Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL ஒழுகும் நிலவு வழியும் இரவு - Tamil Novel

Status
Not open for further replies.
ஒழுகும் நிலவு 22

மயங்கும் மாலை
மல்லிகை வாசம்
மலர்ந்த மொட்டு
மூச்சின் வெட்பம்
வெட்கம் நான்
தீர்க்க நீ!!!

அமரா ஒரு வாரமாக நைந்து போன மலராய் இருந்தாள். அனிச்சமும் மலரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். மலரின் கணவன் அனைத்துத் தகவல்களையும் கொடுத்ததால், இவர்களால் அமராவை பாதுகாக்க முடிந்தது. தேவர் பிள்ளையின் ஆட்களுடன் சேர்ந்து அமராவைத் தேடுவது போல் அவர்களைத் திசைத் திருப்பியும் விட்டான். ஒரு கட்டத்தில் தேவர் பிள்ளைக்கு இதில் விருப்பம் இல்லை என்றும், அவர் குடும்பம், அவர் வாரிசு என்று வந்தவுடன் அவர் மாறிவிட்டார் என்று கூட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, பலரின் மனதில் சந்தேக விதையை விதைத்தான்‌. அனைத்துப் பெண்களும் அமரா கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டனர்.

அமராவுக்கு பிள்ளைப் பேறு வலி எடுத்தது‌. மலர் அருகில் இருந்து வேண்டிய அனைத்தும் செய்தாள். அனிச்சம் அவளுக்கு உதவியாக இருந்தாள்‌. அமராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அனிச்சம் விழிகளில் நீர் கோர்த்து நின்றிருந்தாள்‌. எத்தனை பெரிய தவம் இது. அவர்கள் உலகில் இந்த வரம் கிடைக்க, எத்தனை திட்டங்கள். மனிதனாய்ப் பிறப்பது மாதவம் இல்லை. ஒரு மனிதனை ஈன்றெடுப்பது மாதவம் அவர்கள் உலகைப் பொறுத்தவரை.

அமரா கத்தியதில் அந்த அறையே‌ அதிர்ந்தது. பல வருடங்களாக, தன் வயிற்றுக்குள் பொத்தி வைத்திருந்த முத்தை உதிர்த்த சிப்பியின் ஓடுகள் அயர்ந்து போகும். அமராவின் நிலையும் அதுவாகவே இருந்தது.

அதன் பிறகு அமரா அமைதியாகவே இருந்தாள். நளன் அவ்வளவாக அவள் முன் வருவதில்லை. அனிச்சத்தை அவ்வப்பொழுது பார்த்தாலும் அவளுடன் உரையாடவில்லை அமரா.

நளன் தீவிர சிந்தனையுடன் இருக்க, அனிச்சம் அவனிடம் வந்து உரையாடினாள்.

"நளன், இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?"

"என்ன செய்யணும்னு சொல்ற."

"அமராவைப் பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க."

"யோசிக்க என்ன இருக்கு."

"என்ன விளையாடுறியா?"

"அனி, என்னனு தெளிவா பட்டுன்னு கேளு. எனக்கு உண்மையாவே புரியல."

"நீ தான் புரியாம‌ பேசுற. இல்லை புரியாத மாதிரி நடந்துக்குற. அமராவை நம்மளோட கூட்டிட்டுப்‌ போறதைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க."

"கூட்டிட்டு போறோம்னு எப்போ முடிவு செஞ்சோம்."

"நளன், என்னோட பொறுமையை சோதிக்காத. இங்க எப்படி விட்டுட்டு போறது. புருஷன் இல்லைன்னு இவுங்க எல்லாம் எப்போ வேணாலும் அவளைக் கொல்லலாம்."

"அதுக்கு இங்க உள்ள சூழல் மாறணும். நாம கூட்டிட்டு போறது தீர்வு கிடையாது."

"ஏன் நளன் இவ்ளோ சுயநலமா பிடிவாதமா இருக்க. அமரா பாவம்" என்று அவள் கூறியதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.

"அனி, நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். இயற்கையை மாத்தி எழுதுறது நல்லதில்லை. என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடக்கும்."

"இதுக்கு பேரு நிறைய இருக்கு."

"என்ன?" என்றான் புருவம் சுழித்து.

"கையாலாகாத்தனம், பொறுப்பில்லாத்தனம்" என்று அவள் கூற, அவன் பற்களை நறநறவென்று கடித்தான்.

"நிறுத்திடி... நானும் பாத்துட்டே இருக்கேன்‌. எல்லாமே உன் இஷ்டப்படி நடக்கணும்னு நினைக்கிற" என்று கத்தியவன், தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு, "சரி, அமராகிட்ட போய் கேளு. நம்ம கூட அவ வந்தா கூட்டிட்டு போகலாம்" என்றான்‌ பொறுமையாக.

"அமரா நிச்சயம் சரின்னுதான் சொல்லுவா. அவளுக்கு இரண்டு குழந்தையைக் காக்கும் பொறுப்பு இருக்கு" என்றாள் அனிச்சம்.

"சரி வா.. நானும் வரேன்.. நீ போய் கேளு" என்றான்.

இருவரும் உள்ளே சென்றனர்.

அமரா குழந்தையை வைத்துக் கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தாள். குழந்தையின் செப்பு இதழ்களில் மெல்லிய சிரிப்பு ஒன்று உதிர்ந்தது. அதில் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள். அந்த இதழ்களை நடுங்கும் கரங்களுடன் வருடினாள். தன் கணவனின் மறுப் பிரதியாய் இருந்த குழந்தை அவளுக்கு வரமே. வாழ வேண்டும் என்ற பிடிப்பினைக் கொண்டு வந்தது.

அறைக்குள் இருவர் வந்தது கூட அவள் மூளைக்கு எட்டவில்லை.

"அமரா" என்று அழைத்தாள் அனிச்சம்.

அமரா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். இதுவரை அவர்கள் இருவரிடமும் வார்த்தைகளை எண்ணிக்கையிலே உதிர்த்திருக்கிறாள். ஆம், இல்லை... அதுவும் இல்லையென்றால் ஒற்றை வார்த்தையில் பதில். அவ்வளவே. இது அவள் இயல்பில் பொறுந்தாதது. செழியனுடன் உரையாடிக் கொண்டே இருப்பாள். பேசி பேசியே செழியனைக் கரைத்தவள் ஆயிற்றே.

இப்பொழுதும் அனிச்சம் அழைத்ததற்கு, "சொல்லுங்க" என்றாள் ஒற்றை வார்த்தையில்.

"அமரா... உங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை. நாங்க எப்போ எங்க உலகத்துக்கு போவோம்னு தெரியாது. ஆனா நாங்க போகும் போது உங்களையும் நிச்சயம் கூட்டிட்டு போவோம்" என்று அனிச்சம் கூற, அமரா மறுத்தாள்.

அனிச்சத்திற்கு சற்று அதிர்ச்சிதான். அமரா ஏன் மறுக்க வேண்டும் என்று.

"ஏன்?"

"நான் இங்கதான் இருக்கணும். என் கணவன் உருவாக்க நினைச்ச சமூகத்தை உருவாக்கணும். அதில் என்னோட குழந்தை வளரணும்" என்றாள். மிக நீண்ட வாக்கியம். இதுவரை பேசியதில்லை.

"ஆனா எப்படி?" என்றான் நளன். அவன் இதுவரை அவளிடம் நேரடியாகப் பேசியதில்லை. இதுவே முதல்முறை.

"எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சுட்டீங்க. போதும். இன்னும் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யணும்" என்றாள் அவள்.

"நிச்சயமா" நளன்.

"தயவு செஞ்சு என் முன்னாடி நீங்க வராதீங்க. கொஞ்சம் கொஞ்சமாய் நான் சிரமப்பட்டு திடப்படுத்துற மனசு, உங்களைப் பார்த்த அடுத்த நொடி, சரிஞ்சு விழுந்திருது. என்னோட செழியனை நீங்க ரொம்ப ஞாபகப்படுத்துறீங்க?"

"செழியனை உங்களால மறக்க முடியுமா?" அனிச்சம்.

"செழியனை மறக்க முடியாது. அவர் எனக்குள்ள இருக்கார். ஆனா நளனைப் பார்க்கும் போது வாழ்ககையோட ஏக்கங்கள் வரிசைக்கட்டி நிக்கிது. அதை எதிர்த்து நான் வெளில வரணும்னு நினைக்கிறேன். அது சிதைஞ்சு போகுது நான் இவரைப் பார்க்கும் போது."

அவளின் இந்த கண்ணோட்டத்தில் அனிச்சம் அதிர்ச்சியடைந்தாள். உண்மையில் அவளுக்கு இப்படி ஒரு கோணம் இருப்பது விளங்கவில்லை. சில உணர்வுகளைக் கடந்து வந்தால் மட்டுமே பிறழ்ச்சி கோணம் தென்படும். அமரா அனுபவித்ததை அனிச்சம் உணர வாய்ப்பில்லை. அமராவுக்கு இனியாவது போராட்டம் இல்லாத வாழ்வு கொடுக்க நினைத்தாள் அனிச்சம். ஆனால் இந்த போராட்டத்தில் தான் என் வாழ்க்கையே இருக்கிறது என்று நிற்கிறாள் அமரா.

இந்த விடயத்தில் நளனின் நிராகரிப்பு கோவத்தைக் கொடுத்தது அனிச்சத்திற்கு. ஆனால் அமராவின் நிராகரிப்பு சிந்தனையைத் தூண்டியது.

அமரா அப்படி ஒரு கூற்றை வைக்கவும் அங்கு சில நொடிகள் அமைதி நிலவியது.

"இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கோங்க. ஏனா உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பத்தி பேசணும்" என்றான் நளன்.

"சரி சொல்லுங்க" அமரா. அனிச்சம் அமைதியாகிவிட்டாள்.

"உங்களை அழைச்சிட்டு போறதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அனிச்சம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அது. மேலும் அது சாத்தியப்படுமானே தெரியலை. நாங்க எப்போ போவோம்னும் தெரியல. ஆனா என்ன நடந்தாலும் உங்களோட பாதுகாப்பை உறுதி செய்யாமல் போகக்கூடாது. அதுக்கு சில விஷயங்கள் யோசிச்சு வச்சிருக்கேன்" என்றவனை கேள்வியாக பார்த்தாள் அமரா.

"நாங்க ஏன் இந்த விஷயத்தில் இவ்ளோ தலையிடணும்னு நீங்க நினைக்காதீங்க. நாங்க இங்க வந்ததுக்கு காரணமே, செழியன் இறந்த சம்பவம்தான். ஒருவனின் மீள முடியா துயரின் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலக்கும் போது, அது இன்னொரு உலகத்தில் இருக்கும் என்னைப் பாதிக்கிது‌. அதனால நாங்க இங்க வந்தது எதார்த்தமான ஒன்று இல்லை. ஆனா இங்கிருந்து போகும் போது கொஞ்சம் நிம்மதியா போகணும்னு நினைக்கிறோம்" என்றான் தெளிவாக.

"உதவி செய்ய நினைக்கிறது தப்பில்லை. ஆனா எப்படி செய்ய முடியும். நீங்க உங்க உலகத்துக்கு போற வரை இங்க யார் கண்ணிலும் படக்கூடாது" என்றாள் அமரா.

"அப்படி யாராவது பார்த்தா என்ன நடக்கும்?" என்று‌ அவன் கேட்க, திடுக்கிட்டனர் அனைவரும்.

"செழியனோட ஆவியோன்னு நினைக்கலாம்" என்றாள்‌ மலர்.

அனைவரும் ‌அவளைப்‌ பார்த்தனர்.

"முதல் தடவைப் பார்க்கும் போது நானும் அப்படிதான் நினைச்சேன். அதனால ஊர்ல உள்ளவுங்களும் அப்படித்தான் நினைப்பாங்க" மலர்.

"நினைக்கட்டும்" நளன்.

"அதுல நமக்கு என்ன ஆதாயம் இருக்கு?"

"அதை‌ வச்சு உங்களுக்கு தேவையான காரியம் சாதிச்சுக்கலாம்" என்றதும் பளிச்சென விளங்கியது அமராவுக்கு.

"செழியனின் ஆவி உலவுகிறது. இனி பெண்ணிற்கு கைம்பெண் சடங்கு செய்தால், அவன் கொன்றுவிடுவான் என்ற பயத்தை உருவாக்கலாம்" என்று கூறினான்.

"அப்பறம் இன்னொரு விஷயம். ஒரு ரெண்டு வருஷம் நீங்க மறைஞ்சிருந்து வாழணும். இந்த ரெண்டு குழந்தையையும் ஒன்னா வளர்க்கணும். நீங்க இந்த உலகத்துக்கு வெளிப்படுறப்போ, செழியன் பையன் யாருன்னு யாருக்கும் தெரியக் கூடாது. கடைசி வரை. அந்த உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும்ங்கிறதால, உங்களை கொல்ல வாய்ப்பு இல்லை. காலப்போக்கில் நான் இங்க இல்லைனாலும், செழியனோட ஆவியைப் பார்த்ததா சிலர் சொல்லிகிட்டே இருக்கணும். இந்த பழக்கம் மாறும் வரை செழியனோட ஆவியும் வார்த்தையில உயிர் வாழணும்" என்றான் நளன்.

அவனின் திட்டத்தைக் கேட்ட அமரா, அவனை மெச்சும் பார்வைப் பார்த்தாள். அனிச்சம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அவனை முறைக்கவும் தவறவில்லை. என்னிடம் ஏன் கூறவில்லை என்ற கேள்வியும் அதில் இருந்தது.

"ஆனா ரெண்டு வருஷம் மறைஞ்சு இருக்கணுமா? இந்த ஊருக்குள்ள அது சாத்தியமா?" என்றாள் மலர்.

அனைவரும் சிந்தனையில் உழன்றனர். அது மிகவும் முக்கியமான ஒன்று. இது எப்படி சாத்தியம். இருண்டு குழந்தைகளுடன், மறைந்து வாழ்வது சாத்தியமா? எந்த வசதிகளும் இல்லாமல். சற்று நேர யோசனைக்கு பின் அமராவின் இதழில் மென்னகை ஒன்று உதிர்ந்தது.

"இடம் நான் கண்டு பிடிச்சுட்டேன்" அமரா.

"எங்க?" அனிச்சம்.

"அது சொல்றேன். அப்பறம்" என்றாள். சற்றே ஏமாற்றம் அனிச்சத்திற்கு.

அதன் பிறகு அனிச்சமும் நளனும் வெளியில் கிளம்ப, "அனிச்சம், ரொம்ப‌ நன்றி, என்னைக் காப்பாத்தணுங்கிற ஏக்கம் உங்க கண்ணில் தெரியிது" என்றவள், நளனிடம் திரும்பி, "செழியனோட அம்மாவை ஒரு தடவைப் பார்த்துட்டு போங்க. இன்னும் தன்னோட பிள்ளை எங்கேயோ உயிர் வாழ்ந்துட்டு இருக்காருன்னு நிம்மதியா இருக்கட்டும்" என்று கூறினாள்.

"என்னைப் பார்த்தா உங்க நம்பிக்கை சிதைஞ்சு போகுதுன்னு சொன்னீங்க?" பரவாயில்லையா?" நளன்.

"பரவாயில்லை. சிதைஞ்சு போனாலும் மீட்டெடுத்துக்குவேன்" என்றாள் நம்பிக்கையுடன்.

இப்பொழுது அவளின் பேச்சில் நம்பிக்கை வந்திருந்தது. அமராவுக்கும் நளனுக்கும் இடையில் ஒரு புரிதல் ஒன்று வந்திருந்தது.

அறையை விட்டு வெளியே சென்ற நளன் வேகமாக நடந்தான். கொள்ளைப் புரம்‌ நோக்கி வேகமாக சென்றான். அவன் பின்னே ஓடினாள் அனிச்சம். அவனின் கைகளைப் பற்றினாள். உதறிவிட்டு சென்றான் அவன்.

"நளன், ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று மீண்டும் கையைப் பிடிக்க, "பொறுப்பில்லாதவன் கையை எதுக்கு பிடிக்கிற" என்றான்.

"நளன் தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிக்கக் கூடாதா?" என்றாள்.

"முடியாது போ.." என்றான் அவன். அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டாள்.

"ப்ப்ஸ்" என்று சலித்துக் கொண்டவன் அவளை விளக்கி வைத்துவிட்டு சென்றான்.

அனிச்சம் அடுத்து ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. அவள் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. அவள் மீண்டும் வந்து கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்த நளன், அவள் வராததைக் கண்டு திரும்பிப் பார்த்தான்.

அழுது கொண்டிருந்தாள். நளன் பதறிப் போனான்.

"அனி, என்ன ஆச்சு?" என்று‌ அருகில் வந்தான்.

அவள்‌‌ அழுதுக் கொண்டே, அவனைக் கட்டிக் கொண்டாள். அதன் பிறகு அவளை சமாதானம் செய்வதே பெரும் பாடாய் போயிற்று.

அவளை‌ அமர வைத்து அவனும் அமர்ந்தான்.

"என்ன பயம் உனக்கு? ஏன் இந்த அழுகை?"

"எனக்கு பயமா இருக்கு."

"அதுதான் ஏன்?"

"இத்தனை நாள் அமராவை எனக்கு புரியலை. ஆனா அமரா‌ அளவுக்கு நான் தைரியம் கிடையாது. தெளிவும் கிடையாது. உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு" என்றாள்.

அவளின் அன்னையை இழந்த பொழுது அழுத்தமாய் இருந்தவள், அவனை இழந்து விடுவோமோ என்று அழுகிறாள். அவனுக்கு பிடித்திருந்தது உண்மையில். அதில் ஒரு சுகம் இருக்கிறதே.

அழுது அழுது மிளகாய்ப் பழமாக சிவந்திருந்து மூக்கு. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டே இருந்தாள். அவளின் இரண்டு கைகளையும் பிடித்தான் அவன். வந்த அழுகையை துடைக்க கைகளை உருவினாள்.

"அனி.. என்னைப் பாரு" என்றான் கிறக்கமான குரலில்.

அவன் குரலில் தோன்றிய பேதம் அவளின் அழுகையை நிறுத்தியது.
அவனின் நேத்திரங்கள் தொடுத்த அம்புகளை ஏற்க முடியாது தலைதாழ்த்தினாள்.

"நளன், நான் எவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு இருக்கேன்.. நீ விளையாடுற" என்று கைகளை உருவ முயற்சித்தாள்.

"நானும் உணர்ச்சி வசப்பட்டுதான் இருக்கேன்" என்றான் விஷமமாக. அவன் பார்வையும் தேடலும் வேறு பரிமாணம் அடைந்திருந்தது.

"நளன்..."

"ம்ம்ம்... சொல்லு..."

"உன்கிட்ட பேசணும்.."

"எனக்கு இப்போ பேசப் புடிக்கல.." என்று அவளின் இடையை வளைத்து, அவளை அருகில் இழுத்தான். கூச்சம் அவளை நெட்டித் தள்ளியது.

"எனக்கு இப்போவே பேசணும்.." என்றாள் கொஞ்சம் பிசிறு தட்டியக் குரலில்.

"பேசு.."

"என்னை விடு.. இப்படி இருந்தா எனக்கு பேச வராது."

"இப்படியே இருந்தா நீ பேசு.. இல்லை பேச வேண்டாம்" என்று வம்பு வளர்த்தான்.

"ஒரு அஞ்சு நிமிஷம்" என்று இடையில் இருந்த அவனின்‌ கைகளை பிரிக்க முற்பட்டாள். கைகளும் சிறைப்பட்டது. அவளின் தோள் வளைவில் முகம் புதைத்தவன், "அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் என்ன செய்யலாம்" என்று அவன் வினவ, வெட்பம் சுமந்த அவனின் மூச்சுக் காற்றில் அவள் தொய்ந்து அவன் மேலே விழுந்தாள்.

சிறிது நேரத்தில் ஒரு பறவை‌ ஒன்று குரல் கொடுக்க, இருவரும் திடுக்கிட்டனர். அதுதான் வாய்ப்பு என்று அவள் ஓரடி தள்ளி அமர்ந்தாள். அவளின்‌ இந்த செய்கையில் சற்று சப்தமாகவே நகைத்தான் நளன்.

அவளின்‌ அருகில்‌ சென்று அமர்ந்து கொண்டு, "ம்ம்ம்..‌சொல்லு" என்றான் அவள் வலகரத்தில் இடக்கரம் கோர்த்து.

"அமராவை நீ நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க."

"ம்ம்ம்... அதுக்கு?"

"ஒன்னும்‌ இல்ல.. நீ சொன்ன மாதிரி அமரா நம்ம கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாளே. அதனால சொன்னேன்".

"எனக்கு நீ பொறாமைல சொன்ன மாதிரி இருந்துச்சு."

"எனக்கு என்ன பொறாமை? அமரா அழுததைப் பார்த்து நீ கொஞ்ச நேரம் செழியனா இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்."

"அது கருணை. மனசோட மெல்லிய பாகம்."

"மனசு‌ ஒன்னுதான்."

"இல்ல... மனசுக்கு வேஷம் போடவும் தெரியும். நான் செழியனா இருக்கதை உன்னோட இன்னொரு மனசு ஏத்துக்காது."

"அப்படிலாம் இல்லை."

"அப்போ நான் இங்கயே இருக்கவா?" என்றதும் அவனை முறைத்தாள்.

ஆனால் அவள் மனதைக் கண்டு கொண்டானே அவன். அதை மறைக்க முற்பட்டாள் அவள்.

"நீ இந்த கஷ்டம் வாழ்க்கை முழுக்கப் பட முடியாது. அதான் அமராவை கூட்டிட்டு போக வேண்டாம்னு சொன்னேன். அமராவும் அழுத்தமானவ. நீ மேலோட்டமா பாக்குறப்போ தெரியாது" என்றான்.

உண்மைதான் நளன் கூறுவது. இதெல்லாம் அவள் மனதில் தோன்றவே இல்லை. நளன் இவ்வளவு தூரம் யோசித்தாருக்கிறான். அவளுக்காக. அமராவுக்காக.

நிலவு ஒழுகும்...
 
ஒழுகும் நிலவு 23

முடிவாய் பகல்
நீட்சியாய் இரவு
வானின் வர்ணம்
வடிவாய் நிலவு
ஜொலித்த வின்மீண்
ரசிக்க நீ
ருசிக்க நான்!!!



அழகாய்ப் புலர்ந்திருந்தது காலைப் பொழுது. மரமும் இல்லை. செடியும் இல்லை. குயிலும் இல்லை. மாடும் இல்லை. மடுவும் இல்லை‌. கீச்கீச் என்று கிண்கிணியாய் ஒலித்த சப்தங்கள் இன்றி நடுநிசியின் மௌனம் ஆட்கொண்டிருந்தது பகலில். அனிச்சமும் நளனும் புடவியிலிருந்து பூமிக்குப் பயணம் செய்து வந்திருந்தனர்.

ஆதிபகவன் முன்பு நின்றிருந்தனர். மீண்டும் செயற்கை உயிர்வளி. ஏனோ‌ ஒரு மனநலிவு தோன்றியிருந்தது. கைகளில் கொடுத்த அட்சயப் பாத்திரத்தை பிடிங்கியது போல் தோன்றியது.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர்களுக்குத் தெரிந்த அளவு பதில் கூறினர். ஆனால் விளக்கங்கள் அளிக்க முடியாமல் திணறிய வினாக்கள்தான் அதிகம். அவர்களுக்கு ‌மீண்டும் ஒரு வாய்ப்பு வழக்கப்பட்டது. அடுத்த நாள் வழக்கை ஒத்தி வைத்தது ஆதிபகவன்.

இருவரும் நளனின் வீட்டிற்கு வந்தனர். தீவிர சிந்தனை. அனைத்திற்கும் எப்படி விடைக் கூறப் போகிறோம் என்று மன உளைச்சல் வேறு. பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்து எழுதி, அதைக் கோர்வையாகக் கொண்டு வந்தனர். அதிலிருந்து சம்பவங்களை இணைத்து, சாத்தியமான நிகழ்வுகளைப் புனைந்தனர்.

பூமியில் தீரன் யாருக்கும் தெரியாமல் ஒரு விசித்திரமான ஆராய்ச்சியில் இறங்குகிறான். பிரபஞ்சத்தில் பல சூரியகுடும்பங்கள் இருப்பதாகவும், அதில் ஒவ்வொன்றிலும் உயிர்கள் இருக்கிறது என்று நம்புகிறான். அந்த ஆராய்ச்சிதான் நிகழ்கிறது. இதே போல் வேறு ஒரு உலகத்தில் இருக்கும் தீரனும் இதே ஆராய்ச்சியைச் செய்ய முனைகிறான்.

இங்குப் பூமியில் ஆராய்ச்சி நிகழும் பொழுது அவனைக் காண திரவியம் மற்றும் அவனுடைய நண்பன் இருவரும் வருகின்றனர். திரவியம் அவரின் நண்பனை உள்ளுக்குள் சென்று காத்திருக்குமாறு கூறினான். அவர்கள் வந்த வண்டி பழுதாகிட,‌ அதைச் சரி பார்த்தார் திரவியம். திரவியம் சற்று நேரத்தில் உள்ளே சென்று பார்க்கும் பொழுது அவரின் நண்பர் கீழே விழுந்து கிடந்தார். அதைக் கண்டதும் தீரனுடன் தகராறு. அவரைப் பரிசோதித்துப் பார்க்க, அவர் உயிரோடு இல்லை என்று தெரியவந்தது. தீரன் ஒரு ஆராய்ச்சியில் இருப்பது தெரியாது அவருக்கு. இங்கு யாருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. திரவியம் கூறியது, நான் சென்று பார்க்கும் பொழுது நண்பர் பிணமாய்க் கிடந்தார் என்றும், தீரன் கொன்றிருக்க வேண்டும் என்றும் கூற, அவரின் வாக்கு மூலம் கொண்டு வழக்கு பதிவாதனது. ஆனால் தீரனின் தரப்பிலிருந்து என்ன நிகழ்ந்தென்றே தெரியாதென்றும், அவர் வந்து பார்க்கும் பொழுது அவன் மயங்கியிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆதிபகவன் நீதிமன்றத்தில் விசாரணை செய்யும் பொழுது, இருவரும் எந்தப் பயமும் இன்றிப் பதில் உரைத்தனர்.

உண்மையில் என்ன நிகழ்ந்ததென்று யாருக்கும் தெரியாது. நளனும்‌ அனிச்சமும் அவர்களின் பயண அனுபவத்தை வைத்து, இருக்கும் தகவல்கள் அனைத்தையும் ஒருகிணைத்து ஒரு சாத்தியமான கதையை உருவாக்கினர்.

அதாவது தீரனின் ஆராய்ச்சியைத் திரவியத்தின் நண்பர் நேரில் பார்த்திருக்கலாம். பதற்றத்தில் தீரன் அவரைத் தாக்கியிருக்கலாம். அதில் அவன் இறந்ததால், அவர் பதட்டமாக இருந்திருக்கலாம். அப்பொழுது அவர் ஆராய்ச்சி செய்த கருவி மூலம் வேறு பிரபஞ்சம் பயணித்திருக்கலாம். வேறு பிரபஞ்சத்தில் இதே ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்த தீரன் இங்கு வந்திருக்கலாம். எப்படி மங்கையின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு ஆபத்து என்றதும் இவர்கள் பயணித்தார்களோ, செழியனின் உயிருக்கு ஆபத்து என்று மீண்டும் பயணித்தார்களோ, அப்படி ஒரு பயணம் தீரன் மேற்கொண்டிருக்கலாம். நளனும் அனிச்சமும் தீரனின் வீட்டில் இருந்து பயணிக்க, அவர்களுக்கு ஒரு உபகரணம் இருந்தது. தீரனின் தரப்பில் இரு பக்கங்களிலும் பயணம் சாத்தியப்பட, இரண்டு இடத்திலும் உபகரணம் உபயோகப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். இருவருக்கும் ஒரே நேரத்தில் மீளாத் துயர் வந்திருக்கலாம். அதன் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் உலவ, இருவரும் பயணித்திருக்கலாம். கிட்டத்தட்ட ஆள்மாறாட்டம் தான் இது. அப்படி இங்கு வந்த தீரன் உண்மையில் கொலை எதுவும் செய்யவில்லை. அதனால் ஆதிபகவனை எதிர்கொள்ள முடிந்தது. அவருக்கு அவருடைய உலகில் வேறு ஏதேனும் தீராத் துன்பம் இருந்திருக்கலாம்.

இப்படி ஒரு ஆள்மாறாட்டம் நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும்‌ வகையில் தீரனின் நடவடிக்கைகள் இருந்ததுதான் காரணம். குடி நீர் கீழே சிந்திய பொழுது அவருக்குப் பதட்டம் எதுவும் தோன்றவில்லை. அப்படியெனில் அவர் வாழ்ந்த உலகத்தில் நீர் அளவுக்கு அதிகமாக இருந்திருக்க வேண்டும். நான் சாதித்துவிட்டேன் என்ற வாக்கியம் வேறு. அது‌ அவரின் பயணத்தைக் குறிக்கலாம்.

அனைத்தும் கோர்வையாகக் கோர்த்துவிட்டான் நளன். ஆனால் ஒன்று மட்டும் இடித்தது. தீரன் எதற்காக அனிச்சத்தின் வீட்டிற்கு வர வேண்டும். அங்கு ஏன் இறந்து கிடக்க வேண்டும் என்று மண்டை காய்ந்தது.

நளனும் அனிச்சமும் நீண்ட நேரம் சிந்தனை செய்த பின்பும் எதுவும் தோன்றவில்லை. மறுநாள் அவர்களுக்கு நீதி மன்றத்தில் தீர்ப்பு இருக்கிறது. அவர்கள் இருவரையும் இங்குக் காணாமல் பல நாட்கள் தேடியிருக்கின்றனர். ஆனால் கிடைக்காமல் போக, இறுதியில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகத் தீர்ப்பு எழுத முடிவு செய்தனர். ஏரியில் விழுந்து உயிர் துறந்திருக்கலாம் என்று கூறி, வழக்கை முடிப்பதாக இருந்தது. ஏனெனில் தீவிலிருந்து திரும்பி வந்து, தீரன் இறந்த தகவலை அளித்ததும் காணாமல் போயினர். நளினின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இருந்த ஏரியில் இன்னும் நச்சு வாயுக்கள் இருந்தது. அந்த ஏரிக்குள் விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக முடிவு செய்தனர். எப்படி யோசித்தாலும் அவர்களுக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. அதனால் இவர்களின் இறப்பை அறிவிக்க, அந்தச் சம்பவம் அவர்கள் இருவரையும் அவர்களின் உலகிற்குக் கொண்டு வந்தது. இருவரையும் பார்த்த நீதிமன்றம் திணறிப் போனது.

அதன்பிறகு அனைத்திற்கும் ஒரு நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆதிபகவன் தீர்ப்பு வழங்கியது.

அதனால்தான் தீவிர சிந்தனை. இவர்களின் கதை கூற வேண்டுமென்றால், தீரனின் கதையைக் கூற வேண்டுமே. ஆரம்பமே அதுதானே. அதற்காக இருவரும் தீவிர சிந்தனையில் இருந்தனர்.

"என்ன நடந்திருக்கும்னு நினைச்சுக் கூடப் பார்க்க முடியல... தீரன் இருந்தாதான் எது உண்மை எது பொய்ன்னு தெரியும். மத்தபடி எல்லாம் அனுமானம் தான். என்ன செய்றது" நளன்.

"இவ்ளோ யோசிச்சுக் கோர்வையாக என்ன நடந்திருக்கும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனா தீரன் ஏன் இங்க வரணும். ஏரியில் உள்ள நச்சுக் காற்று வெடிக்கப் போகுதுன்னு தெரிஞ்சும் ஏன் இங்க வரணும்" என்று சப்தமாகச் சிந்தனை செய்த அனிச்சம் திடுக்கிட்டாள்.

"நளன், ஏரியில் உள்ள நச்சுக் காற்று வெளிய வரப்போகுதுன்னு அரசாங்கம் சொல்லிருச்சு. இங்க யாரும் இருக்க மாட்டோம்னு இங்க உள்ள எல்லாருக்கும் தெரியும். அப்பறம் ஏன் தீரன் யாரும் இல்லாத இடத்துக்கு வரணும். என் வீட்டுக்கு வந்ததால் என்னைப் பார்க்கவா இருக்கலாம். ஆனா மூளையுள்ளவன் நிச்சயம் வரமாட்டேன். இதுலேருந்து ஏதாவது புரியிதா உனுக்கு" என்று அனிச்சம் வினவ, "ஏய், சொன்னதே சொல்லி வெறுப்பேத்தாத. அவன் ஏன் இங்க வந்தான்னுதான் தெரியலையே" என்றான் நளன்.

"நளன், அவனுக்கு அரசாங்கத்தோட அறிவிப்பு தெரியல. அப்போ அறிவிப்பு கொடுத்தப்போ இறந்து போன தீரன் இங்க இல்லை. வேற பிரபஞ்சததுக்குப் போயிருந்த தீரன் திரும்பி இங்க வந்திருக்கலாம் இல்லையா? வந்ததும் வழக்கு விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கலாம்" என்று அவள் கூற, நளன் திடுக்கிட்டான்.

இப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது இவர்கள் திரும்பி வந்துவிட்டார்களே. அதே போல் தீரனும் திரும்பி வந்திருக்கலாம்.

"அங்கங்க அரசின் பதாகையும் இருந்தது. அறிவிப்பு வேற. இதை மீறி உன்னைப் பார்க்க இங்க ஏன் வரணும்."

"நளன், ஒருவேளை தீரன் திரும்பி வந்திருந்தா நிச்சயம் அதிகமான பதற்றத்தில் இருக்கணும். ஏனா அவருடைய ஆராய்ச்சியைப் பார்த்த திரவியத்தின் நண்பரை, உணர்ச்சி மிகுதியால் கொன்றிருக்கலாம். ஏன் இவரின் தாக்குதலில் அவர் உயிர் துறந்திருக்கலாம். அதன்பிறகு வேறு பிரபஞ்சம் சென்றிருக்க வேண்டும். அங்கிருந்த ஒருவன் இங்கு வந்திருக்க வேண்டும். அங்கு என்ன நடந்ததென்று நமக்குத் தெரியாது. பின் அங்கிருந்து திரும்பி வந்ததும், அவர் கொலை செய்ததும், நீதிமன்ற வழக்கும் எண்ணத்தில் இருந்திருக்க வேண்டும். அதனால், வழக்கை கையாண்ட என்னைப் பார்க்க வந்திருக்கலாம். பதற்றத்தில் இந்த ஏரி விஷயம் அவர் மூளையைச் சென்றடையாமல் இருந்திருக்க வேண்டும்" என்று கூறி முடித்தாள்.

நளன் மலைத்து நின்றான். இதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று அவனுக்கும்‌ தோன்றியது.

மறுநாள் இவர்கள் கூறிய கதையைக் கேட்டு, நீதிமன்றம் உறைந்து போனது. இது என்ன இப்படி எல்லாம் நடக்குமா. இன்னொரு உலகமா? என்று வாயைப் பிளந்து நின்றிருந்தனர்.

குழம்பிப் போனது அங்குக் கூடியிருந்தோர் மட்டுமல்ல. ஆதிபகவனும்தான்.

அது தனது நிரலாக்கம் சென்று வரி வரியாக அலசிவிட்டது. ஒன்றும் புலப்படவில்லை. இணைப் பிரபஞ்சம் பற்றிய‌ தகவல் அனைத்தும் கருத்துப்படவங்களாகவே இருந்தது அதனிடம். நளன் , அனிச்சம் கூறுவதை, ஒத்துப் பார்க்க முடியவில்லை.

அனைவரின் குழப்பத்தைக் கண்ட அனிச்சம் ஒரு சிறிய கலனை ஆதிபகவனிடம் ஒப்படைத்தாள்.

அதைத் திறந்து பார்த்த ஆதிபகவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்தப் பொருள், அதன் மூளையின் அடுக்கிலும் இல்லை. இடுக்குகளிலும் இல்லை.

"இது என்ன?"

"இது விதை நெல். நாங்கள் கூறவது உண்மையென்று நம்ப இது ஒரு சான்றாக இருக்கும். இதை ஆராய்ச்சிக்‌ கூடத்தில் கொடுத்து வளர்க்க வேண்டும். நாங்கள் சென்ற உலகத்தில் இதுவே பிரதான உணவு. விவசாயம் செய்து இதை விளைவிக்கின்றனர். சுவையில் அமிர்தமென்றால் இதில் இருக்கிறது என்று கூறலாம்" என்றாள்.

அந்த விதை நெல் அமரா அவளுக்கு அளித்தது. செய்த உதவிகளுக்காக அமரா நன்றி சொல்லி, அவர்களிடம் என்ன வேண்டும் என்று வினவினாள் ஒருநாள்.

"நீங்க செஞ்சிருக்க உதவியை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். உங்களுக்கு என்ன வேணும். சொல்லுங்க."

"எனக்கு ஒருபிடி விதை நெல் கொடுக்க முடியுமா?" என்று அனிச்சம் வினவ, அவள் அதிர்ச்சியுற்றாள்.

"என்ன ஒருபிடி விதை நெல்லா?" என்று மீண்டும் சரிபார்த்தாள் அமரா. அவள்‌ செவியுற்ற செய்தி உண்மையா ‌என்று தெளிவுபடுத்திக் கொள்ள இந்த வினா.

"ஆம்.. ஒருபிடி நெல்தான்."

"அதை வைத்து என்ன செய்யப் போறீங்க?"

"எங்க உலகத்துக்குப் போகும் போது எடுத்துட்டுப் போகனும். அங்க நாங்க வாழவே எவ்ளோ கஷ்டப்படுறோம்னு தெரியுமா என்று அனைத்தையும்‌ கூற, வியந்து நின்றாள் அமரா.

"இப்படியும் உலகம் இருக்கிறதா?"

"இருக்கு.. ஆனா அந்த உலகத்தில் உள்ள ஒரே நல்ல விஷயம், இங்க இருக்கக் கொடூரங்கள் இல்லை" அனிச்சம்.

"எப்பவுமே நிறைய இருக்க இடத்தில்தான் பிரச்சனைகளும் நிறைய இருக்கும் அனிச்சம். ஒருத்தனுக்கு வாழ்வாதாரமே இல்லாதப்போ, அவனுக்குக் கிடைக்காமல் இருக்கும் அடுத்த விஷயங்கள் கண்களுக்குத் தெரியாது" என்றாள்‌ அமரா.

"உண்மைதான். எங்க உலகத்தில் இனம், நாடு என்ற பிரிவினைகள் இல்லை. ஏனா நாங்க அடுத்த நாளை நன்றாக வாழ இன்று வாழ்பவர்கள்" அனிச்சம்.

அதன்பிறகு ஒருபிடி விதை நெல் எடுத்து வந்தாள். அதை ஒரு சிறிய துணியில் ஒரு காசுடன் சேர்த்து முடிந்தாள். அதை அவளின் முந்தியில் முடிந்து வைத்தாள்.

"இதை எப்பவும் முடிஞ்சு வச்சிக்க. தவறவிடமாட்ட" என்றாள் அமரா.

"அனிச்சம், உனக்கு எப்படி இந்த நெல் விலைமதிப்பற்றதோ, அதே மாதிரி எனக்கும் இது அப்படிதான்" அமரா.

"ஏன்?"

"செழியனின் உடல் ஏற்கனவே எரிஞ்சு போனதால திரும்பவும் அவனை எரிக்கல. புதைச்சாச்சு" என்றவளின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. அவளின் துயரம் அனிச்சத்தை வாட்டியது‌. அவளின் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டாள்.

ஆற மூச்சை இழுத்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"செழியனை புதைத்த இடத்தில் நெல் விதைத்தோம். அங்குக் கிடைத்த விதை நெல் இது. இனி ஊர் முழுக்க உள்ள கழனிக்குக் கொஞ்சம் விதை நெல் இங்கு விதைக்கப்பட்டதாக இருக்கணும்னு சொல்லிருக்கேன். ஏனா அநியாயங்களுக்கு எதிரா விதையை முதலில் விதைத்தவன் செழியன்தான். அவன் உரமா மாறியிருக்கும் மண்ணிலிருந்து பெறப்பட்ட விதை, எல்லா நிலங்களிலும் விளையட்டும். எல்லாரும் அதைச் சாப்பிடும் போது அவனுடைய எண்ணங்களும் உள்ளே போகட்டும். மாற்றம் நிச்சயம் நடக்கும். என்னோட செழியன் நிச்சயம் மாத்துவான்" என்று கண்ணீருடன் கூறினாள்.

"தரிசு நிலாமா இருக்க எங்க பூமியும் இந்த விதையால் துளிர்த்து வரட்டும்" என்றாள் அனிச்சம். அந்த விதையைத்தான் இப்பொழுது எடுத்துக் கொடுத்தாள்.

அமராவுடனான உரையாடல் அனிச்சத்தின் நினைவு திரையில் வந்து சென்றது.

ஆதிபகவனால் எந்த முடிவுகளும் எடுக்க முடியவில்லை. ஆனால் தீர்ப்பு ஒன்று வழங்க வேண்டுமே. சரித்திரத்தில் இல்லாத தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது‌. ஆதிபகவன் தன்னுடைய நிரலாக்கம் மொத்ததையும் கொட்டிக் கவிழ்த்து அலசியதில், ஒரு திருப்தியான பதில் கிடைத்தது. இதுவரை அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை. அதனால் அடியில் கிடந்தது. தேடி எடுத்துவிட்டது.

"அனிச்சம்‌ சொல்வது போல் இதை ஆராய்ச்சி கூடத்தில் வளர்க்க வேண்டும். அதை வைத்து இந்த வழக்கின் உண்மைத் தன்மை ஆராயப்படும். மேலும் இந்த வழக்கில் ‌தீர்ப்பு வழங்க எனக்குப் போதிய அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால் என்னுடயை நிரலாக்கம் மேம்படுத்தப்பட வேண்டும். இதுவே இந்த வழக்கின் தீர்வாக நான் வழங்குகிறேன்" என்று கூற, அனைவரும் திடுக்கிட்டனர்.

பின் முதல் முதலாக ஆதிபகவன், அதற்கே திர்ப்பு வழங்கியிருக்கிறது. கூட்டம் களைந்தது.

அனிச்சமும் நளனும் வீட்டிற்கு வந்திருந்தனர். சில நாட்கள் முன்பு ஆதிபகவனை‌ ஏமாற்ற முடியாது என்று நினைத்திருந்தனர். ஆனால் இவர்களாலே இன்று ஆதிபகவனுக்கு அறிவு போதவில்லை என்று திர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அனைத்தும் முடிந்துவிட்டது. இனி ஒரு சுவாரஸ்யமற்ற வாழ்க்கை. மீண்டும் போராட்டம். மனதில் ஏதோ ஒரு வகையான திகில் தோன்றியது அனிச்சத்திற்கு. அவள்‌ மீண்டும் நத்தையாய் கூட்டிற்குள் சுருங்கியது நளனுக்கு நன்றாகவே தெரிந்தது.

அதே நிலவு.... அதே இரவு.‌ மாற்றம் ஒன்றும் இல்லை. அன்றொரு நாள் பொழிலில் அவர்கள் அனுபவித்த ஏகாந்த இரவு. நட்சத்திரங்களும் மிணுக்கியது. நிலவும் வட்ட வட்டியாய் வலம் வந்தது. அன்று சக்கரையாய் கரைந்த பொழுது இன்று பாராங்கல்லாய்க் கணத்தது.

"அனி, என்ன ஆச்சு?"

"அமரா..."

"அமராவுக்கு என்ன ஆச்சு?"

"அமராவுக்கு ஒன்னும் ஆகக்கூடாது."

"ஒன்னும்‌ ஆகாது.‌ கவலைப் படாத."

"எப்படி நளன். அவுங்க வீட்டுக்குள்ளையே இருக்கா? யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்?"

"நாமதான் போய்ப் பாத்துட்டு வந்தோமே."

"இருந்தாலும் பயமா இருக்கு."

அதன்பிறகு இருவரும் கோதையூரில் நடந்ததை அசைப் போட்டனர்.

முடிவு செய்யப்பட்ட அன்றே அவர்களின் நாடகத்தைத் தொடங்கினர். மலரின் கணவன் அவர்களுக்கு உதவினான். கொடியும் செழியனும் எரிந்த மரத்தின் அருகில் இருந்து தொடங்கினர் அவர்கள் நாடகத்தை.

மலரின் கணவன் அமராவைக் அந்த மரத்தின் அருகில் கண்டதாகக் கூற, அனைவரும் ‌அவளைத் தேடி அங்கு வந்தனர். மரத்தின் பின்னாலிருந்து கவண் கற்களால் அடிக்கப்பட்டது அங்கு வந்தவர்கள் மேல். அப்பொழுது நளன் அங்கு வந்தான். அவனைக்‌ கண்டு அனைவரும் பதறி ஓடினர்.

"இனி இந்தச் சடங்கு நடந்தால் இந்த ஊரில் ஆண்கள் உயிருடன் இருக்க முடியாது" என்று சப்தமாகக் கத்த, அங்குள்ள இயற்கையின் பிரதாபங்கள் அதை எதிரொலி செய்தது. ஊருக்குள் சென்று செழியனின் ஆவி வலம் வருவதாகப் பரப்பப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் இதுவே தொடர் நிகழ்வாக நிகழ்ந்தது. சில கணங்கள் சிலரின் விழிகளுக்கு விருந்து வைத்துவிட்டு மறைந்துவிடுவான்.

சில நாட்கள் சென்ற பின்னர்த் திட்டம் கோகிலத்திடம் உரைக்கப்பட, அவர் திடுக்கிட்டார். ஆனால் அவரைச் சமாதானம் செய்தனர். நளனும் அனிச்சமும் அவர் முன் சென்று நிற்க, அவர் மயங்கி விழாத குறைதான்.
ஊரில் உள்ளவர்கள் போல் செழியனின் ஆவி என்றே நினைத்தார். அதன் பிறகு நளன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவரிடம்.

கோகிலத்தால் கதறி அழ மட்டுமே முடிந்தது. அவருக்கு விளங்கியதெல்லாம், செழியனைப் போல் உருவ ஒற்றுமை உள்ள ஒருவன் அமராவுக்கு உதவியிருக்கிறான். அதற்கு மேல் சிந்தனை செய்ய முடியவில்லை. அவருக்குச் சிந்திக்கவும் தேவையில்லை என்று தோன்றியது.

அவரிடம் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினான். இரவோடு இரவாக அமராவை அரசியின் அறைக்கு மாற்றினர். புதிதாய் ஒரு வேலைக்காரியை நியமித்தார் கோகிலம். இந்த நிகழ்வுக்குப்‌ பிறகு தேவர் பிள்ளையிடம் ஒரு வார்த்தை கூட உரையாடுவதில்லை அவர். வீட்டிற்குள் எப்பொழுதும் போல் அனைத்தும் இயங்கியது. மிகவும் நம்பகமான சிலரை மட்டும் வீட்டிற்குள் வேலைக்கு அமர்த்தினார். அரசியின் அறைக்கு யாருக்கும் அனுமதி இல்லை. புதிதாய் வந்த வேலைக்காரி குழந்தை பெற்றிருப்பதால் அவளுக்கு மட்டும் மேல் மச்சில் அறை ஒதுக்கப் பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

நளனுக்குக் கோகிலத்துடன் ஒரு பிணைப்பே வந்துவிட்டது. இத்தனை நாள் அவரும் ஒரு பொருள் போல் அந்த வீட்டில் வாழ்ந்தார். பெற்ற மகன் தந்தையை இப்பொழுது ஒரு பொருள் போல் ஓரமாக உட்கார வைத்துவிட்டான். அவனின் உருவில் இருக்கும் ஒருவன் அவரை அந்த வீட்டிற்கு எஜமானியாக மாற்றினான். அவரின் குரல் வீட்டில் எங்கும் ஒலித்தது. ஓங்கி உயர்ந்து ஒலித்து அவரை அடக்கிய குரல் ஓய்ந்து போய் மூலையில் முடிங்கியிருந்தது.

அவருடைய வேலைகளைச்‌ செய்யவும் ஆள் தேவைப் பட்டது. அவரின் மேல் உள்ள பயம் போய்விட்டது. செழியினின் மேல் பயம் அதிகமானது. ஏனெனில் தேவர் பிள்ளையுடன் இருந்த சிலரை மறைந்திருந்து தாக்கி படுக்கையில் படுக்க வைத்தான் நளன்.

இப்பொழுதாவது அன்பின் அருமை புரியுமா அவருக்கு. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இழந்த மகனுடன் சிறிது காலம் இருந்தது போலவே கோகிலத்திற்குத் தோன்றியது. அவனுக்கும் அவருடன் ஒரு பிணைப்பு தோன்றியது. அவன் என்றாவது ஒரு நாள் இங்கிருந்து சென்றுவிடுவான் என்பது அவரை வதைத்தாலும், மகன் எங்கோ நன்றாக இருப்பான் என்று அவரது மனம் நம்ப ஆரம்பித்தது. அந்த விடயத்தில் அமரா வெற்றி பெற்றாள்.

அவளைப் பொறுத்தளவு உண்மையில் கோகிலமே மிகவும் பாவப்பட்ட உயிர். அரசியை இழந்து இத்தனை வருடங்கள் எப்படி வாழ்ந்தாரோ. மனிதல் உள்ள சோகம் எப்பொழுதும் அவர் முகத்தில் அப்பியிருக்கும். அப்படி இருக்கையில் செழியனையும் இழந்தது அவரின் மனதை எப்படிப் பாதிக்கக் கூடும் என்று நன்கு உணர்ந்திருந்தாள் அமரா. அதனால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அமராவுக்கு நளனைக் காணும்‌ பொழுது தோன்றிய ஏக்கங்கள் மறைந்தது. அவன் அவளுடைய வாழ்வின் திட்டங்களை எளிதாக்கிவிட்டானே. தன் கணவனின் கணவினை நிறைவேற்ற வந்தவனாகவே தோன்றும். அதனால் அவனை இலகுவாக ஏற்க முடிந்தது. மலருடன் ஒரு நல்ல தோழமை. மலரும் கொடியிடம் இழந்த தோழமையை அமராவிடம் பெற்றாள். அனிச்சமும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். அவர்கள் உலகில் தனிமையின் துணையோடு வாழ்ந்தே பழக்கப்பட்டவள். இங்கு அவளுக்கு இரண்டு தோழிகள் கிடைத்தனர்.

நடந்து முடிந்திருந்த கொடூர நிகழ்வுகளால் மகிழ்ச்சியாகப் பொழுதுகள் கழியவில்லைதான். ஆனாலும் நிம்மதியாகக் கழிந்தது. தோழிகள் மூவரும் நிம்மதியை அடுத்தவருக்குப் பரிமாறினர். குறுகிய காலம்தான் அதுவும் நிலைத்தது. அதற்குள் நளனும் அனிச்சமும் அவர்களின் உலகிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

புடவியில் நிகழ்ந்த அனைத்தையும் இருவரும் அசைப் போட்டு முடித்தனர்.

நளன்‌ அனிச்சத்திற்கு ஆறுதல் மொழிகள் உரைத்தான்.

"அனி, அமரா தைரியமான பொண்ணு. புத்திசாலியும் கூட. அதனால் அவளைப் பற்றிக் கவலைப் படாத" என்று அவன் கூற, அனிச்சம் தலையாட்டினாலே தவிற, அவள் முகத்தில் தெளிவு பிறந்தது போல் இல்லை.

அவளின் முகத்தைக் கையில் ஏந்தினான். நெற்றியில் இதழ் பதித்தான். அவளுடைய‌ கழுத்தில் அவன் அணிவித்த தாலி அவளது உடைக்கு வெளியில் தெரிந்தது.

அதைப் பிடித்து ‌இழுத்தான் அவன்.

"ஏய் இழுக்காத.. கையோட வந்துடப் போகுது" என்று கடிந்து கொண்டாள் அவள்.

"இந்த உலகத்தில் இதுக்கு மதிப்பு இருக்கா என்ன? நீ இங்க எப்போ வந்தியோ அப்போவே இது மதிப்பிழந்து விட்டது" நளன்.

"இந்த உலகம் இதை மதிக்கலைனா பரவாயில்லை. ஆனா நான் இதை மதிக்கிறேன்."

"ஏன்?"

"சொல்ல முடியாது போ..." என்றாள் கொஞ்சம் கோவத்தோடு.

"இப்படியெல்லாம் பேசுனா நான் விட்ருவேனா?" என்று அவளைப் பிடித்து இழுத்தான். அவனின் கைகளுக்குள் சிறையெடுத்தான்.

பலகணியில் அவளின் பின்னால் அவன் நின்றிருந்தான். அவளின் காதருகில் குணிந்தவன், "அனி, அங்க பாரு" என்றான்.

வானில் வின் மீண் பொட்டுக்கள் வைரமாய் மிண்ணியது. அதில் நிலவுக்கு அருகில் இருந்த சில வின் மீண்களைச் சுட்டிக்காட்டி, "மங்கை, வேலன், செழியன், குயிலி" எல்லாரும் நம்ம கூடத் தான் இருக்காங்க. நமக்கு வெளிச்சம் தந்துகிட்டு. இந்தப் பிரபஞ்சத்தை அலங்கரித்துக் கொண்டு" என்றான்.

அவன் சுட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தாள் அவள். சற்று முன் சலிப்புடன் தோன்றிய நிலவும், நட்சத்திரங்களும் இப்பொழுது அழகாகத் தெரிந்தது. சலித்துப் போன இரவில் வர்ணங்கள் தீட்டிவிட்டான் நளன்.

"இப்போ சொல்லு... இந்தத் தாலி மேல உனக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?" நளன்.

"மங்கை வாழ்ந்த உலகில் நடந்த திருமணம். அதற்கு இது ஆதாரம். மங்கையை உயிராய் நேசித்த, வேலு நாச்சியார் எடுத்துக் கொடுத்த தாலி. அதனால் இதன் மதிப்புக் கூடிவிட்டது" என்றாள் அனிச்சம்.

"அனி, இதெல்லாம் மதிப்பு கூடியதற்கு உள்ள காரணம். ஆனால் மதிப்பு வந்ததுக்குக் காரணம் நான் சொல்லவா?" என்றான் கிறக்கத்துடன்.

"ம்ம்ம்..‌சொல்லு" என்றாள் அவள்.

"இதைக் கட்டினது‌ நான். அதனால் உனக்கு மதிப்புள்ளதா இருக்கு" நளன்.

"இந்த எண்ணம்‌ ஆதிக்கத்தோட முதல்நிலை இல்லையா நளன்" என்றதும் திடுக்கிட்டான் அவன்.

"இதில் உனக்கு எவ்வளவு பிடித்தம், மதிப்பு இருக்கோ அதே அளவு எனக்கும் பிடித்தம், மதிப்பு இருக்கு. அப்பறம் எப்படி இதில் ஆதிக்கம் வரும். ரொம்பக் குழப்பிக்காத. நான் கட்டியதால் உனக்கு நிச்சயம் மதிக்க வேண்டும் என்று திணிப்பது ஆதிக்கம்.‌ என்னைப் பிடித்ததால், அது மதிக்கப்படுவது அன்பு. உனக்கிருக்கது அன்பு. எனக்கிருக்கது அந்த அன்பின் மேல் உள்ள கர்வம். இது எல்லா விஷயத்திலும் இப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லை. சில விஷயங்களில் இந்த அன்பு எனக்கும்,‌ அதன் மேல் உள்ள கர்வம் உனக்கும் இருக்கலாம்" என்றான் தெளிவாக.


ஓவியப் பாவையாய் அவன் தீட்டிய வர்ணங்களை ரசித்தாள் அவள். அவளை வளைத்து, நெளித்து, இறுக்கி, குறுக்கி தனக்குள் அடிக்கிக் கொண்டான்.

சூரியன் உதிக்க, இருவரும் கண் விழித்தனர். இருவரின் விடியலும் இனிதாய் விடிந்தது.

சில நாட்களில் அனிச்சம் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். நடமாடிக் கொண்டிருந்தவள் மயங்கி சரிந்தாள். பரிசோதித்துப் பார்க்கையில் அவள் கர்பமாய் இருப்பது உறுதி செய்யப் பட்டது. இரண்டு மாத கருவை சுமந்திருந்தாள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர் அனைவரும். அப்படி இயற்கை முறையில் கருத்தரிப்பது அங்குச் சட்டப்படி குற்றம். அதனால் கருவை கலைக்க ஆணைப் பிறப்பிக்கப் பட்டது.

நிலவு ஒழுகும்....
 
ஒழுகும் நிலவு 24

அனிச்சத்தின் நிலையறிந்தும் இருவரும் மகிழ்ச்சியாய் இருக்க முடியவில்லை. விஷயம் தெரிந்ததும் அனிச்சம் அழுது கொண்டே இருந்தாள். அவள் நினைத்தது நடந்துவிட்டது. இனி என்ன செய்வது என்று அவளால் சிந்திக்க முடியவில்லை.

நளன்‌ அவளுக்கு பரிசோதனைகள் செய்து அதன்பிறகு முடிவு செய்யலாம் என்று மனுக் கொடுத்தான். பரிசோதனையின் முடிவுகள் நிச்சயம் நேர்மறையாக இருக்கும் என்று அவர்கள் இருவரும் நம்புவதாக குறிப்பிட்டிருந்தான்.

ஏனோ அவர்களின் மனு நிராகரிக்கப்படவில்லை. அதை ஏற்று அவளுக்கு பரிசோதனைகள் நிகழ்ந்தது. பரிசோதனையின் முடிவுகளுக்காக இருவரும் காத்திருந்தனர்.

பனித்தீவில் அகழ்ந்தெடுத்த பொருளையும் ஆராய்ச்சிக் கூடத்தில் வளர்த்தனர். அது அனிச்சம் மற்றும் நளன் கூறியது போல் ஒரு மரத்தின் பாகம் என்று கண்டறியப்பட்டது. அவர்கள்‌ கூறியது போல் மண் பரப்பு எரிமலைப் பாறைகளுக்கு அடியில் இருக்கிறதா என்று ஆராயும்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது முன்னமே அவர்கள் ஆராய்ந்ததுதான்‌. ஆனால் அதன் மகிமையும் மதிப்பும் அறியாததால் அதைப் பற்றிய அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் நிகழாமல் இருந்தது.

இப்பொழுது நளனும் அனிச்சமும் விளக்கத்துடன் எடுத்துரைக்க, ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டது.

