ஒழுகும் நிலவு 22
மயங்கும் மாலை
மல்லிகை வாசம்
மலர்ந்த மொட்டு
மூச்சின் வெட்பம்
வெட்கம் நான்
தீர்க்க நீ!!!
அமரா ஒரு வாரமாக நைந்து போன மலராய் இருந்தாள். அனிச்சமும் மலரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். மலரின் கணவன் அனைத்துத் தகவல்களையும் கொடுத்ததால், இவர்களால் அமராவை பாதுகாக்க முடிந்தது. தேவர் பிள்ளையின் ஆட்களுடன் சேர்ந்து அமராவைத் தேடுவது போல் அவர்களைத் திசைத் திருப்பியும் விட்டான். ஒரு கட்டத்தில் தேவர் பிள்ளைக்கு இதில் விருப்பம் இல்லை என்றும், அவர் குடும்பம், அவர் வாரிசு என்று வந்தவுடன் அவர் மாறிவிட்டார் என்று கூட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, பலரின் மனதில் சந்தேக விதையை விதைத்தான். அனைத்துப் பெண்களும் அமரா கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டனர்.
அமராவுக்கு பிள்ளைப் பேறு வலி எடுத்தது. மலர் அருகில் இருந்து வேண்டிய அனைத்தும் செய்தாள். அனிச்சம் அவளுக்கு உதவியாக இருந்தாள். அமராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அனிச்சம் விழிகளில் நீர் கோர்த்து நின்றிருந்தாள். எத்தனை பெரிய தவம் இது. அவர்கள் உலகில் இந்த வரம் கிடைக்க, எத்தனை திட்டங்கள். மனிதனாய்ப் பிறப்பது மாதவம் இல்லை. ஒரு மனிதனை ஈன்றெடுப்பது மாதவம் அவர்கள் உலகைப் பொறுத்தவரை.
அமரா கத்தியதில் அந்த அறையே அதிர்ந்தது. பல வருடங்களாக, தன் வயிற்றுக்குள் பொத்தி வைத்திருந்த முத்தை உதிர்த்த சிப்பியின் ஓடுகள் அயர்ந்து போகும். அமராவின் நிலையும் அதுவாகவே இருந்தது.
அதன் பிறகு அமரா அமைதியாகவே இருந்தாள். நளன் அவ்வளவாக அவள் முன் வருவதில்லை. அனிச்சத்தை அவ்வப்பொழுது பார்த்தாலும் அவளுடன் உரையாடவில்லை அமரா.
நளன் தீவிர சிந்தனையுடன் இருக்க, அனிச்சம் அவனிடம் வந்து உரையாடினாள்.
"நளன், இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?"
"என்ன செய்யணும்னு சொல்ற."
"அமராவைப் பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க."
"யோசிக்க என்ன இருக்கு."
"என்ன விளையாடுறியா?"
"அனி, என்னனு தெளிவா பட்டுன்னு கேளு. எனக்கு உண்மையாவே புரியல."
"நீ தான் புரியாம பேசுற. இல்லை புரியாத மாதிரி நடந்துக்குற. அமராவை நம்மளோட கூட்டிட்டுப் போறதைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க."
"கூட்டிட்டு போறோம்னு எப்போ முடிவு செஞ்சோம்."
"நளன், என்னோட பொறுமையை சோதிக்காத. இங்க எப்படி விட்டுட்டு போறது. புருஷன் இல்லைன்னு இவுங்க எல்லாம் எப்போ வேணாலும் அவளைக் கொல்லலாம்."
"அதுக்கு இங்க உள்ள சூழல் மாறணும். நாம கூட்டிட்டு போறது தீர்வு கிடையாது."
"ஏன் நளன் இவ்ளோ சுயநலமா பிடிவாதமா இருக்க. அமரா பாவம்" என்று அவள் கூறியதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
"அனி, நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். இயற்கையை மாத்தி எழுதுறது நல்லதில்லை. என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடக்கும்."
"இதுக்கு பேரு நிறைய இருக்கு."
"என்ன?" என்றான் புருவம் சுழித்து.
"கையாலாகாத்தனம், பொறுப்பில்லாத்தனம்" என்று அவள் கூற, அவன் பற்களை நறநறவென்று கடித்தான்.
"நிறுத்திடி... நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லாமே உன் இஷ்டப்படி நடக்கணும்னு நினைக்கிற" என்று கத்தியவன், தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு, "சரி, அமராகிட்ட போய் கேளு. நம்ம கூட அவ வந்தா கூட்டிட்டு போகலாம்" என்றான் பொறுமையாக.
"அமரா நிச்சயம் சரின்னுதான் சொல்லுவா. அவளுக்கு இரண்டு குழந்தையைக் காக்கும் பொறுப்பு இருக்கு" என்றாள் அனிச்சம்.
"சரி வா.. நானும் வரேன்.. நீ போய் கேளு" என்றான்.
இருவரும் உள்ளே சென்றனர்.
அமரா குழந்தையை வைத்துக் கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தாள். குழந்தையின் செப்பு இதழ்களில் மெல்லிய சிரிப்பு ஒன்று உதிர்ந்தது. அதில் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள். அந்த இதழ்களை நடுங்கும் கரங்களுடன் வருடினாள். தன் கணவனின் மறுப் பிரதியாய் இருந்த குழந்தை அவளுக்கு வரமே. வாழ வேண்டும் என்ற பிடிப்பினைக் கொண்டு வந்தது.
அறைக்குள் இருவர் வந்தது கூட அவள் மூளைக்கு எட்டவில்லை.
"அமரா" என்று அழைத்தாள் அனிச்சம்.
அமரா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். இதுவரை அவர்கள் இருவரிடமும் வார்த்தைகளை எண்ணிக்கையிலே உதிர்த்திருக்கிறாள். ஆம், இல்லை... அதுவும் இல்லையென்றால் ஒற்றை வார்த்தையில் பதில். அவ்வளவே. இது அவள் இயல்பில் பொறுந்தாதது. செழியனுடன் உரையாடிக் கொண்டே இருப்பாள். பேசி பேசியே செழியனைக் கரைத்தவள் ஆயிற்றே.
இப்பொழுதும் அனிச்சம் அழைத்ததற்கு, "சொல்லுங்க" என்றாள் ஒற்றை வார்த்தையில்.
"அமரா... உங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை. நாங்க எப்போ எங்க உலகத்துக்கு போவோம்னு தெரியாது. ஆனா நாங்க போகும் போது உங்களையும் நிச்சயம் கூட்டிட்டு போவோம்" என்று அனிச்சம் கூற, அமரா மறுத்தாள்.
அனிச்சத்திற்கு சற்று அதிர்ச்சிதான். அமரா ஏன் மறுக்க வேண்டும் என்று.
"ஏன்?"
"நான் இங்கதான் இருக்கணும். என் கணவன் உருவாக்க நினைச்ச சமூகத்தை உருவாக்கணும். அதில் என்னோட குழந்தை வளரணும்" என்றாள். மிக நீண்ட வாக்கியம். இதுவரை பேசியதில்லை.
"ஆனா எப்படி?" என்றான் நளன். அவன் இதுவரை அவளிடம் நேரடியாகப் பேசியதில்லை. இதுவே முதல்முறை.
"எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சுட்டீங்க. போதும். இன்னும் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யணும்" என்றாள் அவள்.
"நிச்சயமா" நளன்.
"தயவு செஞ்சு என் முன்னாடி நீங்க வராதீங்க. கொஞ்சம் கொஞ்சமாய் நான் சிரமப்பட்டு திடப்படுத்துற மனசு, உங்களைப் பார்த்த அடுத்த நொடி, சரிஞ்சு விழுந்திருது. என்னோட செழியனை நீங்க ரொம்ப ஞாபகப்படுத்துறீங்க?"
"செழியனை உங்களால மறக்க முடியுமா?" அனிச்சம்.
"செழியனை மறக்க முடியாது. அவர் எனக்குள்ள இருக்கார். ஆனா நளனைப் பார்க்கும் போது வாழ்ககையோட ஏக்கங்கள் வரிசைக்கட்டி நிக்கிது. அதை எதிர்த்து நான் வெளில வரணும்னு நினைக்கிறேன். அது சிதைஞ்சு போகுது நான் இவரைப் பார்க்கும் போது."
அவளின் இந்த கண்ணோட்டத்தில் அனிச்சம் அதிர்ச்சியடைந்தாள். உண்மையில் அவளுக்கு இப்படி ஒரு கோணம் இருப்பது விளங்கவில்லை. சில உணர்வுகளைக் கடந்து வந்தால் மட்டுமே பிறழ்ச்சி கோணம் தென்படும். அமரா அனுபவித்ததை அனிச்சம் உணர வாய்ப்பில்லை. அமராவுக்கு இனியாவது போராட்டம் இல்லாத வாழ்வு கொடுக்க நினைத்தாள் அனிச்சம். ஆனால் இந்த போராட்டத்தில் தான் என் வாழ்க்கையே இருக்கிறது என்று நிற்கிறாள் அமரா.
இந்த விடயத்தில் நளனின் நிராகரிப்பு கோவத்தைக் கொடுத்தது அனிச்சத்திற்கு. ஆனால் அமராவின் நிராகரிப்பு சிந்தனையைத் தூண்டியது.
அமரா அப்படி ஒரு கூற்றை வைக்கவும் அங்கு சில நொடிகள் அமைதி நிலவியது.
"இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கோங்க. ஏனா உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பத்தி பேசணும்" என்றான் நளன்.
"சரி சொல்லுங்க" அமரா. அனிச்சம் அமைதியாகிவிட்டாள்.
"உங்களை அழைச்சிட்டு போறதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அனிச்சம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அது. மேலும் அது சாத்தியப்படுமானே தெரியலை. நாங்க எப்போ போவோம்னும் தெரியல. ஆனா என்ன நடந்தாலும் உங்களோட பாதுகாப்பை உறுதி செய்யாமல் போகக்கூடாது. அதுக்கு சில விஷயங்கள் யோசிச்சு வச்சிருக்கேன்" என்றவனை கேள்வியாக பார்த்தாள் அமரா.
"நாங்க ஏன் இந்த விஷயத்தில் இவ்ளோ தலையிடணும்னு நீங்க நினைக்காதீங்க. நாங்க இங்க வந்ததுக்கு காரணமே, செழியன் இறந்த சம்பவம்தான். ஒருவனின் மீள முடியா துயரின் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலக்கும் போது, அது இன்னொரு உலகத்தில் இருக்கும் என்னைப் பாதிக்கிது. அதனால நாங்க இங்க வந்தது எதார்த்தமான ஒன்று இல்லை. ஆனா இங்கிருந்து போகும் போது கொஞ்சம் நிம்மதியா போகணும்னு நினைக்கிறோம்" என்றான் தெளிவாக.
"உதவி செய்ய நினைக்கிறது தப்பில்லை. ஆனா எப்படி செய்ய முடியும். நீங்க உங்க உலகத்துக்கு போற வரை இங்க யார் கண்ணிலும் படக்கூடாது" என்றாள் அமரா.
"அப்படி யாராவது பார்த்தா என்ன நடக்கும்?" என்று அவன் கேட்க, திடுக்கிட்டனர் அனைவரும்.
"செழியனோட ஆவியோன்னு நினைக்கலாம்" என்றாள் மலர்.
அனைவரும் அவளைப் பார்த்தனர்.
"முதல் தடவைப் பார்க்கும் போது நானும் அப்படிதான் நினைச்சேன். அதனால ஊர்ல உள்ளவுங்களும் அப்படித்தான் நினைப்பாங்க" மலர்.
"நினைக்கட்டும்" நளன்.
"அதுல நமக்கு என்ன ஆதாயம் இருக்கு?"
"அதை வச்சு உங்களுக்கு தேவையான காரியம் சாதிச்சுக்கலாம்" என்றதும் பளிச்சென விளங்கியது அமராவுக்கு.
"செழியனின் ஆவி உலவுகிறது. இனி பெண்ணிற்கு கைம்பெண் சடங்கு செய்தால், அவன் கொன்றுவிடுவான் என்ற பயத்தை உருவாக்கலாம்" என்று கூறினான்.
"அப்பறம் இன்னொரு விஷயம். ஒரு ரெண்டு வருஷம் நீங்க மறைஞ்சிருந்து வாழணும். இந்த ரெண்டு குழந்தையையும் ஒன்னா வளர்க்கணும். நீங்க இந்த உலகத்துக்கு வெளிப்படுறப்போ, செழியன் பையன் யாருன்னு யாருக்கும் தெரியக் கூடாது. கடைசி வரை. அந்த உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும்ங்கிறதால, உங்களை கொல்ல வாய்ப்பு இல்லை. காலப்போக்கில் நான் இங்க இல்லைனாலும், செழியனோட ஆவியைப் பார்த்ததா சிலர் சொல்லிகிட்டே இருக்கணும். இந்த பழக்கம் மாறும் வரை செழியனோட ஆவியும் வார்த்தையில உயிர் வாழணும்" என்றான் நளன்.
அவனின் திட்டத்தைக் கேட்ட அமரா, அவனை மெச்சும் பார்வைப் பார்த்தாள். அனிச்சம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அவனை முறைக்கவும் தவறவில்லை. என்னிடம் ஏன் கூறவில்லை என்ற கேள்வியும் அதில் இருந்தது.
"ஆனா ரெண்டு வருஷம் மறைஞ்சு இருக்கணுமா? இந்த ஊருக்குள்ள அது சாத்தியமா?" என்றாள் மலர்.
அனைவரும் சிந்தனையில் உழன்றனர். அது மிகவும் முக்கியமான ஒன்று. இது எப்படி சாத்தியம். இருண்டு குழந்தைகளுடன், மறைந்து வாழ்வது சாத்தியமா? எந்த வசதிகளும் இல்லாமல். சற்று நேர யோசனைக்கு பின் அமராவின் இதழில் மென்னகை ஒன்று உதிர்ந்தது.
"இடம் நான் கண்டு பிடிச்சுட்டேன்" அமரா.
"எங்க?" அனிச்சம்.
"அது சொல்றேன். அப்பறம்" என்றாள். சற்றே ஏமாற்றம் அனிச்சத்திற்கு.
அதன் பிறகு அனிச்சமும் நளனும் வெளியில் கிளம்ப, "அனிச்சம், ரொம்ப நன்றி, என்னைக் காப்பாத்தணுங்கிற ஏக்கம் உங்க கண்ணில் தெரியிது" என்றவள், நளனிடம் திரும்பி, "செழியனோட அம்மாவை ஒரு தடவைப் பார்த்துட்டு போங்க. இன்னும் தன்னோட பிள்ளை எங்கேயோ உயிர் வாழ்ந்துட்டு இருக்காருன்னு நிம்மதியா இருக்கட்டும்" என்று கூறினாள்.
"என்னைப் பார்த்தா உங்க நம்பிக்கை சிதைஞ்சு போகுதுன்னு சொன்னீங்க?" பரவாயில்லையா?" நளன்.
"பரவாயில்லை. சிதைஞ்சு போனாலும் மீட்டெடுத்துக்குவேன்" என்றாள் நம்பிக்கையுடன்.
இப்பொழுது அவளின் பேச்சில் நம்பிக்கை வந்திருந்தது. அமராவுக்கும் நளனுக்கும் இடையில் ஒரு புரிதல் ஒன்று வந்திருந்தது.
அறையை விட்டு வெளியே சென்ற நளன் வேகமாக நடந்தான். கொள்ளைப் புரம் நோக்கி வேகமாக சென்றான். அவன் பின்னே ஓடினாள் அனிச்சம். அவனின் கைகளைப் பற்றினாள். உதறிவிட்டு சென்றான் அவன்.
"நளன், ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று மீண்டும் கையைப் பிடிக்க, "பொறுப்பில்லாதவன் கையை எதுக்கு பிடிக்கிற" என்றான்.
"நளன் தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிக்கக் கூடாதா?" என்றாள்.
"முடியாது போ.." என்றான் அவன். அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டாள்.
"ப்ப்ஸ்" என்று சலித்துக் கொண்டவன் அவளை விளக்கி வைத்துவிட்டு சென்றான்.
அனிச்சம் அடுத்து ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. அவள் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. அவள் மீண்டும் வந்து கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்த நளன், அவள் வராததைக் கண்டு திரும்பிப் பார்த்தான்.
அழுது கொண்டிருந்தாள். நளன் பதறிப் போனான்.
"அனி, என்ன ஆச்சு?" என்று அருகில் வந்தான்.
அவள் அழுதுக் கொண்டே, அவனைக் கட்டிக் கொண்டாள். அதன் பிறகு அவளை சமாதானம் செய்வதே பெரும் பாடாய் போயிற்று.
அவளை அமர வைத்து அவனும் அமர்ந்தான்.
"என்ன பயம் உனக்கு? ஏன் இந்த அழுகை?"
"எனக்கு பயமா இருக்கு."
"அதுதான் ஏன்?"
"இத்தனை நாள் அமராவை எனக்கு புரியலை. ஆனா அமரா அளவுக்கு நான் தைரியம் கிடையாது. தெளிவும் கிடையாது. உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு" என்றாள்.
அவளின் அன்னையை இழந்த பொழுது அழுத்தமாய் இருந்தவள், அவனை இழந்து விடுவோமோ என்று அழுகிறாள். அவனுக்கு பிடித்திருந்தது உண்மையில். அதில் ஒரு சுகம் இருக்கிறதே.
அழுது அழுது மிளகாய்ப் பழமாக சிவந்திருந்து மூக்கு. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டே இருந்தாள். அவளின் இரண்டு கைகளையும் பிடித்தான் அவன். வந்த அழுகையை துடைக்க கைகளை உருவினாள்.
"அனி.. என்னைப் பாரு" என்றான் கிறக்கமான குரலில்.
அவன் குரலில் தோன்றிய பேதம் அவளின் அழுகையை நிறுத்தியது.
அவனின் நேத்திரங்கள் தொடுத்த அம்புகளை ஏற்க முடியாது தலைதாழ்த்தினாள்.
"நளன், நான் எவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு இருக்கேன்.. நீ விளையாடுற" என்று கைகளை உருவ முயற்சித்தாள்.
"நானும் உணர்ச்சி வசப்பட்டுதான் இருக்கேன்" என்றான் விஷமமாக. அவன் பார்வையும் தேடலும் வேறு பரிமாணம் அடைந்திருந்தது.
"நளன்..."
"ம்ம்ம்... சொல்லு..."
"உன்கிட்ட பேசணும்.."
"எனக்கு இப்போ பேசப் புடிக்கல.." என்று அவளின் இடையை வளைத்து, அவளை அருகில் இழுத்தான். கூச்சம் அவளை நெட்டித் தள்ளியது.
"எனக்கு இப்போவே பேசணும்.." என்றாள் கொஞ்சம் பிசிறு தட்டியக் குரலில்.
"பேசு.."
"என்னை விடு.. இப்படி இருந்தா எனக்கு பேச வராது."
"இப்படியே இருந்தா நீ பேசு.. இல்லை பேச வேண்டாம்" என்று வம்பு வளர்த்தான்.
"ஒரு அஞ்சு நிமிஷம்" என்று இடையில் இருந்த அவனின் கைகளை பிரிக்க முற்பட்டாள். கைகளும் சிறைப்பட்டது. அவளின் தோள் வளைவில் முகம் புதைத்தவன், "அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் என்ன செய்யலாம்" என்று அவன் வினவ, வெட்பம் சுமந்த அவனின் மூச்சுக் காற்றில் அவள் தொய்ந்து அவன் மேலே விழுந்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு பறவை ஒன்று குரல் கொடுக்க, இருவரும் திடுக்கிட்டனர். அதுதான் வாய்ப்பு என்று அவள் ஓரடி தள்ளி அமர்ந்தாள். அவளின் இந்த செய்கையில் சற்று சப்தமாகவே நகைத்தான் நளன்.
அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, "ம்ம்ம்..சொல்லு" என்றான் அவள் வலகரத்தில் இடக்கரம் கோர்த்து.
"அமராவை நீ நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க."
"ம்ம்ம்... அதுக்கு?"
"ஒன்னும் இல்ல.. நீ சொன்ன மாதிரி அமரா நம்ம கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாளே. அதனால சொன்னேன்".
"எனக்கு நீ பொறாமைல சொன்ன மாதிரி இருந்துச்சு."
"எனக்கு என்ன பொறாமை? அமரா அழுததைப் பார்த்து நீ கொஞ்ச நேரம் செழியனா இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்."
"அது கருணை. மனசோட மெல்லிய பாகம்."
"மனசு ஒன்னுதான்."
"இல்ல... மனசுக்கு வேஷம் போடவும் தெரியும். நான் செழியனா இருக்கதை உன்னோட இன்னொரு மனசு ஏத்துக்காது."
"அப்படிலாம் இல்லை."
"அப்போ நான் இங்கயே இருக்கவா?" என்றதும் அவனை முறைத்தாள்.
ஆனால் அவள் மனதைக் கண்டு கொண்டானே அவன். அதை மறைக்க முற்பட்டாள் அவள்.
"நீ இந்த கஷ்டம் வாழ்க்கை முழுக்கப் பட முடியாது. அதான் அமராவை கூட்டிட்டு போக வேண்டாம்னு சொன்னேன். அமராவும் அழுத்தமானவ. நீ மேலோட்டமா பாக்குறப்போ தெரியாது" என்றான்.
உண்மைதான் நளன் கூறுவது. இதெல்லாம் அவள் மனதில் தோன்றவே இல்லை. நளன் இவ்வளவு தூரம் யோசித்தாருக்கிறான். அவளுக்காக. அமராவுக்காக.
நிலவு ஒழுகும்...
மயங்கும் மாலை
மல்லிகை வாசம்
மலர்ந்த மொட்டு
மூச்சின் வெட்பம்
வெட்கம் நான்
தீர்க்க நீ!!!
அமரா ஒரு வாரமாக நைந்து போன மலராய் இருந்தாள். அனிச்சமும் மலரும் அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டனர். மலரின் கணவன் அனைத்துத் தகவல்களையும் கொடுத்ததால், இவர்களால் அமராவை பாதுகாக்க முடிந்தது. தேவர் பிள்ளையின் ஆட்களுடன் சேர்ந்து அமராவைத் தேடுவது போல் அவர்களைத் திசைத் திருப்பியும் விட்டான். ஒரு கட்டத்தில் தேவர் பிள்ளைக்கு இதில் விருப்பம் இல்லை என்றும், அவர் குடும்பம், அவர் வாரிசு என்று வந்தவுடன் அவர் மாறிவிட்டார் என்று கூட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி, பலரின் மனதில் சந்தேக விதையை விதைத்தான். அனைத்துப் பெண்களும் அமரா கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டனர்.
அமராவுக்கு பிள்ளைப் பேறு வலி எடுத்தது. மலர் அருகில் இருந்து வேண்டிய அனைத்தும் செய்தாள். அனிச்சம் அவளுக்கு உதவியாக இருந்தாள். அமராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அனிச்சம் விழிகளில் நீர் கோர்த்து நின்றிருந்தாள். எத்தனை பெரிய தவம் இது. அவர்கள் உலகில் இந்த வரம் கிடைக்க, எத்தனை திட்டங்கள். மனிதனாய்ப் பிறப்பது மாதவம் இல்லை. ஒரு மனிதனை ஈன்றெடுப்பது மாதவம் அவர்கள் உலகைப் பொறுத்தவரை.
அமரா கத்தியதில் அந்த அறையே அதிர்ந்தது. பல வருடங்களாக, தன் வயிற்றுக்குள் பொத்தி வைத்திருந்த முத்தை உதிர்த்த சிப்பியின் ஓடுகள் அயர்ந்து போகும். அமராவின் நிலையும் அதுவாகவே இருந்தது.
அதன் பிறகு அமரா அமைதியாகவே இருந்தாள். நளன் அவ்வளவாக அவள் முன் வருவதில்லை. அனிச்சத்தை அவ்வப்பொழுது பார்த்தாலும் அவளுடன் உரையாடவில்லை அமரா.
நளன் தீவிர சிந்தனையுடன் இருக்க, அனிச்சம் அவனிடம் வந்து உரையாடினாள்.
"நளன், இப்படி அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?"
"என்ன செய்யணும்னு சொல்ற."
"அமராவைப் பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க."
"யோசிக்க என்ன இருக்கு."
"என்ன விளையாடுறியா?"
"அனி, என்னனு தெளிவா பட்டுன்னு கேளு. எனக்கு உண்மையாவே புரியல."
"நீ தான் புரியாம பேசுற. இல்லை புரியாத மாதிரி நடந்துக்குற. அமராவை நம்மளோட கூட்டிட்டுப் போறதைப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்க."
"கூட்டிட்டு போறோம்னு எப்போ முடிவு செஞ்சோம்."
"நளன், என்னோட பொறுமையை சோதிக்காத. இங்க எப்படி விட்டுட்டு போறது. புருஷன் இல்லைன்னு இவுங்க எல்லாம் எப்போ வேணாலும் அவளைக் கொல்லலாம்."
"அதுக்கு இங்க உள்ள சூழல் மாறணும். நாம கூட்டிட்டு போறது தீர்வு கிடையாது."
"ஏன் நளன் இவ்ளோ சுயநலமா பிடிவாதமா இருக்க. அமரா பாவம்" என்று அவள் கூறியதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது.
"அனி, நான் ரொம்ப பொறுமையா பேசிட்டு இருக்கேன். இயற்கையை மாத்தி எழுதுறது நல்லதில்லை. என்ன நடக்கணும்னு இருக்கோ அது நடக்கும்."
"இதுக்கு பேரு நிறைய இருக்கு."
"என்ன?" என்றான் புருவம் சுழித்து.
"கையாலாகாத்தனம், பொறுப்பில்லாத்தனம்" என்று அவள் கூற, அவன் பற்களை நறநறவென்று கடித்தான்.
"நிறுத்திடி... நானும் பாத்துட்டே இருக்கேன். எல்லாமே உன் இஷ்டப்படி நடக்கணும்னு நினைக்கிற" என்று கத்தியவன், தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு, "சரி, அமராகிட்ட போய் கேளு. நம்ம கூட அவ வந்தா கூட்டிட்டு போகலாம்" என்றான் பொறுமையாக.
"அமரா நிச்சயம் சரின்னுதான் சொல்லுவா. அவளுக்கு இரண்டு குழந்தையைக் காக்கும் பொறுப்பு இருக்கு" என்றாள் அனிச்சம்.
"சரி வா.. நானும் வரேன்.. நீ போய் கேளு" என்றான்.
இருவரும் உள்ளே சென்றனர்.
அமரா குழந்தையை வைத்துக் கொண்டு தீவிர சிந்தனையில் இருந்தாள். குழந்தையின் செப்பு இதழ்களில் மெல்லிய சிரிப்பு ஒன்று உதிர்ந்தது. அதில் லயித்துப் போய் அமர்ந்திருந்தாள். அந்த இதழ்களை நடுங்கும் கரங்களுடன் வருடினாள். தன் கணவனின் மறுப் பிரதியாய் இருந்த குழந்தை அவளுக்கு வரமே. வாழ வேண்டும் என்ற பிடிப்பினைக் கொண்டு வந்தது.
அறைக்குள் இருவர் வந்தது கூட அவள் மூளைக்கு எட்டவில்லை.
"அமரா" என்று அழைத்தாள் அனிச்சம்.
அமரா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். இதுவரை அவர்கள் இருவரிடமும் வார்த்தைகளை எண்ணிக்கையிலே உதிர்த்திருக்கிறாள். ஆம், இல்லை... அதுவும் இல்லையென்றால் ஒற்றை வார்த்தையில் பதில். அவ்வளவே. இது அவள் இயல்பில் பொறுந்தாதது. செழியனுடன் உரையாடிக் கொண்டே இருப்பாள். பேசி பேசியே செழியனைக் கரைத்தவள் ஆயிற்றே.
இப்பொழுதும் அனிச்சம் அழைத்ததற்கு, "சொல்லுங்க" என்றாள் ஒற்றை வார்த்தையில்.
"அமரா... உங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லை. நாங்க எப்போ எங்க உலகத்துக்கு போவோம்னு தெரியாது. ஆனா நாங்க போகும் போது உங்களையும் நிச்சயம் கூட்டிட்டு போவோம்" என்று அனிச்சம் கூற, அமரா மறுத்தாள்.
அனிச்சத்திற்கு சற்று அதிர்ச்சிதான். அமரா ஏன் மறுக்க வேண்டும் என்று.
"ஏன்?"
"நான் இங்கதான் இருக்கணும். என் கணவன் உருவாக்க நினைச்ச சமூகத்தை உருவாக்கணும். அதில் என்னோட குழந்தை வளரணும்" என்றாள். மிக நீண்ட வாக்கியம். இதுவரை பேசியதில்லை.
"ஆனா எப்படி?" என்றான் நளன். அவன் இதுவரை அவளிடம் நேரடியாகப் பேசியதில்லை. இதுவே முதல்முறை.
"எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சுட்டீங்க. போதும். இன்னும் எனக்கு ஒரு உதவி மட்டும் செய்யணும்" என்றாள் அவள்.
"நிச்சயமா" நளன்.
"தயவு செஞ்சு என் முன்னாடி நீங்க வராதீங்க. கொஞ்சம் கொஞ்சமாய் நான் சிரமப்பட்டு திடப்படுத்துற மனசு, உங்களைப் பார்த்த அடுத்த நொடி, சரிஞ்சு விழுந்திருது. என்னோட செழியனை நீங்க ரொம்ப ஞாபகப்படுத்துறீங்க?"
"செழியனை உங்களால மறக்க முடியுமா?" அனிச்சம்.
"செழியனை மறக்க முடியாது. அவர் எனக்குள்ள இருக்கார். ஆனா நளனைப் பார்க்கும் போது வாழ்ககையோட ஏக்கங்கள் வரிசைக்கட்டி நிக்கிது. அதை எதிர்த்து நான் வெளில வரணும்னு நினைக்கிறேன். அது சிதைஞ்சு போகுது நான் இவரைப் பார்க்கும் போது."
அவளின் இந்த கண்ணோட்டத்தில் அனிச்சம் அதிர்ச்சியடைந்தாள். உண்மையில் அவளுக்கு இப்படி ஒரு கோணம் இருப்பது விளங்கவில்லை. சில உணர்வுகளைக் கடந்து வந்தால் மட்டுமே பிறழ்ச்சி கோணம் தென்படும். அமரா அனுபவித்ததை அனிச்சம் உணர வாய்ப்பில்லை. அமராவுக்கு இனியாவது போராட்டம் இல்லாத வாழ்வு கொடுக்க நினைத்தாள் அனிச்சம். ஆனால் இந்த போராட்டத்தில் தான் என் வாழ்க்கையே இருக்கிறது என்று நிற்கிறாள் அமரா.
இந்த விடயத்தில் நளனின் நிராகரிப்பு கோவத்தைக் கொடுத்தது அனிச்சத்திற்கு. ஆனால் அமராவின் நிராகரிப்பு சிந்தனையைத் தூண்டியது.
அமரா அப்படி ஒரு கூற்றை வைக்கவும் அங்கு சில நொடிகள் அமைதி நிலவியது.
"இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் சகிச்சுக்கோங்க. ஏனா உங்ககிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பத்தி பேசணும்" என்றான் நளன்.
"சரி சொல்லுங்க" அமரா. அனிச்சம் அமைதியாகிவிட்டாள்.
"உங்களை அழைச்சிட்டு போறதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அனிச்சம் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அது. மேலும் அது சாத்தியப்படுமானே தெரியலை. நாங்க எப்போ போவோம்னும் தெரியல. ஆனா என்ன நடந்தாலும் உங்களோட பாதுகாப்பை உறுதி செய்யாமல் போகக்கூடாது. அதுக்கு சில விஷயங்கள் யோசிச்சு வச்சிருக்கேன்" என்றவனை கேள்வியாக பார்த்தாள் அமரா.
"நாங்க ஏன் இந்த விஷயத்தில் இவ்ளோ தலையிடணும்னு நீங்க நினைக்காதீங்க. நாங்க இங்க வந்ததுக்கு காரணமே, செழியன் இறந்த சம்பவம்தான். ஒருவனின் மீள முடியா துயரின் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலக்கும் போது, அது இன்னொரு உலகத்தில் இருக்கும் என்னைப் பாதிக்கிது. அதனால நாங்க இங்க வந்தது எதார்த்தமான ஒன்று இல்லை. ஆனா இங்கிருந்து போகும் போது கொஞ்சம் நிம்மதியா போகணும்னு நினைக்கிறோம்" என்றான் தெளிவாக.
"உதவி செய்ய நினைக்கிறது தப்பில்லை. ஆனா எப்படி செய்ய முடியும். நீங்க உங்க உலகத்துக்கு போற வரை இங்க யார் கண்ணிலும் படக்கூடாது" என்றாள் அமரா.
"அப்படி யாராவது பார்த்தா என்ன நடக்கும்?" என்று அவன் கேட்க, திடுக்கிட்டனர் அனைவரும்.
"செழியனோட ஆவியோன்னு நினைக்கலாம்" என்றாள் மலர்.
அனைவரும் அவளைப் பார்த்தனர்.
"முதல் தடவைப் பார்க்கும் போது நானும் அப்படிதான் நினைச்சேன். அதனால ஊர்ல உள்ளவுங்களும் அப்படித்தான் நினைப்பாங்க" மலர்.
"நினைக்கட்டும்" நளன்.
"அதுல நமக்கு என்ன ஆதாயம் இருக்கு?"
"அதை வச்சு உங்களுக்கு தேவையான காரியம் சாதிச்சுக்கலாம்" என்றதும் பளிச்சென விளங்கியது அமராவுக்கு.
"செழியனின் ஆவி உலவுகிறது. இனி பெண்ணிற்கு கைம்பெண் சடங்கு செய்தால், அவன் கொன்றுவிடுவான் என்ற பயத்தை உருவாக்கலாம்" என்று கூறினான்.
"அப்பறம் இன்னொரு விஷயம். ஒரு ரெண்டு வருஷம் நீங்க மறைஞ்சிருந்து வாழணும். இந்த ரெண்டு குழந்தையையும் ஒன்னா வளர்க்கணும். நீங்க இந்த உலகத்துக்கு வெளிப்படுறப்போ, செழியன் பையன் யாருன்னு யாருக்கும் தெரியக் கூடாது. கடைசி வரை. அந்த உண்மை உங்களுக்கு மட்டுமே தெரியும்ங்கிறதால, உங்களை கொல்ல வாய்ப்பு இல்லை. காலப்போக்கில் நான் இங்க இல்லைனாலும், செழியனோட ஆவியைப் பார்த்ததா சிலர் சொல்லிகிட்டே இருக்கணும். இந்த பழக்கம் மாறும் வரை செழியனோட ஆவியும் வார்த்தையில உயிர் வாழணும்" என்றான் நளன்.
அவனின் திட்டத்தைக் கேட்ட அமரா, அவனை மெச்சும் பார்வைப் பார்த்தாள். அனிச்சம் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அவனை முறைக்கவும் தவறவில்லை. என்னிடம் ஏன் கூறவில்லை என்ற கேள்வியும் அதில் இருந்தது.
"ஆனா ரெண்டு வருஷம் மறைஞ்சு இருக்கணுமா? இந்த ஊருக்குள்ள அது சாத்தியமா?" என்றாள் மலர்.
அனைவரும் சிந்தனையில் உழன்றனர். அது மிகவும் முக்கியமான ஒன்று. இது எப்படி சாத்தியம். இருண்டு குழந்தைகளுடன், மறைந்து வாழ்வது சாத்தியமா? எந்த வசதிகளும் இல்லாமல். சற்று நேர யோசனைக்கு பின் அமராவின் இதழில் மென்னகை ஒன்று உதிர்ந்தது.
"இடம் நான் கண்டு பிடிச்சுட்டேன்" அமரா.
"எங்க?" அனிச்சம்.
"அது சொல்றேன். அப்பறம்" என்றாள். சற்றே ஏமாற்றம் அனிச்சத்திற்கு.
அதன் பிறகு அனிச்சமும் நளனும் வெளியில் கிளம்ப, "அனிச்சம், ரொம்ப நன்றி, என்னைக் காப்பாத்தணுங்கிற ஏக்கம் உங்க கண்ணில் தெரியிது" என்றவள், நளனிடம் திரும்பி, "செழியனோட அம்மாவை ஒரு தடவைப் பார்த்துட்டு போங்க. இன்னும் தன்னோட பிள்ளை எங்கேயோ உயிர் வாழ்ந்துட்டு இருக்காருன்னு நிம்மதியா இருக்கட்டும்" என்று கூறினாள்.
"என்னைப் பார்த்தா உங்க நம்பிக்கை சிதைஞ்சு போகுதுன்னு சொன்னீங்க?" பரவாயில்லையா?" நளன்.
"பரவாயில்லை. சிதைஞ்சு போனாலும் மீட்டெடுத்துக்குவேன்" என்றாள் நம்பிக்கையுடன்.
இப்பொழுது அவளின் பேச்சில் நம்பிக்கை வந்திருந்தது. அமராவுக்கும் நளனுக்கும் இடையில் ஒரு புரிதல் ஒன்று வந்திருந்தது.
அறையை விட்டு வெளியே சென்ற நளன் வேகமாக நடந்தான். கொள்ளைப் புரம் நோக்கி வேகமாக சென்றான். அவன் பின்னே ஓடினாள் அனிச்சம். அவனின் கைகளைப் பற்றினாள். உதறிவிட்டு சென்றான் அவன்.
"நளன், ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று மீண்டும் கையைப் பிடிக்க, "பொறுப்பில்லாதவன் கையை எதுக்கு பிடிக்கிற" என்றான்.
"நளன் தெரியாம சொல்லிட்டேன். என்னை மன்னிக்கக் கூடாதா?" என்றாள்.
"முடியாது போ.." என்றான் அவன். அவனைப் பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டாள்.
"ப்ப்ஸ்" என்று சலித்துக் கொண்டவன் அவளை விளக்கி வைத்துவிட்டு சென்றான்.
அனிச்சம் அடுத்து ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. அவள் விழிகளில் நீர் கோர்த்திருந்தது. அவள் மீண்டும் வந்து கெஞ்சுவாள் என்று எதிர்பார்த்த நளன், அவள் வராததைக் கண்டு திரும்பிப் பார்த்தான்.
அழுது கொண்டிருந்தாள். நளன் பதறிப் போனான்.
"அனி, என்ன ஆச்சு?" என்று அருகில் வந்தான்.
அவள் அழுதுக் கொண்டே, அவனைக் கட்டிக் கொண்டாள். அதன் பிறகு அவளை சமாதானம் செய்வதே பெரும் பாடாய் போயிற்று.
அவளை அமர வைத்து அவனும் அமர்ந்தான்.
"என்ன பயம் உனக்கு? ஏன் இந்த அழுகை?"
"எனக்கு பயமா இருக்கு."
"அதுதான் ஏன்?"
"இத்தனை நாள் அமராவை எனக்கு புரியலை. ஆனா அமரா அளவுக்கு நான் தைரியம் கிடையாது. தெளிவும் கிடையாது. உனக்கு ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு" என்றாள்.
அவளின் அன்னையை இழந்த பொழுது அழுத்தமாய் இருந்தவள், அவனை இழந்து விடுவோமோ என்று அழுகிறாள். அவனுக்கு பிடித்திருந்தது உண்மையில். அதில் ஒரு சுகம் இருக்கிறதே.
அழுது அழுது மிளகாய்ப் பழமாக சிவந்திருந்து மூக்கு. கட்டுப்படுத்த முடியாத கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டே இருந்தாள். அவளின் இரண்டு கைகளையும் பிடித்தான் அவன். வந்த அழுகையை துடைக்க கைகளை உருவினாள்.
"அனி.. என்னைப் பாரு" என்றான் கிறக்கமான குரலில்.
அவன் குரலில் தோன்றிய பேதம் அவளின் அழுகையை நிறுத்தியது.
அவனின் நேத்திரங்கள் தொடுத்த அம்புகளை ஏற்க முடியாது தலைதாழ்த்தினாள்.
"நளன், நான் எவ்ளோ உணர்ச்சிவசப்பட்டு இருக்கேன்.. நீ விளையாடுற" என்று கைகளை உருவ முயற்சித்தாள்.
"நானும் உணர்ச்சி வசப்பட்டுதான் இருக்கேன்" என்றான் விஷமமாக. அவன் பார்வையும் தேடலும் வேறு பரிமாணம் அடைந்திருந்தது.
"நளன்..."
"ம்ம்ம்... சொல்லு..."
"உன்கிட்ட பேசணும்.."
"எனக்கு இப்போ பேசப் புடிக்கல.." என்று அவளின் இடையை வளைத்து, அவளை அருகில் இழுத்தான். கூச்சம் அவளை நெட்டித் தள்ளியது.
"எனக்கு இப்போவே பேசணும்.." என்றாள் கொஞ்சம் பிசிறு தட்டியக் குரலில்.
"பேசு.."
"என்னை விடு.. இப்படி இருந்தா எனக்கு பேச வராது."
"இப்படியே இருந்தா நீ பேசு.. இல்லை பேச வேண்டாம்" என்று வம்பு வளர்த்தான்.
"ஒரு அஞ்சு நிமிஷம்" என்று இடையில் இருந்த அவனின் கைகளை பிரிக்க முற்பட்டாள். கைகளும் சிறைப்பட்டது. அவளின் தோள் வளைவில் முகம் புதைத்தவன், "அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் என்ன செய்யலாம்" என்று அவன் வினவ, வெட்பம் சுமந்த அவனின் மூச்சுக் காற்றில் அவள் தொய்ந்து அவன் மேலே விழுந்தாள்.
சிறிது நேரத்தில் ஒரு பறவை ஒன்று குரல் கொடுக்க, இருவரும் திடுக்கிட்டனர். அதுதான் வாய்ப்பு என்று அவள் ஓரடி தள்ளி அமர்ந்தாள். அவளின் இந்த செய்கையில் சற்று சப்தமாகவே நகைத்தான் நளன்.
அவளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு, "ம்ம்ம்..சொல்லு" என்றான் அவள் வலகரத்தில் இடக்கரம் கோர்த்து.
"அமராவை நீ நல்லாவே புரிஞ்சு வச்சிருக்க."
"ம்ம்ம்... அதுக்கு?"
"ஒன்னும் இல்ல.. நீ சொன்ன மாதிரி அமரா நம்ம கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாளே. அதனால சொன்னேன்".
"எனக்கு நீ பொறாமைல சொன்ன மாதிரி இருந்துச்சு."
"எனக்கு என்ன பொறாமை? அமரா அழுததைப் பார்த்து நீ கொஞ்ச நேரம் செழியனா இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன்."
"அது கருணை. மனசோட மெல்லிய பாகம்."
"மனசு ஒன்னுதான்."
"இல்ல... மனசுக்கு வேஷம் போடவும் தெரியும். நான் செழியனா இருக்கதை உன்னோட இன்னொரு மனசு ஏத்துக்காது."
"அப்படிலாம் இல்லை."
"அப்போ நான் இங்கயே இருக்கவா?" என்றதும் அவனை முறைத்தாள்.
ஆனால் அவள் மனதைக் கண்டு கொண்டானே அவன். அதை மறைக்க முற்பட்டாள் அவள்.
"நீ இந்த கஷ்டம் வாழ்க்கை முழுக்கப் பட முடியாது. அதான் அமராவை கூட்டிட்டு போக வேண்டாம்னு சொன்னேன். அமராவும் அழுத்தமானவ. நீ மேலோட்டமா பாக்குறப்போ தெரியாது" என்றான்.
உண்மைதான் நளன் கூறுவது. இதெல்லாம் அவள் மனதில் தோன்றவே இல்லை. நளன் இவ்வளவு தூரம் யோசித்தாருக்கிறான். அவளுக்காக. அமராவுக்காக.
நிலவு ஒழுகும்...