றடைந்தது.
சுத்தம், இப்போ இந்த விளக்கம் ரொம்ப அவசியம். போ டா இப்போ போய் நிம்மதியா தூங்கு என வினோத்துக்கு மனதில் அர்ச்சனை செய்தவன் "ஸ்ருதி அது... அவன்..." என பேச வந்தவனை கடந்து விறுவிறுவென சென்றவள், தான் ஆர்டர் செய்த கேக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள் ஸ்ருதி.
வீடு வந்தவளுக்கு விஜயின் செயல்களில் ஏதோ சரி இல்லை என்பது விளங்க, இனிமே அவன்கிட்ட ஒதுங்கியே இருக்கனும் என முடிவெடுத்தவாறு தான் அண்ணன் அண்ணியின் திருமணநாள் கொண்டாதத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.
மறுநாள் சித்தார்த்தின் அலுவலகத்தில் அமர்ந்து, நேற்றைய தினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிகளின் ஆர்டர் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தவள், உள்ளே யாரோ வரும் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்க்க, அவளது எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் விஜய்.
நேற்று அவன் தன்னிடம் பொய் சொல்லி நாடகமாடிவிட்டு இன்று ஏதும் நடவாதது போல், எந்த ஒரு சலனமும் இன்றி தன்முன் அமர்ந்திருந்தவனை காண்கையில் அப்படி ஒரு கோபம் ஸ்ருதிக்கு.
"சித்தார்த் இல்லையா ஸ்ருதி?"
"இல்ல வெளிய போயிருக்காங்க, நீங்க போய்ட்டு அண்ணா வந்த அப்பறம் வாங்க" என்றாள் பட்டென.
"பரவாயில்ல நான் அவன் வர வரைக்கு வெயிட் பண்றேன்"
"உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? அதான் அண்ணா இல்ல சொல்றேன்ல கிளம்புங்க" என்று ஸ்ருதி குரல் உயர்த்திவிட்டு, மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தியவளின் காதுககுளுக்கு இருக்கையை நகர்த்தும் சத்தம் கேட்டதில், அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதை உணர்ந்தாள் ஸ்ருதி.
மெஸேஜ் டோன் கேட்க, மேசையில் இருக்கும் போன்னை எடுப்பதிற்காக தலை உயர்த்தியவளுக்கு, இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தபடி அவளையே பார்த்துகொண்டிதுந்த விஜய் காட்சியளித்தான் "சீட்ல இருந்து எழுந்த சவுண்ட் கேட்டுச்சே, அப்போ அவன் எழுந்து போகாம நல்லா வசதியா சாஞ்சிக்க தான் சீட்டை நகரத்தினான?" என்றெண்ணியவள், தான் பார்த்துவிட்ட பிறகும் பார்வைமாற்றாமல் அவன் தன்னையே பார்த்து கொண்டிருக்க அதில் அவளின் கோபம் எல்லை கடந்தது.
"ஏய்.... நீ முதல்ல எந்திரி, நேத்து என்ன டா னா காசு இல்லனு பொய் சொல்லி என்கிட்ட லிப்ட் கேக்குற, இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து இப்படி என்னயே வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, என் அண்ணன் பிரண்ட்னு உன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசினா நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குற. என்ன என்னை மடக்க ட்ரை பன்றியா நீ" என மரியாதை காற்றில் பறக்க விஜய்யை வார்த்தைகளால் விளாசிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
"என்ன ஸ்ருதி என்னென்னமோ பேசுற, நான் எப்போ உன்ன மடக்க ட்ரை பண்ணேன் நீ சொல்றது எதும் புரியலையே" என்றான் விஜய் அநியாயத்திற்கு அப்பாவியாய்.
"ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காத, சரி நான் டைரக்டாவே கேக்குறேன் நீ என்ன லவ் பன்றியா?" என அவள் வார்த்தையை முடிக்கவில்லை "அய்யயோ, என்ன ஸ்ருதி சொல்றிங்க நானா... உங்களையா..." கிட்டத்தட்ட அலறியவன் "என் பிரண்ட் சித்தார்த் தங்கச்சி தானேனு நேத்து ஏதோ விளையாட்டா பண்ணினேன், இப்போ நீங்க என்ன திட்டினதும் நான் வீட்டுக்கு போறதா சித்தார்த்க்கு மெசேஜ் பண்ணேன் அவன் தான் நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன் நீ அங்கேயே இருனு சொன்னான் அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன், போன் பாத்து போர் அடிக்குதுனு உங்க பின்னால இருக்க ஜன்னல் வழியா வெளிய பாத்துட்டு இருந்தேன் அதை நீங்க உங்கள பாக்குறதா நினைச்சி இப்படி எல்லாம் பேசிட்டிங்களே ஸ்ருதி, எவ்ளோ வருஷமா என்ன உங்களுக்கு தெரியும் என்னை போய் நீங்க இந்தளவுக்கு நினைப்பிங்கனு நான் எதிர்பாக்கல" என்றவன் விரைவாக அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும் அவனை பற்றியே சிந்தனை ஸ்ருதிக்கு. இத்தனை வருடத்தில் விஜய் அவளிடம் நேரில் பேசியது கூட இல்லை. அன்று அவளாக சென்று பேசிய பிறகே அவனும் பேச ஆரம்பித்தான். இதற்கு முன் சித்தார்த் போன்னை வீட்டில் விட்டு வெளியே சென்ற சமயங்களில் விஜய் அழைக்க, "அண்ணா வெளிய போயிருக்காங்க" எனும் ஸ்ருதி அவனிடமிருந்து "ம்ம்ம்.. சரிங்க" என்று மட்டுமே பதிலாய் வரும். சித்தார்த் அலுவலகத்தில் இருக்கும் போதும் அவன் அல்லாமல் ஸ்ருதி தனியே இருக்கும் சமயங்களில் வரும்போதும் கூட விஜய் அவளிடம் பேச முயற்சித்ததில்லை.
விஜயின் இரண்டு மூன்று விளையாட்டான செயல்களை சித்தார்த் வாயிலாக கேள்விப்பட்டது ஸ்ருதியின் நினைவில் வர, குழம்பியவள், பின் நாம் தான் அவனை தவறாக நினைத்துவிட்டோம் என்ன வருந்தியவள் அவனிடம் மன்னிப்பும் கேட்ட முடிவெடுத்தாள்.
முடிவெடுத்ததும் போன்னில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு விடுவோமா என எண்ணினாள், அவனின் போன் நம்பர் அவளிடம் உள்ளதுதான். தங்களின் ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் ஒப்புக்கொள்ளப்படும் திருமண நிகழ்வுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே தேதியில் நடைபெறும் வேளையில் சித்தார்த்துக்கு உதவியாக வருவான் விஜய். அவன் கவனிக்கும் கணக்கு வழக்கின் விபரங்களை ஸ்ருதிக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் வாயிலாக அனுப்பி விடுவான். அப்படி ஒரு தருணத்தில் தான் அவனின் நம்பர் அவளது போன் காண்டாக்டில் சேமிக்கப்பட்டது. முதலில் போன் அழைப்பில் மன்னிப்பு வேண்ட நினைத்தவள், பின் தான் பேசிய அதிகப்படியான பேச்சிக்கு நேரில் தான் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நினைத்து அவனை நேரில் காணும் தருணத்திற்காக காத்திருந்தாள்.
அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல், அடுத்த நாளே ஸ்ருதியின் முன் வந்து நின்றான் விஜய். சித்தார்த்தை காண வந்திருப்பான் போலும், ஸ்ருதி மன்னிப்பு கேட்க முடிவெடுத்துவிட்டாள் தான், ஆனால் நேற்றைய பேச்சுக்கள் அவளில் நினைவில் எழ, அதில் திணறியவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் "சாரி" என்றாள் வருந்தும் குரலில்.
"எதுக்கு ஸ்ருதி சாரி? ஓ... நேத்து நடந்த விஷயத்துக்கா... அதுக்கு நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும், உன்மனசுல அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி நான் தான் நடந்துக்கிட்டேன்" என்றவன் மேலும் தொடர்ந்தான், "நான் உன்ன சித்தார்த் தங்கச்சியா தான் பாத்தேன், அதனால தான் உன்கிட்ட அப்படி விளையாடினேன், ஆனா என்ன பத்தி உன் மனசுல அப்படி ஒரு ஆசை வரும்னு நான் எதிர்பாக்கல" என்றவனின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.
"இல்ல இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க" என்றாள் அவனுக்கு விளக்கிவிடும் வேகத்தில்.
"ஆமா ஸ்ருதி நான் உன்ன புரிஞ்சிக்கல தான், இல்லனா நீ உன்மனசுல உள்ள ஆசைய என்கிட்ட மறைமுகமா நேத்து சொன்னப்போ நான் கோவப்பட்டு போயிருப்பேனா" என்றவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்தவள், பின் அவன் தன்னிடம் முன்பு சொன்னது போல் ஏதேனும் விளையாடுகிறானா என சந்தேகம் எழ அதை அவனிடமே கேக்டவும் செய்தாள்.
"நீங்க என்கிட்ட அன்னைக்கு போல விளையாடுறிங்க தானே?" என்றவளை புன்சிரிப்புடன் ஏறிட்டவன், இல்லை என்பதை போல் தலையசைத்தான்.
"நான் ஏன் ஸ்ருதி விளையாடப்போறேன், இன்பேக்ட் நீ என்ன லவ் பன்றியா அப்படினு என்கிட்ட கேக்குறவரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை" என ஒரு அண்டப் புளுகை புளுகியவன், பைனல் டச்சாக
"உனக்கும் என்மேல ஒரு அது இருக்கு
எனக்கும் உன்மேல ஒரு இது இருக்கு அப்போ அது லவ் தானே ஸ்ருதி !!!" என வி.டி.வி சிம்புவை போல் டைலாக் பேசியவனை கண்ட அவளது விழிகள் வட்டமாய் விரிந்தன.
ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்த ஸ்ருதி, சிறிது தொலைவிலேயே சாலை ஓரத்தில் நிற்கும் விஜய்யை கண்டுவிட "ஆத்தி... இன்னைக்கு அந்த பைக்கு என்ன பிரச்னையோ தெரியலயே, எதுவா இருந்தா நமக்கு என்ன, நாம அப்படியே கவனிக்காத மாதிரி போய்டலாம்" என நினைத்தவாறு சாலையில் பார்வை பாதிக்க, அவள் எதிர்பாராதவாறு அவளது வண்டி வரும் திசை முன் லிப்ட் என்றபடி தன் வலது கை கட்டை விரல் உயர்த்தி நின்றிருந்தான் விஜய்.
இதற்கு முன் இரண்டு முறையும் அவளாக சென்று அவனுக்கு உதவியிருக்க இன்று, அவனாகவே வந்து அவளிடம் உதவி கேட்டு நிற்பான் என சிறிதும் எண்ணவில்லை ஸ்ருதி. யோசனை முடியும் முன்னரே அவனை, அவளது ஸ்கூட்டி நெருங்கி இருக்க, இன்று அவனுக்கு லிப்ட் குடுக்கமால் தவிர்க்க வேண்டும் என முடிவெடுத்து வண்டியை நிறுத்தினாள்.
"நீங்களா.....நான் உங்கள கவனிக்கல. எங்க இங்க நின்னுட்டு இருக்கிங்க?" என்றாள் அவனை அப்போது தான் பார்த்ததை போல !
அடியே.. நானே பல வேஷம் போடுறவன், என்கிட்டயே நீ பகல் வேஷம் போடுறியா? பத்தடி தூரத்துலயே என்ன பாத்துட்டு, நைஸ்சா பாக்காத மாதிரி நீ போறத கவனிச்சிட்டு தான் நானே லிப்ட் கேட்டு உன் வண்டி முன்னால வந்து நின்னேன் என அவன் மைன்ட் வாய்ஸ் கொடுக்க, வெளியே சிரித்த முகத்துடன் "ஹ்ம்ம்.. பரவாயில்ல ஸ்ருதி, பைக்ல பெட்ரோல் காலி அதான் நின்னுட்டு இருக்கேன். கொஞ்சம் லிப்ட் தரீங்களா?"
"அது... என்னோட பிரண்ட் என் வீட்டுக்கு வந்து எனக்காக வெயிட் பண்றா, நான் சீக்கிரமா வீட்டுக்கு போகணும், அதுனால என்னால இன்னைக்கு உங்களுக்கு லிப்ட் தர முடியாதே" என்று இன்ஸ்டன்ட்டாக ஒரு பொய்யை உரைத்தாள் ஸ்ருதி.
"ஓ... பரவாயில்லை ஸ்ருதி. நீங்க உங்க வீட்டு கிட்டயே என்னை இறக்கி விடுங்க நான் அங்கிருந்து நடந்து போயிடுறேன்" என்று அவன் கூற, இதற்கு மேலும் அவளால் மறுக்க முடியவில்லை.
இருவரும் மெளனமாக பயணத்தை தொடர "இங்க எவ்ளோ நேரமா நின்னுட்டு இருக்கிங்க?" என்று மௌனைத்தை கலைத்து ஸ்ருதி விஜயிடம் வினவினாள்.
இப்போ எதுக்கு இந்த கேள்வி என்ற யோசனையுடனே "ஒரு கால் மணி நேரமா நின்னுருப்பேன் ஸ்ருதி" என பதிலளித்தான் விஜய்.
"அவ்ளோ நேரமாவா! அது வரைக்கும் உங்களுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தர் கூடவா வரலை? இத்தனை நேரம் நின்னதுக்கு கொஞ்சம் தூரம் நடந்துருந்தா பஸ் ஸ்டாப் வந்துருக்கும் நீங்க பிஸ்லயே போயிருக்கலாமே" என்று அவள் சந்தேகத்தை கேட்க
நல்லவேலை அவன் என்ன பதில் சொல்லலாம் என யோசித்தவாறு முழித்ததை, அவள் கண்களுக்கு தெரியாமல் காத்தது அந்த கருப்பு நிற கூலர்.
அவனின் பதிலுக்காக அவள் சைடு மிர்ரரில் அவனது முகம் பார்த்தவாறு காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளின் முதல் கேள்வியை ஒதுக்கிவிட்டு அடுத்ததுக்கு மட்டும் பதில் உரைத்தான் "நீங்க கேக்குறதும் சரி தான் ஸ்ருதி, உங்ககிட்ட மறைக்க என்ன இருக்கு கைல காசு இல்ல, கிளம்புற அவசரத்துல பர்ஸ்சை வீட்லயே மறந்து வெச்சிட்டேன் அதான் பஸ்ல போகல" என பதில் உரைத்தவன், அடுத்து அவள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போக அதில் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
ஸ்ருதியின் வீடு இருக்கும் தெருவில் அவர்கள் நுழைய "இங்கயே நிறுத்துங்க ஸ்ருதி நான் இறங்கிடுறேன்" என்ற அவனது குரலில் வண்டியை நிறுத்தி அவனை இறக்கிவிட்டவள், அவனிடம் விடைபெற்று வீடு சென்றாள்.
வீடு வந்தவள் அசதியில் அப்படியே ஹாலில் இருந்த இருக்கையில் அமர, அவளின் அன்னை தனலட்சுமி கிச்சனில் நின்றவாறே, ஹாலில் பிரணவுடன் அமர்ந்திருக்கும் சாருவை கண்களால் ஸ்ருதிக்கு சைகை காட்ட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் அதன் அர்த்தம் விளங்கிட எழுந்து அன்னையிடம் சென்றாள் "மா... மறந்துட்டேன் மா" என்றாள் வருத்தத்துடன்.
"மறந்துட்டியா? என்ன டி, அண்ணா அண்ணி கல்யாண நாளுக்கு சர்ப்ரைஸ்சா கேக் வெட்டலாம் நான் ஆர்டர் குடுத்து சாயங்காலம் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு இப்போ மறந்துட்டேன் சொல்ற"
"ஆர்டர் எல்லாம் காலைலயே கொடுத்தாச்சு ம்மா... அதை வாங்கிட்டு வர தான் மறந்துட்டேன், இப்போ என்ன அடுத்த தெருல இருக்க கடைல தான் ஆர்டர் பண்ணிருக்கேன், ரெண்டே நிமிஷம் தான் போய் வாங்கிட்டு வரேன்" என்றவாறு வீட்டிலிருந்து கிளம்பினாள் ஸ்ருதி.
"அண்ணா சீக்கிரம் சில்லறைய தாங்க ண்ணா..." என்று அந்த கடைக்காரரிடம் கேட்டு கொண்டிருந்தான் விஜய்.
"அட இரு தம்பி ரெண்டு முட்டை பப்ஸ் வாங்கிட்டு இருநூறு ரூபா குடுத்தா நானும் சில்லறைக்கு எங்க போவேன்" என்றார் கடைக்காரன் கடுப்புடன்.
"என்ன ண்ணா... இந்த ஏரியாலயே உங்க கடை தான் பெரியகடை, அதுவும் இல்லாம உங்க கடைக்கு தான் கஸ்டமர் ஜாஸ்தியா வருவாங்க, உங்க கிட்டயே சில்லறை இல்லனு சொன்னா எப்படி ண்ணா..." என்று சில பல ஐஸ்சுகளை வைத்து சில்லறை வாங்கியவன், அதனை சரிபார்த்தவாறு திரும்ப அவன் முன்னால் நின்றிருந்தாள் ஸ்ருதி.
"டேய் விஜய்...பைக் எடுத்துட்டு வந்துட்டேன் வா டா போலாம்..." விஜய்,ஸ்ருதி இருவரும் குரல் வந்த திசை நோக்க அங்கே வினோத், விஜயின் பைக்கில் அமர்ந்து கொண்டிருந்தான்.
"வினோத்து... பைக் பெட்ரோல் போட்டு எடுத்துட்டு வந்துட்டியா டா"
"நீ எப்போ டா பெர்டோல் போட சொன்ன? பைக் அங்க நிறுத்தி இருக்கேன் அதை எடுத்துட்டு வானு மட்டும் தானே சொன்ன" என்று பைக்ல் அமர்ந்தவாறே வினோத் கத்த, அது தெளிவாக ஸ்ருதியின் செவியை சென்றடைந்தது.
சுத்தம், இப்போ இந்த விளக்கம் ரொம்ப அவசியம். போ டா இப்போ போய் நிம்மதியா தூங்கு என வினோத்துக்கு மனதில் அர்ச்சனை செய்தவன் "ஸ்ருதி அது... அவன்..." என பேச வந்தவனை கடந்து விறுவிறுவென சென்றவள், தான் ஆர்டர் செய்த கேக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றாள் ஸ்ருதி.
வீடு வந்தவளுக்கு விஜயின் செயல்களில் ஏதோ சரி இல்லை என்பது விளங்க, இனிமே அவன்கிட்ட ஒதுங்கியே இருக்கனும் என முடிவெடுத்தவாறு தான் அண்ணன் அண்ணியின் திருமணநாள் கொண்டாதத்தில் தன்னை மூழ்கடித்துக்கொண்டாள்.
மறுநாள் சித்தார்த்தின் அலுவலகத்தில் அமர்ந்து, நேற்றைய தினத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிகளின் ஆர்டர் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தவள், உள்ளே யாரோ வரும் அரவம் கேட்கவே நிமிர்ந்து பார்க்க, அவளது எதிர் இருக்கையில் வந்தமர்ந்தான் விஜய்.
நேற்று அவன் தன்னிடம் பொய் சொல்லி நாடகமாடிவிட்டு இன்று ஏதும் நடவாதது போல், எந்த ஒரு சலனமும் இன்றி தன்முன் அமர்ந்திருந்தவனை காண்கையில் அப்படி ஒரு கோபம் ஸ்ருதிக்கு.
"சித்தார்த் இல்லையா ஸ்ருதி?"
"இல்ல வெளிய போயிருக்காங்க, நீங்க போய்ட்டு அண்ணா வந்த அப்பறம் வாங்க" என்றாள் பட்டென.
"பரவாயில்ல நான் அவன் வர வரைக்கு வெயிட் பண்றேன்"
"உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா? அதான் அண்ணா இல்ல சொல்றேன்ல கிளம்புங்க" என்று ஸ்ருதி குரல் உயர்த்திவிட்டு, மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்தியவளின் காதுககுளுக்கு இருக்கையை நகர்த்தும் சத்தம் கேட்டதில், அவன் வெளியே சென்றுவிட்டான் என்பதை உணர்ந்தாள் ஸ்ருதி.
மெஸேஜ் டோன் கேட்க, மேசையில் இருக்கும் போன்னை எடுப்பதிற்காக தலை உயர்த்தியவளுக்கு, இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்திருந்தபடி அவளையே பார்த்துகொண்டிதுந்த விஜய் காட்சியளித்தான் "சீட்ல இருந்து எழுந்த சவுண்ட் கேட்டுச்சே, அப்போ அவன் எழுந்து போகாம நல்லா வசதியா சாஞ்சிக்க தான் சீட்டை நகரத்தினான?" என்றெண்ணியவள், தான் பார்த்துவிட்ட பிறகும் பார்வைமாற்றாமல் அவன் தன்னையே பார்த்து கொண்டிருக்க அதில் அவளின் கோபம் எல்லை கடந்தது.
"ஏய்.... நீ முதல்ல எந்திரி, நேத்து என்ன டா னா காசு இல்லனு பொய் சொல்லி என்கிட்ட லிப்ட் கேக்குற, இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து இப்படி என்னயே வெறிச்சி வெறிச்சி பாத்துட்டு இருக்க என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, என் அண்ணன் பிரண்ட்னு உன்கிட்ட கொஞ்சம் நல்லா பேசினா நீ என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்குற. என்ன என்னை மடக்க ட்ரை பன்றியா நீ" என மரியாதை காற்றில் பறக்க விஜய்யை வார்த்தைகளால் விளாசிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி.
"என்ன ஸ்ருதி என்னென்னமோ பேசுற, நான் எப்போ உன்ன மடக்க ட்ரை பண்ணேன் நீ சொல்றது எதும் புரியலையே" என்றான் விஜய் அநியாயத்திற்கு அப்பாவியாய்.
"ஒன்னும் புரியாத மாதிரி நடிக்காத, சரி நான் டைரக்டாவே கேக்குறேன் நீ என்ன லவ் பன்றியா?" என அவள் வார்த்தையை முடிக்கவில்லை "அய்யயோ, என்ன ஸ்ருதி சொல்றிங்க நானா... உங்களையா..." கிட்டத்தட்ட அலறியவன் "என் பிரண்ட் சித்தார்த் தங்கச்சி தானேனு நேத்து ஏதோ விளையாட்டா பண்ணினேன், இப்போ நீங்க என்ன திட்டினதும் நான் வீட்டுக்கு போறதா சித்தார்த்க்கு மெசேஜ் பண்ணேன் அவன் தான் நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன் நீ அங்கேயே இருனு சொன்னான் அதான் அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன், போன் பாத்து போர் அடிக்குதுனு உங்க பின்னால இருக்க ஜன்னல் வழியா வெளிய பாத்துட்டு இருந்தேன் அதை நீங்க உங்கள பாக்குறதா நினைச்சி இப்படி எல்லாம் பேசிட்டிங்களே ஸ்ருதி, எவ்ளோ வருஷமா என்ன உங்களுக்கு தெரியும் என்னை போய் நீங்க இந்தளவுக்கு நினைப்பிங்கனு நான் எதிர்பாக்கல" என்றவன் விரைவாக அங்கிருந்து வெளியேறினான்.
அவன் சென்றதும் அவனை பற்றியே சிந்தனை ஸ்ருதிக்கு. இத்தனை வருடத்தில் விஜய் அவளிடம் நேரில் பேசியது கூட இல்லை. அன்று அவளாக சென்று பேசிய பிறகே அவனும் பேச ஆரம்பித்தான். இதற்கு முன் சித்தார்த் போன்னை வீட்டில் விட்டு வெளியே சென்ற சமயங்களில் விஜய் அழைக்க, "அண்ணா வெளிய போயிருக்காங்க" எனும் ஸ்ருதி அவனிடமிருந்து "ம்ம்ம்.. சரிங்க" என்று மட்டுமே பதிலாய் வரும். சித்தார்த் அலுவலகத்தில் இருக்கும் போதும் அவன் அல்லாமல் ஸ்ருதி தனியே இருக்கும் சமயங்களில் வரும்போதும் கூட விஜய் அவளிடம் பேச முயற்சித்ததில்லை.
விஜயின் இரண்டு மூன்று விளையாட்டான செயல்களை சித்தார்த் வாயிலாக கேள்விப்பட்டது ஸ்ருதியின் நினைவில் வர, குழம்பியவள், பின் நாம் தான் அவனை தவறாக நினைத்துவிட்டோம் என்ன வருந்தியவள் அவனிடம் மன்னிப்பும் கேட்ட முடிவெடுத்தாள்.
முடிவெடுத்ததும் போன்னில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு விடுவோமா என எண்ணினாள், அவனின் போன் நம்பர் அவளிடம் உள்ளதுதான். தங்களின் ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் ஒப்புக்கொள்ளப்படும் திருமண நிகழ்வுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரே தேதியில் நடைபெறும் வேளையில் சித்தார்த்துக்கு உதவியாக வருவான் விஜய். அவன் கவனிக்கும் கணக்கு வழக்கின் விபரங்களை ஸ்ருதிக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் வாயிலாக அனுப்பி விடுவான். அப்படி ஒரு தருணத்தில் தான் அவனின் நம்பர் அவளது போன் காண்டாக்டில் சேமிக்கப்பட்டது. முதலில் போன் அழைப்பில் மன்னிப்பு வேண்ட நினைத்தவள், பின் தான் பேசிய அதிகப்படியான பேச்சிக்கு நேரில் தான் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று நினைத்து அவனை நேரில் காணும் தருணத்திற்காக காத்திருந்தாள்.
அவளை அதிகம் காத்திருக்க வைக்காமல், அடுத்த நாளே ஸ்ருதியின் முன் வந்து நின்றான் விஜய். சித்தார்த்தை காண வந்திருப்பான் போலும், ஸ்ருதி மன்னிப்பு கேட்க முடிவெடுத்துவிட்டாள் தான், ஆனால் நேற்றைய பேச்சுக்கள் அவளில் நினைவில் எழ, அதில் திணறியவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவனிடம் "சாரி" என்றாள் வருந்தும் குரலில்.
"எதுக்கு ஸ்ருதி சாரி? ஓ... நேத்து நடந்த விஷயத்துக்கா... அதுக்கு நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும், உன்மனசுல அப்படி ஒரு எண்ணம் வர மாதிரி நான் தான் நடந்துக்கிட்டேன்" என்றவன் மேலும் தொடர்ந்தான், "நான் உன்ன சித்தார்த் தங்கச்சியா தான் பாத்தேன், அதனால தான் உன்கிட்ட அப்படி விளையாடினேன், ஆனா என்ன பத்தி உன் மனசுல அப்படி ஒரு ஆசை வரும்னு நான் எதிர்பாக்கல" என்றவனின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.
"இல்ல இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க" என்றாள் அவனுக்கு விளக்கிவிடும் வேகத்தில்.
"ஆமா ஸ்ருதி நான் உன்ன புரிஞ்சிக்கல தான், இல்லனா நீ உன்மனசுல உள்ள ஆசைய என்கிட்ட மறைமுகமா நேத்து சொன்னப்போ நான் கோவப்பட்டு போயிருப்பேனா" என்றவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்தவள், பின் அவன் தன்னிடம் முன்பு சொன்னது போல் ஏதேனும் விளையாடுகிறானா என சந்தேகம் எழ அதை அவனிடமே கேக்டவும் செய்தாள்.
"நீங்க என்கிட்ட அன்னைக்கு போல விளையாடுறிங்க தானே?" என்றவளை புன்சிரிப்புடன் ஏறிட்டவன், இல்லை என்பதை போல் தலையசைத்தான்.
"நான் ஏன் ஸ்ருதி விளையாடப்போறேன், இன்பேக்ட் நீ என்ன லவ் பன்றியா அப்படினு என்கிட்ட கேக்குறவரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலை" என ஒரு அண்டப் புளுகை புளுகியவன், பைனல் டச்சாக
"உனக்கும் என்மேல ஒரு அது இருக்கு
எனக்கும் உன்மேல ஒரு இது இருக்கு அப்போ அது லவ் தானே ஸ்ருதி !!!" என வி.டி.வி சிம்புவை போல் டைலாக் பேசியவனை கண்ட அவளது விழிகள் வட்டமாய் விரிந்தன.