தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
அவள் 9
காவ்யா வேலைக்கு வந்து ஒருமாதம் ஆகியிருக்க, அவர்களின் ப்ராஜெக்டும் முடிவடையும் தருவாயில் இருந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்திருந்தனர், காவ்யா மற்றும் குழுவினர். நாளை ப்ராஜெக்டை ஒப்படைக்கும் நாள் என்பதால் அதைப்பற்றி ஒருமுறை மீட்டிங் வைத்து ப்ரசென்டேஷன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். காவ்யாவையே அதைத் தரச் சொல்லி அவள் குழுவினர்கள் மொழிய, அவளுக்கு மேல் பொறுப்பில் இருப்பவரும் அவளையே செய்யச் சொல்லி வழிமொழிந்தார்.
"யூ டிசெர்வ் இட், மிஸ். காவ்யா. உங்களாலதான் இந்த ப்ராஜெக்ட் இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ பர்ஃபெக்டா முடிஞ்சிருக்கு. சோ, நீங்கதான் இந்த ப்ரசென்டேஷனையும் பண்ணணும். நீங்க நல்லபடியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன். ஆல் த பெஸ்ட்! சீ யு இன் தி மார்னிங்!" என்று அவர் அவ்வளவு சொல்லியதால் இவளால் மறுக்கமுடியவில்லை.
இவளால் நன்றாக செய்து முடிக்க முடியுமா? என்ற பயமும் பதட்டமும் அவளுக்குள் தோன்றியது. எதற்கும் அஞ்சாதவளாக இருந்தபோது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால், இன்று நிலைமை வேறு. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தவே பல நாட்கள் எடுத்துக்கொண்டிருக்க, இதற்கு எப்படி ஒரே நாளில் தயாராவது என்ற பல எண்ணங்களில் சிக்கித் தவித்தப்படியே வீட்டை அடைந்தாள்.
வீட்டிற்குள் இவள் நுழையும்போது மற்றவர்களும் வந்திருக்க, இவளின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைக் கவனித்தத் தோழிகள் என்னவென்று விசாரித்தனர். இவளும் அதைப்பற்றிக் கூறிட,
"அட! இவளோதானாக்கும்!! இதுக்குத்தான் நீ இப்படி மூஞ்ச தொங்கபோட்டுகிட்டு வந்தியா?" என்று சரண்யா எப்போதும்போல அவளை சீண்ட,
"ஒரே நைட்ல எப்டி ப்ரிப்பேர் பண்றதுனு தான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. நாளைக்கு சொதப்பிடக் கூடாதுல.." என்று தயங்கி கூறியதைக் கேட்டவர்கள், ஏதோ தன்முன் நிற்பது காவ்யா அல்ல! அவளது மாறுவேடம்! என்பதைப் போல் பார்த்தனர்.
"நீயாடி இப்டி பேசுறது?!! எங்க கண்ணையே நம்பமுடியல!" என்று தன்யா வியந்து கூறிட, காவ்யா அப்பாவியாகப் பார்த்தாள்.
"பின்ன என்னடி!! நீயெல்லாம் என்னைக்கு ப்ரசென்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணியிருக்க?! ஓவர் நைட்ல ரெடி பண்ணி சாதாரணமா பேசி கலக்கிட்டு வருவ!" என்று ரம்யாவும் கூறிட,
"ஆமா! ப்ராஜெக்ட்ல நீ பண்ணதுதான் மேஜரா இருக்கும். அப்போ மொத்த ப்ரசென்டேஷனும் உனக்குத்தான் ஃபிங்கர் டிப்ல இருக்குமேடி. இப்பவும் அப்படித்தான? நீ செஞ்சததான அங்க சொல்லப்போற!?" என்று சரண்யா கேட்டிட, காவ்யா ஆம்! என்று தலையாட்டினாள்.
"அப்றம் என்ன? நீ தைரியமா பண்ணு. நல்லாதான் பண்ணுவ. ஓகேவா! நாங்களும் உன்கூடயே இருந்து தேவைனா ஹெல்ப் பண்றோம்" என்று அனுயா சமாதானமாகக் கூறிட, அவளை தன்யா இடைமறித்தாள்.
"அனு! ஒண்ண மறந்துட்ட! அவளுக்கு யாரும் ஹெல்ப் பண்றது பிடிக்காது. முக்கியமா வர்க்ல. அவளே பண்ணணும்னு நினப்பா. மறந்துட்டியா?" என்று கேட்டிட, தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடித்து, தலையில் தட்டிக்கொண்டாள், அனுயா. அதைப் பார்த்த காவ்யா அவள் கைகளை எடுத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள். மறுபடியும் ஐவரும் அணைத்துக்கொள்ள அங்கே சிறிய சந்தோசம் எட்டிப் பார்த்தது.
இரவு உணவை உண்ணும்போது வழக்கம்போல் அலுவலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே அருந்தினர்.
"அப்றம்! ரம்மி!! உன் ஆபிஸ்ல புதுசா யாராச்சும் ஜாய்ன் பண்ணாங்களா? வர்க் எப்டி போகுதுடி?" என்று சரண்யா அவளிடம் கேட்க,
"ஆனா, உன்னயமாறி யாரும் கேட்கமாட்டாங்கடி! வர்க்க பத்தி முதல்ல கேட்காம புது ஜாய்னி பத்தி கேட்கிறா!!" என்று அவளை ரம்யா வாற, அசடு வழிந்தவள்,
"பின்ன! எனக்கு எது தேவையோ! அதத்தானடி முதல்ல கேக்க முடியும்! அவ வர்க்க பத்தி கேட்டு நான் என்னடி செய்யப்போறேன்?!" என்று பதிலடைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
"அடியே!! அதுசரி!! அப்ப! புதுசா யாரு ஜாய்ன் பண்ணாங்கிறதுதான் உனக்கு தேவையானதா?" என்று தன்யா கேட்டிட,
"அஃப்கோர்ஸ்டி!! இதுல என்ன சந்தேகம்? பின்ன எப்ப பாத்தாலும் வேல வேலன்னு பேசுனா பைத்தியம் புடிச்சிடும். அப்பப்ப இப்டியும் பேசிக்கணும்டி" என்று சரண்யா கூற,
"நீ அப்பப்பயா கேக்க? எப்பவுமே இதத்தானடி கேக்குற! உன் ஆபிஸ்ல யாரும் வரலயாடி?" என்று தன்யா அவளை வாறிவிட்டு கேட்க,
"அது என்னமோடி! நம்ம சமைக்கிற சாப்பாடு நமக்கு எப்டி பிடிக்கிறதில்லயோ! அதுமாதிரி நம்ம ஆபீஸ் பசங்களையும் எனக்கு பிடிக்கிறதில்லடி" என்று சரண்யா சலித்துக்கொள்வதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட,
"லூசு பக்கி! எக்ஸாம்பிளா எதுக்கு எத கம்பேர் பண்றா பாரு!!" என்று அனுயா கூறி சிரித்திட,
"நமக்கு சோறுதான் முக்கியம்! கண்ண மூடுனாலே கனவுலயும் நீதான! மாதிரி, சோறுதான் எப்பவும் எங்களுக்கு! என்னடி சரு!" என்று ரம்யாவும் ஆதரவாகப் பேசி சரண்யாவைப் பார்க்க, இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டனர்.
"இதுங்கள திருத்தவே முடியாது!" என்று தன்யா சலித்துக்கொள்ள,
"இப்ப திருந்தி என்னாகப்போறோமா?!! வாழ்க்கைய என்ஜாய் பண்ணுடி! எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருக்காத! இப்படி இருக்க உன்னய பாக்க வர்ற குழந்தைங்கல்லாம் என்னாகுமோ! பாவம்டி அதுங்க!!" என்று சரண்யா தன்யாவைக் கிண்டல் செய்ய, அவளோ பொய்யாக முறைத்தாள்.
"சரி! கூல்...தனு! உன் ஹாஸ்பிட்டல்லலாம் யாரும் பாக்கிற மாறி இருப்பாங்களாடி?!" என்று ரம்யா வினவ,
"அட்போடி! நான் என்ன டாக்டரா இருக்கேன்! ஐம் அ பீடியாட்ரிஷியன். என்கிட்ட குழந்தைங்க தாண்டி வருவாங்க. அவங்ககூட அவங்க அப்பா அம்மா வருவாங்க. இவங்கள பாக்கவே எனக்கு டைம் சரியா இருக்கும். இதுல எங்க நான் மத்த டிபார்ட்மென்ட்கு போறது! பாக்குறது!" என்று சொல்வதைக் கேட்ட ரம்யா,
"அச்சோ! ரொம்ப பாவம்தான்டி நீ! இவ்ளோ சின்ன வயசுல உனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினையா?" என்று அப்பாவியாகக் கூறி உச்சுக்கொட்டினாள். அவள் கிண்டல் செய்வதை அறிந்த தன்யாவோ,
"அடியே!! என்னடி! கிண்டலா?? எனக்கு ஒண்ணும் அது பெரிய விஷயமாலாம் தெரியல. எனக்கு அதனால எந்த ப்ராப்ளமும் இல்ல. சோ, நீ என்னயபத்தி கவலப்படத் தேவையில்லை செல்லம்!" என்று பதில் கூறி அவள் வாயடைக்க,
"சரி விடு! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட! அனு! உன் ஆபீஸ்ல...நிறைய பேரு இருப்பாங்களே..நீ எப்படியும் யாரையும் பாத்துருக்கமாட்ட! உன்னோட வேலை அப்டி. ஆனா, உன்னய யாராச்சும் பாத்துருப்பாங்களே..!! அது யாருனு சொல்லு! கேப்போம்" என்று ரம்யா கேட்டிட, அனுயாவுக்குப் புரையேறியது. தலையைத் தட்டிவிட்டு சரண்யா தண்ணீர் கொடுக்க, அமைதியாக அதை வாங்கிக் குடித்தாள்.
"கேட்டதும் புரயேறுது!! அப்ப கண்பாஃர்மா யாரோ இருக்காங்க! சீக்கிரம் சொல்லுடி யாருன்னு!" என்று ரம்யா அவளை வாட்டி எடுக்க, மற்றவர்களும் காவ்யா உள்பட அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.
அனுயா அவர்கள் பார்ப்பதைப் பார்த்து தயங்கி கீழே குனிந்துகொண்டே,
"ஒருத்தர் இருக்காரு! ஆனா...அவரு என்மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கரானு தெரியல...ஆனா என்னய பாக்குறமாறிதான் இருக்கு...அவரும் இதுவரைக்கும் எதுவும் டைரக்டா எதையும் காட்டிக்கல...நானும் கேட்டுக்கல...ஆனா, எனக்கு தெரிஞ்சு என்னய பாக்குற ஆளுனா அது அவரு.. ஒருத்தர்தான்" என்று தயங்கி வெட்கிக்கொண்டே கூறுவதைப் பார்த்த நால்வருக்கும் தலை சுற்றாத குறையாகிப் போனது.
"ஹே..நல்லாப் பாருங்கடி! இது நம்ம அனுதானாடி?!" என்று தன்யா அதிர்ச்சியில் கூறிட,
"ஆமாடி! அனு மாறிதான் இருக்கு. ஒருவேள..கனவா இருக்குமோ..!!?"என்று சரண்யா கேட்டிட, அவள் கையில் ரம்யா நறுக்கென்று கிள்ளிவைக்க, சரண்யா ஆஆஆஆஆ என்று கத்தினாள்.
"கனவில்லடி இது. நிஜந்தான்!" என்று ரம்யா அப்பாவியாகக் கூறிட, அவளைக் குனிய வைத்து முதுகிலே அடிபோட்ட சரண்யா,
"அத உன்னய கிள்ளி செக் பண்ணவேண்டிதானடி? பன்னி!!", என்றிட, "வலிக்குமே.." என்று கூறி, அடி தாங்காமல் முதுகைத் தேய்த்துக் கொண்டாள். "இப்ப மட்டும் இனிக்குதா நல்லா!?" என்று கூறி பழிப்புக் காட்டினாள், சரண்யா.
இவர்களின் கூத்தைப் பார்த்துச் சிரித்த அனுயாவிடம் திரும்பியவர்கள்,
"பாத்தியாடி இவள!! இத்தன நாளும் நம்மகிட்ட சொல்லாம மறச்சிருக்கா!!" என்று சரண்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,
"அப்டிலாம் இல்லடி! எனக்கே ஆபிஸ் போனதுக்கப்றம், இப்ப கொஞ்ச நாளாதான் தெரியும். அதுவும் வெறும் சைட் அடிக்கிறத எப்டிடி சொல்ல சொல்ற?! ஒருவேள லவ்னா உங்ககிட்ட சொல்லாம எங்க போகப்போறேன்!?" என்று கூறி சமாதானம் செய்திட,
"சரி! சரி!! மன்னிச்சிட்டோம்! அப்றம்! இந்த விஷயம் உனக்கு எப்டி தெரிஞ்சது??" என்று ஆர்வமாகக் கேட்டிட,
"எனக்கு என்னோட கொலீக்! நம்ம வீட்டோட ஓனர் இருக்காளே..அன்னைக்குக்கூட வந்தாளே கீதா!...அவ சொல்லித்தான் டவுட் வந்துச்சு. அன்னைக்கு வந்தப்பவே 'உனக்கும் சாருக்கும் இடையில எதுவுமா?' னு கேட்டா, நான் இல்லனுதான் சொன்னேன். அப்றம், ஜாய்ன் பண்ணப்றம் நான் வந்தது தெரிஞ்சு என்னய கூப்டு விசாரிச்சாரு. நானும் எப்பவும் மாதிரினு நினச்சுட்டு விட்டுட்டேன். ஆனா, கொஞ்ச நாள் போகப்போக சார் அடிக்கடி ஆபீஸ் வர ஆரம்பிச்சாரு.." என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளை இடைமறித்தாள் சரண்யா.
"அப்போ உன்னய சைட் அடிக்கிறது உன்னோட பாஸா!!??" என்று கேட்டிட, அவளும் ஆம்! என்று தலையை ஆட்டினாள். அதைக் கண்ட தோழிகள் இன்னும் அதிர்ச்சியடைய,
"பார்றா!! அதான் அம்மணிக்கு வெட்கம்லாம் வந்துச்சோ..!!" என்று கேலி செய்திட,"அப்டிலாம் இல்லடி! பாஸ்ங்கிறதால ஒண்ணும் இல்ல. அவரு ரொம்ப நல்ல டைப்டி. அதான்! அவர தப்பா நினைக்கத் தோணல!" என்று உண்மையாய் கூறினாள்.
"அதான! இல்லைனா இவ இப்டி வெட்கப்படுற ஆளா?!!" என்று கிண்டல் செய்தனர். அனுயா கூற வர ரம்யா மீண்டும் இடைமறித்து,
"அவரோட ஆபீஸ்க்கு அவரு வர்ரதுல என்னடி பிரச்சினை? அதுல சந்தேகமா உனக்கு??" என்று கேட்க, அவளைப் பொய்யாக முறைத்த அனுயா,
"சொல்றத கேளுடி ஃபர்ஸ்ட்! அவரு அதிகமா ஆபீஸ்கு வரமாட்டாரு. ரொம்ப ரேர்தான். அவர மீட் பண்றதும் நாங்க ஒருசிலர் தான். அதான் அப்டி சொன்னேன். ஆனா, அவரு இப்ப கொஞ்ச நாளாதான் இப்டி வர்ராருனு என் கொலீக் கீதா சொன்னா. வந்தப்பலாம் என்னய கூப்டு எதாச்சும் வேல சம்பந்தமா டிஸ்கஸ் பண்ணுவாரு. ஆனா, பார்வை அடிக்கடி என்மேல வந்துட்டு போகும்...இதெல்லாம் வச்சுதான் சைட் அடிக்கிறாருனு நானும் கண்பாஃர்ம் பண்ணேன்டி.." என்று கூறி வெட்கப் புன்னைகை சிந்த,
"என்னனாலும் பண்ணுடி! ஆனா, வெக்கம் மட்டும் படாதடி! கருமத்த பாக்கமுடியல...!!" என்று சரண்யா கிண்டல்
செய்ய அவளைச் செல்லமாக அடித்தாள், அனுயா.
"அவள ஏன்டி அடிக்கிற? முன்னபின்ன இதெல்லாம் பாத்தாதான தெரியும்! இப்டி பொசுக்குன்னு பண்ணா நாங்க என்னனு ரியாக்ட் பண்றது?!" என்று ரம்யாவும் சேர்ந்து கேலி செய்ய, அனைவரும் சிரித்தனர்.
"ஆனா! அவரு பாக்குறத பாத்தா சைட் மாறி தெரியலயே! லவ்வே இருக்கும்போல!" என்றும் தன்யா கூறிட, மற்றவர்களும் ஆமோதித்தனர்.
"எதுவா இருந்தா நமக்கென்னடி! யாராச்சும் சைட் அடிப்பாங்களான்னு கேட்டீங்க! அதனால அது நியாபகம் வந்துச்சு. சொன்னேன். அவ்ளோதான்! அதுக்குமேல எந்த தாட்டும் எனக்கு இல்லடி. அதபத்தி நானும் பெருசா எதுவும் யோசிக்க விரும்பல" என்று சாதாரணமாகக்
கூறி முடித்தாள்.
"அப்ப நம்ம க்ரூப்ல ஃபர்ஸ்ட் நம்ம அனு கமிட்டாக வாய்ப்பிருக்குனு தோணுதுடி!" என்று சரண்யா கூறி மகிழ, அதைக்கேட்ட அனுயாவோ,
"அதான் அப்டிலாம் எதுவும் இல்லனு சொல்றேன்ல! அதுக்கப்றமும் என்ன அதபத்தியே பேசிகிட்டு. எனக்கு இந்த லவ் அண்ட் மேரேஜ்ல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல. புரியுதா?!ஒழுங்கா சாப்டுங்க!!" என்று சொல்லி அவர்களை அடக்கினாள்.
அதைக் கேட்ட காவ்யா மனம் வருந்தினாள். "அனுமா! எதுக்காக இப்டி பேசுற? லைஃப்ல லவ் அண்ட் மேரேஜ் இதுலாம் சகஜம். எல்லாருக்கும் வர்ரதுதான். உனக்கும் வந்தா அது நல்லதா இருந்தா அக்செப்ட் பண்றதுல எதுவும் தப்பில்லையே!! எதுக்காக அத அவாய்ட் பண்ண பாக்குற?" என்று கவலையாக கேட்டிட,
"அவாய்ட்லாம் பண்ணலடா. இன்ட்ரஸ்ட் இல்ல. அவ்ளோதான்!" என்று கூறி சமாளிக்க, அதை நம்பாதவள்,
"இல்ல!! நீ பொய் சொல்ற! அவரப்பத்தி பேசும்போது உன் கண்ணுல அவ்ளோ சந்தோசம் தெரிஞ்சது! ஆனா லவ், கமிட்மண்ட்னு பேசுனா திட்டுற! அவரு உன்னய லவ் பண்ண மாட்டாருனு பயப்படுறியா? தேவையில்லாம ஃபீலிங்க்ஸ வளக்க வேணாம்னு நினக்குறியா, அனு? இல்ல...என்னய நினச்சு இப்டி சொன்னியா??" என்று காவ்யா கூறி அவளைக் கூர்மையாகப் பார்த்திட, அவள் கடைசி வரியில் அதிர்ச்சியடைந்தாள்.
என்ன சொல்லி உண்மையை மறைத்து அவளை சமாளிப்பது? என்று தெரியவில்லை அனுயாவுக்கு. நால்வரும் அனுயாவைப் பதிலுக்காக பார்த்துக் கொண்டிருக்க,
"ஹே! காவிமா!! நீ நினைக்கிற மாறிலாம் ஒண்ணும் இல்ல. அவரு நல்லவர்னுதான் சைட் அடிச்சாலும் ஒண்ணும் சொல்லல. தப்பான பார்வை பாத்ததில்ல. அவர்மேல எனக்கு நிறைய மரியாதை மட்டும்தான் இருக்கு. அவருக்கும் அதேதான். ஒருவேள அவரே லவ்வ வந்து சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு அவர்மேல இருக்கிற மரியாதையைத் தாண்டி அவர்மேல எனக்கு லவ் வந்துச்சுன்னா, நானே அவர்கிட்ட போய் சொல்லிடுவேன்டி. அதுலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. புரியுதா! லவ் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அது வந்தா நீ சொன்னமாறி அக்செப்ட் பண்ணிக்குறேன். ஓகேவா?!" என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி அவளைச் சமாளித்திட, அவளும் இவள் கூறியதை ஆமோதித்து அமைதியடைந்தாள்.
"அப்ப நீ இப்போதைக்கு கமிட்டாகுற மாறி தெரியல! பேசாம ரம்யா! நீதான்டி கமிட்டாகணும்!" என்று நிலைமையை சகஜமாக்க சரண்யா கேலி செய்திட,
"அடப்போடி!! எங்க ஆபிஸ்ல எல்லாமே மொக்க பீசுடி!" என்று சளித்துக்கொள்ள,
"என்னடி! இப்படி சொல்ற? நீ ஐடில தானடி வர்க் பண்ற! அங்கயா மொக்கனு சொல்ற?!" என்று தன்யா கிண்டல் செய்ய,
"அடியே!! ஐடில பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருப்பாங்கடி. ஆனா, பசங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருக்காங்களா!? எதுக்கு நீங்களா கற்பனை பண்ணி என் வயித்தெரிச்சல கொட்டிங்குறீங்க..?!! அதுவும் எங்க கம்பெனில எல்லாம் மொக்க. அழகா இருந்தா அறிவு இருக்காது..அறிவா இருந்தா அழகு இருக்காது...இங்க சைட்டுக்கே வாய்ப்பில்லயாம். இதுல கமிட்மெண்ட் பத்தி பேசி கடுப்படிக்கிறாக இவளுக!!" என்று பொறிந்து தள்ளினாள்.
இதைக் கேட்டவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட, அவர்களுடன் சேர்ந்து ரம்யாவும் சிரித்துவிட்டாள். இவர்களின் சிரிப்பைக் கண்ட காவ்யாவுக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டாள். அதைக் கண்ட ரம்யாவும் சரண்யாவும் தங்கள் திட்டம் வென்றதை எண்ணி கட்டைவிரல் தூக்கிக் காட்டி கண்ணடித்துக் கொண்டனர்.
இறுக்கமான சூழ்நிலைகளில் இவர்கள் குறும்பு செய்து நிலைமையை சகஜமாக்குவது வழக்கம். இன்றும் அதைப்போலவே செய்ய, காவ்யாவும் சிரித்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தனர். ஆனால், இதுவே இவளது கடைசி சிரிப்பாக இருக்கப்போவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை...! இவர்களிடம் தற்சமயம் தோன்றியிருக்கும் மகிழ்ச்சியும் பறிபோகும் நாளும் நெருங்கியது...
❤வருவாள்❤...
கதையை படிச்சு தொடர்நது ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நட்புக்களே!!
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நட்புக்களே...
- தமிழுக்கினியாள்
Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
காவ்யா வேலைக்கு வந்து ஒருமாதம் ஆகியிருக்க, அவர்களின் ப்ராஜெக்டும் முடிவடையும் தருவாயில் இருந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்திருந்தனர், காவ்யா மற்றும் குழுவினர். நாளை ப்ராஜெக்டை ஒப்படைக்கும் நாள் என்பதால் அதைப்பற்றி ஒருமுறை மீட்டிங் வைத்து ப்ரசென்டேஷன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். காவ்யாவையே அதைத் தரச் சொல்லி அவள் குழுவினர்கள் மொழிய, அவளுக்கு மேல் பொறுப்பில் இருப்பவரும் அவளையே செய்யச் சொல்லி வழிமொழிந்தார்.
"யூ டிசெர்வ் இட், மிஸ். காவ்யா. உங்களாலதான் இந்த ப்ராஜெக்ட் இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ பர்ஃபெக்டா முடிஞ்சிருக்கு. சோ, நீங்கதான் இந்த ப்ரசென்டேஷனையும் பண்ணணும். நீங்க நல்லபடியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன். ஆல் த பெஸ்ட்! சீ யு இன் தி மார்னிங்!" என்று அவர் அவ்வளவு சொல்லியதால் இவளால் மறுக்கமுடியவில்லை.
இவளால் நன்றாக செய்து முடிக்க முடியுமா? என்ற பயமும் பதட்டமும் அவளுக்குள் தோன்றியது. எதற்கும் அஞ்சாதவளாக இருந்தபோது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால், இன்று நிலைமை வேறு. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தவே பல நாட்கள் எடுத்துக்கொண்டிருக்க, இதற்கு எப்படி ஒரே நாளில் தயாராவது என்ற பல எண்ணங்களில் சிக்கித் தவித்தப்படியே வீட்டை அடைந்தாள்.
வீட்டிற்குள் இவள் நுழையும்போது மற்றவர்களும் வந்திருக்க, இவளின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைக் கவனித்தத் தோழிகள் என்னவென்று விசாரித்தனர். இவளும் அதைப்பற்றிக் கூறிட,
"அட! இவளோதானாக்கும்!! இதுக்குத்தான் நீ இப்படி மூஞ்ச தொங்கபோட்டுகிட்டு வந்தியா?" என்று சரண்யா எப்போதும்போல அவளை சீண்ட,
"ஒரே நைட்ல எப்டி ப்ரிப்பேர் பண்றதுனு தான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. நாளைக்கு சொதப்பிடக் கூடாதுல.." என்று தயங்கி கூறியதைக் கேட்டவர்கள், ஏதோ தன்முன் நிற்பது காவ்யா அல்ல! அவளது மாறுவேடம்! என்பதைப் போல் பார்த்தனர்.
"நீயாடி இப்டி பேசுறது?!! எங்க கண்ணையே நம்பமுடியல!" என்று தன்யா வியந்து கூறிட, காவ்யா அப்பாவியாகப் பார்த்தாள்.
"பின்ன என்னடி!! நீயெல்லாம் என்னைக்கு ப்ரசென்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணியிருக்க?! ஓவர் நைட்ல ரெடி பண்ணி சாதாரணமா பேசி கலக்கிட்டு வருவ!" என்று ரம்யாவும் கூறிட,
"ஆமா! ப்ராஜெக்ட்ல நீ பண்ணதுதான் மேஜரா இருக்கும். அப்போ மொத்த ப்ரசென்டேஷனும் உனக்குத்தான் ஃபிங்கர் டிப்ல இருக்குமேடி. இப்பவும் அப்படித்தான? நீ செஞ்சததான அங்க சொல்லப்போற!?" என்று சரண்யா கேட்டிட, காவ்யா ஆம்! என்று தலையாட்டினாள்.
"அப்றம் என்ன? நீ தைரியமா பண்ணு. நல்லாதான் பண்ணுவ. ஓகேவா! நாங்களும் உன்கூடயே இருந்து தேவைனா ஹெல்ப் பண்றோம்" என்று அனுயா சமாதானமாகக் கூறிட, அவளை தன்யா இடைமறித்தாள்.
"அனு! ஒண்ண மறந்துட்ட! அவளுக்கு யாரும் ஹெல்ப் பண்றது பிடிக்காது. முக்கியமா வர்க்ல. அவளே பண்ணணும்னு நினப்பா. மறந்துட்டியா?" என்று கேட்டிட, தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடித்து, தலையில் தட்டிக்கொண்டாள், அனுயா. அதைப் பார்த்த காவ்யா அவள் கைகளை எடுத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள். மறுபடியும் ஐவரும் அணைத்துக்கொள்ள அங்கே சிறிய சந்தோசம் எட்டிப் பார்த்தது.
இரவு உணவை உண்ணும்போது வழக்கம்போல் அலுவலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே அருந்தினர்.
"அப்றம்! ரம்மி!! உன் ஆபிஸ்ல புதுசா யாராச்சும் ஜாய்ன் பண்ணாங்களா? வர்க் எப்டி போகுதுடி?" என்று சரண்யா அவளிடம் கேட்க,
"ஆனா, உன்னயமாறி யாரும் கேட்கமாட்டாங்கடி! வர்க்க பத்தி முதல்ல கேட்காம புது ஜாய்னி பத்தி கேட்கிறா!!" என்று அவளை ரம்யா வாற, அசடு வழிந்தவள்,
"பின்ன! எனக்கு எது தேவையோ! அதத்தானடி முதல்ல கேக்க முடியும்! அவ வர்க்க பத்தி கேட்டு நான் என்னடி செய்யப்போறேன்?!" என்று பதிலடைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
"அடியே!! அதுசரி!! அப்ப! புதுசா யாரு ஜாய்ன் பண்ணாங்கிறதுதான் உனக்கு தேவையானதா?" என்று தன்யா கேட்டிட,
"அஃப்கோர்ஸ்டி!! இதுல என்ன சந்தேகம்? பின்ன எப்ப பாத்தாலும் வேல வேலன்னு பேசுனா பைத்தியம் புடிச்சிடும். அப்பப்ப இப்டியும் பேசிக்கணும்டி" என்று சரண்யா கூற,
"நீ அப்பப்பயா கேக்க? எப்பவுமே இதத்தானடி கேக்குற! உன் ஆபிஸ்ல யாரும் வரலயாடி?" என்று தன்யா அவளை வாறிவிட்டு கேட்க,
"அது என்னமோடி! நம்ம சமைக்கிற சாப்பாடு நமக்கு எப்டி பிடிக்கிறதில்லயோ! அதுமாதிரி நம்ம ஆபீஸ் பசங்களையும் எனக்கு பிடிக்கிறதில்லடி" என்று சரண்யா சலித்துக்கொள்வதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட,
"லூசு பக்கி! எக்ஸாம்பிளா எதுக்கு எத கம்பேர் பண்றா பாரு!!" என்று அனுயா கூறி சிரித்திட,
"நமக்கு சோறுதான் முக்கியம்! கண்ண மூடுனாலே கனவுலயும் நீதான! மாதிரி, சோறுதான் எப்பவும் எங்களுக்கு! என்னடி சரு!" என்று ரம்யாவும் ஆதரவாகப் பேசி சரண்யாவைப் பார்க்க, இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டனர்.
"இதுங்கள திருத்தவே முடியாது!" என்று தன்யா சலித்துக்கொள்ள,
"இப்ப திருந்தி என்னாகப்போறோமா?!! வாழ்க்கைய என்ஜாய் பண்ணுடி! எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருக்காத! இப்படி இருக்க உன்னய பாக்க வர்ற குழந்தைங்கல்லாம் என்னாகுமோ! பாவம்டி அதுங்க!!" என்று சரண்யா தன்யாவைக் கிண்டல் செய்ய, அவளோ பொய்யாக முறைத்தாள்.
"சரி! கூல்...தனு! உன் ஹாஸ்பிட்டல்லலாம் யாரும் பாக்கிற மாறி இருப்பாங்களாடி?!" என்று ரம்யா வினவ,
"அட்போடி! நான் என்ன டாக்டரா இருக்கேன்! ஐம் அ பீடியாட்ரிஷியன். என்கிட்ட குழந்தைங்க தாண்டி வருவாங்க. அவங்ககூட அவங்க அப்பா அம்மா வருவாங்க. இவங்கள பாக்கவே எனக்கு டைம் சரியா இருக்கும். இதுல எங்க நான் மத்த டிபார்ட்மென்ட்கு போறது! பாக்குறது!" என்று சொல்வதைக் கேட்ட ரம்யா,
"அச்சோ! ரொம்ப பாவம்தான்டி நீ! இவ்ளோ சின்ன வயசுல உனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினையா?" என்று அப்பாவியாகக் கூறி உச்சுக்கொட்டினாள். அவள் கிண்டல் செய்வதை அறிந்த தன்யாவோ,
"அடியே!! என்னடி! கிண்டலா?? எனக்கு ஒண்ணும் அது பெரிய விஷயமாலாம் தெரியல. எனக்கு அதனால எந்த ப்ராப்ளமும் இல்ல. சோ, நீ என்னயபத்தி கவலப்படத் தேவையில்லை செல்லம்!" என்று பதில் கூறி அவள் வாயடைக்க,
"சரி விடு! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட! அனு! உன் ஆபீஸ்ல...நிறைய பேரு இருப்பாங்களே..நீ எப்படியும் யாரையும் பாத்துருக்கமாட்ட! உன்னோட வேலை அப்டி. ஆனா, உன்னய யாராச்சும் பாத்துருப்பாங்களே..!! அது யாருனு சொல்லு! கேப்போம்" என்று ரம்யா கேட்டிட, அனுயாவுக்குப் புரையேறியது. தலையைத் தட்டிவிட்டு சரண்யா தண்ணீர் கொடுக்க, அமைதியாக அதை வாங்கிக் குடித்தாள்.
"கேட்டதும் புரயேறுது!! அப்ப கண்பாஃர்மா யாரோ இருக்காங்க! சீக்கிரம் சொல்லுடி யாருன்னு!" என்று ரம்யா அவளை வாட்டி எடுக்க, மற்றவர்களும் காவ்யா உள்பட அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.
அனுயா அவர்கள் பார்ப்பதைப் பார்த்து தயங்கி கீழே குனிந்துகொண்டே,
"ஒருத்தர் இருக்காரு! ஆனா...அவரு என்மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கரானு தெரியல...ஆனா என்னய பாக்குறமாறிதான் இருக்கு...அவரும் இதுவரைக்கும் எதுவும் டைரக்டா எதையும் காட்டிக்கல...நானும் கேட்டுக்கல...ஆனா, எனக்கு தெரிஞ்சு என்னய பாக்குற ஆளுனா அது அவரு.. ஒருத்தர்தான்" என்று தயங்கி வெட்கிக்கொண்டே கூறுவதைப் பார்த்த நால்வருக்கும் தலை சுற்றாத குறையாகிப் போனது.
"ஹே..நல்லாப் பாருங்கடி! இது நம்ம அனுதானாடி?!" என்று தன்யா அதிர்ச்சியில் கூறிட,
"ஆமாடி! அனு மாறிதான் இருக்கு. ஒருவேள..கனவா இருக்குமோ..!!?"என்று சரண்யா கேட்டிட, அவள் கையில் ரம்யா நறுக்கென்று கிள்ளிவைக்க, சரண்யா ஆஆஆஆஆ என்று கத்தினாள்.
"கனவில்லடி இது. நிஜந்தான்!" என்று ரம்யா அப்பாவியாகக் கூறிட, அவளைக் குனிய வைத்து முதுகிலே அடிபோட்ட சரண்யா,
"அத உன்னய கிள்ளி செக் பண்ணவேண்டிதானடி? பன்னி!!", என்றிட, "வலிக்குமே.." என்று கூறி, அடி தாங்காமல் முதுகைத் தேய்த்துக் கொண்டாள். "இப்ப மட்டும் இனிக்குதா நல்லா!?" என்று கூறி பழிப்புக் காட்டினாள், சரண்யா.
இவர்களின் கூத்தைப் பார்த்துச் சிரித்த அனுயாவிடம் திரும்பியவர்கள்,
"பாத்தியாடி இவள!! இத்தன நாளும் நம்மகிட்ட சொல்லாம மறச்சிருக்கா!!" என்று சரண்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,
"அப்டிலாம் இல்லடி! எனக்கே ஆபிஸ் போனதுக்கப்றம், இப்ப கொஞ்ச நாளாதான் தெரியும். அதுவும் வெறும் சைட் அடிக்கிறத எப்டிடி சொல்ல சொல்ற?! ஒருவேள லவ்னா உங்ககிட்ட சொல்லாம எங்க போகப்போறேன்!?" என்று கூறி சமாதானம் செய்திட,
"சரி! சரி!! மன்னிச்சிட்டோம்! அப்றம்! இந்த விஷயம் உனக்கு எப்டி தெரிஞ்சது??" என்று ஆர்வமாகக் கேட்டிட,
"எனக்கு என்னோட கொலீக்! நம்ம வீட்டோட ஓனர் இருக்காளே..அன்னைக்குக்கூட வந்தாளே கீதா!...அவ சொல்லித்தான் டவுட் வந்துச்சு. அன்னைக்கு வந்தப்பவே 'உனக்கும் சாருக்கும் இடையில எதுவுமா?' னு கேட்டா, நான் இல்லனுதான் சொன்னேன். அப்றம், ஜாய்ன் பண்ணப்றம் நான் வந்தது தெரிஞ்சு என்னய கூப்டு விசாரிச்சாரு. நானும் எப்பவும் மாதிரினு நினச்சுட்டு விட்டுட்டேன். ஆனா, கொஞ்ச நாள் போகப்போக சார் அடிக்கடி ஆபீஸ் வர ஆரம்பிச்சாரு.." என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளை இடைமறித்தாள் சரண்யா.
"அப்போ உன்னய சைட் அடிக்கிறது உன்னோட பாஸா!!??" என்று கேட்டிட, அவளும் ஆம்! என்று தலையை ஆட்டினாள். அதைக் கண்ட தோழிகள் இன்னும் அதிர்ச்சியடைய,
"பார்றா!! அதான் அம்மணிக்கு வெட்கம்லாம் வந்துச்சோ..!!" என்று கேலி செய்திட,"அப்டிலாம் இல்லடி! பாஸ்ங்கிறதால ஒண்ணும் இல்ல. அவரு ரொம்ப நல்ல டைப்டி. அதான்! அவர தப்பா நினைக்கத் தோணல!" என்று உண்மையாய் கூறினாள்.
"அதான! இல்லைனா இவ இப்டி வெட்கப்படுற ஆளா?!!" என்று கிண்டல் செய்தனர். அனுயா கூற வர ரம்யா மீண்டும் இடைமறித்து,
"அவரோட ஆபீஸ்க்கு அவரு வர்ரதுல என்னடி பிரச்சினை? அதுல சந்தேகமா உனக்கு??" என்று கேட்க, அவளைப் பொய்யாக முறைத்த அனுயா,
"சொல்றத கேளுடி ஃபர்ஸ்ட்! அவரு அதிகமா ஆபீஸ்கு வரமாட்டாரு. ரொம்ப ரேர்தான். அவர மீட் பண்றதும் நாங்க ஒருசிலர் தான். அதான் அப்டி சொன்னேன். ஆனா, அவரு இப்ப கொஞ்ச நாளாதான் இப்டி வர்ராருனு என் கொலீக் கீதா சொன்னா. வந்தப்பலாம் என்னய கூப்டு எதாச்சும் வேல சம்பந்தமா டிஸ்கஸ் பண்ணுவாரு. ஆனா, பார்வை அடிக்கடி என்மேல வந்துட்டு போகும்...இதெல்லாம் வச்சுதான் சைட் அடிக்கிறாருனு நானும் கண்பாஃர்ம் பண்ணேன்டி.." என்று கூறி வெட்கப் புன்னைகை சிந்த,
"என்னனாலும் பண்ணுடி! ஆனா, வெக்கம் மட்டும் படாதடி! கருமத்த பாக்கமுடியல...!!" என்று சரண்யா கிண்டல்
செய்ய அவளைச் செல்லமாக அடித்தாள், அனுயா.
"அவள ஏன்டி அடிக்கிற? முன்னபின்ன இதெல்லாம் பாத்தாதான தெரியும்! இப்டி பொசுக்குன்னு பண்ணா நாங்க என்னனு ரியாக்ட் பண்றது?!" என்று ரம்யாவும் சேர்ந்து கேலி செய்ய, அனைவரும் சிரித்தனர்.
"ஆனா! அவரு பாக்குறத பாத்தா சைட் மாறி தெரியலயே! லவ்வே இருக்கும்போல!" என்றும் தன்யா கூறிட, மற்றவர்களும் ஆமோதித்தனர்.
"எதுவா இருந்தா நமக்கென்னடி! யாராச்சும் சைட் அடிப்பாங்களான்னு கேட்டீங்க! அதனால அது நியாபகம் வந்துச்சு. சொன்னேன். அவ்ளோதான்! அதுக்குமேல எந்த தாட்டும் எனக்கு இல்லடி. அதபத்தி நானும் பெருசா எதுவும் யோசிக்க விரும்பல" என்று சாதாரணமாகக்
கூறி முடித்தாள்.
"அப்ப நம்ம க்ரூப்ல ஃபர்ஸ்ட் நம்ம அனு கமிட்டாக வாய்ப்பிருக்குனு தோணுதுடி!" என்று சரண்யா கூறி மகிழ, அதைக்கேட்ட அனுயாவோ,
"அதான் அப்டிலாம் எதுவும் இல்லனு சொல்றேன்ல! அதுக்கப்றமும் என்ன அதபத்தியே பேசிகிட்டு. எனக்கு இந்த லவ் அண்ட் மேரேஜ்ல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல. புரியுதா?!ஒழுங்கா சாப்டுங்க!!" என்று சொல்லி அவர்களை அடக்கினாள்.
அதைக் கேட்ட காவ்யா மனம் வருந்தினாள். "அனுமா! எதுக்காக இப்டி பேசுற? லைஃப்ல லவ் அண்ட் மேரேஜ் இதுலாம் சகஜம். எல்லாருக்கும் வர்ரதுதான். உனக்கும் வந்தா அது நல்லதா இருந்தா அக்செப்ட் பண்றதுல எதுவும் தப்பில்லையே!! எதுக்காக அத அவாய்ட் பண்ண பாக்குற?" என்று கவலையாக கேட்டிட,
"அவாய்ட்லாம் பண்ணலடா. இன்ட்ரஸ்ட் இல்ல. அவ்ளோதான்!" என்று கூறி சமாளிக்க, அதை நம்பாதவள்,
"இல்ல!! நீ பொய் சொல்ற! அவரப்பத்தி பேசும்போது உன் கண்ணுல அவ்ளோ சந்தோசம் தெரிஞ்சது! ஆனா லவ், கமிட்மண்ட்னு பேசுனா திட்டுற! அவரு உன்னய லவ் பண்ண மாட்டாருனு பயப்படுறியா? தேவையில்லாம ஃபீலிங்க்ஸ வளக்க வேணாம்னு நினக்குறியா, அனு? இல்ல...என்னய நினச்சு இப்டி சொன்னியா??" என்று காவ்யா கூறி அவளைக் கூர்மையாகப் பார்த்திட, அவள் கடைசி வரியில் அதிர்ச்சியடைந்தாள்.
என்ன சொல்லி உண்மையை மறைத்து அவளை சமாளிப்பது? என்று தெரியவில்லை அனுயாவுக்கு. நால்வரும் அனுயாவைப் பதிலுக்காக பார்த்துக் கொண்டிருக்க,
"ஹே! காவிமா!! நீ நினைக்கிற மாறிலாம் ஒண்ணும் இல்ல. அவரு நல்லவர்னுதான் சைட் அடிச்சாலும் ஒண்ணும் சொல்லல. தப்பான பார்வை பாத்ததில்ல. அவர்மேல எனக்கு நிறைய மரியாதை மட்டும்தான் இருக்கு. அவருக்கும் அதேதான். ஒருவேள அவரே லவ்வ வந்து சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு அவர்மேல இருக்கிற மரியாதையைத் தாண்டி அவர்மேல எனக்கு லவ் வந்துச்சுன்னா, நானே அவர்கிட்ட போய் சொல்லிடுவேன்டி. அதுலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. புரியுதா! லவ் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அது வந்தா நீ சொன்னமாறி அக்செப்ட் பண்ணிக்குறேன். ஓகேவா?!" என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி அவளைச் சமாளித்திட, அவளும் இவள் கூறியதை ஆமோதித்து அமைதியடைந்தாள்.
"அப்ப நீ இப்போதைக்கு கமிட்டாகுற மாறி தெரியல! பேசாம ரம்யா! நீதான்டி கமிட்டாகணும்!" என்று நிலைமையை சகஜமாக்க சரண்யா கேலி செய்திட,
"அடப்போடி!! எங்க ஆபிஸ்ல எல்லாமே மொக்க பீசுடி!" என்று சளித்துக்கொள்ள,
"என்னடி! இப்படி சொல்ற? நீ ஐடில தானடி வர்க் பண்ற! அங்கயா மொக்கனு சொல்ற?!" என்று தன்யா கிண்டல் செய்ய,
"அடியே!! ஐடில பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருப்பாங்கடி. ஆனா, பசங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருக்காங்களா!? எதுக்கு நீங்களா கற்பனை பண்ணி என் வயித்தெரிச்சல கொட்டிங்குறீங்க..?!! அதுவும் எங்க கம்பெனில எல்லாம் மொக்க. அழகா இருந்தா அறிவு இருக்காது..அறிவா இருந்தா அழகு இருக்காது...இங்க சைட்டுக்கே வாய்ப்பில்லயாம். இதுல கமிட்மெண்ட் பத்தி பேசி கடுப்படிக்கிறாக இவளுக!!" என்று பொறிந்து தள்ளினாள்.
இதைக் கேட்டவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட, அவர்களுடன் சேர்ந்து ரம்யாவும் சிரித்துவிட்டாள். இவர்களின் சிரிப்பைக் கண்ட காவ்யாவுக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டாள். அதைக் கண்ட ரம்யாவும் சரண்யாவும் தங்கள் திட்டம் வென்றதை எண்ணி கட்டைவிரல் தூக்கிக் காட்டி கண்ணடித்துக் கொண்டனர்.
இறுக்கமான சூழ்நிலைகளில் இவர்கள் குறும்பு செய்து நிலைமையை சகஜமாக்குவது வழக்கம். இன்றும் அதைப்போலவே செய்ய, காவ்யாவும் சிரித்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தனர். ஆனால், இதுவே இவளது கடைசி சிரிப்பாக இருக்கப்போவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை...! இவர்களிடம் தற்சமயம் தோன்றியிருக்கும் மகிழ்ச்சியும் பறிபோகும் நாளும் நெருங்கியது...
❤வருவாள்❤...
கதையை படிச்சு தொடர்நது ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நட்புக்களே!!
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நட்புக்களே...
- தமிழுக்கினியாள்
Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/