Akilan Mu
Saha Writer
- Messages
- 28
- Reaction score
- 1
- Points
- 1
கபிலனின் நிலா - நிகழ்வு:3
மறுநாள் வெள்ளிக்கிழமை. கல்லூரி இறுதி நாள். காலை பரபரப்பில் காலனி மக்கள். கபிலன் வீடு. கல்லூரி செல்ல ரெடி ஆகிறான், கபிலன். இயல்பாக கண்ணாடி பார்த்துத் தலை சீவித்திரும்பினால், அவனுடைய அத்தை மகன் வீட்டினுள் நுழைகிறான். கபிலனுக்கு ஆச்சர்யம்!, குழப்பம்?!.
“என்னாடா மாப்ள, திடீர்னு?
“சும்மா மச்சான். வா போலாம்”
“நான் காலேஜ் போனும்டா”
“சரி வா, நீ காலேஜ்குள்ள போற வரைக்கும் உன்கூட வரேன்.”
இன்னைக்கு லீவ் இல்லன்னு தெரிஞ்சும், ஊர்ல இருந்து வந்திருக்கானே!? யோசிச்சுட்டே அவனுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.தெருவில் இறங்கிய கபிலனுக்கு மற்றுமொரு ஆச்சர்யம்கலந்த அதிர்ச்சி!. அவன் மாப்ள தோழன் வீட்டுக்குப் பக்கத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்தான்!?.
“என்ன்னடா....?!” கொஞ்சம் அழுத்தமாகவே அவன் அத்தை மகனிடம் மீண்டும் கேட்டான், கபிலன்.
“சும்மாதான் மச்சான். வா, போலாம்”
மாப்ள எதோ ப்ளானோட வந்திருக்கான்.. என்னவா இருக்கும்?! யோசித்துக்கொண்டே நடந்தான், கபிலன், அவர்களுடன்.
கல்லூரி செல்லும் காலனி மெயின் ரோடு. ஒவ்வொரு 10அடிக்கும் ஒருவரென, அவன் கிராமத்து நண்பர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டே இருந்தார்கள். 20 பேருக்குமேல்!
“என்ன மாப்ள, என்னடா இவ்ளோ பேரு?!”
“மச்சான், உன்னைய எவனோ இன்னைக்கு காலேஜ்ல ஸெண்டாஃப் பார்ட்டி முடியும்போது அடிப்பேன்னு சொன்னானாமே?.. வா எவன் கைய வைக்கிறானு பாப்போம்.”
கபிலனுக்கு விசயம் புரிந்தது. பார்த்திபன் க்ரூப் ஏதோ ப்ளான் செய்திருக்கிறார்கள். அது மாப்ளைக்கு, காலேஜ்ல படிக்கிற ஊர் நண்பர்கள்மூலம் தெரிஞ்சிருக்கு. பார்த்தி & கோ... செத்தீங்கடா இன்னைக்கு. கெத்தாக நடந்தான், கல்லூரி நோக்கி. செருக்கேறியது, கபிலனுக்கு.
கி.பி 970 - சோழ நாடு - பழுவூர் அரண்மனை வளாகம்
பழுவூர் அரண்மனைச் சாலையை அடைந்தான் வல்லவன் வந்தியத்தேவன். தினவெடுத்த தோள்களுடன், தீட்டிய போர்வாள் இடைக்கச்சையிலும் இருக்க, தன் நண்பர்கள் கந்தமாறன், சேந்தன் அமுதன் மற்றும் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவல் படைவீரர்கள் புடைசூழ, பழுவூர் அரண்மனை நோக்கி நடந்தான். சுந்தரச்சோழ சக்கரவர்த்தியின் நம்பிக்கைபெற்ற மாவீரர் பெரிய பழுவேட்டரையர், தன் இதயராணி நந்தினியுடன், இளையவன் வந்தியத்தேவன் நட்புருகி இருப்பதைப் பொறுக்காமல், அவனை மாறுகால், மாறுகை வாங்கும்படி தன் சேனைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைக்கேள்வியுற்ற கரிகாலன், பழுவேட்டரையருக்கு எதிராக, வந்தியத்தேவனை ஆதரிக்கத் தனது மெய்க்காவலனையும், படை வீரர்களையும் கூரிய வேட்களுடனும், தீட்டிய வாட்களுடனும் அனுப்பியிருந்தார்.
2006 ஜூலை, வெள்ளி காலை 11மணி கல்லூரி வாசல்
20 பேர் புடைசூழ, கல்லூரி வாசல் வந்து சேர்ந்தான் கபிலன்.
“சொல்றா மச்சான். உன்னைய அடிப்பேன்னு சொன்னவன் எங்க இருக்கான்னு, சொல்றா..” மாப்ள உறும, கபிலன் பார்த்திபனைத் தேடினான். மாப்ள நண்பர்கள் கத்தி, அரிவாள்களுடன் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள், ஆளைக் காமிச்சா அடிச்சுப் பொளக்க.
கல்லூரிக்குள் எல்லோரும் போக, வர இருந்தனர். வெளியூர் ஆட்கள் அதிகம் இருப்பதைக்கண்ட பார்த்திபனின் நண்பர்கள், மெல்ல கபிலனை நெருங்கி வந்தார்கள். காலனிக்குள் எதையும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். பெரும் பதட்டமான சூழலானது அந்த கல்லூரி வளாகம். எங்கிருந்தோ வந்தான் பார்த்தி!
“என்னடா, வெளியூர்ல இருந்தெல்லாம் ஆள கூட்டி வந்திருக்க?! கபிலனை நெருங்கி எகத்தாளமாய் கேட்டான், பார்த்தி.
“யேய்ய்ய்... நீதேன் இவன அடிப்பேனு சொன்னவனா?” கபிலன் பதில் சொல்வதற்குள், பார்த்தியிடம் எகிறினான், கபிலனின் மாப்ள.
“என்னாடா... அடிக்கிறதுக்கு ஆள கூட்டிட்டு வந்திருக்கியா?? பார்த்தி, பதிலுக்கு கபிலனை யேறினான்.
“உன்னைய அடிக்கிறதுக்கெல்லாம், ஆளவேற கூட்டிட்டு வருவாங்கெளா? கபிலன் கெத்துக் காட்டினான்.
“அடிச்சுட்டு ஊரவிட்டு போயிருவீஙெளா...?! பார்த்தி பதட்டத்தை வெளிக்காட்டாம, பதிலுக்கு எகிறுனான்.
“இவந்தான் உன்னைய அடிக்கனும்னு சொன்னவனா…” கபிலன் ஊர்க்காரர்கள் வெறியுடன் வந்தார்கள் பார்த்தி பக்கத்துல. அதை பார்த்த பார்த்தியின் நண்பர்கள் அவனைச்சுத்தி நின்றார்கள். டென்ஷன்யேறியது அங்க இருந்த எல்லாருக்கும், மொத்தக்கூட்டத்திலும். கபிலனுக்கு சுர்ர்ர்ன்று கோபம் ஏறியது மண்டையில்.
பழுவூர் அரண்மனை வளாகம்
“பெரியவரே!, அரண்மனையில் நடக்கப்போகும் வீரர்கள் படையணி வழியனுப்பு விழாவின் முடிவில், என்னைத் தீர்த்துகட்ட நீர்தான் உம் படைக்கு ரகசிய உத்தரவிட்டதாகச் செய்தி.
நேற்றைய தினம் அதைக்கேள்வியுற்ற என் தோழர்கள், நான் அறியாமலேயே, இன்று நான் அரண்மனை விழாவில் கலந்துகொள்ள வந்தபொழுது, என்னுடன் இணைந்துகொண்டனர். நான் வழியக் கூட்டம் சேர்க்க எந்த அவசியமுமில்லை”. தலைசூடாகிப்போன வல்லவன் வந்தியத்தேவன், பழுவேட்டரையரிடம் குரலை உயர்த்தினான்!
“எங்கே, உன் உடைவாளை உயர்த்து பார்க்கலாம்”, பெரியவரின் மெய்க்காவலர்கள், வல்லவனை முறைத்தனர்.
அந்த தருணத்தில் அங்குவந்த கடம்பூர் சம்புவரையர், மோதலுக்கு ஆயத்தமான இரு அணிகளையும் இடைமறித்தார். பழுவேட்டரையர், கரிகாலன் இருவருக்கும் பொதுத்தோழர், அவர். ஆகவே, கரிகாலனின் நண்பனான வல்லவனைக் காப்பதற்காக, இடைமறித்தார்.
“சோழப்பேரரசின் இரு தூண்கள், நீர் இருவரும். உங்களுக்குள் ஏன் வீண் மனச்சங்கடம். இந்த மனநிலை தவிர்த்து அனுசரித்திருங்கள்”. சம்புவரையர் வார்த்தைகள், வல்லவனை நிதானிக்கச்செய்தது. தன்னிலைக்கு வந்தான்!.
நண்பகல் 12மணி கல்லூரி வாசல்
“இனிமே, நீ நந்தினிகூட ஊர்சுத்தக்கூடாது”. சமாதானம் செய்த பொது நண்பர் முன்னிலையில் மீண்டும் பார்த்திபன் கபிலனிடம் அழுத்தமாகச் சொன்னான்.
“பார்த்தி… உங்கிட்ட ஏற்கனவே சொன்னேன். அவ என் ஃப்ரண்டு, நான் அப்டிதான் பேசுவேன். வேணும்னா அவட்ட சொல்லி பேசாம இருக்க சொல்றா”
“மாப்ள, வாடா போலாம். இப்ப தெரிஞ்சிருக்கும் அவிஙெளுக்கு நாம யாருன்னு.. இன்னைக்கு விட்று. இதுக்கப்புறம் என்னையப்பத்தி பேசுனா அப்ப பாத்துப்போம்.”
திரும்பி விறு விறுவென்று நடந்தான். ஊர்க்காரர்கள் கூட நடந்தார்கள். பக்கத்து டீ கடையில் போய் கருங்கல் பெஞ்சில் உக்கார்ந்தான். மாப்ளயும் கூட உக்கார்ந்தான். எல்லாரும் சுத்தி நின்றார்கள்.
“அண்ணே, எல்லாருக்கும் டீ போடுங்க. வேறென்ன கேட்குறாங்களோ குடுங்க. எவ்ளோன்னு கணக்கு வச்சுக்கங்க”, கபிலன் கடைக்காரரிடம் சொன்னான். “எல்லாம் பிஸ்கட், ஸ்னாக்ஸ் எதுவேனும்னாலும் சாப்டுங்கப்பா”, ஊர்க்காரர்களைப்ப பார்த்துச் சொன்னான்.
“யார்ரா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. இவன் ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! - மாப்ள அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.
“இல்ல மாப்ள.. நாங்க எல்லாரும் ப்ரண்ட்ஸாதாண்டா இருந்தோம்…”. கபிலன் எதையோ நினைத்தவன்போல, சொன்னான்.
சொல்லிவிட்டு அமைதியாக டீக்கடை பெஞ்சில் சரிந்து படுத்தான். இடது கையை தலைக்குத் தலையணையாக்கினான். கல்லூரியின் ஆரம்ப நாட்கள் அவனுள் காட்சியாய் விரியத்தொடங்கியது. அன்று பார்த்த நந்தினியின் ஆர்ப்பாட்டமும், கூடவே நிலாவின் அமைதியும் அவனை ஆக்கிரமித்தன…
.
2003 ஜீன், கபிலன் வீடு, நள்ளிரவு 1 மணி
"ஊர்ந்து செல்லும் உயிரினமும்,
கூர்ந்து பார்த்தும் -
தடம் தெரியா;
தளிர் நடை போட்டாள்"
வெண்ணிலாவை, காலையில் கல்லூரி முதல் நாளில், கிரகித்துக் கிறங்கிய அந்தத் தருணங்களை, கவிதையாய் வடித்தான் டயரியில். அந்த கவிதை வரிகளில், எழிலாய் நிழலாடிய அவளின் உருவத்தில் மெய் சிலிர்த்து; வீட்டின் விட்டம் பார்த்துப் புன்னகைத்தான், கபிலன்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-3
மறுநாள் வெள்ளிக்கிழமை. கல்லூரி இறுதி நாள். காலை பரபரப்பில் காலனி மக்கள். கபிலன் வீடு. கல்லூரி செல்ல ரெடி ஆகிறான், கபிலன். இயல்பாக கண்ணாடி பார்த்துத் தலை சீவித்திரும்பினால், அவனுடைய அத்தை மகன் வீட்டினுள் நுழைகிறான். கபிலனுக்கு ஆச்சர்யம்!, குழப்பம்?!.
“என்னாடா மாப்ள, திடீர்னு?
“சும்மா மச்சான். வா போலாம்”
“நான் காலேஜ் போனும்டா”
“சரி வா, நீ காலேஜ்குள்ள போற வரைக்கும் உன்கூட வரேன்.”
இன்னைக்கு லீவ் இல்லன்னு தெரிஞ்சும், ஊர்ல இருந்து வந்திருக்கானே!? யோசிச்சுட்டே அவனுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.தெருவில் இறங்கிய கபிலனுக்கு மற்றுமொரு ஆச்சர்யம்கலந்த அதிர்ச்சி!. அவன் மாப்ள தோழன் வீட்டுக்குப் பக்கத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்தான்!?.
“என்ன்னடா....?!” கொஞ்சம் அழுத்தமாகவே அவன் அத்தை மகனிடம் மீண்டும் கேட்டான், கபிலன்.
“சும்மாதான் மச்சான். வா, போலாம்”
மாப்ள எதோ ப்ளானோட வந்திருக்கான்.. என்னவா இருக்கும்?! யோசித்துக்கொண்டே நடந்தான், கபிலன், அவர்களுடன்.
கல்லூரி செல்லும் காலனி மெயின் ரோடு. ஒவ்வொரு 10அடிக்கும் ஒருவரென, அவன் கிராமத்து நண்பர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டே இருந்தார்கள். 20 பேருக்குமேல்!
“என்ன மாப்ள, என்னடா இவ்ளோ பேரு?!”
“மச்சான், உன்னைய எவனோ இன்னைக்கு காலேஜ்ல ஸெண்டாஃப் பார்ட்டி முடியும்போது அடிப்பேன்னு சொன்னானாமே?.. வா எவன் கைய வைக்கிறானு பாப்போம்.”
கபிலனுக்கு விசயம் புரிந்தது. பார்த்திபன் க்ரூப் ஏதோ ப்ளான் செய்திருக்கிறார்கள். அது மாப்ளைக்கு, காலேஜ்ல படிக்கிற ஊர் நண்பர்கள்மூலம் தெரிஞ்சிருக்கு. பார்த்தி & கோ... செத்தீங்கடா இன்னைக்கு. கெத்தாக நடந்தான், கல்லூரி நோக்கி. செருக்கேறியது, கபிலனுக்கு.
கி.பி 970 - சோழ நாடு - பழுவூர் அரண்மனை வளாகம்
பழுவூர் அரண்மனைச் சாலையை அடைந்தான் வல்லவன் வந்தியத்தேவன். தினவெடுத்த தோள்களுடன், தீட்டிய போர்வாள் இடைக்கச்சையிலும் இருக்க, தன் நண்பர்கள் கந்தமாறன், சேந்தன் அமுதன் மற்றும் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவல் படைவீரர்கள் புடைசூழ, பழுவூர் அரண்மனை நோக்கி நடந்தான். சுந்தரச்சோழ சக்கரவர்த்தியின் நம்பிக்கைபெற்ற மாவீரர் பெரிய பழுவேட்டரையர், தன் இதயராணி நந்தினியுடன், இளையவன் வந்தியத்தேவன் நட்புருகி இருப்பதைப் பொறுக்காமல், அவனை மாறுகால், மாறுகை வாங்கும்படி தன் சேனைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைக்கேள்வியுற்ற கரிகாலன், பழுவேட்டரையருக்கு எதிராக, வந்தியத்தேவனை ஆதரிக்கத் தனது மெய்க்காவலனையும், படை வீரர்களையும் கூரிய வேட்களுடனும், தீட்டிய வாட்களுடனும் அனுப்பியிருந்தார்.
2006 ஜூலை, வெள்ளி காலை 11மணி கல்லூரி வாசல்
20 பேர் புடைசூழ, கல்லூரி வாசல் வந்து சேர்ந்தான் கபிலன்.
“சொல்றா மச்சான். உன்னைய அடிப்பேன்னு சொன்னவன் எங்க இருக்கான்னு, சொல்றா..” மாப்ள உறும, கபிலன் பார்த்திபனைத் தேடினான். மாப்ள நண்பர்கள் கத்தி, அரிவாள்களுடன் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள், ஆளைக் காமிச்சா அடிச்சுப் பொளக்க.
கல்லூரிக்குள் எல்லோரும் போக, வர இருந்தனர். வெளியூர் ஆட்கள் அதிகம் இருப்பதைக்கண்ட பார்த்திபனின் நண்பர்கள், மெல்ல கபிலனை நெருங்கி வந்தார்கள். காலனிக்குள் எதையும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். பெரும் பதட்டமான சூழலானது அந்த கல்லூரி வளாகம். எங்கிருந்தோ வந்தான் பார்த்தி!
“என்னடா, வெளியூர்ல இருந்தெல்லாம் ஆள கூட்டி வந்திருக்க?! கபிலனை நெருங்கி எகத்தாளமாய் கேட்டான், பார்த்தி.
“யேய்ய்ய்... நீதேன் இவன அடிப்பேனு சொன்னவனா?” கபிலன் பதில் சொல்வதற்குள், பார்த்தியிடம் எகிறினான், கபிலனின் மாப்ள.
“என்னாடா... அடிக்கிறதுக்கு ஆள கூட்டிட்டு வந்திருக்கியா?? பார்த்தி, பதிலுக்கு கபிலனை யேறினான்.
“உன்னைய அடிக்கிறதுக்கெல்லாம், ஆளவேற கூட்டிட்டு வருவாங்கெளா? கபிலன் கெத்துக் காட்டினான்.
“அடிச்சுட்டு ஊரவிட்டு போயிருவீஙெளா...?! பார்த்தி பதட்டத்தை வெளிக்காட்டாம, பதிலுக்கு எகிறுனான்.
“இவந்தான் உன்னைய அடிக்கனும்னு சொன்னவனா…” கபிலன் ஊர்க்காரர்கள் வெறியுடன் வந்தார்கள் பார்த்தி பக்கத்துல. அதை பார்த்த பார்த்தியின் நண்பர்கள் அவனைச்சுத்தி நின்றார்கள். டென்ஷன்யேறியது அங்க இருந்த எல்லாருக்கும், மொத்தக்கூட்டத்திலும். கபிலனுக்கு சுர்ர்ர்ன்று கோபம் ஏறியது மண்டையில்.
பழுவூர் அரண்மனை வளாகம்
“பெரியவரே!, அரண்மனையில் நடக்கப்போகும் வீரர்கள் படையணி வழியனுப்பு விழாவின் முடிவில், என்னைத் தீர்த்துகட்ட நீர்தான் உம் படைக்கு ரகசிய உத்தரவிட்டதாகச் செய்தி.
நேற்றைய தினம் அதைக்கேள்வியுற்ற என் தோழர்கள், நான் அறியாமலேயே, இன்று நான் அரண்மனை விழாவில் கலந்துகொள்ள வந்தபொழுது, என்னுடன் இணைந்துகொண்டனர். நான் வழியக் கூட்டம் சேர்க்க எந்த அவசியமுமில்லை”. தலைசூடாகிப்போன வல்லவன் வந்தியத்தேவன், பழுவேட்டரையரிடம் குரலை உயர்த்தினான்!
“எங்கே, உன் உடைவாளை உயர்த்து பார்க்கலாம்”, பெரியவரின் மெய்க்காவலர்கள், வல்லவனை முறைத்தனர்.
அந்த தருணத்தில் அங்குவந்த கடம்பூர் சம்புவரையர், மோதலுக்கு ஆயத்தமான இரு அணிகளையும் இடைமறித்தார். பழுவேட்டரையர், கரிகாலன் இருவருக்கும் பொதுத்தோழர், அவர். ஆகவே, கரிகாலனின் நண்பனான வல்லவனைக் காப்பதற்காக, இடைமறித்தார்.
“சோழப்பேரரசின் இரு தூண்கள், நீர் இருவரும். உங்களுக்குள் ஏன் வீண் மனச்சங்கடம். இந்த மனநிலை தவிர்த்து அனுசரித்திருங்கள்”. சம்புவரையர் வார்த்தைகள், வல்லவனை நிதானிக்கச்செய்தது. தன்னிலைக்கு வந்தான்!.
நண்பகல் 12மணி கல்லூரி வாசல்
“இனிமே, நீ நந்தினிகூட ஊர்சுத்தக்கூடாது”. சமாதானம் செய்த பொது நண்பர் முன்னிலையில் மீண்டும் பார்த்திபன் கபிலனிடம் அழுத்தமாகச் சொன்னான்.
“பார்த்தி… உங்கிட்ட ஏற்கனவே சொன்னேன். அவ என் ஃப்ரண்டு, நான் அப்டிதான் பேசுவேன். வேணும்னா அவட்ட சொல்லி பேசாம இருக்க சொல்றா”
“மாப்ள, வாடா போலாம். இப்ப தெரிஞ்சிருக்கும் அவிஙெளுக்கு நாம யாருன்னு.. இன்னைக்கு விட்று. இதுக்கப்புறம் என்னையப்பத்தி பேசுனா அப்ப பாத்துப்போம்.”
திரும்பி விறு விறுவென்று நடந்தான். ஊர்க்காரர்கள் கூட நடந்தார்கள். பக்கத்து டீ கடையில் போய் கருங்கல் பெஞ்சில் உக்கார்ந்தான். மாப்ளயும் கூட உக்கார்ந்தான். எல்லாரும் சுத்தி நின்றார்கள்.
“அண்ணே, எல்லாருக்கும் டீ போடுங்க. வேறென்ன கேட்குறாங்களோ குடுங்க. எவ்ளோன்னு கணக்கு வச்சுக்கங்க”, கபிலன் கடைக்காரரிடம் சொன்னான். “எல்லாம் பிஸ்கட், ஸ்னாக்ஸ் எதுவேனும்னாலும் சாப்டுங்கப்பா”, ஊர்க்காரர்களைப்ப பார்த்துச் சொன்னான்.
“யார்ரா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. இவன் ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! - மாப்ள அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.
“இல்ல மாப்ள.. நாங்க எல்லாரும் ப்ரண்ட்ஸாதாண்டா இருந்தோம்…”. கபிலன் எதையோ நினைத்தவன்போல, சொன்னான்.
சொல்லிவிட்டு அமைதியாக டீக்கடை பெஞ்சில் சரிந்து படுத்தான். இடது கையை தலைக்குத் தலையணையாக்கினான். கல்லூரியின் ஆரம்ப நாட்கள் அவனுள் காட்சியாய் விரியத்தொடங்கியது. அன்று பார்த்த நந்தினியின் ஆர்ப்பாட்டமும், கூடவே நிலாவின் அமைதியும் அவனை ஆக்கிரமித்தன…
.
2003 ஜீன், கபிலன் வீடு, நள்ளிரவு 1 மணி
"ஊர்ந்து செல்லும் உயிரினமும்,
கூர்ந்து பார்த்தும் -
தடம் தெரியா;
தளிர் நடை போட்டாள்"
வெண்ணிலாவை, காலையில் கல்லூரி முதல் நாளில், கிரகித்துக் கிறங்கிய அந்தத் தருணங்களை, கவிதையாய் வடித்தான் டயரியில். அந்த கவிதை வரிகளில், எழிலாய் நிழலாடிய அவளின் உருவத்தில் மெய் சிலிர்த்து; வீட்டின் விட்டம் பார்த்துப் புன்னகைத்தான், கபிலன்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-3