- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 21
சுஹேலும் அவன் தந்தையும் வீட்டை அடைந்தவுடன், அங்கு அவன் உம்மா ஜரீனா இவர்களுக்காக காத்திருந்தாள். சுஹேலை கண்டதும், மலர்ந்த முகத்துடன் வாப்பா ! எப்படி இருக்கே? என்று அன்பொழுக கேட்டாள். அவனும் அன்னையை பார்த்தவுடன் சந்தோஷமாக, நல்லா இருக்கேம்மா! நீங்க எப்படி இருக்கீங்க?என்று கேட்க, எனக்கென்னப்பா நான் நல்லா இருக்கேன், நீ போய் குளிச்சிட்டு வா! சாப்பிடலாம், உனக்கு பிடிச்ச உணவு வகைகளை சமைத்து வைத்திருக்கிறேன், என்று அவனை குளிக்க அனுப்பி விட்டு கணவனின் முகத்தை பார்த்தாள். அவர் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை. எனவே அவளாக அவரிடம் பேச்சு கொடுத்தாள்.
"என் பையன் நீங்க கூப்பிட்டதும் வந்துட்டானா? , "அவன் எங்கே அவனா வந்தான்? நான் அல்லவா அவனை வலுக்கட்டாயமாக இங்கு அழைத்து வந்தேன் என்று உசைன் கூறவும், ஜரீனாவின் முகம் சுருங்கியது. நீங்க கூப்பிட்டவுடனே வர மாட்டேன்னு சொல்லிட்டானா? நீங்க அவனை ரொம்ப வைதீகளா? என்று பதட்டத்துடன் கேட்டாள். அவன், மருத்துவமனையில் நிறைய வேலை இருக்கிறது, வர முடியாது என்று தான் முதலில் சொன்னான், நான் தான் நீ வரலைனா இனிமேல் நான் வர மாட்டேன், "நாங்க செத்து போயிட்டதா நினைச்சிக்க", என்று அவனை பயமுறுத்தி கூட்டி வந்தேன் என்று கூறியவுடன் ஜரீனாவுக்கு மனம் மிகவும் சங்கடப்பட்டது, அல்லா! இதைக் கேட்டு அவன் மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இவருக்கு அன்பாக பேச தெரியவில்லையானாலும் பரவாயில்லை, அனுசரணையாகவாவது பேசலாம் இல்லையா? இப்படியா பேசுவது? புள்ள மனசை வேதனை படுத்துனோனே இப்படி பேசறாரு, புத்தி கெட்ட மனுஷன்! என்று ,மனதிற்குள் திட்டியவாறே அங்கிருந்து அகன்றாள். சுஹேலும் அவன் தந்தையும் குளித்துவிட்டு வந்தவுடன், எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும், சுஹேல், உம்மா! எனக்கு கொஞ்சம் பயண களைப்பா இருக்கு. நான் போய் சற்று நேரம் என் அறையில் ஓய்வெடுக்கிறேன்,என்று தன் அறையை நோக்கி சென்றான்.
அறையில் படுத்ததும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. துர்காவின் நினைப்பாகவே இருந்தது. இப்போது போல் அப்போது அலைபேசி இல்லாத காலம். துர்காவிடம் எப்படி பேசுவது என்று யோசித்தான், வீட்டில் தொலைபேசி இருந்தாலும் வீட்டில் பேசுவது முடியாத காரியம். ஆதலால் வெளியில் சென்று தொலைபேசி பூத்தில் STD கால் போட்டு தான் பேசவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியவனாக அப்படியே தூங்கி போனான். ஜரீனாவும், உசைனும் ஹாலில் அமர்ந்திருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. ஜரீனா எழுந்து போய் கதவை திறக்க. அங்கு தபால்காரன் நின்னிறுந்தான். அம்மா! உசைன் என்ற பெயருக்கு பதிவு தபால் வந்திருக்கு, அவரை கூப்பிடுங்க, கையெழுத்து போடணும் என்று அவன் ஹிந்தி மொழியில் கூற, ஜரீனா உசைனை கூப்பிட்டு விஷயத்தை சொன்னாள். உசைன் சென்று கையெழுத்து போட்டு தபாலை வாங்கி கொண்டார். அனுப்புனர் முகவரியை பார்த்தபோது, உமர் அலியின் பெயரும் முகவரியும் போடப்பட்டிருந்தது. உசைன் அதை பார்த்தவுடன் பரபரப்பாக கவரை பிரித்தார், அதில் ஒரு கடிதமும் புகைப்படமும் இருந்தது. படத்தில் துர்காவும், சுஹேலும் அருகருகே அமர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். உசைன் துர்காவை புகைப்படத்தில் பார்த்ததும், நேற்று அவளை நேராக பார்த்தது நினைவுக்கு வர, இந்த பெண்ணா? பார்க்க ரொம்ப அமைதியாய் தெரிந்தாளே! என்று அதிர்ச்சியுடன் நின்றார். பிறகு கடிதத்தை படிக்க ஆரம்பித்தார். கடிதத்தில்,
உசைன் அவர்களுக்கு,
உமர் எழுதுவது, நான் தொலைபேசியில் பேசியது போலவே உன் மகனும் ஒரு பெண்ணும் அருகருகே அமர்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்த புகைப்படத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இதை விட ஆதாரம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். நான் இப்போதும் உங்கள் பிள்ளைக்கு என் பெண்ணை நிஹ்ஹா செய்து தர சித்தமாய் உள்ளேன், இந்த விஷயத்தை நான் பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை, இது வெறும் வயசு கோளாறு தான், போக போக சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன். தங்களின் சம்மதத்தை தொலைபேசியில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்,
இப்படிக்கு,
உமர் அலி.
என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. உசைன் அந்த கடிதத்தையும், புகைப்படத்தையும் ஜரீனாவிடம் காட்ட, அவள் அதிர்ந்து போனாள். என் பிள்ளை அப்படி இல்லங்க! இவர் ஏதோ தப்பா எழுதி இருக்காரு, ஒரு வேளை அவன் மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் சேர்ந்து வெளியே போய் இருப்பாங்க. அதை இவங்க தப்பா புகைப்படம் எடுத்து இருக்காங்க, என்று தன் ஆற்றாமையை கூறினாள் ஜரீனா.
உசைன் உடனே, நேற்று தான் நான் இந்த பெண்ணை பாத்திமா வீட்டில் பார்த்தேன். பாத்திமாவின் பக்கத்துக்கு வீட்டில் தான் இருக்கிறாள் என்று அவர் மேலும் சில தகவல்களை கூறியபோது ஜரீனாவுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் யோசித்த பின், அவன்கிட்ட கொஞ்சம் தன்மையாக பேசுங்க! என்ன விவரம் என்று முதலில் கேட்டு விட்டு அவன் என்ன சொல்கிறான் என்று தெரிந்துக் கொண்டு பிறகு பேசுங்க! என்று ஜரீனா கெஞ்சும் குரலில் கூறியதை கேட்ட உசைனுக்கு அவளின் உள்ளம் புரிந்தது. சிறிது தணிந்தவராக சரி ! என்று ஒரு வார்த்தையோடு முடித்துக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து சுஹேல் விழித்துக் கொண்டான். கடிகாரத்தை பார்த்தான் மணி மதியம் இரண்டு என்று காட்டியது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா? என்று எழுந்து குளியல் அறை சென்று முகம் கழுவி விட்டு வெளியில் வந்தான். ஹாலில் இவனின் தாயும் தந்தையும் இவனுக்காக காத்திருந்தார்கள். இவன் வந்ததும் ஜரீனா, சாப்பிட வாப்பா! என்று அழைக்க, அவனும் டைனிங் டேபிளின் முன் அமர்ந்தான். அவனுக்கு பிடித்த உணவு வைகைகளை சமைத்திருந்தாள் ஜரீனா. சுஹேல் அதை ரசித்து உண்டான், "உங்களுடைய கைப்பக்குவம் யாருக்கும் வராதும்மா" என்று அவன் தன் அம்மாவை புகழ, அவளிடத்தில் சிறு புன்னகை தவிர, எந்த வித மகிழ்ச்சியும் இல்லை. தந்தையை பார்த்தான், அவர் முகமும் இருகியிருந்தது. ஏதோ பிரச்சனை. என்னவோ பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதற்காகத்தானே என்னை இங்கு கூட்டி கொண்டு வந்திருக்கிறார்கள், என்ன விஷயம் என்று அவர்களாகவே சொல்லட்டும்! என்று மனதில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்தான். அதில் ஷாருக்கான் நடித்த ஹிந்தி பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய உம்மாவும், வாப்பாவும் அங்கு வந்தார்கள்.
உசைன் சுஹேலை பார்த்து, உன்னிடத்தில் கொஞ்சம் பேசணும், தொலைக்காட்சியை அணை என்று கூற, சுஹேலும் அதனை அணைத்துவிட்டு தந்தையிடம் திரும்பினான். என்ன வாப்பா? என்ன பேசப்போறிங்க? என்று கேட்க, உன்னை எதுக்கு இங்கே அழைத்து வந்திருக்கிறேன்? என்பதை பத்திதான், அதற்கு முன்னால், இந்த புகைப்படத்தை பார்த்து அதில் இருக்கும் பெண் யார் என்று கூறு, என்று அந்த புகைப்படத்தை அவனின் முன் நீட்ட, அதை பார்த்த பின்பு தான் சுஹேலுக்கு அனைத்து விஷயங்களும் விளங்கியது. அவன், வாப்பா , இவள் துர்கா, நம் அத்தை வீட்டிற்கு பக்கத்தில் தான் இருக்கா! ஒரு நாள் நான், அனீஸ், அத்தை மற்றும் துர்கா அனைவரும் சினிமாவுக்கு சென்றோம். அங்கு பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டோம். இந்த புகைப்படம் அங்கு எடுத்ததா தான் இருக்கும். ஆனா இதை நாங்க எடுக்கவில்லை, யார் எடுத்தார் என்று எனக்கு தெரியாது வாப்பா, என்று கூற, உசைன் நீ ஏன் அந்த பெண் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற? ஏன் அனீஸ் , உங்க அத்தை இல்லை, அவர்கள் பக்கத்தில் எல்லாம் உட்கார்ந்து படம் பார்த்தால் படம் பிடிக்காதா? என்று நக்கலடிக்க, நான் முதலில் அனீஸ் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தேன் வாப்பா! அவள் தான் முன் இருக்கையில் இருப்பவர் சற்று உயரமாக இருப்பதால் படம் தெரியவில்லை என்று இடம் மாற்றி துர்காவை அமரச் செய்தாள், இதில் என் தவறு எங்கே இருக்கிறது? என்று சொல்லுங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இப்போதே போனை போட்டு அத்தையிடம் கேளுங்கள்! நான் எங்கும் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறேன், நான் சொல்லுவது பொய் என்று தெரிந்தால், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், இந்த அற்ப விஷயத்திற்காகவா என்னை அவசரமாக இங்கு வர வழைத்தீர்கள், என்று கச்சிதமாக கூறவும், உசைன் என்ன கூறுவது என்று ஒரு நொடி திகைத்து, பின் இதற்க்காக மட்டும் இல்லை, உமர், போன வாரம் என்னிடத்தில் தொலைபேசியில் பேசினார். நிஹ்ஹாவை எப்போது வைத்துக் கொள்ளலாம்? என்று கேட்டார், எனக்கும் நீ நிஹ்ஹா செய்து கொண்டு பின் படிப்பது நல்லது என்று பட்டது. நாம் போய் பெண் பார்க்கவேண்டும் அல்லவா! உனக்கும் பெண் பிடிக்க வேண்டும், புகைப்படத்தில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் இருக்காது. அதற்காகவும் தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன், என்று கூறவும், சுஹேல் வாப்பா! என் லட்சியம் மேற்படிப்பு ஒன்று தான். நான் படிப்பை முடித்து என்னை நானே நிலை நாட்டிக் கொண்ட பின்பு தான் நிஹ்ஹா செய்து கொள்வேன். இதில் இருந்து நான் மாறுவதாய் இல்லை. இதைத் தான் நான் ஆரம்பம் முதல் இன்று வரை சொல்லிக் கொண்டு இருக்கிறேன், வாப்பா! என் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா? என்று அவன் கெஞ்சும் குரலில் கேட்க, உசைனுக்கு என்னவோ போல் இருந்தது. நீ சொல்வதெல்லாம் சரிதான்! ஆனால் பெண் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் சுஹேல். எங்களின் மன திருப்திக்காவது நீ வந்து பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு முடிவெடுக்கலாம் என்று உசைன் கூறவும் அவனால் மறுக்க முடியவில்லை. நான் பெண் பார்க்க வருகிறேன், ஆனால் அந்த பெண்ணைத் தான் உடனே நிஹ்ஹா செய்யவேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. இதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் வருகிறேன் என்று கூறவும், அருகில் இருந்த ஜரீனா, இவன் இதுக்காவது ஒத்துக் கொண்டானே என்று நினைத்துக் கொண்டு, சரிப்பா! நீ வந்து முதலில் பெண்ணை பார். மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறி அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள். மறுநாள் உசைன் ஊரில் இருந்து தன் பிள்ளை வந்துவிட்டதாகவும் அன்று மாலையே பெண் பார்க்க வருவதாக தொலைபேசி மூலம் தகவல் சொன்னார் .
அதைக் கேட்டதும் உமர் அலிக்கு தலை கால் புரியவில்லை. தாம் நினைத்த காரியம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று மனதில் சந்தோஷம் பொங்க, ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக செய்ய தொடங்கினார்.
Last edited by a moderator: