Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"நான் இன்னும் உயிரோட தான்டி இருக்கேன்." என்றும் கர்ஜித்தவன்,


"இவ என் அம்முலு. இவளுக்கு யார் காசுலயும் எதுவும் வாங்க அவசியமில்ல." என்றபடியே பால்கனி சென்று புகைக்கத் துவங்கிவிட்டான்.


அனைத்தையும் கண்டு புது தெளிவு கிடைத்த நிம்மதியில், 'இனிமே தான் மாமூ உனக்கு கச்சேரியே இருக்கு' என்று மர்மப் புன்னகை புரிந்தாள் அதிதி.


மறுநாள் காலையில் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அவனுக்குத் தெரியாமல் அவனின் கார் சாவியை எடுத்து ஒளித்து வைத்தாள். அதுவும் குழந்தையின் தொட்டிலுக்குள் ஒளித்து வைத்தாள்.


குழந்தையும் சாவியை தன் கைகளுக்குள் இறுக்கிப் பிடித்துக்கொண்டே வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.


அலுவலகம் கிளம்பிய விக்ரமன் கார் சாவியை காணாமல் அனைத்து இடங்களிலும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்க, அவனை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தாள் அதிதி.


தன் தந்தை படும் கஷ்டத்தை பொறுக்க முடியாத குழந்தை, "ம்ம்.. ம்ம்.. ங்கா.. ங்கா" என்று சத்தமாகக் கத்தி தன் தந்தையை அழைத்தது.


குழந்தையின் சத்தத்தில் திகைத்தவள், ‘எவ்வளவு நேக்கா அப்பாவை கூப்பிடுறா பாரு? நான் ஒரு பிளான் போட்டா அதை என் வயித்துல பொறந்தவளே கெடுத்துருவா போலயிருக்கே. எப்பவும் வைக்கிற இடத்துல இன்னைக்கு சாவிய காணோம், நீ பார்த்தியானு ஒரு வார்த்தை கேட்கறாரானு பாரு. இதுக்கே நீங்க குளிக்கும் போது தண்ணியில்லாம தவிக்க விடணும் மாமூ’ என மனதில் கழுவி ஊத்திக்கொண்டே குத்துக்கல்லாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.


தொட்டிலிலிருந்து சத்தம் வரவும், "என்னடா அம்முலுமா? அப்பாவுக்கு உன் கூட விளையாட நேரமில்லடா. அப்பா ஆஃபிஸ் போகணும்" என தன் போக்கில் பேசிக்கொண்டே சாவியைத் தேடிக் கொண்டிருந்தான் விக்ரமன்.


தேடித்தேடி அலுத்தவன் பதினைந்து நிமிடங்கள் தேடியும் சாவி கிடைக்காமல் போகவும் கோபத்தில் தனது ஷூ காலால் தரையை உதைக்க, அவனின் பதட்டத்தைக் கண்டு திருப்தியடைந்தாள் அதிதி.


மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்தவன் வேறு வழியின்றி மற்றொரு காரில் சென்று விட்டான்.


பனிரெண்டு மணியளவில் அலுவலகத்தில் தன் செகரெட்டரியிடம் மெயில் அனுப்ப வேண்டியவைப் பற்றி கூறிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு திடீரென புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதனை ஏற்று யாரென்று கேட்டான்.


எதிர்புறம் உற்சாகமாய் வந்தது குரல்.


"ஹாய் மாமூ! நான் தான் உங்க அம்முக்குட்டி பேசுறேன். வீட்லயிருந்தே ரொம்ப போர் அடிச்சதா? அதான் நானும் அம்முலுவும் ஷாப்பிங் வந்தோம். உங்க ஆஃபீஸ்க்கு பக்கத்துல இருக்க மாலுக்கு தான் வந்திருக்கோம்" என்றதும் திகைத்தான் அவன்.


இவ்வளவு நாள் தன் மேலிருந்த வெறுப்பில் விலகியே இருந்தவள் தற்போது முன்பு போல் மாமூ என தன்னை அழைப்பதை கேட்டு, ஜில்லென்றிருந்தது விக்ரமனுக்கு. மேலும், தொடர்ந்தாள் அவள்.


"அப்புறம் இது என்னோட நம்பர் தான் மாமூ. உங்க போன்ல சேவ் பண்ணிக்கோங்க. புது ஆப்பிள் ஐபோன் செவென்டின் ப்ளஸ் வாங்கியிருக்கேன். எவ்ளோ தெரியுமா? ஒரு லட்சம் சம்திங். எவ்வளவு நாள் தான் ஜானகியம்மாக்கிட்டயே போன் வாங்கி பேசுறது? அதான் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு புது போன் வாங்கிட்டேன். ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. எனக்கும் பாப்பாவுக்கும் வேண்டியதெல்லாம் வாங்கிட்டு, பில் போட்டு பார்த்தா இருபது லட்சம்னு சொல்றாங்க. ஏன் இவ்வளவுனா நீங்கப் பண்ணின ஃபேசியல், பாடி மசாஜ் ரொம்ப காஸ்ட்லி மேடம்னு சொல்றாங்க. பகல் கொள்ளை பாருங்க.நீங்க வேற நேத்து எல்லாத்தையும் உடைச்சி, பாப்பாவுக்கு ஏதாவது வாங்கினா உங்க காசுல தான் வாங்கனும்னு சொல்லிட்டீங்க. அதான் இவங்கக்கிட்ட என் ஹபி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இதுக்கெல்லாம் செட்டில் பண்ணிடுவாருனு வெயிட் பண்ண சொல்லிருக்கேன். நானும் உங்க ப்ராபெர்ட்டி தானே மாமூ? எனக்கும் நீங்க தானே வாங்கி கொடுக்கணும்? சீக்கிரம் வந்து பில் பே பண்ணுங்க மாமூ" என இறுதியில் கொஞ்சலாகப் பேசினாள் அதிதி.


அவள் தன்னை கதற வைக்கவே இவ்வாறு செய்கிறாளென்று உணர்ந்து கொண்டவனின் முகத்தில் புன்னகையின் சாயல்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
கமெண்ட்ஸ் தான் ரைட்டர்களின்‌ ஸ்ட்ரென்த்😉
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 15


தன் மாத லாபமே ஐந்து கோடியை தாண்டும் என்பதை அறியாமல் இருபது லட்சத்தை பெரிதாகக் கூறி தன்னை கலங்கடிக்க நினைப்பவளின் நம்பிக்கையை பொய்யாக்க விரும்பாமல் பயந்தது போலவே நடித்தான் விக்ரமன்.


"ஏய்! என்ன சொல்ற?" என்றான்.


எதிர்புறம் கொண்டாட்டமாய் இருந்தது அதிதிக்கு.


"இப்போ எதுக்கு மாமூ டென்ஷன் ஆகறீங்க? பக்கத்துல தண்ணியிருந்தா எடுத்துக் குடிங்க. நீங்க இங்க கார்ல வர குறைஞ்சது பத்து நிமிஷமாவது ஆகும். நான் உங்களுக்கு இருபது நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள நீங்க இங்க வரலைனா, எல்லாத்தையும் இங்கயே வச்சிட்டு நான் வீட்டுக்கு போயிருவேன். ஆனா அதுக்கப்பறம் என் குழந்தைக்கு ஏன் இதெல்லாம் வாங்கின? எவன் காசுல வாங்கினனு எல்லாம் கத்தி கூப்பாடு போடக்கூடாது. நான் தான் என் பொண்ணுக்கு வாங்கித் தருவேனு வீராப்பும் பேசக் கூடாது" என்று எச்சரித்து அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.


அரக்கப் பறக்க தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் தன் காரை எடுத்துக்கொண்டு அவளிருக்கும் இடம் நோக்கி புறப்பட்டான்.


மிகப்பெரும் குழப்பத்தை தான் அங்கு சந்திக்கப்போவதை அறியாமல் வேகமாக பேரங்காடியை நோக்கி காரை செலுத்தினான் விக்ரமன்.


உள்ளே நுழைந்தவன் அவளிருக்கும் பகுதியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கு செல்ல, பணம் செலுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்தவள், "பரவாயில்லையே, பத்து நிமிஷத்துக்கு பத்து செகண்ட் முன்னாடியே வந்துட்டீங்க" என கேலியாகக் கூறினாள்.


பணம் செலுத்தி பில் வாங்கியவன் துரிதப்படுத்தினான். "வா! கீழப் போகலாம்" என்று.


அவளும் நல்ல பிள்ளையாய் அவன் கூடவே கார் பார்க்கிங் வரை வந்தாள்.


அங்கு நின்றிருந்த தன் காரின் டிரைவரிடம், "நீங்க ஜானகியம்மாவை கூட்டிட்டு வீட்டுக்குப் போயிருங்கண்ணா. நான் இவரோட வண்டியில வந்திடுறேன்" என்றாள்.


"ஏய்! எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குடி. நீ இவங்களோடவே போயிரு" என மறுத்தான் விக்ரமன்.


அவனை கண்டு கொள்ளாதவள், "நீங்க போங்க" என ஜானகியம்மாளிடமிருந்த தன் குழந்தையை வாங்கிக்கொண்டு அவரை டிரைவருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.


"ஹேய் லூசு! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"


ம்ஹீம்! எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை அதிதியிடம்.


ஒரேயொரு முறை மட்டும் அவனை அலட்சியமாய் திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் காரின் பின் இருக்கையில் ஏறியமர்ந்து அம்முலுவுக்கு பால் கொடுக்கத் தொடங்கி விட்டாள்.


வேறு வழியின்றி அவளருகில் அமர்ந்தவன் காரின் கதவை அடைக்க காரினுள் ஏற்பட்ட புழுக்கத்தாலும், அவளின் மாராப்பு சேலை மூடியிருந்ததாலும் அம்முலு சிணுங்கிக்கொண்டே பால் குடித்துக் கொண்டிருந்தது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவளை நெருங்கி அவன், "அம்முலுமா" என அழைக்க, வியர்வையில் குளித்திருந்த அம்முலு தலையைத் தூக்கிப் பார்த்தது.


"என்னடா? எங்க பட்டுக்குட்டிக்கு வேர்க்குதா?" என்றவன் எட்டி காரின் ஏசியை ஆன் செய்ய, தந்தை மகளின் பாசப்பிணைப்பில் “ப்ச்” என சலித்துக்கொண்ட அதிதி சேலையை இறுக்கிப் பிடித்திருக்கும் குழந்தையின் கையை தட்டிவிட்டாள்.


"ஏய்! என் பொண்ணுக்கு வேர்க்குதுடி. கொஞ்ச நேரம் காத்து வரட்டும். முந்தானைய மூடாத" என குழந்தைக்காக போர்க்கொடி தூக்கினான் விக்ரமன்.


"ம்? அப்போ நீங்க கொஞ்சம் வெளிய போய் நில்லுங்க" என அலட்டிக் கொள்ளாமல் பதில் தந்தாள் அதிதி.


"ஏன்? நான் எதுக்கு வெளிய போகணும்? நான் என்ன அடுத்தவனா?" என எகிறினான் விக்ரமன்.


"ஆமா, ஆமா, நண்ட சுட்டு நரிய காவல் வைப்பாங்களாக்கும்?" என நொடித்துக் கொண்டவள், அவன் சொன்னபடியே வேறுபுறம் திரும்பிக்கொண்டு காற்றோட்டமாகவே அவன் புதல்விக்கு பால் கொடுத்தாள்.


கடமை முடிந்ததும் நேரே குழந்தையுடன் மேல்நாட்டு உடையிருக்கும் பிரிவுக்குள் நுழைந்தாள் அதிதி.


மேலும், விக்ரமனிடம் அறிவிப்பாக கூறினாள்.


"உங்கப் பொண்ணுக்கு மட்டும் தான் ட்ரெஸ் எடுத்திருக்கேன். எனக்கின்னும் எடுக்கல." என்று அலட்டினாள்.


"சரி, உனக்கு தான ட்ரெஸ் எடுக்கணும்? சாரி செக்சன் போகாம, இங்க எதுக்கு வந்திருக்க? என்ன முறைக்கிற? சரி, நம்ம ரூமுக்குள்ள வேணும்னா நீ இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கலாம். ஆனா, வெளியன்னா முடியவே முடியாது" என்றவனை மதிக்கவேயில்லை அதிதி.


அவன் பொறுமையாய் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில், "நாச்சூம்மா பழங்காலம். அவங்களுக்கு இந்த ட்ரெஸ் எல்லாம் பிடிக்காது" என்றான் அடிக்குரலில்.


"பிடிக்காதா? நான் என்ன அவங்களையா போட சொல்லப்போறேன்? நான் தானே போடப்போறேன்? அவங்களுக்கு பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? ஒருவேளை நான் இந்த ட்ரெஸ் போடுறது அவங்களுக்குப் பிடிக்கலைனா நான் அவங்க முன்னாடி வர்றப்போ மட்டும் அவங்களை கண்ணை மூடிக்க சொல்லுங்க." என்று அலட்சியமாய் கூறினாள்.


"நீ இவ்ளோ நாள் புடவை தானே கட்டின? இப்போ மட்டும் என்ன வந்தது? வேணும்னே பண்றியா?" என்றவன் உறும,


"ஆமா, நீங்க எப்படி என்கிட்ட நடிச்சீங்களோ, அதே மாதிரி நானும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தேன் போதுமா? பொங்கலன்னைக்கு பஞ்சுமிட்டாய் கலரு, பத்த வைக்காமலேயே எரிக்குதுனு கைக்கொட்டி சிரிச்சீங்கல்ல? வாங்க, வந்து எந்த கலரு எனக்கு நல்லாயிருக்குனு சொல்லுங்க" என மேற்கொண்டு மூன்று மணி நேரம் ஒவ்வொரு உடையாக அணிந்து வந்து, "இது நல்லாயிருக்கா? இது நல்லாயிருக்கா?" என அவனை பொறுமையிழக்கச் செய்தாள்.


"இந்த பொண்ணுங்க மட்டும் எப்படித்தான் ஏழாம் நூற்றாண்டுல சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு இப்படி எட்டாம் நூற்றாண்டுல நம்மளை வச்சு செய்றாங்களோ தெரியலப்பா" என சலித்துக் கொண்டவன்,


அவள் காட்டும் அனைத்திற்கும், "நல்லாயிருக்கு. வாவ்! நைஸ். சூப்பர்." என பூம் பூம் மாடு போல் தலையாட்டி வைத்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
ஒருவழியாய் துணியெடுத்து முடித்தவள் நேரே நகைக்கடைக்குள் போய் புகுந்தாள்.


விக்ரமனின் டெபிட் கார்டிற்கு வேட்டு வைக்கும் விதமாக நுண்ணிய வேலைப்பாட்டில் அமையப் பெற்ற ஐம்பது லட்சம் பெறுமானமுள்ள நகைசெட் ஒன்றை தேர்வு செய்தாள்.


அவள் எதிர்பார்த்தது போல் விக்ரமன் அதிர்ச்சியொன்றும் அடையவில்லை. "உனக்கு இது ரொம்ப அழகா இருக்கும் அதிதி." என்று மட்டும் ரசித்து சொன்னான்.


"இது ஒண்ணும் எனக்கில்ல. நம்ம அம்முலுவுக்கு. பொண்ணைப் பெத்திருக்கோம். இப்போயிருந்தே அவ கல்யாணத்துக்கு சேர்த்து வைக்க வேணாமா? எல்லாரும் உங்களை மாதிரியே பழிவாங்குறேனு சும்மா கட்டின புடவையோட கூட்டிட்டு போவாங்களா?" எனக்கேட்க அதன் பிறகு வாயையே திறக்கவில்லை விக்ரமன்.


இறுதியில் அவள் வாங்கியிருந்த அனைத்திற்கும் பணம் செலுத்திவிட்டு, "வா போகலாம்" என்றவன் விரட்ட,


"இருங்க. இங்க பீட்சா நல்லா இருக்கும்னு இப்ப தான் ஒரு சேல்ஸ்மேன் சொன்னாரு. சாப்பிட்டுப் போகலாம்" என்று சட்டமாய் புட்கோர்ட் சென்று அமர்ந்தாள்.


ஏற்கனவே தன் மதிய உணவு நேரம் தாண்டிவிட்ட வெறியில் இருந்தவன், அவளின் ஆட்டத்திற்கு ஆடிக்கொண்டு அருகில் போய் அமர்ந்தான்.


அப்போது தூரத்தில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த பதினைந்து வயது பெண் அவனை ஈர்த்தாள்.


அதிதி வேறுபுறம் திரும்பியிருக்க அந்தப் பெண்ணை தன் அலைபேசியில் படம் பிடித்தவன் அதிதி அந்தப் பெண்ணை பார்த்துவிடக் கூடாதென, அவளை வேகமாக அங்கிருந்து கிளம்ப வைக்கும் பொருட்டு, "எனக்கு மீட்டிங் போகணும். இப்போ தான் அர்ஜென்ட்னு மெசேஜ் வந்தது. சீக்கிரம் வா. உன்னை வீட்ல விட்டுட்டு போறேன்" என துரிதப்படுத்தினான்.


அதிதி, "நீங்க வேணும்னா ஆஃபிஸ் போங்க. அம்முலுவை என்கிட்ட தாங்க. நான் பீட்சா சாப்பிட்டு தான் வீட்டுக்குப் போவேன். வீட்லயிருந்து இவ்ளோ தூரம் வந்த எனக்கு திரும்பி போகத் தெரியாதா?" என அவனின் அவசரம் புரியாமல் முறுக்கிக் கொண்டாள்.


இனி அவளிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவன் வேகமாக குழந்தையுடன் வெளியேறினான்.


"ச்சே! இவருக்கிட்டப் போய் குழந்தையை கொடுத்தது தப்பாப்போச்சே." என அவன் பின்னேயே ஓடி வந்தாள் அதிதி.


அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்றவன் தனக்கு தெரிந்த துப்பறிவாளர் ஒருவரிடம் தன் அலைபேசியிலிருந்த போட்டாவை அனுப்பி தான் பேரங்காடியில் பார்த்த பெண்ணைப் பற்றி விசாரிக்கச் சொன்னான்.


இரவில் தன்னறையின் பால்கனியில் அமர்ந்து தான் பேரங்காடியில் பார்த்த பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டே அவன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.


அதிதி, ‘நாம வாங்கிட்டு வந்த பொருளுக்கு வேலை வந்துருச்சி' என தன் ஷாப்பிங் பேகிலிருந்த வைன் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தாள்.


'க்ளிங்' என்ற சத்தத்தில் எட்டிப் பார்த்த விக்ரமன், "இதெல்லாம் எதுக்குடி வாங்கின? நீ குழந்தைக்கு தாய்ப்பால் வேற கொடுத்துட்டு இருக்க. ஒழுங்கா குப்பைல போடு." என்று சீறினான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom