ஒழுகும் நிலவு 17
இருள்மதி இரவு
மூளி பொழுது
வெட்ட வெளி
தனியா உள்ளம்
தகையா உறவு
வசமாய் மொழி
பிணமாய் நீ
எழுச்சியாய் நான்!!!
செழியன் செய்த தவறை நினைத்து நினைத்து தவித்துவிட்டான். அமரா அவனைச் சமாதானம் செய்ய முடியாது தவித்தாள். ஒருவகையில் அவள்தான் இந்தத் தவறுக்கு மூலகாரணம்.
"அமரா.. ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன். இப்போ அந்தப் பொண்ணும் உயிரோட இருக்க முடியாது. சத்யனையும் கொன்னுட்டேன்" என்று துடித்தவனைக் கட்டிக் கொண்டாள்.
கோகிலம் இடிந்து போய் அமர்ந்தவர்தான். அவர் கணவனை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைத்தாலே அது தவறாக முடிகிறது. ஏதோ ஒனு மாற்றம் வரும் என்று அவர் நினைத்தார். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழாகப் போனது.
"செழியன், சத்யன் கொடியோட புருஷனா?" என்று அமரா கேள்வி ஒன்றைக் கேட்க, அடுத்து நிகழவிருக்கும் அனர்த்தம் விழி முன் தோன்றி அவர்களை அச்சுருத்தியது.
"செழியன், கொடிய காப்பாத்தணும்" என்று யோசனை செய்தவள், அடுத்த நொடி, கணமான பொருளை எடுத்து கதவை உடைக்க ஆரம்பித்தாள்.
சிலையாய் நின்ற செழியனுக்கு உயிர் வந்தது. அவளிடம் இருந்து பொருளை வாங்கி, கதவை உடைத்தான். மூவருமே அவசரமாகக் கிளம்பி சென்றனர். அவர்கள் நினைத்தது போல் பஞ்சாயத்துக் கூடியிருந்தது.
செழியனின் நண்பன் நடுவில் நின்று கொண்டிருந்தான். தேவர் பிள்ளை அவர் நினைத்தது போல் பேசிக்கொண்டிருந்தார்.
அந்தப் பெண்ணைச் சுடுகாட்டில் வைத்து எரித்து முடித்தாயிற்று. நினைத்ததைச் செய்ய வேண்டும் என்ற ஆணவத்தோடு, இந்த ஒரு விடயத்தில் விட்டுக்கொடுத்தால் அவரின் கொடி கீழிறங்கிவிடும் என்ற எண்ணம். காலம் காலமாக மனிதர்களின் மனதில் விதைத்த ஒரு விடயத்தை இப்படி மாற்ற முற்பட்டால், அவரின் மேல் உள்ள மரியாதை பயம் என்னாவது. மக்கள் ஒரு அடக்குமுறையுடன் வாழ்ந்தால்தான் அவருக்குப் பதவியும் பரிவட்டமும். அதனால் சத்யனின் விடயம் வெளியில் சொல்வதற்கு முன்னே அனைத்தும் நிகழ்த்தியாயிற்று.
இப்பொழுது என்ன நடந்தது என்று பஞ்சாயத்து. இனி என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. அவர் இயக்கும் நாடகத்தில் சிலர் சுயநினைவுடன் நடிக்கின்றனர். பலர் சுயநினைவு இன்றி நடிக்கின்றனர்.
செழியன் அங்கு வந்ததும் அவருக்குக் கோவம் வந்தது. அவனுடைய நண்பனை அடிக்கும்படி உத்தரவிட்டார். அவன் பயப்படக் கூடும் என்று எதிர்பார்த்தார். ஆனால் செழியன் அவருக்கு ஒரு படி மேல் சென்று கத்தினான்.
"யார் என்ன சொன்னாலும் நம்புவீர்களா? இப்போ சொல்றேன் என்ன நடந்தச்சுன்னு" என்று அவன் ஆரம்பிக்க, தேவர் பிள்ளை கத்தினார்.
"செழியா, நீ வீட்டுக்கு போ. ராசாவையே எதிர்த்து பேச உனக்கு யார் உரிமை கொடுத்தா?" என்று அவரும் குரலை உயர்த்த, அங்கிருந்த மக்கள் விசித்திரமாய்ப் பார்த்தனர்.
இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததில்லை. அதனால் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யனின் உடல் அங்குதான் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் கொடி அமர்ந்திருந்தாள். அவள் துளி கூட அழவில்லை. ஆனால் விழியில் விரக்தி வழிந்து கொண்டிருந்தது.
தேவர் பிள்ளையின் கண்ணசைவில் நான்கு நபர்கள் செழியனை அடிக்க வர, அங்கிருந்த கையாட்கள் வர, அதை எதிர்பார்த்தவன் போல், அருகில் இருந்த அரிவாள் எடுத்து தேவர் பிள்ளையின் கழுத்தில் வைத்தான்.
அதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
"இனி யாராவது ஒரு வார்த்தை பேசுனாலும் இவர் தலை இருக்காது" என்று அவன் கூற, ஊரே பதைபதைத்தது. ஆனால் தேவர் பிள்ளை மட்டும் சிறிதும் அச்சமின்றி நின்றிருந்தார்.
அவனுடைய பலகீனம் எது என்று அவர் அறிவாரே. அவனைப் பார்த்து அவர் சிரிக்க, அவன் ஏளனமாக நகைத்தான் அவரைப் பார்த்து.
"நீயெல்லாம் மனுச ஜென்மத்தில சேர்த்தியே கிடையாது. நீ போனா எங்க அம்மாவும் சாகணும். அதனால உன்னைப் பயமுறுத்த இப்படிச் செய்றேன்னு நினைச்சா, உன்னைவிட முட்டாள் வேற யாரும் இல்லை" என்றான் பூடகமாக.
விரிந்திருந்த உடத்தில் இருந்த புன்னகை இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தது.
"இங்க பாரு... யாரோ ஒரு பொண்ணு. அவ சாகக் கூடாதுனு நினைச்ச நான், எங்க அம்மாவை அந்த நிலைக்கு விடுவேனா? நீ செத்தா எங்க அம்மாவுக்குக் காரியம் செய்ய மாட்டேன். அவுங்களுக்கு விடுதலை கிடைச்சிருச்சுன்னு கொண்டாடுவேன்" என்று அவன் கூற, அவர் சற்று திடுகிட்டுதான் போனார்.
மகன் என்றும் பாராமல் அவர் மனதில் வஞ்சம் குடியேற, சமயம் பார்த்துக் காத்திருந்தார் அவர். அவனை வெட்டி சாய்த்திடவும் இனி தயக்கம் இல்லை. அவரின் குடும்ப மரியாதை, கட்டளைகள் என்று அனைத்தையும் துறந்தவன் இனி இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?
மரியாதை அதிகாரத்திலும் ஆணவத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு நீ மரியாதை கொடு என்று சொல்வது மரியாதை இல்லை. அப்படிக் கிடைக்கும் மரியாதை மரியாதையே இல்லை என்று இவருக்கு எப்பொழுது விளங்கப் போகிறதோ?
"இனி வாங்கடா... பாத்துறலாம்... இனி புருஷன் செத்துட்டானு பொண்டாட்டியை பிணமேடை ஏற்றும் கீழ்த்தரமான செயல் இந்த ஊரில் நடக்கக் கூடாது. இதைத் தடுக்க இடையில் யார் வந்தாலும் அவுங்க உயிரையும் எடுப்பேன்" என்று சூளுரைத்தான் அவன்.
ஆண்கள் அனைவரின் எதிர்ப்புக் குரல்களும் அதிர்ந்து ஒலித்தது. அதில் பெண்களின் ஆதரவு குரல்கள் தேய்ந்து கரைந்து போனது. இந்தக் குரல் அவர்களுக்குப் புதிதல்ல. எங்கோ கேட்ட சாயல் அந்தக் குரலில் வழிந்தது. அனுதினமும் அவர்களுக்குள் ஒலித்து அடங்கிய குரலாயிற்றே. அதனால் முற்றிலுமாக அடையாளம் தெரியாமல் போகும் வாய்ப்பு இல்லை.
அதன் பிறகு செழியன் நடந்த ஒவ்வொன்றையும் விளக்கினான். அனைவரும் விக்கித்துப் போய் நின்றனர்.
அவனின் குரல் எழுச்சிக் குரலாய் இருக்கும் என்று அவன் நினைக்க, அதற்கு நேர்மாறாக, ஒருவரும் குரல் எழுப்பவில்லை. குரல் எழுப்ப வேண்டியது பெண்கள். ஆனால் எப்படி எழுப்புவார்கள். கணவன் இல்லையேல் இந்த உலகில் வாழ அருகதையற்று போய்விடுவோம் என்று போதனையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவ்வளவு ஏன். இந்த நினைவை சுமந்து வாழ்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்கள் பத்தினி பெண்களின் பட்டியலில் இருந்து நீக்கப் படுவர். அப்படி ஒரு அவப்பெயருடன் வாழ்வது பெரும் பாவத்திற்குச் சமம் என்று அரும்பெரும் நற்போதனைகள் வேறு. இனி வாய் திறக்கக் கூடுமா. பெண்கள் கவரி மான் போன்றவர்கள். மயிர் இழந்தால் உயிர் துறக்க வேண்டும். இப்படி மனதில் அழுத்தி அழுத்தி, கனத்து போன மனம் கடப்பதெல்லாம் கணமான பொழுதுகள் மட்டுமே. பிறக்கும் பொழுது அன்னையும் தந்தையும் முடிவாகிறது. திருமணச் சடங்காய் ஒருத்தியின் கழுத்தில் ஏறுவதற்குப் பெயர் தாலி அல்ல. தூக்கு கயிறு.
அங்கு எழுச்சிக் குரல்கள் ஒலிக்காதது தேவர் பிள்ளைக்கு அனுகூலம்தான். நூற்றாண்டுகளாய் ஏற்றி வைத்த கருத்துக்களை, இவனின் சில வார்த்தைகள் மாற்றிவிடுமா என்ன?
"இந்த ஊரே மங்களத்துக்குப் பெயர் போன ஊர். அப்படி மூளியெல்லாம் இந்த ஊரில் வாழ வைக்க முடியாது. இந்தச் சட்டத்தை யெல்லாம் மாத்தக் கூடாது. அப்புறம் தெய்வக் குத்தமாயிரும்" என்று கூட்டத்தில் இருந்து சில குரல்கள்.
செழியனின் ஆத்திரம் பலமடங்காகியிருந்தது.
அவனின் வார்த்தைகளில் அங்கிருந்த இரு பெண்கள் எழுச்சி பெற்றது உண்மை. ஒன்று அமரா. மற்றொன்று கொடி. கணவன் இறந்துவிட்டான் என்று அலங்கோலமாக இருந்தாள். அவளுக்கு இன்னும் சடங்குகள் நிறைவேற்றப் படவில்லை. வேகமாக எழுந்தாள். அவளின் வீடு அங்கு அருகில் தான் இருந்தது. வீட்டிற்குள் சென்று கதவடைத்தவள், சற்று நேரத்தில் வெளியில் வந்தாள்.
அதற்குள் அங்குக் கூடியிருந்த கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. அவள் ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்றே அவள் பின் ஓடினர் சிலர். அவள் வீட்டு ஆட்கள். விசித்திரமாய் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் சுடுகாடு அனுப்பி வைக்கத் திட்டம் இருக்கிறது அவர்களிடத்தில். ஆனாலும் அவள் தற்கொலை செய்துவிடக் கூடாது. அவளைச் சுடுகாடு அனுப்பி வைப்பதிலும் முறைமைக் கடைப்பிடிக்க வேண்டுமாம்.
