Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 18


"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாது. இதுல என்னோட தப்பும் இருக்கு. நான் அன்னைக்கு கோபத்துல எதையும் யோசிக்காம அப்டி பண்ணதுக்குதான் எனக்கு தண்டனை கிடைச்சிருக்கு. ஆனா, என்னோட விதி, இந்தளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திடுச்சு" என்று விரக்தியாகக் கூறியவளை வேதனையுடன் பார்த்த கமலாம்மா,

"அப்டிலாம் பேசாதம்மா. எந்த நிலைமையும் ஒருநாள் நிச்சயமா மாறும். உன் வாழ்க்கைய கெடுத்தவரே உன்னய தேடிவந்து கல்யாணம் பண்ணிருக்காரு. பாத்தியா. விதி ஒன்ன பறிச்சா இன்னொன்ன கொடுக்கும்மா. கூடிய சீக்கிரமே உன் வாழ்க்கையும் நல்லபடியா மாறும். நீ மனச தளர விடாதமா" என்று ஆறுதலாய் கூறிட,

'அவன் என்னய கல்யாணம் பண்ணிகிட்டதே இன்னும் பழி வாங்கத்தான' என்று மனதில் எண்ணிக்கொண்டவள், "விடுங்கம்மா. இதுக்குமேல இதைபத்தி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல. எல்லாம் நடந்து முடிந்திடுச்சு. எதையும் மாத்த முடியாது" என்று கூறி முடித்திட, கமலாம்மாவும் அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியானார்.

"சரிம்மா. இந்த ரூம பாத்தாலே அந்தளவுக்குப் பயந்துருக்க. அப்றம் எதுக்குமா இங்கயே இருக்க ஒத்துகிட்ட? உன் ரூமுக்கே போயிடலாம்ல?" என்று தன் சந்தேகத்தை கேட்டார்.

"எத்தன நாளைக்கும்மா பயந்து ஓடுறது? என்னய பாத்தே நான் பயந்து ஓடுறேன். என்னயவே தொலைச்சுட்டேன்மா எப்பவோ...இப்பவும் தேடாம விட்டேன்னா அப்றம் எப்பவும் கிடைக்காம போயிடுவேன். எனக்காக இல்லாட்டியும் என் ஃப்ரண்ட்ஸ்காக நான் பழைய காவ்யாவா மாற முயற்சி பண்ணணும். அதுக்கு என் கசப்பான நினைவுகள நான் ஃபேஸ் பண்ணணும். அதனாலதான் இத்தனநாள் என் ஃபிரண்ட்ஸ் கேட்டும் சொல்லாத விசயத்த இன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன். இனி அத மாத்த முடியாது. அதனாலதான் அத ஏத்துக்க பழகிக்கிறேன். இந்த ரூம்லதான எல்லாம் ஆரம்பிச்சது. அதான் இங்கயே இருந்து மாறலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று காவ்யா கூறுவதை கேட்ட கமலாம்மாவுக்கு அன்றுதான் அவளது மன உறுதியும் தைரியமும் தெரிந்தது. அவரும் அவளை எண்ணி மெச்சிக்கொண்டார்.

அந்த அறையிலேயே தங்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல, பகலில் அவளது டிசைனிங் பணியில் மூழ்கிவிடுவதால் அவளுக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும் இரவில் தூக்கத்தில் அலறுவது இன்னும் அதிகமானது. அவளது நிலை மோசமாவது தெரிந்த ராணா அவளை வேறு அறைக்குச் செல்லச் சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை. அவள் அமைதியாகவே மறுத்து மௌனம் சாதிக்க, இவனுக்கு அவளிடம் கோபத்தை காட்டவும் முடியாமல் அவளை எப்படி அனுப்புவது என்றும் தெரியாமல் திணறித்தான் போனான்.

அன்று, பகலில் டிசைனிங் வேலையை முடித்தவள் உணவருந்த கமலாம்மாவிடம் சென்றாள். ராணாவும் அந்நேரம் வந்துவிட, காவ்யா சமையலறையில் நின்றுகொண்டாள். அறைக்குச் சென்று ரிஃப்ரஷ் ஆகிவிட்டு வந்து அமர, கமலாம்மா உணவு பரிமாறினார்.

"காவ்யாவ எங்க? ரூம்ல இருக்காளா? சாப்டாளா?" என்று கேட்டிட, ஒருநொடி அமைதி காத்தவர்,

"இல்லைங்க தம்பி. இன்னும் சாப்டல. அதுக்குத்தான் வந்தா..." என்று கூறி நிறுத்த, அதை கேள்வியுடன் பார்த்தவன்,

"இன்னும் சாப்டலையா என்ன? இவ்ளோநேரம் சாப்டாம இருக்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல உங்ககிட்ட. இதுதான் நீங்க பாத்துக்கற லட்சணமா?" என்று சற்று காட்டமாகப் பேசிவிட்ட பின்னே தன் தவறை உணர்ந்தான். பின், பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன்,

"நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னுதான உங்ககிட்ட சொல்லிட்டுப் போனேன். நீங்களே இப்டி இருந்தா எப்டி கமலாம்மா?" என்று பொறுமையாகக் கூறிட, அவரும் அமைதியாக நின்றவர்,

"மன்னிச்சிடுங்க தம்பி. இனிமேல் இப்டி தப்பு நடக்காது. கரெக்டா கொடுத்துடுறேன் தம்பி" என்று கூறிட, அதை கேட்டு ராணாவும் அமைதியானான். ஆனால், இதை உள்ளிருந்து கேட்ட காவ்யா மனம் வருந்திட, வெளியே வந்தாள்.

"கமலாம்மா மேல எந்த தப்பும் இல்ல. நான்தான் வர்க் முடிக்க டைம் ஆகும்னு அவங்க எவ்ளோ கூப்டும் வரலைன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க கம்பெல் பண்ணிட்டே இருந்தாங்க. அதனாலதான் நான் சீக்கிரம் முடிச்சிட்டு இப்ப வந்தேன். இல்லன்னா இன்னமும் நான் வரதுக்கு டைம் ஆகிருக்கும்" என்று தரையை பார்த்தபடியே கூறி முடித்திட, அவளை பார்த்திருந்த ராணா மூச்சை இழுத்துவிட்டவன்,

"இங்க பாரு" என்று சொல்ல, அசையாமல் நின்றவள், "என்னய பாருன்னு சொல்றேன்ல" என்று சற்று குரலை உயர்த்திக் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"நான் உனக்கு இந்த டிசைனிங் அரேஞ்ச்மெண்ட் பண்ணி தந்தது நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவன்னுதான். இப்டி அதுலயே இருந்து உடம்ப கெடுத்துக்க இல்ல. இனி இப்டி ஒரு தப்பு மறுபடியும் நடக்கக்கூடாது. புரியுதா?" என்று பொறுமையாகவும் அழுத்தமாகவும் கேட்டிட, காவ்யா அவனை நேருக்குநேர் பார்த்திருந்ததால் எதிர்த்துப் பேசும் திறனின்றி தலையை ஆட்டினாள்.

"வாய திறந்து சொன்னா முத்து விழுந்துடுமா என்ன?" என்று ராணா சற்று கடுப்பாகிட, சட்டென பதறியவள்,

"இனி..மேல்.. இப்டி.. நடக்காது.." என்று மெல்ல கூறியவள் அமைதியானாள்.

"சரி! வா! வந்து உட்காரு" என்று ராணா காவ்யாவை அழைத்திட, அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

"நீ இன்னும் சாப்டலைல. வந்து உக்காந்து சாப்டு முதல்ல. எவ்ளோ நேரம் இன்னும் சாப்டாம இருப்ப?" என்று கூறி அமரச் சொல்லிட, அவளுக்கு விருப்பமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அதை பார்த்துக் கடுப்பானவன்,

"ஒவ்வொரு தடவையும் நான் கோபமா சொன்னாதான் கேட்கணும்னு முடிவு பண்ணிருக்கியா? இல்ல அப்டி சொன்னாதான் உனக்குப் பிடிக்குமா?" என்று அவளை பார்த்துக் கேட்டிட, காவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக வந்து அமர்ந்தாள்.

கமலாம்மா உணவு பரிமாறிட, உணவில் கவனமே இல்லாமல் தட்டில் கோலமிட்டபடி குனிந்திருந்தாள். அவளை கமலாம்மாவும் பார்த்து, "காவ்யாமா! சாப்டுடா. சாப்பாடு பிடிக்கலையா? வேற எதுவும் வேணுமா?" என்று அன்பாகக் கேட்க, அவள் அதற்கு மறுப்பாகத் தலையை மட்டும் ஆட்டியவள், ராணாவை பார்த்தவள் அவரையும் பார்த்துவிட்டு குனிந்துகொண்டாள்.
கமலாம்மாவுக்கும் அவளது தயக்கம் புரிந்துவிட, செய்வதறியாது நின்றார்.

இவர்கள் பேச்சையும் செயலையும் சாப்பாட்டில் கவனம் இருப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் அமைதியை பார்த்தவன், "எதுக்கு இன்னும் சாப்டாம இருக்க?" என்று காவ்யாவிடம் கேட்டிட, அவள் அவனை பார்த்துவிட்டு மௌனம் காத்திட,

"ஒன்னுமில்ல தம்பி...! அவளுக்கு இந்த சாப்பாடு பிடிக்கலையாம். அதான் அவளுக்கு அப்றமா என்ன வேணும்னு கேட்டு செஞ்சு தந்துடுறேன். நீங்க சாப்டுங்க தம்பி" என்று கூறி கமலாம்மா சமாளிக்க,

"என்ன கமலாம்மா? அதுவரை சாப்டாம இருப்பாளா? அதுக்குத்தான நான் அப்பவே சொன்னேன். வரவர பொய்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? அவளுக்கு சாப்பாட்டுல பிரச்சினை இல்ல. அவளுக்கு என்ன பண்ணணுமோ அத பண்ணுங்க. நான் இருக்கேன்னு தயங்க வேணாம். இப்ப வயித்துல இருக்க குழந்ததான் முக்கியம்" என்று அவரை பார்த்துக் கூறிவிட்டு காவ்யாவை ஒருமுறை பார்த்துவிட்டு எழுந்து சென்றான்.

ராணா கூறியதன் அர்த்தம் கமலாம்மாவுக்குப் புரிந்துவிட, காவ்யா புரியாமல் இவரை பார்த்தாள். அதை பார்த்தவர்,

"உனக்கு ஊட்டிவிட சொல்லிட்டுப் போறாரு" என்று கூறிட, அதை வியப்பாகப் பார்த்த காவ்யா,

"அப்போ...நீங்க எனக்கு ஊட்டி விடுறது அவருக்குத் தெரியுமா என்ன?" என்று கேட்டிட, அதை பார்த்து லேசாகப் புன்னகைத்தவர்,

"தெரியும். அதுமட்டுமில்ல. நீ என்னய அம்மானு கூப்டுறது, நான் உன்னய வா போனு கூப்டுறது எல்லாமே அவருக்கு தெரிஞ்சிருக்கு. அதான் ஒருநாள், அவரே என்கிட்ட வந்து நான் அவர்கிட்ட உன்னய மரியாதையா பேசுறத பார்த்து சாதாரணமாவே உன்னய கூப்ட சொல்லிட்டாரு. அதோட, அவரையும் ஐயானு கூப்ட வேணானு சொல்லிட்டாரு" என்று கூறிட, காவ்யா அதை கேட்டு யோசனைக்குச் சென்றாள்.

அவளுக்கும் இவர் இவளை சாதாரணமாக அழைப்பது, அவனை தம்பி என்று அழைப்பது எல்லாம் நினைவு வர, புரிந்துகொண்டாள். காவ்யாவுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றினாலும் அதைப்பற்றி எதுவும் அதற்குமேல் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின், கமலாம்மா ஊட்டிவிட உணவருந்தியவள் மருந்தும் சாப்பிட்டு, சிறிதுநேரம் கழித்து அறைக்குச் சென்று அவள் வேலையை தொடர்ந்தாள்.

அன்று இரவு, வழக்கம்போல் காவ்யா தூங்குவதற்காக கமலாம்மாவை எதிர்பார்த்து அறையில் அவள் வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருந்தாள். நேரம் ஆகிக்கொண்டே போக, தானே சென்று அழைத்து வரலாம் என்று கிளம்பினாள். அறையின் வாசல் பக்கம் வருவதற்குள் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைந்ததில் ஒருநொடி பயத்தில் கத்திவிட்டாள்.
அந்நேரம் கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, அது கமலாம்மாதான் என்பதை அறிந்தவள், கதவு திறந்ததுமே காவ்யா வேகமாகச் சென்று கட்டிக்கொண்டாள்.

காவ்யா பயத்தில் முதலில் எதுவும் யோசிக்காமல் இறுக்கி அணைத்துக்கொள்ள, சிறிது பயம் நீங்கியவள், அதன் பின்னே அதிர்ந்து விலகினாள். காவ்யா விலகி வந்து நிமிர்ந்து பார்த்திட, எதிரில் நின்றவரின் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில் அப்போதுதான் பார்த்தாள், வந்தது ராணா என்பதை.

காவ்யாவை பார்க்க அறைக்கு ராணா வந்துகொண்டிருக்க, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவ்யாவின் பயத்தை அறிந்தவன், வேகமாகக் கதவை திறந்துகொண்டு வர, இவனை அவள் அணைத்திருந்தாள். இவனும் முதலில் அதிர்ந்தாலும் பின் அவள் பயத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அமைதியாக நின்றான். தன் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் ஒளியை ஒளிரச் செய்தான்.

காவ்யா இவனை பார்த்ததும் அதிர்ச்சியிலும் பயத்திலும் பின்னே சென்றாள். ஏற்கனவே அவள் அந்த பழைய நினைவுகளில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில் இத்தருணம் அவளுக்கு அந்நாளை தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்தது. கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்துக்கொண்டே பின்னே சென்றவள், சுவற்றில் முட்டி அப்டியே நின்றாள்.

காவ்யாவின் கண்களில் தெரிந்த பயத்தை அந்தச் சிறிய ஒளியிலும் அவனால் நன்கு உணர முடிந்தது. அவன் அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினான். இவளுக்குப் பயத்தில் அது எதுவும் காதில் விழவில்லை. அவனை பார்த்தபடியே அப்படியே கீழே சரிந்து அமர்ந்தாள். ராணா அவள் அமர்ந்ததை பார்த்து,

"என்னாச்சு? மயக்கமா இருக்கா? டயர்டா இருக்கா? இல்ல, வாமிட் எதுவும் வருதா?" என்று அவள் அருகில் வராமலேயே கேட்டான். அதை கேட்டவள் இல்லை என்றவாறு தலையை ஆட்டிட, அவனும் சற்று அமைதியானான். அவன் அங்கே மெத்தையில் அமர்ந்திருக்க, இவள் இங்கே தரையில் அமர்ந்திருக்க, நிமிடங்கள் யுகமாய் காட்சியளித்தது காவ்யாவுக்கு.

சிலநிமிடங்களில் விளக்குகள் அனைத்தும் ஒளிர ஆரம்பித்தன. அதில் நிம்மதியடைந்தவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். ராணாவும் எழுந்து வெளியே சென்றிட, இப்போது பயம் தீர்ந்தவள் மெல்ல எழுந்து அறையைவிட்டு கமலாம்மாவிடம் சென்றாள். கமலாம்மா சமையலறையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்ப எத்தனிக்க, இவளும் அவரிடம் சென்றாள்.

"கமலாம்மா, ஏன் இவ்ளோ நேரம்? நிறைய வேலை இருந்துச்சாம்மா? நான் உங்களுக்காக ரொம்ப நேரம் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், தெரியுமா?" என்று கூறியவள், ஒருநொடி அங்கே நடந்ததை நினைத்துப் பயந்தாள். அவள் கண்களில் தெரிந்த பயத்தையும் அவள் முகத்தில் துளிர்ந்திருந்த வியர்வைத் துளிகளையும் பார்த்தவர் பதறிப்போய்,

"என்னாச்சுமா? எதுக்கு பயந்தமாறி இருக்க? இவ்ளோ வேர்த்திருக்கு..." என்று படப்படப்பாக விசாரித்திட,

"கரண்ட் போச்சுல்ல...அதனாலதான் இப்டி வேர்த்திருக்கு. ரூம்ல தனியா இருந்தேன்ல. அதான் பயந்துட்டேன்" என்று கூறியதும் நினைவு வந்தவராய்,

"அட ஆமால்ல...மறந்தே போயிட்டேன். கரண்ட் கட்டானதுமே நான் அங்க வந்திருக்கணும். என் தப்புதான்" என்று தன்னை திட்டிக்கொண்டவர், அடுத்தநொடி,

"ஆனா..ராணா தம்பி அங்கதான வந்தாரு. உன்னய பாக்கணும்னு வந்தாரே. அவரு வரவே இல்லையாம்மா?" என்று யோசனையுடன் கேட்டிட, அதை கேட்டவள், இதழ்களை குவித்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவரை முறைப்புடன் பார்த்து மூச்சை இழுத்துவிட்டாள். அதை பார்த்தவர் என்ன என்று கேட்க,

"அவர பாத்துதான் நானே பயப்படுவேன். அவராலதான் எனக்கு இந்த நிலைமைனு தெரிஞ்சும் நீங்க இப்டி கேட்குறீங்க பாத்தீங்களா...உங்கள என்ன செய்யலாம்...?" என்று கூறியவள், அவரின் கழுத்தில் மெதுவாகக் கைகளை வைத்தவள் அவரை பிடித்து உலுக்கினாள். அவரும் அதன்பின்னே அது நினைவு வந்தவராய்,

"அச்சோ! ஆமால்ல...வரவர எனக்கு மறதி அதிகம் ஆயிடுச்சுபோல. தெரியாம கேட்டுட்டேன்மா. அம்மா பாவம்டா. விட்டுடுமா..." என்று கெஞ்சி கொஞ்சிப் பேசிட, அவளும் புன்னகையுடன் விடுவித்தாள். அவள் புன்னகையை பார்த்தவர், தானும் புன்னகைத்தவாறே அவள் தலையை கோதியவர்,

"எதுவும் ஆகலயேமா? நீ இவ்ளோ பயந்துருக்க. எதாச்சும் கோபமா நடந்துகிட்டாரா?" என்று வினவிட,

"இல்லம்மா. அவரு என் பக்கத்துலயே வரல. ஆனா...நான்தான் கரண்ட் கட்டானதும் நீங்கதான் வரீங்கன்னு நினச்சு... அவர.. கட்டிப்பிடிச்சுட்டேன். அப்றம் நீங்க இல்லனு தெரிஞ்சு விலகின அப்றம்தான் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்துல அவர பாத்தேன். ரொம்ப பயம் வந்துடுச்சு.... கொஞ்சநேரம் கழிச்சு கரண்டும் வந்திடுச்சு. அவரும் வெளிய போய்ட்டாரு. நானும் உங்களத் தேடி வந்துட்டேன்" என்று கூறி முடித்தாள்.

"கரண்ட் இன்னும் வரலைமா. நம்ம வீட்டு ஜெனரேட்டர போட்டு விட்டுருக்கு. எப்போதுமே அத போடமாட்டாங்க. வீட்ல அவரு மட்டும்தான. அதனால அவரோட ரூமுக்கு மட்டும் யுபிஎஸ்னால கரண்ட் இருக்கும் கரண்ட் போனாலும். அப்றம் கீழ உள்ள கிச்சன், ஹால், போர்ட்டிகோ. இந்தமாறி தேவையான இடத்துல கரண்ட் இருக்கும். மத்த ரூம்ஸ்குலாம் கரண்ட் வேணும்னா ஜெனரேட்டர் போட்டு விடணும். அதனாலதான் உன் ரூம்ல கரண்ட் போனதுகூட எனக்குத் தெரியல. அவருதான் ஜெனரேட்டர் போடச் சொல்லிருப்பாரு" என்று விளக்கமாகக் கூறினார்.

அதன்பின்னே, காவ்யாவும் அறையில் இருந்தபோது ராணா யாரையோ அழைத்து எதுவோ பேசியது நினைவுக்கு வந்தது. சற்றுநேரம் அமைதியானவள், அதன்பின் ஏதோ தோன்றியவளாய்,

"ஆமா..நீங்க என்ன ரொம்பத்தான் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க. அவருமேல அவ்ளோ நம்பிக்கையா? இல்ல, முதலாளினு விஸ்வாசமா?" என்று விளையாட்டாகக் கேட்பதுபோல் கேட்டாள். அவள் கேட்டதும் சிறிது புன்னகைத்தவர்,

"என் முதலாளினு விஸ்வாசம் இருக்குதான். ஆனா, அதுக்காக அவரு தப்பு பண்ணாலும் ஆதரிக்க மாட்டேன். உனக்கு அவரு பண்ண அநியாயம் தெரிஞ்சப்றம் அவருமேல வச்ச மரியாதை ரொம்ப குறைஞ்சிடுச்சு. ஆனா, அவரு இந்தமாறி பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கற ஆளு கிடையாதுன்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்துச்சு. அத காப்பாத்துற போலதான் உன்னய கல்யாணம் பண்ணதும் இப்ப கவனிச்சிக்கிறதும் எனக்குத் தெரியுதுமா" என்று அவர்பக்க விளக்கத்தை எடுத்துக்கூறிட, காவ்யா மௌனம் காத்தாள்.

"அவரு பண்ணது தப்பே இல்லன்னு சொல்லமாட்டேன். உன்னய அவர்கூட சேர்ந்து வாழுன்னும் சொல்லமாட்டேன்மா. அந்த உரிமையும் அதிகாரமும் எனக்குக் கிடையாது. ஆனா, ஒரு அம்மாவா உன் வாழ்க்கை நல்லபடியா மாறணும்னு நான் நினைக்கிறேன். அது இவராலயே மாறும்னாகூட எனக்கு ரொம்ப சந்தோசம்தான்மா. பிறக்கப்போற குழந்தை அத நடத்திக்காட்டும்னு நான் நம்புறேன்மா" என்று கூறியவர்,

"இதுலாம் நான் அவருக்கு ஆதரவா பேசுறேன்னு நினைக்காதமா. நான் என் கண்ணு முன்னாடி பார்த்தத வச்சுதான் சொன்னேன். இது விஸ்வாசம், நம்பிக்கைனு எதுலயும் வராது" என்று முடித்திட, கேட்டுக்கொண்டிருந்த காவ்யா இறுதி வாக்கியத்தில் குழப்பத்துடன் அவரை பார்த்தாள். அவள் குழப்பத்தை உணர்ந்தவர்,

"ஜெனரேட்டர் போட்டுவிட்டத சொன்னேன்மா. அவரு சொல்லாம இங்க எதுவும் நடக்காது. அதான் அவரு சொல்லிருப்பாருனு சொன்னேன்" என்று கூறி புன்னகைத்திட, அவளும் அதை கேட்டுப் புன்னகைத்தாள்.

ஏனோ..அன்று அவளுக்கு, 'தான் அவனை மிகவும் மோசமானவனாக நினைத்துவிட்டோமோ? நாம நினச்ச அளவுக்கு கீழ்த்தரமானவன் இவன் கிடையாதுனு அம்மா பேசுறத பாக்கும்போதே தெரியுது. ஆனா...அவன் என்கிட்ட பேசுனது, நடந்துகிட்டதலாம் வச்சு பாத்தா அவன மோசமானவனாதான் யோசிக்கத் தோணுது. ஒருவேள என்மேல உள்ள வெறுப்புலதான் இந்தளவுக்கு நடந்துக்கிறானா?' என்று யோசித்தவள்,

'இதுல என்ன சந்தேகம்? அவனுக்கு என்மேல உள்ள கோபம், வெறுப்புலதான இப்டி பழி வாங்கிட்டு இருக்கான். என்னைய கல்யாணம் பண்ணதுகூட பழி வாங்குறதுக்காகத்தான.. இது அம்மாக்குத் தெரிஞ்சா அவங்க நம்பிக்கை உடைஞ்சமாறி ஆயிடும். இன்னும் கவலப்படுவாங்க. அதனால இத சொல்லாம இருக்கிறதுதான் நல்லது. அவனோட கோபமும் வெறுப்பும் என்னோடயே முடியட்டும்' என்று முடிவெடுத்தாள்.

காவ்யா ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த கமலாம்மா, அவளை தொட்டு நிகழுலகிற்குக் கொண்டுவந்து, "என்னாச்சு?" என்று கேட்டிட, அவளும் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு,

"அம்மா! சீக்கிரம் வாங்க. தூங்கப் போகலாம். எனக்கு தூக்கம் வருது" என்று அழைத்திட, அந்நேரம் ராணாவும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். இவர்களிடம் வந்தவன்,

"கமலாம்மா! இனி நீங்க அங்க போகவேணாம். நான் இனி அங்கதான் தங்கப்போறேன். நீங்க கீழ் உள்ள ரூம்லயே படுத்துக்கோங்க" என்று கூறிட, காவ்யாவுக்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. அதிர்ச்சியில் விழி விரித்தவள் பேயறைந்ததுபோல் நின்றிட, அவளை பார்த்த ராணா அவள்முன் சொடுக்கிட, தன்னிலை பெற்றாள்.

"என்னாச்சு?" என்று கேட்டிட, அவள் அவனை பார்த்தவள், "கமலாம்மாவே வந்து.. தங்கட்டும்" என்று கீழே பார்த்தவாறு கூறிட, அதை கண்டு புன்னகைத்தவன் மறுநொடியே கடுமையாக,

"அதெல்லாம் வேணா. அவங்களால தனியா உன்னய சமாளிக்க முடியாது. இப்பலாம் நீ அதிகமாவே தூக்கத்தில் அலறுற. சோ, நான் வர்ரதுதான் கரெக்ட். அவங்க பகல்லயே உன்னய வச்சு சமாளிக்கிறது கஷ்டம். இதுல நைட்டுக்கும்னா அவங்க பாவம். அதனால நான் நைட்டுக்கு பாத்துக்குறேன். இல்லன்னா, நீ பழையபடி முன்னாடி இருந்த ரூமுக்கு ஷிப்ட் ஆயிடு. என்ன? ஓகேவா?" என்று புத்திசாலித்தனமாகக் கூறிட, காவ்யாவுக்கும் அவன் எண்ணம் புரிந்தது.

ஆனால், அவள் தனக்குள் எடுத்துக்கொண்ட முயற்சியை கைவிடும் மனமில்லை. ஆதலால், அந்த அறையைவிட்டுப் போக மறுத்தாள். அதற்காக இவனுடன் தங்க வேண்டிய நிலை வந்ததை எண்ணி சற்று பயந்தாலும் இதுவும் தன் பயத்தில் இருந்து தன்னை மாற்றும் வழியாக அமையும் என்று எண்ணியவள் அவனுடன் தங்க ஒப்புக்கொண்டாள்.

"ஓகே. நீங்க அங்கயே தங்கிக்கோங்க. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று கூறியவள், வேறெதுவும் பேசாமல் கமலாம்மாவையும் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அதை வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்த கமலாம்மாவை பார்த்த ராணா,

"ஓகே கமலாம்மா! நீங்க போய் தூங்குங்க. குட்நைட்" என்று கூறிவிட்டுக் கிளம்பினான். இவரும் அரை மனதாய் தூங்கச் சென்றுவிட்டார்.

அறைக்குள் வந்த காவ்யா, மெத்தையில் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, ராணா உள்ளே நுழைந்தான். வந்தவன் படுக்கையின் ஒருபுறத்தில் சென்று படுக்கத் தயாரானான். அவனை பார்த்து அதிர்ந்தவள், 'என்ன? இவன் இவ்ளோ சீக்கிரமா தூங்குறான்! பெட்ல படுத்துட்டானே..நம்ம எப்டி தூங்குறது?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவளை கவனித்த ராணா,

"என்ன? தூங்கலயா? வந்து தூங்கு. இதுவே லேட்டாயிடுச்சு. ரொம்ப நேரம் முழிச்சு இருக்கிறது குழந்தைக்கு நல்லது இல்ல" என்று கூறியவன் இவள் படுக்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் படுத்ததும் அவனும் படுத்தான். காவ்யா ராணாவுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள, அதை கண்டவனோ,

"காவ்யா! இந்த பக்கம் திரும்பிப் படு. உன்னயபத்தி நல்லா தெரியும். அந்தப்பக்கம் திரும்பிப் படுத்து தூங்காமலே இருக்கப்போறியா?" என்று சற்று காட்டமாகப் பேசுவதை கேட்டவள் இந்தப்புறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பது போல் படுத்திருக்க, இருவர் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன. காவ்யா அடுத்தநொடியே கண்களை கீழே கவிழ்த்துக்கொண்டாள்.

அதன்பின், அவள் கண்களைமூடி துயில்கொள்ள முயற்சிக்க, அவன் பக்கம் இருக்கும் பயத்தினால் தூக்கம் எட்டாக் கனியானது. அதை அவனும் உணர்ந்தாலும் அமைதியாகவே படுத்திருந்தான் இவளை பார்த்தபடியே. அவளும் வெகுநேரம் கண்மூடியே படுத்திருந்தவள் ஒருகட்டத்தில் அசதியில் தூங்கியும் விட்டாள். அவள் கண்முழி அசைவில்லாததை வைத்தே அவள் தூங்கியதை உறுதிபடுத்தியவன், அவனும் கண்மூடினான்.

நடுநிசிப் பொழுதில், காவ்யா வழக்கம்போல் தூக்கத்தில் புலம்பி அலறிட, அதைக் கேட்டு எழுந்த ராணா அவளிடம் வந்தவன்,

"ஒன்னுமில்ல. யாரும் உன்னய ஒன்னும் பண்ணமாட்டாங்க. எதுவும் இல்ல. ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்..!" என்று கூறியபடியே அவள் தலையை தடவிக்கொடுக்க, அவன் சொல்லிலும் செயலிலும் ஆறுதலை கண்டாளோ என்னவோ...அப்படியே அமைதியானாள். அலறுவதை நிறுத்தியவள் அப்படியே மீண்டும் துயிலுக்குச் சென்றாள். ராணாவும் அவன் நினைத்ததுபோல் அவளை அமைதிபடுத்தியதை எண்ணியவன்
மீண்டும் படுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை காவ்யா கண்விழித்துப் பார்த்திட, ராணா அருகில் படுத்திருந்தான். 'இன்னும் இவன் எழலலயா!' என்று மணியை பார்த்திட, அது அதிகாலை என்பதை அப்போதே அறிந்தாள். 'இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்டோமா? சரி! இனிமேல் தூங்கமுடியாது. இவன் பக்கத்துல தூக்கமும் வராது. பேசாம போய் ஃப்ரஷ் ஆயிட்டு வருவோம்' என்று எண்ணியவள், குளியலறைக்குச் சென்றாள்.

வெளியே வந்தவள் மெதுவாக அறையைவிட்டுச் சென்றாள். அப்போதே கமலாம்மாவும் எழுந்து வந்திருக்க, அவரிடம் சென்றவள்,

"குட் மார்னிங் கமலாம்மா!" என்று புன்னகையுடன் கூறியவளை மகிழ்ச்சியோடு பார்த்து, "குட் மார்னிங்டா காவ்யாமா. என்ன! இவ்ளோ சீக்கிரம் எழுந்திருக்க? சரியா தூங்குனியா இல்லையா?" என்று சற்று கவலையுடன் கேட்டிட,

"அப்டிலாம் ஒன்னும் இல்லம்மா. நான் நல்லாதான் தூங்குனேன். அவரு இருந்ததால எனக்கு கொஞ்சநேரம் தூக்கமே வரலதான். ஆனா, டயர்டா இருந்ததால தூங்கிட்டேன். அதுக்கப்றம் இப்பதான் எழுந்தேன். அப்றம்தான் தெரிஞ்சது சீக்கிரமா எழுந்துட்டேன்னு. அப்றம் தூக்கமும் வரல. அதான் இங்க வந்துட்டேன்" என்று கூறியவளை நிம்மதியோடு பார்த்தார், கமலாம்மா.

இருவரும் பேசிக்கொண்டே தேநீர் அருந்தியபிறகு கமலாம்மா சமையல் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, காவ்யாவும் குளித்துத் தயாராக அறைக்குச் சென்றாள். இன்னும் ராணா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துச் சலித்துக்கொண்டவள் குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்து முடித்த பின்னே அவள் உடைகளை எடுத்து வராதது நினைவிற்கு வர, தலையில் அடித்துக்கொண்டாள்.







❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 19


குளிக்கச் சென்ற காவ்யா எப்போதும் குளியலறைவிட்டு வெளியே வந்தே உடை மாற்றும் காரணத்தால் தன் உடைகளை எடுத்துச் செல்ல மறந்திருந்தாள். தன் தவறை எண்ணி தலையில் அடித்துக் கொண்டவள், என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். மெதுவாகக் கதவை திறந்து வெளியே எட்டிப் பார்த்திட, படுக்கையில் ராணா இல்லாததை பார்த்து அறையை சுற்றிப் பார்த்திட, அவன் இருக்கும் அரவம் இல்லாததால் சற்று நிம்மதியடைந்தவள், பூத்துவாலையை கட்டியவாறே வெளியே வந்தாள்.

அறையில் யாரும் இல்லாததை உறுதிபடுத்தியவள், தன் உடைகளை எடுத்துக்கொண்டு அணியத் தொடங்கினாள். சேலையை கட்டிக்கொண்டிருக்கும் சமயம் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான், ராணா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு காவ்யா வேகமாகக் குளியறைக்குள் செல்கையில் ராணாவும் உள்ளே வந்துவிட, பதட்டத்தில் கீழே கிடந்த தண்ணீரில் கால்வைத்து வழுக்கி விழப்போனாள்.

அவள் கத்திக்கொண்டே கீழே விழும்நேரம் ராணாவும் ஓடிவந்து சரியாக அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவளை தாங்கியவன், பின் நேராக நிற்கச் செய்திட, அப்போதே அவளின் நிலையை கண்டான். பாதி சேலையை கட்டியும் மீதியை மேலே சுத்திக் கொண்டவாறும் நின்றவளை பார்த்ததும்தான் அவனுக்கு தான் தவறான நேரத்தில் வந்திருக்கிறோம் என்பது புரிந்தது. இருந்தாலும் அவளின் அஜாக்கிரதையால் அங்கு நிகழ இருந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது அவள்மீது.

