Akilan Mu
Saha Writer
- Messages
- 28
- Reaction score
- 1
- Points
- 1
கபிலனின் நிலா - நிகழ்வு: 8
காற்றில் அலைபாய்ந்த கூந்தல். கபிலனின் இருப்பால் பரவசப்பட்ட மனம். தூரத்தில் தெரிந்த பொதிகை மலைத்தொடரையும், அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின்போக்கையும் பார்த்துக்கொண்டிருந்த மேகலையின் கருவிழிகள், மேலும், கீழும், இடதும், வலதுமாய் உருண்டுகொண்டிருந்தன. கபிலன் அவளை நெருங்க நெருங்க,
மாடிச்சுவரில் இருகைகளையும் ஊன்றி அழுத்தமாய்ப்பற்றிக்கொண்டாள். தடுமாறிய மனதைத் தாங்க முயன்றாள். அவளின் பதட்டம் அதிகரித்தது.
அதுநாள்வரை எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேகலையிடம் பேசி, பழகிக்கொண்டிருந்த கபிலன், சற்று தூரமே இருக்கையில், மேகலையைப் பார்த்தான். காற்றில் தவழ்ந்த கருங்கூந்தல், படபடத்த இமைகள், மாநிற அழகு மேனியைத் தழுவிக்கொண்டிருந்த ரத்தச்சிவப்புவண்ணத் தாவணி, தரையில்புரளும் வெளிர்மஞ்சள்நிற முழுப்பாவாடை, சிறிதாய் காலை மடக்கி வலது நுனிக்காலை ஊன்றி நின்றிருந்ததால் தெரிந்த வெளிர்பாதம், அதன்கணுக்காலில் சலசலத்த வெள்ளிக்கொலுசுமணி - இத்தனையும்தான் தெரிந்தது. அங்கே அவனுக்கு மேகலை தெரியவில்லை. அன்றுதான் முதல்முறையாய் அவளைப் பார்ப்பதுபோல் இருந்தது.
அருகில் சென்று வெளிப்புறமாய்த்திரும்பி நின்ற மேகலையின் முதுகுப்புறம் பின்னால் நின்றான். அவள் இதயம் படபடத்தது. மேலும் கீழும் சிறிதாய் ஏறியிறங்கிக்கொண்டிருந்த அவளின் தோல்பட்டைகள்காட்டியது அவளின் மனப்படபடப்பை.
என்ன நினைத்தானோ தெரியவில்லை, மெதுவாக மேகலையின் வலதுதோளில் கைவைத்தான்.
“மேகா, உன்னைய எனக்கு ரொம்பப்பிடிக்கும்”.
இதைச்சற்றும் எதிர்பார்க்காத மேகலை, படாரென்று கபிலனை நோக்கித்திரும்பியவள்,
அவன் மிகஅருகில் நிற்பதைக்கண்டு வெட்கி, பதறித்தலைகுனிந்து, பின்னால் நகன்று அந்த மாடிச்சுவரின் மீது சாய்ந்து நிற்க முயன்றவள், நிதானம் தவறி அப்படியே பின்னால் சாய்ந்தாள். அகன்ற நீண்ட ஓடுவேய்ந்த மேற்கூரையில் தலைகுப்புற விழுந்து கீழே உருள ஆரம்பித்தாள்.
“கபிலா… எனையப்பிடிங்க….” மேகலை பயத்தில் கத்தினாள்.
“மேகா…”.
கத்தியபடிஅவளைப்பிடிக்கக் கையை நீட்டினான். ஆனால் எட்டும் தொலைவிலில்லை.
கபிலனக்கு கண்கள் கலங்கி, காட்சி மங்கியது. நினைவு எங்கோ கரைந்தது.
.
பழுவூர் அரண்மனை. சோழபுரம்.
அரண்மனை மேல்மாடத்திலிருந்து சரிந்து உருண்டு கீழே வீழ்ந்துகொண்டிருந்த கடம்பூர் இளவரசி மணிமேகலையின் அலறல் அந்த அரண்மனை மாடங்களில்மோதி எட்டுத்திக்கும் வளாகம்முழுதும் எதிரொலித்தது. வல்லவன் வந்தியதேவன் கண்ணிமைக்கும் நேரத்தில், அருகிலிருந்த அகன்ற ஆலமரத்தின் நெடிய விழுதுகளைப்பற்றி மின்னல்வேகத்தில் கீழே குதித்தான். குதித்த மறுகணம் மணிமேகலை வல்லவன் இரு கரங்களில் பாதுகாப்பாய் வீழ்ந்தாள், ஆனால் பயத்தில் மயங்கியிருந்தாள். பெருமூச்சுவிட்ட வந்தியத்தேவன், மேலே மாடத்தைப் பார்த்தான். எட்டிப்பதறிப் பார்த்துக்கொண்டிருந்த பழுவூர் இளையராணி நந்தினி, நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்செறிந்தாள். கண்ணைமூடி மனதார ஈசனை நினைத்தாள்.
“நீலகண்டனே, எனைக்காத்தருளினாய். மணிமேகலையின் நலனுக்காக எனக்கருதி, அவளின் அம்மையப்பரிடம் தானும், அவள் தமையன் கடம்பூர் இளவரசன் கந்தமாறனிடம் வல்லவனும் பொறுப்பெடுத்துக்கொண்டல்லவா, மணிமேகலையை இந்தப் பழூவூர் கொணர்ந்தோம். வந்த முதல்நாளிலேயே நாங்கள் சுமக்கவிருந்த பழிச்சொல்லை, இப்பொழுது நிகழ்ந்த அபசகுண நிகழ்வைத் தடுத்து, எங்களையும் பழியிலிருந்து காத்தாய் அப்பனே”, என மனதாரக் கண்கலங்கி நன்றி சொன்னாள்.
மறுகணம் நந்தினி விறுவிறுவெனக் கீழிறங்கி அரண்மனை ஓய்வறைக்குச் சென்றாள். அங்கே தேக்குமரத்தாலான அகன்ற கட்டிலில், பட்டுவிருப்பின்மேல் மேகலையைகிடத்தி தானும் அருகில் அமர்ந்திருந்தான். மயங்கியிருந்த இளவரசி மணிமேகலையின் வலதுகரத்தை, தன் இருஉள்ளங்கைக்குள்ளும்வைத்து ஆதரவாய்ப்பற்றி, கண்கலங்கியிருந்தான்.
வந்தியத்தேவன் மணிமேகலையின் வலதுகரத்தை ஆதரவாய்ப்பற்றியிருந்த காட்சி, அந்த அறைக்குள்ளே நுழைந்த நந்தினியின் உள்ளத்தை உவகையுறச்செய்தது. தான் நினைத்த காரியம் கனவாகிவிடுமோ என்று அஞ்சிய அவள் மனம் மகிழ்ந்தது. முகம் மலர்ந்தது.
“ஆகா, என்னே துரிதம். என்னே சாதுர்யம். எத்தனை அக்கறை. எத்தனை பரிவு. வல்லவரே, காற்றையும் மிஞ்சும் லாகவத்தில், மின்னலே அஞ்சும் வேகத்திலல்லவா மேல்மாடத்திலிருந்து குதித்தீர்கள். அந்த வேகத்தில், மணிமேகலையின்பாலான உங்கள் உள்ளக்கிடக்கை உறுதியாக்கப்பட்டதே!”
“அவ்வாறல்ல இளையராணி. அது, நண்பனின் தமக்கையின்பால்கொண்ட அக்கறையென்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?”. பட்டென்று தன் உள்ளங்கையிலிருந்து மணிமேகலையின் கரங்களை கீழேவிடுத்தான், வல்லவன்!
“ம்ம்.. அப்படி என்னை எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள், அப்படித்தானே வல்லவரே”. நந்தினி புன்னகைத்தாள்.
“அது… அப்படிச் சொல்லவில்லை. அதாவது… எனக்கு… மணிமேகலையின்மீதும் மிகுந்த அன்பு உண்டு”
“அடேங்கப்பா. என்ன அதிசயம். காற்றைகிழித்துக்கொண்டுபோன வீரம் குலைகிறது. இளவரசியைத்தாங்கிய கரங்கள் தள்ளாடுகின்றன. ஹூம்ம். என்மனதறிந்து இது ஆழமான காதல்தான். இதையறியாமல்தான் நான், தாங்கள் குந்தவையிடம் காதல்கொண்டதாக தவறாக எண்ணி தங்களிடம் அத்தனை காலம், மேல்மாடத்தில் மணிமேகலையைப் பற்றி பரிந்துரைத்துக் கொண்டிருந்தேனா?!”. அறியாதவள்போல் அங்கலாய்த்தாள் இளையராணி நந்தினி.
வந்தியத்தேவன் முகம் மலர்ந்தது. அவன் இளையராணி நந்தினியின் சொல்லை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவுமில்லை. மறுமொழி சொல்லவுமில்லை.
“சரி. இளவரசி மணிமேகலை கண்விழிக்கும்வரை தாங்களே அருகிலிருங்கள். நான் மறுநாள் நடக்கவிருக்கும் அரசரின் பொன்விழா ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு வருகிறேன்”. வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டு இளையராணி நந்தினி அந்த அறையைவிட்டு அகன்றாள்.
வல்லவன் வந்தியதேவன் மீண்டும் இளவரசி மணிமேகலையின் தலையணை அருகே அமர்ந்து, அவள் கூந்தலுக்குள் தன் கைவிரல்களால் ஆதரவாய்க்கோதிவிட்டான். அதேகணம் இளவரசி மணிமேகலை கண்விழித்தாள். வல்லவன் மனம் ஆசுவாசமடைந்தான்.
