Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 29 :
"ஹே....!நித்தி....!வா.....வா.....!",வார விடுமுறையை தன் வீட்டில் கழிப்பதற்காக வந்த தங்கையை ஆரவாரத்துடன் வரவேற்றாள் தீபிகா.
"ஹாய் அக்கா.....!",பாசத்துடன் தனது அக்காவை அணைத்துக் கொண்டாள் நித்திலா.
சத்தம் கேட்டு வெளியே வந்த தீபிகாவின் மாமியாரும் மாமனாரும் நித்திலாவைப் பார்த்தவுடன்.....தங்கள் பங்கிற்கு அவளை வரவேற்றனர்.
"அடடே.....!நித்தி.....!வாடா ம்மா.....!ஒருவழியா உன் அக்கா வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைச்சிருச்சா......?",வாஞ்சையுடன் அவள் கன்னத்தை தடவியபடி ராஜாத்தி கேட்க,
"எங்கேங்க அத்தை......லீவ் கிடைச்சா வந்திட மாட்டேனா.....?ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்தான் லீவே கிடைக்குது.....!அதுவும் இரண்டு நாள்தான் கிடைக்குது.....!அதிலேயும் வந்துட்டு திரும்பி போறதுலேயே ஒரு நாள் ஓடிப் போயிருது.....!இதுல நான் எங்கே வந்து....அக்கா வீட்டை எட்டிப் பார்க்கட்டும்.....?",அவள் சமாதானம் கூறிக் கொண்டிருக்க,
இடையில் புகுந்த ராஜாத்தியின் கணவர்,"சரி....!சரி....!வீட்டுக்கு வந்த புள்ளையை உள்ளே கூட்டிட்டுப் போய் உட்கார வையுங்க.....!இப்படியா வாசலிலேயே நிற்க வைச்சு பேசிட்டு இருப்பீங்க....?நித்தி உள்ளே வாம்மா......!",அவர் ஒரு அதட்டல் போடவும்.....அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.
அவள் உள்ளே நுழைந்ததும்.....பெட் ரூமில் இருந்து வேகமாக ஓடி வந்த அதிதி குட்டி,"த்தி....!",என்றபடி அவள் காலை கட்டிக் கொண்டது.
"அடா.....!என் செல்லக் குட்டி....!வாடி.....உன்னைப் பார்க்கத்தான் சித்தி ஓடி வந்திருக்கேன்.....!",என்றபடியே குழந்தையை வாரி அணைத்துக் கொஞ்ச ஆரம்பித்தாள் நித்திலா.
தன் தங்கை தன் மகளைக் கொஞ்சுவதைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த தீபிகா,"நீ வந்துட்டியா.....?இனி இவளை கையில பிடிக்க முடியாது......!'த்தி....!த்தி.....!'ன்னு உன் பின்னாடியே சுத்தப் போகுது......!",செல்லமாக குழந்தையின் தலை முடியை கலைத்து விட்டபடி கூற,
"ம்மா.....!முதிய கதக்காத.....!",'முடியைக் கலைக்காதே....' என்பதைத்தான் தன் மழலை மொழியில் கூறியது.....அவளின் செல்லப் பிள்ளை.
"அது சரிங்க மேடம்.....!நான் கதக்கல.....நீங்க இப்ப சித்தியை விட்டு இறங்கி வாங்க.....!சித்தி போய் ஃபிரெஷ் ஆகிட்டு வரட்டும்.....!",என்றபடி தீபிகா கையை நீட்ட,
அந்தப் பிஞ்சோ இன்னும் இறுக்கமாக தன் சித்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு,"நோ.....!நா வத மாத்தேன்.....!",என்று அடம்பிடித்தது.
குழந்தையின் கிள்ளை மொழியில் மனம் மயங்கிய நித்திலா....சிரித்துக் கொண்டே,"விடுக்கா.....!அவ என்கூடவே இருக்கட்டும்.....!நீ என் பையை மட்டும் பெட் ரூம்ல வைச்சிடு.....!",குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் சென்று விட்டாள் நித்திலா.அவள் எப்பொழுது அங்கே வந்தாலும்.....அந்த அறையில்தான் தங்குவாள்.
குழந்தையுடன் விளையாடியபடியே.....அவள் ஃபிரெஷ்ஷாகி வெளிவரும் போது.....அவள் கையில் சில்லென்று ஆப்பிள் ஜுஸ் திணிக்கப்பட்டது.
"அக்கான்னா அக்காதான்.....!வெயில்ல அலைஞ்சு தொண்டை வறண்டு போய் வந்தேன்.....!கொடு.....!கொடு.....!",ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டாள்.
அதன் பிறகு.....குழந்தைக்காக வாங்கி வந்த விளையாட்டு சாமான்களை கடை பரப்பி.....குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பிக்க.....தங்கை வந்திருக்கிறாள் என்று மதிய உணவை தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தாள் தீபிகா.வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுச் சாப்பாட்டை ரசித்து ருசித்து உண்டாள் நித்திலா.
மதிய உணவிற்கு பிறகு......அறையில் ஓய்வாக படுத்தபடி சகோதிரிகள் இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர்.அதிதி குட்டி அருகிலிருந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
நித்திலாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.....தீபிகாவின் கவனம் முழுவதும் கடிகாரத்தின் மீதே இருந்தது.மாலை ஐந்து ஆகவும்.....பரபரப்பாக எழுந்தவள்,"ஒகே நித்தி......!நீ ரெஸ்ட் எடு.....!நான் போய் முகம் கழுவணும்.....!உன் மாமா வந்திடுவார்....!",கூறியபடியே வெளியே செல்லப் போனாள்.
அவளை இழுத்துப் பிடித்தவள்,"மாமா வர்றதுக்கு.....நீ முகம் கழுவுவதற்கும் என்ன சம்பந்தம்.....?",என்றாள் புரியாமல்.
அவளது கேள்வியில் முகம் சிவக்கத் தடுமாறியவள்,"அடியே.....!உன் மாமா வரும் போது முகம் கழுவி ஃபிரெஷ்ஷா வரவேற்க வேண்டாமா......?இப்படியா தூங்கி வழியற முகத்தோட போய் நிற்பாங்க.....?",என்று மெல்லிய குரலில் உரைக்க,
அப்பொழுதும் அவள் புரியாமல் விழித்தபடி,"ஏன்.....?போய் நின்னா என்ன....?",என்று கேட்டு வைக்க,
அவளை கொலைவெறியோடு பார்த்த தீபிகா,"அடியே மக்கு.....!நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்.....உன் புருஷன் ஆபிஸ்ல இருந்து வரும் போது.....இப்படி தூங்கி வழிஞ்ச முகத்தோட போய் நில்லு.....!ஏன் அப்படி நிற்க கூடாதுங்கற காரணத்தை உன் புருஷன் அப்போ சொல்லுவாரு......!",என்றபடி அவள் வெளியேறி விட்டாள்.
தீபிகா கூறிச் சென்றதும் நித்திலாவின் மனதில் ஒரு கனவு எழுந்தது.அந்தக் கனவில் அவள் கல்யாணத்திற்குப் பிறகு.....ஒரு மாலை நேரம்.....தலைவாரி பூ வைத்து அழகாக அலங்கரித்துக் கொண்டு இருக்கிறாள்.அப்பொழுது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அவளுடைய கணவன் வீட்டு காலிங் பெல் அடிக்கிறான்.முக மலர்ச்சியுடன் இவள் சென்று கதவைத் திறக்கிறாள்.என்ன அதிசயம்.....!கதவுக்கு அந்தப் பக்கம் அவளுடைய கணவனாக ஆதித்யன் நிற்கிறான்....!இவளைக் கண்டதும்....காதல் கணவனாக கட்டி அணைத்து முத்தமிடவும் செய்கிறான்.....!
சட்டென்று தன் கனவு கலைந்து நனவுலகிற்கு வந்தவள்....ஓங்கித் தன் தலையில் கொட்டிக் கொண்டாள்.
'நித்தி.....!எருமை மாடே.....!வர வர உன் யோசனையே சரியில்ல.....!புருஷன்னு சொன்னவுடனே உனக்கு எதுக்கு ஆதித்யன் முகம் ஞாபகம் வரணும்.....?நீயே ரெண்டு நாள் லீவை அக்கா வீட்ல ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு வந்திருக்கே.....!அதிதி குட்டியோட விளையாண்டோமா.....?அக்கா கூட கதையளந்தோமான்னு ஜாலியா இல்லாம....அவனைப் பத்தி எதுக்கு யோசிச்சிக்கிட்டு இருக்க....?அவன் நினைப்பை முதல்ல மூட்டை கட்டி வை.....!",தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் அவள்.
'அவ்வளவு ஈஸியா அவனுடைய நினைவை மூட்டை கட்டி வைச்சிருவியா.....?அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய முகமா....ஆதித்யனுடைய முகம்.....?',என்று அவளுடைய மனசாட்சி வரிந்து கட்டிக் கொண்டு வர.....'நீ முதல்ல மூடிட்டு போ.....!',என்று அவளுடைய மனசாட்சியை ஓங்கித் தட்டி அடக்கியவள்.....அவனுடைய நினைவிலிருந்து அப்போதைக்கு தற்காலிகமாக மீண்டு வந்தாள்.
ஆனால்....அந்த விடுதலைக்கு ஆயுள் சிறிது நேரமே என்பதை அவள் அறியவில்லை.அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அவனை ஏதாவது ஒரு விதத்தில் அவளுக்கு ஞாபகப்படுத்தினர்.போதாக்குறைக்கு.....அவளுடைய அக்கா மற்றும் மாமாவின் அன்பு பிணைப்பைக் காணும் போதெல்லாம்.....அவளின் அனுமதி இல்லாமலேயே.....ஆதித்யன் அவளுடைய மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு....குறும்பாக கண் சிமிட்டினான்.
மாலை....கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கேசவனை....முகம் முழுவதும் புன்னகையுடனும்.....கண்களில் வழிந்த காதலுடனும் எதிர் கொண்டாள் அவனுடைய மனையாள் தீபிகா.அவனும் அவளுக்கு சளைக்காத காதல் பார்வையைப் பார்த்துக் கொண்டேதான் உள்ளே நுழைந்தான்.
நித்திலாவைப் பார்த்ததும்,"வா நித்தி.....!எப்படி இருக்க....?",என்று அக்கறையுடன் விசாரித்தான்.
"ம்.....நல்லாயிருக்கேன் மாமா.....!",
"பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கினதுக்கு அப்புறம் போன் பண்ணியிருக்கலாமே.....?நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்.....!",
"இல்ல மாமா.....!ஆட்டோவில வந்துட்டேன்.....!அவ்வளவு ஒண்ணும் சிரமம் இல்ல.....!",
"ஒகே ம்மா.....!நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வந்திடறேன்.....!",என்றபடி அவன் அறைக்குள் சென்று விட....தீபிகாவும் அவளைப் பின் தொடர்ந்தாள்.
மாலை டிஃபனாக சுடச் சுட போண்டாவும் காபியும் தயாராகி இருந்தது.அனைவரும் கலகலப்பாக பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க.....ராஜாத்தி நித்திலாவைப் பார்த்து,"ஆபிஸ் எல்லாம் எப்படி போகுது ம்மா.....?ஆதித்யன் எப்படி.....உன்கூட நல்லா பழகுறான்னா.....?",தன் விசாரணையை ஆரம்பிக்க.....'ஆதித்யன்' என்ற பெயரைக் கேட்டவுடன்....சாப்பிட்டுக் கொண்டிருந்த போண்டா புரையேறியது நித்திலாவிற்கு.
"ம்....பார்த்து டி.....!",இருமிக் கொண்டிருந்தவளின் தலையைத் தட்டியபடி குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள் தீபிகா.
அவள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே,"என்ன நித்தி......!ஆதி பெயர் சொன்ன உடனே...உனக்கு இப்படி புரையேறுது.....?அந்த அளவுக்கு உன்னை மிரட்டி வைச்சிருக்கானா......?",விளையாட்டாய் கேசவன் கேட்டு வைக்க.....அவளுக்கு மேலும் புரையேறியது.
"அவன் பண்ணினாலும் பண்ணுவான்......!சரியான கோபக்காரன்......!",ராஜாத்தி செல்லமாக ஆதித்யனைக் கடிந்து பேச,
"ஆமாம் ம்மா.....!பிடிவாதம் கொஞ்சம் அதிகம்தான்.....!",கேசவனும் அதை ஆமோதிக்க,
'கொஞ்சமென்ன....கொஞ்சம்....ரொம்பவுமே பிடிவாதம் அதிகம்தான்.....!',வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நித்திலா.
"ஏன் நித்தி.....எதுவுமே பேச மாட்டேங்கிற.....?வேலையெல்லாம் எப்படி.....?அண்ட்....உன் ஹாஸ்டல் லைஃ ப் எப்படி போகுது......?",கேசவன் மீண்டும் ஆரம்பிக்க,
"ம்....அதெல்லாம் நல்லாத்தான் இருக்குது மாமா.....!ஹாஸ்டல் லைஃ ப் பத்தி சொல்லவே வேண்டாம்......!பிரெண்ட்ஸ் கூட ஜாலியா போகுது.....!",
"ஹ்ம்ம்....குட்.....!",
அதற்குள் ராஜாத்தி,"அந்த ஊர்ல போய் தனியா இருக்கற.....பார்த்து பத்திரமா இருக்கணும்.....!ஏதாவது பிரச்சனைன்னா உடனே ஆதித்யன் கிட்ட சொல்லிடு......!எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அவன் பார்த்துக்குவான்.....!",பெரியவராய் அவர் அறிவுரை கூற,
'ம்க்கும்.....!பிரச்சனைக்கு முழுக்காரணமே அவன்தான்.....!இதுல....அவன்கிட்ட போய் சொல்லிட்டாலும்.....',மனதிற்குள் நொடித்துக் கொண்டவள்.....வெளியே,"ம்.....சரிங்க அத்தை.....!",என்று பதவிசாக தலையாட்டி வைத்தாள்.
இரவு உணவின் போதும்.....பேச்சு அங்கு சுற்றி....இங்கு சுற்றி கடைசியில் நித்திலாவின் திருமணப் பேச்சில் வந்து நின்றது.
"இனி நம்ம குடும்பத்துல நடக்கப் போகிற அடுத்த கல்யாணமா.....நித்தியுடைய கல்யாணம்தான் இருக்கப் போகுது.....!",ராஜாத்தி ஆரம்பிக்க,
"ஆமா நித்தி.....!அதனால இப்பவே நல்லா என்ஜாய் பண்ணிக்க......!கல்யாணத்துக்குப் பிறகு குழந்தை.....குடும்பம்ன்னு ஒரு வலைக்குள்ள மாட்டிக்குவ.....!",விளையாட்டாய் தீபிகா சொல்ல,
அவளை நிமிர்ந்து பார்த்த கேசவனின் பார்வையில்,'நீ அப்படிப்பட்ட வலைக்குள்ள மாட்டிக்கிட்டாத நினைக்கிறயா.....',என்ற கேள்வி இருந்தது.
அதை கவனித்தவள் நித்திலாவிடம்,"ஆனாலும்.....அது ஒரு சுகமான வலை நித்தி.....!அதுல விரும்பி மாட்டிக்கணும்னுதான் நாம நினைப்போம்.....!அதுல இருந்து வெளிவரவே உனக்கு மனசு வராது.....!",இதைச் சொல்லும் போதே.....அவளுடைய கண்கள்....அவளுடைய கணவனைக் காதலாகப் பார்த்திருந்தன....!
அங்கு வீடியோ....கேமரா என்று ஒன்றும் இல்லாமலேயே ஒரு ரொமான்ஸ் சீன் ஓடிக் கொண்டிருக்க.....நமட்டுச் சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்த நித்திலா,"ம்க்கும்.....!நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம்.....!அக்கா....என் தட்டுல ஒரு இட்லியைப் போட்டுட்டு....நீ அங்க கன்டினியூ பண்ணு.....!",என்று கிண்டலடிக்க,
"ஏய்.....வாலு.....!",என்றபடி தீபிகா அவள் காதைத் திருக,
கேசவனோ,"நித்தி......!உனக்கும் கல்யாணமாகி புருஷன்னு ஒருத்தன் வருவான்......!அவன் கூட நீ இந்த ரொமான்ஸ் சீன் எல்லாம் நடத்துவியல்ல......அப்ப வைச்சிக்கிறேன் உன்னை.....!",போலியாக மிரட்டினான் அவன்.
"அதெல்லாம் புருஷன்னு ஒருத்தன் வர்றப்ப பார்க்கலாம் மாமா.....!",அசால்ட்டாகக் கூறியவளின் மனத்தில்.....என்னதான் தடுக்க முயன்றாலும்.....கல்யாணம்....வருங்காலக் கணவன் என்று பேச்சு வரும் போதெல்லாம்......மனதில் ஆதித்யனின் முகம் மின்னி மறைவதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இரவு உணவை முடித்து விட்டு.....ராஜாத்தியும் அவர் கணவரும் படுக்கச் சென்று விட.....தீபிகா டைனிங் டேபிளில் இருந்த சாமான்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த நித்திலாவிடம்,"நித்தி.....!இதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.....!நீ போய் பாப்பாவை தூங்க வை....!அதுவே எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் தான்.....!",என்று கூறியபடியே அவள் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினாள்.
"அவ என்கிட்ட தூங்குவாளா.....?",
"அதெல்லாம் தூங்குவா.....!கதை சொல்லி தட்டிக் கொடு......!தூங்கிடுவா.....!",என்று கூற....'சரி...' என்றபடி அதிதி குட்டியிடம் சென்றாள் நித்திலா.
அதுவோ.....தரையில் குவிந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களின் நடுவில் அமர்ந்தபடி......ஒவ்வொரு பொருளாகத் தூக்கிப் போட்டு கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தது.
"என் தங்கக் கட்டி.....!இன்னைக்கு பாப்பாவை சித்தி தூங்க வைப்பேனாம்......!சமர்த்துக் குட்டியா பாப்பா தூங்குவாங்களாம்.....!",கொஞ்சியபடியே அவள் தங்கியிருக்கும் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
"தைனோசர் கத வேணும் த்தி.....!",தன் குட்டிக் கண்களை விரித்துக் கூறிய மகளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்.....குழந்தையின் காதோரமாக கதை சொல்லியபடி தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.
அரைமணி நேரமாகியும் தீபிகா வராததால்.....'என்னவென்று பார்க்கலாம்.....!',என்று எண்ணி சமையறைக்குச் சென்றாள்.
அங்கு....அவள் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருக்க.....அவள் கணவனோ....அவள் பின்னாலிருந்து அணைத்தபடி.....அவள் தோள் பட்டையில் முகம் புதைத்து.....அவள் காதோரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
"ஹே.....என்னடி....?இன்னும் வேலை செய்திட்டு இருக்க.....?சீக்கிரம் ரூமுக்கு வா.....!",என்று கிசுகிசுக்க,
"ஹலோ பாஸ்.....!வேலை முடிஞ்சாலும் இன்னைக்கு நான் நம்ம ரூமுக்கு வர மாட்டேன்.....!நித்தி கூடத்தான் படுத்துக்கப் போறேன்.....!",என்று பதிலுக்கு கிசுகிசுத்தாள்.
"அடிப்பாவி.....!உன் தங்கச்சி வந்த உடனே.....உன் புருஷனை கழட்டி விட்டுட்டியா.....?",
"கழட்டியெல்லாம் விடலை......!ரெண்டு நாளைக்கு மட்டும் டீல்ல விட்டுட்டேன்.....!என் தங்கச்சியே எப்பவாவது ஒரு நாள்தான் வந்து தங்கறா....ஸோ....நான் அவ கூடத்தான் படுக்கப் போறேன்......!",
"என்னடி இப்படி சொல்ற.....?",
"அதனால இப்ப சமர்த்துப் பிள்ளையா போய் படுத்து தூங்குவீங்களாம்.....!",
"நோ.....முடியாது.....!நீயும் வா.....!",அவன் செல்லம் கொஞ்ச,
"என் செல்லக் குட்டில்ல.....!இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தனியா படுத்து தூங்குவீங்களாம்......!நாளைக்கு உங்க பொண்டாட்டி உங்களைத் தேடி ஓடி வந்திருவாளாம்.....!",குழந்தையை சமாதானப்படுத்துவது போல் பேசினாள்.
"ஹ்ம்ம்....!நீ இவ்ளோ கெஞ்சறதால ஒகே சொல்றேன்.....!பட்.....இப்போ ரெண்டு நாளைக்கு தாங்கற மாதிரி ஏதாவது கொடுத்தனுப்பு.....!",கணவனாய் அவன் பேரம் பேச ஆரம்பிக்க,
"அதெல்லாம் நாளைக்குத் தர்றேன்.....!இப்ப நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க.....!யாராவது வந்திடப் போறாங்க....!",துலக்கிக் கொண்டிருந்த பாத்திரங்களைப் போட்டு விட்டு அவனைப் பிடித்து தள்ள,
"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க டி.....!",அவளை சமாதானப்படுத்தியவன்....காதல் கணவனாக அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அதுவரை அவர்களின் உரையாடலை வாஞ்சையுடன் ரசித்துக் கொண்டிருந்த நித்திலா.....அவன் அவளை நெருங்கவும்.....சிரித்தபடி அங்கிருந்து அகன்று விட்டாள்.
படுக்கையில் வந்து விழுந்தவளின் மனம் முழுவதும் ஆதித்யனே வியாபித்திருந்தான்.
'நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் என்கிட்ட நடந்துக்குவியா.....?என்னை விட்டுட்டு தனியா தூங்க மாட்டேன்னு அடம் பிடிப்பயா.....?நான் வேலை செய்யும் போது.....பின்னாடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு குறும்பு பண்ணுவியா.....?',தன் மனதில் தோன்றிய ஆதித்யனைப் பார்த்துக் காதலாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.
கண்களை மூடிப் படுத்திருந்தவளின் முன் ஆதித்யன்....ஆதித்யன் மட்டுமே தோன்றினான்.அவளும் மற்ற பெண்களைப் போல்.....கல்யாணம்....வருங்காலக் கணவன்....அதன் பின் வரும் வாழ்க்கை என்று பல கனவுகளைக் கண்டிருக்கிறாள்.என்ன....?இதுநாள் வரை.....கணவன் என்ற இடத்தில் முகம் தெரியாத ஒரு ஆணின் உருவம் இருக்கும்.....!இன்றோ.....கணவன் என்ற அந்த இடத்தில் ஆதித்யன் வந்து கம்பீரமாக நின்று அவளைப் பார்த்து சிரித்தான்.
என்னவோ அவன் நேரில் நின்று அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் எண்ணிக் கொண்டு.....மெலிதான புன்னகையை தன் இதழ்களில் தேக்கியபடி,'வசீகரன் டா நீ.....!உன் சிரிப்பிலேயே என்னை வசியம் பண்ணிட்ட......!உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நான்....நானா இருக்கிறது இல்ல.....!என்ன சொக்குப்பொடி போட்டு என்னை மயக்கினாயோ தெரியல.....!மாயக்கண்ணா.....!',என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவள் தந்தையின் முகம் அவள் மனதில் தோன்றியது.அதுவரை.....காதலுடன் ஆதித்யன் அமர்ந்திருந்த இடத்தில்......பாசப் பார்வை பார்த்தபடி அவள் தந்தை வந்து அமர்ந்து கொண்டார்.பெற்றவர்களின் மீது பாசம் கொண்ட மனது.....காதல் கொண்ட மனதை தள்ளி விட்டு விட்டு முன்னே வந்தது.
'இது என்ன நித்தி......!இப்படி ஒரு நினைப்பு.....?இது தப்பில்லையா.....?உன்னைப் பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணப் போறயா.....?உன் அப்பா உன் மேல வைச்சிருக்க நம்பிக்கையை தூக்கி எறியப் போறயா....?இது நாள் வரைக்கும்.....நீ உன் அப்பா அம்மாகிட்ட எதையுமே மறைச்சதில்ல.....!ஆனால்.....முதல்முதலா ஆதித்யன் விஷயத்தை அவங்ககிட்ட மறைச்சிருக்க......!காதல்ங்கிற பேர்ல உன் அம்மா அப்பாவை உயிரோட கொல்லப் போறயா.....?'
அவள் மனசாட்சி அவள் முன் நின்று கேள்வி கேட்டது.
'இல்ல.....நான் அவங்களுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்.....!நான் ஊருக்குக் கிளம்பும் போது.....என் பெரியம்மா சொன்ன வார்த்தை இன்னும் என் காதுல ஒலிச்சிட்டேதான் இருக்கு.....!என் அப்பா அம்மாவுக்கு நான் நிச்சயமா அவமானத்தைத் தேடித் தர மாட்டேன்......!ஏதோ வயசுக் கோளாறுல என்னென்னமோ லூசு மாதிரி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.....!இது காதலே இல்ல.....!ஜஸ்ட் அட்ராக்ஷன்......!அவ்வளவுதான்.....!இது காதல் இல்ல......!',தனக்குத் தானே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டாள்.
அவளுடைய இந்த பேத்தலில்......ஆதித்யன் மீது காதல் கொண்ட அவளுடைய மனது உயிர் பெற்று எழுந்தது.அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டு.....அவள் முன் நின்று கம்பீரமாக கேள்வி கேட்க ஆரம்பித்தது.....!
'எது நித்தி......?ஆதித்யன் மேல நீ வைச்சிருக்கிறதுக்கு பேர் காதல் இல்லையா......?வெறும் ஈர்ப்பு மட்டும்தானா......?',அமைதியாக அவளைப் பார்த்து கேள்வி கேட்டது.
கண்களில் நீர் வழிய.....தடுமாற்றத்துடன் நின்றவளைப் பார்த்து,'நான் கேட்கிற கேள்விக்கு உன் மனசைத் தொட்டு பதில் சொல்லு பார்க்கலாம்......?ஆதித்யனை நீ காதலிக்கவே இல்லையா.....?ஆதித்யன் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா......?ஆதித்யன் இல்லாம வேறு ஒரு ஆணை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா......?கல்யாணம்.....கணவன்னு சொல்லும் போதெல்லாம்.....உன் மனசில ஆதித்யன் முகம் வர்றதுக்கான காரணம் என்ன.....?
இது வெறும் ஈர்ப்பு மட்டும் தான்னு சொல்ற.....?அன்னைக்கு அவன் சாப்பிடாம இருக்கும் போது.....உன் பிடிவாதத்தை விட்டுட்டு அவனை சாப்பிட வைச்சியே......அது எதனால.....?நந்துவுக்கு ஆக்சிடெண்ட் நடந்தப்ப.....அத்தனை பேருக்கும் முன்னாடி.....எதைப் பத்தியும் கவலைப்படாம.....அவன் நெஞ்சில போய் விழுந்தாயே......அதுக்கு என்ன அர்த்தம்......?',ஆதித்யன் மேல் அவள் கொண்ட காதல்.....அவளுக்காக அவளிடமே வாதாடியது.
அப்பொழுதும் அவள்,'ஆனால்.....என் அப்பா.....அவரோட நம்பிக்கை......',என்றபடி முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.
'இன்னும் எவ்வளவு நாள்தான் உன்னை நீயே ஏமாத்திக்க போற.....?நல்லா யோசி நித்திலா......!',அவள் காதல் மனது அறிவுரை வழங்க,
அவளது பாசம் கொண்ட மனதோ.....'இதுல யோசிக்க என்ன இருக்கு நித்தி......!உன் அம்மா அப்பாவை கொஞ்சம் நினைச்சுப் பாரு.....!இதுல இருந்து வெளியே வா....!',என்று அறிவுரை வழங்க.....அவள் இரண்டு மனதிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்க ஆரம்பித்தாள்.
இரண்டு மனதும் மாறி மாறி அவளிடம் வாதாடிக் கொண்டிருக்க.....ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்.....அவள் கத்தி விட்டாள்.
'அய்யோ.....!கடவுளே.....!என்னை ஏன் இப்படி கொல்ற......?என் ஆது இல்லாம என்னால வாழ முடியாததுதான்......!என் ஆது இல்லாம இன்னொருத்தரை என் கணவனா என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது.....!இது காதல் தான்....!நூறு சதவீதம் இது காதல் தான்.....!என் ஆது மேல நான் வைச்சிருக்கிற காதல் எவ்வளவு உண்மையோ.....அந்தளவுக்கு நான் என் அப்பா அம்மா மேல வைச்சிருக்கிற பாசமும் உண்மையானது.....!இதுல நான் என்ன பண்ணுவேன்.....?என் ஆதுக்காக....என் பெத்தவங்களையோ.....இல்ல அவங்களுக்காக என் ஆதுவையோ என்னால விட முடியாது......!',அவள் கத்த,
'உன்னை யார் விடச் சொன்னது......?',வெகு அமைதியாக கேள்வி கேட்டது அவளுடைய காதல் மனது.
'சொல்லு நித்தி......?உன்னை யார் விடச் சொன்னது......?உன் அம்மா அப்பா சம்மதத்தோட உன் ஆதித்யனை கல்யாணம் பண்ணிக்கோ......!நீ அவன்கிட்ட உன் காதலை மட்டும் சொல்லு போதும்.....!மத்ததெல்லாம் அவனே பார்த்துக்குவான்.....!',
அவள் காதல் மனது எடுத்துக் கூற கூற.....அவள் முகம் யோசனைக்குத் தாவியது.அதற்குள் அவள் அக்கா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர.....அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அழுகையில் சிவந்திருந்த நித்திலாவின் முகத்தைப் பார்த்தவள்,"ஏண்டி முகம் ஒரு மாதிரி இருக்கு......?",என்று விசாரிக்க,
"அது.....தூக்கம் வருது.....!அதனாலேயா இருக்கும்.....!",என்று சமாளித்தாள்.
"அப்படின்னா.....படுத்து தூங்க வேண்டியதுதானே......?ஏன் இன்னும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்க......?",
"ம்....உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.....!",ஏதோ கூற வேண்டும் என்பதற்காக கூறினாள் நித்திலா.
அதன் பிறகு.....தீபிகா ஏதேதோ கதை பேசிக் கொண்டிருக்க.....அவளிடம் 'ம்' கொட்டினாலும்.....அவள் மனம் முழுவதும் ஆதித்யனிடம் தான் இருந்தது.நித்திலாவின் முகத்தைப் பார்த்து.....அவள் தமக்கை என்ன நினைத்தாலோ..."சரி நித்தி.....!நீ படுத்து தூங்கு.....!ரொம்ப டயர்டா தெரியற.....",என்றபடி குழந்தையைத் தூக்கித் தொட்டிலில் போட்டு விட்டு படுத்துக் கொண்டாள் தீபிகா.
கண்கள் மூடியிருந்தாலும் அன்று இரவு ஒரு பொட்டுக் கூட நித்திலா உறங்கவில்லை.ஆதித்யன் மீதான காதலுக்கும்.....பெற்றவர்களின் மீதான பாசத்திற்கும் இடையில் போராடிக் கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய மனதில் போராட்டம் ஆரம்பமாகி விட்டது.காதலுக்கும்.....பெற்றவர்களின் பாசத்துக்கும் இடையேயான போராட்டம் அது.....!நிச்சலனமாய் இருந்த அவளுடைய மனதில்.....காதல் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விட்டது....!பாசம் என்னும் மழையில் நனைந்து கொண்டிருப்பவள்.....காதல் என்னும் குடையின் கீழ் ஒதுங்குவாளா.....?பார்ப்போம்.....!
அகம் தொட வருவான்....!!!
"ஹே....!நித்தி....!வா.....வா.....!",வார விடுமுறையை தன் வீட்டில் கழிப்பதற்காக வந்த தங்கையை ஆரவாரத்துடன் வரவேற்றாள் தீபிகா.
"ஹாய் அக்கா.....!",பாசத்துடன் தனது அக்காவை அணைத்துக் கொண்டாள் நித்திலா.
சத்தம் கேட்டு வெளியே வந்த தீபிகாவின் மாமியாரும் மாமனாரும் நித்திலாவைப் பார்த்தவுடன்.....தங்கள் பங்கிற்கு அவளை வரவேற்றனர்.
"அடடே.....!நித்தி.....!வாடா ம்மா.....!ஒருவழியா உன் அக்கா வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைச்சிருச்சா......?",வாஞ்சையுடன் அவள் கன்னத்தை தடவியபடி ராஜாத்தி கேட்க,
"எங்கேங்க அத்தை......லீவ் கிடைச்சா வந்திட மாட்டேனா.....?ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்தான் லீவே கிடைக்குது.....!அதுவும் இரண்டு நாள்தான் கிடைக்குது.....!அதிலேயும் வந்துட்டு திரும்பி போறதுலேயே ஒரு நாள் ஓடிப் போயிருது.....!இதுல நான் எங்கே வந்து....அக்கா வீட்டை எட்டிப் பார்க்கட்டும்.....?",அவள் சமாதானம் கூறிக் கொண்டிருக்க,
இடையில் புகுந்த ராஜாத்தியின் கணவர்,"சரி....!சரி....!வீட்டுக்கு வந்த புள்ளையை உள்ளே கூட்டிட்டுப் போய் உட்கார வையுங்க.....!இப்படியா வாசலிலேயே நிற்க வைச்சு பேசிட்டு இருப்பீங்க....?நித்தி உள்ளே வாம்மா......!",அவர் ஒரு அதட்டல் போடவும்.....அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.
அவள் உள்ளே நுழைந்ததும்.....பெட் ரூமில் இருந்து வேகமாக ஓடி வந்த அதிதி குட்டி,"த்தி....!",என்றபடி அவள் காலை கட்டிக் கொண்டது.
"அடா.....!என் செல்லக் குட்டி....!வாடி.....உன்னைப் பார்க்கத்தான் சித்தி ஓடி வந்திருக்கேன்.....!",என்றபடியே குழந்தையை வாரி அணைத்துக் கொஞ்ச ஆரம்பித்தாள் நித்திலா.
தன் தங்கை தன் மகளைக் கொஞ்சுவதைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த தீபிகா,"நீ வந்துட்டியா.....?இனி இவளை கையில பிடிக்க முடியாது......!'த்தி....!த்தி.....!'ன்னு உன் பின்னாடியே சுத்தப் போகுது......!",செல்லமாக குழந்தையின் தலை முடியை கலைத்து விட்டபடி கூற,
"ம்மா.....!முதிய கதக்காத.....!",'முடியைக் கலைக்காதே....' என்பதைத்தான் தன் மழலை மொழியில் கூறியது.....அவளின் செல்லப் பிள்ளை.
"அது சரிங்க மேடம்.....!நான் கதக்கல.....நீங்க இப்ப சித்தியை விட்டு இறங்கி வாங்க.....!சித்தி போய் ஃபிரெஷ் ஆகிட்டு வரட்டும்.....!",என்றபடி தீபிகா கையை நீட்ட,
அந்தப் பிஞ்சோ இன்னும் இறுக்கமாக தன் சித்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு,"நோ.....!நா வத மாத்தேன்.....!",என்று அடம்பிடித்தது.
குழந்தையின் கிள்ளை மொழியில் மனம் மயங்கிய நித்திலா....சிரித்துக் கொண்டே,"விடுக்கா.....!அவ என்கூடவே இருக்கட்டும்.....!நீ என் பையை மட்டும் பெட் ரூம்ல வைச்சிடு.....!",குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் சென்று விட்டாள் நித்திலா.அவள் எப்பொழுது அங்கே வந்தாலும்.....அந்த அறையில்தான் தங்குவாள்.
குழந்தையுடன் விளையாடியபடியே.....அவள் ஃபிரெஷ்ஷாகி வெளிவரும் போது.....அவள் கையில் சில்லென்று ஆப்பிள் ஜுஸ் திணிக்கப்பட்டது.
"அக்கான்னா அக்காதான்.....!வெயில்ல அலைஞ்சு தொண்டை வறண்டு போய் வந்தேன்.....!கொடு.....!கொடு.....!",ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டாள்.
அதன் பிறகு.....குழந்தைக்காக வாங்கி வந்த விளையாட்டு சாமான்களை கடை பரப்பி.....குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பிக்க.....தங்கை வந்திருக்கிறாள் என்று மதிய உணவை தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தாள் தீபிகா.வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுச் சாப்பாட்டை ரசித்து ருசித்து உண்டாள் நித்திலா.
மதிய உணவிற்கு பிறகு......அறையில் ஓய்வாக படுத்தபடி சகோதிரிகள் இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர்.அதிதி குட்டி அருகிலிருந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
நித்திலாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.....தீபிகாவின் கவனம் முழுவதும் கடிகாரத்தின் மீதே இருந்தது.மாலை ஐந்து ஆகவும்.....பரபரப்பாக எழுந்தவள்,"ஒகே நித்தி......!நீ ரெஸ்ட் எடு.....!நான் போய் முகம் கழுவணும்.....!உன் மாமா வந்திடுவார்....!",கூறியபடியே வெளியே செல்லப் போனாள்.
அவளை இழுத்துப் பிடித்தவள்,"மாமா வர்றதுக்கு.....நீ முகம் கழுவுவதற்கும் என்ன சம்பந்தம்.....?",என்றாள் புரியாமல்.
அவளது கேள்வியில் முகம் சிவக்கத் தடுமாறியவள்,"அடியே.....!உன் மாமா வரும் போது முகம் கழுவி ஃபிரெஷ்ஷா வரவேற்க வேண்டாமா......?இப்படியா தூங்கி வழியற முகத்தோட போய் நிற்பாங்க.....?",என்று மெல்லிய குரலில் உரைக்க,
அப்பொழுதும் அவள் புரியாமல் விழித்தபடி,"ஏன்.....?போய் நின்னா என்ன....?",என்று கேட்டு வைக்க,
அவளை கொலைவெறியோடு பார்த்த தீபிகா,"அடியே மக்கு.....!நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்.....உன் புருஷன் ஆபிஸ்ல இருந்து வரும் போது.....இப்படி தூங்கி வழிஞ்ச முகத்தோட போய் நில்லு.....!ஏன் அப்படி நிற்க கூடாதுங்கற காரணத்தை உன் புருஷன் அப்போ சொல்லுவாரு......!",என்றபடி அவள் வெளியேறி விட்டாள்.
தீபிகா கூறிச் சென்றதும் நித்திலாவின் மனதில் ஒரு கனவு எழுந்தது.அந்தக் கனவில் அவள் கல்யாணத்திற்குப் பிறகு.....ஒரு மாலை நேரம்.....தலைவாரி பூ வைத்து அழகாக அலங்கரித்துக் கொண்டு இருக்கிறாள்.அப்பொழுது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அவளுடைய கணவன் வீட்டு காலிங் பெல் அடிக்கிறான்.முக மலர்ச்சியுடன் இவள் சென்று கதவைத் திறக்கிறாள்.என்ன அதிசயம்.....!கதவுக்கு அந்தப் பக்கம் அவளுடைய கணவனாக ஆதித்யன் நிற்கிறான்....!இவளைக் கண்டதும்....காதல் கணவனாக கட்டி அணைத்து முத்தமிடவும் செய்கிறான்.....!
சட்டென்று தன் கனவு கலைந்து நனவுலகிற்கு வந்தவள்....ஓங்கித் தன் தலையில் கொட்டிக் கொண்டாள்.
'நித்தி.....!எருமை மாடே.....!வர வர உன் யோசனையே சரியில்ல.....!புருஷன்னு சொன்னவுடனே உனக்கு எதுக்கு ஆதித்யன் முகம் ஞாபகம் வரணும்.....?நீயே ரெண்டு நாள் லீவை அக்கா வீட்ல ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு வந்திருக்கே.....!அதிதி குட்டியோட விளையாண்டோமா.....?அக்கா கூட கதையளந்தோமான்னு ஜாலியா இல்லாம....அவனைப் பத்தி எதுக்கு யோசிச்சிக்கிட்டு இருக்க....?அவன் நினைப்பை முதல்ல மூட்டை கட்டி வை.....!",தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் அவள்.
'அவ்வளவு ஈஸியா அவனுடைய நினைவை மூட்டை கட்டி வைச்சிருவியா.....?அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய முகமா....ஆதித்யனுடைய முகம்.....?',என்று அவளுடைய மனசாட்சி வரிந்து கட்டிக் கொண்டு வர.....'நீ முதல்ல மூடிட்டு போ.....!',என்று அவளுடைய மனசாட்சியை ஓங்கித் தட்டி அடக்கியவள்.....அவனுடைய நினைவிலிருந்து அப்போதைக்கு தற்காலிகமாக மீண்டு வந்தாள்.
ஆனால்....அந்த விடுதலைக்கு ஆயுள் சிறிது நேரமே என்பதை அவள் அறியவில்லை.அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அவனை ஏதாவது ஒரு விதத்தில் அவளுக்கு ஞாபகப்படுத்தினர்.போதாக்குறைக்கு.....அவளுடைய அக்கா மற்றும் மாமாவின் அன்பு பிணைப்பைக் காணும் போதெல்லாம்.....அவளின் அனுமதி இல்லாமலேயே.....ஆதித்யன் அவளுடைய மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு....குறும்பாக கண் சிமிட்டினான்.
மாலை....கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கேசவனை....முகம் முழுவதும் புன்னகையுடனும்.....கண்களில் வழிந்த காதலுடனும் எதிர் கொண்டாள் அவனுடைய மனையாள் தீபிகா.அவனும் அவளுக்கு சளைக்காத காதல் பார்வையைப் பார்த்துக் கொண்டேதான் உள்ளே நுழைந்தான்.
நித்திலாவைப் பார்த்ததும்,"வா நித்தி.....!எப்படி இருக்க....?",என்று அக்கறையுடன் விசாரித்தான்.
"ம்.....நல்லாயிருக்கேன் மாமா.....!",
"பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கினதுக்கு அப்புறம் போன் பண்ணியிருக்கலாமே.....?நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்.....!",
"இல்ல மாமா.....!ஆட்டோவில வந்துட்டேன்.....!அவ்வளவு ஒண்ணும் சிரமம் இல்ல.....!",
"ஒகே ம்மா.....!நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வந்திடறேன்.....!",என்றபடி அவன் அறைக்குள் சென்று விட....தீபிகாவும் அவளைப் பின் தொடர்ந்தாள்.
மாலை டிஃபனாக சுடச் சுட போண்டாவும் காபியும் தயாராகி இருந்தது.அனைவரும் கலகலப்பாக பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க.....ராஜாத்தி நித்திலாவைப் பார்த்து,"ஆபிஸ் எல்லாம் எப்படி போகுது ம்மா.....?ஆதித்யன் எப்படி.....உன்கூட நல்லா பழகுறான்னா.....?",தன் விசாரணையை ஆரம்பிக்க.....'ஆதித்யன்' என்ற பெயரைக் கேட்டவுடன்....சாப்பிட்டுக் கொண்டிருந்த போண்டா புரையேறியது நித்திலாவிற்கு.
"ம்....பார்த்து டி.....!",இருமிக் கொண்டிருந்தவளின் தலையைத் தட்டியபடி குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள் தீபிகா.
அவள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே,"என்ன நித்தி......!ஆதி பெயர் சொன்ன உடனே...உனக்கு இப்படி புரையேறுது.....?அந்த அளவுக்கு உன்னை மிரட்டி வைச்சிருக்கானா......?",விளையாட்டாய் கேசவன் கேட்டு வைக்க.....அவளுக்கு மேலும் புரையேறியது.
"அவன் பண்ணினாலும் பண்ணுவான்......!சரியான கோபக்காரன்......!",ராஜாத்தி செல்லமாக ஆதித்யனைக் கடிந்து பேச,
"ஆமாம் ம்மா.....!பிடிவாதம் கொஞ்சம் அதிகம்தான்.....!",கேசவனும் அதை ஆமோதிக்க,
'கொஞ்சமென்ன....கொஞ்சம்....ரொம்பவுமே பிடிவாதம் அதிகம்தான்.....!',வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நித்திலா.
"ஏன் நித்தி.....எதுவுமே பேச மாட்டேங்கிற.....?வேலையெல்லாம் எப்படி.....?அண்ட்....உன் ஹாஸ்டல் லைஃ ப் எப்படி போகுது......?",கேசவன் மீண்டும் ஆரம்பிக்க,
"ம்....அதெல்லாம் நல்லாத்தான் இருக்குது மாமா.....!ஹாஸ்டல் லைஃ ப் பத்தி சொல்லவே வேண்டாம்......!பிரெண்ட்ஸ் கூட ஜாலியா போகுது.....!",
"ஹ்ம்ம்....குட்.....!",
அதற்குள் ராஜாத்தி,"அந்த ஊர்ல போய் தனியா இருக்கற.....பார்த்து பத்திரமா இருக்கணும்.....!ஏதாவது பிரச்சனைன்னா உடனே ஆதித்யன் கிட்ட சொல்லிடு......!எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அவன் பார்த்துக்குவான்.....!",பெரியவராய் அவர் அறிவுரை கூற,
'ம்க்கும்.....!பிரச்சனைக்கு முழுக்காரணமே அவன்தான்.....!இதுல....அவன்கிட்ட போய் சொல்லிட்டாலும்.....',மனதிற்குள் நொடித்துக் கொண்டவள்.....வெளியே,"ம்.....சரிங்க அத்தை.....!",என்று பதவிசாக தலையாட்டி வைத்தாள்.
இரவு உணவின் போதும்.....பேச்சு அங்கு சுற்றி....இங்கு சுற்றி கடைசியில் நித்திலாவின் திருமணப் பேச்சில் வந்து நின்றது.
"இனி நம்ம குடும்பத்துல நடக்கப் போகிற அடுத்த கல்யாணமா.....நித்தியுடைய கல்யாணம்தான் இருக்கப் போகுது.....!",ராஜாத்தி ஆரம்பிக்க,
"ஆமா நித்தி.....!அதனால இப்பவே நல்லா என்ஜாய் பண்ணிக்க......!கல்யாணத்துக்குப் பிறகு குழந்தை.....குடும்பம்ன்னு ஒரு வலைக்குள்ள மாட்டிக்குவ.....!",விளையாட்டாய் தீபிகா சொல்ல,
அவளை நிமிர்ந்து பார்த்த கேசவனின் பார்வையில்,'நீ அப்படிப்பட்ட வலைக்குள்ள மாட்டிக்கிட்டாத நினைக்கிறயா.....',என்ற கேள்வி இருந்தது.
அதை கவனித்தவள் நித்திலாவிடம்,"ஆனாலும்.....அது ஒரு சுகமான வலை நித்தி.....!அதுல விரும்பி மாட்டிக்கணும்னுதான் நாம நினைப்போம்.....!அதுல இருந்து வெளிவரவே உனக்கு மனசு வராது.....!",இதைச் சொல்லும் போதே.....அவளுடைய கண்கள்....அவளுடைய கணவனைக் காதலாகப் பார்த்திருந்தன....!
அங்கு வீடியோ....கேமரா என்று ஒன்றும் இல்லாமலேயே ஒரு ரொமான்ஸ் சீன் ஓடிக் கொண்டிருக்க.....நமட்டுச் சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்த நித்திலா,"ம்க்கும்.....!நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம்.....!அக்கா....என் தட்டுல ஒரு இட்லியைப் போட்டுட்டு....நீ அங்க கன்டினியூ பண்ணு.....!",என்று கிண்டலடிக்க,
"ஏய்.....வாலு.....!",என்றபடி தீபிகா அவள் காதைத் திருக,
கேசவனோ,"நித்தி......!உனக்கும் கல்யாணமாகி புருஷன்னு ஒருத்தன் வருவான்......!அவன் கூட நீ இந்த ரொமான்ஸ் சீன் எல்லாம் நடத்துவியல்ல......அப்ப வைச்சிக்கிறேன் உன்னை.....!",போலியாக மிரட்டினான் அவன்.
"அதெல்லாம் புருஷன்னு ஒருத்தன் வர்றப்ப பார்க்கலாம் மாமா.....!",அசால்ட்டாகக் கூறியவளின் மனத்தில்.....என்னதான் தடுக்க முயன்றாலும்.....கல்யாணம்....வருங்காலக் கணவன் என்று பேச்சு வரும் போதெல்லாம்......மனதில் ஆதித்யனின் முகம் மின்னி மறைவதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இரவு உணவை முடித்து விட்டு.....ராஜாத்தியும் அவர் கணவரும் படுக்கச் சென்று விட.....தீபிகா டைனிங் டேபிளில் இருந்த சாமான்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த நித்திலாவிடம்,"நித்தி.....!இதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.....!நீ போய் பாப்பாவை தூங்க வை....!அதுவே எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் தான்.....!",என்று கூறியபடியே அவள் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினாள்.
"அவ என்கிட்ட தூங்குவாளா.....?",
"அதெல்லாம் தூங்குவா.....!கதை சொல்லி தட்டிக் கொடு......!தூங்கிடுவா.....!",என்று கூற....'சரி...' என்றபடி அதிதி குட்டியிடம் சென்றாள் நித்திலா.
அதுவோ.....தரையில் குவிந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களின் நடுவில் அமர்ந்தபடி......ஒவ்வொரு பொருளாகத் தூக்கிப் போட்டு கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தது.
"என் தங்கக் கட்டி.....!இன்னைக்கு பாப்பாவை சித்தி தூங்க வைப்பேனாம்......!சமர்த்துக் குட்டியா பாப்பா தூங்குவாங்களாம்.....!",கொஞ்சியபடியே அவள் தங்கியிருக்கும் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
"தைனோசர் கத வேணும் த்தி.....!",தன் குட்டிக் கண்களை விரித்துக் கூறிய மகளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்.....குழந்தையின் காதோரமாக கதை சொல்லியபடி தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.
அரைமணி நேரமாகியும் தீபிகா வராததால்.....'என்னவென்று பார்க்கலாம்.....!',என்று எண்ணி சமையறைக்குச் சென்றாள்.
அங்கு....அவள் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருக்க.....அவள் கணவனோ....அவள் பின்னாலிருந்து அணைத்தபடி.....அவள் தோள் பட்டையில் முகம் புதைத்து.....அவள் காதோரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
"ஹே.....என்னடி....?இன்னும் வேலை செய்திட்டு இருக்க.....?சீக்கிரம் ரூமுக்கு வா.....!",என்று கிசுகிசுக்க,
"ஹலோ பாஸ்.....!வேலை முடிஞ்சாலும் இன்னைக்கு நான் நம்ம ரூமுக்கு வர மாட்டேன்.....!நித்தி கூடத்தான் படுத்துக்கப் போறேன்.....!",என்று பதிலுக்கு கிசுகிசுத்தாள்.
"அடிப்பாவி.....!உன் தங்கச்சி வந்த உடனே.....உன் புருஷனை கழட்டி விட்டுட்டியா.....?",
"கழட்டியெல்லாம் விடலை......!ரெண்டு நாளைக்கு மட்டும் டீல்ல விட்டுட்டேன்.....!என் தங்கச்சியே எப்பவாவது ஒரு நாள்தான் வந்து தங்கறா....ஸோ....நான் அவ கூடத்தான் படுக்கப் போறேன்......!",
"என்னடி இப்படி சொல்ற.....?",
"அதனால இப்ப சமர்த்துப் பிள்ளையா போய் படுத்து தூங்குவீங்களாம்.....!",
"நோ.....முடியாது.....!நீயும் வா.....!",அவன் செல்லம் கொஞ்ச,
"என் செல்லக் குட்டில்ல.....!இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தனியா படுத்து தூங்குவீங்களாம்......!நாளைக்கு உங்க பொண்டாட்டி உங்களைத் தேடி ஓடி வந்திருவாளாம்.....!",குழந்தையை சமாதானப்படுத்துவது போல் பேசினாள்.
"ஹ்ம்ம்....!நீ இவ்ளோ கெஞ்சறதால ஒகே சொல்றேன்.....!பட்.....இப்போ ரெண்டு நாளைக்கு தாங்கற மாதிரி ஏதாவது கொடுத்தனுப்பு.....!",கணவனாய் அவன் பேரம் பேச ஆரம்பிக்க,
"அதெல்லாம் நாளைக்குத் தர்றேன்.....!இப்ப நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க.....!யாராவது வந்திடப் போறாங்க....!",துலக்கிக் கொண்டிருந்த பாத்திரங்களைப் போட்டு விட்டு அவனைப் பிடித்து தள்ள,
"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க டி.....!",அவளை சமாதானப்படுத்தியவன்....காதல் கணவனாக அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அதுவரை அவர்களின் உரையாடலை வாஞ்சையுடன் ரசித்துக் கொண்டிருந்த நித்திலா.....அவன் அவளை நெருங்கவும்.....சிரித்தபடி அங்கிருந்து அகன்று விட்டாள்.
படுக்கையில் வந்து விழுந்தவளின் மனம் முழுவதும் ஆதித்யனே வியாபித்திருந்தான்.
'நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் என்கிட்ட நடந்துக்குவியா.....?என்னை விட்டுட்டு தனியா தூங்க மாட்டேன்னு அடம் பிடிப்பயா.....?நான் வேலை செய்யும் போது.....பின்னாடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு குறும்பு பண்ணுவியா.....?',தன் மனதில் தோன்றிய ஆதித்யனைப் பார்த்துக் காதலாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.
கண்களை மூடிப் படுத்திருந்தவளின் முன் ஆதித்யன்....ஆதித்யன் மட்டுமே தோன்றினான்.அவளும் மற்ற பெண்களைப் போல்.....கல்யாணம்....வருங்காலக் கணவன்....அதன் பின் வரும் வாழ்க்கை என்று பல கனவுகளைக் கண்டிருக்கிறாள்.என்ன....?இதுநாள் வரை.....கணவன் என்ற இடத்தில் முகம் தெரியாத ஒரு ஆணின் உருவம் இருக்கும்.....!இன்றோ.....கணவன் என்ற அந்த இடத்தில் ஆதித்யன் வந்து கம்பீரமாக நின்று அவளைப் பார்த்து சிரித்தான்.
என்னவோ அவன் நேரில் நின்று அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் எண்ணிக் கொண்டு.....மெலிதான புன்னகையை தன் இதழ்களில் தேக்கியபடி,'வசீகரன் டா நீ.....!உன் சிரிப்பிலேயே என்னை வசியம் பண்ணிட்ட......!உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நான்....நானா இருக்கிறது இல்ல.....!என்ன சொக்குப்பொடி போட்டு என்னை மயக்கினாயோ தெரியல.....!மாயக்கண்ணா.....!',என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று அவள் தந்தையின் முகம் அவள் மனதில் தோன்றியது.அதுவரை.....காதலுடன் ஆதித்யன் அமர்ந்திருந்த இடத்தில்......பாசப் பார்வை பார்த்தபடி அவள் தந்தை வந்து அமர்ந்து கொண்டார்.பெற்றவர்களின் மீது பாசம் கொண்ட மனது.....காதல் கொண்ட மனதை தள்ளி விட்டு விட்டு முன்னே வந்தது.
'இது என்ன நித்தி......!இப்படி ஒரு நினைப்பு.....?இது தப்பில்லையா.....?உன்னைப் பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணப் போறயா.....?உன் அப்பா உன் மேல வைச்சிருக்க நம்பிக்கையை தூக்கி எறியப் போறயா....?இது நாள் வரைக்கும்.....நீ உன் அப்பா அம்மாகிட்ட எதையுமே மறைச்சதில்ல.....!ஆனால்.....முதல்முதலா ஆதித்யன் விஷயத்தை அவங்ககிட்ட மறைச்சிருக்க......!காதல்ங்கிற பேர்ல உன் அம்மா அப்பாவை உயிரோட கொல்லப் போறயா.....?'
அவள் மனசாட்சி அவள் முன் நின்று கேள்வி கேட்டது.
'இல்ல.....நான் அவங்களுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்.....!நான் ஊருக்குக் கிளம்பும் போது.....என் பெரியம்மா சொன்ன வார்த்தை இன்னும் என் காதுல ஒலிச்சிட்டேதான் இருக்கு.....!என் அப்பா அம்மாவுக்கு நான் நிச்சயமா அவமானத்தைத் தேடித் தர மாட்டேன்......!ஏதோ வயசுக் கோளாறுல என்னென்னமோ லூசு மாதிரி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.....!இது காதலே இல்ல.....!ஜஸ்ட் அட்ராக்ஷன்......!அவ்வளவுதான்.....!இது காதல் இல்ல......!',தனக்குத் தானே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டாள்.
அவளுடைய இந்த பேத்தலில்......ஆதித்யன் மீது காதல் கொண்ட அவளுடைய மனது உயிர் பெற்று எழுந்தது.அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டு.....அவள் முன் நின்று கம்பீரமாக கேள்வி கேட்க ஆரம்பித்தது.....!
'எது நித்தி......?ஆதித்யன் மேல நீ வைச்சிருக்கிறதுக்கு பேர் காதல் இல்லையா......?வெறும் ஈர்ப்பு மட்டும்தானா......?',அமைதியாக அவளைப் பார்த்து கேள்வி கேட்டது.
கண்களில் நீர் வழிய.....தடுமாற்றத்துடன் நின்றவளைப் பார்த்து,'நான் கேட்கிற கேள்விக்கு உன் மனசைத் தொட்டு பதில் சொல்லு பார்க்கலாம்......?ஆதித்யனை நீ காதலிக்கவே இல்லையா.....?ஆதித்யன் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா......?ஆதித்யன் இல்லாம வேறு ஒரு ஆணை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா......?கல்யாணம்.....கணவன்னு சொல்லும் போதெல்லாம்.....உன் மனசில ஆதித்யன் முகம் வர்றதுக்கான காரணம் என்ன.....?
இது வெறும் ஈர்ப்பு மட்டும் தான்னு சொல்ற.....?அன்னைக்கு அவன் சாப்பிடாம இருக்கும் போது.....உன் பிடிவாதத்தை விட்டுட்டு அவனை சாப்பிட வைச்சியே......அது எதனால.....?நந்துவுக்கு ஆக்சிடெண்ட் நடந்தப்ப.....அத்தனை பேருக்கும் முன்னாடி.....எதைப் பத்தியும் கவலைப்படாம.....அவன் நெஞ்சில போய் விழுந்தாயே......அதுக்கு என்ன அர்த்தம்......?',ஆதித்யன் மேல் அவள் கொண்ட காதல்.....அவளுக்காக அவளிடமே வாதாடியது.
அப்பொழுதும் அவள்,'ஆனால்.....என் அப்பா.....அவரோட நம்பிக்கை......',என்றபடி முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.
'இன்னும் எவ்வளவு நாள்தான் உன்னை நீயே ஏமாத்திக்க போற.....?நல்லா யோசி நித்திலா......!',அவள் காதல் மனது அறிவுரை வழங்க,
அவளது பாசம் கொண்ட மனதோ.....'இதுல யோசிக்க என்ன இருக்கு நித்தி......!உன் அம்மா அப்பாவை கொஞ்சம் நினைச்சுப் பாரு.....!இதுல இருந்து வெளியே வா....!',என்று அறிவுரை வழங்க.....அவள் இரண்டு மனதிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்க ஆரம்பித்தாள்.
இரண்டு மனதும் மாறி மாறி அவளிடம் வாதாடிக் கொண்டிருக்க.....ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்.....அவள் கத்தி விட்டாள்.
'அய்யோ.....!கடவுளே.....!என்னை ஏன் இப்படி கொல்ற......?என் ஆது இல்லாம என்னால வாழ முடியாததுதான்......!என் ஆது இல்லாம இன்னொருத்தரை என் கணவனா என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது.....!இது காதல் தான்....!நூறு சதவீதம் இது காதல் தான்.....!என் ஆது மேல நான் வைச்சிருக்கிற காதல் எவ்வளவு உண்மையோ.....அந்தளவுக்கு நான் என் அப்பா அம்மா மேல வைச்சிருக்கிற பாசமும் உண்மையானது.....!இதுல நான் என்ன பண்ணுவேன்.....?என் ஆதுக்காக....என் பெத்தவங்களையோ.....இல்ல அவங்களுக்காக என் ஆதுவையோ என்னால விட முடியாது......!',அவள் கத்த,
'உன்னை யார் விடச் சொன்னது......?',வெகு அமைதியாக கேள்வி கேட்டது அவளுடைய காதல் மனது.
'சொல்லு நித்தி......?உன்னை யார் விடச் சொன்னது......?உன் அம்மா அப்பா சம்மதத்தோட உன் ஆதித்யனை கல்யாணம் பண்ணிக்கோ......!நீ அவன்கிட்ட உன் காதலை மட்டும் சொல்லு போதும்.....!மத்ததெல்லாம் அவனே பார்த்துக்குவான்.....!',
அவள் காதல் மனது எடுத்துக் கூற கூற.....அவள் முகம் யோசனைக்குத் தாவியது.அதற்குள் அவள் அக்கா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர.....அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அழுகையில் சிவந்திருந்த நித்திலாவின் முகத்தைப் பார்த்தவள்,"ஏண்டி முகம் ஒரு மாதிரி இருக்கு......?",என்று விசாரிக்க,
"அது.....தூக்கம் வருது.....!அதனாலேயா இருக்கும்.....!",என்று சமாளித்தாள்.
"அப்படின்னா.....படுத்து தூங்க வேண்டியதுதானே......?ஏன் இன்னும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்க......?",
"ம்....உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.....!",ஏதோ கூற வேண்டும் என்பதற்காக கூறினாள் நித்திலா.
அதன் பிறகு.....தீபிகா ஏதேதோ கதை பேசிக் கொண்டிருக்க.....அவளிடம் 'ம்' கொட்டினாலும்.....அவள் மனம் முழுவதும் ஆதித்யனிடம் தான் இருந்தது.நித்திலாவின் முகத்தைப் பார்த்து.....அவள் தமக்கை என்ன நினைத்தாலோ..."சரி நித்தி.....!நீ படுத்து தூங்கு.....!ரொம்ப டயர்டா தெரியற.....",என்றபடி குழந்தையைத் தூக்கித் தொட்டிலில் போட்டு விட்டு படுத்துக் கொண்டாள் தீபிகா.
கண்கள் மூடியிருந்தாலும் அன்று இரவு ஒரு பொட்டுக் கூட நித்திலா உறங்கவில்லை.ஆதித்யன் மீதான காதலுக்கும்.....பெற்றவர்களின் மீதான பாசத்திற்கும் இடையில் போராடிக் கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய மனதில் போராட்டம் ஆரம்பமாகி விட்டது.காதலுக்கும்.....பெற்றவர்களின் பாசத்துக்கும் இடையேயான போராட்டம் அது.....!நிச்சலனமாய் இருந்த அவளுடைய மனதில்.....காதல் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விட்டது....!பாசம் என்னும் மழையில் நனைந்து கொண்டிருப்பவள்.....காதல் என்னும் குடையின் கீழ் ஒதுங்குவாளா.....?பார்ப்போம்.....!
அகம் தொட வருவான்....!!!