அந்தக் கோபத்தில் அவள் தோள்களை பற்றியவன், "என்ன நினச்சுட்டுருக்க நீ? இப்ப மட்டும் நான் பிடிக்கலன்னா என்ன ஆகிருக்கும்! உனக்கு இந்தக் குழந்தைமேல எந்த அக்கறையும் இல்லாம இருக்கலாம். ஆனா, இந்தக் குழந்தை எனக்கு ரொம்ப முக்கியம். அத மனசுல வச்சுக்க. நீ பாட்டுக்கு என்னவேணாலும் பண்ணணும்னு நினைக்காத.." என்று கூறி அவளை விடுவித்தான்.

காவ்யாவும் ஏற்கனவே கீழே விழப்போன பயத்தில் இருந்தவள், இவன் கோபமாகப் பேசியதையும் கேட்டு மிரண்டு போனாள். அவள் மனதில், 'தான் கீழே ஒருவேளை விழுந்திருந்தால்....' என்ற எண்ணம் ஓடிக்கொண்டேயிருக்க அவளுக்குத் தலை சுற்றியது. மயக்கம் வந்து கண்கள் சொருகிட எதிரே நின்ற ராணாவின்மீதே சாய்ந்தாள்.

அவனும் கோபத்தில் இருந்ததால் அவள் முகமாற்றத்தை கவனிக்கவில்லை. அவன்மீதே சாய்ந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன், "இவ ஒருத்தி... எதுக்கெடுத்தாலும் மயக்கம் போட்டுற்ரா...இவளும் ஒழுங்கா இருக்கமாட்டா. ஒன்னும் சொல்லவும் முடியல...ம்ம்ம்" என்று கோபத்தில் பொறுமினான்.

அதன்பின், அவளை தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தியதும் முகத்தில் தண்ணீர் தெளிக்க எண்ணியவன், அடுத்தநொடி அவள் பயப்படுவாள் என்பது நினைவுவர அதை செய்யாமல் விட்டுவிட்டான். இன்டர்காம் வழியாக கமலாம்மாவை அழைத்துவிட்டு அவர் வரும்வரை அங்கேயே இருந்தவன், அவர் வந்ததும் அவரிடம் அவளைப் பற்றி கூறிவிட்டு, எதற்காக அவ்வறைக்கு வந்தானோ அதை (அலைபேசி) எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

அதன்பிறகு, காவ்யா எழுந்ததும் அவளை கிளம்பச் சொல்லி, அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். ராணாவும் அதேநேரத்தில் தான் சாப்பிட, இருவரும் ஒன்றாக அமர்ந்தே சாப்பிட்டனர்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

நாட்கள் மெல்லமெல்ல அதன்போக்கில் நகர்ந்து சென்றிட, இவர்களின் வாழ்விலும் மாற்றங்கள் மெல்லமெல்ல நுழைந்தன. ஒரே அறையில் ராணாவும் காவ்யாவும் தங்கினாலும் இப்போதெல்லாம் காவ்யா அதிகமாக அவனைக் கண்டு பயப்படுவதில்லை. அவனும் இவளிடம் அதிகம் கோபம் காட்டுவதில்லை.

காவ்யாவை அந்த அறையைவிட்டுச் செல்லவைக்கவே ராணா அவளுடன் தங்கினான். ஆனால், அவள் அந்தத் திட்டத்தையும் வீணாக்கி அந்த அறையைவிட்டுச் செல்லாமல் அங்கேயே தங்கினாள். அவனும் இவளை மாற்ற நினைத்து முடியாமல் போனதால் அவளை சமாளிக்க அங்கேயே தங்கிக்கொண்டான். இதனால் அவள் பயம் சற்றுக் குறைய வாய்ப்பிருப்பதாய் எண்ணிக்கொண்டான். அவள் தூக்கத்தில் அலறினாலும் அவளை சமாளிக்கும் வழியை அவன் அறிந்திருந்தான்.

காவ்யாவின் வடிவமைப்புகள் அனைத்தையும் ராணா அவனது நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தான். அவளது வடிவமைப்புகள் எப்போதுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்குரிய சம்பளமாக காவ்யாவுக்கு ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி அதில் அவளுக்கானப் பணத்தையும் போட்டுவிட்டிருந்தான். அதை அவளிடமும் கூறி,

"இது உனக்கான மணி. நீ சம்பாதிச்சது. இத எப்ப வேணாலும் நீ எடுத்து யூஸ் பண்ணிக்கலாம். இந்தா ஏடிஎம் கார்ட், க்ரெடிட் கார்ட்" என்று நீட்டினான். அவளும் அதை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

காலம் யாருக்கும் நிற்காமல் ஓடி ஒருசில மாதங்கள் கடந்திருந்தது. இத்தனை மாதங்களில் காவ்யா முழுதாக மாறிடவில்லை என்றாலும் அவள் முன்னிருந்ததைப் போல இப்போது இல்லை. அவள் உடலும் மனதும் நன்றாகத் தேறிக்கொண்டிருந்தது. காவ்யாவின் மாற்றத்தை எண்ணி கமலாம்மாவும் மகிழ்ச்சியடைந்தார்.

"காவ்யா..! காவ்யா..!! எங்க இருக்க?" என்று ராணா வீட்டுக்குள் நுழைந்தபடி கேட்டுக்கொண்டு வந்தான். கமலாம்மா இவன் சத்தம் கேட்டு வெளியே வந்தவர், "தம்பி! அவ கீழ ரூம்ல இருக்கா" என்று கூறியதும் தலையசைத்தவன் கீழே உள்ள அவள்.. இல்லை அவர்கள் அறைக்குச் சென்றான்.

அறைக் கதவை தட்டிவிட்டு, "காவ்யா!" என்று அழைத்தான். உள்ளே இருந்து "ஹான். வாங்க" என்று பதில் குரல் கேட்டபின்னே உள்ளே நுழைந்தான். அன்று அவள் இவனால் பதறிப்போய் கீழே விழ நேர்ந்தபிறகு இதுவே இவர்கள் வழக்கமாகிப் போயிருந்தது.

அறைக்குள் வந்தவன் அவள் டிசைனிங் வேலையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்து, "ம்ச்..எப்போதும் இதே வேலைதானா உனக்கு? இப்படி தெரிஞ்சிருந்தா உனக்கு இந்த செட்டப் பண்ணி கொடுத்திருக்கவே மாட்டேன்" என்று சற்று எரிச்சலாகக் கூறிட, அவன் கூறியதை கேட்டு இவனிடம் திரும்பிய காவ்யா,

"சும்மாவே எவ்ளோநேரம் இருக்கமுடியும்? அதான் டிசைனிங் பண்ணேன். சாரி! இவ்ளோநேரம் ரெஸ்ட்தான் எடுத்தேன்" என்று அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள்.

ராணாவிடம் ஏற்பட்ட பயம் அவனாலேயே அவளுக்குக் குறைந்திருந்தது. அன்று அவனது கொடூர நடவடிக்கையால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இப்போது அவனது அமைதியான நடவடிக்கையால் குறைந்திருந்தது. எனினும், இது இவனது சுயரூபம் இல்லை என்பதையும் இது அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்காகத்தான் என்பதையும் குழந்தை பிறந்தபிறகு இவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதையும் அவள் நன்கு அறிந்திருந்தாள்.

ஆனால், அவனது தற்போதைய மாற்றம் அவளுக்கு நிகழ்ந்த கடந்தகால நினைவுகளில் இருந்து மீண்டுவரவே உதவியதே
தவிர அவளுக்கு அவன்மேல் உள்ள எண்ணம் மாறிடவில்லை. இதனால் அவள் இழந்த தைரியத்தை கொஞ்சம்கொஞ்சமாக அவள் பெற்றுக் கொண்டிருந்தாள். அதன் விளைவே அவனை நேருக்குநேர் பார்த்துப் பேசும் அளவிற்கு வந்திருக்கிறாள். ஆனால், அவன் கோபப் பார்வையையும் செயலையும் தாங்கும் சக்தியை இன்னும் பெற்றிடவில்லை அவள்.

காவ்யா தன்மையாகக் கூறியதை கேட்டதும் இவனும் எதுவும் சொல்லாமல், "சரி! நீ சீக்கிரம் கிளம்பு. நாம ஒரு இடத்துக்குப் போகணும். இதுல ட்ரெஸ் அண்ட் ஜுவெல்ஸ் இருக்கு. போட்டு ரெடியாகி வா. நானும் கிளம்பி வரேன்" என்று கூறி அவள் கையில் தான் கொண்டுவந்த பார்சலை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான். இவளுக்கு எங்கே? எதற்கு? என்ன? என்று ஒன்றும் புரியவில்லை.

"இவன் பாட்டுக்கு வந்தான். பேசினான். கொடுத்தான். போயிட்டான். என்ன ஏதுனு ஒரு வார்த்தைக்கூட சொல்லல. ஏன் வாய தொறந்து சொன்னா என்னவாம்? சரி! இவன் என்னய பொண்டாட்டியா நினச்சாதான சொல்லுவான். இவனுக்கும் எனக்கும் இடையில இருக்கிறது கோபமும் வெறுப்பும் மட்டும்தான. அப்றம் எப்டி என்கிட்ட சொல்வான்?" என்று பொறுமியவள்,

"ஆனா, என்கிட்ட இவன் எதுவும் சொல்லாதபோது நான் மட்டும் எதுக்கு அவன் சொன்னத செய்யணும்? நானும் கிளம்பமாட்டேன். என்ன பண்றான்னு பாக்குறேன்" என்று வீராப்பாகக் கூறியவள், மறுநொடியே,

"வேணா! வேணா! எதுக்கு வம்பு? அப்றம் அவன் இதுக்கும் கோபப்பட்டு எரிஞ்சு விழுவான். இந்த நிலமையில அத என்னால தாங்கிக்க முடியாதுப்பா...பேசாம கிளம்புவோம். பாருடா செல்லம்! எப்டி இருந்த உன் அம்மாவோட நிலமை இப்டி ஆயிடுச்சு! எல்லாம் என்னோட விதி! ஆனா, அதனால உனக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்டா. நீதான் எனக்கு இப்ப முழு ஆறுதலே..." என்று அவள் எட்டு மாத வயிற்றை தடவியபடியே பேசிக்கொண்டிருந்தாள்.

முதலில் குழந்தை வேண்டாம் என்று கூறினாலும் நாளடைவில் குழந்தைமீது தாயன்பு பாராட்டினாள், காவ்யா. தினமும் அந்தக் குழந்தையிடம் பேசியே அவள் மனதை திடப்படுத்திக்கொண்டாள். அவளின் தற்போதைய மாற்றத்திற்கு கமலாம்மாவும் ராணாவும் பாதி காரணமென்றால் அவள் குழந்தையும் மீதி காரணமாகியது.

சிறிதுநேரத்தில் தயாராகச் சென்றவள், ராணா கொடுத்த ஆடை மற்றும் நகைகளை அணிந்து தயாராகினாள். இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஃபேன்சி டிசைனர் புடவையும் அதற்கேற்றாற்போல் கையால் வடிவமைக்கப்பட்ட ப்லௌசும் அணிந்திருந்தவள், கழுத்தில் வைரக்கல் பதித்த எளியமுறையில் வடிவமைக்கப்பட்ட ஆரமும் காதில் அதன் ஜோடி கம்மலும் கைகளில் இரண்டிரண்டு வைர வளையல்களும் அணிந்தாள். வழக்கம்போல் முடியெடுத்து, கூந்தலை பிண்ணாமல் விட்டவள், நெற்றியில் பொட்டு வைத்து சந்தனமிட்டுக் கொண்டிருக்க, கதவை தட்டிக்கொண்டிருக்க, இவளும், "ஹான்....!" என்று சத்தம் கொடுத்ததும் உள்ளே வந்தான், ராணா.

அவன் வந்ததும் அவனை திரும்பிப் பார்த்தவள் சந்தனத்தை கோணலாகப் பூசிக்கொண்டாள். அதை பார்த்தவன் அவளருகில் வர, இவளுக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. அவன் எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் அவன் எப்போது எப்படி மாறுவான் என்பது அவனே அறியாத ஒன்று என்பதை எண்ணியவளுக்கு சற்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனால், கால்கள் நகர மறுக்க, அங்கேயே நின்றாள்.

அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தில் தெரியும் பயத்தை பார்த்துப் புன்னகைத்தவன், அவள் முகத்திற்கு நேராகக் கைகளை கொண்டு வர, அதைப் பார்த்து அதிர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அவன் அதை சட்டை செய்யாமல் அவள் நெற்றியில் பூசிய சந்தனத்தை துடைத்துவிட்டான். அதன்பின், சந்தனத்தை எடுத்து நேராகப் பூசிவிட்டவன், குங்குமத்தையும் எடுத்து வகிட்டில் வைத்துவிட்டான். இவன் செய்கை உணர்ந்து கண் திறந்து பார்த்திட, அவளை ராணா வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையை இவளால் தாங்கமுடியாமல் தலைகவிழ்ந்திட, அவளை திரும்பச் செய்து தலையில் தான் கொண்டுவந்த பூவை சூட்டினான். அவளை இவன்புறம் திருப்பி அவள் கண்களை பார்த்தவன், அவள் நெற்றியில் மெலிதாக முத்தமிட்டான். அந்த முத்தத்தில் என்ன உணர்ந்தாளோ? காவ்யாவின் கண்கள் லேசாகக் கலங்கியது. ராணாவும் வேறெதுவும் பேசாமல் அறையைவிட்டுச் சென்றுவிட, காவ்யாவோ,

'உனக்கு என்னதான் வேணும்? முதல்ல மிருகத்தனமா நடந்துகிட்ட. அப்றமும் பழி வாங்குற வெறியில கோபத்தையும் வெறுப்பையும் காட்டுன. அப்றம் குழந்தைய வச்சே பழி வாங்க நினச்ச. நீ அப்டி பண்ணும்போதெல்லாம் உன்மேல எனக்கு வெறுப்பு மட்டும்தான் இருந்துச்சு. அப்டியே இருக்கவிடாம அப்றம் அக்கறை காட்டின. அதுவும் குழந்தைக்காகத்தானு தெரியும். ஆனா, இப்ப எதுக்கு இப்டி நடந்துக்குற? உன்னோட திட்டம்தான் என்ன? என்னய நிம்மதியா இருக்க விடக்கூடாதுனுதான் இப்படிலாம் பண்றியா? எதுவேணாலும் இருக்கட்டும். சீக்கிரமே உன் சுயரூபம் தெரிஞ்சிடும். எத்தனை நாளைக்குத்தான் மறைக்கமுடியும்? அப்போ தெரியும் எதுக்கு இப்படிலாம் நீ நடந்துக்கிறனு..' என்று எண்ணிக்கொண்டவள் வெளியே கிளம்பினாள்.

காவ்யா வந்ததை பார்த்த கமலாம்மா அவளுக்கு நெட்டிமுறித்தார். எட்டு மாதம் ஆனபோதும் அவள் வயிறு ஐந்துமாதம் போலவே ரொம்ப மேடிட்டவாறு இல்லாமல் காட்சியளித்தது. அவளை அழைத்துக்கொண்டு ராணாவும் கமலாம்மாவிடம் கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்.

காரில் இருவரும் பயணிக்கும் நேரம் மௌனமே நிலவிட, காவ்யா ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். எப்போதும் ராணா எங்கே போகிறோம் என்று காவ்யாவிடம் சொல்லி அழைத்துச் செல்லமாட்டான். ஆனாலும் இன்று தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதை காவ்யாவும் அறிவாள்.

காவ்யாவுக்கு ஐந்தமாதம் இருக்கும்பொழுது ராணா அவன் நண்பர்களிடமும் அவர்கள் பெற்றோர்களிடமும் காவ்யா கருவுற்றிருந்தச் செய்தியை கூறினான். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நேரில் வந்து காவ்யாவை பார்த்துவிட்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவட்டும் சென்றனர்.

காவ்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதாகக் பெரியவர்கள் கேட்டபோதும் ராணா அதை உறுதியாக மறுத்திடவே அவர்களும் ஏதும் பேசமுடியாமல் கமலாம்மா பார்த்துக்கொள்ள இருக்கும் ஆறுதலில் காவ்யாவிடம் பத்திரம் கூறிவிட்டுச் சென்றனர்.

அன்றிலிருந்து தினமும் காவ்யாவுக்கு அழைப்பு விடுத்து அக்கறையாய் விசாரிப்பது அனைவருக்கும் வாடிக்கையானது. அப்படி ஒருநாள் பிரபவ்வின் அம்மா லட்சுமி காவ்யாவிடம் பேசும்போது பிரபவ்விற்குத் திருமணம் ஏற்பாடு செய்யப் போவதாகவும் அது காதல் திருமணம் என்பதையும் கூறினார். திருமண தேதி நிச்சயத்தபின் சொல்வதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் தேதியையும் அறிவித்து இருவருக்கும் திருமண அழைப்பும் விடுத்திருந்தார். அதற்காகத்தான் இருவரும் சென்று கொண்டிருக்கின்றனர்.

காவ்யா தன் சிந்தனையில் இருந்து மீள, காரும் ஒரு பெரிய வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்தது. அந்த வீட்டின் வாசலில் இருந்தே பூத்தோரணங்களாலும் வண்ணத் திரைசீலைகளாலும் பலூன்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளித்தது. அது மாலை மங்கும் நேரம் என்பதால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகளின் ஒளி அந்த இடத்தையே மிளிரச் செய்து தேவலோகம் போல் காட்சியளித்தது.

காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி உள்ளே நடந்து வந்தனர். அந்த இடத்தின் அலங்காரத்தில் தன்னையே சிலநிமிடம் மறந்து அந்த அழகில் லயித்திருந்தாள். அந்த அலங்காரத்தை ரசித்தபடியே நடந்து வந்தவள் திடீரென கால்தடுக்கிட அருகில் நடந்துவந்த ராணாவின் கரத்தை பிடித்தபடி கண்களை மூடினாள். சிலநொடிகளில் கண்திறந்து பார்த்தவள் நிமிர்ந்து பயத்துடன் ராணாவை பார்த்திட, அவனோ இவள் நிமிர காத்திருந்தவன்,

"பாத்து வரக்கூடாதா காவ்யா? சரி. பயப்படாத. ரிலாக்ஸ்...ஓகேவா. குடிக்க தண்ணி வேணுமா?" என்று அக்கறையாகக் கேட்பதை பார்த்து விழித்தவள், "இல்ல. வேணா. இப்ப ஓகேதான்" என்று கூறியதும் அவனும் அதை ஆமோதித்து அவள் கரம்பற்றியபடியே நடந்தான். காவ்யாவிற்கு இவன் செய்கையில் ஏற்பட்ட குழப்பத்தால் எதுவும் பேசாமல் அவனை பார்த்தபடியே கூடவே நடந்துசென்றாள்.

இவர்கள் உள்ளே சென்றிட, அங்கே வீட்டிற்கு வெளியே இருக்கும் இடத்தில் மேடையிட்டு அதை அழகாக அலங்கரித்திருந்தனர். புல்தரையில் அமரும் நாற்காலிகளும் போட்டிருக்க, அது ஒரு விழாக்கான அமைப்பாகப் பார்ப்பவர் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

ஒருபக்கம் வருவோர்களை நண்பர்களின் தந்தையர்கள் நின்று வரவேற்று உள்ளனுப்ப, அங்கே அம்மாக்கள் இருவரும் உள்ளே அமரவைத்து உபசரித்தனர். மறுபக்கம் வேலையாட்கள் அவர்களுக்குப் பழரசங்கள், இனிப்புகள் என்று கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் மிகவும் பரப்பரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுற்றிக்கொண்டிருந்தனர். ராணா காவ்யாவை அழைத்துச் சென்றிட, இவர்கள் வருவதை பார்த்ததும் பெற்றோர்கள் அனைவரும் இவர்களிடம் வந்தனர். காவ்யாவிடம் வந்து அவளை அன்பாக அணைத்து விடுவித்து இருவரையும் நலம் விசாரித்து உள்ளே அனுப்பிவைத்தனர்.

இருவரும் மேடையை நோக்கி வந்து கொண்டிருக்க, மேடையை பார்த்தபடியே நடந்து வந்துகொண்டிருந்தவள் அதிர்ந்து அப்படியே நின்றாள். அவள் கண்களை அவளாலேயே நம்பமுடியாதக் காட்சியை கண்டு சமைந்து நின்றாள். ராணா அவள் நின்றதை கவனித்தவன் என்னவென்று விசாரித்திட, எதுவும் கூறா மௌனநிலையில் இருந்தாள். அவள் கண்கள் மட்டும் கண்ணீர் ஊற்றை சுரந்து கொண்டிருந்தது.

ராணாவும் அவள் அழுவதை கண்டு குழம்பியவன் அவள் பார்க்கும் திசை பார்த்திட, அங்கே மேடையில் பிரபவ்வும் அனுயாவும் ஜோடியாக நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் இங்கே நிற்பதை பார்த்து மேடையில் நின்ற அவன் நண்பர்கள் கையசைத்திட, அவர்கள் பார்க்கும் திசைபார்த்த அருகில் இருந்த காவ்யாவின் தோழிகள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

ஒருநிமிடம் ஒன்றும் புரியாமல் சிலையென நின்றவர்கள் மறுநிமிடம் தன்னிலை பெற்று சந்தோசத்தில் மேடையில் இருந்து ஓடிவந்தனர் சரண்யா, தன்யா, ரம்யா ஆகிய மூவரும். காவ்யாவின் கண்கள் அனுயாமீது நிலைத்திருக்க, ஓடிவரும் இவர்களை கவனிக்கவில்லை. இவளிடம் ஓடிவந்தவர்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் இருந்தவர்கள் கண்ணீருடன் நின்றிட, தன்முன் வந்தவர்களை கண்டதும் காவ்யாவும் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தாள். மூவரும் காவ்யாவை அழுதுகொண்டே அணைத்துக்கொள்ள, இவளும் கண்ணீருடன் அவர்களை கட்டிக்கொண்டாள்.

இவர்களது செயலை ராணா அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருக்க, மேடையில் நின்ற இவனது நண்பர்களும் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எதற்காக காவ்யாவை அனுயாவின் தோழிகள் அணைத்திருக்கின்றனர்? இவர்களுக்கும் தங்கள் அண்ணிக்கும் என்ன சம்பந்தம்? என்று குழம்பிப்போயினர். இவர்களை கண்ட அனுயாவும் யாரென்று பார்த்திட, அங்கே காவ்யா நிற்பதை பார்த்தவள் ஆனந்தமாகக் கீழே ஓடிவந்தாள். இவள் வந்ததும் காவ்யா என்றழைத்திட இருவரும் கண்ணீர் மல்க அணைத்துக்கொண்டனர். இவர்களின் அணைப்பில் மற்ற மூவரும் இணைந்துகொள்ள அங்கே இருந்தவர்கள் அனைவரும் இவர்களின் அன்பில் அதிசயித்துப் போயினர், ராணா மற்றும் அவன் நண்பர்கள் உள்பட.

தோழிகள் ஐவரும் அணைப்பிலிருந்து விடுபட்டு நின்றவர்கள் காவ்யாவை கூர்ந்து கவனித்து அதிர்ந்தனர்.

"காவ்யா! உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"இது எப்ப நடந்தது? எங்ககிட்ட இதக்கூட சொல்லத் தோனலயாடி உனக்கு?"

"இத்தனைநாள் நீ எங்கேயோ இருக்கிறனு நினச்சோம். ஆனா, இங்க இப்ப உன்னய பாப்போம்னே நினைக்கலடி..."

"அப்ப இத்தனநாள் இங்கதான் இருந்தியா? எங்கள பாக்கணும்னு தோனலயா? காவி!" என்று நால்வரும் கேள்விகளை அடுக்கிட, காவ்யாவுக்கு அவர்கள் கேட்ட கேள்விகள் அவளுக்குப் பயத்தையும் கவலையையும் வரச்செய்தது. ஒருபக்கம் இவள் உண்மையை அறிந்தால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்றும் மறுபக்கம் இவர்களது வருத்தத்தை எண்ணிய கவலையும் அவளை வாட்டிட அமைதியாக நின்றாள்.

காவ்யாவின் மௌனத்தை கண்டு அவளை மெல்ல உலுக்கிட, அதில் தன் சிந்தனையிலிருந்து மீண்டவள் அவர்களை பார்த்து,

"எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்டி. ஆனா, இப்ப இல்ல. ஃபங்ஷன் நல்லபடியா முடியட்டும். ப்ளீஸ்...டி! எதுவும் கேள்வி கேட்காம ஃபங்கஷன எஞ்சாய் பண்ணுங்க. எனக்கும் உங்கிட்ட கேட்க வேண்டியது நிறையவே இருக்கு. பட், இது நம்ம அனுவோட ஃபங்ஷன். சோ, எஞ்சாய்மெண்ட் ஃபஸ்ட். ஓகேவா?" என்று அவளும் பொறுமையாகத் தொடங்கியவள் உற்சாகமாக முடித்திட, அவள் தோழிகளும் சரியென ஆமோதித்து அமைதியாயினர். பின்னர், நீண்டநாட்கள் கழித்து அவளை பார்த்த மகிழ்ச்சியிலும் அனுயாவின் முக்கிய தருணத்தை கொண்டாடும் உற்சாகத்தில் காவ்யா இருந்ததாலும் மற்றதை மறந்து அவளோடு இவர்களும் மகிழ்ச்சியில் இணைந்தனர்.

காவ்யாவின் மேடிட்ட வயிற்றை பார்த்தவர்கள் சிறிது அதிர்ச்சியடைந்தாலும் ஒருவகையில் ஆனந்தமும் அடைந்தனர். அவளை மெதுவாக மேடைக்கு அழைத்துச் சென்றனர். இங்கே ராணாவும் மேடையில் அவனது நண்பர்களும் இவற்றை குழப்பத்துடன் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற்று முடிந்தது. இரவு தோழிகளும் நண்பர்களும் தனித்தனியே சோர்வாக அமர்ந்திருந்தனர். காவ்யாவை பார்த்த சந்தோசத்தில் சுற்றியுள்ள எதையும் அவர்கள் கவனிக்கவில்லை. ராணாவைக்கூட கவனித்திடவில்லை. ஒருவேளை அப்போதே கவனித்திருந்தால் நிலைமை மோசமாகவும் வாய்ப்பிருக்கிறது.

காவ்யா இவ்வளவு நேரமும் சந்தோசத்தில் இருந்தாலும் இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம்? என்ற பயம் மனதில் அடித்துக்கொண்டே இருக்க பதட்டத்துடன் இருந்தாள். இவள் தோழிகளுடன் இருப்பதால் ராணா அவன் நண்பர்களுடன் இருந்தான். இங்கே இவர்களும் குழப்பத்தில் இருந்தாலும் அதை தீர்த்துக்கொள்ள
இது நேரம் அல்ல என்று எண்ணி அமைதிகாத்தனர். பெரியவர்களுக்கும் இது ஆச்சரியமாக இருந்தாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அனைவரும் ஒரே குடும்பமானதில் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், காவ்யாவின் நலனை மட்டும் எண்ணி வருந்தியபடி இத்தனைநாள் காத்திருந்த தோழிகளால் அப்படி இருக்க இயலுமா? காவ்யாவிடம் மறுபடியும் கேட்க ஆரம்பித்தனர்.

"காவி! இப்பவாச்சும் சொல்லுடி. என்ன நடந்தது? உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?" என்று தன்யா கேட்க,

"ஆமாடி. முதல்ல உன் ஹஸ்பண்ட் யாருடி? அதையாச்சும் சொல்வியா மாட்டியாடி?" என்று சரண்யாவும் கேட்க,

"ஆமா! அவரும் இங்க வந்திருப்பார்தானே. நாங்க உன்னய பாக்கும்போது யாரோ ஒருத்தர் உன்கூட வந்தாரே..அவரா?" என்று ரம்யாவும் கேட்டிட,

"அப்டியா! நான் பாக்கலயே. சரி! சொல்லு காவ்யா! உன் கல்யாணத்த சொல்லல..எப்படி ஆச்சுனும் சொல்ல மாட்டிக்கிற. ஹஸ்பண்டயாச்சும் காட்டுடி" என்று அனுயா கூறிட, அதில் செய்வதறியாது முழித்தவள் சமாளித்துக்கொண்டு,

"சொல்லக்கூடாதுனுலாம் ஒன்னும் இல்லடி. இது உன்னோட ஃபங்ஷன். நீதான் இப்ப முக்கியமானவ. அது இருக்கட்டும். என்னய இத்தன கேள்வி கேக்குறீங்களே...ஃபஸ்ட் உன் லவ் ஸ்டோரிய சொல்லுடி அனு. அப்டியே மறைக்கப் பாக்குறியே..விடுவேனா...?" என்று புன்னகையுடன் கூறி கேலி செய்வதைப்போல மாற்றிச் சமாளித்தாள்.

அவள் கேட்டதில் வெட்கப் புன்னகை சிந்திய அனுயா, "மறைக்கலாம் இல்ல. நீ இருந்தா உன்கிட்டதானடி சொல்வேன். உன்னய காணாம எப்டி சொல்றதாம். அதோட உன்னால எங்க லைஃப் தடைபடக்கூடாதுனு வேற சொல்லி சத்தியம் வாங்கிட்ட. அதனாலதான்டி இந்த மேரேஜ் இப்ப நடக்குது. இல்லேன்னா நீயா வர வரைக்கும் நடந்திருக்காது" என்று சாதாரணமாகக் கூறுவதை கேட்டு காவ்யா கலங்கிப்போனாள்.

"நீ இல்லாம மேரேஜ் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டபட்டேன் தெரியுமா? நல்லவேளை எப்டியோ நீயே வந்துட்ட" என்று அனுயா கண்கலங்க கூறிட, காவ்யா அவள் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள்.

"சரிடி! நீ பேசியே டாபிக் சேஞ்ச் பண்ணாம உன் லவ் ஸ்டோரிய சொல்லுடி. அதுக்குத்தான அவ வெய்ட்டிங்" என்று ரம்யா எடுத்துக்கூறிட,

"நான் சொல்றேன்டி அந்தக் கதைய. காவி! ஒருநாள் அனு அவளோட பாஸ் பத்தி சொன்னாளே? நியாபகம் இருக்கா?" என்று சரண்யா ஆர்வமாகக் கேட்டிட,

"ஆமாடி. நியாபகம் இருக்கு. அவருகூட இவள சைட் அடிச்சதா சொன்னாளே..இவளுக்கும் அவர புடிக்கும். ஆனா, லவ்லாம் இல்லனு சொன்னாளே..? அதான?" என்று கேட்டிட,

"அதேதான்..அந்த பாஸ்தான்டி மாப்பிள்ளை. அவரத்தான் லவ்ஸ் பண்ணா இவ" என்று சரண்யா கூறுவதை கேட்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தாள், காவ்யா.




❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 20


"நிஜமாவாடி? பிரபவ்தான் உன் பாஸா?" என்று கேட்டிட, இவள் பெயர் கூறியதை கேட்டு இவளை பார்க்க, தனது தவறை உணர்ந்தவள்,

"அதானடி அவரு பேரு? எதுக்கு முழிக்கீங்க? கதையை சொல்லுங்கடி" என்று கூறிச் சமாளித்திட, அவர்களும் பெரிதுபடுத்தவில்லை.

"ஆமா. அவருதான். அவருக்கு இவள புடிச்சிப்போயிருக்கு. இவ கேரக்டர பாத்து. இவங்க கம்பெனி சக்ஸஸ் பார்ட்டி போனபோது இவகூட நார்மலா பேசி ஃபிரண்ட்ஸ் ஆகிருக்காங்க" என்று தன்யா கூறிட,

"அடுத்து நான் சொல்றேன். இவளுக்கும் அவரோட கேரக்டர் புடிச்சு நல்லா பழக ஆரம்பிச்சுட்டா. போகப்போக ரொம்ப க்ளோஸா ஆக ஆரம்பிச்சுட்டாங்க" என்று ரம்யா கூறிட,

"எது? நம்மளவிடவா?" என்று காவ்யா கேள்வி கேட்டிட,

"ச்சச்ச...அப்டிலாம் ஆயிடுவாளா? நாமதான் விட்றுவோமா?" என்று சரண்யா கூறிட காவ்யா சிரித்துவிட்டாள்.

"இவளும் இது எல்லாத்தையும் எங்ககிட்ட மறைக்காம சொல்லிடுவா. இவ பர்த்டே அன்னைக்கு அவரையும் இன்வைட் பண்ணிருந்தோம்" என்று கூறிட,

"அடுத்து நானு...அவரு ரொம்ப ஜென்யூன். ரொம்ப அதிகமா பேசாட்டியும் அன்பா பேசுனாரு. எங்களுக்கும் பிடிச்சுபோச்சு. நாங்களும் ஃப்ரண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று ரம்யா கூறிட,

"அன்னைக்கு இவளுக்கு அவர் ப்ரப்போஸ் பண்ணாரு எங்க முன்னாடி வச்சே. நாங்க ரொம்ப ஸர்ப்ரைஸ் ஆயிட்டோம். இவளும் ஓகே சொல்லிட்டா" என்று தன்யா கூறிட,

"இவ்ளோநாள் நல்லா லவ் பண்ணாங்க. இப்ப வீட்ல மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண அவங்க அம்மா கேட்டதும் இவரும் ஓகே சொல்லி இப்ப கல்யாணம் வரை வந்தாச்சு...சுபம்!" என்று கூறி சரண்யா முடித்திட, காவ்யா சிரித்தாள். அனுயா புன்னகையுடன் தலையில் அடித்துக்கொண்டவள்,

"அடியே!! இது என் லவ் ஸ்டோரிடி. என்னய சொல்லவிட்டீங்களாடி பக்கிங்களா? அதையும் நீங்களே சொல்லி முடிச்சுட்டீங்களே எருமைங்களா!" என்று கூறி செல்லத் திட்டுக்களை வழங்கிட, மூவரும் சிரித்திட, இவளும் சிரித்துவிட்டாள்.

காவ்யா இவர்களின் சந்தோசத்தில் மகிழ்ந்தாலும் அவர்களிடம் உண்மையை எப்படி கூறுவது? என்ற எண்ணத்தில் உலன்று கொண்டிருந்தாள். அதேசமயம் இவளருகில் வந்த ராணா இவளிடம் வந்து நின்றான். தோழிகள் நால்வரும் அவனை கேள்வியுடன் பார்த்திட, காவ்யா நினைவுலகில் இருந்ததால் அவளை உலுக்கி நிகழுலகம் கொண்டுவர அவளும் இவனை பார்த்து விழித்தாள்.

ராணாவின் முகத்தை பார்த்த சரண்யா எங்கோ பார்த்ததுபோல் இருப்பதாய் எண்ணி யோசித்திட, அதேநேரம் அனுயா,"நீங்க பிரபாவோட ஃப்ரண்ட்தான? எதுவும் வேணுமாங்க?" என்று விசாரித்திட,

காவ்யாவை பார்த்தவன் அவர்களிடம், "ஐம் ஹெர் ஹஸ்பண்ட். இவள கூட்டிட்டுப் போக வந்தேன்" என்று கூறிட, அதை ஒருநொடி அதிர்ந்து கவனித்தனர் தோழிகள். இதைக் கேட்ட சரண்யாவும் அதிர்ந்து விழித்தவள், தன் சிந்தனையை கூராக்கிட, அவளுக்கு யாரென்று நியாபகம் வந்தது.

"என்னடி சொல்றாரு காவி? இவருதான் உன் ஹஸ்பண்டா?" என்று தன்யா அவளிடம் கேட்க, அதில் அமைதியாக இருந்தவள் தலைகவிழ்ந்தபடியே சம்மதமாகத் தலையை அசைத்திட மற்றவர்கள் வியந்து விழித்தனர்.

ராணா காவ்யாவை பார்த்தபடியே நின்றவன்,"காவ்யா! வா! போகலாம்" என்று அழைத்திட, காவ்யாவும் இதற்குமேல் இங்கிருப்பது சரியல்ல என்று எண்ணியவள் அமைதியாக எழுந்துசெல்ல எத்தனிக்க,

"காவி! இவருதான மால்ல என்னய இடிச்சிட்டுப் போனது? இவரத்தான நீ அன்னைக்கு அடிச்ச?" என்று சரண்யா கேள்வியாகப் பார்த்திட, காவ்யா சிலையானாள். எது நடக்கக்கூடாது என்று பயந்தாளோ...அது நடக்கத் தொடங்கியதை எண்ணி தவித்தாள்.

இங்கே ராணா பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவன் நண்பர்களும் அருகில் வர, "சொல்லுடி காவி! இவரத்தான அன்னைக்கு மால்ல வச்சு நீ செருப்பால அடிச்ச? எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. ஆனா...எப்டி இவர கல்யாணம் பண்ண? அன்னைக்கு இவர அவ்ளோ மோசமானவருனு திட்டுனியேடி. அப்றம் எப்டி கல்யாணம் பண்ண?" என்று சரண்யா கேள்வி கேட்டபதை கேட்டவர்கள் அதிர்ந்தனர்.

ராணாவிற்கு வந்த எரிச்சலை கட்டுபடுத்திக்கொண்டு நின்றான்.
நண்பர்கள் அனைவரும் கூடி நிற்க, காவ்யா வருத்தத்துடனும் பதட்டத்துடனும் நின்றாள். அனைவரும் இவளை கேள்வியுடன் பார்த்திட, மன அழுத்தம் அதிமாகிட மயங்கிச் சரிந்தாள். அவளுக்கு அருகில் நின்ற ராணா அவளை தாங்கியவன் மெல்ல தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க அனைவரும் பதறிப்போய் விசாரித்திட,

"பயப்பட வேணா. இது நார்மல் மயக்கம்தான். ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். நீங்க இருங்க. நாங்க உள்ள போறோம்" என்று கூறியவன் பதிலுக்குக் காத்திராமல் சென்றுவிட்டான்.

இங்கே தோழிகள் ஒருபுறமும் நண்பர்கள் ஒருபுறமும் குழம்பி நின்றனர். அனுயாவிடம் வந்த பிரபவ் என்னவென்று விசாரித்திட, அன்று மாலில் நடந்த அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தோழிகளும் காவ்யாவுக்கு எப்படி இவனுடன் திருமணம் நிகழ்ந்தது? என்று வினவிட, அதற்கானப் பதிலை நாளை தெளிவுபடுத்துவதாய் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அறைக்குள் வந்த ராணா காவ்யாவை படுக்கையில் கிடத்திவிட்டு அவளுடனே இருந்துகொண்டான். காவ்யாவை இந்நிலையில் விட்டுச் செல்ல அவனாலும் இயலாது. நேரமும் இரவு தூங்கும் நேரம் ஆகியதால் அவனும் அவளுடன் படுத்துக்கொண்டான். நண்பர்களும் இவனிடம் பேச வந்தவர்கள் காவ்யாவின் நிலை உணர்ந்து அவர்களை தொந்தரவு செய்யாமல் சென்றுவிட்டனர்.

அனைவரும் இன்றைய பொழுதில் ஏற்பட்ட பலவிதமான உணர்ச்சிப்பிடியில் சிக்கியவர்கள் உடலும் மனமும் சோர்ந்திட, கண்ணயர்ந்தனர். மறுநாள் விடியல் பல திருப்புங்களை காட்டிடவென்றே பரபரப்பாகப் புலர்ந்தது. கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்திட, மணமகனும் மணப்பெண்ணும் மணவறையில் அமர வைக்கப்பட்டனர். தோழிகளும் நண்பர்களும் சூழ கவலை மறந்து இன்பம் நிறைந்து பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் மங்கள நாணை அனுயாவின் கழுத்தில் பூட்டி அவளை தன் மனையாள் ஆக்கினான், பிரபவ். நண்பர்களும் தோழிகளும் சந்தோசமாகக் கத்திட, காவ்யாவும் மனநிறைவுடன் பார்த்தாள்.

திருமண நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்றிருக்க, பெரியவர்களும் சிறியவர்களும் மட்டுமே இருந்தனர். பெரியவர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலை என்றும் ஓய்வெடுக்கவும் சென்றிருக்க, சிறியவர்கள் மட்டும் ஒன்றாக அமர்ந்திருக்க, ராணா காவ்யாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்புவதாய்க் கூறி செல்ல எத்தனிக்க,


"நில்லு ராணா!" என்ற பிரபவ்வின் குரலில் இவனும் நின்றான். பிரபவ்வை கேள்வியாகப் பார்த்திட,

"இனியும் நீ ஓடி ஒழிய முடியாது ராணா. இன்னைக்கு நீ உண்மைய மறைக்கமுடியாது" என்று பிரபவ் கூறயதை கேட்டு நண்பர்கள் அதிர்ச்சியடைய, தோழிகள் குழம்பினர். ராணா புருவம் சுருக்கி அவனை நோக்கிட, காவ்யா பதட்டமாக இருந்தாள்.

"என்ன பாக்குறடா? நீ இத்தனநாளா எங்கள ஏமாத்திருக்கனு புரியுது. ஆனா, அது என்னனு தெரியல. அத நீயே சொல்லிடு" என்று நாகவ்வும் கூறிட,

"ஆமாடா. இத்தனைநாளா காவ்யா அண்ணிக்கு யாரும் இல்ல. அப்பா இறந்துட்டாங்க. அதனாலதான் உடனே கல்யாணம் பண்றேனு சொன்னதெல்லாம் பொய்தான? சொல்லுடா" என்று விஜய்யும் வினவிட, தோழிகள் இதைக் கேட்டு அதிர்ந்தனர்.

"சொல்லுடா. நீ இன்னும் என்னலாம் மறைச்ச? எதுக்காக இப்டி பொய் சொன்ன? என்னடா தப்பு பண்ண?" என்று ராமும் கேட்டிட,

"அவன் எப்டி சொல்வான். அவன் சொல்றமாறியா பண்ணிருக்கான். நம்ம நம்பிக்கையவே உடச்சிருக்கான்" என்று பிரபவ் கோபாகக் கூறிட, அனைவரும் குழப்பமாகப் பார்த்தனர்.

"கேக்குறாங்கல்ல? சொல்லுடா. காவ்யாவோட இந்த நிலைமைக்குக் காரணம் நீதான?" என்று கேட்டிட, ராணா அவனை பார்த்தவன் அமைதியாக நின்றான். நண்பர்கள் குழம்பி என்னவென்று விசாரித்திட, பிரபவ் காவ்யாவின் கடந்தகால சம்பவத்தை கூறினான். அனுயாவும் பிரபவ்வும் காதலிக்கும்போது காவ்யாவைப்பற்றி அனைத்தையும் கூறியிருந்தாள்.

நேற்று இரவு சரண்யா ராணாவை பார்த்து கேட்டதை பார்த்து அவர்களிடம் நடந்ததை கேட்டறிந்தவன் ராணாவின் கோபம்பற்றியும் அறிந்திருந்தவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்தது. அதையே இங்கே தெளிவுப் படுத்தக் காத்திருந்தவன் அவர்களிடம் கூறிவிட்டு ராணாவை நோக்கினான்.

அனைவரும் பிரபவ் கூறியதை நம்பமுடியாமல் நின்றிட, "சொல்லுடா. காவ்யாவ கடத்திட்டுப் போய் தப்பா நடந்தது நீதான...?" என்று கேட்டிட, இதற்குமேலும் மறைக்கக்கூடாது என்றெண்ணிய ராணா,

"ஆமா..! நான்தான் அப்டி பண்ணேன்" என்று கூறியதை கேட்டு நண்பர்கள் அதிர்ந்தனர். ராணா என்றும் இப்படி நடந்துகொள்பவன் அல்ல என்பதை அவர்களும் அறிவர். ஆனாலும், நடக்கும் சம்பவத்தை பார்த்து நம்பமுடியாமலும் இருக்க இயலாமல்,

"ஏன்டா இப்டி பண்ண? நீ இப்டி பண்ணுவனு நாங்க கனவுலகூட நினச்சதில்லடா..." என்று விஜய்யும்,

"உனக்கே இது தப்பா தோனலயா? எப்டி ஒரு பொண்ண கஷ்டப்படுத்த மனசு வந்துச்சுடா?" என்று நாகவ்வும்,

"நீ என்ன அந்தளவுக்கு மிருகம் ஆயிட்டயாடா? சொல்லுடா...வாய திறந்து பேசுடா..." என்று ராமும் கோபமாகப் பேசிட, காவ்யா அதிர்ச்சியடைந்தாள். இவர்கள் குணம் தெரியாமல் இவர்களை இத்தனை நாள் இவனுக்குத் துணை போனதாய் தவறாய் எண்ணிவிட்டோமே என்று வருந்தினாள். அவர்கள் கூறியதை கேட்ட ராணா,

"நான் பண்ணது ரைட்டுனு ஜஸ்ட்டிஃபை பண்ண விரும்பல. ஆனா, அப்போ நான் பண்ணும்போது தப்பா தெரியல. அப்ப நான் அவள தப்பா நினச்சேன். அவ என்னய அவமானப்படுத்தினதுக்குப் பழி வாங்க நினச்சு அப்டி பண்ணேன். இப்ப அதபத்தி எதுவும் பேச விரும்பலடா" என்று கூறிட,

"டேய்! உனக்குக் கோபம் வந்தா என்ன வேணா பண்ணுவனு தெரியும். ஆனா, இப்டி ஒரு பொண்ணோட வாழ்க்கையவே நாசமாக்கிருக்கியேடா..." என்று பிரபவ்வும்,

"நாங்க உன் ஃப்ரண்ட்ஸ்னு சொல்லிக்கவே வெக்கப்படுறோம்டா" என்று நாகவ்வும் கூறிட,

"என்னடா நாசம் பண்ணிட்டேன்? இப்ப அவ என்னோட வைஃப்தான? உங்களுக்கே தெரியும் எனக்குப்
பொண்ணுங்க புடிக்காதுனு. கோபத்துலதான் அப்டி பண்ணேன். ஆனா, இவதான் என் பொண்டாட்டினு முடிவு பண்ணப்றம்தான் கல்யாணம் பண்ணேன்" என்று கூறிட,

"நீ ஒரு பொண்ண என்ன வேணா பண்ணுவ. அப்றம் கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடுமா? அந்தப் பொண்ணோட விருப்பம்லாம் தேவையே இல்ல...அப்டித்தான?" என்று ராம் கோபமாகக் கேட்டிட,

"இப்போ நான் நல்லாத்தான்டா பாத்துக்குறேன். இனியும் என்னடா?" என்று எரிச்சலாகக் கேட்டிட,

"அத அவங்க சொல்லட்டும். அண்ணி! நீங்க விருப்பப்பட்டுதான் இவன்கூட இருக்கீங்களா? சொல்லுங்க" என்று விஜய் காவ்யாவிடம் வினவிட,

"சொல்லுங்க அண்ணி. எதுக்காகவும் பயப்படாதீங்க. நாங்க உங்ககூடதான் நிப்போம்" என்று நாகவ்வும் கூறிட,

"இப்ப நீங்க இல்லைன்னு சொன்னாப் போதும். இவன ஜெயில்ல பிடிச்சு போடுறேன். உங்கள கஷ்டப்படுத்துனதுக்கு இவனுக்கு அந்த தண்டனைகூட பத்தாது" என்று ராம் கண்கலங்கிட கோபமாக ராணாவை பார்த்தபடி கூறிட, ராணா அதிர்ச்சியடைந்தான். இத்தனை வருடங்களாக உயிராய் பழகிய நண்பர்கள் இன்று தன்னை எதிர்த்து நிற்பதை அவனால் நம்பமுடியவில்லை. தன்னைப்பற்றி முழுவதும் தெரிந்த இவர்களே தன்னை எதிர்த்து நின்றிட, காவ்யா எப்படி தன்னை ஏற்பாள்? என்றெண்ணியவன் அமைதியாக
நின்றான்.

"சொல்லுடி காவி! உண்மைய சொல்லு. நீ மறைச்சது போதும். ப்ளீஸ்டி!" என்று தோழிகள் கெஞ்சலாகக் கூறிட, கண்ணீரொழுக நின்ற காவ்யா நிமிர்ந்து கண்ணீரை துடைத்தவள் அனைவரையும் பார்த்து,

"நான் விருப்பப்பட்டுதான் இவர்கூட இருக்கேன். என்னைய யாரும் கட்டாயப்படுத்தல. ப்ளீஸ்..! இதோட இந்த விசயத்தை விட்டுருங்க. எனக்கு இப்ப எந்தப் பிரச்சனையும் இல்ல. நீங்க உங்களோட லைஃப பாருங்க" என்று கூறி முடித்திட, அனைவரும் அதிர்ச்சியில் நிற்க, ராணா இவளை ஆச்சரியமாகப் பார்த்தான். அவன் நண்பர்களிடம் திரும்பியவன்,

"இப்ப தெரிஞ்சுகிட்டீங்களா? இவ என்னோட வைஃப். என்கிட்ட இருந்து யாராலையும் பிரிக்க முடியாது" என்று அனைவரையும் பார்த்துக் கூறியவன் காவ்யாவின் கரங்களை பற்றியபடி முன்னே செல்ல, இவள் கண்ணீருடன் திரும்பி அவள் தோழிகளையும் அவன் நண்பர்களையும் பார்த்தவாறே சென்றாள். இதைப் பார்த்த அவர்கள் அனைவரின் மனமும் வேதனையில் வாடிட, சிலையென நின்றனர்.

ராணாவும் காவ்யாவும் காரில் சென்றுகொண்டிருக்க, தன் நண்பர்களே தன்னிடம் கோபமாகவும் வெறுப்பாகவும் பேசியது அவனால் இன்னும் நம்பமுடியவில்லை. அதை எண்ணிப் பார்க்கையில் அவனுக்கு கோபமும் இயலாமையும் தலைக்கேற எரிச்சலுடன் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். அருகில் இருந்த காவ்யா திடீரென அவன் கைகளை பற்றிட, சிந்தனையில் இருந்து மீண்டவன் அவளை திரும்பிப் பார்த்தான்.

"எதுக்காக இவ்ளோ ஃபாஸ்டா வண்டி ஓட்டு...றீங்க? எனக்குப் பயமா இருக்கு..ப்ளீஸ்...! ஸ்லோவா போங்க.." என்று பதறியவாறு கூறுவதை கேட்டபின்னே அவன் வண்டியை அதிவேகத்தில் செலுத்திக் கொண்டிருப்பதை அறிந்தான். கண்களில் மிரட்சியுடனும் முகத்தில் துளிர்த்த வேர்வைத் துளிகளுடனும் அவள் இருப்பதை பார்த்தவன் அவள் பயத்தோடு வயிற்றை பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் தன் தவறை உணர்ந்தவன் வண்டியை மெதுவாகச் செலுத்திட நேராகத் திரும்பினான்.


இவன் திரும்பும் வேளை நேராக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதிவேகத்தில் சென்ற இவனது கார் அதில் மோதப்போகும் நேரம் ராணா காரை திருப்பிவிட்டான். அந்த வேகத்தில் கார் சென்று சாலையோரத்தில் உள்ள மரத்தில் போய் முட்டியது. அந்த மோதலில் இருவரும் அதிர்ந்து குலுங்கிட, வண்டி மோதிய வேகத்தில் காவ்யாவுக்கு வயிறு வலிக்கத் தொடங்கியது. வலியில் இவள் அலற, ராணா மெதுவாக வண்டியைவிட்டுக் கீழிறங்கி வந்தவன் மறுபக்கம் வந்து காவ்யாவை மெல்ல இறக்கினான்.

சாலையோரத்துக்குக் கொண்டு வந்து நிற்கச் செய்திட, காவ்யா வலியில் அலறினாள். ராணா அவளின் கதறலை கண்டு படபடக்க, அவள் வலியால் துடிப்பதை பொறுக்க இயலாமல் பதட்டமடைந்தான். சாலையில் நின்று, செல்லும் ஓர் வாகனத்தை நிறுத்தி உதவி கேட்டவன் அவளை ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல, வலியில் துடித்தவள் அவன் மடியிலே மயங்கினாள். அவளை பயத்துடனும் பதட்டத்துடனும் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்தான்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் அவள் ஆஆஆ என்று கதறும் சத்தம் கேட்டிட, இதயம் வெளிவராத குறையாக வெளியே நின்றான், ராணா. வெளியே வந்த மருத்துவர் ராணாவை பார்த்து,

"சாரி! சார். உங்களோட குழந்தை இறந்துடுச்சு. எக்ஸஸ் ப்ளட் லாஸ். எவ்ளோ ட்ரை பண்ணியும் குழந்தைய காப்பாத்த முடியல. உங்க வைஃப் நல்லா இருக்காங்க. டூ டேஸ் அப்சர்வேஷன்ல வச்சிட்டு அப்றம் கூட்டிப் போங்க" என்று கூறிவிட்டுச் சென்றிட, ராணாவின் காதுகளில் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

எந்த உணர்ச்சியும் இன்றி சிலையென நின்றிருந்த ராணாவின் கைகளில் செவிலிப் பெண் குழந்தையை கொண்டுவந்து கொடுத்திட, ஏதோ கைகளில் பட்ட உணர்வு தோன்ற கீழே பார்த்தவன் தன் கைகளில் தவழ வேண்டிய பிஞ்சு குழந்தை இறந்து கிடப்பதை பார்த்தவனுக்கு நெஞ்சம் அடைத்தது. இறுகிய முகத்துடன் குழந்தையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறினான்.

இங்கே மயக்கத்தில் இருக்கும் காவ்யாவை சாதாரண அறைக்கு மாற்றியவர்கள் வெளியே வர ராணாவை காணாமல் தேடினர். அதற்குள் அங்கு வந்த சரண்யாவின் தோழியான மருத்துவர், உமா வந்து என்னவென்று விசாரித்தாள். ஏதோ முக்கியமான சிகிச்சை தொடர்பாக வந்தவள் ஓரிடத்தில் மட்டும் செவிலியர்கள் பரபரப்பாகத் திரிவதை கண்டு விசாரித்திட, விபரம் அறிந்து அறைக்குச் சென்று பார்த்திட, அங்கே காவ்யாவை கண்டு அதிர்ந்தாள்.

காவ்யாவை பார்த்ததும் அவளிடம் சென்றவள் அங்கே இருந்தபடியே அவள் தோழிகளுக்கு அழைத்து விசயத்தை கூறிட, அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் அங்கு வந்துசேர்ந்தனர். இவர்கள் வரும் சமயம் ராணாவின் நண்பர்களும் வந்திட, அனைவரும் சென்று காவ்யாவை பார்த்தனர்.

காவ்யா இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருக்க, அவளருகில் உமா அமர்ந்திருந்தாள். இவர்கள் சென்றதும் அவளிடம் நடந்ததை கேட்டுத் தெரிந்தவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். குழந்தை இறந்த செய்தி அவர்களை கலங்கச் செய்தாலும் அதைவிட காவ்யா கண்விழித்து, இந்த செய்தி தெரிந்தால் என்ன ஆவாளோ? என்ற பயமும் வேதனையும் அவர்களை இன்னும் வதைத்துக் கொண்டிருந்தது. அனைவரும் மௌனமாக அறைக்கு வெளியே காத்திருக்க, காவ்யாவும் கண்விழித்தாள்.

காவ்யாவை தோழிகள் வந்து பார்த்திட, கண்விழித்த காவ்யா சுற்றிலும் பார்த்தவள் தோழிகளை பார்த்ததும் எழுந்தமர முயற்சித்தாள். அவளை தோழிகள் அமரவைத்திட, மெதுவாகத் தன் வயிற்றை தடவிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

"என் குழந்தை எங்க? என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலைல? நல்லா இருக்கா? சொல்லுங்க..." என்று பதறியபடி அவர்களிடம் கேட்பதை கண்டு அவர்கள் சொல்வதறியாது சோகத்தில் நின்றனர்.

அவள் மீண்டும் மீண்டும் கேட்டு பதட்டம் அடைவதை பார்த்தவர்கள் அவளை கட்டுப்படுத்தும் வழியின்றி குழந்தை இறந்துவிட்டதை கூறினர். அதை கூறியவர்கள் காவ்யா எப்படி நடந்துகொள்வாளோ என்று பயந்தபடி பார்த்திருக்க, காவ்யாவோ இதைக் கேட்டு சிலையாகிப் போனாள். கதறி அழுவாள் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இவள் மௌனம் மேலும் அச்சத்தை தந்திட, அவளை உலுக்கினர். ஆனால், அவள் இவர்களை சாதாரணமாகப் பார்த்துவிட்டுத் திரும்பிகொண்டாள். இதைக் கண்ட அவள் தோழிகளும் ராணாவின் நண்பர்களும் செய்வதறியாது தவித்தனர்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல, காவ்யாவின் மௌனம் கலைந்தபாடில்லை. தோழிகளுடன் அவர்கள் வீட்டில்தான் இருந்தாள். அனுயா திருமணமாகிச் சென்றாலும் நாளில் பாதிவேளை இவளுடனே இருந்துவிட்டுச் சென்று கொண்டிருந்தாள். தோழிகள், நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் வந்து ஆறுதல் கூறியும் இவள் நிலையில் தேற்றம் இல்லை. எவரிடமும் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்தவர்களுக்கு இவள் பழையபடி மோசமான நிலைக்குச் சென்றிடுவாளோ என்ற கவலை அதிகமாகியது. ஆனால், அவளை தேற்றும் வழியின்றி தவித்தனர்.

சில வாரங்கள் கழிந்திருக்க, ஒருநாள் ராணா தோழிகள் இருக்கும் வீட்டிற்கு வந்தான். இவனை பார்த்ததும் தோழிகள் கோபம் கொண்டாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு நிற்க, "நான் காவ்யாவ பாக்கணும்" என்று கூறிட,

"எதுக்காக அவள பாக்கணும்? இன்னும் அவள சங்கடப்படுத்தணுமா? ஒன்னும் தேவையில்ல...நீங்க போகலாம்" என்று தன்யா கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு கூறிட,

"நான் அவள பாக்கணும். அவகிட்ட பேசணும். அவள கூப்டுங்க" என்று இவனும் தீர்க்கமாகக் கூறிட,

"சொன்னா கேக்கமாட்டிங்களா? அவ இப்ப யார்கிட்டயும் எதுவும் பேசுற நிலைமையில இல்ல. புரிஞ்சுக்கோங்க. கிளம்புங்க" என்று சரண்யாவும் கூறிட, பொறுமையிழந்தவன்,

"அத நீங்க சொல்லாதீங்க. அவ வந்து சொல்லட்டும். அதோட அவ என்னோட வைஃப். நான் அவள பாக்கக்கூடாதுனு நீங்க எப்படி சொல்லலாம். போனாப் போகுதுனு பொறுமையா பேசுனா பேசிட்டே போறீங்க..." என்று காட்டமாகக் கூறிட,

"உங்க வைஃபா? அது இப்பதான் தெரியுதா? ஹாஸ்பிடல்ல அவள அப்படியே விட்டுட்டுப் போகும்போது தெரியலையா? வைஃப் மாறி எப்ப நடத்திருக்கீங்க? இப்ப வந்து சொல்றீங்க.." என்று ரம்யாவும் கோபமாகக் கேட்டிட, உண்மை தன்னைச் சுட அமைதியானான்.

"இப்ப அவள நான் பாக்கணும். கூப்டுங்க. ப்ளீஸ்..." என்று பொறுமையாகக் கேட்பதை பார்த்து சிறிது வியந்தாலும்,


"இப்ப அவ ரொம்ப மாறிட்டா. புரிஞ்சுக்கங்க. அவ எப்டி ரியாக்ட் பண்ணுவானே தெரியாது. அவளுக்கு எதுவும் ஆச்சுன்னா அப்றம் உங்களையும் எங்களையும் எங்களால மன்னிக்கவே முடியாது.." என்று கூறிவிட்டு உள்ளே சென்று காவ்யாவை அழைத்துவர, காவ்யா வெளிவந்து இவனை பார்த்ததும் கண்கள் கோபத்தில் சிவந்திட, அவனை நோக்கி வேகமாக வந்தவள் அவன் சட்டையை பற்றி அவன் இரு கன்னங்களிலும் மாறிமாறி அடித்தாள். அதில் அனைவரும் அதிர்ந்து நின்றனர்.





❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 21


ராணாவின் கன்னத்தில் மாறிமாறி அடித்தவள் அவன் சட்டையை பிடித்து, "ஏன்டா வந்த? எதுக்காக இங்க வந்த? நானும் உயிரோட இருக்கிறது புடிக்காம சாவடிக்க வந்தியா? சொல்லுடா..." என்று அவனை உலுக்கிட, அவன் அவளை பார்த்தவாறு அப்படியே நின்றிருந்தான். அவள் தோழிகள் இவள் கோபத்தில் செய்வதறியாது நின்றிருந்தனர்.

"எதுக்காகடா என் குழந்தையை சாகடிச்ச? நீயெல்லாம் மனுஷனா? என் கண்ணு முன்னாடியே நிக்காத...போடா..." என்று அவனை பிடித்துத் தள்ள,

"இங்க பாரு காவ்யா. நான் பண்ணது தப்புதான். எதுனாலும் நம்ம வீட்டுக்குப் போய் பேசலாம். இங்க இருக்கவேணாம். வா. போகலாம்" என்று கேட்டு அவள் கரம் பற்றிட, கைகளை பார்த்தவள் இவனை நிமிர்ந்து பார்த்தபடி வேகமாக உதறிவிட்டவள்,

"எங்க கூப்டுற? உன்னோட வீட்டுக்கா? அது வீடு இல்ல..நரகம்! எந்த நம்பிக்கைல என்னய கூப்டு போக வந்த? நான் உன்கூட வருவேன்னு எப்டி நினச்ச..?" என்று கோபமாகக் கேட்பதை பார்த்து அசையாமல் நின்றான், ராணா.

"நான் உன்கூட உன்னய சகிச்சிகிட்டு இத்தனநாள் வாழ்ந்தது நீ எனக்குத் தாலி கட்டிட்டனு கிடையாது. என் வயித்துல வளர்ந்த குழந்தைக்காக.. ஆரம்பத்துல அதை நான் வேணானு நினச்சிருந்தாலும் அதை களைக்க எனக்கு மனசே இல்ல. அந்த நேரத்துலதான் நீயும் என்னய கடத்திட்டுப்போய் கல்யாணம் பண்ணப்போறன்னு சொன்ன. அப்பவே நான் நினச்சிருந்தா எப்டியும் தப்பிச்சிருப்பேன். இல்லன்னா உன்கூட வாழ்றதுக்கு சாவுறதே மேல்னு செத்துக்கூட போயிருப்பேன். ஆனா, நான் உன்னய கல்யாணம் பண்ணிட்டு உன்னய பொறுத்துகிட்டு வாழக் காரணமே அந்தக் குழந்தைதான். அதையே கொன்னுட்ட. இதுக்கப்றம் உனக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்?" என்று கோபமும் அழுகையும் கலந்து பேசிட, அதில் உண்மை உணர்ந்த ராணா திகைத்தபடி நின்றான்.

"காவ்யா...! நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா, தெரிஞ்சு பண்ணல. ஐம் சாரி..! ப்ளீஸ்..! என்கூட வந்துடு. நீயும் இல்லாம என்னால இருக்கமுடியாது" என்று கலங்கிய குரலில் கூறிட,

"அப்ப செத்துப்போ...உன்னால யாருக்கு என்ன யூஸ்? உன்னால உன்னோட புள்ளையவே ஒழுங்கா பாத்துக்க முடியல...அப்றம் எதுக்கு உயிரோட இருக்க? செத்துரு...அப்பக்கூட உன் பொண்டாட்டினு வந்து நான் எந்த சடங்கும் பண்ணமாட்டேன். உனக்கும் எனக்கும் இருந்த சம்பந்தம் அந்தக் குழந்தைதான். அதுவே போனப்றம்
என்ன இருக்கு? இந்த தாலிதானே..." என்று கோபமாகக் கூறயவள் அவள் தாலியை கலட்டி அவன் முகத்தில் வீசினாள்.

"இதையும் எடுத்துட்டுப் போ...நிக்காத...இன்னும் நின்னேனா உன்னய கொல பண்ணவும் தயங்கமாட்டேன்...உன்னய பாத்து பயந்து நடுங்குன காவ்யா என் குழந்தையோடயே செத்துப் போயிட்டா...போடாஆஆஆ..." என்று கோபத்தில் கத்திட, அவள் கோபத்தை கண்ட தோழிகள் அதிர்ச்சியில் விழிவிரித்துப் பார்த்திட, ராணாவும் அதிர்ந்து ஒரு அடி பின்வாங்கினான்.

இப்போது காவ்யா இருக்கும் நிலையில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவன் திரும்பிச் சென்றான். அதன்பின், காவ்யா வேகமாக அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள, தோழிகள் அதிர்ந்தபடி பார்த்தனர். உள்ளே சென்ற காவ்யா கீழே மடிந்து அமர்ந்தவள் கதறி அழுதாள். இவள் அழும் சத்தம் கேட்டுப் பதறியவர்கள் கதவை தட்டிட, "ப்ளீஸ்....யாரும் வராதீங்க...கொஞ்சநேரம் என்னய தனியா விடுங்க..." என்று கதறியபடியே கூறிட, அவர்களும் மௌனம் காத்தனர். இவள் வாழ்வில் படும் துன்பங்கள் எப்போதுதான் விலகும் என்று எண்ணி வருந்தினர்.

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ஒரு வருடத்திற்குப் பின்...

மணமேடை அழகாக அலங்கரித்திருக்க, மண்டபம் எங்கும் மக்கள் கூடியிருக்க, பரபரப்பாகப் பலர் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.

"இந்த மன்த்குள்ள இந்த ஆர்டர்ஸ் முடிச்சாகணும். ஆமா...அந்த ஆர்டர்ஸ் நெக்ஸ்ட் மன்த்...ஓகே! நீங்க பண்ணுங்க. நான் ஈவ்னிங் வந்து பாக்குறேன். இப்ப நான் பங்ஷன்ல இருக்கேன். எதுவும் அவசியம்னா மட்டும் கால் பண்ணுங்க. ஓகே?" என்று பேசிவிட்டு தனது அலைபேசியை அணைத்தவாறு நிமிர்ந்த நடையும் நேர்பார்வையும் கொண்டு கம்பீரமாக வந்தாள், காவ்யா.

இந்த ஒரு வருடத்தில் காவ்யா முழுவதுமாக மாறியிருந்தாள். பழைய காவ்யாவைவிட தைரியமும் தன்னம்பிக்கையும் சற்று மிகையாகவே இருந்தது இவளிடம். தனக்கென சொந்தமாக ஒரு பொட்டீக்கை நிறுவியவள் அவளது திறமையாலும் கடின உழைப்பாலும் தரத்தாலும் ஒரு வருடத்தில் மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்திருக்கிறாள்.

ராணாவை அன்றோடு தனது வாழ்வில் இருந்து முழுவதுமாக அகற்றிட எண்ணியவள் அடுத்த சில தினங்களிலே விவாகரத்துக்கு முறையீடு செய்திருந்தாள். ஆனால், ராணா இவளுக்கு விவாகரத்து வழங்கிட மறுக்கவே அந்த வழக்கு இன்னும் நீண்டு கொண்டே இருந்தது. எனினும், இவள் தோழிகளுடன் பழையபடி சந்தோசமாக வாழத் தொடங்கியிருந்தாள்.

இன்று சரண்யாவிற்கும் நாகவ்விற்கும் திருமணம் நடக்க இருப்பதால் மண்டபமே கோலாகலமாக இருந்தது. காவ்யா யாரிடமோ எதையோ கூறியபடியே மண்டபத்தின் வாசல் நோக்கி நடந்து செல்ல, முன்னாடி வருபவரை கவனிக்காமல் மோதிட, மோதிய வேகத்தில் கீழே விழப்போனவளின் இடையை பற்றி விழாமல் பிடித்திருந்தவனை இவள் நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தாள்.

கோட்சூட் அணிந்து எப்போதும்போல் கம்பீரத்துக்குக் குறைவின்றி முகத்தில் தெரியும் கடுமை இப்போது இல்லாமல் வசீகரப் புன்னகையுடனும் அனல் கக்கும் கண்கள் இப்போது காதலை தெளித்திட காவ்யாவை பார்த்திருந்த ராணாவை பார்த்து அதிர்ந்த காவ்யாவை மெல்ல தூக்கி நிறுத்தினான், ராணா. அவனை கண்கள் முழுவதும் வெறுப்பை தேக்கிவைத்துப் பார்த்தவள் திரும்பிச் சென்றுவிட, சோகப் புன்னகையுடன் உள்ளே சென்றமர்ந்தான்.

திருமணநேரம் நெருங்கிவிட, மணமகனான நாகவ்வை அவன் நண்பர்கள் அழைத்துவந்து மேடையில் அமர வைத்திட, சிறிதுநேரம் கழித்து சரண்யாவை அவள் தோழிகள் அழைத்து வந்தனர்.

சரண்யா வருவதை ஆசையோடு நாகவ் பார்த்திட, வெட்கப் புன்னகையுடன் நடந்து வந்தாலும் சரண்யா இவனை நிமிர்ந்து பார்த்திட, இருவரின் கண்களும் நேரில் சந்தித்தன. அந்தநொடி இருவருக்கும் தங்கள் சுற்றம் மறந்து தங்கள் காதல் பயணம் கண்முன் விரிந்தது.

சரண்யா பணிபுரியும் நிறுவனம் ராமின் நிறுவனம் என்பதால் அதை கண்கானிக்க நாகவ்தான் அடிக்கடி வருவான். அப்போது ஒருநாள் நாகவ் வரும்போது இருவரும் மோதிக்கொள்ள, நாகவ் பொறுமையாக அவளது கோப்புக்களை எடுத்துக்கொடுக்க, அவள் அவனை யாரெனத் தெரியாமல் திட்டியதால் இருவருக்கும் பிரச்சினையாகியது. அதன்பின், அவனை யாரென அறிந்தபின்னும் அவனை தனக்குள் திட்டி தீர்த்துக்கொண்டாள். அனுயாவின் திருமண நிகழ்ச்சியில் மறுபடியும் பார்த்துக்கொண்டாலும் எதுவும் பேசிக்கொள்ளும் நிலையில் இல்லை.

காவ்யாவிற்கு ஆதரவாக இவர்கள் நின்றதை பார்த்து சரண்யாவும் அவனிடம் நல்லெண்ணம் கொண்டாள். அதன்பின், இருவருக்குள்ளும் இருக்கும் மனஸ்தாபம் நீங்கி இருவரும் மோதல் நீக்கி நட்பு பாராட்டிட, நாட்கள் செல்லச்செல்ல நட்பு காதலாய் மாறியது. இப்போது தங்கள் காதல் பயணம் திருமணம் என்னும் புது தொடக்கத்தில் வந்து நின்றிட, எல்லையற்ற மகிழ்ச்சியில் இருவரும் திளைத்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி மணமேடையில் அமர்ந்திருக்க, சுற்றிலும் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடனும் நண்பர்களின் ஆரவாரத்துடனும் சரண்யாவின் கழுத்தில் மங்கல நாணை பூட்டி அவளை தன்னில் பாதியாக்கினான், நாகவ்.

தோழிகள் ஐவரும் நண்பர்கள் நால்வரும் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருக்க, திடீரென பிரபவ் எழுந்துசென்று பழரசத்தை கொண்டு வந்து அனுயாவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அதை கண்டு அனைவரும் புன்னகைத்தவர்கள்,

"இருந்தாலும் பொண்டாட்டிக்கு இப்டி தனி உபசரிப்பு ஆகாதுடா.." என்று நாகவ் கேலி செய்திட,

"நான்கூட காலைல இருந்து எதுவும் சாப்டாம வேலை பாத்திருக்கேன்டா. எனக்கு எதாச்சும் கொடுத்தியா?" என்று விஜய் கேட்டிட,

"விசம் தரவா? குடிச்சிட்டு சாவு" என்று பிரபவ் பதிலுக்குக் கேலி செய்திட,

"நீயா பேசியது....? என் நண்பா! நீயா பேசியது....?" என்று விஜய் சோக கீதம் வாசிக்க, அனைவரும் நகைத்தனர்.

"அவனேதான்டா...பின்ன அப்பதான ஃபுல் கட்டு கட்டுன. அப்றம் பட்டினி..பாயாசம்னா அவன் அப்டித்தான் சொல்வான்" என்று ராம் கேலி செய்திட, விஜய் அமைதியாகத்
தலை கவிழ்ந்தான். அதைப் பார்த்து அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

"அடேய்...நீங்க தரலைனா என்ன? என் பேபி எனக்காக எடுத்துட்டு வருவா...என்னடா மியாகுட்டி?" என்று ரம்யாவை பார்த்துக் கூறிட,

"டேய்! அனு ப்ரக்ணன்டா இருக்கா. அவளுக்கு பிரபா மாமா ஜூஸ் கொண்டு வந்து தராங்க. உனக்கு எதுக்குடா? நீ ப்ரக்ணன்டா இருக்கியா?" என்று ரம்யா நக்கலாகக் கேட்டிட, அனைவரும் அடக்கமுடியாமல் சிரித்தனர்.

"அடியே..! மாமன பாத்து பேசுற பேச்சாடி?" என்று விஜய் கேட்டிட, "நீதானடா கேட்ட. லவ்வர்க்கு ஜூஸ் கொண்டுவந்து கொடுக்காம என்னய கொண்டுவர சொல்ற உன்னயலாம் இதுக்குமேலயும் கேக்கலாம்" என்று அவனை வாரினாள் ரம்யா. அவனும், "ஓகேடா பேபி! உனக்கு ஜூஸ்தான வேணும்? மாமன் எடுத்துட்டு வரேன்மா. இதோ..." என்று கூறி எழுந்து சென்றிட அனைவரும் இவர்கள் கூத்தை பார்த்துப் புன்னகைத்தனர்.

பிரபவ் அனுயா திருமணத்தில் தான் இருவரும் முதலில் சந்தித்தனர். அப்போதே இருவரின் விளையாட்டுத்தனமான குணத்தின் காரணத்தால் ஒருவருக்கொருவர் பிடித்துப்போனது. நாட்கள் செல்லச்செல்ல அவர்களது பழக்கமும் வளர்ந்து காதலாகியது. எப்போதும் சண்டைக்கோழிகளாக
வலம் வந்தாலும் இவர்களது ஆழமான காதலையும் விட்டுக்கொடுக்கும் பண்பையும் இருவரின் நண்பர்களும் நன்கு அறிவார்கள்.

அனுயா மூன்று மாதம் கருவுற்றிருப்பதால் அவளை ஓய்வெடுக்க அழைத்துச் சென்றான், பிரபவ். இங்கே மற்றவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான், ராணா.

காவ்யாவிற்கு இவன் இழைத்தக் கொடுமை தெரிந்தபின் நண்பர்கள் நால்வரும் அவனிடம் இதுவரை பேசிக்கொள்ளவில்லை. தொழில் சம்பந்தமாகப் பேச நேர்ந்தாலும் அதை மட்டுமே பேசுவார்களே தவிர, அதைத் தாண்டி ஏதும் பேசமாட்டார்கள். பெரியவர்கள் இவன்மீது கோபம் கொண்டாலும் தாங்கள் கொண்ட பிள்ளை பாசத்தால் இவனிடம் நீண்டநாட்கள் பேசாமல் இருக்கமுடியவில்லை. ஆனால், நண்பர்களிடத்தில் ராணாவும் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் தோற்றுப் போனான். எப்போதும் பிடிவாத குணம் காட்டும் இவன் அப்போதே அவர்களின் பிடிவாத குணத்தை அறிந்தான். அவர்களின் அன்பு கிடைக்கும்போது நன்றாக அனுபவித்திடாதவன் இப்போது அதற்காக ஏங்கினான்.

ராணா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இவர்கள் இருப்பதை பார்த்த காவ்யா, "எதுக்காக நீங்க அவன்கிட்ட பேசாம இருக்கீங்க? எனக்காக பேசாம இருக்கீங்கன்னா..ப்ளீஸ்! அப்டிலாம் இருக்கவேணா. போய் பேசுங்க. ஃப்ரண்ட்ஸ பிரிஞ்சு இருக்கிறது எவ்ளோ வலின்னு எனக்கும் தெரியும். என்னால அதை நீங்க அனுபவிக்க வேணா. அதை நானும் ஏத்துக்கமாட்டேன். புரியுதா?" என்று காவ்யா கவலையாகத் தொடங்கி உறுதியாக முடித்திட, அதை கேட்ட நண்பர்கள்,

"உங்களுக்காக மட்டும் நாங்க அவன்கூட பேசாம இல்ல. அவன் உங்களுக்குப் பண்ண அநீதியினால எங்களுக்கும் அவன் துரோகம் பண்ணிட்டான். அவன்மேல நாங்க வச்ச நம்பிக்கைய உடச்சுட்டான். அத எங்களால அவ்ளோ சீக்கிரத்துல மன்னிக்க முடியாது.." என்று நாகவ் உறுக்கமாகக் கூறிட, காவ்யாவும் அமைதியானாள்.

"நீங்க ஒரு உண்மைய மட்டும் சொல்லுங்க" என்று ராம் அவளிடம் கேட்க, அவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்த்தாள்.

"நீங்க நினைச்சா கோர்ட்ல அவன் பண்ண தப்ப சொல்லிருக்கலாம். உங்களுக்கு அவன் பண்ண கொடுமையை மட்டும் நீங்க சொல்லிருந்தா உங்களுக்கு டிவோர்ஸ்ம் ஈசியா கிடைச்சிருக்கும். அதோட அவனுக்குத் தண்டனையும் கிடைச்சிருக்கும். எதுக்காக நீங்க சொல்லாம இருக்கீங்க?" என்று ராம் கேள்வி எழுப்பிட, ஒருநொடி அதிர்ந்தவள் மறுநொடி இமை மூடித்திறந்து,

"உங்களுக்காக தான்" என்று கூறிட, அவளை அதிர்ச்சியுடன் நோக்கினர்.
"ஆமா. அவன் எனக்குப் பண்ணத மறக்கமுடியாம போகலாம். ஆனா, அத நான் எப்பவோ ஏத்துகிட்டு அதுல இருந்து மீண்டு வந்துட்டேன். இப்ப அது எனக்கு பெருசாவே தெரியல. என்னோட லைஃப நான் வாழ ஆரம்பிச்சுட்டேன். அதுக்காக அவன என்னால மன்னிக்க முடியாது. அதான் அவனவிட்டு பிரிய நினைக்கிறேன். ஆனா, தெரிஞ்சோ தெரியாமலோ அவனால நடந்த நல்ல விஷயம்னா அது நீங்க எனக்கு கிடைச்சதுதான். என் ஃபிரண்ட்ஸ் மட்டும்தான் எல்லாமேனு நினச்சுட்டு இருந்தேன். எனக்கு அம்மா அப்பானு என்மேல அன்ப காட்ட இத்தனை சொந்தம் கிடைச்சிருக்கு. அதுக்குமேல தன்னோட நண்பனையே எதிர்த்து எனக்காக சப்போர்ட் பண்ணி துணையா நிக்கிற நீங்க. இத்தனைபேர தந்தவனுக்கு அவ்ளோ பெரிய தண்டனை கொடுக்க எனக்கு மனசு வரல. அதான்.." என்று கூறி முடித்திட, அனைவரும் வியந்தனர். தனக்கு இத்தனை அநீதி இளைத்தவனுக்கும் இப்படி பாவம் பார்க்கிறாளே! என்று அவளை எண்ணி வியப்பும் பெருமையும் உண்டானது அவர்களுக்கு.

"நிஜமாவே நீங்க ரொம்ப நல்லவங்க. இது தெரியாம அவன் முட்டாள்தனமா நடந்துகிட்டத நினைக்கும்போது எங்களுக்கே கோபமா வருது..." என்று விஜய் விரக்தியில் பேசிட,


"ஆமா. அவன் சொன்ன பொய்க்கதை மாறியேகூட உங்கள லவ் பண்ணி அவன் மேரேஜ் பண்ணிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்னு தோனுது...எப்பவும் நீங்க எங்க அண்ணியாவே இருந்திருப்பீங்கல்ல..." என்று நாகவ் சோகத்துடன் பேசிட, அதைப் பார்த்த காவ்யா புன்னகையுடன்,

"கல்யாண மாப்பிள்ள இப்படி டல்லாகலாமா? இப்ப என்னாயிடுச்சு? இப்பவும் அண்ணினு கூப்டணுமா? அப்டியே கூப்டுங்க...ஒன்னும் பிரச்சினை இல்ல" என்று சமாதானமாகக் கூறிட, அதை கேட்டவர்கள் முகம் மலர்ந்தனர். அவள் ராணாவிடம் இருந்து பிரிந்து சென்ற நாளிலிருந்து அவளை அண்ணியென அழைத்து சங்கடப்படுத்த விரும்பாததால் அப்படி அழைக்கவில்லை. இன்று அவளே சம்மதம் தந்தது மனதுக்கு நிறைவாக இருந்தது அவர்களுக்கு.

"ஓகே! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன்" என்று கூறி எழுந்துசெல்லப் போனவள்,

"இப்பவும் சொல்றேன். எனக்காக அவன்கூட நீங்க பேசாமலாம் இருக்கவேணா" என்று கூறிவிட்டுச் சென்றாள். தோழிகளும் நண்பர்களும் அமைதியாக இருந்தனர். "அவதான் அவ்ளோ சொல்றால்ல போய் பேசலாம்ல.." என்று தோழிகளும் எடுத்துக்கூறிட, ஒரு மனதாய் மூவரும் எழுந்து ராணாவிடம் சென்றனர்.

இவ்வளவுநேரம் காத்திருந்தும் எவரும் தன்னை கண்டுகொள்ளவும் இல்லை என்பதால் வருத்தமாக எழுந்து செல்ல எத்தனிக்க, இவர்கள் ராணாவின் தோளை தொட்டனர். அதில் திரும்பி இவர்களை பார்த்து ராணா ஆனந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றிட, அவன் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அதை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் நிற்க, அவன் இவர்களை வாரியணைத்தான். வெகு நீண்ட நாட்களுக்குப் பின் நண்பர்கள் இணைந்திட நால்வரின் கண்களிலும் கண்ணீர் கசிந்திட அணைப்பில் திளைத்தனர். நீண்டநேர அணைப்பிற்குப் பின் விலகியவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

"என்கிட்ட வர்றதுக்கு இத்தனை நாள் ஆச்சாடா உங்களுக்கு?" என்று ராணா வருத்தமாகக் கேட்டிட,

"நீ பண்ண தப்பு அப்டி. திருத்தக்கூடிய தப்பையா நீ பண்ணிருக்க?" என்று ராம் கேட்டிட, மௌனமே பதிலாக அளித்தான், ராணா.

"நீ எங்ககிட்டயும் எல்லாத்தையும் மறைச்சு பொய் சொல்லி நீ பண்ண தப்புல எங்களையும் ஏதோ ஒரு விதத்துல ஈடுபடுத்திருக்க. எப்டி கோபம் வராம இருக்கும்?" என்று நாகவ்வும் கேட்டிட,

"சாரிடா! நான் பண்ணது தப்புதான். உங்ககிட்ட இருந்து மறைச்சிருக்கவும் கூடாது. ஆனா, அப்ப நான் இருந்த கோபத்துல நான் பண்ணதுதான் கரெக்ட்னு தோனுச்சு. உங்ககிட்ட பின்னாடி சொல்லிக்கலாம்னு நினச்சு விட்டுட்டேன். உங்களையும் கஷ்டபடுத்திட்டேன்டா. சாரிடா..!" என்று ராணா மனதார வருந்துவதை பார்த்தவர்களுக்கும் மனம் சற்று கரைந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டனர்.

"சரிடா. நாங்க உன்னய மன்னிச்சிடுறோம். நம்ம பழையபடியே ஹேப்பியா இருக்கலாம்...ஆனா.." என்று விஜய் கூறி நிறுத்திட, மகிழ்ச்சியாகக் பார்த்த ராணா கேள்வியாய் நோக்கினான்.

"ஆனா...ஒரு கண்டிஷன். நீ காவ்யாவுக்கு டிவோர்ஸ் கொடுக்கணும். இப்பவர நீ கொடுக்கமாட்டேன்னு சொல்றதாலதான் டிவோர்ஸ் கிடைக்கல. நீயும் ஒத்துக்கோ" என்று ராம் உறுதியாகக் கூறிட, ராணா அதிர்ந்து நோக்கினான்.

"அவங்க இதுக்கு மேலயாச்சும் சந்தோசமா நிம்மதியா வாழட்டும்டா. ப்ளீஸ்...! அவங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்துரு" என்று நாகவ்வும் கூறிட ராணா அதை கேட்டு உடைந்தான். மூவரும் அவனை கேள்வியாகப் பதிலுக்கு எதிர்ப்பார்த்து நோக்கிட, தொண்டையை செறுமியவன்,

"நீங்களுமாடா என்னய புரிஞ்சுக்கல? நான் தப்பு பண்ணிட்டேன்தான். அதுக்காக எப்பவுமே அதே தப்ப பண்ணுவேனா? இதுவரை நான் எதாச்சும் தப்பான காரியத்த செஞ்சிருக்கேனா? காவ்யா விஷயத்துல மட்டும்தான் நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா, அதை திருத்திக்கதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்டா. எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்டி சொல்றீங்களேடா..." என்று வருந்தினான்.

****************************************

ஒரு வருடத்திற்கு முன்...

காவ்யாவிற்குப் பிறந்த குழந்தை இறந்தே பிறந்திட, அதை கையில் ஏந்திய ராணா எதுவும் பேசாமல் அவன் வரவழைத்த காரில் ஏறினான். கார் ஓட்டுநரிடம் தனது நண்பர்களின் அலைபேசி எண்ணை கொடுத்து அதை வரவேற்பில் இருப்பவரிடம் கொடுத்து விபரத்தை சொல்லுமாறு கூறியவன், அதன்பின் அவன் வீட்டிற்குச் சென்றான். இவன் கூறச் சொன்னதாலே அன்று இவன் நண்பர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அந்தச் சூழ்நிலையில் எவரும் அதைபற்றி சிந்திக்கவில்லை.

வீட்டிற்கு வந்தவன் குழந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது வீட்டுக்குள் வந்தவன் இருக்கும் வேலையாட்கள் அனைவருக்கும் ஒருவாரம் விடுமுறை கொடுத்து அனுப்பினான். அதன்பின், அறைக்குள் வந்தவன் அமைதியாகச் சோர்ந்துபோய் மெத்தையில் அமர்ந்தவனின் சிந்தனை அவன் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப் பார்த்தது.

சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை இழந்து அன்பிற்காய் ஏங்கிய தருணங்கள், அதன்பின் தானாக முயன்று முன்னேறிய வெற்றிப் பயணங்கள், தன் நண்பர்கள் என ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தவன் காவ்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.

ஆரம்பத்தில் காவ்யாவிடம் தவறாக நடந்துகொண்டது கோபத்தில் செய்த செயல் என்றாலும் ஒரு பெண்ணிடம் இவ்வாறு தவறாக நடந்து கொண்டதை எண்ணி அவனுக்கே வெறுப்பாக இருந்தது. ஆனால், ஒவ்வொருமுறையும் அவனது கோபத்தை தூண்டுவதைப் போலவே காவ்யாவின் செயல்களும் தெரிந்ததால் இவன் அதைபற்றி மேலும் சிந்திக்கவில்லை. அவளை பழி வாங்கவும் தான் செய்த தவறையும் ஈடுகட்டும் செயலாகவும் எண்ணியே காவ்யாவை திருமணம் செய்துகொண்டான்.

ஆனால், அவள் கருவுற்றிருப்பது தெரிந்தபின் அவள்மேல் கொண்ட கோபத்தில் அவளை வார்த்தைகளால் நோகடித்தாலும் போகப்போக அவனது குழந்தைமேல் பாசம் காட்ட ஆரம்பித்தான். அதற்குக் காரணம், அவனது பெற்றோரே அவனிடம் குழந்தை ரூபத்தில் திரும்பி வருகிறார்கள் என்று அவன் நம்பினான். அதனாலேயே அந்தப் பிறவாக் குழந்தைமேல் உயிரையே வைத்துக் காத்திருந்தான்.

அந்தக் குழந்தைக்காக காவ்யாவை கண்ணுங்கருத்துமாகக் கவனிக்கத் தொடங்கியவன் காலப்போக்கில் அவளது உண்மை குணம் அறிந்து அவள்மீதும் அன்பு வளர்த்தான். மாதங்கள் உருண்டோட, தனக்கும் குழந்தை பிறக்கப்போவதையும் காவ்யாவுடனும் பிறக்கும் குழந்தையுடனும் மகிழ்ச்சியாக தான் வாழும் வாழ்வைப் பற்றி கனவு காண ஆரம்பித்தான். காவ்யாவிடமும் தன் அன்பையும் அக்கறையானக் கோபத்தையும் காட்டி அவளை குழம்பவும் செய்தான்.


அவன் கண்ட கனவுகள் எல்லாம் ஒரே நாளில் கானலாக மாறியதை அவனால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதோடு தானே அதற்குக் காரணமாக அமைந்ததால் அவனுக்கே அவன்மீது கோபமாக வந்தது. சிந்தனைகளில் உலன்றவன் கோபத்தில் எழுந்து அறையில் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் தாறுமாறாக உடைத்தெறிந்தான். உடைபட்ட பொருட்களில் பல இவனையும் பதம் பார்த்தது. அனைத்தையும் உடைத்தவன் சோர்ந்து கீழே அமர்ந்தான்.

"எதுக்காக? ஏன் இப்டி? நான் அன்பு வைக்கிறவங்க எல்லாருமே என்னயவிட்டு ரொம்பதூரம் போயிடுறாங்களே ஏன்....?" என்று தனக்குள் புலம்பியவன் மறுநொடி சிந்தித்து,

"இல்ல...என் குழந்தைய நான்தான் கொன்னுட்டேன். நானே என் கையால கொன்னுட்டேன்...நான் மட்டும் கோபத்த கண்ட்ரோல் பண்ணிருந்தேன்னா கார ஸ்பீடா ஓட்டாம இருந்திருந்தேன்ன என் குழந்தையும் என்னவிட்டு போயிருக்காது. நான்தான் காரணம்....எல்லாத்துக்கும் கோபப்பட்டு கடைசில என் குழந்தைய அதுக்கு பழியாக்கிட்டேன்.." என்று தானாகப் பேசியவன் வெறிப்படித்தவன்போல் கத்தினான். அவன் கண்ணில்பட்ட பொருட்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தான்.

ஒருவாரம் முடிய, விடுமுறை முடித்து விரைவிலேயே கமலாம்மா ராணாவின் வீட்டிற்கு வந்து கதவை திறந்து உள்ளே வர, வீட்டை பார்த்து அதிர்ந்தார். வீடு முழுவதும் பொருட்கள் உடைந்து சிதறிக் கிடந்தன. அதை பார்த்தவாறே ராணாவை தேடிட, அவனை காணாததால் மேலிருக்கும் அவனது அறைக்குச் சென்றார். கதவு திறந்தே கிடத்ததை பார்த்து சந்தேகித்து உள்ளே நுழைய, அங்கே ராணா இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் சிலையாகினார்.






❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 22


ராணா தலையிலும் உடலிலும் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த கமலாம்மா பதறிப்போய் வீட்டில் எவரும் இல்லாததால் அவனின் நண்பர்களுக்கு அழைப்புவிடுத்து விசயத்தை கூறினார். இதனைக் கேட்டு அதிர்ந்தவர்கள் அடுத்த பதினைந்து நிமிடத்தில் இங்கு வந்தவர்கள் ராணாவை தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை நடந்திட, நண்பர்கள் நால்வரும் பதைபதைக்கும் நெஞ்சுடன் வெளியே நின்றிருந்தனர்.

கடந்த ஒருவாரமும் ராணா சாப்பிடவும் செய்யாமல் தூங்கவும் செய்யாமல் வெறிப்பிடித்தவன்போல் நடந்துகொண்டதால் ஏற்பட்ட அடியும் காயங்களும் உடல் சோர்வும் மன அழுத்தமும் சேர்ந்தே அவனை இந்நிலைக்குக் கொண்டுவந்திருந்தது. இதை கமலாம்மாவின் மூலம் கேட்டு உண்மையை உணர்ந்துகொண்டனர்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த மருத்துவர் அவன் ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாகக் கூறியதுடன் அவனுக்கு ஓரிரு வாரங்கள் நன்றாக ஓய்வு அவசியம் என்றும் கூறிச் சென்றார். ராணா கண்விழிக்கும்வரை அங்கேயே இருந்த நண்பர்கள் நால்வரும் அவர்கள் பெற்றோர்களை வரவைத்துக் கவனிக்கச் சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர், அவன்மீது இருந்த கோபத்தினால். இப்போது இவன் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பதற்கும் அவன் செய்த பாவமே காரணம் என்று எண்ணிக்கொண்டனர்.

இருந்தாலும், இவனது இந்த வெறிச் செயலுக்கானக் காரணத்தை அறிந்து கொள்கையில் அவர்களுக்கே அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. ராணா பிறவாத குழந்தைமீது இவ்வளவு பாசம் வைத்திருந்தானா? என்று எண்ணும்போது அதிர்ச்சியாகவும் அந்தக் குழந்தையுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லையே...என்ற வேதனையும் அவர்களையும் ஒட்டிக்கொண்டது. அவனது நிலைக்கு அவனே காரணமாகிப் போனான் என்று எண்ணுகையில் விரக்தி ஏற்பட்டது அவர்களுக்கும்.

இரண்டு வாரங்கள் பெரியவர்களின் கவனிப்பில் உடலளவில் நன்றாகத் தேறியிருந்தாலும் மனதளவில் தன் குழந்தை, காவ்யா மற்றும் நண்பர்களை எண்ணி ஏங்கினான். வீடு வந்தபிறகு இருந்த சிலநாட்களிலும் வீட்டின் ஒவ்வொரு இடமும் காவ்யாவை நினைவுபடுத்த, அவளின் நிலையையும் எண்ணிப் பார்த்தவன் அவளுக்கு ஆறுதல் கூறும் வழியில் தனக்கும் ஆறுதல் தேடிட அவளை காணச் சென்றான்.

அப்போதே காவ்யாவும் இவனிடம் கோபம்கொண்டு பேசிட, அவள் கூறிய உண்மைகள் இவனை சாட்டையாய் அடித்தது. குழந்தையின் மறைவுக்கு ஆறுதல் தேடி அவன் வந்திட, ஆறுதல் கூறும் நிலையிலும் கேட்கும் நிலையிலும் அவள் இல்லை என்பதை உணர்ந்து வலியுடன் திரும்பிச் சென்றான்.

அவனது நண்பர்களும் அவனுடன் இல்லாததால் வாழ்க்கை மொத்தமும் வெறுமை படர்ந்ததாய் உணர்ந்தவனின் மனம் பாரமாகிட, கண்கள் தன்னை அறியாமலே நீண்ட காலத்திற்குப் பிறகு கண்ணீர் சிந்த ஆரம்பித்தது. எவ்வளவுநேரம் அழுதிருப்பான் என்றே தெரியாமல் கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தவன் வீட்டினுள்ளேயே சிறைபட்டுக்கொண்டான்.

எதிலும் ஈடுபாடு இல்லாமல் வாழ்க்கையே வெறுத்திருந்தவனுக்கு வாழ காவ்யா ஆதாரமாய் மாறினாள். அவள்மீது கொண்ட கோபம் எப்போதோ மறைந்து அன்பாய் மாறியிருக்க, அந்த அன்பு அவனையறியாமல் காதலாய் மாறியிருந்தது. அவளிடம் அன்பையும் அரவணைப்பையும் நாடி ஏங்கத் தொடங்கினான். அவளுடன் இனியாவது சந்தோசமான வாழ்வை வாழவேண்டும் என்ற எண்ணம் ஒன்றே அவனை மனிதனாக வாழ வைத்திருந்தது.

நண்பர்களுக்காகத் தொழிலில் பழையபடி கால் பதித்தான். அவர்கள் இவனிடம் பேசும் இடம் அது ஒன்றுதான் என்பதற்காகவே அவர்களிடம் பழகுவதற்காகவே தொழிலில் ஈடுபட்டிருந்தான். ஆனாலும், இவன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிக்கொண்டே போனது.

மறுபக்கம் காவ்யா விவாகரத்து கேட்டு முறையீடு செய்திருக்க, அவன் நம்பிக்கை சுக்குநூறாக உடையத் தொடங்கியது. இருந்தாலும், எளிதில் விட்டுவிடும் குணம் அல்லவே ராணாவுடையது. அதனால், அவளுக்கு விவாகரத்து கொடுக்காமல் மறுத்துவந்தான். காவ்யாவும் இவன் அவளுக்கு இழைத்தக் கொடுமையைக் கூட கூறாதது அவளுக்கு இவன்மேல் சிறிதளவு அக்கறையாயினும் இருக்கின்றது என்று எண்ணி நம்பிக்கை கொண்டான்.

காவ்யாவை பார்க்கச் சென்றாலும் அவள் இவன் முகத்தில்கூட முழிக்காத காரணத்தினால், இந்த வழக்குத் தொடர்பாக வரும்போதாவது அவளை பார்க்க நேர்கிறதே என்றெண்ணி மகிழ்ந்துகொண்டான்.

****************************************

"நான் இப்ப பழையமாறி இல்லைனு உங்களுக்கும் நல்லாவே தெரியும். அப்றமும் எதுக்குடா இப்டி பேசுறீங்க?" என்று வேதனையுடன் வினவிட,

"நீ ஏற்கனவே பண்ண தப்ப நீ வேணா மறந்திருக்கலாம்டா. ஆனா, அவங்க எப்டி மறந்திருப்பாங்க? அவங்க உன்னால பட்ட கஷ்டம் கொஞ்சமாடா? தினம்தினம் கஷ்டப்பட்டுருப்பாங்கல்ல?" என்று நாகவ் கூறிட,

"உன்கூட அவங்க இருந்ததுக்குக் காரணமே உங்க குழந்தைதான். நீ பண்ண எல்லாத்தையும் ஏத்துகிட்டு வாழ்ந்தாங்க அதுக்காக. அதையும் நீ கை நழுவ விட்டுட்டியேடா...பின்ன எப்டி உன்னய மன்னிச்சு ஏத்துக்குவாங்க?"
என்று ராமும் ஆதங்கப்பட,

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்டா. எனக்கு நீங்களும் காவ்யாவும் வேணும்டா. நீங்க என்கூட பேசுங்க. நீங்க என்கூட இருந்தாலே போதும். அவளையும் நான் சமாதானப் படுத்திடுவேன்டா" என்று நம்பிக்கையுடன் கூறியவனை விரக்தியாய்ப் பார்த்த விஜய்,

"எப்டி சொல்ற இவ்ளோ நம்பிக்கையா?" என்று கேட்டிட, "அவ நினைச்சிருந்தா நான் பண்ண தப்ப சொல்லி டிவோர்ஸ் வாங்கிருக்க முடியும்ல? ஆனா, அவ பண்ணலைனா அதுக்கு என்மேல இருக்க ஏதோ அக்கறைதான காரணம்? கூடிய சீக்கிரமே அந்த அக்கறை காதலா மாறும்டா" என்று ராணா கூறிட,

"நீ எப்பவுமே உன்பக்கமே யோசிக்கிறத இப்பக்கூட மாத்திக்கலைல? அவங்க உன்னபத்தி சொல்லாததுக்குக் காரணம் நாங்களும் நம்ம குடும்பமும். எங்களுக்காகத்தான் அவங்க இன்னும் எதுவும் சொல்லாம இருக்காங்க. அத புரிஞ்சுக்கோ" என்று விஜய் கூறிட, ஒருநொடி அதிரச்சியாகினான். அவனிடம் காவ்யா கூறியதை கூறியதும் வருந்தித் தலைகுனிந்தான்.

"நீ எப்பவுமே உன்னயபத்தி மட்டும்தான யோசிப்ப? மத்தவங்க ஃபீலிங்ஸ் பத்தி என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா? அப்டி யோசிச்சிருந்தா உனக்கு காவ்யாவோட கஷ்டம் புரிஞ்சிருக்கும். நீ பழி வாங்குனா பயப்படணும். பாசம் காட்டுனா சிரிக்கணுமா? அவங்களுக்குனு எந்த ஃபீலிங்க்ஸ்ம் இருக்கக்கூடாது அப்டித்தான?" என்று நாகவ் கோபமாகக் கேட்டிட, ராணா தான் செய்த தவறு கண்முன் தெரிய அமைதியாக நின்றான்.


"இப்பக்கூட எங்களுக்கு உன்மேல கோபம்தான். ஆனா, அவங்கதான் உன்கிட்ட பேசச் சொன்னாங்க. நீ எங்களுக்கு மட்டும் துரோகம் பண்ணிருந்தாக்கூட மன்னிச்சிருப்போம். ஆனா, ஒரு பொண்ணோட நிம்மதிய அழிச்சிட்ட. இப்பவும் அவங்களுக்கு இதுல விருப்பம் இருந்து உன்னய மன்னிச்சு ஏத்துகிட்டா ஓகே. ஆனா, அவங்க விருப்பம் இல்லாம அவங்க நிழலக்கூட நீ நெருங்க நாங்க விடமாட்டோம்" என்று ராம் உறுதியாகக் கூறிட, ராணா மௌனமாய் நின்றான். மூச்சை இழுத்துவிட்டவன் அவர்களை பார்த்து,

"என்மேல நம்பிக்கை வைங்கடா. இந்த ஒருமுறை சான்ஸ் கொடுங்க. கண்டிப்பா நான் என்னய ப்ரூவ் பண்றேன். எனக்கு அவகூட வாழணும் டா சந்தோசமா...அந்த நம்பிக்கைலதான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவகிட்ட என்னய நெருங்கவே விடமாற்றா..ஒருதடவ அவகிட்ட பேசணும். பேசினா எதுவோ ஒன்னு க்ளியராகிடும். ப்ளீஸ்டா....! இந்த ஒருதடவ ஹெல்ப் பண்ணுங்க" என்று கேட்டுக்கொண்டிருக்க, அந்நேரம் பிரபவ்வும் அவர்களிடத்தில் வந்துசேர்ந்தான்.

