Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 37 :
அவன் கையிலிருந்து வழிந்த இரத்தம்.....அவள் பயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட,"ப்ளீஸ் ஆது......!காயத்திலிருந்து இரத்தம் வருது.....!என்னைக் கவனிக்க விடுங்க......!",கைகூப்பி கெஞ்சினாள் அவள்.
"அதுதான் உன் வார்த்தையால.....என்னை உயிரோட கொன்னுட்டியே.....?இதுக்கு அப்புறமும்....காயத்துக்கு மருந்து போட்டால் என்ன......?இல்ல.....போடாட்டிதான் என்ன.....?",ஒவ்வொரு வார்த்தையும் வேதனையில் மூழ்கி வெளிவந்தன.
அவன் கண்களில் தெரிந்த அடிபட்ட வலியில்.....அவள் பேச்சு வராமல் நின்று விட்டாள்.கண்களில் வழிந்த கண்ணீருடன் அவனைப் பார்த்திருந்தாள்.
"என் காதலை எப்போத்தான் டி புரிஞ்சுக்க போற......?ச்சே......!நான் ஒரு பைத்தியக்காரன்.......!நீ இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும்.....உன்கிட்ட வந்து காதல்......அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருக்கேன்......!உன் லாங்குவேஜ்ல சொல்லணும்ன்னா......இது காதல் இல்ல......!இதுக்கு பேர் உடல் இச்சை......!அப்படித்தானே.......?",அமைதியாகக் கேட்டவன் அருகிலிருந்த ஒற்றை சோபாவை எட்டி உதைக்க.....அது சுவற்றில் மோதி தலைகுப்புற விழுந்தது.
அவனுடைய கோபத்தில் உடல் தூக்கி வாரிப் போட.....பக்கத்திலிருந்த சுவற்றோடு ஒண்டிக் கொண்டாள்.
"என்னடி சொன்ன......?என்னுடைய உடல் பசிக்காக உன்னை நெருங்கினேனா......?எனக்குத் தேவை உன்னுடைய உடம்புதான்னு நான் நினைச்சிருந்தா.....நான் உன்னை சந்திச்ச அடுத்த நாள்.....நீ என் பெட்ரூம்ல இருந்திருப்ப......!இந்த ஆதித்யன் நினைச்சா.....எதையும் சாதிப்பான்......!",
உன்னை சந்திச்சு.....காதல்ல விழுந்து.....கோயம்புத்தூர்ல இருந்த உன்னை.....சென்னைல்ல இருக்கிற என் ஆபிஸ் வரைக்கும் வரவழைச்ச என்னால.....என் படுக்கையறைக்கா உன்னை வரவழைச்சிருக்க முடியாது......?ஒரு நிமிஷம் போதும் டி.......!சொடக்கு போடற நேரத்துல.....வேலையை முடிச்சிட்டுப் போய்ட்டே இருந்திருப்பேன்......!இதோ......இப்பக் கூட.....நீ சொன்ன என்னுடைய உடல் இச்சையைத் தீர்த்துக்கிறதுக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது......பார்க்கறியா......?நடத்திக் காட்டட்டுமா......?",வெறி பிடித்தவன் போல அவளருகில் நெருங்கியவன்.....அவளது மிரண்ட விழிகளில் எதைக் கண்டானோ....."ச்சே......!",என்றபடி பக்கத்திலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.
அவள் முகத்தைக் கூடப் பார்க்க பிடிக்காதவனாய்.....அவனை விட்டுத் தள்ளி நின்றவன்,"ஆனால்.....நான் அப்படி பண்ண மாட்டேன் டி......!ஏன்னா.....நான் உன்னைக் காதலிக்கிறேன்.....!",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாய் மாறியது என்னவோ உண்மைதான்......!
தன் கண்களில் வழிந்த நீரைக் கூடத் துடைக்காமல்.....அவன் வார்த்தைகளில் கட்டுண்டிருந்தாள் நித்திலா.
"உன்னால எப்படி டி இப்படியெல்லாம் பேச முடிஞ்சுது......?நீ இந்தளவுக்கு என் காதலை அவமானப்படுத்தினதுக்கு அப்புறமும்.....நான் உன்னைத் தொட்டேன்னா.....அது என் காதலுக்கு அசிங்கம்......!என் காதலுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்......!"
ஆற்றாமையோடு தன் தலையைக் கோதியவன்,"அது எப்படி டி......?என் கண்கள்ல வழிஞ்ச காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா......?என்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்ட காதலை உன்னால உணர முடியலையா.....?நான் உன்னைக் காதலிச்சேன் டி......!உன்னை......உன் மனசை காதலிச்சேன்......!காதலிக்கிறேன்......!என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நீ வேணும்ன்னு நினைச்சேன்.......!ஆனால்.....நீ......",என்று புலம்பியவன்,
"எனக்கு இங்க வலிக்குது டி...... !",தன் இதயம் இருந்த பகுதியைத் தொட்டுக் காட்டியவன்,
"நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும்.....என்னைக் கொல்லுது டி.....!இப்படிக் கொஞ்ச கொஞ்சமா என்னைக் கொல்றதுக்கு.....நீ ஒரேயடியா என்னைக் கொன்னு.....!",அந்த வார்த்தையை அவன் முடிப்பதற்கு முன்பாகவே.....ஓடிச் சென்று அவன் வாயைப் பொத்தியவள்,
"நோ ஆது......!அந்த வார்த்தையை சொல்லாதீங்க......!அதைக் கேட்கிற சக்தி எனக்கு இல்ல.....!அன்னைக்கு நீங்க என்கிட்ட சவால் வீட்டீங்களே....'உன் வாயாலேயே ஐ லவ் யூ ஆது....'ன்னு சொல்ல வைக்கிறேன்னு.....இப்போ சொல்றேன்.....ஐ லவ் யூ ஆது.....!ஐ லவ் யூ......!நீங்க இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்கிற அளவுக்கு ஐ லவ் யூ......!",அவன் கண்களைப் பார்த்துக் கதறியவளின் கண்களில் அப்படியொரு காதல் தெரிந்தது.....!
அவனோ....கொஞ்சம் கூட அசையாமல் கல்லுப் பிள்ளையார் மாதிரி நின்றிருந்தான்.அவன் முகத்தில் இருந்த கடினம் சிறிது கூட இளகவில்லை.
அவன் சட்டைக் காலரைப் பற்றியவள்,"ஐ யம் ஸாரி ஆது......!உங்க அருகாமையில மயங்கற மனசையும்....உடம்பையும் கட்டுப்படுத்த தெரியாம....என் மேலேயே எனக்கு வந்த கோபத்தை உங்க மேல காட்டிட்டேன்......!எவ்வளவு கொடுமையான வார்த்தையை உங்களைப் பார்த்து சொல்லிட்டேன்......!உங்க காதலை நான் கொச்சைப்படுத்திட்டேன்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது......!",அவன் மார்பில் முகம் புதைத்து அவள் கதற......அவன் அப்பொழுதும் அமைதியாகத்தான் இருந்தான்.அவன் முகத்தில் வேதனை கலந்த நிம்மதி நிலவியது......!
தன் கண்களைத் துடைத்துக் கொண்டு......அவன் மார்பிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தியவள்.....அவன் சட்டைக் காலரை பற்றியபடி,"என்ன கேட்டீங்க......?உங்களுடைய காதல் என்னைப் பாதிக்கலையான்னுதானே கேட்டீங்க.......?பாதிச்சது.....!உங்களுடைய காதல்.....உங்க கண்கள்ல நான் பார்த்த காதல்.....என்னுடைய மனசை புயலா சுழற்றியடிச்சு உங்க காலடில கொண்டு வந்து போட்டுச்சு......!
நீங்க ஒவ்வொரு முறை என்னை நெருங்கும் போதும்.....உங்களைப் பிடிக்காத மாதிரி விலக்கித் தள்ளறதுக்கு.....என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்......!நீங்க என் மேல வைச்சிருக்கிற காதலுக்கும்.....என் அப்பா அம்மா என் மேலே வைச்சிருக்கிற நம்பிக்கைக்கும் இடையில மாட்டிக்கிட்டு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்......!
இந்த பக்கமும் போக முடியாம.....அந்தப் பக்கமும் நிலைச்சு நிற்க முடியாம.....ஒவ்வொரு நிமிஷமும் அணு அணுவா செத்துக்கிட்டு இருக்கேன் ஆது......!",அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள்.....தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.
"நான் ஒண்ணும் ஜடம் இல்ல ஆது......!நானும் மனுஷிதான்......!அதுவும் எல்லா உணர்ச்சிகளும் நிறைஞ்ச சாதாரண மனுஷி......!உங்க மேல கொள்ளை கொள்ளையா காதலை வைச்சிருக்கிற சாதாரண மனுஷி......!உங்களை இவ்வளவு நெருக்கத்துல பார்க்கும் போதும்.....நீங்க ஒவ்வொரு முறையும் என்னை முத்தமிட நெருங்கும் போதும்.....என் மனசுல ஏற்படற மாற்றத்தையும்.....என் உணர்ச்சிகளோட கொந்தளிப்பையும் என்னால மட்டுமே புரிஞ்சுக்க முடியும்......!நான் போட்டு வைச்சிருந்த அத்தனை வேலிகளையும் உடைச்சிட்டு.....நீங்க என் மனசைத் தொட்டு ரொம்ப நாளாச்சு ஆது.......!",தன் மன உணர்வுகளை மிக அழகாக அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் அவனுடைய காதலி.....!
அவன் கண்களை தனது விழிகளால் சிறையிட்டவள்,"என்னுடைய காதல்.....உங்க மீதான என்னுடைய தேடல்.....எப்படிப்பட்டதுன்னு இப்போ புரிஞ்சுக்குவீங்க......!",உறுதியான குரலில் உரைத்தவள்.....அடுத்த நொடி.....அவன் உயரத்திற்கு தன் கால்களை எக்கி.....அவன் இதழ்களைத் தனது இதழ்களால் பிணைத்திருந்தாள்.
முதல் முத்தம்......!தன்னவனுக்காக அவனுடையவள் கொடுக்கும் முதல் இதழ் முத்தம்......!உயிர்க் காதலில்.....இரு உள்ளங்கள் மூழ்கி முத்தெடுக்கும் ஒரு சுப உற்சவம்....இந்த உயிர் முத்தம்.....!
தன் உயிரை உருக்கி.....அதை தன் உணர்வுகளோடு கலந்து.....இந்த முத்தத்தின் வாயிலாக அவனுக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு.....தட்டுத் தடுமாறி இந்த முத்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தாள் நித்திலா.
அவளுடன் கரம் கோர்த்து.....அந்த முத்த யுத்தத்தில் சரிசமமாய் பங்கு கொள்ள வேண்டியவனோ......'நீ என்னவோ செய்து கொள்......!', என்பது போல் அமைதியாய் நின்றிருந்தான்.
சொல்லிக் கொடுக்க வேண்டியவன்.....அமைதியாக நிற்க.....கற்றுக் கொள்ள வேண்டிய அந்தப் பாவையோ......'நீ சொல்லிக் கொடுக்கா விட்டால் என்ன......?', என்று துணிந்து அதிரடியாய் களத்தில் இறங்கியிருந்தாள்.
ஆதித்யனின் முகத்தில் அத்தனை நிம்மதி விரவியிருந்தது.....!கண்களை மூடி அவள் இஷ்டத்திற்கு.....தனது உதடுகளை கொடுத்திருந்தவனின் முகத்தில் எல்லையற்ற காதல் தெரிந்தது.....!இத்தனை நாட்களாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனுடைய காதல்......அதனிடம் வந்து அடைந்ததைப் போல் உணர்ந்தான் ஆதித்யன்.
சற்று முன் வார்த்தைகளால் அவன் காதலை குத்திக் கிழித்து ரணமாக்கியிருந்தவள்.....அதனால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தன் இதழ்களால் மருந்திட்டாள்.....!அவள் தன் இதயத்தைத் திறந்து.....'அனைத்தும் நீயே.......!', என்று சரணடைந்த அந்த நொடி......அவன் உயிர்த்தெழுந்தான்......!அவன் மனதில் இருந்த சஞ்சலமும்.....வேதனையும்.....கோபமும் மறைந்து மாயமாகியிருந்தன.....!
தன் காதலை அவமானப்படுத்தியவளே.....தன் காதலுக்கான அங்கீகாரத்தையும் அளித்து விட்டதில் அவன் மனம் ஆழ்கடலை போல் அமைதியானது....!
இருந்தாலும் அவன்.....அவள் முத்தத்திற்கான பதில் முத்தத்தை அவள் இதழ்களில் வரையவில்லை.கண்களை மூடிக் காதலுடன்......அவள் இதழ்களின் மென்மையில் கரைந்து கொண்டிருந்தான்.....!தானே காதலுடன் முன் வந்து கொடுக்கும் தன்னவளின் முதல் இதழ் முத்தம் அல்லவா.....?எனவே.....அந்த யுத்தத்தைத் தனதாக்கிக் கொள்ளாமல்.....தன் காதலியின் இஷ்டத்திற்கு விட்டிருந்தான் அந்தக் காதலன்.....!
என்னதான் அந்தக் காரிகை துணிந்து களத்தில் இறங்கி விட்டாலும்......அவளுக்கும் இது முதல் முத்தமல்லவா......!எங்கே ஆரம்பிப்பது.....எங்கே முடிப்பது.....என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி.....முட்டி மோதிக் கொண்டிருந்தாள் அந்தக் கட்டழகி.....!
தன்னவளின் தடுமாற்றத்தைப் மனதிற்குள் சிறு புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தவனின் உதடுகள்.....அவள் தடுமாற்றத்தைப் போக்கி.....அந்த முத்த யுத்தத்தின் வெற்றியின் ரகசியத்தை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று பரபரத்தது.....!
ஆனால்.....காதல் கொண்ட மனமோ.....'வேண்டாம்.....!இப்படியே கண்ணை மூடி.....அவள் இதழ்களில் காதலோடு கரைந்து போ......!', எனக் கட்டளையிட்டது.....!அந்த ஆறடி ஆணழகனும் காதலின் முன் மண்டியிட்டு.....அது இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான்.....!
ஒருவழியாக மூச்சுக் காற்றுக்காக.....அவன் உதடுகளிலிருந்து தன் இதழ்களைப் பிரித்தெடுத்தவளை நாணம் வந்து கட்டிக்கொள்ள.....அவன் முகம் பார்க்க வெட்கி.....அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.எல்லையில்லா நிம்மதியுடன் தன்னவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை.....வேட்கையோடு அவளை நாடியவன்.....இப்பொழுது.....காதலுடன் அவளை அணைத்திருந்தான்.....!
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ.....தெரியவில்லை.....!திடீரென்று நித்திலாவிற்கு அவனுடைய கைக்காயம் உரைக்க.....சட்டென்று அவன் மார்பில் இருந்து தன் முகத்தை விலக்கியவள்,"உங்களுடைய காயம்......?",பதைபதைத்தபடியே அவன் உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள்.
சில்லு சில்லாய் சிதறியிருந்த கண்ணாடி.....அவனுடைய வலது உள்ளங்கை முழுவதையும் புண்ணாக்கி இரத்தக் காயத்தை ஏற்படுத்தியிருந்தது.அவன் காயத்தைக் கண்டவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் நதி பெருக்கெடுத்தது.
"எல்லாம் என்னாலதான்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது.....!",அவள் தேம்ப,
"ப்ச்......!பேபி......!முதல்ல அழறதை நிறுத்து......!இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது......!",மென்மையாக கடிந்து கொண்டான் ஆதித்யன்.
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,"உங்க காயத்துக்கு மருந்து போடாம.....நான் பாட்டுக்கு அழுதுக்கிட்டு இருக்கேன்......!வந்து உட்காருங்க......!",தன்னைத் தானே கடிந்து கொண்டவள்.....அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள்.
கண்ணீருடன் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவளைக் காதலுடன் நோக்கியவன்,"என் மேல இவ்வளவு காதலை வைச்சுக்கிட்டு.....என்கிட்ட சொல்லாம ஏண்டி மறைச்ச.......?",ஆற்றாமையோடு அவன் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"என்னை வேற என்னதான் பண்ணச் சொல்றீங்க ஆது......?உங்களுடைய காதலைப் பார்த்து.....நான் உங்க பக்கம் சாயும் போதெல்லாம்.....என் அப்பா என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை குறுக்கே வந்து.....உங்களை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாம தடுத்திருச்சு......!ஆனால்......இப்போ.....",அதற்கு மேல் பேச முடியாமல் பெற்றவர்களின் நினைவில் அவள் கண்கலங்க,
"ஆனால்.....இப்போ என்னுடைய காதல் விஸ்வரூபம் எடுத்து உன் முன்னாடி இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்து எறிஞ்சிட்டு.....உன்னை வந்து அடைஞ்சிருச்சு......!",என்று முடித்து வைத்தான் ஆதித்யன்.
"உண்மைதான் ஆது.......!உங்க காதலுக்கு முன்னாடி நான் பலவீனமாகிடறேன்......!ஆனால்.....என் அம்மா அப்பாவுக்குத் துரோகம் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது......!",என்ன முயன்றும் தன் கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் தடுக்க முடியவில்லை.
இடது கையால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,"ப்ச்......!இங்கே பாரு பேபி.....!உன்னோட இந்த குற்ற உணர்ச்சிக்கு அவசியமே இல்ல......!உன் அம்மா அப்பா சம்மதத்தோடதான் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்......!இதுல.....நீ ஃபீல் பண்ண என்ன இருக்கு.....?என்னுடைய காதல் உன்னை சரிக்கட்டின மாதிரி.....நம்மளுடைய காதல் உன் பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சிடும்......!ஒகே வா......?",குறும்பாக அவள் தலை முடியை கலைத்து விட்டவன்,
பின் தீவிரமான குரலில்,"இனி நீ நம் காதலைப் பத்தி மட்டும்தான் யோசிக்கணும்.......!இந்த ஆதித்யனோட பொண்டாட்டி இனி எதுக்காகவும் அழக்கூடாது......!இந்த மாதிரி குற்ற உணர்ச்சி....நம்பிக்கைத் துரோகம்ன்னு பினாத்திக்கிட்டு இருக்கறதை விட்டுட்டு......என்னை லவ் பண்ற வேலையை மட்டும் பாரு......!மத்த எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்......!",என்றான்.
அவனுடைய வார்த்தையில் நித்திலாவின் மனம் அமைதியடைந்தது.குறும்பாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,"சரிங்க சார்......!இனிமேல் என்னுடைய ஃபுல் டைம் ஜாப்.....என் ஆதுவை காதலிக்கறது மட்டும்தான்.......!",
"ஹ்ம்ம்.....தட்ஸ் மை குட் பேபி.......!இப்போ.....இந்த விஷயத்தை கொண்டாடலாமா......?",என்றபடி அவன் அவளருகில் நெருங்கி அமர,
"முதல்ல உங்க காயம் ஆறட்டும்......!அதுக்கு அப்புறம் நம்ம கொண்டாட்டத்தையெல்லாம் வைச்சுக்கலாம்......!",தள்ளி அமர்ந்தபடி அவன் கையைப் பிடித்துக் கட்டுப் போட ஆரம்பித்தாள் அவள்.
"இட்ஸ் நாட் ஃபேர் பேபி......!",அவன் சின்னக்குழந்தை போல் அடம் பிடிக்க,
அவளோ அதை கண்டுகொள்ளாமல்,"நான் போய் உங்களுக்கு டின்னர் எடுத்துட்டு வர்றேன்......!",என்றபடி நழுவி விட்டாள்.
ஆதித்யனுக்கு கையில் காயம் இருந்ததால்.....நித்திலாவே அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட.....அந்த அராஜகக்காரன் சாப்பாட்டை மட்டும் விழுங்கினானா......?இல்லை.....அவளது விரல்களையும் சேர்த்து விழுங்கினானா.....?என்பது அந்தக் காதலர்களுக்கு மட்டுமேயான ரகசியம்......!
அதன்பிறகு.....இருவரும் இரவு வெகு நேரம் வரைக்கும் பேசிக் கொண்டிருந்தனர்.அவள் சிறுவயதில் மரம் ஏறி மாங்காய் பறித்த கதையை ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய வரலாறு மாதிரி கூற......அந்தக் காதல்காரனும்.....'ஓ.....அப்படியா.....!எத்தனை மாங்காய் பறிச்ச.....?',என்று கர்மசிரத்தையாய் கேட்டுக் கொண்டான்.
பதிலுக்கு அவன் ஏதோ மொக்கை ஜோக்கை சொல்ல......அவள் ஏதோ வடிவேல் காமெடியைப் பார்த்தது போல் விழுந்து விழுந்து சிரித்து வைத்தாள்....!இதுபோல.....'ஸ்வீட் நத்திங்ஸ்.....!' காதலில் சகஜமல்லவா......?
அகம் தொட வருவான்....!!!
அவன் கையிலிருந்து வழிந்த இரத்தம்.....அவள் பயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட,"ப்ளீஸ் ஆது......!காயத்திலிருந்து இரத்தம் வருது.....!என்னைக் கவனிக்க விடுங்க......!",கைகூப்பி கெஞ்சினாள் அவள்.
"அதுதான் உன் வார்த்தையால.....என்னை உயிரோட கொன்னுட்டியே.....?இதுக்கு அப்புறமும்....காயத்துக்கு மருந்து போட்டால் என்ன......?இல்ல.....போடாட்டிதான் என்ன.....?",ஒவ்வொரு வார்த்தையும் வேதனையில் மூழ்கி வெளிவந்தன.
அவன் கண்களில் தெரிந்த அடிபட்ட வலியில்.....அவள் பேச்சு வராமல் நின்று விட்டாள்.கண்களில் வழிந்த கண்ணீருடன் அவனைப் பார்த்திருந்தாள்.
"என் காதலை எப்போத்தான் டி புரிஞ்சுக்க போற......?ச்சே......!நான் ஒரு பைத்தியக்காரன்.......!நீ இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும்.....உன்கிட்ட வந்து காதல்......அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருக்கேன்......!உன் லாங்குவேஜ்ல சொல்லணும்ன்னா......இது காதல் இல்ல......!இதுக்கு பேர் உடல் இச்சை......!அப்படித்தானே.......?",அமைதியாகக் கேட்டவன் அருகிலிருந்த ஒற்றை சோபாவை எட்டி உதைக்க.....அது சுவற்றில் மோதி தலைகுப்புற விழுந்தது.
அவனுடைய கோபத்தில் உடல் தூக்கி வாரிப் போட.....பக்கத்திலிருந்த சுவற்றோடு ஒண்டிக் கொண்டாள்.
"என்னடி சொன்ன......?என்னுடைய உடல் பசிக்காக உன்னை நெருங்கினேனா......?எனக்குத் தேவை உன்னுடைய உடம்புதான்னு நான் நினைச்சிருந்தா.....நான் உன்னை சந்திச்ச அடுத்த நாள்.....நீ என் பெட்ரூம்ல இருந்திருப்ப......!இந்த ஆதித்யன் நினைச்சா.....எதையும் சாதிப்பான்......!",
உன்னை சந்திச்சு.....காதல்ல விழுந்து.....கோயம்புத்தூர்ல இருந்த உன்னை.....சென்னைல்ல இருக்கிற என் ஆபிஸ் வரைக்கும் வரவழைச்ச என்னால.....என் படுக்கையறைக்கா உன்னை வரவழைச்சிருக்க முடியாது......?ஒரு நிமிஷம் போதும் டி.......!சொடக்கு போடற நேரத்துல.....வேலையை முடிச்சிட்டுப் போய்ட்டே இருந்திருப்பேன்......!இதோ......இப்பக் கூட.....நீ சொன்ன என்னுடைய உடல் இச்சையைத் தீர்த்துக்கிறதுக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது......பார்க்கறியா......?நடத்திக் காட்டட்டுமா......?",வெறி பிடித்தவன் போல அவளருகில் நெருங்கியவன்.....அவளது மிரண்ட விழிகளில் எதைக் கண்டானோ....."ச்சே......!",என்றபடி பக்கத்திலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.
அவள் முகத்தைக் கூடப் பார்க்க பிடிக்காதவனாய்.....அவனை விட்டுத் தள்ளி நின்றவன்,"ஆனால்.....நான் அப்படி பண்ண மாட்டேன் டி......!ஏன்னா.....நான் உன்னைக் காதலிக்கிறேன்.....!",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாய் மாறியது என்னவோ உண்மைதான்......!
தன் கண்களில் வழிந்த நீரைக் கூடத் துடைக்காமல்.....அவன் வார்த்தைகளில் கட்டுண்டிருந்தாள் நித்திலா.
"உன்னால எப்படி டி இப்படியெல்லாம் பேச முடிஞ்சுது......?நீ இந்தளவுக்கு என் காதலை அவமானப்படுத்தினதுக்கு அப்புறமும்.....நான் உன்னைத் தொட்டேன்னா.....அது என் காதலுக்கு அசிங்கம்......!என் காதலுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்......!"
ஆற்றாமையோடு தன் தலையைக் கோதியவன்,"அது எப்படி டி......?என் கண்கள்ல வழிஞ்ச காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா......?என்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்ட காதலை உன்னால உணர முடியலையா.....?நான் உன்னைக் காதலிச்சேன் டி......!உன்னை......உன் மனசை காதலிச்சேன்......!காதலிக்கிறேன்......!என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நீ வேணும்ன்னு நினைச்சேன்.......!ஆனால்.....நீ......",என்று புலம்பியவன்,
"எனக்கு இங்க வலிக்குது டி...... !",தன் இதயம் இருந்த பகுதியைத் தொட்டுக் காட்டியவன்,
"நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும்.....என்னைக் கொல்லுது டி.....!இப்படிக் கொஞ்ச கொஞ்சமா என்னைக் கொல்றதுக்கு.....நீ ஒரேயடியா என்னைக் கொன்னு.....!",அந்த வார்த்தையை அவன் முடிப்பதற்கு முன்பாகவே.....ஓடிச் சென்று அவன் வாயைப் பொத்தியவள்,
"நோ ஆது......!அந்த வார்த்தையை சொல்லாதீங்க......!அதைக் கேட்கிற சக்தி எனக்கு இல்ல.....!அன்னைக்கு நீங்க என்கிட்ட சவால் வீட்டீங்களே....'உன் வாயாலேயே ஐ லவ் யூ ஆது....'ன்னு சொல்ல வைக்கிறேன்னு.....இப்போ சொல்றேன்.....ஐ லவ் யூ ஆது.....!ஐ லவ் யூ......!நீங்க இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்கிற அளவுக்கு ஐ லவ் யூ......!",அவன் கண்களைப் பார்த்துக் கதறியவளின் கண்களில் அப்படியொரு காதல் தெரிந்தது.....!
அவனோ....கொஞ்சம் கூட அசையாமல் கல்லுப் பிள்ளையார் மாதிரி நின்றிருந்தான்.அவன் முகத்தில் இருந்த கடினம் சிறிது கூட இளகவில்லை.
அவன் சட்டைக் காலரைப் பற்றியவள்,"ஐ யம் ஸாரி ஆது......!உங்க அருகாமையில மயங்கற மனசையும்....உடம்பையும் கட்டுப்படுத்த தெரியாம....என் மேலேயே எனக்கு வந்த கோபத்தை உங்க மேல காட்டிட்டேன்......!எவ்வளவு கொடுமையான வார்த்தையை உங்களைப் பார்த்து சொல்லிட்டேன்......!உங்க காதலை நான் கொச்சைப்படுத்திட்டேன்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது......!",அவன் மார்பில் முகம் புதைத்து அவள் கதற......அவன் அப்பொழுதும் அமைதியாகத்தான் இருந்தான்.அவன் முகத்தில் வேதனை கலந்த நிம்மதி நிலவியது......!
தன் கண்களைத் துடைத்துக் கொண்டு......அவன் மார்பிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தியவள்.....அவன் சட்டைக் காலரை பற்றியபடி,"என்ன கேட்டீங்க......?உங்களுடைய காதல் என்னைப் பாதிக்கலையான்னுதானே கேட்டீங்க.......?பாதிச்சது.....!உங்களுடைய காதல்.....உங்க கண்கள்ல நான் பார்த்த காதல்.....என்னுடைய மனசை புயலா சுழற்றியடிச்சு உங்க காலடில கொண்டு வந்து போட்டுச்சு......!
நீங்க ஒவ்வொரு முறை என்னை நெருங்கும் போதும்.....உங்களைப் பிடிக்காத மாதிரி விலக்கித் தள்ளறதுக்கு.....என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்......!நீங்க என் மேல வைச்சிருக்கிற காதலுக்கும்.....என் அப்பா அம்மா என் மேலே வைச்சிருக்கிற நம்பிக்கைக்கும் இடையில மாட்டிக்கிட்டு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்......!
இந்த பக்கமும் போக முடியாம.....அந்தப் பக்கமும் நிலைச்சு நிற்க முடியாம.....ஒவ்வொரு நிமிஷமும் அணு அணுவா செத்துக்கிட்டு இருக்கேன் ஆது......!",அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள்.....தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.
"நான் ஒண்ணும் ஜடம் இல்ல ஆது......!நானும் மனுஷிதான்......!அதுவும் எல்லா உணர்ச்சிகளும் நிறைஞ்ச சாதாரண மனுஷி......!உங்க மேல கொள்ளை கொள்ளையா காதலை வைச்சிருக்கிற சாதாரண மனுஷி......!உங்களை இவ்வளவு நெருக்கத்துல பார்க்கும் போதும்.....நீங்க ஒவ்வொரு முறையும் என்னை முத்தமிட நெருங்கும் போதும்.....என் மனசுல ஏற்படற மாற்றத்தையும்.....என் உணர்ச்சிகளோட கொந்தளிப்பையும் என்னால மட்டுமே புரிஞ்சுக்க முடியும்......!நான் போட்டு வைச்சிருந்த அத்தனை வேலிகளையும் உடைச்சிட்டு.....நீங்க என் மனசைத் தொட்டு ரொம்ப நாளாச்சு ஆது.......!",தன் மன உணர்வுகளை மிக அழகாக அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் அவனுடைய காதலி.....!
அவன் கண்களை தனது விழிகளால் சிறையிட்டவள்,"என்னுடைய காதல்.....உங்க மீதான என்னுடைய தேடல்.....எப்படிப்பட்டதுன்னு இப்போ புரிஞ்சுக்குவீங்க......!",உறுதியான குரலில் உரைத்தவள்.....அடுத்த நொடி.....அவன் உயரத்திற்கு தன் கால்களை எக்கி.....அவன் இதழ்களைத் தனது இதழ்களால் பிணைத்திருந்தாள்.
முதல் முத்தம்......!தன்னவனுக்காக அவனுடையவள் கொடுக்கும் முதல் இதழ் முத்தம்......!உயிர்க் காதலில்.....இரு உள்ளங்கள் மூழ்கி முத்தெடுக்கும் ஒரு சுப உற்சவம்....இந்த உயிர் முத்தம்.....!
தன் உயிரை உருக்கி.....அதை தன் உணர்வுகளோடு கலந்து.....இந்த முத்தத்தின் வாயிலாக அவனுக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு.....தட்டுத் தடுமாறி இந்த முத்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தாள் நித்திலா.
அவளுடன் கரம் கோர்த்து.....அந்த முத்த யுத்தத்தில் சரிசமமாய் பங்கு கொள்ள வேண்டியவனோ......'நீ என்னவோ செய்து கொள்......!', என்பது போல் அமைதியாய் நின்றிருந்தான்.
சொல்லிக் கொடுக்க வேண்டியவன்.....அமைதியாக நிற்க.....கற்றுக் கொள்ள வேண்டிய அந்தப் பாவையோ......'நீ சொல்லிக் கொடுக்கா விட்டால் என்ன......?', என்று துணிந்து அதிரடியாய் களத்தில் இறங்கியிருந்தாள்.
ஆதித்யனின் முகத்தில் அத்தனை நிம்மதி விரவியிருந்தது.....!கண்களை மூடி அவள் இஷ்டத்திற்கு.....தனது உதடுகளை கொடுத்திருந்தவனின் முகத்தில் எல்லையற்ற காதல் தெரிந்தது.....!இத்தனை நாட்களாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனுடைய காதல்......அதனிடம் வந்து அடைந்ததைப் போல் உணர்ந்தான் ஆதித்யன்.
சற்று முன் வார்த்தைகளால் அவன் காதலை குத்திக் கிழித்து ரணமாக்கியிருந்தவள்.....அதனால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தன் இதழ்களால் மருந்திட்டாள்.....!அவள் தன் இதயத்தைத் திறந்து.....'அனைத்தும் நீயே.......!', என்று சரணடைந்த அந்த நொடி......அவன் உயிர்த்தெழுந்தான்......!அவன் மனதில் இருந்த சஞ்சலமும்.....வேதனையும்.....கோபமும் மறைந்து மாயமாகியிருந்தன.....!
தன் காதலை அவமானப்படுத்தியவளே.....தன் காதலுக்கான அங்கீகாரத்தையும் அளித்து விட்டதில் அவன் மனம் ஆழ்கடலை போல் அமைதியானது....!
இருந்தாலும் அவன்.....அவள் முத்தத்திற்கான பதில் முத்தத்தை அவள் இதழ்களில் வரையவில்லை.கண்களை மூடிக் காதலுடன்......அவள் இதழ்களின் மென்மையில் கரைந்து கொண்டிருந்தான்.....!தானே காதலுடன் முன் வந்து கொடுக்கும் தன்னவளின் முதல் இதழ் முத்தம் அல்லவா.....?எனவே.....அந்த யுத்தத்தைத் தனதாக்கிக் கொள்ளாமல்.....தன் காதலியின் இஷ்டத்திற்கு விட்டிருந்தான் அந்தக் காதலன்.....!
என்னதான் அந்தக் காரிகை துணிந்து களத்தில் இறங்கி விட்டாலும்......அவளுக்கும் இது முதல் முத்தமல்லவா......!எங்கே ஆரம்பிப்பது.....எங்கே முடிப்பது.....என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி.....முட்டி மோதிக் கொண்டிருந்தாள் அந்தக் கட்டழகி.....!
தன்னவளின் தடுமாற்றத்தைப் மனதிற்குள் சிறு புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தவனின் உதடுகள்.....அவள் தடுமாற்றத்தைப் போக்கி.....அந்த முத்த யுத்தத்தின் வெற்றியின் ரகசியத்தை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று பரபரத்தது.....!
ஆனால்.....காதல் கொண்ட மனமோ.....'வேண்டாம்.....!இப்படியே கண்ணை மூடி.....அவள் இதழ்களில் காதலோடு கரைந்து போ......!', எனக் கட்டளையிட்டது.....!அந்த ஆறடி ஆணழகனும் காதலின் முன் மண்டியிட்டு.....அது இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான்.....!
ஒருவழியாக மூச்சுக் காற்றுக்காக.....அவன் உதடுகளிலிருந்து தன் இதழ்களைப் பிரித்தெடுத்தவளை நாணம் வந்து கட்டிக்கொள்ள.....அவன் முகம் பார்க்க வெட்கி.....அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.எல்லையில்லா நிம்மதியுடன் தன்னவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை.....வேட்கையோடு அவளை நாடியவன்.....இப்பொழுது.....காதலுடன் அவளை அணைத்திருந்தான்.....!
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ.....தெரியவில்லை.....!திடீரென்று நித்திலாவிற்கு அவனுடைய கைக்காயம் உரைக்க.....சட்டென்று அவன் மார்பில் இருந்து தன் முகத்தை விலக்கியவள்,"உங்களுடைய காயம்......?",பதைபதைத்தபடியே அவன் உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள்.
சில்லு சில்லாய் சிதறியிருந்த கண்ணாடி.....அவனுடைய வலது உள்ளங்கை முழுவதையும் புண்ணாக்கி இரத்தக் காயத்தை ஏற்படுத்தியிருந்தது.அவன் காயத்தைக் கண்டவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் நதி பெருக்கெடுத்தது.
"எல்லாம் என்னாலதான்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது.....!",அவள் தேம்ப,
"ப்ச்......!பேபி......!முதல்ல அழறதை நிறுத்து......!இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது......!",மென்மையாக கடிந்து கொண்டான் ஆதித்யன்.
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,"உங்க காயத்துக்கு மருந்து போடாம.....நான் பாட்டுக்கு அழுதுக்கிட்டு இருக்கேன்......!வந்து உட்காருங்க......!",தன்னைத் தானே கடிந்து கொண்டவள்.....அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள்.
கண்ணீருடன் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவளைக் காதலுடன் நோக்கியவன்,"என் மேல இவ்வளவு காதலை வைச்சுக்கிட்டு.....என்கிட்ட சொல்லாம ஏண்டி மறைச்ச.......?",ஆற்றாமையோடு அவன் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"என்னை வேற என்னதான் பண்ணச் சொல்றீங்க ஆது......?உங்களுடைய காதலைப் பார்த்து.....நான் உங்க பக்கம் சாயும் போதெல்லாம்.....என் அப்பா என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை குறுக்கே வந்து.....உங்களை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாம தடுத்திருச்சு......!ஆனால்......இப்போ.....",அதற்கு மேல் பேச முடியாமல் பெற்றவர்களின் நினைவில் அவள் கண்கலங்க,
"ஆனால்.....இப்போ என்னுடைய காதல் விஸ்வரூபம் எடுத்து உன் முன்னாடி இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்து எறிஞ்சிட்டு.....உன்னை வந்து அடைஞ்சிருச்சு......!",என்று முடித்து வைத்தான் ஆதித்யன்.
"உண்மைதான் ஆது.......!உங்க காதலுக்கு முன்னாடி நான் பலவீனமாகிடறேன்......!ஆனால்.....என் அம்மா அப்பாவுக்குத் துரோகம் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது......!",என்ன முயன்றும் தன் கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் தடுக்க முடியவில்லை.
இடது கையால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,"ப்ச்......!இங்கே பாரு பேபி.....!உன்னோட இந்த குற்ற உணர்ச்சிக்கு அவசியமே இல்ல......!உன் அம்மா அப்பா சம்மதத்தோடதான் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்......!இதுல.....நீ ஃபீல் பண்ண என்ன இருக்கு.....?என்னுடைய காதல் உன்னை சரிக்கட்டின மாதிரி.....நம்மளுடைய காதல் உன் பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சிடும்......!ஒகே வா......?",குறும்பாக அவள் தலை முடியை கலைத்து விட்டவன்,
பின் தீவிரமான குரலில்,"இனி நீ நம் காதலைப் பத்தி மட்டும்தான் யோசிக்கணும்.......!இந்த ஆதித்யனோட பொண்டாட்டி இனி எதுக்காகவும் அழக்கூடாது......!இந்த மாதிரி குற்ற உணர்ச்சி....நம்பிக்கைத் துரோகம்ன்னு பினாத்திக்கிட்டு இருக்கறதை விட்டுட்டு......என்னை லவ் பண்ற வேலையை மட்டும் பாரு......!மத்த எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்......!",என்றான்.
அவனுடைய வார்த்தையில் நித்திலாவின் மனம் அமைதியடைந்தது.குறும்பாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,"சரிங்க சார்......!இனிமேல் என்னுடைய ஃபுல் டைம் ஜாப்.....என் ஆதுவை காதலிக்கறது மட்டும்தான்.......!",
"ஹ்ம்ம்.....தட்ஸ் மை குட் பேபி.......!இப்போ.....இந்த விஷயத்தை கொண்டாடலாமா......?",என்றபடி அவன் அவளருகில் நெருங்கி அமர,
"முதல்ல உங்க காயம் ஆறட்டும்......!அதுக்கு அப்புறம் நம்ம கொண்டாட்டத்தையெல்லாம் வைச்சுக்கலாம்......!",தள்ளி அமர்ந்தபடி அவன் கையைப் பிடித்துக் கட்டுப் போட ஆரம்பித்தாள் அவள்.
"இட்ஸ் நாட் ஃபேர் பேபி......!",அவன் சின்னக்குழந்தை போல் அடம் பிடிக்க,
அவளோ அதை கண்டுகொள்ளாமல்,"நான் போய் உங்களுக்கு டின்னர் எடுத்துட்டு வர்றேன்......!",என்றபடி நழுவி விட்டாள்.
ஆதித்யனுக்கு கையில் காயம் இருந்ததால்.....நித்திலாவே அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட.....அந்த அராஜகக்காரன் சாப்பாட்டை மட்டும் விழுங்கினானா......?இல்லை.....அவளது விரல்களையும் சேர்த்து விழுங்கினானா.....?என்பது அந்தக் காதலர்களுக்கு மட்டுமேயான ரகசியம்......!
அதன்பிறகு.....இருவரும் இரவு வெகு நேரம் வரைக்கும் பேசிக் கொண்டிருந்தனர்.அவள் சிறுவயதில் மரம் ஏறி மாங்காய் பறித்த கதையை ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய வரலாறு மாதிரி கூற......அந்தக் காதல்காரனும்.....'ஓ.....அப்படியா.....!எத்தனை மாங்காய் பறிச்ச.....?',என்று கர்மசிரத்தையாய் கேட்டுக் கொண்டான்.
பதிலுக்கு அவன் ஏதோ மொக்கை ஜோக்கை சொல்ல......அவள் ஏதோ வடிவேல் காமெடியைப் பார்த்தது போல் விழுந்து விழுந்து சிரித்து வைத்தாள்....!இதுபோல.....'ஸ்வீட் நத்திங்ஸ்.....!' காதலில் சகஜமல்லவா......?
அகம் தொட வருவான்....!!!