Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கதை பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. சுடரழகியை அவளது பேச்சு மூலம் பாரதி கணவு கண்ட புதுமை பெண்ணாக்கி விட்டார் கதாசிரியர். "..நான் மரியாதை கொடுத்தாத்தான் இது தாலி கயிறு மஞ்சள் கயிறு மகிமை எல்லாம். இல்லன்னா இது வெறும் கயிறு..." என்று பேச வைத்து சமூகத்துக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

ஆமாம்.. உண்மைதான் அது. பெண்ணவளின் உணர்வின் அடையாளம்தான் மஞ்சள் கயிறு என்பது. உணர்வு சிதைக்கப்படும் பொழுது அந்த அடையாளத்துக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

"நீ என் கரம் பற்ற விழைகிறாய்!
நானோ,
உன் கரம் பற்ற இயலாதவளாய்..."
என்று முடிக்கிறார் கதாசிரியர்..
ஆனால்,
அவளை, அவன் கரம் பற்ற முடிந்தவளாக, அத்தகைய மனோபாவத்துக்கு அவளை மாற்றுங்கள் என்ற வேண்டுகோள் விடுக்கும்..
உங்கள் எழுத்தை ரசிக்கும் அன்பன்
இரா. சந்திரசேகர்
உங்கள் வேண்டுகோள் நிறைவேற்ற முயல்கிறேன்...மிக்க மிக்க நன்றி..உங்கள் ஊக்கம் எந்தன் உயர்வு..மிக்க மிக்க நன்றி.😍😍😍😍🙏🙏🙏🙏
 
SEMA story,with intresting twists and turns. Pakka village story which clearly demonstrates gaurava kolai and cast partiality in our society. Eagerly awaiting for the union of sudar -uththaman, ridhu- dhayalan. Pls quickly update next epi .
 
SEMA story,with intresting twists and turns. Pakka village story which clearly demonstrates gaurava kolai and cast partiality in our society. Eagerly awaiting for the union of sudar -uththaman, ridhu- dhayalan. Pls quickly update next epi .
Thank u so much ur valuable comments 🙏🙏🙏😍😍
 
கதை முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். சுடரழகி திருமணத்துடன் 'சுபம்' போட போகிறீர்களோ?
".. அவளது மேனியில் நீர் இறங்கும் உணர்வானது, அன்று அவன், அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதை நினைவுப் படுத்தியது." என்று எழுதுகிறார். அங்குதான் ஆசிரியர் தன் எழுத்து வல்லமையில் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார். எப்படியெனில், சுந்தர் மரணத்துக்கு இவளும் பொறுப்பு என்று சமூகம் ஒருவேளை சொல்லக்கூடும். அப்படி யாராவது கூறினால், அப்படி இல்லை.. மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சித்தவன் என்பதால் அவனுக்கு அந்த மரணம் நியாயமான தண்டனைதான் என்பதை இலக்கிய நயத்துடன் ஆசிரியர் இங்கு மறைமுகமாக சமூகத்துக்கு உணர்த்துகிறார்.

"... எம் நெஞ்சில் நீ குழைத்து பூசும் உம் அன்பு ஒன்றே, எம் தாய் கொடுத்த சீதனத்தை பெற தகுதி கொண்டதாம்!" என்று ஆசிரியர் ஞான தெளிவில் கதையின் பகுதியை முடிக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் அற்புத வரிகளோடு முடிக்கும் ஆசிரியரின் திறமைக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
 
கதை முடியும் தருணம் வந்துவிட்டது என நினைக்கிறேன். சுடரழகி திருமணத்துடன் 'சுபம்' போட போகிறீர்களோ?
".. அவளது மேனியில் நீர் இறங்கும் உணர்வானது, அன்று அவன், அவள் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதை நினைவுப் படுத்தியது." என்று எழுதுகிறார். அங்குதான் ஆசிரியர் தன் எழுத்து வல்லமையில் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார். எப்படியெனில், சுந்தர் மரணத்துக்கு இவளும் பொறுப்பு என்று சமூகம் ஒருவேளை சொல்லக்கூடும். அப்படி யாராவது கூறினால், அப்படி இல்லை.. மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல முயற்சித்தவன் என்பதால் அவனுக்கு அந்த மரணம் நியாயமான தண்டனைதான் என்பதை இலக்கிய நயத்துடன் ஆசிரியர் இங்கு மறைமுகமாக சமூகத்துக்கு உணர்த்துகிறார்.

"... எம் நெஞ்சில் நீ குழைத்து பூசும் உம் அன்பு ஒன்றே, எம் தாய் கொடுத்த சீதனத்தை பெற தகுதி கொண்டதாம்!" என்று ஆசிரியர் ஞான தெளிவில் கதையின் பகுதியை முடிக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்தையும் அற்புத வரிகளோடு முடிக்கும் ஆசிரியரின் திறமைக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
🙏🙏🙏🙏🙏🙏...மிக்க மிக்க நன்றிகள்.உங்களின் விமர்சனம் என்னை ரசிக்க வைக்கிறது..எழுத்தாளரிடம் இருந்து எனக்கு கிடைக்கும் இந்த பாராட்டுக்கு நன்றிகள் 🙏🙏
 

New Threads

Top Bottom