"நானும் நீ பேசினத கேட்டேன்டா. நீ மாறிட்டனு எப்பவோ எங்களுக்குத் தெரியும். ஆனா, நீ இன்னும் திருந்திட்டியானு தெரியல. உனக்கு இந்த ஒருதடவ வாய்ப்பு கொடுக்கலாம்னு தோனுது. அதுவும் உனக்காக மட்டும் இல்ல. காவ்யாவோட லைஃப நினைச்சும்தான். ஆனா, அவங்களுக்குப் பிடிக்கலைனா அதோட விட்டுடணும். ஓகேவா?" என்று கேட்டிட, மகிழ்ந்த ராணா அவனை கட்டிக்கொண்டான். பிரபவ் இன்னும் அணைக்காமல் இருப்பதை உணர்ந்த ராணா,

"இன்னும் கோபம் போகலையா? அவளுக்குத்தான ஒரு சான்ஸ் கொடுத்தீங்க. உங்களுக்குமாடா? நீங்களாச்சும் பேசலாம்ல?" என்று முகத்தை சுருக்கிக் கேட்டிட,

"காவ்யா உன்னய மன்னிச்சிட்டாங்கனா நாங்களும் உன்னய மன்னிச்சிடுவோம். அவங்க உன்னய மன்னிக்காட்டியும் பரவால்ல நீ அவங்களுக்கு டிவோர்ஸ் கொடுத்திடு. அப்றம் நாங்க பழையபடி பேசுறோம்" என்று பிரபவ்வும் அவர்கள் கூறியதையே கூறிட, நால்வரும் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தனர்.

"என்னய டேமேஜ் பண்ணணும்னா மட்டும் உங்க மூளை ஒரேமாறியே யோசிக்குமே..." என்று கூறி ராணா சலித்துக்கொள்ள, மற்றவர்கள் மென் புன்னகை பூத்தாலும் அதை மறைத்துச் சமாளித்துக்கொண்டனர்.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தத் தோழிகளும் நிம்மதியுடன் புன்னகைத்தனர். இத்தனை மாதங்களும் தன் நண்பனிடத்தில் கோபம் கொண்டாலும் இவர்களும் உள்ளுக்குள் பட்டப் பாட்டை தோழிகளும் உடனிருந்து நன்கு பார்த்திருந்தனர். அதனால், இவர்கள் இணைந்ததில் யாருக்கும் பெரிதாக எந்தக் கோபமும் ஏற்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே நிறைந்தது.

திருமணச் சடங்குகள் முடிந்து சரண்யாவும் புகுந்தவீடு சென்றுவிட, இப்போது காவ்யா, தன்யா, ரம்யா மட்டுமே வீட்டில் இருந்தனர். இருவரின் பிரிவு வருத்தமளித்தாலும் அவர்களது ஆனந்தமான வாழ்வு இவர்களுக்கு மகிழ்ச்சியளித்தது.

ஒருநாள் விடுமுறை நாளன்று காவ்யா, தன்யா, ரம்யா வீட்டில் இருக்கும்நேரம் அனுயா, பிரபவ், சரண்யா, நாகவ், விஜய், ராம் ஆகிய அனைவரும் இவர்களை பார்க்க வந்திருந்தனர். நாள் முழுவதும் அரட்டையடித்து, சமைத்து, சாப்பிட்டு நேரத்தை கழித்தவர்கள், மாலைநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் நால்வரும் ராணாவை பற்றி பேசத் தொடங்கினர்.

காவ்யாவிடம் அன்று ராணா பேசிய அனைத்தையும் கூறிட, காவ்யாவுக்குக் கோபம் தலைக்கேறியது. அவளது கோப முகத்தை பார்த்தே அனைவரும் உணர்ந்துகொண்டு பேச்சை நிறுத்தினர். அவளை பயத்துடன் நோக்கிட,

"அவன்தான் சொன்னான்னா நீங்களும் வந்து சொல்றீங்க? உங்கமேல தப்பில்ல. நீங்க நடந்தது எதையும் பாக்கலைல..." என்று கூறி நிறுத்திட, பதறியவர்கள்,

"சாரி! எங்களுக்குத் தெரியாது. அதனால நாங்களும் பேசிருக்கக்கூடாது. சாரி அண்ணி!" என்று நாகவ் கூறிட,

"உங்கள ரொம்ப டார்ச்சர் பண்ணானா? சொல்லுங்க அண்ணி...ப்ளீஸ்..! அவன உண்டு இல்லைனு பண்றோம்" என்று ராம் வருத்தமாகக் கேட்டிட,

"அடிச்சு கொடுமை படுத்தல. முதல்ல கொடூரமா நடந்துகிட்ட அந்த நாளுக்கு அப்றம் அவன் என்னய தப்பான பார்வையிலகூட பாத்தது கிடையாது. ஆனா, அவன் வார்த்தைகள் என்னய பழி வாங்கணும்ங்கற ஒரே எண்ணத்துல மட்டும்தான் வெளிப்படும். என்னய ஹர்ட் பண்ணணும்னு வேணும்னே நிறைய விசயத்த பேசிருக்கான். அதெல்லாம் உங்ககிட்ட சொல்லக்கூட முடியாது. விடுங்க... ஆனா...ஒரு மனுசன் எப்டி இந்தளவுக்குக் கோபமானவனா இருக்கமுடியும்?" என்று காவ்யா வேதனையில் ஆரம்பித்துக் கேள்வியுடன் முடித்திட,

"ஏன்? நீ இல்லையா? அந்தமாறிதான்" என்று சரண்யா சட்டெனக் கூறிவிட்டு நாக்கை கடித்துக்கொள்ள, மற்றவர்கள் அவளை அப்பாவியாக 'ஏன்டி?' என்பதைப்போல் பார்த்திட, காவ்யா அவளை முறைத்தவாறே,

"நான் கோபமா நடந்துக்குறேன்னா அதுக்குக் காரணம் நான் ஒரு பொண்ணு. அதோட அப்பா அம்மா இல்லாம அநாதையா வளர்ந்தவ. யாரும் என்மேல அனுதாபம் காட்டவோ அட்வாண்டேஜ் எடுத்துக்கவோ கூடாதுனு அப்டி இருந்தேன். போகப்போக, அது என்னோட கேரக்டரா மாறிடுச்சு" என்று கூறிட,

"அதுதான் தெரியுமேடி எங்களுக்கும். அவதான் லூசுமாறி பேசுறான்னா நீயும் விளக்கணுமா?" என்று அனுயா ஆதரவாகக் கூறிட,

"ஆமா! அதோட காவ்யா எப்பவுமே கோபப்பட்டானா அதுக்கு சரியான காரணம் இருக்கும். யாரும் தப்பா நடந்தாதான் கோபப்படுவா" என்று ரம்யாவும் பேசிட,

"ராணாவும் அண்ணிய மாறியேதான்..." என்று விஜய் கூறிட, அவனை காவ்யா முறைத்திட, அமைதியானான்.

"நிஜமாவேதான் காவ்யா. அவனும் சின்ன வயசுல ரொம்ப ஜாலி டைப்" என்று பிரபவ்வும் கூறிட, "நான் ஒன்னும் அவ்ளோ ஜாலி டைப் கிடையாது. அதோட இந்தக் கோபம் என்கூடவே பொறந்தது. எப்பவுமே இருக்கும்" என்று முந்திக்கொணடு கூறி இதழை சுளித்திட, அனைவரும் புன்னகைத்தனர்.

"அவர சொல்ல விடுடி" என்று தன்யா கூறிட, அமைதியானாள்.

"ராணா சின்ன வயசுல எல்லார் மாறியும் துருதுருனுதான் இருந்தான். அவனுக்குப் பன்னெண்டு.. பதிமூனு வயசு இருக்கும்போது அவன் அப்பா அம்மா ஃப்ளைட் க்ராஷ்ல இறந்துட்டாங்க.." என்று பிரபவ் கூறி நிறுத்த அனைவரும் வருத்தமாகப் பார்த்தனர்.

"அதுக்கப்றம் அவனே மொத்தமா மாறிட்டான். முன்னாடி மாறி சிரிக்க மறந்துட்டான். அவனோட ஜாலி டைப் அப்டியே மறைஞ்சி இறுக்கமா மாறிட்டான்" என்று நாகவ் கூறிட,

"நாங்களும் எங்க அப்பா அம்மாவும் எவ்ளோதான் அவன்மேல அன்பு காட்டினாலும் அவனுக்குள்ளயே ஒரு கோடு போட்டு அதவிட்டுத் தள்ளியேதான் இருந்தான்" என்று விஜய் கூறிட,

"சொல்லப்போனா அவன் கடைசியா மனசுவிட்டு சிரிச்சு பேசுனது அப்பா அம்மா உயிரோட இருக்கும்போதுதான். அவன் கடைசியா அழுததுகூட அவங்க இறந்ததுக்குத்தான். அதுக்கப்புறம் அவன் அதிகமா சிரிக்கவோ எதுக்காகவும் அழவோ செஞ்சது கிடையாது" என்று ராம் கூறிட, அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

"அதுக்கப்றம் அவன் எல்லா எமோஷன்ஸயும் கோபமா மாத்திகிட்டான். யார்கூடயும் பேசமாட்டான். எங்கள தவிர வேற யார்கூடயும் பழகமாட்டான். சின்ன விஷயத்துக்கும் ரொம்ப கோபப்பட ஆரம்பிச்சான். அவன் கேரக்டர் தெரிஞ்சே நாங்க பொறுமையா போயிடுவோம்" என்று நாகவ் கூறிட,

"அந்தக் கோபத்தை வச்சுகிட்டே வெறித்தனமா படிச்சு ஸ்கூல், காலேஜ்ல டாப்பர் ஆனான். பிசினஸ்ல டாப் லெவல்க்கு வந்தான். இவன எதிர்க்க நினச்ச பிசினஸ் எனிமீஸ் யாரையும் இவன் நிம்மதியா விட்டதில்ல. ஆனா, நல்லவங்க யாரும் இவனால பாதிக்கப்பட்டதில்ல. அவன் பண்ண அநியாயம்னா அது உங்களுக்குப் பண்ணதுதான்" என்று பிரபவ் கூறி குற்ற உணர்ச்சியுடன் காவ்யாவை பார்த்தான்.

"இவனுக்குப் பொண்ணுங்களையே பிடிக்காது. தேடி வந்தாலும் விரட்டிவிடுறவன். ஆனா, உங்களுக்கு இப்டி பண்ணான்னா அதுக்கு ஒரே காரணம் அவன் கோபம்தான்" என்று விஜய் கூறிட, அதில் கடுப்பான அவள் தோழி தன்யா,

"கோபம் வந்தா என்னவேணா செய்யலாமா?" என்று கோபமாகப் பேசிட,

"அப்டி கிடையாது. ஆனா, அதுதான் அவனோட பிரச்சினையே. நார்மலா போதைக்கு அடிமையாகிட்டா தான் என்ன பண்றோம்னே தெரியாம நடப்பாங்களே...அந்தமாறிதான் இவனும் கோபம் வந்துட்டா மாறிடுவான்" என்று ராம் பொறுமையாகக் கூறிட அமைதியானாள்.

"அவன இதுவரை யாருமே எதிர்த்துப் பேசினதுகூட கிடையாது. அதனால அண்ணி அவன எதிர்த்து அவமானப்படுத்தின கோபத்துல என்ன பண்றோம்னுகூட தெரியாம இப்டி பண்ணிட்டான். அவன எதிர்த்த முதல் பொண்ணும் அண்ணிதான்.." என்று நாகவ் கூறிட,

"அப்போ பொண்ணுங்கனா அவ்ளோ எளக்காரமா போச்சா...இதுவே ஆம்பளயா இருந்தா கொன்னுருப்பாரா?" என்று ரம்யா கோபமாகக் கேட்டிட,

"ஒரு பொண்ண அசிங்கப்படுத்த அவ மானம்தான் கிடச்சதா?" என்று சரண்யாவும் கோபப்பட, அவர்களை சமாதானப்படுத்தியவர்கள்,

"அப்படி இல்ல. ஆம்பளையா இருந்தா கொன்னுருப்பான்னு சொன்னது ஓரளவு கரெக்ட்தான். அவங்களுக்கு மரண பயத்த காட்டிருப்பான். ஆனா, பொண்ணுங்கள தப்பா நினைக்கிற ஆளில்ல. காவ்யாவுக்குப் பண்ண அநியாயத்துக்கு எங்ககிட்ட மட்டுமில்ல அவன்கிட்டக்கூட பதில் கிடையாது. எல்லாம் அவனோட கோபத்துல பண்ணதுதான்" என்று பிரபவ் பொறுமையாகக் கூறிட, காவ்யா எரிச்சலானாள்.

"அதுக்கான தண்டனைய அவனும் அனுபவிச்சுட்டான். அவனோட குழந்தை இறந்ததே அவன உடைச்சிருச்சு. அதுல நொருங்கிப் போனவன் ரொம்ப டிப்ரெஸ்டாகி வெறித்தனமா நடந்துகிட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுற அளவுக்குப் போயிட்டான்" என்று விஜய் கூறிட தோழிகள் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர். நண்பர்களும் அன்று நடந்தது அனைத்தையும் கூறினர்.

"அவன் இப்ப பழைய ராணா இல்ல. முன்னாடி இருந்தக் கோபம் இப்ப சுத்தமா இல்ல. உங்க குழந்தையோட இறப்பும் உங்களோட பிரிவும் அவன ரொம்ப பாதிச்சு அவன அழ வச்சிருச்சு. அதுலயே அவன் கரைஞ்சிட்டான். அதுல அவனோட இத்தன வருஷம் கட்டுபடுத்துன எமோஷன்ஸ் அத்தனையும் உடைஞ்சிருச்சு. இப்ப அவனும் நம்மளமாறி நார்மலானவன்தான்" என்று ராம் கூறிட,

"அவனோட சின்ன வயசு பாதிப்புதான் இத்தனைக்கும் மூலக்காரணம். ஆனா, இதுக்காக அவன மன்னிக்கணும்னோ அவன ஏத்துக்கணும்னோ நாங்க உங்கள கம்பல் பண்ணமாட்டோம். நீங்க கேட்டதால அவனோட கோபத்துக்கான காரணத்த சொன்னோம். அவ்ளோதான்...அவன் மறுபடி ஒரு சான்ஸ் கேட்குறான். உங்ககூட பேச ஒரு வாய்ப்பு கேக்குறான். நீங்க பேசினீங்கனா போதும். உங்கள அதுக்கப்றம் அவனும் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்" என்று நாகவ் கூறிட, காவ்யா யோசனையுடன் அவர்களை பார்த்திட,

"இந்த ஒரு தடவ எங்களுக்காகப் போய் பேசுங்க. ப்ளீஸ்...! அண்ணி" என்று அனைவரும் கெஞ்சிக் கேட்டிட, சிறிதுநேரம் யோசித்தவள் சம்மதித்தாள். மற்றவர்களும் இது நல்ல மாற்றத்தை அளித்திட வேண்டும் என்று எண்ணிக்கொண்டனர்.

காவ்யா ராணாவிடம் பேச ஒப்புக்கொண்ட செய்தியை ராணாவிடமும் நண்பர்கள் கூறிட, அவனும் ஆனந்த அதிர்ச்சியில் திளைத்தான். அவளை பார்க்கப்போகும் சந்தோசத்தில் உற்சாகமாக வலம் வந்தான்.

இரண்டு நாட்கள் கழிய, காவ்யா அவளது பொட்டீக்கில் இருந்து நேராக ராணாவின் வீட்டிற்கே பயணமானாள். அவள் சென்றநேரம் வீட்டில் அவன் இல்லாமல் இருக்க, சத்தம் கேட்டு வெளியே வந்த கமலாம்மா காவ்யாவை பார்த்து ஆனந்த அதிர்ச்சியடைந்தார். இவளும் அவரை பார்த்த சந்தோசத்தில் ஓடிச்சென்று அவரை அணைத்துக்கொண்டாள். இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் அவரிடம் கூறிட, அவரும் இவள் மீண்டு வந்ததை எண்ணி அகமகிழ்ந்தார்.

சிறிதுநேரம் பேசிவிட்டு அவளிருந்த அறைக்குச் சென்றாள். அங்கே அவள் பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தது. ஆனால், அறை சுத்தமாகவே காணப்பட்டதில் இருந்து அந்த அறையை அவன் உபயோகப்படுத்துகிறான் என்பதை புரிந்துகொண்டாள். அறையை சுற்றிப் பார்த்திட, அந்த அறையின் சுவற்றில் காவ்யாவின் உருவம் ஓவியமாகத் தீட்டப்பட்டு பெரிய படமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அதை பார்த்தவள் ஒருநொடி தன்னை மறந்து வியந்தாள். அதன்பின் தலையை உலுக்கிக்கொண்டு வேறுபுறம் சென்றாள்.

அந்த அறையின் கண்ணாடிச் சுவற்றின் வழியே பார்த்துக்கொண்டிருந்தவள் கண்களில் திடீரென ஏதோ தென்பட, வேகமாக அறையைவிட்டு வெளியே சென்று வீட்டிற்கு வெளியே இருக்கும் தோட்டத்திற்கு வந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவள் மனதை உலுக்கிட, கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வடிய அப்படியே மடிந்து அமர்ந்து அழுதாள்.

அவள் இருக்குமிடம் அவள் குழந்தையின் கல்லறை. தன் வீட்டிலேயே தனது குழந்தைக்கு கல்லறை எழுப்பி அதில் "மை ப்ரின்சஸ்" என்று பெயர் பொறித்திருந்தான். அதைச் சுற்றி அழகிய பூந்தோட்டம் அமைத்து அந்த இடத்தை வசந்தமாக்கியிருந்தான். ராணாவிற்கு மனபாரம் கூடும்போதெல்லாம் இந்த இடத்தில் வந்து இருந்துவிடுவான். அந்த இடத்தின் வசந்தம் அவன் குழந்தை அவனுடன் இருக்கும் எண்ணத்தை தந்திட, நாட்களில் பாதியை இவ்வாறே கழித்து வந்தான்.

இன்று காவ்யாவும் இங்கு வந்து இந்தக் கல்லறையை பார்த்தவள் துக்கம் தாளாமல் அழுது தீர்த்தாள். திடீரென யாரோ அவள் தோள்தொட திடுக்கிட்டுத் திரும்பியவள் கண்களில் கண்ணீருடன் ராணாவை ஏறிட்டாள். காவ்யா வந்திருப்பது அறிந்து நேராக வீட்டிற்கு வர, வீடு முழுவதும் காணாமல் வெளியே இருந்தத் தோட்டத்தில் இருப்பதை பார்த்து அருகில் வந்திருந்தான்.

இவள் கண்ணீரை பார்த்தவனின் மனம் வேதனையிலும் குற்ற உணர்ச்சியிலும் வலித்திட, காவ்யாவின் தோள்தோட்டு எழுப்பியவன் ஆதரவாக அணைத்துக்கொள்ள, காவ்யாவும் ஆறுதல் தேடி அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். காவ்யா அவன்மீது சாய்ந்து அழுது தீர்த்திட, அவனும் பொறுமையாக அவள் தலையை வருடிக்கொடுத்தான். நொடிகள் நிமிடங்களாய் கடந்திட, அழுது சோர்ந்தவள் திடீர் நினைவு வந்தவளாய் ராணாவிடம் இருந்து பிரிந்து நின்றாள்.

அவள் செய்கையில் ராணா ஒருநொடி அதிர்ந்தாலும் மறுநொடி இதழில் பூத்தச் சிறு புன்னகையுடன் குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்திட அருகில் வர, அதில் எரிச்சலுற்ற காவ்யா தன் கைகளை நீட்டி அவனை நிறுத்தியவள்,

"நான் ஒன்னும் இங்க சேர்றதுக்காகவோ சமாதானம் ஆகுறதுக்கோ வரல. உங்க ஃப்ரண்ட்ஸ் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதாலதான் வந்தேன். அதுவும் இன்னையோட எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டணும்னுதான் வந்திருக்கேன்" என்று கோபமாகப் பேசியவள் திரும்பி தன் குழ்ந்தையின் கல்லறையை ஓர் ஏக்கப் பார்வையுடன் பார்த்தாள்.





❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
அவள் 23


ராணாவும் ஆமோதித்து அவளை வீட்டிற்குள் அழைத்திட, உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்.

"இங்கயே நின்னு பேசலாம். நீ என்ன சொல்லணுமோ அத இங்கயே சொல்லு" என்று எரிச்சலை முகத்தில் காட்டி கடுப்புடன் பேசியதை பார்த்து அமைதியாகப் புன்னகைத்தவன் பொறுமையாக,

"நான் உனக்குப் பண்ண கொடுமைக்கு சாதாரணமா மன்னிப்பு கேட்டு முடிக்க விரும்பல. அப்டி கேட்டாலும் அது போதாது. உன்கூட வாழணும். உன்னய சந்தோசமா பாத்துக்கணும். உனக்கு என்னோட காதல புரியவச்சு என்னோட தப்புக்கானப் பிராயிச்சத்தத்தை பண்ணலாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ்...! எனக்கு ஒரு சான்ஸ் கொடு காவி.." என்று வார்த்தைகள் தளர்ந்து, தலை தாழ்த்தி, கண்களில் ஏக்கத்துடன் கேட்கும் ராணாவை பார்க்க காவ்யாவிற்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், தான் பட்ட துன்பங்களும் கஷ்டங்களும் கண்முன் விரிந்திட, இதெல்லாம் அதற்குமுன் சாதாரணமாகத் தெரிந்தது.

அவனை கோபமாகப் பார்த்து," என்ன? நீ என்ன வேணாலும் பண்ணுவ...அப்றம் வந்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சு எல்லாத்தையும் மறந்து உன்கூட வந்து வாழணுமா? என்னய என்ன நினச்சுட்டு இருக்க?..என்னய பாத்தா உனக்கு அவ்ளோ இளக்காரமா தோனுதுல? எப்போ கூப்டாலும் வந்துருவானு நினைக்கிற.." என்று பல்லிடுக்கில் கோபமாகப் பேசிட, அதில் மனம் ரணமாக,

"அப்டி இல்ல அம்மு. நான்தான் உன்னய புரிஞ்சுக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா, நீயும் அதே தப்ப பண்ணாத. ப்ளீஸ்...! நடந்தத நினைச்சுட்டே இருந்தா வாழுற வாழ்க்கையும் நரகமாயிடும். இனியாச்சும் உன்கூட சந்தோசமா வாழ ஆசைப்படுறேன். உனக்கு என்னோட காதல கொடுத்துட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து என்கூட வந்துடு காவி..." என்று உடைந்த குரலில் கேட்டிட,

"இப்பக்கூட நீ உனக்காகத்தான் யோசிக்கிறல்ல...என்னைபத்தி யோசிச்சியா? நீ எனக்குப் பண்ணதக்கூட நான் பொறுத்துகிட்டேன். ஆனா, என் குழந்தைய சாவடிச்சத எப்டி மறக்கமுடியும்? உன்னய எப்டி அதுக்காக மன்னிப்பேன்னு நினச்ச? இந்நேரம் அந்தக் குழந்தை இருந்திருந்தா அதுக்கு ஒரு வயசு இருந்திருக்கும்..." என்று கூறியவள் அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டை அடைக்க அமைதியானாள். அதை கேட்டவனுக்கு முள்ளென தைக்க, இதயம் ரணமாகக் கண்கலங்கியவன்,

"நான்தான் கொன்னுட்டேன். என் கோபத்தாலதான் நம்ம குழந்தைய கொன்னுட்டேன். நான் அன்பு வைக்கிற யாருமே என்கூட இருக்க மாட்டிக்கிறாங்க. என்னயவிட்டுப் போயிடுறாங்க. முதல்ல என் அம்மா அப்பா. அப்றம் நம்ம குழந்தை. என் அம்மாவோ அப்பாவோ நமக்கு குழந்தையா வரப்போறாங்கனு நினச்சு எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? நான் நீ நம்ம குழந்தைனு அழகான குடும்பமா வாழணும்னு எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா..? எல்லாமே கனவாவே போயிடுச்சு..." என்று கலங்கிக் கூறியவன் கீழே மண்டியிட்டு அழுதான்.

இதுவரையிலும் ராணாவை கண்கலங்கியும் பார்த்திராதவள் இன்று அவன் அழுவதை பார்க்கையிலேயே அவன் நண்பர்கள் கூறிய அனைத்தும் உண்மையென கண்கூடாக உணர்ந்தாள். அவன் அழுகை இவள் மனதை பிசைந்தாலும் கல்லென நின்றாள்.

"ப்ளீஸ்...! காவி. நீயும் என்னவிட்டுப் போயிடாத...என்னால தாங்கிக்க முடியாது. என்கூடயே இருந்து என்னய எவ்ளோனாலும் பழி வாங்கு. நான் தாங்கிக்கிறேன். என்னவிட்டு பிரிஞ்சு மட்டும் போயிடாத..." என்று கெஞ்சிக் கதறுபவனை பார்த்தவளின் கண்கள் தானாகக் கலங்கிட, முகத்தில் கோபம்காட்டி,

"இங்கபாரு...உனக்கும் எனக்கும் என்னைக்குமே ஒத்து வராது. நீ பழி வாங்கத்தான என்னய கல்யாணம் பண்ண? நீயும் நினச்சதவிட அதிகமாவே பழி வாங்கிட்ட. இப்ப நீ மாறியிருக்கலாம். ஆனா, நமக்குள்ள எதுவும் மாறாது. நம்ம இரண்டு பேரோட கோபத்தால நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையுமே நாசமாயிட்டு. இதுக்கிடையில ஒரு பச்ச மண்ணோட உயிர வேற பறிச்சிட்டோம். இதுக்குலாம் நானும் ஒருவகையில காரணம்தான். அதனாலதான் சொல்றேன். ப்ளீஸ்....! புரிஞ்சுக்கோ. நம்ம இரண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தது போதும். என்னய விட்டுடு...நீ உனக்கேத்தமாறி வேற நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ...இல்ல என்னவேணா பண்ணிக்கோ...ஆனா என்னய விட்டுடு. ப்ளீஸ்...!" என்று கையெடுத்துக் கும்பிட்டு கூறியவள்,

"டிவோர்ஸ் கொடுத்திடு. உன்னோடான இந்த பந்தம் எனக்கு நீ பண்ண கொடுமைகளைத்தான் நியாபகப்படுத்துது. இதுல உன்கூட சேர்ந்து எப்டி வாழமுடியும்? எல்லாத்தையும் மறந்து வாழ்க்கைய மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறது ரொம்பக் கஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அழுதபடியே சென்றுவிட்டாள். ராணா அவள் செல்வதை பார்த்தவாறு கண்களில் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான்.


சில நாட்களுக்குப் பின்...

காவ்யாவும் ராணாவும் முழுமனதாக விவாகரத்து செய்துவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுடன் அவர்கள் நண்பர்களும் வந்தனர். வெளியே வந்ததும் காவ்யாவை பார்த்து அவளிடம் ராணா வர, அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன்,

"உனக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு உன்னய சந்தோசமா வச்சுக்கணும்னு ஆசப்பட்டேன். முடியாததகூட செய்யணும்னு நினச்சேன். ஆனா, உனக்கு என்னய பிரியறுதுலதான் சந்தோசம் கிடைக்கும்னு தெரிஞ்சப்றமும் எப்டி நான் கொடுக்காம இருப்பேன்? இனியாச்சும் நீ எல்லாத்தையும் மறந்து ஹேப்பியா இருக்கணும். ராணானு ஒரு கேரக்டர் உன் வாழ்க்கையில இருந்ததையே மறந்துடு. உன் பாஸ்ட் லைஃப மறந்து நல்ல ஃப்யூச்சர அமைச்சிக்கோ. இனி உன்னய எந்த விதத்திலயும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். இதுவரைக்கும் பண்ண எல்லாத்துக்குமே மன்னிப்புனு ஒரு வார்த்தையில கேட்டு முடிக்க மனசு வரல. இருந்தாலும் கேட்டுக்குறேன். மன்னிச்சிடு.." என்று உள்ளே உடைந்தாலும் வெளியே மறைத்துச் சாதாரணமாகப் பேசிட, காவ்யா ஏதும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

"ஒரே ஒரு தடவ உன்னய ஹக் பண்ணிகிட்டுமா? ப்ளீஸ்....காவ்யா!" என்று கெஞ்சிக் கேட்பவனுக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல் சம்மதமாகத் தலையசைத்தாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு அவளை அணைத்துக்கொண்டான், ராணா. அந்த அணைப்பில் தாயை நாடும் குழந்தையையே அவள் உணர்ந்து அப்படியே அசையாது நின்றிருக்க, அணைப்பிலிருந்து பிரிந்த ராணா அவன் காதல் அனைத்தையும் திரட்டி ஒற்றை முத்தமாக அவள் நெற்றியில் பதித்தவன் அவளை பார்த்து, "ஐ லவ் யூ அம்மு!" என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.

இதைப் பார்த்த தோழிகளும் நண்பர்களும் என்னவென்று கூற இயலாத மனநிலையில் சிக்கித் தவித்தனர். இருவரின் வாழ்வில் ஒருவருக்கொருவர் எதிராய் இருக்கையில் ஒருவரது மகிழ்ச்சி மற்றொருவரின் மகிழ்ச்சியை பறிக்கையில் இவர்கள் யார்பக்கம் நிற்பது? என்ற சூழ்நிலை வருகையில் நியாயத்தின் பக்கமே அனைவரும் நின்றனர். இருந்தாலும், தன் நண்பனுக்காகத் தாங்கள் எடுத்தச் சிறு முயற்சியும் தோல்வியில் முடிகையில் இதுவே விதியென விட்டுவிட்டனர். இதற்குப் பிறகாவது இருவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் உண்டாகட்டும் என்று எண்ணியவாறே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்பின், ராணா காவ்யாவை பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவள் தோழிகளிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டான். ராணாவுடன் அவனது நண்பர்களும் செல்லப்போக, இவர்களை அவளுடன் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் செல்லும்வரை சிலையென நின்றவள், தோழிகள் தோள்தொட தன்னிலை பெற்றாள். நண்பர்களும் அனுயா மற்றும் சரண்யாவும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட, காவ்யா, தன்யா, ரம்யா மூவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்குள் வந்ததும் காவ்யா வேகமாகச் சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியவர்கள் பின்னே சென்று கதவை தட்ட, கதவு பூட்டாமல் இருந்ததால் திறந்து உள்ளே சென்று பார்த்திட, அங்கே காவ்யா அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

அவளருகில் சென்று அவளை தொட, தோழிகளை கட்டிக்கொண்டாள். சிலநிமிடம் அவளை வருடிக்கொடுத்து ஆறுதல் படுத்திட, அவள் அணைப்பிலிருந்து பிரிந்ததும், "எதுக்காகடி அழுவுற? என்னாச்சு?" என்று தன்யா அக்கறையாகக் கேட்டிட,

"ஆமா! இப்பதான் நீ கேட்ட டிவோர்ஸ்கூட கிடைச்சிருச்சேடி. இனியாச்சும் நீ நிம்மதியா சந்தோசமா இருப்பனு நினச்சா இப்டி அழுதிட்டு இருக்க?" என்று ரம்யா கவலையாகக் கேட்டிட, மௌனமாகவே இருந்தாள்.

"இப்ப என்னனு சொல்லு காவி. அந்த ராணாவ நினச்சுதான் அழுகிறியா? அவர் இப்ப உன் லைஃப்லயே இல்லடா. இனி எதுக்காகவும் வருத்தப்படாத. ஓகேவா?" என்று தன்யா ஆதரவாகக் கூறிட, அதைக் கேட்டு கண்கலங்கியவள்,

"அது எப்டி விடுவான்? என்னய பழி வாங்க நினச்சப்பவும் கோபத்தால டார்ச்சர் பண்ணான். அப்றம் அக்கறை காட்டுறேன்னு டார்ச்சர் பண்ணான். இப்ப அன்பு காட்டுறேன்னு டார்ச்சர் பண்றான். என்னய நிம்மதியாவே இருக்க விடமாட்டான்போல..." என்று ஆதங்கத்துடன் பேசியதை கேட்ட தோழிகள் அதிர்ந்து விழித்தனர்.

"அப்போ...என்ன சொல்ல வர்ற காவி? அவரோட அன்பு எதுக்கு உன்னய பாதிக்குது? அவருதான் போயிட்டாரே...இப்பவும் அவர நினச்சு எதுக்கு ஃபீல் பண்ற?" என்று தன்யா கேட்டிட,

"அப்போ...அவருமேல உனக்கு ஏதோ ஃபீலிங்க்ஸ் இருக்குதா காவி? எதுனாலும் சொல்லுடி மறைக்காம" என்று ரம்யாவும் அழுத்தமாகக் கேட்டிட, பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள்,

"அவன்மேல எனக்கு இருந்த ஃபீலிங்க்ஸ் எப்பவுமே வெறுப்புதான்டி. அவன் எனக்கு பண்ண கொடுமையைக்கூட ஏத்துகிட்டு வாழப் பழகிக்கிட்டேன். ஆனா, என்னோட குழந்தையை......அத மன்னிக்க முடியாது. எனக்குத் தெரியுது அதுக்காக அவனும் நிறைய கஷ்டப்பட்டான்னு..ஆனா, என்னால இந்த உறவ இதுக்குமேலயும் தொடர முடியாதுனு மட்டும் தெளிவா இருக்கேன்டி" என்று தீர்க்கமாகக் கூறிட,

"அப்ப எதுக்குடி அவர் ஹக் பண்ணும்போதும் கிஸ் பண்ணும்போதும் சிலைமாறி நின்ன?" என்று தன்யா கேட்டிட,

"இப்பக்கூட அத நினைச்சுதான அழுகுற? எதுக்காக உன்னோட ஃபீலிங்க்ஸ உனக்குள்ளயே மறைச்சிக்கிற காவி? நீ அத வெளிப்படுத்துறதுல எந்தத் தப்பும் இல்ல.." என்று ரம்யா எடுத்துக்கூறிட,

"எனக்கு அவன மன்னிச்சு ஏத்துக்க முடியாது. அதுவும் கல்யாணம் ஆகிட்டுனு கட்டாயத்துல அவன்கூட வாழமுடியாது. அவன் பண்ண தப்ப அவன் உணர்ந்து எவ்ளோ தண்டனைனாலும் அனுபவிச்சுருக்கலாம். அதுக்காக சிம்பதில லவ் வராது. அது தானா வரணும். அவன்மேல எனக்கு வெறுப்புதான் இருக்கு. அவன் ஹக் பண்ணதுக்கும் கிஸ் பண்ணதுக்கும் ஏன் அழுதேன்னு எனக்கு சொல்லத் தெரியல. அதை யோசிக்கவும் போறதில்ல. என்னோட வாழ்க்கைல இருந்து அவன முழுசா நீக்கிட்டேன். இதுக்கப்றம் அவன் பேச்சே வேணாம். அவ்ளோதான்" என்று உறுதியாகக் கூறி முடித்திட, தோழிகள் இருவரும் ஒன்றும் கூறாமல் அதை ஆமோதித்தனர்.

நீதிமன்றத்தில் இருந்து தன் வீட்டிற்கு வந்த ராணா நேராக காவ்யாவுடன் இருந்த அறைக்குச் சென்றான். அறைக்குள் வந்தவன் அலமாரியை திறந்து அவளது புடவையை எடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான். அதை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவன் கண்ணீர் சிந்தினான். சிறிதுநேரம் அப்படியே இருந்தவன் அதன்பின் ஒரு முடிவெடுத்தவனாய் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து...

ராணா விமான நிலையத்தில் உள்ளே செல்ல காத்திருக்க, அவனை வழியனுப்பிட அவனது நண்பர்கள், பெற்றறோர்கள், அனுயா மற்றும் சரண்யாவும் உடன் வந்திருந்தனர்.

காவ்யாவை பிரிந்து இங்கே இருந்தால் அவளை பார்க்காமல் இருந்திட இயலாமல் இவன் ஏதாவது செய்திட, அது அவள் நிம்மதியை குழைத்துவிடும் என்பதற்காகவும் இங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற காரணத்திற்காகவும் வெளிநாட்டில் இருக்கும் தனது தொழிலை பார்த்துக் கொள்ள கிளம்பிவிட்டான். இவனுக்கு ஒரு மாறுதல் தேவை என்ற காரணத்திற்காகவே அவன் நண்பர்களும் பெற்றோர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

விமானத்திற்குள் செல்லும் நேரம் வரும்வரை அவன் விழிகள் தன்னிச்சையாக யாருக்காகவோ காத்திருந்ததை மற்றவர்களாலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் காவ்யா இவனிடம் மறுபடியும் வரமாட்டாள் என்பதே நிதர்சனம். அதை அவன் உணர்ந்தாலும் அவன் மனம் உணர மறுத்து அவனை படுத்தும் பாட்டை எண்ணி மற்றவர்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. நேரம் நெருங்கிட, தன் நண்பர்களை ஆரத்தழுவியவன் பெற்றோர்களின் ஆசிகளை பெற்று விமான நிலையத்திற்குள் சென்றான், ராணா.

ஆறு மாதத்திற்குப் பிறகு...

சூரியனின் வெளிச்சம் விரிந்து கிடந்த வானத்தில் சூழ்ந்திருக்கும் வெண்மேகங்களும் அதற்குள் நுழைந்து சிறகடித்துப் பறந்திடும் பறவைக் கூட்டங்களையும் ரசித்தபடி விமானத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தான், ராணா. தனது தாயகம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.

காவ்யாவின் நினைவுகளுடன் வெளிநாடு சென்றவன் அங்கே உள்ள அவன் தொழிலில் கால்பதித்து அவன் முத்திரையை அங்கும் பதித்தான். ஓய்வின்றிச் சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் அவன் இளைப்பாறும் வசந்த காற்றாய் காவ்யாவின் நினைவுகளும் அவள்மீது கொண்ட காதலுமே அவனுக்குத் துணையாய் இருந்தது.

அவளை மறக்கும் முயற்சியில் அவன் தன்னை அறியாமலும் ஈடுபடவில்லை. அவளுடன் இவன் கழித்த அந்தக் குறைந்தகால நினைவை பொக்கிஷமாய் மனதில் தேக்கிவைத்திருந்தான். அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள மனம் துடித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வானே தவிர, அறியாமலும் அவன் நண்பர்களிடத்திலும்கூட கேட்டுக்கொள்ளமாட்டான், அது அவளுக்குத் தெரிந்தால் இன்னும் சங்கடப்படவும் கோபப்படவும் நேரிடும் என்பதற்காக.

காவ்யா எங்கிருந்தாலும் நன்றாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான். இப்போது தனது நண்பனான ராமின் திருமணத்திற்காகச் சென்று கொண்டிருக்கிறான். தனது ஊரில் இருக்கும் விமான நிலையத்தில் வந்து இறங்கியவன் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவனுக்காக கார் காத்திருக்கும் என்று எண்ணியிருந்தவனுக்குத் தனது நண்பர்களே நேரில் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

உற்சாகமாக நால்வரும் வந்து இவனை கட்டிக்கொள்ள, பதிலுக்கு இவனும் அவர்களை அணைத்துக்கொண்டான். அணைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தனர். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டீசர்ட் மற்றும் ஓபன் ஜீன்ஸ் சர்ட் அணிந்து கூலிங் கிளாஸ் மற்றும் ட்ரென்டி ஷூஸ் அணிந்து தோளில் லக்கேஜ் பேக்கை போட்டுக்கொண்டு ஸ்டைலாக நிற்பவனை பார்த்து நால்வரும் அதிர்ச்சியில் வாயை பிழந்தனர்.

"டேய்...! ராணா...! நீதானாடா இது? செம்மயா இருக்கடா!" என்று விஜய் வியந்து கூறிட,

"எப்ப இருந்துடா இப்டி மாறுன? எங்களலாம் அடிச்சு தூக்கிட்டடா இந்த காஸ்ட்யூம்ல...நிஜமாவே கலக்குறடா!" என்று நாகவ்வும் ஆனந்தமாகக் கூறிட,

"அவன் எப்பவுமே அழகுதானடா. ஏதோ இப்ப மட்டும் புதுசா வந்து சொல்லிட்டுருக்க.." என்று ராம் கூறிட, ராணா புன்னகைத்தான். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

"ஆமா! என்னடா இது? புது சேஞ்சோவர்! ஆளே மாறிட்டடா! இப்பதான் இப்டியா? இல்ல பிசினஸ் மீட்டிங்கும் இப்டித்தானாடா?" என்று பிரபவ் கேலியாகக் கேட்டிட, புன்னகைத்த ராணா,

"டேய்..! ரொம்ப ஓட்டாதடா. அதுக்கெல்லாம் நார்மல்தான். மத்த டைம் இப்படித்தான் இனிமே. லைஃப்னா ஒரு சேஞ்ச் வேணும்ல. எனக்கும் இந்த சேஞ்ச் தேவபட்டுச்சுடா. அதான்" என்று கூறிமுடித்திட, மற்றவர்களும் அவனை புரிந்துகொண்டு அமைதியாயினர்.

ஐவரும் பேசியபடியே காரில் ஏறி பயணித்துக் கொண்டிருக்க, "அப்றம்...கல்யாண மாப்ள...! நீ எதுக்குடா ஏர்போர்ட் வந்த?" என்று விசாரித்திட, "உன்னய ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன்ல. அதான் பாசத்துல ஓடி வந்துட்டேன்டா..!" என்று உண்மையை கேலியாகக் கூறிட, "பாசக்கார நண்பேன்டா...நீ!" என்று கூறி அவனை இறுக்கி அணைத்திட,

"அடேய்...! விடுடா..! எலும்ப நொறுக்கிடாத. எனக்குக் கல்யாணம் இருக்குடா. பாவம்டா நானு..." என்று ராணா விளையாட்டாக இறுக்கி அணைத்ததில் ஏற்பட்ட வலியில் பொய்யாக அலறிட, மற்ற நால்வரும் சிரித்தபடியே பயணித்திட, அவர்களது கார் ராமின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால் ஏற்கனவே அரண்மனைபோல் இருக்கும் வீடு அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமான மாளிகைபோல் காட்சியளித்தது. வீட்டின்முன் உள்ள நடக்கும் பாதைக்கு இரண்டு பக்கமும் உள்ள புதர்ச் செடிகளும்கூட விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த வீடே மிகவும் அழகாகக் காட்சியளித்தது.

அதை ரசித்தவாறே ராணா நண்பர்களுடன் வீட்டிற்குள் செல்ல, அவன் உள்ளே நுழையும்முன் அவனுக்கும் மற்ற நால்வருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார், சீதா அம்மா. நண்பர்கள் அனைவரும் அவர்களது பெற்றோர்களும் இங்குதான் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் ராணா பலமடங்கு உற்சாகமானான். அதன் காரணம், யாவரும் அறிந்ததே..காவ்யாவும் இங்கே இருப்பாள் என்று உறுதியாக நம்பினான். ஆனால், அதை அவன் நண்பர்களிடத்தும் கேட்டுக்கொள்ளவில்லை.

ராணாவா? காவ்யாவா? என்று வந்தால் இவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் காவ்யாவின் பக்கமே நிற்கும் என்பதை இவனும் நன்கு அறிவான். இருப்பினும் அதில் தவறேதும் இல்லை என்றே இவனும் எண்ணுவான். இருந்தாலும் காவ்யாவை பார்ப்பதற்காக இவர்களிடத்தில் பிரச்சினை வேண்டாம் என்றே எண்ணி எதுவும் கேட்கவில்லை.

கண்களை வீடு முழுக்கச் சுழலவிட்டபடியே அவனுக்கான அறைக்குச் சென்றுகொண்டிருந்தான், அவளை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால், அவள் இவன் கண்ணில் படவேயில்லை. சலிப்புடன் தனதறைக்குச் சென்றவன் களைப்பு நீங்க குளித்துவிட்டு அலுப்புத்தீர படுத்தான். அசதியில் கண்ணயர்ந்தவன் நன்றாக உறங்கிப்போனான்.

மதியநேரம், நண்பர்கள் வந்து இவனை எழுப்பி சாப்பிட அழைத்துச் சென்றனர். குடும்பம் மொத்தமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவனது விழிகள் அவனவளை தேடியது. ஆனால், அவளை தவிர மற்ற எல்லாரும் இருந்ததை கண்டு நொந்துபோனான். அப்படியே சென்று சாப்பிட அமர அனைவரும் இவனை நலம் விசாரித்திட, இவனும் அனைவரிடமும் பேசிவிட்டு அமர்ந்தான்.

அனைவரும் ஆனந்தமாகப் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவனது தவிப்பை உணர்ந்தாலும் இவனது நண்பர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தனர்.

பேசிக் கொண்டிருக்கும்போதே நாகவ்வின் தந்தை,"அப்றம்..ஃபங்ஷன்லாம் இங்கயே வச்சுக்கலாம்ல. எதுக்காக அங்க தனியா இங்க தனியானு..பொண்ணையும் இங்கயே கூப்டு வந்துருக்கலாம்" என்று கூறிட,

"அது சரிபட்டு வராது. பொண்ணு அவங்க வீட்ல இருந்துதான் இங்க வரணும். அதனால அங்கயே இருக்கிறதுதான் சரி" என்று லட்சுமி அம்மா கூறிட,

"ஆனா, அவளோட சொந்தம்தான் நாம எல்லாரும் இங்க இருக்கோமே..அப்றம் எதுக்கு அவள அங்க இருக்க சொல்லணும்?" என்று விஜய்யின் தந்தை கூறிட, இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராணா குழம்பினான்.

"அதான் அவ ஃபிரண்ட்ஸ் நாங்க இருக்கோமே அப்பா. நாங்க அங்க கிளம்பிடுவோம். நாங்க அங்க எஞ்சாய் பண்றோம். நீங்க இங்க பண்ணுங்க. ஓகேவா?" என்று சரண்யா உற்சாகமாகக் கூறிட,

"அதான்டா பிரச்சினையே...இங்க செம்ம போரடிக்கும். பேசாம நானும் உங்ககூட அங்க வந்துடுறேன்டா" என்று சீதா அம்மா போலியான சோகத்தில் கூறிட,

"கண்டிப்பாம்மா. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.."என்று அனுயாவும் கூறிட, ராணாவின் குழப்பம் மேலோங்கியது. அவனுக்குள் என்னவென்று கூறமுடியாத பதற்றம் உண்டானது. 'கல்யாணப் பொண்ணு இவங்களுக்கு ஃப்ரண்ட்னா...அப்ப அது...?' என்று சிந்தித்தவனால் அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. சாப்பாட்டில் இருந்து எழுந்தவன் வேகமாக அவனறைக்குச் சென்றுவிட்டான். இவன் செல்வதை அனைவரும் வருத்தமாகப் பார்த்திட, நண்பர்கள் நால்வரும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

அறைக்குள் வந்தவனின் மனம் படபடக்க, ஓரிடத்தில் நிற்க இயலாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். தனது சந்தேகம் மட்டும் உண்மையாகிவிட்டால்....? என்று எண்ணும்போதே அவனது கண்கள் கலங்கின. இருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்பதுதானே தனது விருப்பமும். அப்படியிருக்க, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று சிந்தை கூறினாலும் மனம் வலித்தது. சிந்தனையில் உழன்று தவித்துக்கொண்டிருக்க, திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.





❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
💕அவள் 24💕



யாரென்று பார்த்திட, அங்கே அவனது நண்பர்கள்தான் இவனை பார்க்க வந்திருந்தனர். இவனது முகத்தை பார்க்கையிலே அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டவர்கள் அவனை அழைத்துச் சென்று மெத்தையில் அமரவைத்தனர். அவனுடன் அமர்ந்தவர்கள்,

"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் ஒருமாதிரி இருக்க?"

"எதுவும் ப்ராப்ளமா? எதுனாலும் சொல்லுடா"

"சரியா சாப்டக்கூட இல்ல. வந்துட்ட. இங்க வந்து யோசனையில இருக்க"

"சொல்லுடா ராணா. என்ன பிரச்சினை. ஏதோ குழப்பத்துல இருக்கனு மட்டும் தெரியுது. என்னனு சொல்லு. முடிஞ்சா தீர்த்து வைக்கிறோம்" என்று நால்வரும் அக்கறையாக விசாரித்திட, ராணாவும் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தவன்,

"அது...அதுவந்து...பொண்ணு யாருன்னு...சொல்லவே இல்லயே...அனுக்கும் சரண்யாக்கும் ஃப்ரண்ட்னா....அது...?" என்று வார்த்தைகள் வராமல் பாதியில் நிற்க, அவனது குழப்பத்தையும் தவிப்பையும் வைத்தே அவனது சந்தேகத்தை புரிந்துகொண்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தனர். நால்வரும் சிரிப்பதை குழப்பத்துடன் ராணா பார்த்திட, அவனை பார்த்த நாகவ் சிரித்துக்கொண்டே,

"இப்ப உன்னய பாத்தா யாரும் டாப் பிசினஸ்மேன்னு நம்பமாட்டாங்கடா. எல்லாரையும் நடுங்கவிடுற மிஸ்டர். ராணா தேவ்வோட முகத்துல குழப்பமும் பயமும் எப்டி தாண்டவம் ஆடுது பாரு...!" என்று நகைத்திட,

"ஆமாடா. எப்டிலாம் யோசிக்கிறடா நீ! பிசினஸ்மேனா இருக்கிறதுக்கு நீ கதை எழுதலாம்டா" என்று கூறி விஜய் நமட்டுச் சிரிப்பு சிரித்திட, அனைவரும் இன்னும் சிரித்தனர். ஒன்றும் புரியாத ராணா,

"டேய்..! என்னடா பேசுறீங்க? தெளிவா சொல்லுங்கடா" என்று கூறிட,

"ஹான்...உன்னய நினச்சா சிரிப்புதான்டா வருது. சொல்றதுக்கு வரமாட்டிக்குது" என்று ராமும் கூறி சிரித்திட,

"நான் என்ன சொல்ல வந்தேன்னுகூட முழுசா கேட்காம நீங்கபாட்டுக்கு உலறுறீங்க.." என்று அவன் குழம்பிட,

"அது தெரிஞ்சுதான்டா நாங்க இப்டி சிரிக்கிறோம்" என்று நாகவ் சிரிப்பினிடையில் கூறிட, மொத்தமாகக் குழம்பினான் ராணா.
அவனது முகத்தை பார்த்து அனைவரும் சிரித்தவர்கள் அவன் முகம் சோகமாவதை பார்த்து அமைதியாயினர்.

"இங்க பாருடா. இன்னுமா உனக்குப் புரியல? நீ என்ன நினச்சு பயப்படுறியோ அது எதுவும் நடக்கல. இப்போவாவது புரியுதா?" என்று பிரபவ் கூறிட, புருவம் முடிச்சிட அவனை ஏறிட்டான், ராணா.

"ஆமாடா. நீ காவ்யா அண்ணிதான் கல்யாணப் பொண்ணுனு நினச்சுதான இவ்ளோ பயந்துட்டு இருக்க?" என்று விஜய் கேட்டிட, முதலில் அதிர்ச்சியாகப் பார்த்தவன் ஆம் என தலையசைத்திட,

"எப்படிடா இப்டி நினச்ச? அவங்க என்னோட அண்ணிடா. எனக்கு அம்மா மாதிரி. எனக்கு எவ்ளோ சப்போர்டீவா இருந்துருக்காங்க தெரியுமா? அவங்களாலதான்டா எனக்கு பொண்ணுங்கமேல பெரிய மதிப்பும் மரியாதையும் வந்துச்சு. அதோட அவங்கதான் என்னய மேரேஜ் பண்ணிக்க சொன்னாங்க. பேசி புரிய வச்சாங்க. அதனாலதான் கல்யாணமே வேணாம்னு நினச்ச நான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்" என்று ராம் கூறிட, ராணாவை சங்கடமும் சந்தோசமும் ஒருங்கிணைந்து ஆக்கிரமித்தது.

"சாரிடா ராம்! நான் உன்னய அப்டி நினைக்கலடா. என்னய அறியாம ஒரு பயத்துல அப்டி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு எந்தக் காரணமும் சொல்லமுடியாதுடா. நானும் அப்டி நினச்சிருக்கக் கூடாதுடா" என்று ராணா வருத்தப்பட,

"உன் நிலமையும் புரியுதுடா. உனக்கு வந்தது பயம். சந்தேகம் இல்ல. காவ்யா அண்ணிமேல வச்சிருக்க அளவுக்கு அதிகமான லவ்தான் இப்டி யோசிக்க வச்சிருக்கு. வருத்தப்படாத" என்று ராம் கூறி அவனை அணைத்துக்கொள்ள, மற்றவர்களும் சுற்றி அணைத்துக்கொண்டனர். ராணாவும் நிம்மதியுடன் அவர்களை அணைத்துக்கொண்டான்.

சிறிதுநேரம் கழித்து ஒன்றாக அமர்ந்தவர்கள் மீண்டும் சந்தோசமாகப் பேசினர். "ஆமா! அப்போ பொண்ணு யாருடா?" என்று ராணா கேட்டிட,

"தன்யா டா" என்று கூறியதை கேட்டபின்னே இங்கே தன்யாவும் இல்லை என்பது அவன் மூளையில் உரைத்தது. தன் தலையை தட்டிக்கொண்டவன், "அவள நான் யோசிக்கவே இல்ல பாரேன்" என்று கூறிட,

"எப்டிடா யோசிப்ப? சுத்தி என்ன நடக்குதுனு பாத்தாதான தெரியும். யோசிப்ப. இப்பதான் உன் சிந்தனை செயல் எல்லாமே வேற இடத்துல இருக்கேடா.." என்று நாகவ் கேலி செய்திட, ராணா புன்னகைத்து அமைதியானான்.

"சரிடா. அதவிடு.ராம் எப்டிடா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான். அதுவும் நம்ம தன்யாதான் பொண்ணுனா...லவ்வாடா?" என்று ஆர்வமாகக் கேட்டிட,

"இவனாவது லவ் பண்றதாவது. போடா! இவன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதே பெரிய விஷயம். அதுவும் காவ்யா அண்ணி பேசி கம்பல் பண்ணி ஒத்துக்க வச்சாங்க" என்று விஜய் கூறிட,

"அப்றம் இவனுக்கு பொண்ணு பாக்கணும்னு யோசிக்கிறப்ப சீதாம்மாக்கு தன்யா நினைவு வர, அவளையே பேசி முடிச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க" என்று பிரபவ் கூறிட,

"வீட்ல எல்லாருக்கும் டபுள் ஓகே. எனக்கும் இத்தனநாள் தன்யாகூட பேசிருக்கிறதால அவளபத்தி ஓரளவு தெரியும். பிடிக்கும். அதனால நானும் அவகிட்ட பேசினேன். அவளுக்கும் ஓகே. அதனால நானும் ஓகே சொல்லிட்டேன். " என்று ராமும் கூறிட, மகிழ்ச்சியடைந்தான் ராணா.

"அதோட இவன் கேரக்டருக்கு தன்யாதான் கரெக்டா இருப்பா. இவன் கோபப்பட்டா அவ அதுக்குமேல படுவா. தூக்கிப்போட்டு மிதிப்பா" என்று நாகவ் கூறிட, அனைவரும் சிரித்தனர். இத்தனை மாதங்களில் தோழிகளும் நண்பர்களும்கூட நன்றாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்து வைத்திருந்தனர்.

"உன்கிட்ட சொல்லலாம்னா நீதான் எப்பவும் பிசி. எப்பயாச்சும் பேசுற. அதுலயும் அதிகமா பேச டைம் இல்லாம ஓடிடுற. அதான் வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம்டா. உனக்கு எதுவும் கோபம் இல்லயே?" என்று பிரபவ் அக்கறையாக விசாரித்திட, ராணாவும் மறுப்பாகத் தலையசைத்து, "அதெல்லாம் ஒன்னுமில்லடா. உங்களுக்கு நல்லது நடந்தா அது எனக்கு சந்தோசம்தான்டா" என்று முழு மனதாகக் கூறினான்.

"ஆமா! விஜய்! நீ எப்படா கல்யாணம் பண்ணிக்கப்போற? நீதான் ஆல்ரெடி கமிட்டட் ஆச்சே" என்று ராணா கேட்டிட,

"அது...மூத்தவன் இவன் இருக்கும்போது எனக்கு எப்டி பண்ணமுடியும்? அதான் இவனுக்கு முடியட்டும். அப்பதான் நான் பண்ணிப்பேன்னு சொல்லி இவன்பக்கம் டைவர்ட் பண்ணவிட்டதே நான்தான்டா. இல்லன்னா இவன் டிமிக்கி கொடுத்துட்டே போயிருப்பான்" என்று விஜய் உண்மையை கூறிட, ராணா சிரித்தபடி,

"நல்ல காரியம் பண்ணடா. இவன் கல்யாணம் முடிஞ்சதும் உனக்கும் பண்ணிடுவோம் கவலப்படாத" என்று கூறிட விஜய் சந்தோசமாகப் புன்னகைத்தான்.

ராமிற்கு இந்த வீட்டில் வைத்து நலங்கு வைத்திட, தன்யாவுக்கு அவர்கள் இருக்கும் வீட்டில் வைத்தே நடைபெற்றது. தன்யாவின் சொந்தமாக அனுயா, சரண்யாவும் அங்கே சென்றுவிட, அவர்களுடன் நாகவ்வின் தாய் தந்தையும் உடன் சென்றுவிட்டனர்.

சொந்தங்கள் அனைவரும் நலங்கு வைத்தபின் நண்பர்கள் நால்வரும் ராமிற்கு நலங்கு வைக்கிறேன் என்ற பெயரில் முகத்தில் மஞ்சள் முழுவதையும் பூசிவிட்டு ரணகலம் செய்திட, அவனும் பதிலுக்கு இவர்கள்மேல் பூசிகிறேன் என்ற பெயரில் துறத்திட ஐவரும் வீட்டில் ஓடி விளையாடுவதை பார்த்துப் பெரியவர்கள் தலையில் அடித்துச் சிரித்துக்கொண்டனர்.

"ஒவ்வோருத்தனுக்கும் ஏழு கழுத வயசாயிட்டு. இன்னும் இதுங்க திருந்தவே இல்ல" என்று விஜய்யின் தந்தை சலித்துக்கொள்ள,

"விடுடா. ஃபிரண்ட்ஸ் ஒன்னா சேந்தாலே அப்டித்தான. நம்ம பண்ணாததா. அவங்களும் அத அனுபவிக்கட்டும்" என்று கூறிட, அவரும் அதை ஆமோதித்துப் புன்னகைத்தார். இவர்களை பார்க்கையில் தங்களது இளமைப் பருவம் நினைவுவர இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் அணைத்துக்கொண்டர்.

இங்கே, தன்யாவுக்கு முதலில் நாகவ்வின் தாய் தந்தை நலங்கு வைத்திட, அதன்பின் தோழிகளும் நலங்கு வைத்து முகத்தில் பூசிவிட்டனர். அனுயா கற்பம் தரித்து இப்போது பத்தாம் மாதத்தில் இருப்பதால் அதிகம் சிரமப்பட விடாமல் அவளை அமரவைத்தனர். சரண்யாவும் நான்கு மாதம் கருவுற்றிருப்பதால் அவளையும் அமர வைத்திட, ரம்யா பாடல் போட்டுவிட்டு நடனமாடத் தொடங்கினாள்.

காவ்யா அனுயா மற்றும் சரண்யாவுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்திட, அவளையும் இழுத்து ஆடச் சொல்லிட, முதலில் மறுத்தவள் அனைவரும் கூறிட, அவளும் ஆடத் தொடங்கினாள். ரம்யா மற்றும் காவ்யா துள்ளிக் குதித்து ஒருசேர ஆடிட, அவர்களை பார்த்து உற்சாகத்தில் தன்யாவும் அவர்களுடன் வந்து ஆடினாள். இவர்களின் நடனத்தை கண்டு பூரித்துப்போன சீதாம்மாவும் இவர்களுடன் வந்து ஆடிட, அதைப் பார்த்து அனுயா, சரண்யா மற்றும் நாகவ்வின் தந்தையும் ஆச்சரியமாகப் பார்த்தனர். அதன்பின், அந்தாக்ஷரி வைத்து விளையாடிட, ஆடல் பாடல் என்று அவர்கள் கொண்டாடினர்.

மறுநாள், சங்கீத் விழாபோல ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் திருணமும் ராமின் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்ததால் தன்யாவையும் இங்கேயே அழைத்து வந்தனர்.

தன்யாவை தோழிகள் வீட்டிற்குள் அழைத்துவர, காவ்யா வடிவமைத்த அடர்பச்சை நிறத்தில் வெள்ளை கற்கள் பதித்து அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்கா அணிந்து மிதமான அலங்காரத்தில் ஓவியமாய் நடந்து வரும் தன்யாவின் அழகில் மயங்கி ராம் பார்த்து நிற்க, அதே நிறத்தில் குர்தா அணிந்து ஆணழகனாய் நின்ற ராமையும் தன்யா பெருமிதமாகப் பார்த்தாள்.

நண்பர்கள் மூவரும் இதைப் பார்த்து ராமை கேலி செய்துகொண்டிருந்தனர். ராணாவின் கண்களும் சிந்தையும் தன்யாவுடன் எழிமையாக வடிவமைக்கப்பட்ட இளமஞ்சள் நிற லெஹங்காவில் மிதமான ஒப்பனையில் தேவதையாக வந்த காவ்யாவின்மீதே நிலைத்திருந்தது. அவளைவிட்டு கண்களை அணுவும் நகர்த்தாமல் பார்த்துக்கொண்டிருக்க, தற்செயலாக காவ்யாவும் பார்த்திட, இருவரும் ஒருநொடி தங்களை மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின், அருகில் இருக்கும் தோழர்களின் சத்தத்தில் தன்னிலை பெற்றிட, காவ்யா வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். ராணாவும் சந்தோசமாக நண்பர்களின் கேலியில் இணைந்துகொண்டான்.

ராமும் தன்யாவும் அழகான ஜோடியாய் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க, அருகில் நண்பர்களும் தோழிகளும் ஏற்பாடு செய்ததுபோல் விளக்குகள் அணைக்கப்பட்டு நடுவில் மட்டும் ஒளி பரவிட பாடல் ஒலிக்கப்பட்டு அனைவரும் ஜோடியாக ஆட ஆரம்பித்தனர்.

பிரபவ்வும் அனுயாவும் கைகளை பற்றியவாறு மெதுவாக இசைக்கு ஏற்றபடி அசைந்திட, நாகவ்வும் சரண்யாவும் மெதுவாக ஆடினர். விஜய் ரம்யாவின் கைகளை பற்றி அவளை சுழலவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் விஜய்யும் ரம்யாவும் ராம் மற்றும் தன்யாவையும் அழைத்துவந்து ஆடவைத்திட, அருகில் நின்ற ராணா மற்றும் காவ்யாவையும் இழுத்துவந்தனர்.

ராமும் தன்யாவும் ஒருவரின் விழிகளில் மற்றவர் தொலைந்து ஆடிக்கொண்டிருக்க, காவ்யா ஆடாமல் நின்றிருக்க ரம்யா அவளை பிடித்து ராணாவின்மேல் தள்ளினாள். தடுமாறி அவன்மேல் விழுந்த காவ்யாவை தாங்கிப் பிடித்த ராணா அவளை நிற்க வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். தோழிகளும் நண்பர்களும் அவன் செல்வதை அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பார்த்தனர். அதன்பின் அதை மறந்து நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாடினர்.

இரவு, ராணாவை பார்க்க வந்த நண்பர்கள் அவனிடம் நேரடியாகவே கேட்டனர். "ஏன்டா காவ்யா அண்ணிகூட டான்ஸ் ஆடாம போன?" என்று ராம் கேட்டிட, மௌனமாய் இருந்தான்.

"உனக்காகவும் யோசிச்சுதான் நாங்களும் இப்டி ஒரு ஏற்பாடு பண்ணோம்" என்று விஜய் கூறிட, அதிர்ச்சியாகப் பார்த்தான், ராணா.

"ஆமாடா. நீ இப்ப காவ்யாவ எவ்ளோ டீப்பா லவ் பண்றனு எங்களுக்கும் தெரியும். ஆனா, இதுவரை நாங்க அவங்ககிட்ட இதபத்தி எதுவும் பேசினது இல்ல. அவங்கள கஷ்டப்படுத்த வேணாம்னுதான்" என்று பிரபவ்வும் கூறிட,

"இப்ப நீ வந்தப்றம் இன்னைக்கு நீங்க இரண்டுபேரும் பாத்துகிட்டீங்களே...அப்பவே எங்களுக்குப் புரிஞ்சது. அவங்களுக்கும் உன்மேல எதுவோ இருக்குன்னு. அதான் இப்டி ஒரு ஏற்பாடு பண்ணி அதுலயாச்சும் நீங்க சேர முடியுமானு பாத்தோம். ஆனா, நீதான் முறுக்கிக்கிட்டு போயிட்ட" என்று நாகவ் கூறி சலித்துக்கொள்ள,

"அவளுக்கு என்மேல காதலேகூட இருக்கலாம்டா. ஆனா, அத அவளே ஒத்துக்கிட்டு வரணும். இதுக்குமேலயும் அவள எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண விரும்பலடா. நான்தான் இத்தனநாளா என்னயபத்தி மட்டும் யோசிச்சு சுயநலமா இருந்துட்டேன். அவளோட கஷ்டத்தபத்தி யோசிக்கல. அவளுக்கு என்கூட வாழ விருப்பம் இல்லாதப்ப நான் எந்த விதத்திலயும் கட்டாயப்படுத்தமாட்டேன். அவளபத்தி நினச்சே வாழ்ந்துருவேன். அவ சந்தோசமா இருந்தாலே போதும்.
அவளுக்கு நான் எந்த விதத்திலயும் தொந்தரவா இருந்திடக்கூடாதுனு தான்டா நான் உங்களையெல்லாம் விட்டுட்டு ஃபாரின் போனேன். அப்றம் எப்டி நான் அவளுக்கு சங்கடத்த கொடுப்பேன்?" என்று ராணா அமைதியாகக் கூறிட, நண்பர்கள் நால்வரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

இத்தனை வருடங்களாக, தனக்கு ஒன்று சரியென்று பட்டுவிட்டால் அதை மட்டுமே செய்பவன், பிறரைப் பற்றி யோசித்திடாதவன், கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாதவன் இன்று இத்தனை பொறுமையாகப் பேசுவதையும் காவ்யாவின் நிலைபற்றியும் சிந்தித்துப் பேசுபவனை பார்க்கும்போது இவர்களுக்குப் பெருமையாக இருந்தது. அவனது காதலின் ஆழமும் நன்றாகத் தெரிந்தது. கண்கள் கலங்கிட ராணாவை அனைத்துக் கொண்டனர்.

தோழிகள் ஐவரும் ஒரே அறையில் இருக்க, அமைதியாக அமர்ந்திருந்த காவ்யாவை பார்த்தவர்கள், "என்னாச்சுடி? எதுக்காக இப்டி அமைதியா இருக்க" என்று அனுயா கேட்டிட,

"எதுக்காகவா இருக்கும். எல்லாம் ராணா இவளவிட்டு போனாரே.. பங்ஷன்ல. அதுக்காகத்தான காவி?" என்று சரண்யா கூறிட, அவளை காவ்யா திரும்பி முறைத்திட, அவள் அமைதியானாள்.

"அப்றம் எதுக்கு இப்டி இருக்க? என்னாச்சு?" என்று தன்யாவும் கேட்டிட,

"உங்கள நினச்சுதான் இப்டி இருக்கேன்" என்று கூறியதை கேட்டு குழம்பிப்போய் எதுக்கென்று விசாரிக்க,

"நானும் அவனும் சேரணும்னு நீங்க நினைக்கிறீங்களா? சொல்லுங்க..." என்று அவர்களை அழுத்தமாகப் பார்த்துக் கேட்டிட, அதிர்ச்சியடைந்து பார்த்தவர்கள் அமைதியாக இருந்திட,

"சொல்லுங்கடி...நான் அவன்கூட மறுபடியும் சேர்ந்து வாழணும்னு நீங்க நினைக்கிறீங்களா? அதனாலதான் ரம்யா! நீ என்னய அவன்மேல தள்ளிவிட்டியா?" என்று கோபமாகக் கேட்டிட,

"ஆமாடி. உண்மைதான். நீயும் அவரும் சேர்ந்து வாழணும்னு நாங்க ஆசப்படுறோம். அதுக்காகத்தான் நானும் உன்னய அவர்மேல தள்ளிவிட்டேன்" என்று ரம்யாவும் அழுத்தமாகக் கூறிட, காவ்யா அதிர்ந்தாள்.

"அதுவும் உனக்காகத்தான்டி. எதுக்காக உன்னய நீயே ஏமாத்திட்டு இருக்க?" என்று ரம்யா கூறியதை கேட்ட மற்ற தோழிகளும் அதிர்ந்தனர். என்னவென்று விசாரித்திட, ரம்யா ஆறு மாதங்களில் நடந்தவற்றை கூறத் தொடங்கினாள்.

****************************************

ராணாவுக்கும் காவ்யாவுக்கும் விவாகரத்து முடிந்து ராணாவும் வெளிநாடு சென்றுவிட, முதல் சிலநாட்கள் காவ்யா நிம்மதியாக இருந்தாள். அவளது தொழில், தோழிகள், நண்பர்கள், பெற்றோர்கள் என்று மிகவும் ஆனந்தமாகச் சென்றது. அவள் கடந்தகாலத்தை முழுவதும் மறந்திருந்தாள். ஆனால், அவளது குழந்தையின் நினைவு வரும்போதெல்லாம் மனம் பாரமாகும். அந்த நேரங்களில் அவளது சிந்தை அவளிடம் கூறுவது ஒன்றே...

'முதல்ல அந்தக் குழந்தைய நீயே கொல்றதுக்குத்தான இருந்த. இப்போ மட்டும் எதுக்காகக் கவலப்படற? நீ நினச்சமாறி அபார்ட் பண்ணிருந்தாக்கூட இப்போ அந்தக் குழந்தை இருந்திருக்காது. அதேமாறிதான் இப்பவும் இருக்கு. அந்தக் குழந்தை நீ மறக்க நினச்ச உன்னோட கடந்த காலத்தோட அடையாளம். அதான் அதுவே உன்ன கஷ்டப்படுத்தாம போயிடுச்சு. அந்தக் குழந்தைக்காகத்தான அவன பொறுத்துகிட்ட. இப்ப அந்தக் குழந்தையும் இல்ல அவனும் இல்ல உன் வாழ்க்கையில. உன்னோட வாழ்க்கைய புதுசா தொடங்கு' என்று உரைத்திடும் நேரங்களில் அவள்மீதும் அவளுக்கு வெறுப்பு தோன்றியது.

"நான் என்ன பண்ணுவேன்? அவன்மேல இருந்த வெறுப்பும் அந்த சம்பவமும்தான் என்னய அப்டி பண்ண வச்சது" என்று இவள் தனக்குள் கூறிட,

'இப்பவரைக்கும் அதே வெறுப்புத்தான இருக்கு அவன்மேல. அவனோட குழந்தை மட்டும் வேணுமா?' என்று மூளை உரைத்தது.

"அது என்னோட குழந்தையும்தான்" என்று இவள் கூறிட, 'அதை நீ முன்னாடியே நினைச்சிருந்தா அபார்ட் பண்ண யோசிச்சிருப்பியா?' என்று உள்மனம் உரைத்திட, உண்மை வலித்திட கண்கலங்கினாள்.

'அவன் அவனோட கோபத்தால தெரியாம அந்த குழந்தை பலியானது தப்புனா...நீ உன்னோட கோபத்தால தெரிஞ்சே கொல்லப் பார்த்தது தப்பில்லையா?' என்று உள்மனம் கேட்கும் கேள்விக்கு இவளிடம் பதில் இல்லாமல் சிலையாகினாள்.

இவ்வாறு அவளிடம் அவள் மனமே கேட்கும் கேள்விகளால் அவள்பக்கமும் இருக்கும் தவறை உணர்ந்தாள். குழந்தையின் இறப்பிற்கு ராணாவின் மீதே முழு பலியையும் கூறுவதும் நியாயம் இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டாள். அது விதியின் செயல் என்று எண்ணி அவளை தேற்றிக்கொண்டாள்.

ராணா இவளை படுத்திய கொடுமைகளை அவனுடன் இருக்கும்போதே இவள் ஏற்றுக்கொண்டு கடந்து வந்திருக்க, காலங்கள் கடந்து இவளும் முழுவதுமாக மீண்டிருந்தாள். அவனும் விவாகரத்து அளித்துச் சென்றதில் அவன்மீது இருந்த வெறுப்பும் எப்போதோ நீங்கியிருந்தது. நாளடைவில் ராணாவின்மீது அவள் கொண்டிருந்த கோபமும் முழுவதுமாக நீங்கி அவன்மீது எந்த தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாத நிலைக்கு வந்திருந்தாள். ராணா கூறியதை போலவே ராணா என்ற ஒருவன் அவனது சிந்தையிலும் நினைவுகளிலும் இல்லாமலே போயிருந்தான். அவள் வாழ்க்கை புதிதாகத் தொடங்கியிருந்தது.

ஆனால், அவன் இவளுக்கு அளித்திருந்த உறவுகளின் பந்தத்தைவிட்டு இவள் அகலவில்லை. அடிக்கடி நண்பர்களின் வீட்டிற்குச் சென்று பெரியவர்களை பார்த்துவிட்டு வருவாள். அந்த சமயங்களில்கூட அவளிடம் ராணாவை பற்றி எதுவும் பேசிடமாட்டார்கள். ஆனாலும் எப்போதாவது இவன் நண்பர்கள் அவனிடம் அலைபேசியில் பேசுவதை கேட்டு இவளுக்குச் சிறிதாகக் குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. தன்னால்தானே நண்பர்கள் இவ்வாறு பிரிந்திருக்கின்றனர் என்றும் தன் குடும்பத்தைவிட்டு நாடுகள் கடந்து எங்கோ அவன் சென்றிருக்கிறான் என்றும் தோன்றிட அவளுக்குள் வருத்தம் மேலிட்டது.

காவ்யாவின் மனம் பாரமாக அவளுக்கு நினைவில் அவள் குழந்தையின் கல்லறை நினைவு வந்தது. அங்கே சென்று இருந்து வரலாம் என்று எண்ணியவள் ராணாவின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே சென்றவள் கல்லறைக்குச் சென்று பார்த்திட, இன்றும் எப்போதும்போல் பராமரிக்கப்பட்டு அழகாக இருந்தது. அதன் அருகில் அமர்ந்தவள் சிறிதுநேரம் ஏனென்று தெரியாமலே அழுது தீர்த்தாள். சிலநிமிடங்கள் கழித்து மனதில் கொஞ்சம் நிம்மதி பரவியது.

அங்கிருந்து எழுந்தவள் வீட்டை பார்த்து உள்ளே செல்ல எத்தனிக்க, அவனுக்கும் தனக்குமே எந்த சம்பந்தமும் இல்லாதபோது வீட்டிற்குள் எதற்காகச் செல்லவேண்டும் என்று உள்மனம் கூறிட, அப்படியே வாசல் நோக்கித் திரும்பிச் சென்றாள். வேலையாளிடம் கடைக்குச் செல்லச்சொல்ல வீட்டு வாசலுக்கு வந்த கமலாம்மா காவ்யா செல்வதை பார்த்து அவளை அழைத்தபடி ஓடிவந்தார்.

சத்தம்கேட்டுத் திரும்பியவள் அவரை பார்த்ததும் சந்தோசமாக அணைத்துக்கொண்டாள். அவள் எவ்வளவு மறுத்தும் அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர் அவளுக்குத் தேனீர் போட்டுக் கொடுத்து வற்புறுத்தி குடிக்க வைத்தார். அவளும் அவர் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து குடித்தவள் சிறிதுநேரம் பேசிவிட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.

"என்னம்மா? உடனே கிளம்பணும்ங்குற. இது உன் வீடுதானம்மா. இருந்துட்டு போகலாம்ல" என்று கூறிட,

"அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டும்மா. இப்ப அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டிவோர்ஸ் வாங்கிட்டோம். உங்களுக்குத் தெரியும்தானம்மா?" என்று பொறுமையாகக் கூறிட,

"நல்லாத் தெரியும்டா. நீ இல்லாதது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? ஆனாலும் நீ சந்தோசமா இருக்கங்கற நினைப்புல நானும் என்னய சமாதானப் படுத்திகிட்டேன். ஆனா, நீ இப்ப இங்க வந்திருக்கன்னா நீ ஏதோ கவலைல இருக்கதானமா? என்ன கவலைடா?" என்று அக்கறையாகக் கேட்ட கமலாம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள், காவ்யா.

"நான் கவலைல இருக்கேன்னுதான் இங்க வந்தேன்னு உங்களுக்கு எப்டி தெரியும் கமலாம்மா?" என்று வியந்து கேட்டிட, புன்னகைத்தவர்,

"எல்லாத்தையும் ராணா தம்பிதான் சொன்னாரு. உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சுன்னும் இனிமேல் நீ இங்க வரவே மாட்டனும் சொன்னாரு. நீ சந்தோசமா வேற வாழ்க்கையை அமைச்சிகிட்டு வாழணும்னு அவரும் சொன்னாரு. ஆனா, எப்பயாச்சும் நீ இங்க வந்து பாப்பா கல்லறையை பாத்துட்டுப் போனா அப்ப நீ ஏதோ கவலைல இருப்பனும் அப்ப உன்னய பாத்தா கூப்டு ஆறுதலா பேசி உன்னய சமாதானப்படுத்தணும்னு தம்பி சொன்னாருமா. அதேபோல இத்தன நாளும் இல்லாம இப்ப நீ வந்தியா அதான் எனக்கும் அப்டி தோனி கேட்டேன்மா. எதாச்சும் கவலையாமா?" என்று பொறுமையாகக் கூறிட, காவ்யா அதிர்ச்சியில் விழிவிரித்திட, அவள் கண்களில் நீர் கசிந்தது.

"என்னம்மா சொல்றீங்க? இதுலாம் உண்மையா? இப்படிலாம் அவரு சொன்னாரா உங்ககிட்ட?" என்று கண்கலங்கிட கேட்க,

"ஆமாம்மா. எதுக்காக சொன்னாருனு அப்ப தெரியலமா. இப்ப நீ வந்தத பாக்கும்போதுதான் அன்னைக்கு அவரு சொன்னது எவ்ளோ உண்மைனு தெரியுது. அவருக்கு வெளிநாடு போகவே இஷ்டமில்லமா. விருப்பமே இல்லாமத்தான் போனாரு. போகுறவர பாதிநேரம் பாப்பாவோட தோட்டத்துலதான் இருப்பாரு. சரியா சாப்டல. தூங்கல. அவரு முன்னப்போலயே இப்ப இல்லடாம்மா. அவர இத்தன வருசத்துல இப்டி ஒருநாளும் நான் பாத்ததில்ல. அந்தளவுக்கு மாறிட்டாரு. யார்கிட்டயும் இப்பலாம் கோபப்படறதுகூட கிடையாது" என்று சொல்லிக்கொண்டே போக, காவ்யாவுக்குமே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இவளால்தான் ராணா வெளிநாடு சென்றான் என்று அறிந்தே குற்ற உணர்ச்சியில் இருந்தவளுக்கு அவன் விருப்பமில்லாமல் சென்றதாய் கூறியது மேலும் வருத்தத்தை அளித்தது. தன்னால் யாரும் சங்கடப்படுவதோ காயப்படுவதோகூட அவளுக்குப் பிடிக்காது. ஆதலால், இதை எண்ணி வருத்தம் கொண்டாள்.




❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
💕அவள் 25💕


காவ்யாவுக்கு ஏனோ அவள் இருந்த அறைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றிட, கமலாம்மாவிடம் கூறிவிட்டு அங்கே சென்றாள். அவள் அறை என்றும்போல் இல்லாமல் சற்று தூசிபடிந்து இருந்தது. அவன் இல்லாமல் யாரும் இங்கு வரக்கூடாது என்ற உத்தரவின் பெயரில் யாரும் இந்தப்பக்கம் கூட வருவதில்லை. ஆதலால், அறை அவன் விட்டுச் சென்றதுபோல் அப்படியே இருந்தது.

இவள் உள்ளே சென்று பார்த்திட, மெத்தையில் அவளது புடவை ஒன்று கிடந்ததை பார்த்தவள் அருகில் சென்று அதை எடுக்க அதிலிருந்து அவள் புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. மெத்தையில் இருந்த தலையணை, போர்வை என்று எதுவும் மடிக்கப்படாமல் இருந்ததை வைத்தே அதனுடன் புடவை இருந்தக் காரணத்தையும் அறிந்துகொண்டாள்.

ஏனெனில் ராணா இத்தனை நாட்களும் இவள் புடவையை அணைத்தவாறே தூங்குவான். அதை இவளும் உணர்ந்திட, இத்தனை நாட்கள் அவன் கொண்ட காதல் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அதற்குமேல் அவளால் தாங்க முடியாமல் அமர்ந்து அழுதாள்.

"எதுக்காக நான் உன்னய தப்பா நினச்சேன்? எதுக்காக நமக்குள்ள சண்ட வரணும்? உன்னய அடிக்கணும். நீ எதுக்காக என்னய பழி வாங்கணும்? ஏன் நம்மளோட சந்திப்பு கோபத்துல நடந்துச்சு? எதுக்காக நம்மளோட உறவு வெறுப்புல தொடங்குச்சு? இது எதுவும் நடக்காம இருந்திருந்தா நீயும் நானும் வேறமாதிரி சந்திச்சிருந்தா இப்போ நாம சந்தோசமா இருந்துருக்கலாமே..." என்று கூறியவள் அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தாள்.

எவ்வளவுநேரம் அழுதாள் என்று அவளே அறியாமல் அழுதவள் அதன்பின் எழுந்து வெளியே வந்தாள். அழுததால் முகம் வீங்கியிருக்க, கமலாம்மாவின் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காமல் கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் யாரும் இல்லாததால் அவளறைக்குச் சென்று அடைந்துகொண்டாள். அன்று முழுவதும் அறையைவிட்டு வெளியே வரவும் இல்லை. உணவும் உண்ணாமல் படுத்தபடியே கிடந்தாள். அவள் தோழிகளும் விசாரித்திட, அதிக வேலையின் காரணமாக ஏற்பட்ட சோர்வு என்று கூறி சமாளித்தாள். அப்படியே உறங்கியும் போனாள். மறுநாள் காலை நேரமாகியும் எழாமல் இருப்பதை கண்டு தோழிகள் ரம்யா மற்றும் தன்யா வந்து எழுப்பிட, அவளுக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்து அதிர்ந்தனர்.

தன்யா அவளை சோதித்துப் பார்த்து மருந்து எடுத்து வைத்திட, ரம்யா அவளுக்கு உணவையும் மருந்தையும் கொடுத்து ஓய்வெடுக்க வைத்தனர். அவர்கள் உடன் இருப்பதாய் கூறியதையும் மறுத்து அவர்களை வேலைக்கு அனுப்பி வைத்தாள். சோர்வில் கண்ணயர்ந்தவளின் நினைவுகளில் கடைசியாக ராணா அவளை அணைத்து முத்தமிட்டுச் சென்றது தோன்றிட, படக்கென கண்விழித்து எழுந்தாள். அப்போதே அவன் அணைப்பிலும் தந்த முத்தத்திலும் தெரிந்த காதலை உணர்ந்தாள். அவன் கூறிச் சென்ற "ஐ லவ் யூ" வில் இருந்த அவனது காதலின் ஆழமும் பிரிவின் ஏக்கமும் இப்போது புரிந்திட, கண்கள் கண்ணீரை சிந்தியது.

இரண்டு நாட்கள் கழித்தே காய்ச்சல் குணமாகித் தேறினாள். அதன்பின் ஒவ்வொரு நொடியும் பாரமாக உணர்ந்தாள். நாட்கள் நகர்ந்திட, மனம் எதை நாடுகிறது என்றே தெரியாமல் எதையோ தொலைத்ததுபோல காணப்பட்டாள். இவளது நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த தன்யாவும் ரம்யாவும் குழம்பினர். இப்போது அவள் அடிக்கடி ராணாவின் வீட்டிற்கும் சென்று வருவதை ரம்யா ஒருநாள் பின்னே சென்று அறிந்துகொண்டாள். அதை அவளிடமே கேட்டும் விட்டாள்.

"எதுக்காக காவ்யா இப்பலாம் அடிக்கடி ராணா வீட்டுக்குப் போற?" என்று ரம்யா அவளை கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, அவளும் அவள் குழந்தையின் கல்லறை பற்றியும் அவள் அங்கே செல்வது பற்றியும் கூறிட, ரம்யாவும் அதிர்ந்தவள் பின் வருந்தினாள்.

"சாரிடி. ஆனா...இத இத்தனநாளும் எங்ககிட்ட சொல்லவே இல்லயேடி" என்று வினவிட,

"அத பாத்துட்டு வந்தப்ப உங்ககிட்ட சொல்ற நிலைமைல நான் இல்ல. அதுக்கப்றம் அத சொல்றதுக்கான அவசியம் ஏற்படல. அப்றம் அத சொல்லி உங்களையும் கஷ்டப்படுத்த வேணானு விட்டுட்டேன். எனக்கு மனசு ரொம்ப பாரமா இருந்தா அங்க போனா சரியாகிடும். அதான் போவேன். அவ்ளோதான்" என்று கூறிட,

"அப்டி என்னடி உனக்கு மனசு பாரமா இருக்குனு இப்பலாம் அடிக்கடி அங்க போற?" என்று ரம்யா சந்தேகமாகக் கேட்டிட, காவ்யா அதிர்ந்து விழித்தாள். அவளை பார்த்தவளுக்கு ஏதோ தவறாகப்பட,

"என்னனு சொல்லு காவி. உனக்கு இப்ப என்னவோ பிரச்சினை இருக்கு. அதனாலதான் இப்பலாம் நீ நார்மலாவே இல்ல. என்னனு சொன்னாத்தான தெரியும். உனக்கும் ரிலாக்ஸா இருக்கும். சொல்லுடி" என்று கேட்டிட, அப்போதும் மௌனமாய் இருப்பதை பார்த்து,

"இப்போ நீ சொல்லப்போறியா? இல்ல நான் நம்ம ஃப்ரண்ட்ஸ கூப்டவா? அவங்க எல்லாரும் கேட்டா நீ சொல்லித்தான ஆகணும்..." என்று வேறு வழியின்றி மிரட்டலாகக் கேட்டிட, அவளும் பதறியவள்,

"வேணாடி. அவங்ககிட்ட சொல்லவேணா. நான் இப்டி இருக்கிறதும் தெரியவேணா. இப்ப அவங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத" என்று கூறிட,

"அப்போ நீ உண்மையை சொல்லு. எதையாச்சும் மறைக்கணும்னு நினச்சாலோ எனக்கு பொய்னு தோனினாலோ நான் அவங்ககிட்ட சொல்லிடுவேன். பாத்துக்கோ" என்று எச்சரிக்கை விடுத்திட, காவ்யாவும் சம்மதித்து முழுவதையும் கூறி முடித்துக் கண்கலங்கி நின்றாள். இவள் கூறியதை கேட்ட ரம்யாவுக்கு அதிர்ச்சி, வியப்பு, வருத்தம், ஆனந்தம், உற்சாகம், இயலாமை என்று அனைத்தும் சேர்ந்து அவளை தாக்கியது.

"என்ன சொல்ற காவ்யா? அப்போ...நீ ராணாவ லவ் பண்றியா...?" என்று நேரடியாகக் கேட்டிட,

"அதெல்லாம் எனக்குத் தெரியலடி. ஆனா, அவன் என்னய எவ்ளோ லவ் பண்றானு புரியுது. என்னய எவ்ளோ மிஸ் பண்றானும் தெரியுதுடி. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோனு தோனுது..." என்று கூறிட,

"ஆனா...அவருதான் உன் வாழ்க்கைய கெடுத்தவராச்சே...உன்னோட குழந்தை சாகுறதுக்குக்கூட அவர்தான காரணம். அப்டி இருக்கும்போது அவரு கஷ்டப்படுறது உனக்கு வருத்தமா இருக்கா?" என்று பொறுமையாகக் கேட்டிட,

"அவன் எனக்கு பண்ணதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்டி. அவன்கூட இருக்கும்போதே அதுல இருந்து மீண்டு வந்துட்டேன். அவன்மேல எனக்குத் இருந்த கோபத்துக்கான காரணம் குழந்தையோட இறப்புதான். ஆனா, அதுல அவன மட்டும் எப்டி தப்பு சொல்லமுடியும்? நடக்கணும்னு இருக்கிறத யாராலயும் மாத்தமுடியாது. எங்க குழந்தை எங்களவிட்டு போகணும்னு இருந்திருக்கு. அவ்ளோதான். அவனும் அந்தக் குழந்தைமேல எவ்ளோ பாசம் வச்சிருந்தானு எனக்குத் தெரியும். ஆனா, அதுமேல உயிரையே வச்சிருந்தது அவன் ஃப்ரண்ட்ஸ் சொன்னப்றம்தான் தெரிஞ்சுகிட்டேன். அவனும் ரொம்ப கஷ்டப்பட்டுருப்பான்ல..." என்று கூறியவள் கண்கலங்கிட, அதை ரம்யா வியப்பாகப் பார்த்தாள்.


"ஆனா இதெல்லாம் ஏற்கனவே உனக்குத் தெரியுமே...அவரு ஃபாரின் போனப்பக்கூட நீ எந்தக் கவலையும் இல்லாமதானடி இருந்த...இப்ப என்னடி புதுசா வருத்தப்படற? அதான் லவ் பண்றியானு கேக்குறேன்" என்று கேட்டிட,

"எனக்கு அப்பலாம் அவன்மேல ஒரு கோபமும் சின்ன வெறுப்பும் இருந்துச்சு. அதனால எதையுமே யோசிக்கலடி. எனக்கே ஒருநாள் நான் பண்ண தப்பு புரிஞ்சுது. அதுக்கப்றம்தான் அவன் பக்கத்து நியாயமும் வருத்தமும் புரிஞ்சுது. இதுக்குப்பேரு லவ்னு சொல்லவானு தெரியல. லவ்வா இருக்கணும்னு அவசியமும் இல்லடி. நாங்க இரண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தா அது எங்க இரண்டு பேருக்கு மட்டுமில்லாம எங்கள சேந்தவங்களுக்கும் கஷ்டம்" என்று கூறி வருந்திட,

"என்னடி சொல்ற? உங்க லைஃப் நீங்க வாழப்போறீங்க. இதுல என்ன கஷ்டம்?" என்று கேட்டிட,

"நாங்க இரண்டுபேருமே கோபத்துல என்ன பண்ணுவோம்னே தெரியாம நடந்துப்போம். அதனால எங்கள சார்ந்து இருக்கிறவங்களுக்கும் கஷ்டம்தான..இப்பலாம் அவன் அதிகமா கோபப்படறதே இல்லயாம். ஆனா, நான் அப்படி இல்லயே..இன்னும்கூட என்னால கோபத்த கட்டுப்படுத்த முடியல. அதனாலதான நான் அவன அன்னைக்கு அப்டி அடிச்சேன். கோபப்பட்டேன். ஆனாலும் அவன் கொஞ்சம்கூட கோபப்படாம பொறுமையா பேசுனான். நான் விரட்டியும் கோபப்படாம கிளம்பிட்டான். அவன் மாறிட்டான். ஆனா, நான் மாறல.." என்று பழைய நினைவுகளில் வருந்தியபடி கூறிட,

"அப்டிலாம் ஒன்னுமில்ல. நீங்க இரண்டுபேரும் கோபக்காரங்களா இருந்தாக்கூட உங்களுக்கிடையில லவ் இருந்தா எந்தப் பிரச்சினையுமே வந்திருக்காதுடி. இனியும் வராது. இப்பக்கூட நீ மட்டும் கோபக்காரியா இருந்தா என்ன? அவரு உன்னய பொறுத்துப் போகும்போது வாழ்க்கை அழகாத்தான்டி இருக்கும். நீ அதையெல்லாம் யோசிச்சுகிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத. உண்மைய சொல்லு. நீ அவர விரும்புறியா? உனக்கு அவர்கூட வாழ ஆசையிருக்காடி?" என்று பொறுமையாகக் கூறி ஆர்வமாகக் கேட்டிட,

"என்னய இப்ப எதுவும் கேட்காதடி. என்னால எந்தத் தெளிவான பதிலும் சொல்லமுடியாது. ஒருவேள அவன நான் இந்த சூழ்நிலையில பாக்காம வேறமாறி பாத்திருந்தா கண்டிப்பா லவ் பண்ணிருப்பேனோனு தோனுது..இப்ப எல்லாமே முடிஞ்சுபோச்சு. இதுக்கப்றம் அத மறுபடியும் ஆரம்பிக்க பயமா இருக்குடி..." என்று வருந்திக் கூறியதை கேட்டவள்,

"அப்போ அவர விடு. நீ உன்னோட புது லைஃப ஆரம்பிடி. அது யார்கூடவா இருந்தாலும் ஓகேதான். நீ கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தாதான்டி எங்களுக்கும் சந்தோசம். எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற? இந்தக் கேள்விய நாங்களும் உனக்கு டிவோர்ஸ் ஆன கொஞ்ச நாள்லயே கேட்டோம். நீதான் டைம் கேட்ட. கொடுத்தோம். இப்ப சொல்லு. என்ன முடிவு பண்ற?" என்று தீர்க்கமாகக் கேட்டவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள்,

"அதான் சொன்னேனே. இப்ப எந்த தெளிவான முடிவும் எடுக்கமுடியாதுனு..." என்று சோர்ந்து கூறிட,

"அப்ப உனக்கு இன்னும் கொஞ்சநாள் டைம் தரேன். அதுக்குள்ள நீ உன் முடிவ சொல்லியே ஆகணும். அப்றமா உனக்கு மாப்ள பாக்க ஸ்டார்ட் பண்ணிடுவோம்" என்று கூறிவிட்டுச் சென்றிட, காவ்யா முழுவதும் சோர்ந்துபோய் அமர்ந்தாள்.

காவ்யாவுக்கு மறுதிருமணம் செய்து கொள்வதை பற்றி எண்ணும்போதே மனம் மறுத்தது. ராணாவின் இடத்தில் வேறொருவரை வைத்துப் பார்க்க அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை. ஆனால், இதை காதல் என்று ஏற்றுக்கொள்ளவும் அவள் மறுத்தாள். ஆனால், அவனது அணைப்பும் தந்த முத்தமும் கூறிய காதல் வார்த்தைகளும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை நினைத்தபடியே நாட்களை உற்சாகமாகக் கழித்தாள்.

****************************************

அனைத்தையும் ரம்யா கூறி முடித்திட, தோழிகள் மூவரும் அதிர்ச்சியில் சிலையென அமர்ந்திருந்தனர். காவ்யா அவர்களை ஏறிட்டும் பார்க்காமல் தலைகவிழ்ந்தபடியே அமர்ந்திருந்தாள். அவளை அதே அதிர்ச்சியுடன் பார்த்தவர்கள்,

"அம்மாடி காவ்யா! தரைய அளந்தது போதும். கொஞ்சம் எங்கள நிமிர்ந்து பாக்கிறியா?" என்று சரண்யா நக்கலாகக் கூறிட, அவளை நிமிர்ந்து அப்பாவியாகப் பார்த்தவளை பார்த்து,

"பால் வடியுதுடி. தொடச்சிக்கோ. இவ்ளோ...நடந்திருக்கு. எங்ககிட்ட எதையும் சொல்லாம மறைச்சிருக்கல்ல. உன்னயலாம்...கடிச்சே சாவடிக்கணும்டி. ஆனா, என் வயித்துல இருக்க புள்ளைக்கு ஆபத்தேனு சும்மா விடுறேன்" என்று சரண்யா கடுப்பாகிக் கூறியதை கேட்டு காவ்யா விழிவிரித்தாள்.

"என்ன முழிக்கிற? நீ எதையோ பறிகொடுத்தமாறி திரிஞ்சப்பவே நான் டவுட் ஆனேன். ஆனா, இப்டி இருக்கும்னு நான் சத்தியமா நினைக்கலடி. அடியே...ரம்மி! உனக்குக்கூட என்கிட்ட சொல்லணும்னு தோனலல. கூடவே இருந்தவள பிரிச்சு வச்சுட்டீங்கல்ல..போங்கடி.." என்று தன்யா கோபித்துக்கொள்ள,

"சாரிடி. இவதான் சொல்லவேணானு சொன்னா. அதான். சாரிடி செல்லம்" என்று ரம்யா கூறி சமாதானப்படுத்தினாள்.

"அப்போ! நீ ராணாவ லவ் பண்றனும் ஒத்துக்க மாட்ட. வேற கல்யாணமும் பண்ணிக்கமாட்ட. அப்டித்தான?" என்று அனுயா கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, காவ்யா மௌனத்தையே பதிலாக அளித்தாள்.

"இப்டித்தான்... எப்ப கேட்டாலும் எதுவும் சொல்லமாட்டா. ஆனா, இவ அவர லவ் பண்றானு எனக்கு நல்லா புரிஞ்சது. அதான், இவளா ஒத்துக்கட்டும்னு கல்யாணத்த பத்தி டைம் முடிஞ்சதும் பேசினேன். ஆனா, அப்பதான் இவ விஜய்க்கும் எனக்கும் பஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்க
ப்ளான் போட்டுட்டா. அது அப்டியே ராம் பக்கம் திரும்ப இவ எஸ்கேப் ஆயிட்டா. இப்போ..ராணாவ இவ பாத்தப்பக்கூட இவ கண்ணுல லவ்வ பாத்தேன். அதனாலதான் அந்த டான்ஸ்ல இவங்கள நிக்கவச்சு இவள அவருமேல தள்ளிவிட்டேன். ஆனா, அவரு சொதப்பிட்டாரு" என்று ரம்யா கூறி சலித்துக்கொள்ள, மற்றவர்கள் இவ்வளவு நடந்திருக்கிறதா என்று வியந்தனர்.

"அதான் இவளும் சாதாரணமா நின்னாளா? நான்கூட ஆச்சரியப்பட்டேன். கோபமா போகாம நின்னாளேனு. அது கூட்டத்துல அசிங்கப்படுத்த வேணானு நினச்சு நிக்கிறானு நினச்சுட்டேன்டி..." என்று சரண்யா கூறிட,

"அதுக்காகவும்தான். அவன்கூட போய் டான்ஸ் ஆடணும்னு நான் ஒன்னும் நினைக்கல. அவனுக்கும் அது புடிக்கலபோல. அதான் போயிட்டான்" என்று கூறி காவ்யா இதழை சுளித்துக்கொள்ள, அதில் தோழிகள் கடுப்பாகிட,

"அடியே...ஏன்டி? முழு பூசணிக்காய சோத்துல மறைக்க பாக்குற? லவ் பண்ணா லவ் பண்றேன்னு சொல்றதுல உனக்கு என்னடி வந்துச்சு? அவருக்கு புடிக்கலனு உனக்குத் தெரியுமா? சும்மா இருடி.." என்று தன்யா சலித்துக்கொள்ள,

"அவளாவது ஒத்துக்கிறதாவது. நானும் கிட்டதட்ட மூனு மாசமா போராடிட்டேன்டி. அவ வாய தொறந்து சொல்லவே மாட்டிக்கிறா...அதான் நானே களத்துல இறங்கி வேலை செஞ்சேன். அதுவும் ஃபெய்லியர். ஹும்.." என்று சளைத்துக்கொண்டாள், ரம்யா.

"இப்பவும் அதான்டி சொல்றேன். இது லவ்வா இருந்தாலும் பரவால்ல. நாங்க இரண்டுபேருமே ஒருத்தர ஒருத்தர் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம். இதுக்கப்றமும் சேர்ந்து வாழ்ந்து ஹர்ட் பண்ணிக்க விரும்பல. இப்டியே இருந்துடலாம்னு இருக்கேன். விட்டுருங்கடி" என்று கூறிட,

"நீ ஏன்டி முதல்ல இருந்து ஆரம்பிக்கிற? அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்னு சொன்ன. அப்றம் எதுக்கு அதை இழுக்குற? அத விடு. உன்னால அவரில்லாம வாழ முடியுமா?" என்று சரண்யா கேட்டிட,

"முடியும்டி" என்று தீர்க்கமாகக் கூறியதை கேட்டு நொந்திட, "அப்போ! வேற கல்யாணம் பண்ணிக்கோ. நீ உன் புருசனோட குழந்த பெத்துகிட்டு சந்தோசமா வாழணும். அதான் எங்களுக்கு வேணும். பண்ணிப்பியா?" என்று தன்யா கேட்டிட, உடனடியாக மறுத்தவள்,

"அது முடியாதுடி. என்னால அவனத்தவிர வேற யாரையும் அந்த இடத்துல வச்சு பாக்கமுடியாது. அவன்மேல நான் வெறுப்பா இருந்தப்பவே அவனோட அன்பு என்னய பாதிச்சிருக்கு. இப்ப அவன்மேல எந்த வெறுப்பும் இல்ல. என்னால எப்டி அவன்கூட வாழ முடியாதோ அதேமாறிதான் வேற யாரையும் நினச்சுக்கூட பாக்கமுடியாது" என்று உறுதியாகக் கூறிட,

"இது எல்லாத்துக்கும் அவருதான காரணம். அவரு பண்ண தப்பாலதான உன்னோட வாழ்க்கையே இப்ப கேள்விக்குறி ஆயிட்டு.." என்று அனுயா வேண்டுமென்றே கோபமாகக் கூறிட,

"அப்படி இல்லடி. அவன்மேல வெறுப்பா இருந்தாக்கூட என்னால வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்க முடியும். ஆனா, இப்ப அவன்மேல எனக்கு அன்புதான் இருக்கு. இதத் தாண்டி எதைபத்தியும் யோசிக்கமுடியல. இதோட இதை விட்ருங்கடி" என்று கூறி அறையைவிட்டுச் சென்றுவிட்டாள்.

"விடுங்கடி. அவளுக்கு அவர்மேல இருக்க காதல ஒத்துக்கிறதுல எந்த தயக்கமும் இல்ல. ஆனா, ஏதோ ஒன்னு அவள தடுக்குது. அவர்கூட லைஃப ஸ்டார்ட் பண்றதுக்கு அவளுக்கு இன்னும் டைம் தேவைப்படுது. அவளுக்கு நம்பிக்கை வரணும். அவர்கூட வாழ்ந்தா சந்தோசமா இருப்போம்னு. அப்பதான் அவ ஒத்துக்குவானு நினைக்கிறேன். இதுவரை அவர நேர்ல பாக்காம இருந்தா. இப்பதான் அவரே வந்துட்டாரே. சீக்கிரம் புரிஞ்சுப்பா. அவருதான் புரிய வைக்கணும் இவளுக்கு. காலம் இவ்ளோதூரம் மாத்திருக்கு. இனியும் நல்லபடியா மாத்தும்னு நம்புவோம்" என்று அனுயா கூறி ஆறுதல்படுத்திட, மற்றவர்களுக்கும் அதுவே சரியெனப் பட்டு நிம்மதியைடந்தனர்.

வெளியே வந்த காவ்யா மாடிக்குச் சென்றவள் வானின் நிலவை வெறித்துக்கொண்டு நின்றிருந்த ராணாவை பார்த்து தன்னிச்சையாக அவனருகில் சென்றாள். அரவம் கேட்டுத் திரும்பியவன் காவ்யாவை பார்த்ததும் கண்களில் காதல் ததும்ப அவளை பார்த்தவன் அதற்குமேல் அங்கு நின்று அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் செல்ல எத்தனித்தான். அவன் பார்வையில் தெரிந்த காதலை அவளும் நன்றாக உணர்ந்தாள். திரும்பிச் செல்லப் போனவனை காவ்யா அழைத்தாள்.

"தேவ்!" என்று அழைத்திட, அடுத்த அடி வைக்காமல் அங்கேயே நின்றான், ராணா. இவனைத்தான் அழைக்கிறாளா? என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்திட,

"தேவ்! உங்ககூட கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டவாறு இவனை பார்த்து நின்றவளை கண்டதும் உறுதிசெய்தவனின் மனம் துள்ளிக் குதித்தது. அவளுக்கு சம்மதம் கூறிட, இருவரும் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரின் பக்கம் நின்றனர். இருவருக்கும் இடையில் ஈரடி தூரம் விட்டு நின்றிருந்தனர். ராணா, எதிர்ப்பார்ப்பு உள்ளே இருந்தாலும் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருக்க, தயங்கி நின்ற காவ்யா மெல்ல,

"தேவ்! சாரி! இன்னைக்கு உங்களுக்குப் பிடிக்காத விசயம் நடந்திருச்சு. பங்ஷன்ல நம்மள டான்ஸ் ஆட சொன்னததான் சொல்றேன். தேவையில்லாம என்னய உங்கமேல தள்ளிவிட்டு.. உங்களுக்கும் அது ரொம்ப சங்கடமாயிருக்கும். சாரி..." என்று அவன் கோபமாகச் சென்றதால் ஏற்பட்ட சந்தேகத்தில் கூறினாள்.

ராணா இவள்மீது கொண்ட காதல் இவள் அறிந்தாலும் காலம் எதையும் மாற்றவல்லது என்பதை நம்புமவள் இந்த ஆறு மாதத்தில் அவன் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவனுக்கு இவள்மீது கோபமும் வந்திருக்கலாம் என்றும் எண்ணினாள். அதனாலேயே இவனிடம் மன்னிப்புக் கேட்டாள். அவன் கண்களில் தெரிந்த காதல் இவளுக்குப் பாதி நம்பிக்கையை கொடுத்தாலும் அவனிடம் கூறிவிடுவது நல்லதென்று படவே பேசிவிட்டாள்.

காவ்யா கூற வருவதை ஆவலோடு பார்த்திருந்தவன் அவள் மன்னிப்புக்
கேட்டதில் முகம் தொங்கிப்போனது. இருந்தாலும் இவனிடம் வந்து பேசியதே பெரிய விசயமாக எண்ணியவன் புன்னகைத்தப்படியே, "யாரு சொன்னா எனக்கு சங்கடமாச்சுனு?" என்று கேட்டிட,

"நீங்கதான் கோபமா போனீங்களே...அப்ப உங்களுக்கு அது புடிக்கலனுதான அர்த்தம்" என்று கேட்டிட, 'உன்னய புடிக்காமதான் உன்னய பாக்குறதுக்காகவே இவ்ளோதூரம் வந்தேனா..? உன் நினப்புலதான் வாழ்ந்துட்டு இருக்கேன் இன்னும். அது உனக்கு எப்ப புரியும்?' என்று எண்ணிக்கொண்டவன் புன்னகைத்தப்படியே,

"அது எனக்குப் பிடிக்காம நான் போகல. உனக்காகத்தான் போனேன். என்னால எந்த விதத்திலயும் நீ சங்கடப்படக்கூடாதுனுதான் அப்டி பண்ணேன்" என்று தெளிவாகக் கூறிட, ஒருநொடி அவனை வியந்து பார்த்தாள். தனக்காகச் சிந்தித்து செயல்பட்டானா? என்று எண்ணும்போதே அவளுக்குள் பெருமிதம் பூத்தது.

"இனி அப்டிலாம் நினைக்கவேணா. உங்களால எனக்கு எந்த சங்கடமும் இல்ல. நீங்க உங்க லைஃப உங்களுக்காக வாழுங்க. என்னயபத்தி யோசிச்சு ஸ்பாய்ல் பண்ணிக்காதீங்க. அது எனக்கும் கஷ்டமா இருக்கும். இனிமேல் நமக்குள்ள எந்த வெறுப்பும் கோபமும் வேணா. பாத்தா சிரிச்சுக்கலாம். பேசிக்கலாம். லெட் பீ எ குட் ஃபிரண்ட்ஸ்" என்று கூறி கை நீட்டிட, ராணாவோ அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். முடிந்துவிட்டது என்று நினைத்த உறவு இப்போது வேறு உருவில் இவனிடம் திரும்பி வந்திட உள்ளம் மகிழ்ந்தான்.

காவ்யாவின் மாற்றமும் இவனிடம் அவளே வந்து பேசியதும் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்திட இறக்கை முளைத்துப் பறந்தான். காவ்யாவும் நீண்ட நாட்களுக்குப்பின் ராணாவை பார்த்துப் பேசியதை எண்ணி மனம் மகிழ கண்கள் கசிய திரும்பிச் சென்றாள்.

இங்கே ராணாவும் நீண்ட இடைவெளிக்குப் பின் காவ்யாவுடன் பேசியதையும் தொடுகையையும் எண்ணி மகிழ்ந்தவாறே அவனறைக்குச் சென்றுவிட்டான்.

அறைக்குள் வந்த ராணாவின் முகத்தில் தெரிந்த உற்சாகத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என்றெண்ணி நண்பர்கள் விசாரித்திட, அவன் நடந்தவற்றை கூறிட, மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். காவ்யாவின் மனமொத்து இருவரும் சேரவேண்டும் என்பதே இவர்களின் ஆசையும்கூட. இப்போது அதன் தொடக்கம் ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்ந்தபடியே உறங்கிப்போயினர்.





❤வருவாள்❤...
 
Messages
89
Reaction score
180
Points
33
💕அவள்💕


காலை எழுந்து அனைவரும் தயாராகிட, திருமண நேரமும் நெருங்கியது. மணமேடையில் ராம் மணமகனுக்கான கம்பீரத்துடன் அமர்ந்து மந்திரம் கூறிக்கொண்டிருக்க, ஐயர் அழைத்ததும் மணப்பெண்ணான தன்யாவையும் தோழிகள் அழைத்து வந்து அமரவைத்திட, சுற்றமும் நட்பும் சூழ்ந்து ஆசிர்வதித்திட, ராம் தன்யாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிந்து அவளை தன்னில் பாதியாக்கிக் கொண்டான்.

திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிடச் செல்ல, அனுயாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. பெரியவர்களையும் நாகவ், சரண்யா, ராம் மற்றும் தன்யாவை வீட்டிலேயே இருக்கக் கூறிவிட்டு பிரபவ்வும் ராணாவும் அனுயாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றிட, காவ்யாவும் அவர்களுடன் சென்றாள். லட்சுமி அம்மாவும் ரம்யாவும் தேவையானப் பொருட்களை எடுத்துக்கொண்டு விஜய்யுடன் பின்னே சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுயாவிற்கு சுகப்பிரசவத்தில் அழகானப் பெண்குழந்தை பிறந்தது. அங்கே இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்திட, அந்த நற்செய்தியை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரிவித்தனர். அதன்பின்னரே அவர்கள் ராம் மற்றும் தன்யாவின் திருமணச் சடங்குகளை பார்த்தனர். அடுத்த இரண்டு நாட்களில் அனுயாவை வீட்டிற்கு அழைத்துவந்தனர்.

ராணா வந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகியிருக்க, இத்தனை நாட்களும் காவ்யா இவனுடன் சாதாரணமாகவே பேசினாள். ராணாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும் அதற்குமேல் அவனும் எதையும் சிந்திக்கவில்லை. அவள் எதற்காகப் பேசுகிறாள்? எப்படி மாறினாள்? என்று எதையும் யோசிக்கவும் இல்லை. இப்போது அவள் சந்தோசமாக இருப்பதும் தன்னிடம் பேசுவதுமே போதும் என்று எண்ணிக்கொண்டான். ஆதலால், அவளிடம் அவனாகவே சென்றும்கூட பேசிடமாட்டான்.

காவ்யாவும் இத்தனை நாட்கள் அவன் நினைவுகளிலே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணியவளுக்கு எப்போது அவனை நேரில் சந்தித்தாளோ அப்போதிருந்தே அவனிடம் இருந்து தள்ளியிருக்கும் எண்ணம் நொறுங்கியது. அவனிடம் பேசவேண்டும், அவனை பார்க்கவேண்டும், அவனுடனே இருந்திட வேண்டும் என்ற எண்ணங்களே அவளை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், அவனிடம் அந்த தவிப்பேதும் இல்லாததை கண்டு மனம் வருந்தினாள்.

இவர்கள் இருவரின் நிலையையும் தனித்தனியே பார்த்திருந்த நண்பர்கள்தான் நொந்துபோயினர். இருவரின் காதலை பற்றி அறிந்தாலும் அதை அவர்களே புரிந்துகொண்டு சேரவேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தனர். இருவரையும் முக்கியமாக காவ்யாவை வற்புறுத்திட விரும்பவில்லை.

ராணா வெளிநாடு திரும்பும் நாளும் வந்தது. காலையிலிருந்தே காவ்யா அவளறைக்குள்ளேயே முடங்கினாள். ரம்யாவுக்கும் உண்மை தெரிந்தாலும் எதுவும் பேசிட இயலாமல் அமைதியாக இருந்தாள். இதற்குப் பிறகு ராணா தாயகம் வருவது மிகவும் கடினம் என்பதை அறிந்த காவ்யாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது தீர்த்தாள்.

மாலை விமான நிலையம் செல்ல இருந்த ராணா அனைவரிடமும் விடைபெற்றவன் நேராக காவ்யாவின் வீட்டிற்கு வந்தான். கடைசியாக ஒருமுறை அவளை பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காக வந்தவன் ரம்யாவிடம் கூறி அவளை அழைத்துவரச் சொல்லிட, அவளும் சென்று காவ்யாவை அழைத்திட, அழுத முகத்தை துடைத்தபடி எழுந்து வெளியே வந்தாள். அவளை பார்த்ததுமே அவளின் வீங்கிய முகத்தை வைத்தே அழுதது தெரிந்திட, மனம் பதைபதைத்திட எழுந்து அவளிடம் சென்றான்.

"என்னாச்சு அம்மு? எதுக்காக அழுதிருக்க? யாராச்சும் எதுவும் சொன்னாங்களா? எதுவும் பிரச்சினையா? சொல்லுமா..." என்று மனம் வலித்துப் பேசியவனை கண்கலங்கிட ஏறிட்டாள். அது அவனுக்கு இன்னும் வலித்திட,

"நான் இங்க வந்ததுதான் உனக்கு கஷ்டம்னா. சாரி அம்மு. நான் கிளம்பிடறேன். இதுக்கப்றம் நான் எப்ப வருவேன்னு தெரியாது. அதான் உன்னய பாத்துட்டுப் போலாம்னு வந்தேன். அதுவும் நீ நார்மலா பேசுவேனுதான் தைரியமா வந்தேன். இல்லன்னா வந்திருக்கக்கூட மாட்டேன்மா. சாரி. நான் கிளம்புறேன். டேக் கேர்.." என்று கூறியவன் கிளம்ப எத்தனிக்க, அதில் உடைந்தவள் கண்ணீருடன் கோபமாக அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். அதில் அதிர்ந்து குழம்பியவன் இவளை பார்த்திட,

"என்னடா நினச்சுட்டுருக்க உன் மனசுல? என்னய விட்டுட்டு ஒரேடியா போக முடிவு பண்ணிட்டல்ல? அவ்ளோதான் உன்னோட லவ்வா? எல்லாம் வெளிநாடு போனதுல குறைஞ்சு போச்சா?" என்று கோபமாகக் கேட்டவளை ராணாவும் ரம்யாவும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

"என்ன பாக்குற? அவ்ளோதான் உன் லவ்ல? அன்னைக்கு அப்டி பாத்துப்பேன் இப்டி பாத்துப்பேன்னு சொன்னதெல்லாம் பொய்தானா?" என்று கேட்டவளை கண்கலங்கிட பார்த்தவன்,

"நான் வாழ்றதுக்குக் காரணமே உன்மேல வச்சிருக்கிற காதல்தான். உன்னோட நினைவுகள்லதான் என் வாழ்க்கையே இருக்கு. உன்னோட சந்தோசம்தான் என்னோட சந்தோசமும். நான் இப்ப போறதுகூட உன் வாழ்க்கைக்கு எந்த விதத்திலயும் தொந்தரவா இருந்திடக்கூடாதுனு தான்..." என்று பொறுமையாகக் கூறியவனை கோபமாகப் பார்த்தவள்,

"மண்ணாங்கட்டி..லவ் பண்ற பொண்ண விட்டுட்டுப் போய் எப்டிடா அவள சந்தோசமா பாத்துப்ப? கூட இருந்து பாத்துக்கத் தெரியாதா? பெரிய தியாகி இவரு...கஷ்டத்த மறைச்சிகிட்டுப் போறாராம்...நீ இல்லாம நான் மட்டும் எப்டிடா சந்தோசமா இருப்பேன்..?" என்று கோபமாகத் தொடங்கியவள் வருத்தமாக முடித்திட, அவளை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து நோக்கினான்.

"எ..என்ன..சொன்ன...அம்மு..?" என்று வார்த்தைகள் வராமல் கண்கள் கலங்கிட கூறியவனை பார்த்தவள்,

"நீ இல்லாம என்னாலயும் நிம்மதியா வாழமுடியாது. நானும் உன்னோட நினைவுகள்லயே வாழ்ந்துடலாம்னுதான் நினச்சேன். ஆனா, உன்னய பாத்ததும் எல்லாமே மாறிடுச்சு. உன்னமாறி கல்நெஞ்சக்காரி நான் இல்லப்பா. அதான் என்னால முடியல. ஆனா, நீ என்னய விட்டுட்டுப் போகப் போறேல்ல...? போ..!" என்று கூறி முகத்தை திருப்பிக்கொள்ள, தன் காதுகளையே ராணாவால் நம்பமுடியவில்லை. தான் காண்பது கனவா? நனவா? என்ற சந்தேகமும் சந்தோச மிகுதியில் கண்ணீரும் மேலோங்கிட புன்னகையுடன் அவளை பார்த்து நின்றவன்,

"அம்மு...! நிஜமா சொல்றியா? நான் உன்னய நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன். என்னோட கோபத்தால நிறைய இழந்துருக்கோம். உன்னால எல்லாத்தையும் மறந்துட்டு என்கூட சந்தோசமா வாழமுடியுமாம்மா?" என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டவனை பார்த்து,

"கஷ்டப்படுத்தின நீதான அந்த கஷ்டத்துல இருந்தும் வெளிவர வச்ச. நம்ம இழந்ததுக்கு உன்னோட கோபத்த மட்டும் காரணமா சொல்லிடமுடியாது. அதோட நானும் கோபக்காரிதான. அப்ப நீ என்கூட சந்தோசமா வாழப் பிடிக்காமதான் போறியா?" என்று பதில் கூறி கேட்டிட, வேகமாக மறுத்துத் தலையசைத்தான்.

"எனக்கும் இதே பயம்லாம் இருந்துச்சு. ஆனா, உன்னய பாத்ததும் எல்லாம் மறந்து நீ மட்டும் வேணும். உன்கூட இருந்தாலே போதும்னு தோனுது. உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதவிட உன் காதல்மேல இன்னும் அதிகமா இருக்கு. ஆனா, உனக்கு எதுவும் தோனலபோல..அதான் கிளம்பிட்ட. போடா..போ..! உனக்கு எதுக்காக நான் எக்ஸ்ப்லைன் பண்ணணும்? நீ கிளம்பு. ஃப்லைட்கு டைம் ஆச்சு" என்று கடுப்பாகக் கூறி முடித்தவளை பார்த்துக் கண்ணீருடன் புன்னகைத்தவன்,

"ஐ லவ்யூ டி அம்மு...! நீதான் என்னோட வாழ்க்கையே. என்னோட தொலைஞ்சுபோன சந்தோசம் உன்னாலதான் கிடைச்சது. நீதான் என்னோட உயிர். உன்னயவிட்டு போய் நான் பாக்கறதுக்கும் வாழறதுக்கும் எதுவுமில்ல. என்னய ஏத்துகிட்டு என்கூட வாழ வரியா? மறுபடியும் லைஃப ரீஸ்டார்ட் பண்ணலாம். உன்னய கைல வச்சு தாங்குறேன்டி அம்மு..." என்று அவள்முன் மண்டியிட்டு காதலோடு கேட்டிட,

"நீ இவ்ளோ செண்டிமென்டா பேசாட்டியும் நான் ஓகேதான் சொல்லிருப்பேன்டா. பிகாஸ்..ஐ லவ் யூ டு தேவ்...!" என்று கூறி அவனின் நெத்தியில் இதழ் பதித்து அவனை கட்டிக்கொண்டாள். அவனும் இவள் இடையை சுற்றி வளைத்து அவள் மார்பில் முகம் புதைத்தான்.

இவர்கள் இருவரும் சேர்ந்ததை மகிழ்ச்சியோடு பார்த்திருந்த நண்பர்கள் ஓஓஓ என்று கூச்சலிட, சத்தம் கேட்டுத் திரும்பியவர்கள் அவர்களை இங்கே பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ராணாவும் காவ்யாவும் பேச ஆரம்பித்ததும் ரம்யாவுக்கு விஜய் அழைப்புவிடுத்திட, அதை ஏற்றவள் பேசாமல் இருக்க, இங்கு நடந்தது கேட்டு அவனும் மற்ற நண்பர்களுடன் இங்கே வந்தான். இவர்கள் சேர்ந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர் அனைவரும். இருவரின் அருகில் வந்த நண்பர்களும் ராணாவை கட்டிக்கொள்ள, ரம்யா காவ்யாவை அணைத்துக்கொண்டாள்.

"ஒருவழியா லவ் வார் முடிவுக்கு வந்திடுச்சுடா. நீங்க இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்றத பாத்துதான் நீங்க சேரணும்னு நாங்களும் நினச்சோம்" என்று ராம் ஆனந்தமாகக் கூறிட,

"உங்களோட லைஃப் இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்கு. இது முழுக்க முழுக்க லவ்னால தொடங்குன பயணம். அதனால இனிமேல் உங்க லைஃப்ல ஒன்லி ஸ்வீட் மொமண்ட்ஸ்தான் இருக்கும்" என்று பிரபவ்வும் மனநிறைவுடன் கூறிட,

"எப்பவும் இப்படியே ஹேப்பியான லவ்லி கப்பில்ஸா வாழ வாழ்த்துக்கள் ராணா அண்ட் அண்ணி" என்று சந்தோசமாக வாழ்த்தினான் நாகவ்.

"இந்த ஹாப்பி நியூஸ நம்ம ஃபேமிலிக்கு சொல்லணும்டா. ஆனா, ராணா! உனக்குத்தான் ஃப்லைட்கு டைம் ஆச்சேடா. நீ கிளம்பணும்ல. நீ போ. நாங்க சொல்லிக்கிறோம்" என்று விஜய் நக்கலாகக் கூறி முடித்திட,

"நல்லா சொல்லுங்க. அவன் போகட்டும். நம்ம போய் சொல்லிக்கலாம். வா! உன்னய சென்ட் ஆஃப் பண்ணிட்டு நாங்க கிளம்புறோம்" என்று காவ்யா நக்கல் செய்திட, மற்றவர்களும் நமட்டுச் சிரிப்பு சிரித்திட, ராணா அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டவன்,

"இதுக்கப்றம் ஒரு செகண்ட்கூட உன்னயவிட்டு எங்கயும் போகமாட்டேன்டா, அம்மு" என்று கூறி கன்னத்தில் முத்தமிட, அதில் வெட்கிக் கன்னங்கள் சிவந்திட தலைகுனிந்தாள். அனைவரும் அதை கண்டு மனமாற மகிழ்ந்தனர்.

"அடியே...காவி..! உன்னயும் கடைசில வெக்கப்பட வச்சிட்டாரே.. மாமா.." என்று ரம்யா கூறி சிரித்திட, அதில் இன்னும் வெட்கியவள் சிரித்தபடியே விஜய்யிடம் கண்காட்ட, அவன் ரம்யாவின் கன்னத்தில் எதிர்பாரா முத்தமொன்றை அளித்திட, அதில் வியந்து முழித்தவள் அதன்பின் அவளும் வெக்கப்பட்டு தலைகுனிந்துகொள்ள, அவளை காவ்யா பார்த்துச் சிரித்தாள்.

"அம்மு..நீ இவ்ளோ சேட்டக்காரியா? இவ சொன்னானு நீயும் இப்டி பண்றியேடா விஜி..." என்று ராணா சிரித்துக்கொண்டே கேட்டிட,

"அப்டி கேளுங்க மாமா..இங்க எல்லாரும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க...என்னனு கேளுங்க மாமா.." என்று ரம்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,

"அப்டியாடா? ஆனா..நானும் உன் ஃப்ரண்ட் சைடுதான்டா...சாரிடா.." என்று தயங்கியவாறு கூறி புன்னகைத்திட, ரம்யா போலியாகக் கோபித்து முகத்தை திருப்பிக் கொள்ள, அவளை அணைத்துக்கொண்ட காவ்யா,

"சரி..விடுடி செல்லம். நான்தான் உன் சப்போர்ட்டாச்சே.." என்று கூறிட, அவளை கட்டிக்கொண்டு முத்தமிட்டவள், "உனக்கு சப்போர்ட் பண்றதுக்காக நான் கோபிச்சுப்பேனா..யூ ஆர் மை டார்லிங்க்ல செல்லக்குட்டி..!" என்று கூறிட, அனைவரும் வியந்து புன்னகைத்தனர்.

"அம்மு மை டார்லிங்டா. அவளுக்கு நீ மட்டும் முத்தம் கொடுக்குற? நானும் கொடுப்பேன்" என்று கூறி ராணாவும் மறு கன்னத்தில் முத்தமிட, காவ்யா வெட்கத்தில் தலையில் அடித்துக்கொள்ள, அனைவரும் மனமகிழ்ந்து சிரித்தனர்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மூன்று வருடங்கள் கழித்து...

ராணா பதட்டமாக அமர்ந்திருக்க, அவனருகில் அமர்ந்து ஆறுதல்படுத்தினர் அவன் நண்பர்களான பிரபவ், ராம், நாகவ் மற்றும் விஜய். பெரியவர்களும் கமலாம்மாவும் இறைவனை வேண்டியபடி அமர்ந்திருக்க, அனுயாவின் மூன்று வயது மகளையும் சரண்யாவின் இரண்டரை வயது மகனையும் தன்யாவின் ஒன்றரை வயது மகனையும் ரம்யாவின் ஒரு வயது மகனையும் பார்த்துக்கொண்டவாறு மற்ற இருவரும் வீட்டில் இருந்திட, அனுயா மற்றும் சரண்யா இவர்களுடன் பதட்டமாக நின்றிருந்தனர். உள்ளே காவ்யா பிரசவ வலியில் துடித்திட, ராணாவின் மனம் ஒருநிலையில் இல்லாமல் வலித்திட, கண்ணீர் சிந்தியபடி முகத்தை கைகளால் மூடியபடி அமர்ந்திருந்தான்.

ராம் மற்றும் தன்யாவிற்குத் திருமணம் ஆன அடுத்த இரண்டு மாதங்களில் முதலில் ராணா மற்றும் காவ்யாவிற்கும் அடுத்து விஜய் மற்றும் ரம்யாவிற்கும் மிகப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்தேறியது. நண்பர்களும் தோழிகளும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவும் பரிமாறியபடி ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.

திருமணமான பின்பு ராணா காவ்யாவை தன் காதல் மழையில் நனையச் செய்தான். தினம்தினம் தன் காதலால் தான் செய்தத் தவறை திருத்திக்கொள்ள முயன்றான். ஆனால், இவனை முழு மனதாக ஏற்றுக்கொண்டவளுக்கு இவனது மன்னிப்பு தேவைப்படவில்லை. ஆனாலும் இவனது காதலில் அவளும் சுகமாகக் கரைந்தாள். ஓராண்டு ஆனபின்னும் காவ்யாவிடம் ராணா நெருங்கிடவில்லை. அவளை இன்னொருமுறை எந்தவிதத்திலும் காயப்படுத்திட அவன் எண்ணவில்லை. அவன் செய்த கொடுமை அவன் கண்முன்னே தோன்றிட, அவளை தீண்டவும் மனம் வலித்தது.

காவ்யாவும் இவனது காதலில் கரைந்தாலும் இவனது ஒதுக்கத்தை எண்ணி வருந்தினாள். இதை அவனிடமே கேட்டு உண்மையை அறிந்துகொண்டவள், "இங்க பாரு தேவ்!" என்று கூறி அவனை தன் கண்களை பார்க்கச் செய்தவள்,

"நான் அந்தப் பழைய நினைவுகள் எல்லாத்தையுமே எப்பவோ மறந்துட்டேன். அதுல இருந்து என்னய நீயும் கமலாம்மாவுமே மீட்டு கொண்டு வந்துட்டீங்க. அதுக்கப்புறம் நம்ம பிரிஞ்சு இருந்தப்பவே நான் அத சாதாரணமா எடுத்துட்டு கடந்து வந்துட்டேன். உன்னோட பாஸ்ட் தெரிஞ்சப்றம் நடந்ததுல உன்னோட தப்பு மட்டும் இல்லனு புரிஞ்சுகிட்டாலும் உன்மேல இருந்த கோபத்துலயும் தப்பான தொடக்கத்துல ஆரம்பிச்ச உறவு வேண்டாம்னுதான் நானும் டிவோர்ஸ் பண்ணேன்.

எப்போ நம்மளோட அந்த உறவு முடிஞ்சதோ அப்பவே நம்ம கடந்தகால வாழ்க்கையும் முடிஞ்சது. அதுக்கப்புறம் நம்ம சேர்ந்தது உன்னோட காதலால மட்டும்தான். உன்னோட உண்மையான காதல்தான் என்னய உன்கிட்ட கொண்டுவந்தது. நம்மள சேர்த்தும் வச்சது. இப்ப நமக்கிடைல இருக்கிறது காதலும் அன்பும் புரிதலும் மட்டும்தான் தேவ்.

இன்னும் நீ பழச நினச்சிட்டே இருக்காதே. உன்னோட பழைய நினைவுகள் உனக்கு குற்ற உணர்ச்சியா இருக்குதா? ஒவ்வொருத்தரோட சந்திப்பும் ஒவ்வொரு விதமா இருக்கும். நம்மளோட சந்திப்ப கடவுள் இப்படி எழுதிருக்காருனு நினச்சுக்கோ. நீயும நானும் சேர்ந்து சந்தோசமா வாழணும் தேவ்..எனக்கு நீ வேணும்" என்று முழுவதும் தெளிவாகக் கூறி அவனை பார்த்திட, ராணா கண்கள் கலங்கிட காதலோடு அவளை அணைத்துக்கொண்டான்.

அதன்பிறகு இருவரும் அவர்களது இல்லற வாழ்வில் இனிமையாய் மூழ்கிட, காலம் காதலில் கரைந்திட, காவ்யாவும் கருவுற்றாள். காதலோடும் அக்கறையோடும் அவளை பார்த்துக்கொண்டவன் அவளது வயிற்றில் வளர்வது இரட்டை குழந்தைகள் என்று தெரிந்தபின் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். காவ்யாவின்மீது அவனுக்கு உள்ள காதல் நாளுக்குநாள் பெருகியது. காவ்யாவிற்கும் இவன் காட்டும் காதலில் தொலைவது பிடித்தாலும் அவனுக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் மாறி அவனையும் தன் காதலால் அரவணைத்து தொலையச் செய்தாள்.

இன்று காவ்யாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் விரைந்து அவளை மருத்துவனையில் கொண்டுவந்து சேர்த்தான். வலியால் அவள் துடித்திட, தாயும் சேய்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொண்டிருக்க,

'நீங்க மூனுபேரும்தான் என்னோட உயிர். நீங்க என்கிட்ட பத்திரமா வந்திரணும். அம்மு...! உனக்காக நான் காத்துட்டு இருக்கேன். சீக்கிரம் என்கிட்ட வந்துடு...' என்று ராணா தனக்குள் நினைத்தபடி முகத்தைமூடி அமர்ந்திருக்க, வலியால் கதறிய காவ்யா கத்தியபடி அமைதியடைய, குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு வெளியே நின்றிருந்த அனைவரும் பதட்டமும் சந்தோசமும் நிறைந்தபடி ஆவலோடு காத்திருந்தனர்.

சிறிதுநேரம் கழித்து காவ்யாவை வேறு அறைக்கு மாற்றியதும் வெளியே வந்த செவிலியர் இருவரின் கைகளில் இருந்த குழந்தைகளை அனைவரும் மிகவும் சந்தோத்துடன் பார்த்தனர். குழந்தைகள் நலமுடன் வந்த செய்தி அறிந்ததும் வேகமாக எழுந்த ராணா நேராக அறைக்குள் சென்றான். அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தாலும் அவன் செல்லட்டும் என்று விட்டுவிட்டனர். உள்ளே வந்தவன் துவண்ட கொடியாய் மயக்கத்தில் படுத்திருந்த காவ்யாவை பார்த்தபடி அவளருகில் வந்தமர்ந்து அவள் நெற்றியில் மெலிதாக இதழ் பதித்தவன் அவள் கைகளைப் பற்றி மென்மையாக வருடினான்.

சிலநிமிடங்கள் அங்கேயே அவனிருக்க, காவ்யா மெல்ல தன் கண்களை திறந்தாள். தன் கண்முன் கண்களில் காதலையும் தவிப்பையும் ஏந்தி தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் ராணாவை பார்த்தவள் மெல்ல எழுந்தமர முயற்சிக்க ராணா அவளை அமரவைத்தான். அவனை பார்த்துப் புன்னகைத்தவள், "நம்ம குழந்தைகங்கள பாத்தியா தேவ்?" என்று கேட்டிட, அவன் மறுப்பாகத் தலையசைத்ததை பார்த்துக் குழம்பியவள் ஏன் என்று கேட்டிட,

"என்னோட குழந்தைய முதல்ல பாத்துட்டு அப்றம் நம்ம குழந்தைங்கள பாக்கலாம்னு இருந்தேன்" என்று ராணா அமைதியாகக் கூறியதை கேட்டவள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள். அந்தநேரம் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவர்களை பார்த்திட, அங்கே லட்சுமி அம்மாவும் சீதா அம்மாவும் வந்து இருவரிடமும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியோடு குழந்தைகளை தந்துவிட்டு தனிமையளித்துச் சென்றுவிட்டனர்.

தன் கைகளில் ஏந்திய குழந்தைகளை பார்த்ததும் ராணாவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்திட, இரு குழந்தைகளையும் அன்போடு முத்தமிட்டான். காவ்யாவிடம் திரும்பியவன், "அம்மு...! உன்னால என்னோட வாழ்க்கை முழுமை அடைஞ்சிருச்சு. எப்படியோ வாழ்ந்திட்டு இருந்தவன் வாழ்க்கையில வந்து என்னய மாத்தி எனக்கு ஒரு அம்மாவா இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அளவுக்கதிகமான காதலை கொடுத்த. இப்போ நம்ம குழந்தைங்கள கொடுத்து என் அம்மா அப்பாவ திரும்ப என் வாழ்க்கையில் கொண்டு வந்துட்ட" என்று தன் இரட்டைக் குழந்தைகளான ஆண் பெண் இருவரையும் பார்த்துக் கூறியவன், "ஐ லவ் யூ டி அம்மு...!" என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள், "ஐ லவ் யூ டூ தேவ்...!" என்று கூறினாள்.

"நீ எனக்கு கொடுத்த எல்லாத்துக்கும் தாங்க்ஸ் அண்ட் நான் உனக்கு கொடுத்த எல்லாத்துக்கும் சாரிமா.." என்று கூறிட, அவன் இதழில் விரல் வைத்தவள், "டேய்..தேங்க்ஸ், சாரிலாம் சொல்லக்கூடாதுனு எத்தனவாட்டி சொல்றது. இனியும் இப்டியே சொல்லிட்டு இருந்த..அப்றம் டிவோர்ஸ்தான். என்ன நினச்சுட்டுருக்க உன் மனசுல? நானும் இத்தன வருசமா சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற.." என்று இவனை பார்க்காமல் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்நேரத்தில் ராணா இரு குழந்தைகளையும் தொட்டிலில் கிடத்திவிட்டு வந்து இவளருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் இதழை மென்மையாகச் சிறை செய்தான். இவளும் அவன் முத்தத்தில் கரைந்திட, சிலநொடிகள் கழித்து விலகியவன், "எப்பவும் நமக்குள்ள பிரிவு வராது. அது வார்த்தையா இருந்தாலும்கூட.." என்று கூறி அவளை அணைத்துக்கொள்ள, அவளும் இவனை காதலோடு அணைத்துக்கொண்டாள்.

💞சுபம்💞


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

இருளில் தொலைந்த ஒளியானவள் ஜுவாலையாய் மீண்டெழுந்து தன் ஒளியை பரப்பி அந்த இருளையும் வெளிச்சமடையச் செய்து பிரகாசமானாள்.


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Messages
89
Reaction score
180
Points
33
நட்புக்களே..💕💕

கதை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது...என்னோட முதல் படைப்பு இது..அதை நல்லபடியா முடித்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சி..உங்களோட ஆதரவுக்கு மிக்க நன்றி..😍😍 உங்களோட கமெண்ட்ஸ் படிக்கிறப்பலாம் ரொம்ப சந்தோசமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும்..உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி..உங்களோட நட்புகளுக்கும் இந்தக் கதைய பகிர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..
நட்புக்களே💕💕


இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி,
தமிழுக்கினியாள்✒
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom