பெண்ணே 8
இரத்தம் நிற்காமல் வடிந்தது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சட்டென்று நினைப்பு எங்கோ சென்றது. இருக்காது என மனதைக் அரட்டினான். துர்கா அழுவதை பார்த்து பயத்தில் அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது.
"பாப்பா….. எழுத்துருடி ஆரா" அவன் குரல் நடுங்க ஆரம்பித்தது சற்று நேரம் சென்றிருந்தால் வாய்விட்டே அழுதிருப்பான் அதற்குள் அவள் கருவிழி மேலே சொருக இமையை மூடிமூடி திறந்தாள் ஆராதனா.
"தனா கண்ண திற இங்க பார்மா என்ன பாரு" அவள் கன்னத்தை அழுத்தி பிடித்துக் அட்டினான்.
"அம்மா தண்ணீ கொண்டு வா" அதை அவர் காதில் வாங்காமல் அழுதுக்கொண்டே இருக்க
"அழுது தொலையாதமா தண்ணீ கொண்டுவா போ" எரிந்துவிழுந்தான். அவர் எழுந்து உள்ளே ஓடினார்.
"டேய் எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்" கடிந்து கொண்ட தந்தையை முறைத்தான் அவன்.
"அவ எவ்வளவு திமிரா பேசுறா பாத்திங்கல அதான் இப்போவே கண்டிச்சி வச்சேன்"
"அதுக்கு இப்படி இரத்தம் வர மாதிரியா?"
"பக்கத்தில பார்த்துட்டு தானே நின்னிங்க?"
"வீட்டுக்கு ஆம்பளையா நீ கண்டிக்கும் போது நான் என்ன பண்ண?"
"அப்போ வாய மூடிட்டு நில்லுங்க" ராகவனிடமும் பாய்ந்தான் சந்தோஷ். மகனை எதிர்க்க துணிவின்றி "துர்கா" உள்ளே திரும்பி கத்தினார் அவர். தண்ணீரையும் சக்கரை டப்பாவையும் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார் துர்கா.
ஒருவழியாக அவள் கண்முழித்ததும் சந்தோஷின் கையை தட்டிவிட்டு எழுத்துக் கொள்ள முயன்றாள் முடியவில்லை.
துர்கா பிடித்துக்கொள்ள சோபாவில் அமர்தவள் கண்ணை மூடிக்கொள்ள வேகமாக மாடி ஏறிய சந்தோஷ் கதவை அறைந்து சாத்தினான்
_________
வீட்டில் தனியாக ஜிம் இருந்தாலும் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஜிம்மிற்கு செல்வது புவியின் வழக்கம். இன்றும் ஜாக் பண்ணிக்கொண்டு வந்தனை ஜிம்மில் இருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த பெண் இடித்துவிட புவி சாரி சொல்லிவிட்டு செல்ல "ஸ்டுப்பிட்" என அவள் திட்டுவது காதில் விழுந்ததும் கோபமாக திரும்பினான்.
சொடிக்கிட்டு அவளை கூப்பிட தலையில் மாட்டியிருந்த கேப்பில் கைவைத்துக் கொண்டே திரும்பினாள் அவள். அவள் முகத்தை அந்த பெரிய கூலர்ஸ் மறைத்து இருக்க அவள் வாய் மட்டும்தான் தெரிந்தது.
"இடிச்சது நீங்க"
"அப்படியா?" நக்கலாக சொன்னவள் திரும்பி நடக்க அவள் முன்னே சென்று வழியை மறைத்தான் புவி. கையை கட்டிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
"என்ன ஹீரோயிசம் காட்டுறியா?" தாடையில் விரலால் தேய்த்துக்கொண்டே அமைதியாக கேட்டான் புவி.
"இல்ல ஹீரோயினிசம்" அந்த குரல் எங்கேயோ கேட்டது போல இருந்தது. அவள் சொல்லிக் கொண்டே முன்னால் நடக்க புவி பின்னே பின்னே நகர்ந்தான்.
"என்ன திமிரா? தப்ப நீ பண்ணிட்டு என்னை ஸ்டுபிட்னு திட்டுவியா?"
"ஆமா"
"வாட்? என்ன ஓவரா பேசுற. முதல்ல நீ கூலர்ஸ்ச கழட்டு" அவளை அதட்டினான் அவன். அவனுக்கு அவள் யார் என்று பார்க்கவேண்டும் என மனம் உந்தியது.
"பச் ஏய் தள்ளிப்போடா…." அவள் ஆள் காட்டி விரலை ஆட்ட அதை பிடித்து உடைக்க தோன்றியது புவிக்கு.
"மரியாதையா பேசு" வார்த்தையை கடித்து துப்பினான் அவன்.
"நீ மட்டும் என்னை மரியாதையா வாங்க போங்க சொன்னியா என்ன?"
"பப்ளிக்குனு பாக்கிறேன் நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசர். எனக்குனு ஒரு ரெப்புட்டேஷன் இருக்கு"
"இருந்துக்கோ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…?"
"ஹலோ என்ன?"
"போன் பேசுறதுனா அங்க ஓரமா போய் நின்னு பேசு.. போ" அவனை தாண்டி சென்றவள் அங்கே வந்து நின்ற கார்கதவை திறக்க அவளை மனதில் பொறுமிக் கொண்டு இருந்தவன் "என்னை தெரியாம பேசுற" என புவி வேந்தன் கத்த
"ஏன் தெரியாமல்? எனக்கு கண்ணு நல்லாவே தெரியும். பாரு நீ மலை மாதிரி இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கனு" என்றவாறே அவள் கார் கதவை சாத்தினாள்.
"ஏய் என்ன?" "தைரியம் இருந்தா இங்க வந்து நின்னு பேசு எதுக்கு பயந்து ஓடுற? இதுக்கு என்ன அர்த்தம்?" நக்கலாக கேட்டுக் கொண்டு கார் அருகில் புவி கோபமாக வர "நான் பேசுற அளவுக்கு நீ ஒர்த் இல்லனு அர்த்தம்" சொன்னவள் கார் கண்ணாடியை ஏற்றிவிட காரை வேகமாக குத்தினான் அவன். கார் நகர்ந்துவிட்டதும் "ஷிட்" என மணலை அவன் எத்திவிட புழுதிக்கு நடுவில் அவள் காரை பின்தொடர்ந்து கொண்டு ஒரு கார் சென்றதை பார்த்தான் புவி வேந்தன்.
"மாஃபியா தலைவியா இருப்பாளோ? நீ யாரா இருந்தலும் என் கையில ஒரு நாள் மாட்டுவடி" என்று கருவியவன் வீட்டிற்க்கு திரும்பி நடந்தான்.
கார்கதவை திறந்து இறங்கியவள் தோட்டத்தில் நின்று பூ பறித்துக் கொண்டு இருந்த சாந்தினி அருகில் சென்று அவர் கூடையில் பறித்து வைத்திருந்த பூக்களை ஒரே கையில் மொத்தமாக அள்ளி வானை நோக்கி வீச பூக்கள் மாரியாக இருவர் மீதும் பொழிந்தது.
அவளை செல்லமாக முறைத்தார் சாந்தினி. சத்தமாக சிரித்தவள் கூலர்ஸ்சையும் தொப்பியையும் கழட்டி பக்கதில் இருந்த ஸ்டோன் பென்ஞ்சில் போட்டு விட்டு கையை தூக்கி நெட்டி முறித்தாள் தக்ஷினா.
"என்ன அம்மு இது? இப்போ சாமிக்கு நான் என்ன பண்ணுவேன்"
"இவ்வளவு பூ இருக்குல திரும்ப பறிச்சிக்கோ சாந்"
"அடி.. என் பேரையும் கொலை பண்ணாதனு எத்தனை தடவை சொல்லுறது"
அவரை கட்டி கொண்டவள் "ம்மா உனக்கு வச்சப்போவே அது செத்துப்போச்சி… இதுல நான் எங்க புதுசா கொலைபண்ண. ஆஆஆஆஆஆஆ வலிக்குது விமி விடு" என அலற அவள் குரலில் தோட்டமே அதிர்ந்தது. அவள் காதை விட்ட விமலன் வலது கையை அவள் கழுத்தை சுற்றி போட்டு இழுத்து பிடித்தவன்
"அம்மா இப்போ அவ தலைல கொட்டு… கிடைச்ச சான்ஸ்ச மிஸ் பண்ணகூடாது. தீ சிக்கிட்டா" அவன் சிரிக்க "அம்மாஆஆ" குட்டு விழுந்தது அவன் தலையில். சாந்தினி சிரிக்க அவளையும் சேர்ந்துகொண்டு திரும்பினான் முத்துவேல்தான் நின்று இருந்தார்.
"தந்தையே" அவன் கெடுத்த அதிர்ச்சி ரியக்ஷனில் தக்ஷினா முத்துவேலுக்கு ஹைஃபை கொடுத்தாள்.
"என்னடா?"
"நீங்களா என்ன அடிச்சது?" அவன் நெஞ்சில் கைவைக்க.
"நீ எதுக்குடா என் பொண்ணு காதை திருகின?"
"டாடி..." அவளை இருக்கி கொண்டு அழுக அவன் கையை கடித்தவள் விடுபட்டு முத்துவேலிடம் ஓடிவிட்டாள்.
"அம்மாஆஆஆ அய்யோ ஏய் சாந்து இவளுக்கு நைட் சோறு வைக்கலயா நீ? கால்கிலோ சதையை உறுவிட்டா. புள்ளைய பெத்துவிட சொன்ன என்னத்தையோ பெத்துவிட்ருகாங்க பாரு" அவன் கையை தேய்த்துக் கொண்டு புலம்ப. அவன் முதுகில் இரண்டடி வைத்தார் சாந்தினி.
அவனை முறைத்துக் கொண்டு தக்ஷினா செடியில் குச்சியை ஒன்றை உடைக்க அவனை பிடித்து கொண்டனர் சாந்தினியும் முத்துவேலும்.
"ஆகா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க… மீ எஸ்கேப்" என நழுவி ஓடியவன் திரும்பி பார்க்க தக்ஷினாவும் குறி பார்த்து குச்சை வீச அதை பிடித்தவன்
"புவி உனக்கு கரெக்ட்டாதான் பேரு வச்சிருக்கான் வௌவால் மனுஷினு"
"புவி ராஸ்கல்" பல்லை கடித்தவள் பக்கத்தில் இருந்த கல்லை எடுக்கபோக தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான் விமலன்.
எப்போதும் போல வாயை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் வேலை செய்பவர்கள்.
"என்ன வேடிக்கை சீக்கிரம் வேலைய பாருங்க" அதட்டியவள் குளிக்க உள்ளே சென்றுவிட்டாள்.
_____________
இதோடு நூறாவது தடவையாக எண்ட்ரன்ஸில் இருக்கும் சர்வேல்லன்ஸ் கேமராவில் ஆராதனாவை தேடிக் கொண்டு இருந்தான் அதியன் அவள் வந்தபாடகாதான் இல்லை. பையிலை மூடி வைத்துவிட்டு ஜன்னல் அருகே சென்றவன் அதை திறந்து விட சட்டென்று இளவெயிலோடு காற்று அவன் முகத்தில் மோதியது.
நேற்று அவளை திட்டியதை நினைத்து வருத்தமாக இருந்தது. அவன் டாலர் கேமராவின் வழி பதிவாகி இருந்த அவளின் கலங்கிய முகத்தை பார்த்தவனுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது.
இரவு தூங்காதது தலை பாரமாக கணத்தது. கண்ணை மூடி நின்றிருந்தான்.
"மே ஐ கம் இன் சார்?"
"எஸ்" விஷ்ணுதான் உள்ளே வந்தான்.
"என்ன விஷ்ணு?"
"ஏலக்காய் லோடு எப்போதும் போல லேட் பண்றாங்க சார். போனதடவையே வார்ன் பண்ணிட்டோம். நெக்ஸ்ட் வீக் எக்ஸ்போர்ட் பண்ணனும்"
"யாரு அந்த காண்ட்ரக்டர்?"
"சந்திரன் சார்"
"நெக்ஸ்ட் லோடு எப்போ தேவபடும்னு கேட்டிங்களா?"
"நெக்ஸ்ட் வீக்கே வேனும் சார்"
"புதுசா சாம்பிள்ஸ் கலக்ட் பண்ணுங்க."
"ஓகே சார்"
"இந்த லோடு வந்தோனே சந்திரனை என்ன வந்து பார்க்க சொல்லுங்க"
"சுயர் சார்" அவனுக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.
அவனுக்கு எதிர் இருந்த கேபின் அந்த பக்கமாக திறக்கப்பட நிமிர்ந்து பார்த்தான் ஆராதனா வந்துக் கொண்டு இருந்தாள். கண்ணில் ரீடிங் கிளாஸ் போட்டு இருந்தாள் முகத்தை வையிட் மாஸ்க் மறைத்து இருந்தது. புல் ஸ்லீவ் காலர் வைத்த டாப்பில் இருந்தாள். முடி விரிந்து இருந்தது.
உள்ளே வந்தவள் டேபிளில் அமரந்து தன்னை ஆசுவாசம் படுத்திக் கொண்டாள். முகமெல்லாம் வலித்தது.
கொரோனா வைரஸ் நம் நாட்டை விட்டு மொத்தமாக சென்று வாழ்க்கை இயல்புக்கு திரும்பினாலும் மாஸ்க் நம்மாட்டிலும் சகஜமானதாக மாறி விட்டது அதனால் அதியன் அதை பெரிதாக நினைக்கவில்லை. உடனே அவளை அழைத்தான்.
உள்ளிருந்த கதவு வழியால் வந்தாள் அவள்.
"மார்னிங் சார்"
"மார்னிங்"
"ஆராதனா இந்த பையில்ஸ் எல்லாத்தையும் நீங்க அப்டேட் பண்ணிட்டு எனக்கு மெயில் பண்ணுங்க" என்று பத்து பையில்களை நீட்டினான் அவன்.
"ஒகே சார்" அவள் வாங்கி கொண்டு திரும்ப எத்தனிக்க
"ஆராதனா"
"சார்"
"எதுக்கு மாஸ்க்?"
"அது எனக்கு டஸ்ட் அலர்ஜி"
"ஓகே ஓகே யு கேரி ஆன்" சோர்வாக அவள் நடந்து செல்வதை பார்த்தவன் அலர்ஜியினால் என்று நினைத்துக் கொண்டான். அவள் சென்றவுடன் செக்யூரிட்டிக்கு அழைத்தவன் இன்று இரவே அந்த கேபினை சுத்தபடுத்த சொன்னான்.
_____________________________
"வணக்கம் மேடம் " தன் முன்னே வந்து நின்ற மனிதரை பார்வையில் அளந்தாள் தக்ஷினா. வெள்ளை வேஷ்ட்டியில் பெரிய மனுஷன் தோரணையில் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு நின்று இருந்தார் அவர்.
அவரை ஆராய்ந்து முடித்தவள் வேலை முடிந்து என்பது போல ரீடிங் கிளாசை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டு கேஸ்பைலை புரட்டிக் கொண்டு இருந்தாள்.