அவள் கதவடைத்ததும், அவளுடைய பெற்றோர் கதவைத் தட்ட, சிறிது இடைவெளிக்குப் பின் கதவு திறக்கப் பட்டது. வெளியில் நின்றவர்கள் முகத்தில் அதிர்ச்சி. ஏனெனில் அவள் முழு அலங்காரத்துடன் சர்வ லட்சணமும் பொருந்திய ஏந்திழையாக வந்து நின்றாள். அரக்கு வண்ணப் பட்டில், முடி முதல் அடி வரை நகைகள். அவளிடம் இருந்த அனைத்தையும் அணிந்திருந்தாள். கழுத்தில் இருந்த தாலியைக் கழட்டி வைத்துவிட்டாள் போல. முகம் முழுக்க மஞ்சளும், நெற்றி நிறையக் குங்குமமும் என்று வந்து நின்றாள். அவள் அழுததன் அடையாளமாக மஞ்சள் திட்டுத்திட்டாய் உலக வரைபடம் போல் முகத்தில் காட்சியளித்தது.
அவளின் இந்த அவதாரத்தைக் கண்ட அவளின் பெற்றோர்கள் ஆடிப் போய்விட்டனர்.
"அடி பாவி... இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியே. இனி ஊரு உன்னைய ஒழுக்கம் கெட்டவன்னு பேசும். ஐயோ.. உன்னைப் பெத்து நான் இதெல்லாம் கேக்கணும்னு இருக்கே" என்று அழுதார் அவளின் அன்னை.
அவளின் தந்தை ஒருபடி மேலே சென்று அவளை அடிக்கக் கை ஓங்கினார்.
"அவரின் கையைப் பிடித்தவள், என்னைக்கு என்னை அந்தக் கேடுகெட்டவனுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தீங்களோ, அன்னைக்கே நான் உங்க மகள் இல்லை. இப்போ அவனும் உயிரோடு இல்லை. அதனால நான் அவன் பொண்டாட்டியும் இல்லை. என்னை அடிக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை" என்றவள், தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள்.
"புள்ளையாடி பெத்து வச்சிருக்க" என்று அவளின் அன்னைக்கு அடி விழ, அவள் "இதுக்கு மேல் அம்மாவை அடிச்சா, நானும் என் புள்ளையும் சேர்ந்து செத்துப் போவோம்" என்றதும் ஓங்கிய கைகள் கீழிறங்கியது.
"படு பாவி பச்சைப் புள்ளைய என்ன வார்த்தை சொல்றா... நீ எனக்குப் புள்ளையா இருக்கவும் தகுதியில்லை. அவனுக்கு மனைவியா இருக்கவும் தகுதியில்லை. இந்தப் புள்ளைக்கு அம்மாவா இருக்கவும் தகுதியில்லை" என்றார்.
"இதுக்குப் பதில் நாக்கப் புடுங்குற மாதிரி என்னால சொல்ல முடியும். ஆனா உனக்கு மட்டும் இல்லை. உன்னோட ஆண் ஜென்மங்களுக்கு மொத்தமா ஒரு தடவை சொல்லிடுறேன்" என்று வேகமாக நடந்தாள்.
அவளிடம் இருந்து பிள்ளையைப் பறிக்க முற்பட, அவள் அவர்களை முறைத்தாள்.
"என் பக்கத்தில் வந்தா நான் சொன்னதைச் செஞ்சுடுவேன்" என்றவள் வேக வேகமாகத் திடல் நோக்கி நடந்தாள்.
அங்கு இவளைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து நின்றனர். செழியனின் கைகள் தளர்ந்து விட்டது. அமரா வாய்ப் பிளந்து நின்றிருந்தாள். ஒரு சிலர் அவளைத் தாக்க முற்பட, செழியன் அவனின் அரிவாளை அழுத்திப் பிடித்தான்.
அவர்களைவிட அதிகமாகக் கர்ஜித்தான். அமரா அவள் அருகில் சென்று நின்றாள்.
"என்ன உன் மக இப்படிச் செஞ்சுட்டா?"
"ஊர்ல ஆளுக்காளு அவுகளுக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்தா ஊர் கட்டுப்பாடு எதுக்கு?" என்று பலதரப்பட்ட வினாக்கள்.
அங்கு ஒரே சலசலப்பு.
"நிறுத்துங்க எல்லாரும். உங்க எல்லாருக்கும் பதில் சொல்றேன். எனக்குப் புருஷனா வாய்ச்சவன் என்னைப் பொண்டாட்டியாவே நடத்தல. அவனுக்காக நான் எதுக்குச் சாகணும்" என்று அவள் கேள்வி கேட்க, செழியன் அவளை மெச்சும் பார்வைப் பார்த்தான்.
அதுவரை அவனுக்கு அவளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மனதின் ஓரம் வலித்தது. அவளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோமே என்று. ஆனால் இப்பொழுது கொடி கூறுவதை வைத்துப் பார்த்தால், அவளுக்கு அவன் மோட்சம் அல்லவா அளித்திருக்கிறான்.
"இத்தனை நாள் நான் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தேன். இன்னைக்கு நான் சுதந்திர பறவையா மாறிட்டேன். அந்த ஆகாயம் முழுக்கப் பறக்கப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று கூறி, அவள் இடுப்பில் சொருகி வைத்திருந்த தாலிக் கயிறை எடுத்து தனது தந்தையிடம் கொடுத்தாள்.
"இவனை எரிக்கும் போது சேர்த்து எரிச்சிருங்க. அப்பறம் இன்னொரு கேள்வி கேட்டீங்களே? பச்சப் புள்ளைய படுத்தி எடுக்குறியேன்னு. எனக்கு உங்கிட்ட வளரட்டும்னு விட்டுட்டு போக மனசில்லை. ஆண் குழந்தை வேறு. நாளைக்கு இவன் செத்தா என்னை மாதிரி இன்னொருத்தி இந்தச் சமூகத்துக்கு வேண்டாம். அதனால நான் செத்தா அவனும் என் கூடவே சாகட்டும். பெண் குழந்தையா இருந்திருந்தாலும் இதே பதில் தான். ஒருவன் இறந்துவிட்டான் என்பதற்காக அவள் உயிரைத் தாரை வார்க்கப் போறீங்க. அப்போ ரொம்ப வலிக்கும் அவளுக்கு, இப்போ எனக்கு வலிக்கிற மாதிரி. அதனால அப்படிப் பிள்ளைகள் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டாம்" என்றாள் தெளிவாக.
அவள் அலங்காரத்துடன் வந்ததே அங்குள்ளவர்களுக்கு விலகாத அதிர்ச்சியாய் இருக்க, அவள் இப்படி ஒரு கூற்றை முன் வைத்தாள். அனைவரும் நிலைகுலைந்து போயினர். இருவர் மனதிற்குள் சபாஷ் போட்டனர். அது யாரென்று விளக்க வேண்டிய அவசியமில்லை. கோகிலம் மட்டும் மனதிற்குள் ஆயிரம் முறை மரித்துப் போய்விட்டார். இதற்குத் தன் கணவனின் பதிலடி என்னவாக இருக்கும் என்று நினைத்து நினைத்து வெதும்பியவர் அவர் ஒருவர் மட்டுமே.
அமரா அவள் அருகில் வந்து அவள் கைககளை ஆதூரமாகப் பற்றினாள்.
ஊர் முழுக்க வேடிக்கை மட்டுமே பார்த்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்து கையாண்டிருந்தால் அல்லவா அடுத்து என்ன செய்வது என்று தெரியும். சாகத் தயார். என்னையும் என் பிள்ளையையும் சேர்த்துக் கொன்றுவிடுங்கள் என்று கூறுகிறாள். இல்லையேல் அவளே கொன்றுவிடுவாளாமே.
ஆச்சர்யம் தான். இப்படி ஒரு அன்னை உரைப்பது. அவளுக்கும் அது கடினமாகவே இருந்தது. லட்சம் முறை செத்துப் பிழைத்தாள். ஆனால் அடுத்தத் தலைமுறையேனும் பிழையில்லாமல் வாழ வேண்டுமே. ஒருவன் பேரெழுச்சியின் விதை ஒன்றை விதைத்துவிட்டான். அதில் வளரும் விருட்சத்தை இவள் பார்க்க முடியவில்லை என்றாலும், அவளின் பிள்ளை அனுபவிக்கட்டுமே.
"அமரா.. கொடியை வீட்டுக்கு கூட்டிட்டு போ. அவளுக்கு வேற எங்கையும் பாதுகாப்புக் கிடையாது" என்று கட்டளையிட்டான் செழியன்.
"அப்படியெல்லாம் அனுப்ப முடியாது. புருஷன் பொணமா இருக்கப்போ, அவ சீவி சிங்காரிச்சுட்டு இருக்கது நல்லாயில்லை சொல்லிட்டேன்" என்று கொடியின் மாமியார் கூற, "கொன்னுடுவேன்... உங்களையில்ல.. உங்கள் கணவரை. ஏற்கனவே ஒரு கொலை செய்தவனுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை. அதனால் அமைதியா போறது நல்லது. உங்க குடும்பம் இருந்த இடம் தெரியாம போகணும்னா அடுத்த வார்த்தை வரலாம். இல்லை அப்படியும் கொடியை பிணமேடை ஏத்தணும்னா கொடி சொன்ன மாதிரி, அவள் பிள்ளையையும் சேர்த்து ஏத்திருவேன்" என்று மிரட்டினான்.
"ஆமா... நீ எதுக்கு அவளுக்கு இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர. அவ என்ன உனக்குப் பொண்டாட்டியா? இல்லை அவ புள்ளைக்கு நீ தகப்பனா?" என்றே நாக்கில் நரம்பில்லாமல் அவர் பேச, கொடியின் அன்னை அழுது கரைந்தார்.
"இந்தப் பேச்சை கேட்க வேண்டாம் என்று தானே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்" என்று அவர் அழ, "தம்பி, முதலில் எங்களைக் கொன்னு கொல்லி வச்சிட்டு அப்புறம் கூட்டிட்டு போங்க" என்று தடுத்தார் கொடியின் தந்தை.
"அது எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. பெத்த மக செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற நீங்க உயிரோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்க மருமகனோட நீங்களும் தாராளமா சுடுகாடு போகலாம்" என்றான் கேலியுடன்.
அவனுக்கும் கொடிக்கும் தவறான உறவு இருக்கிறது என்று அனைவரும் பேச, "என் புருஷனை கேள்வி கேக்க எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. எல்லாரும் இவனை அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பி போற வழியைப் பாருங்க. இனி இந்த ஊரில் இந்தச் சடங்கு நடத்துக் கூடாது. இது புது ராஜாவோட கட்டளை" என்று அமரா கூற, தேவர் பிள்ளையின் கோவம் அதிகரித்தது. அவர் அடிபட்ட பாம்பாய் வஞ்சத்தை நஞ்சாய்க் கொண்டிருந்தார். அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவரின் மகன் ராஜா. அவர் மூளை அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்தது. இன்றைய பொழுது அவர் வசமாய் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாய் இருந்தார்.
நிலவு ஒழுகும்...
இருள்மதி இரவு
மூளி பொழுது
வெட்ட வெளி
தனியா உள்ளம்
தகையா உறவு
வசமாய் மொழி
பிணமாய் நீ
எழுச்சியாய் நான்!!!
செழியன் செய்த தவறை நினைத்து நினைத்து தவித்துவிட்டான். அமரா அவனைச் சமாதானம் செய்ய முடியாது தவித்தாள். ஒருவகையில் அவள்தான் இந்தத் தவறுக்கு மூலகாரணம்.
"அமரா.. ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டேன். இப்போ அந்தப் பொண்ணும் உயிரோட இருக்க முடியாது. சத்யனையும் கொன்னுட்டேன்" என்று துடித்தவனைக் கட்டிக் கொண்டாள்.
கோகிலம் இடிந்து போய் அமர்ந்தவர்தான். அவர் கணவனை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைத்தாலே அது தவறாக முடிகிறது. ஏதோ ஒனு மாற்றம் வரும் என்று அவர் நினைத்தார். ஆனால் இப்பொழுது எல்லாம் தலைகீழாகப் போனது.
"செழியன், சத்யன் கொடியோட புருஷனா?" என்று அமரா கேள்வி ஒன்றைக் கேட்க, அடுத்து நிகழவிருக்கும் அனர்த்தம் விழி முன் தோன்றி அவர்களை அச்சுருத்தியது.
"செழியன், கொடிய காப்பாத்தணும்" என்று யோசனை செய்தவள், அடுத்த நொடி, கணமான பொருளை எடுத்து கதவை உடைக்க ஆரம்பித்தாள்.
சிலையாய் நின்ற செழியனுக்கு உயிர் வந்தது. அவளிடம் இருந்து பொருளை வாங்கி, கதவை உடைத்தான். மூவருமே அவசரமாகக் கிளம்பி சென்றனர். அவர்கள் நினைத்தது போல் பஞ்சாயத்துக் கூடியிருந்தது.
செழியனின் நண்பன் நடுவில் நின்று கொண்டிருந்தான். தேவர் பிள்ளை அவர் நினைத்தது போல் பேசிக்கொண்டிருந்தார்.
அந்தப் பெண்ணைச் சுடுகாட்டில் வைத்து எரித்து முடித்தாயிற்று. நினைத்ததைச் செய்ய வேண்டும் என்ற ஆணவத்தோடு, இந்த ஒரு விடயத்தில் விட்டுக்கொடுத்தால் அவரின் கொடி கீழிறங்கிவிடும் என்ற எண்ணம். காலம் காலமாக மனிதர்களின் மனதில் விதைத்த ஒரு விடயத்தை இப்படி மாற்ற முற்பட்டால், அவரின் மேல் உள்ள மரியாதை பயம் என்னாவது. மக்கள் ஒரு அடக்குமுறையுடன் வாழ்ந்தால்தான் அவருக்குப் பதவியும் பரிவட்டமும். அதனால் சத்யனின் விடயம் வெளியில் சொல்வதற்கு முன்னே அனைத்தும் நிகழ்த்தியாயிற்று.
இப்பொழுது என்ன நடந்தது என்று பஞ்சாயத்து. இனி என்ன நடக்க வேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. அவர் இயக்கும் நாடகத்தில் சிலர் சுயநினைவுடன் நடிக்கின்றனர். பலர் சுயநினைவு இன்றி நடிக்கின்றனர்.
செழியன் அங்கு வந்ததும் அவருக்குக் கோவம் வந்தது. அவனுடைய நண்பனை அடிக்கும்படி உத்தரவிட்டார். அவன் பயப்படக் கூடும் என்று எதிர்பார்த்தார். ஆனால் செழியன் அவருக்கு ஒரு படி மேல் சென்று கத்தினான்.
"யார் என்ன சொன்னாலும் நம்புவீர்களா? இப்போ சொல்றேன் என்ன நடந்தச்சுன்னு" என்று அவன் ஆரம்பிக்க, தேவர் பிள்ளை கத்தினார்.
"செழியா, நீ வீட்டுக்கு போ. ராசாவையே எதிர்த்து பேச உனக்கு யார் உரிமை கொடுத்தா?" என்று அவரும் குரலை உயர்த்த, அங்கிருந்த மக்கள் விசித்திரமாய்ப் பார்த்தனர்.
இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததில்லை. அதனால் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். சத்யனின் உடல் அங்குதான் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் கொடி அமர்ந்திருந்தாள். அவள் துளி கூட அழவில்லை. ஆனால் விழியில் விரக்தி வழிந்து கொண்டிருந்தது.
தேவர் பிள்ளையின் கண்ணசைவில் நான்கு நபர்கள் செழியனை அடிக்க வர, அங்கிருந்த கையாட்கள் வர, அதை எதிர்பார்த்தவன் போல், அருகில் இருந்த அரிவாள் எடுத்து தேவர் பிள்ளையின் கழுத்தில் வைத்தான்.
அதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
"இனி யாராவது ஒரு வார்த்தை பேசுனாலும் இவர் தலை இருக்காது" என்று அவன் கூற, ஊரே பதைபதைத்தது. ஆனால் தேவர் பிள்ளை மட்டும் சிறிதும் அச்சமின்றி நின்றிருந்தார்.
அவனுடைய பலகீனம் எது என்று அவர் அறிவாரே. அவனைப் பார்த்து அவர் சிரிக்க, அவன் ஏளனமாக நகைத்தான் அவரைப் பார்த்து.
"நீயெல்லாம் மனுச ஜென்மத்தில சேர்த்தியே கிடையாது. நீ போனா எங்க அம்மாவும் சாகணும். அதனால உன்னைப் பயமுறுத்த இப்படிச் செய்றேன்னு நினைச்சா, உன்னைவிட முட்டாள் வேற யாரும் இல்லை" என்றான் பூடகமாக.
விரிந்திருந்த உடத்தில் இருந்த புன்னகை இடம் தெரியாமல் அழிந்து போயிருந்தது.
"இங்க பாரு... யாரோ ஒரு பொண்ணு. அவ சாகக் கூடாதுனு நினைச்ச நான், எங்க அம்மாவை அந்த நிலைக்கு விடுவேனா? நீ செத்தா எங்க அம்மாவுக்குக் காரியம் செய்ய மாட்டேன். அவுங்களுக்கு விடுதலை கிடைச்சிருச்சுன்னு கொண்டாடுவேன்" என்று அவன் கூற, அவர் சற்று திடுகிட்டுதான் போனார்.
மகன் என்றும் பாராமல் அவர் மனதில் வஞ்சம் குடியேற, சமயம் பார்த்துக் காத்திருந்தார் அவர். அவனை வெட்டி சாய்த்திடவும் இனி தயக்கம் இல்லை. அவரின் குடும்ப மரியாதை, கட்டளைகள் என்று அனைத்தையும் துறந்தவன் இனி இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன?
மரியாதை அதிகாரத்திலும் ஆணவத்திலும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எனக்கு நீ மரியாதை கொடு என்று சொல்வது மரியாதை இல்லை. அப்படிக் கிடைக்கும் மரியாதை மரியாதையே இல்லை என்று இவருக்கு எப்பொழுது விளங்கப் போகிறதோ?
"இனி வாங்கடா... பாத்துறலாம்... இனி புருஷன் செத்துட்டானு பொண்டாட்டியை பிணமேடை ஏற்றும் கீழ்த்தரமான செயல் இந்த ஊரில் நடக்கக் கூடாது. இதைத் தடுக்க இடையில் யார் வந்தாலும் அவுங்க உயிரையும் எடுப்பேன்" என்று சூளுரைத்தான் அவன்.
ஆண்கள் அனைவரின் எதிர்ப்புக் குரல்களும் அதிர்ந்து ஒலித்தது. அதில் பெண்களின் ஆதரவு குரல்கள் தேய்ந்து கரைந்து போனது. இந்தக் குரல் அவர்களுக்குப் புதிதல்ல. எங்கோ கேட்ட சாயல் அந்தக் குரலில் வழிந்தது. அனுதினமும் அவர்களுக்குள் ஒலித்து அடங்கிய குரலாயிற்றே. அதனால் முற்றிலுமாக அடையாளம் தெரியாமல் போகும் வாய்ப்பு இல்லை.
அதன் பிறகு செழியன் நடந்த ஒவ்வொன்றையும் விளக்கினான். அனைவரும் விக்கித்துப் போய் நின்றனர்.
அவனின் குரல் எழுச்சிக் குரலாய் இருக்கும் என்று அவன் நினைக்க, அதற்கு நேர்மாறாக, ஒருவரும் குரல் எழுப்பவில்லை. குரல் எழுப்ப வேண்டியது பெண்கள். ஆனால் எப்படி எழுப்புவார்கள். கணவன் இல்லையேல் இந்த உலகில் வாழ அருகதையற்று போய்விடுவோம் என்று போதனையில் பிறந்து வளர்ந்தவர்கள். இவ்வளவு ஏன். இந்த நினைவை சுமந்து வாழ்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்கள் பத்தினி பெண்களின் பட்டியலில் இருந்து நீக்கப் படுவர். அப்படி ஒரு அவப்பெயருடன் வாழ்வது பெரும் பாவத்திற்குச் சமம் என்று அரும்பெரும் நற்போதனைகள் வேறு. இனி வாய் திறக்கக் கூடுமா. பெண்கள் கவரி மான் போன்றவர்கள். மயிர் இழந்தால் உயிர் துறக்க வேண்டும். இப்படி மனதில் அழுத்தி அழுத்தி, கனத்து போன மனம் கடப்பதெல்லாம் கணமான பொழுதுகள் மட்டுமே. பிறக்கும் பொழுது அன்னையும் தந்தையும் முடிவாகிறது. திருமணச் சடங்காய் ஒருத்தியின் கழுத்தில் ஏறுவதற்குப் பெயர் தாலி அல்ல. தூக்கு கயிறு.
அங்கு எழுச்சிக் குரல்கள் ஒலிக்காதது தேவர் பிள்ளைக்கு அனுகூலம்தான். நூற்றாண்டுகளாய் ஏற்றி வைத்த கருத்துக்களை, இவனின் சில வார்த்தைகள் மாற்றிவிடுமா என்ன?
"இந்த ஊரே மங்களத்துக்குப் பெயர் போன ஊர். அப்படி மூளியெல்லாம் இந்த ஊரில் வாழ வைக்க முடியாது. இந்தச் சட்டத்தை யெல்லாம் மாத்தக் கூடாது. அப்புறம் தெய்வக் குத்தமாயிரும்" என்று கூட்டத்தில் இருந்து சில குரல்கள்.
செழியனின் ஆத்திரம் பலமடங்காகியிருந்தது.
அவனின் வார்த்தைகளில் அங்கிருந்த இரு பெண்கள் எழுச்சி பெற்றது உண்மை. ஒன்று அமரா. மற்றொன்று கொடி. கணவன் இறந்துவிட்டான் என்று அலங்கோலமாக இருந்தாள். அவளுக்கு இன்னும் சடங்குகள் நிறைவேற்றப் படவில்லை. வேகமாக எழுந்தாள். அவளின் வீடு அங்கு அருகில் தான் இருந்தது. வீட்டிற்குள் சென்று கதவடைத்தவள், சற்று நேரத்தில் வெளியில் வந்தாள்.
அதற்குள் அங்குக் கூடியிருந்த கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. அவள் ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிடுவாளோ என்றே அவள் பின் ஓடினர் சிலர். அவள் வீட்டு ஆட்கள். விசித்திரமாய் இல்லை. இன்னும் சற்று நேரத்தில் சுடுகாடு அனுப்பி வைக்கத் திட்டம் இருக்கிறது அவர்களிடத்தில். ஆனாலும் அவள் தற்கொலை செய்துவிடக் கூடாது. அவளைச் சுடுகாடு அனுப்பி வைப்பதிலும் முறைமைக் கடைப்பிடிக்க வேண்டுமாம்.
அவள் கதவடைத்ததும், அவளுடைய பெற்றோர் கதவைத் தட்ட, சிறிது இடைவெளிக்குப் பின் கதவு திறக்கப் பட்டது. வெளியில் நின்றவர்கள் முகத்தில் அதிர்ச்சி. ஏனெனில் அவள் முழு அலங்காரத்துடன் சர்வ லட்சணமும் பொருந்திய ஏந்திழையாக வந்து நின்றாள். அரக்கு வண்ணப் பட்டில், முடி முதல் அடி வரை நகைகள். அவளிடம் இருந்த அனைத்தையும் அணிந்திருந்தாள். கழுத்தில் இருந்த தாலியைக் கழட்டி வைத்துவிட்டாள் போல. முகம் முழுக்க மஞ்சளும், நெற்றி நிறையக் குங்குமமும் என்று வந்து நின்றாள். அவள் அழுததன் அடையாளமாக மஞ்சள் திட்டுத்திட்டாய் உலக வரைபடம் போல் முகத்தில் காட்சியளித்தது.
அவளின் இந்த அவதாரத்தைக் கண்ட அவளின் பெற்றோர்கள் ஆடிப் போய்விட்டனர்.
"அடி பாவி... இப்படி ஒரு காரியம் பண்ணிட்டியே. இனி ஊரு உன்னைய ஒழுக்கம் கெட்டவன்னு பேசும். ஐயோ.. உன்னைப் பெத்து நான் இதெல்லாம் கேக்கணும்னு இருக்கே" என்று அழுதார் அவளின் அன்னை.
அவளின் தந்தை ஒருபடி மேலே சென்று அவளை அடிக்கக் கை ஓங்கினார்.
"அவரின் கையைப் பிடித்தவள், என்னைக்கு என்னை அந்தக் கேடுகெட்டவனுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்தீங்களோ, அன்னைக்கே நான் உங்க மகள் இல்லை. இப்போ அவனும் உயிரோடு இல்லை. அதனால நான் அவன் பொண்டாட்டியும் இல்லை. என்னை அடிக்க இங்கு யாருக்கும் உரிமை இல்லை" என்றவள், தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டாள்.
"புள்ளையாடி பெத்து வச்சிருக்க" என்று அவளின் அன்னைக்கு அடி விழ, அவள் "இதுக்கு மேல் அம்மாவை அடிச்சா, நானும் என் புள்ளையும் சேர்ந்து செத்துப் போவோம்" என்றதும் ஓங்கிய கைகள் கீழிறங்கியது.
"படு பாவி பச்சைப் புள்ளைய என்ன வார்த்தை சொல்றா... நீ எனக்குப் புள்ளையா இருக்கவும் தகுதியில்லை. அவனுக்கு மனைவியா இருக்கவும் தகுதியில்லை. இந்தப் புள்ளைக்கு அம்மாவா இருக்கவும் தகுதியில்லை" என்றார்.
"இதுக்குப் பதில் நாக்கப் புடுங்குற மாதிரி என்னால சொல்ல முடியும். ஆனா உனக்கு மட்டும் இல்லை. உன்னோட ஆண் ஜென்மங்களுக்கு மொத்தமா ஒரு தடவை சொல்லிடுறேன்" என்று வேகமாக நடந்தாள்.
அவளிடம் இருந்து பிள்ளையைப் பறிக்க முற்பட, அவள் அவர்களை முறைத்தாள்.
"என் பக்கத்தில் வந்தா நான் சொன்னதைச் செஞ்சுடுவேன்" என்றவள் வேக வேகமாகத் திடல் நோக்கி நடந்தாள்.
அங்கு இவளைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து நின்றனர். செழியனின் கைகள் தளர்ந்து விட்டது. அமரா வாய்ப் பிளந்து நின்றிருந்தாள். ஒரு சிலர் அவளைத் தாக்க முற்பட, செழியன் அவனின் அரிவாளை அழுத்திப் பிடித்தான்.
அவர்களைவிட அதிகமாகக் கர்ஜித்தான். அமரா அவள் அருகில் சென்று நின்றாள்.
"என்ன உன் மக இப்படிச் செஞ்சுட்டா?"
"ஊர்ல ஆளுக்காளு அவுகளுக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்தா ஊர் கட்டுப்பாடு எதுக்கு?" என்று பலதரப்பட்ட வினாக்கள்.
அங்கு ஒரே சலசலப்பு.
"நிறுத்துங்க எல்லாரும். உங்க எல்லாருக்கும் பதில் சொல்றேன். எனக்குப் புருஷனா வாய்ச்சவன் என்னைப் பொண்டாட்டியாவே நடத்தல. அவனுக்காக நான் எதுக்குச் சாகணும்" என்று அவள் கேள்வி கேட்க, செழியன் அவளை மெச்சும் பார்வைப் பார்த்தான்.
அதுவரை அவனுக்கு அவளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மனதின் ஓரம் வலித்தது. அவளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டோமே என்று. ஆனால் இப்பொழுது கொடி கூறுவதை வைத்துப் பார்த்தால், அவளுக்கு அவன் மோட்சம் அல்லவா அளித்திருக்கிறான்.
"இத்தனை நாள் நான் சிறைக்குள் அடைப்பட்டுக் கிடந்தேன். இன்னைக்கு நான் சுதந்திர பறவையா மாறிட்டேன். அந்த ஆகாயம் முழுக்கப் பறக்கப் போறேன். என்னை யாரும் தடுக்க முடியாது" என்று கூறி, அவள் இடுப்பில் சொருகி வைத்திருந்த தாலிக் கயிறை எடுத்து தனது தந்தையிடம் கொடுத்தாள்.
"இவனை எரிக்கும் போது சேர்த்து எரிச்சிருங்க. அப்பறம் இன்னொரு கேள்வி கேட்டீங்களே? பச்சப் புள்ளைய படுத்தி எடுக்குறியேன்னு. எனக்கு உங்கிட்ட வளரட்டும்னு விட்டுட்டு போக மனசில்லை. ஆண் குழந்தை வேறு. நாளைக்கு இவன் செத்தா என்னை மாதிரி இன்னொருத்தி இந்தச் சமூகத்துக்கு வேண்டாம். அதனால நான் செத்தா அவனும் என் கூடவே சாகட்டும். பெண் குழந்தையா இருந்திருந்தாலும் இதே பதில் தான். ஒருவன் இறந்துவிட்டான் என்பதற்காக அவள் உயிரைத் தாரை வார்க்கப் போறீங்க. அப்போ ரொம்ப வலிக்கும் அவளுக்கு, இப்போ எனக்கு வலிக்கிற மாதிரி. அதனால அப்படிப் பிள்ளைகள் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டாம்" என்றாள் தெளிவாக.
அவள் அலங்காரத்துடன் வந்ததே அங்குள்ளவர்களுக்கு விலகாத அதிர்ச்சியாய் இருக்க, அவள் இப்படி ஒரு கூற்றை முன் வைத்தாள். அனைவரும் நிலைகுலைந்து போயினர். இருவர் மனதிற்குள் சபாஷ் போட்டனர். அது யாரென்று விளக்க வேண்டிய அவசியமில்லை. கோகிலம் மட்டும் மனதிற்குள் ஆயிரம் முறை மரித்துப் போய்விட்டார். இதற்குத் தன் கணவனின் பதிலடி என்னவாக இருக்கும் என்று நினைத்து நினைத்து வெதும்பியவர் அவர் ஒருவர் மட்டுமே.
அமரா அவள் அருகில் வந்து அவள் கைககளை ஆதூரமாகப் பற்றினாள்.
ஊர் முழுக்க வேடிக்கை மட்டுமே பார்த்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்து கையாண்டிருந்தால் அல்லவா அடுத்து என்ன செய்வது என்று தெரியும். சாகத் தயார். என்னையும் என் பிள்ளையையும் சேர்த்துக் கொன்றுவிடுங்கள் என்று கூறுகிறாள். இல்லையேல் அவளே கொன்றுவிடுவாளாமே.
ஆச்சர்யம் தான். இப்படி ஒரு அன்னை உரைப்பது. அவளுக்கும் அது கடினமாகவே இருந்தது. லட்சம் முறை செத்துப் பிழைத்தாள். ஆனால் அடுத்தத் தலைமுறையேனும் பிழையில்லாமல் வாழ வேண்டுமே. ஒருவன் பேரெழுச்சியின் விதை ஒன்றை விதைத்துவிட்டான். அதில் வளரும் விருட்சத்தை இவள் பார்க்க முடியவில்லை என்றாலும், அவளின் பிள்ளை அனுபவிக்கட்டுமே.
"அமரா.. கொடியை வீட்டுக்கு கூட்டிட்டு போ. அவளுக்கு வேற எங்கையும் பாதுகாப்புக் கிடையாது" என்று கட்டளையிட்டான் செழியன்.
"அப்படியெல்லாம் அனுப்ப முடியாது. புருஷன் பொணமா இருக்கப்போ, அவ சீவி சிங்காரிச்சுட்டு இருக்கது நல்லாயில்லை சொல்லிட்டேன்" என்று கொடியின் மாமியார் கூற, "கொன்னுடுவேன்... உங்களையில்ல.. உங்கள் கணவரை. ஏற்கனவே ஒரு கொலை செய்தவனுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை. அதனால் அமைதியா போறது நல்லது. உங்க குடும்பம் இருந்த இடம் தெரியாம போகணும்னா அடுத்த வார்த்தை வரலாம். இல்லை அப்படியும் கொடியை பிணமேடை ஏத்தணும்னா கொடி சொன்ன மாதிரி, அவள் பிள்ளையையும் சேர்த்து ஏத்திருவேன்" என்று மிரட்டினான்.
"ஆமா... நீ எதுக்கு அவளுக்கு இப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வர. அவ என்ன உனக்குப் பொண்டாட்டியா? இல்லை அவ புள்ளைக்கு நீ தகப்பனா?" என்றே நாக்கில் நரம்பில்லாமல் அவர் பேச, கொடியின் அன்னை அழுது கரைந்தார்.
"இந்தப் பேச்சை கேட்க வேண்டாம் என்று தானே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்" என்று அவர் அழ, "தம்பி, முதலில் எங்களைக் கொன்னு கொல்லி வச்சிட்டு அப்புறம் கூட்டிட்டு போங்க" என்று தடுத்தார் கொடியின் தந்தை.
"அது எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. பெத்த மக செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற நீங்க உயிரோட இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. உங்க மருமகனோட நீங்களும் தாராளமா சுடுகாடு போகலாம்" என்றான் கேலியுடன்.
அவனுக்கும் கொடிக்கும் தவறான உறவு இருக்கிறது என்று அனைவரும் பேச, "என் புருஷனை கேள்வி கேக்க எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. எல்லாரும் இவனை அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு கிளம்பி போற வழியைப் பாருங்க. இனி இந்த ஊரில் இந்தச் சடங்கு நடத்துக் கூடாது. இது புது ராஜாவோட கட்டளை" என்று அமரா கூற, தேவர் பிள்ளையின் கோவம் அதிகரித்தது. அவர் அடிபட்ட பாம்பாய் வஞ்சத்தை நஞ்சாய்க் கொண்டிருந்தார். அவர் உயிருடன் இருக்கும் பொழுதே அவரின் மகன் ராஜா. அவர் மூளை அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்தது. இன்றைய பொழுது அவர் வசமாய் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாய் இருந்தார்.
நிலவு ஒழுகும்...