அனிச்சத்தின் கருவை ஆராய்ந்ததில் அனைவரும் அதிர்ந்துவிட்டனர். ஏனெனில் அந்த குழந்தைக்கு வயது 60 மேல் இருப்பதாக மரபணு பரிசோதனையின் முடிவுகள் வந்தது. குறைந்த பட்ச காலம் வாழ கருவிற்குள் சொலுத்தப்படும் மரபணு இந்த குழந்தைக்கு தேவையில்லை என்று கூறிவிட, நளனும் அனிச்சமும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த உலகத்தில் மிக மிக எதார்த்தமாக, இயற்கையாய் பிறக்கப் போகும் முதல் பிள்ளை. அனிச்சம் சுமந்திருக்கிறாள். அதனால் அவளுக்கு பாதுகாப்புகள் அதிகாமாக இருந்தது. கூடவே செவிலியர் சிலரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பனித்தீவில் எலும்பு கூடு கிடைத்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி முடுக்கிவிடப்பட்டது. நளன் அனிச்சத்தையும் அழைத்து கொண்டு சென்றான். அந்த தீவிற்கு வந்து ஆறு மாதங்கள் முடிந்துவிட்டது. சூரியன் உதிக்கும் நாளுக்கு இருவரும் அங்கு இருந்தனர்.

அன்று நடனமாடிய ஒளிக்கற்றைகள் அனைத்தும் புள்ளிகளாய் மறைந்தது. பனிமலையின் சில முகட்டின் அடியிலிருந்து ஆதவன் எழுந்தான். பொன்னிறக் கதிர்களை இரவின் விளிம்பில் பாய்ச்ச, இரவின் இருளுக்குள் புகுந்த ஒலி அடுத்த சில நொடிகள் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தி அவர்களை ஆட்கொண்டது. இப்பொழுதும் அனிச்சம் அங்கு நிகழும் நிகழ்வுகளில் மனதைப் பறி கொடுத்திருந்தாள். அன்று போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நளன்.

"அழகா இருக்கு நளன்."

"இல்லை.."

"நீ‌ வேற ஏதாவது சொல்லாத" என்றாள் அவள்.

"இப்போலாம் உன்னோட பேசக் கூட முடியல. எப்பவும் உன்னை சுத்தி ஆள் இருந்துட்டே இருக்கு" என்றதும் சிரித்துக் கொண்டாள். இப்பொழுது நன்றாக விளங்கியது அவன் அன்பும், அதில் அவள் கர்வமும்.

"நம்ம குழந்தைக்காக" அனிச்சம்.

"என்னைவிட அவுங்க நல்லா பாத்துப்பாங்களா?" நளன்.

"இல்லை."

"அப்புறம் ‌ஏன் இதெல்லாம்?"

"நானா கேட்டேன்?"

உண்மைதான். அவளின் ஆவல் இல்லையே இதெல்லாம். ஆனாலும் அவனின் எரிச்சலின் பின் மறைந்திருக்கும் அன்பு மதிப்பில்லாதது.

அகழாய்வு பணிகள் தொடங்கின.

"நளன், இங்க நாம நினைச்ச தானியம் கிடைக்குமா?" அனிச்சம்.

"நிச்சயம் கிடைக்கும். ஏனா மரத்தோட ஒரு பாகம் கிடைச்சிருக்கு. எலும்பு கூடு கிடைச்சிருக்கு. பொழிலில் நடந்த சம்பவங்கள் இங்கும் நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போ இங்க விளைச்சல் நிலங்களும் இருந்திருக்கும்" நளன்.

"அதன்பிறகு நிறைய நூற்றாண்டுகள் மக்கள் வாழ்ந்திருப்பாங்களே... அப்போ சூழல் மாறியிருக்கலாம்" அனிச்சம்.

"மாறாம விளைச்சல் நிலமாவே இருந்திருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இருந்தா நம்மோட ஆராய்ச்சி முடிவு நல்லவிதமா இருக்கும். பூமித்தட்டு நகர்ந்து துருவப் பகுதிக்கு வந்திருக்கு. அதனால் ஒரு பெரிய சமதளம் இடம் பெயர்ந்து வந்திருக்க வேண்டும். பார்க்கலாம். இதுவரை எல்லாமே நல்லதா நடந்திருக்கு. இதுவும் நல்லதா நடக்கும்னு தோணுது" என்று கூறினான்.

அதன்பிறகு‌ அங்கு பல இடங்களில் தோண்ட, உறைந்து போன காடே கிடைத்தது அவர்களுக்கு. அதிலிருந்து பலதரப்பட்ட செடிகளையும், மரங்களின் பாகங்களையும் எடுத்து பத்திரப்படுத்தினர். ஆராய்ச்சிக்‌ கூடத்தில் வளர்த்து அதன் பின்னர் சமவெளியில் வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கருவிகள் மூலம் எந்த இடத்தில் குறைந்த அடியில் மண்தரை தென்படுகிறது என்று ஆராய்ந்து, அந்த இடத்தில் மேலே உள்ள பாறைகளை அகற்றினர். சில இடங்களில் நூறு அடிகளுக்கு கீழ்தான் மண்தரை இருந்தது. வெகு சில இடங்களில் முப்பது அடிகளில் தென்பட, அந்த இடங்களைத் தேர்வு செய்தனர்.

அந்த இடத்தில் இருந்த பாறைகளை அகற்றி சமதளமாக மாற்றினர். இன்னும் சில அடிகள் தோண்டினர். முதல் அடுக்கில் உள்ள மண்ணில் பல ரசாயனங்கள் இருந்தது. எரிமலைக் குழம்புகள் மேல் தட்டில் ஓடியிருந்ததால். அதனால் கன்னித் தன்மை மிகுந்த மண் வரும்வரை தோண்டப்பட்டது. அருகில் சில வீடுகளையும் அமைத்தனர். அனிச்சம் , நளன் இருவரும் அங்கு மாற்றப்பட்டனர்.

அதன் பிறகு மண்ணைக் கொத்தி நீரிட்டு விளைச்சல் நிலமாக மாற்றினர் இருவரும். முதலில் ஒரு சிறு பகுதியில் மட்டுமே அவர்களை செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரின் தன்மையையும் பரிசோதித்த பின்னர் உழவு செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

கோடையுழவு கொடுத்தால், நிலம் தயாரிப்பில் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம். ஆனால் அங்கு மழையெல்லாம் எதிர்பார்க்க முடியாதே. அதனால் நிலத்தை நன்கு ஏர் உழுது நீர் பாய்ச்சினர். அதில் இலை சத்துக்கள் மற்றும் தொழுவுரம் போட்டு இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். ஆனால் அங்கு எதுவும் இல்லாததால், நீர் மட்டும் பாய்ச்சி உழவு செய்தனர். விதை நெல்லை சுமார் 8 – 10 மணி நேரம் ஊறவைத்து அதை ஒரு ஈரமான கோணிப்பையில் போட்டு முளைப்போட்டனர்.
அடுத்த நாள், மறுபடியும் அந்த நிலத்தை உழுது நீர் பாய்த்து சமன்படுத்தி சிறிது நேரம் தெளியவிட்டு, பின்பு முளைகட்டிய விதையை அந்த நிலத்தில் சீராக தூவினர்.
முதல் ஒரு வாரத்திற்கு அதிகப்படியான நீர் விடாமல் தேவையான அளவு நீர் விட்டு ஈரமாக பராமரித்தனர். நாற்றுகள் முளைக்க ஆரம்பித்தவுடன் அதன் அளவுக்கு ஏற்ப நீர் பாய்ச்சப்பட்டது.
30 நாட்களுக்கு பின் நாற்றுகள் வளர்ந்த பின்பு அதனை பிடுங்கி பயிரிடப்போகும் நிலத்தில் நட்டனர்.

பின்பு 30 நாட்கள் வாரத்திற்கு மூன்று முறை நீர் பாய்ச்சினர்.
சீராக நீர் பாய்த்து பராமரித்து அறுவடைக்கு தயாராகி இருந்தது பயிர்.

அதன்பிறகு வேளாண் துறை என்று புதுதாக துறையொன்று தொடங்கி, அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றனர்.

அனிச்சத்திற்கு குழந்தைப் பிறந்தது. பூமியில் கொஞ்சம் கொஞ்சமாக காடுகள் செய்தனர்.
 

ஒழுகும் நிலவு 25
பொழில்
நளனும் அனிச்சமும் சென்ற சில தினங்களில் அமராவுக்கு, செழியன் அவளுக்காக எழுதிய‌‌ கடிதம் கிடைக்கிறது.
அமரா,
நீ இந்த கடிதம் படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்.‌ உன்கிட்ட பேசாமையே போயிடுவேனோனு ஒரு பயம். அதான் இந்த கடிதம். நான் சொல்ல நினைச்சதை இந்த கடிதம் நிச்சயம் சொல்லும்.
உன்னை ரொம்பவே பிடிக்கும். இதை அடிக்கடி சொல்லிருக்கேன். ஆனா எவ்ளோ பிடிக்கும்னு சொன்னதில்லை. சாவிலும் உன்னை கூட அழைத்துச் செல்லும் அளவு பிடிக்கும். இது ஏன் தெரியுமா. நீ என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்ட. நீ செத்தா நானும் சாகணுமான்னு. அது நீ உணர்ச்சிவசப்பட்டு கேட்ட கேள்வியா இருக்கலாம். ஆனால் எனக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வந்த கேள்வி. அந்த கேள்விக்காக உயிரையும்‌ கொடுக்கலாம்னு தோனுச்சு.
உன்னோட‌ வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு வாழைக்கையை வாழ புது வழி ஒண்ணு கத்துக் கொடுத்த. வாழ்க்கையைப் புது பரிமாணத்தில் வாழ பழக்கிவிட்ட. நான் எப்போ உன்னைவிட்டு நீங்கினாலும், உனக்காகக் காத்திருப்பேன்‌. நீ உனக்குன்னு நிர்ணயம் செய்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு வா.
இனி இந்த ஊருக்கு இன்னொரு அரசியும் வேண்டாம். இன்னொரு கொடியும் வேண்டாம். பல அமரா வேண்டும். இனி எல்லா பெண்களிலும் உன்னைக் காண வேண்டும். ஒருவேளை நான் இல்லைனாலும் இதை நீ செய்வங்கிற நம்பிக்கைல போறேன். நீ வரும் போது நல்ல சேதியோடு வா.
உன்னோடு வாழ என்னுடைய ஒவ்வொரு நொடியும் மரணிக்கட்டும் என் கடிகாரத்தில்.
கடிதம் முடிந்திருந்தது. ஆனால் அவள் இன்னும் நினைவு திரும்பவில்லை. செழியனுக்குள் புதைந்து போக வேண்டும் என்று தோன்றியது. கண்களில் உவர்நீர் பளபளத்தது. நெஞ்சோடு கடிதத்தை அணைத்தவளின் ஊனும் உயிரும்‌ அந்த கடிதத்துடன் சில கணங்கள் கரைந்துவிட்டது.
எந்த ஒரு சடங்கு வேண்டாம் என்று போராட்டம் நிகழ்கிறதோ அந்த ஒரு விடயம் விருப்பத்துடன் இவர்கள் இடையில். கணவனை இழந்த ஒரு பெண் இறக்கக் கூடாது என்று நினைத்தவன், சாவிலும் உன்னைத் தேடுகிறேன் என்று கூறியிருக்கிறான். கொடி கணவன் இறந்து பிறகு வாழ வேண்டும் என்று நினைத்தாள். கொடியும் அமராவும் எதிர் துருவங்கள் இந்த விடயத்தில்.
அந்த கடிதம்தான் எல்லாம் அமராவுக்கு. செழியனே நேரில் பேசுவது போல் தோன்றும். அவனிடம் ஏதேனும் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அந்த கடிதத்திடம் கூறுவாள். இவளும் ஒவ்வொரு நொடியாக கொன்று கொண்டிருந்தாள், அவளின் செழியனிடம்‌ சென்று சேர.
இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. தேவர் பிள்ளையின் மாளிகை அமைதியாக இருந்தது. ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்தது. விழா இல்லை. இது என்ன நிகழ்வு என்றே சொல்ல முடியவில்லை. அமரா வெளிப்படும் நிகழ்வு நிகழப் போகிறது.
நளனின் திட்டப்படி அனைத்தும் நன்றாவே சென்றது. ஊரில் இப்பொழுது கைம்பெண் சடங்குகள் பின்பற்றப்படுவதில்லை. இவ்வளவு ஏன். ஏற்றத்தாழ்வு கூட பார்ப்பதில்லை. ஒன்றே குலம் ஒருவரே தேவன். அந்த தேவன் செழியனாகிப் போனான்.
அமரா அன்று வருவதாக ஊருக்குள் சொல்லப்பட்டது. கோகிலம்தான் ஒருவனை அழைத்து இப்படிக் கூறினார். அதன் பிறகு அது ஊர் முழுக்க பரப்பப்பட்டது.
தேவர் பிள்ளை இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு கிடந்தார். கோகிலம் அவரிடம் உரையாடுவதைத் தவிர்த்திருந்தார். அவரைக் கவணிப்பதும் இல்லை. அதற்கு ஒரு ஆள் நியமித்துவிட்டார். அவர் வீட்டு வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். பேரன்களுடன் அரசியின் அறையில் தவம் கிடக்கத்தான் ஆசை. ஆனால் அது சந்தேகத்தைக் கிளப்பிவிடுமே. ஆனால் வேலைக்காரிக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அந்த குழந்தைக்கு அனைத்தும் செய்வது போல் வெளியில் தம்பட்டம் அடிக்கப்படும். அவரின் குடும்ப வாரிசை இழந்ததால் இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்தனர் ஊர் மக்கள். இரண்டு குழந்தைகளையும் அரசியின் அறையிலே வைத்து இரண்டு வருடங்கள் வளர்த்தாயிற்று. சில சமயம் குழந்தைகள் மட்டும் கீழே தூக்கிவரப்படும். சற்று நேரத்தில் மீண்டும் குழந்தையை மேலே தூக்கி சென்றாவிடுவார்கள். வேலைக்காரியையும் அம்மா என்று கூப்பிடும் படி பழக்கியிருந்தனர். வீட்டிற்குள் ஆட்களின் புழக்கம் இல்லை, ஆதலால் அவர்களால் இதை சிரமமின்றி செய்ய முடிந்தது. தேவர் பிள்ளைக்கு கைகால்கள் விளங்கமல் போக, அவர் மேல் மச்சிற்கு செல்லும் வாய்ப்பே இல்லாமல் போனது. அப்படியே அவர் நன்றாக இருந்தாலும், அவர் மிக அரிதாகக் கூட மேல் மச்சு புழங்கியதில்லை. இதை வைத்தே அமரா அந்த இடம் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்தது.
அமரா வருவதாக கூறியதால் ஊர் முழுக்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர். தேவர் பிள்ளையும் ஆர்வமாக இருந்தார். ஏனெனில் அவர் உயிர் இழக்கும் நிலையில் இருக்கையில் பேரன் வந்துவிட்டால், மீண்டும் குலம் துளிர்த்துவிடும் என்று நம்பிக்கைப் பிறந்தது. கொஞ்சம் எழுந்து அமர்ந்துவிட்டார் அவர்.
அவரின் நடவடிக்கைகளைப் கோகிலமும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு நன்றாக விளங்கியது அவரின் மனவோட்டம். பேரனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி அதில் இல்லை. மாறாக குடும்பத்தின் பெருமை சுமக்க வாரிசு வந்துவிட்டது என்ற கர்வம் மட்டுமே அதில் இருந்தது கோகிலத்தின் விழிகளுக்கு புலப்படாமல் இல்லை.
அனைவரும் வாயிலை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, அமரா மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இரண்டு குழந்தைகளையும் சுமந்து கொண்டு வந்தாள். அவள் ஒவ்வொரு படியாக இறங்கி வர, இங்கு அனைவரின் இதயமும் தடதடத்தது. அனைவரின் விழிகளிலும் விடையறியா பல வினாக்கள் தேங்கி நின்றது.
தேவர் பிள்ளை கோகிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் மனைவியா இப்படி ஒரு காரியத்தை செய்தது என்று.
கோகிலம் பெருமிதத்துடன் அமராவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவள் அருகில் வந்ததும், "அத்தை, ரெண்டு பிள்ளையைத் தூக்கிட்டு வரேன். வந்து ஒரு பிள்ளையை வாங்கலாமே" என்று செல்லமாக சலித்துக் கொள்ள, "அட, நீ நடந்து வந்த அழகில மயங்கி நிக்கிறேன். இப்ப என்ன குடு ஒரு பிள்ளையை" என்று வாங்கிக் கொண்டார்.
அங்கிருந்த ஒருவரும் ஒன்றும் வினவவில்லை. அனைவரும் செதுக்கி வைத்த சிலையாய் சமைந்து நின்றிருந்தனர்.
"ஆமா... அமரா... இது ரெண்டுல உன்னோட புள்ளை எது?" கோகிலம். தேவர் பிள்ளையை வம்பிழுக்க எழுப்பப்பட்ட வினா. அமரா தன் மாமியாரை மெச்சும் பார்வையொன்று பார்த்தாள்.
"ரெண்டுமே என் புள்ளைதான்."
"எங்க குடும்ப வாரிசு எது?" தேவர் பிள்ளை.
"நம்ப மாட்டீங்களா மாமா? எனக்கு ரெட்டைப் பிள்ளை" என்றாள் நக்கலுடன்.
அவள் முகத்தில் பிறந்திருந்த தெளிவு அவருக்கு நன்கு உரைத்தது. அவள் உண்மையை உரைக்கப் போவதில்லை என்று நன்றாக புரிந்து கொண்டார்.
அவர் கோகிலத்தைப் பார்க்க, "மாமா, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எது என் பிள்ளைனு எனக்கு மட்டும்தான் தெரியும். நான் அத்தைக்கிட்டயும் சொல்லல. அதனால அவுங்ககிட்ட கேட்டு வாங்கலாம்ங்கிற கீழ்த்தரமான யோசனை இருந்தா கைவிட்டு விடவும்" என்று அமரா ஏற்றயிரக்கங்களுடன் கூற, அவர் மனதில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். ஆனால் சோர்வாக படுத்துக் கொண்டார்.
அதன்பிறகு சில தினங்கள் சென்றிருக்கும். பல நேரங்களில் அமராவை நோட்டமிட்டிருக்கிறார் உண்மை அறிய. அவள் பிள்ளைக்கு ஏதேனும் சிறப்பு சலுகைகள் இருக்கக்கூடும் என்று. அனால் அமராவிடம் அப்படி ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் இரு பிள்ளைக்கும் பால் புகட்டி வளர்த்தாள் அவள். எப்படி பாகுபடுத்துத் தோன்றும்.
தேவர் பிள்ளையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் உயிர் பிறிந்துவிடும் என்று வைத்தியன் கூறிச் சென்றான். அவரின் இறுதி ஆசை ஏதேனும் இருந்தால் கேட்டுக் கொள்ளும்படி அறிவுருத்திவிட்டு சென்றான் வைத்தியன்.
குழந்தைகள் அவர் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவரின் கருவிழிப்பாவைகள் அலைந்து கொண்டே இருந்தது. இரு குழந்தைகளையும் சுற்றிதான். கோகிலம் அருகில் அமர்ந்திருந்தார். அவர் மனதில் சற்று இறக்கம் சுரந்திருந்தது. அவரின் இறுதி ஆவல் என்னவாக இருக்கும் என்று நன்கு அறிவார். ஒரு உயிர் விடைபெரும் வேளையில் இருக்கிறது. அதை கௌரவமாக அனுப்பி வைக்க வேண்டிய நிலையில் இருந்தார் கோகிலம். அவரின் கணவர் என்ற பரிவு இல்லை. ஆனால் தாய்ப்பால் சுரந்த நெஞ்சில் இயற்கையாய் இறக்கமும் சுரந்துவிட்டது. அவர் பாவமாய் அமராவைப் பார்த்தார்.
கோகிலத்தின் மனம் அமரா அறியாமல் இல்லை. ஆனால் அவள் கல்லென இறுகிய இதயத்தில் இறக்கம் சுரக்கவில்லை. அவர் அருகில் வந்தாள்.
"மாமா, உங்களுக்கு ஒரு இறுதி வாய்ப்பு. எனக்கு ஒரு வாக்கு கொடுங்க. அதை மட்டும் நீங்க சரின்னு சொல்லிட்டா போதும். செழியனோட பிள்ளை யாருன்னு நான் சொல்றேன்" என்றாள் பூடகமாக.
அவர் சரியென்று தலையாட்டவில்லை. அவள் வில்லங்கமாக ஏதோ வினவப் போகிறாள் என்று நன்கு அறிந்து வைத்திருந்தார். சில தினங்களாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.
அவரின் இந்த அமைதியை அமரா எதிர்பார்த்திருந்தாள். அதனால் அவளே தொடர்ந்தாள்.
"கொடியோட பிள்ளைக்கு பரிவட்டம் கட்டட்டும். அதற்கு நான் சம்மதிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. உங்க பேரன் யாருன்னு நான் சொல்றேன்" என்றாள்.
கோகிலமே திடுக்கிட்டார் அமராவின் தாக்குதலில்.
இது அவருக்கு மரண வியூக அறிக்கை. மரணிப்பது உறுதி. ஆனால் மண்டியிட்டால் ஒரு நகர்வு இரவலாய் கிடைக்கலாம். சிறிது காலம் வாழலாம்.
"அத்தை, சாகப் போற ஒருத்தர்கிட்ட இப்படி பேசுறது முறையில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கொடியோட பிள்ளைக்கும் சேர்த்து பால் கொடுத்திருக்கேன். அது மட்டுமில்லாம, நான் பட்டக் காயத்துக்கு என்னால் முடிந்த ஓர் அடி. அது மரண அடியா இருந்தாலும் கவலையில்லை" என்று தன் பக்க விளக்கத்தை வைத்தாள் அமரா.
இத்தனை தினங்களில் அவளின் மனதை ஒருமுறை கூட வெளிப்படுத்தியது இல்லை. இப்பொழுது தான் விளங்கியது அவள் மௌனத்தின் சாயலில், நியாயத்திற்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்தாள் என்று.
சனாதன தர்மத்தின் படி அமராவின் செயலில் தர்மம் இல்லையென்றாலும், துலாக்கோலின் மெய்நிகர் முள் ஆடாமல் அசையாமல் நடுநிலை வகித்தது. இது அவள் மனதில் அவருக்கு எழுதிய தண்டனை. வெகு காலம் முன்பே எழுதிவிட்டாள். எழுதிய தண்டனையை நிறைவேற்ற காலம் கைக்கொடுக்கும் வரை காத்திருந்திருக்கிறாள். தேவர் பிள்ளை இறந்துவிட்டால், அவளின் ராஜ்ஜியம் தான். அவள் எந்த குழந்தைக்கு பரிவட்டம் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை. அதை தேவர் பிள்ளையும் நன்கு அறிவார். ஆனால் இறப்பதற்கு முன் நெடுநாளைய வினாவின் விடைக்காக ஏக்கம் கொண்டார். அந்த ஏக்கத்துடன் அவர் உயிர் துறக்க வேண்டும் என்பது அமராவின் ஆவல்‌.
ஆனால் அப்படி ஒரு வார்த்தை என்னிடம் இருந்து வராது என்று மௌனமாய் விழிகள் மூடினார் தேவர் பிள்ளை.
சிலர் இப்படித்தான். மரண அடியிலும் திருந்துவதில்லை. அவர் மனதின் எண்ணங்களே பிரதானம். அது மட்டுமே நியாயம். அடுத்தவருக்கு அநியாயமாய் இருப்பினும்.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான். நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாய் குரங்கு. கருணையும் ஈரமும் அதனிடம் இருந்து மனித இனத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கப்புள்ளியை விட்டு விலகி சென்றுவிட்டோம் நாம்‌. குரங்கு மனிதனாய் பரிணாமம் அடைந்தது கருணை சுமந்து. மனிதன் விலங்காய் பரிணாமம் அடைகிறான் கருணை ஒழித்து.
தோன்றின் புகழ்
தோற்றத்தில் அல்ல!!!
கருனை என்னும் பெருவினையை
அகத்தில் கருத்தரித்தமையால்!!!
மூலம் மரபணுவில்
ஈரம் நெஞ்சினில்!!!
மனித இனத்தின் முற்றுப்புள்ளியுடன் புலன் விசாரணைகள் வேண்டாம்!!!
நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியுடன்
ஒரு நலன் விசாரணை வேண்டும்!!!
முற்றும்...
சில விளக்கங்கள்:
மூன்று கோணங்களில் இந்த கதை பயணிக்கும். மூன்று காலகட்டங்கள். மூன்று விதமான மனிதர்கள். ஒரு முப்பரிமாண கதை என்றும் கூறலாம். அவை அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்தேன்.
இந்த கதையில் இருக்கும் மூன்று நிலைகள்.
1. பூமியில் ஆண் பெண் என்ற பேதங்களை கடந்துவிட்ட காலகட்டம். வாழ்வாதாரத்திற்கு தவிக்கும் மக்கள். வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதில் இருந்து அடுத்த நிலை அடைந்துவிட்ட மனிதர்கள். அவர்களுக்கு வாழ்வதே ஒரு போராட்டம்.
2. பொழில் - இன பேதம் உள்ள காலகட்டம். ஆங்கிலேயரை எதிர்த்து பெண்களும் போர் புரிந்த காலம். வீரமும் வைராக்கியமும் சுமந்த பெண்களை இங்கு காண்கிறோம்.
3. புடவி - இங்கு ஆங்கிலேயர் ஆட்சியில்லை. ஆனால் ஆணாதிக்கம் இருக்கிறது. ஆதிக்கத்தின் உச்சம் தொட்டுச் செல்லும் புடவி. அதில் சேற்றில் முளைத்த செந்தாமரையாய் சில பெண்கள். ஆதிக்கம் செலுத்திய இனத்தில் இருந்தே மோட்சம் அளித்தவனும் இருக்கிறான்.
ஓரிடத்தில் ஆண் பெண் சமம். ஓரிடத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஓரிடத்தில் பெண்களின் குரல் அவர்கள் மனதில் கூட ஒலிக்கவில்லை. இந்த மூன்றும் இணைப் பிரபஞ்சங்களால் இணைக்கப்பட்டிருப்பதே இந்த கதை.
ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் அதன் கண்ணாடி பிம்பம் போல் அச்சு அசலாக வேறொரு பிரபஞ்சம் இருக்கிறது. அது ஒன்றோடு மட்டுமில்லாது எண்ணற்றவையாக மிதந்துக் கொண்டிருக்கிறது. அதில் காற்றுவெளி, நேரம், அணுத்துகள்கள், இத்யாதி இத்யாதி என அனைத்தும் வேறோரு பரிணாமத்தில் உள்ளது. அதில் சிலவற்றில் நீங்கள் நீங்களாகவோ நான் நானாகவோ அல்லது வேறொரு பரிணாமத்திலோ (ஏலியன்ஸ்) அங்கும் இருக்கலாம் என்பதே இணை பிரபஞ்ச கண்டுபிடிப்பாகும்.
அதாவது ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதுவாகவே மற்றொரு பிரபஞ்சத்திலும் இருக்கலாம். சான்று - தீரன் கதாபாத்திரம். மங்கை. பூமியில் எலும்பு கூடு கிடைத்தது. அதே நிகழ்வு பொழிலில் நிகழ்கிறது. இது ஒரு இணைச் சம்பவம்.
ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் உங்கள் இணையுடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழலாம். மற்றொரு அண்டத்தில் பிரிந்து சென்றிருக்கலாம். இல்லை இறந்திருக்கலாம். சான்று - செழியன். புடவியில் இறந்துவிட்டான். ஆனால் பூமியில் அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
சில சமயம் சில இடத்திற்கு நாம் செல்லும் போது, அந்த இடத்தை நுணுக்கமாக ஏற்கனவே கண்டது போல் தோன்றும். உண்மையில் அந்த இடத்திற்கு நாம் சென்றிருக்க மாட்டோம். ஆனால் அதில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட ஏற்கனவே பார்த்த நினைவு. அப்பொழுது இதயம் சற்று அதிகமாக துடித்துவிடும். இதை தேஜாவு என்று‌ கூறுவர்.
தேஜாவு என்பது தற்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே நாம் அறிந்திருந்ததுபோல் தோன்றுதல். அதாவது அந்த நிகழ்வு முன்பே உண்மையில் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் நிகழ்வு நடக்கும்போது ஏற்கனவே அறிந்ததுபோல் தோன்றும். அல்லது அந்த நிகழ்வைப் பற்றி கனவெல்லாம் கண்டிருக்க மாட்டோம். ஆனால் அந்த நிகழ்வு நடக்கும்போது ஏற்கனவே அது கனவில் வந்ததுபோல் தோன்றும்.
இதை இணைப் பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சான்று என்றும் சில அறிவியல் அறிஞர்கள் கூறுவதுண்டு. அதாவது அந்த இடத்திற்கு, வேறொரு பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள் சென்றிருக்கலாம். சில சமயம் அந்த அலைவரிசை நம்மோடு ஒத்துப் போகலாம். அப்படி நிகழ்கையில் இந்த தேஜாவு தோன்றும் என்று கூறுகின்றனர். இவை அனைத்தும் கருத்துப்படிவமே. எதற்கும் ஆதாரங்கள் இல்லை.
இந்த இணை பிரபஞ்சம் எங்கு இருக்கிறது?.
மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த இணை பிரபஞ்சங்கள் நம்மைவிட ஒரு மில்லிமீட்டர் குறைவான தூரத்தில் இருக்கிறது. அதாவது நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தியே மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து நம்மீது கசிந்து கொண்டிருக்கும் ஒரு வீரியம் குறைந்த சக்தி அல்லது சிக்னலின் தாக்கமாக அமைந்திருக்கிறது. அப்படி இருக்கிறதென்றால் ஏன் அவற்றை நம்மால் காண முடிவதில்லை?. அதற்கும் பதில் இருக்கிறது. நீங்கள் உங்கள் அறையில் ரேடியோவில் FM நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் அதில் உங்களுக்கு பிடிக்காத பாடல் வருகிறது உடனே நீங்கள் வேறொரு அலைவரிசையை மாற்றி வைத்து விடுகிறீர்கள். அதுவும் பிடிக்கவில்லை வேறொன்றை மாற்றுகிறீர்கள். உங்களால் இவ்வாறு பல அலைவரிசைகளை மாற்ற முடியும் ஆனால் உங்களால் பல அலைவரிசைகளை ஒரே நேரத்தில் கேட்க முடியாதுதானே? அதுபோலத்தான் நம் பிரபஞ்சம் நம்முடைய அலைவரிசையை மட்டுமே பெற்றிருக்கும். நம்மால் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கவோ அவற்றை பார்க்கவோ முடியாது.
இதைத்தான் இணை பிரபஞ்சம் என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? என்பதைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சம் அழிந்தால் இருக்கவே இருக்கிறது நமது இணை பிரபஞ்சம் நாமெல்லாம் அங்கு சென்றுவிடலாம் என விஞ்ஞானிகள் மாநாட்டில் மிஷியோ காக்கூ பேசியிருந்தார்.
பிரபஞ்சமும் அதிலிருப்பவைகளும் (பூமி, சூரியன், நிலவு) ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசையில் இயங்குகிறது, தன் அருகில் யாராவது ஈர்ப்பு குறைந்த சோப்ளாங்கி வந்தால் உடனே இழுத்துக் கொள்ளும் என முன்பே பார்த்தோம் அல்லவா? அதன்படி நாம் வாழும் பிரபஞ்சம் உறைந்துபோய் அழியும் முன் ஈர்ப்புவிசை குறையத் தொடங்கும் அப்போது நம் அருகிலிருக்கும் இணை பிரபஞ்சம் வாங்க வாங்க என நம் குடும்பத்தையும் அன்போடு ஈர்த்துக் கொள்ளும்.
மேலும் நமக்கு மிக அருகில் வேறொரு அலைவரிசையில் இணை பிரபஞ்சம் உள்ளது அல்லவா? அதன்படி பிறகுவரும் காலங்களில் நாம் ஒரே அலைவரிசையில் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கும் வாய்ப்பை பெறலாம் (ரேடியோவில் இரண்டு அலைவரிசையையும் ஒரே நேரத்தில் கேட்பது போல்) அப்படி பெற்றால் நம் பிரபஞ்சம் அழிவது தெரிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்கு தாவிவிடலாம். நமக்தே தெரியாமல் இயற்கை நமது இணை பிரபஞ்சத்திற்கு செல்ல இந்த இரண்டில் எதாவது ஒரு வழியைக் நிச்சயம் காட்டும்.
இணைப் பிரபஞ்சத்தில் இன்னொரு கோட்பாடு கூட இருக்கிறது. மேலே கூறய தேஜாவு ஒருவருக்கு நிகழ்வது.
இதே தேஜாவு பலருக்கும் நிகழலாம். அதை மண்டேலா விளைவு என்று கூறுகின்றனர். நடக்காத ஒரு விஷயம் பலருக்கும் நடந்தது போல் தோன்றும்.
தேஜாவு இணைப் பிரபஞ்சம் தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
https://kondalaathi.blogspot.com/2017/03/blog-post_7.html
நனி நன்றி!!!
கதையைப் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
 
ஒழுகும் நிலவு 25

பொழில்

நளனும் அனிச்சமும் சென்ற சில தினங்களில் அமராவுக்கு, செழியன் அவளுக்காக எழுதிய‌‌ கடிதம் கிடைக்கிறது.

அமரா,

நீ இந்த கடிதம் படிக்கும் போது நான் இருக்க மாட்டேன். ஆனா எப்போ வேணா என்ன வேணா நடக்கலாம்.‌ உன்கிட்ட பேசாமையே போயிடுவேனோனு ஒரு பயம். அதான் இந்த கடிதம். நான் சொல்ல நினைச்சதை இந்த கடிதம் நிச்சயம் சொல்லும்.
உன்னை ரொம்பவே பிடிக்கும். இதை அடிக்கடி சொல்லிருக்கேன். ஆனா எவ்ளோ பிடிக்கும்னு சொன்னதில்லை. சாவிலும் உன்னை கூட அழைத்துச் செல்லும் அளவு பிடிக்கும். இது ஏன் தெரியுமா. நீ என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்ட. நீ செத்தா நானும் சாகணுமான்னு. அது நீ உணர்ச்சிவசப்பட்டு கேட்ட கேள்வியா இருக்கலாம். ஆனால் எனக்குள் பல மாற்றங்களைக் கொண்டு வந்த கேள்வி. அந்த கேள்விக்காக உயிரையும்‌ கொடுக்கலாம்னு தோனுச்சு.

உன்னோட‌ வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு வாழைக்கையை வாழ புது வழி ஒண்ணு கத்துக் கொடுத்த. வாழ்க்கையைப் புது பரிமாணத்தில் வாழ பழக்கிவிட்ட. நான் எப்போ உன்னைவிட்டு நீங்கினாலும், உனக்காகக் காத்திருப்பேன்‌. நீ உனக்குன்னு நிர்ணயம் செய்த வாழ்க்கையை வாழ்ந்துட்டு வா.

இனி இந்த ஊருக்கு இன்னொரு அரசியும் வேண்டாம். இன்னொரு கொடியும் வேண்டாம். பல அமரா வேண்டும். இனி எல்லா பெண்களிலும் உன்னைக் காண வேண்டும். ஒருவேளை நான் இல்லைனாலும் இதை நீ செய்வங்கிற நம்பிக்கைல போறேன். நீ வரும் போது நல்ல சேதியோடு வா.

உன்னோடு வாழ என்னுடைய ஒவ்வொரு நொடியும் மரணிக்கட்டும் என் கடிகாரத்தில்.

கடிதம் முடிந்திருந்தது.

ஆனால் அவள் இன்னும் நினைவு திரும்பவில்லை. செழியனுக்குள் புதைந்து போக வேண்டும் என்று தோன்றியது. கண்களில் உவர்நீர் பளபளத்தது. நெஞ்சோடு கடிதத்தை அணைத்தவளின் ஊனும் உயிரும்‌ அந்த கடிதத்துடன் சில கணங்கள் கரைந்துவிட்டது.
எந்த ஒரு சடங்கு வேண்டாம் என்று போராட்டம் நிகழ்கிறதோ அந்த ஒரு விடயம் விருப்பத்துடன் இவர்கள் இடையில். கணவனை இழந்த ஒரு பெண் இறக்கக் கூடாது என்று நினைத்தவன், சாவிலும் உன்னைத் தேடுகிறேன் என்று கூறியிருக்கிறான். கொடி கணவன் இறந்து பிறகு வாழ வேண்டும் என்று நினைத்தாள். கொடியும் அமராவும் எதிர் துருவங்கள் இந்த விடயத்தில்.

அந்த கடிதம்தான் எல்லாம் அமராவுக்கு. செழியனே நேரில் பேசுவது போல் தோன்றும். அவனிடம் ஏதேனும் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அந்த கடிதத்திடம் கூறுவாள். இவளும் ஒவ்வொரு நொடியாக கொன்று கொண்டிருந்தாள், அவளின் செழியனிடம்‌ சென்று சேர.

இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. தேவர் பிள்ளையின் மாளிகை அமைதியாக இருந்தது. ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்தது. விழா இல்லை. இது என்ன நிகழ்வு என்றே சொல்ல முடியவில்லை. அமரா வெளிப்படும் நிகழ்வு நிகழப் போகிறது.
நளனின் திட்டப்படி அனைத்தும் நன்றாவே சென்றது. ஊரில் இப்பொழுது கைம்பெண் சடங்குகள் பின்பற்றப்படுவதில்லை. இவ்வளவு ஏன். ஏற்றத்தாழ்வு கூட பார்ப்பதில்லை. ஒன்றே குலம் ஒருவரே தேவன். அந்த தேவன் செழியனாகிப் போனான்.

அமரா அன்று வருவதாக ஊருக்குள் சொல்லப்பட்டது. கோகிலம்தான் ஒருவனை அழைத்து இப்படிக் கூறினார். அதன் பிறகு அது ஊர் முழுக்க பரப்பப்பட்டது.

தேவர் பிள்ளை இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு கிடந்தார். கோகிலம் அவரிடம் உரையாடுவதைத் தவிர்த்திருந்தார். அவரைக் கவணிப்பதும் இல்லை. அதற்கு ஒரு ஆள் நியமித்துவிட்டார். அவர் வீட்டு வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். பேரன்களுடன் அரசியின் அறையில் தவம் கிடக்கத்தான் ஆசை. ஆனால் அது சந்தேகத்தைக் கிளப்பிவிடுமே. ஆனால் வேலைக்காரிக்கு குழந்தை பிறந்துவிட்டது என்று அந்த குழந்தைக்கு அனைத்தும் செய்வது போல் வெளியில் தம்பட்டம் அடிக்கப்படும். அவரின் குடும்ப வாரிசை இழந்ததால் இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்தனர் ஊர் மக்கள். இரண்டு குழந்தைகளையும் அரசியின் அறையிலே வைத்து இரண்டு வருடங்கள் வளர்த்தாயிற்று. சில சமயம் குழந்தைகள் மட்டும் கீழே தூக்கிவரப்படும். சற்று நேரத்தில் மீண்டும் குழந்தையை மேலே தூக்கி சென்றாவிடுவார்கள். வேலைக்காரியையும் அம்மா என்று கூப்பிடும் படி பழக்கியிருந்தனர். வீட்டிற்குள் ஆட்களின் புழக்கம் இல்லை, ஆதலால் அவர்களால் இதை சிரமமின்றி செய்ய முடிந்தது. தேவர் பிள்ளைக்கு கைகால்கள் விளங்கமல் போக, அவர் மேல் மச்சிற்கு செல்லும் வாய்ப்பே இல்லாமல் போனது. அப்படியே அவர் நன்றாக இருந்தாலும், அவர் மிக அரிதாகக் கூட மேல் மச்சு புழங்கியதில்லை. இதை வைத்தே அமரா அந்த இடம் சரியாக இருக்கும் என்று தேர்வு செய்தது.

அமரா வருவதாக கூறியதால் ஊர் முழுக்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர். தேவர் பிள்ளையும் ஆர்வமாக இருந்தார். ஏனெனில் அவர் உயிர் இழக்கும் நிலையில் இருக்கையில் பேரன் வந்துவிட்டால், மீண்டும் குலம் துளிர்த்துவிடும் என்று நம்பிக்கைப் பிறந்தது. கொஞ்சம் எழுந்து அமர்ந்துவிட்டார் அவர்.
அவரின் நடவடிக்கைகளைப் கோகிலமும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு நன்றாக விளங்கியது அவரின் மனவோட்டம். பேரனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி அதில் இல்லை. மாறாக குடும்பத்தின் பெருமை சுமக்க வாரிசு வந்துவிட்டது என்ற கர்வம் மட்டுமே அதில் இருந்தது கோகிலத்தின் விழிகளுக்கு புலப்படாமல் இல்லை.

அனைவரும் வாயிலை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, அமரா மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இரண்டு குழந்தைகளையும் சுமந்து கொண்டு வந்தாள். அவள் ஒவ்வொரு படியாக இறங்கி வர, இங்கு அனைவரின் இதயமும் தடதடத்தது. அனைவரின் விழிகளிலும் விடையறியா பல வினாக்கள் தேங்கி நின்றது.

தேவர் பிள்ளை கோகிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தன் மனைவியா இப்படி ஒரு காரியத்தை செய்தது என்று.
கோகிலம் பெருமிதத்துடன் அமராவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் அருகில் வந்ததும், "அத்தை, ரெண்டு பிள்ளையைத் தூக்கிட்டு வரேன். வந்து ஒரு பிள்ளையை வாங்கலாமே" என்று செல்லமாக சலித்துக் கொள்ள, "அட, நீ நடந்து வந்த அழகில மயங்கி நிக்கிறேன். இப்ப என்ன குடு ஒரு பிள்ளையை" என்று வாங்கிக் கொண்டார்.

அங்கிருந்த ஒருவரும் ஒன்றும் வினவவில்லை. அனைவரும் செதுக்கி வைத்த சிலையாய் சமைந்து நின்றிருந்தனர்.

"ஆமா... அமரா... இது ரெண்டுல உன்னோட புள்ளை எது?" கோகிலம். தேவர் பிள்ளையை வம்பிழுக்க எழுப்பப்பட்ட வினா. அமரா தன் மாமியாரை மெச்சும் பார்வையொன்று பார்த்தாள்.

"ரெண்டுமே என் புள்ளைதான்."

"எங்க குடும்ப வாரிசு எது?" தேவர் பிள்ளை.

"நம்ப மாட்டீங்களா மாமா? எனக்கு ரெட்டைப் பிள்ளை" என்றாள் நக்கலுடன்.

அவள் முகத்தில் பிறந்திருந்த தெளிவு அவருக்கு நன்கு உரைத்தது. அவள் உண்மையை உரைக்கப் போவதில்லை என்று நன்றாக புரிந்து கொண்டார்.

அவர் கோகிலத்தைப் பார்க்க, "மாமா, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எது என் பிள்ளைனு எனக்கு மட்டும்தான் தெரியும். நான் அத்தைக்கிட்டயும் சொல்லல. அதனால அவுங்ககிட்ட கேட்டு வாங்கலாம்ங்கிற கீழ்த்தரமான யோசனை இருந்தா கைவிட்டு விடவும்" என்று அமரா ஏற்றயிரக்கங்களுடன் கூற, அவர் மனதில் எரிமலை வெடித்திருக்க வேண்டும். ஆனால் சோர்வாக படுத்துக் கொண்டார்.

அதன்பிறகு சில தினங்கள் சென்றிருக்கும். பல நேரங்களில் அமராவை நோட்டமிட்டிருக்கிறார் உண்மை அறிய. அவள் பிள்ளைக்கு ஏதேனும் சிறப்பு சலுகைகள் இருக்கக்கூடும் என்று. அனால் அமராவிடம் அப்படி ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் இரு பிள்ளைக்கும் பால் புகட்டி வளர்த்தாள் அவள். எப்படி பாகுபடுத்துத் தோன்றும்.

தேவர் பிள்ளையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் உயிர் பிறிந்துவிடும் என்று வைத்தியன் கூறிச் சென்றான். அவரின் இறுதி ஆசை ஏதேனும் இருந்தால் கேட்டுக் கொள்ளும்படி அறிவுருத்திவிட்டு சென்றான் வைத்தியன்.
குழந்தைகள் அவர் அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவரின் கருவிழிப்பாவைகள் அலைந்து கொண்டே இருந்தது. இரு குழந்தைகளையும் சுற்றிதான். கோகிலம் அருகில் அமர்ந்திருந்தார். அவர் மனதில் சற்று இறக்கம் சுரந்திருந்தது. அவரின் இறுதி ஆவல் என்னவாக இருக்கும் என்று நன்கு அறிவார். ஒரு உயிர் விடைபெரும் வேளையில் இருக்கிறது. அதை கௌரவமாக அனுப்பி வைக்க வேண்டிய நிலையில் இருந்தார் கோகிலம். அவரின் கணவர் என்ற பரிவு இல்லை. ஆனால் தாய்ப்பால் சுரந்த நெஞ்சில் இயற்கையாய் இறக்கமும் சுரந்துவிட்டது. அவர் பாவமாய் அமராவைப் பார்த்தார்.

கோகிலத்தின் மனம் அமரா அறியாமல் இல்லை. ஆனால் அவள் கல்லென இறுகிய இதயத்தில் இறக்கம் சுரக்கவில்லை. அவர் அருகில் வந்தாள்.

"மாமா, உங்களுக்கு ஒரு இறுதி வாய்ப்பு. எனக்கு ஒரு வாக்கு கொடுங்க. அதை மட்டும் நீங்க சரின்னு சொல்லிட்டா போதும். செழியனோட பிள்ளை யாருன்னு நான் சொல்றேன்" என்றாள் பூடகமாக.

அவர் சரியென்று தலையாட்டவில்லை. அவள் வில்லங்கமாக ஏதோ வினவப் போகிறாள் என்று நன்கு அறிந்து வைத்திருந்தார். சில தினங்களாக அவளைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.

அவரின் இந்த அமைதியை அமரா எதிர்பார்த்திருந்தாள். அதனால் அவளே தொடர்ந்தாள்.
"கொடியோட பிள்ளைக்கு பரிவட்டம் கட்டட்டும். அதற்கு நான் சம்மதிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. உங்க பேரன் யாருன்னு நான் சொல்றேன்" என்றாள்.
கோகிலமே திடுக்கிட்டார் அமராவின் தாக்குதலில்.
இது அவருக்கு மரண வியூக அறிக்கை. மரணிப்பது உறுதி. ஆனால் மண்டியிட்டால் ஒரு நகர்வு இரவலாய் கிடைக்கலாம். சிறிது காலம் வாழலாம்.

"அத்தை, சாகப் போற ஒருத்தர்கிட்ட இப்படி பேசுறது முறையில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் கொடியோட பிள்ளைக்கும் சேர்த்து பால் கொடுத்திருக்கேன். அது மட்டுமில்லாம, நான் பட்டக் காயத்துக்கு என்னால் முடிந்த ஓர் அடி. அது மரண அடியா இருந்தாலும் கவலையில்லை" என்று தன் பக்க விளக்கத்தை வைத்தாள் அமரா.

இத்தனை தினங்களில் அவளின் மனதை ஒருமுறை கூட வெளிப்படுத்தியது இல்லை. இப்பொழுது தான் விளங்கியது அவள் மௌனத்தின் சாயலில், நியாயத்திற்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருந்தாள் என்று.

சனாதன தர்மத்தின் படி அமராவின் செயலில் தர்மம் இல்லையென்றாலும், துலாக்கோலின் மெய்நிகர் முள் ஆடாமல் அசையாமல் நடுநிலை வகித்தது. இது அவள் மனதில் அவருக்கு எழுதிய தண்டனை. வெகு காலம் முன்பே எழுதிவிட்டாள். எழுதிய தண்டனையை நிறைவேற்ற காலம் கைக்கொடுக்கும் வரை காத்திருந்திருக்கிறாள். தேவர் பிள்ளை இறந்துவிட்டால், அவளின் ராஜ்ஜியம் தான். அவள் எந்த குழந்தைக்கு பரிவட்டம் கட்டினாலும் யாரும் கேட்கப் போவதில்லை. அதை தேவர் பிள்ளையும் நன்கு அறிவார். ஆனால் இறப்பதற்கு முன் நெடுநாளைய வினாவின் விடைக்காக ஏக்கம் கொண்டார். அந்த ஏக்கத்துடன் அவர் உயிர் துறக்க வேண்டும் என்பது அமராவின் ஆவல்‌.

ஆனால் அப்படி ஒரு வார்த்தை என்னிடம் இருந்து வராது என்று மௌனமாய் விழிகள் மூடினார் தேவர் பிள்ளை.

சிலர் இப்படித்தான். மரண அடியிலும் திருந்துவதில்லை. அவர் மனதின் எண்ணங்களே பிரதானம். அது மட்டுமே நியாயம். அடுத்தவருக்கு அநியாயமாய் இருப்பினும்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தான். நாகரீகத்தின் தொடக்கப்புள்ளியாய் குரங்கு. கருணையும் ஈரமும் அதனிடம் இருந்து மனித இனத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தொடக்கப்புள்ளியை விட்டு விலகி சென்றுவிட்டோம் நாம்‌. குரங்கு மனிதனாய் பரிணாமம் அடைந்தது கருணை சுமந்து. மனிதன் விலங்காய் பரிணாமம் அடைகிறான் கருணை ஒழித்து.

தோன்றின் புகழ்
தோற்றத்தில் அல்ல!!!
கருனை என்னும் பெருவினையை
அகத்தில் கருத்தரித்தமையால்!!!
மூலம் மரபணுவில்
ஈரம் நெஞ்சினில்!!!

மனித இனத்தின் முற்றுப்புள்ளியுடன் புலன் விசாரணைகள் வேண்டாம்!!!
நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியுடன்
ஒரு நலன் விசாரணை வேண்டும்!!!

முற்றும்...

சில விளக்கங்கள்:

மூன்று கோணங்களில் இந்த கதை பயணிக்கும். மூன்று காலகட்டங்கள். மூன்று விதமான மனிதர்கள். ஒரு முப்பரிமாண கதை என்றும் கூறலாம். அவை அனைத்தையும் ஒற்றைப் புள்ளியில் இணைத்தேன்.
இந்த கதையில் இருக்கும் மூன்று நிலைகள்.

1. பூமியில் ஆண் பெண் என்ற பேதங்களை கடந்துவிட்ட காலகட்டம். வாழ்வாதாரத்திற்கு தவிக்கும் மக்கள். வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதில் இருந்து அடுத்த நிலை அடைந்துவிட்ட மனிதர்கள். அவர்களுக்கு வாழ்வதே ஒரு போராட்டம்.

2. பொழில் - இன பேதம் உள்ள காலகட்டம். ஆங்கிலேயரை எதிர்த்து பெண்களும் போர் புரிந்த காலம். வீரமும் வைராக்கியமும் சுமந்த பெண்களை இங்கு காண்கிறோம்.

3. புடவி - இங்கு ஆங்கிலேயர் ஆட்சியில்லை. ஆனால் ஆணாதிக்கம் இருக்கிறது. ஆதிக்கத்தின் உச்சம் தொட்டுச் செல்லும் புடவி. அதில் சேற்றில் முளைத்த செந்தாமரையாய் சில பெண்கள். ஆதிக்கம் செலுத்திய இனத்தில் இருந்தே மோட்சம் அளித்தவனும் இருக்கிறான்.

ஓரிடத்தில் ஆண் பெண் சமம். ஓரிடத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஓரிடத்தில் பெண்களின் குரல் அவர்கள் மனதில் கூட ஒலிக்கவில்லை. இந்த மூன்றும் இணைப் பிரபஞ்சங்களால் இணைக்கப்பட்டிருப்பதே இந்த கதை.

ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் அதன் கண்ணாடி பிம்பம் போல் அச்சு அசலாக வேறொரு பிரபஞ்சம் இருக்கிறது. அது ஒன்றோடு மட்டுமில்லாது எண்ணற்றவையாக மிதந்துக் கொண்டிருக்கிறது. அதில் காற்றுவெளி, நேரம், அணுத்துகள்கள், இத்யாதி இத்யாதி என அனைத்தும் வேறோரு பரிணாமத்தில் உள்ளது. அதில் சிலவற்றில் நீங்கள் நீங்களாகவோ நான் நானாகவோ அல்லது வேறொரு பரிணாமத்திலோ (ஏலியன்ஸ்) அங்கும் இருக்கலாம் என்பதே இணை பிரபஞ்ச கண்டுபிடிப்பாகும்.

அதாவது ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதுவாகவே மற்றொரு பிரபஞ்சத்திலும் இருக்கலாம். சான்று - தீரன் கதாபாத்திரம். மங்கை. பூமியில் எலும்பு கூடு கிடைத்தது. அதே நிகழ்வு பொழிலில் நிகழ்கிறது. இது ஒரு இணைச் சம்பவம்.
ஒரு பிரபஞ்சத்தில் நீங்கள் உங்கள் இணையுடன் பல ஆண்டுகள் சேர்ந்து வாழலாம். மற்றொரு அண்டத்தில் பிரிந்து சென்றிருக்கலாம். இல்லை இறந்திருக்கலாம். சான்று - செழியன். புடவியில் இறந்துவிட்டான். ஆனால் பூமியில் அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

சில சமயம் சில இடத்திற்கு நாம் செல்லும் போது, அந்த இடத்தை நுணுக்கமாக ஏற்கனவே கண்டது போல் தோன்றும். உண்மையில் அந்த இடத்திற்கு நாம் சென்றிருக்க மாட்டோம். ஆனால் அதில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் கூட ஏற்கனவே பார்த்த நினைவு. அப்பொழுது இதயம் சற்று அதிகமாக துடித்துவிடும். இதை தேஜாவு என்று‌ கூறுவர்.
தேஜாவு என்பது தற்போது நடக்கும் ஒரு சம்பவம் ஏற்கனவே நாம் அறிந்திருந்ததுபோல் தோன்றுதல். அதாவது அந்த நிகழ்வு முன்பே உண்மையில் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் நிகழ்வு நடக்கும்போது ஏற்கனவே அறிந்ததுபோல் தோன்றும். அல்லது அந்த நிகழ்வைப் பற்றி கனவெல்லாம் கண்டிருக்க மாட்டோம். ஆனால் அந்த நிகழ்வு நடக்கும்போது ஏற்கனவே அது கனவில் வந்ததுபோல் தோன்றும்.
இதை இணைப் பிரபஞ்சங்கள் இருப்பதற்கான சான்று என்றும் சில அறிவியல் அறிஞர்கள் கூறுவதுண்டு. அதாவது அந்த இடத்திற்கு, வேறொரு பிரபஞ்சத்தில் இருக்கும் நீங்கள் சென்றிருக்கலாம். சில சமயம் அந்த அலைவரிசை நம்மோடு ஒத்துப் போகலாம். அப்படி நிகழ்கையில் இந்த தேஜாவு தோன்றும் என்று கூறுகின்றனர். இவை அனைத்தும் கருத்துப்படிவமே. எதற்கும் ஆதாரங்கள் இல்லை.

இந்த இணை பிரபஞ்சம் எங்கு இருக்கிறது?.
மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த இணை பிரபஞ்சங்கள் நம்மைவிட ஒரு மில்லிமீட்டர் குறைவான தூரத்தில் இருக்கிறது. அதாவது நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு சக்தியே மற்றொரு பிரபஞ்சத்திலிருந்து நம்மீது கசிந்து கொண்டிருக்கும் ஒரு வீரியம் குறைந்த சக்தி அல்லது சிக்னலின் தாக்கமாக அமைந்திருக்கிறது. அப்படி இருக்கிறதென்றால் ஏன் அவற்றை நம்மால் காண முடிவதில்லை?. அதற்கும் பதில் இருக்கிறது. நீங்கள் உங்கள் அறையில் ரேடியோவில் FM நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் அதில் உங்களுக்கு பிடிக்காத பாடல் வருகிறது உடனே நீங்கள் வேறொரு அலைவரிசையை மாற்றி வைத்து விடுகிறீர்கள். அதுவும் பிடிக்கவில்லை வேறொன்றை மாற்றுகிறீர்கள். உங்களால் இவ்வாறு பல அலைவரிசைகளை மாற்ற முடியும் ஆனால் உங்களால் பல அலைவரிசைகளை ஒரே நேரத்தில் கேட்க முடியாதுதானே? அதுபோலத்தான் நம் பிரபஞ்சம் நம்முடைய அலைவரிசையை மட்டுமே பெற்றிருக்கும். நம்மால் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கவோ அவற்றை பார்க்கவோ முடியாது.
இதைத்தான் இணை பிரபஞ்சம் என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? என்பதைப் பற்றியும், நாம் வாழும் பிரபஞ்சம் அழிந்தால் இருக்கவே இருக்கிறது நமது இணை பிரபஞ்சம் நாமெல்லாம் அங்கு சென்றுவிடலாம் என விஞ்ஞானிகள் மாநாட்டில் மிஷியோ காக்கூ பேசியிருந்தார்.

பிரபஞ்சமும் அதிலிருப்பவைகளும் (பூமி, சூரியன், நிலவு) ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு விசையில் இயங்குகிறது, தன் அருகில் யாராவது ஈர்ப்பு குறைந்த சோப்ளாங்கி வந்தால் உடனே இழுத்துக் கொள்ளும் என முன்பே பார்த்தோம் அல்லவா? அதன்படி நாம் வாழும் பிரபஞ்சம் உறைந்துபோய் அழியும் முன் ஈர்ப்புவிசை குறையத் தொடங்கும் அப்போது நம் அருகிலிருக்கும் இணை பிரபஞ்சம் வாங்க வாங்க என நம் குடும்பத்தையும் அன்போடு ஈர்த்துக் கொள்ளும்.
மேலும் நமக்கு மிக அருகில் வேறொரு அலைவரிசையில் இணை பிரபஞ்சம் உள்ளது அல்லவா? அதன்படி பிறகுவரும் காலங்களில் நாம் ஒரே அலைவரிசையில் இரண்டு பிரபஞ்சங்களில் இயங்கும் வாய்ப்பை பெறலாம் (ரேடியோவில் இரண்டு அலைவரிசையையும் ஒரே நேரத்தில் கேட்பது போல்) அப்படி பெற்றால் நம் பிரபஞ்சம் அழிவது தெரிந்தவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்கு தாவிவிடலாம். நமக்தே தெரியாமல் இயற்கை நமது இணை பிரபஞ்சத்திற்கு செல்ல இந்த இரண்டில் எதாவது ஒரு வழியைக் நிச்சயம் காட்டும்.
இணைப் பிரபஞ்சத்தில் இன்னொரு கோட்பாடு கூட இருக்கிறது. மேலே கூறிய தேஜாவு ஒருவருக்கு நிகழ்வது.
இதே தேஜாவு பலருக்கும் நிகழலாம். அதை மண்டேலா விளைவு என்று கூறுகின்றனர். நடக்காத ஒரு விஷயம் பலருக்கும் நடந்தது போல் தோன்றும்.

தேஜாவு இணைப் பிரபஞ்சம் தகவல்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
https://kondalaathi.blogspot.com/2017/03/blog-post_7.html
நனி நன்றி!!!
கதையைப் பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom