பெண்ணே 14
"ஹலோ" எதிர்முனையில் நடுத்தர வயது பெண்ணின் குரல்கேட்க "ஹலோ மேம் என் பேரு சந்தோஷ்" தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன்.
"எந்த சந்தோஷ்? எனக்கு அப்படி யாரும் தெரியாதே"
"நான் உங்க ஆஃபிஸ்ல ஓர்க் பண்ற மிஸ்டர் ராகவனோட சன் மேடம்"
"ஓஓ…. ராகவன் சார் பையனா" அவர் பேச்சில் இருந்த இளக்காரத்தில் பல்லைகடித்துக் கொண்டு அமைதியாக பேசினான் அவன்.
"ஆமா மேடம்"
"என்ன விசியம்?"
"அது ஆஃபிஸ்ல பணம் கானாபோனது பத்தி கொஞ்சம் பேசனும் மேடம்"
"ஆபீஸ் விஷயத்தெல்லாம் வெளி ஆளுங்ககிட்ட பேச முடியாதுங்க" அவர் கண்டிப்புடன் பேச வேறு வழியின்றி கெஞ்சினான்.
"ப்ளீஸ் மேடம் கொஞ்சம் நான் பேசுறத கேளுங்க"
"நீங்க எதா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் பேசிக்கோங்க"
"ஏன் மேடம் கோப படுறிங்க இத ஸ்மூத்தா முடிச்சிகலாமே. அந்த பணத்தை எங்க அப்பா எடுக்கலனு எல்லாருக்குமே தெரியும்" சமாதன வார்த்தை பேசினான்.
"அப்படி எல்லாரையும் நம்ப முடியாதுங்க. பணம் மிஸ்டர் ராகவன் பொருப்பில இருந்தது. அது காணா போனா அவர்தான் பதில் சொல்லணும்" கராராக இருந்தார் அவர்.
"என்ன மேடம் உங்ககூட எவ்வளவு வர்ஷமா ஓர்க் பண்றாங்க நீங்களே இப்படி பேசினா எப்படி? உதவி பண்ண கூடாதா மேடம்"
"பின்ன எப்படி பேசனும்? இதே ஆஃபிஸ்ல தான் ராகவன் கூட நானும் வொர்க் பண்ணேன். மேனேஜர் போஸ்டிங்க போய் ஒரு பொம்பளைக்கு தந்திருக்காங்க இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் இளிச்சி இளிச்சி பேசதான் தெரியும்னு என் காது படவே பேசிருக்காரு. லேடி ஸ்டாப்னு மரியாதையாகூட பேசமாட்டாரு. மட்டம் தட்டி பேசிட்டே இருப்பாரு இப்போ பிரச்சனைனா மட்டும் எப்படி நான் உதவி பண்ணனும்னு எதிர்பாக்குறிங்க" அந்த பக்கம்வந்த கோப வார்த்தைகளில் பேச்சற்று போனான் சந்தோஷ். ராகவன் மேல் அவனுக்கு கோபமாக வந்தது.
"அதெல்லாம் மனசுல வச்சிகாதிங்க மேடம். ஏதோ வயசானதுல என்னனு தெரியாம பேசிருப்பாங்க. அது மட்டுமில்ல அஞ்சு லட்சம் பணம் ஏதாச்சும் ஹேல்ப் பண்ணுங்க. அவர் பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்" பல சாரிகளை வாரியிறைத்து அவரை மலையிறக்கினான் சந்தோஷ்.
"ராகவன் பையன் நீங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும் நீங்க எப்படி தன்மையா பேசுறிங்க. அன்னைக்கு மிஸ்டர் ராகவன் பணத்த காணா அடிச்சதும் இல்லாம அவருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறாரு சொல்லி வைங்க இனிமேலாச்சும் லேடிஸ்னு கேவலமா நினைக்காம இருக்க சொல்லுங்க" அவன் காது தீயும் அளவிற்கு பேசினார் அவர். அத்தனையும் அவர்மேல் உள்ள பல நாள் காண்டு என்பது நன்றாக தெரிந்தது.
"தன்மையா? நானு? ஐஞ்சு லட்சமாச்சே வேற என்ன பண்ண முடியும். இதுதான் சாக்குனு இந்தம்மா ஓவரா கெத்து காட்டுதே. எல்லாம் இந்த அப்பாவால" அவரை மனதில் வஞ்சிக்கொண்டே ராகவனை முறைத்தான்.
"விடுங்க மேடம் அந்த காலத்து மனுஷன் இன்னும் பழசுலே இருக்காரு. உங்கள மாதிரி என்ன மாதிரி யூத்தா இந்த காலத்துல உள்ளவங்க சொல்றது அவருக்கு புரியுமா?" ஒரே போடாக போட்டு உச்சி குளிர வைத்துவிட்டான் அவன்.
"என்னது யூத்தா அட பாவி அந்தம்மாக்கு என்ன விட 4 வயசு தாண்டா கம்மி. நான் மட்டும் அந்த காலத்து மனுஷனா" ராகவனின் பாவனையில் அவர் மனதை படித்தவன் "செய்யிரதெல்லாம் செஞ்சுட்டு இது தான் கொறச்சல். மூஞ்ச அப்படியே பாவமா வச்சிகிட்டு" என மனதில் புகைந்து "ஏதாச்சும் பார்த்து செயிங்க மேடம்" என்றான்.
"உங்களுக்காக ராகவன் மேல கம்ப்ளைன்ட் தரல பட் பணம் நீங்க தான் கட்டனும். எப்படியும் பணம் கானாபோனதுக்கு கம்ப்ளைன்ட் பண்ணா அவர் மேலதான் சந்தேக படுவாங்க சோ நீங்க கட்டுங்க பணம் திரும்பி கிடைச்சா உங்களுக்கே வந்துரும். சீனியர் கிட்ட சொல்லி யார்னு விசாரிக்க சொல்லுறேன்"
"என்ன மேடம் வேற வழியே இல்லையா? "
"பணத்த கட்டிட்டா பிரச்சனை இல்ல ராகவன் சார் மேலயும் தப்பு இருக்கு. சாவிய தொலைசிருக்காங்க. முடிஞ்சா நாளைக்கே கட்டிருங்க"
"சரிங்க மேடம் ரொம்ப தேங்ஸ்"
"சரிங்க" என அவர் போனை வைத்து விட்டார்.
"வேலைபாக்கிற இடத்துல வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும். அறிவே இல்லப்பா உங்களுக்கு. உங்களால அந்த அம்மா கிட்ட நான் கெஞ்ச வேண்டியதா போச்சு. காதுல ரத்தம் வராதது தான் மிச்சம். பணத்த கட்டிட்டா பிசரச்சனை கிடையாதாம்" போனை வைத்ததும் ராகவனிடம் எகிறினான் சந்தோஷ்.
"அந்த லேடிக்கு என் மேல பொறாமைடா" என்றவரை முறைத்த சந்தோஷ் "இப்போ பணத்துக்கு என்ன பண்றதுனு பாருங்க" என கத்தவும் கோபித்துக் கொண்டார் ராகவன்.
"நானே பார்த்துக்கிறேன்"
"ப்ச் நீங்க சம்பாதிச்சு எங்களுக்குதானே செலவு பண்ணிங்க . இப்போ உங்களுக்கு பிரச்சனைனா நான்தான் செய்யனும். என்கிட்ட இப்போ ரெண்டு தான் இருக்கு கார்க்கு பணம் வேற கட்டிருக்கேன் அத கேன்சல் பண்ணா மூணு வரும் இன்ஸ்டால்மெண்ட்ல இந்த வருஷம் வாங்கலாம்னு இருந்தேன்"
"வேண்டாம் சந்தோஷ் வெளில பார்த்துக்கலாம் நீ ரொம்ப நாள் ஆசை பட்டு இப்பதான் கார்க்கு பணம் கட்டிருக்க" தயங்கினார் ராகவன்.
"விடுங்கப்பா பார்துக்கலாம் கார் எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்" அவன் சொல்லிக்கொண்டு இருக்க தயங்கி கொண்டு முன் வந்து நின்றாள் ஆராதனா. இருவரும் அவளை என்ன என்பது போல் பார்க்க "என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அதையும் சேர்த்துக்கலாம் அண்ணா" என இருவரும் அவளை முறைத்தனர்.
"என்ன பழக்கம்? உன்கிட்ட வந்து நான் கேட்டனா? போய் வேலைய பாரு" சந்தோஷ்.
"இல்ல என்கிட்ட சும்மாதான் இருக்கபோகுது. அப்பறமா வேணாலும் திரும்பி கொடு"
"ஒரு இருபதாயிரம் இருக்குமா. உன்கிட்ட இருந்து அத வாங்குறதுக்கு நான் வெளிலே பார்த்துப்பேன்" ராகவனின் ஏளனமான பேச்சில் கோபமாக வந்தாலும் இத்தனை வருடம் அவர் உழைப்பில் தானே வாழ்ந்தோம் என்று சமாதானம் செய்த்துக் கொண்டாள்.
"இல்லப்பா ஓரளவு இருக்கு"
"ப்ச் நீ வாங்குற பத்தாயிரம் பதினஞ்சாயிரம் சம்பளத்தில என்ன பெருசா சேர்த்து வச்சிருக்க போர. நீ வேலைக்கே போக தேவயில்லனு சொல்லிட்டு இருக்கேன். போ போய் வீட்டு வேலைய பாரு. இந்த பிரச்சினைய நாங்க பார்த்துப்போம்"
"என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு அண்ணா. வெளில வாங்கினா வட்டி கட்டனும். அதுக்கு இத போட்டு கட்டலாமே"
"உனக்கு ஏது இவ்வளவு பணம்"
"ரெண்டு வருசமா அம்மா கிட்ட கெடுத்தது போக என் சம்பளத்தில சேர்த்தது ஒரு லட்சம் இருந்தது இன்னைக்கு மார்னிங் எனக்கு சேலரி கிரிட் ஆகிடுச்சி அண்ணா"
"நீ மாசம் எவ்வளவு வாங்குற?"
"பழைய கம்பேனில 50 வாங்கினேன். இப்ப வேலை பாக்கிற இடத்தில 70 தராங்க" அவள் சாதாரனமாக சொல்வதை இருவரும் அதிர்ச்சியாக பார்தனர்.
"பி.ஏக்கு எப்படி இவ்வளவு தராங்க? உன் பே சிலிப் எடுத்துட்டு வா" சந்தோஷ் சந்தேகமாக பார்க்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நான் பி.ஏ மட்டும் இல்ல ரெண்டு கம்பேனிலையும் மேனேஜர்" என தன் போனில் இருந்த சாப்ட் காப்பியை காட்டினாள். சந்தோஷ் முகம் ஒரு மாதிரியாக மாறியது அவனை விட அவள் சம்பளம் அதிகம் என்பதே அதற்க்கு காரணம்.
"உன் பணம் எங்களுக்கு தேவயில்ல எடுத்துட்டு போ அப்பா பிரச்சினைய நான் பார்த்துப்பேன்" முகத்தில் அடிப்பது போல் பேசினான் அவன்.
"ஏன் சந்தோஷ் நான் தரகூடாதா? அப்பாக்கு பிரச்சனைனா எனக்கும் தான் கஷ்டமா இருக்கும் நானும் தரேன்"
"என்ன அதிகமா சம்பாதிரிக்கிற திமிரா? சந்தம் ஓவரா இருக்கு" அவளை கணல் பார்வை பார்த்தான் சந்தோஷ்.
"ஏன் இப்படி பேசற அண்ணா? எனக்கு நகைக்கு நீயும் அப்பாவும் சீட்டுலாம் போட்டு வச்சிருக்கிங்க. எதோ என்கிட்ட சும்மா இருக்கிறத தான தரேன்" அவள் எவ்வளவு சொல்லியும் வேண்டாம் என்று திட்டியவனை ஓரு வழியாக ஒத்துக்க வைத்துவிட்டு சமயல்கட்டிற்கு வந்தவளை கோபமாக பார்த்தார் துர்கா.
"உனக்கு என்னம்மா? "
"எதுக்கு பாப்பா உன்கிட்ட இருந்த மொத்த பணத்தையும் கொடுத்த. இப்போ வண்டி வாங்க என்ன பண்ணுவ"
"நம்ம அப்பாதானமா விடுங்க வண்டி கொஞ்ச நாள் போகட்டும் இப்போதைக்கு ரொனல்டோ இருக்கான்"
"ஆமா அந்த ஓட்ட வண்டியா. அதுதான் அண்ணன் பணம் வச்சிருக்கனு சொன்னால்ல"
"அது சந்தோஷ் கார்க்கு கட்டிருந்தது. கார் வாங்க போறேனு எவ்வளவு ஹேப்பியா இருந்தான். பிரண்ட்ஸ் கிட்ட வேற சொல்லிட்டு இருந்தான். அத எப்படி கேன்சல் பண்ணறது. நம்மலாம் நினைச்சோன எதையும் சட்டுனு வாங்க முடியாதுமா"
"என்னவோ பாப்பா அவன் கிட்டயாச்சும் பைக் இருக்கு நீ தான் சிரமபடுற" கலங்கிய கண்ணை துடைத்துக்கொள்ள இருவரும் சமைக்க ஆரம்பித்தனர். இதையனைத்தும் தண்ணீர் குடிக்க வந்த சந்தோஷ் காதில் நன்றாக விழ போசனையுடன் திரும்பி சென்றுவிட்டான்.
__________
"உன் பேரு தான் அமிராமியா மா?"
"ஆமா சார்"
"சரிமா நீ திங்க கிழமைலிருந்து வா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சி ஒரு மணிநேரம் கிளாஸ் இருக்கும் வாலண்டியர் ஸ்டுடன்ஸ்க்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கனும். சனி ஞாயிறும் ஹாப்டே கிளாஸ் இருக்கும் "
"சரிங்க சார்"
"அப்பறம் வேலைக்கு லீவ் போடாம வரனும் லேட்டா வரதெல்லம் இருக்க கூடாது. நான் ரொம்ப கண்டிப்பான ஆளு வேலைய விட்டு நிறுத்திருவேன்"
"அய்யோ இல்ல சார் காலேஜ் விட்டோன லேட் பண்ணாம வந்திருவேன்"
"நல்லா படிக்கனும். டிசி சார் சொன்னனால தான் உனக்கு பர்மிசன் தந்தேன் மதியம் காலேஜ் முடிஞ்சதும் ரெண்டு மணிக்களாம் வந்திருக்கனும்"
"நன்றி சார் கண்டிப்பா என் வேலைய நல்லா பண்ணுவேன்" மனதார சொல்லிவிட்டு வெளியில் வந்தாள் அபிராமி. விடுமுறை என்பதனால் மதிய உணவு நேரம் பத்து பனிரெண்டு வகுப்பு பள்ளி பிள்ளைகள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டு இருந்தனர்.
அன்று அந்த காவல் அதிகாரி சொன்னதுபோல் இந்த பள்ளியில் அபிராமிக்கு பாட்டு டீச்சர் வேலை வாங்கி தந்து படிப்பிற்க்கும் பிரச்சனை இல்லாமல் ஒரு வழி செய்து கொடுத்து விட்டுதான் சென்றார். அந்த பள்ளியும் அவள் கல்லூரிக்கு அருகிலே இருப்பதனால் நிம்மதியாக இருந்தது.
வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டு ஆட்டோ வருகிறதா என்று பார்த்தாள் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க கண்ணுக்கு எட்டியது கானல் நீர் மட்டும் தான். இந்த ஒரு மாதமாக அலைந்து திரிந்து உடம்பு சோர்வாக இருந்தது. சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள். ஏழ்மை பழகியதாக இருந்தாலும் ராதிகாவை தாண்டி அவளுக்கு ஏதுவும் பெரிதாக அணுகியதில்லை. இன்று வயிற்று பாட்டுக்கும் படிப்பிற்கும் தனியே போராடுவதுடன் ஆறுயிர் தமக்கையை தேடி ஒடிக்கொண்டு இருக்கிறாள்.
"ராதிகா எங்க இருக்க? என்னால முடியல திரும்ப வந்திருக்கா" கத்தி அழவேண்டும் போல இருந்தது நடக்ககூட திராணியற்று தொண்டை அடைத்தது நகராமல் கால்கள் மெல்ல நகர்ந்தது. உலக்தின் மருமுகம் தன் கோரத்தை காட்டி மிரட்டியது பதினைந்து வயதில் ராதிக தாங்கிய சுமைதான் பத்தொன்பது வயதிலும் பெரும் பாரமாக அழுந்தியது அபிராமிக்கு. நாளை என்ற வார்த்தைதான் எண்ணெயில் ஊறிய திரியாக அவளை இயங்க வைத்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்டையில் அமர்ந்து பையை அனைத்து கொண்டு கானல் நீரை வெறித்தாள்.
"பசிக்குது" என கத்திய வயிற்றை தண்ணீர் ஊற்றி அடக்கியவளை எதர்ச்சையாக பார்த்த விமலனுக்கு கண்களை எடுக்க விடமால் அனைபோட்டது போல் இருந்தது. அதற்கு காதலோ வயதுகோளாறோ சத்தியமாக காரணம் கிடையாது அவள் கண்கள் மட்டுமே, அந்த கண்ணில் வழிந்த சோகமே, தூசி படிந்த ஓவியமாக இருந்த அந்த ரவிவர்மனின் வர்ண தீண்டலே அவனை பார்க்கவைத்தது. பட்டாபூச்சியாய் சிறக்கடிக்கும் வயதில் அப்படி என்ன சோகம் என்ற ஆராய்ச்சி பார்வை அவனுள்.
கருவலையங்கள் குள் சிக்கி ஜிவனற்று ஆடிய நயனத்தில் பல கண்ணீர் கவிதைகள் ஆழி பேரலையாய் அவனை சுருட்டி இழுத்தது. பக்கத்தில் சென்ற வண்டியின் தீடிர் ஹாரண் சத்தத்தில் அவள் உடல் தூக்கிபோட நடுங்கிய கைகள் நான் பயத்தின் கைதி என்று சொல்வது போல் இருந்தது விமலனுக்கு. சிறைமீட்க நகர்ந்த அவன் கால்கள் அவளை நெருக்கும் முன்னே இடையில் வந்த பேருந்து அவளை அவனிடம் இருந்து தூரமாக்கி செல்ல அவள் முகத்தை விட அந்த கண்ணகள் மட்டுமே அவனுள் பதிந்துபோணது. அவள் துயர்தீர்க்க விளைந்த அவன் மனதை இன்று மனிதம் என்றாலும் காதாலாக மாறுமா என்பதை காலம் தான் அறியும்.
_____________________
மிச்சமான உணவு வகைகளை ஹோட்டல் ஹோட்டலாக சென்று வாங்கி வந்து சாலையோரம் பிச்சை எடுப்பவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் என கொடுக்கும் குழுவினர் உணவு வழங்கி கொண்டு இருந்தனர்.
"பாட்டிமா இந்தாங்க நீங்க அன்னைக்கு கேட்ட பிரியாணி" தன் கையில் இருந்த ஒரு பொட்டலத்தை கொடுத்தாள் ஆஷா.
"என்ன கண்ணு நான் சும்மா தான் கேட்டேன். உன் கைகாசு போட்டு வாங்கினியா?" என்றவாறே அவர் அதை வாங்கிக்கொள்ள இரு கண்ணையும் சுருக்கி சிரித்தாள் அவள். அவர் தன் இடுப்பில் வைத்திருந்த பத்துரூபாய் நோட்டுகள் மூன்றை எடுத்து அவளிடம் நீட்ட அவரை முறைத்தவள் "எனக்கு புளிப்பு மிட்டாய்னா பிடிக்கும் நாளைக்கு எனக்கு வாங்கிதாங்க எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது இப்போ இத பத்திரமா வச்சிக்கோங்க. அப்பறம் பிரியாணி எங்க அம்மா செஞ்சது நான் எந்த செலவும் பண்ணல பாட்டிமா" கலகலவென சிரிந்தவள் வேறு ஒருவருக்கு கொடுக்க சென்றாள்.
"நல்லா இருப்பிங்க பிள்ளைங்களா" என காற்றில் வாழ்த்தி சென்றார் மூதாட்டி.
எல்லோருக்கும் உண்ன கொடுத்துவிட்டு மானிடகுழு இளைப்பாற கைகளை கழுவிவிட்டு தண்ணீர் குடித்தவளை அழைத்தான் அவன்.
"என்ன வக்கீல் மேடம் சோசியல் சர்வீஸ் சா?" அவள் திருப்பி பார்க்க ஒற்றை கண்ணடித்துவிட்டு இதழ் விரிந்த புன்னகையோடு சரத்தான் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனை பார்த்து நக்கலாக புருவத்தை நெரித்தாள் ஆஷா. "ஏன் ஆமானு சொன்னா நீங்களும் வந்து பண்ண போறிங்களா?"
"நல்லா போச்சிபோங்க மேடம் என் வேலையே சொசைட்டிக்கு சர்வீஸ் பண்றதுதான்"
"ஏது நீங்க சப்பளம் வாங்கிட்டு செய்யுறதா?" என்று சிரித்தவளோடு சேர்ந்து சிரித்தான் அவன்.
"நீங்க ஈசியா சொல்லிட்டிங்க. சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்த்தா நாங்க செய்யுரதுக்கு பாதிகூட வராது. எந்த டைம் க்ரைம் நடக்கும் எதுவும் தெரியாது போன் வந்தா ஸ்பாட்டுக்கு போகனும் நடுராத்திரியா இருந்தாலும் சரி. ஏதோ கோபத்தில கத்தினா கூட உடணே போன மூஞ்சுக்கு நேரா தூக்கி பிடிக்கிறாங்க. இப்பலாம் மரியாதையாகூட பாக்க மாட்றானுங்க"
"அப்பறம் போலீஸ்ல இருந்துகிட்டே பெரிய தாதா மாதிரி ரவுடிசம் பண்ணா அப்படிதான் நடக்கும்" ஆஷாவின் போச்சில் சரத்திற்கே கோபம் துளிர்த்தது.
"ஏன் லாயர்னா போலீச குறை சொல்லிட்டே தான் இருக்கனுமா?"
"வக்கீல்கும் போலீஸ்க்கும் ஆகாதுனு ஒரு கான்சப்ட் இருக்கே. அதுமட்டுமில்ல குறை இருக்க நாலதான் சொல்றோம். இப்பகூட நீயுஸ்ல வந்ததே ஒரு போலீஸ் ஒரு சின்ன பொண்ண பலாத்காரம் பண்ணி மாட்டிகிட்டான். சரி அதவிடுங்க உங்க டிபாட்மண்டில ஒரு லேடி ஐ.பி.எஸ் ஆபிசருக்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததா சொல்லி டிஸ்மிஸ் பண்ணாங்களே… இன்னும்" அவளை முழுதாக சொல்லவிடாமல் இடைபுகுந்தான் சரத்.
"எனக்குலாம் வக்கீல்னா ஆகும்ங்க… அதுவும் லேடி வக்கீல்னா முக்கியமா ஆஷானு பேரு வச்ச வக்கீல்னா ரொம்ப பிடிங்கும் பெண்கள் என் கண்ங்கள்…" அவசரமாக அவள் கோபத்தில் தண்ணீர் அடித்தான் சரத்.
"வழியுது துடச்சிகோங்க இன்ஸ்பெக்டர்" அவள் சிரிக்க "அப்பாடி கோப படல சரத்து கத்து வச்சிருக்க கலையெல்லாம் யூஸ் பண்ணி நம்பர கரட் பண்ணிடுடா ம்ம்" மனதுக்குள் சந்தோஷபட்டவன் அவள் கிளம்ப நினைக்க அவள் முன் போனை நீட்டினான்.
"என்ன சார்?" அவள் புரியாமல் பார்க்க நம்பர் எனவும் தான் போன் டிஸ்பிளேவில் இருந்த நம்பர் சேமிக்கும் கீபோர்டை பார்தாள்.
"பெரிய ஹீரோனு நினைப்பு. புதுசு புதுசா நம்பர் உஷார் பண்ற டெக்னிக் கத்து வச்சிருக்கானுங்களே. இருடா என்கிட்டேவா" என புருவம் உயர்த்தியவள் நம்பரை டைப் செய்து ஆஷா என சேமித்துவிட்டு கொடுத்தாள். வாயெல்லாம் பல்லாக அவளை பார்து சரத் சிரிக்க இரு கண்ணை சுருக்கி சிரித்தவள் திரும்பி செல்ல அவசரமாக அவள் பதிந்த எண்ணிற்க்கு அழைத்தான் சரத்.
"தாங்கள் அழைத்த எண் தற்போது பிசியாக உள்ளது" என வரவும்
"ஏங்க வக்கீல் மேடம் பிசினு வருது" இங்கிருந்து அவன் கத்தினான்.
"நீங்க உங்க போன்லிருந்து எப்ப பண்ணாலும் அப்படி தான் வரும்" எனவும் தான் நம்பரை பார்த்தான் அது அவனுடய நம்பர். அவன் உதட்டை பிதுக்க சிரித்தவள் திரும்பி நடக்க "என்னங்க ஆஷா என் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்?" சரிப்பினுடே அவன் குரலில் "ஹான் டிடக்டிவ் வச்சி கண்டுபிடிச்சேன். நீங்கதான கடமை தவறாம எல்லா பொண்ணுங்கிட்டையும் உங்க நம்பர கொடுத்து வச்சிருக்கிங்களே. போஸ்டர் அடிக்காதது தான் பாக்கி" அவனுக்கு பழிப்பு காட்டி எட்டி நடைபோட்டாள்
"அது தான் உங்களுக்கு மட்டும் எப்படி மனப்பாடமாய் தெரியும்?" அவன் திரும்ப கத்தவும் ஒரு வெட்க் புன்னகை முகத்தில் பரவியது. "லூசு நீ மனப்பாடம் பண்ணத கண்டுபிடிச்சிட்டான்டி" தலையில் தட்டிக்கொண்டவள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக நடை போட்டு மறைந்தாள். அவள் ஓடுவதை பார்த்தவன் கண்ணில் மின்னலடிக்க பின்னதலையில் தட்டிக்கொண்டான்.
காதல் ஒரு தீப்பொறி என்று சும்மாவா சொன்னார்கள் அது விழும் இடத்தை பொருத்து மெல்ல அரித்து சிறுக புகைந்து கொழுந்து விட்டு எரிந்து சிக்கி கொண்டவர்களை ஜீவாலையாக பற்றி தகிக்க வைக்கும் மாய மந்திரம். சிலபேர்கிடையில் தோன்றிய காதல் சமூகத்தில் அழகிய பாடலாக தெரியும் போது சிலர்கிடையில் வரும் காதல் கள்ளத்தை அடைமொழியாக கொண்டு அவபெயரால் அசிங்க படுகிறது. காதலில் கள்ளம் இருப்பது ஆழகு காதலே கள்ளதனமாக இருப்பதுதான் காதல் என்ற வார்தை சமூகத்தில் கசப்பாக தெரிகிறது போல. ஜாதி என்ற பேதத்தில் பல காதல் மலர்கள் கருக அருவாலுக்கும் விசத்திற்கும் காவியம் படக்கின்றனர் சிலர்.
குப்பிட்டிற்கு தடை சட்டம் போட்டால் மட்டும் காதல் அழிந்துவிடுமா? காதல் புயலில் சிக்கியவருக்குதான் ஜாதி மதம் இனம் பணம் பேதம் தெரியுமா? உன்மையான நேசம் ஏதையுமே எதிர்பார்காது. காசுக்காக வந்த காதல்கூட உயிரைய கொடுக்க துனியும் விந்தை காதலின் மந்திர மொழிகளே தவிர வேறு என்ன.
_____________________
"என்ன சார் யாருனு தெரிஞ்சதா?" டி.எஸ்.பி கோபமாக கேட்க இல்லை என தலையாட்டினார் இன்ஸ்பெக்டர்.
"பக்கதுல இருக்க எல்லா ஏரியாலையும் விசாரிச்சிட்டேன் சார். மிஸ்ஸிங் கேஸ்னு கேஸ் கொடுத்தவங்க எல்லாரையும் வந்து அடையாளம் பாக்க சொல்லிட்டேன். யார்னு தெரியல" அவர் சொல்ல தலையை பிடித்துக்கொண்டார்.
"ரொம்ப நாள்லாம் வச்சிருக்க முடியாது… இப்பவே ரொம்ப மோசமா அழுகிடுச்சு பாடி. தலை வலி ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்கல அடையாலம் தெரியாத பிணத்த வச்சிக்கிட்டு நம்ம உயிர எடுப்பானுங்க"
"பிரஸ்க்கு சொல்லியச்சு சார். யாராச்சும் கான்டக்ட் பண்ணா அந்த ஏரியா போலீஸ்கிட்ட கேஸ்ச கொடுத்துட்டு ஒதுங்கிடலாம் சார். வில்லேஜ் ஏரியானால சுத்தி 30து கிலோ மீட்டருக்கு சிசிடிவியும் எதுவும் இல்ல" இருவரும் கழன்று கொள்ள வழி தேடினர்.
"ஆமா இல்லனா கேஸ் சால்வ் பண்றதுக்குள்ள மீடியாகாரனுங்க படித்துவாங்க அதுக்கு மேல இந்த மீம்ஸ்ச போட்டு உசிர வாங்குறானுங்க" பெருமூச்சி விட்டவருக்கு இந்த கேஸ்விசியத்தில் நன்றாக தெரிந்த ஒன்று என்னவென்றால் இறந்த பெண் கொடுமையாக கற்பழிக்க பட்டு சித்திரவாதை செய்து மிக மோசமாக சாகடிக்க பட்டடுறிக்கிறாள் என்பதே. இரக்க படவேண்டும் என்று மனசாட்சி சொல்ல வேலையின் அழுத்தமோ மனித தன்மையை தள்ளி நிறுத்தியது. எந்தனையோ குற்றங்களை பார்த்து பழகியவருக்கு இதில் ஆதாரம் திரட்டுவது சிரமம் என்பதை ஓரே நாளில் கண்டுக்கொண்டார்
வருவாள்…
போகாதடி என் பெண்ணே! ❤❤
www.sahaptham.com
"ஹலோ" எதிர்முனையில் நடுத்தர வயது பெண்ணின் குரல்கேட்க "ஹலோ மேம் என் பேரு சந்தோஷ்" தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன்.
"எந்த சந்தோஷ்? எனக்கு அப்படி யாரும் தெரியாதே"
"நான் உங்க ஆஃபிஸ்ல ஓர்க் பண்ற மிஸ்டர் ராகவனோட சன் மேடம்"
"ஓஓ…. ராகவன் சார் பையனா" அவர் பேச்சில் இருந்த இளக்காரத்தில் பல்லைகடித்துக் கொண்டு அமைதியாக பேசினான் அவன்.
"ஆமா மேடம்"
"என்ன விசியம்?"
"அது ஆஃபிஸ்ல பணம் கானாபோனது பத்தி கொஞ்சம் பேசனும் மேடம்"
"ஆபீஸ் விஷயத்தெல்லாம் வெளி ஆளுங்ககிட்ட பேச முடியாதுங்க" அவர் கண்டிப்புடன் பேச வேறு வழியின்றி கெஞ்சினான்.
"ப்ளீஸ் மேடம் கொஞ்சம் நான் பேசுறத கேளுங்க"
"நீங்க எதா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் பேசிக்கோங்க"
"ஏன் மேடம் கோப படுறிங்க இத ஸ்மூத்தா முடிச்சிகலாமே. அந்த பணத்தை எங்க அப்பா எடுக்கலனு எல்லாருக்குமே தெரியும்" சமாதன வார்த்தை பேசினான்.
"அப்படி எல்லாரையும் நம்ப முடியாதுங்க. பணம் மிஸ்டர் ராகவன் பொருப்பில இருந்தது. அது காணா போனா அவர்தான் பதில் சொல்லணும்" கராராக இருந்தார் அவர்.
"என்ன மேடம் உங்ககூட எவ்வளவு வர்ஷமா ஓர்க் பண்றாங்க நீங்களே இப்படி பேசினா எப்படி? உதவி பண்ண கூடாதா மேடம்"
"பின்ன எப்படி பேசனும்? இதே ஆஃபிஸ்ல தான் ராகவன் கூட நானும் வொர்க் பண்ணேன். மேனேஜர் போஸ்டிங்க போய் ஒரு பொம்பளைக்கு தந்திருக்காங்க இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் இளிச்சி இளிச்சி பேசதான் தெரியும்னு என் காது படவே பேசிருக்காரு. லேடி ஸ்டாப்னு மரியாதையாகூட பேசமாட்டாரு. மட்டம் தட்டி பேசிட்டே இருப்பாரு இப்போ பிரச்சனைனா மட்டும் எப்படி நான் உதவி பண்ணனும்னு எதிர்பாக்குறிங்க" அந்த பக்கம்வந்த கோப வார்த்தைகளில் பேச்சற்று போனான் சந்தோஷ். ராகவன் மேல் அவனுக்கு கோபமாக வந்தது.
"அதெல்லாம் மனசுல வச்சிகாதிங்க மேடம். ஏதோ வயசானதுல என்னனு தெரியாம பேசிருப்பாங்க. அது மட்டுமில்ல அஞ்சு லட்சம் பணம் ஏதாச்சும் ஹேல்ப் பண்ணுங்க. அவர் பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்" பல சாரிகளை வாரியிறைத்து அவரை மலையிறக்கினான் சந்தோஷ்.
"ராகவன் பையன் நீங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும் நீங்க எப்படி தன்மையா பேசுறிங்க. அன்னைக்கு மிஸ்டர் ராகவன் பணத்த காணா அடிச்சதும் இல்லாம அவருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறாரு சொல்லி வைங்க இனிமேலாச்சும் லேடிஸ்னு கேவலமா நினைக்காம இருக்க சொல்லுங்க" அவன் காது தீயும் அளவிற்கு பேசினார் அவர். அத்தனையும் அவர்மேல் உள்ள பல நாள் காண்டு என்பது நன்றாக தெரிந்தது.
"தன்மையா? நானு? ஐஞ்சு லட்சமாச்சே வேற என்ன பண்ண முடியும். இதுதான் சாக்குனு இந்தம்மா ஓவரா கெத்து காட்டுதே. எல்லாம் இந்த அப்பாவால" அவரை மனதில் வஞ்சிக்கொண்டே ராகவனை முறைத்தான்.
"விடுங்க மேடம் அந்த காலத்து மனுஷன் இன்னும் பழசுலே இருக்காரு. உங்கள மாதிரி என்ன மாதிரி யூத்தா இந்த காலத்துல உள்ளவங்க சொல்றது அவருக்கு புரியுமா?" ஒரே போடாக போட்டு உச்சி குளிர வைத்துவிட்டான் அவன்.
"என்னது யூத்தா அட பாவி அந்தம்மாக்கு என்ன விட 4 வயசு தாண்டா கம்மி. நான் மட்டும் அந்த காலத்து மனுஷனா" ராகவனின் பாவனையில் அவர் மனதை படித்தவன் "செய்யிரதெல்லாம் செஞ்சுட்டு இது தான் கொறச்சல். மூஞ்ச அப்படியே பாவமா வச்சிகிட்டு" என மனதில் புகைந்து "ஏதாச்சும் பார்த்து செயிங்க மேடம்" என்றான்.
"உங்களுக்காக ராகவன் மேல கம்ப்ளைன்ட் தரல பட் பணம் நீங்க தான் கட்டனும். எப்படியும் பணம் கானாபோனதுக்கு கம்ப்ளைன்ட் பண்ணா அவர் மேலதான் சந்தேக படுவாங்க சோ நீங்க கட்டுங்க பணம் திரும்பி கிடைச்சா உங்களுக்கே வந்துரும். சீனியர் கிட்ட சொல்லி யார்னு விசாரிக்க சொல்லுறேன்"
"என்ன மேடம் வேற வழியே இல்லையா? "
"பணத்த கட்டிட்டா பிரச்சனை இல்ல ராகவன் சார் மேலயும் தப்பு இருக்கு. சாவிய தொலைசிருக்காங்க. முடிஞ்சா நாளைக்கே கட்டிருங்க"
"சரிங்க மேடம் ரொம்ப தேங்ஸ்"
"சரிங்க" என அவர் போனை வைத்து விட்டார்.
"வேலைபாக்கிற இடத்துல வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும். அறிவே இல்லப்பா உங்களுக்கு. உங்களால அந்த அம்மா கிட்ட நான் கெஞ்ச வேண்டியதா போச்சு. காதுல ரத்தம் வராதது தான் மிச்சம். பணத்த கட்டிட்டா பிசரச்சனை கிடையாதாம்" போனை வைத்ததும் ராகவனிடம் எகிறினான் சந்தோஷ்.
"அந்த லேடிக்கு என் மேல பொறாமைடா" என்றவரை முறைத்த சந்தோஷ் "இப்போ பணத்துக்கு என்ன பண்றதுனு பாருங்க" என கத்தவும் கோபித்துக் கொண்டார் ராகவன்.
"நானே பார்த்துக்கிறேன்"
"ப்ச் நீங்க சம்பாதிச்சு எங்களுக்குதானே செலவு பண்ணிங்க . இப்போ உங்களுக்கு பிரச்சனைனா நான்தான் செய்யனும். என்கிட்ட இப்போ ரெண்டு தான் இருக்கு கார்க்கு பணம் வேற கட்டிருக்கேன் அத கேன்சல் பண்ணா மூணு வரும் இன்ஸ்டால்மெண்ட்ல இந்த வருஷம் வாங்கலாம்னு இருந்தேன்"
"வேண்டாம் சந்தோஷ் வெளில பார்த்துக்கலாம் நீ ரொம்ப நாள் ஆசை பட்டு இப்பதான் கார்க்கு பணம் கட்டிருக்க" தயங்கினார் ராகவன்.
"விடுங்கப்பா பார்துக்கலாம் கார் எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்" அவன் சொல்லிக்கொண்டு இருக்க தயங்கி கொண்டு முன் வந்து நின்றாள் ஆராதனா. இருவரும் அவளை என்ன என்பது போல் பார்க்க "என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அதையும் சேர்த்துக்கலாம் அண்ணா" என இருவரும் அவளை முறைத்தனர்.
"என்ன பழக்கம்? உன்கிட்ட வந்து நான் கேட்டனா? போய் வேலைய பாரு" சந்தோஷ்.
"இல்ல என்கிட்ட சும்மாதான் இருக்கபோகுது. அப்பறமா வேணாலும் திரும்பி கொடு"
"ஒரு இருபதாயிரம் இருக்குமா. உன்கிட்ட இருந்து அத வாங்குறதுக்கு நான் வெளிலே பார்த்துப்பேன்" ராகவனின் ஏளனமான பேச்சில் கோபமாக வந்தாலும் இத்தனை வருடம் அவர் உழைப்பில் தானே வாழ்ந்தோம் என்று சமாதானம் செய்த்துக் கொண்டாள்.
"இல்லப்பா ஓரளவு இருக்கு"
"ப்ச் நீ வாங்குற பத்தாயிரம் பதினஞ்சாயிரம் சம்பளத்தில என்ன பெருசா சேர்த்து வச்சிருக்க போர. நீ வேலைக்கே போக தேவயில்லனு சொல்லிட்டு இருக்கேன். போ போய் வீட்டு வேலைய பாரு. இந்த பிரச்சினைய நாங்க பார்த்துப்போம்"
"என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு அண்ணா. வெளில வாங்கினா வட்டி கட்டனும். அதுக்கு இத போட்டு கட்டலாமே"
"உனக்கு ஏது இவ்வளவு பணம்"
"ரெண்டு வருசமா அம்மா கிட்ட கெடுத்தது போக என் சம்பளத்தில சேர்த்தது ஒரு லட்சம் இருந்தது இன்னைக்கு மார்னிங் எனக்கு சேலரி கிரிட் ஆகிடுச்சி அண்ணா"
"நீ மாசம் எவ்வளவு வாங்குற?"
"பழைய கம்பேனில 50 வாங்கினேன். இப்ப வேலை பாக்கிற இடத்தில 70 தராங்க" அவள் சாதாரனமாக சொல்வதை இருவரும் அதிர்ச்சியாக பார்தனர்.
"பி.ஏக்கு எப்படி இவ்வளவு தராங்க? உன் பே சிலிப் எடுத்துட்டு வா" சந்தோஷ் சந்தேகமாக பார்க்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நான் பி.ஏ மட்டும் இல்ல ரெண்டு கம்பேனிலையும் மேனேஜர்" என தன் போனில் இருந்த சாப்ட் காப்பியை காட்டினாள். சந்தோஷ் முகம் ஒரு மாதிரியாக மாறியது அவனை விட அவள் சம்பளம் அதிகம் என்பதே அதற்க்கு காரணம்.
"உன் பணம் எங்களுக்கு தேவயில்ல எடுத்துட்டு போ அப்பா பிரச்சினைய நான் பார்த்துப்பேன்" முகத்தில் அடிப்பது போல் பேசினான் அவன்.
"ஏன் சந்தோஷ் நான் தரகூடாதா? அப்பாக்கு பிரச்சனைனா எனக்கும் தான் கஷ்டமா இருக்கும் நானும் தரேன்"
"என்ன அதிகமா சம்பாதிரிக்கிற திமிரா? சந்தம் ஓவரா இருக்கு" அவளை கணல் பார்வை பார்த்தான் சந்தோஷ்.
"ஏன் இப்படி பேசற அண்ணா? எனக்கு நகைக்கு நீயும் அப்பாவும் சீட்டுலாம் போட்டு வச்சிருக்கிங்க. எதோ என்கிட்ட சும்மா இருக்கிறத தான தரேன்" அவள் எவ்வளவு சொல்லியும் வேண்டாம் என்று திட்டியவனை ஓரு வழியாக ஒத்துக்க வைத்துவிட்டு சமயல்கட்டிற்கு வந்தவளை கோபமாக பார்த்தார் துர்கா.
"உனக்கு என்னம்மா? "
"எதுக்கு பாப்பா உன்கிட்ட இருந்த மொத்த பணத்தையும் கொடுத்த. இப்போ வண்டி வாங்க என்ன பண்ணுவ"
"நம்ம அப்பாதானமா விடுங்க வண்டி கொஞ்ச நாள் போகட்டும் இப்போதைக்கு ரொனல்டோ இருக்கான்"
"ஆமா அந்த ஓட்ட வண்டியா. அதுதான் அண்ணன் பணம் வச்சிருக்கனு சொன்னால்ல"
"அது சந்தோஷ் கார்க்கு கட்டிருந்தது. கார் வாங்க போறேனு எவ்வளவு ஹேப்பியா இருந்தான். பிரண்ட்ஸ் கிட்ட வேற சொல்லிட்டு இருந்தான். அத எப்படி கேன்சல் பண்ணறது. நம்மலாம் நினைச்சோன எதையும் சட்டுனு வாங்க முடியாதுமா"
"என்னவோ பாப்பா அவன் கிட்டயாச்சும் பைக் இருக்கு நீ தான் சிரமபடுற" கலங்கிய கண்ணை துடைத்துக்கொள்ள இருவரும் சமைக்க ஆரம்பித்தனர். இதையனைத்தும் தண்ணீர் குடிக்க வந்த சந்தோஷ் காதில் நன்றாக விழ போசனையுடன் திரும்பி சென்றுவிட்டான்.
__________
"உன் பேரு தான் அமிராமியா மா?"
"ஆமா சார்"
"சரிமா நீ திங்க கிழமைலிருந்து வா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சி ஒரு மணிநேரம் கிளாஸ் இருக்கும் வாலண்டியர் ஸ்டுடன்ஸ்க்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கனும். சனி ஞாயிறும் ஹாப்டே கிளாஸ் இருக்கும் "
"சரிங்க சார்"
"அப்பறம் வேலைக்கு லீவ் போடாம வரனும் லேட்டா வரதெல்லம் இருக்க கூடாது. நான் ரொம்ப கண்டிப்பான ஆளு வேலைய விட்டு நிறுத்திருவேன்"
"அய்யோ இல்ல சார் காலேஜ் விட்டோன லேட் பண்ணாம வந்திருவேன்"
"நல்லா படிக்கனும். டிசி சார் சொன்னனால தான் உனக்கு பர்மிசன் தந்தேன் மதியம் காலேஜ் முடிஞ்சதும் ரெண்டு மணிக்களாம் வந்திருக்கனும்"
"நன்றி சார் கண்டிப்பா என் வேலைய நல்லா பண்ணுவேன்" மனதார சொல்லிவிட்டு வெளியில் வந்தாள் அபிராமி. விடுமுறை என்பதனால் மதிய உணவு நேரம் பத்து பனிரெண்டு வகுப்பு பள்ளி பிள்ளைகள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டு இருந்தனர்.
அன்று அந்த காவல் அதிகாரி சொன்னதுபோல் இந்த பள்ளியில் அபிராமிக்கு பாட்டு டீச்சர் வேலை வாங்கி தந்து படிப்பிற்க்கும் பிரச்சனை இல்லாமல் ஒரு வழி செய்து கொடுத்து விட்டுதான் சென்றார். அந்த பள்ளியும் அவள் கல்லூரிக்கு அருகிலே இருப்பதனால் நிம்மதியாக இருந்தது.
வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டு ஆட்டோ வருகிறதா என்று பார்த்தாள் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க கண்ணுக்கு எட்டியது கானல் நீர் மட்டும் தான். இந்த ஒரு மாதமாக அலைந்து திரிந்து உடம்பு சோர்வாக இருந்தது. சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள். ஏழ்மை பழகியதாக இருந்தாலும் ராதிகாவை தாண்டி அவளுக்கு ஏதுவும் பெரிதாக அணுகியதில்லை. இன்று வயிற்று பாட்டுக்கும் படிப்பிற்கும் தனியே போராடுவதுடன் ஆறுயிர் தமக்கையை தேடி ஒடிக்கொண்டு இருக்கிறாள்.
"ராதிகா எங்க இருக்க? என்னால முடியல திரும்ப வந்திருக்கா" கத்தி அழவேண்டும் போல இருந்தது நடக்ககூட திராணியற்று தொண்டை அடைத்தது நகராமல் கால்கள் மெல்ல நகர்ந்தது. உலக்தின் மருமுகம் தன் கோரத்தை காட்டி மிரட்டியது பதினைந்து வயதில் ராதிக தாங்கிய சுமைதான் பத்தொன்பது வயதிலும் பெரும் பாரமாக அழுந்தியது அபிராமிக்கு. நாளை என்ற வார்த்தைதான் எண்ணெயில் ஊறிய திரியாக அவளை இயங்க வைத்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்டையில் அமர்ந்து பையை அனைத்து கொண்டு கானல் நீரை வெறித்தாள்.
"பசிக்குது" என கத்திய வயிற்றை தண்ணீர் ஊற்றி அடக்கியவளை எதர்ச்சையாக பார்த்த விமலனுக்கு கண்களை எடுக்க விடமால் அனைபோட்டது போல் இருந்தது. அதற்கு காதலோ வயதுகோளாறோ சத்தியமாக காரணம் கிடையாது அவள் கண்கள் மட்டுமே, அந்த கண்ணில் வழிந்த சோகமே, தூசி படிந்த ஓவியமாக இருந்த அந்த ரவிவர்மனின் வர்ண தீண்டலே அவனை பார்க்கவைத்தது. பட்டாபூச்சியாய் சிறக்கடிக்கும் வயதில் அப்படி என்ன சோகம் என்ற ஆராய்ச்சி பார்வை அவனுள்.
கருவலையங்கள் குள் சிக்கி ஜிவனற்று ஆடிய நயனத்தில் பல கண்ணீர் கவிதைகள் ஆழி பேரலையாய் அவனை சுருட்டி இழுத்தது. பக்கத்தில் சென்ற வண்டியின் தீடிர் ஹாரண் சத்தத்தில் அவள் உடல் தூக்கிபோட நடுங்கிய கைகள் நான் பயத்தின் கைதி என்று சொல்வது போல் இருந்தது விமலனுக்கு. சிறைமீட்க நகர்ந்த அவன் கால்கள் அவளை நெருக்கும் முன்னே இடையில் வந்த பேருந்து அவளை அவனிடம் இருந்து தூரமாக்கி செல்ல அவள் முகத்தை விட அந்த கண்ணகள் மட்டுமே அவனுள் பதிந்துபோணது. அவள் துயர்தீர்க்க விளைந்த அவன் மனதை இன்று மனிதம் என்றாலும் காதாலாக மாறுமா என்பதை காலம் தான் அறியும்.
_____________________
மிச்சமான உணவு வகைகளை ஹோட்டல் ஹோட்டலாக சென்று வாங்கி வந்து சாலையோரம் பிச்சை எடுப்பவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் என கொடுக்கும் குழுவினர் உணவு வழங்கி கொண்டு இருந்தனர்.
"பாட்டிமா இந்தாங்க நீங்க அன்னைக்கு கேட்ட பிரியாணி" தன் கையில் இருந்த ஒரு பொட்டலத்தை கொடுத்தாள் ஆஷா.
"என்ன கண்ணு நான் சும்மா தான் கேட்டேன். உன் கைகாசு போட்டு வாங்கினியா?" என்றவாறே அவர் அதை வாங்கிக்கொள்ள இரு கண்ணையும் சுருக்கி சிரித்தாள் அவள். அவர் தன் இடுப்பில் வைத்திருந்த பத்துரூபாய் நோட்டுகள் மூன்றை எடுத்து அவளிடம் நீட்ட அவரை முறைத்தவள் "எனக்கு புளிப்பு மிட்டாய்னா பிடிக்கும் நாளைக்கு எனக்கு வாங்கிதாங்க எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது இப்போ இத பத்திரமா வச்சிக்கோங்க. அப்பறம் பிரியாணி எங்க அம்மா செஞ்சது நான் எந்த செலவும் பண்ணல பாட்டிமா" கலகலவென சிரிந்தவள் வேறு ஒருவருக்கு கொடுக்க சென்றாள்.
"நல்லா இருப்பிங்க பிள்ளைங்களா" என காற்றில் வாழ்த்தி சென்றார் மூதாட்டி.
எல்லோருக்கும் உண்ன கொடுத்துவிட்டு மானிடகுழு இளைப்பாற கைகளை கழுவிவிட்டு தண்ணீர் குடித்தவளை அழைத்தான் அவன்.
"என்ன வக்கீல் மேடம் சோசியல் சர்வீஸ் சா?" அவள் திருப்பி பார்க்க ஒற்றை கண்ணடித்துவிட்டு இதழ் விரிந்த புன்னகையோடு சரத்தான் நின்றுக்கொண்டு இருந்தான்.
அவனை பார்த்து நக்கலாக புருவத்தை நெரித்தாள் ஆஷா. "ஏன் ஆமானு சொன்னா நீங்களும் வந்து பண்ண போறிங்களா?"
"நல்லா போச்சிபோங்க மேடம் என் வேலையே சொசைட்டிக்கு சர்வீஸ் பண்றதுதான்"
"ஏது நீங்க சப்பளம் வாங்கிட்டு செய்யுறதா?" என்று சிரித்தவளோடு சேர்ந்து சிரித்தான் அவன்.
"நீங்க ஈசியா சொல்லிட்டிங்க. சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்த்தா நாங்க செய்யுரதுக்கு பாதிகூட வராது. எந்த டைம் க்ரைம் நடக்கும் எதுவும் தெரியாது போன் வந்தா ஸ்பாட்டுக்கு போகனும் நடுராத்திரியா இருந்தாலும் சரி. ஏதோ கோபத்தில கத்தினா கூட உடணே போன மூஞ்சுக்கு நேரா தூக்கி பிடிக்கிறாங்க. இப்பலாம் மரியாதையாகூட பாக்க மாட்றானுங்க"
"அப்பறம் போலீஸ்ல இருந்துகிட்டே பெரிய தாதா மாதிரி ரவுடிசம் பண்ணா அப்படிதான் நடக்கும்" ஆஷாவின் போச்சில் சரத்திற்கே கோபம் துளிர்த்தது.
"ஏன் லாயர்னா போலீச குறை சொல்லிட்டே தான் இருக்கனுமா?"
"வக்கீல்கும் போலீஸ்க்கும் ஆகாதுனு ஒரு கான்சப்ட் இருக்கே. அதுமட்டுமில்ல குறை இருக்க நாலதான் சொல்றோம். இப்பகூட நீயுஸ்ல வந்ததே ஒரு போலீஸ் ஒரு சின்ன பொண்ண பலாத்காரம் பண்ணி மாட்டிகிட்டான். சரி அதவிடுங்க உங்க டிபாட்மண்டில ஒரு லேடி ஐ.பி.எஸ் ஆபிசருக்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததா சொல்லி டிஸ்மிஸ் பண்ணாங்களே… இன்னும்" அவளை முழுதாக சொல்லவிடாமல் இடைபுகுந்தான் சரத்.
"எனக்குலாம் வக்கீல்னா ஆகும்ங்க… அதுவும் லேடி வக்கீல்னா முக்கியமா ஆஷானு பேரு வச்ச வக்கீல்னா ரொம்ப பிடிங்கும் பெண்கள் என் கண்ங்கள்…" அவசரமாக அவள் கோபத்தில் தண்ணீர் அடித்தான் சரத்.
"வழியுது துடச்சிகோங்க இன்ஸ்பெக்டர்" அவள் சிரிக்க "அப்பாடி கோப படல சரத்து கத்து வச்சிருக்க கலையெல்லாம் யூஸ் பண்ணி நம்பர கரட் பண்ணிடுடா ம்ம்" மனதுக்குள் சந்தோஷபட்டவன் அவள் கிளம்ப நினைக்க அவள் முன் போனை நீட்டினான்.
"என்ன சார்?" அவள் புரியாமல் பார்க்க நம்பர் எனவும் தான் போன் டிஸ்பிளேவில் இருந்த நம்பர் சேமிக்கும் கீபோர்டை பார்தாள்.
"பெரிய ஹீரோனு நினைப்பு. புதுசு புதுசா நம்பர் உஷார் பண்ற டெக்னிக் கத்து வச்சிருக்கானுங்களே. இருடா என்கிட்டேவா" என புருவம் உயர்த்தியவள் நம்பரை டைப் செய்து ஆஷா என சேமித்துவிட்டு கொடுத்தாள். வாயெல்லாம் பல்லாக அவளை பார்து சரத் சிரிக்க இரு கண்ணை சுருக்கி சிரித்தவள் திரும்பி செல்ல அவசரமாக அவள் பதிந்த எண்ணிற்க்கு அழைத்தான் சரத்.
"தாங்கள் அழைத்த எண் தற்போது பிசியாக உள்ளது" என வரவும்
"ஏங்க வக்கீல் மேடம் பிசினு வருது" இங்கிருந்து அவன் கத்தினான்.
"நீங்க உங்க போன்லிருந்து எப்ப பண்ணாலும் அப்படி தான் வரும்" எனவும் தான் நம்பரை பார்த்தான் அது அவனுடய நம்பர். அவன் உதட்டை பிதுக்க சிரித்தவள் திரும்பி நடக்க "என்னங்க ஆஷா என் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்?" சரிப்பினுடே அவன் குரலில் "ஹான் டிடக்டிவ் வச்சி கண்டுபிடிச்சேன். நீங்கதான கடமை தவறாம எல்லா பொண்ணுங்கிட்டையும் உங்க நம்பர கொடுத்து வச்சிருக்கிங்களே. போஸ்டர் அடிக்காதது தான் பாக்கி" அவனுக்கு பழிப்பு காட்டி எட்டி நடைபோட்டாள்
"அது தான் உங்களுக்கு மட்டும் எப்படி மனப்பாடமாய் தெரியும்?" அவன் திரும்ப கத்தவும் ஒரு வெட்க் புன்னகை முகத்தில் பரவியது. "லூசு நீ மனப்பாடம் பண்ணத கண்டுபிடிச்சிட்டான்டி" தலையில் தட்டிக்கொண்டவள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக நடை போட்டு மறைந்தாள். அவள் ஓடுவதை பார்த்தவன் கண்ணில் மின்னலடிக்க பின்னதலையில் தட்டிக்கொண்டான்.
காதல் ஒரு தீப்பொறி என்று சும்மாவா சொன்னார்கள் அது விழும் இடத்தை பொருத்து மெல்ல அரித்து சிறுக புகைந்து கொழுந்து விட்டு எரிந்து சிக்கி கொண்டவர்களை ஜீவாலையாக பற்றி தகிக்க வைக்கும் மாய மந்திரம். சிலபேர்கிடையில் தோன்றிய காதல் சமூகத்தில் அழகிய பாடலாக தெரியும் போது சிலர்கிடையில் வரும் காதல் கள்ளத்தை அடைமொழியாக கொண்டு அவபெயரால் அசிங்க படுகிறது. காதலில் கள்ளம் இருப்பது ஆழகு காதலே கள்ளதனமாக இருப்பதுதான் காதல் என்ற வார்தை சமூகத்தில் கசப்பாக தெரிகிறது போல. ஜாதி என்ற பேதத்தில் பல காதல் மலர்கள் கருக அருவாலுக்கும் விசத்திற்கும் காவியம் படக்கின்றனர் சிலர்.
குப்பிட்டிற்கு தடை சட்டம் போட்டால் மட்டும் காதல் அழிந்துவிடுமா? காதல் புயலில் சிக்கியவருக்குதான் ஜாதி மதம் இனம் பணம் பேதம் தெரியுமா? உன்மையான நேசம் ஏதையுமே எதிர்பார்காது. காசுக்காக வந்த காதல்கூட உயிரைய கொடுக்க துனியும் விந்தை காதலின் மந்திர மொழிகளே தவிர வேறு என்ன.
_____________________
"என்ன சார் யாருனு தெரிஞ்சதா?" டி.எஸ்.பி கோபமாக கேட்க இல்லை என தலையாட்டினார் இன்ஸ்பெக்டர்.
"பக்கதுல இருக்க எல்லா ஏரியாலையும் விசாரிச்சிட்டேன் சார். மிஸ்ஸிங் கேஸ்னு கேஸ் கொடுத்தவங்க எல்லாரையும் வந்து அடையாளம் பாக்க சொல்லிட்டேன். யார்னு தெரியல" அவர் சொல்ல தலையை பிடித்துக்கொண்டார்.
"ரொம்ப நாள்லாம் வச்சிருக்க முடியாது… இப்பவே ரொம்ப மோசமா அழுகிடுச்சு பாடி. தலை வலி ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்கல அடையாலம் தெரியாத பிணத்த வச்சிக்கிட்டு நம்ம உயிர எடுப்பானுங்க"
"பிரஸ்க்கு சொல்லியச்சு சார். யாராச்சும் கான்டக்ட் பண்ணா அந்த ஏரியா போலீஸ்கிட்ட கேஸ்ச கொடுத்துட்டு ஒதுங்கிடலாம் சார். வில்லேஜ் ஏரியானால சுத்தி 30து கிலோ மீட்டருக்கு சிசிடிவியும் எதுவும் இல்ல" இருவரும் கழன்று கொள்ள வழி தேடினர்.
"ஆமா இல்லனா கேஸ் சால்வ் பண்றதுக்குள்ள மீடியாகாரனுங்க படித்துவாங்க அதுக்கு மேல இந்த மீம்ஸ்ச போட்டு உசிர வாங்குறானுங்க" பெருமூச்சி விட்டவருக்கு இந்த கேஸ்விசியத்தில் நன்றாக தெரிந்த ஒன்று என்னவென்றால் இறந்த பெண் கொடுமையாக கற்பழிக்க பட்டு சித்திரவாதை செய்து மிக மோசமாக சாகடிக்க பட்டடுறிக்கிறாள் என்பதே. இரக்க படவேண்டும் என்று மனசாட்சி சொல்ல வேலையின் அழுத்தமோ மனித தன்மையை தள்ளி நிறுத்தியது. எந்தனையோ குற்றங்களை பார்த்து பழகியவருக்கு இதில் ஆதாரம் திரட்டுவது சிரமம் என்பதை ஓரே நாளில் கண்டுக்கொண்டார்
வருவாள்…
போகாதடி என் பெண்ணே! ❤❤
போகாதடி என் பெண்ணே! - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
Last edited: