தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
அவள் 18
"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாது. இதுல என்னோட தப்பும் இருக்கு. நான் அன்னைக்கு கோபத்துல எதையும் யோசிக்காம அப்டி பண்ணதுக்குதான் எனக்கு தண்டனை கிடைச்சிருக்கு. ஆனா, என்னோட விதி, இந்தளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திடுச்சு" என்று விரக்தியாகக் கூறியவளை வேதனையுடன் பார்த்த கமலாம்மா,
"அப்டிலாம் பேசாதம்மா. எந்த நிலைமையும் ஒருநாள் நிச்சயமா மாறும். உன் வாழ்க்கைய கெடுத்தவரே உன்னய தேடிவந்து கல்யாணம் பண்ணிருக்காரு. பாத்தியா. விதி ஒன்ன பறிச்சா இன்னொன்ன கொடுக்கும்மா. கூடிய சீக்கிரமே உன் வாழ்க்கையும் நல்லபடியா மாறும். நீ மனச தளர விடாதமா" என்று ஆறுதலாய் கூறிட,
'அவன் என்னய கல்யாணம் பண்ணிகிட்டதே இன்னும் பழி வாங்கத்தான' என்று மனதில் எண்ணிக்கொண்டவள், "விடுங்கம்மா. இதுக்குமேல இதைபத்தி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல. எல்லாம் நடந்து முடிந்திடுச்சு. எதையும் மாத்த முடியாது" என்று கூறி முடித்திட, கமலாம்மாவும் அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியானார்.
"சரிம்மா. இந்த ரூம பாத்தாலே அந்தளவுக்குப் பயந்துருக்க. அப்றம் எதுக்குமா இங்கயே இருக்க ஒத்துகிட்ட? உன் ரூமுக்கே போயிடலாம்ல?" என்று தன் சந்தேகத்தை கேட்டார்.
"எத்தன நாளைக்கும்மா பயந்து ஓடுறது? என்னய பாத்தே நான் பயந்து ஓடுறேன். என்னயவே தொலைச்சுட்டேன்மா எப்பவோ...இப்பவும் தேடாம விட்டேன்னா அப்றம் எப்பவும் கிடைக்காம போயிடுவேன். எனக்காக இல்லாட்டியும் என் ஃப்ரண்ட்ஸ்காக நான் பழைய காவ்யாவா மாற முயற்சி பண்ணணும். அதுக்கு என் கசப்பான நினைவுகள நான் ஃபேஸ் பண்ணணும். அதனாலதான் இத்தனநாள் என் ஃபிரண்ட்ஸ் கேட்டும் சொல்லாத விசயத்த இன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன். இனி அத மாத்த முடியாது. அதனாலதான் அத ஏத்துக்க பழகிக்கிறேன். இந்த ரூம்லதான எல்லாம் ஆரம்பிச்சது. அதான் இங்கயே இருந்து மாறலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று காவ்யா கூறுவதை கேட்ட கமலாம்மாவுக்கு அன்றுதான் அவளது மன உறுதியும் தைரியமும் தெரிந்தது. அவரும் அவளை எண்ணி மெச்சிக்கொண்டார்.
அந்த அறையிலேயே தங்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல, பகலில் அவளது டிசைனிங் பணியில் மூழ்கிவிடுவதால் அவளுக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும் இரவில் தூக்கத்தில் அலறுவது இன்னும் அதிகமானது. அவளது நிலை மோசமாவது தெரிந்த ராணா அவளை வேறு அறைக்குச் செல்லச் சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை. அவள் அமைதியாகவே மறுத்து மௌனம் சாதிக்க, இவனுக்கு அவளிடம் கோபத்தை காட்டவும் முடியாமல் அவளை எப்படி அனுப்புவது என்றும் தெரியாமல் திணறித்தான் போனான்.
அன்று, பகலில் டிசைனிங் வேலையை முடித்தவள் உணவருந்த கமலாம்மாவிடம் சென்றாள். ராணாவும் அந்நேரம் வந்துவிட, காவ்யா சமையலறையில் நின்றுகொண்டாள். அறைக்குச் சென்று ரிஃப்ரஷ் ஆகிவிட்டு வந்து அமர, கமலாம்மா உணவு பரிமாறினார்.
"காவ்யாவ எங்க? ரூம்ல இருக்காளா? சாப்டாளா?" என்று கேட்டிட, ஒருநொடி அமைதி காத்தவர்,
"இல்லைங்க தம்பி. இன்னும் சாப்டல. அதுக்குத்தான் வந்தா..." என்று கூறி நிறுத்த, அதை கேள்வியுடன் பார்த்தவன்,
"இன்னும் சாப்டலையா என்ன? இவ்ளோநேரம் சாப்டாம இருக்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல உங்ககிட்ட. இதுதான் நீங்க பாத்துக்கற லட்சணமா?" என்று சற்று காட்டமாகப் பேசிவிட்ட பின்னே தன் தவறை உணர்ந்தான். பின், பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன்,
"நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னுதான உங்ககிட்ட சொல்லிட்டுப் போனேன். நீங்களே இப்டி இருந்தா எப்டி கமலாம்மா?" என்று பொறுமையாகக் கூறிட, அவரும் அமைதியாக நின்றவர்,
"மன்னிச்சிடுங்க தம்பி. இனிமேல் இப்டி தப்பு நடக்காது. கரெக்டா கொடுத்துடுறேன் தம்பி" என்று கூறிட, அதை கேட்டு ராணாவும் அமைதியானான். ஆனால், இதை உள்ளிருந்து கேட்ட காவ்யா மனம் வருந்திட, வெளியே வந்தாள்.
"கமலாம்மா மேல எந்த தப்பும் இல்ல. நான்தான் வர்க் முடிக்க டைம் ஆகும்னு அவங்க எவ்ளோ கூப்டும் வரலைன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க கம்பெல் பண்ணிட்டே இருந்தாங்க. அதனாலதான் நான் சீக்கிரம் முடிச்சிட்டு இப்ப வந்தேன். இல்லன்னா இன்னமும் நான் வரதுக்கு டைம் ஆகிருக்கும்" என்று தரையை பார்த்தபடியே கூறி முடித்திட, அவளை பார்த்திருந்த ராணா மூச்சை இழுத்துவிட்டவன்,
"இங்க பாரு" என்று சொல்ல, அசையாமல் நின்றவள், "என்னய பாருன்னு சொல்றேன்ல" என்று சற்று குரலை உயர்த்திக் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"நான் உனக்கு இந்த டிசைனிங் அரேஞ்ச்மெண்ட் பண்ணி தந்தது நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவன்னுதான். இப்டி அதுலயே இருந்து உடம்ப கெடுத்துக்க இல்ல. இனி இப்டி ஒரு தப்பு மறுபடியும் நடக்கக்கூடாது. புரியுதா?" என்று பொறுமையாகவும் அழுத்தமாகவும் கேட்டிட, காவ்யா அவனை நேருக்குநேர் பார்த்திருந்ததால் எதிர்த்துப் பேசும் திறனின்றி தலையை ஆட்டினாள்.
"வாய திறந்து சொன்னா முத்து விழுந்துடுமா என்ன?" என்று ராணா சற்று கடுப்பாகிட, சட்டென பதறியவள்,
"இனி..மேல்.. இப்டி.. நடக்காது.." என்று மெல்ல கூறியவள் அமைதியானாள்.
"சரி! வா! வந்து உட்காரு" என்று ராணா காவ்யாவை அழைத்திட, அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.
"நீ இன்னும் சாப்டலைல. வந்து உக்காந்து சாப்டு முதல்ல. எவ்ளோ நேரம் இன்னும் சாப்டாம இருப்ப?" என்று கூறி அமரச் சொல்லிட, அவளுக்கு விருப்பமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அதை பார்த்துக் கடுப்பானவன்,
"ஒவ்வொரு தடவையும் நான் கோபமா சொன்னாதான் கேட்கணும்னு முடிவு பண்ணிருக்கியா? இல்ல அப்டி சொன்னாதான் உனக்குப் பிடிக்குமா?" என்று அவளை பார்த்துக் கேட்டிட, காவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக வந்து அமர்ந்தாள்.
கமலாம்மா உணவு பரிமாறிட, உணவில் கவனமே இல்லாமல் தட்டில் கோலமிட்டபடி குனிந்திருந்தாள். அவளை கமலாம்மாவும் பார்த்து, "காவ்யாமா! சாப்டுடா. சாப்பாடு பிடிக்கலையா? வேற எதுவும் வேணுமா?" என்று அன்பாகக் கேட்க, அவள் அதற்கு மறுப்பாகத் தலையை மட்டும் ஆட்டியவள், ராணாவை பார்த்தவள் அவரையும் பார்த்துவிட்டு குனிந்துகொண்டாள்.
கமலாம்மாவுக்கும் அவளது தயக்கம் புரிந்துவிட, செய்வதறியாது நின்றார்.
இவர்கள் பேச்சையும் செயலையும் சாப்பாட்டில் கவனம் இருப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் அமைதியை பார்த்தவன், "எதுக்கு இன்னும் சாப்டாம இருக்க?" என்று காவ்யாவிடம் கேட்டிட, அவள் அவனை பார்த்துவிட்டு மௌனம் காத்திட,
"ஒன்னுமில்ல தம்பி...! அவளுக்கு இந்த சாப்பாடு பிடிக்கலையாம். அதான் அவளுக்கு அப்றமா என்ன வேணும்னு கேட்டு செஞ்சு தந்துடுறேன். நீங்க சாப்டுங்க தம்பி" என்று கூறி கமலாம்மா சமாளிக்க,
"என்ன கமலாம்மா? அதுவரை சாப்டாம இருப்பாளா? அதுக்குத்தான நான் அப்பவே சொன்னேன். வரவர பொய்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? அவளுக்கு சாப்பாட்டுல பிரச்சினை இல்ல. அவளுக்கு என்ன பண்ணணுமோ அத பண்ணுங்க. நான் இருக்கேன்னு தயங்க வேணாம். இப்ப வயித்துல இருக்க குழந்ததான் முக்கியம்" என்று அவரை பார்த்துக் கூறிவிட்டு காவ்யாவை ஒருமுறை பார்த்துவிட்டு எழுந்து சென்றான்.
ராணா கூறியதன் அர்த்தம் கமலாம்மாவுக்குப் புரிந்துவிட, காவ்யா புரியாமல் இவரை பார்த்தாள். அதை பார்த்தவர்,
"உனக்கு ஊட்டிவிட சொல்லிட்டுப் போறாரு" என்று கூறிட, அதை வியப்பாகப் பார்த்த காவ்யா,
"அப்போ...நீங்க எனக்கு ஊட்டி விடுறது அவருக்குத் தெரியுமா என்ன?" என்று கேட்டிட, அதை பார்த்து லேசாகப் புன்னகைத்தவர்,
"தெரியும். அதுமட்டுமில்ல. நீ என்னய அம்மானு கூப்டுறது, நான் உன்னய வா போனு கூப்டுறது எல்லாமே அவருக்கு தெரிஞ்சிருக்கு. அதான் ஒருநாள், அவரே என்கிட்ட வந்து நான் அவர்கிட்ட உன்னய மரியாதையா பேசுறத பார்த்து சாதாரணமாவே உன்னய கூப்ட சொல்லிட்டாரு. அதோட, அவரையும் ஐயானு கூப்ட வேணானு சொல்லிட்டாரு" என்று கூறிட, காவ்யா அதை கேட்டு யோசனைக்குச் சென்றாள்.
அவளுக்கும் இவர் இவளை சாதாரணமாக அழைப்பது, அவனை தம்பி என்று அழைப்பது எல்லாம் நினைவு வர, புரிந்துகொண்டாள். காவ்யாவுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றினாலும் அதைப்பற்றி எதுவும் அதற்குமேல் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின், கமலாம்மா ஊட்டிவிட உணவருந்தியவள் மருந்தும் சாப்பிட்டு, சிறிதுநேரம் கழித்து அறைக்குச் சென்று அவள் வேலையை தொடர்ந்தாள்.
அன்று இரவு, வழக்கம்போல் காவ்யா தூங்குவதற்காக கமலாம்மாவை எதிர்பார்த்து அறையில் அவள் வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருந்தாள். நேரம் ஆகிக்கொண்டே போக, தானே சென்று அழைத்து வரலாம் என்று கிளம்பினாள். அறையின் வாசல் பக்கம் வருவதற்குள் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைந்ததில் ஒருநொடி பயத்தில் கத்திவிட்டாள்.
அந்நேரம் கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, அது கமலாம்மாதான் என்பதை அறிந்தவள், கதவு திறந்ததுமே காவ்யா வேகமாகச் சென்று கட்டிக்கொண்டாள்.
காவ்யா பயத்தில் முதலில் எதுவும் யோசிக்காமல் இறுக்கி அணைத்துக்கொள்ள, சிறிது பயம் நீங்கியவள், அதன் பின்னே அதிர்ந்து விலகினாள். காவ்யா விலகி வந்து நிமிர்ந்து பார்த்திட, எதிரில் நின்றவரின் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில் அப்போதுதான் பார்த்தாள், வந்தது ராணா என்பதை.
காவ்யாவை பார்க்க அறைக்கு ராணா வந்துகொண்டிருக்க, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவ்யாவின் பயத்தை அறிந்தவன், வேகமாகக் கதவை திறந்துகொண்டு வர, இவனை அவள் அணைத்திருந்தாள். இவனும் முதலில் அதிர்ந்தாலும் பின் அவள் பயத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அமைதியாக நின்றான். தன் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் ஒளியை ஒளிரச் செய்தான்.
காவ்யா இவனை பார்த்ததும் அதிர்ச்சியிலும் பயத்திலும் பின்னே சென்றாள். ஏற்கனவே அவள் அந்த பழைய நினைவுகளில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில் இத்தருணம் அவளுக்கு அந்நாளை தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்தது. கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்துக்கொண்டே பின்னே சென்றவள், சுவற்றில் முட்டி அப்டியே நின்றாள்.
காவ்யாவின் கண்களில் தெரிந்த பயத்தை அந்தச் சிறிய ஒளியிலும் அவனால் நன்கு உணர முடிந்தது. அவன் அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினான். இவளுக்குப் பயத்தில் அது எதுவும் காதில் விழவில்லை. அவனை பார்த்தபடியே அப்படியே கீழே சரிந்து அமர்ந்தாள். ராணா அவள் அமர்ந்ததை பார்த்து,
"என்னாச்சு? மயக்கமா இருக்கா? டயர்டா இருக்கா? இல்ல, வாமிட் எதுவும் வருதா?" என்று அவள் அருகில் வராமலேயே கேட்டான். அதை கேட்டவள் இல்லை என்றவாறு தலையை ஆட்டிட, அவனும் சற்று அமைதியானான். அவன் அங்கே மெத்தையில் அமர்ந்திருக்க, இவள் இங்கே தரையில் அமர்ந்திருக்க, நிமிடங்கள் யுகமாய் காட்சியளித்தது காவ்யாவுக்கு.
சிலநிமிடங்களில் விளக்குகள் அனைத்தும் ஒளிர ஆரம்பித்தன. அதில் நிம்மதியடைந்தவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். ராணாவும் எழுந்து வெளியே சென்றிட, இப்போது பயம் தீர்ந்தவள் மெல்ல எழுந்து அறையைவிட்டு கமலாம்மாவிடம் சென்றாள். கமலாம்மா சமையலறையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்ப எத்தனிக்க, இவளும் அவரிடம் சென்றாள்.
"கமலாம்மா, ஏன் இவ்ளோ நேரம்? நிறைய வேலை இருந்துச்சாம்மா? நான் உங்களுக்காக ரொம்ப நேரம் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், தெரியுமா?" என்று கூறியவள், ஒருநொடி அங்கே நடந்ததை நினைத்துப் பயந்தாள். அவள் கண்களில் தெரிந்த பயத்தையும் அவள் முகத்தில் துளிர்ந்திருந்த வியர்வைத் துளிகளையும் பார்த்தவர் பதறிப்போய்,
"என்னாச்சுமா? எதுக்கு பயந்தமாறி இருக்க? இவ்ளோ வேர்த்திருக்கு..." என்று படப்படப்பாக விசாரித்திட,
"கரண்ட் போச்சுல்ல...அதனாலதான் இப்டி வேர்த்திருக்கு. ரூம்ல தனியா இருந்தேன்ல. அதான் பயந்துட்டேன்" என்று கூறியதும் நினைவு வந்தவராய்,
"அட ஆமால்ல...மறந்தே போயிட்டேன். கரண்ட் கட்டானதுமே நான் அங்க வந்திருக்கணும். என் தப்புதான்" என்று தன்னை திட்டிக்கொண்டவர், அடுத்தநொடி,
"ஆனா..ராணா தம்பி அங்கதான வந்தாரு. உன்னய பாக்கணும்னு வந்தாரே. அவரு வரவே இல்லையாம்மா?" என்று யோசனையுடன் கேட்டிட, அதை கேட்டவள், இதழ்களை குவித்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவரை முறைப்புடன் பார்த்து மூச்சை இழுத்துவிட்டாள். அதை பார்த்தவர் என்ன என்று கேட்க,
"அவர பாத்துதான் நானே பயப்படுவேன். அவராலதான் எனக்கு இந்த நிலைமைனு தெரிஞ்சும் நீங்க இப்டி கேட்குறீங்க பாத்தீங்களா...உங்கள என்ன செய்யலாம்...?" என்று கூறியவள், அவரின் கழுத்தில் மெதுவாகக் கைகளை வைத்தவள் அவரை பிடித்து உலுக்கினாள். அவரும் அதன்பின்னே அது நினைவு வந்தவராய்,
"அச்சோ! ஆமால்ல...வரவர எனக்கு மறதி அதிகம் ஆயிடுச்சுபோல. தெரியாம கேட்டுட்டேன்மா. அம்மா பாவம்டா. விட்டுடுமா..." என்று கெஞ்சி கொஞ்சிப் பேசிட, அவளும் புன்னகையுடன் விடுவித்தாள். அவள் புன்னகையை பார்த்தவர், தானும் புன்னகைத்தவாறே அவள் தலையை கோதியவர்,
"எதுவும் ஆகலயேமா? நீ இவ்ளோ பயந்துருக்க. எதாச்சும் கோபமா நடந்துகிட்டாரா?" என்று வினவிட,
"இல்லம்மா. அவரு என் பக்கத்துலயே வரல. ஆனா...நான்தான் கரண்ட் கட்டானதும் நீங்கதான் வரீங்கன்னு நினச்சு... அவர.. கட்டிப்பிடிச்சுட்டேன். அப்றம் நீங்க இல்லனு தெரிஞ்சு விலகின அப்றம்தான் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்துல அவர பாத்தேன். ரொம்ப பயம் வந்துடுச்சு.... கொஞ்சநேரம் கழிச்சு கரண்டும் வந்திடுச்சு. அவரும் வெளிய போய்ட்டாரு. நானும் உங்களத் தேடி வந்துட்டேன்" என்று கூறி முடித்தாள்.
"கரண்ட் இன்னும் வரலைமா. நம்ம வீட்டு ஜெனரேட்டர போட்டு விட்டுருக்கு. எப்போதுமே அத போடமாட்டாங்க. வீட்ல அவரு மட்டும்தான. அதனால அவரோட ரூமுக்கு மட்டும் யுபிஎஸ்னால கரண்ட் இருக்கும் கரண்ட் போனாலும். அப்றம் கீழ உள்ள கிச்சன், ஹால், போர்ட்டிகோ. இந்தமாறி தேவையான இடத்துல கரண்ட் இருக்கும். மத்த ரூம்ஸ்குலாம் கரண்ட் வேணும்னா ஜெனரேட்டர் போட்டு விடணும். அதனாலதான் உன் ரூம்ல கரண்ட் போனதுகூட எனக்குத் தெரியல. அவருதான் ஜெனரேட்டர் போடச் சொல்லிருப்பாரு" என்று விளக்கமாகக் கூறினார்.
அதன்பின்னே, காவ்யாவும் அறையில் இருந்தபோது ராணா யாரையோ அழைத்து எதுவோ பேசியது நினைவுக்கு வந்தது. சற்றுநேரம் அமைதியானவள், அதன்பின் ஏதோ தோன்றியவளாய்,
"ஆமா..நீங்க என்ன ரொம்பத்தான் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க. அவருமேல அவ்ளோ நம்பிக்கையா? இல்ல, முதலாளினு விஸ்வாசமா?" என்று விளையாட்டாகக் கேட்பதுபோல் கேட்டாள். அவள் கேட்டதும் சிறிது புன்னகைத்தவர்,
"என் முதலாளினு விஸ்வாசம் இருக்குதான். ஆனா, அதுக்காக அவரு தப்பு பண்ணாலும் ஆதரிக்க மாட்டேன். உனக்கு அவரு பண்ண அநியாயம் தெரிஞ்சப்றம் அவருமேல வச்ச மரியாதை ரொம்ப குறைஞ்சிடுச்சு. ஆனா, அவரு இந்தமாறி பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கற ஆளு கிடையாதுன்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்துச்சு. அத காப்பாத்துற போலதான் உன்னய கல்யாணம் பண்ணதும் இப்ப கவனிச்சிக்கிறதும் எனக்குத் தெரியுதுமா" என்று அவர்பக்க விளக்கத்தை எடுத்துக்கூறிட, காவ்யா மௌனம் காத்தாள்.
"அவரு பண்ணது தப்பே இல்லன்னு சொல்லமாட்டேன். உன்னய அவர்கூட சேர்ந்து வாழுன்னும் சொல்லமாட்டேன்மா. அந்த உரிமையும் அதிகாரமும் எனக்குக் கிடையாது. ஆனா, ஒரு அம்மாவா உன் வாழ்க்கை நல்லபடியா மாறணும்னு நான் நினைக்கிறேன். அது இவராலயே மாறும்னாகூட எனக்கு ரொம்ப சந்தோசம்தான்மா. பிறக்கப்போற குழந்தை அத நடத்திக்காட்டும்னு நான் நம்புறேன்மா" என்று கூறியவர்,
"இதுலாம் நான் அவருக்கு ஆதரவா பேசுறேன்னு நினைக்காதமா. நான் என் கண்ணு முன்னாடி பார்த்தத வச்சுதான் சொன்னேன். இது விஸ்வாசம், நம்பிக்கைனு எதுலயும் வராது" என்று முடித்திட, கேட்டுக்கொண்டிருந்த காவ்யா இறுதி வாக்கியத்தில் குழப்பத்துடன் அவரை பார்த்தாள். அவள் குழப்பத்தை உணர்ந்தவர்,
"ஜெனரேட்டர் போட்டுவிட்டத சொன்னேன்மா. அவரு சொல்லாம இங்க எதுவும் நடக்காது. அதான் அவரு சொல்லிருப்பாருனு சொன்னேன்" என்று கூறி புன்னகைத்திட, அவளும் அதை கேட்டுப் புன்னகைத்தாள்.
ஏனோ..அன்று அவளுக்கு, 'தான் அவனை மிகவும் மோசமானவனாக நினைத்துவிட்டோமோ? நாம நினச்ச அளவுக்கு கீழ்த்தரமானவன் இவன் கிடையாதுனு அம்மா பேசுறத பாக்கும்போதே தெரியுது. ஆனா...அவன் என்கிட்ட பேசுனது, நடந்துகிட்டதலாம் வச்சு பாத்தா அவன மோசமானவனாதான் யோசிக்கத் தோணுது. ஒருவேள என்மேல உள்ள வெறுப்புலதான் இந்தளவுக்கு நடந்துக்கிறானா?' என்று யோசித்தவள்,
'இதுல என்ன சந்தேகம்? அவனுக்கு என்மேல உள்ள கோபம், வெறுப்புலதான இப்டி பழி வாங்கிட்டு இருக்கான். என்னைய கல்யாணம் பண்ணதுகூட பழி வாங்குறதுக்காகத்தான.. இது அம்மாக்குத் தெரிஞ்சா அவங்க நம்பிக்கை உடைஞ்சமாறி ஆயிடும். இன்னும் கவலப்படுவாங்க. அதனால இத சொல்லாம இருக்கிறதுதான் நல்லது. அவனோட கோபமும் வெறுப்பும் என்னோடயே முடியட்டும்' என்று முடிவெடுத்தாள்.
காவ்யா ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த கமலாம்மா, அவளை தொட்டு நிகழுலகிற்குக் கொண்டுவந்து, "என்னாச்சு?" என்று கேட்டிட, அவளும் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு,
"அம்மா! சீக்கிரம் வாங்க. தூங்கப் போகலாம். எனக்கு தூக்கம் வருது" என்று அழைத்திட, அந்நேரம் ராணாவும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். இவர்களிடம் வந்தவன்,
"கமலாம்மா! இனி நீங்க அங்க போகவேணாம். நான் இனி அங்கதான் தங்கப்போறேன். நீங்க கீழ் உள்ள ரூம்லயே படுத்துக்கோங்க" என்று கூறிட, காவ்யாவுக்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. அதிர்ச்சியில் விழி விரித்தவள் பேயறைந்ததுபோல் நின்றிட, அவளை பார்த்த ராணா அவள்முன் சொடுக்கிட, தன்னிலை பெற்றாள்.
"என்னாச்சு?" என்று கேட்டிட, அவள் அவனை பார்த்தவள், "கமலாம்மாவே வந்து.. தங்கட்டும்" என்று கீழே பார்த்தவாறு கூறிட, அதை கண்டு புன்னகைத்தவன் மறுநொடியே கடுமையாக,
"அதெல்லாம் வேணா. அவங்களால தனியா உன்னய சமாளிக்க முடியாது. இப்பலாம் நீ அதிகமாவே தூக்கத்தில் அலறுற. சோ, நான் வர்ரதுதான் கரெக்ட். அவங்க பகல்லயே உன்னய வச்சு சமாளிக்கிறது கஷ்டம். இதுல நைட்டுக்கும்னா அவங்க பாவம். அதனால நான் நைட்டுக்கு பாத்துக்குறேன். இல்லன்னா, நீ பழையபடி முன்னாடி இருந்த ரூமுக்கு ஷிப்ட் ஆயிடு. என்ன? ஓகேவா?" என்று புத்திசாலித்தனமாகக் கூறிட, காவ்யாவுக்கும் அவன் எண்ணம் புரிந்தது.
ஆனால், அவள் தனக்குள் எடுத்துக்கொண்ட முயற்சியை கைவிடும் மனமில்லை. ஆதலால், அந்த அறையைவிட்டுப் போக மறுத்தாள். அதற்காக இவனுடன் தங்க வேண்டிய நிலை வந்ததை எண்ணி சற்று பயந்தாலும் இதுவும் தன் பயத்தில் இருந்து தன்னை மாற்றும் வழியாக அமையும் என்று எண்ணியவள் அவனுடன் தங்க ஒப்புக்கொண்டாள்.
"ஓகே. நீங்க அங்கயே தங்கிக்கோங்க. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று கூறியவள், வேறெதுவும் பேசாமல் கமலாம்மாவையும் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அதை வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்த கமலாம்மாவை பார்த்த ராணா,
"ஓகே கமலாம்மா! நீங்க போய் தூங்குங்க. குட்நைட்" என்று கூறிவிட்டுக் கிளம்பினான். இவரும் அரை மனதாய் தூங்கச் சென்றுவிட்டார்.
அறைக்குள் வந்த காவ்யா, மெத்தையில் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, ராணா உள்ளே நுழைந்தான். வந்தவன் படுக்கையின் ஒருபுறத்தில் சென்று படுக்கத் தயாரானான். அவனை பார்த்து அதிர்ந்தவள், 'என்ன? இவன் இவ்ளோ சீக்கிரமா தூங்குறான்! பெட்ல படுத்துட்டானே..நம்ம எப்டி தூங்குறது?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவளை கவனித்த ராணா,
"என்ன? தூங்கலயா? வந்து தூங்கு. இதுவே லேட்டாயிடுச்சு. ரொம்ப நேரம் முழிச்சு இருக்கிறது குழந்தைக்கு நல்லது இல்ல" என்று கூறியவன் இவள் படுக்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் படுத்ததும் அவனும் படுத்தான். காவ்யா ராணாவுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள, அதை கண்டவனோ,
"காவ்யா! இந்த பக்கம் திரும்பிப் படு. உன்னயபத்தி நல்லா தெரியும். அந்தப்பக்கம் திரும்பிப் படுத்து தூங்காமலே இருக்கப்போறியா?" என்று சற்று காட்டமாகப் பேசுவதை கேட்டவள் இந்தப்புறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பது போல் படுத்திருக்க, இருவர் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன. காவ்யா அடுத்தநொடியே கண்களை கீழே கவிழ்த்துக்கொண்டாள்.
அதன்பின், அவள் கண்களைமூடி துயில்கொள்ள முயற்சிக்க, அவன் பக்கம் இருக்கும் பயத்தினால் தூக்கம் எட்டாக் கனியானது. அதை அவனும் உணர்ந்தாலும் அமைதியாகவே படுத்திருந்தான் இவளை பார்த்தபடியே. அவளும் வெகுநேரம் கண்மூடியே படுத்திருந்தவள் ஒருகட்டத்தில் அசதியில் தூங்கியும் விட்டாள். அவள் கண்முழி அசைவில்லாததை வைத்தே அவள் தூங்கியதை உறுதிபடுத்தியவன், அவனும் கண்மூடினான்.
நடுநிசிப் பொழுதில், காவ்யா வழக்கம்போல் தூக்கத்தில் புலம்பி அலறிட, அதைக் கேட்டு எழுந்த ராணா அவளிடம் வந்தவன்,
"ஒன்னுமில்ல. யாரும் உன்னய ஒன்னும் பண்ணமாட்டாங்க. எதுவும் இல்ல. ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்..!" என்று கூறியபடியே அவள் தலையை தடவிக்கொடுக்க, அவன் சொல்லிலும் செயலிலும் ஆறுதலை கண்டாளோ என்னவோ...அப்படியே அமைதியானாள். அலறுவதை நிறுத்தியவள் அப்படியே மீண்டும் துயிலுக்குச் சென்றாள். ராணாவும் அவன் நினைத்ததுபோல் அவளை அமைதிபடுத்தியதை எண்ணியவன்
மீண்டும் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை காவ்யா கண்விழித்துப் பார்த்திட, ராணா அருகில் படுத்திருந்தான். 'இன்னும் இவன் எழலலயா!' என்று மணியை பார்த்திட, அது அதிகாலை என்பதை அப்போதே அறிந்தாள். 'இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்டோமா? சரி! இனிமேல் தூங்கமுடியாது. இவன் பக்கத்துல தூக்கமும் வராது. பேசாம போய் ஃப்ரஷ் ஆயிட்டு வருவோம்' என்று எண்ணியவள், குளியலறைக்குச் சென்றாள்.
வெளியே வந்தவள் மெதுவாக அறையைவிட்டுச் சென்றாள். அப்போதே கமலாம்மாவும் எழுந்து வந்திருக்க, அவரிடம் சென்றவள்,
"குட் மார்னிங் கமலாம்மா!" என்று புன்னகையுடன் கூறியவளை மகிழ்ச்சியோடு பார்த்து, "குட் மார்னிங்டா காவ்யாமா. என்ன! இவ்ளோ சீக்கிரம் எழுந்திருக்க? சரியா தூங்குனியா இல்லையா?" என்று சற்று கவலையுடன் கேட்டிட,
"அப்டிலாம் ஒன்னும் இல்லம்மா. நான் நல்லாதான் தூங்குனேன். அவரு இருந்ததால எனக்கு கொஞ்சநேரம் தூக்கமே வரலதான். ஆனா, டயர்டா இருந்ததால தூங்கிட்டேன். அதுக்கப்றம் இப்பதான் எழுந்தேன். அப்றம்தான் தெரிஞ்சது சீக்கிரமா எழுந்துட்டேன்னு. அப்றம் தூக்கமும் வரல. அதான் இங்க வந்துட்டேன்" என்று கூறியவளை நிம்மதியோடு பார்த்தார், கமலாம்மா.
இருவரும் பேசிக்கொண்டே தேநீர் அருந்தியபிறகு கமலாம்மா சமையல் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, காவ்யாவும் குளித்துத் தயாராக அறைக்குச் சென்றாள். இன்னும் ராணா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துச் சலித்துக்கொண்டவள் குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்து முடித்த பின்னே அவள் உடைகளை எடுத்து வராதது நினைவிற்கு வர, தலையில் அடித்துக்கொண்டாள்.
❤வருவாள்❤...
"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாது. இதுல என்னோட தப்பும் இருக்கு. நான் அன்னைக்கு கோபத்துல எதையும் யோசிக்காம அப்டி பண்ணதுக்குதான் எனக்கு தண்டனை கிடைச்சிருக்கு. ஆனா, என்னோட விதி, இந்தளவுக்கு மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திடுச்சு" என்று விரக்தியாகக் கூறியவளை வேதனையுடன் பார்த்த கமலாம்மா,
"அப்டிலாம் பேசாதம்மா. எந்த நிலைமையும் ஒருநாள் நிச்சயமா மாறும். உன் வாழ்க்கைய கெடுத்தவரே உன்னய தேடிவந்து கல்யாணம் பண்ணிருக்காரு. பாத்தியா. விதி ஒன்ன பறிச்சா இன்னொன்ன கொடுக்கும்மா. கூடிய சீக்கிரமே உன் வாழ்க்கையும் நல்லபடியா மாறும். நீ மனச தளர விடாதமா" என்று ஆறுதலாய் கூறிட,
'அவன் என்னய கல்யாணம் பண்ணிகிட்டதே இன்னும் பழி வாங்கத்தான' என்று மனதில் எண்ணிக்கொண்டவள், "விடுங்கம்மா. இதுக்குமேல இதைபத்தி பேசி எதுவும் ஆகப்போறது இல்ல. எல்லாம் நடந்து முடிந்திடுச்சு. எதையும் மாத்த முடியாது" என்று கூறி முடித்திட, கமலாம்மாவும் அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியானார்.
"சரிம்மா. இந்த ரூம பாத்தாலே அந்தளவுக்குப் பயந்துருக்க. அப்றம் எதுக்குமா இங்கயே இருக்க ஒத்துகிட்ட? உன் ரூமுக்கே போயிடலாம்ல?" என்று தன் சந்தேகத்தை கேட்டார்.
"எத்தன நாளைக்கும்மா பயந்து ஓடுறது? என்னய பாத்தே நான் பயந்து ஓடுறேன். என்னயவே தொலைச்சுட்டேன்மா எப்பவோ...இப்பவும் தேடாம விட்டேன்னா அப்றம் எப்பவும் கிடைக்காம போயிடுவேன். எனக்காக இல்லாட்டியும் என் ஃப்ரண்ட்ஸ்காக நான் பழைய காவ்யாவா மாற முயற்சி பண்ணணும். அதுக்கு என் கசப்பான நினைவுகள நான் ஃபேஸ் பண்ணணும். அதனாலதான் இத்தனநாள் என் ஃபிரண்ட்ஸ் கேட்டும் சொல்லாத விசயத்த இன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன். இனி அத மாத்த முடியாது. அதனாலதான் அத ஏத்துக்க பழகிக்கிறேன். இந்த ரூம்லதான எல்லாம் ஆரம்பிச்சது. அதான் இங்கயே இருந்து மாறலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று காவ்யா கூறுவதை கேட்ட கமலாம்மாவுக்கு அன்றுதான் அவளது மன உறுதியும் தைரியமும் தெரிந்தது. அவரும் அவளை எண்ணி மெச்சிக்கொண்டார்.
அந்த அறையிலேயே தங்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல, பகலில் அவளது டிசைனிங் பணியில் மூழ்கிவிடுவதால் அவளுக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும் இரவில் தூக்கத்தில் அலறுவது இன்னும் அதிகமானது. அவளது நிலை மோசமாவது தெரிந்த ராணா அவளை வேறு அறைக்குச் செல்லச் சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை. அவள் அமைதியாகவே மறுத்து மௌனம் சாதிக்க, இவனுக்கு அவளிடம் கோபத்தை காட்டவும் முடியாமல் அவளை எப்படி அனுப்புவது என்றும் தெரியாமல் திணறித்தான் போனான்.
அன்று, பகலில் டிசைனிங் வேலையை முடித்தவள் உணவருந்த கமலாம்மாவிடம் சென்றாள். ராணாவும் அந்நேரம் வந்துவிட, காவ்யா சமையலறையில் நின்றுகொண்டாள். அறைக்குச் சென்று ரிஃப்ரஷ் ஆகிவிட்டு வந்து அமர, கமலாம்மா உணவு பரிமாறினார்.
"காவ்யாவ எங்க? ரூம்ல இருக்காளா? சாப்டாளா?" என்று கேட்டிட, ஒருநொடி அமைதி காத்தவர்,
"இல்லைங்க தம்பி. இன்னும் சாப்டல. அதுக்குத்தான் வந்தா..." என்று கூறி நிறுத்த, அதை கேள்வியுடன் பார்த்தவன்,
"இன்னும் சாப்டலையா என்ன? இவ்ளோநேரம் சாப்டாம இருக்கக்கூடாதுனு சொல்லிருக்கேன்ல உங்ககிட்ட. இதுதான் நீங்க பாத்துக்கற லட்சணமா?" என்று சற்று காட்டமாகப் பேசிவிட்ட பின்னே தன் தவறை உணர்ந்தான். பின், பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவன்,
"நீங்க நல்லா பாத்துப்பீங்கன்னுதான உங்ககிட்ட சொல்லிட்டுப் போனேன். நீங்களே இப்டி இருந்தா எப்டி கமலாம்மா?" என்று பொறுமையாகக் கூறிட, அவரும் அமைதியாக நின்றவர்,
"மன்னிச்சிடுங்க தம்பி. இனிமேல் இப்டி தப்பு நடக்காது. கரெக்டா கொடுத்துடுறேன் தம்பி" என்று கூறிட, அதை கேட்டு ராணாவும் அமைதியானான். ஆனால், இதை உள்ளிருந்து கேட்ட காவ்யா மனம் வருந்திட, வெளியே வந்தாள்.
"கமலாம்மா மேல எந்த தப்பும் இல்ல. நான்தான் வர்க் முடிக்க டைம் ஆகும்னு அவங்க எவ்ளோ கூப்டும் வரலைன்னு சொன்னேன். ஆனாலும் அவங்க கம்பெல் பண்ணிட்டே இருந்தாங்க. அதனாலதான் நான் சீக்கிரம் முடிச்சிட்டு இப்ப வந்தேன். இல்லன்னா இன்னமும் நான் வரதுக்கு டைம் ஆகிருக்கும்" என்று தரையை பார்த்தபடியே கூறி முடித்திட, அவளை பார்த்திருந்த ராணா மூச்சை இழுத்துவிட்டவன்,
"இங்க பாரு" என்று சொல்ல, அசையாமல் நின்றவள், "என்னய பாருன்னு சொல்றேன்ல" என்று சற்று குரலை உயர்த்திக் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
"நான் உனக்கு இந்த டிசைனிங் அரேஞ்ச்மெண்ட் பண்ணி தந்தது நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவன்னுதான். இப்டி அதுலயே இருந்து உடம்ப கெடுத்துக்க இல்ல. இனி இப்டி ஒரு தப்பு மறுபடியும் நடக்கக்கூடாது. புரியுதா?" என்று பொறுமையாகவும் அழுத்தமாகவும் கேட்டிட, காவ்யா அவனை நேருக்குநேர் பார்த்திருந்ததால் எதிர்த்துப் பேசும் திறனின்றி தலையை ஆட்டினாள்.
"வாய திறந்து சொன்னா முத்து விழுந்துடுமா என்ன?" என்று ராணா சற்று கடுப்பாகிட, சட்டென பதறியவள்,
"இனி..மேல்.. இப்டி.. நடக்காது.." என்று மெல்ல கூறியவள் அமைதியானாள்.
"சரி! வா! வந்து உட்காரு" என்று ராணா காவ்யாவை அழைத்திட, அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.
"நீ இன்னும் சாப்டலைல. வந்து உக்காந்து சாப்டு முதல்ல. எவ்ளோ நேரம் இன்னும் சாப்டாம இருப்ப?" என்று கூறி அமரச் சொல்லிட, அவளுக்கு விருப்பமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அதை பார்த்துக் கடுப்பானவன்,
"ஒவ்வொரு தடவையும் நான் கோபமா சொன்னாதான் கேட்கணும்னு முடிவு பண்ணிருக்கியா? இல்ல அப்டி சொன்னாதான் உனக்குப் பிடிக்குமா?" என்று அவளை பார்த்துக் கேட்டிட, காவ்யா எதுவும் பேசாமல் அமைதியாக வந்து அமர்ந்தாள்.
கமலாம்மா உணவு பரிமாறிட, உணவில் கவனமே இல்லாமல் தட்டில் கோலமிட்டபடி குனிந்திருந்தாள். அவளை கமலாம்மாவும் பார்த்து, "காவ்யாமா! சாப்டுடா. சாப்பாடு பிடிக்கலையா? வேற எதுவும் வேணுமா?" என்று அன்பாகக் கேட்க, அவள் அதற்கு மறுப்பாகத் தலையை மட்டும் ஆட்டியவள், ராணாவை பார்த்தவள் அவரையும் பார்த்துவிட்டு குனிந்துகொண்டாள்.
கமலாம்மாவுக்கும் அவளது தயக்கம் புரிந்துவிட, செய்வதறியாது நின்றார்.
இவர்கள் பேச்சையும் செயலையும் சாப்பாட்டில் கவனம் இருப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனித்துக் கொண்டிருந்தான். இவர்கள் அமைதியை பார்த்தவன், "எதுக்கு இன்னும் சாப்டாம இருக்க?" என்று காவ்யாவிடம் கேட்டிட, அவள் அவனை பார்த்துவிட்டு மௌனம் காத்திட,
"ஒன்னுமில்ல தம்பி...! அவளுக்கு இந்த சாப்பாடு பிடிக்கலையாம். அதான் அவளுக்கு அப்றமா என்ன வேணும்னு கேட்டு செஞ்சு தந்துடுறேன். நீங்க சாப்டுங்க தம்பி" என்று கூறி கமலாம்மா சமாளிக்க,
"என்ன கமலாம்மா? அதுவரை சாப்டாம இருப்பாளா? அதுக்குத்தான நான் அப்பவே சொன்னேன். வரவர பொய்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? அவளுக்கு சாப்பாட்டுல பிரச்சினை இல்ல. அவளுக்கு என்ன பண்ணணுமோ அத பண்ணுங்க. நான் இருக்கேன்னு தயங்க வேணாம். இப்ப வயித்துல இருக்க குழந்ததான் முக்கியம்" என்று அவரை பார்த்துக் கூறிவிட்டு காவ்யாவை ஒருமுறை பார்த்துவிட்டு எழுந்து சென்றான்.
ராணா கூறியதன் அர்த்தம் கமலாம்மாவுக்குப் புரிந்துவிட, காவ்யா புரியாமல் இவரை பார்த்தாள். அதை பார்த்தவர்,
"உனக்கு ஊட்டிவிட சொல்லிட்டுப் போறாரு" என்று கூறிட, அதை வியப்பாகப் பார்த்த காவ்யா,
"அப்போ...நீங்க எனக்கு ஊட்டி விடுறது அவருக்குத் தெரியுமா என்ன?" என்று கேட்டிட, அதை பார்த்து லேசாகப் புன்னகைத்தவர்,
"தெரியும். அதுமட்டுமில்ல. நீ என்னய அம்மானு கூப்டுறது, நான் உன்னய வா போனு கூப்டுறது எல்லாமே அவருக்கு தெரிஞ்சிருக்கு. அதான் ஒருநாள், அவரே என்கிட்ட வந்து நான் அவர்கிட்ட உன்னய மரியாதையா பேசுறத பார்த்து சாதாரணமாவே உன்னய கூப்ட சொல்லிட்டாரு. அதோட, அவரையும் ஐயானு கூப்ட வேணானு சொல்லிட்டாரு" என்று கூறிட, காவ்யா அதை கேட்டு யோசனைக்குச் சென்றாள்.
அவளுக்கும் இவர் இவளை சாதாரணமாக அழைப்பது, அவனை தம்பி என்று அழைப்பது எல்லாம் நினைவு வர, புரிந்துகொண்டாள். காவ்யாவுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றினாலும் அதைப்பற்றி எதுவும் அதற்குமேல் பேசிக்கொள்ளவில்லை. அதன்பின், கமலாம்மா ஊட்டிவிட உணவருந்தியவள் மருந்தும் சாப்பிட்டு, சிறிதுநேரம் கழித்து அறைக்குச் சென்று அவள் வேலையை தொடர்ந்தாள்.
அன்று இரவு, வழக்கம்போல் காவ்யா தூங்குவதற்காக கமலாம்மாவை எதிர்பார்த்து அறையில் அவள் வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருந்தாள். நேரம் ஆகிக்கொண்டே போக, தானே சென்று அழைத்து வரலாம் என்று கிளம்பினாள். அறையின் வாசல் பக்கம் வருவதற்குள் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு விளக்குகள் அணைந்ததில் ஒருநொடி பயத்தில் கத்திவிட்டாள்.
அந்நேரம் கதவு திறக்கப்படும் ஓசை கேட்க, அது கமலாம்மாதான் என்பதை அறிந்தவள், கதவு திறந்ததுமே காவ்யா வேகமாகச் சென்று கட்டிக்கொண்டாள்.
காவ்யா பயத்தில் முதலில் எதுவும் யோசிக்காமல் இறுக்கி அணைத்துக்கொள்ள, சிறிது பயம் நீங்கியவள், அதன் பின்னே அதிர்ந்து விலகினாள். காவ்யா விலகி வந்து நிமிர்ந்து பார்த்திட, எதிரில் நின்றவரின் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் வெளிச்சத்தில் அப்போதுதான் பார்த்தாள், வந்தது ராணா என்பதை.
காவ்யாவை பார்க்க அறைக்கு ராணா வந்துகொண்டிருக்க, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவ்யாவின் பயத்தை அறிந்தவன், வேகமாகக் கதவை திறந்துகொண்டு வர, இவனை அவள் அணைத்திருந்தாள். இவனும் முதலில் அதிர்ந்தாலும் பின் அவள் பயத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அமைதியாக நின்றான். தன் கையில் இருக்கும் அலைபேசியின் டார்ச் ஒளியை ஒளிரச் செய்தான்.
காவ்யா இவனை பார்த்ததும் அதிர்ச்சியிலும் பயத்திலும் பின்னே சென்றாள். ஏற்கனவே அவள் அந்த பழைய நினைவுகளில் இருந்து இன்னும் வெளிவராத நிலையில் இத்தருணம் அவளுக்கு அந்நாளை தத்ரூபமாக கண்முன்னே கொண்டுவந்தது. கண்களில் மிரட்சியுடன் அவனை பார்த்துக்கொண்டே பின்னே சென்றவள், சுவற்றில் முட்டி அப்டியே நின்றாள்.
காவ்யாவின் கண்களில் தெரிந்த பயத்தை அந்தச் சிறிய ஒளியிலும் அவனால் நன்கு உணர முடிந்தது. அவன் அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசினான். இவளுக்குப் பயத்தில் அது எதுவும் காதில் விழவில்லை. அவனை பார்த்தபடியே அப்படியே கீழே சரிந்து அமர்ந்தாள். ராணா அவள் அமர்ந்ததை பார்த்து,
"என்னாச்சு? மயக்கமா இருக்கா? டயர்டா இருக்கா? இல்ல, வாமிட் எதுவும் வருதா?" என்று அவள் அருகில் வராமலேயே கேட்டான். அதை கேட்டவள் இல்லை என்றவாறு தலையை ஆட்டிட, அவனும் சற்று அமைதியானான். அவன் அங்கே மெத்தையில் அமர்ந்திருக்க, இவள் இங்கே தரையில் அமர்ந்திருக்க, நிமிடங்கள் யுகமாய் காட்சியளித்தது காவ்யாவுக்கு.
சிலநிமிடங்களில் விளக்குகள் அனைத்தும் ஒளிர ஆரம்பித்தன. அதில் நிம்மதியடைந்தவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். ராணாவும் எழுந்து வெளியே சென்றிட, இப்போது பயம் தீர்ந்தவள் மெல்ல எழுந்து அறையைவிட்டு கமலாம்மாவிடம் சென்றாள். கமலாம்மா சமையலறையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்ப எத்தனிக்க, இவளும் அவரிடம் சென்றாள்.
"கமலாம்மா, ஏன் இவ்ளோ நேரம்? நிறைய வேலை இருந்துச்சாம்மா? நான் உங்களுக்காக ரொம்ப நேரம் ரூம்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன், தெரியுமா?" என்று கூறியவள், ஒருநொடி அங்கே நடந்ததை நினைத்துப் பயந்தாள். அவள் கண்களில் தெரிந்த பயத்தையும் அவள் முகத்தில் துளிர்ந்திருந்த வியர்வைத் துளிகளையும் பார்த்தவர் பதறிப்போய்,
"என்னாச்சுமா? எதுக்கு பயந்தமாறி இருக்க? இவ்ளோ வேர்த்திருக்கு..." என்று படப்படப்பாக விசாரித்திட,
"கரண்ட் போச்சுல்ல...அதனாலதான் இப்டி வேர்த்திருக்கு. ரூம்ல தனியா இருந்தேன்ல. அதான் பயந்துட்டேன்" என்று கூறியதும் நினைவு வந்தவராய்,
"அட ஆமால்ல...மறந்தே போயிட்டேன். கரண்ட் கட்டானதுமே நான் அங்க வந்திருக்கணும். என் தப்புதான்" என்று தன்னை திட்டிக்கொண்டவர், அடுத்தநொடி,
"ஆனா..ராணா தம்பி அங்கதான வந்தாரு. உன்னய பாக்கணும்னு வந்தாரே. அவரு வரவே இல்லையாம்மா?" என்று யோசனையுடன் கேட்டிட, அதை கேட்டவள், இதழ்களை குவித்து இடுப்பில் கை வைத்துக்கொண்டு அவரை முறைப்புடன் பார்த்து மூச்சை இழுத்துவிட்டாள். அதை பார்த்தவர் என்ன என்று கேட்க,
"அவர பாத்துதான் நானே பயப்படுவேன். அவராலதான் எனக்கு இந்த நிலைமைனு தெரிஞ்சும் நீங்க இப்டி கேட்குறீங்க பாத்தீங்களா...உங்கள என்ன செய்யலாம்...?" என்று கூறியவள், அவரின் கழுத்தில் மெதுவாகக் கைகளை வைத்தவள் அவரை பிடித்து உலுக்கினாள். அவரும் அதன்பின்னே அது நினைவு வந்தவராய்,
"அச்சோ! ஆமால்ல...வரவர எனக்கு மறதி அதிகம் ஆயிடுச்சுபோல. தெரியாம கேட்டுட்டேன்மா. அம்மா பாவம்டா. விட்டுடுமா..." என்று கெஞ்சி கொஞ்சிப் பேசிட, அவளும் புன்னகையுடன் விடுவித்தாள். அவள் புன்னகையை பார்த்தவர், தானும் புன்னகைத்தவாறே அவள் தலையை கோதியவர்,
"எதுவும் ஆகலயேமா? நீ இவ்ளோ பயந்துருக்க. எதாச்சும் கோபமா நடந்துகிட்டாரா?" என்று வினவிட,
"இல்லம்மா. அவரு என் பக்கத்துலயே வரல. ஆனா...நான்தான் கரண்ட் கட்டானதும் நீங்கதான் வரீங்கன்னு நினச்சு... அவர.. கட்டிப்பிடிச்சுட்டேன். அப்றம் நீங்க இல்லனு தெரிஞ்சு விலகின அப்றம்தான் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்துல அவர பாத்தேன். ரொம்ப பயம் வந்துடுச்சு.... கொஞ்சநேரம் கழிச்சு கரண்டும் வந்திடுச்சு. அவரும் வெளிய போய்ட்டாரு. நானும் உங்களத் தேடி வந்துட்டேன்" என்று கூறி முடித்தாள்.
"கரண்ட் இன்னும் வரலைமா. நம்ம வீட்டு ஜெனரேட்டர போட்டு விட்டுருக்கு. எப்போதுமே அத போடமாட்டாங்க. வீட்ல அவரு மட்டும்தான. அதனால அவரோட ரூமுக்கு மட்டும் யுபிஎஸ்னால கரண்ட் இருக்கும் கரண்ட் போனாலும். அப்றம் கீழ உள்ள கிச்சன், ஹால், போர்ட்டிகோ. இந்தமாறி தேவையான இடத்துல கரண்ட் இருக்கும். மத்த ரூம்ஸ்குலாம் கரண்ட் வேணும்னா ஜெனரேட்டர் போட்டு விடணும். அதனாலதான் உன் ரூம்ல கரண்ட் போனதுகூட எனக்குத் தெரியல. அவருதான் ஜெனரேட்டர் போடச் சொல்லிருப்பாரு" என்று விளக்கமாகக் கூறினார்.
அதன்பின்னே, காவ்யாவும் அறையில் இருந்தபோது ராணா யாரையோ அழைத்து எதுவோ பேசியது நினைவுக்கு வந்தது. சற்றுநேரம் அமைதியானவள், அதன்பின் ஏதோ தோன்றியவளாய்,
"ஆமா..நீங்க என்ன ரொம்பத்தான் அவருக்கு சப்போர்ட் பண்றீங்க. அவருமேல அவ்ளோ நம்பிக்கையா? இல்ல, முதலாளினு விஸ்வாசமா?" என்று விளையாட்டாகக் கேட்பதுபோல் கேட்டாள். அவள் கேட்டதும் சிறிது புன்னகைத்தவர்,
"என் முதலாளினு விஸ்வாசம் இருக்குதான். ஆனா, அதுக்காக அவரு தப்பு பண்ணாலும் ஆதரிக்க மாட்டேன். உனக்கு அவரு பண்ண அநியாயம் தெரிஞ்சப்றம் அவருமேல வச்ச மரியாதை ரொம்ப குறைஞ்சிடுச்சு. ஆனா, அவரு இந்தமாறி பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கற ஆளு கிடையாதுன்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்துச்சு. அத காப்பாத்துற போலதான் உன்னய கல்யாணம் பண்ணதும் இப்ப கவனிச்சிக்கிறதும் எனக்குத் தெரியுதுமா" என்று அவர்பக்க விளக்கத்தை எடுத்துக்கூறிட, காவ்யா மௌனம் காத்தாள்.
"அவரு பண்ணது தப்பே இல்லன்னு சொல்லமாட்டேன். உன்னய அவர்கூட சேர்ந்து வாழுன்னும் சொல்லமாட்டேன்மா. அந்த உரிமையும் அதிகாரமும் எனக்குக் கிடையாது. ஆனா, ஒரு அம்மாவா உன் வாழ்க்கை நல்லபடியா மாறணும்னு நான் நினைக்கிறேன். அது இவராலயே மாறும்னாகூட எனக்கு ரொம்ப சந்தோசம்தான்மா. பிறக்கப்போற குழந்தை அத நடத்திக்காட்டும்னு நான் நம்புறேன்மா" என்று கூறியவர்,
"இதுலாம் நான் அவருக்கு ஆதரவா பேசுறேன்னு நினைக்காதமா. நான் என் கண்ணு முன்னாடி பார்த்தத வச்சுதான் சொன்னேன். இது விஸ்வாசம், நம்பிக்கைனு எதுலயும் வராது" என்று முடித்திட, கேட்டுக்கொண்டிருந்த காவ்யா இறுதி வாக்கியத்தில் குழப்பத்துடன் அவரை பார்த்தாள். அவள் குழப்பத்தை உணர்ந்தவர்,
"ஜெனரேட்டர் போட்டுவிட்டத சொன்னேன்மா. அவரு சொல்லாம இங்க எதுவும் நடக்காது. அதான் அவரு சொல்லிருப்பாருனு சொன்னேன்" என்று கூறி புன்னகைத்திட, அவளும் அதை கேட்டுப் புன்னகைத்தாள்.
ஏனோ..அன்று அவளுக்கு, 'தான் அவனை மிகவும் மோசமானவனாக நினைத்துவிட்டோமோ? நாம நினச்ச அளவுக்கு கீழ்த்தரமானவன் இவன் கிடையாதுனு அம்மா பேசுறத பாக்கும்போதே தெரியுது. ஆனா...அவன் என்கிட்ட பேசுனது, நடந்துகிட்டதலாம் வச்சு பாத்தா அவன மோசமானவனாதான் யோசிக்கத் தோணுது. ஒருவேள என்மேல உள்ள வெறுப்புலதான் இந்தளவுக்கு நடந்துக்கிறானா?' என்று யோசித்தவள்,
'இதுல என்ன சந்தேகம்? அவனுக்கு என்மேல உள்ள கோபம், வெறுப்புலதான இப்டி பழி வாங்கிட்டு இருக்கான். என்னைய கல்யாணம் பண்ணதுகூட பழி வாங்குறதுக்காகத்தான.. இது அம்மாக்குத் தெரிஞ்சா அவங்க நம்பிக்கை உடைஞ்சமாறி ஆயிடும். இன்னும் கவலப்படுவாங்க. அதனால இத சொல்லாம இருக்கிறதுதான் நல்லது. அவனோட கோபமும் வெறுப்பும் என்னோடயே முடியட்டும்' என்று முடிவெடுத்தாள்.
காவ்யா ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த கமலாம்மா, அவளை தொட்டு நிகழுலகிற்குக் கொண்டுவந்து, "என்னாச்சு?" என்று கேட்டிட, அவளும் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு,
"அம்மா! சீக்கிரம் வாங்க. தூங்கப் போகலாம். எனக்கு தூக்கம் வருது" என்று அழைத்திட, அந்நேரம் ராணாவும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். இவர்களிடம் வந்தவன்,
"கமலாம்மா! இனி நீங்க அங்க போகவேணாம். நான் இனி அங்கதான் தங்கப்போறேன். நீங்க கீழ் உள்ள ரூம்லயே படுத்துக்கோங்க" என்று கூறிட, காவ்யாவுக்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. அதிர்ச்சியில் விழி விரித்தவள் பேயறைந்ததுபோல் நின்றிட, அவளை பார்த்த ராணா அவள்முன் சொடுக்கிட, தன்னிலை பெற்றாள்.
"என்னாச்சு?" என்று கேட்டிட, அவள் அவனை பார்த்தவள், "கமலாம்மாவே வந்து.. தங்கட்டும்" என்று கீழே பார்த்தவாறு கூறிட, அதை கண்டு புன்னகைத்தவன் மறுநொடியே கடுமையாக,
"அதெல்லாம் வேணா. அவங்களால தனியா உன்னய சமாளிக்க முடியாது. இப்பலாம் நீ அதிகமாவே தூக்கத்தில் அலறுற. சோ, நான் வர்ரதுதான் கரெக்ட். அவங்க பகல்லயே உன்னய வச்சு சமாளிக்கிறது கஷ்டம். இதுல நைட்டுக்கும்னா அவங்க பாவம். அதனால நான் நைட்டுக்கு பாத்துக்குறேன். இல்லன்னா, நீ பழையபடி முன்னாடி இருந்த ரூமுக்கு ஷிப்ட் ஆயிடு. என்ன? ஓகேவா?" என்று புத்திசாலித்தனமாகக் கூறிட, காவ்யாவுக்கும் அவன் எண்ணம் புரிந்தது.
ஆனால், அவள் தனக்குள் எடுத்துக்கொண்ட முயற்சியை கைவிடும் மனமில்லை. ஆதலால், அந்த அறையைவிட்டுப் போக மறுத்தாள். அதற்காக இவனுடன் தங்க வேண்டிய நிலை வந்ததை எண்ணி சற்று பயந்தாலும் இதுவும் தன் பயத்தில் இருந்து தன்னை மாற்றும் வழியாக அமையும் என்று எண்ணியவள் அவனுடன் தங்க ஒப்புக்கொண்டாள்.
"ஓகே. நீங்க அங்கயே தங்கிக்கோங்க. எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று கூறியவள், வேறெதுவும் பேசாமல் கமலாம்மாவையும் பார்க்காமல் தன் அறைக்குச் சென்றுவிட்டாள். அதை வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருந்த கமலாம்மாவை பார்த்த ராணா,
"ஓகே கமலாம்மா! நீங்க போய் தூங்குங்க. குட்நைட்" என்று கூறிவிட்டுக் கிளம்பினான். இவரும் அரை மனதாய் தூங்கச் சென்றுவிட்டார்.
அறைக்குள் வந்த காவ்யா, மெத்தையில் பதட்டத்துடன் அமர்ந்திருக்க, ராணா உள்ளே நுழைந்தான். வந்தவன் படுக்கையின் ஒருபுறத்தில் சென்று படுக்கத் தயாரானான். அவனை பார்த்து அதிர்ந்தவள், 'என்ன? இவன் இவ்ளோ சீக்கிரமா தூங்குறான்! பெட்ல படுத்துட்டானே..நம்ம எப்டி தூங்குறது?' என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவளை கவனித்த ராணா,
"என்ன? தூங்கலயா? வந்து தூங்கு. இதுவே லேட்டாயிடுச்சு. ரொம்ப நேரம் முழிச்சு இருக்கிறது குழந்தைக்கு நல்லது இல்ல" என்று கூறியவன் இவள் படுக்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் படுத்ததும் அவனும் படுத்தான். காவ்யா ராணாவுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள, அதை கண்டவனோ,
"காவ்யா! இந்த பக்கம் திரும்பிப் படு. உன்னயபத்தி நல்லா தெரியும். அந்தப்பக்கம் திரும்பிப் படுத்து தூங்காமலே இருக்கப்போறியா?" என்று சற்று காட்டமாகப் பேசுவதை கேட்டவள் இந்தப்புறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பது போல் படுத்திருக்க, இருவர் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன. காவ்யா அடுத்தநொடியே கண்களை கீழே கவிழ்த்துக்கொண்டாள்.
அதன்பின், அவள் கண்களைமூடி துயில்கொள்ள முயற்சிக்க, அவன் பக்கம் இருக்கும் பயத்தினால் தூக்கம் எட்டாக் கனியானது. அதை அவனும் உணர்ந்தாலும் அமைதியாகவே படுத்திருந்தான் இவளை பார்த்தபடியே. அவளும் வெகுநேரம் கண்மூடியே படுத்திருந்தவள் ஒருகட்டத்தில் அசதியில் தூங்கியும் விட்டாள். அவள் கண்முழி அசைவில்லாததை வைத்தே அவள் தூங்கியதை உறுதிபடுத்தியவன், அவனும் கண்மூடினான்.
நடுநிசிப் பொழுதில், காவ்யா வழக்கம்போல் தூக்கத்தில் புலம்பி அலறிட, அதைக் கேட்டு எழுந்த ராணா அவளிடம் வந்தவன்,
"ஒன்னுமில்ல. யாரும் உன்னய ஒன்னும் பண்ணமாட்டாங்க. எதுவும் இல்ல. ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்..!" என்று கூறியபடியே அவள் தலையை தடவிக்கொடுக்க, அவன் சொல்லிலும் செயலிலும் ஆறுதலை கண்டாளோ என்னவோ...அப்படியே அமைதியானாள். அலறுவதை நிறுத்தியவள் அப்படியே மீண்டும் துயிலுக்குச் சென்றாள். ராணாவும் அவன் நினைத்ததுபோல் அவளை அமைதிபடுத்தியதை எண்ணியவன்
மீண்டும் படுத்துக்கொண்டான்.
மறுநாள் காலை காவ்யா கண்விழித்துப் பார்த்திட, ராணா அருகில் படுத்திருந்தான். 'இன்னும் இவன் எழலலயா!' என்று மணியை பார்த்திட, அது அதிகாலை என்பதை அப்போதே அறிந்தாள். 'இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்டோமா? சரி! இனிமேல் தூங்கமுடியாது. இவன் பக்கத்துல தூக்கமும் வராது. பேசாம போய் ஃப்ரஷ் ஆயிட்டு வருவோம்' என்று எண்ணியவள், குளியலறைக்குச் சென்றாள்.
வெளியே வந்தவள் மெதுவாக அறையைவிட்டுச் சென்றாள். அப்போதே கமலாம்மாவும் எழுந்து வந்திருக்க, அவரிடம் சென்றவள்,
"குட் மார்னிங் கமலாம்மா!" என்று புன்னகையுடன் கூறியவளை மகிழ்ச்சியோடு பார்த்து, "குட் மார்னிங்டா காவ்யாமா. என்ன! இவ்ளோ சீக்கிரம் எழுந்திருக்க? சரியா தூங்குனியா இல்லையா?" என்று சற்று கவலையுடன் கேட்டிட,
"அப்டிலாம் ஒன்னும் இல்லம்மா. நான் நல்லாதான் தூங்குனேன். அவரு இருந்ததால எனக்கு கொஞ்சநேரம் தூக்கமே வரலதான். ஆனா, டயர்டா இருந்ததால தூங்கிட்டேன். அதுக்கப்றம் இப்பதான் எழுந்தேன். அப்றம்தான் தெரிஞ்சது சீக்கிரமா எழுந்துட்டேன்னு. அப்றம் தூக்கமும் வரல. அதான் இங்க வந்துட்டேன்" என்று கூறியவளை நிம்மதியோடு பார்த்தார், கமலாம்மா.
இருவரும் பேசிக்கொண்டே தேநீர் அருந்தியபிறகு கமலாம்மா சமையல் வேலைகளை பார்க்கச் சென்றுவிட, காவ்யாவும் குளித்துத் தயாராக அறைக்குச் சென்றாள். இன்னும் ராணா தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்துச் சலித்துக்கொண்டவள் குளியலறைக்குள் நுழைந்தாள். குளித்து முடித்த பின்னே அவள் உடைகளை எடுத்து வராதது நினைவிற்கு வர, தலையில் அடித்துக்கொண்டாள்.
❤வருவாள்❤...