தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
அவள் 4
தற்போது...
அவள் உறங்கிய பின் நால்வரும் ஒன்றாக அவள் பக்கத்திலேயே அமர்ந்தனர். அவளை இந்நிலைக்கு ஆளாக்கியது யார்?? என்ற கோபத்தனல் அவர்களுக்குள்ளே மூண்டது. தன் தோழியை நிலைகுழையச் செய்தவனைக் கொன்றாலும் கோபம் தீராது என்ற அளவில் அவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் அது யாரென சிந்திக்கும் மனநிலையில் இல்லை. காவ்யாவிடத்தில் கேட்கவும் முடியாது என்பதால் அமைதி காத்தனர். ஊரில் பல சம்பவங்கள் இதேபோல் நிகழ்ந்திருக்கிறது. அதைப்போலவே தன் தோழியையும் இச்சைக்காக சீரழித்துவிட்டனர் என்று எண்ணிக் கொண்டனர்.
இதை மேலும் மேலும் விசாரித்தால் தங்கள் தோழியின் மனநிலை இன்னும் மோசமாகும் என்பதால் அதை அத்துடன் மறந்துவிட முடிவு செய்தனர். ஆனால் காவ்யாவை இதை மறக்கச் செய்யமுடியுமா என்று கவலை கொண்டனர்.
நாட்கள் நகரநகர காவ்யாவின் உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. ஆனால் அவள் மனநிலையோ சிறிதும் மாறவில்லை. யாரிடமும் பேசுவதில்லை. சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. எதிலுமே நாட்டம் இல்லாமல் உயிருள்ள ஜடம் போலானாள்.
அவளைக் கண்டு மனதுக்குள்ளயே நால்வரும் வெதும்பினாலும் அவள் முன் அதைக் காட்டாமல் சாதாரணமாகக் காட்டிக் கொண்டனர். அவள் மேலும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காக. அவள் உண்ண மறுத்தாலும் இவளுக்கு யாரேனும் ஊட்டிவிட்டு சாப்பிட வைத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். தூங்குவதற்காக சிலநேரம் மாத்திரை கொடுத்தும் சிலநேரம் வருடிக்கொடுத்தும் படுக்க வைத்தனர்.
அவளுடன் இருக்கவே நால்வரும் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தார்கள். முக்கியமான மற்றும் அவசர தேவை ஏற்படும் காலகட்டத்தில் மட்டும் நிறுவனத்திற்கு சென்றுவந்தனர்.
அவளை குழந்தையைப் போல் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டனர்.
*******************************************
காவ்யா தப்பித்த நாளன்று...
கண்கள் சிவந்திருக்க அதில் கட்டுக்கடங்காத கோபம் பிரதிபலித்தது. பல்லைக் கடித்து கை முஷ்டியை முறுக்கியவன் அருகில் இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்தக் கண்ணாடியில் ஓங்கி குத்த அது உடைந்து நொறுங்கியது. அதை கண்ட அவன் வீட்டின் காவலாளிகள் பயந்து ஒரு அடி பின்வாங்கினர்.
அவன் முஷ்டியில் இரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவர்களை நோக்கி, "ஒரு பொண்ணு! அதுவும் ரூம்குள்ள வச்சு பூட்டிட்டு போயிருக்கேன். அவ இருந்த நிலமையில நாளு ஸ்டெப் கூட நடக்க முடியாது. அவ இந்த கண்ணாடிய உடச்சிட்டு தப்பிச்சு போயிருக்கா. அதுவர நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க??" என்று தான் பார்த்த சிசிடிவி காட்சியைக் காட்டி கத்தினான்.
அவர்களும் அமைதி காக்கவே கோபம் கொண்ட அவன், "ஆல் ஆஃப் யூ கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்" என்று மீண்டும் கத்த அனைவரும் நடுநடுங்கிப் போய் ஓடிவிட்டனர்.
அவள் இவனிடம் இருந்து தப்பித்ததை நினைக்கையில் அவனுக்கு வெறியேறியது. அந்த வெறியில் அவன் கண்ணில் பட்ட பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தவன்,
"ஹேய்! என்னடி! என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டல்ல! இருக்கட்டும். ஆனா என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதா நினைக்காத. இதுக்கும் சேர்த்து நீ அனுபவிக்கப்போற. கூடிய சீக்கிரமே உன்னய ரீச் பண்ணிடுவேன். நான் யார்னு தெரியாம என்கிட்ட மோதிட்ட. இனி நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் தப்பிக்கவே முடியாது. உன்னய தப்பிக்க விடவும் மாட்டான் இந்த ராணாதேவ்!" என்று கர்ஜித்தான் ராணாதேவ்.
ராணாதேவ்! தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்இன் நிறுவனர் மற்றும் சிஇஓ. பெயருக்கேற்றாற் போன்ற கம்பீரம் உடலிலும் நடையிலும் பேச்சிலும் இருக்கும். அவன் சாதாரணமாகப் பேசினாலே அதாட்டியமாக இருக்கும் அவனது குரல் கோபத்தில் சிங்கத்தின் கர்ஜனை தான். அவனது கூர் விழிகள் பார்ப்பவரை நடுங்கச் செய்துவிடும். ஆளைப் பார்த்ததும் எடைபோடும் பார்வையினால் அவனது வியாபார நண்பர்களும்கூட அவனிடம் பதில்கூட பேச தயங்குவர்.
வியாபாரத்தில் தோன்றும் எதிரிகளுக்கும் இவன் சிம்ம சொப்பணமே! அதிகம் யாருடனும் பழகிடாதவன். சிரிப்பு என்பது அவன் இதழ்கள் மறந்தவை போல என்று எண்ண வைக்கும் அளவுக்கு கடுமையைக் காட்டும் முகம்.
கோபமும் பிடிவாத குணமும் மிகவும் அதிகம். அதனால்தான் சிறுவயதிலே தாய் தந்தையற்று வளர்ந்த இவன் இளம் வயதிலேயே மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறான் என்பது அவனது எண்ணம்.
ஆபத்தை தேடிப்போய் ரசிக்க ஆசை கொண்டவன். அதிகம் பேசாவிட்டாலும் பேசும் வார்த்தைகளில் உள்ள தெளிவும் புத்திசாலித்தனமும் அனைவரையும் வாயடைக்கச் செய்துவிடும்.
நீதிக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படுபவன் அல்ல அவன். அவனைவிட ஒருவன் திமிர் கொண்டு அவனை எதிர்த்தாலும் அராஜகம் செய்தாலும் அவனுக்குத் துளியும் பிடிக்காது. அவர்களின் திமிரை அடக்க எந்த எல்லைக்கும் செல்பவன். அவர்களின் வியாபாரக் கோட்டையைவே அழித்துவிடுவான்.
நினைத்தது நடக்கவேண்டும் என்று எண்ணுபவன் மட்டும் அல்ல. அதை நடத்தி முடிப்பவன். கோபத்தில் தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு எல்லையைத் தாண்டும்.
இவனைச் சமாளிக்க யாராலும் இயலாது போனாலும் இவனுடன் சமாளித்து இருக்க இவனது நான்கு தோழன்களால் மட்டுமே இயலும். இவனும் நண்பர்களிடத்தில் மட்டுமே தேவைக்கும் அதிகமாக பேசுவான். சாதாரணமாகப் பழகுவான்.
பெண்களை அறவே வெறுப்பவன். இவனின் அழகைக் கண்டு இவனை ரசித்தாலும் இவனின் கோபப் பார்வை அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் செய்துவிடும்.
இவனுக்கு நண்பர்கள் நால்வர். பள்ளி பருவத்திலேயே இவனது தாய் தந்தை விமான விபத்தில் இறந்துவிட்டனர். முதலில் உடைந்து போனாலும் அதன்பின் தானாகவே அதிலிருந்து மீண்டு வந்தான். சிரிப்பை மறந்து வளர வளர அவனது மனமும் கடினத் தன்மையாய் மாறிவிட்டது. இவன் மனதில் இருந்து சிரிப்பது அபூர்வம்.
அவனது தந்தையின் நிறுவனத்தை இவன் பன்மடங்காக்கி பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றான். மிகச் சிறந்த தொழிலதிபர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவன்.
*******************************************
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. காவ்யாவின் நிலையில் மாறுதல் இல்லை. சொல்லப்போனால் அவள் இப்போது பழைய காவ்யாவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டிருந்தாள். எப்போதும் சிரித்து பேசி குறும்பு செய்பவள் இப்பொழுதெல்லாம் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்.
எந்நேரமும் எதையோ இழந்ததைப் போலவே இருந்தாள். ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டாலும் பதறிப் போய்விடுவாள். நடுங்கி ஒடுங்கிப் போய்விடுவாள். பின்பு அவளை சமாதானம் செய்வது மிகவும் கடினம். இவளின் நிலையைக் கண்டு இவள் தோழிகளுக்கும் சந்தோசம் என்பது மறந்துபோனது. வாழ்க்கை எந்தவித பிடிப்பும் இல்லாமல் அப்படியே போய்க்கொண்டிருந்தது.
காவ்யா அன்று உணவருந்தாமலே இருந்தாள். அவளை வற்புறுத்தி, கடினப்பட்டு சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர். அவளுக்கோ வாந்தி வர வாயைப் பொத்திக் கொண்டு குளியலறைக்கு ஓடிவிட்டாள்.
அவள் பின்னே தோழி ஒருத்தியும் சென்று தலைபிடித்துவிட சாப்பிட்ட உணவு முதற்கொண்டு முழுவதையும் வாந்தி எடுத்தவள் வாயை தண்ணீர்விட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். முகத்தைத் தொடைத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவள் கண்கள் சொருக அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்.
இவளைக் கண்டு இவள் தோழிகள் பதற, அவளை மெதுவாக சாய்த்து படுக்க வைத்தனர். பின்பு, வாந்தி எடுத்த சோர்வில் மயங்கிவிட்டாள் என எண்ணிக்கொண்டு அவளை சரண்யா பரிசோதிக்க நாடியைப் பிடித்தவள் அதிர்ந்து விழி விரித்தாள்.
இவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த மற்ற தோழிகள், "என்னாச்சுடி??" என்று கேட்டனர். அவள் சொன்ன பதிலைக்
கேட்ட அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
"ஷீ இஸ் ப்ரக்னண்ட்(She is pregnant)" என்று அவள் சொல்லியதைக் கேட்ட நொடி அவர்கள் மூவரும்
ஸ்தம்பித்து போயினர். பிறகு தன்னிலை பெற்றவர்கள் காவ்யாவைப் பார்க்க, அவளோ உதிர்ந்த மலராய் வாடிக் கிடந்தாள்.
அதைக் கண்டு, "இவ யாருக்கு என்ன பாவம் பண்ணா? இந்த வயசுலயே இவளுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்? இப்ப இவ இருக்க நிலமையில இந்த விசயமும் இவளுக்கு தெரிஞ்சா என்ன ஆவா? எப்டி ரியாக்ட் பண்ணுவானே நினச்சுக்கூட பாக்கமுடியல" என்று அனுயா கவலை கொண்டாள். மற்றவர்களும் அதே சோகத்தில் இருந்தனர்.
"ரிலாக்ஸ் அனு! யாருக்கு எப்ப என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது இல்லயா! இவள இந்த நிலைக்கு ஆளாக்குனவன் ஒருநாள் நிச்சயம் தண்டனைய அனுபவிப்பான். இவளதான் எப்டியாச்சும் இப்ப சமாளிக்கணும்" என்று தன்யா மனதில் வருத்தம் இருந்தாலும் இவர்களை ஆறுதல் படுத்தினாள்.
"விடுங்க பாத்துக்கலாம். அவ முதல்ல கண் விழிக்கட்டும். நாம எப்பவும் அவகூடதான் இருப்போம். அவள கஷ்டப்பட விட்றுவோமா? கவலைப்படாதீங்க. நீங்களே கவலைப்பட்டா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது?" என்று ரம்யா கூற, மற்றவர்களுக்கும் அது சரியென பட மனதை தேற்றிக்கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து அவள் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். அருகில் வந்து அமர்ந்த அனுயா, "இப்ப எப்டி இருக்கு காவிமா? பரவால்லயா? இப்ப வோமிட் எதுவும் வருதா? மயக்கமா இருக்கா?" அவள் தலையை வருடியபடியே கேட்க, அவள் மெதுவாக தலையசைத்து இல்லை என்று கூறினாள்.
அதன்பின் அவளுக்கு குடிக்க ஜூஸும் மருந்தும் எடுத்துவந்து கொடுத்தனர். அதைக் குடித்துவிட்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்த விசயத்தை எப்படி கூறுவது என்று தோழிகள் தயங்கி கொண்டு நின்றனர்.
எவருக்கும் அவளிடம் இதை சொல்ல தைரியம் வரவில்லை. அவள் இதைக்கேட்டு என்ன ஆவாளோ?! என்ற பயமே அவர்களைத் தடுத்தது.
காலம் வரும்போது அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டுவிட்டனர்.
ஆனால் அந்த நாளும் சீக்கிரமே வந்தது. தினமும் வாந்தி எடுத்தாள். அதனால் எதுவும் சாப்பிட இயலாமல் போனது. இதனால் அவள் உடல்நிலையும் சற்று குறையத் தொடங்கியது. வாந்தியும் மயக்கமும் அவளை வாட்ட, மெலியத் தொடங்கினாள்.
இதைப் பார்த்த அவள் தோழிகளுக்கு கவலை மேலிட்டது. இப்படியே போனால் இன்னும் மோசமாகிவிடுவாள் என்றெண்ணி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அவளிடம் இந்த உண்மையை இப்போது சொல்லியே ஆகவேண்டும் என்பதால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திகைத்தனர்.
இந்த சில நாட்களில் அவளுக்கு இது தெரியாமல் இருந்ததே அபூர்வம்தான். பழைய காவ்யாவாக இருந்திருந்தால் மற்றவரின் முகத்தை வைத்தே பிரச்சினையை கண்டுகொண்டிருப்பாள். ஆனால் இப்போது அவள் அவளாகவே இல்லையே. ஆதலால் தான் அவளுக்குள் நிகழும் மாற்றங்களைக்கூட அவள் கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
ஆனால் இப்போது இவர்களே சொல்லியாக வேண்டிய நிலையில் செய்வதறியாது நின்றனர். ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அவளிடம் சென்றனர்.
அவள் அருகில் அமர்ந்த சரண்யா அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.
"காவ்யா! நம்ம இப்ப ஹாஸ்பிடல் போகணும்... கிளம்புறியா..??" என்று ஆரம்பிக்க, அவளும்,"எதுக்கு?" என்று அவர்கள் எதிர்பார்த்த கேள்வியை அவளை நிமிர்ந்தும் பாராமல் கேட்டாள்.
"உனக்கு இப்பல்லாம் வாமிட், மயக்கம் ரொம்ப வருதுல்ல! அதுக்குத்தான்.. செக் பண்றதுக்காக...போலாம்னு...அதோட இப்ப நீ இருக்க நிலைமையில செக்கப் பண்ணி பாக்குறது அவசியம்" என்று கூறினாள்.
அதை காவ்யாவோ அவளின் தற்போதைய உடல்நிலை தேறியிருக்கிறதா? என்று மறுபடியும் பரிசோதிக்கத்தான் அழைக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
"அதெல்லாம் வேணாம். நான் நல்லாதான் இருக்கேன்" என்று அமைதியாகச் சொல்லிவிட்டு மௌனமானாள்.
இதைக் கேட்ட சரண்யா மற்றவர்களைப் பார்க்க அவர்களும் இவளைப் பார்த்து சோகமாயினர்.
"அது இல்ல காவிமா. இப்ப நீ ப்ரெக்னண்டா இருக்க..." என்று சரண்யா கூறிவிட்டாள். இதைக் கேட்ட காவ்யாவிற்கோ ஒரு நொடி தான் கேட்டது சரியா என்னும் சந்தேகம் எழ அவளிடம் மீண்டும் என்ன? என்று அவளைப் பார்த்துக் கேட்டாள். அதற்கு, "நீ கற்பமா இருக்க காவ்யா" என்று கடினப்பட்டு சரண்யா கூறிவிட்டு காவ்யாவின் கைகளைப் பற்றினாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்திட்ட கண்களில் கண்ணீர் பொங்கிட, தோழிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்த அர்த்தத்தை அவர்களால் அச்சமயம் உணரமுடியவில்லை. அதில் அதிர்ச்சி, சோகம், ஏமாற்றம், வலி என அனைத்தும் கலந்திருந்தது.
அவளின் கண்ணீரைக் கண்டவர்கள் உடனே அவளிடம் சென்று அவள் தோள் பற்றி ஆறுதல் சொல்ல முனைந்தனர். ஆனால் அவளோ அனைவரின் கைகளையும் உதறிவிட்டவள் எழுந்து குளியலறைக்குள் செல்லப்போனாள்.
மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றவர்கள். மறுநொடி சுதாரித்து அவள் எதுவும் விபரீத முடிவு எடுத்துவிடக் கூடாது என்றெண்ணி அவளைத் தடுத்தனர்.
"காவ்யா! நாங்க சொன்னத கேட்டுட்டு எதுவுமே சொல்லாம வாஷ்ரூமுக்கு போறியேமா. என்னாச்சு. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு. நீயே மனசுக்குள்ள போட்டு வச்சுக்காதடி" என்று தன்யா அவளைத் தடுத்து நிறுத்திக் கூறினாள்.
அதைக் கேட்ட காவ்யா, "இனி சொல்றதுக்கு என்ன இருக்கு? நான் வாழுறதே வீண்தான். இனியும் நான் வாழுறதுக்கு அர்த்தமே இல்லயே.." என்று விரக்தி நிறைந்த முகத்துடன் அவள் கூறுவதை கேட்டு தோழிகள் அதிர்ந்தனர். அவர்கள் பயந்ததைப் போலவே சம்பவங்கள் நிகழ்வதை பார்க்க மனம் கலங்கினர்.
"இப்டிலாம் ஏன்டி சொல்ற? எதுக்காக நீ வாழக்கூடாதுனு நினைக்கிற? உனக்காகதான நாங்க இருக்கோம். எங்கள விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டியா? என்னடி அர்த்தம் இல்லாம போச்சு? இதோட உன் வாழ்க்கை ஒண்ணும் முடிஞ்சிடாது. உன் வயித்துல இப்ப ஒரு குழந்தை வளருதுடி. அதபத்தியும் யோசிச்சு பாத்தியா?" என்று தன்யா கூறிக்கொண்டிருப்பதைக் கேட்டவளுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து குளமாகியது.
"என்னது!! என் வயித்துல வளருற குழந்தைய பத்தி யோசிக்கணுமா?? நான் எதுக்கு யோசிக்கணும்? என் வாழ்க்கையே அழிஞ்சு போனதுக்கான ஆதாரமே இதுதான். இது என் வயித்துல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நடந்த கொடூரம் தான் என் கண்ணு முன்னாடி வரும். இந்த குழந்தைய நான் எதுக்கு சுமக்கணும்?? இது என்ன என்னோட காதலுக்கு கிடச்ச பரிசா?? யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தன் என்னய சீரழிச்சதுக்கான அடையாளம். இத சுமக்குறதே பாவம். இது வயித்துல இருக்கிறதுகூட எனக்கு அவனதான் நியாபகப்படுத்துது. உடம்பெல்லாம் கூசுது. நான் இந்த குழந்தைய பெத்துக்க மாட்டேன்!!" என்று கோபம் பாதியும் அழுகை, வெறுப்பு பாதியும் கூறி முடித்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட தோழிகள் நால்வரும் பேச்சற்று நின்றனர். ஏனென்றால் குழந்தைகளை அளவிற்கு அதிகமாய் நேசிக்கும் ஒருவளால் குழந்தையை வேண்டாம் எனவும் ஒதுக்க முடியுமா?! என்று அதிசயித்துப் பார்த்தனர்.
குழந்தையை கருவிலேயே கொல்வது அவர்கள் ஐவருக்கும் அறவே பிடிக்காத செயல். ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று நினைத்து அவளின் தெளிவான முடிவை அறிவதற்காக மறுபடியும் பேசினர்.
"இங்க பாரு காவ்யா. உனக்கு குழந்தைங்கன்னா எவ்ளோ பிடிக்கும்! அபார்ஷன் பண்றது உனக்கே பிடிக்காதே! அப்டி இருக்கும்போது எவனோ ஒருத்தன்மேல உள்ள கோபத்துல குழந்தைய கொல்லணும்னு சொல்றியா?" என்று அனுயா அவளிடம் கேட்க, பதிலாக ஏமாற்றம் நிறைந்த பார்வையை பரிசாக அளித்தாள்.
" உங்களுக்கே தெரியுது. அவன் எவனோ ஒருத்தன்னு. எந்த உறவுல இந்த குழந்தைய நான் பெத்துக்க? இந்த உலகமே என்னய அசிங்கபடுத்தவா?? அதுக்கு நான் இப்பவே செத்துப் போயிடலாமே! உங்களுக்கு என் நிலமை புரியலயா?? புரியாட்டியும் பரவால்ல. எனக்கு இந்த குழந்த வேணாம்..வேணாம்..
வேணாம்...!!" என்று அமைதியாக பேச்சை ஆரம்பித்தவள் இறுதியில் ஆவேசத்துடன் கத்தினாள்.
அவள் இந்த விஷயத்துக்கு இப்படி நடந்துகொள்வாள் என்பதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவள் நடந்து கொண்டதில் தவறேதும் இல்லை என்றே அவர்களுக்கும் தோன்றியது. அவள் கூறுவதுதான் சரியெனவும் அவர்களுக்குப் புரிந்தது.
காவ்யாவின் நிலை மாறுமா?? கடந்த கால நிகழ்வின் தாக்கத்தை கடந்து வருவாளா?? கொடூரனின் பலி உணர்வு அடங்கியதா?? இல்லை வஞ்சம் தொடருமா?? தோழிகளால் இவளை காத்திட இயலுமா?? ராணாவின் கோபத் தீயில் பலியாகும் ஈசலாய் காவ்யாவும் மாறிடுவாளா??
❤வருவாள்❤...
தற்போது...
அவள் உறங்கிய பின் நால்வரும் ஒன்றாக அவள் பக்கத்திலேயே அமர்ந்தனர். அவளை இந்நிலைக்கு ஆளாக்கியது யார்?? என்ற கோபத்தனல் அவர்களுக்குள்ளே மூண்டது. தன் தோழியை நிலைகுழையச் செய்தவனைக் கொன்றாலும் கோபம் தீராது என்ற அளவில் அவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் அது யாரென சிந்திக்கும் மனநிலையில் இல்லை. காவ்யாவிடத்தில் கேட்கவும் முடியாது என்பதால் அமைதி காத்தனர். ஊரில் பல சம்பவங்கள் இதேபோல் நிகழ்ந்திருக்கிறது. அதைப்போலவே தன் தோழியையும் இச்சைக்காக சீரழித்துவிட்டனர் என்று எண்ணிக் கொண்டனர்.
இதை மேலும் மேலும் விசாரித்தால் தங்கள் தோழியின் மனநிலை இன்னும் மோசமாகும் என்பதால் அதை அத்துடன் மறந்துவிட முடிவு செய்தனர். ஆனால் காவ்யாவை இதை மறக்கச் செய்யமுடியுமா என்று கவலை கொண்டனர்.
நாட்கள் நகரநகர காவ்யாவின் உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. ஆனால் அவள் மனநிலையோ சிறிதும் மாறவில்லை. யாரிடமும் பேசுவதில்லை. சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. எதிலுமே நாட்டம் இல்லாமல் உயிருள்ள ஜடம் போலானாள்.
அவளைக் கண்டு மனதுக்குள்ளயே நால்வரும் வெதும்பினாலும் அவள் முன் அதைக் காட்டாமல் சாதாரணமாகக் காட்டிக் கொண்டனர். அவள் மேலும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காக. அவள் உண்ண மறுத்தாலும் இவளுக்கு யாரேனும் ஊட்டிவிட்டு சாப்பிட வைத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். தூங்குவதற்காக சிலநேரம் மாத்திரை கொடுத்தும் சிலநேரம் வருடிக்கொடுத்தும் படுக்க வைத்தனர்.
அவளுடன் இருக்கவே நால்வரும் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தார்கள். முக்கியமான மற்றும் அவசர தேவை ஏற்படும் காலகட்டத்தில் மட்டும் நிறுவனத்திற்கு சென்றுவந்தனர்.
அவளை குழந்தையைப் போல் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டனர்.
*******************************************
காவ்யா தப்பித்த நாளன்று...
கண்கள் சிவந்திருக்க அதில் கட்டுக்கடங்காத கோபம் பிரதிபலித்தது. பல்லைக் கடித்து கை முஷ்டியை முறுக்கியவன் அருகில் இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்தக் கண்ணாடியில் ஓங்கி குத்த அது உடைந்து நொறுங்கியது. அதை கண்ட அவன் வீட்டின் காவலாளிகள் பயந்து ஒரு அடி பின்வாங்கினர்.
அவன் முஷ்டியில் இரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவர்களை நோக்கி, "ஒரு பொண்ணு! அதுவும் ரூம்குள்ள வச்சு பூட்டிட்டு போயிருக்கேன். அவ இருந்த நிலமையில நாளு ஸ்டெப் கூட நடக்க முடியாது. அவ இந்த கண்ணாடிய உடச்சிட்டு தப்பிச்சு போயிருக்கா. அதுவர நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க??" என்று தான் பார்த்த சிசிடிவி காட்சியைக் காட்டி கத்தினான்.
அவர்களும் அமைதி காக்கவே கோபம் கொண்ட அவன், "ஆல் ஆஃப் யூ கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்" என்று மீண்டும் கத்த அனைவரும் நடுநடுங்கிப் போய் ஓடிவிட்டனர்.
அவள் இவனிடம் இருந்து தப்பித்ததை நினைக்கையில் அவனுக்கு வெறியேறியது. அந்த வெறியில் அவன் கண்ணில் பட்ட பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தவன்,
"ஹேய்! என்னடி! என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டல்ல! இருக்கட்டும். ஆனா என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதா நினைக்காத. இதுக்கும் சேர்த்து நீ அனுபவிக்கப்போற. கூடிய சீக்கிரமே உன்னய ரீச் பண்ணிடுவேன். நான் யார்னு தெரியாம என்கிட்ட மோதிட்ட. இனி நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் தப்பிக்கவே முடியாது. உன்னய தப்பிக்க விடவும் மாட்டான் இந்த ராணாதேவ்!" என்று கர்ஜித்தான் ராணாதேவ்.
ராணாதேவ்! தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்இன் நிறுவனர் மற்றும் சிஇஓ. பெயருக்கேற்றாற் போன்ற கம்பீரம் உடலிலும் நடையிலும் பேச்சிலும் இருக்கும். அவன் சாதாரணமாகப் பேசினாலே அதாட்டியமாக இருக்கும் அவனது குரல் கோபத்தில் சிங்கத்தின் கர்ஜனை தான். அவனது கூர் விழிகள் பார்ப்பவரை நடுங்கச் செய்துவிடும். ஆளைப் பார்த்ததும் எடைபோடும் பார்வையினால் அவனது வியாபார நண்பர்களும்கூட அவனிடம் பதில்கூட பேச தயங்குவர்.
வியாபாரத்தில் தோன்றும் எதிரிகளுக்கும் இவன் சிம்ம சொப்பணமே! அதிகம் யாருடனும் பழகிடாதவன். சிரிப்பு என்பது அவன் இதழ்கள் மறந்தவை போல என்று எண்ண வைக்கும் அளவுக்கு கடுமையைக் காட்டும் முகம்.
கோபமும் பிடிவாத குணமும் மிகவும் அதிகம். அதனால்தான் சிறுவயதிலே தாய் தந்தையற்று வளர்ந்த இவன் இளம் வயதிலேயே மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறான் என்பது அவனது எண்ணம்.
ஆபத்தை தேடிப்போய் ரசிக்க ஆசை கொண்டவன். அதிகம் பேசாவிட்டாலும் பேசும் வார்த்தைகளில் உள்ள தெளிவும் புத்திசாலித்தனமும் அனைவரையும் வாயடைக்கச் செய்துவிடும்.
நீதிக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படுபவன் அல்ல அவன். அவனைவிட ஒருவன் திமிர் கொண்டு அவனை எதிர்த்தாலும் அராஜகம் செய்தாலும் அவனுக்குத் துளியும் பிடிக்காது. அவர்களின் திமிரை அடக்க எந்த எல்லைக்கும் செல்பவன். அவர்களின் வியாபாரக் கோட்டையைவே அழித்துவிடுவான்.
நினைத்தது நடக்கவேண்டும் என்று எண்ணுபவன் மட்டும் அல்ல. அதை நடத்தி முடிப்பவன். கோபத்தில் தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு எல்லையைத் தாண்டும்.
இவனைச் சமாளிக்க யாராலும் இயலாது போனாலும் இவனுடன் சமாளித்து இருக்க இவனது நான்கு தோழன்களால் மட்டுமே இயலும். இவனும் நண்பர்களிடத்தில் மட்டுமே தேவைக்கும் அதிகமாக பேசுவான். சாதாரணமாகப் பழகுவான்.
பெண்களை அறவே வெறுப்பவன். இவனின் அழகைக் கண்டு இவனை ரசித்தாலும் இவனின் கோபப் பார்வை அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் செய்துவிடும்.
இவனுக்கு நண்பர்கள் நால்வர். பள்ளி பருவத்திலேயே இவனது தாய் தந்தை விமான விபத்தில் இறந்துவிட்டனர். முதலில் உடைந்து போனாலும் அதன்பின் தானாகவே அதிலிருந்து மீண்டு வந்தான். சிரிப்பை மறந்து வளர வளர அவனது மனமும் கடினத் தன்மையாய் மாறிவிட்டது. இவன் மனதில் இருந்து சிரிப்பது அபூர்வம்.
அவனது தந்தையின் நிறுவனத்தை இவன் பன்மடங்காக்கி பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றான். மிகச் சிறந்த தொழிலதிபர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவன்.
*******************************************
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. காவ்யாவின் நிலையில் மாறுதல் இல்லை. சொல்லப்போனால் அவள் இப்போது பழைய காவ்யாவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டிருந்தாள். எப்போதும் சிரித்து பேசி குறும்பு செய்பவள் இப்பொழுதெல்லாம் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்.
எந்நேரமும் எதையோ இழந்ததைப் போலவே இருந்தாள். ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டாலும் பதறிப் போய்விடுவாள். நடுங்கி ஒடுங்கிப் போய்விடுவாள். பின்பு அவளை சமாதானம் செய்வது மிகவும் கடினம். இவளின் நிலையைக் கண்டு இவள் தோழிகளுக்கும் சந்தோசம் என்பது மறந்துபோனது. வாழ்க்கை எந்தவித பிடிப்பும் இல்லாமல் அப்படியே போய்க்கொண்டிருந்தது.
காவ்யா அன்று உணவருந்தாமலே இருந்தாள். அவளை வற்புறுத்தி, கடினப்பட்டு சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர். அவளுக்கோ வாந்தி வர வாயைப் பொத்திக் கொண்டு குளியலறைக்கு ஓடிவிட்டாள்.
அவள் பின்னே தோழி ஒருத்தியும் சென்று தலைபிடித்துவிட சாப்பிட்ட உணவு முதற்கொண்டு முழுவதையும் வாந்தி எடுத்தவள் வாயை தண்ணீர்விட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். முகத்தைத் தொடைத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவள் கண்கள் சொருக அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்.
இவளைக் கண்டு இவள் தோழிகள் பதற, அவளை மெதுவாக சாய்த்து படுக்க வைத்தனர். பின்பு, வாந்தி எடுத்த சோர்வில் மயங்கிவிட்டாள் என எண்ணிக்கொண்டு அவளை சரண்யா பரிசோதிக்க நாடியைப் பிடித்தவள் அதிர்ந்து விழி விரித்தாள்.
இவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த மற்ற தோழிகள், "என்னாச்சுடி??" என்று கேட்டனர். அவள் சொன்ன பதிலைக்
கேட்ட அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
"ஷீ இஸ் ப்ரக்னண்ட்(She is pregnant)" என்று அவள் சொல்லியதைக் கேட்ட நொடி அவர்கள் மூவரும்
ஸ்தம்பித்து போயினர். பிறகு தன்னிலை பெற்றவர்கள் காவ்யாவைப் பார்க்க, அவளோ உதிர்ந்த மலராய் வாடிக் கிடந்தாள்.
அதைக் கண்டு, "இவ யாருக்கு என்ன பாவம் பண்ணா? இந்த வயசுலயே இவளுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்? இப்ப இவ இருக்க நிலமையில இந்த விசயமும் இவளுக்கு தெரிஞ்சா என்ன ஆவா? எப்டி ரியாக்ட் பண்ணுவானே நினச்சுக்கூட பாக்கமுடியல" என்று அனுயா கவலை கொண்டாள். மற்றவர்களும் அதே சோகத்தில் இருந்தனர்.
"ரிலாக்ஸ் அனு! யாருக்கு எப்ப என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது இல்லயா! இவள இந்த நிலைக்கு ஆளாக்குனவன் ஒருநாள் நிச்சயம் தண்டனைய அனுபவிப்பான். இவளதான் எப்டியாச்சும் இப்ப சமாளிக்கணும்" என்று தன்யா மனதில் வருத்தம் இருந்தாலும் இவர்களை ஆறுதல் படுத்தினாள்.
"விடுங்க பாத்துக்கலாம். அவ முதல்ல கண் விழிக்கட்டும். நாம எப்பவும் அவகூடதான் இருப்போம். அவள கஷ்டப்பட விட்றுவோமா? கவலைப்படாதீங்க. நீங்களே கவலைப்பட்டா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது?" என்று ரம்யா கூற, மற்றவர்களுக்கும் அது சரியென பட மனதை தேற்றிக்கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து அவள் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். அருகில் வந்து அமர்ந்த அனுயா, "இப்ப எப்டி இருக்கு காவிமா? பரவால்லயா? இப்ப வோமிட் எதுவும் வருதா? மயக்கமா இருக்கா?" அவள் தலையை வருடியபடியே கேட்க, அவள் மெதுவாக தலையசைத்து இல்லை என்று கூறினாள்.
அதன்பின் அவளுக்கு குடிக்க ஜூஸும் மருந்தும் எடுத்துவந்து கொடுத்தனர். அதைக் குடித்துவிட்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்த விசயத்தை எப்படி கூறுவது என்று தோழிகள் தயங்கி கொண்டு நின்றனர்.
எவருக்கும் அவளிடம் இதை சொல்ல தைரியம் வரவில்லை. அவள் இதைக்கேட்டு என்ன ஆவாளோ?! என்ற பயமே அவர்களைத் தடுத்தது.
காலம் வரும்போது அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டுவிட்டனர்.
ஆனால் அந்த நாளும் சீக்கிரமே வந்தது. தினமும் வாந்தி எடுத்தாள். அதனால் எதுவும் சாப்பிட இயலாமல் போனது. இதனால் அவள் உடல்நிலையும் சற்று குறையத் தொடங்கியது. வாந்தியும் மயக்கமும் அவளை வாட்ட, மெலியத் தொடங்கினாள்.
இதைப் பார்த்த அவள் தோழிகளுக்கு கவலை மேலிட்டது. இப்படியே போனால் இன்னும் மோசமாகிவிடுவாள் என்றெண்ணி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அவளிடம் இந்த உண்மையை இப்போது சொல்லியே ஆகவேண்டும் என்பதால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திகைத்தனர்.
இந்த சில நாட்களில் அவளுக்கு இது தெரியாமல் இருந்ததே அபூர்வம்தான். பழைய காவ்யாவாக இருந்திருந்தால் மற்றவரின் முகத்தை வைத்தே பிரச்சினையை கண்டுகொண்டிருப்பாள். ஆனால் இப்போது அவள் அவளாகவே இல்லையே. ஆதலால் தான் அவளுக்குள் நிகழும் மாற்றங்களைக்கூட அவள் கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
ஆனால் இப்போது இவர்களே சொல்லியாக வேண்டிய நிலையில் செய்வதறியாது நின்றனர். ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அவளிடம் சென்றனர்.
அவள் அருகில் அமர்ந்த சரண்யா அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.
"காவ்யா! நம்ம இப்ப ஹாஸ்பிடல் போகணும்... கிளம்புறியா..??" என்று ஆரம்பிக்க, அவளும்,"எதுக்கு?" என்று அவர்கள் எதிர்பார்த்த கேள்வியை அவளை நிமிர்ந்தும் பாராமல் கேட்டாள்.
"உனக்கு இப்பல்லாம் வாமிட், மயக்கம் ரொம்ப வருதுல்ல! அதுக்குத்தான்.. செக் பண்றதுக்காக...போலாம்னு...அதோட இப்ப நீ இருக்க நிலைமையில செக்கப் பண்ணி பாக்குறது அவசியம்" என்று கூறினாள்.
அதை காவ்யாவோ அவளின் தற்போதைய உடல்நிலை தேறியிருக்கிறதா? என்று மறுபடியும் பரிசோதிக்கத்தான் அழைக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
"அதெல்லாம் வேணாம். நான் நல்லாதான் இருக்கேன்" என்று அமைதியாகச் சொல்லிவிட்டு மௌனமானாள்.
இதைக் கேட்ட சரண்யா மற்றவர்களைப் பார்க்க அவர்களும் இவளைப் பார்த்து சோகமாயினர்.
"அது இல்ல காவிமா. இப்ப நீ ப்ரெக்னண்டா இருக்க..." என்று சரண்யா கூறிவிட்டாள். இதைக் கேட்ட காவ்யாவிற்கோ ஒரு நொடி தான் கேட்டது சரியா என்னும் சந்தேகம் எழ அவளிடம் மீண்டும் என்ன? என்று அவளைப் பார்த்துக் கேட்டாள். அதற்கு, "நீ கற்பமா இருக்க காவ்யா" என்று கடினப்பட்டு சரண்யா கூறிவிட்டு காவ்யாவின் கைகளைப் பற்றினாள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்திட்ட கண்களில் கண்ணீர் பொங்கிட, தோழிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்த அர்த்தத்தை அவர்களால் அச்சமயம் உணரமுடியவில்லை. அதில் அதிர்ச்சி, சோகம், ஏமாற்றம், வலி என அனைத்தும் கலந்திருந்தது.
அவளின் கண்ணீரைக் கண்டவர்கள் உடனே அவளிடம் சென்று அவள் தோள் பற்றி ஆறுதல் சொல்ல முனைந்தனர். ஆனால் அவளோ அனைவரின் கைகளையும் உதறிவிட்டவள் எழுந்து குளியலறைக்குள் செல்லப்போனாள்.
மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றவர்கள். மறுநொடி சுதாரித்து அவள் எதுவும் விபரீத முடிவு எடுத்துவிடக் கூடாது என்றெண்ணி அவளைத் தடுத்தனர்.
"காவ்யா! நாங்க சொன்னத கேட்டுட்டு எதுவுமே சொல்லாம வாஷ்ரூமுக்கு போறியேமா. என்னாச்சு. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு. நீயே மனசுக்குள்ள போட்டு வச்சுக்காதடி" என்று தன்யா அவளைத் தடுத்து நிறுத்திக் கூறினாள்.
அதைக் கேட்ட காவ்யா, "இனி சொல்றதுக்கு என்ன இருக்கு? நான் வாழுறதே வீண்தான். இனியும் நான் வாழுறதுக்கு அர்த்தமே இல்லயே.." என்று விரக்தி நிறைந்த முகத்துடன் அவள் கூறுவதை கேட்டு தோழிகள் அதிர்ந்தனர். அவர்கள் பயந்ததைப் போலவே சம்பவங்கள் நிகழ்வதை பார்க்க மனம் கலங்கினர்.
"இப்டிலாம் ஏன்டி சொல்ற? எதுக்காக நீ வாழக்கூடாதுனு நினைக்கிற? உனக்காகதான நாங்க இருக்கோம். எங்கள விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டியா? என்னடி அர்த்தம் இல்லாம போச்சு? இதோட உன் வாழ்க்கை ஒண்ணும் முடிஞ்சிடாது. உன் வயித்துல இப்ப ஒரு குழந்தை வளருதுடி. அதபத்தியும் யோசிச்சு பாத்தியா?" என்று தன்யா கூறிக்கொண்டிருப்பதைக் கேட்டவளுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து குளமாகியது.
"என்னது!! என் வயித்துல வளருற குழந்தைய பத்தி யோசிக்கணுமா?? நான் எதுக்கு யோசிக்கணும்? என் வாழ்க்கையே அழிஞ்சு போனதுக்கான ஆதாரமே இதுதான். இது என் வயித்துல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நடந்த கொடூரம் தான் என் கண்ணு முன்னாடி வரும். இந்த குழந்தைய நான் எதுக்கு சுமக்கணும்?? இது என்ன என்னோட காதலுக்கு கிடச்ச பரிசா?? யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தன் என்னய சீரழிச்சதுக்கான அடையாளம். இத சுமக்குறதே பாவம். இது வயித்துல இருக்கிறதுகூட எனக்கு அவனதான் நியாபகப்படுத்துது. உடம்பெல்லாம் கூசுது. நான் இந்த குழந்தைய பெத்துக்க மாட்டேன்!!" என்று கோபம் பாதியும் அழுகை, வெறுப்பு பாதியும் கூறி முடித்தாள்.
அவள் கூறியதைக் கேட்ட தோழிகள் நால்வரும் பேச்சற்று நின்றனர். ஏனென்றால் குழந்தைகளை அளவிற்கு அதிகமாய் நேசிக்கும் ஒருவளால் குழந்தையை வேண்டாம் எனவும் ஒதுக்க முடியுமா?! என்று அதிசயித்துப் பார்த்தனர்.
குழந்தையை கருவிலேயே கொல்வது அவர்கள் ஐவருக்கும் அறவே பிடிக்காத செயல். ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று நினைத்து அவளின் தெளிவான முடிவை அறிவதற்காக மறுபடியும் பேசினர்.
"இங்க பாரு காவ்யா. உனக்கு குழந்தைங்கன்னா எவ்ளோ பிடிக்கும்! அபார்ஷன் பண்றது உனக்கே பிடிக்காதே! அப்டி இருக்கும்போது எவனோ ஒருத்தன்மேல உள்ள கோபத்துல குழந்தைய கொல்லணும்னு சொல்றியா?" என்று அனுயா அவளிடம் கேட்க, பதிலாக ஏமாற்றம் நிறைந்த பார்வையை பரிசாக அளித்தாள்.
" உங்களுக்கே தெரியுது. அவன் எவனோ ஒருத்தன்னு. எந்த உறவுல இந்த குழந்தைய நான் பெத்துக்க? இந்த உலகமே என்னய அசிங்கபடுத்தவா?? அதுக்கு நான் இப்பவே செத்துப் போயிடலாமே! உங்களுக்கு என் நிலமை புரியலயா?? புரியாட்டியும் பரவால்ல. எனக்கு இந்த குழந்த வேணாம்..வேணாம்..
வேணாம்...!!" என்று அமைதியாக பேச்சை ஆரம்பித்தவள் இறுதியில் ஆவேசத்துடன் கத்தினாள்.
அவள் இந்த விஷயத்துக்கு இப்படி நடந்துகொள்வாள் என்பதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவள் நடந்து கொண்டதில் தவறேதும் இல்லை என்றே அவர்களுக்கும் தோன்றியது. அவள் கூறுவதுதான் சரியெனவும் அவர்களுக்குப் புரிந்தது.
காவ்யாவின் நிலை மாறுமா?? கடந்த கால நிகழ்வின் தாக்கத்தை கடந்து வருவாளா?? கொடூரனின் பலி உணர்வு அடங்கியதா?? இல்லை வஞ்சம் தொடருமா?? தோழிகளால் இவளை காத்திட இயலுமா?? ராணாவின் கோபத் தீயில் பலியாகும் ஈசலாய் காவ்யாவும் மாறிடுவாளா??
❤வருவாள்❤...