Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 9


காவ்யா வேலைக்கு வந்து ஒருமாதம் ஆகியிருக்க, அவர்களின் ப்ராஜெக்டும் முடிவடையும் தருவாயில் இருந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்திருந்தனர், காவ்யா மற்றும் குழுவினர். நாளை ப்ராஜெக்டை ஒப்படைக்கும் நாள் என்பதால் அதைப்பற்றி ஒருமுறை மீட்டிங் வைத்து ப்ரசென்டேஷன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். காவ்யாவையே அதைத் தரச் சொல்லி அவள் குழுவினர்கள் மொழிய, அவளுக்கு மேல் பொறுப்பில் இருப்பவரும் அவளையே செய்யச் சொல்லி வழிமொழிந்தார்.


"யூ டிசெர்வ் இட், மிஸ். காவ்யா. உங்களாலதான் இந்த ப்ராஜெக்ட் இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ பர்ஃபெக்டா முடிஞ்சிருக்கு. சோ, நீங்கதான் இந்த ப்ரசென்டேஷனையும் பண்ணணும். நீங்க நல்லபடியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன். ஆல் த பெஸ்ட்! சீ யு இன் தி மார்னிங்!" என்று அவர் அவ்வளவு சொல்லியதால் இவளால் மறுக்கமுடியவில்லை.


இவளால் நன்றாக செய்து முடிக்க முடியுமா? என்ற பயமும் பதட்டமும் அவளுக்குள் தோன்றியது. எதற்கும் அஞ்சாதவளாக இருந்தபோது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால், இன்று நிலைமை வேறு. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தவே பல நாட்கள் எடுத்துக்கொண்டிருக்க, இதற்கு எப்படி ஒரே நாளில் தயாராவது என்ற பல எண்ணங்களில் சிக்கித் தவித்தப்படியே வீட்டை அடைந்தாள்.


வீட்டிற்குள் இவள் நுழையும்போது மற்றவர்களும் வந்திருக்க, இவளின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைக் கவனித்தத் தோழிகள் என்னவென்று விசாரித்தனர். இவளும் அதைப்பற்றிக் கூறிட,


"அட! இவளோதானாக்கும்!! இதுக்குத்தான் நீ இப்படி மூஞ்ச தொங்கபோட்டுகிட்டு வந்தியா?" என்று சரண்யா எப்போதும்போல அவளை சீண்ட,


"ஒரே நைட்ல எப்டி ப்ரிப்பேர் பண்றதுனு தான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. நாளைக்கு சொதப்பிடக் கூடாதுல.." என்று தயங்கி கூறியதைக் கேட்டவர்கள், ஏதோ தன்முன் நிற்பது காவ்யா அல்ல! அவளது மாறுவேடம்! என்பதைப் போல் பார்த்தனர்.


"நீயாடி இப்டி பேசுறது?!! எங்க கண்ணையே நம்பமுடியல!" என்று தன்யா வியந்து கூறிட, காவ்யா அப்பாவியாகப் பார்த்தாள்.


"பின்ன என்னடி!! நீயெல்லாம் என்னைக்கு ப்ரசென்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணியிருக்க?! ஓவர் நைட்ல ரெடி பண்ணி சாதாரணமா பேசி கலக்கிட்டு வருவ!" என்று ரம்யாவும் கூறிட,


"ஆமா! ப்ராஜெக்ட்ல நீ பண்ணதுதான் மேஜரா இருக்கும். அப்போ மொத்த ப்ரசென்டேஷனும் உனக்குத்தான் ஃபிங்கர் டிப்ல இருக்குமேடி. இப்பவும் அப்படித்தான? நீ செஞ்சததான அங்க சொல்லப்போற!?" என்று சரண்யா கேட்டிட, காவ்யா ஆம்! என்று தலையாட்டினாள்.


"அப்றம் என்ன? நீ தைரியமா பண்ணு. நல்லாதான் பண்ணுவ. ஓகேவா! நாங்களும் உன்கூடயே இருந்து தேவைனா ஹெல்ப் பண்றோம்" என்று அனுயா சமாதானமாகக் கூறிட, அவளை தன்யா இடைமறித்தாள்.


"அனு! ஒண்ண மறந்துட்ட! அவளுக்கு யாரும் ஹெல்ப் பண்றது பிடிக்காது. முக்கியமா வர்க்ல. அவளே பண்ணணும்னு நினப்பா. மறந்துட்டியா?" என்று கேட்டிட, தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடித்து, தலையில் தட்டிக்கொண்டாள், அனுயா. அதைப் பார்த்த காவ்யா அவள் கைகளை எடுத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள். மறுபடியும் ஐவரும் அணைத்துக்கொள்ள அங்கே சிறிய சந்தோசம் எட்டிப் பார்த்தது.


இரவு உணவை உண்ணும்போது வழக்கம்போல் அலுவலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே அருந்தினர்.


"அப்றம்! ரம்மி!! உன் ஆபிஸ்ல புதுசா யாராச்சும் ஜாய்ன் பண்ணாங்களா? வர்க் எப்டி போகுதுடி?" என்று சரண்யா அவளிடம் கேட்க,


"ஆனா, உன்னயமாறி யாரும் கேட்கமாட்டாங்கடி! வர்க்க பத்தி முதல்ல கேட்காம புது ஜாய்னி பத்தி கேட்கிறா!!" என்று அவளை ரம்யா வாற, அசடு வழிந்தவள்,


"பின்ன! எனக்கு எது தேவையோ! அதத்தானடி முதல்ல கேக்க முடியும்! அவ வர்க்க பத்தி கேட்டு நான் என்னடி செய்யப்போறேன்?!" என்று பதிலடைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.


"அடியே!! அதுசரி!! அப்ப! புதுசா யாரு ஜாய்ன் பண்ணாங்கிறதுதான் உனக்கு தேவையானதா?" என்று தன்யா கேட்டிட,


"அஃப்கோர்ஸ்டி!! இதுல என்ன சந்தேகம்? பின்ன எப்ப பாத்தாலும் வேல வேலன்னு பேசுனா பைத்தியம் புடிச்சிடும். அப்பப்ப இப்டியும் பேசிக்கணும்டி" என்று சரண்யா கூற,


"நீ அப்பப்பயா கேக்க? எப்பவுமே இதத்தானடி கேக்குற! உன் ஆபிஸ்ல யாரும் வரலயாடி?" என்று தன்யா அவளை வாறிவிட்டு கேட்க,


"அது என்னமோடி! நம்ம சமைக்கிற சாப்பாடு நமக்கு எப்டி பிடிக்கிறதில்லயோ! அதுமாதிரி நம்ம ஆபீஸ் பசங்களையும் எனக்கு பிடிக்கிறதில்லடி" என்று சரண்யா சலித்துக்கொள்வதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட,


"லூசு பக்கி! எக்ஸாம்பிளா எதுக்கு எத கம்பேர் பண்றா பாரு!!" என்று அனுயா கூறி சிரித்திட,


"நமக்கு சோறுதான் முக்கியம்! கண்ண மூடுனாலே கனவுலயும் நீதான! மாதிரி, சோறுதான் எப்பவும் எங்களுக்கு! என்னடி சரு!" என்று ரம்யாவும் ஆதரவாகப் பேசி சரண்யாவைப் பார்க்க, இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டனர்.


"இதுங்கள திருத்தவே முடியாது!" என்று தன்யா சலித்துக்கொள்ள,


"இப்ப திருந்தி என்னாகப்போறோமா?!! வாழ்க்கைய என்ஜாய் பண்ணுடி! எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருக்காத! இப்படி இருக்க உன்னய பாக்க வர்ற குழந்தைங்கல்லாம் என்னாகுமோ! பாவம்டி அதுங்க!!" என்று சரண்யா தன்யாவைக் கிண்டல் செய்ய, அவளோ பொய்யாக முறைத்தாள்.


"சரி! கூல்...தனு! உன் ஹாஸ்பிட்டல்லலாம் யாரும் பாக்கிற மாறி இருப்பாங்களாடி?!" என்று ரம்யா வினவ,


"அட்போடி! நான் என்ன டாக்டரா இருக்கேன்! ஐம் அ பீடியாட்ரிஷியன். என்கிட்ட குழந்தைங்க தாண்டி வருவாங்க. அவங்ககூட அவங்க அப்பா அம்மா வருவாங்க. இவங்கள பாக்கவே எனக்கு டைம் சரியா இருக்கும். இதுல எங்க நான் மத்த டிபார்ட்மென்ட்கு போறது! பாக்குறது!" என்று சொல்வதைக் கேட்ட ரம்யா,


"அச்சோ! ரொம்ப பாவம்தான்டி நீ! இவ்ளோ சின்ன வயசுல உனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினையா?" என்று அப்பாவியாகக் கூறி உச்சுக்கொட்டினாள். அவள் கிண்டல் செய்வதை அறிந்த தன்யாவோ,


"அடியே!! என்னடி! கிண்டலா?? எனக்கு ஒண்ணும் அது பெரிய விஷயமாலாம் தெரியல. எனக்கு அதனால எந்த ப்ராப்ளமும் இல்ல. சோ, நீ என்னயபத்தி கவலப்படத் தேவையில்லை செல்லம்!" என்று பதில் கூறி அவள் வாயடைக்க,


"சரி விடு! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட! அனு! உன் ஆபீஸ்ல...நிறைய பேரு இருப்பாங்களே..நீ எப்படியும் யாரையும் பாத்துருக்கமாட்ட! உன்னோட வேலை அப்டி. ஆனா, உன்னய யாராச்சும் பாத்துருப்பாங்களே..!! அது யாருனு சொல்லு! கேப்போம்" என்று ரம்யா கேட்டிட, அனுயாவுக்குப் புரையேறியது. தலையைத் தட்டிவிட்டு சரண்யா தண்ணீர் கொடுக்க, அமைதியாக அதை வாங்கிக் குடித்தாள்.



"கேட்டதும் புரயேறுது!! அப்ப கண்பாஃர்மா யாரோ இருக்காங்க! சீக்கிரம் சொல்லுடி யாருன்னு!" என்று ரம்யா அவளை வாட்டி எடுக்க, மற்றவர்களும் காவ்யா உள்பட அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.
அனுயா அவர்கள் பார்ப்பதைப் பார்த்து தயங்கி கீழே குனிந்துகொண்டே,


"ஒருத்தர் இருக்காரு! ஆனா...அவரு என்மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கரானு தெரியல...ஆனா என்னய பாக்குறமாறிதான் இருக்கு...அவரும் இதுவரைக்கும் எதுவும் டைரக்டா எதையும் காட்டிக்கல...நானும் கேட்டுக்கல...ஆனா, எனக்கு தெரிஞ்சு என்னய பாக்குற ஆளுனா அது அவரு.. ஒருத்தர்தான்" என்று தயங்கி வெட்கிக்கொண்டே கூறுவதைப் பார்த்த நால்வருக்கும் தலை சுற்றாத குறையாகிப் போனது.


"ஹே..நல்லாப் பாருங்கடி! இது நம்ம அனுதானாடி?!" என்று தன்யா அதிர்ச்சியில் கூறிட,


"ஆமாடி! அனு மாறிதான் இருக்கு. ஒருவேள..கனவா இருக்குமோ..!!?"என்று சரண்யா கேட்டிட, அவள் கையில் ரம்யா நறுக்கென்று கிள்ளிவைக்க, சரண்யா ஆஆஆஆஆ என்று கத்தினாள்.


"கனவில்லடி இது. நிஜந்தான்!" என்று ரம்யா அப்பாவியாகக் கூறிட, அவளைக் குனிய வைத்து முதுகிலே அடிபோட்ட சரண்யா,


"அத உன்னய கிள்ளி செக் பண்ணவேண்டிதானடி? பன்னி!!", என்றிட, "வலிக்குமே.." என்று கூறி, அடி தாங்காமல் முதுகைத் தேய்த்துக் கொண்டாள். "இப்ப மட்டும் இனிக்குதா நல்லா!?" என்று கூறி பழிப்புக் காட்டினாள், சரண்யா.


இவர்களின் கூத்தைப் பார்த்துச் சிரித்த அனுயாவிடம் திரும்பியவர்கள்,


"பாத்தியாடி இவள!! இத்தன நாளும் நம்மகிட்ட சொல்லாம மறச்சிருக்கா!!" என்று சரண்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,


"அப்டிலாம் இல்லடி! எனக்கே ஆபிஸ் போனதுக்கப்றம், இப்ப கொஞ்ச நாளாதான் தெரியும். அதுவும் வெறும் சைட் அடிக்கிறத எப்டிடி சொல்ல சொல்ற?! ஒருவேள லவ்னா உங்ககிட்ட சொல்லாம எங்க போகப்போறேன்!?" என்று கூறி சமாதானம் செய்திட,


"சரி! சரி!! மன்னிச்சிட்டோம்! அப்றம்! இந்த விஷயம் உனக்கு எப்டி தெரிஞ்சது??" என்று ஆர்வமாகக் கேட்டிட,


"எனக்கு என்னோட கொலீக்! நம்ம வீட்டோட ஓனர் இருக்காளே..அன்னைக்குக்கூட வந்தாளே கீதா!...அவ சொல்லித்தான் டவுட் வந்துச்சு. அன்னைக்கு வந்தப்பவே 'உனக்கும் சாருக்கும் இடையில எதுவுமா?' னு கேட்டா, நான் இல்லனுதான் சொன்னேன். அப்றம், ஜாய்ன் பண்ணப்றம் நான் வந்தது தெரிஞ்சு என்னய கூப்டு விசாரிச்சாரு. நானும் எப்பவும் மாதிரினு நினச்சுட்டு விட்டுட்டேன். ஆனா, கொஞ்ச நாள் போகப்போக சார் அடிக்கடி ஆபீஸ் வர ஆரம்பிச்சாரு.." என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளை இடைமறித்தாள் சரண்யா.


"அப்போ உன்னய சைட் அடிக்கிறது உன்னோட பாஸா!!??" என்று கேட்டிட, அவளும் ஆம்! என்று தலையை ஆட்டினாள். அதைக் கண்ட தோழிகள் இன்னும் அதிர்ச்சியடைய,


"பார்றா!! அதான் அம்மணிக்கு வெட்கம்லாம் வந்துச்சோ..!!" என்று கேலி செய்திட,"அப்டிலாம் இல்லடி! பாஸ்ங்கிறதால ஒண்ணும் இல்ல. அவரு ரொம்ப நல்ல டைப்டி. அதான்! அவர தப்பா நினைக்கத் தோணல!" என்று உண்மையாய் கூறினாள்.


"அதான! இல்லைனா இவ இப்டி வெட்கப்படுற ஆளா?!!" என்று கிண்டல் செய்தனர். அனுயா கூற வர ரம்யா மீண்டும் இடைமறித்து,


"அவரோட ஆபீஸ்க்கு அவரு வர்ரதுல என்னடி பிரச்சினை? அதுல சந்தேகமா உனக்கு??" என்று கேட்க, அவளைப் பொய்யாக முறைத்த அனுயா,


"சொல்றத கேளுடி ஃபர்ஸ்ட்! அவரு அதிகமா ஆபீஸ்கு வரமாட்டாரு. ரொம்ப ரேர்தான். அவர மீட் பண்றதும் நாங்க ஒருசிலர் தான். அதான் அப்டி சொன்னேன். ஆனா, அவரு இப்ப கொஞ்ச நாளாதான் இப்டி வர்ராருனு என் கொலீக் கீதா சொன்னா. வந்தப்பலாம் என்னய கூப்டு எதாச்சும் வேல சம்பந்தமா டிஸ்கஸ் பண்ணுவாரு. ஆனா, பார்வை அடிக்கடி என்மேல வந்துட்டு போகும்...இதெல்லாம் வச்சுதான் சைட் அடிக்கிறாருனு நானும் கண்பாஃர்ம் பண்ணேன்டி.." என்று கூறி வெட்கப் புன்னைகை சிந்த,


"என்னனாலும் பண்ணுடி! ஆனா, வெக்கம் மட்டும் படாதடி! கருமத்த பாக்கமுடியல...!!" என்று சரண்யா கிண்டல்
செய்ய அவளைச் செல்லமாக அடித்தாள், அனுயா.


"அவள ஏன்டி அடிக்கிற? முன்னபின்ன இதெல்லாம் பாத்தாதான தெரியும்! இப்டி பொசுக்குன்னு பண்ணா நாங்க என்னனு ரியாக்ட் பண்றது?!" என்று ரம்யாவும் சேர்ந்து கேலி செய்ய, அனைவரும் சிரித்தனர்.


"ஆனா! அவரு பாக்குறத பாத்தா சைட் மாறி தெரியலயே! லவ்வே இருக்கும்போல!" என்றும் தன்யா கூறிட, மற்றவர்களும் ஆமோதித்தனர்.


"எதுவா இருந்தா நமக்கென்னடி! யாராச்சும் சைட் அடிப்பாங்களான்னு கேட்டீங்க! அதனால அது நியாபகம் வந்துச்சு. சொன்னேன். அவ்ளோதான்! அதுக்குமேல எந்த தாட்டும் எனக்கு இல்லடி. அதபத்தி நானும் பெருசா எதுவும் யோசிக்க விரும்பல" என்று சாதாரணமாகக்
கூறி முடித்தாள்.


"அப்ப நம்ம க்ரூப்ல ஃபர்ஸ்ட் நம்ம அனு கமிட்டாக வாய்ப்பிருக்குனு தோணுதுடி!" என்று சரண்யா கூறி மகிழ, அதைக்கேட்ட அனுயாவோ,


"அதான் அப்டிலாம் எதுவும் இல்லனு சொல்றேன்ல! அதுக்கப்றமும் என்ன அதபத்தியே பேசிகிட்டு. எனக்கு இந்த லவ் அண்ட் மேரேஜ்ல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல. புரியுதா?!ஒழுங்கா சாப்டுங்க!!" என்று சொல்லி அவர்களை அடக்கினாள்.


அதைக் கேட்ட காவ்யா மனம் வருந்தினாள். "அனுமா! எதுக்காக இப்டி பேசுற? லைஃப்ல லவ் அண்ட் மேரேஜ் இதுலாம் சகஜம். எல்லாருக்கும் வர்ரதுதான். உனக்கும் வந்தா அது நல்லதா இருந்தா அக்செப்ட் பண்றதுல எதுவும் தப்பில்லையே!! எதுக்காக அத அவாய்ட் பண்ண பாக்குற?" என்று கவலையாக கேட்டிட,


"அவாய்ட்லாம் பண்ணலடா. இன்ட்ரஸ்ட் இல்ல. அவ்ளோதான்!" என்று கூறி சமாளிக்க, அதை நம்பாதவள்,


"இல்ல!! நீ பொய் சொல்ற! அவரப்பத்தி பேசும்போது உன் கண்ணுல அவ்ளோ சந்தோசம் தெரிஞ்சது! ஆனா லவ், கமிட்மண்ட்னு பேசுனா திட்டுற! அவரு உன்னய லவ் பண்ண மாட்டாருனு பயப்படுறியா? தேவையில்லாம ஃபீலிங்க்ஸ வளக்க வேணாம்னு நினக்குறியா, அனு? இல்ல...என்னய நினச்சு இப்டி சொன்னியா??" என்று காவ்யா கூறி அவளைக் கூர்மையாகப் பார்த்திட, அவள் கடைசி வரியில் அதிர்ச்சியடைந்தாள்.


என்ன சொல்லி உண்மையை மறைத்து அவளை சமாளிப்பது? என்று தெரியவில்லை அனுயாவுக்கு. நால்வரும் அனுயாவைப் பதிலுக்காக பார்த்துக் கொண்டிருக்க,


"ஹே! காவிமா!! நீ நினைக்கிற மாறிலாம் ஒண்ணும் இல்ல. அவரு நல்லவர்னுதான் சைட் அடிச்சாலும் ஒண்ணும் சொல்லல. தப்பான பார்வை பாத்ததில்ல. அவர்மேல எனக்கு நிறைய மரியாதை மட்டும்தான் இருக்கு. அவருக்கும் அதேதான். ஒருவேள அவரே லவ்வ வந்து சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு அவர்மேல இருக்கிற மரியாதையைத் தாண்டி அவர்மேல எனக்கு லவ் வந்துச்சுன்னா, நானே அவர்கிட்ட போய் சொல்லிடுவேன்டி. அதுலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. புரியுதா! லவ் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அது வந்தா நீ சொன்னமாறி அக்செப்ட் பண்ணிக்குறேன். ஓகேவா?!" என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி அவளைச் சமாளித்திட, அவளும் இவள் கூறியதை ஆமோதித்து அமைதியடைந்தாள்.


"அப்ப நீ இப்போதைக்கு கமிட்டாகுற மாறி தெரியல! பேசாம ரம்யா! நீதான்டி கமிட்டாகணும்!" என்று நிலைமையை சகஜமாக்க சரண்யா கேலி செய்திட,


"அடப்போடி!! எங்க ஆபிஸ்ல எல்லாமே மொக்க பீசுடி!" என்று சளித்துக்கொள்ள,


"என்னடி! இப்படி சொல்ற? நீ ஐடில தானடி வர்க் பண்ற! அங்கயா மொக்கனு சொல்ற?!" என்று தன்யா கிண்டல் செய்ய,


"அடியே!! ஐடில பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருப்பாங்கடி. ஆனா, பசங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருக்காங்களா!? எதுக்கு நீங்களா கற்பனை பண்ணி என் வயித்தெரிச்சல கொட்டிங்குறீங்க..?!! அதுவும் எங்க கம்பெனில எல்லாம் மொக்க. அழகா இருந்தா அறிவு இருக்காது..அறிவா இருந்தா அழகு இருக்காது...இங்க சைட்டுக்கே வாய்ப்பில்லயாம். இதுல கமிட்மெண்ட் பத்தி பேசி கடுப்படிக்கிறாக இவளுக!!" என்று பொறிந்து தள்ளினாள்.


இதைக் கேட்டவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட, அவர்களுடன் சேர்ந்து ரம்யாவும் சிரித்துவிட்டாள். இவர்களின் சிரிப்பைக் கண்ட காவ்யாவுக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டாள். அதைக் கண்ட ரம்யாவும் சரண்யாவும் தங்கள் திட்டம் வென்றதை எண்ணி கட்டைவிரல் தூக்கிக் காட்டி கண்ணடித்துக் கொண்டனர்.


இறுக்கமான சூழ்நிலைகளில் இவர்கள் குறும்பு செய்து நிலைமையை சகஜமாக்குவது வழக்கம். இன்றும் அதைப்போலவே செய்ய, காவ்யாவும் சிரித்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தனர். ஆனால், இதுவே இவளது கடைசி சிரிப்பாக இருக்கப்போவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை...! இவர்களிடம் தற்சமயம் தோன்றியிருக்கும் மகிழ்ச்சியும் பறிபோகும் நாளும் நெருங்கியது...







❤வருவாள்❤...

கதையை படிச்சு தொடர்நது ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நட்புக்களே!!
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நட்புக்களே...

- தமிழுக்கினியாள்


Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 10


இப்படியே அரைமணி நேரத்தில் முடியவேண்டிய சாப்பாட்டு நேரம் இரண்டு மூன்று மணி நேரமாக நீள்வது இவர்களது வழக்கம். ஐவரும் நிறுவனத்திற்குச் செல்ல ஆரம்பித்தபின் அவர்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துபோனது. ஆதலால், இரவு உணவு உண்ணும் நேரத்தை அவர்கள் பேசி, பகிர்ந்து, களிக்கும் நேரமாக எடுத்துக்கொண்டனர்.


அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அதே குஷியுடன் வந்து காவ்யாவுடன் அமர்ந்தனர். ஏனென்று தெரியாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த சில நாட்களாக அவர்களிடத்தில் சற்று நிம்மதி பரவத் தொடங்கியது காவ்யாவின் நிம்மதியினால். இன்று சந்தோசமும் நிறைந்திருக்க, அவர்களுக்கு மனநிறைவாக இருந்தது.


இன்னும் இந்நிலை மாறி காவ்யா முழுவதுமாக பழையபடி மாறிவிட்டால் மனம் முழு நிம்மதி அடைந்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது நால்வருக்குள்ளும். காவ்யாவின் வயிற்றில் வளரும் கருவை கலைத்தால் தான் அவள் முழுமையாக மீண்டு வர இயலும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், அவளின் ப்ராஜெக்ட் காரணமாக அவள் முழு கவனத்தையும் செலுத்தி வரும் இந்நேரத்தில் அவள் மனதை கலைக்கும் எண்ணமின்றி விட்டுவிட்டனர்.


காவ்யாவின் ப்ராஜெக்ட் முடிந்தபின் கூட்டிச் செல்ல முடிவுசெய்திருந்தனர். அந்நேரமும் வந்துவிட்டது. அதனால் எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டனர். ஆனால்..!! இவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கவே ஒருவன் அங்கு திட்டம் தீட்டி தீவிரமாகக் காத்திருப்பது இவர்களுக்குத் தெரியாமல்போனது.


காவ்யாவுடன் அவர்கள் அமர்ந்திருக்க, அவளும் அவளுடையப் ப்ரசென்டேஷனை முடித்து தயார் செய்துவிட்டபின் அனைவரும் ஒருவித திருப்தியில் கண்ணயர்ந்தனர். காவ்யாவும் கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினாள், நாளைய விடியலை நோக்கி எதிர்ப்பார்ப்புடன்...


காலை விடிந்ததில் இருந்து ஒருவித பரப்பரப்புடனும் மனதில் தோன்றிய சிறு உற்சாகத்துடனும் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள், தோழிகள். அனைவரும் தயாராகியபின் ஒன்றாகவே பேருந்து நிறுத்தம் வரை சென்றனர். காவ்யா பேருந்தில் செல்வதால் மற்ற நால்வரும் பேருந்திலே சென்றனர். வேறு வேறு பேருந்துதான் என்றாலும் நிறுத்தம்வரை துணையாக வரலாம் என்றே இப்படி முடிவு செய்திருந்தனர். காவ்யாவுக்கான பேருந்து வரவும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைத்தனர். பின்பு, அவர்களும் அவரவர் பேருந்தில் ஏறிச் சென்றனர்.


நிறுவனத்தை அடைந்தவள் அவள் அலுவலக தளத்துக்கு வந்துசேர, ப்ரசென்டேஷனைப் பற்றி விசாரித்தனர். அவளும் பதில் கூறிவிட்டு தன் இடத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். மீட்டிங்கிற்கான நேரமும் வந்துவிட, நன்றாக செய்து முடிக்கவேண்டும் என்ற பதட்டத்தோடு மீட்டிங் அறைக்குள் சென்றாள். சிறிதுநேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, இவளும் இவளது ப்ரசென்டேஷனைக் காட்ட தயாரானாள்.


அறையின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட ஒரு நிமிடம் மிரண்டு போனாள். ஆனால், உடனே அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்துவிட்டவள் தன் விளக்க உரையை ஆரம்பிக்கத் தயாரானாள். அவள் ப்ரசென்டேஷனைத் திரையில் போட்டுக்காட்டி மிகவும் அழகாக விளக்கிக் கூறுவதைப் பார்த்த அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்.


இவள் இங்கே விளக்கிக் கொண்டிருக்கும்போது அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான், ராணா தேவ். அறை முழுவதும் இருட்டாக இருப்பதாலும் காவ்யாவின் பக்கம் மட்டும் ஒளி இருப்பதாலும் அவளுக்கு வந்தது யாரெனத் தெரியாமல் தொடர்ந்து அவள் விளக்க உரையைக் கூறி முடித்தாள். அவள் திறமையைக் கண்டு ஒருநொடி அவனாலும் அவளை மனதில் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.


அவள் முடித்தபின் அறையில் கைதட்டல்கள் ஒலித்தது. அவளை மனமாரப் பாராட்டினார்கள். அது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்து புன்னகைத்தாள். அந்த பாராட்டுக்களை அவளது திறமைக்கு கிடைத்த வெற்றியாய் எண்ணி மகிழ்ந்தாள். ஆனால், அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த ராணாவோ கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.


அதன்பின், அறையின் விளக்குகள் போடப்பட, ஒவ்வொருவராக அவர்களது சந்தேகங்களை அவளிடம் கேட்டனர். அதற்கும் அவள் நிதானமாகவும் தெளிவாகவும் விளக்கம் கூறி பதில் அளிப்பதைக் பார்த்து அனைவரும் அவளை மெச்சினர். அனைவரும் கேட்டு முடித்துவிட்டபின், ராணா,


"ஹலோ!! கேன் யூ அன்சர் மை க்வஸ்டின்??" என்று கேள்வி எழுப்பிட, கேள்வி வந்த திசையில் இவளும் பார்த்திட, அங்கே அவன் கண்களில் திமிருடன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவள் அதிர்ந்து விழிக்க, அவளுக்கு சுற்றியும் சூழல் மறைந்து கண்கள் சொருகி மயங்கிக் கீழே சரிந்தாள்.


அவள் விழுந்ததைப் பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தாலும் மறுநொடி குழம்பினான். 'தன்னைப் பார்த்துதான் மயங்கினாளா?! அப்படி என்றால் எதற்காக?? ஏன் என்னைப் பார்த்து மயங்கினாள்?? அப்படியென்றால் என்னைப் பார்த்துப் பயப்படுகிறாளா இவள்??! நான் கொடுத்த தண்டனையை இன்னும் மறக்கவில்லை என்று தானே அர்த்தம் இதற்கு?!" என்று எண்ணும்போதே அவன் முகத்தில் ஆனவத்தின் அடையாளமாய் கர்வப் புன்னகை பூத்தது.


இங்கே மயங்கி விழுந்தவளை அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்க, அவள் மெல்ல கண்களைத் திறந்தாள். அவள் மயங்கியதில் பதறி எழுந்த அனைவரும் அப்போதே சற்று அமைதியடைந்தனர். அதன்பின், மீட்டிங் முடிந்துவிட்டமையால் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட, இவளை மெல்ல எழுப்பினர், அவளுடன் பணிபுரியும் தோழிகள். அனைவரின் முன்னிலையிலும் அவளை அவமானப்படுத்த எண்ணியிருந்தவனின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டக் கோபத்தில் அவர்களிடம் கத்தினான்.


"இது என்ன ஆபீஸா?? இல்ல ஹாஸ்பிடல்லா?? மயங்கி விழறதுக்கு என் ஆபிஸ்தான் கிடைச்சதா?? யூ இடியட்!!" என்று கோபத்தில் கத்திட, அதைக்கேட்ட காவ்யா அதிர்ந்தாள். அவனைக் கண்டு பயந்துபோய் தலைகுனிந்து நின்றவள், இது அவனது ஆபீஸ்! என்று கூறியதைக் கேட்டதும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த கோபக் கனல் அவளுக்கு பழைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியது.


அதைத் தாங்கமுடியாமல் கண்களை மூடியவள், மறுநொடி கண்களைத் திறந்துகொண்டு அங்கிருந்து அவனைப் பாராமல் ஓடினாள். அது அவனை இன்னும் கோபப்படுத்திட,


"இஸ் திஸ் தி வே ஷீ பிகேவ் டு ஹெர் பாஸ்??(இதுதான் அவ பாஸ்கிட்ட நடந்துக்குற முறையா??) அவள என் ரூமுக்கு வந்து என்னய பாக்க சொல்லுங்க! இம்மீடியேட்லி!" என்று கோபமாகக் கூறிச் சென்றான். இங்கு அந்தப் பெண்கள் இருவரும் என்ன ஆகுமோ?! என்ற பயத்துடன் சென்றனர்.


ஓடிவந்தவள் தன் கேபினில் அமர்ந்து மேசையில் முகத்தை மறைத்தபடி வைத்து இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீழாமல் இருந்தாள். 'தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும்? தன் வாழ்க்கையில் எத்தனை விபரீதங்களை இன்னும் சந்திக்க வேண்டுமோ?!' என்று எண்ணி நொந்தவள், 'என் வாழ்வைச் சீரழித்தவனின் நிறுவனத்திலேயே நான் இத்தனை நாட்களாய் வேலைப் பார்த்திருக்கிறேனா?!' என்று எண்ணும்போதே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.


அவளிடம் வந்த அந்தப் பெண்கள் இருவரும் முதலில் அவள் உடல்நிலையைப் பற்றி விசாரித்தனர். "என்னாச்சு காவ்யா உனக்கு?! திடீர்னு மயங்கிட்ட! எல்லாரும் ரொம்ப பயந்திட்டோம். இப்ப பராவலயா?! இல்லனா ஹாஸ்பிடல் போய்ட்டு வருவோமா?" என்று ஒருத்தி கேட்டிட அதிர்ந்தவள்,


"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ப்ரசென்டேஷன் ப்ரிப்பேர் பண்ணதால நேத்துல இருந்து சரியா சாப்டல, தூங்கல!! அதனாலதான் மயக்கம் வந்துடுச்சு. இப்ப நல்லா இருக்கேன்" என்று கூறிச் சமாளித்திட,


"என்ன காவ்யா? இதுக்காக சாப்டாம தூங்காம ஏன் வருத்திக்கிற? எனிவேஸ், யுவர் ப்ரசென்டேஷன் அண்ட் எக்ஸ்ப்ளனேஷன் வாஸ் சூப்பர்ப்!! ரொம்ப நல்லா பண்ண! எல்லாரும் உன்னய பாராட்டுனாங்க! எங்க சார்பாவும் கங்க்ராட்ஸ்!!" என்று வாழ்த்துக்கள் கூறி கைகுலுக்கினர், இருவரும்.


அதன்பின், "சாப்டாமத்தான மயங்கின! இரு என் லஞ்ச் கொண்டு வரேன். சாப்டு முதல்ல!" என்று அக்கறையாய் கூறிட,


"அதெல்லாம் வேணாம். காலைல சாப்டுத்தான் வந்தேன். இல்லைனா சுத்தமா பண்ணிருக்க முடியாதுல்ல!" என்று கூறி சமாளித்தாள். அதன்பின், இருவரும் சற்று தயங்கியபடி, "உன்னய பாஸ் கூப்ட்டாரு காவ்யா. உடனே வரசொல்லுனு கோபமா சொல்லிடடுப் போனாருடி!" என்று கவலையாகக் கூறிட, அவள் அதிர்ந்து இவர்களைப் பார்த்தாள்.


"எ..ன்ன..ய.. கூப்டா..ரா??!! எ..து..க்கு??" என்று வார்த்தைகள் வராமல் கேட்டுமுடிக்க, அவளின் இந்த பயம் நிறைந்த பக்கத்தை இதுவரை பார்த்திராதவர்கள் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தனர். அதைக் கவனித்த காவ்யாவும் தன்னை சமன்படுத்திக்கொண்டு,


"என்னய எதுக்கு கூப்டாரு? அதுவும் கோபமானு சொல்ற? என்மேல கோபப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்? நல்லாதான ப்ரசென்டேஷன் பண்ணேன்?!" என்று முடிந்தளவு சாதாரணமாகப் பேசிச் சமாளித்திட, அவர்களும் சந்தேகம் நீங்கி தெளிவாகினர்.


"அது நீ அவர் இருக்கும்போதே ஓடி வந்துட்டேல்ல! அதுக்குத்தான் சாருக்கு கோபம்! நீ போய் பாத்துட்டு வா! இல்லன்னா இன்னும் கோபப்பட போறாரு!" என்று கூறிட,


"எனக்கு மறுபடியும் ஒருமாறி வந்ததுனு ஓடிவந்தேன். அதுக்குன்னு சொல்லிட்டு பெர்மிஷன் லெட்டர் கொடுத்துட்டா வரமுடியும்!" என்று அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாதாரணமாகப் பேசினாள். "சரி! போறேன்!" என்று கூறிட அவர்களும் சென்றுவிட்டனர். இவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவன் அறைக்குச் சென்றாள்.


அறையின்முன் நின்றவள் சிறிது யோசனைக்குப் பிறகு தயங்கி, கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, இவள் நுழைவதைப் பார்த்ததும் முதலில் கோபமாகக் பார்த்தவன், அதன்பின் அவளை அளவெடுக்கும் பார்வையில் மேலிருந்து கீழ்வரை கண்களை அலைபாயவிட, அதைக் கண்டவளுக்கோ உடலெல்லாம் கூசியது. உடனே, தனது துப்பட்டாவை இழுத்துவிட்டவளைப் பார்த்தவன்,


"என்னடி!! என்னமோ புதுசா பாக்குறதுமாறி இழுத்து போத்திக்குற!" என்று அவளை சீண்டிப் பார்ப்பதற்காக வேண்டுமென்றே அவன் கொச்சையாகப் பேசிட, அதைக் கேட்டு முகம் சுழித்துத் தலைகுனிந்தாள். அவளின் சங்கடத்தைப் பார்த்து ரசித்தவன், அவளை மேலும் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டான். ஆனால், அவளோ அதற்குமுன்,


"மை ரிசைனேஷன் லெட்டர்!" என்று கூறி அவள் இராஜினாமா கடிதத்தை அவன் மேசையில் வைத்துவிட்டுச் சென்று அறைக் கதவைத் திறக்கும் வேளையில், வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அவளருகில் வந்தவன், அவள் கையைப் பற்றி நிறுத்தினான். அவள் தடுமாறியபடி நின்று அவனைப் பார்க்க, அவனோ அவளின் தோள்களைப் பற்றி அருகில் இழுத்தவன்,


"என்னடி நினச்சுட்டு இருக்க உன் மனசுல?! பெரிய மகாராணினா? நீ நினச்சபடி பண்ணிட்டு போவ! அத நான் பாத்துட்டு நிக்கணுமா!? என்னய எதிர்த்தவன் யாரும் அடுத்தமுற என்னய எதிர்க்க துணிஞ்சதில்ல! ஆனா, நீ ஒவ்வொரு முறையும் என்னய இன்சல்ட் பண்றமாறியே நடந்துக்குற! இது உனக்கு நல்லதே இல்ல!! மறுபடி மறுபடி தப்பு பண்ற!" என்று அவள் முகத்துக்கருகில் வந்து கோபத்துடன் பேசிட, அவன் பேசியது எதையும் கவனிக்காமல் அவள் பயத்தில் உள்ளுக்குள் நடுங்கியபடி நின்றாள்.


அவன் பேசி முடித்து அவள் தோள்களில் இருந்து கைகளை எடுத்து அவளைச் சுற்றி வளைத்து நிற்க, மிரண்டுபோனவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு கதவைத் திறந்து வேகமாகச் சென்றுவிட்டாள். அவள் தள்ளிவிட்ட வேகத்தில் இவன் சற்று தடுமாறி நின்றான்.


அவன் இவ்வளவு பேசியும் அவள் அதை துளியும் மதிக்காமல் மறுபடியும் இவனை அவமதித்துச் சென்றது கோபத்தை அதிகரித்தது. அவள் தன்னைப் பார்த்துப் பயந்தாலும் இன்னும் அவள் திமிர் அடங்கவில்லை! என்று எண்ணியவனுக்கு அவளைப் பழி வாங்கும் எண்ணம் இன்னும் கொளுந்துவிட்டு எரிந்தது.


அவனிடம் இருந்து தப்பி வந்தவள் கேபினில் சென்று அமர்ந்தாள். அவளுக்கு அந்நேரத்தில் உறுதுணையாக யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தவளின் கண்களை நீர் நிறைத்தது.


சிறிதுநேரம், அப்படியே இருந்தவள் திடீரென நியாபகம் வந்தவளாய் நிமிர்ந்தவள், இதற்குமேல் இங்கிருப்பது சரியல்ல! வேலையைவிட்டுச் செல்ல அவன் இன்னும் அனுமதி தரவில்லை. தரவும் மாட்டான் என்று அவள் உள்மனம் சொல்லியது. ஆனால், அவன் அனுமதி தேவையில்லை! இங்கிருந்து முதலில் கிளம்புவதே நலம் என்று அறிந்து அவள் பொருட்களை எடுத்தவள் வேகமாகக் கிளம்பிச் சென்றாள்.


அவள் வேகமாக வெளியே செல்வதைப் பார்த்து அவளுடன் பணிபுரிபவர்கள் சிலர் கேட்டிட, உடல்நலம் சரியில்லாததால் விடுப்பு எடுத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியே வந்த பின்னரே அவளுக்கு பயம் நீங்கி மூச்சு சீராக வந்தது. அந்த நிம்மதியில் அவள் பேருந்து ஏறும் நிறுத்ததிற்கு நடந்து சென்றாள்.


இங்கே ராணா கோபமாக, "என்னோட பெர்மிஷன் இல்லாம அவ எப்டி ரிஸைன் பண்ணுவா??" என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணை அழைத்து, காவ்யாவை அழைத்து வரச்சொன்னான்.


சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்தவள், அவள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறிட, அதைக் கேட்டு அதிர்ந்து கோபம் கொண்டான். "வாட்?! அது எப்டி பாஸ்கிட்ட பர்மிஷன் வாங்காம போவா?!" என்று கோபமாகக் கேட்டிட,


"சார்!! அவங்க சீப் பேஷன் டிசைனர். அவங்களுக்கு இதுக்கு பர்மிஷன் இருக்கு சார். நீங்க இல்லாதபோது நாங்களும் எங்க ஹெட்கிட்டதான் பர்மிஷன் வாங்குவோம். அவங்க அதுமாறிதான் சொல்லிட்டு போயிருக்காங்க, சார்!" என்று மிகவும் பொறுமையுடனும் பயத்துடனும் தயங்கி தயங்கிக் கூறிட, அதைக் கேட்டவன் எரிமலையாய் வெடித்தான்.


"இங்க நான் இல்லாதப்ப பாத்துக்கதான் உங்க ஹெட்ஸ், மேனேஜர் எல்லாம்! நான் இருக்கும்போது இல்ல! அவ இஷ்டத்துக்கு எப்ப வேணாலும் போகலாம்னா அவ இஷ்டத்துக்கு ரிஸைன் கூட பண்ணலாமா?! ஹான்! அதுவும் நம்ம கம்பெனி ரூல்ஸ்ல இருக்கா என்ன? டெல் மீ!" என்று கோபத்தில் வெடிக்க, அதைக் கேட்டுப் பதறியவள், அவன் கேலிக்குக் கேட்டக் கேள்வியை நிஜமென நினைத்து,


"நோ..நோ..சார்!! முடியாது..சார்!! ஆனா, அவங்க எதுக்காக சார் ரிசைன் பண்ணப்போறாங்க?? அவங்க இங்க சீப் டிசைனர். அவங்களுக்கு வேற கம்பெனிஸ்ல இருந்து எத்தனையோ ஆஃபர் சேலரி அதிகமா வந்தப்பக்கூட அவங்க நம்ம கம்பெனியவிட்டு போகலயே...சார்..!!" என்று பயந்தபடியே கூறி முடித்தவள் அமைதியானாள்.


இதைக் கேட்ட ராணாவும், 'அப்போ...எனக்கு பயந்து போய்தான் ரிசைன் பண்ணிட்டு போறியா?? இங்கயே இருந்தாதான் உன்னய பழி வாங்க முடியுமா என்ன?? ஆனா, இப்ப நீ போயிட்டா திரும்ப வரமாட்ட! உன்னய திரும்ப வரவைக்கணும்னாலும் ரொம்ப நாளு ஆகும்...!! அப்படி உன்னய விட்டுட முடியாது...ம்ம்...!!' என்று பல்லைக் கடித்தபடி கோபத்துடன் யோசனையில் இருக்க,


'ஆனா..உன் திமிரு இன்னும் அடங்கலல...உன்னோட பாஸ்கிட்ட கூட எதுவும் எக்ஸ்ப்ளைன்கூட பண்ணாம போயிருக்கன்னா எவ்ளோ திமிரு இருக்கணும்..ச்ச...எப்படியாவது தப்பிச்சுட்டே இருக்கா..!!' என்று எண்ணியவன் ருத்ர மூர்த்தியாக மாறினான்.


அவள் தன் திட்டம் அனைத்திலும் இருந்து தப்பிப்பது அவளது சாதுர்யமா? இல்லை, அவளது நல்ல நேரமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்குக் கோபம் தலைக்கேறியது. இன்னும் அந்தப் பெண் அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்தவன்,


"இன்னும் எதுக்கு இங்க நிக்கிறீங்க? கெட்டவுட்!!!" என்று கத்திட, அவள் பயந்து வேகமாக வெளியே செல்லப்போக, அவளை அழைத்து,
"இனிமேல் இந்த ஸில்லி ரூல்ஸ்லாம் என் கம்பெனில இருக்கக்கூடாது! இனி எதுனாலும் என்கிட்ட கேட்காம நடக்கக்கூடாது! யாரும் எதுவும் பண்ணவும் கூடாது! கோ அண்ட் அனௌன்ஸ் திஸ்!!" என்று கட்டளையிட்டு அனுப்பினான். அடுத்த நிமிடமே, யாருக்கோ அழைப்பு விடுத்தவண்ணம் அங்கிருந்து கிளம்பினான்.


பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் காலையில் இருந்த தன் மனநிலையையும் இப்போது இருக்கும் மனநிலையையும் எண்ணிப் பார்த்தது.


ஒரே நாளில் வாழ்க்கை மாறுவது இவளுக்கு விதியாகிப் போனதாய் உணர்ந்தாள். இதற்குமேலும் இங்கிருந்தால் அவன் தன்னை விடமாட்டான்! நிம்மதியாகவும் இருக்க விடமாட்டான்! என்பதை அறிந்து இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து நிமிர, அவளது பேருந்தும் தூரத்தில் வந்தது. அதற்குப் பின்னே வந்த வேறு ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பார்த்தவள் முடிவெடுத்தவளாய் ஏறிடத் தயாரானாள்.


வீட்டிற்கு வந்த தோழிகள், இழைப்பார அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, காவ்யாவின் ப்ரசென்டேஷனை நினைத்து மிகவும் ஆவலாக இருந்தனர். காவ்யா காலையில் செல்லும் முன்னே இவர்களிடத்தில் இன்று எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்றும் தான் வீடுவந்து சேரும் வரை காத்திருக்கவும் என்று முன்கூட்டியே சொல்லிச் சென்றதால் இவர்களால் போனில் பேசி தெரிந்துகொள்ள முடியாமல் போனது.


இப்போது அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். எப்போதும் அவள் வரும் நேரம் தாண்டியும் வராமல் போக நால்வருக்கும் பயம் எழுந்தது. ஒருவேளை, வேலை இருக்குமோ?? என்று தோன்றினாலும், அவளிடம் பேசுவதே சரியெனப்பட அவளுக்கு அழைத்தனர். நீண்ட நேரம் அழைப்பு சென்று துண்டிக்கப்பட, இவர்களுக்கு பழைய நியாபகங்கள் கண்முன் வந்தது. அதை நினைத்துப் பதறியவர்கள், இன்றும் தாமதித்து தவறு செய்துவிடக்கூடாது என்றெண்ணி உடனே அவள் நிறுவனத்திற்குக் கிளம்பினர்.


ஏற்கனவே பொழுது சாய்ந்திருக்க, தோழிகள் மனம் வருந்தியது.
நால்வரும் கிளம்பி வீட்டிற்கு வெளியே வர எத்தனிக்க, காவ்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. தன்யாவின் போனிற்கு வந்திருக்க, அதைக் கண்டவர்கள் ஒரு நிமிடம் நிம்மதியடைய, மறுநொடி, ஏதேனும் ஆபத்தோ?! என்று பதறி எடுத்தார்கள்.


தன்யா, "ஹலோ! காவ்யா!! எங்க இருக்கடி? இவ்ளோ நேரம் ஆகுது! இன்னும் வராம இருக்க?! எதுவும் பிரச்சினையா காவி?? சொல்லு! எங்க இருக்கன்னு சொல்லு! நாங்க வரோம்" என்று பதட்டத்துடன் கேட்டிட, அதைக் கேட்ட காவ்யா உள்ளுக்குள் வருந்தினாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு,


"போன ஸ்பீக்கர்ல போடு, தனு!" என்று இவள் கூறியதைக் கேட்டு குழம்பியவள் போனை லௌட் ஸ்பீக்கரில் போட்டாள். இதைக் கண்ட தோழிகள், "காவி!! என்னம்மா?! எங்க இருக்கன்னு சொல்லு! பிரச்சினையில இருக்கியா?" என்று பதறியபடி விசாரிக்க, காவ்யா,


"என்னய மன்னிச்சுடுங்கடி!! இப்போ நான் சொல்லப்போறத மட்டும் அமைதியா கேளுங்க! ப்லீஸ்டி..!" என்று கேட்டிட, நால்வரும் அமைதியாகினர்.


"நான் உங்களவிட்டு தூரமான இடத்துக்கு வந்துட்டேன்! இத கேக்கும்போது உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது! ஆனா, தினமும் என்னால நீங்க படுற கஷ்டத்த பாக்கமுடியலடி! நான் இன்னும் உங்க கூடவே இருந்தா உங்களாலயும் சந்தோசமா வாழமுடியாது. 'அதுக்காக! நீ இப்டி போயிட்டா நாங்க சந்தோசப்படுவோமா?' ன்னு நீங்க கேப்பீங்க! ஆனா, நான் உங்ககூட இருந்தா என்னாலயும் எதையும் மறக்கமுடியாம கஷ்டப்படுவேன். அதப்பாத்து நீங்களும் வருத்தப்படுவீங்க! அதுக்காகத்தான் நான் இப்டி ஒரு முடிவெடுத்தேன்" என்று கூறிக்கொண்டிருக்க, தோழிகளின் மனம் நொறுங்கியது.


"அப்போ எங்களவிட்டு போகணும்னு உனக்கு தோணிருக்குல்ல! இதுதான் நீ எங்கள புரிஞ்சிகிட்டதா?! உன் கஷ்டம் எங்க கஷ்டம்டி! அது ஒண்ணும் சுமை கிடையாது! இதுலாம் உனக்கு இப்ப புரியாது! நேர்ல பாத்து புரிய வைக்கிறோம்! இப்போ எங்க இருக்கன்னு சொல்லு!!" என்று சரண்யா கோபமாகக் கூறிட, மௌனம் காத்தாள், காவ்யா.


"அப்போ சொல்லமாட்டியா?! காவி! ப்லீஸ்!! உனக்குத் தெரியும்ல எனக்கு உன்னயனா எவ்ளோ பிடிக்கும்னு?! நீ இப்டி எங்களவிட்டுப் போனா என்னால தாங்கிக்க முடியாது! ப்ளீஸ்... காவி!! திரும்ப வந்துடு! ப்லீஸ்டி...!!" என்று ரம்யா அழுதுகொண்டே பேசுவதைக் கேட்ட காவ்யா மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள்.


"இங்க பாரு ரம்மி!! நான் உங்களவிட்டு எங்கயும் போகல! இது ஒரு தற்காலிகமான பிரிவுதான். என்னால என் கடந்தகாலத்த மறக்க முடியல! விடாம துறத்துது! அது தினமும் என்னய கொல்லுது! அதுல இருந்து விடுபடணும்னு என் மனசு ஆசப்படுது! ஆனா, மூள விடமாட்டிக்குது!" என்று கூறியவளால் அடுத்த வார்த்தைப் பேசமுடியாமல் நிறுத்தினாள். அதன்பின், சற்று நிதானித்துப் பேச ஆரம்பித்தாள்.


"அதனால எனக்கு ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு! அது அங்கயே இருந்தா கிடைக்காதுன்னுதான் இங்க வந்துட்டேன். உங்ககிட்ட சொன்னா விட்ருக்கமாட்டீங்க! அதான் வந்துட்டு சொல்றேன். என்னய மன்னிச்சிடுங்கடி! ஆனா, நீங்க என்னய புரிஞ்சுப்பீங்கனு நம்பிக்கைலதான் இப்டி பண்ணேன்" என்று அழுதுகொண்டே கூறுவதைக் கேட்ட தோழிகளும் அழுதனர்.


"என்னால உங்க வாழ்க்கை வீணாகக் கூடாது. உங்க லைஃப நீங்க சந்தோசமா வாழுங்க! நான் இங்க ரொம்ப பாதுகாப்பான இடத்துலதான் இருக்கேன். என்னய பத்தி கவலப்படாதீங்க! கொஞ்சநாள் கழிச்சு உங்ககிட்ட திரும்பி வருவேன். ஆனா, அதுவர எங்கிட்ட யாரும் பேச வேணாம்! என்னய தேடவும் வேணாம்! இது என்மேல சத்தியம்!" என்று உறுதியாகக் கூறிட, தோழிகள் அதிர்ந்தனர்.


"இது உங்களுக்காக என்னய கஷ்டப்படுத்திக்க எடுத்த முடிவுனு நினச்சுடாதீங்க! உங்கள கஷ்டப்படுத்தவும் எடுத்த முடிவு இல்ல! ஒரு மாறுதலுக்காக எடுத்த முடிவு. இதுலயும் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கனு நான் நம்புறேன்டி! நீங்க சந்தோசமா அங்க இருந்தாலே இங்க நானும் கொஞ்ச கொஞ்சமா மாறிடுவேன்டி! ப்லீஸ்...எனக்காக இது மட்டும் செய்யுங்க! பாய் டி! அனு, ரம்மி, தனு, சரு..!! லவ் யூ டி!! " என்று கூறி முடித்து அழைப்பைத் துண்டித்தாள்.


அதைக் கேட்டுக் கதறி அழுதவர்கள், அவள் திடீரென துண்டித்ததைப் பார்த்து மறுபடியும் அவளுக்கு அழைக்க, அது 'ஸ்விச்ட் ஆஃப்' என்று வந்தது. அதைப் பார்த்து தரையில் மடிந்து அமர்ந்து அழுதனர்.


போனை அணைத்துவிட்டு சிம்மைக் கலட்டியவள் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, ராணா நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.






காவ்யா எங்கே சென்றாள்?? அவள் தோழிகள் அவளைக் கண்டுபிடிப்பார்களா?? இல்லை, அவள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பார்களா?? ராணா எப்படி இவளிடம் வந்தான்?? சிக்கியவள் தப்பிப்பாளா??






❤வருவாள்❤...


கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 11



காவ்யா தனது தோழிகளிடம் பேசிவிட்டு, அவர்கள் திரும்ப அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தனது அலைப்பேசியை அணைத்துவிட்டு, அதிலிருந்த சிம் கார்டையும் கலட்டினாள். திடீரென அவள் அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டுத் திரும்பிட, அறை வாசலில் ராணா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.


அவனைப் பார்த்த அதிர்ச்சியில் கையிலிருந்த அவளது அலைப்பேசியைக் கீழே போட்டவாறு எழுந்து நின்றாள். அவன் இவளை நோக்கி நடந்துவர, அவள் மிரண்டுபோய் பின்னே நகர்ந்தாள். இவன் வேக எட்டில் இவளை நெருங்கி அவளைப் பிடித்திட, விக்கித்துப்போய் அவனைக் கண்களில் பயத்துடன் பார்த்தாள். அவள் கண்களில் தெரியும் பயத்தை ரசித்தவாறு,


"ஹே!! இன்னும் நீ என்னயப் பாத்து பயப்படுறியா?! இப்ப நான் உன்னோட புருசன், டார்லிங்!! ஹஸ்பண்ட பாத்து பயப்படலாமா?!" என்று அவளைப் பார்த்து கேலியாகப் பேசி ஏளனமாகச் சிரித்தான். அது அவளுக்கு உள்ளுக்குள் வலித்தாலும் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக நின்றாள்.


"ஆனா! நீ இப்டி பயந்து நடுங்குறத பாக்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்குனு தெரியுமா?! இப்டி தினமும் உன் கண்ணுல பயத்த நான் பாக்கணும்! இதேமாறி உன் திமிர முழுசா அடக்குறேன்!" என்று கூறி அவளை விட்டு அவன் சென்றுவிட்டான்.


அவன் விட்ட வேகத்தில் இவள் கீழே சரிந்து அமர, அவளின் நினைவுகள் நடந்ததை நினைவுபடுத்தியது.



*******************************************


காவ்யா நிறுவனத்தைவிட்டு வெளியே வந்து, பேருந்து நிறுத்தத்தில் தனது பேருந்திற்காகக் காத்திருக்கையில் வேறு எங்கயாவது சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவளுக்கானப் பேருந்தும் வந்துவிட, அதன்பின்னே வேறு ஊருக்குச் செல்லும் பேருந்தும் வந்துகொண்டிருந்தது.


அதில் ஏறிவடலாமா? என்று எண்ணியவள், மறுநொடி அவளது தோழிகளின் நினைவு வர, அவர்களிடம் சொல்லாமல் விட்டுச் செல்வது அவர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கும் என்பதை நினைத்து தன் முடிவை மாற்றிக்கொண்டாள். வீட்டிற்குச் சென்று அவர்களிடம் இந்த முடிவைச் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தபின் செல்லலாம் என்று முடிவெடுத்து இவளது பேருந்தில் ஏறுவதற்குச் சென்றாள்.


அவள் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் பேருந்து நின்றதால் நடந்து சென்றுகொண்டிருக்க, அதற்குமுன், ஒரு கார் அதன்முன் வந்து காவ்யாவின் அருகில் நின்றது. அதிலிருந்து முகமூடி அணிந்த இருவர் இறங்கிவந்து அவளைப் பிடித்து காருக்குள் இழுத்துப்போட்டனர். அவளை உள்ளே தள்ளியவுடன் கார் புறப்பட்டு வேகமெடுத்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் இல்லாததாலும், இருந்தவர்களும் இவள் ஏறவிருந்தப் பேருந்தில் ஏறிவிட்டதாலும் இவள் கடத்தப்பட்டதை யாரும் கவனிக்கவில்லை.


காருக்குள் இருந்து காவ்யா கூச்சலிட்டாள். "யார் நீங்க?? என்னய விட்டுடுங்க!! என்னய எதுக்காக கடத்திருக்கீங்க?! எங்க போறீங்க?? ப்லீஸ்...விட்ருங்க..!!" என்று கத்தியபடியே வர, இருவரும் சிறிது தூரம் சென்றதும் அவள் கண்களையும் வாயையும் துணியை வைத்துக் கட்டினர். அதனால் இன்னும் பயந்தவள் அங்கயும் இங்கயும் ஆற்பரிக்க, அவளது கைகளையும் பின்புறமாகக் கட்டினர். அவளால் எதுவும் செய்யமுடியாமல் துவண்டு அடங்கினாள்.


புறப்பட்ட கார் சவுக்கு மரத் தோப்புகளுக்கு நடுவில் சென்று, அடுத்து மரங்கள் அடர்ந்த இன்னொரு தோப்புக்கு இடையில் சென்று ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த முகமூடி அணிந்த ஆண்கள் இருவரும் காவ்யாவின் கைப்பற்றிக் கீழே இறங்கச்செய்து, அந்த வீட்டுக்குள் கூட்டிச் செல்லப்போக, அவள் மறுத்ததும் இழுத்துச் சென்றனர்.


அந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்றவர்கள் நடுகூடத்தில் நின்றனர். அங்கே போட்டிருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான், ராணா. அவளைப் பார்த்தவன், அவள் கண்கட்டை அவிழ்த்துவிடும்படி சைகை செய்ய, இருவரும் அவன் சொன்னபடியே அவிழ்த்துவிட்டனர். கண்ணவிழ்த்த காவ்யா கண்களைத் திறந்து பார்க்க எதிரே ராணாவைக் கண்டவள் அதிர்ந்து விழி விரித்தாள்.


அவளின் அதிர்ச்சியைக் கண்டு லேசாகப் புன்னகைத்தவன், அவர்கள் இருவரையும் வெளியே போகும்படி உத்தரவிட அவர்களும் சென்றனர். இவன் எழுந்து அவளருகில் வருவதைக் கண்டவள் பயந்தபடி நின்றாள். இவளருகில் வந்தவன் அவள் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டவன், இவள் முகம் நோக்கி குனிய, பதறியவள் உடனே பின்னோக்கிச் நகர்ந்தாள். அதைக் கண்டவன் சிரித்துக்கொண்டே,


"இன்னும் எத்தன நாளைக்கு என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்கயுடியும்னு நினைக்கிற?! இப்ப நீ என்னோட வீட்டுல, என் கஸ்டடியில இருக்க! இன்னுமா உன்னால தப்பிக்கயுடியும்னு தோணுது?!" என்று ஏளனமாகக் கேட்டிட,


"எதுக்காக என்னய கடத்திட்டு வந்த?? ப்லீஸ்...உன்னய கெஞ்சி கேட்டுக்குறேன்! என்னய விட்டுடு..!நான் இனிமேல் உன் கண்ணுலயே படமாட்டேன். எங்கயாச்சும் போய்டுறேன். என்னய விட்டுடு..! ப்லீஸ்..!!" என்று அவனிடம் கெஞ்சி அழுதாள். ஆனால், அது அவனைத் துளியும் கரைக்கவில்லை. அழுதிடும் அவளை ஏளனச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


"அழுவுறியா!! நீ அழறத பாக்குறதுகூட ரொம்ப சந்தோசமா இருக்கு! ஆனா! இன்னும் உன் திமிரு அடங்கவே இல்ல பாத்தியா! அத பாக்கும்போது எனக்குள்ள பத்திட்டு எரியுற நெருப்புல பெட்ரோல ஊத்துன மாறி கொழுந்துவிட்டு எரியுது என்னோட கோபம்..!" என்று கோபமாக அவள் முகத்துக்கருகில் வந்து கூறிட, அவளோ அவனைப் பார்க்கமுடியாமல் தலைகுனிந்தாள். அவன் அவள் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி,


"பாத்தியா! இப்பக்கூட உனக்கு என்னய பாத்து சாரி! மன்னிச்சிடுனு கேக்கணும்னு தோணல! இதுதான் உன்னோட திமிரு!" என்று கூறி அவளை விட, அதைக் கேட்டு அவனை விரக்தியாய் பார்த்திட, அவனும் தொடர்ந்து,


"பரவால்ல..! நீ திமிராவே இரு! அதுதான் எனக்கும் வேணும்! எல்லோரோட திமிரையும் நான் நினச்சதும் அடக்கிருக்கேன். ஆனா, உன் விஷயத்துல மட்டும்தான் அது முடியல! நான் உன்னய கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிறப்பல்லாம் நீ என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டே இருக்க! யு மேபி லக்கி அட் தட் டைம்! பட் நாட் நௌ!" என்று கூறிக் கொண்டிருக்க, அவனை வேதனை தோய்ந்த கண்களால் பார்த்தாள். ஆனால், அவள் கண்கள் காட்டும் வேதனை அவனுக்குப் புரியவில்லை.


"முன்னாடியே நீ அடங்கிருந்தனா, நான் நினச்சபடி நடந்திருச்சுன்னா, அதோட உன்னய விட்டுருந்திருப்பேன். ஆனா, இப்ப உன் வாழ்க்க முழுக்க என்கூட இருந்து கஷ்டப்படப்போற!" என்று அவன் அவளைப் பார்த்துக் கூறிட, காவ்யா அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே போய்விட்டாள். அவள் கண்கள் அந்த அதிர்ச்சியைத் தாங்கி, தேங்கிய கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவனோ,


"என்ன ஷாக்கிங்கா?! இல்ல..நான் சொன்னது புரியலயா?! தெளிவா சொல்றேன். உனக்காக நான் தனியா டைம் வேஸ்ட் பண்ணி ப்ளான் போட்டு பழி வாங்குறதுக்குப் பதிலா உன்னய கல்யாணம் பண்ணிகிட்டாளே அது உனக்கு நரகம் மாறிதான். எனக்கும் பழி வாங்குனமாறிதான். அதான் உன்கூடயே இருந்து உன் திமிர அடக்க முடிவு பண்ணிட்டேன்!" என்று கூறுவதைக் கேட்டு கண்களில் நீர்வடிய, கீழே சரிந்து மண்டியிட்டு அமர்ந்தாள். கீழே குனிந்து அழுதவள், நிமிர்ந்து,


"ப்லீஸ்...!! என்னய விட்டுடு!! நா..ன்..நான்! சாரி கேக்காதது பிரச்சினைனா சாரி கேக்குறேன்! சாரி! சாரி! சா..ரி..!! நான் உன்னய கஷ்டப்படுத்துனதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்! மன்னிச்சிடு!! ப்ளீஸ்....!! என்னய விட்டுடு..நான் எங்கயாச்சும் போய்டுறேன்!" என்று மண்டியிட்டுக் கதறி அழுதாள். அவள் அழுகையைக் கண்டு கரையும் சுண்ணாம்புக்கல் அல்லவே அவன் இதயம்! அது கொடூரனின் இதயம் என்ற பெயரில் துடிக்கும் பாறை ஆயிற்றே!!


"இங்க பாரு! இட்ஸ் டூ லேட்! என்கிட்ட நீ எப்ப சாரி கேட்டுருந்தாலும் உன்னய விட்டுருக்க மாட்டேன். நீ ஏற்கனவே தப்பு பண்ணிட்ட! அத மாத்த முடியும்னா உன்னோட வாழ்க்கையும் மாறும்! ஆனா, அதுக்குத்தான் வாய்ப்பே இல்லையே! சோ, இனி இதுதான் உன்னோட வாழ்க்க!" என்று கூறிட,


"என்னய பழி வாங்க நினைக்குற நீ எதுக்காக என்னய கல்யாணம் பண்ணிக்கணும்? அதுல உனக்கு என்ன கிடைக்கப்போகுது? இதுவர பண்ணது போதாதா?! ப்லீஸ்...என்னய விட்டுடு!!" என்று கேட்டிட, அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தவன்,


"பராவல்லயே! இந்த நிலமைலயும் தெளிவாதான் இருக்க! நல்ல கேள்வி! நான் எதுக்காக உன்னய கல்யாணம் பண்ணிக்கணும்? உன்னய பழி வாங்கதான்! அத சொல்லிட்டேன். ஆனா, அத உன்னய கல்யாணம் பண்ணிக்காமயே என்னால பண்ணமுடியும். பட், டு யு நோ? ஐ ஹேட் கேள்ஸ்! இதுவர ஒரு பொண்ணக்கூட ஏறெடுத்துப் பாத்ததில்ல!" என்று கூறவும் இவனை அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்த்தாள், காவ்யா. அதைப் பார்த்தவன்,


"என்ன நம்பமுடியலயா?? நீயும் என்னய இம்ப்ரஸ்லாம் பண்ணிடல! யு டோன்ட் வர்த் இட்! ஆனா, நீ பண்ண தப்புனால நான் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன். நான் தொட்ட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பொண்ணு நீயாதான் இருப்ப!" என்று கூறிக்கொண்டிருக்க, காவ்யா அவனை பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


"தட்ஸ் மை பாலிஸி! இதுவர எனக்கு கல்யாணம் பண்ணனும்னு தோணுனுது கிடையாது! பட் உன்னய பழி வாங்கவும் அண்ட் மை பாலிஸிக்காகவும் தான் உன்னய கல்யாணம் பண்ணிக்கப் போறேன். டு யு கெட் தட்? சோ, ரெடியா இரு! கல்யாணம் பண்ணிக்கவும்! நரகத்த பாக்கவும்!" என்று கூறி நிறுத்திட, கண்களில் வலியுடன் அவனைப் பார்த்தாள்.


"அப்றம்! ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்! நம்ம கல்யாணம் இன்னைக்குத்தான்! கல்யாணப் பொண்ணு ஃப்ரஷ்ஷா இருக்கணும்ல! சோ, போய் ரெஸ்ட் எடு!" என்று கூறியதைத் கேட்டதும் காவ்யா அதிர்ந்துவிட்டாள். அவள் அதிர்ச்சியில் இருக்க, வெளியே நின்ற ஆட்களை அழைத்து அவளைக் கூட்டிச் செல்ல உத்தரவிட்டு இவளிடம்,


"அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் எப்டியாச்சும் தப்பிச்சுறலாம்னு நினச்சுக்கூட பாக்காத! அது உன்னால முடியாது! அதோட, அன்னைக்கு தப்பிச்சதுக்குத்தான் இப்ப தண்டனை அனுபவிக்குற. இன்னும் தப்பிக்க நினச்சு எதாவது தப்பா முடிவெடுத்தனா அப்றம் விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும்! ஜாக்கிரதை!" என்று எச்சரித்து அனுப்ப, அவளை மாடிக்கு இழுத்துச் சென்று அங்குள்ள அறையில் உள்ள படுக்கையில் தள்ளிவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினர்.


"அவ எதாச்சும் ப்ளான் பண்ணாலும் பண்ணுவா! நீங்க இரண்டுபேரும் அந்த ரூம் வாசல்லயே நில்லுங்க! வெளியே ஆட்களெல்லாம் நிக்கிறாங்கல்ல!" என்று கட்டளையிட்டு கேட்டிட, அவர்களும் ஆம்! போட்டுவிட்டு அங்கேயே நின்றனர். அதன்பின், அவன் சில வேலையாட்களை அழைத்து சிலபல கட்டளைகளை இட்டுவிட்டு வெளியே சென்று, காரில் ஏறிக் கிளம்பிச் சென்றான்.


படுக்கையில் விழுந்தவள், கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததால் ஒருபக்கமாகக் கிடந்தாள். அந்த அறையின் தனிமை பயத்தைத் தந்தாலும் நடக்கும் ஆபத்துக்களை நினைக்கும்போது இன்னும் பயம் தந்தது. என்ன செய்வது?? இனிமேல் தன் வாழ்வு இவனிடம்தானா??!! என்று மனம் ஒருபுறம் நினைத்து வருந்த, இதற்குமேல் ஆவதற்கு ஒன்றுமில்லையே!! எல்லாக் கஷ்டத்தையும் ஏற்கெனவே தந்துவிட்டானே!! என்று புத்தி மறுபுறம் கூறியது. ஆனாலும் அவன் பழியுணர்வு இன்னும் அடங்கவில்லையே!! இவனிடம் இருக்கும் நொடிப்பொழுதும் நரகம்தான்! ஆனால், தப்பிக்க முடியாமல், தப்பிக்க தோன்றவும் செய்யாமல் சோர்ந்து கிடந்தாள்.


இனிமேல் இவனிடம் இருந்து தப்பிச் செல்வது என்பது கடினம். அப்படி தப்பித்து எங்கு சென்றாலும் இவன் விடமாட்டான் என்றே தோன்றியது அவளுக்கு. இப்படி பல கோணங்களில் சிந்தித்தவளுக்கு முடிவாக ஒன்றே தோன்றியது! அவளும் ஒரு முடிவுக்கு வந்தவள் சோர்வினால் அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள்.


தூக்கத்தில் இருந்த காவ்யா அறையின் கதவு தடாளென திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து விழித்தவள், யாரென்று பார்க்க, அறைக்கு வெளியே நின்ற இருவர் நின்றிருந்தார்கள். அறை திறந்ததும் உள்ளே ஒரு ஐம்பது வயதுகளில் இருக்கும் பெண்மணி கையில் தாம்பூலத்துடன் வந்தார். அந்த தாம்பூலத்தில் புடவை, நகைகள், பூ, குங்குமம் ஆகியவை இருந்தது. அவர் வரவும் அந்த இரண்டு ஆண்களும் அவள் கைகட்டை கலட்டிவிட்டு வெளியே சென்று அறையை சாத்திவிட்டனர்.


காவ்யா நடப்பதைப் பார்த்ததும் என்னவென்று ஊகித்துவிட, அந்த அம்மாவும் இவளருகில் தயங்கி வந்து அந்த தாம்பூலத்தை அவளிடம் கொடுத்து, பொறுமையாக அவளைத் தயாராகச் சொன்னார். இவளும் அவரை ஒரு வேதனை நிறைந்த விரக்தி புன்னகையோடு பார்த்தவள், அந்த தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு குளியறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் அவள் வெளியே புடவை மட்டும் கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த அந்த அம்மா, அவளை அழைத்துச் சென்று அதிலிருந்த நகைகளை அணிவித்து, தலை சீவி பூ வைத்து, நெற்றியில் குங்குமம் இட்டு அலங்கரித்தார்.



மணக்கோலத்தில் அவள் அழகைக் கண்டு அவரே ஒருநொடி மெய்மறந்தார். ஆனால், பொன்னகைகளை அணிந்திருந்த அவளுடைய முகத்தில் புன்னகை ஒன்று இல்லாமல் இருப்பதைப் பார்த்தவர் மனம் சற்று வேதனை அடையத்தான் செய்தது. அவர் இந்த வீட்டிலேயே பல வருடங்கள் வேலை பார்ப்பவர். அவருக்கு ராணாவின் கோபம் நன்றாகத் தெரியும். ஆனால், அவன் கோபத்தில் இந்தளவுக்கு மோசமான ஒரு செயலைச் செய்வான் என்பதை அவர் நினைத்ததில்லை.


காவ்யாவை கடத்திவந்த வீடும் இதுவே! ஆனால்! அன்று வீட்டில் காவலாளிகள் இருவரைத் தவிர வேறு எவரும் அங்கிராததால் அந்த வீட்டில் வேலை செய்யும் எவரும் காவ்யாவை பார்த்திருக்கவில்லை. இங்கு நடந்ததும் அவர்களுக்குத் தெரியாது. இன்று நடக்கும் திருமணம்கூட அவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது மற்றவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பினாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த அம்மாவுக்கு இது அவனது கோபத்தில் விளைந்ததுதான் என்பதை கீழே அவன் பேசுவதை ஓரளவுக்கு கேட்டதிலிருந்து அறிந்துகொண்டார்.


ஆனால், அவரால் எதுவும் செய்யவும் முடியாது! செய்யவும் மாட்டார்! என்பதை அவரும் அறிவார். அவர் அவன் சொன்ன வேலையை மட்டுமே செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால், காவ்யாவைத் தயார் செய்து கீழே அழைத்துச் சென்றார். அவளும் மறுப்பேதும் பேசாமல் உடன் சென்றாள்.


கீழே இறங்கியவள் சுற்றியும் பார்க்க ஒரு கல்யாணத்துக்குத் தேவையான ஏற்பாடு அனைத்தும் செய்தாகியிருந்தது. சுற்றிலும் சுவரில் பூத்தோரணமிட்டு அலங்கரித்து, கூடத்தின் நடுவில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு அருகில் ஐய்யர் ஒருவர் அமர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.


இவள் கீழே வரவும், நின்றிருந்த ராணா வந்து அக்னியின் முன் அமரவும் சரியாக இருந்தது. ராணா பட்டுவேட்டி சட்டை அணிந்திருக்க, அவனுடன் அவன் நண்பர்களும் அவனைக் கேலி செய்தபடி உடன் நின்றனர். அவர்களுக்கு அருகில் பெரியவர்களும் நின்றிருந்தனர். காவ்யாவை அழைத்துச் சென்று ராணாவின் அருகில் அமரவைத்தார் அந்த வேலைக்கார அம்மா, கமலாம்மா! அவள் வந்தமர்ந்ததும் அவளை ஒரு வெற்றிச் சிரிப்புடன் அவன் பார்க்க, அவள் அதைக் காணும் நிலையில் இல்லை. தலைகுனிந்தே இருந்தவள் எதிரில் எரியும் அக்னியில் நிற்பதைப் போன்று உள்ளுக்குள் வாடினாள்.


இருவரின் கழுத்திலும் மாலையிட்டனர்.
ஐய்யர் மந்திரம் ஓதி தங்கத்தினால் ஆன தாலிக்கொடியை எடுத்துக் கொடுக்க, ராணா அதை வாங்கி அவள் கழுத்தில் அணிவித்தான். அந்த சமயம் காவ்யாவின் மொத்த உலகமும் இருண்டதுபோல் தோன்றிட, கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தன. அதன்பிறகு, அவள் நெத்தியில் குங்குமம் இட்டு, அக்னியைச் சுற்றிவந்து முழு சடங்கையும் முடித்து சம்பிரதாய கணவன் மனைவி ஆனபின், ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து வரவழைத்த ரிஜிஸ்த்தரரின் பத்திரத்தில் கையொப்பமிட்டு சட்டப்படியும் கணவன் மனைவி ஆயினர், இருவரும்.


திருமணம் முடிவடைந்ததும் இருவரும் எழுந்தனர். ராணா அவளை அழைத்துச் சென்று நண்பர்களின் பெற்றொர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றனர். அவர்களும் இவர்களை மனதார வாழ்த்திப் பரிசையும் அளித்தனர். காவ்யா அமைதியாக நின்றிட, அவள் முகம் உணர்ச்சிகள் துடைத்தாற்போல் காணப்பட்டது. ஆனால், அதைக் கண்ட பெரியோர்களும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் ராணாவிடம் பரிசைத் தந்துவிட்டுச் சென்றனர்.


ராணாவின் நண்பர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ராணாவுக்கும் காவ்யாவிற்கும் வாழ்த்துக்கள் கூறி, ஒவ்வொருவரும் பரிசு தந்தனர். காவ்யா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றாள். அவர்கள் கொடுத்தப் பரிசைப் பார்த்த ராணா,


"டேய்!! இதுலாம் எதுக்குடா?? அதான் அப்பா அம்மா கொடுத்தாங்கள்ல!" என்று வாங்க மறுத்திட,


"டேய்! நீ கல்யாணம்தான் சொல்லிக்காம இப்டி திடீர்னு பண்ணிக்கிட்ட! கிஃப்டயாச்சும் ஒழுங்கா வாங்கிக்க! அது அவங்க கொடுத்தது! இது நாங்க கொடுக்குறது!" என்று விஜய் கூறிட,


"ஆமாடா!! ஒழுங்கா வாங்கிடு! இல்லன்னா அவ்ளோதான்!" என்று ராம் மிரட்டும் தோணியில் சொல்லிட,


"ஆஹான்..அப்டியா!! நான் வாங்கமாட்டேன்! என்ன வேணா பண்ணிக்கோங்கடா!" என்று கேலியாகக் கூறி நின்றான்.


"நீ வாங்கமாட்டியா! போ! நீ வாங்காட்டி என்ன! காவ்யா அண்ணி வாங்கிப்பாங்க! என்ன அண்ணி?!" என்று நாகவ் அவனை கிண்டல் செய்து காவ்யாவிடம் கேட்டிட, அவள் அப்பொழுதுதான் நிகழ் உலகிற்கு வந்தவள்போல், "ம்ம்?" என்று முழித்தாள். அதைக் கண்டவர்கள் வருந்தி அவளிடம்,


"இங்க பாருங்க காவ்யா! உங்க கஷ்டம் எங்களுக்கும் புரியுது. ஆனா, என்ன பண்ணமுடியும்? எல்லாம் முடிஞ்சிருச்சே! நடந்து முடிஞ்சத பத்தி நினச்சு கவலப்படாம, இனி இதுதான் உங்க வாழ்க்க! ராணா இஸ் யுவர் ஹஸ்பண்ட் நௌ! எல்லாத்தையும் மறந்துட்டு புது லைஃப ஸ்டார்ட் பண்ணுங்க! பெஸ்ட் விஷ்ஷஸ்!" என்று பிரபவ் ஆறுதல் கூறி அவளிடம் பரிசைக் கொடுக்க, அவள் அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள். அவளைப் பார்த்த ராணா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். பின் தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவர்கள் தந்த பரிசை வாங்கிக்கொண்டாள்.


காவ்யாவைப் பார்த்த ராணா, "நீ மேல ரூம்கு போ! கமலாம்மா! அவள கூட்டிட்டு போங்க!" என்று கூறிட, இருவரும் மேலே சென்றனர். அறைக்குள் சென்றவள் கமலாம்மாவைப் போகச் சொல்லிவிட்டுக் கதவை சாத்தினாள். மாலையைக் கலட்டி மெத்தையில் வீசியவள் அப்படியே கீழே அமர்ந்தாள்.


'இவன் பண்ண தப்புக்கு சப்போர்ட் பண்ணுறதுக்குகூட இங்க ஆளுங்க இருக்காங்க. அவன் ஃப்ரண்ட்ஸ்க்கும் இது சாதாரணமாதான் தெரியுது! ஒரு பொண்ணோட வாழ்க்கையவே பழி வாங்குறதுக்காக நாசமாக்கிட்டு இப்ப கல்யாணம் பண்ணிகிட்டா அவன் பண்ண தப்பு தப்பு இல்லனு ஆயிடுமா! இல்ல, இது ரொம்ப நல்ல விஷயம் ஆகிடுமா?' என்று எண்ணியவள்',


'நான் பண்ணது பெரிய தப்புதான்! அவன் தெரியாம இடிச்சதுக்கு அவன செருப்பால அடிச்சிருக்கக் கூடாதுதான்! அதுக்காக இவ்ளோ பெரிய தண்டனையா எனக்கு?! நீங்களே சொல்லுங்க கடவுளே!' என்று எண்ணி அழுதாள்.


'நான் என்னோட அளவுக்கு அதிகமான கோபத்துல அவன அடிச்சேன். அதுக்கான தண்டனையா அவனோட அதே கோபம் எனக்கு தண்டனை கொடுத்திருச்சு! என் ஃப்ரண்ட்ஸ் எப்பவும் சொல்வாங்க! கோபம் வந்து ஆத்திரத்தில பண்றது தப்பாதான் போய் முடியும்னு! அது இப்ப நிஜமாயிடுச்சு!' என்று தனக்குள்ளே நினைத்து வருந்தியவளுக்கு அவள் தோழிகளின் நியாபகம் வந்தது. அவளது கைப்பையைத் தேடி எடுத்தவள் அலைப்பேசியில் அவர்களுக்கு அழைப்புவிடுத்துப் பேசினாள்.


ராணாவும் அவனது நண்பர்களும் கீழே சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். "ஆனா, பாவம்டா! அண்ணி!" என்று நாகவ் கூறிட,


"அது யாருடா அண்ணி?" என்று ராம் கேட்க, அவனைப் பொய்யாக முறைத்திட,


"வேற யாரு!? நம்ம காவ்யா அண்ணியத்தான் சொல்றான்! என்னடா!" என்று விஜய் கூறிட, நாகவ்வும் விஜயும் ஹைபை போட்டுக்கொண்டனர்.


"என்னங்கடா? அண்ணினுலாம் கூப்டுறீங்க?! புதுசா இருக்கே?" என்று ராம் சந்தேகமாய் கேட்டிட,


"டேய்! நம்மலாம் ஃப்ரண்ட்ஸா இருந்தாலும் பிரதர்ஸ் மாறிடா! சோ! ப்ரதரோட வஃய்ப் நமக்கு அண்ணிதானடா! அதான்! அப்டி கூப்டுறோம்! நீயும் அப்டித்தான் கூப்டணும்!" என்று நாகவ் தீவிரமாகக் கூறிட, சிரித்த ராம்,


"ஓஓ..அப்டி வர்றியா நீ!? கரெக்ட் தான். இனி நானும் அண்ணினே கூப்டுறேன் அப்போ! ஓகேவா!" என்று கூறி புன்னகைத்தான்.


"ஹலோ! ப்ரதர்ஸ்! நானும் அவங்கள அண்ணினுதான் கூப்டணுமா??" என்று பிரபவ் புன்னைத்துக்கொண்டே கேட்டிட,


"ம்ம்..நீ கூப்டணும்னு அவசியம் இல்லடா! நீதான் ராணாவ விட மூத்தவனாச்சே! அதனால கணக்குப்படி அண்ணிலாம் வராது! சோ! நீ அவங்கள பேர் சொல்லியே கூப்டலாம்!" என்று விஜய் கிண்டலாகக் கூறி கேலி செய்திட, பொய்யாக முறைத்த பிரபவ்,


"அடேய்!! ஏதோ பல வருசம் மூத்தவன் மாறி சொல்ற! என்னயவிட ஆறுமாசம் சின்னவன். அதுக்கு இவ்ளோ டேமேஜ் பண்ணாதடா!" என்று அப்பாவியாகக் கூறினான்.
அதைக் கேட்ட நண்பர்கள் சிரித்துவிட,


"நாங்க மட்டும் என்ன இரண்டு மூணு மாசம்தான சின்னவங்க! அதுக்கே சொல்லலயா! பெரியவன்னா ஒருநாள்னாலும் பெரியவன்தான்டா அண்ணா!!" என்று கூறி ராமும் கேலி செய்திட, மூவரும் ஹைபை போட்டுக்கொண்டு சிரித்தனர். பிரபவ் முகத்தைத் தொங்கப்போட்டது போல் பாவனை செய்தாலும் அடுத்தநொடி சிரித்துவிட்டான். இவர்களின் கூத்தை வேடிக்கைப் பார்த்தப்படி அமைதியாக அமர்ந்திருந்தான், ராணா.


அவனிடம் திரும்பியவர்கள், "இந்த கூத்துல சொல்ல வந்ததையே மறந்துட்டேன்! அண்ணி பாவம்டா! அவங்க ஏற்கனவே ரொம்ப கஷ்டப்படுட்டாங்க! இன்னும் அவங்க அதுல இருந்து மீண்டு வரலன்னு அவங்க முகத்த பாத்தாலே தெரியுதுடா! அவங்கள நல்லா பாத்துக்கோடா!" என்று நாகவ் வருத்தமாகக் கூறிட, அதைக் கேட்டவன் சரியென தலையை ஆட்டினான்.


"ஆமாடா!! ரொம்ப மனசு உடஞ்சு போயிருக்கமாறி இருக்காங்கடா...அம்மா அப்பாவும் இல்லாம நிற்கதியா நிக்கிறாங்கடா! நீதான் இனி அவங்களுக்கு எல்லாம்! பாத்துக்கோடா!" என்று பிரபவ்வும் கூறிட,


"ஆமாடா! இனியும் அவங்ககிட்ட உன் கோபத்த காட்டிடாத! புரியுதா?!" என்று ராமும் அறிவுரை கூறினான். அதையனைத்தையும் அமைதியாகக் கேட்டவனின் நினைவுகள் அன்று காலை நோக்கி பயணமானது.






காவ்யா நினைத்தபடி ராணாவின் நண்பர்களும் இவன் செய்த தப்புக்கு துணை போனவர்களா?? ராணாவின் நண்பர்கள் கூறுவது என்ன?? அன்று காலை என்ன நடந்தது??








❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
மேலே உள்ள அப்டேட்டைப் படித்து மறக்காமல் கமெண்ட் செய்யவும் நட்புக்களே...!!!

- தமிழுக்கினியாள்


கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 12



அன்று காலை காவ்யாவை பழி வாங்க எண்ணிய அனைத்துக் காரியங்களும் வீணாகப்போனதைத் தாங்காமல் அவனது கோபம் தலைக்கேற ஒரு முடிவுக்கு வந்தவன், அவன் அலைப்பேசியை எடுத்து அவனது ஆட்களிடம் பேசி அவளைக் கடத்தி வரச் சொன்னான். அவனும் சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குச் சென்றுவிட, அவன் ஆட்களும் அவளை கொண்டு வந்துவிட்டனர். அவளிடம் திருமணத்தைப் பற்றிக் கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே கிளம்பியவன், அவன் நண்பர்களை அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடும் இடத்திற்கு வரவழைத்தான்.


ஐவரும் வந்து சேர்ந்தபின், மௌனமாக இருந்த ராணாவிடம்,
"என்னடா? திடீர்னு ஃபோன் போட்டு இங்க உடனே வாங்கடானு வரச்சொல்லிட்டு இப்டி அமைதியா இருக்க! என்னனு சொல்லுடா!" என்று ராம் அவனைப் பார்த்துக் கேட்க,


"என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீயே வரச் சொல்லிருக்கனு உடனே பதட்டத்தோட வந்தோம்டா! என்னாச்சுடா? எதாவது ப்ராப்ளமா?" என்று நாகவ் பதட்டத்துடன் கேட்டிட,


"ப்ராப்ளமா இருந்தா நம்மள ஏன் கூப்டப்போறான்?! அவனே சால்வ் பண்ணிட்டுத்தான் நம்மகிட்டயே சொல்வான்! இது வேற ஏதாச்சும் குட் நியூஸாடா?! கம்பெனி சம்பந்தமா எதுவும் இருக்கிறமாறி தெரியலயே..!" என்று பிரபவ்வும் யோசித்துக் கொண்டிருக்க,


"அடேய்!! விசயம் என்னனு சொல்லேன்டா!! இத்தன பேரும் சஸ்பென்ஸ் தாங்காம பொலம்புறோம்! நீ சைலண்டா உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருக்க..!!" என்று விஜய் பொய்க் கோபத்துடன் பேச, அதைக் கேட்டுப் புன்னகைத்த ராணா,


"நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்டா!" என்று கூற, அதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி அவனை வினோதப் பிறவியைப் பார்ப்பதைப் போல் பார்த்தனர். அதைக் கண்ட ராணா,


"டேய்!! என்னங்கடா?!! இப்டி பாக்குறீங்க?!! என்னாச்சு?!" என்று கேள்வி எழுப்பிட,


"இது நீதானான்னு பாக்குறோம்டா!" என்று கூறிய நாகவ் பக்கத்தில் இருந்த ராமைக் கிள்ள, ராம் கத்தியபடி அவனை முறைத்தான். நாகவ் அவனைப் பார்த்து இளித்தபடி,
"கனவு இல்லடா! அப்ப நிஜம்தானா இது?! டேய்! ராணா!! உண்மையாவே உனக்கு இப்டி ஒரு முடிவெல்லாம் எடுக்கத் தெரியுமா??!" என்று வியந்து கேட்டிட, அவனை ராணா பொய்யாக முறைத்திட,


"பின்ன என்னடா? நீதான் இத்தன வருஷமா எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்கமாட்டியே! கேட்டா பொண்ணுங்களையே பிடிக்கலடா!னு சொல்லுவ. இப்ப இப்டி ஒரு முடிவுக்கு வந்துருக்கன்னா ஆச்சரியமாத்தான இருக்கும்! என்னதான் நாங்க உன் ப்ரண்ட்ஸா இருந்தாலும் உன்னயமாறி வினோதப் பிறவியா எங்களால இருக்கமுடியுமா??" என்று விஜய் கேலி செய்திட, அவனையும் ராணா முறைத்தான்.


"ஆமாடா!! உன்னயமாறி இருக்க எங்களாலயும் முடியாதுடா! அவனுக்கு எந்தப் பொண்ணையும் பிடிக்காதுனா, உனக்கு எல்லாப் பொண்ணுங்களையும் பிடிக்கும்! ஒரு பொண்ணக்கூட விடாம எல்லார்கிட்டயும் பேசி ஃப்ரண்டாகிட வேண்டியது! த்தூ.!" என்று விஜயைக் கழுவி ஊற்றினான், ராம். அதைக் கேட்டவன் ஈஈஈ என இளித்து சமாளித்தான். மற்றவர்கள் சிரித்தனர்.


"டேய்! ராணா! அப்ப நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டியா?? அப்போ...பொண்ண ஏற்கனவே முடிவு பண்ணிட்ட அப்டித்தான?! என்னடா??! லவ்வா!!" என்று பிரபவ் ராணாவைப் பார்த்துத் தீவிரமாகக் கேட்டிட, ராணா சிறிது மௌனம் காத்தவன்,


"ம்..ஆமாடா!" என்று கூறியதும் அவர்கள் இன்னும் அதிர்ந்தனர். "டேய்! பிரபா!! நீ அன்னைக்கு சொன்னது உண்மதான்டா! இப்பதான்டா அது வெளிச்சத்துக்கு வந்துருக்கு!" என்று நாகவ் கூறிட,


"என்னதுடா? என்ன உலறுற?" என்று ராணா கேட்டிட,


"கொஞ்சநாள் முன்னாடி நாம இங்க வந்திருக்கும்போது நீ ஏதோ யோசனையில இருந்தியே.! அப்பவே பிரபா சொன்னான்! நீ ஏதோ பொண்ணுகிட்ட மாட்டிகிட்டியோனு! நாங்கதான் நம்பல. ஆனா, இன்னைக்கு அவன் சொன்னது தான் நிஜமாயிருக்கு. அதான் சொன்னோம்!" என்று விஜய் கூறியதைக் கேட்டு ஓ! என்று அமைதியானான், ராணா.


"அப்போ! அன்னைக்கு இந்தப் பொண்ண பத்திதான் யோசிச்சியாடா?" என்று ராம் வினவிட, "ஆமா!" என்று தலையசைத்தான்.


"அடப்பாவி! அத அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல?! இத்தனநாள் கழிச்சு சொல்ற?!" என்று நாகவ் கோபித்துக்கொள்ள,


"அந்த பொண்ணுகிட்டயே சொல்லிருக்கமாட்டானா இருந்திருக்கும்டா! அதான் அவங்ககிட்ட சொல்லிட்டு நம்மகிட்ட சொல்லலாம்னு நினச்சிருப்பான். அதான் அன்னைக்கே சொன்னானே நேரம் வரும்போது சொல்றேன்னு..இதுக்கு எதுக்கு கோபப்படுற? கூல்டா!" என்று பிரபவ் கூறி நாகவ்வை சமாதானப்படுத்திட, அவனும் சாதாரணமானான். ஆனால், இவன் இவ்வளவு தெளிவாகக் கவனித்திருப்பதைக் கண்ட ராணா சற்று யோசித்தான்.


"அப்றம்! சொல்லிட்டியாடா? எப்படா சொன்ன?! அப்போ! சீக்கிரம் கல்யாண ஏற்பாட பாக்கணும்போல!!" என்று ராம் கூறி கேலி செய்ய, சிறிது யோசித்த ராணா பொறுமையாக,


"கல்யாணம் இன்னைக்குத்தான்! என் வீட்ல வச்சுதான்டா கல்யாணம் நடக்கப்போகுது!" என்று இன்னொரு பெரிய குண்டை தூக்கிப் போட, நால்வரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தனர்.
அவர்களுக்கு என்னவென்று சிந்திக்கக்கூட முடியவில்லை. ராணாவும் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, அதன்பின் மௌனத்தைக் களைத்தான், விஜய்.


"என்னடா சொல்ற??!! இன்னைக்கு கல்யாணமா!! இது எப்ப முடிவு பண்ண?! யாரக் கேட்டுடா இப்டி ஒரு திடீர் முடிவு பண்ண?!" என்று ஆதங்கப்பட,


"அவன் யாருகிட்ட கேட்டுருக்கான்டா! யார மதிச்சுருக்கான்! இத்தன வருசம் கூடவே இருக்கிற நம்மளயே மதிக்கல! எதையுமே சொன்னது கிடையாது! இதையும் சொல்லல! அவ்ளோதான்! நம்மலாம் இவனுக்கு யாரோதான!" என்று நாகவ் வேதனையில் கோபமாகப் பேசிட, அதைக் கேட்ட ராணா முகம் சுருங்கினான்.


"டேய்! நாகா!! அப்டிலாம் இல்லடா! நீங்க எனக்கு எப்டினு உங்களுக்குத் தெரியாதாடா?! நீங்க என் ஃப்ரண்ட்ஸ்..அதுக்கும் மேல ப்ரதர்ஸ்டா!!" என்று ராணா சமாதானமாகக் கூறிட,


"அவன் சொன்னதுல என்னடா தப்பு? நீ ப்ரண்ட்ஸா நினச்சுருந்தா நீ லவ் பண்ணத சொல்லிருப்பல்ல! அட்லீஸ்ட்..! கல்யாணத்த பத்தியாச்சும் எங்ககிட்ட பேசிருப்ப! ஆனா! நீ இப்ப டிஸ்கஷன் பண்ண வரலயே! இன்ஃபர்மேஷன் கொடுக்கத்தான வந்திருக்க! வந்துருங்கனு சொல்லிட்டுப் போக வந்துருக்க! அப்டித்தான! சொல்லிட்டல்ல! போதும்! நாங்க வந்துருவோம். கிளம்பு! ஏன்னா.. நாங்க உன்னய எப்பவும் ப்ரண்டாதான்டா பாக்குறோம்!" என்று உடைந்து கூறிய ராம் கண்கலங்கிட, அதைப் பார்த்த ராணாவுக்கு உள்ளுக்குள் வலித்தது.


இவர்களிடம் என்ன சொல்வது?? உண்மையைச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?? இன்னும் கோபம்தான் அதிகம் ஆகும். இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தவன், அவர்களைச் சமாதானம் செய்ய முனைந்திட, இவனது திடீர் ஏற்பாட்டில் சந்தேகம் கொண்ட பிரபவ்,


"ராணா!! உண்மைய சொல்லு! இது லவ் மேரேஜ்தானா?! இல்ல...வேற ஏதாச்சும் டீலிங்கா? இப்டி திடீர்னு நீ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிருக்கன்னா ஏதோ தப்பா படுது! என்னனு சொல்லுடா!!" என்று அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, ஒருநொடி அதிர்ந்தவன், பின் சமாளித்துக்கொண்டு,


"ஆமாடா! நீ சொல்றது உண்மதான்! இந்தக் கல்யாணம் திடீர்னு நடக்க காரணம் இருக்கு!" என்று கூறிட, அவனைக் கேள்வியாய்ப் பார்த்தனர், நால்வரும். இவனும் தொடர்ந்தான்.


"நீங்க சொன்னமாறி அன்னைக்கு அவளபத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். அடுத்து அவகிட்ட பேசவும் செஞ்சேன். அப்றம் எங்களுக்குள்ள ஒத்துப்போய் கொஞ்சநாள் நல்லா போச்சு. அவளுக்கு அம்மா கிடையாது அப்பா மட்டும்தான். அவங்களும் ரெண்டு நாள் முன்னாடி திடீர்னு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு. இப்ப அவ யாரும் இல்லாம அநாதையா இருக்கா. அதான் அவள உடனே கல்யாணம் பண்ணி கூட்டி வந்துடணும்னு முடிவு பண்ணினேன். அவ அப்பா இறந்த விஷயம்கூட எனக்கு நேத்துதான் தெரியும். அவகூட இருந்ததால உங்ககிட்ட எதுவும் சொல்லமுடியல. இந்த நிலமையில அவள தனியா விட விருப்பம் இல்லடா! அதான்! இந்த திடீர் கல்யாணம்" என்று சில உண்மையும் பல பொய்களையும் கோர்த்து இவர்கள் இப்படி கேட்பார்கள் என்று முன்கூட்டியே அறிந்தவன் அவர்களிடம் கூறிமுடித்தான்.


அவர்களும் இவனை சோகமாகப் பார்த்திட, பின்பு, "அப்ப நீ எப்டி லவ் பண்ணங்கிற ஸ்டோரி என்னனு சொல்லு!" என்று நாகவ் கேட்டிட, அதைக்கேட்ட ராணா, "இப்ப அதெல்லாம் சொல்றதுக்கு நேரமில்லடா! கல்யாணம் இன்னைக்கு! இப்பவே டைம் கம்மியாதான் இருக்கு. அந்தக் கதைய வேறொரு நாள் சொல்றேன்டா! கோச்சுக்காதீங்கடா!" என்று முடிந்தளவு சமாதானமாகப் பேசிச் சமாளித்திட, அவர்களும் இவன் கூறியதை நம்பி விட்டனர்.


"சரிடா!! அப்பா அம்மா எல்லாரையும் கூப்டணும்ல! இப்பவே போகணும்! வாடா!" என்று பிரபவ் அழைத்திட, சிறிது அதிர்ந்த ராணா,


"வேணாடா!! அம்மா அப்பா யாரையும் கூப்ட வேணாம்!" என்று கூறிட, நால்வரும் அதிர்ந்தனர். "ஏன்டா? எதுக்கு அவங்கள கூப்ட வேணானு சொல்ற? பெரியவங்க அவங்க இல்லாம எப்டிடா கல்யாணம்??! " என்று பிரபவ் கேட்டிட,


"அப்டி இல்லடா!! இது திடீர்னு முடிவு பண்ண கல்யாணம்! அதுவும் அவளுக்காக பண்றது. ஆனா, இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல அவளுக்கும் முழு சந்தோசம் இல்ல! அவங்க அப்பா இறந்த இரண்டாவது நாளே கல்யாணம் பண்ணிக்கிறதால கொஞ்சம் வருத்தமா இருக்கா! இது அவள என்கூட இருக்க வைக்கிறதுக்காக பண்ற கல்யாணம். இத பெரியவங்க எப்டி ஏத்துப்பாங்களோ!" என்று பொறுமையாகக் கூறிட,


"அதபத்தி நீ ஏன்டா கவலப்படுற? உனக்கு கல்யாணம்னாலே முதல்ல சந்தோசப்படுறவங்க அவங்கதான். நீ எப்டியாச்சும் கல்யாணம் பண்ண ஒத்துக்கமாட்டியானு நினைச்சுட்டு இருக்காங்கடா அவங்க! நீ கல்யாணம்னு சொன்னாலே வேற எதபத்தியும் யோசிக்காம வந்துடுவாங்கடா! நீ வா! நாங்க பேசிக்கிறோம்!" என்று நாகவ் கூறிட, தன் எண்ணம் ஈடேறியதை நினைத்து மனதில் புன்னகைத்த ராணா அவனைப் பார்த்து,


"இப்ப என்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சா சார்!" என்று கிண்டலாகக் கேட்டிட, அவனும் முகத்தைத் தூக்கிவைத்து,


"அதெல்லாம் இல்லயே! கோபம்லாம் இருக்கத்தான் செய்யுது!" என்று போலிக் கோபம் காட்டிட, அதை உணர்ந்தவன்,


"அப்டியா!!அப்ப கல்யாணத்துக்கு வரமாட்டியா?!" என்று கேட்டிட,


"யார் சொன்னது?? வருவேனே! நீயே மொத தடவையா கல்யாணம் பண்ணிக்கப்போற! அத நான் பாக்க வேணாமா?!" என்று கூறுவதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்துவிட்டனர்.
அதைப் பார்த்த நாகவ், தான் சொன்னதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அதையும் பார்த்துச் சிரித்திட இவனும் சிரித்தான்.


"சரி! சரி! ரொம்ப சிரிக்காதீங்க! ஒழுங்கா கோபப்படக்கூட விடமாட்டீங்களே..!! நீ மட்டும்தான் எப்பவும் கோபப்படணுமா ராசா!" என்று ராணாவைப் பார்த்துக் கேட்டு சிரிக்க, இருவரும் அணைத்துக்கொண்டனர்.


"பார்றா!! கோபப்படுற மூஞ்சிய! இவனே சொல்லிட்டு இவனே சேந்துகிட்டான்டா!" என்று ராமும் கேலி செய்து சிரித்திட, அனைவரும் சிரித்தனர்.


"அப்றம்! அவங்க பேர இன்னும் சொல்லவே இல்லயேடா!!" என்று விஜய் கேட்டிட, அப்போதே மற்றவர்களும் நியாபகம் கொண்டு கேட்டிட, அதைக் கேட்ட ராணா கண்களில் கோபம் பொங்க, அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு,


"காவ்யா!" என்று கூறினான்.


"காவ்யா! நைஸ் நேம்டா!" என்று பேசிமுடித்து அப்படியே அனைவரும் சமாதானமாகி, சந்தோசமாகக் கிளம்பினர்.


ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றவர்கள் அவர்களிடம் ராணாவின் திருமணச் செய்தியைக் கூறியதும், முதலில் அதிர்ந்தவர்கள், பின்பு மிகவும் ஆனந்தம் அடைந்தனர். காவ்யாவின் நிலையை இவர்கள் எடுத்துக்கூறிட, அவர்களுக்கும் இந்த ஏற்பாடே சரியெனப்பட்டது. ஆதலால், வெளியார் யாரையும் அழைக்காமல் குடும்பமாய் கருதும் இவர்களை மட்டும் வைத்துத் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.


அதன்பிறகு, சிறிது நேரத்தில் அவனுக்கு உடை எடுக்க நண்பர்கள் ஷாப்பிங் சென்றனர். அனைத்தையும் தாங்களே செய்வோம்! என்று அவர்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து அவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தனர். அவனுக்கு எடுத்த முடித்தபின் காவ்யாவுக்கு புடவையைத் தேர்வு செய்யச் சென்றவர்கள், குழம்பிப்போய் நின்றிட, ராணாவே ஒரு புடவையைத் தேர்வுசெய்தான். பின், நகைக் கடைக்குச் சென்று நகைகள், தங்கத்தில் தாலிக்கொடி அனைத்தையும் துரிதமாக வாங்கியவர்கள் ராணாவின் வீடு வந்து சேர்ந்தனர்.


வீட்டின் அலங்கார வேலைகளை வேலையாட்கள் பார்த்துக் கொண்டிருக்க, ராணா கமலாம்மாவை அழைத்து காவ்யாவுக்கான புடவை, நகைகள் என அனைத்தையும் கொடுத்து தயார் செய்து அழைத்துவரும்படி உத்தரவிட, அவரும் அவ்வாறே தாம்பூலத்தில் வைத்து எடுத்துச் சென்றார். அதன்பிறகு, இவர்கள் ஐவரும் வேறுவேறு அறைகளில் தயாராகச் சென்றனர்.


சிறிது நேரத்தில் வெளியே வந்த நண்பர்கள் நால்வரும் வீட்டின் அனைத்து ஏற்பாடுகளும் சரியாக முடிந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொண்டிருக்க, அவர்களது பெற்றோர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்று அமரவைத்து உபசரித்திட, அவர்களும்,


"டேய்!! இந்தக் கல்யாணத்த பாத்தா திடீர்னு ஏற்பாடு பண்ணமாறியே இல்லயேடா!! காலைல ஆரம்பிச்சு இவ்ளோ நேரத்துக்குள்ள ரொம்ப அழகா தயார் பண்ணிருக்கீங்களே!! சூப்பர்டா!!" என்று ராமின் தந்தை வியந்து கூறிட,


"இதெல்லாம் நாங்க பண்ணலப்பா! எல்லாமே ராணாவோட ஏற்பாடுதான்! அவனே ஆட்கள வச்சு எல்லாத்தையும் தயார் பண்ணிட்டான்பா" என்று பிரபவ் கூறிட,


"ஆமாப்பா!! சொன்னமாறி வேலைய முடிக்கலன்னா அப்றம் ராணாவோட கோபத்த யாரால பாக்கமுடியும்! அதுக்காகவே எல்லாரும் பறந்து பறந்து வேலை
பாத்துருப்பாங்க" என்று கூறி சிரித்தான், நாகவ். மற்றவர்களும் அதை ஆமோதித்துச் சிரித்தனர். சிறிதுநேரம் இப்படியே கழிய, ஐய்யரும் வந்தார். இன்னும் ராணா வெளியே வராததைக் கண்டு அவனைப் அழைத்துவர நண்பர்கள் சென்றனர்.


அறையைத் திறந்துகொண்டு நால்வரும் உள்ளே செல்ல, அங்கே அவர்கள் கண்ட காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தனர். ராணா பட்டுவேட்டி சட்டை அணிந்திருக்க, வேட்டியைச் சரியாகக் கட்டமுடியாமல் அதனோடு போராடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவர்கள் அவன் அருகில் சென்று,


"தமிழ்நாட்டுலயே டாப் பிசினஸ்மேன்!! பட்டுவேஸ்டியைக் கட்டுறதுக்கு அதுகூட சண்ட போட்டுகிட்டு இருக்கான்.ஹா..ஹா..!" என்று ராம் கூறி கிண்டல் செய்திட, அவனை முறைத்தவன்,


"உனக்கு மட்டும் தெரியுமாடா?! என்னய சொல்ற?!" என்று பதிலுக்கு வாற,


"எனக்காடா கல்யாணம்?? இப்ப உனக்குத்தான! நீதான் கத்துக்கணும்! எனக்கு தெரிய அவசியம் இல்லையே!!" என்று இவனும் பதிலுக்குக் கூறி பழிப்பு காட்டிட, ராணா கடுப்பாகி அவனை அடிக்க வர, அதற்குள் அவன் வேட்டி நழுவியதால் அப்படியே பிடித்துக்கொண்டு நின்றுகொண்டான். அவனைப் பார்த்து மறுபடியும் அனைவரும் சிரித்திட, அவன் உண்மையிலேயே முறைக்கவும் சற்று அடங்கினர்.


"டேய்!! இது தெரியலன்னா என்னடா?! விடுங்க! யூடியூப் பாத்து கட்டிக்கலாம்ல!" என்று நாகவ் கூறிட, மற்றவருக்கும் அந்த யோசனை அப்பொழுதே தோன்றியது.


"டேய்! நாகா!! உறுப்படியான யோசனைய கொடுத்திருக்கடா!!" என்று அனைவரும் அவனிடம் ஹைபை செய்துவிட்டு பின் வேட்டியை ஒருவழியாகக் கட்டிமுடித்துவிட, அவனும் தயாராகிட, ஐவரும் வெளியே வந்தனர். காவ்யாவும் மேலிருந்து தயாராகிக் கீழே வருவதைப் பார்த்தவர்கள்,


"அடேய்!! காவ்யா ரொம்ப அழகா இருக்காங்கடா!" என்று விஜய் கூறியதைக் கேட்டு அனைவரும் ஆமோதித்தனர். "ரொம்ப அமைதியான டைப் போல! பாத்தாலே தெரியுது!" என்று நாகவ் கூறிட, அதைக் கேட்ட ராணா ஏளனப் புன்னகை ஒன்றை சிந்தினான். அதை எவரும் கவனிக்கவில்லை.


அதன்பின், காவ்யாவும் கீழிறங்கி வர, அவளின் ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அழகு அவனையும் ஒருநொடி அவள்பக்கம் பார்வையை நிலைத்திடத்தான் செய்தது. அவன் நண்பர்கள் அவனைக் கேலி செய்து அழைத்துவந்து அக்னியின் முன் அமர வைத்தனர். காவ்யாவும் வந்தமர்ந்திட, திருமணம் நிறைவடைந்தது.


*******************************************


காவ்யா அவள் தந்தையை இழந்த சோகத்தில்தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்த ராணாவின் நண்பர்களின் பெற்றோர்களும் அவளிடம் எதுவும் பேசி சங்கடப்படுத்தாமல் சென்றுவிட்டனர். இவன் நண்பர்களும் அவளுக்கு ஆறுதல் கூறிட, அதை அவள் இவன் செய்த பாவத்தில் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டாள்.


ராணா மிகச் சரியாக அவன் நினைத்ததை நடத்தி முடித்த வெற்றிக் களிப்பில் இருந்தான். அவன் நண்பர்கள் இவனுக்கும் அறிவுரை கூறிட, அதற்கு மௌனம் மட்டுமே காத்தான். அதை சம்மதமாக எண்ணியவர்கள் சிறிதுநேரம் இருந்துவிட்டு பின் அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி விடைபெற்றுச் சென்றனர். அவர்களை வழியனுப்பிய ராணாவும் காவ்யாவைப் பார்க்க அவளிருக்கும் அறைக்குச் சென்றான்.


*******************************************


ராணா பேசிச் சென்றதும் கீழே சோர்ந்து அமர்ந்தவள், நடந்ததை நினைத்துப் பார்த்திட, அவளால் அழுதிட மட்டுமே முடிந்தது. அப்படியே அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென குமட்டல் ஏற்பட, எழுந்து சென்று வாந்தி எடுத்தாள். அதன்பின், குளியறைக்கு வெளியே வந்து மெத்தையில் மெதுவாக அமர்ந்தாள். நாள் முழுவதும் ஏற்பட்ட பிரச்சினையும் கவலையும் மனதை சோர்வாக்கிட, உணவு உண்ணாமல் இருந்தது உடலை சோர்வாக்கிட, இரண்டும் சேர்ந்து அவளை மயக்கத்திற்குத் தள்ளியது.


காவ்யாவின் அறையைவிட்டு வெளியே வந்தவன், அவன் அறைக்குச் சென்றான். இரவானதும் உணவு உண்ண கீழே இறங்கி வந்தவனுக்கு கமலாம்மா உணவு பரிமாறிட, அவனும் அமைதியாக உணவருந்தினான். காவ்யாவைக் காணாததால் அவளை அழைத்துவர செல்ல முற்பட்டார், கமலாம்மா. அதைப் பார்த்தவன், "எங்க போறீங்க?" என்று கேட்டிட,


"காவ்யாம்மா இன்னும் சாப்ட வரல. அதான் போய் கூப்டு வரலாம்னு...போறேங்கய்யா!!" என்று மெதுவாகக் கூறிட,


"ஏன்? அவள ஒருத்தங்க போய் கூட்டிட்டு வரணுமோ! அவ என்ன மகாராணியா?? அவளுக்குப் பசிச்சா அவளே வருவா!" என்று கோபமாகக் கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திட, அவரும் அமைதியானார்.


அவன் உண்டு முடித்து வெளியே செல்ல எத்தனிக்கும் முன் சிறிது யோசித்தவன் கமலாம்மாவிடம் திரும்பி, "கமலாம்மா!! மேலே போய் அவள கூப்டு வந்து சாப்ட வைங்க!" என்று கூறிச் சென்றிட, அவரும் சிறிது நிறைவுடன் மேலே சென்றார்.
அவள் அறையைத் திறந்தவர் அதிர்ந்தார்.


காவ்யா மெத்தையில் கால்களைக் கீழே தொங்கவிட்டபடி மயங்கிய நிலையில் மெத்தையின் விழும்பில் படுத்திருந்ததைப் பார்த்துப் பதறியவர், அவளருகில் சென்று அவளைத் தள்ளி படுக்க வைத்தவர், அவளை எழுப்பினார். ஆனால், அவள் எழாமல் இருக்கவும் பதற்றமடைந்தவர் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார். ஆனால், அதற்கும் எந்த அசைவுமின்றி போகவே பயந்தவர் ராணாவிற்கு அழைப்பு விடுத்து விசயத்தைக் கூறினார். அவனும் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்தான். அதற்குள் அவன் அழைத்திருந்த மருத்துவரும் வந்துசேர, அவளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.


காவ்யாவைப் பரிசோதித்த மருத்தவர் அவளுக்கு ஊசிபோட்டுவிட்டு ராணாவிடம் வந்திட, "என்னாச்சு டாக்டர் அவளுக்கு??" என்று ராணா சாதாரணமாகவே கேட்டிட,


"இவங்க உங்களுக்கு...??" என்று மருத்துவர் கேள்வியுடன் நோக்கிட, அதைக் கேட்ட ராணா இமைமூடித் திறந்து, "ஷீ இஸ் மை வஃய்ப், டாக்டர்!" என்று கூறினான்.


அதைக் கேட்டு சிறிது ஆச்சரியபட்டவர், "உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே தெரியாதே!!" என்று கூறிட, அதைக் கேட்டவன்,


"அது..அவசரமா சிம்பிளா மேரேஜ் பண்ணினதால யாரையும் கூப்ட முடியல!!" என்று கூறிட,


அவரும் அது பெரிய இடத்து விவகாரம் என்றெண்ணியவர், புன்னகையுடன் அவனைப் பார்த்து, "ஓகே! கங்க்ராஜூலேஷன்ஸ்!! மிஸ்டர். ராணா! நீங்க அப்பாவாகப் போறீங்க! ஷீ இஸ் ப்ரக்ணண்ட்!" என்று கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.


"என்ன சொல்றீங்க டாக்டர்??! உண்மையாவா?!" என்று வியப்பில் கேட்டிட, அதைக் கண்ட மருத்துவரும் மகிழ்ச்சியில் கேட்கிறான் என்றெண்ணி,


"ஆமா! மிஸ்டர். ராணா! இப்ப நார்மலாதான் செக் பண்ணிருக்கேன். நீங்க கூடிய சீக்கரம் ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணிக்கோங்க. அண்ட் அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். மார்னிங்தான் எழுவாங்க. அவங்கள நல்லா சாப்ட சொல்லுங்க. நான் கிளம்புறேன்" என்று அறிவுரை கூறிச் செல்ல, அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.


ராணா வந்து ஆழ்ந்த மயக்கத்தில் படுத்திருக்கும் காவ்யாவைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, கமலாம்மாவும் மருத்துவர் சொன்ன விசயத்தைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்.


கோபத்தால் ஏற்பாடு செய்த திருமணம் என்று தானே நினைத்தோம்! இன்று திருமணம் முடிந்தவள் எப்படி இன்றே தாயாக முடியும்? அப்படியென்றால் இவனுக்கும் அவளுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததா?? இதனால்தான் யாருக்கும் தெரியாமல் உடனடி திருமண ஏற்பாடுகள் செய்தானா? என்ற எண்ணங்கள் அவர் மூளையைக் குடைந்தன.


காலையில் அவன் பேசியதை முழுதாகக் கேட்டிராததாலும் அவன் தெளிவாகப் பேசிடாததாலும் இவருக்கு உண்மை விளங்கவில்லை. எதுவானாலும் இவனுக்கு அவள்மேல் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் இவரால் உணர முடிந்தது. ஆனால், அவருக்கு இதை எதுவும் கேட்டிடும் தைரியமும் அதிகாரமும் கிடையாது என்பதால் அமைதியாக நின்றார்.


கமலாம்மா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ராணா அவரைப் போகச் சொல்லிவிட்டு அவனும் அவனறைக்குச் சென்றான். அவனுக்கு என்னவென்று புரியாத குழப்பநிலையில் இருந்தான். இவள் கருவுற்றிருக்கிறாளா?? ஆனால்! யாருடைய குழந்தை?? என்னுடைய குழந்தைதானா?? இல்லை...வேறொருவருடையதா?? ஆனால்! நான் அறிந்தவரையில்
அவளுக்கு காதலோ காதலனோ கிடையாதே!! என் யூகம் சரியாக இருந்தால் நான் நினைத்துதான் சரியாக இருக்கவேண்டும். எதுவோ! காலை அவளிடம் கேட்டு உண்மையை அறிந்துகொள்ளலாம் என்று தனக்குள் நினைத்துக்கொண்டவன் அவன் வேலைகளை முடித்துவிட்டு தூங்கச் சென்றான்.







ராணாவின் நண்பர்களுக்கு இவன் மறைக்கும் உண்மைகள் தெரிய வந்தால் என்ன நேரிடும்??
காவ்யாவின் கருவில் வளர்வது இவன் குழந்தை என்பதை அறிந்தால் என்ன செய்வான்??





❤வருவாள்❤...



கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 13


காவ்யா சோர்வினால் மயங்கியவள் ஊசியின் வீரியத்தால் அயர்ந்து தூங்கியதால் காலை விடிந்து தாமதமாகவே கண்விழித்தாள். மெல்ல படுக்கையைவிட்டு எழுந்தாள். கடிகாரத்தைப் பார்த்தவள் மணியைப் பார்த்து அதிர்ந்தாள்.


'என்ன!! விடிஞ்சிருஞ்சா??!! அப்ப நைட்டு வந்த மயக்கம் இப்பதான் தெளியுதா?! ஆனா, எப்பவுமே இப்டி நடந்தது இல்லையே!!' என்று தனக்குள் சந்தேகித்து எண்ணிக்கொண்டே எழுந்து குளியறை சென்றாள். குளித்து முடித்துவிட்டபின் தான் அவளுக்கு நியாபகம் வந்தது, தன்னுடைய உடைகள் எதுவும் இல்லையென்று. என்ன செய்வதென்று அறியாமல் நின்றவள், பூந்துவாலையை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.


அறையின் அலமாரிகளில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியவள் எந்த உடையும் இல்லாமல் வெறுமையாக இருந்ததைப் பார்த்து சலித்தவள் அப்படியே சோர்வாகி படுக்கையில் அமர்ந்திட, அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து வேகமாக குளியலறைக்குள் சென்று சாத்திக்கொண்டாள். அறையை முழுமையாகத் திறந்து உள்ளே யாரோ வரும் ஓசையைக் கேட்டவள், யாரது?? என்று வினவிட, எதிர்த்திசையில், "நான்தான்மா! கமலா!" என்று கூறியதைக் கேட்டதும்தான் சற்று நிம்மதி எழுந்தது.


அவரிடம் எதற்காக வந்ததாய் வினவிட, அவரும் ராணா உடையைக் கொடுத்தனுப்பியதாய்க் கூறிவிட்டு அதை மெத்தையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதும் இவள் உள்ளே வந்து அந்த உடையை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஆடம்பரமில்லாத எளிமையான மற்றும் அணிவதற்கு இலகுவான காட்டன் புடவையாக இருந்தபோதிலும் அதன் தரமே அதன் அதிக விலையை எடுத்துக்கூறியது. அதனுடன் இதர உடைகளும் இருந்திட, அதை அணிந்து தயாரானாள்.


ஏற்கனவே, நேற்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள, என்ன செய்வதென்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள். அவளது தோழிகளுடன் இருக்கையில் பசியே இல்லாமல் இருந்தாலும் சாப்பிட தோன்றாமல் இருந்தாலும் உணவு ஊட்டிவிட்டுக் கவனித்துக் கொண்டதை நினைத்து வருந்தினாள். அந்நேரம், கதவைத் தட்டிவிட்டு திறந்துகொண்டு உள்ளே வந்தார், கமலாம்மா.


கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவர் இவளருகில் வைத்துவிட்டு, தண்ணீர் ஜாடியையும் வைத்துவிட்டு சாப்பிடுமாறு சொல்லிச் சென்றார். இவளுக்கு என்ன சொல்வது? என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. எனினும், பசியின் பிடியில் இருந்தவள், தட்டில் இருந்த நான்கு இட்லி மற்றும் வடையையும் நன்றாக சாப்பிட்டு முடித்தாள். பல நாட்களுக்குப்பின் அவளாக பசித்து உண்ணும் உணவு இதுதான் என்பதை இந்நிலையில் இவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.


உணவருந்தி முடித்தவள் தட்டைக் கழுவி வைத்துவிட்டு நகர, அந்நேரம் அறைக்குள் நுழைந்தான், ராணா. அவன் திடீரென்று வந்ததும் பதறியவள் இவனைக் கண்டதும் பயந்து தலை கவிழ்ந்துகொண்டாள். அதை எதையும் கவனிக்காது அவன் அவளருகில் வந்து,


"நீ ப்ரக்ணன்டா இருக்க!! தெரியுமா??" என்று நேராகக் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி இவனுக்கு எப்படி தெரியவந்தது? என்று அதிர்ந்தாலும் அவள் குனிந்திருந்ததால் அவனுக்கு அது தெரியவில்லை. அவள் அமைதியாகவே நின்றிட, கோபம் கொண்டவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி,


"உன்னத்தான் கேக்குறேன்!! நீ ப்ரக்ணன்டா இருக்கிறது உனக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கேட்டிட, அவளும் வலி தாளாமல் திணறியவள், "தெரியும்!" என்று திக்கித் திணறி கூறிட, அவன் லேசாக அதிர்ந்தான்.


"அப்போ! உண்மைய சொல்லு!! இது யாரோட குழந்த??" என்று இவன் சந்தேகமாய் கேட்டதைக் கேட்டு அவள் அதிர்ந்து இவனைப் பார்த்தவள், மறுநொடி தலைகவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்ததைப் பார்த்த ராணா,


"இங்க செண்டிமெண்ட் சீன பாக்க
ஒண்ணும் நான் வரல! நான் கேட்டதுக்கு பதில்!! இது யாரோட குழந்த?? உனக்கு லவ்வர்னு யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்! அப்போ...இது என்னோட குழந்தையா?? சொல்லு!!" என்று அழுத்தமாகக் கேட்டிட, அதைக் கேட்டவள் அவனது திமிர்ப் பேச்சையும் சந்தேகப் பார்வையையும் தாளமுடியாமல் நின்றவள்,


"ஆமா...!! ஆமா!! ஆமா!! இது உன்னோட குழந்ததான்!" என்று கத்தியவள் மடிந்து கீழே அமர்ந்துவிட்டாள். ஆனால், காவ்யா
கூறியதைக் கேட்ட ராணா மனதில் தோன்றிய வெற்றிக் களிப்பு சிரிப்பாய் மலர்ந்திட, உதட்டில் பூத்த ஏளனப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.


"நான் நினச்சது சரிதான். இது என்னோட குழந்ததான். நீ இப்டி ப்ரக்ணன்டா இருக்கிறது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னய கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே!!" என்று இவன் ஏளனமாகக் கூறிட, அதில் அவனை சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தவாறே,


"நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலே நான் நினச்சதவிட உன்னய சூப்பரா பழி வாங்கிருக்கலாம்போல!! நீ கல்யாணம் ஆகாம வயித்துல குழந்தையோட இருந்திருந்தா இந்த சொசைட்டில உனக்கு நிறைய அவமானங்கள் பரிசா கிடச்சிருக்கும். நான் நினச்சதும் நடந்திருக்கும். ஆனா, நான்தான் உன்னய கல்யாணம் பண்ணி கூடவே வச்சு பழி வாங்க நினச்சு இப்டி பண்ணிட்டேனே!!" என்று பொய்யாக வருந்துவதைப் போல நடித்தவன், அடுத்தநொடி சிந்தித்து,


"இப்ப அதனால என்ன ஆயிடுச்சு?? இப்பவும் ஒரு பிரச்சினையும் இல்ல! உன்னய இடிச்சதுக்கே அடிச்சவ நீ! இப்ப என்னோட குழந்தயே உன் வயித்துல வளருது!! இதுவே உனக்கு பெரிய தண்டனைதான்! இப்ப உன்னோட பொறுப்பு என்னன்னா இந்த குழந்தைய பத்திரமா பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது!! இது நம்ம குழந்தையில்லயா!!" என்று நக்கலாகப் பேசி அவளை சீண்டிட, அவளோ இவன் பேசுவதைக் கேட்டு இவனது கீழ்த்தரமான எண்ணத்தை நினைத்து முகம்சுழித்துத் தலைகவிழ்ந்தாள்.


அவளின் நிலையைப் பார்த்து மனதில் சிரித்தவன் அறையைவிட்டு அகன்றான். அவன் பேசியதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென குமட்டல் ஏற்பட, வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள். வெளியே வந்து மெத்தையில் சரிந்தவள் அப்படியே கிடந்தாள். மதியம், அறைக்கு வந்து கமலாம்மா உணவை வைத்துவிட்டு, காலை உணவு கொண்டுவந்த தட்டை எடுத்துச் சென்றுவிட, இவளோ அதைக் கவனிக்கவும் தோன்றாமல் அப்படியே இருந்தாள்.


காவ்யா போனில் பேசியபிறகு அவளை நினைத்துக் கதறி அழுதவர்கள் அப்படியே நிலைகுலைந்தனர். எவ்வளவு நேரம் அழுதிருப்பார்கள் என்று அவர்களும் அறியார்! அவர்கள் கண்ணில் இனி சிந்த ஒருதுளி கண்ணீரும் இல்லை என்று வற்றும் அளவிற்கு அழுதார்கள்.


எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தவர்களால் இப்போது எதுவும் பேசக்கூட தோன்றாமல் கண்ணீர் சிந்தினர். தங்கள் தோழியைப் பிரிந்த சோகம் ஒருபக்கம் இதயத்தை தைக்க, இவர்களுக்காகவும் எடுத்த முடிவுதான் அது என்ற எண்ணம் மறுபக்கம் அவர்களை முள்ளாய் குத்தியது. அந்த வேதனையைத் தாளமுடியாமல் அந்நேரத்தில் அவர்களால் முடிந்தது கண்ணீர் சிந்துவது மட்டுமே! என்பதை அறிந்த அவர்கள் இதயமும் கண்களும் ஆறுதலாய் கைகோர்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தின.


விடியும்வரை அழுதவர்கள், எப்போது தூங்கினார்களோ?!... சரண்யா, அழுது வீங்கி கண்களுடன் இணைந்திருந்த இமைகளை மெதுவாகப் பிரித்து விழித்தாள். சூரிய ஒளி கண்களில் பட்டு கூசச் செய்திட, கண்களை மூடித் திறந்தவள் தன்னைச் சுற்றி ஒருவர் மடியில் ஒருவராய் தூங்கிக் கிடந்த தன் தோழிகளைப் பார்த்தாள்.


காவ்யாவின் பிரிவு வேதனையைத் தந்திட, முகம் வாடியவள், மெல்ல எழுந்துசென்று முகம் கழுவினாள். காலைநேரம் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அதனால், சமையல் செய்வதற்காகச் சென்றாள். அவளுக்கென பசி எடுக்காதபோதிலும் தோழிகளுக்காய் சமைக்கச் சென்றாள்.


அவள் எழுந்துசென்ற அதிர்விலே அனுயாவும் கண்விழித்திட, அவளும் முகம் கழுவிவிட்டுச் சென்று சரண்யாவுக்கு உதவி செய்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் எதுவும் தோன்றாமல் வெறுமையான சிந்தனையுடன் சமையல் மட்டுமே செய்துகொண்டிருந்தனர்.


தன்யா கண்விழித்திட, இருவரையும் காணாமல் எழுந்து செல்லப்போகும் முன் தன்மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த ரம்யாவின் தலையை மெதுவாக நகர்த்தி தலையணையில் வைத்துவிட்டு எழ, ரம்யாவும் கண்விழித்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, முகத்தில் சோகம் மட்டுமே உரையாடியது.


பின்பு, இருவரும் எழுந்துசென்று மற்ற இருவரும் சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வந்து அவர்களுடன் இணைந்தனர், மௌன உரையாடலில். எவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் உணவு தயாரித்து முடித்தனர்.


உணவருந்தும் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர்கள் அமைதியாய் இருந்தனர். ஒருவர் மற்றவர்க்குப் பரிமாறிட, அதை மற்றவர் மறுத்திட, என்று நால்வரும் உண்ணாமலே இருந்தனர். எவரும் இப்போது உணவருந்தும் நிலையில் என்பதை அறிந்த சரண்யா,


"இப்போ! சாப்ட வரப்போறீங்களா? இல்லையா??" என்று கேட்டதற்கும் மௌனமே பதிலாய் வந்திட,


"எனக்கு பசிக்குது! இப்போ, நீங்க சாப்ட வந்தாதான் நானும் சாப்பிடுவேன்! இல்லன்னா இப்டியே பட்டினியாவே இருக்கேன்! உங்களுக்கு சந்தோசமா??" என்று சற்று கோபமாகக் கூறிட, மற்றவர்கள் அவளை வேதனையோடு பார்த்தனர்.


அவளுக்குள்ளும் இதே வேதனை இருப்பதை அவர்களும் அறிவர். அவள் பசிப்பதுபோல் நடிப்பதையும், எதற்காக இப்படி நடிக்கிறாள் என்பதையும் அறிந்தவரகள், அதே காரணத்திற்காக அவர்களும் சாப்பிடத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து சரண்யாவும் சாப்பிட்டாள். எப்போதும் கலகலவெனப் போகும் சாப்பாட்டுநேரம் இன்று மௌனத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.


மகிழ்ச்சி, கஷ்டம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பகிர்ந்தவர்களால் தங்கள் சோகத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதன் காரணமும் அவர்களிடத்தில் உள்ள அதீத அன்புதான். அந்த அன்பும் பிணைப்பும்தான் காவ்யாவை இவர்களிடம் அப்படி பேசச் செய்தது! அவளை எண்ணி இவர்களையும் இப்படி சோகத்தில் ஆழ்த்தியது!


மாலைநேரம், காவ்யாவின் அறையைத் திறந்து உள்ளே வந்தவன், அவள் கிடந்த நிலையைப் பார்த்து அருகில் வந்திட, சாப்பாடு அப்படியே இருந்ததைக் கண்டான். அதில் அவனுக்குக் கோபம் எழ,


"காவ்யா!!!" என்று கர்ஜித்திட, அதைக் கேட்டவள் சுயநிலைக்கு வந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தாள். இவன் நிற்பதைப் பார்த்திட, அவனோ எரிமலையாய் நின்றான். இவள் கண்களில் பயத்தை ஏந்தி மிரட்சியுடன் அவனைப் பார்க்க,


"எதுக்காக இன்னும் சாப்டல?? நீ மட்டும் சாப்டலன்னா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! ஆனா, வயித்துல வளருரது என்னோட குழந்த! அது உனக்கு பிடிக்காட்டியும் ஏத்துகிட்டுதான் ஆகணும்! நீ சாப்டாம கவனிக்காம அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா..அப்றம் உனக்குத்தான் இன்னும் கஷ்டம்!! அதுக்குப்றம் நான் உன்னய பழி வாங்குற விதம் இன்னும் கொடுமையா இருக்கும்! ஜாக்கிரத!!" என்று கர்ஜித்தவன், கமலாம்மாவை அழைத்து உணவு கொண்டுவரச் சொல்ல, அவரும் கொண்டு வந்தார்.


அதை வாங்கியவன் இவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்க மறுத்து அப்படியே நின்றாள். அது இவன் கோபத்தை இன்னும் அதிகரிக்க, தட்டை தூக்கி ஏறிந்திட, அது கீழே விழும் சத்தமும் அவனது கோப முகமும் பழைய நினைவுகளை அவள் கண்முன் காட்டிட, பயந்தவள் அப்படியே மயங்கி படுக்கையிலே சரிந்தாள்.


ராணாவின் கோபத்தில் பயந்துபோன கமலாம்மாவும் காவ்யா மயங்கியதைக் கண்டு அவளருகில் வந்து அவளைச் சரியாகப் படுக்கவைத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,
"அவள பாத்துக்கோங்க! நைட்டு சாப்பாடு கொடுத்து பக்கத்துலயே இருந்து சாப்ட வையுங்க!" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


நேற்று இரவு இவன் பேசியதற்கும் இன்று இவன் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர முடிந்த அவரால், அதன் காரணத்தை யூகிக்க முடியவில்லை. காவ்யா கற்பாமனதால் வந்த அக்கறை என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்த அக்கறைகூட அவளை பழி வாங்குவதன் முதலீடுதான் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்தவளுக்கு கமலாம்மா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். அவளும் மறுத்திட, "இந்தமாறி நேரத்துல இப்படி பட்டினியா இருக்கக்கூடாதும்மா! அது உங்களையும் பாதிக்கும், குழந்தையையும் பாதிக்கும்மா! சாப்டுங்கம்மா!!" என்று அக்கறையாகக் கூறியதைக் கேட்டவளுக்கு அவளது தோழிகளின் நினைவே வந்துசென்றது.


அவர்களின் அக்கறையை இவரின் முகத்தில் பார்த்தவள், என்ன நினைத்தாளோ?? அவர் கொடுத்த உணவை அமைதியாக உண்டாள். பாதிக்குமேல் உண்ணமுடியாமல் சென்று வாந்தியெடுத்துவிட்டாள். அவளுக்குப் பின்னே சென்று அவளின் தலையைப் பிடித்துவிட, முழுவதும் வாந்தியெடுத்தவள், முகம் கழுவி வந்து அப்படியே சோர்வாக அமர்ந்தாள். அவளுக்கு பருக நீரைக் கொடுத்தவர், சாப்பாட்டுத் தட்டைக் கீழே எடுத்துச் சென்றுவிட்டார்.


இரவின் அமைதியும் அறையின் தனிமையும் அவளை அச்சுறுத்திட, மெத்தையில் மடங்கி அமர்ந்தவள் கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலையை வைத்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தாள். சிறிதுநேரத்தில் அறையைத் தட்டும் சத்தம்கேட்டு திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க, கமலாம்மா கையில் பழரத்துடன் வருவதைப் பார்த்தாள். இவளருகில் வந்தவர் அதை இவள் கையில் கொடுத்து,


"இதை குடிங்கம்மா!! சாப்பாடு முழுக்க வாந்தி பண்ணிட்டீங்க! இத குடிங்க! அப்பதான் கொஞ்சமாச்சும் தெம்பு வரும்மா" என்று கூறி கொடுத்திட, காவ்யாவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தது, அவள் தோழிகளின் நினைவில். அமைதியாக அதைப் பருகி முடித்தவள், அந்தக் கண்ணாடி குவளையை அவரிடம் கொடுத்துவிட்டு,


"ரொம்ப தேங்க்ஸ்ம்மா!!" என்று கூறிட, அவரும், "எதுக்கும்மா தாங்க்ஸெல்லாம்!! இது என்னோட வேலம்மா!! பண்ண வேண்டியது என்னோட கடம!" என்று பதில் கூறியதைக் கேட்டவள்,


"சாப்பாடு கொடுக்குறது கடம! ஆனா வாந்தி எடுக்கும்போது அக்கறையா தலையப் பிடிச்சீங்களே! அது என் சொந்தத்த நியாபக படுத்துச்சு! இப்பக்கூட ஜூஸ் கொடுத்தீங்களே! அதுல உங்க கடமைய தாண்டின அக்கற தெரிஞ்சது! நீங்க என்ன நினச்சு செஞ்சீங்களோ? எனக்கு தெரியாது! ஆனா, நீங்க பண்ணதுக்காக தேங்க்ஸ்!" என்று பொறுமையாக விளக்கிக் கூறியதைக் கேட்டவர், இவள் இந்தளவுக்கு தன்னை கவனித்து அதற்காக நன்றி கூறுமளவு உயர்ந்த உள்ளம் கொண்டவள் என்பதை எண்ணி வியந்தார்.


அவளை வாஞ்சையோடு பார்த்தவர், "படுத்துக்கோங்கம்மா! நல்லா ரெஸ்ட் எடுங்க!" என்று கூறிட, "நான் உங்க பொண்ணு வயசுதான இருப்பேன்! என்னய எதுக்கு வாங்க போங்கனு சொல்றீங்க? வா போனு சாதாரணமாவே பேசுங்கம்மா!" என்று காவ்யா கூறிட, அதை அவர் மறுத்தார்.


"இல்லம்மா!! நீங்க என்னோட முதலாளியம்மா!! உங்களப்போய்...நான் அப்டிலாம் கூப்டக்கூடாதுங்கம்மா!!" என்று பதறியபடி கூறினார்.


ஆனால், அது அவள் மனதை சற்று வேதனையடையச் செய்தது. அவள் தோழிகளுடன் இருந்தவரை கொடுமையிலும் ஆறுதல்போல! இருளில் தெரிந்த விளக்கொளி போல! இந்த ரணமான நினைவுகளின் இடையில் அவர்களின் அன்பும் அக்கறையும் இவளுக்குச் சிறிய ஆறுதலாக இருந்தது!


ஆனால், அப்போது அதை அறிந்திடாமல் கவலையில் மூழ்கிக் கிடந்தவள், இங்கே கொடுமை என்னும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க, ஆறுதலுக்கு வழியில்லாமல் திணறினாள். அதற்கிடையில் கிடைத்த சிறு மின்மினி பூச்சியின் ஒளியாய் கமலாம்மாவின் அக்கறை இவளுக்குத் தெரிந்ததால் அவரிடம் ஆறுதல் தேடினாள்.


அவரோ மரியாதையை முன்வைத்திட இவளுக்கு கவலையாக இருந்தது. "எனக்கு அம்மா கிடையாது. உங்கள என் அம்மா மாதிரி நினச்சுதான் அப்டி சொன்னேன்! நீங்க என்னய வா போன்னு கூப்டுறதால மரியாதை இல்லனு ஆகிடாது இல்லயா! ஆனா, ஒரு நெருக்கம் வரும்னுதான் அப்டி சொன்னேன்!" என்று கவலையாகக் கூறியதைக் கேட்டவரும் மனமுருகி நெகிழ்ந்தார்.


அவள் கட்டளையிட்டாலே அதை மறுக்க இவரால் இயலாது! அப்படியிருக்க, அவள் தன்மையாய் கேட்டது இவருக்கு அவள்மேல் உள்ள மரியாதையை இன்னும் அதிகமாக்கியதோடு, அவளின் ஏக்கம் இவரின் மனதையும் உருகச்செய்தது.


"சரிம்மா! உனக்கு அதுதான் பிடிச்சிருக்குன்னா! நான் அப்டியே கூப்டுறேன். சரியாம்மா! இனிமேல் அம்மா இல்லன்னு சொல்லாத! என்னய அம்மா மாதிரின்னு சொன்னேல்ல..அம்மாவாவே நினச்சுக்கோ. கவலப்படாதம்மா!" என்று அவள் தலைவருடி கூறிட, காவ்யாவின் கண்கள் குளமாகின. ஆதரவாய் அவள் தலையை வருடிகொடுத்தவர் அவளைப் படுக்கவைத்து போர்வையைப் போர்த்திவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவர் கையைப் பிடித்துத் தடுத்தவள்,


"எனக்கு தனியா தூங்க பயமா இருக்கு! என்கூட இங்கயே படுத்துக்கிறீங்களா?" என்று சிறுகுழந்தைபோல் கேட்டவளைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? என்றே தெரியவில்லை அவருக்கு.


"இல்லம்மா! ஐயாகிட்ட கேட்காம என்னால எதுவும் பண்ணமுடியாதுமா! அவரு பாத்தாருனா கோபப்படுவாரு! நீ தூங்குறவர வேணா நான் பக்கத்துலயே இருக்கேன்! சரியா!!" என்று கூறிட, அவளும் அரைமனதாய் சம்மதித்தாள். அவளைப் படுக்கவைத்து அருகில் அமர்ந்தவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்திட, சோர்வினாலும் கமலாம்மாவால் மனபாரம் சற்று குறைந்திருந்த காரணத்தாலும் மெதுவாகக் கண்ணயர்ந்தாள். சிறிதுநேரம் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினார்.


ராணா வெளியே சென்றிருந்தவன் வீட்டிற்கு வந்ததும் கீழிறங்கி வரும் கமலாம்மாவைப் பார்த்தவன் காவ்யாவைப் பற்றி விசாரிக்க, அவரும் அவள் சாப்பிட்டதையும் அதை முழுவதும் வாந்தி எடுத்ததால் பழரசம் குடித்து தூங்கிவிட்டதை மட்டும் கூறிச் சென்றார். இவனும் வேறெதுவும் பேசாமல் உணவருந்திவிட்டு சென்று அவனறையில் நுழைந்துகொண்டான்.


ராணாவின் அலுவல் சம்பந்தமாக பார்த்துக்கொண்டிருந்ததால் நடுஇரவு வரை முழுத்திருந்தான். இது அவனது தினசரி வழக்கம். அப்போது யாரோ அலறும் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தவன், அந்தக் குரல் பக்கத்தில் இருக்கும் காவ்யாவின் அறையிலிருந்து வருவதைக் கேட்டு அங்கே ஓடினான். அறையைத் திறந்து உள்ளே சென்றவன், இருட்டாக இருந்திட, அறையின் விளக்குகளைப் போட்டான்.


விளக்குகளைப் போட்டுவிட்டு படுக்கையைப் பார்க்க, காவ்யா அங்கில்லாததால் கண்களால் அவளைத் தேட,
அறையின் மூலையில் அமர்ந்து கால்களைக் கட்டியபடி முகத்தைப் பொத்திக்கொண்டு கத்திக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தான். அவளை அந்நிலையில் கண்டவன் முகம் குழப்பத்தில் சுருங்கிட, அவளருகில் வேகமாகச் சென்று அவள் தோள்தொட்டு எழுப்ப முயற்சிக்க அவள் பதறி இன்னும் அலறினாள்.


இவனும் அதை அலட்சியம் செய்து அவளை மெல்ல எழுப்பி நிற்கவைத்திட, சுற்றியும் பார்த்தவள் கொஞ்சம் பயம் தெளிந்து அமைதியானாள். அவளை எரிச்சலோடு பார்த்தவன், அவள் தோளைப் பற்றியபடி, "ஏய்!! எதுக்கு கத்திகிட்டு இருக்க?? உனக்கு என்ன பைத்தியமா?? இனி இப்டி எதாச்சும் பண்ணுன...அப்றம் நான் மோசமானவனா ஆயிடுவேன். ஒழுங்கா போய் படு!" என்று கோபமாக கத்திட, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இவனின் கத்தலில் அதிர்ந்து மயங்கிச் சரிந்தாள்.


கீழே விழப்போனவளை கைகளால் பிடித்தவன், எரிச்சலோடு தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்துவிட்டு அறையின் விளக்குகளை அணைக்காமலே கதவை சாத்திவிட்டுச் சென்றான். ராணா உள்ளே செல்லும்போது கதவை திறந்து வைத்ததால் இவளது அலறல் சத்தம் கீழே உள்ள அறையில் படுத்திருந்த கமலாம்மாவிற்கும் லேசாகக் கேட்டிட, என்னவென்று மேலே வந்து இங்கு நடந்ததைப் பார்த்தவர், இவன் காட்டுவது வெறுப்பா?? அக்கறையா?? என்று புரியாமல் யோசித்தவர், சத்தமின்றி கீழே சென்றுவிட்டார்.





காவ்யாவின் நிலை மாறுவது எப்போது?? ராணாவின் பழி தீர்க்கும் எண்ணம் மாறுவது எப்போது?? வஞ்சம் மறைந்து வெறுப்பு மாறிடுமா??







❤வருவாள்❤...





கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 14


காலையில் கண்விழித்தவள் எதுவும் யோசித்துக்கொள்ளாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு கீழே சென்றாள். அங்கே சமையலறையில் கமலாம்மா சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றாள். இவள் வந்ததைக் கவனித்தவர் இவளிடம் திரும்பி,


"என்னம்மா?! இங்க வந்துருக்க? எதுவும் வேணும்னா வெளிய வந்து சத்தம் கொடுத்திருந்தா நானே வந்துருப்பேன்ல! இல்லன்னா இண்டர்காம் வழியா கூப்டுருக்கலாம்லமா?!" என்று வினவிட, அவளும் மெலிதாகப் புன்னகைத்தவள்,


"எதுவும் வேணாம்மா! சும்மாதான் வந்தேன். ரூம்குள்ளயே இருக்குறது ஒருமாதிரி இருந்துச்சு. அதான்!!" என்று கூறிட, அவரும் ஆமோதித்து அவளுக்கு தேனீர் கலந்து கொடுத்தார்.


"நேத்து நைட்டு நீ அலறுன சத்தம் கேட்டுச்சேமா! என்னாச்சுமா? எதுவும் பாத்து பயந்துட்டியா?" என்று அக்கறையாய் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி மௌனம் காத்தாள். அதைப் பார்த்தவரும்,


"சத்தம் கேட்டுச்சுன்னு மேல வந்து பாத்தப்ப ஐயாதான் உன்னய தூக்கிட்டுபோய் படுக்க வச்சிட்டு இருந்தார். நான் அப்படியே கீழ வந்துட்டேன். நீ ரொம்ப சத்தம்போட்டு அலறுனயா! அதான்மா என்னனு கேட்டேன்" என்று தன் விளக்கத்தை மெதுவாகக் கூறிட, அமைதியாக இருந்த காவ்யா,


"தூக்கத்துல இருந்து கண்முழிச்சப்ப ரூம் முழுக்க ஒரே இருட்டா இருந்துச்சா..! அதான்மா ரொம்ப பயந்துட்டேன்! அதனாலதான் கத்திட்டேன்மா!" என்று பொறுமையாகக் கூறுவதைக் கேட்டவர் மெல்ல சிரித்தார். அதைப் பார்த்தவள் என்னவென்று கேட்க,


"என்னம்மா பொண்ணு நீ? இன்னும் சின்னக் குழந்தையா இருக்கியேமா! தனியா தூங்க பயப்படுற, இருட்ட பாத்தா பயப்படுறியேமா! உன்னய பாத்தா எனக்கு வளர்ந்த குழந்த மாறிதான் இருக்கு" என்று புன்னகையுடன் கூறியதைக் கேட்ட காவ்யா தன் மாற்றத்தை நினைத்து வலியில் மெலிதாக விரக்தி புன்னகையை சிந்தினாள்.


காலை எழுந்தவன் தன் கடமைகளை முடித்து, கிளம்பி அறையைவிட்டு வெளியே வந்தவன் காவ்யாவின் அறைக்குச் சென்று பார்த்தான். அவளை அங்கு காணாமல் போகவே கமலாம்மாவை அழைத்தப்படி கீழே வந்தான். அவன் சத்தம் கேட்டு கமலாம்மாவும் வெளியே வர, கீழே வந்தவன் கமலாம்மாவிடம் அவளைப் பற்றி கேட்கும் முன் உள்ளே நின்ற காவ்யாவைப் பார்த்துவிட்டான்.


அவனைப் பார்த்திருந்த கமலாம்மாவை கண்டவன், "எதுக்காக இங்க வந்து நிக்கிறா? நைட்டானா கத்தி இருக்க ஆளுங்கள தூங்கவிடாம பண்ணுறது, பகல்ல அவ இஷ்டத்துக்கு ஆடுறது. எதுக்காக இப்ப அவ ரூமவிட்டு இங்க வந்தா? என்ன பேச்சு இங்க? என்ன நினச்சுட்டு இருக்கா அவ மனசுல?" என்று எரிச்சலுடன் கத்திட, காவ்யா உள்ளேயே அமைதியாக நின்றுகொண்டாள். ராணாவின் கோபத்தைக் கண்டு சற்று பதற்றமானாலும், தன்னை சமாளித்துக்கொண்டு,


"ஐயா!! அவங்க ராத்திரி இருட்ட பாத்து பயந்துபோய்ட்டாங்க போல! அதான் அலறிட்டதா சொன்னாங்கய்யா! இப்ப டீ கேட்டுதான் கீழ வந்தாங்கய்யா! வேற ஒன்னும் இல்லங்கய்யா!" என்று பணிந்து, பொறுமையாகக் கூறியதைக் கேட்டவன் சிறிது அமைதியடைந்தான்.


"சரி! சரி!! சீக்கிரம் கிளம்பி இருக்கச் சொல்லுங்க அவள! அவளுக்கான ட்ரெஸ்ஸெல்லாம் அவ கப்போர்டுல வைக்க சொல்லிட்டேன்!" என்று கூறிவிட்டு கிளம்பி வெளியே சென்றுவிட்டான். இவன் கிளம்பி இருக்கச் சொன்னதைக் கேட்ட காவ்யா அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்க, அவளின் முகத்தை பார்த்தவர், "என்னம்மா? எதுவும் வேணுமா? எதாவது பண்ணுதா?" என்று விசாரித்தார்.


"ஒன்னும் இல்லம்மா!" என்று மட்டும் சொல்லிவிட்டு மேலே செல்ல எத்தனிக்க, அவளை அழைத்தவர்,
"உன்னய ஐயா கிளம்பி இருக்கச் சொன்னாரும்மா! உன்னோட ட்ரெஸ்ஸெல்லாம் உன் கப்போர்டுல வைக்க சொல்லிட்டாராம். இப்ப வச்சிட்டுருப்பாங்க, நீ போய் கிளம்பும்மா!" என்று சொல்லி அனுப்பினார். அவளும் பதில் பேசாமல் மேலே சென்றுவிட்டாள்.


காவ்யா அறைக்குள் நுழையவும் இரண்டு பெண்கள் அலமாரியில் துணிகளை அடுக்கி முடித்திருந்தனர். இவளை பார்த்ததும் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர். அறைக்குள் வந்தவள் குழப்பத்தோடு அமர்ந்தபடி, 'எதுக்காக என்னய கிளம்ப சொல்றான்? எங்கயா இருக்கும்? அவன எதிர்த்து நடந்தா இன்னும் கோபப்படுவான். இப்ப நான் அவன எதிர்த்துப் போராடுற நிலமையில இல்ல. எதுக்காக இப்டி டார்ச்சர் பண்றான்?' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தவளுக்கு குமட்டல் ஏற்பட, சென்று வாந்தி எடுத்தாள். சிறிதுநேரத்தில் குளித்து தயாராகி வெளியே வந்தவள், கீழிறங்கப்போக, கீழே ராணா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அறைக்குள்ளேயே சென்றுவிட்டாள்.


சிறிதுநேரத்தில், அவளை சாப்பிட அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார், கமலாம்மா. அவன் அங்கிருந்து நகர்ந்த பிறகே இவளை அழைத்திருந்தார். இவளும் சாப்பிட்டு முடித்திட, கீழே வந்த ராணா அவளை அழைத்துவிட்டு முன்னே சென்றான். ஒன்றும் புரியாமல் நின்றவள், எங்கே செல்கிறோம்? என்றுகூட தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்று வண்டியில் பின் இருக்கையில் ஏறிக்கொண்டாள்.


ராணா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், பின்னே அவள் இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தவன், "நீ பெரிய மகாராணினு நினப்பா? உனக்கு
ஒன்னும் நான் ட்ரைவர் இல்ல. முன்னாடி வந்து உட்காரு" என்று கோபத்தில் பற்களுக்கிடையில் பேசிட, காவ்யா எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் முன்னே வந்து அமைதியாக அமர்ந்தாள்.


ஒற்றைப் புருவம் தூக்கி அவளை எரிச்சலோடு பார்த்தவன், பின் ஏளனச் சிரிப்பொன்றை வீசியபடி,


"உன் வாழ்க்கைல இப்டிலாம்
நடக்கும்னு உன் கனவுலகூட நினச்சிருக்க மாட்டல்ல! இந்தமாறி எதுவும் பேசமுடியாம, கோபப்பட முடியாம இருப்பனு நீ நினச்சிருக்கியா? இப்ப உன்னோட முழு திமிரும் அடங்கிப்போய் அமைதியா இருக்கிறமாறி அன்னைக்கே இருந்திருந்தா உனக்கு இந்த நிலமை வந்துருக்காது" என்று ஏளனமாகக் கூறியவன், நிறுத்தி யோசித்தவன் அடுத்தநொடி,


"ஆனா! இப்பக்கூட உன் நிலம மோசம்லாம் இல்லயே! இப்ப நீ என்னோட பொண்டாட்டியா ஆயிருக்க! அது எவ்ளோ பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா! மிஸஸ். ராணா தேவ்னு பேரு கிடைக்கிறது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனா, உனக்கு கிடச்சுருக்கு. பட், வாழ்க்கை முழுக்க அந்த பேரு மட்டும்தான் இருக்கும். சந்தோசம் இருக்காது" என்று சொற்களில் வெறுப்பைக் காட்டியவன், காரை உயிர்ப்பித்துக் கிளம்பினான்.


அவன் கூறிய அனைத்தையும் கேட்டவளால் பதிலேதும் பேசமுடியாமல், கவலை தொண்டையை அடைக்க, கண்கள் குளமாக, காரின் சன்னல்புறம் வெளியே திரும்பிக்கொண்டாள். கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட, சன்னல் வழியே வெறித்தபடி அமர்ந்து வந்தாள். சிறிதுநேர பயணத்திற்குப் பின், ராணா வண்டியை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்திட, அவளோ மயங்கி காரின் கண்ணாடியில் சாய்ந்திருந்தாள்.


காரின் கண்ணாடியில் சாய்ந்து கண்மூடியிருந்தவளைப் பார்த்தவன், அவள் தூங்கிவிட்டாளென எண்ணி பல்லைக் கடித்தபடி எரிச்சலுடன் அவளைத் தட்டியெழுப்பினான். அவளிடம் எந்த அசைவும் இல்லாததால் குழப்பமடைந்து இறங்கியவன், மறுபக்கம் வந்து கதவைத் திறக்க, அவன்மீதே சரிந்தாள். அவளை அப்படியே தாங்கியவன், தூக்கிக் கொண்டு அவன் காரை நிறுத்திய இடமான மருத்துவமனைக்குள் சென்றான்.


ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து அழைத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் அறையில் படுக்கவைத்தனர். பின்னே இவனும் வந்தவன் மருத்துவரிடம் விசயத்தைக் கூறிட, காவ்யாவைப் பரிசோதித்துப்
பார்த்தார், அந்தப் பெண் மருத்துவர்.


அவள் இன்னும் மயக்கநிலையிலே படுத்திருக்க, அவளைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இருக்கையில் அமர்ந்து ராணாவிடம் அவள் சம்பந்தமாகப் பேசினார்.


"நீங்க அவங்க ஹஸ்பண்ட் தான?" என்று அவர் வினவிட, அவன் சற்று
எரிச்சலோடு,


"ஷீ இஸ் மை வஃய்ப்! மிஸஸ். காவ்யா ராணாதேவ்!" என்று அழுத்தமாகக் கூறிட, அவரும் அவன் அப்படி சொல்லியதன் அர்த்தம் புரியாவிடினும் பதில் கிடைத்துவிட்டதில் தலையசைத்து ஆமோதித்திவிட்டுப் பேசத் தொடங்கினார்.


"உங்க வஃய்ப் ப்ரக்ணன்டாதான் இருக்காங்க. பட், ரொம்ப வீக்கா இருக்காங்க. அண்ட் ரொம்ப டிப்ரெஸ்டாவும் இருக்காங்க. அதனாலதான் நீங்க சொன்னமாறி அடிக்கடி மயங்கிருக்காங்க. எப்போலாம் அவங்க ஸ்ட்ரெஸ் அதிகமாகுதோ அப்போ அவங்களால மெண்டல் ப்ரஷர் தாங்கமுடியாம மயங்கிடுறாங்க" என்று விளக்கமாகக் கூறியதைக் கேட்டவனுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அதனால், மேலும் எதுவும் அதைப்பற்றி அவன் கேட்டுக்கொள்ளவில்லை.


"டாக்டர்! அவள செக் பண்ணிட்டிங்களா? அப்போ, கூப்ட்டு போகலாமா?" என்று அவன் வினவிட,


"நார்மல் செக்கப் தான் பண்ணிருக்கு. இன்னும் ஸ்கேன் பண்ணல. ஸ்கேன் பண்ணி குழந்த எப்டி இருக்குன்னு பாத்துட்டு, அப்றம் கூட்டிட்டு போகலாம் சார்" என்று கூறியவர், அவளை ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டு அங்கே சென்றார். மருத்துவர் ஸ்கேன் செய்திட, அதை அவளருகில் நின்றிருந்த ராணாவையும் அழைத்து பார்க்கச் சொன்னார்.


ராணாவும் ஸ்கேன் செய்யும்போது திரையில் தெரியும் கருவை பார்த்தான். மூன்று மாதக் கருவென்பதால் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் அசைவை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சொல்லமுடியாத உணர்வொன்று தோன்றி மறைந்தது. அந்தக் கருவையே கண்ணசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஸ்கேன் செய்து முடித்தபின், காவ்யா மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியாததால் அவளை தனியறையின் படுக்கையில் கிடத்தினர். ராணாவிடம் வந்த மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்டை அவனிடம் கொடுத்தவர், மருந்துச் சீட்டையும் எழுதிக்கொடுத்து,


"அவங்கள நல்லா கேர் பண்ணிங்கோங்க. டைம்கு ஹெல்தியா சாப்ட கொடுங்க. அப்றம், மெடிசின்ஸ் டைம்கு எடுத்துக்கச் சொல்லுங்க. முக்கியமா, அதிகமா கவலப்படவோ அதிர்ச்சியடையவோ கூடாது. அவங்க டிப்ரெஸ்டா இருக்கிறதால அது அவங்கள பாதிக்கும், அதனால குழந்தையும் பாதிக்கப்படும். பீ கேர்ஃபுல்!" என்று கூறி செல்லப்போக, அனைத்தையும் பல்லைக் கடித்தபடி அமைதியாகக் கேட்டவன், இறுதி வாக்கியத்தில் அதிர்ந்தான்.


அவரைத் தடுத்து, "டாக்டர்! எதுக்காக
இவ்வளவு நேரம் மயக்கத்துல இருக்குறா? சாதாரண மயக்கம்னா கொஞ்சநேரத்துலயே சரியாகிடும்தான! இதனால குழந்தைக்கு எந்த ப்ராப்ளமும் வருமா?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டிட,


"நார்மலா ப்ரக்னன்ஸி டைம்ல வர மயக்கம்தான் இதுவும். ஆனா, இவங்க டிப்ரஷன்ல இருக்கிறதாலயும் ஸ்ட்ரெஸ்னால மயங்கிறதாலயும்தான் அதிக நேரம் மயக்கத்துலயே இருக்காங்க. மயக்கம் குழந்தைய அஃபக்ட் பண்ணாது. ஆனா, அவங்க இப்டியே டிப்ரஷன்ல இருந்தா, இட் மே அஃபக்ட் எ பேபி! நோ நீட் டு வர்ரி! அவங்க டிப்ரஷன்கும் சேத்துதான் மெடிசின்ஸ் எழுதிருக்கேன். கண்டினியூஸா போடச் சொல்லுங்க. நீங்களும் கேர் பண்ணி பாத்துக்கங்க. அதுதான் அவங்கள நல்லா குணப்படுத்தும்" என்று கூறிச் சென்றார்.


மருத்தவர் சென்ற சில நிமிடங்களில் காவ்யாவும் கண்விழித்தாள். மருத்துவரை அழைத்துப் பரிசோதித்துவிட்டு இருவரும் வீட்டிற்குக் கிளம்பினர். காரில் ஏறியவள் அமைதியாக சாய்ந்துகொள்ள, அப்படியே கண்களை மூடினாள். இவளைப் பார்த்தவன், மறுபடியும் மயங்கிவிட்டாளா? என்றெண்ணி தட்டி எழுப்பிட, பதறியடித்து கண்விழித்தாள். பதட்டத்தில் மூச்சுவாங்கியதைப் பார்த்தவன், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான்.


தண்ணீரைக் குடித்தவள் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு
கண்களை மூடித்திறந்தவள், சன்னல் வழியே வெளியே வெறித்தபடி அமர்ந்துகொண்டாள். அவனும் காரை உயிர்ப்பித்துக் கிளம்பிட, சிறிதுநேர பயணத்தின்பின் வீடு வந்து சேர்ந்தனர்.


காரிலிருந்து இறங்கியவள் அமைதியாக வீட்டிற்குள் செல்வதைக் கண்டு எரிச்சலடைந்தவன், காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே வந்தான். படியேறப்போகும் காவ்யாவைப் பார்த்தவன்,


"நில்லு!" என்று கத்திட, அவளும் நகராமல் நின்றாள். இவன் சத்தம் கேட்டு வெளியே வந்த கமலாம்மாவை பார்த்தவன், அவரை உள்ளே போகும்படி சொல்லிவிட்டு, இன்னும் இவனுக்கு முதுகு காட்டியபடியே நின்ற காவ்யாவின் அருகில் வந்தவன், அவள் தோள்தொட அவள் திரும்பினாள்.


"உன்னோட திமிரு குறைஞ்சிட்டோன்னு நான்கூட நினச்சுட்டேன். ஆனா, அது இன்னும் குறையலல!" என்று கோபமாகக்
கூறியதைக் கேட்டுக் குழம்பிப்போய் அவனைப் பார்த்தவள் தலைகவிழ்ந்து கொண்டாள்.


"என்னடி? பாத்துட்டு குனியுற, இத பயம்னு எடுத்துக்கவா? இல்ல, எகத்தாளம்னு எடுத்துக்கவா? உனக்கு நான் ஒன்னும் சர்வண்ட் இல்ல. உன்னய பிக் பண்ணி ட்ராப் பண்ணுறதுதான் என் வேலனு நினச்சுட்டியோ?" என்று அவன்பாட்டிற்கு கோபத்தில் பேசிக்கொண்டே போக, காவ்யாவுக்குத்தான் எதுவும் புரியவில்லை. அவள் குழப்பத்திலும் ஆற்றாமையிலும் இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றாள்.


"நான் எனக்கு இருந்த அத்தன வேலையையும் விட்டுட்டு வந்து உன்னய கூப்டு போனது செக்கப்காக தான். எதுக்கெடுத்தாலும் மயங்கி மயங்கி விழுந்தா என்ன நடக்குன்னு எப்டி தெரியும்? உனக்காக டாக்டர்கிட்ட நீதான் பேசணும். நான் கிடையாது! இன்னைக்கு மாதிரி எப்பவும் நான் பொறுமையாவே
போவேன்னு நினைக்காத. இந்தா! பிடி! மெடிசின்ஸ். இதக்கூட வாங்காம, எதுக்காக ஹாஸ்பிடல் போனோம்னு கூட தெரியாம அப்டியே வந்தாச்சு. இதுல திமிரா வேற போறது!" என்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்தவன், பின் ஏதோ தோன்ற அமைதியானான்.


மூச்சை இழுத்துவிட்டவன், கமலாம்மாவை அழைத்து மருத்துவர் சொன்ன அறிவுரைகளை எல்லாம் காவ்யாவுக்கும் கேட்கும்படி கூறினான். அவரிடம் சொல்லிமுடித்தவன்,


"கமலாம்மா! இனி தினமும் டைம்கு சாப்பாடு, மெடிசின்ஸ், ஜூஸ் எல்லாம் கரெக்டா கொடுத்துருங்க! சாப்டமாட்டேனு வம்பு பண்ணிட்டு இருந்தான்னா அப்றம் என் கோபம் இன்னும் மோசமா இருக்கும். பாத்துக்கங்கமா! இது இனிமேல் உங்க பொறுப்பு" என்று கூறியவன் வெளியே கிளம்பிவிட்டான்.


அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்ட கமலாம்மா, அவன் சென்றதும் காவ்யாவின் அருகில் வந்தார். இன்னும் சிலைபோல அப்படியே நின்றவளின் தோளைத் தொட, அவளும் தன் நிலையில் இருந்து வெளிவந்து அவரைப் பார்த்தார். ஆனால், அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியாததால் அவளின் மனநிலையை அறிவது அவருக்கு கடினமாக இருந்தது.


"என்னமா? ஐயா இப்டி சொல்லிட்டுப் போறாரு? நீ இவ்ளோ வீக்கா இருக்கியா அப்ப? இதுவர எப்டியோ! ஆனா, இனிமேல் நீ என்னோட பொறுப்புனு ஐயாவே சொல்லிட்டாரு. அதனால, நீ இனி எதையும் வேணானு சொல்லாம நல்லா சாப்டணும். புரியுதா? இன்னும் ஒரே மாசத்துல
உன்னய தெம்பா ஆரோக்கியமா
நான் ஆக்கி காட்டுறேன். சரியா!" என்று ஆர்வமாகக் கூறியவரைப் பார்த்ததும் அவள் உதட்டில் சிறு புன்னகை அரும்பியது.


"அப்ப! உங்க ஐயா சொல்லாட்டி நீங்க இப்படி கவனிக்கமாட்டிங்க, அப்டித்தான??" என்று கேலியாகக் கேட்டு அவரை சீண்டிட,


"அவரு சொல்லாட்டியும் நான் இதத்தான் செஞ்சிருப்பேன். நீ நோஞ்சானா இருக்கன்னு பாத்தாலே தெரியுது. ஆனா, நீ இம்புட்டு சோந்துபோய் கிடக்கன்னு அவரு சொன்னதாலதான தெரியுது. நல்லவேள! எங்கிட்ட சொன்னாரு. உன்கிட்ட சொல்லிருந்தா அதயும் சொல்லிருக்கக்கூட மாட்ட" என்று இவரும் கேலி செய்து சீண்ட, அவள் வாயடைத்துப்போனாள்.


"இனி உன்னோட உடம்ப தேத்த வேண்டியது என்னோட பொறுப்பு. உன் மனச நல்லா வச்சுக்கிறது மட்டும் உன்னோட கைலதான் இருக்குமா. அதனால, எதபத்தியும் யோசிக்காம, கவலப்படாம, நடக்குறத ஏத்துகிட்டு சந்தோசமா வாழ பழகும்மா. எல்லாம் நல்லபடியா மாறும்னு நம்புவோம்!" என்று ஆறுதல் கூறிட, அவளுக்கு பதில்கூற முடியாமல் கண்கலங்கினாள். அவள் கண்ணீரைக் கண்டதும் பதறியவர்,


"என்னாச்சும்மா?? எதுக்காக அழற? நான் தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கம்மா! நீ கவலப்பட்டு
உன்னோட உடம்ப கெடுத்துக்கக்
கூடாதுனுதான் அப்டி சொன்னேன். உன்னய அது காயப்படுத்திருந்தா மன்னிச்சிடும்மா!" என்று கவலையாகக் கூறுவதைக் கேட்டவள், அவரை அணைத்துக் கொண்டாள். அவரும் முதலில் அதிர்ந்தவர், பின், அவள் முதுகை ஆதரவாக வருடிவிட்டார்.


சிறிதுநேரம் கழித்து அணைப்பிலிருந்து வெளிவந்தவள்,
"நீங்க எதுவும் தப்பா சொல்லலம்மா. மன்னிப்புலாம் கேக்காதீங்க. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கும்மா. நான் ரூம்கு போகட்டா?" என்று கேட்டுவிட்டுச் செல்வதைப் பார்த்தவரால் அவளுக்குள் இருக்கும் கவலையை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இனி இதைப்பற்றி பேசி அவளை காயப்படுத்திவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டார்.


காவ்யா பிரிந்து சென்று இருதினங்கள் ஆகியிருக்க, தோழிகள் நால்வரிடமும் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு நாட்களும் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலும் நிம்மதியாக இருந்திட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.


அவள் எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? வயிற்றில் குழந்தையை சுமக்கும் இந்நேரத்தில் என்ன செய்வாள்? அவளை எப்படி பார்த்துக்கொள்வாள்? அவள் தற்போது இருக்கும் நிலை இன்னும் மோசமாகிவிட்டால்..? அவளை யார் கவனித்துக் கொள்வது? என்று எண்ணிலடங்கா கேள்விகளைத்
தங்களுக்குள் சுமந்துகொண்டு அதற்கு விடை தெரியாமல் வருந்தினர்.


என்னதான் காவ்யா தான் நன்றாக இருப்பதாகக் கூறினாலும் தங்கள் கண்ணால் பார்க்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ள முடியாமல் அவள் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்களால். அந்தக் கவலையில் அவர்கள் வாடிக் கொண்டிருந்தனர்.


ஒருவரின் வாட்டத்தை இன்னொருவரால் பார்க்கமுடியாமல் வேதனையில் கரைந்திட, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி தன்யா அவர்களிடம் பேச முடிவுசெய்தாள். நால்வரும் வீட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடத்தில் இருந்தனர். தன்யா நடுகூடத்திற்கு வந்தவள், மற்ற மூவரையும் பேர் சொல்லி அழைத்தாள்.


அவள் அழைத்ததைக் கேட்டு அவர்களும் கூடத்திற்கு வந்து இவளை நோக்கிட, மூவரையும் கண்களால் அருகே வரும்படி அழைத்தாள். அவர்களும் அருகில் சென்று அமர்ந்தனர். அவர்களின் வாடிய முகத்தை கண்டு இவள் இன்னும் வருத்தமடைய, மனதை திடப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


"இப்ப என்னடி உங்களுக்கு பிரச்சினை? காவ்யா நம்மள விட்டு எங்கயோ போயிட்டா. அதான? அது கஷ்டமான விஷயம்தான். ஆனா, அதுக்காக இப்டியே முடங்கி கிடக்கணும்னு இல்லடி. அவ கண்டிப்பா சேஃபா இருக்கிறதாதான சொன்னா. கண்டிப்பா அவ நல்லாதான் இருப்பாடி. அத நினச்சு இப்டியே வருத்தப்பட்டுட்டு இருந்தா..எப்டி? அவளே நம்ம சந்தோசமா இருக்கணும்னு சொல்லிருக்கா! இப்டி வருத்தப்படுறத அவளும் ஒத்துக்கமாட்டாடி...அதனால இனியாச்சும் கொஞ்சம் அதுல இருந்து வெளிய வாங்கடி! ப்லீஸ்!!" என்று இவள் கூறியதைக் கேட்ட தோழிகள் இவளை ஏறிட்டுப் பார்த்திட,


"அப்ப உனக்கு எந்த கஷ்டமும் இல்லனு சொல்றியா? இல்ல கஷ்டப்படுறது தப்புனு சொல்றியாடி?" என்று அனுயா சற்று காட்டமாகவே வினவிட, அதைக் கேட்டவள் மனதால் நொந்துபோனாள். அனுயா இப்படி பேசியதை மற்ற இருவரும் அதிர்ந்து நோக்கிட,


"என்னடி அனு! இப்படி கேட்குற?? அவளுக்கும் காவ்யா போனதுல எவ்ளோ கஷ்டம்னு உனக்குத் தெரியாதா?" என்று ரம்யா வருத்தமாகக் கூறிட,



"பின்ன என்னடி? அவளுக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னு எனக்கும் தெரியும். அத மறைச்சிகிட்டு நம்மள தேத்தணும்னு எதுக்கு நினைக்கணும்? யாரும் யாரையும் தேத்தணும், ஆறுதல்படுத்தணும்னுலாம் நினைக்க வேணாம். அவங்கவங்க சந்தோசத்த மட்டும் பாருங்க. ஏற்கனவே ஒருத்தி நம்மள கவலப்பட வைக்கக்கூடாதுனு நினச்சுதான் மொத்தமா விட்டுட்டு போயிட்டா. நீங்களும் அப்டி போறதா இருந்தாலும் தயவு செஞ்சு இப்பவே சொல்லிடுங்கடி. முன்னாடியே மனச கல்லாக்கிக்கிறேன்" என்று கோபத்தில் பேசினாலும் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் கூறியது அவளது மனவேதனையை.


அவள் கூறியதைக் கேட்டவர்கள் உடைந்துபோய் அவளைப் பார்த்திட, அவள் கண்ணீரைக் கண்டவர்கள் கலங்கிப்போயினர். அவளிடம் சென்று அவளை சமாதானம் செய்ய சரண்யாவும் ரம்யாவும் முற்பட, தன்யா அவள் பேசியதில் சிலையாகி நின்றாள்.


அனுயாவால் மேலும் எதுவும் பேசமுடியாமல் அறைக்குள் ஓடிச் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அவள் செல்வதை தடுக்க முயன்றும் முடியாமல் நின்றவர்கள், திரும்பி தன்யாவை பார்த்திட, அவள் சிலையாக நின்றுகொண்டிருப்பதை கண்டு வருந்தினர். அவளிடம் சென்று அவள் தோள்தொட்டு அழைத்திட, நிமிர்ந்து இவர்களை பார்த்தவள்,


"நான் எதுவும் தப்பா பேசிட்டேனாடி?? நம்ம எல்லாரும் எந்த கஷ்டம் வந்தாலும் ஒன்னா நின்னு சமாளிச்சிருக்கோம். ஆனா, முதல் தடவையா இப்டி அஞ்சுபேரும் தனித்தனியா பிரிஞ்சு நின்னு கஷ்டப்படுறது நல்லா இல்லடி. அதான், வந்து அப்டி பேசுனேன்" என்று கலங்கியபடி கூறிட, இருவரும் அமைதியாய் இருந்தனர்.


"இதுவர காவ்யா பண்ணது தப்புனு நினைச்சுட்டு இருந்தேன்டி. இப்டி நமக்காகன்னு யோசிச்சே அவ அவளையே இத்தனை நாளும் ஏமாத்திகிட்டு இருந்தத பாத்து எனக்கு கோபம்கூட வந்துச்சு. ஆனா, இப்ப தோணுது, அவ செஞ்சது கரெக்ட்தான்னு" என்று தன்யா கூறுவதை மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.


"ஆமாடி! நம்ம கஷ்டத்த யாரும் பங்கு போட்டுக்கக்கூடாதுனு நினச்சுத்தான நாமளும் பேசிக்காம அழுதிட்டு இருந்தோம். இப்பக்கூட, அனு எதுக்காக அழுதுட்டு போறா? நான் என்னுடைய கஷ்டத்த மறச்சு உங்கள சமாதானப்படுத்த வந்தேன்னுதான? அப்டி இருக்கும்போது காவ்யாவும் அதயே நினச்சு நம்மள விட்டுப்போனதுல எந்த தப்புமே இல்லயேடி!" என்று தன்யா கூறிட,


"அவமேல தப்பு இருக்கிறதா யாருமே சொல்லலடி தனு! ஆனா, அவ போனத தாங்கிக்க முடியாமதான் நாம இப்டி கஷ்டப்படுறோம். நீயும் எவ்ளோ கஷ்டப்படுவனு தெரியும்டி. அத நீ வந்து சொல்லி அழுதிருந்தாக்கூட அனு ஒன்னும் சொல்லிருக்கமாட்டா. இப்டி உனக்குள்ள மறைச்சிகிட்டு பேசவும்தான் அவளுக்கு கோபம் வந்துடுச்சுடி" என்று சரண்யா அனு பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூறிட, தன்யாவும் அதை யோசித்தாள்.


"ஆமாடி! நான் அப்டி மறைச்சு பேசுனது தப்புதான். அப்ப நீங்களும் உங்க கஷ்டத்த நம்ம நாலுபேருகூடவும் ஷேர் பண்ணிருக்கலாம்ல? எதுக்காகடி தனித்தனியா போய் அழுதீங்க? அதனாலதான் இதுக்கு ஒரு முடிவு எடுக்க இப்டி பேசவேண்டியதா போச்சு. எனக்கு மட்டும் கவலை இல்லயாடி? அவ இல்லாம இந்த வீடே வெறுமையா தெரியுது. ஆனா, அதுக்காக உங்களையும் இப்டியே கவலப்பட விட எனக்கு மனசு கேக்கலடி. நானே பண்ணாட்டியும் நீங்களே இத பண்ணுவீங்க" என்று ஆவேசத்தில் பேசியவள், கீழே மடிந்து அமர்ந்து அழுதாள்.


அதைக் கண்டவர்களும் கண்கலங்கி அவளுடன் அமர்ந்து அவளை அணைத்துக்கொண்டு அழுதனர். இதையெல்லாம் அறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அனுயா, கதவைத் திறந்து இவர்களிடம் ஓடிவந்தாள். ஓடிவந்தவள் இவர்களுடன் அமர்ந்து கட்டிக்கொண்டு அழ, இவளை பார்த்தவர்கள் பிரிந்து அமர்ந்தனர்.
தன்யாவின் முன் அனுயா அமர்ந்து குனிந்திருந்த அவளின் கண்ணத்தைத் தாங்கி முகத்தை நிமிர்த்திட, கண்களில் வலியோடு தன்யா இவளை ஏறிட்டாள்.


அதைப் பொறுக்கமுடியாமல் கண்கலங்கிய அனுயா, "சாரிடி தனு! என்னய மன்னிச்சிடுமா! காவ்யா போனதும் மொத்தமா ஒடஞ்சிட்டேன். அவ இல்லாத வெறுமை, அவள பத்தின கவலை, அவ என்ன ஆனானு பயம், நமக்காக அவ போனதுனு எல்லாமே சேர்ந்து எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நீயும் உன் கஷ்டத்த மறைச்சு பேசுனியா, அதான் மறுபடியும் பயம் வந்துடுச்சு. அதான் கோபத்துல அப்டி பேசிட்டேன்மா. ரொம்ப சாரிடி!" என்று வருத்தத்துடன் கூறிட, அவளை கோபமாக முறைத்தாள் தன்யா.





ராணா காவ்யாமீது கொண்ட வெறுப்பு மாறுகிறதா?? இல்லை, கூடுகிறதா?? காவ்யாவின் தோழிகளுக்கு இவளின் உண்மைநிலை தெரிய வருமா?? கமலாம்மாவுக்கு ராணாவின் சுயரூபம் எப்போது தெரியவரும்?? தன்யா எதற்காக கோபமாக முறைத்தாள்??






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 15


"சாரி சொன்ன கொன்னுருவேன். என்னடி நினச்சுட்டுருக்க? உனக்கு மட்டும்தான் அந்தக் கவலை, பயம்
எல்லாமேவா? எங்களுக்கு இல்லயா? இது உனக்கு மட்டும் கவல மாதிரி நீ மட்டும் உனக்குள்ளயே வச்சிட்டு இருப்பியாம்... அத நாங்க செஞ்சா கோபம் வருதா உனக்கு?" என்று சற்று கோபமாகக் கூறிட, அனுயா தவறை உணர்ந்து தலைகுனிந்தாள்.


"எப்பவும் சந்தோசத்த ஷேர் பண்ணிக்கிற நம்மால கஷ்டத்த ஷேர் பண்ணிக்க முடியலடி. நீங்க கஷ்டப்படுறத பாக்குற சக்தி இல்லடி. அதனாலதான் காவ்யாவும் போனா. நாமளும் இப்டி சொல்லாம வருத்தப்படுறோம். இதுல யாரையும் தப்பு சொல்லமுடியாது. நமக்குள்ள இருக்க அன்புதான்டி காரணம்" என்று சரண்யா வருத்தத்துடன் கூறுவதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.


"இனிமேல் எந்த கஷ்டமானாலும் எவ்ளோ பெரிய விஷயமானாலும் ஃப்ரண்ட்ஸ் கவலப்படுவாங்கன்னு மறைக்காதீங்கடி. உங்களுக்கு சொல்ல கஷ்டமா இருந்தாக்கூட பராவால்ல. ஆனா, எங்களுக்காக மறைச்சு வைக்காதீங்க. நானும் பண்ணமாட்டேன். எதுவா இருந்தாலும் உங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன். ஓகேவா?" என்று அனுயா கூறுவதை கேட்டு மற்றவர்களும் தலையசைத்து ஒப்புக்கொண்டனர்.


"ஆமா. நம்ம எப்பவுமே தனித்தனி கிடையாது. அப்போ எதுக்காக மறைக்கணும்? நம்ம அஞ்சுபேருமே ஒன்னுதான். சோ, இதுவரையும் பிரிவு இருந்ததில்ல. இனிமேலும் இருக்கப்போறதில்ல. நம்ம எவ்ளோ தூரத்துல இருந்தாலும் நம்ம மனசளவுல ஒன்னாதான் இருப்போம். எங்க இருந்தாலும் காவ்யா!! உன்னய நாங்க தினமும் நினச்சுட்டுதான் இருப்போம்டி. நீ சீக்கிரமே திரும்பி வந்துடுடி எங்ககிட்ட.." என்று முதலில் உறுக்கமாகப் பேசிய சரண்யா இறுதியில் காவ்யாவை எண்ணி கலங்கிட, மற்றவர்களும் சேர்ந்து கலங்கினர்.


நால்வரும் கலங்கியபடி இருக்க,
"கண்டிப்பா காவ்யா வந்திடுவால்ல?" என்று அழுதுகொண்டே குழந்தையைப்போல் கேட்ட ரம்யாவைப் பார்த்தவர்கள், அவளை அணைத்துக்கொண்டு,


"கண்டிப்பா வந்திடுவா. அவளாலயும் நம்மளவிட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஒரு சேஞ்ச்காகதான் போயிருக்கா. கண்டிப்பா நம்மகிட்ட பழைய காவ்யாவா திரும்பி வருவா" என்று தன்யா கூறிட,


"எங்க இருந்தாலும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும். அத ஒன்னதான் இப்போதைக்கு வேண்டிக்கிறேன்" என்று அனுயாவும் வருத்தப்பட்டுக் கூறிட,


"ப்ரக்ணண்டா வேற இருக்கா. அபார்ட் பண்ணிட்டாளா? இல்ல என்ன பண்ணானுகூட தெரியல. தனியா இருக்காளா? யாரு பாத்துப்பாங்கன்னும் தெரியல. அதுதான் இன்னமும் கஷ்டமா இருக்கு. எங்கயோ இருந்தாலும் நல்லா இருக்கான்னு பாத்தாச்சுனா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்று சரண்யாவும் வருந்தினாள்.


"கவலப்படாதீங்க. கண்டிப்பா என் காவிக்கு எந்த ப்ரச்சினையும் வராது. அவள நல்லபடியா பாத்துக்க அங்கயும் நம்மளப்போல யாராச்சும் கண்டிப்பா இருப்பாங்கன்னு எனக்கும் தோணுது. சீக்கிரமே நம்மகிட்ட திரும்பி வந்துடுவானு எனக்கும் நம்பிக்கை வந்திடுச்சு" என்று ரம்யா நம்பிக்கையாகக் கூறுவதை கேட்டு ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.


எப்போதும் காவ்யாமீது தனிப்பாசம் கொண்ட ரம்யா எதற்காகவும் அவளை விட்டுக்கொடுத்ததும் இல்லை, அவளுக்கு சின்னதாக ஏதாவது ஒன்றென்றாலும் மிகவும் வருந்திடுவாள். இன்று இவ்வளவு நம்பிக்கையோடு பேசுவது ஆச்சரியமாகவும், அதேசமயம், இவர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அவளை மூவரும் கட்டிக்கொண்டனர். காவ்யா சென்றபின் இவர்களுக்குள் இருந்த கவலையும் வேதனையும் சற்று குறைந்து மீண்டும் ஒன்றாகினர்.


காவ்யா இவர்களை பிரிந்து இரண்டு மூன்று நாட்களே ஆகியிருந்தாலும் அது இவர்களுக்கு
பல நாட்கள்போல காட்சியளித்தன. அவளின் பிரிவும் இவர்களினுடைய ஒதுக்கமும் சேர்ந்து மிகவும் ஒவ்வொருவரையும் பாதித்திருந்தது. இப்போது, நால்வரும் ஒன்றாகிட, சேர்ந்து அமர்ந்து தங்கள் சோகத்தையும் பாரத்தையும் ஒன்றாகவே பகிர்ந்து ஆறுதல் கூறியதால் பாதியாகக் குறைந்ததுபோல் தோன்றியது அவர்களுக்கு. காவ்யாவின் பிரிவை நால்வரும் இணைந்தே அனுபவிக்கத் தயாராயினர்.


இரவு, நால்வரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிடும்போதுகூட காவ்யாவின் நினைவுகளில் வருந்தினர். அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணியபடியே ஒருவருக்கொருவர் ஆறுதல்கூறி கண்ணயர முயன்றனர்.


தனது அறைக்குள் சென்று முடங்கி கொண்ட காவ்யா, இரவானதும் சாப்பாடு கொண்டுவந்த கமலாம்மாவை கண்டதும்தான் எழுந்து அமர்ந்தாள். அவளிடம் மேலும் எதுவும் கேட்டு நோகடிக்க விரும்பாதவர் அமைதியாக உணவையும் மருந்தையும் வைத்துவிட்டுச் செல்லப்போனார். அவரை காவ்யா அழைத்திட, திரும்பியவர், "என்னம்மா? ஏதாச்சும் வேணுமா?" என்று அக்கறையாய் கேட்டிட,


"ஆமா. எனக்கு ஊட்டிவிடுறீங்களாம்மா?" என்று காவ்யா கேட்டதை பார்த்துக் கண்கலங்கிவிட்டார்.


கமலாம்மாவுக்கு பிள்ளைகளென யாரும் கிடையாது. கணவரும் பலவருடங்கள் முன்பே இறந்துவிட்டதால் அவர் சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வெளியூருக்கு வந்தவர், தெரிந்தவர் மூலமாக ராணாவின் வீட்டிலே வேலையில் சேர்ந்தார். அன்றுமுதல் அவரும் இங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தன் சொந்தங்களை பார்க்க தன் சொந்த ஊருக்குச் சென்று வருவார். இவரிடம் ராணாவும் மற்றவரிடம் காட்டுமளவு கோபத்தை காட்டமாட்டான். இவரும் அவன் கோபம்கொள்ளும் வகையில் என்றும் நடந்துகொண்டதில்லை.


இப்படிபட்ட நிலையில், காவ்யா தன்னிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையும் எதிர்பார்க்கும் அன்பும் இவரை வியக்கவும் செய்தது, மனதை குளிரவும் செய்தது. இவளை தன் மகள் போலவே கருதினாலும் அவளிடம் எவ்வகை உரிமையும் எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அவருக்கு. உரிமை எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதையும் அறிவார். அவள் ஒருவனின் மனைவி என்பதையும் அறிவார். அதை அவரால் மாற்றிட இயலாது. ஆனால், அவள் எதிர்பார்க்கும் அன்பை கொடுத்தாகவேண்டும் என்று மட்டும் அவருக்குள் தோன்றியது.


அவள் கேட்டபடியே தட்டை கையில் எடுத்தவர், அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். அவளும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தாள். சாப்பிட்டு முடித்ததும் மருந்தையும் கொடுத்தவர், அவள் உண்டதும், சிறிதுநேரம் கழித்துப் படுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கீழே சென்றுவிட்டார்.


இவளும் அவர் சொன்னபடி சிறிதுநேரம் படுக்காமல் அறைக்குள்ளயே மெதுவாக நடந்தவள், அறையின் ஓரத்தில் இருந்த பால்கனிக்குச் சென்று இருள் சூழ்ந்த வானத்தை வெறித்தாள். நிலவும் இன்றி விண்மீன்கள் மட்டும் காட்சியளித்திட, தென்றல் காற்றும் இதமாய் வீசியது. அந்த அழகான இயற்கைக் காற்றை சிறிதுநேரம் சுவாசித்தவள், பின் தூக்கம் வருவதுபோல் இருந்திட, அறைக்குள் வந்தாள்.


படுக்கையில் சென்று படுத்திட, மருந்தின் வீரியத்தால் கண்கள் சொருகி நித்திரைக்குச் சென்றாள். சிறிதுநேரம் கழித்து, கமலாம்மா இவளறைக்கு இவள் தூங்கிவிட்டாளா? என்று பார்த்திட வந்தவர், காவ்யா அசந்து தூங்குவதை பார்த்துவிட்டு திரும்பிச் செல்லப்போக, ராணா அறைக்குள் நுழைந்தான்.


இவரைப் பார்த்தவன் என்னவென்று விசாரித்திட, அவரும் காரணத்தைக் கூறிவிட்டுச் செல்லலாமா? இல்லை இருக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு நிற்க, இவர் நிற்பதை பார்த்தவன்,


"கமலாம்மா! நீங்க போங்க. நான் இங்கதான் இருப்பேன். நான் பாத்துக்குறேன்" என்று அவர் தயங்கி நிற்பதன் காரணம் புரிந்து கூறியவன், தன் கையில் கொண்டுவந்த மடிக்கணினியுடன் சென்று படுக்கையில் அமர்ந்துகொண்டான். அவரும் பார்த்தபடியே ஏதோ ஒரு நிம்மதியில் சென்றுவிட்டார்.


முந்தைய தினம் இரவு அவள் அலறியதற்கு தனியாக இருந்ததுதான் காரணமென கமலாம்மா சொல்லியதால் தெரிந்துகொண்டவன், இந்நேரத்தில் அதிகமாக பாதிப்படையக்கூடாது என்று மருத்துவர் கூறியதற்காகவே இங்கே வந்திருந்தான். அவள் இருட்டை பார்த்துப் பயப்படக்கூடாது என்பதற்காக அறையின் விளக்குகளை ஒளிரவிட்டபடியே அமர்ந்து அவன் கொண்டுவந்த மடிக்கணினியை திறந்து வேலையை பார்க்கத் தொடங்கினான்.


இரவில் சீக்கிரம் தூங்கி இவனுக்கு என்றுமே பழக்கமில்லை. நேரம்போவது தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தவனை களைத்தது காவ்யாவின் கதறல் சத்தம். என்னவென்று அதிர்ந்து திரும்பி அவளை பார்த்திட, அவளோ தூக்கத்தில் படுத்தவாறே புலம்பிக் கொண்டிருந்தாள்.


"என்ன விட்டுடு...ப்லீஸ்...என்ன ஒண்ணும் பண்ணிடாத...என்ன விட்டுடு...ப்லீஸ்...நான் போயிடுறேன்...ப்லீஸ்...என்னய விட்டுடு..." என்று பதறியபடி பிதற்றிக் கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு மறுகணமே அவள் இவனை நினைத்துதான் பயந்து புலம்புகிறாள் என்பது புரிந்தது.


சிந்தனையைவிட்டு வெளிவந்தவன், குழந்தையை நினைத்து, உடனே அவளை தட்டி எழுப்ப முயற்சித்தான். ஆனால், அவள் இன்னும் எழாமல் இருக்கவே, அவளைத் தூக்கி இருக்கச்செய்து, தோள்களை பற்றியபடி அவளை உலுக்கினான்.


"காவ்யா! காவ்யா!! எழுந்திரு!!" என்று கூறியபடியே உலுக்கிட, சிறிதுநேர முயற்சிக்குப்பின் பிதற்றலை நிறுத்தியவள் கண்விழித்தாள். கண்களை திறந்தவள், ராணாவை எதிரில் பார்த்ததும் பயந்தபோய் படுக்கையைவிட்டு எழந்துவிட, இவனும் எதுவும் பேசாமல் தண்ணீர் ஜாடியை எடுத்து அவளருகில் வந்தான். அவள் பழைய நினைவுகளில் பயந்தபடி கண்களை மூடி முகத்தை பொத்திக்கொண்டு, "வேணா....!!" என்று கத்திட, குழம்பிய ராணா,


"என்ன வேணா? ஒழுங்கா தண்ணிய குடி! இந்தா!" என்று கண்ணாடிக் குவளையில் ஊற்றிக் கொடுத்தான். அவன் பேசுவதை கேட்டு கண்களை திறந்து பார்த்தவள், கையில் குவளையுடன் நிற்பவனை கண்டு, "இல்ல...வேணா! எனக்கு.. இப்போ..தண்ணி வேணா..!" என்று தயங்கியவாறே கூறுவதை கேட்டவன், சற்று எரிச்சலடைந்திட,


"குடின்னா குடி! இப்ப யாரும் வேணுமான்னு கேக்கல. புரியுதா? இந்தா! நீ ரொம்ப பயந்துபோய் இருக்க. அதான் தண்ணி குடின்னு சொல்றேன். குடி!" என்று கொடுத்திட, அதற்குமேல் அவளும் மறுக்காமல் வாங்கி பயத்தில் மடக்கென்று குடித்துவிட்டு அந்தக்
குவளையை அருகிலிருக்கும் மேசையில் வைத்துவிட்டாள். அவனிடம் இதை கொடுத்தால் அவன் கோபப்படுவானோ என்று அவள் எண்ணியே அப்படிச் செய்தாள்.


ஆனால், அவனோ, "நான்தான தண்ணி கொடுத்தேன். அப்ப க்ளாஸ என்கிட்டதான் கொடுக்கணும். புரியுதா?" என்று கூறிவிட்டு அந்தக் குவளையை எடுத்துச் செல்லும் ராணாவை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.


காவ்யா இன்னும் நின்றுகொண்டே இருப்பதை பார்த்தவன், அவளை வந்து படுத்துக்கொள்ளும்படி கூறிட, முதலில் தயங்கி அப்படியே நின்றாள். அதை பார்த்தவன் கடுப்பாகி, "உன்னய நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன். பயப்படாம வந்து தூங்கு. வா!" என்று சற்று அதட்டலாகக் கூறிட, அவளும் தன்னையறியாமல் படுக்கையில் வந்தமர்ந்து படுத்துக்கொண்டாள்.


அவள் முழித்திருப்பதை பார்த்து, "டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க உன்னய. நீ தினமும் பயந்து பயந்து அலறிட்டு இருந்தன்னா எப்டி ரெஸ்ட் கிடைக்கும்? இது குழந்தையத்தான் பாதிக்கும். அதனாலதான் இங்க வந்திருக்கேன். நீ இதுக்கும் பயந்து தூங்காம இருக்காத. நிம்மதியா தூங்கு" என்று அக்கறை நிறைந்த வார்த்தைகள்போல் தோன்றினாலும் பேச்சில் சற்று கடுமைகாட்டியே கூறினான்.


காவ்யாவும், 'ஏதோ குழந்தமேல அக்கறை இருக்கிறமாறியே பேசுறான்! இந்தக் குழந்தையவே என்னய பழிவாங்குறதுக்கான ஆயுதம் மாறிதான சொன்னான்?! அதுக்காகதான் இப்படிலாம் பண்றான்போல! இவனால ஏற்பட்ட பயத்துக்கு இவனே காவலா? இவன பக்கத்துல வச்சுட்டு நான் எப்டி நிம்மதியா தூங்கமுடியும்? இன்னும் எத்தன நாளைக்கு இப்டி டார்ச்சர் பண்ணுவானோ?' என்று மனதில் நினைத்து வாடியவள், அப்படியே கண்மூடி தூங்க முயற்சித்தாள். ஆனாலும், அவளுக்கு தூக்கம் வரவில்லை. கண்களை திறந்துகொண்டு அவனுக்கு முதுகு காட்டியபடியே படுத்திருந்தாள்.


தனது வேலைகள் அனைத்தையும் முடித்தவன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு எழுந்தவன், காவ்யாவின்புறம் திரும்ப, அவள் தூங்கவில்லை என்பது அவனுக்கும் தெரிந்துவிட்டது. நேரமும் நடுநிசியை தாண்டியிருக்க, இன்னும் அவள் தூங்காமல் இருப்பது இவன்மேல் உள்ள பயத்தினாலும் தாக்கத்தினாலும்தான் என்பது அவனுக்கும் புரிந்திட, இதழில் ஒருவிதமான புன்னகை தோன்றி மறைந்தது.


வேகமாக அறையைவிட்டு வெளியேறினான். கதவு சாத்தும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்? அறையை சுற்றிப் பார்த்திட, அவனை காணாததால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்படியே சிலநிமிடம் இருந்தவள், அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். உள்ளே வந்த ராணா, "இனி நீங்க இங்கயே படுத்துக்கோங்க. எதுவும்னா என்னய கூப்டுங்க" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.


இவன் பேசியதை கேட்டவள், யாரிடம்? என யோசித்துக்கொண்டிருக்க, அவன் சென்றுவிட்டான் என்பதை உறுதிசெய்தவள், கண்களை திறந்து எழுந்து பார்த்தாள். அங்கே கமலாம்மா நிற்பதை பார்த்தவளுக்கு மனதில் சற்று நிம்மதி பரவிட, எழுந்துசென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவரும் ஆதரவாய் வருடிவிட்டு,


"என்னம்மா? மறுபடியும் பயந்துட்டியா?" என்று அக்கறையாய் கேட்டிட, அவளும் அணைப்பிலிருந்து விலகியவள், "ஆமாம்மா! கண்ண தொறந்ததும் திடீர்னு இவர் இருந்ததும் பயந்து அலறிட்டேன்மா" என்று பொய்கூறி சமாளித்தாள்.


"அதுக்கு எதுக்கும்மா பயப்படுற? எத பாத்தும் இனி பயப்படக்கூடாது. சரியா?" என்று கூறியவர், சிறிய பொட்டலத்தை பிரித்து திருநீரை எடுத்தவர், அதை அவள் நெற்றியில் பூசிவிட்டு,


"இது எங்க ஊரு காவல்தெய்வம் மாசாணபோத்தி கோவில் திருநூரும்மா. இத பூசிக்கோ. எந்த காத்துக் கருப்பும் உன்னய அண்டாது. எத நினைச்சும் பயப்படாம படுத்து நிம்மதியா தூங்கும்மா. அப்பதான் உனக்கும் குழந்தைக்கும் நல்லது" என்று ஆறுதலாய் கூறிட, அவரை பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள், அப்படியே படுத்துக்கொண்டாள். அவரையும் அருகிலேயே வற்புறுத்தி படுக்கச் செய்தவள், சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். அவரும் அதன்பின் படுத்துக்கொண்டார்.


மறுநாள், ராணா காலை உணவு உண்ண அமர்ந்திருக்கும்போது அவனது நண்பர்களும் வீட்டுக்குள் நுழைந்தனர். இவனை பார்த்ததும் இவனிடம் வந்தவர்கள், இவன் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து,


"டேய் ராணா! என்னடா? தனியா உக்காந்து சாப்டுற? எங்கடா எங்க அண்ணி? அவங்கள விட்டுட்டு நீ மட்டும் நல்லா கொட்டிக்க வந்துட்டியா?" என்று விஜய் அவனை கேலி செய்ய,


"இல்லன்னா..! அண்ணிய சண்டபோட்டு அனுப்பி வச்சுட்டியாடா? உன்னபத்திதான் எங்களுக்கு நல்லா தெரியுமே.. கோபம் வந்தா என்ன பண்றனே தெரியாது. எங்கடா அண்ணிய அனுப்பின?" என்று நாகவ் பொய்யாக பதறியபடி கூறிக்கொண்டிருக்க,


"டேய்! கேக்குறாங்கல்ல? சொல்லேன்டா. காவ்யாவ எங்க?" என்று பிரபவ்வும் கேட்டுவிட, கடுப்பான ராணா,


"நீங்க எங்கடா சொல்ல விட்டீங்க? பேசிட்டேதான இருந்தீங்க. அதான், பேசுங்கனு விட்டுட்டேன். பேசி முடிச்சாச்சா இப்ப? அவ ரூம்ல இருக்கா" என்று கூறியதை கேட்டவர்கள் ஈஈஈ என இழித்திட,


"எங்களுக்கு எப்டிடா தெரியும்? கல்யாணம் ஆகி நாளுநாள் கூட முழுசா ஆகலடா. அதுக்குள்ள இப்டி பொண்டாட்டிய விட்டுட்டு உக்காந்து சாப்டுறீயேடா? உனக்கே இது நியாயமா இருக்கா? கல்யாணம் ஆனாவாச்சும் நீ திருந்துவன்னு நினச்சோம்டா. ஆனா, நீ மாறவே மாட்டடா" என்று ராமும் தன் பங்கிற்கு குறைகூறி அவனை நன்றாக வாறினான்.


"சரி! விடுங்கடா! அது அவன் விசயம். நம்ம என்ன சொல்றது? அவனே பாத்துப்பான். என்னடா?" என்று பிரபவ் சமாதானமாய் கூறி அவனை பார்த்திட,


"அவன் எப்படியும் பாக்கட்டும். ஆனா, அண்ணிய கண்கலங்காம பாத்துக்கடா. இல்லன்னா நாங்க நாலுபேரும் சேந்து உன்னய உதைப்போம். பாத்துக்க!" என்று நாகவ் உண்மையாய் கூறிட, அதை மற்றவர்களும் ஆமோதித்துத் தலையசைத்தனர். அதை கேட்ட ராணாவுக்குக் கடுப்பானாலும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.


"உங்க அண்ணிய ஒன்னும் பண்ணலடா. அவ மேலதான் இருக்கா. லேட்டாதான் எந்திரிச்சிருப்பா போல! அப்றமா வருவா" என்று சமாளிக்கும் விதமாய் கூறிட, அதை கேட்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். அதை பார்த்தவன்,


"என்னடா ஆச்சு உங்களுக்கு? எதுக்கு இப்டி சிரிக்கிறீங்க?" என்று கேட்டுவிட, அவர்களும் சிரிப்பை சமாளித்து,


"ஒண்ணுமில்லடா! நாங்ககூட உன்னய தப்பா நினச்சுட்டோம். அண்ணிய கொடுமை பண்றியோனு...! ஆனா, நீ அண்ணிய இவ்ளோ நேரம் தூங்கவிடுறியேடா. யூ ஆர் க்ரேட் டா!" என்று விஜய் கிண்டலாகக் கூறிட,


"பொதுவா டாட்ஸ் லிட்டில் ப்ரின்சஸ்தான் இப்டி தூங்குவாங்க. ஆனா, இங்கதான் ஹஸ்பென்ட்ஸ் லிட்டில் க்வீன் தூங்குறத பாக்குறோம்டா! எங்களுக்கு நம்பிக்கை வந்துருச்சு" என்று நாகவ் கூறிட,


"என்னதுடா நம்பிக்கை வந்துச்சு?" என்று ராணாவும் குழப்பத்துடன் கேட்டிட,


"நீ கூடிய சீக்கிரமே பொண்டாட்டி தாசன் ஆயிடுவன்னுதான்" என்று ராமும் சேர்ந்து காலை வாற, அவன் சொன்னதை கேட்டு வியப்பாய் அவனை பார்த்த நாகவ்வும் விஜயும்,


"டேய்!! ராம்! உனக்கு இதுலாம் புரியுதாடா? நாங்க சொல்ல வர்ரத கரெக்டா கேட்ச் பண்ணிட்டியேடா! போலீஸ் மூளைல க்ரீன் சிக்னல் எரிய ஆரம்பிச்சுட்டுடா" என்று நாகவ் கூறிட, இருவரும் ஹைபை செய்துகொண்டனர். ராமும் ஈஈஈ என இளித்தான். இதை பார்த்து பிரபவ் சிரித்திட, ராணா இவற்றில் கலந்துகொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


நால்வரும் சிரித்து முடித்தபின் ராணாவிடம் திரும்பியவர்கள், "சரிடா! அண்ணிய கூப்டு"


"நீயும் எந்திரிடா"


"உங்களுக்கு நம்ம வீட்லதான் இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்"


"லஞ்ச், டின்னர் எல்லாமே" என்று நால்வரும் வரிசையாகக் கூறுவதை கேட்டவன் ஒருநொடி அதிர்ந்தான்.


"எதுக்குடா? என்னடா? எதுவும் ஃபங்ஷனா என்ன?" என்று குழப்பமாகக் கேட்டிட, அவனை மூக்குமுட்ட முறைத்தனர், நண்பர்கள் நால்வரும். அதை புரியாமல் பார்த்திட,


"ஏன்டா சொல்லமாட்ட? உனக்கும் கல்யாணம் இப்பதான் ஆச்சுனு மறந்ததுட்டியா? அதுவும் ஃபங்ஷன் தான? அதுக்குள்ள இன்னொரு ஃபங்ஷன் கேக்குதா உனக்கு?" என்று ராம் கடுப்பாகக் கூறிட,


"அப்றம் எதுக்குடா இந்த ஏற்பாடு?" என்று மீண்டும் கேட்டிட, தலையில் அடித்துக்கொண்டனர் நால்வரும்.


"டேய்! உனக்கு நிஜமாவே நாங்க சொல்றது புரியலயா? இல்ல புரியாதமாறி நடிக்கிறியாடா?" என்று நாகவ் அலுத்துக்கொள்ள,


"டேய்! ராணா! உன்னயும் காவ்யாவையும் நம்ம வீட்டுக்கு கூப்டுருக்காங்கடா நம்ம பேரண்ட்ஸ். புதுசா கல்யாணம் ஆனவங்கள கூப்டு விருந்து கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சோ, நீங்க இரண்டுபேரும் கிளம்புங்க" என்று பிரபவ் விளக்கமாகக் கூறுவதை கேட்டவன், ஒருநொடி அமைதியானான்.


"வேணாடா! இதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டீஸ் நமக்குள்ள? அதோட இப்ப அவ இருக்க நிலைமையில இதெல்லாம் செட்டாகாதுடா?" என்று யோசனையுடன் கூறிட, மற்றவர்கள் கோபம் கொண்டனர்.

"என்னடா நினச்சுட்டு இருக்க? எல்லாமே உன் இஷ்டத்துக்குத்தான் பண்ணுவியா? இப்டிதான் மேரேஜையும் நீயா டிசைட் பண்ணிட்டு வந்து சொன்ன, அதுக்கும் ஓகே சொன்னோம். ஆனா, உன் கல்யாணத்த எவ்ளோ க்ராண்டா ஃபெஸ்டிவல் மாறி செலிப்ரேட் பண்ணணும்ங்க்றது எங்களோட கனவு தெரியுமா? அதயும் நீ வேணான்னு சொல்லி உன் இஷ்டப்படி பண்ண, உனக்காக அதையும் ஏத்துகிட்டோம்..." என்று விஜய் கோபத்தில் பேசிட, மேலும் பேசமுடியாமல் நிறுத்தினான். அவனை சமாதானம் செய்ய மற்றவர்கள் முயல, அதை தடுத்த ராம்,


"அவன எதுக்கு தடுக்கிறீங்கடா? அவன் உண்மையத்தான சொல்றான்" என்று கூறியவன் ராணாவிடம் திரும்பி,


"கல்யாணம் சிம்பிளா பண்ண. அந்த நியூஸக்கூட வெளிய சொல்ல வேணான்னு சொல்லிட்ட. கேட்டா.. நேரம் வரும்போது சொல்லிக்கலாம்னு சொல்ற..ரிசப்ஷன் வேணா, பார்ட்டி வேணா, இப்டி எதுவுமே வேணா! வேணா!! னு தான் சொல்ற..கேட்டா, எல்லாத்துக்கும் அவங்களோட ப்ராபளத்த சொன்ன..சரின்னு ஒத்துகிட்டோம். இப்ப நம்ம வீட்டுக்கு கூட்டி வரதுல உனக்கு என்னடா பிரச்சினை? ம்ம்.." என்று ஆதங்கப்பட்டுப் பேசிட, ராணா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


இதுவரை எவருமே இவனிடம் இவ்வளவு ஆதங்கப்பட்டு பேசியதில்லை. இவன் கூறுவதற்கு மேல் எதையும் கேட்டு தொல்லை செய்திடவும் மாட்டார்கள். அவன் கோபப்படுவான் என்று அறிந்தாலே அந்த விசயத்தை இவனிடம் பேசமாட்டார்கள். பயத்தினால் அல்ல! இதன்மீது கொண்ட அக்கறையினால் என்பதை இவனும் நன்கு அறிவான். ஆனால், என்றும் எதற்கும் கோபம் கொள்ளாதவர்கள் இன்று இவ்வளவு கோபம் கொண்டு பேசுவது அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால், அது அவன் கோபத்தை தூண்டாமல் சிரிப்பையே வரவைத்தது.


இவ்வளவு பேசியும் ராணா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பதை பார்த்தவர்கள் சலித்துக்கொள்ள, அவனிடம் வந்த பிரபவ்,


"டேய்! ராணா! இப்ப என்னடா பிரச்சனை உனக்கு நம்ம வீட்டுக்கு வரதுல? நம்ம வீடுதான! எல்லாரும் காவ்யாவ பாக்கணும்னு ஆசப்படுறாங்க. மேரேஜ் அப்ப வந்துட்டு போயிட்டாங்க. அதான் இப்ப கூப்டுறாங்க. இதனால காவ்யாவுக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்ல. வீட்டுக்குள்ளயே இருந்தா இன்னும் அதிகமாதான் கவலப்படுவாங்க. சொல்றத சொல்லிட்டோம், இனிமேல் உன்னோட விருப்பம். நீ ஒரு முடிவெடுத்துட்டா மாறமாட்டன்னு தெரியும்" என்று எடுத்துக்கூறிட, சிறிது யோசித்த ராணா, அவர்களுக்காகவும், காவ்யாவுக்கும் புது இடம் சென்றால் கொஞ்சம் மாறுதல் ஏற்படும் என்பதற்காகவும் சம்மதம் தெரிவித்தான்.


"சரிடா! வரோம்" என்று கூறிட, அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


"ஒருவழியா சம்மதிச்சியேடா. இல்லன்னா...இன்னையோட உன் ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிருப்பேன்டா" என்று நாகவ் கூறி முகத்தை திருப்பிக்கொள்ள, அதைக்கேட்ட ராணா,


"ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ற மூஞ்ச பாரு. நீ கட் பண்ணா போதுமா? உன்னைத்தான் அப்டி போக விட்ருவேனா?" என்று கூறி கிண்டல் செய்திட, அதுதான் உண்மையும்கூட என்பதை அறிந்த நாகவ் பாவமாக முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு,


"உன்னயவிட்டு நான் எங்கடா போகப்போறேன்? நீயே சொன்னாலும் நான் போகமாட்டனே.." என்று கூறி சிரித்திட, மற்றவர்கள் இவனை பார்த்து த்தூ...என துப்பியவர்கள்,


"அப்றம் எதுக்கு இந்த வெட்டி சீனு..? தேவையா?" என்று கூறி கலாய்த்தார்கள்.


"சரி! சரி!! விடுங்கடா! நட்புல இதெல்லாம் சகஜம். டேய் ராம்! விஜய்! அப்றம் நீங்க இன்னும் அவன்மேல கோபமா இருக்கீங்கனு நினச்சேன்..! நீங்க என்னடான்னா என்னய ஓட்டிட்டு இருக்கீங்க..?" என்று நைசாக இருவருக்கும் நியாபகப்படுத்தி ஏத்திவிட்டு அமைதியானான்.


அவன் கூறியதை கேட்டவர்களும் அதற்கேற்றாற்போல் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, அதை பார்த்த ராணா நாகவ்வை முறைத்தான். அதை பார்த்த நாகவ் இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததுபோல் வேறுபுறம் திரும்பிக்கொண்டான். இருவரின் அருகில் வந்த ராணா எதுவும் பேசிடாமல் இருவரையும் அணைத்துக்கொள்ள, விஜயும் ராமும் மொத்தக் கோபமும் தணிந்து அவனை கட்டிக்கொண்டனர்.


அதை பார்த்த நாகவ், "டேய்!! என்னய விட்டுட்டு ஹக்கா? விடமாட்டேன்! இதோ வரேன்டா.." என்று கூறிக்கொண்டே அருகில் வந்து அவர்களை கட்டிக்கொள்ள, அவனையும் அணைப்புக்குள் இழுத்திட, பிரபவ்வையும் ராணா அழைத்து ஐவரும் ஒன்றாகக் கட்டிக்கொண்டனர்.


கமலாம்மாவும் உணவு பரிமாற வந்தவர், இவ்வளவு நேரம் இங்கிருந்து இவர்கள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவர், இது ஒன்றும் புதிதல்ல என்றவாறு அவர் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். காவ்யா எப்போதும்போல கிளம்பி கீழே இறங்கிவர, இவர்கள் அணைப்பில் நின்றதை பார்த்தாள். அது அவள் தோழிகளுடன் இருந்த நினைவை கண்முன் கொண்டுவந்திட, கண்கலங்கி நின்றாள்.




ராணாவிடம் தோன்றும் மாற்றம் எதனால்?? பிறக்கப்போகும் குழந்தையை வைத்து திட்டம் ஏதும் தீட்டுகிறானா?? காவ்யா நண்பர்கள் வீட்டிற்கு செல்ல சம்மதிப்பாளா??






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 16



நண்பர்கள் ஐவரும் அணைப்பில் இருந்து வெளிவந்து நிற்க, படியில் நின்ற காவ்யாவை பார்த்தனர். அவளை பார்த்ததும், "வாங்க அண்ணி!! ஏன் அங்கயே நின்னுட்டிங்க?? நாங்க இப்படித்தான் ஏதாச்சும் பண்ணிட்டு இருப்போம். நீங்க வாங்க" என்று விஜய் கூறி அழைத்திட, மறுக்கமுடியாமல் அவளும் கீழிறங்கி வந்தாள்.


காவ்யா வந்ததும் அவளிடம் நலன் விசாரித்தவர்கள், "அண்ணி! நீங்களும் ராணாவும் நம்ம வீட்டுக்கு வரணும். அங்கதான் இன்னைக்கு உங்களுக்கு விருந்து. எங்க அம்மா அப்பா எல்லாரும் கூப்டு வரச் சொல்லி ஆடர். இன்னைக்கு மட்டும் இல்ல, இன்னும் ஒன் வீக்குக்கு.." என்று நாகவ் மகிழ்ச்சியுடன் கூறிட, அதைக் கேட்டவள் அதிர்ந்தாள்.


அவளின் அதிர்ச்சியை பார்த்தவர்கள், "நீங்களும் தயவுசெஞ்சு வரமுடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க. ப்லீஸ்...!!" என்று பிரபவ் கூறிட,


"ஆமா! இவ்வளவு நேரம் இவன்கிட்ட போராடிருக்கோம். கடைசியா உங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்னு சொன்னப்றம்தான் ஒத்துக்கவே செஞ்சான்" என்று ராமும் கூறி சலித்துக்கொண்டான்.


ஏற்கனவே இவன் செய்த பாவத்திற்கு அவர்களும் துணைபோவதாய் நினைத்திருந்தவள், இதையும் கேட்டு முடிவே செய்து தவறாகப் புரிந்துகொண்டாள். அவன்மீது உள்ள வெறுப்பு அவர்கள்மீதும் படர்ந்தது.


ராம் கூறுவதை கேட்டவளுக்கு அவர்கள்மீது வெறுப்பு படர ஆரம்பித்திருந்தது. அவர்களை நிமிர்ந்து பார்க்கவும் தோன்றிடாமல் தலைகவிழ்ந்தபடியே நின்றாள். ராம் கூறியதற்கும் எதுவும் பதில் கூறாமல் அமைதியாகவே நின்றாள். அதை பார்த்தவர்கள் ஏனென்று முகம் சுருங்கினாலும், அவளது கவலையும் புதியவர்கள் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்து சகஜமாயினர்.


இவளை ஒப்புக்கொள்ளச் செய்வது எப்படி? என்று நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். நண்பர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தவர், காவ்யா வந்தததை கவனித்ததும் உள்ளே இருந்த கமலாம்மா ஆறு பேருக்குமாய் சேர்த்து தேநீர் கலந்து கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தார். நண்பர்கள் ஐவரும் அதை வாங்கிக்கொண்டு சோபாவில் சென்று அமர்ந்தனர்.


காவ்யாவையும் அருகில் இருக்கும் வேறு சோபாவில் அமரச் சொல்லிட, அவள் அவர்களருகில் கூடச் செல்லாமல் உணவருந்தும் மேசையின் அருகில் கிடந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டாள். அதை கண்டவர்களும் அவள் பழகிட நேரம் கொடுத்து விட்டுவிட்டனர். இவையனைத்தையும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தான், ராணா.


தேநீர் பருகும் நேரம் மௌனமாய் கழிந்ததை பொறுக்காத நாகவ், "அண்ணி! நீங்க எப்பவுமே இப்டித்தான் சைலண்ட் டைப்பா? ஏன் கேக்குறன்னா..! ராணாகூட எதுவும் அதிகமா பேசமாட்டான். நீங்களும் அமைதியா இருந்தா அப்றம் உங்களுக்கே ரொம்ப போர் அடிக்கும்ல..?!" என்று சிரித்துக்கொண்டே கூறிட, காவ்யாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. அவள்பாட்டுக்கு தேநீரை பருகியபடி அமைதியாகவே இருந்ததை பார்த்தவர்கள், நாகவ்வை திரும்பி முறைத்தனர்,


"ஏன்டா இப்டி? காமெடி பண்றேன்னு பேருல அவங்கள இன்னும் கடுப்பேத்தாதடா. நல்லா... இருப்ப" என்று விஜய் கூறிட, நாகவ் அமைதியானான். மறுபடியும் மௌனம் சூழ்ந்திட, பிரபவ் தன் அலைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தவன், பேசியபடி எழுந்துவந்து காவ்யாவிடம் அலைபேசியை நீட்டினான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவள் கேள்வியாய் நோக்கிட, அதைக் கண்டவன், "என் அம்மா. உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க, பேசுங்க" என்று கூறிட, அவளும் சிறிது தயங்கியபடி வாங்கி காதில் வைத்து ஹலோ!! என்றாள்.


"அம்மாடி..காவ்யா..! எப்டிம்மா இருக்க? சாரிடாம்மா! கல்யாணத்தப்பவே உங்கிட்ட வந்து பேசிருக்கணும். ஆனா, சின்ன மனவருத்தம். நினச்சமாறி ராணா கல்யாணத்த பெருசா நடத்தமுடியலனுதான். அதான் உன்னயயும் எதுவும் கஷ்டப்படுத்திரக் கூடாதுனு வந்துட்டோம்மா. தப்பா நினச்சுக்காதம்மா" என்று பொறுமையாகப் பேசி மன்னிப்புக் கேட்டவரை பேசாமல் நிராகரிக்கப் பிடிக்காமல்,


"அதெல்லாம் ஒண்ணும் தப்பா நினைக்கலைங்க. சாரிலாம் வேணாம்" என்று காவ்யா கூறியதைக் கேட்டவரும் நிம்மதியடைந்து,


"என்னம்மா யாரையோ கூப்டுற மாறி கூப்டுற? அம்மான்னு கூப்டுமா. நம்ம குடும்பத்தோட மொத மருமக நீ. நீயும் எனக்கு மகதான்மா. இனி அப்டித்தான் கூப்டணும். சரியா?" என்று அன்புடன் உரிமையாய் கூறிட, அவர்முகம் பாராமலே அவர்மீது மரியாதையும் நல்மதிப்பும் வந்தது காவ்யாவுக்கு.


"சரிங்க..ம்மா..!" என்று அவளும் கூறிட, மகிழ்ச்சியடைந்தவர், "ரொம்ப சந்தோசம்மா! உன்னய கூட்டிவரச் சொல்லித்தான்மா பசங்கள அனுப்பிச்சிருக்கேன். அவங்க கூடவே நீயும் உன் புருசனும் வந்துடுங்கம்மா. இங்க நான் காத்திட்டுருக்கேன். சீக்கிரம் வந்துடு கண்ணு!" என்று அன்பாய் கூறி கெஞ்சலாய் கேட்டிட, அவளால் மறுத்துப்பேச முடியவில்லை.


சிறிது தயங்கியவள் பின், "ம்ம்..சரிங்கம்மா! வரோம்" என்று கூறிவிட்டு அலைபேசியை பிரபவ்விடம் கொடுத்தாள். அவனும் இவள் பேசியதை வைத்தே அவள் ஒப்பக்கொண்டதை அறிந்தவன், மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டான். இதை பார்த்த நண்பர்களும் மகிழ்ந்தனர். காவ்யா அவளாகவே வர ஒப்புக்கொள்வாள் என்று ராணாவும் எதிர்பார்க்காததால், இது சற்று வியப்பாகத்தான் இருந்தது. பெரியவர் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நல்லவளா? என்ற கேள்வியும் எழுந்தது. அதை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டான்.


காவ்யா ஒப்புக்கொண்டதும் அவளை கிளம்பி வரச் சொல்லிட, அவள் மேலே செல்லப்போகும் முன் அவளிடம் பிரபவ்வின் தாயார் கொடுக்கச் சொன்னதாய் கொடுத்து அனுப்பியிருந்த புடவை, நகையுடன் பூவும் குங்குமமும் சேர்ந்திருந்த பார்சலை நீட்டினான், பிரபவ். காவ்யா அதை வாங்க மறுத்து நின்றிட,


"ப்லீஸ்..! வாங்கிக்கோங்க. அம்மாதான் கொடுத்துவிட்டாங்க. இதுல இருக்க ட்ரெஸ் அண்ட் ஜுவெல்ஸ போட்டுகிட்டுத்தான் நீங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்ப ஆசையாய் கொடுத்து அனுப்பினாங்க" என்று பிரபவ் கூறிட, இவளும் மறுக்கமுடியாமல் வாங்கிச் சென்றாள்.


அதை திருப்தியுடன் பார்த்தவர்கள், ராணாவின்புறம் திரும்பிட, அவன் சாதாரணமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, "டேய்! நீயும் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாடா. டைம் ஆகுது" என்று ராம் கூறிட,


"டேய்! எனக்கும் எதாச்சும் ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருக்கீங்களா என்ன?" என்று ராணா கேட்டிட, அதைக் கேட்டவர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்த்திட,


"உனக்கு எதுக்குடா வாங்கிட்டு வரணும்? அண்ணிதான் நம்ம ஃபேமிலிக்கு நியூ கம்மர். அதனால அவங்களுக்கு அம்மா ஆசையா எடுத்துக் கொடுக்குறாங்க. உனக்கு எதுக்கு? ஏழு கழுதை வருசமா எங்ககூடதான குப்ப கொட்டுற.." என்று விஜய் கூறி அவனைக் கலாய்த்திட, அவனை ராணா முறைத்தான். அதைப் பார்த்தவன்,


"சரி! சிரி!! சீக்கிரம் போய் கிளம்பிட்டு வா" என்று கூறி சமாளித்திட,


"நான் கிளம்பிதான்டா இருக்கேன். ஏன்டா உயிர வாங்குற?" என்று கூறியதைக் கேட்டு அவனை பார்த்திட, அவனோ! நிறுவனத்திற்குச் செல்லும்போது அணியும் கோட்சூட், டையுடன் அணிந்திருந்ததைப் பார்த்து நால்வரும் முகம் சுளித்தனர்.


"அடேய்!! நீ பிசினஸ் மீட்டிங்க்கு கிளம்புற மாறி கிளம்பி நிக்கிறடா.." என்று நாகவ் கூறி சலித்துக்கொள்ள,


"ஆமாடா. நான் ஆபீஸ் போகத்தான கிளம்பியிருந்தேன். நீங்கதானடா சடனா வந்து வீட்டுக்கு கூப்டீங்க? இப்ப அதனால என்ன? இந்த ட்ரெஸ்கு என்ன? ஐம் கம்ஃபர்டபிள் வித் திஸ்டா" என்று கூறியதைக் கேட்டவர்கள் நொந்தனர்.


"ஐயா! ராசா!! இது உனக்கு கம்ஃபர்டபிளா இருக்கலாம். ஆனா, போகப்போறது நம்ம வீட்டுக்குத்தான்"


"ஆமா. ஆபிஸ்கு இல்ல..!"


"சோ, சேஞ்ச் தி காஸ்ட்யூம் லைக் அஸ் அண்ட் கம்"


"ப்லீஸ்டா... டேய்! போடா" என்று நால்வரும் கூறி அனுப்பிட, அவனும் சிறிதுநேரத்தில் அவர்களைப் போலவே ஃபார்மல் பேண்ட் அண்ட் சர்ட்டில் வெளியே வந்தான். அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவர்கள்,


"இவன ஒவ்வொன்னுத்துக்கும் ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குதுடா..." என்று விஜய் கூறிட,


"ஆமா. சொல்பேச்சு கேக்காமயே வளந்து பழகிட்டான் அவன். ஆனா, கஷ்டப்படுறது நாமடா.." என்று நாகவ்வும் அலுத்துக்கொள்ள,


"போகப்போக மாறிடுவான்டா. அதான் காவ்யா வந்துட்டாங்கள்ல. மாத்திடுவாங்க" என்று பிரபவ் கூறிட,


"அதான்டா எனக்கும் சந்தேகமா இருக்கு. இவனே சரியான மொரட்டு பீசு..! இவன் எப்டி அவங்கள லவ் பண்ணி ஒத்துக்க வச்சான்?" என்று ராம் கேலியாய் கேட்டிட,


"பின்ன! உன்னயமாறி எல்லாரும் எப்பவும் சாமியாரா இருப்பாங்கன்னு நினச்சியாடா? உனக்குத்தான் லவ்வும் வராது, செட்டும் ஆகாது. அவனாச்சும் லவ் பண்ணி சந்தோசமா இருக்கட்டும். கண்ணு வைக்காத" என்று நாகவ் கூறி கலாய்த்திட, மற்றவர்கள் சிரித்தனர்.


இவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ராணாவும் இவர்களிடம் வந்து என்னவென்று விசாரிக்க, ஏதோ கூறி சமாளித்தனர். காவ்யாவும் கிளம்பி கீழே வந்துசேர்ந்தாள். அவள் வந்ததும் அனைவரும் எழுந்து கிளம்பத் தயாராக, ராணாவும் அதைப் பார்த்துத் திரும்பியவன், காவ்யாவின் அழகில் ஒருநொடி கரைந்தான்.


மயில்கழுத்து நீலவண்ணத்தில் பட்டுப்புடவையும் கழுத்தில் தங்க ஆரமும் காதில் ஜிமிக்கியும் கைகளில் இரு தங்க வளையலும் அணிந்து, கூந்தலை எப்போதும்போல் முடியெடுத்து, கீழே விரித்துப்போட்டு இடைவரை பரந்து கிடந்த கூந்தலில் பூச்சூடி, நெற்றியில் சிறிதாக பொட்டும் சந்தனமும் வைத்து, என்றுமில்லாமல் இன்று புதிதாய் வகிட்டில் குங்குமமிட்டு ஓவியமாய் வந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தவன், மறுநொடி சுதாரித்துக்கொண்டான்.


பெண்களையே அறவே வெறுத்திடும் தான் இப்படி பார்த்துக் கொண்டிருந்ததை, அதுவும் இந்த திமிரு பிடித்தவளைப் பார்த்துக்கொண்டிருப்பதை எண்ணி தன்னைத்தானே மனதில் திட்டிக்கொண்டான். அதன்பின், நண்பர்களும் முன்னே செல்ல, இவனும் பின்னே செல்ல, காவ்யாவும் கமலாம்மாவிடம் சொல்லிவிட்டு சென்று வண்டியில் ஏறிக்கொண்டாள். நண்பர்கள் நால்வரும் ஒரு காரிலும் இவர்கள் இருவர் ஒரு காரிலும் ஏறிட கிளப்பியவர்கள், நேராக பிரபவ்வின் இல்லத்திற்குச் சென்றனர்.


முதல் நாள் பிரபவ் இல்லத்திற்குச் சென்றவர்கள், வரிசையாக ஒவ்வொருநாளும் ராம், நாகவ், விஜய் இல்லத்திற்குச் சென்றுவந்தனர். அனைவரும் காவ்யாவை அன்போடு வரவேற்று உபசரித்தனர். காவ்யாவை அவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. ராணாவிற்கு ஏற்ற ஜோடியாக எண்ணி ஆனந்தம் கொண்டனர்.


ஆண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் என்பதால் இவளை தங்கள் மகளாகவே அனைவரின் பெற்றோர்களும் கருதி அன்பை பொழிந்தனர். குடும்பத்தின் முதல் மருமகள் என்பதாலும் ராணாவின் தாய் தந்தை இல்லாததாலும் அவர்கள் சார்பிலும் சேர்த்து இவளை நன்றாகக் கவனித்துக்கொண்டனர்.


முதலில் அவர்கள் காட்டும் அன்பையும் அரவணைப்பையும் காவ்யா நம்ப மறுத்து, ஏற்காமல் விலகியிருந்தாலும் அவர்களுடன் நேரம் போகப்போக அவர்களின் தூய்மையான அன்பை புரிந்துகொண்டாள். அவர்கள் அனைவரும் இவளை தன் மகளாய் எண்ணியது அவர்கள் கவனித்துக்கொள்ளும் விதத்திலேயே தெரிந்தது. இவளாலும் அவர்கள் அன்பை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டாள்.


இப்படியே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நாளென, நான்கு நாட்கள் சுற்றி வந்து அனைவரின் அன்பிலும் கவனிப்பிலும் பரிசிலும் காவ்யாவை கிறங்கடிக்கச் செய்தனர். ஆனால், அவளால் எதிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாவிடினும் அவர்கள் அன்பை முழு மனதாய் ஏற்றுக்கொண்டாள்.


ஆனால், ராணாவின் பாடுதான் இந்த நான்கு நாட்களும் திண்டாட்டம் ஆகிப்போனது. விருந்தென பலவகை உணவுகளை சமைத்திருக்க, காவ்யா சிலதை உண்டும் பலதை உண்ண மறுத்தாள். அவள் மறுத்தும் அவளுக்கு அன்புத் தொல்லை செய்து பெற்றோர்கள் ஊட்டிவிட, அவள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுத்தாள்.


அவர்கள் பதறிப்போய் விசாரித்திட, உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி ராணாவே அவர்களை சமாளித்துக்கொண்டான். ஒவ்வொரு தடவையும் இவ்வாறே நடந்திட, அனைவரிடமும் நம்பும் வகையில் கூறி சமாளிப்பது ராணாவிற்கே கடுப்பாகியது.


என்றுமே சரியோ! தவறோ! யாரிடமும் நேராக உண்மையை கூறிச் செல்பவன், இன்று இவளால் தன் குடும்பத்திடமே பொய் கூறும் நிலை ஏற்பட்டதை எண்ணியவனுக்கு காவ்யாவின் மீதே கோபம் அதிகரித்தது. ஆனால், இப்போது அவளிடம் காட்டும் நிலையில் அவள் இல்லாததால், இதற்கும் சேர்த்து மொத்தமாக ஒருநாள் அனுபவிப்பாள் என்று மனதிலே கடிந்துகொண்டான்.




நான்கு நாட்கள், நாள் முழுவதும் நண்பர்கள் வீட்டில் இருந்தாலும் இரவு தங்கிட அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். அதற்கு முக்கிய காரணம், அவள் தூக்கத்தில் அலறுவதும் இவனைப் பார்த்து பயப்படுவதும் தான்.


ஒருவழியாக, அனைவரின் வீட்டிற்கும் சென்று வந்துவிட்டனர். காவ்யாவுக்கு இப்படி சென்றுவந்தது மனதிற்கு சிறிய மாறுதலாக இருப்பினும் அவளை அது மாற்றிடவில்லை. அவனால் இவள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள், அவள் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. அதனாலே அவனை கண்டு பயந்தாள்.


அலைச்சலால் காவ்யாவுக்கு வாந்தி மயக்கம் அதிகமானது. வீட்டிற்கு வந்ததும் சோர்ந்துபோய் படுத்தே கிடந்தாள். எதுவும் சாப்பிடவும் தோன்றாமல், சாப்பிட்டாலும் எதுவும் தங்காமல் வெளியே வந்தது. இதைக் கண்ட ராணாவும் மறுநாள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துவிட்டு அதற்கேற்ற மருந்துகளையும் இருவரும் வாங்கி வந்தார்கள். அதன்பிறகுதான் சற்று தேறினாள்.


இப்படியே, ஒருவாரம் கழிந்தது. கமலாம்மா காவ்யாவை அக்கறையோடு கவனித்துக்கொண்டார். உணவு, மருந்து ஆகியவற்றை நேரம் தவறாமல் சரியாகக் கொடுத்து வந்ததால் அவள் உடல்நிலையும்
நன்றாக தேற ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் ராணாவும் அவள்பக்கம் அதிகம் செல்லாமல் தள்ளியே இருந்தான்.


காவ்யாவின் தோழிகள், கடந்த ஒருவாரமாக வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். நால்வரும் பேசி, கவலையை பங்குபோட்டுக் கொண்டாலும், எவரும் வெளியே செல்லும் மனநிலையில் இல்லை. ஆதலால், விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தபடியே தங்களது வேலைகளை கவனித்துக் கொண்டனர்.


இத்தனை நாட்களும் காவ்யா இல்லாத வெறுமை நீங்கிடாமல் அப்படியேதான் இருந்தது. அதை அவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் போனாலும் மனதில் நம்பிக்கையுடன் இருந்தனர்.


இன்று! ஏனோ..வீட்டின் வெறுமை மிகவும் மனதை பாதிக்க, பாரம் கூடியதாய் உணர்ந்தனர். ஆகையால், வெளியே சென்றுவரலாம் என்று முடிவெடுத்து வெளியே கிளம்பினர், நால்வரும். வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள், கால்போன போக்கில்
நடந்துகொண்டிருக்க, செல்லும் வழியில் ஒரு பூங்கா இருந்ததைப் பார்த்து அங்கே சென்றனர்.


அந்தப் பூங்கா மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. கிளைகள் விரித்து நிழல் தரும் மரங்களும், பலப்பல வண்ணங்கள் கொண்ட அழகியச் செடிகளும் நிறைந்திருந்தன. மரத்தைச் சுற்றி அமரும் திண்டு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டிருந்தது. பூங்காவின் பாதைகளின் இருபுறத்திலும் அமரும் நாற்காலிகள் போடப்பட்டிருக்க, தோழிகள் நால்வரும் சென்று அமர்ந்தனர்.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அந்தப் பூங்காவை அலங்கரித்திருந்தனர். பெரியவர்கள் நடந்துகொண்டிருக்க, குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்த்தவர்களின் மனதிற்கு அது சற்று மகிழ்வைத் தந்தது. சிறிதுநேரம் ரசித்துப் பார்த்தவர்கள், முகம்வாடிய அனுயாவைப் பார்த்து என்னவென்று விசாரித்தனர்.


"காவ்யா நம்மகூட இருக்கும்போது இந்தமாறி ஒருநாள்கூட அவளை வெளிய கூட்டி வந்தது இல்லைல. நமக்கு தோணாமலே போச்சுல்ல..! அவளும் வீட்டுக்குள்ளயே அடஞ்சு
கிடந்து மேலும்மேலும் கஷ்டப்பட்டுருப்பால்ல... அதனாலதான், அவ வேலைக்கு போகக்கூட செஞ்சா. இப்ப நம்மள விட்டும் போயிட்டா.." என்று அனுயா கூறி கண்கலங்கினாள்.


அதைக் கேட்டவர்களும் கண்கலங்கிட, "காவ்யா ஒன்னும் அவளுக்காக மட்டும் வேலைக்கு போகலடி" என்று தன்யா கூறிட, அவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தனர், தோழிகள். தன்யாவும் தலையசைத்து,


"ஆமாடி! அவ வேலைக்கு போக நாமளும்தான் காரணம். நமக்காகவும்தான் அவ வேலைக்குப் போகவே ஒத்துகிட்டா" என்று தன்யா கூறிட,


"ஆனா.., எதுக்குடி? எதுக்காக நமக்காக போகணும்? நம்ம அவள என்னைக்குமே அப்டி போகச் சொன்னதே இல்லையே..!" என்று சரண்யா கேட்டிட,


"அதுக்காக இல்லடி. அவளாலயே வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்குறத தாங்கிக்க முடியாதபோது நம்மளால எப்டி இப்டி அடஞ்சே கிடக்கமுடியும்னு நினச்சுருக்கா. அதான், மெயில் வந்த அடுத்த நாளே வேலைக்குப் போக ரெடியாயிட்டா. அப்பதானே நாமளும் வேலைக்கு போவோம். அதுக்காகவே நாம போட்ட கண்டிஷன்ஸ் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி, அவ ஹெல்த்தையும் பாத்துகிட்டு போனா" என்று தன்யா கூறிமுடிக்க, மற்ற மூவரும் கண்கலங்கினர்.


"அவ எதுக்காகடி இப்டி இருந்திருக்கா? அவளோட மோசமான நிலமையிலகூட நமக்காக யோசிச்சிருக்கா.. ஆனா, நாம அவளுக்காக என்ன யோசிச்சோம்? அவகூட இருக்கணும்னு நினச்சோமே தவிர, அவள இந்த நிலமையவிட்டு வெளிய கொண்டுவர எந்த முயற்சியுமே பண்ணலயே...! அவளாவேதான் முடிவெடுத்து பண்ணிருக்கா" என்று சரண்யா கண்கலங்கிக் கூறிட,


"நம்மலாம் ஃபிரண்ட்ஸ்னு இருந்து வேஸ்ட்தான! அவளே அவளுக்காகவும் யோசிச்சு நமக்காகவும் யோசிச்சிருக்கா. ஆனா...நாமதான் எதயும் யோசிக்காம இருந்துருக்கோம். அவள இந்தமாறி வெளிய கூட்டி வரணும்னுகூட
நமக்கு இத்தனநாளா தோணாம போயிடுச்சே..!" என்று என்று கூறி ரம்யா கண்கலங்கினாள்.


"அப்டிலாம் யோசிக்காதீங்கடி. காவ்யாவுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவா. இந்த விஷயம்கூட உங்களுக்கு தெரியக்கூடாதுனு தான் சொல்லிருந்தா. நீங்க கஷ்டப்படுவீங்கனு...நான்தான் தெரியாம கவலைல சொல்லிட்டேன்டி.." என்று தன்யா கூறியதைக் கேட்டவர்கள், யோசனையுடன்,


"இது எப்போ டி உனக்கு தெரியும்?" என்று அனுயா கேட்டிட, தன்யா அன்று நடந்தவற்றைக் கூறிமுடித்தாள். அதைக் கேட்டவர்களின் மனம் வருந்தியது. தோழிகளே உறவாய் இத்தனைபேர் இருந்தும் அவள் தனக்குள்ளேயே கவலையை வைத்து வருந்தி இருக்கிறாளே... என்ற எண்ணம் அவர்களை வதைத்தது.


"இங்க பாருங்கடி. ஃபீல் பண்ணாதீங்கடி. நாம அவமேல வச்சுருக்குற அன்பவிட அவ நம்மமேல அதிகமாவே வச்சுருக்கா. சோ! அவளால நம்மள ரொம்ப நாள் பிரிஞ்சு இருக்க முடியாதுடி. நம்மள கஷ்டப்படவும் விடமாட்டா. சீக்கிரமே நம்மகிட்ட வந்துடுவா. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குடி" என்று தன்யா கூறி சமாதானம் செய்ய,


"அதுதான் எனக்கும் பயமா இருக்குடி. நம்மள கஷ்டப்படுத்தக்கூடாதுனு தான பிரிஞ்சும் போயிருக்கா...!" என்று சிந்தித்தபடியே அனுயா கூறிட, மற்றவர்கள் அமைதியாகினர்.


"ஆனா, அவளே சொல்லிருக்கால்ல..! வந்துடுவேன்னு. அத நம்புவோம்டி. அவள தேடவும் கூடாதுனு சத்தியம் பண்ணிருக்கா. இப்ப நம்மால முடிஞ்சது அவ நல்லா இருக்கா! திரும்ப வந்திடுவானு நம்புறது மட்டும்தான். வெயிட் பண்ணி பாப்போம்டி" என்று சரண்யா ஆறுதல் கூறினாலும் அனுயாவின் மனம் ஏற்க மறுத்தது.


"வெயிட் பண்ணி பாப்போம்னு ஒரு தடவ அலட்சியமா இருந்ததாலதான் நம்ம காவ்யா இந்த நிலமைக்கு வந்துருக்கா. இதுக்கப்றமும் அத யோசிக்கக்கூட முடியலடி.." என்று தரையை வெறித்தபடியே கூறினாள், அனுயா. அதைக் கேட்டவர்களும் உண்மையை உணர்ந்தவர்கள் கலங்கினர். அதற்குமேலும் அங்கு இருந்திடப் பிடிக்காமல் வீட்டிற்குக் கிளம்பினர்.


எத்தனைமுறை ஏதேதோ சொல்லி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாலும் காவ்யாவை எண்ணி கவலைகொள்ளும் மனதை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை. அவளை காண்பது ஒன்றே இதற்கு வழியென மட்டும் அவர்கள் மூளை சொல்லியது. ஆனால், அதற்கான வழிகள் ஏதும் அறியாமல் தவித்தனர்.


இரவுநேரம், பால்கனியில் வானத்தை வெறித்துக்கொண்டு நின்ற காவ்யாவின் மனதில் அவளது தோழிகளே நிறைந்திருந்தனர். அவர்களைப் பார்க்காமல் இவளும் கவலையில் வாடினாலும், இவளின் த‌ற்போதைய நிலைபற்றி அறிந்தால் இன்னும் அவர்கள் உடைந்துபோக நேரிடும் என்பதலாயே கடினப்பட்டு பேசாமல் இருந்தாள். ஆனால், இப்போது அவர்களை மிகவும் தேடிட, அவளுக்கும் ஒரு உண்மை உரைத்தது.


'நம்மளால அவங்கள பிரிஞ்சு இருக்க முடியாத மாறிதான அவங்களும் என்னய தேடுவாங்க? என்னயபத்தி நான் என்னதான் நான் நல்லா இருக்கேனு சொல்லிருந்தாலும்...அவங்க முழுசா நம்பிருக்க மாட்டாங்க. அதனால இன்னும் கவலப்பட்டுட்டுதான் இருப்பாங்க. அவங்க சந்தோசமா இருக்கணும்னுதான அப்டி சொன்னேன். அதுவே கவலைய ஆகிடக்கூடாதே..இப்ப என்ன பண்றது...?' என்று சிறிதுநேரம் சிந்தித்தவள், ஒரு முடிவெடுத்தவளாய், மணியைப் பார்த்துவிட்டு, அறையை சாத்திவிட்டு வந்தாள்.


தனது அலைபேசியை எடுத்தவள், அதில் தான் வாங்கி வைத்திருந்த புதிய சிம் கார்டை போட்டு அனுயாவிற்கு அழைப்புவிடுத்தாள். இங்கே, சோகத்தில் அமர்ந்திருந்த தோழிகள் அலைபேசி அலறும் சத்தம் கேட்கவும் சென்று அதை எடுத்துப் பார்த்திட, "ப்ரைவேட் நம்பர்" என்று வருவதைப் பார்த்த அனுயா குழப்பத்துடன் அதை எடுத்துப் பேசினாள்.


"ஹலோ..!" என்று அனுயா குரல்கொடுக்க, மறுமுனையில் அமைதி நிலவியது. காவ்யா இவளின் குரலை கேட்டதும் கண்கலங்கிவிட, பேச்சு வராமல் மௌனமானாள்.


நீண்டநேரம் மௌனமாய் இருந்ததை பார்த்து சந்தேகித்தவள், "கா..வ்யா..!!" என்று அனுயா கண்கலங்கிக் கூறிட, மற்ற தோழிகளும் இவளை திரும்பிப் பார்த்தனர்.


"அனு..!! எப்ப..டி..டி இருக்..க..?" என்று தேம்பியவாறே கூறிட,


"நீ எங்களவிட்டு போனதுக்கப்றம் நாங்க எப்டி இருப்போம்னு உனக்குத் தெரியாதா?" என்று கூறியவளின் வார்த்தையில் தெரிந்த சோகமும் விரக்தியும் காவ்யாவை வாட்டியது.


இவர்கள் பேசியதைக் கேட்டு மற்ற மூவரும் அருகில் வந்து அனுயாவை கேள்வியாய் நோக்கிட, அவளும் கண்களால் ஆம்! என்று சொல்லியதைக் கண்டு முகம் மலர்ந்தனர். அலைபேசியை லௌட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள், அனுயா.


"ஏன்டி இப்டி சொல்ற..? நீங்க சந்தோசமா இருக்கணும்னுதான நான் சொன்னேன். எதுக்காக என்னய நினச்சு கஷ்டப்படுறீங்கடி? நான்தான் நல்லா இருக்கேன்னு சொன்னேன்ல..!" என்று வருந்திக் கூறிட,


"நீ சந்தோசமா இருக்கனு சொன்னா நாங்க நம்பணுமா? எங்க சந்தோசத்துக்காக எங்களவிட்டு போன நீ..நல்லா இருக்கேனு பொய் சொல்லமாட்டியா?" என்று சரண்யா கூறியதை கேட்ட காவ்யா ஒருநொடி விக்கித்துப்போனாள். மறுநொடி, தன்னை சமன்செய்தவள்,


"நான்தான் சொன்னேன்ல...! உங்க சந்தோசத்துக்காக ஒன்னும் நான் வரலனு.. நான் எனக்காகத்தான் இந்த முடிவ எடுத்துருக்கேன்டி. இது ஒரு மாற்றத்துக்காகதான்..நிரந்தரம் இல்ல! அப்றம் எதுக்காக கஷ்டப்படுறீங்க?" என்று முதலில் சற்று கோபமாகத் தொடங்கியவள், வருத்தத்துடன் முடித்தாள்.


"சரி!! நீ உனக்காகதான் இந்த முடிவு எடுத்துருக்க. எங்களுக்காக இல்ல. அப்றம், எதுக்கு எங்களுக்கு ஃபோன் பண்ணி இப்டி பேசிட்டு இருக்க? நாங்க என்ன ஆனா என்னனு நீ உன் லைஃப பாக்க வேண்டியதான? எதுக்கு ஃபோன் பண்ணி சமாதானம் செய்ற?" என்று அனுயா கேட்டிட, அதிர்ந்த காவ்யா,


"அது எப்டிடி? நீங்க இப்டி கவலப்படும்போது என்னால நிம்மதியா இருக்கமுடியும்? அதுவும் என்னய நினச்சு கஷ்டப்படுவீங்கன்னு நினைக்கும்போதெல்லாம் எனக்கு வலிக்குதுடி...உங்களுக்கு நான் கஷ்டத்த மட்டும்தான் கொடுக்குறேனோனு தோணுது.. அதுதான் உண்மையும்கூட..!" என்று காவ்யா வருந்திக் கூறுவதைக் கேட்டு,


"இன்னொரு தடவ அப்டி சொன்ன...தேடிவந்து அடிப்பேன்டி காவி! நீ என்ன நினச்சுட்டு இருக்க? எங்களபத்தி நீ கவலப்படலாம். நாங்க உன்னய நினச்சு கவலப்படக்கூடாதா? இன்னும் ஏன்டி நீ இப்டியே நினைக்குற..? லூசு!" என்று ரம்யா கோபமாய்க் கூறிட,


"நம்மலாம் ஃபிரண்ட்ஸ்னு தாண்டி ஒரு ஃபேமிலியா இருக்கோம்டி. நீ எதுக்கு பிரிச்சு பாக்குற? கவலைய மறைக்கிற? அதோட உன்னால எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் கிடையாது. நீ எங்களவிட்டு போனதுதான் கஷ்டமா இருக்கு. நீ இல்லாம நம்ம வீடே வெறுமையா தெரியுதுடி. தெரியுமா?" என்று தன்யா கூறிட, காவ்யா வருந்தினாள்.


"சாரிடி! இது வேணும்னே பண்ணதில்ல. நம்ம எவ்ளோ தூரத்துல இருந்தாலும் நம்ம மனசளவுல பக்கத்துலதான்டி இருப்போம். அதுல எந்தப் பிரிவுமே இருக்காதுடி" என்று காவ்யா கூறியதைக் கேட்டவர்கள், இவர்கள் அன்று கூறிய அதே வார்த்தைகளை இவளும் கூறுவதைக் கேட்டு வியப்பில் கண்ணீர் சிந்தினர்.


"சீக்கிரம் நம்ம கஷ்டகாலம் நீங்கி நாம சந்திப்போம்னு நம்புறேன். நீங்களும் அதே நம்பிக்கையோட இருங்கடி. ஆனா, கொஞ்சம் சந்தோசமா இருங்கடி" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.





ராணாவின் நண்பர்களை காவ்யா தவறாக நினைப்பதை எப்போது அறிவாள்?? கதவை திறந்தது யார்??





❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 17


"சீக்கிரம் நம்ம கஷ்டகாலம் நீங்கி நாம சந்திப்போம்னு நம்புறேன். நீங்களும் அதே நம்பிக்கையோட இருங்கடி. ஆனா, கொஞ்சம் சந்தோசமா இருங்கடி.." என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக் கதவை திறந்துகொண்டு கமலாம்மா வந்திட, அவரை பார்த்தவள்,


"இப்ப என்ன? நான் பத்திரமா இருக்கேனா? நல்லா இருக்கேனானு தான உங்களுக்குத் தெரியணும்? என்கூட கமலாம்மானு ஒரு அம்மா இருக்காங்கடி. அவங்க என்னய அவங்க பொண்ணுமாறி பாத்துக்குறாங்க. எனக்கும் அவங்க என்னய பாத்துக்குறத பாக்கும்போதெல்லாம் நீங்கதான் தெரிவீங்கடி" என்று கூறிட, அதை கேட்டவர்கள் வியந்தனர்.


"நீங்க நம்பலைனா அவங்ககிட்டயே கொடுக்குறேன். பேசுங்க" என்று கூறியவள், அருகில் நின்று பார்த்திருந்த கமலாம்மாவை அழைத்து, "அம்மா! என் ஃப்ரண்ட்ஸ்மா. நான் நல்லா இருக்கேனான்னு அவங்களுக்கு சந்தேகம். அதான், நீங்க என்னய எப்டி பாத்துக்கிறீங்கனு சொல்லுங்கம்மா" என்று கூறியவள், அலைபேசியை மூடியபடி,


"அம்மா! எனக்கு கல்யாணம் ஆனது, இங்க இருக்கிறேங்கிறதுலாம் சொல்லாதீங்கம்மா" என்று கூறிவிட்டு அலைபேசியை கொடுத்தாள். அவரும் குழம்பியபடியே வாங்கியவர், காதில் வைத்து, "ஹலோ!" என்றார்.
அவர் குரலை கேட்டவர்களுக்கு ஏதோ ஒரு நிம்மதி பரவியது. அவள் தனியாக இல்லை என்ற எண்ணத்தினால்.


"ஹலோ! அம்மா..! காவ்யா உண்மையத்தான் சொல்றாளாம்மா? அவ எங்களுக்காக எந்த பொய் வேணாலும் சொல்வாம்மா. நீங்களாச்சும் உண்மைய சொல்லுங்கம்மா. ப்லீஸ்...! அவ நல்லா இருக்காளா?" என்று சரண்யா கெஞ்சி கேட்டதை பார்த்து வருந்தியவர், காவ்யாவை பார்த்திட, அவள் கண்கலங்கியபடி இவருக்கு வேணாம்... என்று தலையசைத்தாள்.


அதை கண்டவர், "ஆமாம்மா! அவ இங்க ரொம்ப நல்லா இருக்கா. முதல்ல ஏதோ பறிகொடுத்தமாறி தான் இருந்தாமா. ஆனா, போகப்போக கொஞ்ச கொஞ்சமா மாறிட்டு வர்றா. சாப்பிட வைக்கிறதுலாம் நான் பாத்துப்பேன்மா. நான் எதுக்கு இருக்கேன். மனசும் சீக்கிரம் சரியாயிடும். கவலப்படாதீங்கம்மா..." என்று சமாளித்துக் கூறிட, அவர்களுக்கும் அது நிம்மதியளித்தது.


"அம்மா! நீங்க எப்டிமா அவளுக்கு பழக்கம்? எங்க இருக்கீங்க?" என்று அனுயா நாசுக்காகக் கேள்வி கேட்டிட, சுதாரித்துக்கொண்ட காவ்யா, அலைபேசியை வாங்கி,


"எதுக்கு? என்னய தேடி வர்ரதுக்கா? நான் நல்லாதான் இருக்கேன்னு சொன்னேன். நம்பமாட்றீங்க. அதான், இவங்ககிட்ட கொடுத்து பேச சொன்னேன். நீங்க போட்டு வாங்கிறீங்களாடி? ஃப்ராடுகளா!" என்று கூறி கேலி செய்ய,


"அதான் கண்டுபிடிச்சுட்டியேடி! உன்னய யாரும் ஏமாத்தமுடியுமா? நீதான் எங்களுக்குமேல ஃப்ராடாச்சே..!" என்று சரண்யா பதிலுக்கு கிண்டல் செய்து சிரிக்க, நீண்டநாட்களுக்குப் பிறகு, சிறிய சிரிப்பலை பரவியது. ஆனால், அவள் கூறயதை கேட்ட காவ்யா, உண்மை உரைக்க, 'அதான் ஏமாந்துட்டேனே...! என் வாழ்க்கையவே இழந்துட்டு நிக்கிறேனே..எவனோ ஒருத்தன்கிட்ட!' என்று எண்ணியவாறு மௌனமாய் நின்றாள்.


காவ்யா மௌனமாய் இருப்பதை உணர்ந்தவர்கள், "என்னடி ஆச்சு? எதுக்கு சைலண்ட் ஆயிட்ட? நான் கிண்டல் பண்ணதுக்காடி? சாரிடி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்டி..தௌசண்ட் டைம்ஸ் சாரிடி...!" என்று சரண்யா கெஞ்சிட, அப்போதும் மௌனமே பதிலாய் வர,


"காவிம்மா! சாரிடி! நான் வேணா தோப்புக்கரணம் போடுறேன்டி. நூறு தடவ" என்று கூறி, தோப்புக்கரணம் போடுவதை பார்த்து தோழிகள் மூவரும் புன்னகைக்க, காவ்யாவும் அவள் நிஜமாகவே செய்கிறாள் என்பதை அறிந்ததும் சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பு சத்தத்தை கேட்டு நிம்மதி அடைந்திட,


"அடியே! சரு..! நிஜமாவே போடுறியா? ஹாஹா...நல்லா போடு..ரம்மி! அவ நூறு தடவ போட்டு முடிக்கிறாளான்னு பாருடி" என்று கேலியாகக் கூறிட,


"சரிடி செல்லக்குட்டி! நூறு முடிக்காம இவள விடப்போறதில்ல" என்று ரம்யாவும் உற்சாகமாகக் கூறிட, சரண்யா பாவமாக அவளை பார்த்தாள். அதைப் பார்த்து அனைவரும் சிரித்திட, அதைக் கேட்ட காவ்யாவுக்கும் நிம்மதியாய் இருந்தது.


"உனக்காக நான் போடுறேன் காவிமா! நூறு என்ன ஆயிரம் தடவகூட போடுவேன்" என்று வீரவசனம் பேசுவதை கேட்டவள்,


"அடியே...சரு! உன் பாசம் எனக்கு புல்லரிக்குதுடி! ஆனா, நீ பாட்டுக்கு போட்டுத் தொலைக்காத. அப்றம், பெண்டு கலண்டுரும். ஆனா, இனி இந்த காவ்யாவ கலாய்க்கிறதுக்கு முன்னாடி இந்த பயம் வரணும். புரியுதா?" என்று கெத்தாகக் கூறிட,


"சரிங்க மகாராணி! இனிமே இப்டி ஒரு பிழை நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.." என்று பணிவாக சரண்யா கூறியதை கேட்டு காவ்யா சிரித்துவிட்டாள். நீண்ட நாட்களுக்குப் பின், காவ்யா சிரிப்பதை கேட்ட தோழிகளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. அதைவிட, அவள் பழையபடி பேசியதுதான் அவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது. அது பொய்யல்ல என்பதையும் அவர்களால் உணர முடிந்தது. அவர்களுடன் இருந்ததைவிட இப்போது தெரியும் மாற்றம் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.


காவ்யாவிற்குமே தனது மாற்றம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. கமலாம்மாவும் இவள் வாய்விட்டு சிரிப்பதை இன்றுதான் பார்க்கிறார். 'சிரிக்கும்போது இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! இவளை அழவைக்க தோன்றுமா யாருக்கும்? அந்தக் கடவுளும் இதை நினைக்கமாட்டாரா? இனியாவது சந்தோசத்தை தரவேண்டும் இவள் வாழ்வில்..! எந்த கவலையாக இருந்தாலும் சீக்கிரமே அது நீங்கிடவேண்டும்..' என்று மனதார வேண்டிக்கொண்டார், கமலாம்மா.


தோழிகள் ஐவரும் பேசியபின், காவ்யா அவர்களிடம், "நான் முன்னாடியே சொன்னதுதான்டி. இப்ப என்னால உங்ககிட்ட வரமுடியாது. நீங்களும் வரவேணாம். என்னயபத்தி எதையும் தெரிஞ்சுக்க நினைக்காதீங்க. இது என்மேல சத்தியமா சொல்றேன்டி. அப்றம், என்னால உங்க லைஃப் எந்த வகையிலயும் தடைபடக்கூடாதுடி. நீங்க என்னயபத்தி கவலப்படாம உங்க லைஃப பாருங்க. நானும் இங்க நல்லாதான் இருக்கேன். அப்றம், ஒருநாள் நான் வரும்போது எனக்காக நீங்க எதயும் தவறவிட்டீங்கனு இருந்தது தெரிஞ்சா...நான் செத்ததுக்கு சமம்" என்று கூறிக்கொண்டிருக்க, மற்றவர்கள் பதறினர்.


"ஏன்டி இப்டிலாம் பேசுற?" என்று கவலைப்பட்டுக்கொள்ள, அதை உதாசீனம் செய்தவள்,


"அப்டி நான் நினைக்கிறதும் நினைக்காததும் உங்க கைலதான்டி இருக்குது. என்னய பிரிஞ்சு இருக்கீங்கனுலாம் கவலப்படாதீங்கடி. வேல விசயமா வெளிய போய்ட்டமாறி நினச்சுக்கங்க. என்ன! இது கொஞ்சம் லாங் கேப்பா இருக்கும். எனக்கும் அது எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கும் தெரியும்ல. ஆனா, இது எனக்கு இப்ப தேவையான ஒன்னுதான். சோ! புரிஞ்சுகிட்டு நல்லபடியா இருங்கடி.." என்று ஏதேதோ கூறி அவர்களுக்கு சமாதானம் கூறி அவர்களை சம்மதிக்கவும் வைத்தாள்.


"சரிடி! உனக்காக..உன்னோட சந்தோசத்துக்காக இதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்டி. எங்களுக்கும் உனக்கும் கஷ்டமான இந்த காலத்தை கடந்துட்டா நீ எங்ககிட்ட பழையமாறி கிடைப்பனு இப்ப நம்பிக்கை வந்துருச்சு. அந்த நம்பிக்கையோடயே நாங்க காத்துட்டு இருப்போம்டி" என்று அனுயா கூறிமுடிக்க,


"ஆமாடி! கண்டிப்பா உன்னய கஷ்டப்படுத்தற மாறி எதுவும் ஆகிடாது. நாங்களும் அப்டி பண்ணமாட்டோம்டி. வி வில் பி வெய்ட்டிங் ஃபார் யூ டி.." என்று தன்யாவும் கூறிட,


"நாங்க உனக்காகவாச்சும் சந்தோசமா இருக்க ட்ரை பண்ணுவோம்டி. நீயும் அங்க எங்களுக்காக சந்தோசமா இருக்கணும்டி. உன்னய நீ மாத்திக்க முயற்சி பண்ணணும். ஓகேவா? லவ் யூ டி!" என்று சரண்யா கூறிட,


"காவி! ஐ வில் மிஸ் யூ பேட்லி டி.. நீ வர வரைக்கும் காத்துட்டு இருப்போம். போன்ல ஹக் பண்ணமுடியலடி. அதனால இந்தா! உம்மாஆஆ..!!" என்று ரம்யா கூறி முத்தமிட, காவ்யாவின் கண்களில் கண்ணீர் ஊற்றாகியது. அவளும் பதிலுக்கு,


"ரம்மி! தனு! சரு! அனு! நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன்டி! லவ் யூ டு தி கோர்! உம்மாஆஆஆ..!!" என்று கூறி முத்தமிட, ஐவரின் கண்களும் குளமாகின. "சரிங்கடி! பாய்!" என்று கூறி அலைபேசியை அணைத்தவள், அமர்ந்து அழுது தீர்த்தாள். அவளருகில் வந்த கமலாம்மா ஆறுதலாக அவளை அணைத்திட, இவளும் அவரை அணைத்தபடி சிறிதுநேரம் அழுதாள்.


அடுத்து அணைப்பிலிருந்து விலகிய கமலாம்மா கண்களை துடைத்துவிட்டு அவளுக்கு உணவு ஊட்ட வர அவள் அதை மறுத்தாள். அதைக் கண்டவர்,


"கவலையோ! கோபமோ! எதயும் சாப்பாட்டுல காட்டக்கூடாதும்மா. அதுவும் இந்தமாறி சமயத்துல.. இப்பதான் நல்லா சாப்டணும். உன் ஃப்ரண்ட்ஸ்கூட இதத்தான சொன்னாங்க? அதோட, அவங்ககிட்ட நான் உன்னய நல்லா பாத்துக்கறேனு சொல்லிருக்கேன். அத காப்பாத்த வேணாமா? அதுக்காகவாச்சும் நீ சாப்டுதான் ஆகணும் பாத்துக்க. ஆமா..!" என்று அக்கறையாய் ஆரம்பித்தவர், விளையாட்டாகக் கூறி முடித்திட, காவ்யாவின் இதழும் சிறிது விரிந்தது. அப்படியே அவளை சமாதானப்படுத்தி ஊட்டிவிட்டு மருந்து கொடுத்தார்.


கமலாம்மா கீழே சென்றுவிட, சாப்பிட்டு முடித்தவள் எழுந்து சிறிதுநேரம் பால்கனியில் நின்றுவிட்டு வந்தவள், கமலாம்மாவும் வந்துவிட அவர் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள். அவரும் ஆதரவாக தலைகோத அப்படியே கண்ணயர்ந்தாள்.


இரவு எப்போதும்போல உணவருந்திவிட்டு தன்னறைக்குச் செல்லுமுன் காவ்யாவின் அறைக்கு வந்து உறங்கும் அவளை பார்த்து கமலாம்மாவிடம் விசாரித்துவிட்டுச் செல்வது ராணாவின் வழக்கமாகிப் போனது. அதைப்போல் இன்றும் வந்தவன், கமலாம்மாவின் மடியில் அவள் தூங்குவதை பார்த்துவிட்டு
நிற்க, இவனை பார்த்து அவரும் எழமுடியாமல் அவள் தலையை நகர்த்தி வைக்கப்போக, அதை கையசைத்துத் தடுத்தவன்,


"எழவேணாம் கமலாம்மா! உக்காருங்க. சாப்ட்டாளா?" என்று கூறி விசாரித்திட, "சாப்டாங்கய்யா" என்று அவரும் பதிலளித்தார். அதைக் கேட்டவனும்,


"பரவால்ல கமலாம்மா! நீங்க எப்போதும் அவள கூப்டுற மாறியே பேசுங்க. எனக்கு எல்லாம் தெரியும். நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்று அமைதியாகக் கூறிட, அவர் லேசாக அதிர்ந்தார்.


"அது..வந்து..ஐயா..! நான் எவ்ளவோ சொன்னேங்கய்யா.. அவங்க..தான் அப்டி... கூப்ட... சொன்..னாங்க..ய்யா!" என்று தயங்கியபடி கூறிட, ராணாவும் சிறிதாகப் புன்னகைத்தவன்,


"இப்ப நான் எதுவுமே சொல்லலயே கமலாம்மா! நீங்க எனக்காக ஒன்னும் மாத்திக்க வேணாம்னுதான் சொன்னேன். வேற ஒன்னும் இல்ல. என்னயவே நீங்க ஐயான்னு கூப்டுறது பிடிக்கலதான். ரொம்ப ஓல்ட் பேஷன் டா இருக்கு. இருந்தாலும் அத இதுவர கண்டுக்கல. ஆனா, இனிமே என்னயும் அப்டிலாம் கூப்ட வேணாம். ஓகேவா?" என்று சொல்லியதை
கேட்டவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.


"அது..சரி வராதுங்கய்யா..இப்டியே கூப்டு..றேன்.." என்று கூறியதை கேட்டவன்,


"நான் சொன்னத நீங்க கேக்கணுமா? இல்ல நீங்க சொன்னத நான் கேக்கணுமா?" என்று சற்று கடுமையாகக் கேட்டிட, பயந்துபோனவர்,


"நீங்க சொன்னததான் நான் கேக்கணும்ங்க ஐயா!" என்று தலைகவிழ்ந்து கூறிட, அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன்,


"அப்போ! இனி ஐயானு கூப்டாதீங்க. ஓகேவா?" என்று கூறிட, தலையசைத்தவர்,


"அப்போ...தம்பினு... கூப்டலாமாங்க.. ஐயா..?" என்று தயங்கியபடியே கேட்டு அவன் முகத்தை பார்த்திட, அவனும் முதலில் புருவம் சுருக்கியவன், பின் முகம் மலர்ந்து,


"இது நல்லாருக்கே! அப்ப இப்டியே கூப்டுங்க. ஓகே கமலாம்மா! படுத்துக்கோங்க. குட்நைட்" என்று கூறி அவன் சென்றுவிட, அவன் போனபின்னும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.


இத்தனை வருடங்கள் இல்லாத ஏதோ ஒரு மாற்றம் அவனுள் இன்று தெரிந்ததை கண்டு ஒருபக்கம் அதிர்ச்சியிலும் மறுபக்கம் குழப்பத்திலும் இருந்தார். ஆனால், அவன் பேச்சில் தெரிந்த மாற்றம் பெரிய சந்தோசத்தையும் அவருக்கு அளித்தது. அவரும் அதை நினைத்தவாறு தூங்கிவிட்டார்.


சில தினங்கள் கழிந்தது...


ஒருநாள் ராணா வீட்டிற்குள் வந்ததும் காவ்யாவை அழைத்தான். அவளும் வரவே, ராணா அவளருகில் நெருங்கி வருவதை பார்த்து உள்ளுக்குள் பயம் எழ, பின்னே நகர்ந்தாள். அவள் பயப்படுவதை பார்த்தவன்,


"இப்ப எதுக்கு பயப்படுற? உன்னய நான் ஒன்னும் செஞ்சிட மாட்டேன். அப்டியே செஞ்சாலும் நான் உன் ஷஸ்பண்ட் தான? அதுல என்ன உனக்கு பயம்?" என்று கடுப்பாகிப் பேசியவன், அடுத்தநொடி அவள் பயந்த முகத்தை பார்த்தவன், தன்னை சமன்செய்துகொண்டு,


"ரிலாக்ஸ்..! உன் கண்ண கட்டுறதுக்குத்தான் பக்கத்துல வந்தேன். பயப்படாத! ஒன்னும் இல்ல. ஒரு சர்ப்ரைஸ்!" என்று பொறுமையாகக் கூறி கண்களை துணியால் கட்ட வர, முதலில் மிரண்டவள், பின் அவன் சொன்னதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்பதை உணர்ந்தும் பாதி பயத்தினாலும் கண்கட்ட ஒப்புக்கொண்டாள்.


காவ்யாவின் கண்களை கட்டியவன் அவளை மெல்லமெல்ல நடத்திச் சென்று மெதுவாக படிகளில் இறங்கினான். அவளும் ஒன்றும் புரியாமல் நடந்துசென்றாள்.


'இந்த வீட்ல மாடிபடிக்கு ஏறுவோம்... ஆனா, நாம ஏற்கனவே ஹால்லதான இருந்தோம்! இப்ப எங்க படி இறங்கிப் போறோம்...? இந்த வீட்ல அப்ப க்ரவுண்ட் ஃப்ளோர் வேற இருக்கா?இந்த வீடும் இவன மாறியே மர்மமாவும் பயமாவும்தான் இருக்கு. எங்க கூட்டிட்டு போறான்னே தெரியலயே..!' என்று தனக்குள் எண்ணியபடியே அவனுடன் நடந்து சென்றாள்.


இறங்கிச் சென்றவன் நடந்து ஓர் அறைக்குள் நுழைந்தான். அந்த அறை அவன் வீட்டின் அடிதளத்தில் இருந்தது. வீடு மேடாக அமைக்கப்பட்டிருந்ததால் இந்த அறை தரைத்தளமாக இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தது.


அந்த அறையில் நுழைந்ததும் இவள் கண்கட்டை அவிழ்த்துவிட்டான். கண்களை திறந்தவள்முன் அவள் டிசைனிங் வேலைக்காகத் தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளும் அந்த அறையை நிறைத்திருந்தது.


அறையின் ஒரு ஓரத்தில் பெரிய மேசையும் நாற்காலியும் அமைந்திருக்க, அதனருகில் ஒரு பொம்மை அழகிய ஆடையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அறையின் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தது. இன்னொரு ஓரத்தில் நிறையவகைத் துணிகள் மாட்டப்பட்டிருந்த கபோர்ட் இருந்தது. அந்த அறை இன்னும் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டவளின் மனம் தன்னிலை மறந்து குதித்தது.


தனது பேசன் டிசைனிங் கலையை தன் மூச்சைப் போல சுவாசிப்பவள், காவ்யா. அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் என்றால் தன்னையே மறந்துவிடுவாள். இந்தக் காரணத்தாலேயே அவள் வேலைக்குச் சென்ற சில தினங்கள் நிம்மதியாக இருந்தாள். இப்போதும் அவள் மனமாற்றம் இதில் ஏற்படலாம் என்றெண்ணியே ராணாவும் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான். அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம் அவன் எண்ணம் சரியென உறுதிபடுத்தியது.


காவ்யா அறை முழுவதும் மெதுவாகப் பார்த்துக்கொண்டிருக்க, "இந்த ரூம் உனக்காகத்தான். இனி இங்கயே கூட தங்கிக்க. உன்னோட டிசைனிங்க கண்டினியூ பண்ணிக்க இந்த ரூம் யூஸ் ஆகும்" என்று ராணா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டவளுக்கும் சிறு நிம்மதி ஏற்பட்டது.


அவ்வாறே அறையை பார்க்க, அப்போதே அந்த அறையில் ஒரு படுக்கை இருப்பதை பார்த்தாள். அதைப் பார்த்தவளுக்கு ஏதோ தோன்றிட, சுற்றிப் பார்த்தவள் அந்த அறையின் கண்ணாடிச் சுவரை பார்த்தாள். அதன்பின்தான் உணர்ந்தாள், அந்த அறை அவள் ஏற்கனவே கடத்தப்பட்டு வைத்திருந்த அறை என்பதை.


உண்மையை அறிந்தவள் அறையை சுற்றிப் பார்த்திட, இப்போது அந்த அறை முழுவதும் அவளுக்கு சூனியமாய் காட்சியளித்தது. இந்த அறையில் அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும் நரகவேதனையும் அவள் அங்கிருந்து தப்பிச்செல்ல பட்ட பாடுமே அவள் கண்முன் படமாய் ஓடிட, அவளால் தாங்கிட இயலாமல், "இல்ல.....!!!!" என்று கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு கத்தினாள்.


காவ்யா திடீரென கத்துவதை பார்த்து அதிர்ந்தவன், அவளருகில் வந்து தோள்தொட்டுத் திருப்பி, "என்னாச்சு?" என்று சற்று குழப்பத்துடனே மெல்ல கேட்டிட, அவனை நிமிர்ந்து பார்த்தவள், இன்னும் பயந்துபோய் பின்னே சென்றாள்.


தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பயத்தின்பிடியில் சிக்கியவள் கத்திக்கொண்டே பின்னே சென்று கண்ணாடிச் சுவரில் மோதி நிற்க, அதை குழப்பத்துடனும் அவள் கற்பத்தை எண்ணி பயத்திலும் ராணா பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் வந்தவள்,


"ப்ளீஸ்..!! என்னய ஒன்னும் பண்ணிடாத. விட்டுடு...உன்னய கெஞ்சி கேட்டுக்குறேன். என்னய ஒன்னும் பண்ணிடாத...ப்..ளீ...ஸ்..!!" என்று பிதற்றியவள், அப்படியே மயங்கி கீழே விழப்போக, அவளை கைகளால் தாங்கினான். அவளை தாங்கியவன் அப்படியே தூக்கிச் சென்று அங்கிருந்த படுக்கையில் படுக்கவைத்தான்.


காவ்யாவின் பிதற்றலையும் அவள் பதற்றத்தையும் பார்த்த ராணாவுக்கு அதன் காரணம் நன்றாகப் புரிந்தது. அவளின் பயமும் தெளிவாகத் தெரிந்தது. அவள் இவனால் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொண்டான். காவ்யாவை முதலில் பார்க்கும்போது அவளிடம் இருந்த துணிச்சல், கம்பீரம், கோபம் என எதுவும் இப்போது அவளிடம் இல்லாததை இப்போதுதான் சிந்தித்துப் பார்த்தான்.


ராணா நினைத்ததை போலவே காவ்யாவின் திமிரை அடக்கிவிட்டதாக அவன் மூளை கூறினாலும் அவளின் இந்த மாற்றம் இவன் மனதை பிசைந்தது. தான் தவறு செய்துவிட்டதாய் முதன்முதலாக அவனுக்கு உறுத்தியது. இதுவரை அவன் செய்த எந்த காரியமும் இப்படி தோன்றச் செய்ததில்லை. காரணம், அவன் இதுவரை நல்ல மனிதர்களை தண்டித்ததில்லை. திமிரு பிடித்தவர்களையும் ஆனவத்தில் ஆடுபவர்களையுமே அடக்கியிருக்கிறான்.


இவன் வாழ்க்கையில் செய்த முதல் பெரிய அநியாயம் என்றால் அது காவ்யாவுக்கு இளைத்ததே ஆகும். அதையும் இன்றுவரை அவன் தவறாக நினைத்ததில்லை. அதற்குக் காரணமும் அவன் கோபக் குணம் தான். ஆனால், இன்று காவ்யா இந்தளவுக்கு பயந்துபோய் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போதுதான் அவன் மனதிற்கு சற்று நெருடலாக இருந்தது.


ஏற்கனவே, அன்று இருட்டை பார்த்து அவள் அலறியது, தூக்கத்தில் புலம்பியது, இவனை பார்த்துப் பதறியது, மன அழுத்தத்தால் மயங்கியது, மருத்துவர் கூறியது என அனைத்தையும் ஒன்றாக எண்ணிப் பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்துவிட, ஒரு முடிவுக்கு வந்தான்.



ராணா அறையில் உள்ள இண்டர்காம் வழியாக கமலாம்மாவை அழைத்திட, அவரும் இவன் சொன்னதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தார். அறையை தட்டிவிட்டு உள்ளே வர, ராணா காவ்யாவின் அருகில் அமர்ந்திருந்தான். அவனருகில் வந்தவர், அவனை அழைத்திட, அவன் சொன்ன இடத்தில் எடுத்து வந்த மருந்துகளையும் தண்ணீரையும் வைத்தார்.


ராணாவுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர, படுக்கையில் இருந்து எழுந்தவன், "கமலாம்மா! இவள பாத்துக்கங்க. இப்ப வந்துடுறேன். அதுக்குள்ள மயக்கம் தெளிஞ்சிடுச்சுன்னா கொண்டுவந்த மருந்த கொடுங்க" என்று சொல்லிவிட்டு வெளியேறினான். கமலாம்மாவும் அமைதியாக காவ்யாவின் அருகில் அமர்ந்தவர் மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தார்.


சிறிதுநேரம் கழித்து, காவ்யா மெல்லமெல்ல மயக்கம் தெளிந்து கண்களை திறந்தாள். கண்திறந்து பார்த்தவள் தான் இருக்கும் இடத்தை கண்களால் ஆராய்ந்தவள் பயம் தொற்ற எழுந்தமர்ந்தாள். அவளை ஆசுவாசப்படுத்த கமலாம்மா அருகில் வர, அவரை கண்ட பின்னே சற்று அமைதியானாள். அவளுக்கு தண்ணீர் கொடுத்து பருக வைத்து மருந்தையும் கொடுத்தார். அதை மறுக்காமல் வாங்கி உண்டவள், அந்த அறையின் நினைவுகள் இவளை பதற செய்திட, மூச்சை நன்கு இழுத்துவிட்டவள் கமலாம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள்.


காவ்யா மயங்கியதுமே மருத்துவரை அலைபேசியில் அழைத்து விசயத்தை கூறியவன் அவர் கொடுத்த மருந்துகளை கொடுக்கச் சொல்லிவிட்டு அவசர சிகிச்சைக்காக சென்றுவிட்டதால் வைத்துவிட்டான். மருந்தை கொடுக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் அவர் அழைத்திருக்க வெளியே வந்தான். மருத்துவரிடம் இப்போது நடந்த விசயத்தை மட்டும் தெளிவாகக் கூறிட, மருத்தவரும்,


"அது அங்க அவங்களுக்கு மறக்க நினைக்கிற ஏதோ ஒன்ன நியாபகப் படுத்துற மாதிரி பாத்துருப்பாங்க. அதனால அப்டி ஓவர் ரியாக்ட் ஆகிருக்காங்க. நோ நீட் டு வர்ரி. இப்போதைக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. ஆனா, இதுக்கான சொல்யூஷன் அவங்ககிட்டதான் இருக்கு. அவங்க மாறணும்னு நினைச்சா மட்டும்தான் அவங்களால அதவிட்டு வெளிய வரமுடியும். ப்ளஸ் உங்களோட சப்போர்ட்டும் இருக்கணும். கேர் பண்ணி பாத்துக்கங்க" என்று அறிவுரை கூறிட, இவனும் அதை ஆமோதித்து பதிலளித்து அழைப்பை துண்டித்தான்.


மருத்துவர் கூறியதை யோசித்தபடியே காவ்யா இருக்கும் அறைக்கு வந்தான். அவன் உள்ளே நுழையவும் அங்கே காவ்யா கமலாம்மாவின் மடியில் படுத்திருப்பதை பார்த்தவன் செரும, அதில் சத்தம் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். ராணா நிற்பதை கண்டதும் காவ்யா எழுந்து அமர்ந்தாள். கமலாம்மாவும் எழுந்து
நின்றிட, இவன் அருகில் வந்து,


"எப்ப கண்ணு முழிச்சா?" என்று வினவிட,


"இப்பதான் கொஞ்சநேரம் முன்னாடிதான் கண்ணு முழிச்சா, தம்பி!" என்று கமலாம்மா பதிலளித்தார்.


"மருந்து சாப்டாளா?" என்று கேட்டிட, அவரும் ஆம் என்று பதலளிக்க, காவ்யா இதை காதில் வாங்கியும் வாங்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் திரும்பியவன்,


"நீ உன்னோட ரூமுக்கே போ. அங்க இந்த திங்க்ஸ் எல்லாத்தையும் செட் பண்ண சொல்றேன்" என்று கூறிட, அதைக் கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து,


"எதுக்கு?" என்று கேட்டிட, அவனும் அவளை வினோதமாகப் பார்த்தவன்,
"எதுக்குனு உனக்குத் தெரியாதா? அப்ப உனக்கு இங்க இருக்கிறதுல எந்த ப்ராபளமும் இல்லயா?" என்று சற்று எரிச்சல் கலந்த தோணியிலேயே கேட்டிட, அவளும்,


"இல்ல! எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் இங்கயே தங்கிக்கிறேன்" என்று அவனை பாராமலே கூறிமுடித்தாள். இதை கேட்ட ராணா குழம்பிப் போனான். 'இவள் எப்போது எப்படி மாறுவாள் என்றே கணிக்க முடியவில்லையே!' என்று தனக்குள் எண்ணி குழம்பினான். இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல்,


"சரி! கமலாம்மா! நீங்களும் இனி இங்கயே இவகூட தங்கிக்கோங்க. இங்க இருக்க பிடிக்கலைனாலும் எப்ப வேணாலும் உன் ரூமுக்கு போயிக்கலாம். உன்னோட திங்க்ஸ இங்க அரேஞ்ச் பண்ண சொல்றேன்" என்று கூறிவிட்டு வெளியேறினான்.



ராணா வெளியே சென்றதும் காவ்யாவின் அருகில் வந்த கமலாம்மா, "காவ்யாமா! கேக்குறேன்னு தப்பா நினைக்காத. எதுக்காக நீ இந்தளவுக்கு அவர பாத்து பயப்படுற? உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினையா? ஆரம்பத்துல உன்னய கூட்டி வந்தப்பக்கூட ராணா தம்பி ரொம்ப கோவமாத்தான் நடந்துகிட்டாரு. இப்பவரைக்கும் அப்டித்தான் இருக்காரு. ஆனாலும் சின்னசின்ன மாற்றம் நல்லாவே தெரியுதுமா. உங்களுக்குள்ள என்ன நடந்தாலும் அது எனக்கு அவசியம் இல்லாதது. ஆனா, நீ மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கனு உன்னய இத்தன நாளா பாத்ததுல இருந்தே நல்லா தெரியுதுமா. அதுக்கு அவருதான் காரணம்னும் தெரியுது. ஆனா, என்னனு சொன்னா என்னால முடிஞ்சளவு ஆறுதல் சொல்வேன்ல. உனக்கும் பாரம் குறைஞ்சமாறி இருக்கும்" என்று அவர் பொறுமையாகக் கூறினார்.


காவ்யாவும் அவரை நிமிர்ந்து பார்த்தவள், இத்தனை நாளாக தனக்குள் மறைத்து வைத்திருந்த அவள் வாழ்வில் அவனால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடூர சம்பவத்தை முழுவதுமாகக் கூறி முடித்தாள். அவரிடம் கூறும்போதே அவள் கண்கள் குளமாக, தொண்டை அடைத்தது. அதன்பின் அவள் தோழிகளிடம் இருந்து வந்ததுவரை அனைத்தும் கூறிமுடித்தாள். அவளின் வலி கண்களில் கண்ணீராய் வெளிவந்தது. அவள் கூறியதை கேட்ட கமலாம்மாவுக்கும் அதிர்ச்சி, கவலை, துக்கம், வலி என அனைத்தும் மனதை நிறைத்திட, கண்கலங்கி அழுதுவிட்டார்.


காவ்யா அப்படியே கண்ணீருடன் சிலையென அமர்ந்திருக்க, அவளை அரவணைத்து ஆதரவாக தலை வருடினார். அவர் அணைப்பில் தஞ்சம் புகுந்தவள் சிறிதுநேரம் அப்படியே இருந்தாள்.


"உனக்கு நடந்தது சாதாரண விசயம் இல்லம்மா. ரொம்ப பெரிய கொடுமை. இத ராணா தம்பி பண்ணிருக்காருனு என்னால நம்பவே முடியல. அவரு கோவக்காரருனு நல்லா தெரியும். ஆனா, ஆத்திரத்துல இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துப்பாருன்னு கனவுலகூட நினச்சு பாத்தது இல்லமா" என்று அவர் கூறிட,


"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாதும்மா. இதுல என்னோட தப்பும் இருக்கு" என்று காவ்யா கூறுவதை கேட்ட கமலாம்மா அதிர்ந்தார்.






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom