Akilan Mu
Saha Writer
- Messages
- 28
- Reaction score
- 1
- Points
- 1
கபிலனின் நிலா - நிகழ்வு: 13
இரவு உணவுக்குப்பின் கபிலன் தன்னுடன் பேசியபடி அன்று தங்கிய மாப்ளயுடன் வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்றான்.
தான் கைலிக்குள் ஒளித்துக்கொண்டுவந்த துணிப்பையை எடுத்தான். உள்ளே இரண்டு பீர் பாட்டில்கள். பாட்டிலின் வெளியே தெரிந்த நீர்த்துளிகளில் பீரின் குளிர்த்தன்மையை அறிய முடிந்தது.
“என்ன மச்சான். எப்டிடா?”
“அதான் சாப்டுறதுக்கு முன்னாடி வாழப்பழம் வாங்கிட்டு வந்துரேனு வெளிய போனனே”
“அடப்பாவி. நீ வொயின்ஷாப் பக்கம் போகமாட்டியே. இன்னைக்கு எப்டி வாங்குன?”
“உன்னைய நைட் தங்கச்சொல்லி நீ ஓகே சொன்னவுடனே, நம்ம ஏரியா மக்கள்ட ஃப்ரெண்ட் மூலமா சொல்லி வாங்கி ஃப்ரிட்ஜ்ல வைக்கச் சொன்னேன். அவுங்க வீட்டுக்குப்போய்தான் வாங்கிட்டு வந்தேன்.”
“அதான பாத்தேன். மச்சான் எங்க தேறிட்டியோனு நினச்சேன்.”
“அதலாம் கஷ்டம் மாப்ள. சில நேரம் ஜாலிய டேஸ்ட்ப் பண்ணிப்போம்னு யோசிச்சிருக்கேன். ஆனா சரக்குக்கடைப்பக்கம் போறதுக்கே பயம். அப்பாக்கு தெரிஞ்சா செத்தேன்.”
“அப்ப வாழ்க்கைல இது வரைக்கும் ஒரு ஷிப்கூட சரக்கடிச்சதில்லையா, மச்சான்?. அப்ப இன்னைக்கு டேஸ்ட் பண்ணிப்பாரு”.
“இல்ல மாப்ள. இதக்கொண்டு வந்ததே பெரிய ரிஸ்க். பக்கு பக்குனு அடிச்சிக்கிது மனசு. எல்லாரும் தூங்குறநால, ஒரு தைரியத்துல அதுவும் உனக்காகச் செய்யனும்னு செஞ்சேன்”
“அப்ப நீ அடுத்து ஊருக்கு வரும்போது நம்ம அடிக்கலாம், உன்னோட ஃபர்ஸ்ட் பீர. என்ன சொல்ற”
கபிலனிடம் சொன்ன மாப்ள, தன் பல்லால் லாகவமாக பீர் பாட்டிலைத் திறந்து ஒரே மடக்கில் கால் பாட்டிலைக் காலி செய்து கொண்டிருந்தான்.
“அடிக்கலாம் மாப்ள. ஆனா அது என் ஃபர்ஸ்ட் பீரா இருக்காது. ரெண்டாவது பீர்.”
சொல்லிவிட்டு இரண்டு தோள்பட்டையை உயர்த்தி நாக்கைக் கடித்தான் கபிலன். கபிலன் சொன்னதைக்கேட்டு பட்டென்று குடிப்பதை நிப்பாட்டி, குழப்பமாய்ப் பார்த்தான் மாப்ள.
“என்ன மச்சான் சொல்ற”
“அதான் ஒரு பெரிய மேட்டர் சொல்றேனு சொன்னனே”
“ஓ... நீ மொத பீர் குடிச்சதுதான் பெரிய மேட்டரா. இத சொல்றதுக்குதான் என்னைய நைட் இருக்கச்சொல்லி ரெண்டு பீர் வாங்கிக் கொடுத்தியா. ஏன் மச்சான்… இவ்ளோ சப்ப மேட்டருக்கா அப்டி பில்டப் குடுத்த...”.
“சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் சொல்லு, மாப்ள”
“சரி சொல்லு”. மாப்ள பாட்டிலில் மீதம் இருந்த பீரை குடிக்க ஆரம்பித்தான்.
“இந்த பார்த்திபன், நந்தினிகூட உட்காராத, நடக்காத, பேசாதன்னு… என்னையும், அமுதன், மாறன் எல்லாத்தையும் எதிரி மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டான்னு சொன்னேன்ல”
“ஆமா...”
“அத அப்டியே பல மாசம் நடந்துச்சு. இடையிலே எப்பவும் நந்தினியே ‘அவன் அப்டிதான் சொல்லுவான் நீ எப்பவும்போல இருன்னு’ சொல்லிட்ருப்பா. நானும் உன்ட சொன்ன மாதிரி, அவ பார்த்திபன லவ் பண்ணதுக்குப்புறம்தான் ரொம்ப க்ளோஸா சுத்துனோம். அவ பார்ர்திபன பாக்கப்போனாக்கூட என்ட சொல்லிட்டுப்போவா. ஆனா நாங்க எங்க போனாலும், ‘அவன்ட ஏன் சொல்லனும்னு கேட்பா’”.
“சரி…”
மாப்ள முதல் பீரை முக்கால் பாட்டில் காலி செய்திருந்தான். கபிலன் பெரிய பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்த ஃபிளாஸ்பேக்கினால், மாப்ள குடிக்கிற வேகம் குறைந்திருந்தது.
“நான் அடிக்கடி நந்தினி வீட்டுக்குப்போவேன். அது அவுங்க வீட்டுல, எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். உன்ட்டகூட அப்பப்ப சொல்லிருக்கேன். நீ பேர மறந்துட்ட”
“நான் மறந்துட்டனா. நீ வெண்ணிலாவப் பத்திதான என்ட அதிகாம சொல்லிருக்க. அப்ப எனக்குத் தெரியாம நெறைய மேட்டர் நடந்திருக்கு. ம்ம்ம்…”
“இல்ல மாப்ள”
“சரி. நீ மேட்டர சொல்லிமுடி, மச்சான். இருக்கா, இல்லையானு நான் சொல்றேன்…”
“டே.. இது ஒன்னுதான் நான் சொல்லாம இருந்த பெரிய விசயம்”
“சரி, சொல்லு. அடிக்கடி நீ நந்தினி வீட்டுக்குப்போவ. அப்புறம் என்னாச்சு?”
கேட்டுவிட்டு முதல் பீர் பாடிலைக் காலி செய்த மாப்ள, அடுத்த பீரை முன்புபோலவே பல்லால் கடித்துத் திறந்தான்.
“அப்ப ஒருநாள். நந்தினியோட அப்பா, அம்மா ஊருக்குப் போயிருந்தாங்க.”
.
2005 நாகர்கோவில் காலனி
நந்தினியும், கபிலனும் வழக்கம்போல் அன்று கல்லூரிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அமுதனும், மாறனும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
“கபிலா, அம்மா அப்பா ஊருக்குப்போயிருக்காங்க. ரெண்டு நாளாகும் வர. நீ நாளைக்கு ஃபுல்லா எங்க வீட்ல இருக்குற மாதிரி ப்ளான் பண்ணிக்க. நாளைக்கு ல்ஞ்ச், டின்னர் நான் ஸ்பெஷலா செய்யப்போறேன் நம்ம ரெண்டுபேருக்குமட்டும். வீக்எண்ட் ஸ்பெஷல்”
வீட்டினருகே விடை பெற்றுச்செல்லும்போது நந்தினி பார்த்திபனிடம் சொன்னாள்.
“ஏற்கனவே உன் லவ்வர் என்மேல செம கடுப்புல இருக்கான். இப்ப அவன விட்டுட்டு என்ன கூப்டா உன்மேலயும் கடுப்பாகப்போறான்.”
“பார்த்திக்கு நான் செய்றத செஞ்சிட்டுதான் இருக்கேன். அவன லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் நீதான் அவனால ரொம்ப பிரச்சனைய ஃபேஸ் பணற. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிற. உனக்கு அவனவிட பெருசா ஒன்னு குடுக்கனும். அதான் நான் பார்த்திபனும் ஊருக்குப்போன டைம்மா பார்த்து, எங்க வீட்லயும் யாருமில்லைன்றனால உனக்கு ஸ்பெஷல் லஞ்ச், டின்னர்.”
“ஓ பார்த்திபனும் ஊருக்குப்போய்ட்டானா. ஏதோ என்னய வச்சு டெஸ்ட் பண்ணனும்னு முடிவோட இருக்கபோல. சரி வந்துபாக்குறேன் அதையும். பை டி”.
இயல்பாகச்சிரித்துக்கொண்டே விடைபெற்றான் கபிலன். ஆனால், நந்தினி ஒரு தீவிர சிந்தனையில் வீட்டிற்குச்சென்றாள். இவ்வளவு அழுத்தமாக பிளானுடன் நந்தினி கபிலனை இதுவரை வீட்டிற்குவந்து இருக்கச் சொன்னதில்லை. கபிலன் நந்தினி வீட்டிற்குச் செல்வதும், உணவு அருந்துவதும் அதுவரை இயல்பாக நடந்த ஒன்று.
.
மறுநாள் காலை உணவுக்குப்பின், நண்பர்கள் வீட்டிற்குச்சென்றுவிட்டு இரவு உணவுக்குப்பின் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியில் சென்றான், கபிலன்.
நண்பர்களுடன் வழக்கமாகச் சந்திக்கும் டீக்கடையில் அரட்டையடித்துவிட்டு, மதிய உணவு நேரம் நந்தினி வீட்டிற்குச்சென்றான்.
.
நந்தினி வீடு
காலிங் பெல்லை அழுத்தினால், எப்போதும் கலகலப்பாக ஓடி வந்து கதவைத் திறப்பாள், நந்தினி.
“இன்னைக்கு அப்டி என்ன ஸ்பெஷல் வச்சிருக்கா, நந்து?!”. யோசித்துகொண்டே காலிங்பெல்லை அழுத்தினான், கபிலன்.
ஒருமுறை, இருமுறை, சிறிது இடைவெளிவிட்டு மூன்றாம் முறை காலிங்பெல்லை அழுத்தினான்.
“வெளியில் எங்கும் சென்றுவிட்டாளா?”. யோசித்துக்கொண்டே “நந்தூ…” சத்தமாகக் கூப்பிடவும், வீட்டின் உட்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
தன் வீக்எண்ட் ட்ரேட் மார்க் முழங்கால் தெரியும் அரைப்பாவாடை, சாம்பல் நிறத்தில் அணிந்திருந்தாள். மேலே அடர்நீல கைவைக்காத பனியன். புதிதாய்ப் பார்ப்பவன் கிறங்கிப்போவான், அவள் உடையிலும், ஒப்பனையில்லாத அந்த அழகிலும்கூட. ஆனால், கபிலனுக்கு அது பழக்கப்பட்ட ஒன்று.
“என்னடி, இவ்ளோ நேரம் என்ன பண்ண”
“உள்ள வா”
கதவைத்திறந்த நந்தினி, கபிலன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வீட்டினுள் சென்று, மூவர் அமரரும் சோபாவில் ஒரமாய், இரண்டு கால்களையும் ஒரு பக்கமாய் மடித்துக்கொண்டு அமர்ந்தாள். கபிலனும் பின்னாலேயே சென்று எதிரில் உள்ள ஒருவர் அமரும் சோபாவில் அமர்ந்தான்.
“என்னடி ஆச்சு. ட்ரீட்னு சொல்லி ஒரு கட்டு கட்டலாம், ஜாலியா பேசிட்ருக்கலாம்னு வந்தா இப்டி உக்காந்திருக்க. உன்னைய நம்பி நைட் சாப்டுதான் வருவேன்னு வீட்ல சொல்லிருக்கேன். உடம்புக்கு எதும் சரியில்லயா”
“மனசு சரியில்ல”
“என்ன பிரச்சனை இப்போ. நேத்து ஈவ்னிங் நல்லாதான பேசிட்டுப்போன”
“ஏன், இத பக்கத்துல உக்காந்து கேக்க மாட்டியா?”. நந்தினி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கபிலனைத் திருப்பிக்கேட்டாள்.
“சரி, ஏன் உக்கார மாட்டனா”. சொல்லிகொண்டே எழுந்துவந்து நந்தினி அருகே அமர்ந்தான்”
“சொல்லு, என்ன ஆச்சு ஓவர் நைட்ல”
“இது ஒன்னும் ஓவர் நைட்ல ஆகல. ஒரு வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு”
“ஒரு வருஷமாவா. அப்புறம் ஏன் என்ட இவ்ளோநாளா சொல்லல?”. கபிலன் உரிமையுடன் கேட்டான்.
“மடில படுத்துக்கவா”. கபிலன் கேள்விக்குப்பதில் சொல்லாமல் கெஞ்சலாகக் கேட்டாள்.
“மடில படுத்தாதான் சொல்லுவியா. சரி வா படுத்துக்கோ. யார் வேண்டாம்னா”
நந்தினி அளவுகடந்த மகிழ்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் இருந்தால் இப்படி கபிலன் மடியில் படுத்துக்கொள்வது வழக்கம்.
கபிலன் மடியில் தலைசாய்த்து இரண்டு கால்களையும் மடித்துக்கொண்டு, தன் இருகைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சுருண்டுபடுத்தாள், நந்தினி.
“என்னாச்சு நந்து. எதுனாலும் சொல்லு. என்ன பண்ணா சரியாகும்னு நான் சொல்றேன். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே லஞ்ச் ரெடி பண்ணலாம்”
“ல்ஞ்ச்லாம் ரெடி பண்ணிட்டேன்”. கொஞ்சம் உடைந்த குரலில் சொன்னாள் நந்தினி. கபிலன் உருகிப்போனான்.
.
சோழப்பேரரசு. பழுவூர் அரண்மனை
பழுவூர் இளையராணி நந்தினி தன் கணவர் பெரியபழுவேட்டரையரை தஞ்சாவூர் அனுப்பிவிட்டு வல்லவன் வந்தியத்தேவனை விருந்திற்கு அழைத்திருந்தாள். மகிழ்வுடனும், மனதிற்குள், ‘தன்னையேன் இளையராணி அழைத்தார்கள்’ என்ற கேள்வியுடனும் அரண்மனை சென்றிருந்த வந்தியத்தேவன், பழுவூர்ராணி நந்தினி அலங்காரமற்ற முகத்துடனும், ஆனால் அதே மின்னும் பொலிவுடனும், ஆசனத்தில் அமர்ந்திருந்ததைக்கண்டு குழப்பமடைந்தான்.
சுற்றிலும் அரண்மனை பணியாளர்களோ, இளையராணியின் பணிப்பெண்களோ இல்லை.
அந்த விசாலமான அறையில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் முடிவில் இருந்த தங்கமுலாம்பூசப்பட்ட ஆசனத்தில் ஒரு ஓரமாய் இளையராணி நந்தினி தலைகவிழ்த்தி அமர்ந்திருந்தாள்.
“இளையராணி தங்கள் அரண்மனைக்கே என்னை விருந்துக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் தங்கள் முகத்தில் ஏதோ கவலை தோய்ந்திருக்கிறதே!?. நான் ஏதும் உங்களின் மனக்குழப்பத்திற்கு காரணமாயிருந்தால், தயை செய்து மன்னிக்கவேண்டும், இளையராணி!”
“இல்லை, வல்லவரே!. என் நட்பினால் என் கணவரின்பால் நீங்கள் அனுபவிக்கும் கடுமையான சூழலுக்கு நான்தான் உங்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும். அதற்கு சிறு பரிகாரம் காணவே என் கணவரை தஞ்சைக்கு அனுப்பிவிட்டு, உங்களுக்கு விருந்தளிக்க அழைத்தேன்”
“தங்களின் ஆத்மார்த்தமான அன்பும், அதனால் விளைந்த நட்புமே எனக்கு ஆயுளுக்கும் பெரும் விருந்துதான் இளையராணி. உணவு விருந்தில் அதைவிட சிறப்பை நான் பெறப்போவதில்லை”
“நான் தங்களுக்கு உணவு விருந்தளிக்க அழைக்கவில்லை. வந்தியத்தேவருக்கு என்னையே விருந்தாக அளிக்க அழைத்தேன்”
“இளையராணி… என்ன இது என் நட்பின்மீது ஐயப்பட்டு எனைச்சோதிக்கிறீர்களா?. தங்கள் அழகையும், இளமையையும் எல்லோரும் சிலாகிப்பதும், ரசிப்பதும் இயற்கையே. தங்கள் மீது கொண்ட நட்பினால், நான் சற்று அதிகமாக அதைப்பற்றி பேசியிருக்கலாம். அது தவறு எனில் மன்னியுங்கள்!. நான் தங்களின் காதலுக்குத் தகுதியில்லாதவன்”
கபிலன் பதறினான். நந்தினி நிதானமாய்க் காதல் பார்வையை வல்லவன் மீது அழுத்தமாய்ப் பதித்துக்கொண்டிருந்தாள். இளையராணி நந்தினிக்கு குறிக்கோள் வல்லவன் தன்னைவிட்டு விலகி குந்தவையின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பது. அதனால் வெவ்வேறு முயற்சிக்குப்பின், தன்னையே கொடுத்து வல்லவனை தன்னுள் வீழ்த்த சதி செய்தாள்.
நந்தினி வசீகரப்புன்னைகையுடனும், காதலில் சிவந்த கண்களுடனும், ஆசனத்தில் இருந்து எழுந்து வல்லவனை நோக்கி நடந்தாள். நந்தினியின் அழகிலும், நடையிலும்; வெண்மதியும், மயிலும், அன்னமும், அசைந்துவரும் தேரும் வல்லவன் கண்முன் நிழலாடின.
கபிலன் சரீரம் தடுமாறியது. ஆனால் மனம் தடம்மாறவில்லை. அவன் மெதுவாக பின்னோக்கி நகர்ந்தான்.
“நந்தினி, தாங்கள் பழுவூர் சிற்றரசர் பழுவேட்டரையரின் துணைவியார்”
“மணம்முடித்தது அவரை. என்மனம் நாடுவது வல்லவரை”
“இளையராணி… இது தவறு”
தன்னை வெகுஅருகில் அணுகிய இளையராணி நந்தினியின் தோள்களைபற்றி நிறுத்திய வந்தியத்தேவன், பதற்றத்தில் உரக்கச்சொன்னான்.
.
நாகர்கோவில் நந்தினி வீடு
“இதுலென்ன தப்பு. நான் பார்த்திபனக் காதலிக்கிறேன். ஆனா அது நானா தேடிப்போனதில்ல. நீதான் போக வச்ச”
நந்தினி அழுத்தமாகவும், சிறிது கோபமாகவும் கபிலனிடம் சொன்னாள். நந்தினியின் தோள்களைப் பிடித்து தடுத்திருந்த கபிலன் அவளை உலுக்கினான்.
“என்னடி உளர்ற. தெளிவாதான் இருக்கியா?”
“தெளிவாதான் சொல்றேன். நானா விரும்பி இந்த காதல் நடக்கல. பார்த்திபன் செஞ்ச பிளான். உன்னால நான் அதுல மாட்டிக்கிட்டேன்”
கபிலன் அதிர்ந்தான்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-13
இரவு உணவுக்குப்பின் கபிலன் தன்னுடன் பேசியபடி அன்று தங்கிய மாப்ளயுடன் வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்றான்.
தான் கைலிக்குள் ஒளித்துக்கொண்டுவந்த துணிப்பையை எடுத்தான். உள்ளே இரண்டு பீர் பாட்டில்கள். பாட்டிலின் வெளியே தெரிந்த நீர்த்துளிகளில் பீரின் குளிர்த்தன்மையை அறிய முடிந்தது.
“என்ன மச்சான். எப்டிடா?”
“அதான் சாப்டுறதுக்கு முன்னாடி வாழப்பழம் வாங்கிட்டு வந்துரேனு வெளிய போனனே”
“அடப்பாவி. நீ வொயின்ஷாப் பக்கம் போகமாட்டியே. இன்னைக்கு எப்டி வாங்குன?”
“உன்னைய நைட் தங்கச்சொல்லி நீ ஓகே சொன்னவுடனே, நம்ம ஏரியா மக்கள்ட ஃப்ரெண்ட் மூலமா சொல்லி வாங்கி ஃப்ரிட்ஜ்ல வைக்கச் சொன்னேன். அவுங்க வீட்டுக்குப்போய்தான் வாங்கிட்டு வந்தேன்.”
“அதான பாத்தேன். மச்சான் எங்க தேறிட்டியோனு நினச்சேன்.”
“அதலாம் கஷ்டம் மாப்ள. சில நேரம் ஜாலிய டேஸ்ட்ப் பண்ணிப்போம்னு யோசிச்சிருக்கேன். ஆனா சரக்குக்கடைப்பக்கம் போறதுக்கே பயம். அப்பாக்கு தெரிஞ்சா செத்தேன்.”
“அப்ப வாழ்க்கைல இது வரைக்கும் ஒரு ஷிப்கூட சரக்கடிச்சதில்லையா, மச்சான்?. அப்ப இன்னைக்கு டேஸ்ட் பண்ணிப்பாரு”.
“இல்ல மாப்ள. இதக்கொண்டு வந்ததே பெரிய ரிஸ்க். பக்கு பக்குனு அடிச்சிக்கிது மனசு. எல்லாரும் தூங்குறநால, ஒரு தைரியத்துல அதுவும் உனக்காகச் செய்யனும்னு செஞ்சேன்”
“அப்ப நீ அடுத்து ஊருக்கு வரும்போது நம்ம அடிக்கலாம், உன்னோட ஃபர்ஸ்ட் பீர. என்ன சொல்ற”
கபிலனிடம் சொன்ன மாப்ள, தன் பல்லால் லாகவமாக பீர் பாட்டிலைத் திறந்து ஒரே மடக்கில் கால் பாட்டிலைக் காலி செய்து கொண்டிருந்தான்.
“அடிக்கலாம் மாப்ள. ஆனா அது என் ஃபர்ஸ்ட் பீரா இருக்காது. ரெண்டாவது பீர்.”
சொல்லிவிட்டு இரண்டு தோள்பட்டையை உயர்த்தி நாக்கைக் கடித்தான் கபிலன். கபிலன் சொன்னதைக்கேட்டு பட்டென்று குடிப்பதை நிப்பாட்டி, குழப்பமாய்ப் பார்த்தான் மாப்ள.
“என்ன மச்சான் சொல்ற”
“அதான் ஒரு பெரிய மேட்டர் சொல்றேனு சொன்னனே”
“ஓ... நீ மொத பீர் குடிச்சதுதான் பெரிய மேட்டரா. இத சொல்றதுக்குதான் என்னைய நைட் இருக்கச்சொல்லி ரெண்டு பீர் வாங்கிக் கொடுத்தியா. ஏன் மச்சான்… இவ்ளோ சப்ப மேட்டருக்கா அப்டி பில்டப் குடுத்த...”.
“சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் சொல்லு, மாப்ள”
“சரி சொல்லு”. மாப்ள பாட்டிலில் மீதம் இருந்த பீரை குடிக்க ஆரம்பித்தான்.
“இந்த பார்த்திபன், நந்தினிகூட உட்காராத, நடக்காத, பேசாதன்னு… என்னையும், அமுதன், மாறன் எல்லாத்தையும் எதிரி மாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டான்னு சொன்னேன்ல”
“ஆமா...”
“அத அப்டியே பல மாசம் நடந்துச்சு. இடையிலே எப்பவும் நந்தினியே ‘அவன் அப்டிதான் சொல்லுவான் நீ எப்பவும்போல இருன்னு’ சொல்லிட்ருப்பா. நானும் உன்ட சொன்ன மாதிரி, அவ பார்த்திபன லவ் பண்ணதுக்குப்புறம்தான் ரொம்ப க்ளோஸா சுத்துனோம். அவ பார்ர்திபன பாக்கப்போனாக்கூட என்ட சொல்லிட்டுப்போவா. ஆனா நாங்க எங்க போனாலும், ‘அவன்ட ஏன் சொல்லனும்னு கேட்பா’”.
“சரி…”
மாப்ள முதல் பீரை முக்கால் பாட்டில் காலி செய்திருந்தான். கபிலன் பெரிய பீடிகையுடன் சொல்ல ஆரம்பித்த ஃபிளாஸ்பேக்கினால், மாப்ள குடிக்கிற வேகம் குறைந்திருந்தது.
“நான் அடிக்கடி நந்தினி வீட்டுக்குப்போவேன். அது அவுங்க வீட்டுல, எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். உன்ட்டகூட அப்பப்ப சொல்லிருக்கேன். நீ பேர மறந்துட்ட”
“நான் மறந்துட்டனா. நீ வெண்ணிலாவப் பத்திதான என்ட அதிகாம சொல்லிருக்க. அப்ப எனக்குத் தெரியாம நெறைய மேட்டர் நடந்திருக்கு. ம்ம்ம்…”
“இல்ல மாப்ள”
“சரி. நீ மேட்டர சொல்லிமுடி, மச்சான். இருக்கா, இல்லையானு நான் சொல்றேன்…”
“டே.. இது ஒன்னுதான் நான் சொல்லாம இருந்த பெரிய விசயம்”
“சரி, சொல்லு. அடிக்கடி நீ நந்தினி வீட்டுக்குப்போவ. அப்புறம் என்னாச்சு?”
கேட்டுவிட்டு முதல் பீர் பாடிலைக் காலி செய்த மாப்ள, அடுத்த பீரை முன்புபோலவே பல்லால் கடித்துத் திறந்தான்.
“அப்ப ஒருநாள். நந்தினியோட அப்பா, அம்மா ஊருக்குப் போயிருந்தாங்க.”
.
2005 நாகர்கோவில் காலனி
நந்தினியும், கபிலனும் வழக்கம்போல் அன்று கல்லூரிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அமுதனும், மாறனும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
“கபிலா, அம்மா அப்பா ஊருக்குப்போயிருக்காங்க. ரெண்டு நாளாகும் வர. நீ நாளைக்கு ஃபுல்லா எங்க வீட்ல இருக்குற மாதிரி ப்ளான் பண்ணிக்க. நாளைக்கு ல்ஞ்ச், டின்னர் நான் ஸ்பெஷலா செய்யப்போறேன் நம்ம ரெண்டுபேருக்குமட்டும். வீக்எண்ட் ஸ்பெஷல்”
வீட்டினருகே விடை பெற்றுச்செல்லும்போது நந்தினி பார்த்திபனிடம் சொன்னாள்.
“ஏற்கனவே உன் லவ்வர் என்மேல செம கடுப்புல இருக்கான். இப்ப அவன விட்டுட்டு என்ன கூப்டா உன்மேலயும் கடுப்பாகப்போறான்.”
“பார்த்திக்கு நான் செய்றத செஞ்சிட்டுதான் இருக்கேன். அவன லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் நீதான் அவனால ரொம்ப பிரச்சனைய ஃபேஸ் பணற. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிற. உனக்கு அவனவிட பெருசா ஒன்னு குடுக்கனும். அதான் நான் பார்த்திபனும் ஊருக்குப்போன டைம்மா பார்த்து, எங்க வீட்லயும் யாருமில்லைன்றனால உனக்கு ஸ்பெஷல் லஞ்ச், டின்னர்.”
“ஓ பார்த்திபனும் ஊருக்குப்போய்ட்டானா. ஏதோ என்னய வச்சு டெஸ்ட் பண்ணனும்னு முடிவோட இருக்கபோல. சரி வந்துபாக்குறேன் அதையும். பை டி”.
இயல்பாகச்சிரித்துக்கொண்டே விடைபெற்றான் கபிலன். ஆனால், நந்தினி ஒரு தீவிர சிந்தனையில் வீட்டிற்குச்சென்றாள். இவ்வளவு அழுத்தமாக பிளானுடன் நந்தினி கபிலனை இதுவரை வீட்டிற்குவந்து இருக்கச் சொன்னதில்லை. கபிலன் நந்தினி வீட்டிற்குச் செல்வதும், உணவு அருந்துவதும் அதுவரை இயல்பாக நடந்த ஒன்று.
.
மறுநாள் காலை உணவுக்குப்பின், நண்பர்கள் வீட்டிற்குச்சென்றுவிட்டு இரவு உணவுக்குப்பின் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியில் சென்றான், கபிலன்.
நண்பர்களுடன் வழக்கமாகச் சந்திக்கும் டீக்கடையில் அரட்டையடித்துவிட்டு, மதிய உணவு நேரம் நந்தினி வீட்டிற்குச்சென்றான்.
.
நந்தினி வீடு
காலிங் பெல்லை அழுத்தினால், எப்போதும் கலகலப்பாக ஓடி வந்து கதவைத் திறப்பாள், நந்தினி.
“இன்னைக்கு அப்டி என்ன ஸ்பெஷல் வச்சிருக்கா, நந்து?!”. யோசித்துகொண்டே காலிங்பெல்லை அழுத்தினான், கபிலன்.
ஒருமுறை, இருமுறை, சிறிது இடைவெளிவிட்டு மூன்றாம் முறை காலிங்பெல்லை அழுத்தினான்.
“வெளியில் எங்கும் சென்றுவிட்டாளா?”. யோசித்துக்கொண்டே “நந்தூ…” சத்தமாகக் கூப்பிடவும், வீட்டின் உட்கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
தன் வீக்எண்ட் ட்ரேட் மார்க் முழங்கால் தெரியும் அரைப்பாவாடை, சாம்பல் நிறத்தில் அணிந்திருந்தாள். மேலே அடர்நீல கைவைக்காத பனியன். புதிதாய்ப் பார்ப்பவன் கிறங்கிப்போவான், அவள் உடையிலும், ஒப்பனையில்லாத அந்த அழகிலும்கூட. ஆனால், கபிலனுக்கு அது பழக்கப்பட்ட ஒன்று.
“என்னடி, இவ்ளோ நேரம் என்ன பண்ண”
“உள்ள வா”
கதவைத்திறந்த நந்தினி, கபிலன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வீட்டினுள் சென்று, மூவர் அமரரும் சோபாவில் ஒரமாய், இரண்டு கால்களையும் ஒரு பக்கமாய் மடித்துக்கொண்டு அமர்ந்தாள். கபிலனும் பின்னாலேயே சென்று எதிரில் உள்ள ஒருவர் அமரும் சோபாவில் அமர்ந்தான்.
“என்னடி ஆச்சு. ட்ரீட்னு சொல்லி ஒரு கட்டு கட்டலாம், ஜாலியா பேசிட்ருக்கலாம்னு வந்தா இப்டி உக்காந்திருக்க. உன்னைய நம்பி நைட் சாப்டுதான் வருவேன்னு வீட்ல சொல்லிருக்கேன். உடம்புக்கு எதும் சரியில்லயா”
“மனசு சரியில்ல”
“என்ன பிரச்சனை இப்போ. நேத்து ஈவ்னிங் நல்லாதான பேசிட்டுப்போன”
“ஏன், இத பக்கத்துல உக்காந்து கேக்க மாட்டியா?”. நந்தினி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கபிலனைத் திருப்பிக்கேட்டாள்.
“சரி, ஏன் உக்கார மாட்டனா”. சொல்லிகொண்டே எழுந்துவந்து நந்தினி அருகே அமர்ந்தான்”
“சொல்லு, என்ன ஆச்சு ஓவர் நைட்ல”
“இது ஒன்னும் ஓவர் நைட்ல ஆகல. ஒரு வருஷமா நடந்துகிட்டுதான் இருக்கு”
“ஒரு வருஷமாவா. அப்புறம் ஏன் என்ட இவ்ளோநாளா சொல்லல?”. கபிலன் உரிமையுடன் கேட்டான்.
“மடில படுத்துக்கவா”. கபிலன் கேள்விக்குப்பதில் சொல்லாமல் கெஞ்சலாகக் கேட்டாள்.
“மடில படுத்தாதான் சொல்லுவியா. சரி வா படுத்துக்கோ. யார் வேண்டாம்னா”
நந்தினி அளவுகடந்த மகிழ்ச்சியிலும், ஆழ்ந்த கவலையிலும் இருந்தால் இப்படி கபிலன் மடியில் படுத்துக்கொள்வது வழக்கம்.
கபிலன் மடியில் தலைசாய்த்து இரண்டு கால்களையும் மடித்துக்கொண்டு, தன் இருகைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு சுருண்டுபடுத்தாள், நந்தினி.
“என்னாச்சு நந்து. எதுனாலும் சொல்லு. என்ன பண்ணா சரியாகும்னு நான் சொல்றேன். அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே லஞ்ச் ரெடி பண்ணலாம்”
“ல்ஞ்ச்லாம் ரெடி பண்ணிட்டேன்”. கொஞ்சம் உடைந்த குரலில் சொன்னாள் நந்தினி. கபிலன் உருகிப்போனான்.
.
சோழப்பேரரசு. பழுவூர் அரண்மனை
பழுவூர் இளையராணி நந்தினி தன் கணவர் பெரியபழுவேட்டரையரை தஞ்சாவூர் அனுப்பிவிட்டு வல்லவன் வந்தியத்தேவனை விருந்திற்கு அழைத்திருந்தாள். மகிழ்வுடனும், மனதிற்குள், ‘தன்னையேன் இளையராணி அழைத்தார்கள்’ என்ற கேள்வியுடனும் அரண்மனை சென்றிருந்த வந்தியத்தேவன், பழுவூர்ராணி நந்தினி அலங்காரமற்ற முகத்துடனும், ஆனால் அதே மின்னும் பொலிவுடனும், ஆசனத்தில் அமர்ந்திருந்ததைக்கண்டு குழப்பமடைந்தான்.
சுற்றிலும் அரண்மனை பணியாளர்களோ, இளையராணியின் பணிப்பெண்களோ இல்லை.
அந்த விசாலமான அறையில் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, அதன் முடிவில் இருந்த தங்கமுலாம்பூசப்பட்ட ஆசனத்தில் ஒரு ஓரமாய் இளையராணி நந்தினி தலைகவிழ்த்தி அமர்ந்திருந்தாள்.
“இளையராணி தங்கள் அரண்மனைக்கே என்னை விருந்துக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. ஆனால் தங்கள் முகத்தில் ஏதோ கவலை தோய்ந்திருக்கிறதே!?. நான் ஏதும் உங்களின் மனக்குழப்பத்திற்கு காரணமாயிருந்தால், தயை செய்து மன்னிக்கவேண்டும், இளையராணி!”
“இல்லை, வல்லவரே!. என் நட்பினால் என் கணவரின்பால் நீங்கள் அனுபவிக்கும் கடுமையான சூழலுக்கு நான்தான் உங்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும். அதற்கு சிறு பரிகாரம் காணவே என் கணவரை தஞ்சைக்கு அனுப்பிவிட்டு, உங்களுக்கு விருந்தளிக்க அழைத்தேன்”
“தங்களின் ஆத்மார்த்தமான அன்பும், அதனால் விளைந்த நட்புமே எனக்கு ஆயுளுக்கும் பெரும் விருந்துதான் இளையராணி. உணவு விருந்தில் அதைவிட சிறப்பை நான் பெறப்போவதில்லை”
“நான் தங்களுக்கு உணவு விருந்தளிக்க அழைக்கவில்லை. வந்தியத்தேவருக்கு என்னையே விருந்தாக அளிக்க அழைத்தேன்”
“இளையராணி… என்ன இது என் நட்பின்மீது ஐயப்பட்டு எனைச்சோதிக்கிறீர்களா?. தங்கள் அழகையும், இளமையையும் எல்லோரும் சிலாகிப்பதும், ரசிப்பதும் இயற்கையே. தங்கள் மீது கொண்ட நட்பினால், நான் சற்று அதிகமாக அதைப்பற்றி பேசியிருக்கலாம். அது தவறு எனில் மன்னியுங்கள்!. நான் தங்களின் காதலுக்குத் தகுதியில்லாதவன்”
கபிலன் பதறினான். நந்தினி நிதானமாய்க் காதல் பார்வையை வல்லவன் மீது அழுத்தமாய்ப் பதித்துக்கொண்டிருந்தாள். இளையராணி நந்தினிக்கு குறிக்கோள் வல்லவன் தன்னைவிட்டு விலகி குந்தவையின் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்பது. அதனால் வெவ்வேறு முயற்சிக்குப்பின், தன்னையே கொடுத்து வல்லவனை தன்னுள் வீழ்த்த சதி செய்தாள்.
நந்தினி வசீகரப்புன்னைகையுடனும், காதலில் சிவந்த கண்களுடனும், ஆசனத்தில் இருந்து எழுந்து வல்லவனை நோக்கி நடந்தாள். நந்தினியின் அழகிலும், நடையிலும்; வெண்மதியும், மயிலும், அன்னமும், அசைந்துவரும் தேரும் வல்லவன் கண்முன் நிழலாடின.
கபிலன் சரீரம் தடுமாறியது. ஆனால் மனம் தடம்மாறவில்லை. அவன் மெதுவாக பின்னோக்கி நகர்ந்தான்.
“நந்தினி, தாங்கள் பழுவூர் சிற்றரசர் பழுவேட்டரையரின் துணைவியார்”
“மணம்முடித்தது அவரை. என்மனம் நாடுவது வல்லவரை”
“இளையராணி… இது தவறு”
தன்னை வெகுஅருகில் அணுகிய இளையராணி நந்தினியின் தோள்களைபற்றி நிறுத்திய வந்தியத்தேவன், பதற்றத்தில் உரக்கச்சொன்னான்.
.
நாகர்கோவில் நந்தினி வீடு
“இதுலென்ன தப்பு. நான் பார்த்திபனக் காதலிக்கிறேன். ஆனா அது நானா தேடிப்போனதில்ல. நீதான் போக வச்ச”
நந்தினி அழுத்தமாகவும், சிறிது கோபமாகவும் கபிலனிடம் சொன்னாள். நந்தினியின் தோள்களைப் பிடித்து தடுத்திருந்த கபிலன் அவளை உலுக்கினான்.
“என்னடி உளர்ற. தெளிவாதான் இருக்கியா?”
“தெளிவாதான் சொல்றேன். நானா விரும்பி இந்த காதல் நடக்கல. பார்த்திபன் செஞ்ச பிளான். உன்னால நான் அதுல மாட்டிக்கிட்டேன்”
கபிலன் அதிர்ந்தான்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-13