.
குழித்துறை கிராமம். நந்தினியின் தாத்தா வீடு.
கண்விழித்த மேகலை கபிலன் தன் தலைகோதியபடி தன்னருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தாள். ஆச்சர்யப்பட்டாள். வெட்கப்பட்டாள்.
“என்னாச்சு எனக்கு. நாம மாடிலதான பேசிக்கிட்டிருந்தோம். நான் எப்போ இங்கவந்து படுத்தேன்?. நந்து எங்க?
கபிலனிடம் கேட்டபடியே எழமுயன்றபோதுதான் தன் உடம்பிலிருந்த வலியை உணர்ந்தாள், மேகலை!
“ம்ம்… உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன். மாடிலயிருந்து கூரைவழியா உருண்டே இங்கவந்து படுத்துக்கிட்ட. நல்லவேளை, வீட்டுல எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க. இல்லேனா நீ போட்ட சத்தத்துல பெரிய களேபரம் ஆகியிருக்கும்”. கபிலன் சிரித்தான்.
மேகலைக்கு ஓன்றும் புரியவில்லை. முழித்தாள்!?
“சரி. நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு. நான் எல்லாம் வந்து சொல்றேன்”
மேகலையிடம் சொல்லிவிட்டு. கபிலன் அந்த அறையைவிட்டு வெளியில் போனான். மேகலை நடந்ததை யோசித்துப்பார்த்தாள். கபிலன் தன் தோள்தொட்டது வரை ஞாபகம் வந்தது.
“அப்போ கபிலனுக்கு என்னயதான் பிடிச்சிருக்கு. என்னயதான் லவ் பண்றான். மேகலையாய் ஒரு முடிவுக்கு வந்தாள். கற்பனையில் மிதந்தாள்”
சூடாக சுக்குக் காபிஎடுத்துக்கொண்டுவந்துகொண்டிருந்த கபிலன், மேகலை விட்டத்தைப் பார்த்துப் பூரிப்புடன் இருப்பதைக் கவனித்தான். அவள் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள் என்பதை யூகித்தான். தன் மனதில் இருப்பதை எப்படிச் சொல்வதென்று சிந்தித்துக்கொண்டே அந்த அறையில் மீண்டும் நுழைந்தான்.
மேகலை காதலுடன் கபிலனைப் பார்த்தாள்.
கபிலன் பார்வையை வேறுதிசையில் மாற்றினான்.
மேகலை மனம் கலவரமடைந்தது.
சிரமப்பட்டு கொஞ்சமாய் எழுந்து, முதுகுப்புறம் வரை தூக்கி, சுவற்றில் தலையணையை வைத்து சாய்ந்து உட்கார்ந்தாள். கபிலன் ஒரு கையில் காபி டம்ப்ளரை பிடித்தபடி, மறுகையால் மேகலைக்கு சாய்ந்து உட்கார உதவினான். சூடான காபியைக் குடிக்க கொடுத்தான்.
“மேகா, நான் சொன்னமாதிரி உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ என்னைய நல்லா பாத்துப்பன்றதுல எனக்கு எந்த சந்தேகமுமில்ல. ஆனா… நான்… என்ன சொல்லவர்றேன்னா…”
தரையைப் பார்த்துக்கொண்டே காபியை உறிஞ்சிய, மேகலை, கபிலன் பேச்சை நிறுத்த, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கபிலன் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.
மேகலைக்கு காபியின் சூட்டைவிட, கபிலன் தயங்கி நின்றவிதம் அதிகமாய்ச்சுட்டது.
“நீ என்ன இவ்ளோ லவ் பண்றனு நான் நிலாட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இப்போ இவ்ளோ குழப்பம் வந்திருக்காது.”
மேகலை கபிலனின் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் நிலாட்ட ல்வ பண்றேன்னு சொன்ன விசயம் உனக்கும் தெரியும்ல”
“ஆனா, நிலா உங்கள ல்வ பண்றேனு சொல்லலயே”
“அது…”
“அவ சொல்ற கண்டிஷனக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணுவேன்னா. இததான் நீங்க லவ்வுனு சொல்றீங்களா?”
“அவ சீக்கிரம் என்ன புரிஞ்சுப்பா, மேகா. அதுக்கப்புறம் அப்படி கண்டிஷன்போட மாட்டா”
“அப்டீன்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனா அது அவ இஷ்டப்படிதான் நடக்கும், கபிலா”
அழுத்தமாகவும், கொஞ்சம் கோவமாகவும் சொல்லிவிட்டு, கபிலனின் கண்ணையே தீர்க்கமாகப் பார்த்தாள்.
கபிலனுக்கு பதில் தெரியவில்லை. பேசாமல் இருந்தான்.
“சரி, இப்போ நிலா உங்கள லவ் பண்ணலனு உங்களுக்கு உறுதியாத் தெரிஞ்சா, என்னையபத்தி யோசிப்பீங்களா?”
“அதுக்கு அவளுக்கு நான் தேவையான டைம் கொடுக்கனும்”
“எவ்ளோ நாள்”
“நான் 3 வருஷம் கழிச்சு அவட்டயும், அவுங்க வீட்டுலயும் பேசுறேனு சொல்லியிருக்கேன்”
“3 வருஷம் கழிச்சா? எந்த காலத்துல இருக்கீங்க கபிலன். இதெல்லாம் நடக்குறகாரியமா. இப்போ நீங்க சரின்னா, உங்ககூடயே வரேன்னு நான் சொல்றேன். நீங்க என்னடான்னா 3 வருஷம் பேசாம இருந்துட்டு, போய் பொண்ணு கேப்பீங்கனு சொல்றீங்கெ”
சிறிதாய்ச் சிரித்தாள், மேகலை.
“நீ சொல்றதும் சரிதான் மேகா. எனக்கு இப்போ என்ன முடிவெடுக்குறதுனு தெரியல. நந்து சொன்னதையும், நீ இப்போ கேட்டதையும் யோசிச்சுப்பாத்தா, நிலாவோட மனசுல அவளோட சொந்தபிரச்சனைதான் இருக்கு, நான் இல்லேனு புரியுது. ஆனா…”
“இப்ப என்ன, நீங்க நிலாவ லவ் பண்றீங்க. அவள் புரிஞ்சுக்க டைம் கொடுக்கனும், அவ்ளோதான. நான் வெயிட் பண்றேன், கபிலா. ஆனா 3 வருஷமில்ல. 3 மாசத்துல உங்களுக்கு நிலா யாருனு தெரியும். அப்போ என்னோட அன்பும் புரியும் உங்களுக்கு”.
“சரி, பாக்கலாம்”
கவனமாக மேகலையின் பேச்சைக்கேட்ட கபிலன், பதில் சொல்லிவிட்டு எழுந்து அறைக்கு வெளியே சென்றான். நந்தினி அதேசமயம் அவன் வெளியேறுவதற்குக் காத்திருந்ததைப்போல உள்ள வந்தாள்.
“இங்கதான் இருந்தியா இவ்ளோ நேரம்”
“இல்லடா இப்பதான் வர்றேன்”
“சரி, குளிச்சிட்டு வர்றேன். டின்னர் ரெடியா?”
“அதெல்லாம் உனக்குப் பிடிச்ச இட்லி, தேங்காச் சட்னி, குடல் குழம்பும் இருக்கு. குளிச்சிட்டு வா”
“ஓ சூப்பர்டி. நீ இருக்குறவரைக்கும் நான் ராஜாதாண்டி”
“இந்த நினைப்பு எப்பயும் இருக்கட்டும்”
கபிலனுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த நந்தினி, மேகலையைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினாள்.
“சூப்பர்டி. நான் சொல்லிக்கொடுத்ததவிட நீ கபிலண்ட பேசுனதுதாண்டி சூப்பர் ஹிட். அதோட துணிஞ்சு நான் சொன்னதுக்குமேல, மயங்கி மாடிலயிருந்து உருண்ட பார். நானே யோசிக்காத சீன்டி அது”
“நீ வேற நந்து. நானும் யோசிக்கல அப்டி. நீ செய்யச்சொன்னமாதிரி அவன் பக்கத்துல வந்தா, மயங்கி அங்கனுக்குள்ளேயேதான் விழுறமாதிரி நடிக்கனும்னு நினைச்சேன். ஆனா அவன் என் தோள தொட்டானா… அதுல பதட்டத்துல நிஜாமாவே கீழ விழுந்துட்டேன்”
“அதுவும் நல்லதுக்குதான், மேகா. இல்லேனா என்னைக்கு அவன் உன் கைய புடிசிக்கிட்டு இப்டி உக்காந்து பேசிருக்கான். நாம பிளான் பண்ணது நல்லா வேலை செஞ்சிருக்கு”
“என்னவோ நந்து. கபிலன் எனக்குக் கிடச்சா இந்த விழுந்த வலிலாம் ஒன்னுமில்ல”.
“அதான் நீ பேசுனதுல வாயடச்சுப்போய் நின்னானே. மேகா... பெரிய கில்லாடிடி நீ”
இருவரும் சிரித்தனர். மேகா வெட்கிச் சிரித்தாள். நந்து வெற்றிச்சிரிப்புச் சிரித்தாள்.
தனக்குப் பின்னால் இப்படி மெய்யும், பொய்யும் கலந்த ஒருகாதல் நாடகம் நடப்பதை அறியாமல் கபிலன் குளித்துக் கொண்டிருந்தான்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-8
காற்றில் அலைபாய்ந்த கூந்தல். கபிலனின் இருப்பால் பரவசப்பட்ட மனம். தூரத்தில் தெரிந்த பொதிகை மலைத்தொடரையும், அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றின்போக்கையும் பார்த்துக்கொண்டிருந்த மேகலையின் கருவிழிகள், மேலும், கீழும், இடதும், வலதுமாய் உருண்டுகொண்டிருந்தன. கபிலன் அவளை நெருங்க நெருங்க,
மாடிச்சுவரில் இருகைகளையும் ஊன்றி அழுத்தமாய்ப்பற்றிக்கொண்டாள். தடுமாறிய மனதைத் தாங்க முயன்றாள். அவளின் பதட்டம் அதிகரித்தது.
அதுநாள்வரை எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேகலையிடம் பேசி, பழகிக்கொண்டிருந்த கபிலன், சற்று தூரமே இருக்கையில், மேகலையைப் பார்த்தான். காற்றில் தவழ்ந்த கருங்கூந்தல், படபடத்த இமைகள், மாநிற அழகு மேனியைத் தழுவிக்கொண்டிருந்த ரத்தச்சிவப்புவண்ணத் தாவணி, தரையில்புரளும் வெளிர்மஞ்சள்நிற முழுப்பாவாடை, சிறிதாய் காலை மடக்கி வலது நுனிக்காலை ஊன்றி நின்றிருந்ததால் தெரிந்த வெளிர்பாதம், அதன்கணுக்காலில் சலசலத்த வெள்ளிக்கொலுசுமணி - இத்தனையும்தான் தெரிந்தது. அங்கே அவனுக்கு மேகலை தெரியவில்லை. அன்றுதான் முதல்முறையாய் அவளைப் பார்ப்பதுபோல் இருந்தது.
அருகில் சென்று வெளிப்புறமாய்த்திரும்பி நின்ற மேகலையின் முதுகுப்புறம் பின்னால் நின்றான். அவள் இதயம் படபடத்தது. மேலும் கீழும் சிறிதாய் ஏறியிறங்கிக்கொண்டிருந்த அவளின் தோல்பட்டைகள்காட்டியது அவளின் மனப்படபடப்பை.
என்ன நினைத்தானோ தெரியவில்லை, மெதுவாக மேகலையின் வலதுதோளில் கைவைத்தான்.
“மேகா, உன்னைய எனக்கு ரொம்பப்பிடிக்கும்”.
இதைச்சற்றும் எதிர்பார்க்காத மேகலை, படாரென்று கபிலனை நோக்கித்திரும்பியவள்,
அவன் மிகஅருகில் நிற்பதைக்கண்டு வெட்கி, பதறித்தலைகுனிந்து, பின்னால் நகன்று அந்த மாடிச்சுவரின் மீது சாய்ந்து நிற்க முயன்றவள், நிதானம் தவறி அப்படியே பின்னால் சாய்ந்தாள். அகன்ற நீண்ட ஓடுவேய்ந்த மேற்கூரையில் தலைகுப்புற விழுந்து கீழே உருள ஆரம்பித்தாள்.
“கபிலா… எனையப்பிடிங்க….” மேகலை பயத்தில் கத்தினாள்.
“மேகா…”.
கத்தியபடிஅவளைப்பிடிக்கக் கையை நீட்டினான். ஆனால் எட்டும் தொலைவிலில்லை.
கபிலனக்கு கண்கள் கலங்கி, காட்சி மங்கியது. நினைவு எங்கோ கரைந்தது.
.
பழுவூர் அரண்மனை. சோழபுரம்.
அரண்மனை மேல்மாடத்திலிருந்து சரிந்து உருண்டு கீழே வீழ்ந்துகொண்டிருந்த கடம்பூர் இளவரசி மணிமேகலையின் அலறல் அந்த அரண்மனை மாடங்களில்மோதி எட்டுத்திக்கும் வளாகம்முழுதும் எதிரொலித்தது. வல்லவன் வந்தியதேவன் கண்ணிமைக்கும் நேரத்தில், அருகிலிருந்த அகன்ற ஆலமரத்தின் நெடிய விழுதுகளைப்பற்றி மின்னல்வேகத்தில் கீழே குதித்தான். குதித்த மறுகணம் மணிமேகலை வல்லவன் இரு கரங்களில் பாதுகாப்பாய் வீழ்ந்தாள், ஆனால் பயத்தில் மயங்கியிருந்தாள். பெருமூச்சுவிட்ட வந்தியத்தேவன், மேலே மாடத்தைப் பார்த்தான். எட்டிப்பதறிப் பார்த்துக்கொண்டிருந்த பழுவூர் இளையராணி நந்தினி, நெஞ்சில் கைவைத்துப் பெருமூச்செறிந்தாள். கண்ணைமூடி மனதார ஈசனை நினைத்தாள்.
“நீலகண்டனே, எனைக்காத்தருளினாய். மணிமேகலையின் நலனுக்காக எனக்கருதி, அவளின் அம்மையப்பரிடம் தானும், அவள் தமையன் கடம்பூர் இளவரசன் கந்தமாறனிடம் வல்லவனும் பொறுப்பெடுத்துக்கொண்டல்லவா, மணிமேகலையை இந்தப் பழூவூர் கொணர்ந்தோம். வந்த முதல்நாளிலேயே நாங்கள் சுமக்கவிருந்த பழிச்சொல்லை, இப்பொழுது நிகழ்ந்த அபசகுண நிகழ்வைத் தடுத்து, எங்களையும் பழியிலிருந்து காத்தாய் அப்பனே”, என மனதாரக் கண்கலங்கி நன்றி சொன்னாள்.
மறுகணம் நந்தினி விறுவிறுவெனக் கீழிறங்கி அரண்மனை ஓய்வறைக்குச் சென்றாள். அங்கே தேக்குமரத்தாலான அகன்ற கட்டிலில், பட்டுவிருப்பின்மேல் மேகலையைகிடத்தி தானும் அருகில் அமர்ந்திருந்தான். மயங்கியிருந்த இளவரசி மணிமேகலையின் வலதுகரத்தை, தன் இருஉள்ளங்கைக்குள்ளும்வைத்து ஆதரவாய்ப்பற்றி, கண்கலங்கியிருந்தான்.
வந்தியத்தேவன் மணிமேகலையின் வலதுகரத்தை ஆதரவாய்ப்பற்றியிருந்த காட்சி, அந்த அறைக்குள்ளே நுழைந்த நந்தினியின் உள்ளத்தை உவகையுறச்செய்தது. தான் நினைத்த காரியம் கனவாகிவிடுமோ என்று அஞ்சிய அவள் மனம் மகிழ்ந்தது. முகம் மலர்ந்தது.
“ஆகா, என்னே துரிதம். என்னே சாதுர்யம். எத்தனை அக்கறை. எத்தனை பரிவு. வல்லவரே, காற்றையும் மிஞ்சும் லாகவத்தில், மின்னலே அஞ்சும் வேகத்திலல்லவா மேல்மாடத்திலிருந்து குதித்தீர்கள். அந்த வேகத்தில், மணிமேகலையின்பாலான உங்கள் உள்ளக்கிடக்கை உறுதியாக்கப்பட்டதே!”
“அவ்வாறல்ல இளையராணி. அது, நண்பனின் தமக்கையின்பால்கொண்ட அக்கறையென்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?”. பட்டென்று தன் உள்ளங்கையிலிருந்து மணிமேகலையின் கரங்களை கீழேவிடுத்தான், வல்லவன்!
“ம்ம்.. அப்படி என்னை எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள், அப்படித்தானே வல்லவரே”. நந்தினி புன்னகைத்தாள்.
“அது… அப்படிச் சொல்லவில்லை. அதாவது… எனக்கு… மணிமேகலையின்மீதும் மிகுந்த அன்பு உண்டு”
“அடேங்கப்பா. என்ன அதிசயம். காற்றைகிழித்துக்கொண்டுபோன வீரம் குலைகிறது. இளவரசியைத்தாங்கிய கரங்கள் தள்ளாடுகின்றன. ஹூம்ம். என்மனதறிந்து இது ஆழமான காதல்தான். இதையறியாமல்தான் நான், தாங்கள் குந்தவையிடம் காதல்கொண்டதாக தவறாக எண்ணி தங்களிடம் அத்தனை காலம், மேல்மாடத்தில் மணிமேகலையைப் பற்றி பரிந்துரைத்துக் கொண்டிருந்தேனா?!”. அறியாதவள்போல் அங்கலாய்த்தாள் இளையராணி நந்தினி.
வந்தியத்தேவன் முகம் மலர்ந்தது. அவன் இளையராணி நந்தினியின் சொல்லை ஆமோதிக்கவும் இல்லை. மறுக்கவுமில்லை. மறுமொழி சொல்லவுமில்லை.
“சரி. இளவரசி மணிமேகலை கண்விழிக்கும்வரை தாங்களே அருகிலிருங்கள். நான் மறுநாள் நடக்கவிருக்கும் அரசரின் பொன்விழா ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு வருகிறேன்”. வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டு இளையராணி நந்தினி அந்த அறையைவிட்டு அகன்றாள்.
வல்லவன் வந்தியதேவன் மீண்டும் இளவரசி மணிமேகலையின் தலையணை அருகே அமர்ந்து, அவள் கூந்தலுக்குள் தன் கைவிரல்களால் ஆதரவாய்க்கோதிவிட்டான். அதேகணம் இளவரசி மணிமேகலை கண்விழித்தாள். வல்லவன் மனம் ஆசுவாசமடைந்தான்.
.
குழித்துறை கிராமம். நந்தினியின் தாத்தா வீடு.
கண்விழித்த மேகலை கபிலன் தன் தலைகோதியபடி தன்னருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தாள். ஆச்சர்யப்பட்டாள். வெட்கப்பட்டாள்.
“என்னாச்சு எனக்கு. நாம மாடிலதான பேசிக்கிட்டிருந்தோம். நான் எப்போ இங்கவந்து படுத்தேன்?. நந்து எங்க?
கபிலனிடம் கேட்டபடியே எழமுயன்றபோதுதான் தன் உடம்பிலிருந்த வலியை உணர்ந்தாள், மேகலை!
“ம்ம்… உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னேன். மாடிலயிருந்து கூரைவழியா உருண்டே இங்கவந்து படுத்துக்கிட்ட. நல்லவேளை, வீட்டுல எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க. இல்லேனா நீ போட்ட சத்தத்துல பெரிய களேபரம் ஆகியிருக்கும்”. கபிலன் சிரித்தான்.
மேகலைக்கு ஓன்றும் புரியவில்லை. முழித்தாள்!?
“சரி. நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு. நான் எல்லாம் வந்து சொல்றேன்”
மேகலையிடம் சொல்லிவிட்டு. கபிலன் அந்த அறையைவிட்டு வெளியில் போனான். மேகலை நடந்ததை யோசித்துப்பார்த்தாள். கபிலன் தன் தோள்தொட்டது வரை ஞாபகம் வந்தது.
“அப்போ கபிலனுக்கு என்னயதான் பிடிச்சிருக்கு. என்னயதான் லவ் பண்றான். மேகலையாய் ஒரு முடிவுக்கு வந்தாள். கற்பனையில் மிதந்தாள்”
சூடாக சுக்குக் காபிஎடுத்துக்கொண்டுவந்துகொண்டிருந்த கபிலன், மேகலை விட்டத்தைப் பார்த்துப் பூரிப்புடன் இருப்பதைக் கவனித்தான். அவள் என்ன நினைத்துக்கொண்டிருப்பாள் என்பதை யூகித்தான். தன் மனதில் இருப்பதை எப்படிச் சொல்வதென்று சிந்தித்துக்கொண்டே அந்த அறையில் மீண்டும் நுழைந்தான்.
மேகலை காதலுடன் கபிலனைப் பார்த்தாள்.
கபிலன் பார்வையை வேறுதிசையில் மாற்றினான்.
மேகலை மனம் கலவரமடைந்தது.
சிரமப்பட்டு கொஞ்சமாய் எழுந்து, முதுகுப்புறம் வரை தூக்கி, சுவற்றில் தலையணையை வைத்து சாய்ந்து உட்கார்ந்தாள். கபிலன் ஒரு கையில் காபி டம்ப்ளரை பிடித்தபடி, மறுகையால் மேகலைக்கு சாய்ந்து உட்கார உதவினான். சூடான காபியைக் குடிக்க கொடுத்தான்.
“மேகா, நான் சொன்னமாதிரி உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ என்னைய நல்லா பாத்துப்பன்றதுல எனக்கு எந்த சந்தேகமுமில்ல. ஆனா… நான்… என்ன சொல்லவர்றேன்னா…”
தரையைப் பார்த்துக்கொண்டே காபியை உறிஞ்சிய, மேகலை, கபிலன் பேச்சை நிறுத்த, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கபிலன் தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.
மேகலைக்கு காபியின் சூட்டைவிட, கபிலன் தயங்கி நின்றவிதம் அதிகமாய்ச்சுட்டது.
“நீ என்ன இவ்ளோ லவ் பண்றனு நான் நிலாட்ட பேசறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இப்போ இவ்ளோ குழப்பம் வந்திருக்காது.”
மேகலை கபிலனின் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் நிலாட்ட ல்வ பண்றேன்னு சொன்ன விசயம் உனக்கும் தெரியும்ல”
“ஆனா, நிலா உங்கள ல்வ பண்றேனு சொல்லலயே”
“அது…”
“அவ சொல்ற கண்டிஷனக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணுவேன்னா. இததான் நீங்க லவ்வுனு சொல்றீங்களா?”
“அவ சீக்கிரம் என்ன புரிஞ்சுப்பா, மேகா. அதுக்கப்புறம் அப்படி கண்டிஷன்போட மாட்டா”
“அப்டீன்னு நீங்க நினைக்கிறீங்க. ஆனா அது அவ இஷ்டப்படிதான் நடக்கும், கபிலா”
அழுத்தமாகவும், கொஞ்சம் கோவமாகவும் சொல்லிவிட்டு, கபிலனின் கண்ணையே தீர்க்கமாகப் பார்த்தாள்.
கபிலனுக்கு பதில் தெரியவில்லை. பேசாமல் இருந்தான்.
“சரி, இப்போ நிலா உங்கள லவ் பண்ணலனு உங்களுக்கு உறுதியாத் தெரிஞ்சா, என்னையபத்தி யோசிப்பீங்களா?”
“அதுக்கு அவளுக்கு நான் தேவையான டைம் கொடுக்கனும்”
“எவ்ளோ நாள்”
“நான் 3 வருஷம் கழிச்சு அவட்டயும், அவுங்க வீட்டுலயும் பேசுறேனு சொல்லியிருக்கேன்”
“3 வருஷம் கழிச்சா? எந்த காலத்துல இருக்கீங்க கபிலன். இதெல்லாம் நடக்குறகாரியமா. இப்போ நீங்க சரின்னா, உங்ககூடயே வரேன்னு நான் சொல்றேன். நீங்க என்னடான்னா 3 வருஷம் பேசாம இருந்துட்டு, போய் பொண்ணு கேப்பீங்கனு சொல்றீங்கெ”
சிறிதாய்ச் சிரித்தாள், மேகலை.
“நீ சொல்றதும் சரிதான் மேகா. எனக்கு இப்போ என்ன முடிவெடுக்குறதுனு தெரியல. நந்து சொன்னதையும், நீ இப்போ கேட்டதையும் யோசிச்சுப்பாத்தா, நிலாவோட மனசுல அவளோட சொந்தபிரச்சனைதான் இருக்கு, நான் இல்லேனு புரியுது. ஆனா…”
“இப்ப என்ன, நீங்க நிலாவ லவ் பண்றீங்க. அவள் புரிஞ்சுக்க டைம் கொடுக்கனும், அவ்ளோதான. நான் வெயிட் பண்றேன், கபிலா. ஆனா 3 வருஷமில்ல. 3 மாசத்துல உங்களுக்கு நிலா யாருனு தெரியும். அப்போ என்னோட அன்பும் புரியும் உங்களுக்கு”.
“சரி, பாக்கலாம்”
கவனமாக மேகலையின் பேச்சைக்கேட்ட கபிலன், பதில் சொல்லிவிட்டு எழுந்து அறைக்கு வெளியே சென்றான். நந்தினி அதேசமயம் அவன் வெளியேறுவதற்குக் காத்திருந்ததைப்போல உள்ள வந்தாள்.
“இங்கதான் இருந்தியா இவ்ளோ நேரம்”
“இல்லடா இப்பதான் வர்றேன்”
“சரி, குளிச்சிட்டு வர்றேன். டின்னர் ரெடியா?”
“அதெல்லாம் உனக்குப் பிடிச்ச இட்லி, தேங்காச் சட்னி, குடல் குழம்பும் இருக்கு. குளிச்சிட்டு வா”
“ஓ சூப்பர்டி. நீ இருக்குறவரைக்கும் நான் ராஜாதாண்டி”
“இந்த நினைப்பு எப்பயும் இருக்கட்டும்”
கபிலனுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த நந்தினி, மேகலையைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தினாள்.
“சூப்பர்டி. நான் சொல்லிக்கொடுத்ததவிட நீ கபிலண்ட பேசுனதுதாண்டி சூப்பர் ஹிட். அதோட துணிஞ்சு நான் சொன்னதுக்குமேல, மயங்கி மாடிலயிருந்து உருண்ட பார். நானே யோசிக்காத சீன்டி அது”
“நீ வேற நந்து. நானும் யோசிக்கல அப்டி. நீ செய்யச்சொன்னமாதிரி அவன் பக்கத்துல வந்தா, மயங்கி அங்கனுக்குள்ளேயேதான் விழுறமாதிரி நடிக்கனும்னு நினைச்சேன். ஆனா அவன் என் தோள தொட்டானா… அதுல பதட்டத்துல நிஜாமாவே கீழ விழுந்துட்டேன்”
“அதுவும் நல்லதுக்குதான், மேகா. இல்லேனா என்னைக்கு அவன் உன் கைய புடிசிக்கிட்டு இப்டி உக்காந்து பேசிருக்கான். நாம பிளான் பண்ணது நல்லா வேலை செஞ்சிருக்கு”
“என்னவோ நந்து. கபிலன் எனக்குக் கிடச்சா இந்த விழுந்த வலிலாம் ஒன்னுமில்ல”.
“அதான் நீ பேசுனதுல வாயடச்சுப்போய் நின்னானே. மேகா... பெரிய கில்லாடிடி நீ”
இருவரும் சிரித்தனர். மேகா வெட்கிச் சிரித்தாள். நந்து வெற்றிச்சிரிப்புச் சிரித்தாள்.
தனக்குப் பின்னால் இப்படி மெய்யும், பொய்யும் கலந்த ஒருகாதல் நாடகம் நடப்பதை அறியாமல் கபிலன் குளித்துக் கொண்டிருந்தான்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-8