"மேடம்" அழுத்தி கூப்பிட்டார் அவர்.திரும்பவும் அவரை நிமிர்ந்து பார்த்தாள் தக்ஷினா.
"உட்காரலாமா?" அவர் கேட்க இடது புறம் தலையை சாய்த்து மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் மும்முரமாக பைலில் ஆழ்ந்தாள்.
"என்னடா?" என்று இருந்தது அவருக்கு.
"ஒரு வேளை விமலன் இந்த பொண்ண பத்தி சொன்னது நிஜமா இருக்குமோ?" லேசாக பாலாவின் மூலையில் மணியடித்து.
"திரும்பி போய்டவா? இல்ல நிக்கவா? இல்ல கூப்பிட்டு பார்க்லாமா?" அவர் மனதில் கணக்கு போட்டு கொண்டு நின்றிருந்தார். இப்படியே அரைமணி நேரம் செல்ல தன்னிலையை என்னி அவமானமாக இருந்தது அவருக்கு.
கோபத்தில் வேகமாக சென்று சத்தம் வருவது போல கதவை திறந்து திருப்பி தக்ஷினாவை பார்த்தார். அவள் நிமிரவே இல்லை. வேகமாக வெளியேறினார்.
கேஸ் விசயமாக வெளியில் சென்று அப்போதுதான் உள்ளே வந்துக் கொண்டு இருந்தார் முரளி.
"முரளி சார்"
"அட பாலாவா என்ன சார் இங்க?"
"அது புது எஸ்பிய பாத்துட்டு போகலாமேனு வந்தேன்"
"என்ன பாலாசார் கோபமா இருக்கிங்க போல" நமட்டு சிரிப்புடன் கேட்டார் முரளி.
"என்ன முரளிசார் நக்கல் பண்றிங்களா ?"
"உங்களையா ச்சச்ச நீங்க எவ்வளவு பெரிய ஆள்" அவர் கலாய்க்க
"உங்களுக்கு தெரியுது புதுசா வந்தவங்க கிட்டையும் என்ன பத்தி சொல்லுங்க. திமிரா நடந்துக்குது" பாலா சட்டை காலரை தூக்கிவிட கடுப்பாக இருந்தது முரளிக்கு.
"யார எஸ்பி மேடமையா?"
"ஆமா பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு என் வயசுக்கு மரியாதை குடுத்து உட்காரகூட சொல்ல மாட்டேன்குது"
"ஓஓ…. மேடம் பர்ஃபாமன்ஸ்சா" மனதிற்க்குள் சிரித்துக் கொண்டார் அவர். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொதே முரளி போனதுக்கு அழைப்பு வர "நீங்க இருங்க" என்றவர் கொஞ்சம் தூரம் தள்ளி வந்து நின்று பேசினார்.
"சொல்லுங்க மேடம்… "
"நீங்க ஒருத்தன் கூட நின்னு பேசிட்டு இருக்கிங்களே அந்த ஆள் பத்தி எனக்கு தெரியனும் "
"பாலாவா மேடம்?"
"ஓ அவன் பேரு பாலாவா… ம்ம்"
"அந்த ஆளு அப்பா பெரிய பணக்காரர் மேடம். அவரு செத்ததுக்கு அப்பறம் இவன் ப்பேம்காக அரசியல் கட்சினு பாதி அழிச்சிட்டான். விமலன் சார்கிட்ட வெட்டி பந்தா பண்ணி வாங்கி கட்டிப்பான். இந்த ஆளோட மச்சான் ஒருத்தன் எம்.எல்.ஏ வா இருக்கார் இவன் கிட்ட இருக்க காசுகாக இவன பக்கத்துல வச்சிருக்கார்"
"ஓ… விமிகிட்ட பந்தா பண்ணிருக்கானா? அப்ப அந்த ஆள உள்ள அழைச்சிட்டு வாங்க"
"சரி முரளி" என போனை வைக்க திரும்பி பாலாவை பார்த்தார். அவர் இன்னொரு போலீஸிடம் வம்புவளர்த்துக் கொண்டு இருந்தார்.
"அய்யோ பாவும் வாலன்டியரா வந்து சிக்கிட்டான். இனி இந்த பக்கம் வரமாட்டான்" சிரித்துக் கொண்டே பாலாவை நோக்கி சென்றார்.
____________________
அதியனின் மெயிலுக்கு நோட்டிபிகேஷன் வரவும் அதை திறந்து சரி பார்த்தவன் ஆராதனாவை அழைத்து கரக்ஷன்ஸ் சிலவற்றை சொன்னான். அவள் அதையும் முடித்து அனுப்பி வைத்தாள். அவளுக்கு சோர்வாக இருந்தது வாயை அசைக்கவே முடியவில்லை நாசி வேறு வின்வின் என்று தெரித்தது மீண்டும் அவளை அழைத்தான் அதியன்.
கதவை திறந்து கொண்டு அவள் உள்ளே செல்ல விஷ்ணு கையில் இருபது பையில்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
"ஆராதனா இது எல்லாமே ஆயில் கம்பெனியோடது. விஷ்ணு நீங்க ஏன் நிக்கிறிங்க? இந்த பையில்ஸ்லாம் பார்த்து முடிக்க மினிமம் 3 ஆர் 4 ஹவர்ஸ் ஆகும் டேக் யுவர் சீட்"
"தேங்கியூ சார்"
"ஆராதனா நீங்க நோட்ஸ் எடுத்து டாக்குமென்ட்டை டைப் பண்ணா போதும். கேர்புல்லா நோட் பண்ணுங்க. அங்க லேப்டாப் இருக்கு எடுத்து லொக்இன் பண்ணிவச்சிக்கோங்க. பக்கத்தில நோட்பேட் இருக்கு" அவன் கை காட்ட அதை எடுத்துக் கொண்டாள்.
அவன் "உட்காருங்க" எனவும் விஷ்ணுவின் பக்கத்தில் உட்கார போக "இருங்க ஆராதனா எனக்கு தெரியுர மாதிரி உட்காருங்க…"
"ஒகே சார்" அங்கு இருந்த சேரை இழுத்து இருவருக்கும் நடுவில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவள் குரல் ஏதோபோல இருப்பதை இருவருமே கவணித்தனர்.
அவர்கள் சொல்ல சொல்ல நோட் பேடில் எழுதிக் கொண்டவள். மும்முரமாக டைப் செய்துக் கொண்டு இருந்தாள். இருவரும் பிரேக் எடுத்துக் கொள்ள. அவள் மட்டும் வேலை செய்துக் கொண்டு இருந்தாள். முககவசம் போட்டு இருந்ததால் அவள் சோர்வு இருவருக்கும் தெரியவில்லை.
மூவருக்கும் காஃபி சொல்லிய அதியன் ஜன்னலை திறந்து சிறிது நேரம் நின்றிருந்தான். கேன்டீனில் இருந்து காஃபி கொடுத்துவிட்டு சென்றனர். விஷ்ணு அதியனிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு ஆராதனாவையும் அழைத்தான்.
"ஆராதனா coffee?" அதியனின் முன்னால் மட்டும் ஆராதனா என்று தான் அழைப்பான்.
"வேண்டாம்" ஒற்றை வார்தையில் முடித்துக்கொள்ள அவளை சந்தேகமாக பார்த்தான் விஷ்ணு. "என்னாச்சு ஆராதனா?" அவள் அருகில் விஷ்ணு செல்ல காஃபி அருந்தி கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அதியனும் திரும்பி பார்த்தான்.
"ஒன்னும் இல்ல விஷ்ணு… நீங்க குடிங்க"
"ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" அவளை உற்று பார்த்தான் விஷ்ணு.
"அது அவங்களுக்கு டஸ்ட் அலர்ஜியாம்" இடைபுகுந்தான் அதியன்.
"டஸ்ட் அலர்ஜியா?"
"அப்படிதான் சொன்னாங்க… நீங்க அவங்கள கம்பல் பண்ணாதிங்க" திரும்பி ஜன்னல் அருகே சென்று விட்டான் அதியன். விஷ்ணு ஆராதனாவிடம் காட்டும் அக்கறையை கண்டு எரிச்சலாக இருந்தது அவனுக்கு .
குழப்பமாக திரும்பி அவளை பார்த்தான் விஷ்ணு."மைலிக்கு அதெல்லாம் இல்லையே. எதுக்கு பொய் சொல்றா.. மாஸ்க் வேற போட்டுருக்கா" மனதில் புலம்பியவன் அவளை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"என்ன இதெல்லாம்" அவன் கண்களால் கேட்க ஒன்றும் இல்லை என்பதாக தலையை அசைத்தாள்.
டைப் செய்ததை பிரிண்டர்க்கு அனுப்பிவிட்டு அதை எடுக்க எழுந்து சென்றாள். பிரண்டர் அதியன் நின்றிருந்த ஐன்னல் பக்கத்தில் தான் இருந்தது. அவள் பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு இருக்க திறந்திருந்த ஜன்னல் வழி காற்று வேகமாக வீச அதில் அவள் முடி பறந்து விலக கழுத்தில் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டி இருந்தது தெரிந்தது. விஷ்ணு இருப்பதனால் பார்வையை திருப்பிக்கொண்டான். அப்போதும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
சிறிது நேரத்தில் மீண்டும் வேலை தொடங்கி விட மூவரும் அதில் ஆழ்ந்தனர். அதியனின் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தீண்டி விலகியது.
அவள் கையை எடுத்து கழுத்தை தடவிக் கொண்டது. விரலை மடக்கி நெட்டி முறித்துக்கொண்டது. பேப்பர்ஸ்காக அவள் கையை நீட்டிய போது அவள் உள்ளங்கையை பார்த்தான் டைப் அடித்ததால் சிவந்து பேய் இருந்தது.
"ரொம்ப சாப்ட் போலையே… பூ மாதிரி இவள ஹாண்டில் பண்ணும்" மனதில் நினைத்துக் கொண்டவன் வேலையை பார்க்லானான்.
விஷ்ணு சொல்ல சொல்ல டாக்குமென்ட்டை அடித்துக் கொண்டு இருந்தாள் ஆராதனா. அதியன் அவள் டைப் செய்யும் ஸ்பீடை பார்த்துக் கொண்டு இருந்தான். ஸ்லீவ் லேசாக விலக அப்போதுதான் கவனித்தான் மணிக்கட்டில் நகங்கள் அழுத்தி புண்ணாகி இருப்பதை.
"என்ன இது காயம்?" அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க அவன் பார்வையை கண்டு ஸ்லீவை இழுத்துவிட்டாள் அவள்.
"ஏதோ இருக்கு" அவன் ஆராய்ச்சி பார்வை பார்க்க அவள் பதற்றத்தில் நோட் பேடை தட்டி விட்டதும் பேனா கிழே விழுந்து உருண்டது.
அதை எடுத்தவள் அவசர கதியில் நிமிர மேஜை மூக்கில் இடித்து வின் என்று ஒரு வலி கிளம்பியது. அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் அதியன்.
"ஹேய் ஆராதனா மாஸ்க்" அதியனின் குரலில் நிமிர்த்து பார்த்த விஷ்ணு
"அய்யோ மைலி என்ன பிளட்?" என பதறி அவள் பக்கத்தில் ஓடினான்.
"ஒன்னும் இல்ல"
"முத மாஸ்க எடு" அதட்டினான் அதியன். இரத்தம் தாடை வரை விழிந்தது.
"பரவால்ல சார்" என்றவள் எழுந்து வெளியில் ஓட அவள் பின்னாலே ஓடிய விஷ்ணு அவளை இழுத்துக் கொண்டு அவன் கேபினுக்குள் சென்றான். வலுக்கட்டாயமாக அவள் மாஸ்கை கழட்டிய விஷ்ணு அதிர்ந்து விட்டான்.
இரண்டு கன்னங்களும் கீழ் உதடும் வீங்கி இருக்க கைதடங்கள் பதிந்து கண்ணி இருந்தது முகம். இதழ் ஒரத்திலும் நாசி துவாரத்திலும் ரத்தம் உறைந்து இருக்க. புதிதாக வந்த ரத்தம் கன்னம் தாடை உதடு என்று பரவி இருந்தது.
"மைலி என்னமா இது?"
"பச் ஒன்னும் இல்ல"
"யாரு உன்ன அடிச்சது?"
"ப்ளீஸ் என்னால பேச முடியல விட்டுங்க"
"சொல்ல போறியா இல்லையா?" அவன் அதட்ட அமைதியாகவே இருந்தாள்.
"உன் அப்பாவா?" மறுத்து தலையாட்டினாள் அவள்.
"சந்தோஷா?" அவள் அமைதியாக இருக்க அவனுக்கு புரிந்தது.
"எதுக்கு உன்ன காட்டுமிராண்டி மாதிரி அடிச்சான்? மென்டாலா அவன்? அவனை எல்லாம் மென்டல் ஹாஸ்பிட்டல தான் சேக்கணும். சைக்கோ" கோபத்தில் கத்த
"விஷ்ணு" அதட்டினாள்.
"ஆமா உன் அண்ணன சொன்னா உடனே உனக்கு கோபம் வருமே. நீதான் அவன அண்ணனு நினைக்கிற அவன் எப்படி உன்ன அடிச்சி வச்சிருக்கான் பார்" சோர்வாக நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.
"அவன நான் சும்மா விட போறது இல்லை. எதுக்கு அடிச்சான் அவன் உன்ன?"
"விஷ்ணு ப்ளீஸ் சந்தோஷ் கிட்ட நீங்க பேச கூடாது என் மேல பிராமிஸ்"
"ச்ச ஏன் அடிச்சானு முத சொல்லு?"
"விஷ்ணு லீவ்மி" கண்ணை மூடிக் கொண்டாள் அவள்.
"என் கூட நைட் வந்ததுக்கா?" கதவருகில் இருந்து சந்தம் வர இருவரும் திரும்பி பார்த்தனர் அதியன் தான் நின்றிருந்தான்.
அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஆராய்ந்தான். பின் பார்வை கழுத்தில் பதிந்து கைக்கு தாவியது. அவனை கண்டதும் எழுந்து நின்றாள் ஆராதனா.
அவன் அவள் கையை பிடித்து மேலே தூக்க "சார்" முன்னே வந்த விஷ்ணுவை ஒரு பார்வை மட்டுமே.
ஆராதனா அவள் கையை இழுத்துக் கொள்ளமுயல அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. அவன் ஸ்லீவை மேலே ஏற்றிவிட அங்கேயும் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டபட்டு மணிக்கட்டு கண்றி சிவந்து அழுந்த படிந்த நக காயங்களும் இருந்தது.
"அதுக்கு தானே?"
"இப்ப நீ வாய திறக்கல போலீஸ்க்கு கால் பண்ணுவேன்"
"வேண்டாம்" என்றவள் தலையைமட்டும் ஆமாம் என்பதாக ஆட்டினாள்.
கோகாதடி என் பெண்ணே! ❤❤
Comment here 👇👇👇👇👇👇👇
www.sahaptham.com
இரத்தம் நிற்காமல் வடிந்தது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சட்டென்று நினைப்பு எங்கோ சென்றது. இருக்காது என மனதைக் அரட்டினான். துர்கா அழுவதை பார்த்து பயத்தில் அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது.
"பாப்பா….. எழுத்துருடி ஆரா" அவன் குரல் நடுங்க ஆரம்பித்தது சற்று நேரம் சென்றிருந்தால் வாய்விட்டே அழுதிருப்பான் அதற்குள் அவள் கருவிழி மேலே சொருக இமையை மூடிமூடி திறந்தாள் ஆராதனா.
"தனா கண்ண திற இங்க பார்மா என்ன பாரு" அவள் கன்னத்தை அழுத்தி பிடித்துக் அட்டினான்.
"அம்மா தண்ணீ கொண்டு வா" அதை அவர் காதில் வாங்காமல் அழுதுக்கொண்டே இருக்க
"அழுது தொலையாதமா தண்ணீ கொண்டுவா போ" எரிந்துவிழுந்தான். அவர் எழுந்து உள்ளே ஓடினார்.
"டேய் எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்" கடிந்து கொண்ட தந்தையை முறைத்தான் அவன்.
"அவ எவ்வளவு திமிரா பேசுறா பாத்திங்கல அதான் இப்போவே கண்டிச்சி வச்சேன்"
"அதுக்கு இப்படி இரத்தம் வர மாதிரியா?"
"பக்கத்தில பார்த்துட்டு தானே நின்னிங்க?"
"வீட்டுக்கு ஆம்பளையா நீ கண்டிக்கும் போது நான் என்ன பண்ண?"
"அப்போ வாய மூடிட்டு நில்லுங்க" ராகவனிடமும் பாய்ந்தான் சந்தோஷ். மகனை எதிர்க்க துணிவின்றி "துர்கா" உள்ளே திரும்பி கத்தினார் அவர். தண்ணீரையும் சக்கரை டப்பாவையும் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார் துர்கா.
ஒருவழியாக அவள் கண்முழித்ததும் சந்தோஷின் கையை தட்டிவிட்டு எழுத்துக் கொள்ள முயன்றாள் முடியவில்லை.
துர்கா பிடித்துக்கொள்ள சோபாவில் அமர்தவள் கண்ணை மூடிக்கொள்ள வேகமாக மாடி ஏறிய சந்தோஷ் கதவை அறைந்து சாத்தினான்
_________
வீட்டில் தனியாக ஜிம் இருந்தாலும் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஜிம்மிற்கு செல்வது புவியின் வழக்கம். இன்றும் ஜாக் பண்ணிக்கொண்டு வந்தனை ஜிம்மில் இருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த பெண் இடித்துவிட புவி சாரி சொல்லிவிட்டு செல்ல "ஸ்டுப்பிட்" என அவள் திட்டுவது காதில் விழுந்ததும் கோபமாக திரும்பினான்.
சொடிக்கிட்டு அவளை கூப்பிட தலையில் மாட்டியிருந்த கேப்பில் கைவைத்துக் கொண்டே திரும்பினாள் அவள். அவள் முகத்தை அந்த பெரிய கூலர்ஸ் மறைத்து இருக்க அவள் வாய் மட்டும்தான் தெரிந்தது.
"இடிச்சது நீங்க"
"அப்படியா?" நக்கலாக சொன்னவள் திரும்பி நடக்க அவள் முன்னே சென்று வழியை மறைத்தான் புவி. கையை கட்டிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
"என்ன ஹீரோயிசம் காட்டுறியா?" தாடையில் விரலால் தேய்த்துக்கொண்டே அமைதியாக கேட்டான் புவி.
"இல்ல ஹீரோயினிசம்" அந்த குரல் எங்கேயோ கேட்டது போல இருந்தது. அவள் சொல்லிக் கொண்டே முன்னால் நடக்க புவி பின்னே பின்னே நகர்ந்தான்.
"என்ன திமிரா? தப்ப நீ பண்ணிட்டு என்னை ஸ்டுபிட்னு திட்டுவியா?"
"ஆமா"
"வாட்? என்ன ஓவரா பேசுற. முதல்ல நீ கூலர்ஸ்ச கழட்டு" அவளை அதட்டினான் அவன். அவனுக்கு அவள் யார் என்று பார்க்கவேண்டும் என மனம் உந்தியது.
"பச் ஏய் தள்ளிப்போடா…." அவள் ஆள் காட்டி விரலை ஆட்ட அதை பிடித்து உடைக்க தோன்றியது புவிக்கு.
"மரியாதையா பேசு" வார்த்தையை கடித்து துப்பினான் அவன்.
"நீ மட்டும் என்னை மரியாதையா வாங்க போங்க சொன்னியா என்ன?"
"பப்ளிக்குனு பாக்கிறேன் நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசர். எனக்குனு ஒரு ரெப்புட்டேஷன் இருக்கு"
"இருந்துக்கோ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…?"
"ஹலோ என்ன?"
"போன் பேசுறதுனா அங்க ஓரமா போய் நின்னு பேசு.. போ" அவனை தாண்டி சென்றவள் அங்கே வந்து நின்ற கார்கதவை திறக்க அவளை மனதில் பொறுமிக் கொண்டு இருந்தவன் "என்னை தெரியாம பேசுற" என புவி வேந்தன் கத்த
"ஏன் தெரியாமல்? எனக்கு கண்ணு நல்லாவே தெரியும். பாரு நீ மலை மாதிரி இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கனு" என்றவாறே அவள் கார் கதவை சாத்தினாள்.
"ஏய் என்ன?" "தைரியம் இருந்தா இங்க வந்து நின்னு பேசு எதுக்கு பயந்து ஓடுற? இதுக்கு என்ன அர்த்தம்?" நக்கலாக கேட்டுக் கொண்டு கார் அருகில் புவி கோபமாக வர "நான் பேசுற அளவுக்கு நீ ஒர்த் இல்லனு அர்த்தம்" சொன்னவள் கார் கண்ணாடியை ஏற்றிவிட காரை வேகமாக குத்தினான் அவன். கார் நகர்ந்துவிட்டதும் "ஷிட்" என மணலை அவன் எத்திவிட புழுதிக்கு நடுவில் அவள் காரை பின்தொடர்ந்து கொண்டு ஒரு கார் சென்றதை பார்த்தான் புவி வேந்தன்.
"மாஃபியா தலைவியா இருப்பாளோ? நீ யாரா இருந்தலும் என் கையில ஒரு நாள் மாட்டுவடி" என்று கருவியவன் வீட்டிற்க்கு திரும்பி நடந்தான்.
கார்கதவை திறந்து இறங்கியவள் தோட்டத்தில் நின்று பூ பறித்துக் கொண்டு இருந்த சாந்தினி அருகில் சென்று அவர் கூடையில் பறித்து வைத்திருந்த பூக்களை ஒரே கையில் மொத்தமாக அள்ளி வானை நோக்கி வீச பூக்கள் மாரியாக இருவர் மீதும் பொழிந்தது.
அவளை செல்லமாக முறைத்தார் சாந்தினி. சத்தமாக சிரித்தவள் கூலர்ஸ்சையும் தொப்பியையும் கழட்டி பக்கதில் இருந்த ஸ்டோன் பென்ஞ்சில் போட்டு விட்டு கையை தூக்கி நெட்டி முறித்தாள் தக்ஷினா.
"என்ன அம்மு இது? இப்போ சாமிக்கு நான் என்ன பண்ணுவேன்"
"இவ்வளவு பூ இருக்குல திரும்ப பறிச்சிக்கோ சாந்"
"அடி.. என் பேரையும் கொலை பண்ணாதனு எத்தனை தடவை சொல்லுறது"
அவரை கட்டி கொண்டவள் "ம்மா உனக்கு வச்சப்போவே அது செத்துப்போச்சி… இதுல நான் எங்க புதுசா கொலைபண்ண. ஆஆஆஆஆஆஆ வலிக்குது விமி விடு" என அலற அவள் குரலில் தோட்டமே அதிர்ந்தது. அவள் காதை விட்ட விமலன் வலது கையை அவள் கழுத்தை சுற்றி போட்டு இழுத்து பிடித்தவன்
"அம்மா இப்போ அவ தலைல கொட்டு… கிடைச்ச சான்ஸ்ச மிஸ் பண்ணகூடாது. தீ சிக்கிட்டா" அவன் சிரிக்க "அம்மாஆஆ" குட்டு விழுந்தது அவன் தலையில். சாந்தினி சிரிக்க அவளையும் சேர்ந்துகொண்டு திரும்பினான் முத்துவேல்தான் நின்று இருந்தார்.
"தந்தையே" அவன் கெடுத்த அதிர்ச்சி ரியக்ஷனில் தக்ஷினா முத்துவேலுக்கு ஹைஃபை கொடுத்தாள்.
"என்னடா?"
"நீங்களா என்ன அடிச்சது?" அவன் நெஞ்சில் கைவைக்க.
"நீ எதுக்குடா என் பொண்ணு காதை திருகின?"
"டாடி..." அவளை இருக்கி கொண்டு அழுக அவன் கையை கடித்தவள் விடுபட்டு முத்துவேலிடம் ஓடிவிட்டாள்.
"அம்மாஆஆஆ அய்யோ ஏய் சாந்து இவளுக்கு நைட் சோறு வைக்கலயா நீ? கால்கிலோ சதையை உறுவிட்டா. புள்ளைய பெத்துவிட சொன்ன என்னத்தையோ பெத்துவிட்ருகாங்க பாரு" அவன் கையை தேய்த்துக் கொண்டு புலம்ப. அவன் முதுகில் இரண்டடி வைத்தார் சாந்தினி.
அவனை முறைத்துக் கொண்டு தக்ஷினா செடியில் குச்சியை ஒன்றை உடைக்க அவனை பிடித்து கொண்டனர் சாந்தினியும் முத்துவேலும்.
"ஆகா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க… மீ எஸ்கேப்" என நழுவி ஓடியவன் திரும்பி பார்க்க தக்ஷினாவும் குறி பார்த்து குச்சை வீச அதை பிடித்தவன்
"புவி உனக்கு கரெக்ட்டாதான் பேரு வச்சிருக்கான் வௌவால் மனுஷினு"
"புவி ராஸ்கல்" பல்லை கடித்தவள் பக்கத்தில் இருந்த கல்லை எடுக்கபோக தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான் விமலன்.
எப்போதும் போல வாயை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் வேலை செய்பவர்கள்.
"என்ன வேடிக்கை சீக்கிரம் வேலைய பாருங்க" அதட்டியவள் குளிக்க உள்ளே சென்றுவிட்டாள்.
_____________
இதோடு நூறாவது தடவையாக எண்ட்ரன்ஸில் இருக்கும் சர்வேல்லன்ஸ் கேமராவில் ஆராதனாவை தேடிக் கொண்டு இருந்தான் அதியன் அவள் வந்தபாடகாதான் இல்லை. பையிலை மூடி வைத்துவிட்டு ஜன்னல் அருகே சென்றவன் அதை திறந்து விட சட்டென்று இளவெயிலோடு காற்று அவன் முகத்தில் மோதியது.
நேற்று அவளை திட்டியதை நினைத்து வருத்தமாக இருந்தது. அவன் டாலர் கேமராவின் வழி பதிவாகி இருந்த அவளின் கலங்கிய முகத்தை பார்த்தவனுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது.
இரவு தூங்காதது தலை பாரமாக கணத்தது. கண்ணை மூடி நின்றிருந்தான்.
"மே ஐ கம் இன் சார்?"
"எஸ்" விஷ்ணுதான் உள்ளே வந்தான்.
"என்ன விஷ்ணு?"
"ஏலக்காய் லோடு எப்போதும் போல லேட் பண்றாங்க சார். போனதடவையே வார்ன் பண்ணிட்டோம். நெக்ஸ்ட் வீக் எக்ஸ்போர்ட் பண்ணனும்"
"யாரு அந்த காண்ட்ரக்டர்?"
"சந்திரன் சார்"
"நெக்ஸ்ட் லோடு எப்போ தேவபடும்னு கேட்டிங்களா?"
"நெக்ஸ்ட் வீக்கே வேனும் சார்"
"புதுசா சாம்பிள்ஸ் கலக்ட் பண்ணுங்க."
"ஓகே சார்"
"இந்த லோடு வந்தோனே சந்திரனை என்ன வந்து பார்க்க சொல்லுங்க"
"சுயர் சார்" அவனுக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.
அவனுக்கு எதிர் இருந்த கேபின் அந்த பக்கமாக திறக்கப்பட நிமிர்ந்து பார்த்தான் ஆராதனா வந்துக் கொண்டு இருந்தாள். கண்ணில் ரீடிங் கிளாஸ் போட்டு இருந்தாள் முகத்தை வையிட் மாஸ்க் மறைத்து இருந்தது. புல் ஸ்லீவ் காலர் வைத்த டாப்பில் இருந்தாள். முடி விரிந்து இருந்தது.
உள்ளே வந்தவள் டேபிளில் அமரந்து தன்னை ஆசுவாசம் படுத்திக் கொண்டாள். முகமெல்லாம் வலித்தது.
கொரோனா வைரஸ் நம் நாட்டை விட்டு மொத்தமாக சென்று வாழ்க்கை இயல்புக்கு திரும்பினாலும் மாஸ்க் நம்மாட்டிலும் சகஜமானதாக மாறி விட்டது அதனால் அதியன் அதை பெரிதாக நினைக்கவில்லை. உடனே அவளை அழைத்தான்.
உள்ளிருந்த கதவு வழியால் வந்தாள் அவள்.
"மார்னிங் சார்"
"மார்னிங்"
"ஆராதனா இந்த பையில்ஸ் எல்லாத்தையும் நீங்க அப்டேட் பண்ணிட்டு எனக்கு மெயில் பண்ணுங்க" என்று பத்து பையில்களை நீட்டினான் அவன்.
"ஒகே சார்" அவள் வாங்கி கொண்டு திரும்ப எத்தனிக்க
"ஆராதனா"
"சார்"
"எதுக்கு மாஸ்க்?"
"அது எனக்கு டஸ்ட் அலர்ஜி"
"ஓகே ஓகே யு கேரி ஆன்" சோர்வாக அவள் நடந்து செல்வதை பார்த்தவன் அலர்ஜியினால் என்று நினைத்துக் கொண்டான். அவள் சென்றவுடன் செக்யூரிட்டிக்கு அழைத்தவன் இன்று இரவே அந்த கேபினை சுத்தபடுத்த சொன்னான்.
_____________________________
"வணக்கம் மேடம் " தன் முன்னே வந்து நின்ற மனிதரை பார்வையில் அளந்தாள் தக்ஷினா. வெள்ளை வேஷ்ட்டியில் பெரிய மனுஷன் தோரணையில் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு நின்று இருந்தார் அவர்.
அவரை ஆராய்ந்து முடித்தவள் வேலை முடிந்து என்பது போல ரீடிங் கிளாசை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டு கேஸ்பைலை புரட்டிக் கொண்டு இருந்தாள்.
"மேடம்" அழுத்தி கூப்பிட்டார் அவர்.திரும்பவும் அவரை நிமிர்ந்து பார்த்தாள் தக்ஷினா.
"உட்காரலாமா?" அவர் கேட்க இடது புறம் தலையை சாய்த்து மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் மும்முரமாக பைலில் ஆழ்ந்தாள்.
"என்னடா?" என்று இருந்தது அவருக்கு.
"ஒரு வேளை விமலன் இந்த பொண்ண பத்தி சொன்னது நிஜமா இருக்குமோ?" லேசாக பாலாவின் மூலையில் மணியடித்து.
"திரும்பி போய்டவா? இல்ல நிக்கவா? இல்ல கூப்பிட்டு பார்க்லாமா?" அவர் மனதில் கணக்கு போட்டு கொண்டு நின்றிருந்தார். இப்படியே அரைமணி நேரம் செல்ல தன்னிலையை என்னி அவமானமாக இருந்தது அவருக்கு.
கோபத்தில் வேகமாக சென்று சத்தம் வருவது போல கதவை திறந்து திருப்பி தக்ஷினாவை பார்த்தார். அவள் நிமிரவே இல்லை. வேகமாக வெளியேறினார்.
கேஸ் விசயமாக வெளியில் சென்று அப்போதுதான் உள்ளே வந்துக் கொண்டு இருந்தார் முரளி.
"முரளி சார்"
"அட பாலாவா என்ன சார் இங்க?"
"அது புது எஸ்பிய பாத்துட்டு போகலாமேனு வந்தேன்"
"என்ன பாலாசார் கோபமா இருக்கிங்க போல" நமட்டு சிரிப்புடன் கேட்டார் முரளி.
"என்ன முரளிசார் நக்கல் பண்றிங்களா ?"
"உங்களையா ச்சச்ச நீங்க எவ்வளவு பெரிய ஆள்" அவர் கலாய்க்க
"உங்களுக்கு தெரியுது புதுசா வந்தவங்க கிட்டையும் என்ன பத்தி சொல்லுங்க. திமிரா நடந்துக்குது" பாலா சட்டை காலரை தூக்கிவிட கடுப்பாக இருந்தது முரளிக்கு.
"யார எஸ்பி மேடமையா?"
"ஆமா பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு என் வயசுக்கு மரியாதை குடுத்து உட்காரகூட சொல்ல மாட்டேன்குது"
"ஓஓ…. மேடம் பர்ஃபாமன்ஸ்சா" மனதிற்க்குள் சிரித்துக் கொண்டார் அவர். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொதே முரளி போனதுக்கு அழைப்பு வர "நீங்க இருங்க" என்றவர் கொஞ்சம் தூரம் தள்ளி வந்து நின்று பேசினார்.
"சொல்லுங்க மேடம்… "
"நீங்க ஒருத்தன் கூட நின்னு பேசிட்டு இருக்கிங்களே அந்த ஆள் பத்தி எனக்கு தெரியனும் "
"பாலாவா மேடம்?"
"ஓ அவன் பேரு பாலாவா… ம்ம்"
"அந்த ஆளு அப்பா பெரிய பணக்காரர் மேடம். அவரு செத்ததுக்கு அப்பறம் இவன் ப்பேம்காக அரசியல் கட்சினு பாதி அழிச்சிட்டான். விமலன் சார்கிட்ட வெட்டி பந்தா பண்ணி வாங்கி கட்டிப்பான். இந்த ஆளோட மச்சான் ஒருத்தன் எம்.எல்.ஏ வா இருக்கார் இவன் கிட்ட இருக்க காசுகாக இவன பக்கத்துல வச்சிருக்கார்"
"ஓ… விமிகிட்ட பந்தா பண்ணிருக்கானா? அப்ப அந்த ஆள உள்ள அழைச்சிட்டு வாங்க"
"சரி முரளி" என போனை வைக்க திரும்பி பாலாவை பார்த்தார். அவர் இன்னொரு போலீஸிடம் வம்புவளர்த்துக் கொண்டு இருந்தார்.
"அய்யோ பாவும் வாலன்டியரா வந்து சிக்கிட்டான். இனி இந்த பக்கம் வரமாட்டான்" சிரித்துக் கொண்டே பாலாவை நோக்கி சென்றார்.
____________________
அதியனின் மெயிலுக்கு நோட்டிபிகேஷன் வரவும் அதை திறந்து சரி பார்த்தவன் ஆராதனாவை அழைத்து கரக்ஷன்ஸ் சிலவற்றை சொன்னான். அவள் அதையும் முடித்து அனுப்பி வைத்தாள். அவளுக்கு சோர்வாக இருந்தது வாயை அசைக்கவே முடியவில்லை நாசி வேறு வின்வின் என்று தெரித்தது மீண்டும் அவளை அழைத்தான் அதியன்.
கதவை திறந்து கொண்டு அவள் உள்ளே செல்ல விஷ்ணு கையில் இருபது பையில்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
"ஆராதனா இது எல்லாமே ஆயில் கம்பெனியோடது. விஷ்ணு நீங்க ஏன் நிக்கிறிங்க? இந்த பையில்ஸ்லாம் பார்த்து முடிக்க மினிமம் 3 ஆர் 4 ஹவர்ஸ் ஆகும் டேக் யுவர் சீட்"
"தேங்கியூ சார்"
"ஆராதனா நீங்க நோட்ஸ் எடுத்து டாக்குமென்ட்டை டைப் பண்ணா போதும். கேர்புல்லா நோட் பண்ணுங்க. அங்க லேப்டாப் இருக்கு எடுத்து லொக்இன் பண்ணிவச்சிக்கோங்க. பக்கத்தில நோட்பேட் இருக்கு" அவன் கை காட்ட அதை எடுத்துக் கொண்டாள்.
அவன் "உட்காருங்க" எனவும் விஷ்ணுவின் பக்கத்தில் உட்கார போக "இருங்க ஆராதனா எனக்கு தெரியுர மாதிரி உட்காருங்க…"
"ஒகே சார்" அங்கு இருந்த சேரை இழுத்து இருவருக்கும் நடுவில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவள் குரல் ஏதோபோல இருப்பதை இருவருமே கவணித்தனர்.
அவர்கள் சொல்ல சொல்ல நோட் பேடில் எழுதிக் கொண்டவள். மும்முரமாக டைப் செய்துக் கொண்டு இருந்தாள். இருவரும் பிரேக் எடுத்துக் கொள்ள. அவள் மட்டும் வேலை செய்துக் கொண்டு இருந்தாள். முககவசம் போட்டு இருந்ததால் அவள் சோர்வு இருவருக்கும் தெரியவில்லை.
மூவருக்கும் காஃபி சொல்லிய அதியன் ஜன்னலை திறந்து சிறிது நேரம் நின்றிருந்தான். கேன்டீனில் இருந்து காஃபி கொடுத்துவிட்டு சென்றனர். விஷ்ணு அதியனிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு ஆராதனாவையும் அழைத்தான்.
"ஆராதனா coffee?" அதியனின் முன்னால் மட்டும் ஆராதனா என்று தான் அழைப்பான்.
"வேண்டாம்" ஒற்றை வார்தையில் முடித்துக்கொள்ள அவளை சந்தேகமாக பார்த்தான் விஷ்ணு. "என்னாச்சு ஆராதனா?" அவள் அருகில் விஷ்ணு செல்ல காஃபி அருந்தி கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அதியனும் திரும்பி பார்த்தான்.
"ஒன்னும் இல்ல விஷ்ணு… நீங்க குடிங்க"
"ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" அவளை உற்று பார்த்தான் விஷ்ணு.
"அது அவங்களுக்கு டஸ்ட் அலர்ஜியாம்" இடைபுகுந்தான் அதியன்.
"டஸ்ட் அலர்ஜியா?"
"அப்படிதான் சொன்னாங்க… நீங்க அவங்கள கம்பல் பண்ணாதிங்க" திரும்பி ஜன்னல் அருகே சென்று விட்டான் அதியன். விஷ்ணு ஆராதனாவிடம் காட்டும் அக்கறையை கண்டு எரிச்சலாக இருந்தது அவனுக்கு .
குழப்பமாக திரும்பி அவளை பார்த்தான் விஷ்ணு."மைலிக்கு அதெல்லாம் இல்லையே. எதுக்கு பொய் சொல்றா.. மாஸ்க் வேற போட்டுருக்கா" மனதில் புலம்பியவன் அவளை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
"என்ன இதெல்லாம்" அவன் கண்களால் கேட்க ஒன்றும் இல்லை என்பதாக தலையை அசைத்தாள்.
டைப் செய்ததை பிரிண்டர்க்கு அனுப்பிவிட்டு அதை எடுக்க எழுந்து சென்றாள். பிரண்டர் அதியன் நின்றிருந்த ஐன்னல் பக்கத்தில் தான் இருந்தது. அவள் பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு இருக்க திறந்திருந்த ஜன்னல் வழி காற்று வேகமாக வீச அதில் அவள் முடி பறந்து விலக கழுத்தில் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டி இருந்தது தெரிந்தது. விஷ்ணு இருப்பதனால் பார்வையை திருப்பிக்கொண்டான். அப்போதும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
சிறிது நேரத்தில் மீண்டும் வேலை தொடங்கி விட மூவரும் அதில் ஆழ்ந்தனர். அதியனின் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தீண்டி விலகியது.
அவள் கையை எடுத்து கழுத்தை தடவிக் கொண்டது. விரலை மடக்கி நெட்டி முறித்துக்கொண்டது. பேப்பர்ஸ்காக அவள் கையை நீட்டிய போது அவள் உள்ளங்கையை பார்த்தான் டைப் அடித்ததால் சிவந்து பேய் இருந்தது.
"ரொம்ப சாப்ட் போலையே… பூ மாதிரி இவள ஹாண்டில் பண்ணும்" மனதில் நினைத்துக் கொண்டவன் வேலையை பார்க்லானான்.
விஷ்ணு சொல்ல சொல்ல டாக்குமென்ட்டை அடித்துக் கொண்டு இருந்தாள் ஆராதனா. அதியன் அவள் டைப் செய்யும் ஸ்பீடை பார்த்துக் கொண்டு இருந்தான். ஸ்லீவ் லேசாக விலக அப்போதுதான் கவனித்தான் மணிக்கட்டில் நகங்கள் அழுத்தி புண்ணாகி இருப்பதை.
"என்ன இது காயம்?" அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க அவன் பார்வையை கண்டு ஸ்லீவை இழுத்துவிட்டாள் அவள்.
"ஏதோ இருக்கு" அவன் ஆராய்ச்சி பார்வை பார்க்க அவள் பதற்றத்தில் நோட் பேடை தட்டி விட்டதும் பேனா கிழே விழுந்து உருண்டது.
அதை எடுத்தவள் அவசர கதியில் நிமிர மேஜை மூக்கில் இடித்து வின் என்று ஒரு வலி கிளம்பியது. அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் அதியன்.
"ஹேய் ஆராதனா மாஸ்க்" அதியனின் குரலில் நிமிர்த்து பார்த்த விஷ்ணு
"அய்யோ மைலி என்ன பிளட்?" என பதறி அவள் பக்கத்தில் ஓடினான்.
"ஒன்னும் இல்ல"
"முத மாஸ்க எடு" அதட்டினான் அதியன். இரத்தம் தாடை வரை விழிந்தது.
"பரவால்ல சார்" என்றவள் எழுந்து வெளியில் ஓட அவள் பின்னாலே ஓடிய விஷ்ணு அவளை இழுத்துக் கொண்டு அவன் கேபினுக்குள் சென்றான். வலுக்கட்டாயமாக அவள் மாஸ்கை கழட்டிய விஷ்ணு அதிர்ந்து விட்டான்.
இரண்டு கன்னங்களும் கீழ் உதடும் வீங்கி இருக்க கைதடங்கள் பதிந்து கண்ணி இருந்தது முகம். இதழ் ஒரத்திலும் நாசி துவாரத்திலும் ரத்தம் உறைந்து இருக்க. புதிதாக வந்த ரத்தம் கன்னம் தாடை உதடு என்று பரவி இருந்தது.
"மைலி என்னமா இது?"
"பச் ஒன்னும் இல்ல"
"யாரு உன்ன அடிச்சது?"
"ப்ளீஸ் என்னால பேச முடியல விட்டுங்க"
"சொல்ல போறியா இல்லையா?" அவன் அதட்ட அமைதியாகவே இருந்தாள்.
"உன் அப்பாவா?" மறுத்து தலையாட்டினாள் அவள்.
"சந்தோஷா?" அவள் அமைதியாக இருக்க அவனுக்கு புரிந்தது.
"எதுக்கு உன்ன காட்டுமிராண்டி மாதிரி அடிச்சான்? மென்டாலா அவன்? அவனை எல்லாம் மென்டல் ஹாஸ்பிட்டல தான் சேக்கணும். சைக்கோ" கோபத்தில் கத்த
"விஷ்ணு" அதட்டினாள்.
"ஆமா உன் அண்ணன சொன்னா உடனே உனக்கு கோபம் வருமே. நீதான் அவன அண்ணனு நினைக்கிற அவன் எப்படி உன்ன அடிச்சி வச்சிருக்கான் பார்" சோர்வாக நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.
"அவன நான் சும்மா விட போறது இல்லை. எதுக்கு அடிச்சான் அவன் உன்ன?"
"விஷ்ணு ப்ளீஸ் சந்தோஷ் கிட்ட நீங்க பேச கூடாது என் மேல பிராமிஸ்"
"ச்ச ஏன் அடிச்சானு முத சொல்லு?"
"விஷ்ணு லீவ்மி" கண்ணை மூடிக் கொண்டாள் அவள்.
"என் கூட நைட் வந்ததுக்கா?" கதவருகில் இருந்து சந்தம் வர இருவரும் திரும்பி பார்த்தனர் அதியன் தான் நின்றிருந்தான்.
அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஆராய்ந்தான். பின் பார்வை கழுத்தில் பதிந்து கைக்கு தாவியது. அவனை கண்டதும் எழுந்து நின்றாள் ஆராதனா.
அவன் அவள் கையை பிடித்து மேலே தூக்க "சார்" முன்னே வந்த விஷ்ணுவை ஒரு பார்வை மட்டுமே.
ஆராதனா அவள் கையை இழுத்துக் கொள்ளமுயல அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. அவன் ஸ்லீவை மேலே ஏற்றிவிட அங்கேயும் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டபட்டு மணிக்கட்டு கண்றி சிவந்து அழுந்த படிந்த நக காயங்களும் இருந்தது.
"அதுக்கு தானே?"
"இப்ப நீ வாய திறக்கல போலீஸ்க்கு கால் பண்ணுவேன்"
"வேண்டாம்" என்றவள் தலையைமட்டும் ஆமாம் என்பதாக ஆட்டினாள்.
கோகாதடி என் பெண்ணே! ❤❤
Comment here 👇👇👇👇👇👇👇
போகாதடி என் பெண்ணே! - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
Last edited: