Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.
பெண்ணே 11

8mliI7AlKdDSlkL5osEthlREW_J-MziM8VmC1Npz6FYCebek2jMN4FaDUg2u6kso1xhqX8RJgNxZvdRLhm0lX0dcPbHQXGb_62TgBrIF1gmr0V6hPWgsj9pF48U9FExKaLcN2wGW=s1600


இந்த சமூகத்தில் பெண்கள்
உடல்ரீதியாக மட்டுமா துன்பப்படுகிறார்கள் கண்டிப்பாக இல்லை மன ரீதியாகவும் அதிக கொடுமைகளுக்கு ஆட்படுகிறார்கள். மென்மையான பெண்மை என்று சொல்லியே அழகுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். தனிமையில் பெண்ணை கண்டால் படித்தவன்கூட மனித மிருகம் தான். உலகில் அதிகமாக வளர்ந்த நாடுகளில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மறுக்கப்படுகிறது அதில் மூன்றாம் இடத்தை பிடித்தது மிகசிறந்த தொழில்நுட்ப நாடான அமெரிக்கதான்.

இந்தியாவும் ஆயுதபடையில் இரண்டாம் இடத்தை பிடித்து மட்டுமில்லை பெண்கள் பாலியல் துஷ்பிரயோகமத்திலும் ஐந்தாம் இடத்தை பிடித்து தலை சிறந்த நாடாக வளர்ச்சியடையும் பட்டியலில் வெற்றி நடைபோடுகிறது. அதுவும் கணவன்மார்களால் நடைபெறும் கற்பழிப்பு வன்கொடுமைகளையும் கணக்கில் எடுத்தால் இந்தியாவிற்க்கு தான் முதலிடம். என்னதான் பெண்ணியம் வீறுக்கொண்டு பேசினாலும் பெண்களை இந்த சமூகம் போகப் பொருளாக தானே வர்ணிக்கிறது. அரைகுறை அடைகள் அணிந்து பெண்களை வளைந்து நெளிய வைத்துதான் விளம்பரங்களும் தன் பிராண்ட் பெயரை பதியவைக்க வேண்டுமா? நம் நாட்டில் மட்டுமே ஒரு நாளைக்கே நூறு கற்பழிப்பு சம்பவங்கள்… இதில் குழந்தைகளும் அடக்கம்.

குற்றவாளி என்று யாரை கைகாட்டுவது. பெண்ணாய் பிறந்தது தான் தவறோ? இல்லை அரக்கர்களை ஈன்றது தான் தவறோ? கதறுகிறது பெண்மை.

"டேய் விமல் சீக்கிரம் என்கூட வா" அதிரடியாக உள்ளே நுழைந்தான் புவி.

"என்ன சார் விசியம்?" சாவகாசமாக நிமிர்ந்தான் விமலன்.

"சொன்னாதான் வருவியா? முக்கியமான விசியம் வாடா இல்ல இருக்கிற டென்ஷன்ல குரல்வளையை கடிச்சிருவேன்" அருகில் வந்து அவனை பிடித்து இழுக்கவர சிரித்துக்கொண்டே சுழல் நாற்காலியை உந்தி நகர்த்திக்கொண்டு விலகினான் விமலன்.

"ஹாஹா... கண்டுபிடிச்சிட்டேன் புவி. ஏன்னா? பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட. இப்படிதான் மிருகமா மாறிடுவ"

"டேய் சாமி மொக்கை போடாம கிளம்புடா" அவனை இழுத்துக் கொண்டு சென்றான் புவி.

காலி பிளேட்டில் விழும் எழும்பு துண்டுகளை வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருந்தான் விமலன். வாய்க்கும் கைக்கும் சண்டையல்லவா நடத்தி கொண்டு இருந்தான் புவி வேந்தன்.

"டேய் புவி இதுதான் நீ சொன்ன முக்கியமான விசியமா?"

"நமக்கு சோறுதான்டா முக்கியம். நீ என் வாய பாக்காம சாப்பிடு" என்றவன் இன்னொரு பிளேட்டை இழுத்து விளாச தொடங்கினான்.

"எங்கடா திங்கிறது? அதான் என் பிளேட்டையும் நீ தானே உள்ள தள்ளுர…"

"கண்ணு போடாதாடா பாடி சோடா"

"டேய் புவி தட்ட மட்டுமாச்சும் மிச்சம் வைடா வாசனையாவது பிடிச்சிக்கிறேன்" அதோ பாவம் பிரியாணி பிளேட்டும் கபளிகரமானதுதான் மிச்சம்.

"நல்லா இருடா நல்லா இரு… இந்தா இதையும் நீயே தின்னு" என்று எல்லாவற்றையும் அவன் பக்கம் நகர்த்த ஒற்றை கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு உன்னலானான்.

"மெதுவாடா பக்கத்தில எல்லாரும் நம்ம ஒருமாதிரி பாக்குறாங்க…"

"யாரு பக்கத்து டேபிள்ல இருக்க காலேஜ் பொண்ணுங்களா? மாமன சைட் அடிப்பாங்களா இருக்கும்டா விமல்"

"ம்ம் ஆசைதான். நான் சொன்னது இந்த பக்கம் இருக்க பாட்டிய"

"உனக்கு பொறாமைடா" என்றவன் கைகழுவ எழுந்து செல்ல விமலனும் அவனுடன் சென்றான்.

"என்ன புவி? ஏதோ பெரிய விஷயம் போல" கையை டிசியுவில் துடைத்துக் கொண்டு கேட்க… அவனை பார்த்து கண்ணடித்து அவர்கள் டேபிளுக்கு எதிர் டேபிளை காட்டினான். அழுக்கு வேட்டி சட்டையில் உத்திராட்ச்சை மாலை அணிந்து மஞ்சள் பைகாரணும் அவன் எதிரில் ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தனர்.

விமலன் வரும்போதே கவனித்து இருந்தான் அந்த இளைஞன் மட்டும் தனியாக உண்பதை. மஞ்சள் பைகாரன் இடையில் தான் வந்திருக்கவேண்டும். புவியும் விமலனும் அவர்கள் மேல் ஒற்றை கண்ணை வைத்தவாறே பேசிக்கொண்டு இருந்தனர். சற்று நேரத்தில் தனிதனி பில் வர இளைஞன் கை கழுவிட்டு வந்து பணத்தை வைக்க மற்றொருவன் பையை டேபிளில் வைத்துவிட்டு கைகழுவ சென்றான். அவன் சென்றதும் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு இளைஞன் வெளியேற அந்த அழுக்கு வேட்டி பணத்தை வைத்துவிட்டு ஏதுவும் நடக்காதது போல் வெளியே முன்னவன் சென்றதுக்கு எதிர் திசையில் நடந்தான்.

இருவரும் புல்லட்டில் ஏற அதை ஒரு ஆளில்லா சந்திற்க்குள் ஓட்டினான் புவி. சற்று நேரத்தில் அந்த இளைஞனை இருவர் பிடித்து வைத்திருக்க திமிறி கொண்டுஇருந்தவன் அருகில் வண்டியை நிறுத்தினான்.

"சார் இது வேற கேஸ் சார்" பக்தத்தில் இருந்த காவலர் மஞ்சள் பையை அவனிடம் பிரித்துக் காட்ட அதில் ஒரு கைதுப்பாக்கி இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். போணில் அழுக்கு சட்டையும் பிடித்துவிட்டதாக சொல்ல வண்டியை அவன் இருக்கும் இடத்திற்கு வர சொன்னவன். ஒரு காவலரை மட்டும் மீண்டும் உணவகத்திற்கு சென்று கண்காணிக்க பணித்தான்.
______________

"டைம் ஆச்சு மைலி எனக்கு பசிக்குது" கத்திக்கொண்டு இருந்தான் விஷ்ணு.

"இருங்க விஷ்ணு லொக் அவுட் பண்ணிட்டு வரேன்" அதற்குள் அவள் லண்ச் பாக்ஸை எடுத்து திறந்து பார்த்து வாசம் பிடித்துக்கொண்டு இருந்தான்.

"மைலி வா உனக்கு நான் ஒன்னு எடுத்துட்டு வந்துருக்கேன்" இருவரும் பேசிக்கொண்டே செல்ல எப்போதும் போல அதியனுக்கு உள்ளுக்குள் எரிந்தது.

அனைவரும் பேசிக்கொண்டும் பகிர்ந்துக்கொண்டும் உன்ன ஒரு ஹாட் பேக்கில் இருந்த சூப்பை திறந்து ஆராதனாவிடம் நீட்டினான் விஷ்ணு.

"வாவ் நீங்க செஞ்சதா விஷ்ணு?" அதில் இருந்த மட்டன் சூப்பை பார்த்து சப்புக்கொட்டினாள் அவள்.
அவளை பார்த்து சிரித்துக்கொண்டே காலரை தூக்கிவிட்டான் விஷ்ணு. அவள் ஆசையாக ஒரு குழி கரண்டியால் எடுத்து வாயருகே கொண்டு செல்லும் நேரம் அவள் பின்னால் இருந்து கேட்ட குரலில் அனைவரும் அவளை பார்க்க அவளும் திரும்பி பார்த்தாள் அதியன் தான் கையில் பாக்ஸோடு நின்றிருந்தான்.

"நானும் உங்ககூட ஜாயின் பண்ணலாமானு கேட்டேன் ஏன் எல்லாரும் ஷாக்கா பாக்குறிங்க?" அதியன் சிரிக்க எல்லோரும் எழுந்து சந்தோஷமாக "ப்லீஸ்" என்க ஆராதனாவின் அருகிலே அமர்ந்துக்கொண்டான்.

"எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்" என்றவன் விஷ்ணுவிடம் தன் பாக்ஸை கொடுத்ததும் எல்லோரும் அவனுடன் பகிர்ந்துக்கொண்டனர். எல்லோரும் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்க யாரும் உணரா வன்னம் அவள் கையில் இருந்த சூப்பை பிடிங்கி கொண்டான். ஆனால் ஆராதனாவையே பார்த்துக்கொண்டு இருந்த விஷ்ணுவின் கண்களில் அது பட்டுவிட்டது அவன் அதியனை தடுக்கநினைக்க ஆராதனாவை குடிக்கவிடகூடாது என்பதற்காகவே மொத்ததையும் குடித்துவிட்டான்.

"சார் அது மட்டன்" பதட்டமாக விஷ்ணு சொல்ல அதிர்ச்சியாக அவனை பார்த்தான் அதியன். ஆராதனா விஷ்ணுவை கேள்வியாக பார்க்க அவன் அதியனுக்கு தெரியாமல் கன்னத்தை சொறிந்து காட்ட அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவளை முறைத்த அதியன்

"முன்னாடியே சொல்ல மாட்டியா?" யாருக்கும் கேட்காமல் அவளை திட்ட திரும்பி முறைத்தாள் அவள்.

வேகவேகமாக உண்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான் அவன். ஒருபக்கம் அவனை பார்க்க விஷ்ணுவிற்கு பாவமாக இருந்தாலும் அவன் ஆசையாக அவளுக்கு கொண்டுவந்ததை அதியன் பரித்து உண்டதை நினைத்து கோபம்தான் வந்தது. அவன் உள்மனமோ "நல்லா அனுப்பவிக்கட்டும்" என்று கருவியது.
____________________

"சரி அவர ஆஃபிஸ் ரூமில் வெயிட் பண்ண சொல்லு" தன் பி.ஏவிடம் சொல்லிவிட்டு ஆஃபிஸ் ரூம் நோக்கி சென்றார் தக்ஷினாவின் தந்தை முத்துவேல்.

"சார்" கதவை தட்டிவிட்டு பி.ஏவுடன் உள்ளே வந்தவரை ஆவலாய் பார்க்க தலையை குனிந்தவரை பார்த்ததும் சோர்வாக சாய்ந்துக்கொண்டார் முத்துவேல்.

"நீ வெளில வெயிட் பண்ணு" பி.ஏவை அனுப்பிய முத்துவேல் கேள்வியாக அவரை பார்த்தார்.

"சாரி சார் இந்த டைமூம் முடியல"

"முடியாதுனு சொல்லதான் உங்ககிட்ட இந்த வேலைய கொடுத்தனா?"

"இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க சார் நாங்க டிரை பண்றோம்"

"பத்து வருசமா இததான் சொல்லிட்டு இருக்கிங்க இப்பவும் ட்ரைதான் பண்ணுபோறிங்களா?. முடியாதுனா சொல்லிடுங்க" கோபமாக இறைந்தார் முத்துவேல்.

"முடியாதுனு இல்ல சார் பட் எவிடென்ஸ்லாம் நிறைய ப்ரேக் ஆயிட்டு… பெரிய டீம் அதுக்காகவே வொர்க் பண்றாங்க"

"என்ன பண்ணுவிங்கனு எனக்கு தெரியாது உங்க ஏஜென்சில இருக்க டலன்ட்டு டிடெக்டிவ் எல்லாரையும் இதுக்கு அசைன் பண்ணுங்க. எவ்வளவு செலவானாலும் பரவால" தலையை நீவிவிட்டுக் கொண்டார்.

"ஆல்ரெடி அவங்களதான் அசைன் பண்ணிருங்காங்க சார். எல்லாரும் பெஸ்ட் அண்ட் மோஸ்ட் எக்ஸ்பிரியன்ஸ்ட்"

"அப்படியும் இம்ப்ருமெண்டே இல்லையே. சரி வேற என்ன விசியமா இங்க வந்திங்க?"

"அது சார் எனக்கு தெரிஞ்ச ஒரு டிடக்டிவ் இருக்கான் பட்…" அவர் இழுத்து நிறுத்த

"யார் அது?"

"அவன் பேரு குணமுதிதன் மாறன் சார். இப்போ எங்க இருக்கானு தெரியல ஏதோ மன்னர்கள் வரலாறு தேடி பொய்ருக்கிறதா தகவல் வந்தது. இதுவரைக்கும் பல கேஸ் சால்வ் பண்ணிருக்கான். ஆனா அவன் யாருக்கும் வொர்க் பண்றதுல்ல அவனுக்கு தோன்னா மட்டும்தான் செய்வான்"

"இப்போ என்ன வேலை செஞ்சிட்டு இருக்கான்?"

"நம்ம நாட்டிலிருந்து திருடிட்டு போண பழமை வாய்ந்த சிலையொல்லாம் தேடி நம்ம நாட்டுக்கு மீட்டுட்டு வந்துருக்கான். இப்பவும் ஏதோ மன்னனோட புதையலை தேடிதான் போயிருக்கான். அவன் இருக்கிற இடத்த கண்டுபிடிக்க சொல்லிருக்கேன் எப்படியாச்சும் இந்த இன்வஸ்டிக்கேஷனை அவன எடுத்துக்க வச்சிருங்க… அவன இம்ப்ரஸ் பண்றமாதிரி இருந்தாதான் எடுத்துப்பான் சார். காசெல்லாம் அவனுக்கு விசியமே இல்லை"

"இவன மாதிரி வித்தியாசமான ஆட்களை நிறைய நான் பாத்திருக்கேன். நீங்க அவன மீட் பண்ண மட்டும் ஏற்பாடு பண்ணுங்க. எனக்கு இத கண்டுபிடிச்சே ஆகனும்"

"சரி சார் அப்போ நான் கிளபுறேன்" அவர் எழுத்துக்கொள்ள முத்துவேலும் எழுந்து கரம் குவித்தார்.

_____________________

👇👇👇
 
Last edited:
_____________________

அதியன் அறையை எட்டி பார்த்தாள் ஆராதனா அவனை காணாமல் லேப்டாப்பை நோண்டிக்கொண்டு இருந்தாள். சலிப்பாக இருந்தது ஆயில் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய டாக்குமென்ட்டை அவன் சரிபார்த்தால் அனுப்பிவிடலாம். மெயில் அனுப்பி அரை மணிநேரம் சென்றும் அவனிடம் எந்த பதிலும் இல்லை.

"இந்த சார் எங்க போனாரு? ச்ச இருக்கிற வொர்குல இது வேற தொல்லை" மீண்டும் எட்டி பார்க்க அவன் உள் அறையில் இருந்து வந்த அமர்ந்தது தெரிந்தது. சிறிது நேரம் சென்று மெயிலை புதுபிக்க அவன் பதில் அனுப்பவேயில்லை.

"இது சரிவராது நம்மலே சொல்லிடுவோம்" என்றவள் எழுத்து அவன் அறைக்கு சென்றாள். அவள் கதவை தட்டி பெர்மிஷன் கேட்க பதிலேயில்லை… அவன் உள்ளே வரசொல்லி கையசைப்பது தெரிய கதவை திறந்துக்கொண்டு சென்றாள். டேபிளில் கவுத்துக்கிடந்தான் அதியன்.

"வாட்?" மெலிதாக வந்தது.

"சார் நீங்க மெயில் செக் பண்ணிட்டா சென்ட் பண்ணிடலாம்"

"நீயே பார்த்துட்டு அனுப்பிடு" என்றவன் கையால் தலையை பிடித்துக்கொண்டான். அவன் கையெல்லாம் சிகப்பு புள்ளிகளாக இருந்தது.

"சார் கையெல்லாம் அலர்ஜி மாதிரி இருக்கு" ஆராதனா சொல்லவும் அவன் தலையை தூக்கி கையை பாக்க அவன் முகம் முழுவதும் சிவந்து புள்ளி புள்ளியாக இருந்தது.

"சார் உங்க முகம்புல்லா இருக்கு சார். "

"அது சரிஆகிடும் நான் பாத்திகிறேன் நீ கிளப்பு" அவளிடம் எரிந்து விழ அவனை உறுத்து விழித்தாள் அவள். தீடிரேன்று அவனுக்கு உமட்ட எழுத்து ஓடினான் ஆராதனாவும் அவன் பின்னே செல்ல உள்ளே இருப்பதெல்லாம் வெளியே வந்துவிடும் அளவிற்கு வாமிட் செய்துக்கொண்டு இருந்தான் அதியன். அவன் அருகே சென்றவள் தலைக்கு ஏறாமல் இருக்க தலையை அழுத்தி பிடித்துக்கொண்டாள்.

அவனை வாயை கழுவ சொல்லிவிட்டு உப்பை தண்ணீரில் கலக்கி குடிக்கவைத்தாள். அவன் நடக்கமுடியாமல் தள்ளாட அவனை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து வாஸ்பேசினில் தண்ணியை திறந்து விட்டுவிட்டு அவள் பையில் இருந்து எடுத்துவந்த சீரகத்தை குடிக்கும் தண்ணீரை கலந்து சூடு பண்ணினாள்.

அவனுக்கு சுடாக சீரக தண்ணீர் குடிக்க இதமாக இருந்தது.

"எந்தன தடவை வாமிட் பண்ணிங்க?"

"நாலு" கைவிரலை காட்டவும் பாவமாக இருக்க அவனுக்கு பிளக் டீ போட்டு கொடுத்தவள் அவன் குடிப்பதை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"ஆராதனா நான் படுத்துக்கிறேன் நீ கிளம்பு" என்றவன் எழுந்து உள்ளே செல்ல கண்ணை சழற்றியது கீழே விழுவதற்குள் அவனை தாங்கி பிடித்தவள் விஷ்ணுவின் குரல் கேட்க உள்ளிருந்து கத்தினாள்.

இருவரும் சேர்ந்து அவனை படுக்க வைக்க "தேங்ஸ்" என்றவன் மயக்கத்தில் கண்ணை மூடிக்கொண்டான். அவனை தொய்வாக பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் ஏதோ பிசைந்தது.

விஷ்ணு டாக்டர்க்கும் புவிக்கும் போண் செய்ய சென்றுவிட்டான். ஆராதனாவின் காட்டன் ஷால் அவன் வாட்ச்சில் சிக்கி கொண்டதால் குனிந்து அதை இழுத்துக்கொண்டு இருந்தாள். லேசாக கண்ணை திறந்த அதியன் அவள் கையை பிடித்துக்கொண்டு "பப்பி" என்று ஏதோ சொல்லி முனுக அவன் பக்கத்தில் அமர்ந்தவள் அவன் வாயருகே காதை கொண்டு சென்றாள்.

"பப்பி வயிறை ரொம்ப வலிக்குது" அவன் முனுகளில் "சரியாகிடும்" என்று சொல்லி அவன் தலையை வருடிவிட அலறிய மனதை நினைத்து அதிர்ச்சி தான் அவளுக்கு.

"டாக்டர் கிட்ட சொல்லியாச்சி சார் இப்போ வந்துருவாங்க" அவனுக்கு ஆறுதல் சொல்ல முகத்தை சுறுக்கினான் அவன்.

"நான் ஏதாச்சும் குடிக்க எடுத்துட்டு வரேன்"

"பப்பி ப்லீஸ் போகாதடி இங்கையே இரு" என்றவன் வழது கையால் அவள் இடுப்பை பற்றி இழுக்க வாயருகே காதை வைத்திருந்தவள் சரியாக அவனை பார்க்க அவன் இதழோடு அவள் இதழ்கள் மோதி நின்றன. அசைய மறந்து இருந்துவிட்டாள் ஆராதனா. வயிற்றில் கேடி மின்னல்கள் பாய இமை சிமிட்டி அவனை பார்க்க அரை மயக்கத்தில் கண்ணை திறந்து பார்த்தான் அதியன்.

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி
இந்த நிமிடங்கள் நீளட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

சட்டென்று அவளை நகரவிடாமல் கைகள் இறுக்கிபிடிக்க அவன் இதழ்கள் அவள் உதட்டில் அழுத்த பதிந்தன.
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
சிறு பிள்ளை என எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே

அவன் மார்பு சட்டையை அழுத்த பிடித்திருந்த ஆராதனாவின் கைகள் தளர அதியனின் மற்றொரு கை அவள் கழுத்து வளைவில் வருடிவிட்டதும் ஏதோ மயக்கம் ஆட்கொள்ள கண்ணை மூடசென்றவள் "மைலி" விஷ்ணுவின் அழைப்பில் சட்டென்று விலகி எழுந்தாள்.

அவனை உற்றுபார்த்தாள் நிஜமாகவே மயக்கத்தில் தான் இருந்தான். அவள் மனது படபடவென்று அடித்துக்கொண்டது. அவள் பார்வை மீண்டும் மீசைக்குள் இருந்த அவன் இதழ்களை நோக்கி தான் சென்றது வெட்க்த்திலும் அவமானத்திலும் குப்பென்று அந்தி வானமாய் கன்னம் சிவக்க திரும்பி கொண்டாள் ஆராதனா.

"ச்ச தனா உனக்கு அறிவேயில்ல"

"நான் என்ன பண்ணேன் அவன் தான் எல்லாத்துக்கும் காரணம். எழுத்திரிக்கட்டும் அவன என்ன பண்றேன் பாரு"

"அவன் உன்ன நினைச்சி செய்யல யாரோ பப்பினு சொல்லிதான சொன்னான். நீ ஏன் அவன் பக்கதில போண…?"

"தெரியாம போயிட்டேன்… இப்படி பண்ணுவானு எனக்கு எப்படி தெரியும்? ச்ச" மனசாட்சியுடன் நடந்த சண்டையில் அவள் தலையை பிடித்துக்கொள்ள

"மைலி என்ன பண்ற? வா இது சாரோட பர்சனல் ரூம்" அவளை வெளியில் அழைத்து வந்தான் விஷ்ணு.

"கரடி" மயக்கத்திலும் அதியனின் உதடுகள் கோபமாக அசைந்தது.

ஆராதனா கதவை திறந்து ஓட பார்க்க அவளை பிடித்து நிறுத்தினான் விஷ்ணு.

"என்னாச்சு?"

"தெரியல நான் வந்தப்போ அலர்ஜி மாதிரி இருந்தது. தீடிர்னு வாமிட் பண்ணிட்டு மயங்கிட்டாரு" தரையை பார்த்து சொல்லிக்கொண்டு இருந்தாள்.

"நான் உன்ன கேட்டேன். ஏன் பதட்டமா இருக்க? கையெல்லாம் நடுங்குது உனக்கு… சொல்லு மைலி?"

"அது.. அது... ஒன்னும் இல்ல நான் வாஷ் ரூம் போனும் விடுங்க விஷ்ணு" என்றவள் ஓடிவிட்டாள்.

"ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்றா" யோசித்தவன் அங்கேயே அமர்ந்துக்கொண்டான்.
________

கொளுத்தும் வெயிலில் சுருங்கின காட்டன் புடவை முந்தாணையை தலையில் மூடிக்கொண்டு ராதிகாவின் தாய் கல்யாணியும் துப்பட்டாவை சுற்றிக்கொண்டு அபிராமியும் அந்த காவல் நிலையத்திற்கு வந்து நின்றனர்.

"அய்யா இருக்காங்களா அண்ணே?" டீ கடையில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம் கேட்க அவர்களை ஏற இறங்க பார்த்தவர் அலட்சியமாக இல்லை என்றார்.

"எப்ப வருவாங்க சார்?" என்ற அபிராமியை பார்தவர் "உன்னதான் இங்க வரவேண்டாம்னு சொன்னன மா. வேற யாறையாச்சும்தான கூட்டிட்டு வர சொன்னேன்" எனவும்

"எங்களுக்குனு யாரும் இல்ல சார். அம்மாக்கும் உடம்பு சரியில்ல தனியா அனுப்ப முடியாது" உள்ளே சென்ற குரலில் சொல்லவ அவருக்கும் கஷ்டமாகதான் இருந்தது.

"இங்க பாருமா எனக்கும் உன் வயசுல பொண்ணு இருக்கு அதுனாலதான் சொல்றேன். இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரி. ஏன்மா வயசு பொண்ண இங்க கூட்டிட்டு வரலாமா? ஏற்கனவே ஒன்ன தொலைச்சிட்டு தானே நிக்கிறிங்க" அவர் கடித்துக்கொள்ள வாயில் புடவையை வைத்துக்கொண்டு அழுதார் கல்யாணி.

"அழுவாதமா இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு. உள்ள வாங்க" என்றவர் அவசரமாக உள்ளே சென்றார்.

"யோவ் கான்ஸ்டபில் யாருயா அது வெளில?" ஒற்றை பட்டனை கழட்டிவிட்டு பேனில் காத்துவாங்கி கொண்டு உட்காந்தான் அவன்.

"ராதிகானு ஓரு பொண்ண கானும்னு கம்பிளைன்ட் தந்தாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும் வந்துருக்காங்க"

"உள்ள வர சொல்லு" அவன் சொல்லும் போதே இருவரும் வந்துநின்றனர். அவன் பார்த்த பார்வையில் அபிராமியின் உடல் அருவெருப்பில் கூச கல்யாணிக்கு பின் நகர்ந்துக்கொண்டாள்.

"அதான் விசாரிக்கிறேனு செல்லிருக்கேன்ல. இப்போ என்ன?"

"அது இல்லைங்க அய்யா என் பொண்ணு கானா போய் ஒரு வரம் ஆகிட்டு. எப்படியாச்சும் கண்டு பிடிச்சி தாங்க" அவர் அழுக

"என்ன மா? சும்மா அழுதுட்டு இருக்க போட்டோ கேட்டு இருந்தேனே எடுத்துட்டு வந்தியா?" பேச்சி கல்யாணியிடம் இருந்தாலும் பார்வை அபிராமியின் மேல் தான் இருந்தது.

"இருக்குங்க" என்றவர் படத்தை நீட்ட போதையோடு அவன் ராதிகாவை பார்த்த பார்வையில் அபிராமியின் உள்ளே தீ ஜுவாலையாக பற்றி எரிந்தது.

"பராவாயில்லையே காசுக்கு வழி இல்லாட்னாலும் நல்ல அம்சம்மாதான் இருக்கா" அவன் போட்டோவை தடவ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.

எழுத்து அவர்கள் அருகில் வந்தவன் அபிராமியை உரசிக்கொண்டு செல்ல மிளகாய் பூசியதுபோல் காந்தியது.

"போன் நம்பர் கொடு தகவல் கிடைச்சா சொல்லுறேன்" பார்வை கழுத்துக்கு கீழே தேங்கி நிற்க மண்ணில் புதைந்திட மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு.

"லேட் நைட் தான் வருவா போல அப்படி என்ன தொழில் பண்ற. பாக்கவும் அம்மா பெண்ணும் நல்லா கும்முனுதான் இருக்கிங்க" இயலாமையில் இருவருக்கும் கண்கள் கலங்க அவர்களை பார்க்க சகிக்காது அபாயம் அளித்தார் போல கடவுள்.

"சார் டிசி சார் வராரு" அந்த கான்ஸ்டபில் வந்து சொல்ல அவசரமாக தொப்பியை அனிந்தவன் வாயிலை நோக்கி ஓடினான்.

உள்ளே வந்தவருக்கு சலூட் வைக்க அவன் சேரில் அமர்ந்தவர் இவர்கள் இருவரையும் கேள்வியாக பார்த்தார்.

"என்ன கேஸ்? "

"மிஸ்சிங் கேஸ் சார்"

"யார்னு தனியா வேற கேட்கனுமா உனக்கு?" வெயிலுக்கு குறையாமல் சூடாக இருந்தார் அவர்.

"இந்த அம்மவோட பொண்ணு ராதிகாவ தான் காணும்னு கம்பிளைன்ட் கொடுத்தாங்க சார்"

"எப்போலேந்து மா காணும்?" நேராக கல்யாணியிடம் பேசினார்.

"போண வாரம் வேலைக்கு பேணவதான் சார் வரவேயில்ல. அடுத்த நாள் காலையிலே வந்து கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்தோம் சார்" அவர் அழுதுக்கொண்டே இருந்தார்.

"என்ன விசாரிச்சியா இல்லையா?" அவனை திரும்பி பார்க்க

"விசாரிச்சிட்டுதான் சார் இருக்கேன்"

அங்கு இருந்த அபிராமியை பார்தவர் அவனை பார்த்து முறைத்துவிட்டு "நீ என்ன கிழிச்சிட்டு இருப்பனு எனக்கு தெரியாதா" வாங்கு வாங்கு என்று அவனை வாங்கினார். பின் அவரே விசாரித்தார்.

"ஏம்மா உன் பொண்ணு போட்டோவ குடுத்திங்களா?" அவர் தலையாட்ட

"ராதிகாதன பேரு? யாரையாச்சும் லவ் பண்ணிச்சா?"

"இல்ல சார்" முத்திக் கொண்ட அபிராமியை கூர்ந்து பார்த்தவர் திரும்பி இன்ஸ்பெக்டரை ஒரு முறை முறைத்துவிட்டு

"இந்தபாருமா பொண்ணு நீ ராதிகாவுக்கு தங்கச்சி தானே?ஏன் கேட்கிறேனா அந்த பொண்ணு எங்கையாச்சும் லவ் பண்றவன் கூட ஓடி பொயிருக்க போகுது"

"இல்ல சார் எனக்கு நல்லா தெரியும் அவ ஓடி யெல்லாம் போகல. என்ன அவதான் படிக்க வைக்கிறா நான் நல்லா படிக்கனும்னு சொல்லுவா சார். நாங்க மூனு வேலையும் நல்ல சாப்பிட்டதே அவ சம்பாரிச்சிதான் சார். அன்னைக்கு அவளுக்கு பிறந்தநாள் சீக்கிரம் வந்துடுவேன் நாளைக்கு கோவிழுக்கு போகலாம்னு சொல்லிட்டு போணா சார். அப்பறம் ஒரு மணிஆகியும் வரவேயில்ல பக்கத்தில இருக்கவங்க கொஞ்சம் பேரு தேடி பார்த்தும் கிடைக்கலனு காலையிலே இங்க வந்துட்டோம்" அவளும் அழுக

"சரி சரி அழதம்மா. யோவ் இன்ஸ்பெக்டர் இந்த போட்டவ எல்லா ஸ்டேஷன்க்கும் அனுப்பி தேட சொல்லு. அந்த பொண்ணு வேல பாக்கிற இடத்துலையும் விசரிச்சிட்டு எனக்கு சொல்லு. முக்கியமா அனாதை பிணம் எதாச்சும் மேட்ச் ஆகுதானு பாரு" அவர் கடைசியாக சொன்னதை கேட்டு அவரை அதிர்ச்சியாக பார்க்க

"என்னாவேனாலும் நடக்கலாம் மா… நல்லது நடக்கும்னு நினைச்சிட்டு போங்க" அவர்கள் திரும்பி நடக்க

"இந்தமா பொண்ணே கொஞ்சம் நீ வெளில நில்லு" என அவர்கள் சென்றதும் இன்ஸ்பெக்டரை தான் பார்தார்.

"என்னயா? நீ பண்றது எதுவும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா? பொம்பள பிள்ளையை பார்த்தா கண்ணு மேய்யுதோ? எல்லாத்தையும் நானும் பார்த்ட்டுதான் வந்தேன்"

"சார்" அவன் எச்சிலை கூட்டி விழுங்க.

"என்னத்தையா சாரு நம்மலாம் பப்ளிக் சர்வண்ட். போலீஸ் காரனே இப்படி வெரிக்க வெரிக்க பார்த்தா உனக்கும் தெரு பொருக்கிக்கும் என்ன வித்தியாசம்? கம்பிளைன்ட் கொடுத்து ஓரு வாரமா ஒன்னும் விசாரிக்கல. உன்மேல ஒரே கம்பிளைன்ட் ஸ்டேஷன்க்கு வர லேடிஸ்கிட்ட தப்பா பேசிரியாமே? "

"அப்படி யெல்லாம் இல்ல சார் யாரோ தப்பா சொல்லிருக்காங்க"

"யாரோ என்ன? நீ பேசுரத நான் தான் இப்போ நேருல பார்த்தேனே. தப்பா சொல்றாங்களாம் இவர. ஒழுங்கா வேலைய பாரு புதுசா வரவர்கிட்ட சொல்லிவச்சிட்டு தான் போவேன். வேலையில இருக்கனும்னா ஒழுக்கம் இருக்கனும். காக்கி சட்டைக்கு தனி மரியாதை இருக்கு கீழ்தரமா நடந்துகிட்டு அசிங்கபடுத்தாத" அவனிடம் கத்திவிட்டு வெளியில் வந்தார் அவர்.

காரின் அருகே வந்தவர் அவர்களை அழைக்க இருவரும் வந்துநின்றனர்.

"உள்ள ஏறுங்க பஸ் ஸ்டாப்பல விடுறேன்" என இருவரும் ஏறிக் கொண்டனர்.

"என்ன மா படிக்கிற?"

"ஜர்னலிசம் 2ன்ட் இயர் சார்" ஆச்சரியமாக பார்தவர் அவள் கல்லூரி பெயரை கேட்டதும் புருவம் சுருக்கினார்.

"அங்க பீஸ் அதிகமாச்சே"

"ஆமா சார்… அக்கா தான் நிறைய வேலை செஞ்சி பீஸ் கட்டுவா. காலையிலே எழுந்து ஆரிவொர்க் பண்ணுவா. 7 டூ 8 வரைக்கும் ஒரு பெரிய வீட்டு பிள்ளைகளுக்கு வீணை சொல்லி தருவா. கடையில முழுசும் அவதான் பாத்துப்பா. நைட் நாங்க எல்லாரும் சேர்ந்து பூக்கட்டி தருவோம். இதெல்லாம் வச்சி தான் சார் மேனேஜ் பண்ணுவோம்"

அவளை பாவமாக பார்தவர் மனதில் ராதிகா மேல் மரியாதை தான் வந்தது. அவருக்கு ராதிகாவிற்கு ஏதே கெட்டதுதான் நடந்திருக்கும் என உள்மனம் சொன்னது. அவர் அனுபவத்தில் நிறைய பார்த்தவர் அல்லவா.

"இங்க பாருமா பொண்ணு இனிமே நீ இங்க வராத… எல்லாரும் சரியா இருப்பாங்கனு தெரியாது. ரெண்டு நாள்ல எனக்கு ரிடேயர்மெண்ட். புதுசா வரவங்க எப்படினும் தெரியாது. நான் சொல்றவங்கள போய் பாரு. முடிஞ்சா உங்க அக்காவ காப்பாத்த சான்ஸ் இருக்கு" என்றவர் அவள் அழுதுக்கொண்டே தலையாட்ட

"உனக்கு வேலை ஏதாச்சும் பார்டைம்மா வாங்கி தரேன். கவலைப்படாம படி. இந்தா என் நம்பர் நாளைக்கு என்ன ஆஃபிஸ்ல வந்து பாரு" தலையில் தட்டிக்கொடுத்தவர் அவர்களை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.

இவர்கள் போல சிலர் இருப்பதனால் தான் பூமி இன்னும் சுழல்கிறது போல இவர்களையும் ஆண்கள் என்று சொல்லிவிட்டு அந்த மிருங்களையும் ஆண்கள் என்று எப்படி சொல்லுவது என்பதைதான் நினைத்தாள் அபிராமி.
_______________

ஓரமாக உட்காந்து அழுதுக்கொண்டே இருந்த பெண்ணை தான் பார்த்தாள் தக்ஷினா.விமலன் தான் அவளை அழைத்து வந்திருந்தான் கூடவே ஒரு இளைஞனும் இருந்தான்.

"தீ" அவன் கூப்பிட கழுத்தை இடதுபுறம் சாய்த்து அவனை பாக்க அதில் "என்ன சொல்லு?" என்ற செய்தி இருந்தது.

"நம்ம புவி தான் இந்த கேஸ் உனக்குனே வந்த மாதிரி இருக்குனு உன்ன ரெஃபர் பண்ணான்"

"ஓ அந்த ராஸ்கலா" மனதில் நினைத்தவள் புருவத்தை உயர்ந்த

"நீயே விசாரிச்சி பார்த்தனா தெரியும்"

"எங்க பிடிச்ச இதுங்களா?. அழுதுகிட்டே இருக்கு. எனக்கு அழுதா பிடிக்காதுனு உனக்கு தெரியாதா" அவள் கண்ணை சுருக்க

"எல்லாரும் உன்ன மாதிரி இருப்பாங்களா? அவளுக்கு வந்த ப்ராப்ளம் அப்படி தீ. கேட்டா நீயே கோவபடுவ"

"உன்ன மாதிரி அண்ணன் இருந்தா என்ன மாதிரி தான் எல்லாரும் இருப்பாங்க. ஏதுவா இருந்தாலும் அழுகிறது சொலியுசன் இல்ல விமி" அவனை பார்த்து சிரித்தாள் அவள்.

"என் தங்கமே. தீ மா இனிமே அந்த பொண்ணு அழுகாத மாதிரி நீ கிளாஸ் எடுத்து அனுப்பு. இப்போ நான் சொல்ல வேண்டியத செல்லிடுறேன். எனக்கு ஒரு வேலை இருக்கு"

அவள் சரிந்து உட்கார அவனுக்கு தெரிந்ததை அவன் கூற அவள் முகம் கோபமாக மாறி ரவுத்திரம் கொண்டது. பாரதியின் பாஞ்சாலியாக கண்கள் சிவக்க எழுத்து நின்றாள்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

தீமையை கண்டு அஞ்சி நடுங்காமல் ஆணிற்க்கு ஏற்ப வலிமையான குரலில் நம் வளர்ச்சிக்கு இடையூறுகளை விலக்கி துணிவோடு போராடும் வல்லமை வேண்டுமாம் கேட்டிக் கொள்ளுங்கள் வீரப் பெண்களே.


ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டும் என காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் மரபு வழியான குணங்களை அடியோடு மாற்றி, 'நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்' என்று பாடியுள்ளார் கவியரசர்.
(தக்ஷினாவை பாக்கும் பொது இதுதான் என் நினைவுக்கு வந்தது)

வருவாள்…

போகாதடி என் பெண்ணே! 💓💓💓

 
Last edited:
பெண்ணே 12.1

காக்கி உடையிலேயே வேகமாக உள்ளே வந்தான் புவி.

"என்னாச்சு விஷ்ணு? அதி மயக்கமாகுர மாதிரி என்ன நடந்தது?" பதட்டமாக கேட்க மிக பணிவாக எழுத்து நின்றான் விஷ்ணு.

"அதியன் சார் மட்டன் சூப் குடிச்சதனால அலர்ஜி ஆகிட்டு சார்" பயத்தோடு சொல்ல கோபமாக பார்தான்.

"வாட்? உன்கிட்ட நான் சொல்லிருக்கேன் தானே மட்டன் அவனுக்கு ஒத்துக்காது அலர்ஜி ஆகும்னு" வார்த்தையை கடித்து துப்ப கையை பிசைந்தான் அவன்.

புவியிடம் இருந்து தற்காலிகமாக அவனை காப்பாற்ற கதவை திறந்துக்கொண்டு வேகமாக உள்ளே வந்தார் டாக்டர்.

"வாங்க அங்கிள்"

"என்னாச்சு புவி? அதியன் ரொம்ப ஹெல்தியாச்சே"

"மட்டன் சூப்ப குடிச்சிட்டான் போல அங்கிள்"

"ஓஓஓ இப்போ அதியன் எங்க"

"உள்ளதான் வாங்க" இருவரும் உள்ளே செல்ல கதவு வாயிலில் நின்றுக்கொண்டான் விஷ்ணு. சற்று நேரத்தில் அவன் போன் அதிர காதில் வைக்கவும் மறுமுனையில் கஸ்டமர் ஒருவர் பேச வெளியில் சென்றுவிட்டான்.

தன் அறையில் இருந்தே எட்டி பார்த்தாள் ஆராதனா. வீட்டிற்கு செல்ல இன்னும் இரண்டு மணி நேரம் கடக்க வேண்டியதாக இருக்க நகத்தை கடித்து துப்பிய வாரே நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தவளை இனம் கானா ஒரு பரிதவிப்பு ஆட்டி படைத்தது.

"அதியன் அதியன் எழுந்திருங்க" அவனை தட்டி எழுப்ப அயர்வாக கண்ணை திறந்தான் அவன். புவி அவனை அனைவாக பிடித்து உட்கார வைக்க வர அவனே எழுந்து சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.

அவனை பரிசோதித்துப் பார்தவர் புவி அவனை கவலையாக பார்க்க அவர்களின் பாசத்தில் கணிவாக சிரித்தார்.

"அதியனுக்கு ஒன்னும் இல்ல புவி. பாடி டீஹைடீரேட் ஆனதுநால மயக்கம் வந்திருக்கும் ஒரு நார்மல் சலைன் டிரிப்ஸ் போடுரேன் சரி ஆகிடும். இந்த மருந்து மட்டும் வாங்கிட்டு வாங்க" என மருந்து சீட்டை தர விஷ்ணுவை காணாததால் அவனே மருந்து வாங்க சென்றான்.

"என்ன அதியன்? உங்களுக்கு ஒத்துக்காதுனு தெரியும் தானே"

"இல்ல அங்கிள் ஒழுங்கா பார்காம குடிச்சிட்டேன்"

"வயிற்றில் பெயின் இருக்கா?"

"இப்போ பரவால அங்கில் பட் பசிக்கிற மாதிரி இருக்கு ஏதாச்சும் சாப்பிட்டா வாமிட் வருமா? "

"இப்போதைக்கு ஒரு கிளாஸ் பால் மட்டும் குடிச்சா ஒன்னும் ஆகாது. இருங்க புவிகிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்லவா?"

"இட்ஸ் ஓகே அங்கிள் வெளியே பக்கத்து கேபின்ல என் பி.ஏ இருப்பாங்க கொஞ்சம் வர சொல்லுறிங்களா?"

"ஓ சூயர்" டாக்டர் வெளியில் வருவதை பார்த்த ஆராதான திரும்பிகொள்ள நினைக்க அவர் அவளை நோக்கி வருவதை உணர்ந்து அவளே அவரிடம் சென்றாள்.

"நீங்க தான் அதியன் பி.ஏ வா? "

"ஆமா சார்"

"உங்கள உள்ள வர சொன்னாங்க" என திரும்பி நடக்க அவளுக்குதான் பதட்டத்தில் வியர்த்து வழிந்தது. கைகள் நடுங்க மெல்ல அங்கு சென்றாள். டாக்டர் அருகில் இருக்க கண்மூடி சாயந்து அமர்ந்திருந்தான் அதியன்.

"சார்" கண்ணை திறந்து அவளை பார்தவனுக்கு ஏதும் நினைவில் இல்லை போலும் "எனக்கு ஒரு கிளாஸ் பால் போட்டு தர முடியுமா ஆராதனா" தலையை மட்டும் ஆட்டியவள் பாலை கொதிக்கவைத்து இரண்டு முறை ஆற்றி கிளாஸில் ஊற்றி அவனிடம் சென்றவள் அவன் முகத்தை பார்காமல் நீட்ட அவள் கைகள் மட்டும் கதக் ஆடியது.

"இவளுக்கு என்னாச்சு? எதுக்கு என்ன பார்க்கமாட்றா?" யோசனையோடு வாங்கி வாயில் வைக்க பால் நன்றாகா சுட்டுவிட்டது. அவன் உதட்டை ஒற்றை விரலால் தேய்த்துகொண்டு இருந்தான். ஒரு நிமிடம் அவள் அவனில் தேங்கி நிற்க பணிபடலமாய் இருந்த நிகழ்வு அதியனுக்கு நினைவுக்கு வந்தது கண்ணை விரித்து அவளை பார்க்க படக்கென்று திரும்பி கொண்டாள் ஆராதனா. அவனுக்கு ஒரு ஆனந்த அதிர்வு அவன் விரல் மென்மையாக ஒரு முறை உதட்டை வருடிவிட ஒரு சிறு வெட்க சிரிப்போடு பாலை குடித்தான்.

புவி மருந்தை வாங்கிவந்ததும் அவனுக்கு ஊசியும் டிரிப்ஸ்ம் போடப்பட்டு இருக்க டாக்டரை அனுப்பி வைக்க சென்றிருந்தான் புவி வேந்தன்.

"ஆராதனா அது… நான்" எங்கே தவறாக நினைத்து விலகி சென்றுவிடுவாளோ என்று தயங்கி இழுக்க "சாரி சார் என் மேல தான் தப்பு நீங்க என்ன தான் கூப்பிட்டிங்கனு நினைச்சி பக்கத்துல வந்துட்டேன்… மனிச்சிருங்க" தினரலோடு அவள் சொல்ல இந்த திருப்பத்தை அதியன் எதிர்பார்கவில்லை. தப்பித்தால் போதும் என்று அமைதியாக இருந்து கொண்டான்.

சற்று நேரத்தில் புவி உள்ளே வர பணிவாக நிற்றுக்கொண்டாள் ஆராதனா. கொஞ்சம் பயம் கூட சேர்ந்துக்கொண்டது அதற்கு காரணம் அவன் அஜானுபாகுவான தோற்றம் மட்டுமல்ல போலீஸ் என்று பெயரும் தான். நம் நாட்டில் பலருக்கு போலீஸ் என்றாலே தேவையற்ற பயம் ஒன்று வருவது இயல்பானது தானே. நவீன காலமாக இது மறைந்துவருவதும் குறிப்பிட தக்கதே.

"நீங்க கிண்டி ப்ரான்ஜ் மேனேஜர் தான இங்க என்ன பண்றிங்க?" அவளை பார்த்து புவி சாதாரனமாக கேட்க அவளுக்கு தான் மிரட்டுவது போல் இருந்தது.

"இல்ல சார் நான் இங்க தான் மேனேஜரா ஒர்க் பண்றேன்" புவியின் பார்வை அவளை ஆராயா அதியன் கொடுத்த கிளாசை அவளே வாஸ் செய்துக்கொண்டு இருந்தாள். அங்குலம் அங்குலமாக ஆராதனாவை அளந்துக்கொண்டு இருந்த புவியை பார்த்து அதியனுக்கு ஏகத்துக்கும் ரத்த அளுத்தம் எகிறியது. அவனிடம் சொல்லிவிட்டு கிளம்ப உள்ளே வந்த ஆராதனாவை உற்று பார்க்க ஆரம்பித்துவிட்டான் புவி. அவனின் ஆர்வமான பார்வையை கண்டுகொண்ட ஆராதனா அதியனை தான் பார்த்தாள். ஏன் என்று கேட்டாள் அவளிடம் பதில் இல்லை. அவனும் இவர்கள் இருவரையும் காட்டமாக பார்த்தவன் ஆராதனாவை முறைத்தான்.

"இவன் எதுக்கு நம்மல முறைக்கிறான்? அவன் பார்த்தா அவன முறைடா இரண்டும் இம்சைங்க" பல்லை கடித்தாள்.

புவி அவளிடம் பேச்சுகொடுக்க நினைக்க அதை புரிந்துக்கொண்ட அதியன் "நீ முத வீட்டுக்கு கிளம்பு ஆராதனா" என எரிந்துவிழ புவி அவனை திரும்பி பார்தாலும் அவளை துரத்துவதிலே குறியாய் இருந்தான் அவன். விட்டால் போதும் என்று அவளும் பறந்து விட்டாள் போகும் முன் ஒரு முறை திரும்பி அவளே அறியாமல் அவனை ஆராய அவள் கண்ணில் தெரிந்த கவலையில் அதியனின் கண்கள் மின்னின.

"ஏன் அதி இப்படி அவங்கள விரட்டுற?"

"ஆமாட அப்பறம் நீ சைட் அடிக்கட்டும்னு நிக்க வைக்க சொல்லுறியா? அவ உனக்கு அண்ணிடா எருமமாடே" மனதில் புலம்பியவனை வினோதமாக பார்த்தான் புவி.
________

"சார் ரொம்ப தேங்ஸ்" கைகுவித்தான் அந்த இளைஞன். அவன் தோளில் தட்டின விமலன் "தேங்ஸ் எனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல உங்களுக்கு ஒர்க் பண்ணதான் நாங்க சம்பளம் வாங்குறோம்" அவன் சிரிக்க ஆண்மகன் அழுக கூடாது என்ற சமூக கட்டுபாடையும் மீறி கண்ணீர் வடிய பார்த்தான்.

"எதுக்கு மேன்? அழுதா எஸ்பி மேம்க்கு பிடிக்காது"

"இல்ல சார் நீங்க மட்டும் உதவி பண்ணலனா எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நாசமா போயிருக்கும். அந்த பொருக்கிய சுட்டு கொண்ணுட்டு சரண்டர் ஆகிடலாம்னு இருந்தேன். நீங்களும் அந்த சாரும் என்ன புரிஞ்சிகிட்டு நல்லது பண்ணுவிங்கனு நான் எதிர்பாக்கவேயில்ல. நல்லவங்க இங்க நிறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சிக்கிட்டேன் சார். நான் பண்ண இருந்த தப்பிலேந்து என்ன காப்பாத்திட்டிங்க சார்"

"பெருசா ஏதும் நாங்க பண்ணல குற்றம் பண்ணவங்கள கண்டுபிடிச்சி தரது மட்டும் எங்க வேலையில்ல குற்றம் நடக்காம தடுக்கிறதும் எங்க வேலைதான். நான் உன்ன மட்டும் குறை சொல்ல முடியாது உயர் பதவில இருக்க சிலர் சுயநலமா நடந்துக்கிறநாலதான் பப்ளிக் வைலன்ஸ்ல இறங்குறாங்க. குறுக்கு வழில இனிமே எதையும் முயற்ச்சி பண்ணாத நீ வெப்பன்ஸ் வாங்கினவங்க ரொம்ப மோசமானவங்க என்கவுன்டர் லீஸ்ட்ல இருக்க மொஸ்ட் வாண்டட் கிரிமினல்ஸ் உனக்கிட்ட நியாயமான ரீசன் இருக்க நாலதான் உன்ன விட்டோம். பட் திரும்ப எதுலையாச்சும் இன்வால்ஆனா ஐ கான்ட் டூ நத்திங். இதுமட்டுமில்ல இனிமே இந்த விஷயத்த எஸ்பி பார்த்துப்பாங்க நீ எல்லாத்தையும் மறந்திட்டு உன் பேமிலிய பாரு"

"சார் இதுல என் பேர வெளில விட்டலும் பரவாயில்ல சார் என் சிஸ்டர்ரோட பேரு… அவ சின்ன பொண்ணு சார்" கலக்கமாக பேச அவன் கவலையை உணர்ந்துக் கொண்டான் விமலன்.

காலம்காலமாக நடுத்தர குடும்பத்தினர் காத்து வருவம் நற்பெயற் அதற்கு பயந்தே எல்லாவற்றையும் விட்டுகொடுக்கும் பாவபட்ட மக்கள். இவர்களை இரையாக கொண்டு தான் இந்த சமூகத்தில் பல கொழுத்த திமிங்கலங்கள் வாழுகின்றது என்பது மேடை ரகசியம். வாயையும் வையிரையும் கட்டி பட்ஜெட் வாழ்க்கையில் சேர்த்ததையெல்லாம் மான அவமானத்திற்கு கட்டுபட்டு அனைத்தையும் இழந்து பேராட கூட துணிவின்றி மடிந்து போகின்றவர்கள்.

"நானும் ஒரு அண்ணன் தான் எஸ்பி இருக்காங்கள அவங்கதான் என் சிஸ்டர். நீ கவலபடுறமாதிரி எதுவும் நடக்காது ஐ நோ மை சிஸ்" அவன் சிரிக்க இவர்களுக்கு நன்றிகடன் பட்டதாகவே நினைத்தான் அவன்.

"உன் தங்கச்சிக்கு நீ தான் மாரல் சப்போட்டா இருக்கனும். அவன கொள்ள ஒரு தைரியம் வந்ததே அத வேற மாதிரி பயண்படுத்தி எல்லாத்தையும் எதிர்த்து நிக்கனும் உன் சிஸ்டர்க்கும் அத சொல்லி கொடு" என்றவன் ஒரு முறை தக்ஷினா அறையை பெருமையாக பார்த்துவிட்டு சென்றான்.

அதில் என் தங்கை தைரியமான பெண். இந்த உலகத்தையே எதிர்த்து நிற்கும் தைரியம் பெற்றவள் என்ற கர்வமே அதிகம். இது நான் தான் உயர்ந்தவன் பெண் நீ எனக்கு கீழ் என நினைத்து அதன்படி தன்னை நேசிக்கும் பெண்களை அடிமையாக பாவித்து அப்படியே இறந்து போகும் சாதாரண ஆண்களுக்கு தோன்றாத ஒன்று அவன் சாதாரணமானவனும் இல்லை. நிச்சயம் அவள் வளர்ச்சியில் அவனுக்கு பங்குண்டு அதை அவளே சொன்னாலும் ஒத்துக்கொள்ள மாட்டான்.


வருவாள்…

போகாதடி என்ன பெண்ணே!
 
Last edited:
பெண்ணே 12.2
IwvvEZ-gm0fbAlwFWlOv5eY359yXaYU-C21BnWvM9VQC2mA_OodB5GS0FxQDjBOHw3aM9R507D6ddMeg4OjKf9yTesRijjXEZFR1203CSTurOFOnyDxQEsLEAQfROi2dWVwK0fcy=s1600


"இங்க பாரு எனக்கு அழுதா பிடிக்காது" தக்ஷினாவின் கோபத்தில் மிரண்டு விழித்தாள் அந்த பெண்.

"சாரி மேடம் இனிமே அழமாட்டேன்" அழுதுக்கொண்டே அவள் சொல்ல "உனக்கு எத்தன வயசு?" சம்பந்தம் இல்லாமல் கேட்டாள் அவள்.

"18 மேம்"

"ம்ம் எதுக்கு 18 ஆகிட்டா மேஜர்னு சொல்லி ஓட்டர் ஐடி லைசன்ஸ் எக்ஸ்ட்ரா எல்லாம் தராங்கனு தெரியுமா?" மேஜையில் ஏறி அமர்ந்த வாறே கேட்க தலையை குனிந்துகொண்டாள் அவள். அந்த டீன் ஏஜ் பெண்ணை பார்க்க அவளுக்கு ஏனோ பிடித்தது அந்த அழுகையை மட்டும் தவிர்த்து.

"மெச்சூரிட்டி வந்துட்டுனு மேம்"

"மெச்சூரிட்டி எப்படி தானா வந்திருமா? சொல்லு…?" அவள் அமைதியாகவே நிற்க

"அதை நம்மதான் வளர்த்துக்கனும். நாட்டுக்கு யாரு தேவைனு செலக்ட் பண்ற வயசுனா இந்நேரத்துக்கு பகுத்தறிவுனு ஒன்னு உனக்கு வந்திருக்கனும்" அவள் சொல்ல சொல்ல சுய அலசலில் விழுந்தாள் அந்த பெண்.


"இந்த உலகத்தையே எதிர்கொள்ற வயசு உனக்கு வந்துட்டு. இந்த உலகத்தில 78 பர்சென்டேஜ் பெண்கள் பொது இடத்தில ஹராஸ்பண்ண படுறாங்க எல்லா இடத்துலையும் யாராச்சும் உதவி பண்ணுவாங்கனு எதிர்பார்க்க முடியாது. பசங்களுக்கு கூட பாதுகாப்பு இல்ல அதுவும் இன்னும் பொண்ணுனா இந்த உலகம் செக்ஸ் பொம்மையா தான் பாக்குறாங்க இப்படி உன் கண்ணில் பயத்த பார்த்தா உன்ன விட்டிருவாங்கனு நினைச்சியா?. புல் ஆஃப் டெவில்ஸ் கடைசி சொட்டு ரத்தம்வரைக்கும் உறிஞ்சிட்டு தான் விடுவாங்க. எதிர்த்து நிக்க தைரியம் வேண்டாமா? கோலை தனமா தற்கொலை பண்ணிக்க முயற்ச்சி செஞ்சிருக்க. அப்படி பார்த்தா பொண்ணுங்களுக்கே இங்க பஞ்சம் வந்திரும்" கண்ணீர் மெல்ல நின்றிருக்க தன் செயலை நினைத்து அசிங்கமாக இருந்தது அவளுக்கு.

"கண்ணாலே தள்ளி வைக்கிறதுனா என்ன தெரியுமா? முறைச்சி பார்கிறதா? கண்டிப்பா இல்ல எப்போதும் உன் கிட்ட இருக்குற தைரியம் தான் அது. உன் கண்ணில் இருக்க தைரியம் இவள அசைக்க முடியாதுனு தப்பு செய்யுறவங்கள பின் வாங்க வைக்கிற தைரியமான பார்வை. இது உன் கிட்ட இருக்குற வரைக்கும் உன்ன யாராலையும் ஒன்னுமே பண்ண முடியாது உன்ன பத்தி நினைப்பே அவங்களுக்கு வராது. மான் போல மருண்ட பார்வை பெண்ணுக்கு அழகுனு சொல்லறது எல்லாம் ஹம்ப் கண்ணகி கண்ல இருந்ததே நெருப்பு அதுதான் பெண்ணுக்கு அழகு" அந்த நெருப்பு அவள் கண்ணிலும் கொழுந்துவிட்டு எரிந்தது. தைரியமாக நிமிர்ந்து நின்றாள்.

சரியான நேரத்தில் சில உபதேசங்கள் கிடைக்க பட்டிருந்தாள் பல மரணங்கள் தடுக்க பட்டிருக்கலாம். பலர் வழி தடங்கள் மாறியதற்கு எல்லாரும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் அட்வைஸ்சே முக்கிய காரணம். சில நேரம் விருப்பமே இல்லாமல் கட்டாயத்தின் பேரில் கேட்க நிகழ்ந்த உபதேசங்கள் கூட என்றோ ஓரு நாள் நம் வாழ்க்கையில் டிராக் டர்ன் அவுட் ஆக மாறலாம். சொல் புத்தியும் நன்றே.

"உனக்கு ஒரு சான்ஸா அந்த பொறுக்கிய உன் கையில கொடுத்தா என்ன பண்ணுவ?"

வீங்கி சிவந்திருந்த குண்டு கண்களை உருட்டி விழித்தவள் "பூமிக்கு பாரமா இங்க இருந்து பொண்ணுங்க வாழ்க்கைய அழிக்கிறதுக்கு அவன் இல்லாமே போகலாம் மேம்"

"குட் இனி அழகூடாது. அடுத்தவங்க அழுதாழும் இரக்க பட கூடாது. உன் அண்ணன் கிட்டையும் சொல்லு. நவ் யூ கேன் கோ"

"அடி ஆத்தாடி பத்து நிமிஷம் பஞ்சு டயலாக் பேசி பச்சகிளிய டிராகண் குட்டியா மாத்திட்டாங்களே இந்த மேம். கொஞ்சமா எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணதுக்கே இப்படியா. இனிமே மேம் கண்ணுலேந்து இந்த பொண்ணுங்கள மறைச்சி வைக்கனும் இல்ல சைட் அடிக்கூட பஞ்சம் வந்துரும். உசாருடா சரத்து நம்ம ஏரியா பொண்ணுங்கள கட்டுகாவல் போட்டு இவங்ககிட்ட இருந்து காப்பாத்திக்கோ"

"சரத்... ஒட்டு கேட்டது போதும் உள்ள வரலாம்" தக்ஷினாவின் குரலில் அடித்து பிடித்துக்கொண்டு உள்ளே ஓடி அவளுக்கு சலூட் வைத்தான் அவன்.

"என்ன கேட்டது போதுமா?" அவள் நக்கலாக பேச அசடு வழிந்தான் அவன்.

"அப்படி என்ன நான் பேசுரத கேட்க உனக்கு ஆர்வம்?"

"பேசுரதே நீங்கங்குறது நால தான் மேடம்" அவன் வெட்க்க பட கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள் தக்ஷினா.

"போய் அந்த ஏசிய ஆப் பண்ணிட்டு வந்து ஐஸ் வை. ரொம்ப குளிருது" அவள் நக்கல் அடிக்க வாயை இழுத்து மூடிக்கொண்டான். வாயை மட்டும் தான் மைன்ட் அது பாட்டிற்க்கு மொத்த பல்லையும் காட்டியது.

"என்ன விசியம்?"

"அது அன்னைக்கு சத்தியா கேஸ் பத்தி சில பைல்ஸ் கேட்டு இருந்திங்கள மேம். இதுல இதுவரைக்கும் கலேக்ட் பண்ண எவிடன்ஸ்,அட்டாப்ஸ்சி ரிப்போர்ட். இந்த கேஸ் மூனு பேரு கைக்கு போயிருக்கு பஸ்ட் பாடி கிடைச்ச ஏரி இருக்க ஏரியா இன்ஸ்பெக்டர் ரெண்டே வாரம் தான் அப்பறம் விமலன் சார் ட்டு இயர்ஸ் இன்னோருத்தர் டி.எஸ்.பி ரத்தனம் சார். மொத்தமா இதல இருக்கு மேடம்" அவள் முன் ஒரு பெண்டிரைவை வைத்தான் அவன்.

"இந்த கேஸ்ல யாருமேல லாம் சந்தேகம் இருந்திச்சு? உங்களுக்கு எதாச்சும் தெரியுமா?"

"இந்த கேஸ் பத்தி பெருசா ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்கல மேம். இதுல மெயின் கண்ப்புயுஸ்க்கு காரணமே யாரு மேலேயும் டவுட் வராததுதான். ஒரு நாள் விமலன் சார் என்கிட்ட சொன்னர் சேலம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்த கேமரால அந்த பொண்ணு ரெகார்ட் ஆகியிருக்குனு. அன்னைக்கு தான் அந்த பொண்ணு கானா போயிருக்காங்க மேம்… சேலம் டூ சென்னை வரத்துக்கான எந்த டிரான்ஸ் போர்ட்லையும் அவங்க வரல. அப்படியும் அந்த பொண்ணு லவ்வரா இருக்குமோனு அந்த ஆங்கிள்லையும் பார்த்தாங்க ஆனா அவன் இரண்டு மாசத்துக்கு முன்னடியே யுஎஸ் பேயிட்டான் சொ அவனும் இல்ல. இதுல அந்த பொண்ணு இதுவரைக்கும் சென்னைக்கு வந்ததே இல்லையாம் மேம்" அவன் சொன்னத மனதில் பதிய வைத்தாள் தக்ஷினா.

"போஸ்மாடம் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யாராச்சும் நல்ல அனுபவம் இருக்கவங்களா விசாரிச்சி அப்பாயின் மெண்ட் வாங்குங்க. அப்பறம் சத்தியா பேரன்ஸையும் அவள போஸ்மாடம் பண்ண டாக்டரையும் நான் பாக்கனும்" எல்லாமே ரெண்டே நாள்ள நடக்கனும்.

"ஓகே மேம். பட் அந்த பொண்ணோட அப்பா இறந்துட்டாரு மேடம் அந்த பொண்ணு டெட் பாடிய பார்த்து நெஞ்சு வலி வந்துட்டு. இப்ப அம்மாவும் தம்பியும் மட்டும்தான்"

"ஒவ் ஓகே… அப்பறம் சரத் இதுவரைக்கும் காணபோன பொண்ணுங்க லிஸ்ட் எனக்கு வேனும்… மிஸ்ஸிங் கேஸ் மொத்தமா லீஸ்ட் அவுட் பண்ணிட்டு வாங்க"

"ஓகே மேம்… இன்னைக்கு கூட ராதிகானு ஒரு பொண்ண கானும்னு பேக்ஸ் வந்தது மேம்"

"அத எஸ்.ஐ கிட்ட விட்டுட்டு நீங்க இத பாருங்க" என எழுந்து வெளயில் வந்தவள்.

"அப்படியே உங்க ஏரியா பொண்ணுங்களுக்கும் கட்டுகாவல் போட்டு பத்திரமா பாத்துக்குங்க" எனவும் அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.

"மேம் எப்படி? மைட் ரீடிங் கூட பண்றிங்க ஆனா நான் கதவுக்கு பின்னாடி தானே நின்னு நினைச்சேன்"

"இனிமே நினைக்கும் பொது வால்யும குறச்சி யோசி ரொம்ப சத்தமா இருக்கு" என்றவள் சென்றுவிட

"எல்லாமே கேட்டுச்சா?" அவன் மனதில் நினைக்க

"ஆமா சார் எல்லாருக்குமே கேட்டுச்சி" பின்னால் இருந்து கோரசாக பதில் வந்ததில் திரும்பி பார்த்தான். அனைவரும் சிரித்துக்கொண்டு இருக்க.

"அவ்வளவு சத்தமாவா இருக்கு? அவ்வ்வ்" என புலம்பலில்

"சார் திரும்பவும் மைன்ட் வாய்சுனு நினைச்சி சத்தமா பேசிட்டு இருக்கிங்க" ஒருவன் வாரிவிட "ச்சூ வேலையை பாருங்க" என அசட்டு சிரிப்போடு ஓடிவிட்டான் நம்ம வீட்டு செல்ல தொல்லை சரத்.

—————-—
ஆராதனா செல்லும் வழியில் தான் சந்தோஷ் வேலை பார்க்கும் ஆஃபிஸ். ஆராதனா ரொனல்டோவிடம் அதுதான் அவள் பெப்பிடம் கெஞ்சி கொண்டே வேகமாக உருட்டி(ஓட்டி) கொண்டு இருந்தாள். சந்தோஷ் அவளை மெதுவாய் பின் தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தான்.

அன்று நடந்து நிகழ்விற்கு பிறகு இருவரும் பேசிக்கொள்ள வில்லை. அவனுமே சற்று பயந்துவிட்டான். எல்லா நாளும் ஓன்று போல் இருப்பதில்லையே எங்கே கோபத்தில் அடித்து அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்பதானால் பேசாமல் இருந்தான்.

அராதனாவிற்கு பாசம் இருந்தாலும் தன் மேல் தான் ஆண் என்ற ஆதிக்கம் செலுத்தி அவள் சொல்ல வருவதை கூட காதில் வாங்காமல் அடித்தது கோபத்தை கிளப்பி விட்டுறிருந்தது. முன்பெல்லாம் அவன் அடித்தால் வாங்கிக்கொண்டு அழுதால் திரும்ப அடிப்பானே என்ற பயத்தில் அழுக கூட பயந்தவள். அன்று நடந்த நிகழ்ச்சியில் பாதி மாறி வேலைக்கு சென்றதும் முழுதாய் மாறி எதிர்த்துநின்றாள். இந்த காரணம் கூட அவனையும் ராகவனையும் மூர்கதனமாக நடந்துக்க வைத்தது.

என்ன தான் தங்கை என்ற பாசம் இருந்தாலும் ராகவனின் வளர்பில் ஆண் என்ற செருக்கு அவளிடம் அதை பகிர்ந்து பாசமாக நடந்துக்க விடவில்லை. அவளுக்கு வாங்கி தர நினைத்ததைகூட அவள்மேல் அவளுடைய விருப்பம் அறியாமலே திணித்தான். பெண்ணாக பட்டவள் அவனுக்கு அடிபணிந்து நடப்பதை கர்வமாக நினைத்து திமிராக நடத்தினான்.

ஓரே சமூகத்தில் விமலனை போலவும் ஒரு ஆண் சந்தோஷை போலவும் ஓரு ஆண் இவர்களிடம் இருக்கும் பாசம் ஒன்றே, வித்தியாசமானது வளர்ப்பு மட்டுமே. இருவருக்கும் தங்கைகளின் பாதுகாப்பு தான் முதன்மை இருந்தும் அவள் தன்னம்பிக்கையில் கர்வம் கொள்பவன் விமலன் சந்தோஷோ அவளை கோலையாக்கி கர்வம் கொள்ள நினைக்கிறான். பெண்கள் இருவருமே மனதில் மாகா சக்தி அடக்க நினைக்கதான் முடியுமோ.

எத்தனை கூண்டு வைத்து சிறைபிடித்தாலும் உடைக்க தெரிந்த நான் உன் அன்பென்னும் கூண்டில் சிக்கி கொண்டதன் விந்தை என்ன?

பாசம் என்பது எத்தகைய தளைகளையும் உடைக்கும் வல்லமை பெற்றது. அந்த பாசம் அது நம்வர்களுக்கு கேடையமாகதான் இருக்க வேண்டும் கூண்டாக மாறி சிறைவைக்க கூடாது.

ஆராதனாவை பார்த்துவிட்டால் அவள் பின்னால் அவளுக்கு ஏற்ப்ப மெதுவாக விட்டு செல்லாமல் கூடவே வருவான் சந்தோஷ். சில சமயம் அராதனாவிற்கு பிடித்தாலும் யாரவது இவளை திரும்பி பார்த்துவிட்டால் வீட்டிறக்கு வந்து அவன் யார் இவன் யார் என்று விசாரணை நடத்தி கொள்ளுவான். அதனாலேயே வெறுத்துவிட்டாள்.

இன்று அவளுக்காக சனி சன்னிலீயோன் டி ஷர்டில் வர அலுப்பாக இருந்தது அவளுக்கு.

"ஒய் ஒய் பெரேன்ன?" அவள் பக்கதில் பைகில் இருந்த இளவட்டம் இரண்டு வம்பிளுக்க சைடு மிரர் வழியாக எட்டி பார்த்த ஆராதான பக்கத்தில் வந்தவனை கொள்ளும் வெறிக்கு வந்தாள். சந்தோஷ் கோபத்தில் சத்தமாக ஹாரன் அடிக்க அவனுக்கு சைடு கொடுக்காமல் ஆராதனாவிடம் நூல் விட்டுக்கொண்டு இருந்தான் அவன். ஆராதனா சந்தோஷ்க்கு டைடு கெடுக்க சன்னி ஷர்ட் போட்டவன் அவளை ஒட்டி ஒட்டி வண்டியை கொண்டு வந்தான்.

"நீங்க அழகா இருக்கீங்க. நம்பர் கிடைக்குமா? ஓய் பியூட்டி உன்னதான்" அவன்கள் இருவரும் விடாகண்டானாக கேட்க திரும்பி முறைத்தாள் அவள். சந்தோஷ் விடாமல் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்தான். அவன் சிவந்த முகம் ரத்தம் ஏறி மிலகாய் சிவப்பாக இருந்தது.

பின்னால் இருந்தவன் திரும்பி சந்தோஷை பார்த்தவிட்டு அவன் அழகில் பெறாமை கொண்டு அவளிடம் "யாரு உன் லவ்வரா? நல்லாவேயில்ல கழட்டிவிட்டுடு" சத்தமாக சொல்ல அது நன்றாக சந்தோஷ் காதிலும் விழுந்தது ஒரு நிமிடம் ஆராதானா அதிர்ச்சியாகி கண்ணாள் அவனை பொசுக்க ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி அவர்கள் பக்கத்தில் வந்த சந்தோஷ் இடது கையால் பின்னால் இருந்தவன் தலையில் நங்கென ஒரு அடிவைத்தான். அதில் முன்னால் இருந்தவன் பேலன்ஸ் இல்லாமல் அவர்கள் இருவரும் ஆராதனா மேல் விழ மூவரும் சேர்ந்து கீழே விழுந்தனர். நல்லவேளையாக ரொனல்டோ 20தை தாண்டி போகத காரணத்தால் அவளை தொடர்ந்து அதே வேகத்தில் வந்ததில் யாருக்கும் அடிபடவில்லை. சிறு சிராய்ப்புதான் மூவருக்கும்.


வண்டியை நிறுத்தி வேகமாக வந்தவன் இருவரையும் இழுத்து தள்ளிவிட்டு ஆராதனாவை மட்டும் தூக்கி நிறுத்தினான். அவளுக்கு கீழே விழுந்த பயத்திலும் எங்கே நடு ரோட்டில் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற பயத்திலும் கண்ணில் இருந்து கண்ணீர் கொட்டியது. எதுவோ சொல்ல கோபமாக திரும்பியவன் அவள் அழுவதை பார்த்துவிட்டு சன்னி டி ஷர்ட் காரனை சட்டையை பிடித்து ஒற்றை கையால் தூக்கவும் சந்தோஷின் ஜூம் பாடியின் முன் குச்சி போல் இருந்தவன் மிரண்டு பார்க்க இரண்டு அறைவிட்டு தூக்கி வீச இன்னோருவன் பக்கதிலே போய் விழுந்தான். அந்த இன்னோருவன் அருகில் போணவன் அவன் முடியை கொத்தாக பிடித்து வாயிலே ஒரு குத்துவிட்டு இரண்டு மிதி மிதித்து விட்டுதான் வந்தான்.

சாலையில் போணவர் சிலர் வண்டியை நிறுத்தி வேடிக்கை பார்க்க அதிசயமாக அராதனாவிற்கு அடிபட்டுவிட்டதா என்று பார்வையால் ஆராய்ந்தவன் அவள் கை கால்கள் நடுங்கவும் திரும்பி இருவரையும் முறைத்தான் சந்தோஷ்.

"எங்கயாச்சும் அடி பட்டுறுக்குதா தனா?" இதுவரை அவனிடம் கேட்டிராத பாசமான குரலை கேட்டதும் எங்கிருந்து தான் அழுகை வந்ததோ ஏங்கி ஏங்கி அழ அவனுக்குதான் கஷ்டமாக இருந்தது.

ஏனென்றால் ஆராதனா சாதரனமாக அழமாட்டாள் அப்படி என்றால் எங்கோ அடிபட்டு இருக்குமோ என்று பதட்டமாக அவளிடம் செல்ல அவள் "அண்ணா" என அவன் கையை பிடித்துக்கொண்டு அழ பயந்துவிட்டான் சந்தோஷ். "என்னாச்சு டி? அழுவாத சொல்லு வலிக்குதா? தனா பாரு ஹாஸ்பிட்டல் போலாம் வா சரி ஆகிடும்" வேண்டாம் என்று தலையை அசைத்தவளை அவன் விலக்கி நிற்க வைக்க அவன் மேலே சாய்ந்துக்கொண்டு கேவி கேவி அழுதாள். பயத்தில் தான் அழுகிறாளோ என்று மெல்ல அவள் தோளை தட்டிக்கொடுக்க சாமாதனாம் ஆனாள் ஆராதனா.


அவனின் பாச மொழிக்கு ஓரே காரணம் விமலன் தான்.

வீட்டிற்கு செல்லும் நேரம் தன் நண்பனுக்காக சந்தோஷ் ஒரு கடை வாசலில் காத்திருக்க ஒரு கார் நிழலில் நின்றுக்கொண்டு வேடிக்கை பார்த்தான். அவனாக கேட்க விரும்பவில்லை காற்று வாக்கில் அவன் காதில் விழுந்தது ஒரு அண்ணின் தங்கை மீதான பாசம். (நம்ம விமியேதான்)
போனில் பேசிக்கொண்டு இருந்தான் போலும்

"தீ மா கிளம்பிட்டியா? "

……….

"சரி நீ இரு நானே வரேன். ஹே அம்மு நம்ம இன்னைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட போவோம்மா?"

………………

"தீ இந்த அண்ணனுக்காக இத கூட செய்ய மாட்டிய? எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? இப்போ நான் ஐஸ்கிரீம் ஷாப் வாசல்ல தான் இருக்கேன். பாத்தோனே உன் நியாபகம் தான். தீ மா எல்லாமே உன்னோட பேவேரேட்" அவன் கொஞ்சி கொண்டு இருக்க முதலில் யாரோ என்று நினைத்தவன் தங்கசியா என்று அதிசயமாக தான் இருந்தது.

………….. .

"எங்க போற தனியாவா? அத அப்பறம் பாத்துக்கோ நம்ம காண்ரக்ட் படி நளைக்கு நம்ம கிரிக்கெட் விளையாட போகனும்"

……………..

"ஹேய் தீ மா ப்பிராமிஸ்டா நீ வா வந்து அண்ணனுக்கு ஏத்த பிஸ்சா செலக்ட் பண்ணு" அவன் சிரிக்க அவன் பேச்சில் இருந்த பாசத்தில் நம்மளும் தனாக்கு ஐஸ்கீரம் வாங்கிட்டு போவோமா என்று திரும்பி கடையை பார்த்தான் சந்தோஷ்.

"………….."

"சரி வரேன் நீயே டிரைவ் பண்ணு தாயே. நான் பிடுங்க மாட்டேன் போதுமா"

"................."

"சரி டா நான் வர வரைக்கும் வெயிட் பண்ணு தீ. ஐம் ஆன் தீ வே" அவன் காரை கிளப்பிக்கொண்டு செல்ல எட்டி பார்தவன் உள்ளே போலீஸ் உடையில் இருந்தான் விமலன். சந்தோஷ் விமலனை பற்றி நிறைய கேள்வி பட்டிறிருக்கான். வெளியில் கம்பிரமாக ஊடுறுவும் பார்வையில் மிரள வைக்கும் விமலன் தங்கையிடம் காட்டும் பாசத்திலும் கொஞ்சலிலும் புதிதாக தெரிந்தான்.

இது தான் சந்தோஷை அவனே அறியாமல் அவளிடம் பாசமாக பேச வைத்தது.

சந்தோஷிற்கு ஆராதனாவை பார்க்க அன்று எல்கேஜியில் அவள் சீலேட்டு குச்சியை திருடியவனை கடித்து வைத்துவிட்டு மிஸ்ற்கு பயந்து அழுதுக்கொண்டே அவன் பின்னால் ஒழிந்தவளை திரும்ப பார்ப்பதை போலவே இருந்தது. ஒன்றை அவன் அறியவில்லை அன்று அவனிடம் தஞ்சம் அடைந்தவள் அவர்களின் ஆண் ஆதிக்க மணப்பான்மையில் விலகி சென்றுவிட்டாள் என்பதை. தொலைத்ததை தொலைத்த இடத்திலே தேடுவானா என்பதற்கான பதிலை காலம் தன் பக்கத்தில் தான் வைத்திருக்கும். கால புத்தகம் புரளும் வரை காத்திருப்போம்
வருவாள்…

போகாதடி என் பெண்ணே!💓💓💓
 
Last edited:
பெண்ணே 13
zGbLXZF9Mk5IBZcNBvoXvzLohXkWLPYQQZY5FEuiJOUjnsNnyCNSOH1gGkvUrtghuhiY4rUff1kyK5CoFg1WP_wYte97NJ0IEwhp8oNFHUxWEe7SIclrTaSKCcjJR2ywGlJNQ8_2=s1600


"டேய் 2கே கிட்ஸ் நல்லாவே இருக்க மாட்டிங்கடா. சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது. இருக்க எல்லா பொண்ணுங்களையும் நீங்களே கரக்ட் பண்ணிட்டா அப்பாவி 90ஸ் கிட்ஸ் நாங்களாம் என்னடா பண்றது?" இன்ஸ்டாவில் பீட்ஸ் பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தான் சரத்.

"ஏன் சார் வீட்டுல சொல்லி பொண்ணு பார்க்க சொல்லலாம்ல?" அவன் புலம்பலில் சிரித்துக்கொண்டே கேட்டார் ஏடூ.

"எங்க? போலீஸ்காரனு சொன்னாலே ஒருத்தனும் பொண்ணு தர மாட்டேன்கிறான்" அவன் சலித்துக்கொள்ள "சார் அங்க பாருங்க ரெண்டு ஸ்கூல் பசங்க வராங்க" வாயிலை காட்டினான் பி.சி.

"என்னவா இருக்கும்?" சரத்

"தெரியலையே சார்" அனைவரும் அவர்களை பார்க்க இருவரும் சரத் முன் வந்து நின்றனர்.

தலையில் இரண்டு ரோடு போட்டு நடுவில் மட்டும் கொத்தாக முடி வளர்த்து கலரிங் பண்ணிய முடியை சிலுப்பிக்கொண்டு 17 வயது நண்டு நிற்க ஹைபோணி போட்டு 15 வயது சிண்டு அவனுடன் வந்து நின்றது.

"இங்க இன்ஸ்பெக்டர் யாரு?" மிடுக்காக நண்டு பையன் கேட்க அவனுக்கு டஃப் தரும் அளவிற்கு இருந்தது சிண்டு பெண்ணின் பார்வை.

"இதுங்களுக்கு எல்லாம் வாய் மட்டும் இல்லனா நாய் தூக்கிட்டு போயிடும்" மனதில் நினைத்தவன் "நான் தான்" என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"சார் நாங்க வீட்டைவிட்டு வந்துட்டோம்" நண்டு.

"ஓ வீட்டுல கோச்சிக்கிட்டு வந்துட்டு திரும்பி போக அட்ரஸ் மறந்திட்டியா? சரி வா எந்த ஏரியானு சொல்லு நாங்களே வீட்டுல விட்டுறுவோம்" சரத் கடமை தவறாமல் கேட்க மறுப்பாக தலையாட்டினான் நண்டு

"நாங்க ஓடி வந்துட்டோம்" சிண்டு

"ஏன் பாப்பா நடந்து வந்துருக்கலாம்ல?" அவர்கள் மேல் ஏடூ பாவபட அவரை பாவமாக பார்த்தான் சரத்.

"don't call me பாப்பா. நாங்க லவ் பண்றோம் எங்க வீட்டுல ஒத்துக்கல அதனால நீங்க தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்" சிலிர்தெலுந்த சிண்டு அனுகுண்டை வீச நெஞ்சை பிடித்துக்கொண்டனர் அனைவரும்.

"டேய்... கலர் கோழி குஞ்சு என்டா சொல்லுது இந்த பொண்ணு?" சரத்

"ஆமா சார் நீங்கதான் பண்ணிவைக்கனும்"

"அடேய் என்னடா வயசு உங்களுக்கு? தம்பி ஏதாச்சும் பிராங் சோஓ பண்றிங்களாடா?" நம்பமுடியாமல் அவன் கேட்க

"சார் நாங்க ட்ரு லவ்வர்ஸ். எனக்கு 17லு பேபிக்கு 15சூ"

"என்ன சார் இது? எனக்கு 20 உனக்கு 18 டைடில் மாதிரியே சொல்றான்" கான்ஸ்டபிள் சரத் காதை கடித்தான்

"இருயா எனக்கும் பயமாதான் இருக்கு. விசாரிப்போம் ரெண்டையும் பார்த்தா வில்லங்கம் மாதிரி இருக்கு"

"ஏன்டா கலர் கோழி லவ் பண்றிங்க சரி எதுக்குடா அதுக்குள்ள கல்யாணம்?"சரத்

"சார் நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகிட்டு. எப்படியும் ஒரு ஆறு மாசம் இருக்கும். அதனால கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தோம் பட் பேபியோட டாடி எங்கள பார்த்துட்டு பேபிய அறஞ்சிட்டான். சோ இன்னைகே நான் பேபிய கல்யாணம் பண்ணிக்கபோறேன்"

"ஆமாடா ஆறு மாசம்னா ரொம்ப அதிகம் தான். அதுசரி லவ் பண்ணி மாட்டிக்கிட்டா வீட்டுல அடிக்க தான் செய்வாங்க அதுகெல்லாம் கல்யாணம் பண்ணிப்பியா? பாரு இந்த புள்ளைய பால்டப்பி மாதிரி இருக்கு நீயே இத பேபினு தான் சொல்லுற… கொஞ்சம் வருசம் வெயிட் பண்ணுங்கடா. என்ன மாதிரி பெரிய பையன் ஆகி நல்ல வேலைக்கு பேயிட்டு அவங்க வீட்டுல பொண்ணு கேட்டனா அவங்களே கல்யாணம் பண்ணி வைப்பாங்க" பொருமையாக எடுத்து சொன்னான் சரத்.

"உங்களுக்கு கல்யாணம் ஆச்சா சார்?" நண்டு

"இல்லடா கலர் குஞ்சு. இனிமேல் தான்" சரத் அழகாக வெட்க்க பட அவனை பார்த்த நண்டும் சிண்டும் அவர்களுக்குள் பேசி சிரிக்க "என்னடா?" என்றான்.

"இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்லனு பேபி சொன்னா சார்" அவன் சொன்னதும் சரத்தை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரமித்துவிட்டனர்.


(பேக்கிரவுண்டில் தில்லு வாலெ புச்சதே நீ சா ஓஓஓஓஓ என முகத்தில் வேஸ்டட் முத்திரை குத்தபடுவது மனத்திரையில் ஓட)

"வாட் ஏ தக் லைஃப்" தலையில் அடித்துக்கொண்டான் சரத்.

"சார் நீங்கவேணா மொட்ட பையனாவே இருங்க. எங்களுக்கு நல்ல முடிவா சொல்லுங்க" அடித்து பேசிக்கொண்டு இருந்தான் நண்டு.

"புரிஞ்சிக்கோங்கடா உங்களுக்கு கல்யாணம் பண்ற வயசு இல்ல நீங்க மைனர் டா"

"நீங்க எங்கள பிரிக்க பாக்கிறிங்க. சார் நீங்க மட்டும் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலனா நாங்க நடுரோட்ல தர்ணா பண்ணுவோம். இல்ல நாங்களே எதாச்சும் கோவில்ல வச்சி பண்ணிப்போம்" நண்டும் சிண்டும் கோரஸ் பாட எரிமலையாக பொங்கிவிட்டான் சரத்

"அடிங்க உங்கப்பன்மவனே எழுந்திருங்கடா முத. எந்தன பேரு உயிர கொடுத்து குழந்தை திருமணம்னு ஒன்ன அழிக்க பாடுபட்டாங்க நீங்க என்னனா தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து காமடி பண்ணிட்டு இருக்கிங்களா?. உங்கள சும்மா விட்டா திரும்பவும் குழந்தை திருமணத்த ஆரம்பிச்சு வச்சிருவிங்க" என்று பல்லை கடித்தவன்.

"யோவ் கான்ஸ்டபிள் இதுங்கள பெத்வனுங்கள உடனே தூக்கிட்டு வா. என்னத்த சொல்லி கொடுத்து வளக்கிறாங்களோ. எல்லாம் படத்த பாத்துட்டு ரவுடிச்த்தையும் பொறுக்கிதனத்தையும் கெட்ட வார்த்தை பேசுரதையும் ஹீரோயிசமா நினைச்சிகிட்டு கெட்டு போதுங்க" கான்ஸ்டபிளிடம் கத்தியன் அவர்களை ஓரமாக உட்காரவைத்து விட்டான்.

அவர்களை பெற்றவர்கள் வரவும் அவர்களை நன்றாக கவனித்து இருவரையும் கண்டித்து படிக்க வேண்டும் என்ற அட்வைஸ் சோடு இருவருக்கும் அவர் அவர் விருப்பப்படி பயிற்சி வகுப்பில் சேர்க்வேண்டும் என்று பெற்றவர்களிடம் அறிவுறுத்தி நேத்தாஜிசுபாஷ் சந்திர போஸின் புக்கை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தான் சரத்.
_______

தன் மொபைலில் ஊல்ப் என்று பதியபட்டுருந்த அந்த எண்ணிற்கு அழைத்தாள் தஷினா.

"ஹலோ ஜெய்"

"சொல்லுங்க தீ"

"நான் கேட்ருந்தது என்ன ஆச்சு?"

"அந்த சத்தியா தான சென்னை ஏர்போர்ட்ல மேட்ச் ஆகிருக்கு தீ. இன்னும் சில இடத்துல செக் பண்ணலை. ஆன்கோயிங் அததான் நம்ம டீம் பாத்துட்டு இருக்காங்க. ரெடியானதும் டேட்டாஸ் உங்களுக்கு மெயில் பண்ணிடுவேன்"

"வாட் தி ஹெல்? ரெண்டு வாரமா இந்த வொர்க் தானா?"

"சாரி தீ பட் கொஞ்சம் டிலே ஆகுது. கவர்மண்ட் டேட்டா பேஸ்ச ஹக்பண்றது கஷ்டமா இருக்கு. செக்கியூர்டி ஸ்டராங்கா இருக்கு"

"இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல. பிளக் ஹேட்னா சுலபம்னு நினைச்சியா?

(பிளக் ஹெட் என்றால் இல்லீகல் ஹாக்கர்ஸ். வைட் ஹெட் என்றால் லீகல் ஹாக்கர்ஸ்)

எவ்வளவு பெரிய செக்யூரிட்டி யா இருந்தாலும் ஊல்பால பிரேக் பண்ண முடியும் முடியனும் கஷ்டமனு ஒரு வார்தைய இதுக்கு முன்னாடி நீ சொன்னதா எனக்கு நியாபகம் இல்ல ஜெய்" தக்ஷினாவின் கோபத்தில் உதட்டை அழுந்த மூடிக்கொண்டான்.

"கம்ஆன் ஜெய் ஊல்ப்க்கு நீ தான் லீடர்"

"வெல் உனக்கு இன்னொரு ஒர்க் இருக்கு உன் மெயிலுக்கு ஒரு காலேஜ் நேம் டிடேயல்ஸ் சென்ட் பண்ணிருக்கேன் அந்த காலேஜ்ல இதுவரைக்கும் படிச்ச ஸ்டுடனஸ் யாரெல்லாம் மிஸ்ஸிங்னு கண்டுபிடிக்கனும்"

"ரொம்ப ஈஸி தீ மொத்த ஸ்டுடென்ஸ் லிஸ்ட டார்க் சைட்ல இருந்து எடுத்துரலாம்"

"ஐ நோ நானே பண்ணிடுவேன் பட் விசியம் பெருசு காலேஜ் மேனேஜ் மெண்ட் வழியா ஃபாரின் போன ஸ்டுடென்ஸ் லிஸ்ட் அதுல வீட்டோட கான்டக்ட்ல இல்லாதவங்கனு எல்லாமே எனக்கு வேனும். உயிரோட இருக்கவங்கல லேடீஸ் மட்டும் தனியா"

"இத லீகலா உங்க டிபார்ட் மெண்ட் ஆளுங்க வச்சே பண்ணிடலாமே தீ"

"பண்ண முடியும்னா நான் உன்கிட்ட இத தந்திருக்கவே மாட்டேன். ரொம்ப கான்பிடன்சியல் விசியம் கொஞ்சமா லீக் ஆனாலும் எவிடன்ஸ் கேதர் பண்ணவிடாம பிரசர் பண்ணுவாங்க ஹார்ட் ஓர்க விட ஸ்மார்ட் மூவ் தான் எனக்கு வேணும்"

"புரிஞ்சது தீ"

"அப்பறம் அந்த பிரின்சி கரெஸ்னு முக்கியமான எல்லார் போனையும் வாட்ச் பண்ணுங்க எல்லா காலையும் ரெக்கார்ட் பண்ணுங்க. நமக்கு தெரியாம சின்ன மெயில்கூட அவங்க அக்ஸிஸ் பண்ணகூடாது ஜெய். முடியும் தானே? "

"நம்ம ஊல்பால முடியாதுனு எதுவுமே இல்ல தீ. அந்த பிரின்ஸிபால் நவ் ஹி இஸ் அண்டர் அவர் சர்வைலன்ஸ். உங்க மெயிலுக்கு அவன் கால் ஹிஸ்ட்ரி அனுப்பிருக்கேன் தீ"

"ம் வெரி குட் நான் ஒரு லிங்க் அனுப்புறேன் அத மாடிபை பண்ணி புவி வேந்தன்க்கு அனுபிடு அவன் அத ஓப்பன் பண்ணதும் கிட்ஸ்கிட்ட (பிகினர் ஹாக்கர்ஸ்) விட்டு பிளே பண்ண சொல்லு அட்லீஸ்ட் ஒன் டேவாச்சும்" என்றவள் மறுபுறம் பதில் எதிர் பார்காமல் போனை வைத்துவிட்டாள்.

"என்ன தீ மா புவி பேரு எல்லாம் அடி படுது?" ஜஸ்கிரீம் டப்பாவில் முகத்தை விட்டிருந்த விமலன் எட்டி பார்த்து கேட்க ஒரு ஸ்கூப்பை வாயில் போட்டவள் அவனை பார்த்து சிரித்தாள்.

"அவன கொஞ்சம் கடுப்பேத்த தான் விமி. அன்னைக்கு ஜிம் வாசல்ல என்ன சொடக்கு போட்டு கூப்பிட்டான்ல சும்மா விடமுடியுமா?" பேச்சி காரமாக இருந்தாலும் முகம் ஐஸ்கிரீம் சுவையில் மலர்ந்து இருந்தது.

"அதுக்கு தான் அவன் ஊரு புல்ல உன்ன தேடி சுத்திட்டு இருக்கான். பாவம் தீ அவன். உன்ன பத்தி எவ்வளவு பெருமையா பேசுவான் தெரியுமா நீ தான் அன்னைக்கு ஜிம்ல இடிச்ச பெண்ணுனு தெரிஞ்சா அவ்வளவு தான்"

"ம்ம் என்ன பண்ணுவான்?"

"அவன் ஈகோவ டச் பண்ணிட்டு வந்திருக்க அம்மு. நீ தான் அதுனு தெரிஞ்சா அவன் ரொம்ப கோவபடுவான்"

"அதுசரி நாளைக்கு எதுக்கும் அவன் கூடவே இரு கோபத்துல போனை அடிச்சி நெருக்கிற போறான். அவன்கிட்ட கோபம் இருக்கு என்கிட்ட ஸ்மார்ட்னஸ் இருக்கு. சோ யாரு டஃப்னு உனக்கு புரிஞ்சிருக்கும்"

"ஆமா என்ன லிங் அது?"

"ஒன்னும் இல்ல சின்ன கோடிங் தான் லிங்ல வச்சி யாரு டார்கெட்டோ அவங்களுக்கு அத அனுப்பனும் அது லிங்க் மாதிரியும் அனுப்பலாம் இல்ல ஐகான்ஸ் மாதிரியும் அனுப்பலாம். அவங்க அத டச் பண்ணதும் நம் அவங்க போணில் இருக்க எல்லாத்தையும் அக்சிஸ் பண்ணலாம். அவங்களுக்கு அது தெரியவே தெரியாது லிங்க கிளிக் பண்ணா எதாச்சும் பிரவுசர்ல ஓப்பன் ஆகி லோடு ஆகிட்டே இருக்கும் அவங்களும் அத க்ளோஸ் பண்ணனிட்டு போயிடுவாங்க"

"அட இது தான் எனக்கு தெரியுமே. இது யூடியுபிள இருக்கு இதுக்கு டெம்ப்ளேட் நிறைய இருக்கு. அத வச்சி யாரு வேணாலும் யாருக்கு வேணாலும் அனுப்பலாம்"

"அதே தான். ஆனா புவிக்கு அனுப்ப போறது கொஞ்சம் வேற மாதிரி" அவள் சிரிக்க

"நீயாச்சும் அவனாச்சும் என்ன இதுல இழுத்து விடாம இருந்தா சரி. உன்மை தெரியும் போதும் என் கதி என்னாவபோகுதோ அப்பனே முருகா இந்த பேய்ங்களிட்டே இருந்து என்ன காப்பாத்து" மேலே கும்பிடுபோட்டவன் தலையை டாப்பாக்குள் கவிழ்த்துக் கொண்டான்.
___________

பல விடியல்கள் இரவின் சுவடுகளை பரிசாக தந்து பலர் வாழ்கையில் இருட்டை நிரந்தரமாக்கி தான் புலர்கிறது.

நாளை நம் விடியல் என்னவோ?

"ஏன்டா தம்பி எல்லாரும் எங்க ஒடுறிங்க" பால் வாளியோடு வந்த நடுத்தர பெண் கேட்க "உனக்கு தெரியாதாக்கா? நம்ம ஊரு பக்கமா ஆத்தல ஒரு பிணம் ஒதுங்கி இருக்காம்"

"ஆத்தாடி பிணமா? என்னப்பா சொல்லுற?"

"ஆமாக்கா மாமாவும் அங்க தான் போயிருப்பாரு வந்து சொல்லுறேன்க்கா" என்றவன் வேகமாக சென்றுவிட்டான்.

"ஹலோ இன்ஸ்பெக்டர் சார் இங்க எங்க ஊரு பாமினி ஆத்துல ஒரு பொம்பள பிணம் டிரஸ் இல்லாம மிதக்குது சார்" எதிர்முனையில் பரப்பரப்பான குரலில் ஒருவர் சொல்ல விவரம் கேட்டு அங்கு விரைந்தனர் அவர்கள்.
______________________

"என்னப்பா காபி குடிச்சிங்களா?" ஜாக் பண்ணிவிட்டு வேர்வை சொட்ட வந்தமர்ந்தான் சந்தோஷ்.

"ம்ம் குடிச்சிட்டேன்" அவர் பேச்சில் ஒரு சுணக்கம் தெரிந்தது.

"தனா எனக்கு க்ரீன் டீ எடுத்துட்டு வா" உட்காந்திருந்த இடத்தில் இருந்து கத்தினான் சந்தோஷ்.

"ப்ச் நீயே போய் வாங்கிக்கலாம்ல ஏன் இப்படி கத்திட்டு இருக்கிற" ராகவன் சலித்துக்கொள்ள அவசரமாக அவனுக்கு கப்பில் டீ கொண்டு வந்தார் துர்கா.

"எங்க மா அவ குளிக்கிறாளா?" டீ குடித்துக்கொண்டே அவன் கேட்க கையை பிசைந்தார் அவர்.

"என்ன மா மகாராணி இன்னும் தூங்குறாங்களா?" சந்தோஷ் கோபமாக கேட்க "விடிஞ்சும் தூங்குறாளா? தர்திரியம் எழுப்பிவிடு வீடு விளங்காது. ஏன் நிக்கிற போ தண்ணீய தூக்கி மூஞ்சில ஊத்து" கத்த ஆரம்பித்துவிட்டார் ராகவன்.

"இதோ போயிட்டேன்ங்க" ஓட்டமும் நடையுமாக ஆராதனாவை எழுப்ப சொன்றார்.

"என்னாச்சு பா? காலையிலே ஓரே டென்ஷனா இருக்கிங்க"

"ப்ச் ஒன்னுமில்லபா"

"என்னனு சொன்னாதான தெரியும்" அவன் அதட்டி பேச பேப்பரை மடித்து வைத்தவர் வானத்தை வெரித்தார்.

"என்னப்பா எங்கிட்ட சொல்ல என்ன?"

"அது சந்தோஷ் ஆஃபிஸ்ல ஒரு பிரச்சனை" அவர் இழுக்க "முழுசா என்னனு சொல்லூங்க"

"நான் ஒரு 5 லட்சம் கேஷ்ச லாக்கர்ல வச்சி பூட்டிட்டு லண்ட்ச் சாப்பிட போனேன் அங்க எங்கையோ சாவிய மிஸ் பண்ணிட்டேன் போல அடுத்தநாள் லாக்கர் திறந்து இருந்துச்சு உள்ள இருந்த பணம் காணாபோயிடுச்சி அப்போதான் சாவி தொலைஞ்சதே தெரியும்" அவர் தலையை பிய்த்துக்கொள்ள கோபமாக பார்த்தான் சந்தோஷ்.

"உங்களுக்கு கவணமா இருக்க தெரியாதா? போலீஸ் கம்பிளைன்ட் பண்ணிட்டிங்களா இல்லையா?"

"இல்ல சந்தோஷ் அதான் இப்போ பிரச்சினை அந்த மேனேஜர் பொம்பள ரொம்ப பண்ணுது"

"ஏன்?"

"பணம் கூட பிரச்சினை இல்ல நம்ம கைகாசு போட்டு கட்டிரலாம்னு நானே கட்ரேனு சொன்னேன் ஆனா அது போலீஸ்ல நான் தான் எடுத்தேனு கம்ப்ளைன்ட் பண்ணபோறேனு பிரச்சனை பண்ணுது"

"என்ன விளையாடுறிங்களா? 5 லட்சம் கைகாசு போடுறதா திரும்பி கிடைச்சாலும் பரவால்ல"

"செவிங்ஸ்தான் எடுக்கனும் இந்த வயசுல கோர்ட் கேஸ்னு அலையமுடியுமா சந்தோஷ்"

"செவிங்ஸ் எல்லாம் இப்போ எடுக்க முடியாதே எப்படியும் இன்னும் ஒரு வருசம் போனாதான் உண்டு அதுவும் தனா கல்யாணத்துக்கு உள்ளது அதெல்லாம் எடுக்க வேண்டாம்"

"அப்போ நகைய தான் அடகு வைக்கனும்" அவர் தலையை பிடித்துக்கொள்ள தூர்காவும் ஆராதனாவும் கவலையாக பார்த்துக்கொண்டு நின்றனர்.

"அப்பா அதெல்லாம் திருப்ப கஷ்டமா இருக்கும். பாப்பாவ இப்பவே இரண்டு இடத்துல கேட்குறாங்க சரி வராது எதுக்கும் அந்த மேடம்கிட்ட பேசி பாக்கலாம்"

"பேசிட்டேன்பா ஏற்கனவே எனக்கும் அந்த லேடிக்கும் ஒத்துவராது. எப்படா சிக்குவனு பார்திட்டே இருந்திருக்கும் போல என்ன மாட்டி விடுறதுலே இருக்கு"

"சரி நம்பர் தாங்க நான் பேசி பார்க்கிறன்" என்றவன் அந்த மேனேஜர் எண்ணிற்கு அழைத்தான்.

வருவாள்...

Comment here

 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom