Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை
பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை
பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்
என் வானமே நீயாட நீயே நீயே தானடா
சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்
என் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா

"ஆஷா ஜீ ரொம்ப லேட் ஆச்சி கிளம்புங்க நாங்க கொடுத்துட்டு வாரோம்" என அவர்கள் சிறகுகள் குழுவில் உள்ள ஒருவருன் வந்து சொல்லவும் அவர்களிடம் விடை பெற்றாள் அவள். மழை காலம் ஆரம்பிக்க இருப்பதனால் பிளாட்பாரத்தில் உறங்குபவர்களுக்கு கம்பளி கொடுத்துக் கொண்டு இருந்தனர்.

சிறகுகள் குழு தங்களால் முடித்த சேவைகளை செய்து க்கொண்டு இருப்பவர்கள். நாளுக்கு நாள் அதில் இனைப்பவர்களின் என்னிக்கை பெருகிக் கொண்டே தான் உள்ளது. முக்கியமாக அனேகமானோர் அதில் இளைஞர் இளைஞிகள் தான். அரசாங்கத்தின் கஜானவில் பாதி அரசியல் வாதிகள் வீட்டை அலங்கரிக்க இவர்களை போன்றவர்கள் தான் சுயநலம் இன்றி நாட்டுக்கு சேவை செய்கின்றனர். வெள்ளை தாள்களாக இவர்கள் இருக்க ஒரு சில கரும் புள்ளிகலால் ஒட்டு மொத்தமாக இன்றைய இளைஞர்களை தவறாக அடையாளம் காட்டபடும் நியாயம் தான் என்ன? இவர்கள் சேவையையும் தன் சுயநலத்துக்காக பயன்படுத்தும் அரசியல் வாதிகளும் இங்கேதான் உள்ளனர். அவர்களை கொண்டாடுவதை விடுத்து இவர்களை ஊக்குவித்தாள் நாளைய சமூதாயத்தில் மனிதம் நிலைத்து நிற்க்கும்.

தூர தெரியும் நிலவை வெறித்த வாறு கடற்கரை மணலில் நடந்தாள் ஆஷா. பொங்கும் கடல் அலையை பார்த்து கண்கள் தானாக கலங்க அமைதியாக அமர்ந்தாள். அருகே சரத்தும் வந்து அமர்ந்தான். திரும்பி பார்காமலே "இன்ஸ்பெக்டர் சார்" என்றவளை ஆச்சரியமாக பார்தான் அவன்.

"எப்படிங்க ஆஷா?"

"நீங்க கொஞ்ச நாளாவே என்ன பாலோவ் பன்றது தெரியும் பட் இன்னைக்கு வந்துருக்க வேண்டாம் சார்" இப்போழுதும் அவனை பார்கமல் தான் பேசினால்.

சரத் இந்த ஒரு மாதமாக அவளை பின் தொடர்வதை ஒரு வேலையாகவே தான் வைத்திருந்தான்.

"அப்போ தெரிஞ்சிடுச்சா?" என அவன் சிரிக்க தலையை மட்டும் ஆட்டினாள் அவள். அவனுக்கு இன்று அவள் வித்தியாசமாக தெரிந்தாள் அவள் குரலில் சோகம் அப்பி கிடப்பாதாக தோன்றியது.

"என்னாச்சு ஆஷா எதாச்சும் பிரச்சினையா?" அவள் அமைதியாகவே இருக்க "என்னனு சொல்லுமா நான் சரிபண்றேன். இப்படி இருக்காத உனக்கு செட் ஆகல" என்றான் அக்கறையாக.

"உங்களால சரிபண்ண முடியாத பிரச்சனை இன்ஸ்பெக்டர்" செல்லும் போதே அவள் குரள் உடைந்தது. அவளை வேகமாக தன்னை பார்த்து சரத் திருப்ப கண்ணீர் வடிய அவனை பார்த்தாள் ஆஷா.

"ஏய்ய் என்னாச்சு எதுக்கு இப்போ அழற?" சரத் பதற அவன் கையைதட்டி விட்டவள் திரும்பிக் கொண்டாள்.

"என்ன விட்டு தூரமா போயிட்டாரு சார் அவரு. இப்படி என்ன அழ விட்டுட்டு அவரு மட்டும் பேயிட்டாரு" அழுகையில் அவள் விசும்ப அறுதலாக அவள் கையை தட்டி கொடுத்தான் சரத்.

"உங்களுக்கு தெரியுமா இன்ஸ்பெக்டர் அவரு யாருனு?. ரொம்ப நல்லவர். அவர பார்கிறதுக்கு முன்ன அவர் மாதிரி நான் யாரையும் பார்ததே இல்ல. ஒரு நரகத்திலேந்து என்ன காப்பாத்தி இன்னோரு நரகத்தில தள்ளிட்டு அவர் மட்டும் அங்க போயிட்டாரு" அழுத்துக் கொண்டே கைகள் நடுங்க நிலவை காட்டினாள் ஆஷா.

"தெரியும்… ஆஷாஜேம்ஸ். அதனா உன் பேரு இதுக்கு முன்னாடி வேதவள்ளி" சலனம் இன்றி சொன்னான் அவன்.

"ஓ விசாரிச்சிட்டு தான் வந்திங்களா?"

"இல்ல எனக்கு பிடிச்ச பொண்ண பத்தி தெரிஞ்சிக்கிட்டேன் அவ்வளவு தான்"

"எல்லாமே தெரிஞ்சி கிட்டிங்களா?" அவள் கோபம் கலந்த கேலியில் பல்லை கடித்தவன் அவளை முறைத்தான்.

"இல்ல எனக்கு எது தேவையோ அதமட்டும் தான் தெரிஞ்சிக்கிட்டேன். மிச்சத்தை உன்கிட்ட தான் கேட்க்க நினைச்சேன். ஆனா எனக்கு ஒரு உன்மை தெரியும் அது உனக்கு என்ன பிடிச்சிருக்கு இதையும் சேர்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்" ஒரு நிமிடம் அவனை பாத்துவிட்டு பின் பவுர்ணமி நிலவை பார்தவள் தன் கடந்த காலத்தை அவனுக்கு சொல்லலானால் .

"என்னோட ஊரு கடலூர் பக்கதுல ஒரு கிராமம். அடிக்கடி புயல் அடிக்கிற டெல்டா மாவட்டம். ஒரு புயல்ல சுவர் இடிஞ்சு என் அப்பா தப்பி இரண்டு பேரும் என்னமட்டும் அனாதையாக விட்டு பேயிட்டாங்க. அப்போதான் எங்க ஊருக்குப் நிவாரணம் பொருள் கொடுக்க சிறகுகள் குழ வந்தாங்க அதில் ஒருத்தர் தான் ஜேம்ஸ். ஜேம்ஸ் அவரு ஒரு ஜுனியர் லாயர். எப்போதும் துருதுருனு ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பார். என்ன சொந்தகாரங்களாம் பாரமா நினைச்சி ரெண்டாம் தாரமா ஒரு வயசானவருக்கு கல்யாணம் பண்ணிக் வைக்க பார்த்ப்போ என்ன காபாத்த கடவுள் வர மாட்டாரானு நான் கண்மூடி அழுதேன். அந்த நேரத்துல ஒரு குரல் கேட்டுச்சு அது ஜேம்ஸ். அவங்கிட்ட சண்டை போட்டு என்ன காப்பாத்த ட்ரை பண்ணாரு. அன்னைக்கு தான் அவர நான் பஸ்ட் பார்த்தேன். ஆனா அவர எல்லாரும் அடிச்சி பேட்டாங்க. அங்க அத்தனை பேரும் வேடிக்கை பார்கும் போது எனக்காக குரல் கொடுத்த ஒரே ஜீவன் அவரு" இடையில் நிறுத்தியவள் மவுனமாக கண்ணீர் வடித்தாள்.

"கன்ட்ரோல் யுவர் செல்ப் ஆஷா" சரத் ஆறுதல் அளிக்க தன்னை சமாளித்துக் கொண்டாள் அவள்.

"அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காம அவர அடிச்சி போட்டு எனக்கு தாலி கட்ட பார்தாங்க. ஆனா யாரும் எதிர்பாராத நேரம் எல்லாரையும் தள்ளிவிட்டு அந்த தாலிய எடுத்து என் கழுத்துல கட்டிட்டாரு. அவர் அப்போவும் என்கிட்ட சாரி கேட்டுட்டே தான் கட்னாரு. அதுக்கு அப்பறம் நிறைய பிரச்சைனை ஆச்சி போலிஸ்ல அவர் மேல கம்ப்ளைன்ட் தந்தாங்க என்ன அவருக்கு எதிரா பேச சொன்னாங்க. அவர் அப்பையும் என்கிட்ட எதுவுமே கேட்கல. ஆனா என்ன காப்பாத்த வந்த கடவுளுக்கு நான் எப்படி தண்டனை வாங்கி தருவேன். நான் எங்க ஊர்காரவங்க தான் கட்டாய படுத்தினாங்கனு சொல்லிட்டேன்"

"அப்பறம் என்னாச்சு?"

"படத்துல வரதெல்லம் என் வாழ்கையில் நிஜத்துலே நடந்தது என்னால நம்பகூட முடியல ம்ம் அப்பறம் அழகான வசதியான பையனு நான் அவருக்கு சாதகமா பேசினதா சொல்லி ஊருகுள்ள பஞ்சாயத்து வச்சி தள்ளி வச்சிட்டாங்க. என் சொந்த காரங்களும் அடிச்சி விரட்டுனாங்க. அதுக்கு மேல அவரால பார்துட்டு பொருமையா இருக்க முடியல என்ன அழைச்சிட்டு சொன்னை வந்துட்டாரு. இந்த கல்யாணம் உன்ன காபாத்த நடந்தது உனக்கு விருப்பம் இல்லன தாலிய கலட்டிடு நான் உன்ன கட்டாய படுத்த மாட்டேனு சொன்னார். ஆனா எனக்கு அவர விட்டு போக தையிரியம் இல்ல. கடவுள் தந்த வரமா அந்த வாழ்கைய நினைச்சேன் ஆனா அது ஆரம்பத்தில முடிச்சிருச்சு. நான் உங்க கூடவே இருக்கட்டுமானு ஆழுதேன். கிராமத்துல வளர்ந்த எனக்கு தாலி பெரிய விசியமா தெரிஞ்சது அப்போ. நான் பயந்து அழுததை பார்தது அவருக்கும் என்ன விட்டு போக தோனலுனு சொல்லி சிரிச்சாரு. அவர் சிரிக்கும் போது ஏன்ஜல் மாதிரி தெரிவாரு சரத். எனக்காக வானத்துலேந்து வந்திங்களானு அடிகடி அவர்கிட்டயே கேட்ருக்கேன்" கண்கள் அருவியாய் பொழிய இவளா மான் குட்டியாய் துள்ளி திரிந்தாள் என்று பார்த்தான் சரத்.


"ஆனா அவங்க வீட்டுலையும் எங்கள ஏத்துக்கல. தனியா வீடு எடுத்து வாழ்ந்தோம். அதுக்கு அப்பறம் எனக்கு அவர விட்டா யாருமே இல்ல என்னோட ஒரே சொந்தம் என் ஹஸ்பண்ட் மட்டுதானு இருந்தேன். என்ன படிக்க வைக்க எல்லா ஏற்பாட்டையும் செஞ்சாரு. எங்களுக்குள் லவ் இருந்துச்சானா எனக்கு சொல்ல தெரியல ஆனா என்ன ரொம்ப நல்லா பார்துக்கிட்டாங்க. வாரம் வாரம் கோவிழுக்கு அழைச்சிட்டு போவார். அப்போதான் ஒரு நாள் எனக்கு உடம்பு சரியில்லாமா மயங்கி விழுந்தேன் அவர் ரொம்ப பயந்துட்டார் ஆனா டாக்டர்கிட்ட போனப்பதான் தெரிஞ்சது நான் பிரக்ணன்ட்டா இருந்தது. எனக்கு அவ்வளவு சந்தோஷம் இன்னோரு புது சொந்தம் வர போதுனு எல்லா கடவுள்கிட்டையும் நன்றி சொன்னோன். ஜேம்ஸ் தான் எனக்கு சின்ன வயசுனு பீல் பண்னாரு. டாக்டர் கிட்ட என்ன என்ன பண்ணனும்னு துருதுருவி கேட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க" அன்றைய நினைவில் துயர புன்னகை சிந்தினாள் அவள்.

"அவங்க வீட்டுக்கும் விசியம் தெரிஞ்சு எங்கள அக்ட்சப் பண்ணிகிட்டாங்க. பட் நானும் கிரிஸ்டினா கன்வர்ட் ஆகனும்னு சொல்லிட்டாங்க. ஜேம்ஸ்கு இதுல விருப்பமே இல்ல ஆனா என் ஹஸ்பண்ட்காக நான் அவருக்கு தெரியாம என் மாமியார்கூட போய் பேர மாத்திக்கிட்டேன். முழு மனசா வேதவள்ளி ஆஷாவா மாறுனேன். ஆஷா ஜேம்ஸ் அவர் இத கேட்டு என்கிட்ட ரெண்டு நாள் பேசவேயில்ல. கொஞ்ச நாள்ல சமாதனமானாலும் ஆஷானு கூப்பிட மாட்டேனு சொல்லிட்டாரு. என்னோட வாழ்கை குடும்பம் கணவன் மாமனார் மாமியார் குழந்தைனு ரொம்ம அழகா மாறிருந்துச்சு. ஆராம்பத்துல என்னை பிடிக்கலனாலும் எனக்கு என் மாமியார் அம்மா மாதிரி எல்லாம் செஞ்சாங்க. வாழ்கை இப்படியே பேயிருக்கலாம் சரத் சார். ஆனா அந்த கொடூர நாள் எல்லாத்தையும் மாத்திடுச்சி"

"ஆஷா" அவள் குரலில் அவன் கண்களே ஈரமாகின.

"நைட் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ணிட்டு பத்து மணி இருக்கும் எனக்கு கால் பண்ணி முத முத ஆஷானு கூப்பிட்டாங்க சார் என் ஜேம்ஸ். வாட்ஸ் அப்பல ஒரு குட்டி ஸ்வெட்டர் காமிச்சி வாங்கட்டானு கேட்டாங்க. எங்க குழைத்துக்கு குட்டி பால் டப்பாலாம் வாங்கிட்டு வரேனு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போ நாங்க ரொம்ப சிரிச்சோம் எதுக்கு அதுக்குள்ளேனு கேட்டு எங்க மாமியர்லாம் எங்கள வம்பிழுத்தாங்க. எங்க சந்தோசம் ஒரு ரெண்டு மணி நேரம்கூட நிலைக்கல சார். அவர காணும்னு நான் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன் உள்ள என் அத்த ஜேம்ஸ்னு கத்தி அழற சத்தம் கேட்டு உள்ள ஒடி போய் பார்த்ப்போ போன்ன அழுதுகிட்டே என்கிட்ட நீட்னாங்க அதுல.. அதுல..." அவள் பக்கத்தில் விசும்பி அழுக சொய்வதறியாமல் திகைத்தான் அவன்.

"ஜேம்.. ம்ம் ஜே…ம்..ஸ் வரும் போது ரொ..ட்டுல வச்சிருந்த கட்டவுட் போஸ்டர் மேல விழுந்து அக்சிடண்ட் ஆகி.. ம்ம் ஆகி ஸ்பாட்லே இறந்துட்டாரு "

"மைகாட் சாரி ஆஷா அந்த ஜேம்ஜ் தான் இவரா" அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.

சிறிது நேரம் அழுதவள் கண்ணை துடைத்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"ம்ம் ஆமா கடைசியா மூட்டையா கட்டி கொண்டு வந்து கொடுத்தாங்க மூஞ்சு கூட தெரியல. சிதைஞ்சு போச்சினு சொன்னாங்க பத்து நிமசம் தான் வீட்டுல வச்சாங்க அதுக்கு அப்பறம் எடுத்துட்டு பேயிட்டாங்க கடைசியா அவர் சட்டையிலையும் நாங்க வாழ்ந்த அந்த வீட்டிலையும் மட்டும்தான் அவர் வாசம் மிச்சம் இருந்துச்சு. நாள் ஆக அதுவும் மறைச்சிட்டு வீடே இருண்டு பேச்சு. எங்க போனாலும் ஜேம்ஸ் பேசுற மாதிரியே இருக்கும்"

"இப்போ உன்னோட குழந்தை எங்க ஆஷா?"

குணித்து தன் வயிற்றை பார்தவள் விரக்தியாக சிரித்தாள் "அதுக்கும் என்ன பார்க்க பிடிக்கல போல சார்"

"வாட்?"

"எனக்கு ரொம்ப சின்ன வயசுக்கிறதுநால ரொம்ப பழகினமா இருந்தேன் ஜேம்ஜ் இல்லதா கவலை எல்லாம் சேர்ந்து என் கர்பபை ரொம்ப வீக் ஆகிட்டு. ஆறு மாசத்துக்கு மேல தாங்காது இரண்டு பேரையும் காப்பாத்துறது கஷ்டம்னு சொல்லிட்டாங்கலாம். என்கிட்ட சொன்னா நான் ஓத்துக்க மாட்டேனு எனக்கே தெரியாம அபபார்ட் பண்ணிட்டாங்க"

"உனக்கு கடவுள் நிறைய துரோகம் பண்ணிட்டாருமா" என கண்கள் கலங்க மனதில் நினைத்தான் சரத்.

"ம்ம் ஜேம்ஸ் அப்பாதான் இத பண்ண சொன்னாங்களாம். அவரும் ஒரு லாயர் தான் இப்போ அவங்க தான் என்ன படிக்க வைக்கிறாங்க. எனக்கு அப்பாம்மாவா இருக்காங்க"

"ஆனா ஜேம்ஸ்க்கு ஏன் இந்த மாதிரி ஒரு முடிவு வரனும் சார். நாங்க என்ன பாவம் பண்ணோம். என் ஹஸ்பண்ட் இல்லனு தெரிஞ்சி எத்தன பேரு என்கிட்ட தப்பா நடந்துக்க பார்தாங்க தெரியுமா?. அம்பது வயசு இருக்கவன் கூட என்கிட்ட மோசமா பேசிருக்கானுங்க. எத்தனையோ சொல்ல முடியாத வேதனை. கீப்பா வச்சிக்கிரேனு கூட என்கிட்ட நேராவே கேட்டாங்க. அவன என் மாமா அடிக்க போணதுக்கு அவரையும் என்னையும் சேர்தது தப்பு தப்பா சேர்த்து பேசினானுங்க. எனக்கு அப்படியே கூசி போச்சி சார். என் ஜேம்ஸ் இருந்தா அதெல்லாம் நான் அனுபவிச்சிருப்பேனா. யாரோ அவங்க சுயலாபத்துக்காக செஞ்சது இன்னைக்கு என் குடும்பத்தையே களச்சிடுச்சி. திரும்பவும் நான் அனாதையா ஆகிட்டேன் சார்" அதற்கு மேல் அவன் கண்ணீர் தேங்க முடியாமல் கீழே விழுந்து சிதறியது.

கனமான மவுனம் சுழ்ந்திருக்க ஒரு பெருமூச்சு விட்டாவள் தொடர்ந்தாள்.

"எல்லாமே ஒரு கணவு மாதிரி முடிஞ்சு போச்சு சார். நான் வாழ்ந்த ஆறு மாசம் அறு நிமிசம் மாதிரி கடந்து போச்சி. கொஞ்ச நாள் எதுவுமே பிடிக்கல ஏன் வாழ்றோம்னு இருந்தது அப்போலாம் மாமா தான் சொல்லுவாங்க ஜேம்ஸ் நீ நல்லா இருக்கனும்னு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீ சிரிச்சிட்டே இருக்கும்போது ஏதையோ சாதிச்சமாதிரி இருக்குனு என்கிட்ட சொல்லுவான் நீ நல்லா இருந்த தான் அவன் நிம்மதியா இருப்பானு சொல்லுவாங்க. அதுக்கு அப்பறம் காலேஜ் லைப் எனக்கு ஒரு பெரிய சேன்ஜ் ஓவர் மெத்தமா அந்த பட்டி காட்டு வேதவள்ளிய தூக்கி போட்டுட்டு சிட்டி பொண்ணா மாறுனேன். நானும் சிறகுகள்ல சேர்ந்து சேவை பண்ணேன். ரொம்ப ஜாலியா இருக்க மாதிரி நடிச்சேன் ஆனா கொஞ்ச கொஞ்சமா அதுவே என் சின்ன வயசுல நான் எப்படி இருந்தனோ அதே மாதிரி மாத்திட்டு. ஜேம்ஸச பத்தின நினைவுகளை வழுகட்டாயமா ஒதுக்கி வச்சேன்"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல ஆஷா" ஒருவரது சிறிப்பிற்கு பின்கூட ரணம் இருக்குமா என்று இருந்தது அவனுக்கு. தன் மனதில் உள்ளதை எல்லாம் மடைதிறந்து கொட்டினாள் ஆஷா.

"ஆனா இன்னைக்கு என்னால முடியல சரத் இந்த நாள் என் வாழ்கையே மாத்தி போட்ட நாள். என் தேவதைய அந்த கடவுள் திரும்ப பறிச்சிகிட்ட நாள். ஜேம்ஸ் இறந்து இன்னையோட நாலு வருசம் ஆகுது"

"சா.. சாரி அஷா" அவனுக்கு கவலையாக இருத்து இந்த இருபத்தி இரண்டு வயதில் இந்தனை பெரிய வலிகள் அவளுக்கு கடவுள் தந்திருக்க கூடாது என்று நினைத்தான்.


"அவரு இல்லனாலும் அந்த தாலியை நான் போட்டு தான் இருந்தேன் ஆனா…" தயங்கியவள் அவனை ஒரு முறை பார்துவிட்டு தொடர்தாள் "ஒரு வருசத்துக்கு முன்ன உங்கள பார்ததுக்கு அப்பறம் அத போட்டுக்குற உரிமை எனக்கு இல்லனு தோனுச்சி. இது சரியா தவறா தப்பானு ஒரே குழப்பம். நான் ஜேம்ஸ்க்கு துரோகம் பன்றேனானு சிலசமயம் குற்ற உணர்ச்சியா இருக்கு"

"கண்டிப்பா தப்பில்லை ஆஷா. உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. ஜேம்ஸ் இறந்து நாலு வருசம் ஆகிட்டு எவ்வளவு நாள் நீ அதுலே இருப்ப இது துரேகம்னு நினைக்காத"

"ம்ம் உன்மைதான் என் ஹஸ்பண்ட் ஜேம்ஸ் இறந்து மூனு வருசத்திலே கொஞ்ச கொஞ்சமா நான் அதிலேந்து வெளில வந்துட்டேன். அதுக்கு நீங்களும் ஒரு காரணம் உங்கள அடிக்கடி நான் பார்த்திருக்கேன் எனக்கே தெரியாம தான் உங்கள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்"

"இருந்தாலும் இப்போ என்னவோ எல்லாமே தப்பா தோனுது. என்னால எப்பொழுதும் ஜேம்ஸ்ச மறக்க முடியாது நான் என்னையே ஏமாத்திட்டு இருக்கேன்"

"ஆஷா என்ன பாரேன்" என அவளை தன்பக்கம் திரும்பியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான் "உனக்கு ஜேம்ஸ் மேல இருந்தது ஒரு வொர்க்ஷிப் அப்போ அது லவ்வா இருந்திருந்தாலும் காலம் முழுக்க நீ தனியாவே இருக்கனும்னு எந்த கட்டாயமும் இல்ல ஆஷா. நீ ஜேம்ஸ்ச மறக்கனும்னு அவசியம் இல்ல காலம தான் சிறந்த மருந்துனு சொல்லுவாங்க. நிச்சயமா உன்னோட மிச்ச காயத்தையும் அது ஆற்றும். இப்போ எழுந்திரி வீட்டுக்கு போகலாம் டைம் ஆச்சி" என எழுந்து நின்று அவளுக்கு கை கொடுத்தான்.

"தேங்ஸ் இன்ஸ்பெக்டர்… கொஞ்ச நேரம் கம்பர்ட் பண்ணதுக்கு" என எழுந்தவள் வண்டியை நோக்கி நடந்தாள். அவள்கூடவே ஓடினான் சரத்.

அவள் ஸ்கூட்டியை ஆன் பண்ணவும் அவளை கூப்பிட்டவன் "ஆஷா இனிமே இன்ஸ்பெக்டர்னு சொல்லதா சரத்னு மட்டும் சொல்லு" என்றான் அவனை ஒரு முறை பார்தவள் எதவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

"இந்த பொண்ணுங்களையே புரிஞ்சிக்க முடியலையே" என்று புலம்பியவன் தன் தாய்க்கு தான் அழைத்தான்.

"ஹலோ அம்மா"

"............."

"இதோ இப்போ போயிடுவேன். அப்பறம்…. அம்மா ஒரு முக்கியமான விசியம் நீ இந்த வாரம் கிளம்பி சொன்னைக்கு வா"

"............."

"ஆமா ம்மா… உன் மருமகள கண்டிபிச்சிட்டேன். சீக்கிரமா வந்து எனக்கு நீயே கட்டி வச்சிரு"

"............."

"அமைதியா…? ஹாஹா லாயர்மா அவ நீ எதாச்சும் கொடும்ப படுத்துன என்கிட்டே கம்பிளைன்ட் கொடுத்து உன்ன உள்ள தூக்கி போட்டுருவா"

"............"

"எம்மாவ் சும்மா சொன்னேன் மா. நீ வா இங்க வந்து பாத்துக்கோ இப்போ நான் வைக்கிறேன்"

போனை வைத்தவன் கண்ணில் மின்னியதெல்லாம் ஆஷா தான்.

வருவாள்…

போகாதடி என் பெண்ணே! - Comments
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 18
Hyt1fjSHmTPSqYYMuqruNDR8rec4ImtE9_6ZC-aIZff-vzUOpXC9iwRNHjQtTL1ashsrbAimGWAeKg3DTCF0HA1XsWERAsZAefh0FICMbCsun3IQBdDP7EQivaLRU5imiOiCMSFZ=s0


தரையில் இறங்கி உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டே இருவரும் முத்துவேல் மடியில் தூங்கிவிட்டனர். அவர்களுக்கு தலையணை பெட்ஷீட் எல்லாம் எடுத்து வந்தார் சாந்தினி. மெல்ல அவர்கள் தலையை மடியில் இருந்து பிரித்து தலையணையில் வைத்துவிட்டு எழுந்தார் முத்துவேல். கால் மரத்து போயிருக்க தடுமாறியவரை சாந்தினி பிடித்துக் கொண்டு "பார்த்து எழுந்திரிங்க விழுந்திட போறீங்க"என பதறினார்.

"விழுந்தா பிடிக்க தான் நீ இருக்கியே மா" காதல் பார்வை பார்த்தார் முத்துவேல்.

"அய்யே மினிஸ்டர் சார் பாக்குறத பாரு" அழகாக வெட்கம் கொண்டார் அவர்.

"ஹாஹான் எனக்கு மினிஸ்டர் நீ தான் செல்லம்" சந்தினி அருகில் சென்று ஒற்றை கண்ணடித்து சிரிக்க அவர் காலரை கொத்தாக பற்றி "அப்போ நான் சொல்றதெல்லாம் கேப்பீங்களா?" எனவும் அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவர் காதருகில் நெருங்கி "மகாராணி ஆணை" என்றார்.

முத்துவேலின் செய்கையில் திகைத்தவர் பின் அவரை தள்ளிவிட்டுவிட்டு பிள்ளைகளை பார்த்து நிம்மதி மூச்சுவிட்டார்.

"அப்புவும் அம்முவும் எழுந்திருவாங்க" என மீண்டும் அவரை நெருங்கிய முத்துவேலை வீரலை நீட்டி மிரட்டியவர் தக்ஷினா அருகில் படுத்துக் கொள்ள "போடி..." என்று சிறு பிள்ளையாக சினுங்கியவர் விமலன் அருகில் படுக்க "டாடி" என அவர் கழுத்தை கட்டிக்கொண்டு காலை அவர் மேல் போட்டு அவரை இருக்கி அனைத்துக் கொண்டு தூங்கினான் விமலன். பாவமாக எட்டி சாந்தினியை பார்க்க பளிப்பு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டார் அவர். "மம்மி" என பின்னால் இருந்து அவரை அனைத்துக் கொண்டாள் தக்ஷினா.

"நான் பெத்ததுங்களே எனக்கு சதி பண்ணுதுங்க…" என முத்துவேல் வாய்விட்டு புலம்ப மற்ற மூவர் முகத்திலும் இதழ் ஓரம் ஒரு குறும்பு புன்னகை.

அணைத்து வைத்திருந்த போனை உயிர்பித்தாள் ஆராதனா. இத்தோடு இருபது முறை அழைத்திருந்தான் அதியன் "அச்சச்சோ" என உதட்டை கடித்தவள் எட்டி துர்காவை பார்த்தாள் பின் ஹாலில் படுத்திருந்த தந்தையை பார்த்தாள். இருவரும் நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தனர். மெல்ல பூனை நடைபோட்டு பின்பக்க பாத்துரும் வந்தவள் குழாயைத் திறந்து விட்டாள். பின் அதியனுக்கு அழைக்க இரண்டு ரிங்கிலே எடுத்துவிட்டான். தூங்காமல் அவளுக்காகவே காத்திருந்திருப்பானோ என்று குற்ற உணர்ச்சியாக இருக்க "ஹலோ" என்றாள். மறுமுனையில் அமைதியாகவே இருக்கவும் மீண்டும் ஹஸ்கி வாய்சில் பல ஹலோ போட அந்த பக்கம் சிரிக்கும் சத்தம் கேட்டது.

"ஏன் சிரிக்கிறீங்க சார்? "

"அதுவா உன் புத்திசாலித்தனத்தை நினைச்சி சிரிச்சேன்"

"ஏன் அதுக்கு என்ன குறைச்சல்?"

"ஹான்ன் நீ பேசுறதை விட தண்ணி சவுண்ட் தான் கேட்குது எனக்கு…. அதான் நீ எவ்வளவு பெரிய அறிவாளினு நினைச்சு பார்த்தேன்"

"என்ன சார் கிண்டலா? நான் எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட் தெரியும்ல?" சட்டென்று ஆராதனா கோபமாக பேசவும்

"பேபி கூல்… உன் அத்தான் விளையாட்டுக்கு தான சொன்னான். கோபபடாத பப்பி" என குழைந்தான் அவன்.

"என் அத்தானா ? யாரு அது?"

"இதுல உனக்கு என்னடி சந்தேகம்? நான் தான் உனக்கு அத்தான்" உல்லாசமாக சிரித்தான் அதியன்.

"அய்யே மெதுவா சிரிங்க சார்"

"ஆரு என்ன சார் சொல்லாத. யாரோ மாதிரி பீல் ஆகுது"

"அப்போ அதினு கூப்பிடட்டா நல்லாருக்கா? இல்ல ஆதினு கூப்பிடட்டா?"

"ச்ச போடி... எங்க வீட்டில புருசன பேரு சொல்லி கூப்பிட மாட்டாங்க…. நீயும் அத்தான்னு சொல்லு" அவன் சொல்லிக்கொண்டு இருக்க சில்லென்று நெஞ்சில் இறங்கியது அவளுக்கு.

"ஆனா இது ஓல்ட் மாடல்ல இருக்கே… அத்தான் பொத்தான்" சொல்லி சிரித்தாள் அவள்.

"பப்பிமா எங்க பாட்டி தாத்தாவா அத்தான்னு தான் சொல்லுவாங்க. பட் மம்மி மட்டும் டாடிய மாமா சொல்லுவாங்க. எனக்கு எங்க பாட்டி மாதிரி என்னோட வொயிப் என்ன அத்தான்னு கூப்பிடனும்னு ஆசை… ஸ்சோ நீயும் அப்படியே கூப்பிடேன்"

"முடியாது போங்க" சினுங்களாக அவள் மறுக்க வரிசையாக ப்ளீஸ் போட்டான் அவன்.

"பப்பி ப்ளீஸ்டி என்ன பாத்தா உனக்கு பாவம்மா இல்லையா?" அவன் சோகமாக கேட்க அதுக்கு மேல் மறுக்க முடியாமல் தவித்தாள்.

"சரி சரி போதும் விடுங்க நான் நீங்க சொன்ன மாதிரியே கூப்பிடுறேன்"

"அப்போ கூபபிடு"

"இப்போவேவா?"

"ம்ம்"

"அ… த்.. … தா ன்" முகம் சிவக்க ஒரு ஒரு வார்த்தையா இழுத்தாள்.

"ஹேய் ஒழுங்கா கூப்பிடுடி ஒன்னுமே கேட்கல" அவன் குரலில் அதிதபரபரப்பு.

"ப்ச் அத்தான்"

"திரும்ப சொல்லுடி"

"பேதும் அத்தான்"

"இன்னொரு தடவ பப்பி"

"அத்தான்… அத்தான்... அத்தான்….போதுமா அத்தான்? எனக்கு அத்தான் என்னவோ மாதிரி அத்தான் இருக்கு அத்தான்" மூச்சிவிடாமல் அவள் போட்ட அத்தானில் வாணத்தில் பறந்தான் அதியன்.

"போதும் போதும் இன்னைக்கு நைட் எப்படிதான் தூங்கபோறேனோ" பெருமூச்சி விட்டான் அதியன்.

"உங்களுக்கு நிஜமா என்ன பிடிக்குமா?"

"இப்ப மட்டும் நீ என் பக்கத்தில இருந்தா எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு புரிய வச்சிருப்பேன்" அவன் குரல் கரகரப்பாக இருந்தது.

"ஏன் அத போன்ல புரியவைக்க முடியாத அத்… தான்?"

"ஹீம் தூரமா இருக்க தைரியமா? நாளைக்கு ஆஃபிஸ் வருவல? வா புரியவைக்கிறேன்"

"ரொம்ப தான்… ஆப்பிஸ்ல என் பக்கத்தில வந்திங்க…அவ்வளவு தான்" அவள் மிரட்ட சிறு முயல் பேசுவது போல உணர்ந்தான் அதியன்.

"பக்கதுலவந்தா என்னடி பண்ணுவ?"

"வரகூடாதுனா கூடாது"

"நான் வருவேன்… உன்னோட அந்த செர்ரி லிப்ஸ்ல கிஸ்கூட பண்ணுவேன். எனக்கு உன் பர்மிசன் தேவையில்ல பேடி"

"ஹய்யோ ஆள விடுங்க. கிஸ் பண்றேனு கடிச்சி வச்சிட்டு பேசுறத பாரு. அம்மா பாத்துட்டு என்னாச்சுனு ஒரே கேள்வி… எனக்கு சாப்டவே முடியல ஓரே எரிச்சல்"

"சாரி பப்பி… அது எதோ கோபத்துல பண்ணிட்டேன்… இனிமே உன்ன காயபடுத்த மாட்டேன்" அத்தனை கம்பிரமாக இருப்பவன் ஐயாயிரம் பேருக்கு முதலாளி அவன். அவளிடம் கெஞ்ச அவன் மேல் அளவில்லாத காதல் கூடியது.


"தனா கதவை திற" படபட வென்று சந்தோஷ் கதவை தட்ட அதிர்ந்து விழித்தாள் ஆராதனா. இதயம் வெகுவாக துடிக்க வேர்த்து வழிந்தது அவளுக்கு.

"கதவை திறக்க சொன்னேன் உன்ன" அவன் அதட்டலில் உடல் தூக்கி போட பயத்தில் கைகால் எல்லாம் நடுங்கியது. மெதுவாக கதவை திறந்தாள் அவள்.

நான் வேண்டி பெற்ற வரமா நீ
நான் கடைபிடிக்கும் தவமா நீ
வதைக்கிறாயடி என்னை
ஏதற்காக கண்ணில் விழுந்தாய்? பாரக்கும் நொடி எல்லாம்
என்னை தின்பதற்கா…? நித்தமும் வேதனை
சுகமான வேதனை நீ...
நான் விரும்பிய காதல் காயம் நீ வலித்தாலும் இனிக்கிறாய்
உயிரின் அடி ஆழம்வரை சென்று இனிக்கிறாயடி என் கண்மணி..


சட்டென்று ப்ரேக் அடிக்க இமைதிறந்து பார்த்தாள் அபிராமி. மங்கலான பணிபடர்ந்த விடியல். சிலர் கடைகளை திறந்து சுத்தம் செய்து கொண்டு இருக்க ஒரு சில வண்டிகள் மட்டுமே சென்று கொண்டு இருந்தது. பார்த்தாலே வளர்நது வரும் டவுன் என்று தெரிந்தது. பேருந்து நிலையத்தில் வந்து நின்றது அவர்கள் வந்த பஸ். திடீரென்று அவள் மனதில் கலக்கம் சூழ்ந்தது வரவேண்டிய இடம் இதுதானா என்ற கலக்கம். அந்த கான்ஸ்டபிளுடன் இருவரும் இறங்கி நடந்தனர்.

"பாப்பா அங்க இருக்கு பாரு டாய்லேட்… நீயும் அம்மாவும் சுத்த படுத்திட்டு வாங்க பேக்கை நான் பாத்துக்கிறேன்" என அந்த வயதான பீசி சொல்ல தலையாட்டியவர்கள் சென்று சுத்தபடுத்திக் கொண்டு வந்தனர். முத்துப்பேட்டை என இருந்த போஸ்டரை பார்க்கவே அச்சமாக இருந்தது அவளுக்கு. இங்கு ஏதோ சாத்தான் காத்துக்கொண்டு இருப்பதுபோல் தோன்றியது. "நான் சாப்டுட்டேன் நீங்க போய் சாப்பிட்டு வாங்க" என்ற பீசி கழிப்பறை நோக்கி சென்றார். கல்யாணியை அமர வைத்துவிட்டு தாய்க்கு உணவும் தனக்கு காஃபியும் வாங்கி வந்தாள் அபிராமி.

உணவு உன்ன கல்யாணி மறுத்ததும் அங்க தூங்கி கொண்டு இருந்த ஒரு பிச்சை எடுக்கம் பெண்ணிடம் அதை வைத்தாள். பின் இருவரும் காஃபி மட்டும் அருந்தி விட்டு பீசியுடன் ஆட்டோ பிடித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்க்கு சென்றனர். அங்கு ஏ2 மட்டுமே வந்திருக்க பீசியிடம் விவரம் கேட்டவர் இன்ஸ்பெக்டர் வரும்வறை காத்திருக்க சொன்னார். மூவறையும் ஒரு மணிநேரம் காக்க வைத்துவிட்டு உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் அவர்களை அலட்சியம் செய்தார். மீண்டும் ஒரு மணிநேரம் காக்க வைத்தபின் தான் என்னவென்றே கேட்டார். எளியோரை ஏளனம் செய்து தானே இன்பம் பெருகின்றனர் அற்ப பதர்கள்.

"காலையிலே வந்து உயிர எடுக்குறிங்க… பேசமாக மார்ச்சுவரி பக்கத்தில ஸ்டேஷன வச்சிடலாம் போலஇருக்கு" எரிந்து விழுந்தார் அவர்.

"சார் உங்க எஸ்பி சார் தான் வர சொன்னாரு" இடைபுகுந்தார் பீசி.

"அவரு சொல்லுவாரு… ஆனா நான் தான லோலோனு அலையனும். போங்க சார் காருல ஏறுங்க ச்சை நாய்பொலப்பா இருக்கு" நேற்று அங்கே நடந்த கலவரத்தில் விசாரணை என்று இரவு தூங்காதது கடுப்பை கிளிப்பி இருந்தது அவருக்கு.

கார் அரசு மருத்துவமனையின் மார்ச்சுவரி என்று பலகை தாங்கிய முகப்பில் வண்டி நிற்க இறங்கி நடந்தார் இன்ஸ்பெக்டர். நெஞ்சு கூடு சில்லிட்டு இரத்தம் உறையும் அளவிற்க்கு பயத்தில் அபிராமியும் கல்யாணியும் அவரை பின்தொடர்ந்தனர். ஒரு பாமில் கைஎழுத்து வாங்க நடுங்கிய கையை இழுத்துவைத்து போட்டவள் தடதடவென்று இதயம் துடித்து வேர்த்து வழிய கல்யாணி கையை பற்றிக் கொண்டு அவர்கள் திறந்துவிட்ட பினவறையில் நுழைந்தாள்.

"இங்க வாங்கமா" என அவர்களை அழைத்து "நல்லா பார்த்து சொல்லுங்க" என்றவர் "திறந்து காம்பிப்பா" என சற்று தள்ளிநின்றுக் கொண்டார்.

கண்ணை மூடிக்கொண்டு கடவுளை துணைக்கு அழைத்தவள் "கீர்ன்ச்சச்" என அந்த பெட்டி திறக்கும் சத்தத்தில் மெல்ல கண்ணை திறந்து பார்க்க வெள்ளை பணி புகை வெளியேற குடலை புரட்டும் அளவிற்க்கு இருந்தது அந்த காட்ச்சி.

"பக்கத்துல வந்து அடையாளம் பாருங்க" என அவன் சொல்ல இருவரும் பயத்தோடு நெருங்கி சென்றனர்….

"குட் மார்னிங் டாக்டர்"

"எஸ் மார்னிங் தக்ஷினா" என வரவேற்பு தந்தார் அந்த மருத்துவர்.
அவர் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள் அவள்.

"என்ன விசியமா என்ன பாக்கனும்னு சொல்லிருந்திங்க?"

"நீங்க அட்டன் பண்ண கேஸ்தான் சார். சத்தியா நியாபகம் இருக்கா? நீங்க தான் போஸ்மாடம் பண்ணிங்க" ஒரு நிமிடம் அவர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் அவரை கூர்மையாக கவனித்தாள் அவள். பின் ஏதோ முடிவு செய்தவர்போல் எழுந்து நின்றவர் ஒரு கபோர்டை திறந்தார். பல கோப்புகள் அடிக்கி வைக்கபட்டிருந்தது.

"ம்ம்…. நல்லா நியாபகம் இருக்கு. தட் புவர் கேள்… நாங்க பல போஸ்மாடம் பண்ணிருக்கோம் ஒவ்வொன்னும் ஒரு மாதிரி கோரமா தான் இருக்கும். ஆனா இந்த கேஸ் கொஞ்சம் வித்தியாசமானது தான்" அவர் எதையோ தேடிக் கொண்டே சொல்ல புருவம் சுருக்கி பார்த்தாள் அவள்.

"என்ன மாதிரி வித்தியாசம் டாக்டர்? "

"கிடச்சிட்டு" என்று ஒரு பைலை எடுத்தவர் மீண்டும் வந்தார். "கண்டிப்பா சொல்றேன் நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய விசியம் தான். கொஞ்ச நாள்ல நானே இத பத்தி உங்க கிட்ட பேசனும்னு நினைச்சிருந்தேன்" அவர் போட்ட பீடிகையில் பின் ஏதோ பெரிய செய்தி உள்ளது என மனம் கூறியது.

"புரியலை? "

"நீங்க நினைக்கிற மாதிரி இது வெறும் போதையில நடந்த குற்றம் இல்ல தக்ஷினா" அவளுக்கும் இது நன்றாக தெரிந்த விசியம்தான்.

"இது ஒரு மெடிக்கல் மால்பிராக்டிஸ்" இந்த திருபத்தை அவள் எதிர்பார்க்க வில்லையோ பெரும் குழப்பம்.

"வாட்? எப்படி?" அவளுக்கு விளக்கம் தேவைபட்டது

"சொல்றேன் அதுக்கு முன்னடி என்ன நீங்க தப்பா நினைக்ககூடாது. ஒரு சாதாரண மனுஷனா என்னோட பயத்துல நானும் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன். அது.. அது.. நான் கொடுத்த போஸ்மாடம் ரிப்போர்ட் உண்மையானது இல்ல" வெளிறிய முகத்தில் பயசுவடுகள்.

"என்ன காரணம்?" நடுங்கும் கைகளையுல் காதோரம் வியர்த்து வழிவதையும் அவர் சொல்வதில் உள்ள உண்மை தன்மையையும் ஆராயும் ஒரு லேசர் பார்வை அவளிடம்.

"சத்தியா பாடிய நான் மட்டும் போஸ்மாடம் பண்ணல என்னோட ஸ்டுடன்ட் ஒருத்தியும் இருந்தா. அனு அவ பேரு. வெரி டெலண்ட் டாக்டர் அதுமட்டும் இல்ல நேர்மையா இருப்பா. இலவசமா கிராமத்தில் உள்ளவங்க ஏழைனு எல்லாருக்கும் வைத்தியம் பார்பா" கண்களில் துயரம் கசிந்தது

"இப்போ அவங்க எங்க?"

"இப்போ அவ உயிரோட இல்ல. ஒரு நாள் திருட வந்தவங்க அனுவ அவ பேமிலியோட கொண்ணுட்டு வீட்ட கொலித்திட்டு போயிட்டாங்க. அப்படி தான் எல்லாரும் நினைச்சாங்க நானும் நினைச்சேன். ஆனா அது உண்மை இல்ல அந்த ரிப்போட் அவகிட்ட தான் இருந்தது. அது போலீஸ் கைக்கு போககூடாதுனு தான் அவள கொண்ணுட்டாங்க தக்ஷினா" இது அவளுக்கு அதிர்ச்சிதான் பூதம் உள்ளது உறுதியானது.

"உங்களுக்கு எப்படி இது தெரியும்?"

"அவ இறந்த அன்னைக்கு நைட் எனக்கு ஒரு கால் வந்தது. அவங்க சொன்ன மாதிரி ரிப்போட்ட மாத்துனா பணம் தரதா சொன்னாங்க. நான் முடியாதுனு சொன்னதுக்கு அனுவ மிரட்டியும் அவ ஒத்துக்கலனு தான் கொண்ணுட்டதா சொன்னாங்க. நானும் ஒத்துக்கலனா என் பசங்களையும் கொண்ணுடுவேனு சொல்லி மிரட்டிட்டு வச்சிட்டாங்க. முத நம்பாம வீண் மிரட்டல்னு தான் நினைச்சன். ஆனா அடுத்து ரெண்டு வீடியோ எனக்கு வந்தது ஒன்னு அனுவ இரும்பு ராடால தலைல யாரோ பயங்கரமா அடிச்சி கொலைபண்றது இருந்தது. எனக்கு ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு. மனசை திடபடுத்திட்டு அடுத்த வீடியோவை பார்த்தப்போ கைகால் எல்லாம் நடுங்கிடுச்சி. அதுல என் பொண்ணு குளிக்கிறது என் பையன் நைட் தூங்குறதுனு என் வீட்டுக்குள்ள எங்களுக்கே தெரியாம வீடியோ எடுத்திருந்தாங்க. அதுக்கு அப்பறம் எனக்கு அவங்க சொல்றத கேட்குறத தவிர வேற வழி தெரிய தக்ஷினா" அவர் சொல்வதில் பொய் இருப்தாக தெரியவில்லை அவளுக்கு

"இப்போ மட்டும் ஏன் இத வெளில சொல்றிங்க?"

"அதுக்கு காரணம் என் பொண்ணு தான் மேடம். அவளுக்கு எப்படியோ இந்த விசியம் தெரிஞ்சு என்கிட்ட சண்டை போட்டா. ஒரு பொண்ணா இன்னோரு பொண்ணுக்கு நடந்ததை அவளால ஏத்துக்க முடியல. ரொம்ப அமைதியா இருந்தவ இந்த விசியம் தெரிஞ்சதும் அரக்கண்டா மாறிட்டா. இந்த ரிப்போட்ட போலீஸ் கைக்கு பேகலனா செத்துருவேனு மிரட்டுனா. ஒரு வருஷமா நானும் எவ்வளோவோ சமாதானம் படுத்திபார்த்தேன் கேட்கல. என் பையனும் என்கிட்ட சண்டை போட ஆராம்பிச்சிட்டான். ஏனோ எனக்கும் மனசுல உருத்தல் தான். ஒரு வாரத்துக்கு முன்னாடி என் பையன் தான் உங்கள பத்தி சொன்னான் இந்த பைல் சேரவேண்டிய இடம் எஸ்பி தக்ஷினா ப்பா யோசிச்சி முடவு பண்ணுங்கனு வச்சிட்டான். எனக்கும் அதுதான் சரின்னு பட்டுச்சி முடிவு பண்ணிட்டேன்"

"அப்படி அந்த ரிப்போட்ல என்னதான் இருக்கு டாக்டர்?"

"நாங்க பண்ண டெஸ்ட்ல அந்த பொண்ணு உடம்பு புல்லா தலியம்னு ஒரு பாய்சனஸ் கெமிக்கல தடவிருக்காங்க. தடை பண்ணபட்ட போதை பொருளும் கொடுத்துருக்காங்க. அப்பறம் ஊசி வழியா நிறைய வித்தியாசமான மருந்தெல்லாம் செலுத்தி இருக்காங்க. ஐ திங் சத்தியாவ டெஸ்ட் ரேட்டா யூஸ் பண்ணிருக்காங்க"

"அப்போ அந்த பொண்ணு மெடிக்கல் டெஸ்டுல இறந்துடுச்சினு சொல்றிங்களா? டாக்டர்"

"கண்டிப்பா…. இல்ல. அவங்களுக்கு எப்படியெல்லாம் தேவைபட்டதோ அப்படி எல்லாம் யூஸ் பண்ணிருக்காங்கனு சொல்றேன். மோசமா ரேப் பண்ணிருக்காங்க ஆனா அதுனால சத்தியா சாகல. அந்த பொண்ணு கழுத்துல நேரா மண்டையோட்டு சரிவுல ஒரு 5 சென்டிமீட்டர் தூரம் அளவுக்கு ஒரு காயம் இருந்தது தக்ஷினா. கத்திய சருகலா 45° டிகிரில வச்சி அட்லாண்டாக்சியல் இடைவெளி வழியா மெடுலா அப்லன் காட்டாவை காயப்படுத்திருக்காங்க. அப்படி குத்திதான் வலியே தெரியாம சாகடிச்சிருக்காங்க. இந்த மாதிரி பண்ணும் போது உணர்ச்சியே இல்லமா சட்டனு இறந்துடுவாங்க"

"இவ்வளவு கொடுமை படுத்திட்டு எதுக்கு வழி தெரியாம சாகடிக்கனும்" யோசனையில் இருந்தாள் அவள்.

"இந்தாங்க தக்ஷினா இந்த ரிப்போட்ல எல்லாமே இருக்கு" என அவளிடம் அதை நீட்ட வாங்கி வைத்துக் கொண்டாள்.

"இந்த கிரிமினல்ஸ் யூஸ் பண்ண பல மருந்து இந்தியா கிட்டயே இல்ல ரொம்ப ரேர். இந்த மூணு வருஷத்துல டெக்நாலேஜ் நிறையவே இம்ருவ் ஆனாலும் இன்னுமே பல சாதனங்கள் நம்மகிட்ட இல்ல. வெரி பர்பக்ட்டா பாடிய டிஸ்போஸ் பண்ணிருக்காங்க. என்னோட கெஸ்சிங் கரக்ட்னா நீங்க தேடவேண்டியது ரெண்டு இல்ல நாலு பண வெரிபிடிச்ச சைக்கோஸ்ச தான்"

"என்ன மாதிரி ஆராய்ச்சி பண்ணிருக்காங்கனு தெரிஞ்சதா டாக்டர்?"

"இல்ல நாங்க வச்சிருந்த ரிப்போட்ல இவ்வளவுதான் அனலைஸ் பண்ண முடிஞ்சது தக்ஷினா. ஐயம் சாரி டூ சே இந்த கில்லர்ஸ் ஒரு டாக்டரா இருக்க கூட 90 பர்சன்ட் வாய்ப்புகள் இருக்கு"

"அதித அறிவுகூட அழிவுக்கான ஆரம்பம் தான் டாக்டர். இந்த இன்பர்மேஷன் எனக்கு புது கதவை திறந்திருக்கு"

"அண்ட் முக்கியமா அவங்க டிஎன்ஏ உங்களுக்கு கிடைக்க கூடாதுனு ரொம்ப கான்சியஸா இருந்துருக்காங்க. ஒன்வீக் தண்ணில ஊரினா பலதடயம் அழிஞ்சிடும். அதனால இப்படி கொண்டு வந்து பொட்ருக்காங்க இதுவும் என் கெஸ்சிங் தான். அதுமட்டும் இல்ல வெர்ஜினியாவ கான்சன்ட்ரேட் ஆசிடால சாம்பில்ஸ் இல்லாம அழிச்சிருக்காங்க. நீங்க குற்றவாளிகள கண்டுபிடிக்கனும் அதுவும் சீக்கிரமா. இல்ல சத்தியா மாதிரி பல பெண்கள சாகடிச்சிட்டே தான் இருப்பாங்க."

"நானும் அவங்கள பார்க்க ரொம்ப ஆர்வமாக தான் இருக்கேன் டாக்டர்" அவள் கண்ணில் ஒரு நெருப்பு எரிந்ததோ. அவர்கள் சீக்கிரம் பிடிபடபோகின்றனர் என்று அவருக்கு தோன்றியது.

"ஆனா எனக்கு ஒரு சந்தேகம் தான். இவ்வளவு பண்ண தெரிஞ்ச கிரிமினல்ஸ்கு பாடி உங்க கைக்கே கிடைக்காம கூட அழிச்சிருக்கலாமே?"

"சைக்கோஸ்னு நீங்க சொன்னத நான் இந்த கோஸ் டிடெயல்ஸ் பார்த்தப்போவே நோட் பண்ணிட்டேன் டாக்டர். அவங்க தான் இந்த மாதிரி கொடுரமா யோசிப்பாங்க. யாரு குற்றவாளினு நாங்க கண்டுபிச்சாலும் அத எவிடன்ஸோட நிறுப்பிக்க முடியாத அளவுக்கு வெல் ப்ளானுடு. தே ப்ளேய கேம் வித் போலீஸ். இந்த பாடி கூட அவங்க க்ளூதான். பட் எதுக்கு உங்கள ரிப்போட்ட மாத்த வச்சாங்க? வாட்டெவர் நவ் கேம் இஸ் மைன். சீக்கிரமா நீங்க எதிர்பாத்தது நடக்கும்"

"தகக்ஷினா எனக்கு என்னவோ இவங்க இன்னும் பல கொலை பண்ணிருப்பாங்கனு தோனுது. எங்கையாச்சும் ஒரு டிஎன்ஏ மிஸ் ஆகிருந்தாலும் அவங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இப்போ டிஎன்ஏ வச்சி அந்த பேஸ்கட்ட கண்டுபிடிக்கிற டெக்நாலேஜ் வந்து ரொம்ப வருசம் ஆகிடுச்சி. நீங்க விசாரிச்சி பாருங்க" அவருக்கு தோன்றியதை சொன்னார் அவர்.

"விசாரிக்கிறேன் டாக்டர். அப்பறம் நீங்க பயப்பிட வேண்டாம் இந்த விசியம் யாருக்கும் தெரியாம நான் ஹான்டில் பண்ணிக்கிறேன். நான் வரேன் டாக்டர்" என அவரிடம் விடைபெற்றாள் தக்ஷினா.

தன் முன் இருந்த இன்விடேசனை பார்த்தான் புவி.

"சார் இது இன்னைக்கு ஒரு பொண்ணோட பர்த்டே செலிபிரேஷன் இன்வைட் காடு. அந்த கிளப்ல எல்லாரையும் உள்ள விடமாட்டாங்க. உங்க ஒரிஜினல் ஐடிய வச்சி நீங்க போலீஸ்னு கண்டுபிடிச்சிட்டா பிரச்சனை ஆகிடும். இந்த காடே ஒருத்தன் கிட்டேருந்து திருடுனது தான்"

"சரி நீங்க எல்லாரும் நான் சொன்ன தூரத்துல நின்னு உள்ள என்ன நடக்குதுனு பாருங்க. நான் கால் பண்ணதுக்கு அப்பறம் தான் வரனும்"

"ஆல்ரெடி அங்க ரும் புக் பண்ணிட்டேம் சார். இன்னைக்கு மதியமே நாங்க அங்க போயிடுவோம். நீங்க நைட் ஒன்பதுக்கு மேல வந்ததும் நாங்க கிளப்குள்ள குடிக்குர மாதிரி உள்ள போயிடுவோம்"

அவனை பார்த்து சிரித்தான் புவி " குடிக்கிற மாதிரி ஆக்ட் மட்டும் பண்ணுங்க ஆர்வத்துல குடிச்சிறாதிங்க"

விரைப்பாய் நின்ற அந்த காவலன் "நோ சார்" என்றான்.

"சரி என் டிரஸ் கேமரா மைக் எல்லாத்தையும் என் கார்ல வச்சிருங்க. நான் ஐஜிய பார்த்துட்டு வந்துரேன்" என எழுந்தவன் "அப்பறம் நம்ம மூணு பேர தவிர யாருக்கும் தெரியகூடாது… " என திரும்பவும் அழுத்தி சொல்லிவிட்டு சென்றான்.

வருவாள்…

போகாதடி என் பெண்ணே!💕

Excuse me…..😅😅 ithayum consider panna me happy

tQpmUSAvh3qhDHDIs0BT9310Vw27T5zEWTetORElI1gmHrjU-dwPVyDHWMniIiQclqeQ9kKrlYhUZPX75HluNmIOYVKFEuCDjSWQ9ts6jSR2dfAwea8Ob32InVfUDyOv19ybIpzt=s0

Chinna pillanga pathu panividunga… 😁😁

By x ponnu
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 19

அவர்கள் காட்டிய சடலத்தை பயத்தோடு பார்த்தாள் அபிராமி. அத்தனை கோரமாக இருந்தது அந்த பெண்ணின் உடல். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அது அவள் அக்காவாக இருக்க முடியாது என்று குதித்து மனது. "பயப்புடாம பாருமா" தூரத்தில் யாரோ பேசுவது கேட்க மெல்ல மனதை கட்டாயபடுத்தி இமையை இழுத்து வைத்து பார்த்தாள்.

"அது ராதிகாவா? இல்ல என் அக்கா தேவதை மாதிரி இருப்பா. இல்ல அது ராதிகாதான் ராதிகா… அந்த காது??" மனதின் கேள்விக்கு உள்ளுக்குள் அலறிக் கொண்டு அந்த பினத்தின் உள்ளங்கையை பார்த்தாள் அதில் இருந்த பெரிய மச்சம் "ராதிகா….ஆஆஆஆஆஆ" திடீரென்று கல்யாணியின் கதறலில் இதயம் குலுங்க கண்ணில் இருந்து அருவியாய் வழிந்தது அவளுக்கு. ஆம் அது ராதிகா தான். அன்று பச்சை கலர் சேலையில் சிரித்து பேசியவள் அவள் முன் தோன்றி மின்மினியாய் மறைய நிதர்சனம் மூச்சை இறுக்கி பிடித்தது.

"இல்ல… ஆஆஆஆஆ ராதிகா… அக்கா… ஆஆஆஆஆஆஆஆ ராஆஆ திஇஇஇ ஆஆஆஆ க்க ஆஆஆஆ" என அலறிக் கையை ஆட்டி மறுத்துக் கொண்டே பின்னால் நகர்ந்தவள் கண்கள் சுழட்ட இரும்பு கேட்டில் "டாமார்" என தலைமேதி கீழே சரிந்து மயங்கினாள் அபிராமி.

அவர்கள் அழுவதை பார்த்து உறுதி செய்த இன்ஸ்பெக்டர் நிம்மதியாக மற்ற வேலைகளை பார்க்க சென்றார்.

"கவலை படாதீங்கமா இருக்க இன்னொரு பொண்ணுக்காக வாழ பாருங்க. சின்ன பொண்ணா இருக்காங்க" என ஆறுதல் சொல்லிக் கொண்டே ஊசி போட்டு விட்டு சென்றாள் நர்ஸ்.

பக்கத்தில் கல்யாணி அழுகுரல் கேட்க "அக்கா அக்கா" என ஓடுபவளை பிடிப்பது போல கையால் துழாவிக் கொண்டு இருந்தவள் உண்மை புரிய வேகமாக எழுந்து அமர்ந்தாள். கையில் சலைன்பாட்டில் ஏறிக் கொண்டு இருந்தது. அவள் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு அருகில் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டு இருந்தார் கல்யாணி. அபிராமி எழுந்ததும் அவளை கட்டிக்கொள்ள இருவரும் கதறி அழுதனர். வேறு என்ன அவர்களால் செய்ய முடியும் கடைசி வினாடி வரை அவள் எங்கயாவது உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கையில் தான் இருவரும் இருந்தனர்.

யாரோ செய்த வினை
யாரோ செய்த பாவம்
யாரோ கொண்ட வெறி
யாரோ கொண்ட இச்சை
ஏனோ இந்த சாபம்?
என்ன குற்றம் செய்தேன் நான்? மண்ணில் புதைய காரணம் என்ன?
பெண்ணாய் பிறப்பெடுத்தது என் தவறா?
இல்லை இந்த அபலையை சுமந்த என் தாயின் கருவறை செய்த தவறா?
என் காயங்களின் எண்ணிகயில் உங்கள் விரல்களுக்கும் பஞ்சம். வேண்டாம் இனி ஒரு அரக்கன் இங்கு.
இருப்பவர்களே சாத்தானின் பிரதிகள்.
இச்சை பிடாரிகள் உங்களை சுமப்பதற்கு மலட்டுத்தன்மையை மேல்.
அழுகிறேன் காற்றினில் என் கதறல் கூட யாருக்கும் கேட்கவில்லை…
மனித இனத்தில் பிறந்தற்கு என் தண்டனையாய்…


"விமல் எனக்கு ஒரு வேலை இருக்குடா. என் பைக் அதி ஆஃபிஸ்ல இருக்கு அத எடுத்துட்டு வந்து இங்க வச்சிடுரியா?"

"ஏன்டா உனக்கு என்ன பார்த்தா பைக் டிரைவர் மாதிரி இருக்கா? இதுக்கு தான் போன் பண்ணியா?" விமலன் பல்லை கடிக்க கொஞ்சினான் புவி.

"என் தங்கம்ல கன்னுகுட்டில டேய் புது வண்டிடா. உன்ன விட்டா எனக்கு யாரடா தெரியும்? நான் உன் பெஸ்ட் பிரண்டுல.. ப்ளீஸ் விமல்"

"புவி வேண்டாம் சகிக்ல… எனக்கே அசிங்கமா இருக்குடா… உனக்கு இப்போ வண்டி எடுக்கனும் அதுக்கு ஏன்டா யாரும்மே இல்லனு நடிக்கிற… எல்லாம் என் தலை எழுத்து" விமலன் தலையில் அடித்துக்கொள்ள வெற்றி முருவல் சிந்தினான் புவி வேந்தன்.

"ஓ சாரிடா நான் வேற யாராச்சும் பார்துக்குறேன்" பாவமான குரலில் புவி பேச பச்சையாக மனதில் அவனை அர்சித்தான் விமலன்.

"போதும் போதும் சாவி யார்ட்ட இருக்கு?"

"அதி கிட்ட தான் இருக்கும். கொஞ்சம் மேல போய் வாங்கிக்கோ"

"நேரம் டா… உன்கூடலாம் பிரண்டா இருக்ன்ல" அவன் சலித்துக்கெள்ள சமத்தாக சிரித்தான் புவி.

"கண்டிப்பா டியுட்… மை நண்பேன்டா" என சிரித்துக் கொண்டே வைத்தான் புவி.

விமலன் பஸ்சில் ஏறியதிலிருந்து அபிராமி கண்ணில் படுகிறாளா என தேடிக்கொண்டே வந்தான். நீளகூந்தல் பெண்களை தேடிதேடி விழியை சுழற்றினான். அவன் இறங்கும் வரையிலும் அவள் அவனுக்கு கிடைக்கவே இல்லை… செவன் ஹில்ஸில் இறங்கியவன் உள்ளே செல்ல ரிசப்ஷனில் நின்றிருந்த பெண் அவன் கண்ணில் பட்டாள். நீண்ட கூந்தலை விரித்துவிட்டு பீச் கலர் சல்வாரில் இருந்தவள் அவன் அருகில் செல்லும் நேரம் நகர்ந்துவிட்டாள். அவள் படிகளில் துள்ளி நடக்க அவளை பின் தொடர்ந்தான் விமலன். அபிராமி என்று நினைத்து தோளை தொட போனவன் போன் வைப்ரேட் ஆக அதை அனைத்துவிட்டு பார்க்க அவளை அங்கு காணவில்லை. ஒரு பெரு மூச்சோடு மேல சென்றான்.

காதலில் தேடலும் தானே அடக்கம்…

அதியனிடம் பேசிவிட்டு சாவியோடு திரும்பியவன் உள்ளே வந்த பீச் சல்வர் பெண் கால் தடுக்கி கீழே விழ ஓடி சென்று தூக்கி நிறுத்தினான்.

"ஸ்ஸ் தேங்ஸ் சார்" என்று கைகளை துடைத்துக் கொண்டு இருந்தவளை பார்த்து ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்தான் விமலன்.

"தீ…. தீ.. தக்ஷி.." என தினற அவனை பார்தவள் அழகாய் சிரித்தாள். பளீர் என்ற புன்னகை அவனுக்கு மிகவும் பிடித்த அதே புன்னகை. மிகுந்த பரபரப்பாக "விமலன் சார்" என அவள் துள்ள தலையை மேலும் கீழும் ஆட்டினான் அவன்.

"நான் தீ இல்ல… மை நேம் ஆராதனா" என்றாள். அவள் கையையே இருக்கமாக பிடித்து நின்றவனுக்கு இவள் தக்ஷினா இல்லை என்பது நன்றாகவே தெரியும். அருகில் வந்த அதியன் ஆராதனாவை பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டான். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"விமலன் இவ உன் தங்கச்சி இல்ல… நேத்துதான் அவங்கள ஆராதனா பார்த்தாளாம். இன்னைக்கு தான் என்கிட்ட சொன்னா" அவனுக்கு இன்னோருவன் அவள் கையை பிடிப்பதில் சுத்தமாக விருப்பம் இல்லை அது அவன் சகோதிரியாக நினைத்தாலும் சரி.

"என்ன என் தங்கச்சி இல்லையா?" அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தன் தங்கையை ஒத்து இருப்பவளை இன்னொரு பெண்ணாக நினைக்க இயலவில்லை. அதியனை முறைத்து பார்த்தான் விமலன்.

"இல்லை விமல் இவ என்னோட மேனேஜர் ஆராதனா" என்றவன் அவளை பார்த்து சிரிக்க அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு சென்றான் விமலன்.

"ஆமா பப்பி நேந்து எதுக்கு போன கட் பண்ண?" அவள் கன்னத்தில் வருடிய படி அவன் கேட்க அதை தட்டிவிட்டவள் தள்ளி நின்றாள்.

"நேத்து என் அண்ணாகிட்ட மாட்டிருப்பேன்… எல்லாம் உங்களாலதான்" என அவனை முறைத்தவள் இரவு நடந்ததை சொன்னாள்.

சந்தோஷ் கதவை தட்ட பயத்துடன் திறந்தாள் ஆராதனா.

"என்ன பண்ணிட்டு இருந்த?" என அவன் அதட்ட போனில் பேசியதை கேட்டுவிட்டானோ என்று பயந்தவள் தலையை நிமிரவேயில்லை.

"தனா" அவன் சத்தத்தில் "அது... நான்" அவள் உளரி கொட்ட "உடம்பு சரியில்லனா சொல்ல வேண்டியது தானே" அவன் மிரட்டி கேட்க புரியாமல் பார்த்தாள் அவள்.

"ஒரு மணி நேரமா பின் பக்கம் லைட் எரிஞ்சதேனு நான் வந்து பார்த்தேன். முடியலனா அம்மாவ எழுப்பிருக்க வேண்டியது தானே?"

அவன் அக்கறையை கூட வெறுப்பாக தான் காட்டினான்.

அவளுக்கு அப்போது தான் நிம்மதி மூச்சுவந்தது. "என்ன வேர்த்து போய் நிக்குற…? இரு அம்மாவ கூப்பிடுறேன்" என அவன் நகர அவனை தடுத்தாள் அவள்.

"சந்தோஷ் அம்மா தூங்கட்டும்… எனக்கு பீரியட்ஸ்… வேற ஒன்னும் இல்ல"

"ஓஓ அதுதானா... நான் கூட டயேரியானு நினைச்சிட்டேன். போய் தூங்கு போ எதையும் தொட்டு தொலைச்சிராதே" என தூக்கம் கலைந்த கடுப்பில் சிடுசிடுத்து விட்டு சென்றான்.

அறிவாளி அறியவில்லை அதைவிட பெரிய வலி மாதவிடாய் என்பது. வந்தாலும் வேதனை வரவில்லை என்றாலும் வேதனை… மாதம் மாதம் வந்தாலும் ஒவ்வொரு முறையும் புதியதுதான் வலிகள்.

"இருடா உனக்கு ஒரு நாள் இருக்கு" என விதி சபதம் எடுத்தது அவனுக்கு எங்கே தெரிய.

"சாரி பப்பி என்னால நீ பொய் சொல்ல வேண்டியதா போச்சு" மிக வருத்தமாக பேசியவனை "லூசாபா நீ" என்பது போல் பார்த்தாள் அவள்.

"எனக்கு நிஜமாவே ஆ.. அது.." என தினறியவள் தேள்களை திரும்பி அவளை பார்த்தான் அதியன்.

"ஏது ம்ம் சொல்லு"

"ப்..பீரியட்ஸ்"

"இங்க பாரும்மா நீ தயங்குற அளவுக்கு இது அசிங்கம் இல்ல. எவ்வளவு புனிதமான விஷியம் தெரியுமா. என் அம்மாக்கு பீரியட்ஸ் டைம்ல நான் தான் எல்லாம் வாங்கிட்டு வந்து தருவேன். கால் அமுக்கி விடுவேன். முதுகுல தைலம் தேச்சு விடுவேன். நம்ம வீட்டுலையும் நிறைய பொண்ணுங்க இருக்காங்க. அதுமட்டுமல்ல இந்த நேரத்துல உங்களுக்கு உதவி பண்றது எங்க கடமை… நீ மட்டும் இல்ல இந்த உலகத்தில இருக்க எந்த பொண்ணா இருந்தாலும் நான் உதவி செய்வேன். உங்க வலிய தான் வாங்க முடியாது இதையாச்சும் நாங்க செய்யிரதுக்கு அனுமதிங்க" என அவன் பேசிக் கொண்டு இருக்க அவளுக்குதான் கண்கள் கலங்கியது. விஷ்ணுவிற்கு அடுத்து அதியன் தான் அவள் பார்த்த தேவதை ஆண்.

அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டவளை மென்மையாக அனைத்தவன் அவள் பட்டுகூந்தளை தடவிவிட்டு நெற்றியில் முத்தம் வைத்தான்.

ஆராதனாவிடம் பைல் ஒன்றை கேட்க வந்த விஷ்ணு இவர்கள் நின்ற கோலத்தை பார்த்து அதிர்ந்தவன். முகம் கருக்க திரும்பி சென்றான்.

அவனுக்கும் வலித்தது. ஏன் என்றே தெரியாமல் வேதனையாக இருந்தது. "மைலி மைலி" தவிர அவன் மனதுக்கு வார்த்தைகள் வரவில்லை போல். அதியன் மேல் அவளுக்கு ஆர்வம் இருந்தது தெரிந்தது தான் அவனுக்கு. இருந்தும் இன்று தன் கண்ணாலே பார்ததும் வலிக்க செய்தது. எதிரில் வந்தவளை கூட கவணிக்காமல் இடித்துவிட்டவன் சாரி கூட சொல்லாமல் சென்றான்.

"யம்மா புல்ட்ரோசர் மாதிரி இடிச்சி தள்ளிட்டு போறானே" என இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் அமிரா என்ற அமிரா சலேகா. விஷ்ணுவை திட்டிக் கொண்டே ஆராதனா கேபின்குள் சென்றவள் அவர்கள் நின்ற மோன நிலையை பார்த்ததும் சத்தம் செய்யாமல் திரும்பி ஓடி வந்து மாடி வளைவில் நின்று மூச்செடுத்தாள். மனதெல்லாம் சாரல் தான். கையை தூக்கி "யேயயய" என குத்தாட்டம் போட்டவள் விஷ்னுவின் பரம ரசிகை. ஆராதனாவின் க்கியூட் எதிரி. ஹில்ஸ்ன் லோக்கல் ரேடியோ. அடுத்த ஒரு மணி நேரத்தில் அதி ஆரு காதல் காட்டு தீயாக பரவி பேச்சு பொருளானது.

"மேம்... சாரி மேம் என்ன மன்னிச்சிடுங்க" காலில் விழாத குறையாக கெஞ்சினான் சரத்.

"அறிவு இல்ல நீயெல்லாம் போலீசா.. ச்ச ஒரு இன்விடேஷன ஒழுங்க வச்சிக்க முடியல.. ****** " துப்பாக்கியை அவன் வாயில் விட்டு ஆட்டியவள் நச் என்று அவன் வயிற்றில் ஒரு குத்து விட்டாள். அதற்கே சரத்திற்கு பொறிகலங்கியது.

காரில் இருந்து கோபமாக இறங்கியவள் அங்கு நின்றிருந்தவனை பார்தாள். உடனே முகம் பளிச்சிட "அட புவி ராஸ்கல்" என முனகியவள் அவன் அருகே சென்று "கேன் யூ ஜாயின் வித் மீ" என்றாள்.

சட்டென்று திரும்பியவன் கண்ணில் கூலர்ஸ் போட்டு நின்றிருந்தவளை பார்த்து கோபம் தலைக்கேற அவள் குரள்வலையை பிடித்துவிட்டான்.

"உன்ன தான்டி தேடிட்டு இருந்தேன்… என்ன எவ்வளவு கேவளமா பேசுன" என அவன் கத்த துப்பாக்கியை அவன் நெஞ்சில் அழுத்தியவள் "உன் வேலை ஆகனும்னா வா" என மிரட்ட ஒரு நிமிடம் யோசித்தவன் சொந்த பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு கடமை கண்ணாயிரமாய் அவளுடன் கைகோர்த்தான்.

"யேய் தள்ளி வாடா மேல உரசுன ஆசிட் ஊத்திடுவேன்"

"ஏய் உன்னலாம் நான் பொண்ணாவே நினைக்கல… சூனியகாரி… வந்த வேலை முடியட்டும் கள்ளதுப்பாகியா வச்சிருக்க உன்ன அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளுரேன்" இருவருக்கும் சண்டை மட்டும் ஓயவில்லை. ஒருவர் காதில் மற்றொருவர் கடித்து குதறிக் கொண்டனர்.

சற்று வெளிச்சம் உள்ள இடத்தில் அவளை பார்த்தான் புவி. ஆச்சரியம் தான் ஆராதனாவை போலவே இருந்தவளை பார்த்தவனுக்கு ஏக பட்ட கேள்விகள். கூலர்சை தூக்கி விட்டுருந்தாள் தக்ஷினா. இவள் மார்டன் அவள் டிரேடிஷன் என கணக்கு போட்டது அவன் மனம்.

"ஆராதனா உன் சிஸ்டரா?" ஆச்சரியமாக கேட்டவனை பார்த்தவள் உதட்டை பிதுக்கி தலையை இல்லை என ஆட்டினாள். மொத்தமாக தொலைந்தே விட்டான் புவி.

அவனை பார்த்து எகத்தாளமாக சிரித்தவள் என்ட்ரி கார்டை நீட்ட இருவரையும் பரிசோதித்து அனுப்பினர்.

"மெம்பர் கார்ட் இருந்தால் தான் இங்க அனுமதி. நீ இங்க அடிக்கடி வருவியோ" என்றவனை கண்டுகொள்ளாமல் நடந்தாள் தக்ஷினா.

மின்னிமின்னி எரிந்த பல வண்ணங்கில் பலர் குதித்துக் கொண்டு இருக்க அங்கு இருந்த அனைவரும் ராஜா வீட்டு தெடப்பகட்டைகளே. எல்லா இடத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டே வந்தனர் இருவரும். சண்டையை மறந்து அவர்கள் புத்தி கூர்மையாக சுற்றிலும் பதிந்தது. அங்கு நிறைய அறைகள் இருக்க சிலர் எல்லை மீறிக் கொண்டு இருந்தனர். முன் பகுதி மட்டுமே கேளிக்கைக்கு இருக்க இரண்டு காட்ஸ் நின்று ஒரு கதவை காவல் காத்தனர். அதற்குள் செல்ல கோட்வர்டை பயண்படுத்தினர் போல் அவ்வறைக்குள் சென்று வந்த அனைவரும் டாப் லிஸ்டில் இருக்கும் கிரிமினல்ஸ்.

"நோ...ப்..ளீஸ்.. வீக்.. ஆ விடு.. டா. ஷிட் டத்டி வீடுடு.. என் டிரஸ்" ஏதோ முனகல் சத்தம் உன்னிப்பாக கவணித்தனால் இருவருக்குமே கேட்டது. சட்டென்று புவியை இழுத்த அவன் இதழ் அருகில் இதழை கொண்டு சென்றவள் அவனை சுழற்றி அந்த கதவின் மீது சாய்க பெண்ணின் அருகாமையில் மூச்சிவிடவே சிரமமாக இருந்தது. அவன் அடுத்து என்ன என்பதற்குள் அந்த அறையினுள் சென்று விழுந்தான் அவன் மேல் பூகுவியலாக அவளும் சேர்ந்தே விழுந்தாள். அவனை முத்தமிடுவது போல் கதவை திறந்து அவனை உள்ளே தள்ளி தாழிட்டு இருந்தாள் தக்ஷினா.

அங்கு இருந்த மெத்தையில் பாதி உடைகள் களையப்பட்ட பெண் போதை வசம் உளரிக் கொண்டு இருக்க அவள் உடையை கேமராவோடு கையில் வைத்திருந்தவன் அவர்களை முறைத்து வெளியே பேக சென்னான். அவர்கள் போகமல் நிற்க அவளை அடிக்க வந்தவன் கையை பிடித்து சுழற்றி முதுகில் வைத்து அழுத்தி அவன் இரண்டு காலையும் மிதிக்க மன்டியிட்டவன் பிடரியை பிடித்து நங்கென்று கட்டிலில் அடிக்கவும் மயங்கி சரிந்தான். பாத்துரூமில் இருந்து வந்தவன் அவளை நோக்கி ஒடி வர இடையில் புவி காலைநீட்டி அவனை விழவைத்தான். அவன் முதுகில் ஒற்றை காலால் மிதித்தவன் அவன் மயங்கும் வரை துவைத்துவிட்டான்.

இருவரையும் அவர்கள் சட்டையை வைத்தே கட்டி பாத்ருமில் தள்ளி கதவை சாத்தினர். அவர்கள் வெளியேறவும் ஒரு பெண் காவலர் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

பர்த்டேபார்ட்டி ஆரம்பம் ஆனாது அவளுக்கும் அவனுக்கும் தேவையான அனைத்து ஆதாரங்களையும் எடுத்து வெளியில் இருப்பவர்களுக்கு அனுப்பிவிட்டனர். போதை மருந்து சப்ளை செய்பவன், அதை பிரித்து வெளியில் விற்பதற்கு உள்ள புரோக்கர்ஸ். முக்கியமான நரி யார் எல்லாவற்றையும் அறிந்து கொண்டான் புவி. ஏன் என்றால் அந்த மேனேஜர் இப்போது அவர்கள் வசம்.

மது அருந்தி கொண்டு இருந்த மேனேஜரின் அருகில் சென்ற தக்ஷினா தன் விரல்களால் அவன் நெஞ்சை வருட அவனுக்கும் மோகம் பற்றிக்கொண்டது. அவளை இடையை பிடித்து மடியில் அமர்த்தி கொண்டு அவள் கழுத்தில் முகம்புதைத்து சில்மிசங்களில் இறங்கியவனை வெட்டி கூறு போட சொல்லி புவிக்கு ரத்தம் கொதித்தது. தக்ஷினாவை பார்வையாள் எரித்தான். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவன் முடிக்குள் கையை அளந்தவள் அவன் போனை கைபற்றினாள். பின் குரலில் போதை தழும்ப "டார்லிங் யூ லுக்கிங் சோ ஹாட்… ரூம்க்கு போலாமா…" என அவன் உதட்டை வருடிக் கொண்டே கேட்க அவள் விரலை கடித்தவன் அவளை தூக்கிக் கொண்டான். போகும் வழியில் புவி சட்டையில் அவள் கைஉரசி செல்ல அருவெருப்பாக துடைத்துக் கொண்டான். அதன்பிறகு தான் உணர்ந்தவன் உள்ளே தேட ஒரு போன் இருந்தது.

அவளை பெட்டில் போட்டவன் அவள் மேல் சரியா உயிர் நாடியில் ஓங்கி மித்தவள் தொண்டை முள்ளில் குத்தியிருந்தாள். காலுக்கு இடையில் கை வைத்துக் கொண்டு விழுந்தவன் கத்த முடியாமல் பெட்டில் உருண்டான்.

புவி கதவை வேகமாக தட்ட அவன் கையை பிடித்து உள்ளே இழுத்து தாழிட்டாள் தக்ஷினா. அவன் பார்வை அவள் மேனியை ஆராய்ந்து ரூம்மில் சுற்றி வந்தது.

"எங்க?" கையை கட்டி அவனை பாத்தவள் கழிப்பறை பக்கம் கண்காட்ட அங்கே வெஸ்டன் டாய்லேட்டில் கட்டி வைத்திருந்தாள் அவனை. முத்தமிட்ட உதடு கிழிந்து இருந்தது அவனுக்கு. அருகில் சென்ற புவி அவன் விரலை மடக்கி வளைத்துவிட்டான். அது தானே அவள் இடையில் விளையாடியது.

"ம்ம்ம்…. ஹம்ம்" வலியில் துள்ளினான் அவன்.

இருவரும் அவனை அடித்த அடியில் துவண்டு "சொல்லிடுறேன் என்ன ஒன்னும் பண்ணாதிங்க…" அவன் கொஞ்ச வாய்க்ட்டை அவிழ்த்து தண்ணீர் உற்றினாள் தக்ஷினா.

"இங்க வர பொண்ணுங்களாம் பணக்கார வீட்டு பொண்ணுங்க தான். எங்ககிட்ட இருக்க பசங்கள வச்சி புதுசா வர பொண்ணுங்களுக்கு மருந்து கொடுத்து மயங்கினதும் தப்பா வீடியோ எடுத்து அத வச்சி கோடி கணக்குல பணம் பறிப்போம் பாதி ஓனர்க்கு மீதம் நாங்க பிரிச்சிப்போம். காலேஜ்க்கு பார்ட்டி தர வரவங்களையும் நாங்க டிரிங்ஸ்ல கலந்து கொடுத்து யூஸ் பண்ணிப்போம் அவங்கள பணகார பொண்ணுங்கள மட்டும் தான் மிரட்டுவோம்… மத்த பொண்ணுங்களுக்கு என்ன நடந்துச்சுனே தெரியாது. யாருவேனாலும் இங்க என்ன தப்பு வேனாலும் பண்ணலாம். அது நால தான் பல பேர் இங்க வருவாங்க. அவ்வளவு தான்….. ஆஆஆ அடிக்காதிங்க வலிக்குது" என முனகினான்.

"முழுசா சொல்லு இல்ல இங்கையே செத்துருவ. அந்த காட்ஸ் நிக்கிற ரூம்ல என்ன நடக்குது" ஊசி ஒன்றை அவன் கண்ணில் அருகில் வைத்து மிரட்ட கையெல்லாம் உயதரியது அவனுக்கு.

"எனக்கு முழுசா எதுவும் தெரியாது… சொன்னா கொன்னுடுவாங்க…ப்ளீஸ்"

"இல்லனா நான் உன்ன கொன்னுடுவேன்… ம்ம் கமான்"

"உள்ள ஒரு ஃபாரினர் இருக்கான். அவன பார்க்கதான் எல்லாரும் வராங்க. அவன் யாருனுலாம் தெரியாது அப்போவே அவன் பின் பக்க வழியால கிழம்பிட்டான். அவன பார்க்க ஆயுஸ் சாரும் இங்க வருவாரு" அவன் முடிக்க எல்லாவற்றையும் புவி வீடியோ எடுத்திருந்தான்.

"பினந்தின்னி நீ எல்லாம் இருக்கவே கூடாது உன் ஓனர தூக்கிட்டு உன் கவணிக்கிறேன்" அவன் முடியை ஆட்டியவள் கொத்தாக கையோடு பிடிங்கி எடுத்திருந்தாள்.

புவி அவனுக்கு வேண்டியவற்றையும் கேட்டுக் கொண்டவன் தக்ஷினா வெளியில் சென்ற அடுத்த நொடி அவன் மேல் வரிசை பற்களை உடைத்திருந்தான்.

எதுவும் நடக்காதது போல் இருவரும் கைகோர்த்துக் கொண்டு உலாவ தீடிரென்று இருபது முப்பது பேர் அவர்களை சுற்றி வளைத்தனர். அனைவரும் நெருங்கி வர புவி பதட்த்தில் அவளை பார்த்தான். அவளோ நக்களாக அவனனை பார்த்தாள்.
HO6J9MkrkG3fFGpKmDaPGrIJGoSzgdHISSzyTeAx0N9ItvGZGn1vayZH7fVtDcqV2QNUDEUdxMbsdFSXeq1JYzW0kRFjuLbHkhtgr3PbHh62eS1_l0mxB0rQMIxrc59SFow84ytl=s0



💝வருவாள்…

 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே- 20



bM3TQzaKfSLeaXZKhkuK1YkTreA8X_IrFxwslXTikyYHYdPnQcff5q0dcrBsRHSHd8-pk40asqPHXjCMxt0EnZaSw-9om7j3vZQMxsa-bLGp8wVVV_CW7dV1xHwVxbNrbXpZeadm=s0


அவனால் நம்பவே முடியவில்லை. அவள் நக்கல் சிரிப்பில் ஏதோ பிளான் இருக்கும் என்று நிம்மதியோடு கண்ணை மூடி திறப்பதற்குள் அவனை இழுத்துக் கொண்டு வழி மறைத்தவனை உதைத்து தள்ளியவள் ஓட ஆரம்பித்திருந்தாள். அவனும் அவளுடன் ஓடி வந்திருந்தான்.


"ஹ… ம்ஹா…. ஹா.. " என மூச்சை இழுத்துவிட்டான் புவி.

"என்ன? ஐபிஎஸ் னு டப்பா அடிச்ச கொஞ்சம் தூரம் ஓடுனதுக்கே இப்படியா?" எளனமாக பிதுங்கிய அவள் உதட்டை கொடுமை படுத்த சொல்லி உள்ளே துடித்த அரக்கனை கண்டு தலையை உலுக்கினான் புவி.

"ஹேய் சூனியக்காரி மரியாதையா பேசு" அவன் எச்சரிக்கை விட முகத்தில் விழுந்த முடியை ஒரே ஊதில் மேலே பறக்க விட்டவள் தலையை சாய்த்து சிரித்தாள்.

"நீ போலீஸ்தான? அவங்கள அடிச்சி போட்டு ஹீரோயிசம் காட்டிருக்க வேண்டியது தானே?"

"நீ என்ன லூசா? அவனுங்க முப்பது பேருக்கு மேல இருப்பாங்க"

"பாருடா" அவள் எள்ளலில் பல்லை கடித்தவன் "ஆனாலும் நான் தப்பிச்சி ஓடனும்னு நினைக்கல. அங்க எங்க ஆளுங்க ரெண்டு பேரு இருந்தாங்க. நீ இழுத்தேட்டு வரலனா ஒரு ஐஞ்சு பேராவது நான் அடிச்சி படுக்க வச்சிருப்பேன்" அவன் நிதர்சனத்தை சொன்னான். ஆயிரம் பேர் வந்தாலும் புரட்டி எடுக்க இது என்ன சினிமாவா.

"என்னப்பா ஒரு ஆம்பளை... இப்படி சொல்லலாமா" இமை கொட்டியவளை முறைத்தான் அவன்.

"ஆம்பளையோ பொம்பளையோ தனியா எப்படி அத்தன பேர சமாளிக்க முடியும்… வாய்ப்பு இல்ல. இந்த இடத்துல சாமார்த்தியமா தப்பிச்சு வந்தது தான் புத்திசாலித்தனம்"

"ஓஓ…. தப்பிச்சிட்டீங்களா" என பாவமாக கேட்கும் போதே "தடதட" என காலடி சத்தமும் "சர்ச்" என ஒருவன் கத்துவதும் அந்த இரவு நேரத்தில் ஓங்கி ஒலித்தது.

"ஹேய் கம் கொஞ்சம் இங்கேயே மறஞ்சிக்கலாம் அவங்க போகட்டும்" என புவி அவளை இழுக்க அழுத்தமாக நின்றாள். சற்று நேரத்தில் இவர்கள் இருந்த தெருவை எட்டி பார்த ஒருவன் தன் சகாக்களுக்கு அழைப்பு விடுக்கவும் புவிக்கு வேர்த்து வழிந்தது.

"ஹேய் அறிவில்லையா வாடி அவனுங்க பார்த்துட்டானுங்க… வா போய்டலாம்.. ப்ளீஸ்... அவனுங்க மோ..சமானவங்க வா போய்டலம்" அவள் கையை படபடப்புடன் இழுத்தான் புவி. ஆனால் அவர்கள் சுத்துபோட்டு விட்டனர்.

சுதாரித்துக் கொண்ட புவி முதுகில் இருந்த கன்னை எடுத்து நீட்டியும் அவர்கள் நெருங்கி வர வேறு வழியில்லாம் டிரிக்கரை அழுத்தினான். ஒன்றுமே நடக்கவில்லை "கிளிட்ச்" என்ற சத்தம் மட்டும்தான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது வரும்போதுதான் லோட் செய்து எடுத்து வந்திருந்தான். "புல்லட்ஸ் எங்கே போனது" தலை வெடித்துவிடும் போல் இருந்தாலும் சட்டென்று அவளை தனக்கு பின்னே நிறுத்திக் கொண்டு அவளுக்கு அரணாக நின்றான் காவலன்.

"எய்ய்…. எங்க இருக்க மேன்? சீக்கிரமா வாங்க பாஸ்ட்" காதில் இருந்த புளூடூத்தில் அழுத்திக் கொண்டு கத்தினான் புவி. அவளையும் காக்க வேண்டுமே என்று பரிதவித்தான்.

"ஹேய்... மூவ் பேக்.. ஐ செட் மூவ்" முதுகோடு அவளை அனைத்து பிடித்துக் கொண்டான் புவி.

"ஹாக்… ஆ..க்" என பின்னால் சத்தம் வர திரும்பினான் புவி வாயிலிருந்து ரத்தம் வழிய மல்லாந்து விழுந்தான் ஒருவன்.

"புவி இவங்கள மொத்தமா என் பக்கத்துல வர விடாத" என்றவள் இடுப்பில் தொங்கிய நீள் வாக்கில் சிலிண்டர் போல் கையடகத்தில் இருந்ததை எடுத்த நொடி இரும்பு ஸ்டிக்காக நீண்டு இருந்தது.

தன் பெல்ட்டை புவி உருவிக் கொள்ள வேட்டை ஆரம்பமானது. அவனால் அத்தனை பேரை சாமாளிக்க முடியவில்லை உடல் சோர்ந்தது. அவள் சொன்னது போல் மொத்தமாக நெருங்க விடாமல் தடுத்தான் புவி.

கத்தியவாறு தன் முன் ஓடிவந்தவன் மேல் ஒரே ஜம்பில் தாவி ஏறியவள் அவன் கழுத்தை சுத்தி காலை போட்டு வளைத்து கிழே தள்ளி மூக்கில் ஓங்கி மூன்று முறை குத்தினாள். குருதி வெள்ளம் எடுக்க மட்டையானான். வரிசையாக பதினைந்து பேர் பத்து நிமிடத்தில் வேட்டையாடப்பட்டனர்.

புவி விழிவிரித்து பார்த்தான். அவனால் இரண்டு பேரை மட்டும் தான் வீழ்த்த முடிந்தது. அவளோ ரத்தம் கேட்டு ஆடும் காளிபோல் ஆடிக்கொண்டு இருந்தாள். அவள் கை இரண்டு முறை பட்டதுமே அவர்கள் சரிந்து விழுவதன் மர்மத்தை கண்டு அதிர்ச்சியாக பாத்தான். வாய் தன்னால் "சூனியக்காரி" என முனுமுனுத்தது. அதற்குள் அவன் வாயில் ஒரு குத்து விழ ஆக்ரோஷமாக திரும்பி கையில் சிக்கியவனை நைய புடைத்தான். அவன் ஆட்கள் இருவரும் வந்துவிட களம் சூடுகண்டது.

தக்ஷினாவின் முடியை பற்றி பின்னால் இருந்து ஒருவன் தர தர வென்று இழுக்க காலால் அவன் முட்டியில் பலமாக உதைத்து அவன் கையை இறுக்கமாக பிடித்து இரண்டு முறை சுழன்டாள். "படக்" என சத்தத்துடன் அவன் அலறும் சத்தமும் கேட்டது. அவளை நோக்கி ஓடிவந்த இருவரில் ஒருவன் மெயின் பாயிண்டில் உதைத்தவள் மற்றவன் தாடையை பெயர்த்திருந்தாள். ஒரு பெண் இவ்வளவு ஆவேசமாக அடிப்பாளா என பார்த்தனர் அனைவரும். மனதில் உறுதி உள்ளவர்கள் தாக்குதல் எப்போது வலிமையானதாக தானே இருக்கும்.

ஒரு பெண் முறையான பயிற்சி பெற்றாலே போதும். பிறவியிலே பெண்களும் பலம் வாய்ந்தவர்கள் தான். அதை பயன்படுத்தி மெருகேற்ற சந்தர்ப்பம் அமைவதில்லை அனுமதிக்க படுவதில்லை.

ஐந்து பேர் ஒன்றாய் அவளை அமுக்க ஓங்கி ஓங்கி தட்டுபட்ட அனைத்து காலையும் மிதித்து பற்களால் ஒருவனை அழுந்த கடித்தவள் உடம்பை அவர்கள் இழுக்கும் திசையில் தளரவிட்டு சட்டென்று இறுக அலறிக் கொண்டு மூவர் தள்ளி விழுந்தனர். அவள் ஸ்டன் கன் (stun gun) வாட்ச்சில் இருந்து அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்திருந்தது. பின் கைமுட்டியால் ஒருவன் கழுத்தில் விடாமல் குத்த நிலைகுழைந்து விழுந்தான் அவன்.

அடிக்கடி முளைத்த கம்பி ரத்தம் சொட்ட அவள் கையில் கம்பிரமாக நின்றது. காலில் போட்டிருந்த பாயின்ட் ஹீல்ஸ்சை ஒருவன் கண்ணில் சொருகி இருந்தாள். சட்டென்ற அமைதி அனைவரும் திகைக்க அவள் நெற்றி பொட்டில் ஒரு துப்பாக்கி அழுந்தியது. இரு கையையும் உயர்த்தி "ஒகே ஒகே" என்றவள் "புவி நோ" என கத்த துப்பாக்கி வைத்திருந்தவன் கவணம் சிதர இப்போது துப்பாக்கி அவன் நெற்றியில் அழுந்தியது.

"ஹங் ஹங்" ஆக்ரோஷமாக மூச்சு விட்டுக்கொண்டு முகம் சிவந்து ரத்த துளிகள் தெரித்து கலைந்த தலையும் ஆடை கிழிந்து கண்மூடி காளி அவதாரமாக தெருவிளக்கு அருகில் அமர்ந்திருந்தாள் தக்ஷினா. அரைமணி நேர சண்டையில் அனைவரும் விழுந்துகிடந்தனர் தக்ஷினாவை தவிற.

மெல்ல நொண்டிக் கொண்டு நடந்து வந்தான் புவி ஒரு கையில் அவள் பாயிண்ட் ஹீல்ஸ் ரத்த குளியல் எடுத்திருந்தது. அவள் காலுக்கு அடியில் கிடந்தவனை உதைத்து தள்ளியவன் சட்டையை கழட்டி அவளுக்கு போட்டுவிட்டான். அவள் ரத்ததுடன் வாயிலிருந்து பலருடைய ரத்தமும் வழிந்து கொண்டு இருக்க கட்டை விரலால் மென்மையாக துடைத்தவன் அவளுக்கு முன்மண்டியிட்டு அவள் காலை மடியில் வைத்து ஹீல்சை மாட்டிவிட்டான்.

"தீ ஆ..ஆர் யூ ஆல்ரைட்?" அவனுக்கு அவளை யார் என்று தெரிந்தது. விமலன் தக்ஷினாவை வர்ணித்தது இன்று கண்முன்னால் கண்டான். விமலன் முக ஜாடையில் தான் அவளும் இருந்தாள் இப்போது நன்றாக தெரிந்தது. விமலனை போல் அந்த நக்கல் பேச்சும் வார்தைகளின் ஏற்ற இறக்கமும் அதனால் தான் அவள் குரல் அவனுக்குள் அழுத்தமாக பதிந்திருந்தது. அது தான் அன்று ஆராதனா குரலை கேட்டு குழம்பி அவளையே கவணித்தான். ஆனால் ஒரே குரலாக இருந்தாலும் அவனுக்கு வித்தியாசம் நன்றாக தெரிந்தது.

"ம்ம் பைன்" அவளுக்கும் வலித்தது அவனுக்கும் வலித்தது அத்தனை பேரை சமாளிப்பதே கடினம் இதில் அவர்களை மண்ணில் வீழ்தியிருந்தனர் காயங்கள் ஏகபோகமாகவே இருந்தது நகக்கீறல்கள் ரத்த காயங்களும். கைமுட்டிகள் வீங்கி இருந்தது இருவருக்கும்.

"மேம் தண்ணி" வேகமாக பாடிலை உடைத்து நீட்டினான் சரத். அவள் கையில் இருந்த காயத்தை பார்தவன் அவனே தற்காலிமாக சுத்தம் செய்தான். அவள் வாயில் இருந்து சிறு சத்தமும் வரவில்லை அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

சரத்தும் இரு காவலர்களும் தக்ஷினா புவியை பின்தொடர்ந்து வர ஒரு இடத்தில் அவர்களை தவர விட்டனர். அவன் இங்கு வரும் பொழுது அனைவரும் கீழே கிடக்க தக்ஷினா மட்டும் இரண்டு பேரை மாறிமாறி அடித்துக் கொண்டு இருந்தாள். ஒருவன் மட்டும் கீழே விழ மற்றவன் வேகமாக அவளை அறைந்தான். கோபம் கொண்டவள் அவன் முடியை பிடித்து கன்னத்தில் பலமாக குத்த அவள் மோதிரம் நன்றாக தோலை கிழித்தது. அவனை இழுத்து கரண்ட் கம்பத்தில் இரண்டு முறை மோதியவள் கீழே விழுந்தவன் நெஞ்சிலும் வயிற்றிலும் மிதிக்க நினைவுதப்பினான். அவன் மேலையே காலை வைத்துக் கொண்டு கோபமாக அமர்ந்தவளிடம் ஒடிவந்தான் சரத்.

"மேம் மேம்…. ஆர்யு ஒகே மேம்… தண்ணி தண்ணி குடிங்க… சார் அந்த பாட்டில எடுத்துட்டு வாங்க" பதட்டத்தில் கத்திவிட்டு அவளை ஆராய்ந்தான்.

"புவிய பாரு பஸ்ட் " அவள் சரத்தை விரட்ட அவனும் புவியை எழுப்பி தண்ணீர் கொடுத்தான். அரை மயக்கத்தில் இருந்தவன் கண்ணில் கலங்களாக அவள் விழுந்தாள் தன்னை சமாலித்துக் கொண்டு அவளை நோக்கி நகர்ந்தவன் அவன் காலில் தட்டுபட்ட ஹீல்சையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

ஒரு வண்டியில் கூலிபடையை அடைத்து ஏற்றியவர்கள் சிலரை ஆம்புலன்ஸ் வரவைத்து அள்ளி சென்றனர்.

இரண்டு கார் வேகமாக வந்து நிற்க கதவை திறந்துக் கொண்டு ஓடிவந்தான் விமலன்.

"தீ… அம்மு என்னடா ரத்தம்" அவன் பதறிக் கொண்டு வர "விமி" என அவனிடம் சென்றாள் தக்ஷினா. கைதடம் பதிந்த கண்ணத்தை பாத்தவனுக்கு மனம் வலித்தது "அம்மு…. என்னடி? எப்படி…? நீ… நிறைய பேரா" அனைத்துக் கொண்ட கேட்டான்.

"ஒன்னும் இல்ல விமி… காம் டவுன்"

"வலிக்கிதாடா அம்மு"

"ம்ம் ரொம்ப ஆனா இப்போ இல்ல" குழந்தையாக அவனிடம் சாய்ந்து நின்றவளை விழிவிரித்து பார்த்தனர்.

தன் உயிரானவர்களிடத்தில் எத்தனை வீரமான பெண்ணாக இருந்தாலும் குழந்தையாக தான் நடந்து கொள்வாள். கொஞ்சலும் கெஞ்சலும் அவர்களிடம் தான் தக்ஷினா மட்டும் வேற்றுகிரக வாசியா என்ன?

"யாரு அம்மு உன்ன அறைஞ்சது? அவன் கைய வெட்டி போடமா விடமாட்டேன். சரத் எங்க அவன்?" சட்டென்று துள்ளியவனை பரிதாபமாக பார்த்தான் அவன்.

"உயிரோட இருந்தா சொல்றேன் சார். மேம் அடிச்ச அடில அவன் அப்போவே கோமாக்கு போயிருப்பான்"

"ஓஓ நீங்கலாம் என்ன பண்ணிங்க?" அவன் அதட்ட "மேம் கால் வலிக்க போகுது நீங்க உட்காருங்க நான் குடிக்க எதாச்சும் வாங்கிட்டு வரேன். சார் மேம்" என்றவன் நழுவி ஓடிவிட்டான்.

"ஓடிட்டான்… தீ இந்த புவி எங்க? அவன்கூட நீ இருக்கனு தான் நான் இருந்தேன். எங்க போனா அவன்?" கோபமாக கத்தினான் விமலன்.

"நண்பா கொஞ்சம் சுத்தி பாரு. அய்யோ அம்மா வலிக்குதே.. டேய் கொஞ்சம் தூக்கி விடுடா பாவி" தலையில் கட்டுடன் நன்றாக அடிவாங்கி அமர்ந்திருந்தான் புவி.

"டேய் புவி என்னடா ஜாலியா அங்க உட்கார்ந்து இருக்க" என்றவாறே அவனை பிடித்து நிறக வைத்தான் விமலன் .

"பேசுவடா பேசுவ… நீயும் அடி வாங்கிருந்தனா தெரியும்"

"சரி வாங்க ஹாஸ்பிடல் போலாம்"

"நோ நான் பார்த்துக்கிறேன் நீ இவள அலச்சிட்டு போ" என்றவன் நொண்டி சென்று காரில் ஏறினான். "சூனியக்காரி" புன்னகையுடன் அவளை பார்த்து வாயசைத்தவன் சீட்டில் சாய்ந்துக் கொள்ள அவர்களை கடந்து சென்றது கார்.

சூரியன் உச்சி நோக்கி நகர தொடங்கி இருந்தது. சாலையில் தூரமாய் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்க அமைதியான அவ்விடத்தில் மட்டும் நீரில் அளம்பும் சத்தம் கேட்டது.

ஐஸ் பக்கெட்லில் இருந்து அவன் மண்டையை நிமிர்த்தினான் சரத்

"ஸ்பீக் அப்"

"நோ ஐ டிடின்ட்"

"ரிஸ்கி... டெல் மீ" மீண்டும் தண்ணீரில் முக்கி எடுத்தான் சரத். அந்த இடம் சிட்டியை விட்டு தள்ளி இருந்த சீல் வைக்கபட்ட குடோன். அங்கு தான் அந்த வெளிநாட்டு காரனை அடைத்து வைத்திருந்தாள் தக்ஷினா. சரத் கண்ணில் தான் அவன் முதலில் சிக்கினான்.

நேற்று கிளப் பின்புறத்தில் ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்க அந்த இருண்ட இடத்தை நோக்கி சென்றான் சரத். பக்கத்தில் போக போக தான் தெரிந்தது. யாரோ ஒருவனை ஒரு வெளிநாட்டு காரண் அடித்து உதைத்து கொண்டு இருந்தான் அவன் கையில் ஒரு துப்பாக்கியும் இருந்தது. சட்டென்று பதுங்கி அவன் பின்னால் சென்று கன்னை அவன் பின் தலையில் வைத்து மிரட்டினான் சரத்.

"லீவ் ஹிம் அண்ட் புட் யுவர் கன் டவுன்"

"ஓகே… ஐ வில்.. ஐ வில் " என அவன்கீழே போட காலால் அதை இருட்டுக்குள் எத்திவிட்டான் சரத்.

"கம்… கமான்" என அவனை இழுத்து வந்தவன் அவனை விசாரிக்க அவனிடம் நம்பிக்கையான எந்த பதிலும் இல்லை. சரத்தை தள்ளிவிட்டு ஓட பார்தவனை பிடித்து அவன் அடிக்க தஷினாவிடம் இருந்து கால் வந்தது.

"மேம்... "

"சரத் ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடி ஒரு பிளாக் அமெரிக்கன் வெளியே வந்திருக்கான். தேடி கண்டுபிடிங்க" எனவும் கையில் இருந்தவனை பார்த்தான் சரத்.

"ஹீ இஸ் இன் மை ஹேண்ட்"

"தட்ஸ் பர்பேக்ட்" என்றவள் பேனை வைக்க அவன் கைகால்களை கட்டி வண்டியில் தூக்கி பேட்டான்.


"மே ஐ கம் இன் சார்"

"எஸ்" லேப்டாப்பில் கண்ணை பதித்திருந்தான் அதியன்.

"சொல்லுங்க விஷ்ணுராம்"

"நம்ம ஆயில் பிராண்ட் ஆட் பண்றதுக்கு எல்லா அரேன்ஜ் மெண்டும் ரெடி சார். நீங்க என்னைக்கு சொல்றிங்களோ அன்னைக்கு ஷூட் வச்சிகலாம் சார். இதுல டேட்ஸ் இருக்கு " அவன் முன் டேப்லெட்டை நீட்டினான் விஷ்ணு.

"ஆராதனா கிட்ட என் ஷெட்யூல் கேட்டு பிக்ஸ் பண்ணிடுங்க"

"ஓகே சார்" என இறுகிய குரலில் சொன்னவனை அப்போது தான் கவணித்தான் ஆதி அதியன்.

"ராம் உட்காருங்க முக்கியமா பேசனும்" சிவந்திருந்த விஷ்ணுவின் கண்களை பார்த்துக் கொண்டே கேட்டான் அதியன்.

"ஆரு ஐ மீன் ஆராதனா உங்களுக்கு வெறும் பிரண்ட் மட்டும் தானா?" சற்று தயங்கினாலும் கேட்டுவிட்டான்.

"சார் என்னோட பர்சனல் உங்களுக்கு தேவையில்ல" என்றவன் எழுந்து நின்றான்.

"ஆரு உன்னோட பர்சனல் னா நானும் அதில இருக்கேன்.. ஷி ஸ் மை லைஃப் உட்காரு" அவன் குரலில் அழுத்தம் விரவிக்கிடந்தது.

"இத நீங்க மைலிகிட்டே கேட்ருக்கலாம். அவளுக்கு நான் யாருனு "

"அவளுக்கு நீ யாருனு எனக்கு நல்லா தெரியும். உன்ன ஒரு ஏன்ஞ்சலா பாக்குறா. நட்புக்கும் மேல ஒரு புனிதமான ஒரு அன்பு உன் மேல அவளுக்கு இருக்கு. உனக்காக என்னவேனாலும் செய்வா… ஆனா நான் கேட்டது உனக்கு ஆராதனா யாரு? தட்ஸ் ஐ வான்ட்"

சுட்டெரிக்கும் அவன் பார்வையில் அசராமால் அதியனை உற்று பார்த்தான் விஷ்ணு.

"ஐ டோன்ட் நோ ஹூ இஸ் ஷி பட் ஐ வான்ட் ஹர். ஐ வான்ட் மை மைலி என்னோட கடைசிவரைக்கும் இப்படியே" அதியனுக்கு கடுப்பாக இருந்தது.

"ஷீ இஸ் பார்ன் பார் மீ ராம் ஒன்லி பார் மீ" அவள் எனக்காக பிறந்தவள் என கத்தியவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

"நீங்க என் லைப்ல வரலனா நல்லாருந்திருக்கும் சார்" தொண்டை அடைத்தது அவனுக்கு.

"உன்னோட லைப்ல நான் எப்பையும் வரல ராம். ஆராதனா என்னோட லவ். நீ தான் எங்க லைப்ல இன்வால் ஆகுர"

"உங்க லைஃப்…? நான் கேட்டா மைலி நாளைக்கே என்ன கல்யாணம் பண்ணிப்பா. உங்களால அத தடுக்க முடியாது"

"எய்ய்… ஷட் அப்… ஷட்.. அவ என் பெண்டாட்டி இனிமே இப்படி பேசுன கொண்ணுடுவேன் உன்ன. அப்பறம் என்ன சொன்ன நீ சொன்ன கல்யாணம் பண்ணிப்பானா. யா மே பி… பட் ஐம் சுயர் கடைசி வரைக்கும் அவளோட காதல் எனக்கு தான். என்ன தான் நேசிப்பா . ஐ டர்ஸ்ட் மை லவ் மை ஆராதனா" அவன் குரலில் அத்தனை உறுதி

"அவ லவ் எனக்கு தேவையே இல்ல சார். பட் நான் அப்படி மைலிகிட்ட கேட்கவே மாட்டேன். நான் அவள காப்பாத்தினதுக்கு நன்றிகடனா நினைச்சி ஒத்துப்பா. எனக்கு அதுல சுத்தமா இஸ்டம் இல்ல. உங்ககூட வாழ்ரது அவளுக்கு சந்தோஷம்னா நான் அதுக்கு இடைஞ்சலா இருக்க மாட்டேன்" அவன் குரல் கரகரத்தது.

விஷ்ணுவிற்கு அதியன் மேல் இருந்த கோபத்தில் தான் இவ்வாறு பேசினான். ஆராதனாவிடம் கொண்ட அன்பு அவளை எளிதில் விட்டுக்கொடுக்க முடியவில்லை. அதியனை வெறுப்பேற்றி மனதை ஆற்றிக் கொண்டான். அவனுக்கு அவள் நட்பும் அன்புமே கடைசிவரை வேண்டும். சுயநலமில்லாத அன்பு ஒன்றுக்காக போரிட்டான்.

"ஆருக்கு என்ன ஆச்சு? எதுக்கு நீ காபாத்தின?" புருவம் முடிச்சிட விஷ்ணுவை பார்த்தான் அதியன்.

"வெறி நாய் கடிக்க இருந்துச்சு அடிச்சு விரட்டிவிட்டேன்" உணர்வற்று பேசினான்.

"நாய விரட்னதுக்கா?" அவனுக்கு புரியவில்லை.

"ஆமா மத்த மிருகம் கடிச்சா காயம் படும் ஏன் உயிர்கூட போய்டும். இது மனுஷ மிருகம் அகோர வெறி பிடிச்சது மைலிய நாசம் பண்ணிருப்பானுங்க நான் விரட்டிவிட்டேன்" அதியனுக்கு இடி இறங்கியது போல் மனம் நடுங்கியது.

"என்ன சொல்ற வி.. விஷ்ணு?"

"அவளுக்கு ஒரு பாஸ்ட் இருக்கு சார். ஆரம்பத்திலேந்து சொல்றேன் உங்களுக்கு தேவை படும்" என்றவன் ஆரம்பித்தான்.

"நான் தேர்ட் இயர் படிக்கும் போது ஆராதனா பஸ்ட் இயர் ஜாயின் பண்ணா. நீங்க லவ் பன்றவ நிஜமான மைலியே இல்ல சார் இவ ஆராதனா ராகவன். இந்த கோபமும் முறைச்சி பாக்குறதும் அதுல ஒரு உயிர் ஒரு துள்ளல் இருக்கும். இப்போ இருக்கவ உணர்ச்சிய மறைச்சி கல்லு மாதிரி மாறிட்டா. மைலினா என்ன தெரியுமா சார். அப்டினா ஸ்மைலி எப்போவும் கலகலனு சிரிச்சிட்டே இருப்பா அதுனால நாங்க வச்ச பேரு அது. அவ்வளவு சத்தமா பேசுவா கூடவே பிறந்தது மாதிரி ஒரு விளையாட்டு தனம். முயல் குட்டி மாதிரி இருந்தவள நெருப்பில பொசிக்கிட்டாங்க. அவளுக்காதான் நான் பிஜி அதே காலேஜ்ல சேர்ந்தேன். எங்க கேங்ல செல்ல பெண்ணு சார் அவ. அப்போ அவ செக்ண்ட இயர் அன்னைக்கு ஒரு நாள் யூனியன்லேந்து ஒரு இன்வைட் காட் கொடுத்தாங்க. ஒரு பேமஸ்சானா காலேஜ்ல எங்க டிபாட்மன்ட்க்கு மட்டும் ஒரு பன்ங்சஷன் ஏற்பாடு பண்ணிருந்தாங்க சார். அதுக்கு எல்லா இயர்லையும் டாப் ஸ்டுடென்ஸ் மூணு பேர்னு மொத்தமா பதினஞ்சு பேரு அதுல நானும் மைலியும் இருந்தோம். சந்தோஷ் அவள அனுப்ப மாட்டேனு தான் சொன்னான் நான் தான் ரொம்ப நேரம் பேசி அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கினேன்" கடந்த காலம் அவன் முன்னே விரிந்தது.

வருவாள்…..

போகாதடி என் பெண்ணே! ❤

 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 21

D7LBcQBGwMTJHhEA6vniFZAyy-66X85kU5PW_07iM7bvpcqUT3pRzS1Y9LP4MKsaOfnbX-Z_E95xPrXpbu_IAGSpttiyGvfSTAI9EuM3zq4m-KNebY91pDB3HkRFuGKJECMjMoyz=s0


"ஹேய்ய்ய்… யேஏஏஏஏஏஏ… மைலி மைலி ஹோஓஓஓ" வலது கையில் பெரிய ஷீல்டை தூக்கி நின்றாள் பதினெட்டு வயதில் பால்முகம் மாறாமல் இருந்த ஆராதனா. கத்தி கொண்டே அவளை வட்டம் அடித்தனர் விஷ்ணுவும் மற்ற மாணவர்களும்.

"ஓவர் ஆல் ஷீல்ட் அடிச்சி நம்ம காலேஜ் மானத்த காப்பாத்திட்ட மைலி… நாளைக்கு அந்த சொட்ட தலையன் எச்ஓடி கிட்ட இதை காட்டி நோஸ் கட் பண்றோம்" மீண்டும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

"நான் மட்டுமா நீங்களும் வின் பண்ணதால தான் எல்லாமே… இது நம்மளோட வெற்றி… மலர் காலேஜ் அடிச்ச கப்" என அவள் கத்த "ஓஓஓஓஓஓ…. ஊஊஊ" மற்றவர்களும் அவளுடன் கத்தினர்.

ஆடிட்டோரியமில் பாட்டு அலற மாணவர்கள் மொத்தமும் குதித்துக் கொண்டு இருந்தனர். மணி எட்டை நெருங்கிக் கொண்டு இருந்தது. அவர்களுடன் வந்தவர்களில் மூன்று பெண்கள் மட்டுமே. இருவர் தூரமாக செல்வதால் அவர்கள் இருவரையும் ஒரு மாணவனோடு அனுப்பிவிட்டு ஆராதனாவை விஷ்ணு பொறுப்பேற்றுக் கொண்டான்.

ஆறு மணிக்கே சந்தோஷ் போன் அடித்துவிட்டான் வெற்றியாளர் அறிவிப்பில் தாமதம் ஆகிவிட்டதால் அவசரமாக அவளை இழுத்துக் கொண்டு நடந்தான் விஷ்ணு… சுற்றியும் இருட்டாக இருந்தது. அனைவரும் ஆடிட்டோரியத்தில நிற்க ஆள் அரவம் அற்று இருந்தது வளாகம்.

"என்னாச்சு மைலி ஏன் நின்னுட்ட?"

உதட்டை கடித்தவள் தயங்கி வயிற்றை பிடித்துக்கொண்டு நின்றாள். கொஞ்சம் நேரம் சென்றாலும் உடையில் கரை பட்டுவிடும். என்ன செய்வது என்று தெரியவில்லை ஆராதனாவிற்க்கு. ஒரு ஆணிடம் எப்படி சொல்வது என விழித்தாள்.

பாட்டு போட்டியில் இருந்ததால் வெண்பட்டு பாவாடையும் மஞ்சள் தாவணியும் அணிந்திருந்தாள்.

"சொல்லு மைலி… ஏன் ஒரு மாதிரி இருக்க…? டைம் ஆச்சி பாரு"

"அது சீனியர் ரெ..ஸ்ட் ரூம் போகணும்"

"இப்பவா…? ம்ம் ரொம்ப தூரமா இருக்கே.. இருட்டா வேற இருக்கு. வெளிய பப்ளிக் ரெஸ்ட் ரூம் இருக்கும்… பார்துக்கலாம் வா"

"இல்ல… எ.. ப்.. ப். அது… மென்சுரேஷன்" புரிந்துக் கொண்டவன் தலையில் தட்டிக் கொண்டான்.

"சரி வா… " என அவளுடன் நடந்து வந்தவன் சிறிது தூரத்தில் நின்று கொண்டான். அங்கு ஒரு ஸ்பீக்கர் இருக்க பாட்டு சத்தம் காதை கிழித்தது.

அவன் போன் வைப்ரேட் ஆக எச்ஓடி தான் அழைத்தார். "சார்… ஹலோ.. சார்.. கேள்ஸ்சா… கேட்கல சார்... இருங்க சார் கொஞ்சம் தள்ளி வந்து பேசுறேன்" என்றவன் அவளை மறந்து தூரம் சென்றுவிட்டான்.

தாவணியை சரி செய்துக் கொண்டே வெளியில் வந்தவள் முன் முகத்தில் துணி கட்டிக் கொண்டு இரண்டு பேர் வந்து நிற்க பயந்து பின் நகர்ந்தாள் ஆராதனா.

"யா.. யாரு நீங்க?" என மிரட்டியவள் வாயை ஒருவன் பொத்த அவள் காலை மற்றவன் பிடித்து திமிர திமிர ஒரு கட்டிடத்தின் பின்புறம் தூக்கி சென்று உருட்டிவிட்டனர். அவள் எழுந்து ஓட பார்க்க வழிமறித்து அவளை நெருங்கினான் ஒருவன். பயத்தில் எச்சில் முழுங்கியவள் கண்களில் கண்ணீர் பொழிந்தது.

"என்ன விட்ருங்க… ப்ளீஸ் அண்ணா… காப்பாத்துங்க விஷ்ணு…. யாராச்சும் வாங்க… சந்தோஷ்… விட்ருங்க அண்ணா… விஷ்ணு… அம்மாஆஆஆ" அவன் பக்கத்தில் வர நடுங்கி அலறினாள் அவள். கையெடுத்துக் கும்பிட்டு அழுக அவளை அறைந்தவன் அவள் தாவணியை உருவினான்.

"அம்மா….ஆஆஆ விடுடா… யாராச்சும் வாங்க… ஹெல்ப் " என அழுதுக்கொண்டு குறுகி சுவற்றோடு ஒன்றி அமர்ந்துவிட்டாள்.

"ஏன் இப்படி பண்றிங்க..? என்ன விட்டுங்க.. அப்பா எங்க இருக்கிங்க…. சந்தோஷ்… வாஆஆ வா… காப்பாத்துங்க காப்பாத்துங்க" பிதற்றிக் கொண்டு வீறிட்டு அழுதவளை முடியை பிடித்து தூக்கியவன் "உன் அண்ணன் மட்டும் எங்க வீட்டு பொண்ண கூட்டிட்டு ஓடுனா சும்மா விட்ருவோமா நாங்க…? ****** இப்போ அவன் வீட்டு பொண்ணு மேல நாங்க கை வைக்கிறோம்.. பொ***** என்ன பண்றாங்கனு பாக்கிறேன்" என அறைந்தவன் கையை முறுக்கி உடைத்தான் அவள் அலறள் சத்தம் ஸ்பீக்கர் சத்தத்தில் கலந்து அமுங்கியது.

"இல்ல… எங்க ண்ண யாரையும் கூட்டிட்டு போகல… ஆஆஆ விடுடா… விஷ்ணுஉஉ… சந்தோஷ்…. ஆஆஆஆஆஆஆஆ… காப்பாத்துங்க" என அவன் அறைய அறைய கத்தினாள் துள்ளி விழுந்தாள்.

"டேய் சாதி கெட்ட பயலுங்க நம்மவீட்டு பொண்ணையா இழுத்துட்டு போனான்…. அவிங்க அசிங்க படணும்.. இவ துணிய உருவிட்டு இழுத்துட்டு போய் எல்லாரும் பாக்குற இடத்துல போடுவோம்… வெளில தலைகாட்ட கூடாது அவனுங்க" என அவேசமாக கத்தியவன் அவள் ஆடையில் கையை வைத்தான்.

"சிஸ்டர் என் ஜூனியர் ரெஸ்ட் ரூம் போனாங்க… ரொம்ப நேரம் ஆச்சு பேரு ஆராதனா. உள்ள இருக்காங்களானு பாருங்களேன்" கூட்டமாய் நின்ற பெண்களிடம் கெஞ்சினான் விஷ்ணு. அவர்களும் சென்று பார்த்துவிட்டு யாரும் இல்லை என்றனர்.

"டேய்… விஷ்ணு என்னடா என்னாச்சி..?" ஓடிவத்தனர் மற்றவர்கள்.

"மைலிய காணும் அண்ணா… எனக்கு பயமாருக்கு ரெஸ்ரூம் போறேன்னு போனா..." என சீனியரிடம் சொல்ல பக்கென்று ஆனது மற்றவர்களுக்கும்.

அது பெரிய வளாகம் என்பதால் ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி தேடினர். மற்ற கல்லூரி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து தேட அவள் செருப்பு ஒன்று மட்டும் கிடப்பதை கண்ட விஷ்ணு பித்துபிடித்தவன் போல் "மைலி மைலி" என கத்திக் கொண்டே போனில் டார்ச் ஆன் செய்து தேடினான். அதற்குள் பாட்டு நிறுத்தபட ஆராதனா கத்துவது நன்றாக கேட்டது. அவன் ஓடி சென்று பார்க்க இருவருடன் போராடிக் கொண்டு இருந்தாள். ஆடை எல்லாம் கிழிந்து தாவணி இல்லாமல் அவளை பார்த்து அதிர்ந்தவன் "டேய்…" என அவர்களின் மேல் பாய்ந்தான். விஷ்ணு கத்தியதில் அவன் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவருவதை பார்த்தவர்கள் அவள் தாவணியோடு ஓடிவிட்டனர்.

"மைலி மைலி…. என்ன பாரு" என சுவற்றில் ஒன்றி அலறி கொண்டுருந்தவளை அவன் உலுக்க "தள்ளி போ… விடுடா….. விஷ்ணு… ஆஆஆ ஆஆஆஆ" பெரும் சத்தம் போடவும் கீழே விழுந்துகிடந்த போனை எடுத்து டார்ச்சில் அவன் முகத்தை காட்டி சமாதானம் செய்தான். பயத்தில் அவனுடம் ஒன்டியவளை அவனால் சமாளிக்க முடியவில்லை. அவனை இடுப்போடு கட்டிக் கொண்டு "சந்தோஷ் சந்தோஷ்" என பிதற்றினாள்.

"நான் விஷ்ணுமா… மைலி ஒன்னும் இல்ல… பாரு உனக்கு ஒன்னும் இல்ல…" என்றவன் அவர்களை துரத்திக் கொண்டு சென்றவர்கள் திரும்பி வர… தன் சட்டையை கழட்டி அவளுக்கு போட்டு விட்டான்.

"சந்தோஷ்… அண்ணாட்ட… ண்ணா… வா… ண்ணா வா" என தேம்பி அழுதவளை என்ன செய்வது என்று தெரியாமல் சந்தோஷ்க்கு அழைத்தான் விஷ்ணு.

"விஷ்ணு எங்க அவ…? மணி எட்டரை ஆச்சு… போன் பண்ணா எடுக்க மாட்டியா" எடுத்தவுடன் சந்தோஷ் கோபமாக அதட்ட

"அது… சந்தோஷ்… அது.. இங்க கொஞ்சம் வர முடியுமா… சீக்கிரமா… மைலிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை"

"ஏன்..? என்ன தனாக்கு? என்னாச்சுனு கேக்குறேன்ல"

"ஒன்னுமில்ல கொஞ்சம் சீக்கிரம் வா… ப்ளீஸ்"

"என்னடா ஆச்சு அவளுக்கு..? என்ன பண்ணிங்க அவள?" என அதட்டியபடி சட்டையை மாட்டிக் கொண்டு படபடப்புடன் கீழே இறங்கினான் சந்தோஷ். ராகவனும் துர்காவும் திடுக்கிட்டு அவனை பார்த்தனர்.

"ஒரு பிரச்சனை… நீ இங்க வா… வந்து பேசிக்கலாம்"

"நீ தனா கிட்ட போனை குடு அவகிட்ட நான் பேசனும். இப்போ போன குடுக்க போறியா இல்லையா?" என கர்ஜிக்க அவளிடம் போனை கொடுத்த விஷ்ணு "சந்தோஷ் பேசுறான்" எனவும் போனை பிடுங்கி ஓஓவென கதற கைகால் எல்லாம் நடுங்கியது சந்தோஷ்க்கு.

"என்ன…? ஏய் என்னமா அழுகுற.?. தனா"

"சந்தோஷ் … ண்ஆ… எனக்கு பயமாருக்கு… ண்ணா சீக்கிரம் வா… ஆஆஆஆஆ பயமாருக்கு" அவள் அழுக "பயப்படாத இந்தோ நான் கிளம்பிட்டேன்" என ராகவனை அழைத்துக்கொண்டு ஓடினான் சந்தோஷ்.

மிரண்டு போயிருந்தாள் ஆராதனா தண்ணீர் கொடுத்து ஆசுவாசபடுத்திக் கொண்டு இருக்க கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தனர் இருவரும். அரை மயக்கத்தில் விஷ்ணு கைகுள் குறுகி கொண்டு அலங்கோலமாக இருந்தவளை பார்த்து இருவருக்குமே வயிற்றை பிசைந்தது.

"தள்ளுடா… என்ன நடந்தது? தனா தனா" என விஷ்ணுவை தள்ளிவிட்டு அவளை இழுத்து நிறுத்த அழுதுக் கொண்டே இருந்தாள் அவள்.

"சந்தோஷ் வீட்டுக்கு போய் பேசலாம்… ரொம்ப பயந்துட்டா" என அவனை அறைந்தவன் "வாய மூடு" என எச்சரித்து "சொல்லு" என அவளை உலுக்கி அவளை பேச வைத்தான்.

"நீ யா...ரையோ பொண்ண அழைச்சிட்டு ஓடிட்டனு… அடிச்சி டிரஸ் எல்லாம் கிழிசிட்டாங்க " என முனுமுனுப்பாக சொல்லி அழுக கண்கள் சிவந்துவிட்டாது அவனுக்கு.

"ஏய் உண்மைய சொல்லுடி என்ன நடந்துச்சுனு? பொய் சொல்லாத . நான் எவள அழைச்சிட்டு போனேன்" அதட்டினான் அவன்.

அவள் சொன்னதை எல்லாம் நம்பாத பார்வை பார்த்தான். முதல் நாள்தான் அவன் நண்பன் ஒருவன் தான் காதலித்த பெண் ஏமாற்றி விட்டதாகவும் அவளை இது போல் பழிவாங்க போறதாகவும் குடித்துவிட்டு உலறியது நினைவில் வர உடல் இறுகியது.

"இவளும் யாரையாவது காதலித்து ஏமாற்றி இருப்பாளோ" சந்தேகம் தோன்றியது.

ஒரு தப்பு நடந்தால் அதில் ஒரு பெண் சம்பந்த பட்டிருந்தாள் அவளிடம் தான் இந்த சமூகம் தவறு இருக்கிறதா என்று முதலில் ஆராய்கிறது. யார் விதித்த விதியோ…

"போலீஸ்க்கு கால் பண்ணிருக்கோம் சார். அமைதியா இருங்க" என பிரின்ஸிபால் சொல்ல "சார் அதெல்லாம் வேண்டாம் … வெளில தெரிஞ்சா அசிங்கம்" என மறுத்தார் ராகவன்.

"என்ன சார் பேசுறிங்க? இது எங்க காலேஜ்ல நடந்த பிரச்சனை எதாச்சும்னா மேனேஜ்மென்ட் என்னதான் கேட்பாங்க. நீங்க போலீஸ்கிட்ட பேசிக்கோங்க" என முடித்துவிட்டார்.

"தேவையா டா இது? நாளைக்கு பேப்பர்ல வந்தா மானம் மரியாதை எல்லாம் போயிடும்" என ராகவன் அவேசமாக பேச

"அப்போவே சொன்னேன் கேட்டியா… போக வேண்டாம்னு சொல்ல சொல்ல போனல… என்னடி இழுத்து வச்சிருக்க.. வெளில தெரிஞ்சா என்ன ஆகும்" என கோபம் கண்ணை மறைக்க அறைந்து தள்ளினான் சந்தோஷ். எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க "வலிக்குது அடிக்காத..." என கதறினாள் ஆராதனா.

"சொன்னேன் அவன் கூட அடிம்பிடிச்சி.. அப்படி என்ன பெரிய படிப்பு… ஊருசுத்த கிளம்பினல.. தேவையா? அப்படியே செத்து தொலைய வேண்டியது தானே டி… எங்க மானத்த வாங்க தான் உயிரோட இருக்கியா?" அடிக்க பாய்ந்தவனை இடையில் வந்து தடுத்தான் விஷ்ணு.

"டேய்… அவள பத்திரமா பாத்துக்குறனு சொல்லிதான கூட்டிட்டு போண… எல்லாம் உன்னால தான்டா நாயே.. " சந்தோஷ் விஷ்ணுவை அடிக்க வர இருவருக்கும் கைகலப்பானது. அவர்களை பிரித்துவிட மீண்டும் ஆராதனாவிடம் பாய்ந்தான். ஆடை கிழிந்து நின்றவளை பார்க்க பார்க்க நெருப்பு பற்றி எரிந்தது. அவர்களை வெட்டி கொள்ள ரத்தம் கொதித்தது. அதில் வார்த்தையை விட்டுவிட்டான் சந்தோஷ். உடலளவில் அவர்கள் காயப்படுத்த தன் குடும்பமே தன்னை நம்பாதது மனதளவில் காயப்பட்டாள்.

"எவண்டி அது..? சொல்லு உனக்கு தெரியாம இருக்காது… அவன கொள்ளாம விடமாட்டேன். யாருனு சொல்லு?" என கத்த சுற்றி இருப்பவர்கள் அவளை கேவலமாக பார்பது போல் ஒரு மாயை "செத்து போ" என மனம் கதற மயங்கி விழுந்தாள்.

அதற்குள் போலீஸ் வந்துவிட ஆராதனாவை தூக்கி கொண்டு விஷ்ணு ஒரு வகுப்பறையை திறந்து அவளை படுக்க வைத்தான். பாவாடை கிழிந்து அவள் மேனியை காட்ட வேகமாக ஓடியவன் நடனம் ஆட எடுத்துவந்திருந்த வேஸ்டியை கட்டிக்கொண்டு. அவளை எழுப்பி பேண்டை அணிய சொல்லி யாருக்கும் தெரியாமல் அவளை ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்தான்.

"அதில இருந்து மைலி யாருகிட்டையும் பேசுறதே இல்ல சார். அவங்க அப்பாவும் அண்ணனும் என்னமோ இவதான் தப்பு பண்ண மாதிரி தினைக்கும் பேசியே அவள முடக்கிட்டாங்க. காலேஜ்க்கும் அனுப்பல பிரின்ஸ்பில் தான் அவங்க வீட்டுல பேசி சமாதனம் பண்ணி வர வச்சாங்க… யாருகிட்டையும் பேச மாட்டா… அடிக்கடி கையை கிழிச்சி வச்சிருப்பா. ஒரு வழியா அதட்டி மிரட்டி கொஞ்சமா மாத்தினோம். பட் பழைய மைலி தொலைஞ்சி போயிட்டா. முடிஞ்சா அவள கண்டுபிடிங்க…" என நிறுத்தினான் விஷ்ணு.

அதியனுக்கு வலித்தது எவ்வளவு பெரிய கொடுமை தன்னவளுக்கு "அவங்க யாருனு கண்டுபிடிச்சாங்களா?" அவன் குரல் அப்பட்டமாக வேதனையை காட்டியது.

"எப்படி கண்டுபிடிப்பாங்க… சாதி தலைங்க தலையிட்டு அவனுங்கள யாருனே தெரியாம மறைச்சிட்டாங்க. போலீஸ்சும் காச வாங்கிட்டு அமுக்கிட்டாங்க… யாரோ யாரையோ கூட்டிட்டு ஓடினதுக்கு ஆள்மாத்தி மைலிமேல கையவச்சிட்டாங்க. அவளுக்கு நடந்த கொடுமைக்கு அவனுங்களுக்கு தண்டனையும் தரல இவளும் அதையே நினைச்சி ஒரு மாதிரி இறுகிட்டா"

"அவங்க யாருனு தெரியுமா விஷ்ணு உனக்கு?"

"நல்லாவே தெரியும்… அந்த சாதி பேரு ***** அவனுங்க தான் சார். இன்னோரு விசியம் தெரியுமா நானும் அந்த டாஷ்சை சேர்ந்தவன் தான். சொல்லவே அருவருப்பா இருக்கு. அவனுங்க மட்டும் யாருனு தெரியல… தேடிட்டு தான் இருக்கேன்" கைமுஷ்டி இருக தொடையில் தட்டிக் கொண்டான்.

அவன் வெளியில் சொல்லிவிட்டான் அதியனால் சொல்ல முடியவில்லை ஆத்திரம் தொண்டையை அடைத்தது.

"சாரி சார்… நான் பேசுனத மனசுல வச்சிகிட்டு மைலிய என்கிட்ட பேசவிடாம பண்ணிடாதிங்க" அவன் கோபம் குறைய தானாக மனிப்புகேட்டான்.

"நான் உன்கிட்ட இத பத்தி பேசுனதுக்கும் அதான் காரணம். நீ ஆருக்கு ரொம்ப முக்கியமானவன். என் வொயிப் பிரண்ட்ஸ் எனக்கும் முக்கியம் சோ உன்கூட எனக்கும் நல்ல டர்ம்ஸ் இருக்கனும்னு நினைச்சேன். அவ சந்தோசம் தான் எனக்கு முக்கியம். சோ பீ பிரண்ட்ஸ்" என கையை நீட்ட ஒரு நொடி தயங்கியவன் சந்தோஷமாக கையை பிடித்து கொண்டான்.

"சார் உங்களால முடியும்னு நினைச்சி ஒரு உதவி கேட்குறேன்… எனக்கு பழைய மைலிய மீட்டு தருவிங்களா?" என்ற விஷ்ணுவை பார்த்து சிரித்தான் அதியன்.

❤❤❤❤❤❤❤
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
விமலனும் தஷினாவும் ஹாஸ்பிடலில் இருந்து வெளியில் வர சரியாக ஆராதனா வந்த பஸ்சும் அங்கு நின்றது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விமலன் தக்ஷினாவோடு பஸ்சில் ஏறினான். காலை கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. விமலன் ஆராதனாவிடம் பேச ஆர்வம் காட்டினான்.

"மார்னிங் சார்"

"மார்னிங்… என்னஆஃபிஸா?"

"ஆமா சார்" என புன்னகை சிந்த தக்ஷினாவை ஒரு பார்வை பார்த்தான் விமலன்.

அதில் "நான் சொன்னேன்ல நீயே பார்த்துக்கோ" என செய்தி இருக்க ஆராதனாவை உற்றுப் பார்த்தாள் தக்ஷினா. அந்த பார்வையில் ஏதோ இருப்பதாக தான் தோன்றியது ஆராதனாவிற்க்கு.

"உனக்கு சென்னைதான் சொந்த ஊரா?" விமலன்

"இல்ல சார் நான் பிறக்குறதுக்கு முன்னாடி தான் சென்னைல செட்டில் ஆகிட்டாங்க"

"ஓஓ... சரி சரி சாப்டாச்சா?"

"ம்ம் நீங்க சார்?"

"சார் சொல்லாத… அண்ணானே சொல்லு" எனவும் சந்தோஷமாக "சரி அண்ணா சாப்டாச்சா" என்றாள்.

"அட அதெல்லாம் விமி சாப்டாச்சு. விமி உனக்கு ஒன்னு தெரியுமா இவ உனக்கு பெரிய ரசிகையாம்" என "எனக்கா?" ஆச்சரியமாக விமலன் கேட்க தலையை ஆட்டினாள் ஆராதனா.

"அதிசயம் தான்… இத உங்க ஆபிஸ்க்கு வருவான்ல புவி அவன்கிட்ட சொல்லிடு" என மிரண்டு விழித்தாள் அவள்.

"ஏன்? ஏன் இப்படி பயம்? " விமலன்.

"அவரா…? நான் எப்படி? அவங்கள பாத்தாலே பயமாருக்கும்" என

"குழந்தை பயன் மா அவன்… வெளில தான் விரப்பா திரிவான். பாசகார பயபுள்ள" என மீசையை முறுக்கி விட்டான் அவன்.

"ஆர் நீ புவி கூட பேசுனதே இல்லையா?" தீ

"ம்ம்... என்ன இண்டர்வியூ பண்ணதே அவர் தான் தீ"

"அப்புறம் ஏன் பயப்படுற?"

"அது அவர் போலீஸ்" எனவும் இருவரும் அவளை முறைத்தனர்.

"நாங்களும் போலீஸ் தான்" என திருதிருவென முழித்தாள் அவள்.

விமலன் கண்ணை காட்ட ஒற்றை கண்ணடித்த தக்ஷினா "ஆமா ஆர் நீ எப்போ ஃப்ரீ? ஒரு நாள் நீ எங்க வீட்டுக்கு வரனும்" பேசிக் கொண்டே அவள் வாட்டர் பாட்டிலை எடுத்து விமலனிடம் கொடுக்க அதை மறைத்துக் வைத்துக் கொண்டான் அவன்.

"சரி" என தலையசைத்தாள் ஆராதனா.

கூட்டம் ஏற விமலன் பின்னால் சென்றுவிட்டான். இருவரும் அப்போது தான் கவனித்தனர் பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிசங்கள் செய்துக் கொண்டு இருக்க நெளிந்துக் கொண்டு இருந்தாள் அவள். தக்ஷினா அவனை அடிக்க எழ தடுத்து அமர சொன்ன ஆராதனாவை கேள்வியாக பார்த்தாள்.

"இது அந்த பொண்ணு தான் தண்டனை கொடுக்கனும். இன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவிங்க ஆனா நாளைக்கு.. அடுத்து அடுத்து நீங்களா உதவி பண்ண முடியும்" என அவளை முறைத்தாள் தக்ஷினா.

"அதுக்குனு பார்த்துட்டு இருக்க சொல்றியா" என "உதவி தேவை படுற இடத்துல தான் செய்யனும்" அதில் அத்தனை ஆளுமை ஏனோ அவளால் மீற தோனவில்லை.

"இது என் கடமை" விடாமல் அவள் சொல்ல "இருக்கலாம் தன்னை தானே காப்பாத்திக்கிறது தான் நமக்கான முதல் கடமை. அத தடுக்காதிங்க" என்றவள் அவர்களை வெறித்து பார்க்க "நிச்சயமா இவளுக்கு ஏதோ நடந்திருக்கு" என மனதில் நினைத்தாள் தக்ஷினா.

அவன் மிகவும் அத்துமீற அப்பெண் எழுந்து நகர்ந்து நின்றுக் கொண்டாள். அவ்விடத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுமி அமர அவன் அவளையும் உரசிக் கொண்டு இருந்தான். தொடகூடாது இடத்தை எல்லாம் மறைமுகமாக தொடவும் தீ கோபமாக ஆராதனாவை "பார் அவனை" என பார்க்க அவள் முகமோ தீயாக ஜொலித்தது.

"பொறுக்கி நாயே கைய எடுடா" அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் ஆராதனா. பின் சிறுமியை பிடித்து இழுத்தவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து மேலே எழுப்பினாள்.

அனைவரும் வேடுக்கை பார்க்க "செய்வியா செய்வியா" என வெறிபிடித்து அறைய திகைத்து பார்த்தாள் தக்ஷினா.

விமலன் கூட்டத்தை நகர்த்திவிட்டு வர "அண்ணா உங்க பெல்ட்டை தாங்க" என அவனோ தக்ஷினாவை பார்க்க "கொடு" என்றாள். அவனும் கழட்டி கொடுக்க கையில் சுற்றிக் கொண்டு அவனை சீட்டை விட்டு வெளியே தள்ளியவள் வெளுத்து வாங்கினாள்.

"எம்மா எம்மா ஏன் அடிக்கிற?" என நடத்துனர் வர "பொறுக்கி தனம் பண்றான்… சின்ன பொண்ண.. ஸ்கூல் போற பிள்ளைய என்ன பண்ணான் தெரியுமா சார்.. இவன" என மதம்பிடித்து பெல்டை வீச அவரே சற்று நடுங்கி போனார்.

"இரும்மா... சார் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என கத்திவிட்டு "நீயா அடிக்காத… வந்துட்டாங்க ஜான்சிராணி" என முனுமுனுக்க உக்கிரமாக பார்த்தாள் அவள்.

பயணசீட்டு கொடுக்கும் சாக்கில் பெண்களை உரசுவதே வேலையாக வைத்துக் கொண்டு இருந்தவனுக்கு ஆராதனாவை கண்டு கடுப்பாக தான் இருந்தது.

"யோவ்.. என்ன சொன்ன?" விமலன் கோபமாக வர உயிரே போய்விட்டது அவனுக்கு.

"சார் நீங்கள… ஒன்னும் சொல்லல சார்" என பின்னடித்தவன் பிறகு பேசவேயில்லை. அவளை விமலனும் தக்ஷினாவும் பிடித்து இழுத்து அமைதி படுத்தினர். அதற்குள் அந்த பெண்ணும் குடையை எடுத்து அவனை ரெண்டு அடி அடித்துவிட்டு அவளிடம் நன்றி சொன்னாள். அவனை அங்கு இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரிடம் ஒப்படைத்து தான் வந்தனர்.

"ஆர் அவன நீ தான் அடிக்க வேண்டாம்னு சொன்ன. இப்போ நீ தான் வெளுத்து வாங்கின. எனக்கு புரியலையே" என்றாள் தக்ஷினா.

"அதுவா தீ.. அவ சின்ன பொண்ணு இன்னைக்கு நான் செஞ்சது அவளுக்கு நல்லாவே பதிஞ்சிருக்கும். இப்படி தப்பு பண்ணா இந்த மாதிரி தண்டனை தரனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன். இனிமே யாராச்சும் அவகிட்ட வம்பு பண்ணா அந்த பொண்ணு மாதிரி விலகி போகம எதிரித்து நிப்பா. அவள பார்த்து நாலுபேர் எதிர்பாங்க. அமைதியா போறநால தானே கட்டுப்பாடு இல்லமா இப்படி நடந்துக்குறாங்க. ஒரு ஒருத்தனுக்கும் பயம் வேனும் தப்பு பண்ணா அடிச்சிருவாங்கனு நடுங்கனும். இப்போ இருக்க சமூகத்தை என்னால மாத்த முடியமா இருக்கலாம் பட் இந்த குழந்தைங்க தான் வருங்காலம். நாம நினைச்சா அத நல்லதா மாத்தலாம் அதுக்கான என்னோட சின்ன விதை" என்றவளை இருவரும் பரவசமாக பார்த்தனர்.

"வன்முறை மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது ஆராதனா" விமலன்.

"நிஜம் தான் அண்ணா. ஆனா இந்த மாதிரி கொடுமைகளுக்கு இத விட சிறந்த வேற தண்டனை எனக்கு தெரியல"

விமலனுக்கு தீயும் ஆருவும் வேறாக தெரியவில்லை. சிந்தனையிலும் நடத்தையிலும் ஒற்றுமை அதிகம் தான் இருந்தது. ஆராதனாவை முதலில் பயந்த சுபாவம் என்று தான் நினைத்தான். இப்போது புரிந்தது அவள் இயற்கையாக வே தைரியமானவள் என்று. சந்தர்ப்ப சூழ்நிலை தான் அவளுடய பயமும் அமைதியும் என உணர்ந்தான்.

"ஆராதனாவும் தங்களோடு வளர்ந்திருந்தால்..." என ஒரு தொடர் அவன் மனதில் ஓடியது. அவள் கிளம்பி சென்றதும் கலக்கமாக விமலனை பார்தாள் தக்ஷினா.

"நீ சொன்னது நிஜம் தான் விமி… நானும் கவனிச்சேன்" என "இத சும்மா விட முடியாது நான் என்னனு பார்கிறேன்" என அவள் கையை தட்டிக் கொடுத்தான்.

"மேடம் ஒரு முக்கியமான விசயம்" வேகமாக வந்து நின்றார் முரளி.

"சொல்லுங்க" என்றவள் சாய்ந்து அமர விரலி நினைவகத்தில் உள்ளதை ஓட விட்டார். அதில் ஒரு படம் சத்தியா இருக்க மற்றொன்று ராதிகாவின் சடலம். சில இடங்கள் ஒவ்வொரு படத்திலும் சிகப்பு கலர் வட்டம் போடபட்டு இருக்க அதை பார்தவளின் கண்கள் கோபமாக மின்னின.

"மேடம் இத பாருங்க அந்த காயம் எல்லாம் பாதி ஒரே மாதிரி தான் இருக்கு. இந்த ரெண்டு பாடிலையும் சில வித்தியாசம் தான் இருக்கு. இந்த ராதிகாவையும் கம்பியால் அடிச்சி தாடையை நகத்திருக்காங்க. அட்டாப்ஸீ ரிப்போட்ல தெரிஞ்சிரும்"

"பாடி எப்போ இங்க வருது?"

"இன்னைக்கு மதியம் வந்திரும் மேடம்"

"ம்ம் அந்த பாடிய நான் சொல்ற டாக்டர்கிட்ட ஒப்படைசிட்டு வேற அனாதை பாடிய டிஸ்போஸ் பண்ணுங்க" என்றவளை பார்த்தார் முரளி.

"இது சட்டத்துக்கு புறம்பான விசியம் மேடம்"

"நம்ம நாட்டுல சட்டம் பல விசியத்துல ஓழுங்கில்லாம தான் இருக்கு முரளி. மன்னிப்பு மன்னிக்க வேண்டிய தப்புக்குதான் தரனும். சட்டம் கடுமையா மாற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது. மக்களுக்கு தான் நம்ம வேலை செய்யனும் ஆரசாங்கமே மக்களோட வேலைகாரங்கதான். நான் சொன்னத செய்ங்க. இனிமேல் ஒரு பொண்ணும் இவனுங்களால செத்தா அது நாம கொண்ண மாதிரிதான்" என முடித்துவிட்டாள்.

நம் நாட்டு சட்டங்கள் அனைத்தும் திருந்தி வாழ வாய்ப்பு கொடுப்பவைதான். ஆனால் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை வேண்டும் அல்லவா. மனிதமே இல்லாமல் கொடூரங்கள் செய்பவர்களிடம் ஏன் மனித தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும்? இறந்த உயிருக்கு என்ன தான் பதில்? வாழவே தகுதியற்றவர்களுக்கு திருந்தி வாழ எதற்கு இந்த வாய்பு? என் கேள்விக்கு என்ன பதில்? சட்டம் கடுமையாக மாறாதவரை 1000 நிர்பயாக்கள் 1000 ஆசிபா 1000 பிரியங்கா தினமும் உயிர் விட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.

சட்டம் கடமையை மறக்கும் போது நாங்கள் அதை கையில் எடுக்கும் நாள் மிக அருகில். பாவிகளை கொன்று எங்கள் விலங்கை திறக்கும் நாள் அருகில். கரண்டியை பிடித்த கை கத்தி ஏந்தும் நாள் அருகில். தூளி கட்டி ஆட்டிய கை துப்பாக்கி ஏந்தும் நாள் அருகில்.

மிளகாய் தூள் நெடியில் என் கைபைக்கு கண்கள் எரிகிறதாம்.

தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்தார் முத்து வேல்.

"நீங்க குணமுதிதன்… சரியா? கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்" என்றவரை பார்த்து சிரித்தான் அவன்.

"நீங்க கேட்டது இதுல இருக்கு சார்" என ஒரு பைலை நீட்ட அவசரமாக புரட்டியவர் கண்களில் கண்ணீர் தேங்கியது. அவனை நன்றியோடு பார்த்தார்.

"நன்றிப்பா… அத தவற என்கிட்ட சொல்ல ஒன்னும்மே இல்ல… நீ எனக்கு என் உயிர மீட்டு கொடுத்திருக்க" என அவன் கையை பிடித்து கண்கலங்கினார் அவர்.

"நான் இத உங்களுக்காக செய்யல சார். தக்ஷினாக்காக செஞ்சேன்… அவங்க மாதிரி ஒரு பொண்ண இந்த நாட்டுக்கு கொடுத்த உங்களுக்கு என் சார்பா ஒரு பரிசு இது. எத்தன பேர் இன்னைக்கு அவங்களால சந்தோஷமா நிம்மதியா இருங்காங்க. ஷீ இஸ் ஏ ஜெம் சார்" என எழுந்துக் கொண்டான் அவன்.

"குணமுதிதன் எதாச்சும் ஹெல்ப் வேனும்னா சொல்லுங்க… உங்களுக்கு உதவ நான் காத்துட்டு இருக்கேன்" என்றவரை ஒரு நிமிடம் பார்தவன் சிறு புன்னகையோடு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டான் அந்த டிடக்டிவ்.

அதில் "தேவைபட்டா சொல்றேன்" என்ற அர்த்தம் இருப்பதை உணர்ந்தவர் "கண்டிப்பா" என மனதில் சொல்லிக் கொண்டார்.

வருவாள்…

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 22
tuqEFxt1efK1e_eq8O10Lk9zwPCKZNYkZwZ2XYI7VrH9Yb0Js2rdXF6LtyfkT5sFzbuKyC76gB2p2E2R65U6qcMddhr-8ep9Arg_Sj4YDqTYcKMLgnE_oUBYSaPp1tMZKa5CTveF=s0


"மேம் ரிப்போர்ட் பாசிட்டிவ்" என அவள் கையில் தரப்பட்ட பைலை தக்ஷினா வேகமாக புரட்ட விமலன் கண்கலங்க அவளை பார்த்தான். (டிஎன்ஏ மேட்ச் 100 பர்சண்ட். ஐடன்டிகல் ட்வின்ஸ்) இவை தான் அவர்களின் நிலைக்கு காரணம். ஆராதனாவிடம் இருந்து எடுத்த வாட்டர் பாட்டிலை டெஸ்ட்டிற்கு அனுப்பி அவள் சலைவாவில் இருந்து எடுத்த டி.என்.ஏ வை தக்ஷினாவோடு மேட்ச் செய்ததில் அவர்கள் கணித்தது தான் வந்திருந்தது.

அங்கு முத்துவேலும் மனைவியை தேடி ஓடினார். பெரிய ஹாலில் தம்புரா வைத்துக் கொண்டு இசை மீட்டிக் கொண்டு இருந்தவர் அருகில் வந்து அமர்ந்தார் முத்து வேல். சிறு சிரிப்போடு கண்ணை திறந்த சாந்தினி அவரை பார்க்க கண்ணீர் வடிய பைலை சாந்தினியிடம் தந்தார். உள்ளே பார்த்தவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை "ஏன் தக்ஷினாவை ஆராதனா என்று எழுதியிருக்கிறார்கள்" என படிக்க படிக்க உணர்வு பிழம்பாக மாறியவர் அருவியாய் கண்கள் பொழிய ஆதரவாக முத்துவேலிடம் தஞ்சம் புகுந்தார்.

"என் மக… நம்ம அம்முலு… சாகல கடவுள் கண்திறந்திட்டார்" சாமியறை நோக்கி ஓட முத்து வேலும் கடவுளை கையெடுத்து வணங்கினார். தக்ஷினாவும் விமலனும் வீட்டிற்கு ஓடிவந்தனர்.

"அம்மா அப்பா…" கத்திக் கொண்டே வந்த விமலன் அம்மாவை பார்த்ததும் ஓடி சென்று தூக்கி சுற்றினான்.

"அம்மா நம்ம அம்முலு கிடச்சாச்சி… அவ சாகல மா… " எனவும் தெரியும் என தலையாட்டியவர் நடந்ததை சொல்ல விமலனும் எல்லாவற்றையும் சொல்ல குடும்பமே ஆனந்த கூத்தாடியது.

தக்ஷினாவுக்கு முதலில் தாங்கள் இரட்டை பிறவி என்பதே வினோதமாக உணர்ந்தாள். பல முறை சொல்லி பார்த்தாள் ஆனந்தமாக இருந்தது. தன்னை போல தன்னுடன் ஒட்டிக் கொண்டு ஒரு உயிர் நானும் அவளும் வேறு இல்லை.

அதுதான் அவள்பால் அவளை ஈர்த்ததா. எல்லாரிடமும் கறாராக நடப்பவள் ஆராவை பார்த்ததும் ஓடி சென்று பேசியது என்ன சிரித்தது என்ன. என் சகோதரி என் உடன்பிறப்பு.

"டேய்… நான் அம்முலுவ பாக்கனும் விமலா… இப்போவே" சாந்தினி அடம்பிடிக்க மறுத்தார் முத்துவேல் காரணம் அந்த பைலில் குணமுதிதன் குறிப்பாக அவள் மனநிலையை பற்றி எழுதியிருந்தான். அவளுக்கு சட்டென்று ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என்பதால் "கொஞ்ச கொஞ்சமா அப்ரோச் பண்ணலாம்" என்றார்.

"நோ... என் குழந்தைய நான் பாத்தே ஆகனும்" என சாந்தினி துடிக்க முத்துவேலை தவிர்த்து அனைவரும் கிளம்பினர். அவர்க்கு இன்னும் பல வேலைகள் இருந்தது.

தன் முன் அமர்ந்திருந்த தக்ஷினாவை தான் பார்தான் அதியன். ஆராதனா சாந்தினியுடன் திக்கி திணறி பேசிக் கொண்டு இருந்தாள். திடீரென்று வந்த சாந்தினி அன்பு ரசத்தை பொழிய என்ன பேசுவது என்று முழித்தாள். புவி வழியாக விமலனுக்கு அவர்கள் காதல் விஷியம் தெரியும் என்பதால் நேராக இங்கேயே அழைத்து வந்திருந்தான்.

தீயின் தாய் அவர் மகள் போலவே இருப்பவளிடம் பேச நினைத்தார் இது தான் ஆராதனா என்னியது. ஒருவாறு பேசி முடித்து மல்லுகட்டி சாந்தினியை அழைத்து சென்றான் விமலன். அதியன் புருவ உயர்வுக்கு அது ஒரு காரணம் என்றால் தக்ஷினாவும் ஆராதனாவும் உருவ ஒற்றுமை மட்டுமின்றி பழக்கவழக்கங்கள், குரல், செய்கை அனைத்தும் ஒரு ஒற்றுமையை காட்டியது. இருவரும் இடது பக்க தலையை சாய்த்து பார்பது உள்பட வலதுபக்க செயல்பாடு இருவருக்கும் அதிகமாக இருந்தது. தக்ஷினா இடது கையால் மேஜையில் விளையாடிக் கொண்டு இருக்க ஆராதனா இதேபோல் அடிக்கடி யோசிக்கும் போது செய்வதை பார்த்திருக்கிறான். காபி கப்பை தூக்கும் பாங்கு அவள் வலது கையில் எடுத்தாள் எல்லாமே ஒற்றுமையாய் இருக்க வேற்றுமையும் தெரிந்தது. அது அவன் உணர்வு தக்ஷினாவை பார்க்க அவனுக்கு எதுவும் தோன்றவில்லை ஆனால் தூரத்தில் நின்ற அவன் பப்பியை பார்த்தாலே ஒரு உணர்வு.

"பப்பி விஷ்ணுகிட்ட நியூ ஆடர்கான எஸ்டிமேட் இருக்கு அத சரிபாத்து எடுத்துட்டு வா" என அவளை அனுப்பிவிட்டு அவளிடமே கேட்டான்.

"நீயும் ஆருவும் டிவின்ஸா?"

"ஆமா… ஷி இஸ் மை டிவின்" என்றவள் எழுந்து சென்றுவிட்டாள். அதியனுக்கு சங்கடமாக இருந்தது "இது தெரியவந்தால் ஆரு மனநிலை என்ன?" என்று கவலையாக இருந்தது.

ஆண் ஆதிக்கம் காட்டி மட்டம்தட்டும் தந்தையும் சாகோதரனையுமே அவளுக்கு மிகவும் பிடித்தம். அதுவும் சந்தோஷ் என்றாலே பயத்தை மீறி அதில் இருக்கும் பாசம், அவனுக்கான அக்கறை தலையை வலித்தது அவனுக்கு. "அவள் உடைந்து போய்விடக்கூடாதே" என்று கவலை கொண்டவன் அவளை மனதலவில் தையார் படுத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். உண்மை இனிப்போ கசப்போ கண்டிபாக சுவைத்துதான் ஆகவேண்டும்.

அதன் பொருட்டு ராகவன் குடும்பம் ஆதிஅந்தம் வரை அதியனாலும் முத்துவேலாலும் அலச பட்டது. தஞ்சையை நோக்கி அதியனும் முத்துவேலும் படைஎடுத்தனர். ஆராதனாவின் தாய்வழி தந்தையை பிடித்துவிட்டான் அதியன். தன் அதிகாரத்தை பயன்படுத்தி தூர்காவுக்கு இறந்த பெண்குழந்தை பிறந்ததை அறிந்துக் கொண்டார் முத்துவேல். இருவரும் நமசிவாயம் எனும் முதியவர் முன் அமர்ந்திருந்தனர் அவர் தான் துர்காவின் தந்தை.

"என்ன மன்னிச்சிக்கோங்க" என கைகூப்பினார் அவர்.

"எனக்கு ஒத்த பொண்ணு ஆசையா இருந்த நகபணத்தெல்லாம் போட்டு அரசாங்க உத்தியோக காரன்னு எம்மருமவனுக்கு கட்டி குடுத்தேன். அவ தலை எழுத்து மாமியாகாரி எம்பொண்ண பிச்சி பிடிங்கி தான் எடுத்தா… முத பிரசவம் ஆம்பள புள்ள இல்லனா வீட்டிக்கு வராதனு சொல்லி அனுப்பிவிட்டாய்ங்க… எம்மவ ஏறாத கோவில் இல்ல கண்யாகுமாரி மாதா வரைக்கும் வேண்டி நேந்துகிட்டுதான் சந்தோசு பய பொறந்தான். இரண்டாவது தடைவை உண்டானப்போ எம்மருவபிள்ளைக்கு வேலை போறமாதிரி இருந்துச்சுனு அவ்வோ வீட்டுல ஜோசியகாரன தேடி போனாங்க. படுவாவி அவரு நேரத்துக்கு பொட்ட புள்ள பொறந்தாதான் நல்லதுனு சொல்லிட்டாய்ங்க திருப்பவும் எம்மக கோவில் கோவிலா ஏறி இறங்கினா. இல்லனா அவருக்கு வேற கல்யாணம் பண்றதா அவ மாமியா மிரட்டிட்டு போச்சி… ஆண்ணோ பொண்ணோ நம்ம கையிலையா சாமி இருக்கு. இவிங்க படுத்துன பாட்டுல எம்பொண்ணு உடம்ப விட்டுறுச்சி புள்ள செத்துதான் ப்பா பொறந்தது. எம்பொண்ணு சாவ கிடந்தா யாரும் வந்து எட்டிக்கூட பாக்கல புள்ள செத்துபோச்சினா மனச விட்டுருவாளோனு நான் தான்" என நிறுத்தியவர் கண்ணை துடைத்துக் கொண்டார்.

"பக்கத்துல இரும்பு அடிக்க வந்த வடமாநிலகாரங்ககிட்ட இருந்து காசு கொடுத்து ஒரு பொம்பள புள்ளைய வாங்கினேன். பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும் ரோசா பூ மாதிரி இருப்பா எம்பேத்தி. குழந்தை செத்தது எனக்கும் என் வீட்டுக்காரிக்கு மட்டும் தான் தெரியும். பதினாறு பண்ணி அனுப்பிவச்சோம் அப்டியும் எம்பேத்திய கீழ்முழி காரி பொறந்த நேரம் ராகு காலம்னு எம் புள்ளைய அலகலிச்சாங்க. ஏதோ தனா தலையெடுத்து தான் எம் பொண்ணு நிம்மதியா வாழுது" கடந்த காலத்தை அறிந்துக் கொண்டவர்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லி கிளம்பினர்.

"அங்கிள் ஒரு நிமிஷம்" முத்துவேலை அழைத்தான் அதியன்.

"மாமானு கூப்பிடுங்க மாப்பிள" என்றவரை பார்த்து சந்தோஷமாக தலையாட்டினான்.

"உங்களுக்கு சம்மதமா மாமா?"

"என் பொண்ணுக்காக இவ்வளவு செய்றிங்க உங்கள மாதிரி மாப்பிள கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்" என்றவர் அவனை அனைத்துக் கொண்டார்.

"மாமா அது… ஆரு எப்படி உங்ககிட்ட இருந்து மிஸ் ஆனா?" ஒரு நிமிடம் கண்ணை மூடியவர் வேதனையை விழுங்கினார்.

"அப்போலாம் எங்கிட்ட வசதி இல்லப்பா. நாங்க லவ் மேரேஜ் எங்க ரெண்டு பேரு வீட்டுலையும் ஏத்துக்கல ஆனாலும் சந்தோஷமாதான் இருந்தோம். உங்க அத்தைக்கு பிரசவலி வந்தப்போ பிரைவேட் ஆஹ்பிடல்ல பாக்க என்க்கிட்ட காசு இல்ல அதனால கவர்மெண்ட்க்கு தான் போனோம். குழந்தைங்க பிறந்ததும் இங்குபெட்டர்ல வைக்க எடுத்து போனாங்க ப்பா. அவங்க அலட்சியம் ஒரு மூனு மணி நேரத்தில அங்க ஹாக்சிஜன் சிலிண்டர் வெடிச்சி தீ பிடிச்சதுல பாதி குழந்தைங்கள தான் காப்பாத்தினாங்க. தக்ஷினாவ என் கைல கொடுந்தவங்க அம்முலு இருந்த பெட் எரிஞ்சு போச்சுனு சொன்னாங்க நானும் விதிய நொந்துகிட்டு சாந்தினிய எப்படி சமாளிக்கிறதுனு அதிலே இருந்தேன்"

"அப்பறம் எப்படி மாமா அவள தேட ஆரம்பிச்சிங்க?"

"அங்க சாந்தினிக்கு பிரசவம் பாத்த நர்ஸ் ஒருத்தவங்க தீ காயம் பட்டு இருந்தாங்க. மருந்து வாங்க போகும் போது அவங்கள பாத்துட்டு நலம் விசாரிக்க போனப்பதான் சொன்னாங்க அவங்க தான் அம்முவையும் அம்முலுவையும் ஒன்னா வெளில தூக்கிட்டு வந்து காப்பாதினாங்கனு. யாரோ குழந்தையை மாத்தி எடுத்து போயிட்டாங்க ப்பா. எனக்கு பெரிய அதிர்ச்சி நான் இருக்கும் போதே என் பொண்ணு காணப்போயிட்டாளேனு. பசில வாடடுனாளா? பத்தரமா இருக்காளா? எதுவும் தெரியால அதே நினைப்பில ரோடு கிரஸ் பண்ணதுல அக்சிடண்ட் ஆகி ரெண்டு வருஷம் நடக்கமுடியாம போச்சி மாப்பிள. எனக்கு சரியானதுலேந்து நானும் தேடிகிட்டேதான் இருந்தேன். இத்தன வருசம் கழிச்சி தான் எப்பொண்ணு எனக்கு கிடைச்சிருக்கா" என கண்கலங்கினார் அவர்.

அவரை தேற்றியவன் மெதுவாக விமலன் குடும்பத்திடம் அவளுக்கு நெருக்கம் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டான். அடிக்கடி எதிர்ச்சையாக அவளை பார்த்த விமலன் மணிகனக்கில் பேசினான். தீயும் ஆராவும் தினமும் மாலை ஒன்றாக பஸ்சில் சந்தித்தனர். ஆரு செல்லும் கோவிலில் சாந்தினி அன்னதானம் இட்டார் அர்ச்சனை செய்தார்.

அதியன் அவளை காரில் அள்ளிபோட்டுக் கொண்டு ஆஃபிஸ் நேரத்தில் விமலன் வீட்டு பார்டிக்கு விருந்துக்கு என சென்றுவந்தான். அனைத்தும் அவளுக்கு சந்தேகம் வாராதது போல் பார்த்துக் கொண்டனர். அவளுக்கே தெரியாமல் அவர்களிடம் ஒரு பிணைப்பு உருவானது. விமலன் காதலுக்கு ஐடியா கொடுப்பதில் ஆரம்பித்து தக்ஷினா கேசில் அவளுடன் கலந்துரையாடல் வரை. மூன்றே மாதங்களில் இயல்பான உரிமை உணர்வு தோன்றியிருந்தது.
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
*********************************
"என்னமா பாட்டு மிஸ் வீட்டுக்கு கிளம்பிட்டிங்களா?" என கதவை அடைத்துக் கொண்டு நின்றான் அவன்.

அந்த பள்ளி உரிமையாளரின் மகன். கடைந்தெடுத்த பொறுக்கி அயோக்கியன். அவள் இந்த பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. முதலில் சாதாரனமாக பேசியவன் அவளுக்கென்று யாருமில்லை என்பதை தெரிந்துக் கொண்ட பின் சுயரூபத்தை காட்ட தொடங்கியிருந்தான். பாட்டு வகுப்பு விடுமுறை தினத்திலும் பள்ளி நாட்களிலும் மாலை வறை இருப்பதனால் அபிராமி வீட்டுக்கு கிளம்பும் நேரம் அனைவரும் சென்றிருப்பர். தனியாக இருப்பவளிடம் தூண்டில் போடுபவனை கண்டு அவளுக்கு அநேக பயம் தான்.

அவன் அத்துமீறல்கள் அதிகரிக்க "வேலையை விட்டுவிடலாமா?" என்றுகூட நினைத்தது உண்டு ஆனால் படிப்புக்கும் பசிக்கும் வயிறுக்கும் படுக்கையில் விழுந்த தாய்க்கும் என்ன செய்வது? என்ற யோசனை அவன் உரசல்களும் இரட்டை அர்த்த பேச்சுகளும் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்து போனாள்.

பல மாலை வேளைகளில் ஆட்கள் அற்ற நேரத்தில் அவன் பார்வை அபியின் வயிற்றில் கிளியை மூட்ட தன் மாணவர்களுடனும் அவர்கள் பெற்றோருடனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தப்பித்து ஓடிவிடுவாள்.

தகுந்த நேரம் எதிர்பார்த்து அந்த ஓநாயும் வசந்த காலம் எங்கே என்று அபியும் எதிர்பார்க்க ஓநாயக்குதான் காலம் கனிந்தது போல் அன்று யாரும் இல்லாம் பள்ளி அமைதியாக இருந்தது. அலுவலகம் பூட்டபட்டு இருக்க பார்வை சட்டென்று வாயிலை நோக்கியது. அங்கு வாட்ச்மேனை காணவில்லை "அய்யோ" என்று அலறியது மனம்.

"ஆமா சார் கிளம்பிட்டேன்" இதை சொல்வதற்குள் இத்தனையும் அவள் பார்வை சுற்றி வந்தது.

அவன் கதவை மூடி தாழ்பாளை போட அவள் பயம் உறுதியானதில் உரைந்து நின்றாள் அது அவன் பார்வைக்கு மட்டுமே. கத்த கூட தோன்றவில்லை அது முட்டாள் தனமும்கூட யாருமே இல்லாத இடத்தில் கத்தினால் மட்டும் என்ன நடக்கும். அவனுடன் போறாட சக்தி வேண்டுமே.. அடுத்து "எப்படி தப்பிப்பது" என்று மூலை பல வழிகளை வகுத்தது. எல்லாமே அவன் அருகில் நெருங்க எடுத்துக் கொண்ட நேரத்தில். கைகளை பின்னால் மறைத்து அறுந்துகிடந்த வீணை நரம்பை உள்ளங்கையில் சுற்றிக் கொண்டாள்.

"என்ன அபிராமி எப்படி தப்பிக்கிறதுனு யோசனையா? எவ்வளவு நாள் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும். இங்க பாரு சாவி மெயின் கேட் பூட்டியாச்சு வாட்ச் மேனும் வரமாட்டான். அடம்பிடிக்கலனா உனக்கு தான் நல்லது" என்றவன் சாவியை தூக்கி ஆட்ட அசையாமல் நின்றாள்.

"சார் வழிய விடுங்க… வெளில சொன்னேன் உங்களுக்கு தான் அசிங்கம்"

"ஹான் ஹாஹாஹா சொல்லிதான் பாரேன் ஒருத்தனும் கேட்க மாட்டான். நீ மட்டும் ஒத்துக்கிட்டா இங்கேயே உனக்கு பர்மணட் பண்ணி தரேன் அபி மாசம் நாற்பதாயிரம் சப்பளம் என்னமட்டும் அடிக்கடி கவணிச்சிகிட்டா போதும்" என இளித்தவன் அவள் தோளை பற்ற மூஞ்சை திருப்பிக் கொண்டாள் அவள்.

"தள்ளி போறிங்களா இல்லையா?"

"ஹீம்ம் போலாம் போலாம்" அவன் கிறங்கி போய் நிற்க அவன் கைகள் அவள் மேனியில் வலம் வந்தது அவனை தள்ள முயன்றாள் அழுத்தமாக நின்றான் அவன். அவள் கழுத்தில் முகம் புதைத்தவனை வலுவை திரட்டி தள்ளியவள் வயோலினை தூக்கி செவிலில் அடிக்க ரத்தம் உடைப்பெடுத்து மண்டியிட்டான் அவன். கையில் இருந்த கம்பியை அவன் கழுத்தில் போட்டு அவள் இறுக்க கைகளால் துலாவியவன் தலை தொங்கி விட பயத்தில் அவன் சட்டை பையில் இருந்த சாவியை எடுத்தவள் அவனை அப்படியே விட்டுவிட்டு பையை எடுத்துக் கொண்டு சைட் கேட்டை திறந்து வெளியில் ஓடிவந்தாள்.

படபடவென்று அடிக்கும் இதயத்துடன் அவள் விழிகள் சழன்று அவனை தேடியது. அவன் அங்கு இல்லை "எங்க போனிங்க" என மனதில் அழுதவள் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறி அமர்ந்தாள்.

"எங்கமா போகனும் ஹாஸ்பிடலா?" அவள் கையில் இருந்த ரத்தத்தை பார்த்துவிட்டு ஆட்டோகாரண் கேட்க "பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன் போங்க" என்றவள் கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளுக்கு கண்முன்னால் தோன்றியது விமலன் முகம் தான். அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது. இத்தனை நாட்கள் அவள் பின்தான் அலைந்தான் காலை அவள் கல்லூரி வரும்போது சில சமயம் நிற்பான் இல்லை மாலை பள்ளி பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் நிற்பான். ஒரு முறை அவளிடம் அவன் பேச முயறச்சிக்க பயத்தில் திரும்பி பாரக்காமல் ஓடியவள் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விரும்ப ஆராம்பித்து இருந்தாள்.

அவனிடம் சொல்லதான் பயம் மூன்று நாட்களுக்கு முன் காதலர் தினத்தன்று அவளுக்காக மதியமே பள்ளி வாயிலில் நின்றிருந்தவன் அவள் பயத்தில் தெரித்து ஓடிவிட மாலை வரை அங்கேயே நின்று அவள் வந்ததும் ஒரு கிப்ட் பாக்ஸை அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த பாக்ஸை திறந்து பார்க்க மை லவ் என்ற ஒரு வாழ்த்து அட்டையும் ஹாரிபாட்டர் தீம் மியூசிக் பாக்ஸ்சும் இருந்தது. அவளுக்கு ஹாரிபாட்டர் என்றாள் கொள்ளை பிரியம் அதை தெரிந்துக் கொண்டவன் அவளுக்காக வாங்கி பரிசளித்திருந்தான். அதை ஆசையாக வருடிக் கொண்டே நிமிர்ந்தவள் சாலைக்கு அந்த பக்கம் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த விமலனை பார்த்து வெட்கப்பட்டு அந்த பக்கம் திரும்பி நின்றுக் கொண்டாள் காதலை மீறிய பயம். காதலிக்க நினைக்கவில்லை ஆனால் வந்துவிட்டதே பட்ட காயம் எல்லாவற்றிலையும் துணிந்து செயல்பட விடாமல் தடுத்தது.

விமலன் மென்மையாக அவளை கையாண்டான். காலேஜ் பீஸ் முழுவதும் அவளுக்கே தெரியாமல் டரஸ்ட் என்று பொய் சொல்லி அவனே ஏற்றுக் கொண்டான். அவள் பட்ட காயம் அறிந்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்ககூடாது என்று என்னி தள்ளி நின்றாலும் தன் காதலை அவளுக்கு புரியவைப்பதில் பிடிவாதம் தான்.

காவல் நிலையம் வந்துவிட தயங்கி தயங்கி உள்ளே சென்றாள் அபிராமி. பழைய நியாபகம் தோன்றினாலும் முன்னேற வேண்டுமே. ரத்த கரையுடன் அவளை பார்த்தவர்கள் புருவம் உயர்த்த அவன் பேரில் கம்பிளைட் எழுதி கொடுத்தாள் அவள்.


"உட்காருமா" என்ற எஸ்.ஐ எழுந்து சென்றுவிட்டார். மிரட்சியோடு நகத்தை கடித்துக் கொண்டு நடுங்கும் கையுடன் இருந்தவளை அதட்டியது எஸ்.ஐயின் கர்ண கொடுரமான குரல்.

"ஏய் எழுந்திரி" என பக்கத்தில் வந்து கத்த சட்டென்று பையை கீழே போட்டுவிட்டு எழுந்து நின்றாள் அவள்.

"ஏ..என்ன சார்? "

"காச திருடிட்டு அதை கையும்காலுமா பிடிச்சோனே சிதார்த் சார அடிச்சி போட்டுட்டு இங்க வந்து உன்கிட்ட தப்பா நடந்தாங்கனு டிராமா பண்றியா" என அவளிடம் கை ஓங்க பயத்தில் சேரிலே விழுந்தாள்.

"இல்ல சார் நான் எந்த பணத்தையும் எடுக்கல… அவன் தப்பா நடந்துக்க பாத்தான் பயத்துல தான் நான் அடிச்சேன்" என அழுதவளை கண்டுக் கொள்ளாது "பார்வதி இவள உண்மைய சொல்ல வை" என கான்ஸ்டபிளிடம் ஆடர்போட கெஞ்சினாள் அவள்.

பல அறைகளும் அடிகளும் வாங்கி சோர்ந்து போய் அந்த பெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவமானமாக இருந்தது தக்ஷினா மேமிடம் சொல்லலாம் என்று பார்தாலும் அவள் பையை பிடிங்கி வைத்துக் கொண்டனர்.

"இந்த தண்ணிய குடி" என ஸ்டேனோ கொடுத்ததை குடித்தாள்.

அவர் மெதுவாக அவளிடம் பேசினார் "இங்க பாரு பாப்பா இந்த சிதார்த்து சரியான கேடி நீ வந்ததும் சாரு போன எடுத்துட்டு போனாரே எதுக்கு? அவனுக்கு போன் பண்ணதான். பேரம் பேசி ரெண்டு லட்சம் வாங்கிட்டாரு. ஒதுங்கி பேயிருக்கலாம் நீ. இனி உன்ன என்ன பண்ண போறானோ. யாராச்சும் தெரிஞ்சவங்க நம்பர் இருந்தா தா நான் போன் பண்றேன்" என்றார் ஆதரவாக.

"கடவுளே எவ்வளவு தான் சோதிப்பாய்?" மனதில் நொந்தவள்
"அவன் செத்துட்டான்னு பயந்து தான் வந்தேன்" என ஒரு நம்பரை எழுதி கொடுத்துவிட்டு கண்மூடிக் கொண்டாள்.

"ஏய் என்ன தூக்கமா? எழுந்திரு.." அவள் காலில் ஓங்கி மதித்தவனை பார்த்து பயந்து எழுந்தாள் அவள்.

"அவரு அங்க சீரியஸா இருக்காராம். ஒழுங்கா பணம் எங்கனு சொல்லிடு இல்ல அடிவாங்கி செத்துருவ"

"நான் எடுக்கல சார். நான் நேரா ஸ்கூல்லேந்து இங்க தான் வரேன்" என அழுக மெல்ல பக்கத்தில் வந்தவன்

"நீ என்ன பெரிய பத்தினியா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா கரஞ்சு போயிடுவியா… வேனா என்னையும் அட்ஜஸ்ட் பண்ணு உன்ன இதுலேந்து காப்பாத்தி விடுறேன். இப்பிடி கும்னு இருந்தா எல்லாருக்கும் கைவைக்கதான் தோனும். என்ன ஓகேவா?" என மேலும் கீழும் பார்த்தவனை "ச்சீ பொறுக்கி உங்க வீட்டு பொண்ணுன வைக்க தோனுமா" என தள்ள "யார பாத்து பொறுக்கினு சொன்ன திருட்டு நாயே" என்றவன் பலம் கொண்டு அறைய தூர போய் விழுந்தாள் அவள்.

"சார்…. லேடிஸ் சார் நீங்க அடிக்கிறது தப்பு" இடையில் வந்த கான்ஸ்டபிளை முறைத்துவிட்டு அவள் கையை பூட்ஸால் நசுக்கினான் அவன்.

"அம்மாஆஆஆஆ" அவளிடம் இருந்து பெரிய சத்தம் வர "ஆஆஆ" என்ற சத்தத்துடன் கீழே வழுந்தான் அவன். கோபமாக தக்ஷினா நிற்க பரிதவிப்போடு ஆராதனாவும் விமலனும் பின்னே ஓடிவந்தனர்.

"அபி அபி" என அவளை இழுத்து விமலன் நெஞ்ஜோடு அனைத்துக் கொள்ள அழுதவளை தட்டிக் கொடுத்தாள் ஆராதனா.

விமலன் அனைப்பில் இருந்தவளை பார்த்து விதிர்விதிர்த்து போனான் எஸ்.ஐ.

"பெரிய இடத்து பொண்ணு போலயே" என பயத்துடன் எழுந்தவனை கணல் பார்வை பார்த்தான் விமலன்.

"ராஸ்கல் எவ்வளவு தையிரம் இருந்தா அடிப்ப நீ" என அனைவரும் பார்க்க அவனை விளாசிய தக்ஷினாவை தள்ளிக் கொண்டு அவனை அறைந்தான் விமலன்.

அடுத்து ஐந்து நிமிடத்தில் சஸ்பென்ஸன் ஆடரை அவனிடம் நிட்டியவள் பார்த்த பார்வையிலே பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டான்.

மூவரும் ஆராதனா நிச்சயத்திறக்கு டிரெஸ் எடுத்துக் கொண்டு இருக்கும் போது தக்ஷினாவிற்கு போன் வர அதில் கேட்ட செய்தியில் மூவரும் பாதியிலே ஓடி வந்திருந்தனர்.

"விமி அவள அழச்சிட்டு வா" என்றவள் ஹாஸ்பிடல் நோக்கி காரை விட்டாள். அடுத்த நாள் காலை பரபரப்பு செய்தியாக ரெட்லைட் ஏரியாவில் சிக்கிய பிரபல ****பள்ளி நிறுவனரின் மகன். போனில் இருத்து சிக்கிய ஆபாச வீடியோ மற்றும் படங்களால் சர்ச்சை. பெண்களுடன் நிர்வாணமாக நடனமாடும் ஆபாச வீடியோ நெட்டில் பகிரபட்டதால் அவமானத்தில் தற்கொலை முயற்சி" என ஓட திருப்தியாக பார்த்தது அவனால் பாதிக்க பட்ட ஆசிரியர்கள் மட்டுமல்ல பல மாணவிகளும் தான்.

அவன் ஆடவில்லை ஆடவைக்க பட்டான். தற்கொலை முயற்சி செய்யவில்லை செய்ய சொல்லி துண்புருத்த பட்டான். எல்லாமே தீ என்னும் பெண் சிங்கத்தின் விரலசைவில் நடந்தது.

இதை தவிர்த்து மறைமுகமாக இனி மற்ற பெண்களை என்ன கட்டிய மனைவியை தொடகூட அவனுக்கு தைரியம் வராத அளவில் தண்டனை தரபட்டது. ஹிட்லரின் ரசிகைக்கு தண்டனைக்கா பஞ்சம்.

பெண் என்பவள் தீ தான் ஒரு நாள் சுடும்.

வருவாள்…
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 23

மெல்ல கதவை திறந்துக் கொண்டு வந்தான் விமலன். பிங் கலர் நயிட்டி அணிந்து உடலை குறுக்கி படுத்திருந்த அபிராமியிடம் சென்றவன் அவள் முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் சின்ன முத்தம் வைத்தான். பின் கன்றி சிவந்திருந்த இடத்தில் ஊதிவிட்டவன் டிராயரை திறக்க பதறி எழுந்தாள் அவள்.

"ஹேய் ஒன்னும் இல்ல நான் தான் பயப்படாத"

மூச்சை இழுத்து விட்டவள் தயக்கமாக அவனை பார்த்தாள். பின்னே இத்தனை நாள் அவனை பார்த்து பயந்து ஓடிவிட்டு நேற்று முழுக்க அவன் மார்பில் சாய்ந்து அழுது அரற்றி பிதற்றி தாளமாட்டாமல் விமலன் அவள் இதழை வன்மையாக சிறைசெய்ய சிறு விசும்பலுடன் அவனிடம் அடங்கியவள் தூக்க மருந்து உபாயத்தில் அப்படியே உறங்கிவிட்டாள்.

கையில் பெயின்கில்லரை எடுத்தவன் அவள் உதடை விரால் தொட்டு பார்பதை கண்டு சிரித்தான். "நியாபகம் இருக்கா உனக்கு?" என அவள் அருகில் அமர நகர்ந்தவளை இடுப்போடு இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.

"தள்ளி போகாத அபி இனிமே உன்ன நான் தனியா விடமாட்டேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றவன் அவளிடம் பதில்லாமல் போக விலக்கி பார்த்தான். அவனுக்கு மிகவும் பிடித்த கண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தது.

"ஏன்டா அபி உனக்கு என்ன பிடிக்கலையா?"

"இல்ல… பிடிச்சிருக்கு ரொம்ப" அவசரமாக மறுத்தாள். "ஆனா எனக்கு அதுக்கான தகுதி இல்லையே"

"என்ன தகுதி? பைத்தியமா டி நீ. வேலிட் ரீசன் சொல்லு" அதட்டினான் விமலன்.

"நான் இன்னும் காலேஜ் முடிக்கல… அம்மாவ நான் தான் பாத்துக்கனும். எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு" தீர்க்கமாக சொன்னவளை கர்வமாக பார்த்தான்.

"பண்ணலாம் எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிட்டு கூட பண்ணலாம். உன்ன யாரும் தடுக்க மாட்டாங்க. நீ வேலைக்கு போகலாம் படிக்கலாம். உன் சொந்த கால்ல நிக்கலாம் அதுக்கு நான் தடையா இருக்கவே மாட்டேன்" என்றவன் அவள் கையையை எடுத்து முத்தம் வைத்தான்.

"நிஜமாவா? என் கிட்ட நகை பணம் எதுவும் கிடையாது பரவாலையா?"

"நிஜம்தான் கிருக்கி உன்கிட்ட நகை பணம் இருந்தாலும் எனக்கு வேண்டாம். எனக்கு இந்த 50 கேஜி தாஜ்மகாலே போதும்" என்றவன் அவள் கையை கன்னதில் வைத்துக் கொண்டான்.

"நீங்க மினிஸ்டர் பையன். நான் சாதாரன வீட்டு வேலை செய்றவங்க பெத்த பொண்ணு. ஒரு பாட்டு டீச்சர்"

"நான் விமலன் நீ அபிராமி எனக்கும் உனக்கும் பிடிச்சிருக்கு அவ்வளவு தான் குழம்பாத" பொறுமையாக எடுத்துச் சொல்ல அழுதவளை மென்மையாக அனைத்தவன் "நீ இனி அழ கூடாது பேபி… உனக்கு நான் இருக்கேன். உங்க அம்மாவ ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம் அவங்க ட்ரீட்மென்ட் முடிஞ்சி இங்கயே அழச்சிட்டு வந்துக்கலாம்" என்றவனை அவளும் அனைத்துக் கொண்டாள்.

"உங்ககிட்ட இருக்க காசு பதவி அந்தஸ்து எல்லாமே எனக்கு பயமா இருக்கு சார். எனக்கு சாதாரன வாழ்கையே போதும் உங்களுக்கு ஏத்த மாதிரி என்ன மாற சொல்ல மாட்டிங்கள?"

"இந்த பாட்டு டீச்சர் அபிராமிய தான் நான் லவ் பண்ணேன்… என்ன நம்பலாம் நீ" என்றவன் அவளை விடுவித்தான்.

"உனக்கு ட்ரெஸ் கபோர்ட்ல இருக்கு. வேற எதாச்சும் வேனும்னா தயங்காத தீ கிட்ட கேளு. ஆராவும் மேல தான் இருக்கா அவகிட்ட பேசிட்டு இரு நான் வெளிய போயிட்டு வரேன்"

"ம்ம் சரி" என்றவள் இதழில் மென்மையாக வருடியவன் ஒரு சிறு முத்தம் ஒன்று தந்து விழிகளை இதழால் துடைத்து மறக்காமல் அவளுக்கு மருந்தை போட்டு விட்டவன் முத்தம் ஒன்றையும் தந்துவிட்டு வெளியில் வர முத்துவேலிடம் பேசிக் கொண்டு இருந்தான் அதியன்.

"வாங்க அத்தான்… ஆராவ பார்க்க வந்திங்களா?" என்றவாறே அவனருகில் அமர்ந்தான் விமலன்.
உறவுமுறை சொல்லி அழைக்க வேண்டும் என்பது சாந்தினியின் ஸ்ரிக்ட் ஆடர்

"இல்ல விமல் மாமாகிட்ட இன்விடேஷன் பத்தி பேச வந்தேன். யாரெல்லாம் இன்வைட் பண்றதுனு அப்பா கேட்க சொன்னாங்க" என விமலனும் முத்து வேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அவருகிட்ட கேட்டுடிங்களா மாப்பிள?" என்று தயங்கினார் முத்துவேல். சட்டென்று அவன் முகத்தில் வெறுப்பு "அவ எங்க?" என விமலனிடம் கேட்டவன் மேல என கண்காட்டியதும் உடல் இறுக அவரை பார்த்தான்.

"அந்த ஆளுகிட்ட கேட்கனும்னு அவசியம் இல்ல மாமா. அத்தைகிட்ட கேட்டுட்டேன் அவங்க சைடு யாரும் இல்லனு சொல்லிட்டாங்க"

"துர்கா அம்மா கிட்ட கேட்டா போதுமா? உங்க மச்சான்னு அங்கயும் ஒருத்தவன் இருக்கானே அவன்கிட்டயும் கேட்டுக்கோங்க அத்தான். இல்லனா தாம்தூம்னு குதிப்பான்" வெறுப்புடன் விமலன் சொல்ல சிரித்தான் அதியன்.

"என்ன விமல் ரொம்ப கோபமா இருக்க? எப்போதும் போல சண்டையா?"

"ம்ம் நேத்து ட்ரஸ் எடுக்க ஆராவ அழைச்சிட்டு வர அங்கபோனா அவள வீட்டுல வச்சிக்கிட்டே இல்லனு சொல்றான் அத்தான். துர்காமா தான் கண்ணகாட்டி சொன்னாங்க. திருமிரு பிடிச்சவன் எனக்கு முன்னாடியே என் தங்கச்சிய முறைக்கிறான்" என கருவினான் விமலன்.

சந்தோஷ்க்கும் விமலனுக்கும் ஒரு போரே நடந்து கொண்டு இருக்க அதியனுக்கும் ராகவனுக்கும் நடந்த போரில் அதி வெற்றி பெற்று காரிகையை கைபற்றிவிட்டான். ஆனாலும் போர்தான் முடிந்த பாடில்லை.

"விமி உன் டார்லிங் வாசல்ல நிக்கிறான்" சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்தாள் தக்ஷினா.

"யாரு?" என திருப்பி பார்க்க சந்தோஷ் தான் நின்றிருந்தான். அவளை விமலன் முறைக்க பக்கென்று சிரித்துவிட்டான் அதியன்.

"வாப்பா சந்தோஷ்…. உள்ள வா.." முத்துவேல் எழுத்து சென்று வரவேற்பு தர "இல்ல சார்… பரவாயில்ல நான் தனாவ கூட்டிட்டு போக வந்தேன்" என சுவற்றை பார்த்து பேசினான். மறந்தும் அவன் பார்வை அவர்களிடம் செல்லவில்லை.

அவசரமாக எழுந்த விமலன் ஆராதனாவை கீழே வர விடமால் செய்ய மாடியை நோக்கி ஓடினான் "அதி மாம்ஸ் விமிக்கு புசிகேட்(பொசசிவ்) உள்ள பறாண்ட ஆராம்பிச்சிட்டு" என அதியனிடம் சொல்லி சத்தமாக சிரித்தாள் தக்ஷினா. அச்சத்ததில் அவர்களை பார்த்த சந்தோஷ் அதியனை உறுத்து விழித்தான்.

"அந்த பொண்ணுகிட்ட உனக்கு என்ன பேச்சு" பார்வையிலே பொசுக்கினான். எதற்கு வம்பு என அதியனே அவனை பார்த்து சிரித்து வைத்தான். பின்னே சந்தோஷ் மனம் நொந்தால் அதியை ஆரு பக்கத்திலே விடமாட்டாளே.

"சரி இரு நான் அம்முலுவ வர சொல்றேன்" என்றவர் அவளுக்கு அழைக்க தடதட என ஓடிவந்தாள் அவள். பின்னே மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு விமலனும் வர நமட்டு சிரிப்புடன் இருவரும் அவனை பார்த்தனர்.

முத்துவேல் வெளியில் சென்றுவிட

"சந்தோஷ்… வா…. ண்ணா உள்ள வா…" என அவன் கையை பிடித்து இழுத்து வந்தவள் அதியன் பக்கத்தில் அமர வைத்துவிட்டு கிட்சனுக்கு ஓடி ப்ளாக் டி அவனக்கு பிடித்த பதத்தில் ஸ்நாக்ஸ் உடன் எடுத்து வந்தாள். விமலனையும் அதியனையும் மிதப்பாக பார்த்து கொண்டே அவன் எடுத்துக் கொள்ள இருவரும் ஆராதனாவை பார்த்து பல்லை கடித்தனர்.

"வாங்க அத்தான் எப்போ வந்திங்க…? காஃபி எடுத்துட்டு வரட்டுமா?" என அப்போதுதான் அதியனை கவனித்தவள் அவனை உபசரிக்க கிலுங்கி சிரித்தான் விமலன்.

"பார்த்திங்களா அத்தான் உங்கள அவ இப்போதான் பாக்குறா... இதுல எதோ அலேபதியோ டெலிபதியோ என்னமோ பீளா விட்டிங்க"

"அடபாவி மச்சான் கட்சி எதுவும் மாறிடாத…" என கிசுகிசுக்க இருவருக்கும் காஃபியை நீட்டினாள் அவள்.

"பார்த்தல என் பொண்டாட்டிய" என்றவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வாங்கினான்.

ஆராதனா அதியனிடம் கண்ணை காட்ட விதியை நொந்தவன் "நல்லா இருக்கீங்களா சந்தோஷ்.." என "ம்ம்…" என்றவன் திமிர் காட்ட "தேவையாடி எனக்கு?" அவளை முறைத்தான் அதியன்.

இதை எதையும் கண்டுக் கொள்ளாத சந்தோஷ் அவளை அழைத்து செல்வதில் குறியாக இருந்தான்.

"தனா சீக்கிரம் கிளம்பு வீட்டுக்கு போகனும் எனக்கு ஆபிஸ் இருக்கு"
என்றதும் தலையாட்ட போனவளை விமலன் மறுத்தான்.

"அது ண்ணா நான் மதியம் வரவா?"

"உன்ன நான் கிளம்ப சொன்னேன்" என்றவன் கண்ணை உருட்ட தலையாட்டிவிட்டு மாடி ஏறிவிட்டாள்.

"ஹலோ என் தங்கச்சிய மிரட்டுற வேலை வேண்டாம்" விமலன் எகிற தக்ஷினா தலையில் கைவைத்துக் கொண்டாள். அதியன் அப்போவே எஸ்கேப் ஆகிவிட்டான் முடியம் சண்டையா அது.

"என் தங்கச்சிய நான் மிரட்டுவேன் உனக்கு என்ன? "

"அவ என்கூட பொறந்த தங்கச்சி. நீ மிரட்டுனா பாத்துட்டு இருக்க மாட்டேன்"

"என்ன பண்ணுவ… ஜெயில்ல பிடிச்சி போட்ருவியா… போலீஸ்ச பாத்து பயப்புட நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல ஹான். அவ பொறந்ததுலேந்து என்கூட தான் இருக்கா… எனக்கு அப்பறம் தான் நீ. இந்தோ பக்கத்துல இருக்காங்ல இவங்க தான் உன் தங்கச்சி… தனா இல்ல… என்னோட உரிமைய நான் விட்டு கொடுக்க மாட்டான். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ. பாப்பா எங்க வீட்டு பொண்ணு" என சவால் விட்டவன் கீழே இறங்கிய ஆராதனாவை தர தர வென்று இழுத்துக் சென்றான்.

"விடு விமி அவனுக்கும் கஷ்டமாதான இருக்கும். யாராச்சும் திடிர்னு வந்து என்ன அவங்க தங்கச்சினு சொல்லி உனக்கு இல்லனா கோபம்தான வரும்" என சமாதானமாக கையை பிடிக்க அதை உதறியவன் கோபம் அவளுக்கு திகைப்பாகாதான் இருந்தது.

***************************

அந்த மேடயில் வரிசையாக பலர் அமர்ந்திருக்க வெளிநாட்டுப் பெண் சரளமாக ஆங்கிலத்தில் வரவேற்புரை வாசித்தாள். கடைசியாக "வெல் கம் மிஸ்டர் ஆர். அர். ஆயுஷ் ரத்தோர் அண்ட் டாக்டர் ரோகன் பக்டே" என கரகோஷம் காதை கிழித்தது.




Continue in next 👉👉
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
6JnCmx5fdNvDVH945eCNncdor10yJ5cY_S7ImOLDcyq9qXXoPEODkpGzISQUCFKFXs_lqetS_NDmXTnFRD-ep9wJ-X_XMZVQOPVB26KSd091rHnIBr6LLXsmkltQquHgusQ7Qzc7=s0


ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் மாஸ்கோ ஓப்பரேட்டா ஸ்டேட் அக்கடமிக் தேட்டரில் தான் அந்த விழா நடந்துக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மருத்துவ மாணவர்கள். வேதியியல் துறை நிபுணர்கள் பெரும் ஆய்வங்கள் நடத்தும் உரிமையாளர்கள் அந்நாட்டு அதிகாரிகள் பிஸ்னஸ் மேன்ஸ் அவர்களுடன் பாதுகாவலர்கள் என உலகிலேயே மிக முக்கியமானவர்களால் நிரம்பி வழிந்தது அவ்விடம்.


ஆர் ஆர் குழுமத்தின் கீழ் உள்ள ஆய்வகத்தின் தலைமையிடம் ரஷ்சியாவில் இருந்தாலும் அதன் கிளைகள் உலகம் முழுவதும் இந்தியா போல் வளர்ந்து வரும் பல நாடுகளில் இருந்தது. அதுவும் இந்தியாவில் தான் புது மருந்துகள் அனைத்தும் முதிலில் விநியோகம் ஆகும். அதுதான் தரமற்ற மருந்தாக இருந்தாலும் அதன் பக்க விளைவுகள் பற்றி கவலை கொள்ளாது கார்ப்பரேட் முதலாளிகள் கட்டும் கப்பத்திற்கு ஆப்பை அசைக்கும் குரங்கை போல் அனுமதி கொடுக்கிறார்களே நம் நாட்டு அரசியல் வியாதிகள்.

உலகில் தடை செய்யப்பட்ட குப்பைகள் விஷங்கள் அனைத்தும் நம் நாட்டில் உணவுப் பொருட்களாக சமையல் பொருட்களாக மருந்துகளாக அலங்கரித்துக் கொண்டுதானே இருக்கின்றன. பாதிக்கபடுவது மக்கள் தானே என்ற அலட்சியமா? காசுக்கு ஓட்டை மற்றும் நாம் விற்கவில்லை நம் உடல் உயிரையும் சேர்த்துதான் விற்றுக்கொண்டு இருக்கிறோம்.

எந்த நாட்டில் எந்த மருந்தை விநியோகிப்பது என்பதை மட்டும் போரட் ஆப் டிரக்டர்ஸ் ஆனா ரத்தோர் குடும்பம் முடிவு செய்ய ஆர் ஆர் ஆய்வகத்தின் மொத்தமும் வெறும் முப்பது வயதே ஆனா ரோகன் பக்டே பொறுப்பில் தான் இயங்கியது. இதை தவிர்த்து அயுஷின் தம்பி சிவகேஷ் ரத்தோரின் பொறுப்பில் உள்ள மருத்துவமனைகள் எண்ணில் அடங்கா. அயுஷின் மகன் துருவும் சிவகேஷ் மகன் சந்திபும் தான் இத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசுகள். ரோகன் பணபலம் உள்ளவானக இருந்தாலும் அவர்களிடம் இருப்பதில் கால்பங்கு கூட தேராது ஆனால் அவன் அறிவு அபரிவிதமானது. மூவரும் பள்ளி தோழர்கள் ரோகட் துருவின் தந்தையிடம் இருக்கும் லேப்பை பற்றி அறிந்து கொண்ட பின் தான் அவனுடனான நட்பை வளர்த்தான். ஏன் என்றால் அதிநவீன கருவிகள் அனைத்துமே அவர்களிடம் இருந்தது. துருவ் தன் நண்பனுக்காக தந்தையிடம் பேசி அவனுக்கு லேப்பை பயண்படுத்திக்க அனுமதி பெற்று தர உண்ண உறங்க மட்டும் தான் அவன் அவனுக்காக நேரம் செலவிட்டான். அவன் பதினைந்து வயதிலே ஒரு மருந்தை கண்டுபிடிக்க அதை கண்டு வியந்த ஆயுஷ் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். விளைவு ஆர் ஆர் நிறுவனும் அதன் இளம் சைன்டிஸ்ட் ரோகன் பக்டேவும் பல அவார்டை குவித்தனர்.


அதில் இருந்து ரோகனையும் ஆர் ஆர்ரையும் பிரித்து பார்க்கும் தையிரியம் யாரிடழும் இல்லை. ஆயுஷ்க்கு ஒரு வளர்பு மகனாகவே மாறினான். அவனுக்கு ஒரு தங்கையை தவிர உறவுகள் என்று யாரும் இல்லை. சிறு வயதிலே தந்தையும் தாயும் இறந்துவிட அவன் பாசத்துக்கான ஏக்கத்தை போக்கியவள் மோகி என்ற மோகினி பக்டே. அவன் அம்மாவும் அவள்தான் அவன் மகளும் அவள் தான்.

"தி இயர் ஆப் மெடிட்சினா" என்ற அவார்டை உயர தூக்கி பிடித்தான் ரோகன் பலர் அவன் கழுத்திலும் ஆயுஷ் கழுத்திலும் மெடல் அணிவிக்க அவர்கள் குழுமத்தின் சார்பாக பங்குபெற்று பெரும்பாலான மருந்துகள் பல அப்பாவி உயிர்களை குடித்து சிறந்தது என வெற்றி வாகை சூடியது. ஆனால் அதற்கான சந்தோஷம் சிறிதும் இல்லாமல் இருந்தான் அவன். அவன் பார்வை முழுக்க முதல் முறை மேடை ஏறிய போது முதல் இருக்கையில் அமர்ந்து பறக்கும் முத்தம் கொடுத்த தங்கையை சுற்றிவந்தது. அவள் இப்போதும் காற்றில் கலந்து அவனுடன் இருப்பது போல் "ரோகட்டி" என அவன் காதில் எதிரொலிக்கவும் உடல் சிலிர்த்து போனான்.

"மோகி மை பேமிலி… என்கூட நீ இங்க தான் இருக்கியா மோக்?" அவன் சற்றி தேடினான். கழுத்து செயினில் கோர்த்திருந்த மோதிரத்தை பிடித்துக் கொண்டான். அனைவரும் வந்து வாழ்த்து சொல்ல அவர்களிடம் உடல்நிலை சரியில்லை என விடை பெற்றவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஹோட்டல் ரூம்க்கு வந்தவன் ஆவேசமாக மெடல்சை தூக்கி அடித்தான் ஆடையை உடலில் இருந்து பிய்த்து எடுத்தான். பெட்டியை திறந்து மோகினி படத்தை எடுக்க சிவந்தகன்னமும் கொழுக்மொழுக் தேவதையாக இருந்தாள். அவன் தலை வலித்தால் தலைசாய்த்து தூங்கும் மடியும் புருவத்தை வருடிய விரலும் "ரோகட்டிக்கு வலி போயிடுச்சா?" என சிரிக்கும் குரலும் நினைவில் தோன்ற படத்தை அனைத்துக்கொண்டு அழுதான்.

"மோக் எனக்கு ரொம்ப தலைவலிக்குது… என்கிட்ட வாயேன்… வா கூப்பிடுறேன்ல வரமாட்ட… அய்யோ மோக் என் கையால உன்ன கொல்ல வச்சிட்டானே… ஆஆஆஆஆ வலிக்குது மோகி வலிக்குது விடமாட்டேன் அவனுக்கும் வலிக்கனும் நான் அனுப்பவிக்கிறத விட ஒவ்வொரு அணுவும் துடிக்கனும்" என கண்ணீர் வடிய கத்தியவன் லிக்கர் பாட்டிலை எடுத்துக் கொண்டு பாத்திங் டப் தண்ணீரில் படுத்துக் கொண்டே காலி செய்தான் வெப்பம் மட்டும் அடங்கவேயில்லை.

ஏழு வருடங்களுக்கு முன்பு…

அன்று இரவு லேப்பில் இருந்து வந்தவனுக்கு மருந்து நெடியில் தலையை தெரித்தது. பத்துநாள் கழித்து இன்று தான் வந்திருந்தான். முக்கியமான ஒரு மருந்து பரிசோதனையில் இருந்ததால் அதிலேயே கவனமாக இருந்தவன் இப்போது தான் தங்கையை தேடினான்.

"மோகி… மோக்… எங்க இருக்க? ஒரே தலைவலி… மோக்" என கத்திக் கொண்டே வீடு முழுக்க தேட அவள் அங்கு இருந்தால் தானே. காவலாளியிடம் கேட்க அவள் நேற்று காலையில் சென்றவள் வீடு திரும்பவே இல்லை என்றான். அவளுடன் பாதுகாப்புக்கு ஒருவனை வைத்திருந்தான் ரோகன். உடனே அவனுக்கு அழைக்க அதுவும் உயிரற்று இருந்தது. அவன் தெரிந்த இடத்தில் எல்லாம் தேடிவிட்டான் இருவரும் கிடைக்கவேயில்லை.

இரவு சென்று பகலும் வர அந்த பாதுகாவலன் ஒரு முட்புதரில் பிணமாக எடுக்க பட்டான். ரோகன் பயத்தில் தனக்கு தெரிந்த போலீஸிடம் சொல்லி தேட சொன்னான். வெளிப்படையாக தேடமுடியாதே பணம் இருந்தால் பல பிரச்னைகள் கூடவே இருக்கும். ஆயுஷிடமும் அவன் நண்பர்களிடழும் சொல்லி அழுதவனை தேற்றியவர்கள் அவர்களும் சேர்ந்து தேடினர் பலன் தான் ஒன்றுமேயில்லை. ஒரு வாரம் பித்தன் போல் அவளை தேடி சோர்ந்துவிட்டான். அப்போது தான் அவன் போலீஸ் நண்பன் மூலம் ஒரு காட்டு பகுதியில் அவள் நம்பர் லொகேஷன் கடைசியாக காட்டியதாக சொன்னான். விழுந்தடித்துக் கொண்டு அங்கே சென்று தேடியவன் அங்கு இருந்த பங்களாவை கண்டு புருவம் சுருக்கினான். அது துருவ் ஒருநாள் போனில் காட்டிய பங்களா. எதையும் யோசிக்காமல் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்றவன் அவளை தேட அவள் கல்லூரி பையை கண்டவன் பாய்ந்து போய் எடுத்தான். போக போக அவள் உடைகள் சிதறி கிடக்க கண்கள் ரத்தம் கொட்ட திகிலுடன் முனகல் சத்தம் வந்த அறையை நோக்கி நடந்தான்.

"கடவுளே என் மோகியா இருக்க கூடாது" என வேண்டியவன் கதவை திறக்க பார்க்க கூடாததை பார்த்தான். எந்த அண்ணனும் தன் தங்கையை இந்த நிலமையில் பார்த்தால் துடித்துதான் போவான். ரோகன் அங்கேயே உயிரை விடுத்து ஜடமாக நின்றான். கதவு திறந்த சத்ததில்

"நோ… வராத வலிக்குது… கில் மீ துருவ்.. வலிக்குது கொன்னுடு… ப்ளீஸ் கில் மி" என முனகியவள் அவனை நினைவுக்கு மீட்டாள். தலையில் அடித்துக் கொண்டு அவளிடம் ஓடினான் மெத்தை முழுக்க ரத்தமாக இருக்க ஆடையில்லாமல் நைந்து மிருகம் கொதரியது போல் காயங்களுடன் அரற்றிக் கொண்டு இருந்தாள் அவன் பெறாத மகள் அவனை பெறாத தாய்.

"மோகி… அண்ணாடா" என அலறிக் கொண்டு போர்வையால் அவளை முடியவன் அவளை தூக்க "வலிக்குது விடு ஆஆஆ… விடு ரோகட்டி" என முனகினான். அவனுக்கு தெரிந்தது அவளை காபாற்ற முடியது என்று இன்றோ நாளையோ மருந்தவம் பார்தால் இன்னொரு நாள் கூடுதலாக. அதற்கு மேல் அவள் பூ உடல் தாங்காது. அந்தளவிற்கு வேட்டையாட பட்டிருந்தாள்.

"மோக் மோக்… பொறுத்துக்கமா அண்ணன் இருக்கேன். உன்ன காபாத்திடுவேன்… " சுற்றியும் தேட போதை ஊசிகளும் காண்டம் கவர்ஸ்சும் போதை மருந்து பாட்டில்களும் கிடக்க. அதிர்ச்சியாக எடுத்து பார்த்தான் அது அவன் கையால் உருவாக்கிய வீரியமான போதை வஸ்த்து மிருகங்களுக்கு செய்தது. மனிதனை மிருகமாக்கும் கொடிய மருந்து இச்சை உணர்வை தூண்ட கூடியது. அவனிடம் கெஞ்சி தான் இந்த மருந்தை சந்திப் வாங்கினான். அவன் மருந்துவன் என்று நம்பி கொடுத்ததற்க்கு தன் தங்கையை பலியாக்கி விட்டார்களே ரத்தம் கொதித்தது.

பஸ்ட் எய்ட் பாக்ஸை தேடி எடுத்தவன் அவள் காயத்துக்கு மருந்து போட அது பத்தவேயில்லை அத்தனை காயங்கள். கோர பற்கலால் மேனி சிதைந்து ரத்தம் கசிந்தது. மிகவும் மோசமாக துண்புருத்த பட்டிருந்தாள் மங்கை.


"ரோகட்டி வலிக்குது…. ரொம்ப வலிக்குது என்ன கொன்னுடு நான் அம்மா கிட்ட போறேன்" தமயனை பார்த்து சிரமப்பட்டு கைகூப்பினாள்.

"உன்ன விட்டா எனக்கு யாரு மோகி இருக்கா? என்ன விட்டு போயிடாதடா… எனக்கு நீ வேனும். பாரு அண்ணன் நிறைய பேர காப்பாத்திருக்கேன் உன்னையும் காப்பாத்திடுவேன்…" என மருந்திட்டவன் மனதை திட படுத்திகொண்டு தன்னை மருந்துவனாக நினைத்து அவள் பொன்னுறுப்பை பாத்தவன் கதறினான்.

"எப்படி காப்பாற்றுவேன் அவளை… அய்யோ எதும் வழியில்லையா…? கடவுளே நீ இல்லையா…? எப்படி தாங்கினாள் என் மகள்… விட்டேனே பாவி… சுயநணலமா இருந்துட்டேனே" தலையில் அடித்துக் கொண்டு சுத்தம்செய்ய முயன்றான் அதில் இருந்து வந்த துர்நாற்றம் எல்லாம் முடித்தது என்ற செய்திதான் சொன்னது. உள்ளே பாகங்கள் சீல் பிடித்து அழுக ஆரம்பித்துவிட்டன.

"ரோக… ட்டி… கில் மீ… தொடாத… ஒவ்வொரு இடத்தையும் வலிக்குது… ஐ நீட் ரெஸ்ட்… பர்மணட் ரெஸ்ட்… ப்ளீஸ்..." என கதறினாள்.

"அய்யோஓஓஓ அம்மா… மோக்… என்னால முடியாது… முடியாது…. அம்மா நெஞ்ச வலிக்குது மோகி… ம்மா" என தரையில் விழுத்து துள்ளினான். அவனுக்கு என இருக்கும் ஒற்றை உயிரையும் எப்படி கொல்லுவான்.

தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனை பார்தாள் "ரோகட்டி… கம் டு மி" எனவும் அவளிடம் வந்தவன் எங்கே அவளை தொட என்று பதறினான். ரத்ததுடன் இருந்த விரலை எடுத்தவள் அவன் தலையை கோதிவிட்டு அவன் புருவத்தை நீவினாள் "ரோகட்டி சீ...சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். சரி இப்போ வலி போயிடுச்சா?" என சிரிக்க அழுதுக் கொண்டே இல்லை என தலையாட்டினான்.

"நான் எப்பையும் உன்கூட தான் இருப்பேன் ரோ….க ட்டி" என்றவள் ரத்த கையடன் அவன் இதயத்தில் மோக் என எழுதினாள். கையில் இருந்த மோதிரத்தை காட்டியவள்

"இத எப்பவும் உன்கூடவே வச்சிக்கோ… உன்ன விட்டு போக முடியல ரோ… க்க.. இந்த வலி ரொம்ப மோசம் ரெண்டு நாளா பேட் ஸ்மெல் என்னால தாங்க முடியல… எனக்கு இந்த பாடிலேந்து ரீலிப் குடு… ஐ ம் சாரி பட் கில் மி…. என்னால முடியல வலிக்குது" என அழுதவள் "கிஸ் மீ" என நெற்றியை காட்டினாள். எழுத்து முத்தம் வைத்தவன் "ஓஓஓஓஓ" என அழுதான்.

"யூ சீட்டர் நீயும் என்ன தனியா விட்டு போறியா…? கோ… ஐ வில்… ஆஆஆஆஆ மோக்… ஐ வில்… இனிமே உனக்கு வலிக்காது வலிக்க விடமாட்டேன்" என்றவன் தேடி ஒரு கத்தியை எடுத்து வந்தான்.

அவனை பார்த்து சிரித்தவள் "நீ ஹேப்பியா ஒரு லைப் வாழனும்… அது தான் என்னோட லாஸ்ட் விஷ் திரும்ப உனக்கு பொண்ணா நானே வருவேன்…." என நிறுத்தியவள் "ரோகட்டி…. கிவ் மீ எ ரிலிப்" என்றாள். அவள் நெற்றியில் அழுதுக்கொண்டே முட்டியவன் "கம் டு மீ பேபி... ஐம் வெயிட்டிங்" என்றவன் அவளை திருப்பி போட்டான். "ஆஆஆஆஆஅ" என அவள் கத்த "ஒன்னும் இல்லமா தூங்கலாம் வலிக்காது வலிக்காது" கதறியவன் கையை ஓங்கி கத்தியை 45°ஆங்கிலில் அவள் பின்னதலையில் குத்த அடுத்த நொடி அவள் உயிர் அடங்கியது. சாகும் நொடி வலியில்லாமல் செத்தாள்.

"மோக்… இஇஇஇஇ… எழுத்திரி எனக்கு பயமாருக்கு" என கட்டிக் கொண்டு கதறியவன் அவளை எழுப்ப எழுப்ப சுகமான மீளா துயிலில் விழுந்தாள்.

"போகாதடி என் பெண்ணே" அவன் கதறல் ஓலம்… மோகினி என்ற பெண்ணின் மரணம் எத்தனையோ அபலைகளின் சாபமாக மாறி பெரும் அழிவு சக்தியாக ரோகட் என்ற பெயரில் அக்கயவர்களின் அத்தியாயத்தின் முடிவுரை ஆரம்பம் ஆனது. அவன் அழுகை ஆர் ஆர் ரத்தோர்க்கு ஊத பட்ட சங்கு.

"விடமாட்டேன் அவனுங்கள விடமாட்டேன் அண்ணன் உனக்கு ப்ராமிஸ் பண்றேன் டா நீ அனுபவிச்சத விட பலமடங்கு அவங்களுக்கு வலிக்கும்" என சூள்உரைத்தான்.

சிறிது நேரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்க ஒழிந்து நின்று பார்தான். துருவும் சந்திப்பும் வர அவர்கள் பின்னே ஆயுஷும் வந்தார்.

"எங்கடா அவ?" கோபமாக அதட்டியவர் துருவ் மேலே கை காட்ட அவனை ஓங்கி அறைந்தார்.

"ச்சை அறிவில்ல அவள ஏன்டா?"

"சாரி பெரியப்பா" என கையை பிசைந்தான் சந்திப்

"என்கிட்ட பேசாதிங்க.. இப்போ ரோகன்கு என்ன பதில் சொல்றது…? " என அதட்டியவர் தலையை பிடித்துக் கொள்ள "அப்பா… டூ சம்திங்" என்று அவரிடம் அமர்ந்தான் துருவ்.

"ஏன்டா… ஏன் ச்ச சின்ன பிள்ளைய போய்… உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா… இது மட்டும் அவ அண்ணனுக்கு தெரிஞ்சது உங்கள கொண்ணு புதைச்சிருவான்"

"அவனையும் போட்டுரலாம் டாட். பிரப்ளம் சால். நம்மகிட்ட இல்லாத பணமா" என்றவனை மீண்டும் ஒரு அறை விட்டார்.

"முட்டால் அவன் ஆர் ஆர் ஓட பண மூட்ட. உன்ன மாதிரி அவனையும் நினைச்சியா… ஹீ இஸ் ஏ ஜித்… சைன்ஸ்ல டேவில் அவன். அவன கொன்னுட்டு உன்ன மாதிரி முட்டாள்கிட்ட ஒப்படைக்க சொல்றியா. நம்ம லேப்போட ஒன் ஆப்தி பாட்ணர் அவன் " என்றவர். "பினிஷ் ஹர் அவ பாடி கூட அவனுக்கு கிடைக்க கூடாது" என்று சென்றுவிட்டார்.

அப்போது ஆராம்பித்தது அவன் பலிவெறி. முழுக்க ஆர் ஆர் கோட்டையை சல்லியாக நொருக்கும் நேரத்திற்கு காத்திருந்தான்.

தண்ணீரில் இருந்து வெளியில் வந்தவன் தக்ஷினா என்ற பெயரை சுழற்றினான்.

"ஷி இஸ் ஏ சைக் பட் நாட் மச். ஐ வாண்ட் மோர் தக்ஷினா" என சிரித்துக் கொண்டே பெரிய வேலை ஒன்றை முடித்தான்.

ஆர் ஆர் மொத்த வரலாறும் அதில் இது யார் கைக்கு சென்றாலும் பேராபத்து வருவது நிச்சயம். ஆனால் அது தக்ஷினாவிடம் தான் செல்ல வேண்டும் என்பது விதி போல்.

வருவாள்...


 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom