Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.
27 மாய நிலா

சாந்தி தன் காலடியில் சாம்பாலாக கிடந்த மிஸ்டர் ஜீரோவை பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள். நீ சின்ன துணியா இருந்தாலும் பரவால்ல நான் உன்ன காதலிக்கிறேன் என்ட திரும்ப வந்துடு" என சாந்தி சாம்பலாக இருக்கும் ஜீரோவை பார்த்து கண்கலங்கி கதறினாள்.

"நான் காதலுக்கு உருவம் இருக்கனும்ன்னு நினைத்தது தவறுதான் என்னை மன்னிச்சிடு. மிஸ்டர் ஜீரோ வந்துடு, திரும்ப வா" என்று அந்த கருகிப்போன துணியை பார்த்து கதறிக்கொண்டு இருந்தாள்.

வசி அருகில் வந்து "சாந்தி கொஞ்சம் பொறுமையா இருமா என ஆறுதல் சொல்ல"

"எப்படி பொறுமையா இருக்குறது சொல்லு, உன்னால திரும்ப செத்துப்போனவனை உயிரோட கொண்டு வர முடியுமா".

"அதான் உனக்கு அவன் துணியா இருக்கான்ல, இது லவ்வே இல்லைன்னு சொல்லிட்டு இருந்த" என்றான் ருத்ரா.

"அப்போ சட்டுன்னு ஒரு ஏமாற்றம், அட்லீஸ்ட் ஜாலி ஆக ஒன்னா வாச்சி எங்களால போக முடியுமா சொல்லு, ஏதோ குழந்தையை தூக்கிட்டு போறது போல அவனை சுமந்துட்டு போனும், நான் அவ்வளவு காதல் வச்சி இருந்தேன், அவன் கொலைகள் செய்து இருந்தாலும்" இவ்வளோ நாள் அவள் மனதில் அழுதுகொண்டு இருந்ததை இன்று பேசி முடித்தாள் சாந்தி.

"சரி அப்படியே இருந்துட்டு போட்டும், இனி அவனை சுமக்கவும் தேவையில்லை நிம்மதியா இருக்கலாம்" என வசி சொல்ல.

"இல்லை நான் முட்டாள் போல பண்ணிட்டேன், எனக்கு மிஸ்டர் ஜீரோ வேணும். நான் பேபி மாதிரி தூக்கிட்டு கூட போறேன், என் போக்குல போட்டு தூக்கிட்டு போவேன்" ருத்ராவையும் வசியையும் பார்த்து அழுதுகொண்டே சொன்னாள்.

'செம லவ்வு, இப்போவாவது புரிஞ்சதே காதலுக்கு உருவம் கூட தேவை இல்லை என்று, இருவரும் இனி சந்தோசமாக இருப்பார்கள் என்று ருத்ரா சாந்தி பின்னால் இருந்த உருவத்தை பார்த்து தான் சாந்தியிடம் பேச்சி கொடுத்தான், அவள் மனம் விட்டு பேச வேண்டும் என்று.

மிஸ்டர் ஜீரோ ஒரு போர்வையில் புகுந்து சாந்தி பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.

சாந்தி பின் நின்று அவளை சுரண்டிக்கொண்டிருந்தான், முதலில் அதை கவனிக்காத சாந்தி யாரோ சுரண்டுவது போல தெரிய அந்த கையை தட்டி விட்டவள். திரும்ப மிஸ்டர் ஜீரோ சாந்தியை சுரண்ட சாந்தி கடுப்பில் "ஏன்டா எல்லோரும் என் பீலிங்ஸ்ஸ புரிஞ்சிக்காம" என வேகமாக திரும்பியவள் கண்ணில் அவளது போர்வை ஒரு உருவம் எடுத்து நின்றிருக்க.

சாந்தி முதலில் அதிர்ச்சி ஆனாலும் சுதாரித்தவள் "மிஸ்டர் ஜீரோ" என தாவி அணைத்தவள் அவளது பலவீனம் போகும் வரை சாந்தி அமைதியாக கட்டி அணைத்திருந்தாள். அந்த போர்வையை, சுற்றியிருந்த அனைவருக்கும் இந்த காதலர்கள் இணைந்ததை நினைத்து, மனதில் ஒரு உற்சாகம் வரத்தான் செய்தது, சாந்தியின் இந்த அமைதி மட்டும் அனைவருக்கும் ஏதோ போலானது. மிஸ்டர் ஜீரோ அங்கிருப்பவரின் மனநிலையை மாற்ற. "இருக்கும் போது மெழுகா உருகும்போது தெரியாது, சாம்பலாக ஆனால் தான் தெரியும் இந்த காதல் மங்கைக்கு புரியும்" என மிஸ்டர் ஜீரோ சொன்னதும்தான் வயிற்றில் ஒரு குத்துவிட்டாள் சாந்தி.

"நான் பீளிங்குல இருக்கேன் உனக்கு என்ன பஞ்ச் டயலாக் கேக்குது".

"அம்மா இந்த போர்வை நெஞ்சி தாங்குமா வழிக்குது டி" என நெழிந்துகொண்டு சொன்னான், போர்வைக்குலிருக்கும் மிஸ்டர் ஜீரோ.

"நீ முதல்ல இந்த போர்வையை விட்டு வெளியே வா" என போர்வையின் நுனியை சாந்தி இழுக்க மிஸ்டர் ஜீரோ பதறி அடித்து இரண்டடி தள்ளி நின்றான்.

"ஏய்… என் டிரஸ் எதுக்கு கழட்டற" என பதறினான்.

"நீ இப்படி வேண்டா குட்டியா வா, அது தான் நல்லாயிருக்கு".

"அது எல்லாம் முடியாது பா… எனக்கு இது தான் பிடிச்சியிருக்கு, குட்டியாயிருந்தா ஏதோ குழந்தைய வச்சியிருக்க போல பீல் ஆகும் இப்போ பாரு, ஹக் செய்யலாம்," என மிஸ்டர் ஜீரோ சாந்தியை கட்டிப்பிடிக்க வர சாந்தி தப்பி ஓடினால் இருவரும் இங்கு விளையாடிக்கொண்டிருக்க.

சகுந்தலாவுக்கு மண்டை காய்ந்தது 'இதுங்களை பிரிக்க வந்தால் ஒன்னா சேர்ந்து சுத்துதுங்க, இந்த மிஸ்டர் ஜீரோ யாருன்னு வேற தெரியலை' என சகுந்தலா புலம்பிக்கொண்டிருக்க,
சகுந்தலா அவளது முழு சக்தியையும் வேர் ஆராய்ச்சி செய்தததால் சில மாயமந்தரங்கள் வைத்து தான் உருவம் மாற்றி சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
அதும் சிறிது காலத்துக்கு மட்டும் தான், அனைவரும் அவர்அவர் இணையோடு சுத்திக்கொண்டிருக்க.

ஆகாஷ், ராஜா மனைவியோடு வந்திருந்தார்கள். சைலு வளைகாப்பு முடிந்த கையோடு ஆகாஷ் கூட்டிவந்துவிட்டான். அவளை தனியாக விடுவது அவ்வளவு நல்லதில்லை என ராஜா சரசு காட்டிலிருந்த அக்னி வீட்டைதான் பாதுகாப்புக்காக அமைத்திருந்தான். ஒரு எறும்பு கூட இவர்கள் அனுமதில்யில்லாமல் வர முடியாத அளவுக்கு கட்டுப்பாடு போட்டிருந்தான்.

ராஜா அனைவரையும் அழைத்து செல்லத்தான் வந்திருந்தான்.
ருத்ராவின் பார்வை அவனையும் மீறி சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தது.

ருத்ரா அவனது மனதை அடக்கிக்கொண்டிருந்தான் "ருத்ரா இது தப்பு" என்ன தான் சொன்னாலும் ருத்ராக்கு சாந்தியை பிடித்திருந்தது கஷ்டப்பட்டு மனதை ஒரு நிலைக்கு கொண்டுவந்தவன்.

அக்னி நிலாவுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டிருந்தான், அனைத்து பொருளையும் எடுத்து முடித்ததும் ருத்ரா அக்னியை பார்க்க அவளது கண்களில் கண்ணீர் இப்பவோ அப்பவோ என விழுக காத்திருந்தது. அவளது கண் தண்ணீரை துடைத்துவிட்டவன் "எல்லாம் சரியா போயிடும் அதுக்கு தான காட்டுக்கு போறோம். திரும்பி வரும் போது எல்லாம் சரியாகியிருக்கும், என்னை நம்பு என் அழகு மயிலு" என முயலை கொஞ்சுவது போல கொஞ்சினான். முதலில் ருத்ரா மனதில் பேசிய அக்னியும் தன்னுடனிருந்த ரூபி என பெயர்வைத்த அந்த முயலும் ஒன்று என தெரியாது. அனைவருக்கும் பழைய நினைவுகள் வர, அதனுடன் சேர்ந்து பழைய நினைவுகள் வந்திருந்தது. அக்னிக்கு இயற்க்கையாகவே மாய சக்தியிருந்ததால், அவள் எளிதில் கண்டுகொண்டாள் அவளது நினைவுகள் தான் மாயாவாக அழைந்துகொண்டிருக்கிறது என ருத்ராக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்லை. மிஸ்டர் ஜீரோ அவனது நினைவு, இந்த விசயம் எதும் தெரியாததால் சாந்தி மீதிருந்த ஈர்ப்பை அடக்காமல் வைத்திருப்பான். பாவம் மனதால் நொந்து நூடுல்ஸ் ஆகிட்டான் மிஸ்டர் ஜீரோ லவ்வரை இப்படி பார்த்து வைத்ததற்க்கு மனதால் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

மாயா… திட்டம் இன்னும் இரண்டு தினங்கள் தான் இருக்கு, செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம் இருந்தது இன்னும். அது ஆகாஷிடமிருக்கும் ஒரு சாவி அதுயில்லாமல் எதும் நடக்காது. அதற்க்கு முன் இரு நினைவுகளும் தங்கள் உடலுக்கு போனால் தான் சக்தியை உபயோகிக்க முடியும்.

ருத்ராவால் அறிவியல் சக்தியும் அக்னியின் அறிவும்கொண்டுதான் இந்த கும்பலை அழிக்க முடியும் என ராஜா அனைத்து ஏற்பாடும் செய்து சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டு இருந்தது அக்னி நிலாவின் பழையவீட்டில்.

ராஜாவுக்கு மறைமுகமாக அர்ஜுன், ஆதிரா வீட்டுக்கு இன்னும் பலம் சேர்க்க வேரை வீட்டை சுற்றி பல அடுக்குகள் புதைத்து வைத்தார்கள்.

எப்படியும் சகுந்தலா வசியோடு ஒட்டிக்கொண்டு இங்கு வருவாள் என தெரிந்தது, அதனால் இந்த ஏற்பாடு.

வசியிடம் மட்டும் ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என சொல்லிவிட்டு அழைத்து சென்றார்கள். வசிக்கு புரிந்திருந்தது இவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதோ செய்துக்கொண்டிருக்காங்கன்னு. 'ஏதோ செஞ்சிட்டு போட்டும் ரிலாக்ஸ்சா ஒரு டிரிப் போய்ட்டு வரலாம் என அனைவரும் கிளம்பி வேர் மரத்திடம் வர, வசி அந்த மரம் பக்கம் போகாமல் ஏதோ கால் பேசிக்கொண்டு போக சகுந்தலாவுக்கு வசதியாக போய்விட்டது வசியிடம் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

இவர்கள் மனதில் ஆயிரம் பிரார்த்தனைவைத்து வரும் போது அர்ஜுன், ஆதிரா, மாயாவையும் கூட அழைத்து வந்தார்கள். மாயா வசி கண்களுக்கு மட்டும் தெரியமாட்டாள், பழைய ஜென்மத்தின் நினைவு உள்ளவர்களின் கண்களுக்கு மட்டும் தான் இவள் தெரிவாள் என்பது ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டது.

புதிதாக வரும் இருவரை பார்த்த வசி "யார் இவங்க?"

"நாம் தங்க போர வீட்டுக்கு சொந்தக்காரங்க" என மட்டும் சொல்லி தங்களது துணையோடு நடந்து போனார்கள்.

ஆகாஷ் சைலுவை பூப்போல பிடித்து நடந்தான்.

"ஆகாஷ் இன்னும் கொஞ்ச நாளில் பாப்பா வந்திடுமில்ல".

"ம்ம்" என மனதில் ஆயிரம் குழப்பங்களோடு ஆகாஷ் வர சைலு ஆகாஷின் மனநிலையை புரிந்துகொண்டு.

"நீ ஒன்னும் கவலை படாத நம்ம பாப்பா வரும் போது எல்லாம் சரியாகயிருக்கும்" என ஆறுதல் சொல்ல.

ராஜா ரோஸை ஆசையாக அவனது கண்கள் வருடிக்கொண்டிருந்தது. அவனது பார்வை வீச்சு தாங்காமல் மறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அர்ஜுனும் ஆதிராவும் மாயாவை பாவமாக பார்த்துக்கொண்டு வந்தாள்.

இருவரும் எதுக்கு புக் எடுத்து போனிங்க என ராஜா ரோஸை விசாரிக்கவில்லை, காரணம் அவர்களுக்குதான் அடுத்த நாளே பழைய நினைவுகள் வந்து சிறப்பாக விளக்கம் தந்துவிட்டதே.

வசி, சகுந்தலாவின் கையை பிடித்துவர அருகில் வந்த மாயா இருவரின் இணைந்திருக்கும் கையை பார்த்து சோகத்தில் கண்ணீர் தான் வடிக்க முடிந்தது.

மிஸ்டர் ஜீரோ சாந்தியின் வர்புறுத்தலின் பேரில் ஒரு சிறு பச்சை கர்சிப் உள் நுழைந்துகொண்டு காற்றில் பறந்து வந்தான் சாந்தியிடம் காதல் வசனங்கள் பேசிக்கொண்டு.

மாயா அழுத கண்ணீர் அழுத்தி துடைக்கும் போது ஒரு துளி தெரித்து வசி கன்னத்தில் விழ "மழை வரப் போகுது என குதூகலமாக சென்னான்" அனைவரும் மாயாவையும் வசியையும் மாற்றி பார்த்து பரிதாபப் பட.

சகுந்தலா மட்டும் வன்மமாக சிரித்தாள், மாயா நிலையை பார்த்து.

இப்போது அனைவரது பார்வையும் சகுந்தலா மீதிருந்தது.

'என்ன சிரிக்கரியா? நீ எப்படி உள்ள வரன்னு நானும் பார்க்குறேன்' என்பது போல முன் நின்றார்கள்.

சகுந்தலா அசால்ட்டாக நுழைந்து வந்தாள் அந்த வேரால் எந்த பாதிப்பும் அவளுக்கு ஏற்படவில்லை. அனைவருக்கும் முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் பொருமையாக உள்ளே வந்தார்கள்.

அனைவர் மனதிலும் குழப்பம் வேரின் சக்தி போய் இருக்குமா இந்த குழப்பத்திலேயோ நாட்கள் நகர்ந்தது.

மாயா வசி பக்கமே இருந்தால் மனதில் குமுறல்களோடு 'என் காதல் உனக்கு புரியவில்லையா 'என்பது போல பார்த்து வைத்தாள்.

அனைவருக்கும் முடிவு கட்டும் நாள் வந்துவிட்டது என சகுந்தலா உற்சாகமாக சுற்றித் திரிந்தாள். இந்த வசியால் சகுந்தலாவை யாராலும் நெருங்க விடமுடியவில்லை.

மாயா அனைத்தையும் சரி செய்வாளா?

சகுந்தலாவும் வசி அருகில் வந்து நின்றுகொண்டு வசி வரைவதை பார்க்க. மாயாவும் இங்கு என்ன நடக்குது என வந்து நின்றவள் பார்வையில் விழுந்தது என்னவோ, வசி வரைந்திருந்தை பார்த்து சகுந்தலாவும் மாயாவும் அதிர்ந்து நின்றார்கள்.

மாயாவின் மறைந்துபோன ஒரு உருவம் வரைந்து வைத்திருந்தான். சகுந்தலா அதை பார்த்து, 'ஒருவேலை கண்டுபிடிச்சிடுவானோ' என நினைத்திருக்கும் நேரம் அதிர்ந்த மாயாவின் விழிகள் புன்னகையில் மறைந்திருந்தது. வரைந்து முடித்ததும் தான் வசி கவனித்தான், மனதிலிருந்த மாயாவை வரைந்து வைத்திருப்பதை. வசிக்கு தலை பயங்கரமாக வலித்தது, யாரோ சுத்தியால் மண்டையை பிளப்பது போலிருந்தது. வசி மயங்கும் முன் அக்னி நிலாவையும் அவன் சற்றுமுன் வரைந்திருந்த பெயின்டிங்கும் பார்த்து குழப்பத்தோடு சேர்ந்து மயங்கி சரிய.

அனைவரும் இங்கு நடக்கும் கலவரம் தெரிய வசியை பார்க்க ஓடி வந்தார்கள்.

மாயா, அர்ஜுன், ஆதிரா மூவரும் அக்னி நிலாவையும், ருத்ரா, மிஸ்டர் ஜீரோவை அவர்கள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஒரு மாய வட்டத்தில் தள்ள கடைசியாக மாயாவும் உள் நின்றாள். பிரிந்திருந்த நினைவுகளோடு ஒன்றாக சேருவதை பார்த்து சாந்திதான் அதிர்ந்து நின்றாள்.

ருத்ராவும் மிஸ்டர் ஜீரோவும் ஒன்னா என்பது போல.

சகுந்தலா வசியை பார்த்துக்கொண்டிருக்கும் போது இது அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

சகுந்தலாவிற்க்கு உள்ளுணர்வு ஏதோ தவறு நடப்பது போல சொல்ல வெளியேயே எட்டிப் பார்க்க அதிர்ந்திருந்தாள். அவள் தடுப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

அனைவரும் ஒன்றாக நின்று சகுந்தலாவை கேலியாக பார்க்க சகுந்தலாவிற்க்கு ஆத்திரம் பொங்கியது. யாருக்கோ போன் போட்டு "எல்லாம் தயாராயிருக்கா சரி உள்ள வாங்க இன்னும் ஒரு மணி நேரத்தில் எல்லாத்தையும் முடிக்கனும்" என சொல்லி நின்றிருந்த அனைவரையும் பார்த்து "என்ன எல்லாம் ஒன்னா சேர்ந்துட்டிங்க போல. அதுக்கு நான் விட மாட்டேன்" என சகுந்தலா அகங்காரமாக சிரிக்க.

அவளது கொடுர சிரிப்பு அனைவருக்கும் ஒரு செய்தி சொன்னது என்னவோ உண்மைதான் பெரிய திட்டம் வைத்திருப்பது நன்றாக தெரிந்தது அனைவருக்கும். அனைவரும் சுதாரிக்கும் முன் ஒரு ஐம்பது பேர் பக்கம் சுற்றி வளைத்தார்கள்.

ராஜா அதிர்ந்தான் இவ்வளவு பாதுகாப்பு மீறி எப்படி உள்ளே நுழைந்தார்கள் என. இவர்களில்லாமல் இன்னும் சிலர் சுற்றிவளைத்து அனைத்து பாதுகாப்பையும் தகர்த்துக்கொண்டிருக்க.

வசி எழுந்திரிக்காத வகையில் சகுந்தலா மயக்க மருந்து கொடுத்திருந்தாள்.

அக்னி, ருத்ராக்கு சில சக்திகள் கிடைத்திருந்தது அவர்களின் நான்னைவான மாயா மற்றும் மிஸ்டர் ஜீரோவிடமிருந்து ஆனால் இவ்வளவு பேரை சமாளிக்க முடியாது.

ராஜா முன் வந்து "இப்போ உனக்கு என்ன வேணும்? இங்க இருப்பவர்களை எதும் செஞ்சிடாத என கெஞ்சினான்.

ருத்ரா, அர்ஜின், ஆகாஷ் அருகில் வந்து ராஜா "இவகிட்ட எதுக்கு கெஞ்சிட்டுயிருக்க நாம் தயாரித்து வைத்தது ஒரு துளி இவள்மிது பட்டால் போதும் பொசுங்கிடுவா" என இங்கு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ரோஸ் அவளை தாக்க அந்த திரவத்தை எடுத்துவந்து ருத்ராவிடம் கொடுக்க அக்னி நிலாவும், ருத்ராவும் கை கோர்த்து ஏதோ மந்திரம் உச்சரித்து அந்த திரவத்தை தெளிக்க சகுந்தலாவிற்க்கு உடல் எரிய ஆரம்பித்தது அனைவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றார்கள் அந்த வட்டத்தைவிட்டு.

சகுந்தலா எரிந்த உடலோடு மயங்கி சரிய அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி, கூட ஒட்டிவந்தது விட்டுத்தொலைந்தது என அவர்கள் சந்தோஷத்துக்கு ஆயுசு குறைவு போல, சாம்பலாக இருந்த சகுந்தலாவின் உடல் மீண்டும் ஒன்றாக சேர்ந்து பழைய உருவத்திற்க்கு வந்திருந்தாள்.

சும்மா நின்றிருந்த ஐம்பது பேரும் சுற்றி வளைத்தார்கள், சகுந்தலா அகங்காரமாக சிரித்து "என்னை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் செய்ய முடியாது."

மாயா மாயம் செய்ய வருவாள்.
 
28 மாய நிலா

"என்ன எல்லோரும் முழிச்சிட்டு இருக்கிங்க, உங்க வேர் சக்தியால என்னை இனி ஒன்னும் செய்ய முடியாது. அந்த வேரிடமிருந்து தப்பிக்கும் பார்முலா நான் சிறப்பா கண்டுபிடிச்சிட்டேன். அதுமட்டுமில்ல இனி அந்த வேரின் முழு சக்தியும் எனக்கு கிடைச்சிடுச்சி" என அனைவருக்கும் அடுக்கடுக்காக அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருந்தாள் சகுந்தலா.

இவர்களிடமிருக்கும் ஒரே விடை வசி மட்டும்தான் மூவரின் நினைவுகளின் சக்திகொண்டு போராடலாம், ஆனால் வசி சில மணிநேரம் எழுந்திரிக்காதவாறு சகுந்தலா செய்து வைத்திருந்தாள். திக்கு தெரியாத காட்டில்விட்டது போல அனைவரும் முழித்துக்கொண்டிருந்தார்கள்.

சகுந்தலா ஏற்கனவே பாதுகாப்பு வளையத்தை விட்டு அனைவரையும் வெளியே அனுப்பியிருந்தாள். அவர்களுக்கே தெரியாமல் அனைவரும் திக்கி தினறிக்கொண்டிருக்க சைலு வசியை எப்படியாவது எழுப்பிடலாம் என வசியிருக்கும் அறையை நோக்கி போக, சகுந்தலா கண்ணில் சைலு பட, சகுந்தலா ஒற்றை விரலை அசைத்து அவளை தூக்கி சுவற்றில் அடித்தாள். சகுந்தலா கொஞ்சம் கூட இறக்கமில்லாமல் நிறைமாத கற்பினியை அப்படி தூக்கியடிக்க, அனைவரும் தங்கள் கையாலாகாத தனத்தை நினைத்து மனதால் மறுத்துப்போனார்கள். ஆகாஷ் சைலு வலியால் துடிப்பதை பார்த்து பதறி அவள் அருகில் ஓடிப்போக எந்திரிக்கும் முன் சகுந்தலா மாய கயிறால் ஆகாஷை கட்டிப்போட்டிருந்தாள். அவனால் ஒரு இன்ச்கூட நகர முடியாமல் இருந்தயிடத்தில் நின்றான். ரோஜா, ஆதிரா அருகில் போக பார்க்க அவர்களையும் தூக்கி விசி அடித்தாள். சகுந்தலா இவர்களை ஒரு மூலையில் லாக் செய்து வைத்திருந்தாள் அந்த கொடுரமான அரக்கி.

ராஜா, அர்ஜுன் சகுந்தலா செய்யும் செயலை பொறுக்க முடியாமல் சகுந்தலாவை ஆயுதம் வைத்து தாக்க, சகுந்தலா அசையாமல் நின்றிருந்தாள் சிலை போல. அவள் உடலில் சென்ற ஆயுதத்தால் அவளுக்கு ஒரு காயமும் வரவில்லை.

"இனி எனக்கு அழிவேயில்லை மொத்த வேரின் சக்தியும் இப்போது என்னிடத்தில் இந்த சகுந்தலாவுக்கு அழிவு என்பதே கிடையாது இனி" என அகங்காரமாக சிரித்தவள் இருவரையும் முடக்கி ஒரு இடத்தில் தள்ளிவிட்டாள்.

அந்த ஐம்பது பேரும் ஏதேதோ மந்திரம் ஓதிக்கொண்டிருக்க.

ஆகாஷின் கழுத்திலிருந்த சாவியை எடுத்து அர்ஜுனிடமிருந்த புத்தகத்தை திறந்தான். இரண்டு புத்தகம் ஒன்று வேர் மரத்திடம் இன்னொன்னு அந்த புதைந்திருந்த மாய கோட்டையில். மாயக்கோட்டையிலிருந்த புத்தகத்தில் முழு மாய சக்தி பெற சில குறிப்புகளை அந்த ஐம்பது பேரும் ஒன்றாக ஜபித்துக்கொண்டிருந்தார்கள். அக்னி நிலா, ருத்ரன் என்ன நடந்தாலும் சரி இணைத்திருந்த கைகளை விடக்கூடாது. ஒருவர் பிரிந்தாலும் இருவரால் சக்தியை உபயோகிக்க முடியாது என சுற்றி நடக்கும் கொடுற செயலை பல்லை கடித்துக்கொண்டு நின்றிருக்க. சகுந்தலாவின் திட்டப்படி அந்த பார்முலா கூட மாய சக்திகள் கலந்து அந்த வேரின் தன்மையை முற்றிலும் மாறி அளவில்லாத சக்தியை தன்வசம் இழுத்துக்கொண்டிருந்தாள்.

சகுந்தலா அக்னி நிலாவிடமிருந்த 16 தனி தனி வேல் போலிருந்த பாகங்களை ஒன்றாக வைக்க அது காந்தம் போல ஒட்டி ஒரு உருண்டை சாவி போலானது, இடையில் ஒரு துவாரமிருக்க அதில் அக்னி அந்த ஜன்மத்தில் உபயோகித்த பரம்பரை பொக்கிசத்தை இடையில் சொருக அந்த சாவி மின்னியது.

சக்தியை எடுத்துவிட்டு விட்டுவிடுவாள் என நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சி தருவது போல ஒரு செயல் செய்தால்.

அந்த சாவி மிக சக்திவாய்ந்தது கேக்கும் அனைத்தும் அந்த நொடியே கிடைக்கும். இது அக்னி நிலாவின் பரம்பரை பாதுகாத்து வந்தது, இக்கட்டான சூழலில் தேவதைகள் அதை சரி செய்ய தேவலோகத்திலிருந்து வரவைக்கலாம். அதே போல அழிக்கவும் நரகத்திலிருந்து வித்தியாச சக்திக்கொண்ட அரக்கிகளையும் அசுரர்களையும் அழைத்துவரவைக்கும் அந்த சாவி.
அந்த சாவியை தூக்கிப்போட்டு ஏதோ மந்திரம் சொல்லிமுடித்து வரம் கேக்கும் சமயம் வசி எழுந்து வந்தான்.

"என்ன எல்லோரும் விளையாடிட்டு இருக்கிங்களா?".

சகுந்தலாவிற்க்கு பலத்த அதிர்ச்சி இவன் எப்படி எழுந்து வந்தான் சகுந்தலா சமாளிக்க வாய் திறக்கும் முன் ருத்ரா நொடி பொழுதில் ஒரு ஐடியா செய்து.

"ஆமா வசி இந்த பால் லைட் அனையரத்துக்கு முன்னாடி, அவங்கவங்க மனசுலயிருக்க விசயத்தை வேண்டிக்கனும் கடைசியா யாரு அதிகமா ஒரே போல வேண்டிக்கிராங்களோ அவங்க எல்லோரும் ஒரு டீம் வேண்டிக்க ஆரப்பிக்கலாமா?" என ருத்ரா விசமமாக சகுந்தலாவை பார்க்க.

சகுந்தலாவிற்க்கு அவளது ஆனவம் கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 'எப்படியிருந்தாலும் வசி என் பக்கம் தான்' என அசையாத நம்பிக்கையோடு நின்றிருந்தாள் சகுந்தலா அதற்க்கு அடிபோடும் வகையில்.

"வசி நீங்க என் பக்கம் தானே?" என ஆசையாக நஞ்சு உள்ளத்தோடு கோட்டாள்.

"நான் எப்பவும் என கனவு தேவதை பக்கம் தான்" என்று சகுந்தலாவிற்க்கு வாக்குறுதி கொடுத்தான் வசி.

"சரி போட்டி ஆரம்பிக்கலாமா?" என ருத்ரா சகுந்தலாவை தோற்க்கடிக்க துடித்துக்கொண்டிருந்தான்.

சுற்றியிருந்தவர்கள் வேதனையில் துடிப்பது வசிக்கு தொரிந்தால் காரியம் கெட்டுவிடும். கூடயிருப்பவர்கள் மற்றும் அந்த மந்தாரவாதிகள் என அனைவரையும் வசியின் பார்வையிலிருந்து மறைத்திருந்தாள், சகுந்தலா அந்த மாயாஜாலத்தின் உதவியோடு.

அந்த ஐம்பது பேரும் சுற்றி நின்றிருக்க ருத்ரா அவனிடமிருக்கும் இரண்டாவது புத்தகத்தை எடுத்து, அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தான் ருத்ரா. என்னதான் சகுந்தலா அறிவாளியாகயிருந்தாலும் இந்த புத்தகத்தை பற்றி மறந்திருந்தாள். ஒரு முறை அந்த புத்தகத்தின் விதிமுறையை பார்த்திருந்திருந்தால் இந்த விளையாட்டையும் சக்தியை பற்றியும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அனைத்தும் மாயாவின் விளையாட்டு, முதலில் சக்திகளை பெற குறிப்புகளில் இருக்கும் புத்தகத்தை காட்டி அவளுக்கு மதியிழக்க செய்திருந்தாள்.

இவள் அழிவு ஒன்றுதான் இவர்களுக்கு வாழாத வாழ்க்கையை திருப்பி தர முடியும்.

ருத்ரா புத்தகத்திலிருக்கும் போட்டி விதிகளை படிக்க துவங்கினான்.

"இந்த போட்டி யாரும் யாருடனும் கலந்து பேச கூடாது, எந்த மந்திர சக்தியோ அதன் சார்ந்த நபர்களை இங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும்" ருத்ரா சகுந்தலாவை நக்கலாக பார்த்து சிரித்தான்.

அந்த சக்திவாய்ந்த பந்து கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். தவறான பதில் முதலில் கலந்துகொண்டவர்களின் மந்திர சக்தியை சிறிது சிறிதாக எடுக்கும், நல்லவர் வெல்லுவார்கள் தீயவர்கள் அவர்களின் பிறவி பலன் அடைவார்கள்" என ருத்ரா படித்து முடிக்க, அனைவரையும் மந்திரக்கட்டுகளிருந்து சகுந்தலா விடுவித்து, அவர்களை சுற்றியிருந்த மந்திரவாதிகளை கிளம்ப சொல்லிவிட்டாள் வசி கண்களுக்கு தெரியாததாலா "என்ன சகுந்தலா தனியா பேசிட்டிருக்க இங்க யாருமில்லையே".

"அது சும்மா விளையான்டேன்" என கேவலமாக நடித்தாள்.

துடித்துக்கொண்டிருந்த ஆகாஷ் சைலுவை நெருங்க வயிற்றில் அடிப்பட்டதால் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள்.

ரோஸ், ஆதிரா குழந்தை சிறிது நேரத்தில் பிறந்துவிடும் தேவையான ஏற்பாடுகள் செய்ய ராஜாவும் ஆகாஷ் சைலுக்கு ஆதரவாக நின்றிருந்தார்கள்.

சாந்தி ருத்ராவைதான் பார்த்திருந்தாள், 'எப்படியாவது, எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு என்கிட்ட வந்திடு மிஸ்டர் ஜீரோ' என கண்களால் ருத்ராக்கு செய்தி அனுப்ப.

நிசப்த அமைதி அந்த ஒளி பந்து பேசத் துவங்கியது.

"ஒரே கேள்வி உங்கள் எண்ணம் போல அந்த பதில் உங்களுக்கான வாழ்க்கையை கொடுக்கும்".

சகுந்தலா உறுதியாக இருந்தாள்.

"உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் யார்?".

மனதில் ஒரு பெயரை சொல்ல வசி, அக்னி நிலா, ருத்ரா மூவரின் மீது ஒரு ஒளி கோடு இணைக்க, அந்த பந்து பேசத் துவங்கியது

"சகுந்தலா உன் முடிவு உன் முன்னால்" என சொல்லி அக்னியின் கைகளில் அந்த பந்து பந்தமாக அமர்ந்துக்கொண்டது.

சகுந்தலாவால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

"வசிகரா என்னை ஏமாத்திட்டயில்ல?" என ஆக்ரோசமாக கத்தினாள்.

"யாரு நான் ஏமாத்தினனா, என் மாயா தான் பிடிக்கும்னு உன்மையை தான் நினைத்தேன்" என வசி அக்னி நிலாவின் தோல்மீது கை போட. அங்கிருப்பவர் அனைவருக்கும் அப்படி ஒரு ஆனந்தம் வசிக்கு நியாபகம் வந்ததால் தான் அனைத்தும் சரியாகியது என ருத்ரா அக்னி நிலாவுக்கு தெரியும். வசி மாயாவை தான் நினைப்பான் அந்த மாயா அக்னி நிலா நாம் தான் வின் செய்வோம் என அவர்களுக்கு தெரியும். இருந்தும் அனைவருக்கும் ஒரு பயம் வரத்தான் செய்தது, வசி சகுந்தலாவை நினைத்துவிட்டாள் என்ன செய்வது என.

வசிக்கு அனைத்தும் நியாபகம் வந்துவிட்டதா என அவனை பார்க்க.

சைலு குழந்தை இந்த பூமிக்கு வர துடித்துக்கொண்டிருந்தான், சைலு வலி பொறுக்காமல் கத்த.

அனைவரும் ஒரு பக்கமிருப்பதை பார்த்த சகுந்தாலாவுக்கு அவள் பெற்ற சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டிருந்தவள் மிருகமாக மாறியிருந்தாள்.

அவளது கோபத்தில் முதலில் வீக்காக இருக்கும் சைலு மேல் உபயோகிக்க பிரசவலியுடன் சேர்ந்து கொண்டவள், கை அசைத்து குழந்தையை கருவில் அழிக்க முயற்சி செய்துகொண்டிருக்க, அனைவரும் சகுந்தலாவை திசை திருப்ப, அருகில் வந்து வசி. நக்கலாக சிரித்தான் "என்ன சகுந்தலா என்னை முட்டாள்ன்னு நினைச்சியா எனக்கு ஆரம்பத்திலிருந்து உன் மேல சந்தேகம்?" சகுந்தலா அதிர்ந்து நின்றாள்.

"உன் மந்திரத்தையும், தந்திரத்தையும் வைத்து மறைக்க தெரிந்த உனக்கு அக்னி மோதிரம் வைத்து தொடுவது கூடவா எனக்கு உணர்த்தியிருக்காது?".

"எல்லாம், சரியா செய்த நீ உன் முகத்தை மறைக்க மறந்துட்ட".

"அதான் மாயா முகம் நீ பார்த்ததில்லையே?" என சகுந்தலா கோபத்தோடு கத்தினாள்.

"மாயா முகம் பார்த்தில்லை, ஆனா மாயாவின் உதடும் அதன் கீழிருக்கும் மச்சத்தை பார்த்திருக்கேன். அதுமட்டுமில்லை, நீ கொலை செய்த பி.எ வீட்டில் உருமாறி வந்ததும் நீ தான்னு எனக்கு தெரியும். எதிரியை கூடவே வைத்துக்கொள்ளத்தான் இந்த நாடகம்".

"அப்போ உனக்கு முன்னவே தெரியுமா நடிச்சி என்னை ஏமத்திட்டியா வசி" என சகுந்தலாவின் கோபம் எல்லையை கடந்தது.

"எனக்கு எதும் நியாபகம் வரலை என் பிரண்ட்ஸ் சொன்னதை நம்பாத அளவுக்கு நானிருப்பேன்னு நினைத்தது உன் முட்டாள் தனம்" என வசி வெற்றிப்புன்னகை வீசினான்.

"ஆனா அக்னியை வரைந்த அப்போ எனக்கு மொத்தமா நியாபகம் வந்துடுச்சி என குதுகலித்தான் நல்லவங்ககிட்ட நடிக்க கூடாது, ஆனா சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்லமுடியும்" என வசி பேசிக்கொண்டிருக்கும் போது. சற்றுமுன் சைலு குழந்தையை கருவில் கொல்ல நினைத்ததை இப்போது செயல்படுத்தத் துவங்கினாள் சகுந்தலா.

ருத்ரா,வசி, அக்னி நிலா மூவரும் கையை கோர்த்து மூவரின் மொத்த சக்தியையும் உபயோகித்து சகுந்தலா சைலுவை துன்புருத்துவதை தடுக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க, சகுந்தலாவின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்திருந்தாலும் அவள் முழு பலத்தை பயன்படுத்தி ஒரு கையால் இவர்கள் மூவரையும் சமாளித்து ஒரு கையால் சைலுவை துடிக்கவைத்துக்கொண்டிருந்தாள்.

கோபம் வந்த மூவரும் சகுந்தலாவை தள்ளிவிட்டு சைலுவை காப்பாற்ற, ஆகாஷ் துடித்துக்கொண்டிருந்தான். ராஜா மனதால் இறந்திருந்தான் அனைவரையும் காப்பாற்ற நினைத்து இங்கு வந்து அனைவரையும் இப்படி சிக்க வைத்துவிட்டேனே என கண்களில் நீர் கோர்த்தது, ரோஸ் ராஜாவை ஆதரவாக கைபிடித்து நின்றிருக்க.

மூவரும் சகுந்தலாவை சமாளித்துக்கொண்டிருக்க சகுந்தலாவிற்க்கு சக்தி குறைந்துக்கொண்டேயிருந்தது. இருந்தாலும் சகுந்தலா முழு பலத்தை பயன்படுத்தி மூவரையும் தள்ளிவிட, சைலுவை துடிக்க வைத்திருந்தாள் சகுந்தலா. சைலு கதறிக்கொண்டிருக்க அனைவரையும் மாய கட்டு போட்டு கட்டிவைத்தாள், சைலு தனியாக துடித்துக்கொண்டிருக்க, யாராலும் சைலுவுக்கு ஆதரவாக கூட கையில் பிடிக்க மூடியவில்லை.

அக்னி நிலா ஆத்திரத்தில் அந்த மாய கட்டை கழற்றிவிட்டாள். சைலு துடிப்பதை பார்த்து அனைவரும் துடிப்பதை பார்த்து சகுந்தலா ரசித்துக்கொண்டிருந்தாள். "ச்சே விடியோ எடுக்க, என் பி. எ யில்லை சும்மாயிருக்காம அக்னி பத்தி சொல்லிவிடுவேன்னு என்னவே மிரட்டினான் அதான் என் கையால போட்டுத்தள்ளிட்டேன்".

வசி ஆத்திரமாக கத்தினான் "சைலுவை விட்டுவிடு" என.

அக்னி மந்திர கட்டை உடைத்திருந்தாலும் இன்னும் முழுமையாக அதிலிருந்துவிடுபட முடியவில்லை. சகுந்தலா சைலுவை துடிதுடிக்கவைத்துக் கொண்டிருக்க, "இப்போ இவளை கொல்லப்போறேன்" என சைலுவின் கழுத்தை பிடித்து நெருக்கினாள்.

அக்னி கஷ்டப்பட்டு அந்த கடைசி கட்டை அவிழ்த்து போகும் போது துடித்துக்கொண்டிருந்த சைலுவின் வயிற்றை பிடித்து அழுத்திக்கொண்டிருந்தாள். சைலுவின் கதறலை அங்கிருந்தவர்களின் யாராலையும் சமாளிக்க முடியவில்லை, ஆளுக்கு ஒரு பக்கம் துடித்துக்கொண்டிருந்தனர்.

அக்னி கட்டை அவிழ்த்து உள்ளே வருவதற்க்குள் சைலு கதறலோடு அவளது குழந்தை பிறந்திருந்தது, எந்த அசைவுமில்லாமல்.

மாயா மாயம் செய்ய வருவாள்…
 
29 மாய நிலா

சைலுக்கு ஆறுதலாக கையைபிடித்து அருகில் கூடயில்லாத தன் நிலையை எண்ணி ஆகாஷின் இதயத்தில் உதிரம் வழிந்தது. சாதாரணமாகவே கணவன்களால் மனைவியின் பிரசவ கதறல்களை தாங்க முடியாது. அந்த ஆண் மகன் எப்படிப்பட்ட வீரானாகவோ கல் நெஞ்சம் கொண்டவனாகவோ இப்படியிருப்பவர்களைக் கூட கறையவைத்துவிடும் இந்த கதறல்கள். சுற்றி நடக்கும் கொடுரத்தை தடுக்கக்கூட முடியாத நிலையிலும் ஆளுக்கு ஒரு பக்கம் "இறைவா இந்த அரக்கியை அடக்க உனக்கு இப்போதும் மனம்வரவில்லையா?" என கடவுளிடம் சண்டையிடுவதை தவிற என்ன செய்ய முடியும்?

சைலுவை சகுந்தலா ஒரு சுழற்று சுழற்றி தூக்கி எறிய இருக்கும் வலியில் இதுவும் சேர்த்துக்கொண்டு சைலு துடித்தாள். தன் அன்னையின் வலியையும், கஷ்டத்தை குறைக்கும் விதமாக குழந்தை பிறந்தது இறந்த நிலையில்.

தன் குழந்தையிடம் அசைவுயில்லாததால் சைலு கதறிவிட்டாள்.

குழந்தையை கையிலேயெடுத்து "தங்கம்… அம்மாவ பாரு டேய், அம்மாட்ட விளையாடுறியா போதும் எந்திரி. நீ வருவன்னு அப்பா உனக்கு டாய்ஸ், டிரஸ் எல்லாம் நிறைய வாங்கி வச்சி இருக்கார்" என தன் குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டு கதறினாள் சைலு.

சுற்றியிருந்தவர்களின் கண்களில் கோபம் ஆத்திரம் என கலந்த கலவையில் சகுந்தலாவை பார்க்க, அவள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து அவர்கள் வேதனையை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அக்னி நிலா மந்திர கட்டுகளை கழற்றிவிட்டு வருவதற்குள் சைலுவை தூக்கி எறிந்த அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்தாள், தன்னால் தானே இந்த உயிர்கள் துடித்துக்கொண்டிருக்கிறது" என மனம் வருந்திப் பேய் பிடித்தவள் போல சகுந்தலாவை பார்த்திருந்தாள்.
சகுந்தலா சைலுவை நோக்கி வந்து குழந்தையை சைலுவிடமிருந்து பறித்தாள்.

"ஏய் என் குழந்தையை கொடு" சைலுவால் எழுந்து நிற்க கூட முடியாமல் சகுந்தலாவை நெருங்கி குழந்தையை பிடித்து இழுக்க.

குழந்தை உடலில் ஒரு துடிப்பு ஏற்ப்பட்டது, தன் அன்னையின் உடல் சூட்டிலிருந்து பிரிந்ததால் போல.

வீல் என ஒரு கத்தல், அதனின் குட்டி வாயிலிருந்து இவ்வளவு சத்தமா என்பது போலிருந்தது அந்த சத்தம்.

அங்கிருந்தவர்களுக்கு இப்போது தான் உயிரே வந்திருந்தது அதை கொடுக்கும் வகையில் சகுந்தலாவின் அடுத்த செயலிருந்தது.

குழந்தையை தலைகீழாக தூக்கி பிடித்து ஒரு சுழற்று சுழற்றி சுவற்றில் எறிந்தாள்.

"என்ன எல்லாம் சந்தோஷப் படுறிங்க போல, அப்படி எல்லாம் உங்களை விட மாட்டேன். இப்போ பாருங்க ரத்தம் தெறிக்க உங்க குடும்பத்தோட முதல் வாரிசு என் கையால சாகப்போவதை" என தூக்கிவீச இவ்வளவு நேரம் சுயநினைவுயில்லாமல் கிடந்த அக்னி நிலா ஆத்திரத்தில் சகுந்தலாவின் கழுத்தைபிடித்து மிஞ்சியிருந்த அவளது சக்தியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். சகுந்தலாவின் சக்தியை குறைக்க குறைக்க இங்கு மந்திரக் கட்டு பலமிழந்து கொண்டிருக்க அந்த கட்டு பலவீனமாவது தெரிந்து அனைவரும் அதிலிருந்து விடுபட்டு குழந்தையை காக்க ஓடினார்கள். குழந்தை சுவற்றில் மோத ஒரு இன்ச் இடைவெளியில் அனைவரும் குழந்தையை பிடிக்க ஆளுக்கு ஒரு திசையிலிருந்து ஓடி வந்தார்கள் அதற்குள் குழந்தை நழுவி சென்று மிதக்கத் துவங்கியது.

அனைவரும் ஆச்சரியமாக குழந்தையின் செயலை பார்க்க குழந்தை தன் கை கால்களை அசைத்து சைலு அருகில் வந்தது அந்தரத்திலிருந்து. கண்ணீர் கடலில் மூழ்கியிருந்த சைலு தன் குழந்தை சுவற்றில் மோதி சாவதை பார்க்க சக்தியில்லாமல் கண்களையும் காதையும் இறுக்கி மூடியிருக்க குழந்தை அழைத்ததை அம்மா பார்க்கலை "ங்க" என தொடர்ந்து அழைத்தது.

சைலு குழந்தை அருகிலிருப்பது போல தோன்ற கண்களில் ஒரு நடுக்கம், மனதில் ஒரு ஆசை குழந்தை திரும்ப என்னிடம் வர வேண்டும் என தாயுள்ளம் பதறியது. கண்களை மெதுவாக திறக்க, குழந்தை சைலுவை பார்த்து பறந்தவாறு கையை நீட்ட தாவி அணைத்துக்கொண்டாள். ஆகாஷும் சைலு அருகில் வந்து அமரந்துக்கொண்டான். குழந்தை பெரிதாக அவன் வாயை திறந்து தாய்க்கு ஒரு செய்தி சொன்னது. "மா… ஒரே டயர்ட் தூக்கம் வருது" என குழந்தையை அணைப்பாக பிடித்து கொண்டிருக்கும் சைலுவை பார்த்ததும் தான் அனைவருக்கும் ஒரு நிம்மதி பிறந்திருந்தது. பக்கத்தில் பயங்கர சத்தம் வருவதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியிலிருந்தார்கள்.

சாந்தமாக தன்னுடன் வலம் வந்துகொண்டிருக்கும் அக்னி நிலாவா இது.

நிலாவின் குளுமையுடன் சுற்றிக்கொண்டிருப்பவள் அனைத்தும் பொறுத்துப்போனவளால் குழந்தைக்கு இப்படி ஆனதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோபத்தில் அக்னி குழம்பமாக மாறி சகுந்தலாவின் சக்தியை உறிஞ்சி தூக்கிப் போட்டு கால்களை சகுந்தலா கழுத்தில்வைத்து அவள் சாகும் வரை அக்னி நசுக்கிக்கொண்டிருந்தாள்.

சகுந்தலா உயிர் பிரியும் ஒரு நொடி முன் சைலு கைகளிலிருந்த பூக்குவியலை பார்த்து, உயிர் பிரிக்கும் மந்திரம் உபயோகித்து இறந்தாள் கொடுரமாக.

அக்னி அந்த உயிர் பிரிக்கும் மந்திரம் சைலு குழந்தைக்கு அருகில் செல்வதற்க்குள் தன்னுள் வாங்கிக்கொண்டு. அனைவரையும் ஒரு பார்வை பார்த்து. "மிஸ் யூ" வசி அக்னி நிலா உடலில் உள்ள அனைத்து சக்தியும் வடிந்து சாய, வசி துடிதுடித்து அருகில் வந்து கையில் ஏந்த "லவ் யூ வசிகரா" என மயங்கி சரிந்தாள்.

அனைவரும் கதற துவங்கினார்கள் அர்ஜுன், ருத்ரா அவர்களிடமிருந்த வேரைக் கொண்டு வந்து அக்னி கையில் கொடுக்க சகுந்தலா செய்த சதியால் அந்த வேர் தன் தன்மையையிலந்திருந்தது இது வேலைக்கு ஆகாது என,

ஆகாஷ் அக்னி நிலாவை தூக்கிக்கொண்டு அந்த மரமிருக்கும் இடத்தை நெருங்கும் முன் பலத்த மழை நிறைய தடங்கள்கள் வழியில் மரம் சரிந்திருக்க அர்ஜுன் மாற்று பாதையில் தூக்கிப் போக அந்த பாதை வழக்கத்தை விட நீண்டுக்கொண்டே இருந்தது.

ராஜா, அர்ஜுன், ஆகாஷ் மாற்றி மாற்றி தூக்கிக்கொண்டு ஓட வசி அக்னியை தன் கரத்தில் கொடுக்காமல் மூவரும் மாற்றி மாற்றி தூக்கிச்சென்றார்கள்.

வசிக்கு சகுந்தலா கொடுத்த மயக்க மருத்து சிறிது உட்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த காரணத்தால் வசி கைகளில் கொடுக்காமல் இவர்கள் அந்த புயல் மழையில் தல்லாடிச் சென்றார்கள்.

வசி துடித்தான் தன் தேவதையை தன் கைகளில் தர மறுக்கிறார்கள் என அந்த வேர் மரத்திடம் போய் பார்க்க அனைவரும் அதிர்ந்தார்கள்.

சைலு யார் சொல்லியும் கோட்காமல் பச்சக் குழந்தையை அந்த கொட்டும் மழையில் துணிகளை சுற்றி அனைவரின் பின்னாலும் வலி பொறுத்துக்கொண்டு ஓடி வந்திருந்தாள்.

இவ்வளவு கலவரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த சைலு ஆகாஷ் குழந்தை எழுந்து அதன் பஞ்சு கைகளை நீட்டி அங்கு சகுந்தலாவால் எறிந்துக்கொண்டிருக்கும் மரத்தை பார்த்து "ங்க" என தாவி குதித்து பறந்து சென்றது சைலுவின் குழந்தை.

"ஐயோ குழந்தை நெருப்புகிட்ட போகுது" எனப் பதற்றம் அனைவரிடமும் தொற்றிக்கொள்ள சைலு குழந்தை நெருப்பை தொட்டு விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் நெருப்பு அணைந்து கரிய நிறம் பூசிக்கொண்டிருந்த மரம் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

சைலு குழந்தையை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, மரத்திலிருந்து பூக்கள் அக்னியை தொட, அக்னி மேல் பட்ட வெள்ளை பூக்கள் நீலமாக மாறிக் கொண்டிருந்தது.

வசி துடிதுடித்தான் "உன்னோடு வாழாத வாழ்க்கை வாழ இந்த பிறவியிலும் எனக்கு கொடுத்து வைக்கலை போல" என அக்னியின் கன்னத்தில் முத்தம் பதித்து இவர்களிருந்த வீட்டுக்கு நடந்து சென்றான்.

"அக்னி அவ்ளோ தான நீ போயிட்டயா? இனி என்னை பார்த்துக்க யாரு இருக்கா" என வாய்விட்டே புலம்பிக்கொண்டிருந்தான்.

இந்த மரத்தால் கூட அக்னி நிலாவை காப்பாற்ற முடியவில்லை எங்களை காப்பாற்ற உயிரை விட்டு நிம்மதியா போயிட்டா கடங்காரி" என ருத்ரா புலம்ப.

அனைவரிடமும் மவுனம் மட்டுமே எஞ்சியிருந்தது.

குழுந்தை மரத்தை சுற்றி பறந்து விளையாடி களைத்து அக்னி நிலா அருகில் பறந்து வந்தது.

அதிசய குழந்தையை பெற்றெடுத்ததுக்கு சந்தோஷப் படுவதாயில்லை, அக்னி அவனை காப்பாற்ற இறந்ததை எண்ணி வருத்தப் படுவதா என சைலு ஆகாஷ்க்கு சுத்தமா புரியாமல் மனம் முழுவதும் பாரத்தோடு ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அக்னியை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஆகாஷின் அடங்காத அழகு மகன் அக்னி பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு ஏதோ பெரிய மனிதன் போல அக்னியை பார்த்துக்கொண்டிருந்தான். மழை ஓய்ந்திருந்தது காற்று மெல்ல வீச மரங்களிலிருந்த மழை துளி அக்னி மீது பட பதறி அடித்து எழுந்தவள் முதலில் தேடியது வசியை தான்.

"அக்னி" என அதிர்ச்சியில் அழைக்க,

"அக்னி நிலா சுற்றி சுற்றி பார்த்து இங்க எதுக்கு வந்துயிருக்கோம் வசி" என குட்டிப்பையனை கையில் தூக்கிக்கொண்டாள்.

"ஆகாஷ் அண்ணா பாத்திங்களா, என் லட்டு பறக்குது" என சைலு குழந்தையை கொஞ்சி தூக்கிக்கொண்டு சைலுவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, ஒரு ஓட்டம் பிடித்தாள் காற்றை கிழித்துக்கொண்டு. சுற்றியிருக்கும் அனைவரும் மின்னல் வேகத்தில் மறைந்த அக்னியை பார்த்து வியந்து நிற்க.

அட அக்னியோட பவர் போல அப்போ நம்ம எல்லோருக்கும் பவர்யிருக்குமா? என மாற்றி மாற்றி முகத்தை பார்க்க.

ஆமா என்பது போல சைலு குழந்தை சிரிக்க.

சைலு ஆர்வமாக "இப்பவே செக் செஞ்சி பாத்துடரேன்" என குதுகலித்தாள். ஆகாஷ் சைலுவை முறைத்தான் இவ்வளவு போராட்டத்துல எனக்கு எவ்வளவு வலி இவ கஷ்டப்படுறத பாத்துட்டு ஆனா இவளை பாரு ஆட்டத்தை இந்த சைலு அடங்கமாட்டாள் என ஆகாஷ் மனதில் குறித்துக்கொண்டு.

"முதல்ல உடம்பை சரி செஞ்சிட்டு என்ன பவர்னு" கண்டுபிடிக்களாம் என சைலு குழந்தையை தூக்க ஆகாஷ் சைலுவை தூக்க சைலு முகம் செவ்வானமாக சிவந்திருந்தது.

அனைவரும் ஆகாஷை கலாய்த்தவாறு தன் இணையின் கையை இனி விடப் போவதில்லை என இறுக்க பிடித்துக்கொண்டு அவரவர் வாழ்கையை இனி வாழ பல கனவுகளோடு ஓடி வர.

வசி ஒரு நாற்காலியில் அக்னியின் சாலை பிடித்து தொய்ந்து அமர்ந்திருந்தான்.

"இனி நான் உன்னோட டேட்டே பார்க்க முடியாதுல தூங்கும் போது கூட இனி ரசிக்க முடியாதுயில்ல அவ்ளோ தான இரண்டு பேருக்கும் பிரிவுன்னு அந்த வீனாப்போன கடவுள் எழுதிவச்சிட்டானா?".
"எதுக்கு நிலா என்னை விட்டுட்டு போன நான் பாவம்ல. உங்க எல்லோரையும் காப்பாத்த தான் அந்த சகுந்தலாவை என் கண்பார்வையில் வைத்திருந்தேன். அதுவே தவறாகிடுச்சே அப்போவே அவளை நான் கொண்ணுயிருக்கனும்" என மேஜையில் தலை வைத்து கண் மூடி படுத்தான்.

அக்னி வந்த வேகத்தில், மரம் செடி கொடிகள் எல்லாம் ஏதோ புயல் காத்து அடித்தது போல அசைந்தது.

வசீ அருகில் வந்து நின்று. "வசீ" என அவன் தலையை வருடினாள் அக்னி தன்னவளின் தொடுதலில் உயிர் பெற்றவன்.

"என்... அக்னி... நிலா" என தாவி அணைத்துக்கொண்டு அக்னி முகத்தில் முத்த மழை பொழிந்துக்கொண்டிருந்தான்.
 
30... மாய நிலா

அனைவரும் உற்சாகமாக வீட்டில் நுழைய வசி அக்னி நிலா இருவரும் பாச மழை பொழிந்து கொண்டிருந்தார்கள்.

வசியும் அக்னியும் டயார்ட் ஆகும் வரை பேசிக்கொண்டிருக்க, நாலு ஆண்களும் சிறிது நேரம் தூங்கி எழுந்து சமைக்கத் துவங்கினார்கள்.

சைலுவின் குழந்தையை வைத்துக்கொண்டு பெண்கள் மூவரும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேகமாக தவழ்வது, பறப்பது என பிறந்த முதல் நாளிலிருந்து அதன் அட்டகாசத்தை ஆரம்பித்துக்கொண்டிருந்தது.

சைலு குழந்தையை நீங்களே பாத்துக்கோங்க என சாந்தி, ரோஸ், ஆதிரா மூவரும் குழந்தையை பிடிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சைலு தூங்கி எழுந்ததும் வசி அக்னி நிலா சிறிது நேரம் தூங்கி எழுந்தவர்கள், மறுபடியும் பேசத் துவங்கினார்கள்.

இருவரும் பேசிக்கொண்டு மூவரையும் வைத்து செய்துக்கொண்டிருக்கும் குட்டி தம்பியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓடி ஓடி கலைத்தவர்கள் குழந்தையை சைலுவிடம் கொடுத்துவிட்டு, கை எடுத்து கும்பிட்டார்கள் "ஆளைவிடுங்கடா சாமி குழந்தை மேலேயிருந்த ஆசையே போயிடுச்சி" என ராஜா, அர்ஜுன், ருத்ரா அதிர்ந்து அவரவர் காதலிகள் பக்கம் வந்து நின்று ஒரு குழந்தைக்கே இப்படி செய்தால் எப்படி இன்னும் நிறைய பேபிஸ் பாத்துக்கணும் இப்படி எல்லாம் முடிவு எடுக்கக்கூடாது, என தனது துணைவியாக வருபவர்களை சமாதானப் படுத்த.

அனைவரும் சாப்பிட அமர ருத்ரா அக்னிக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தான். அவன் மட்டுமில்லை வசியை தவிர அனைவரும் ஊட்டிவிட வசி கடுப்பாகி.

"டேய் போங்கடா… உங்க ஆளுக்கு ஊட்டிவிடுரதை விட்டுட்டு ஏன்டா என் கூடும்பத்தை சித்திரவதை படுத்துறிங்க பாவிகளா" என அக்னி நிலாவை தன் கை வளைவுக்குள் வைத்துக்கொண்டான்.

"வசி எங்க அண்ணா எனக்கு ஊட்டிவிட்டான், நீ போய் உனக்கு தான் நாலு தங்கச்சி இருக்குயில்ல போய் ஊட்டிவிடு" என அக்னி நிலா தன் அண்ணன்களுக்கு, ஊட்டிவிட.

வசி தன் நாலு தங்கைகளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டிருக்க.

இங்கு ஒரு பாச மழை தங்களை குட்டி தம்பிக்கு தூங்கிக்கொண்டிருந்தவன் அட்டகாசம் செய்யத் துவங்க, இந்த முறை ஆண்கள் அவன் பின்னால் ஓடத் துவங்கினார்கள்.

இப்படியே இவர்கள் நாட்கள் குட்டி தம்பியிடம் ஒரு பேராட்டமாக சென்றது.

இரவு வந்ததால் தான் ராஜா, ஆகாஷ்க்கு ருத்ரா, அர்ஜுன், வசிகரன் மூவரும் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார்கள்.

"இவனுங்களுக்கு முதலில் கல்யாணம் செய்து வைக்கனும், இவனுங்களுக்கு பிரித்துவைப்பதே வேலையாக இருக்கு" என யோசித்து, இதுக்கு ஒரு வழி செய்யனும் என எண்ணினான்.

ருத்ரா… சாந்தியை அருகில் அழைத்து, "அடியே என்ன இரண்டு நாளா ஒன்னும் பேசாமயிருக்க என்னை பிடிக்கலையா?"

"அது… அது… நான் தூங்கனும்" என சாந்தி ருத்ராவிடமிருந்து நழுவிச் சென்றாள்.

ருத்ரா எவ்வளவு முறை பேச முயற்சித்தும் சாந்தி முகம் கொடுத்துகூட பேசவில்லை.

அக்னி வசி கஷ்டப்பட்டு பிரித்து அவர்களது அறைக்குள் அனுப்புவதற்குள் ருத்ராக்கு தான் போதும்போதுமென்றானது.
அடுத்து அர்ஜுனை அலேக்காக தூக்கிக்கொண்டு அவன் அறையில்விட்டுவிட்டு, அடுத்து ருத்ரா படுக்கும் போது விடிந்திருந்தது.

"நாளைக்கே இதுக்கு ஒரு வழி செய்யனும்" என ஆகாஷ் மற்றும் ராஜா ஒரு முடிவோட படுத்தார்கள்.

அடுத்த நாள் எல்லோரும் டைம் டேபில் போட்டு ஓடியும் பறந்தும் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஆகாஷ் சைலு மகனுக்கு பெயர் சூட்டும் விழா, ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்கும் குழந்தையை பிடித்துக் கொண்டும், அவன் இவர்கள் எல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல மீண்டும் நழுவிக் ஓடிக்கொண்டும் இருந்தவன், பசிக்கும் நேரம் மட்டும் சமத்தாக சைலுவின் கைகளுக்குள் வந்து படுத்துவிடுவான், சைலுவும் தன் மகனின் சுட்டித்தனத்தை பார்த்து,

"சமத்துப்பாப்பா" என கொஞ்சி பசியாற்றிவிட்ட மறு நொடி அனைவரையும் ஓட வைத்துக்கொண்டிருந்தான்.

அக்னி நிலா அத்தையிடம் சமத்தாகயிருக்கும் குட்டியை பார்த்து அனைவரும் வியந்து நின்றார்கள். குழந்தை அக்னியிடம் சமத்தாயிருக்கான் அவளிடம் விட்டுவிடலாம் என நினைக்க இந்த வீனாப்போன வசி அக்னியை விட்டாள் தானே, இன்றே உலகம் அழிந்துவிடுவது போல குரங்குக் குட்டியாக அக்னியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தான் வசி.

அனைவரும் அந்த குட்டிப்பையனை வைத்து ஒரு வழியாக தயாராகி வர.

இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருந்த அந்த குட்டி இம்சை, விழா தொடங்கும் போது தனது மாய விழிகளை விழித்துக் கொண்டது.

அக்னியும், வசியும் ஒரு ஓரமாக ஒதுங்கி தங்களது காதல் வசனத்தை பேசிக்கொண்டிருக்க.

சாந்தி ருத்ராவை பார்த்து ஒதுங்கி ஒதுங்கி போய்க்கொண்டிருந்தாள்.
குழந்தையை பார்ப்பதற்க்கே அனைவருக்கும் நேரம் சரியாகயிருக்க ருத்ராக்கு சாந்தியின் இந்த விழகல் பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் போனது.

சைலுவும், ஆகாஷும் தொட்டிலை அலங்காரம் செய்கிறேன் என்ற பெயரில் இவள் ஒரு அலங்காரம் செய்ய ஆகாஷ் அதனை கலைத்துக் கொண்டிருந்தான். ஆகாஷின் சேட்டை ஒரு எல்லையை கடக்க கோபம் கொண்ட சைலு பக்கத்தில் எதாவது அவனை அடிக்க கிடைக்கிறதா என்று பார்க்க அருகில் தொட்டியும், பூக்களும் தான் இருந்தது.

தொட்டிலை எடுத்து அடிக்க முடியாது என நினைத்தவள், டைனிங் டேபிலில் இருந்த பெரிய சைஸ் சொம்பு கண்ணில் பட, 'இந்த சொம்புல நாலு அடி அடிக்கனும் ஆனா எழுந்திரிக்க சோம்பேறியாக இருக்கே' என மனதில் நினைத்ததை செயல்படுத்த முடியாமல் சைலு ஆகாஷ் கலைத்து வைத்திருந்த மலர்களை மீண்டும் சரி செய்துகொண்டிருக்க.

ஆகாஷின் திடிர் அலறலை கேட்ட சைலு திரும்பிப் பார்க்க அவனின் நிலையைக்கண்டு அதிர்ச்சியில் சைலு தனது முட்டை கண்கள் கீழ் விழுந்துவிடும் அளவிற்க்கு விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த கண்கொள்ளா காட்சியை.

முழித்திருக்கும் குழந்தையை ஆதிராவும் சாந்தியும் இருக்க பிடித்துக்கொண்டு "என்ன சத்தம் ஆகாஷ் எதுக்கு கட்டையை எடுத்து யாரோ அடிப்பது போல அலரிக்கொண்டிருக்கிறார்" என வெளியே வர‍, ஆகாஷ் கட்டையாலில்லை பூஜைக்கு வைத்திருந்த பெரிய சைஸ் சொம்பால் அடி வாங்கிக்கொண்டிருந்தார், இதில் என்ன ஆச்சரியம்யம் என்றால்.

சொம்பு தானாக நான்கு அடி அடித்து முடித்துவட்டு சமத்தாக அதனிடத்தில் அமரந்துகொண்டது காற்றில் மிதந்து.

"இங்க என்ன நடக்குது" என ஆகாஷ் தலையை அழுத்தி தேய்த்துக்கொண்டிருக்க, சைலு பூனைக்குட்டி போல பதுங்கி செல்வதை பார்த்த ஆகாஷ் "சைலு எங்க எஸ்கேப் ஆக போற எனக்கு உன் மேலத்தான் சந்தேகமா இருக்கு".

"சாரி ஆகாஷ் நான் வேணும்னு இப்படி செய்யலை மனசுல சும்மா தான் நினைத்தேன் இப்படி ஆகிடுச்சி" என சொன்னதும்

ருத்ராவும் ராஜாவும் அருகில் வந்து "ஏய்… சைலு உன்னோட பவர் இது தானா" என குதுகலித்தனர்.

"ஆமாவா… செம" என பக்கத்திலிருக்கும் தொட்டிலை, தூக்க மனதில் நினைத்தால் சைலு. அவள் நினைத்தது அப்படியே நடக்க, மற்ற பெண்களுக்கும் இந்த மந்திர சக்தியை பற்றி ஆர்வம் வர அனைவரும் மனதில் ஏதேதோ நினைக்க, அந்த வீட்டிலிருக்கும் முக்கால் வாசி பொருட்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது.

அவரவர் மனதில் நினைத்தது பறந்து முடித்து அதன் முன்னிருந்த இடத்துக்கு மீண்டும் சமத்தாக அமர்ந்து கொண்டது. அக்னியை தவிர அனைவருக்கும் இந்த சக்தியிருக்கா அக்னிக்கும் ருத்ராக்கும் இருக்கும் சக்தி அவர்களுக்கே தெரியாது என்னிலடங்காத சக்தியோடு பிறந்திருந்தார்கள் இருவரும்.

மற்ற மூவரும் இதை சோதித்து பார்த்தார்கள்.

வசி, ராஜா, ஆகாஷ், அர்ஜின் பொருட்களை தூக்க மனதில் நினைக்க.

ஒருவர் நினைத்த பொருள் கூட அசையவில்லை எங்களுக்கு இந்த சக்தியில்லை போல என எண்ணிக்கொண்டிருக்கும் போது வசி நினைத்த பொருள் அந்தரத்திலிருந்தது.

அப்போ… இவங்க மூனு பேர், மற்றும் வசிக்கு ஒரே சக்தியா, அப்போ இவங்களுக்கு ஒரு சக்தியுமில்லையா?" என தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க.

"நான், என் தங்கைகள் எல்லாம் புன்னியம் செய்தவர்கள் அதான் பாத்திங்களா சக்தி எல்லாம் கிடைத்திருக்கு" என வசி தன் பாச மலர்களுடன் உறவாடிக்கொண்டிருக்க.

மற்ற மூவருக்கும் அக்னி அன்று ஓடியது நினைவுக்கு வந்திருந்தது. ஆகாஷ், ராஜா, அர்ஜுன் ருத்ராவையும், அக்னியையும் ஒரு அழுத்த பார்வை பார்க்க.

இருவரும் ஆம் என்பது போல தலையாட்ட. ஐம்பது பேரும் கைகளை கோர்த்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த காட்டை ஒரு ரவுன்ட் அடித்து போன வேகத்தில் திரும்பிவந்து நிற்க வசி சொன்ன டையலாக்கை இவர்களுக்கு திரும்பி சொன்னார்கள். புதிதாக சக்தி கிடைத்திருக்க சும்மாவாயிருப்பார்கள்.,
முதலில் குழந்தைக்கு பெயர்வைக்க அக்னியை அழைக்க.

"ஐயோ ஆகாஷ் அண்ணா நான் எதற்க்கு ஆளைவிடுங்க நீங்களே வைங்க பெயர்" என அக்னி நிலா மறுத்துவிட சைலு வழுக்கட்டாயமாக அக்னியை பிடித்திழுத்து நிற்க வைத்து. "ஒழுங்கா உன் மருமகனுக்கு நியே பேர்வச்சிட்டு போ" என தள்ளிவிடாத குறையாக குழந்தை பக்கம் நிற்க வைக்க.

"முன்னவே சொல்லியிருந்தா நல்ல பேர் செலக்ட் செய்து வச்சிருப்பேன்ல" இருவரையும் முறைத்துவிட்டு அக்னி நிலா "என்ன பேர்வைக்கலாம்" சிறிது நேரம் யோசித்தவள். ஆகாஷ் சைலு பெயரை எதாவது மாற்றி வைத்துவிடலாம் என நினைக்க ஒன்னும் அக்னி நிலாவுக்கு தோன்றவில்லை.

"ரிஷி தேவ்" என மூன்று முறை குட்டி பையன் காதில் சொல்ல அனைவருக்கும் இந்த பேர் பிடித்துப் போய் அனைவரும் ரிஷியை தூக்கி சுற்றினார்கள்.

இங்கு விழா முடிந்திருக்க அனைவரும் வேர் மரமிருக்கும் இடம் நோக்கி செல்ல ஆச்சரியமாக கண்கள் அனைவருக்கும் விரிந்து கொண்டது.

வண்ணத்துப் பூச்சிகள் தனது இரக்கையை விரித்து வேர் மரம் முழுவதும் சுற்றித்திரிந்தது புதிதாக முளைத்திருந்த வண்ணத் தொட்டில் வேரின் விழுதுகளில் பட்டுத்துணியால் ஒரு மெத்தையோடு தொட்டிலுமிருந்தது. அதில் ரிஷியை படுக்க வைக்க, அனைவரையும் அந்த வேர் மரம் வானத்தில் மரத்தோடு வானில் ஒரு உலகத்துக்கு தூக்கிச் சென்றது பறந்துக்கொண்டிருந்த அந்த மரம் ஆகாயத்தில் ஒருயிடத்தில் நிற்க.

மேகத்தின் நடுவில் புதுயிடத்தை பார்த்த ரிஷி அந்த மேகத்தின் நடுவில் தனது கை கால்களை அசைத்து விளையாடத் துவங்கினான். மாலை நேரம் முடிந்து நட்சத்திர தேவதைகள் இவர்களை சூழ்ந்து கொண்டது.

நிலாவை இவ்வளவு அருகில் பார்த்த ருத்ரன் தனிமையில் நின்று தனது நிலா தேவதையை ரசித்துக்கொண்டிருக்க.

பின் ஏதோ ஒரு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்த ருத்ரன் கண்ணில் சாந்தி பட. "ஏய் எங்க போற" என நழுவிச்செல்ல நினைத்த சாந்தியை பிடித்துக்கொண்டு.

"இவ்வளவு பக்கத்தில் நீ இதுக்கு முன் நிலா பாத்திருக்கியா? இந்த வெள்ளை நிலா அவ்வளவு கொள்ளை அழகு என் அருகிலிருக்கும் இந்த அழகியை போல" என நிலாவை ரசிவப்பதை விட்டுவிட்டு ருத்ரன் சாந்தியை ரசித்துக்கொண்டிருந்தான்.

சாந்தி அவனது அணைப்பிலிருந்து அமைதியாக விடுபட நினைத்து தோற்றுத்தான் போனால் அவளது கரங்களை விடுபட போராட போராட ருத்ராவின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது.

"சாந்தி… என்னாச்சி எதுக்கு இந்த விலகல், இன்று நீ பதில் சொல்லாமல் நகர கூட நான் விடப்போவதில்லை" என இன்னும் நெருங்கி அணைத்துக்கொண்டான்.

ஆகாஷ் தத்தமது ஜோடிகளோடு சிதறியிருக்கும் அனைவரையும் அழைத்தான்.

"எல்லாம் இங்க ஓடி வாங்க முக்கியமான விசயம் சொல்லனும்" என அவன் கொண்டு வந்திருந்த பையை ஒரு மரக்கட்டை அருகில் வைத்திருந்தான்.

ருத்ரா… சாந்தியின் பிடியை தளர்த்த சாந்தி வேகமாக விளகியிருந்தாள்.
ரொம்ப பன்னாதடி நாளைக்கு கல்யாணம் ஆனதும் என் கூட என் அறையில் தான் இருக்கனும் அப்போ கவனிச்சிக்கிறேன்" என அனைவரும் இருக்கும் இடத்துக்கு வந்து நின்றான் சாந்தியுடன்.

"என்னால உங்களுக்கு இரவு பகலா காவலிருக்க முடியாது, அதனால உங்க எல்லோருக்கும் இன்று நிச்சயம் நாளை திருமணம்" என சொல்ல.

முதலில் எதிர்ப்பு தெரிவித்தது வசி தான் "மத்தவங்களுக்கு வேணும்னா கல்யாணம் செஞ்சிவை எனக்கு வேண்டாம் நாங்க இன்னும் குறைஞ்சது இரண்டு வருசமாச்சி லவ் செய்யனும்" என வசி ஒற்றைகாலில் நின்றான்.

"நீ சொல்றது எல்லாம் கேட்க முடியாதுடா நான் தூங்கி எவ்வளவு நாள் ஆச்சி தெரியுமா, ஆசையா என் பொண்டாட்டிக்கிட்ட பேச கூட விடாம என்னை வச்சி செஞ்சிட்டிருக்கீங்க என்னை" என பொறிந்த ஆகாஷ், மூன்று ஜோடி கைகளுக்கும் மோதிரம் மாற்றி மாற்றி கொடுக்க
சாந்தி தான் தயக்கத்தோடு வாங்கி நின்றிருந்தாள்.

ருத்ராக்கு அவளது தயக்கம் புரிந்தது ஆனா அந்த தயக்கம் எதை நினைத்து, எதுக்குனு தான் சுத்தமா புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான்.

முதலில் அர்ஜுன் ஆதிரா ஜோடி கைகளில் மோதிரம் மாற்றிக்கொள்ள ஆதிரா வெட்கப்படுவதை பார்த்த அனைவரும் அவளை கலாய்த்த முகம் பிங்க் நிறம் பூசும் வரை கலாய்த்து கடைசியாக போனால் போகுது பிழைத்து போ என விட்டுவிட்டார்கள்.

அடுத்து வசி தயங்கி நிற்க அவனை நெருங்கி நின்ற அக்னி நிலா "போன ஜென்மத்தில் நடந்தது போல எதும் நடக்காது நான் சொன்னா கூட நம்ப மாட்டியா?" என வசியை சமாதானப் படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்ட மறு நொடி சுற்றி இவ்வளவு பேர் இருப்பது எதையும் கண்டுகொள்ளாமல் அக்னியின் இதழ்களை சிறைபிடித்திருந்தான்.
இங்கு நடக்கும் செயலை பார்த்து அனைவரும் கண்களை மூடிக்கொள்ள வசி அவன் வேலையை முடித்ததும். "முடிஞ்சிடுச்சி எல்லோரும் கண்ணை திறங்க" என சொல்ல அக்னி தான் கூச்சத்தில் வசி பின் சென்று மறைந்துகொண்டாள்.

அடுத்து ருத்ரா சாந்தி முறை வர, சாந்தி அவள் கைகளிலிருந்த மோதிரத்தை தயங்கிக் கொண்டே அருகிலிருந்த அறுபட்ட மரத்தின் மீது வைத்துவிட்டு.

"எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என சொல்லிவிட்டு தனியாக நிற்க்கும் நிலாவை பார்த்து உன்னை போல நானும் தனியாக வாழ ஆசைப்படுகிறேன்" என இரு சொட்டு கண்ணீர் அவளது கன்னத்தில் கோடு இழுத்திருந்தது.

சாந்தி இப்படி சொல்லுவாள் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை, ருத்ரா முதலில் அதிர்ந்தாலும், அவளை சமாதானப் படுத்த அனைவரும் செல்ல எந்தரிக்கும் போது.

"இருங்க நீங்க எல்லோரும் நான் என்னான்னு கேட்டுட்டு வரேன்" என ருத்ரா சாந்தி அருகில் வந்து நிற்க.

"இப்போ உனக்கு என்ன பிரச்சனை?" என ருத்ரன் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க.

"எனக்கு உன்னை பிடிக்கலை போதுமா" என சாந்தி வாயிலிருந்து வந்த வார்த்தை ருத்ராவின் செவியை அடைவதற்க்குள்.

ருத்ரா சாந்தி கன்னத்தில் அறைந்தது சிறிது தூரம் நின்றிருந்த அனைவருக்கும் கேட்டது.
 
மாய நிலா 31

சாந்தி அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றிருக்க.

அமைதியாக இருக்குற ருத்ரா என்னும் புயலை சீண்டியது அவளது அமைதி.

"எப்படி நிக்கிரா பாரு… கல்லு மாதிரி உனக்கு ஒரு அடி எல்லாம் பத்தாது இன்னும் நாலு அடிவிடனும்" என ருத்ரா மீண்டும் அடிக்க கையை ஓங்க… சாந்தி இவ்வளவு நேரம் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அழுகையை ஒரே மூச்சாக அழுக, உதட்டை சுழித்துக் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

சாந்தி அழுக துவங்கும் முன் "இந்த கண்ணுலயிருந்து தண்ணீ கீழ விழுந்தது வை… மகளே… அடி பிச்சி எடுத்துடுவேன்" என ருத்ரா விரல்களை நீட்டி எச்சரிக்க. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சாந்திக்கும் கோபம் எல்லையை கடக்க,
ருத்ராவின் நீட்டிய ஆள் காட்டி விரலை, பிடித்து அவளது பல் தடம் பதிந்து ரத்தம் வரும் அளவுக்கு கடித்து வைத்தாள்.

"ஆஆஆ…" என ருத்ரா அலற,

"அதான் சொல்றேன்ல… எனக்கு உன்னை பிடிக்கலைனு, எதுக்குடா மிரட்டுர, அடிக்கர, எவ்வளவு தைறியமிருந்தா இவ்வளவு பெரிய சி. பி. ஐ மேலையே கையை வைப்ப" என்ன தான் சாந்தி மற்ற பெண்களை விட உயரமாகயிருந்தாலும் ருத்ராவின் அருகில் குட்டியாக தான் தெரிவாள்.

அவள் குழந்தைத் தனமான கோபப்பேச்சில் மயங்கிய ருத்ரா, அவளை அணைத்துக்கொண்டான். சாந்தி வீரவசனம் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் காற்றோடு கலந்து, இப்ப அவள் வாயிலிருந்து காற்று மட்டும் தான் வந்தது.

"ஏய் நீ எதுக்கு ஒதுங்கி போரன்னு கண்டுகொண்டேன்".

'என்னாது… கண்டு பிடிச்சிட்டானா!" என சாந்தி கண்கள் விரிந்துகொண்டது, அணைத்திருந்த ருத்ரா சற்று விலகி கையனைவில் வைத்துக்கொண்டு சாந்தி முகத்தை பார்த்து.

"நான் உன்னை தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்… புரியுதா நீதான் என் நினைவு மிஸ்டர் ஜீரோக்கிட்டையே ஒத்துக்கிட்டியே, எப்படி இருந்தாலும் காதலிப்பேன்னு அவனும் நானும் வேறயில்லை டி தங்கம் புரிஞ்சிக்கோ. அவள் அக்னியிடமிருந்து என்னை பிரிக்க போட்ட சதி… ஆனா அந்த சதியாலத்தான் என் தேவதையை கண்டுபிடித்தேன்" என அன்று கடைசியாக அக்னி நிலா முயலாகயிருந்த போது நடந்த கோர சம்பவத்தை நினைத்துப் பார்த்தான்.

ருத்ரன் அன்று வழக்கம் போல லேபுக்கு கிளம்பி அங்கு அக்னியை தேட அவள் இருக்கும் அடையாளம் எதுவுமில்லாமலிருந்தது.

அக்னியை தேடிக்கொண்டு வரும் போது சகுந்தலா அந்த வேர் பற்றிய ரகசியத்தையும், அதனின் தன்மையை மாற்றும் பணி ஐம்பது சதவிதம் முடிந்திருப்பது என பேசிக்கொண்டிருக்க, ருத்ரா காதில் அந்த திட்டம் தெளிவாக விழுந்தது. இது பெரிய ஆபத்து என நினைக்கும் போதே வந்த சுவடு தெரியாமல் விலகிவிட நினைத்த ருத்ராவை சகுந்தலா பார்த்து பதற்றமடைந்ததால் 'ஐயோ இவனுக்கு விசயம் தெரிந்தால் அவ்வளவுதான் அனைத்தும் மொத்தமாக கெட்டுவிடும்' என சகுந்தலா ருத்ராவை ஆட்கள் வைத்து கட்டிப்போட, அவனது நினைவுகளை அழிக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்க.

சகுந்தலாவின் பி. எ பதற்றமா அவனது கையில் அக்னி நிலா (ரூபியை) லேபிலிருந்து தூக்கி வந்திருந்தான். நேற்றிரவு அக்னியை போட்டுத் தள்ள சகுந்தலா பிளான் போட்டிருப்பதை தெரிந்துக்கொண்டவன். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யாருக்கும் தெரியாமல் அக்னியை தூக்கிவந்துவிட்டான், இங்கு சகுந்தலா ஒரு திட்டம் போட்டாள்.

இரண்டு பேரையும் ஒன்னா போட்டு தள்ளிடலாம் என "டேய் அந்த ரூபி முயலை எடுத்துட்டு வாங்கடா, இரண்டு பேரையும் சேர்த்து சாகடச்சிடலாம்" என சொல்ல.

ருத்ராக்கு தூக்கிவாரி போட்டது, "பாவம் அந்த சின்ன உயிர் உன்னை என்ன செய்தது விட்டுடு இல்லைனா, உன்னை கொல்ல கூட நான் தயங்க மாட்டேன்" என ருத்ரா கத்திக்கொண்டே கட்டப்பட்ட கைகளிடமிருந்த கயிரை அகற்ற முயற்சி செய்துகொண்டிருந்தான்.

ரூபியை எடுத்து வரச் சென்றவன், ரூபியில்லை என்று வந்து சொல்ல.

"எல்லாம் இந்த பி. எ வேலையாதானிருக்கும்" என அவனை டிராக் செய்ய சொல்ல.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனைவரும் அந்த பார்க்குக்கு வர, ருத்ராவையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு போனால் சகுந்தலா.

ருத்ரா கார்க்கு உள்ளே ஏறும்முன் அவனுக்கு பிரியமான வேலையாளிடம் வசிக்கு அழைத்து இங்கு வர சொல்லிவிடு என சொல்ல. வசிக்கும் செய்தி சென்றதும் ருத்ராவின் போனை டிராக் செய்து அந்த பார்க்குக்கு வந்துவிட.

சகுந்தலா பி. எ, ரூபியின் காதுகளை பிடித்து கொண்டு அருகிலிருந்த ஒரு மரத்தில் அடிக்க ரூபி துடிதுடித்தாள்.

அக்னி நிலா மிருகமாகயிருந்து கதறுவது காரில் கட்டப்பட்டிருந்த ருத்ராவிற்க்கு தெளிவாக கேட்டது "ருத்ரா வலிக்குது இந்த பிசாசு ராட்சசி என்னை மரத்தில் தூக்கி அடிக்கிறா," என அக்னி குரலில் ருத்ராவுக்கு கேட்க.

"அக்னி என்னாச்சி என பதறினான்".

அக்னியும் நான்தான் ரூபியும் நான் தான் என சொல்லி ரூபி உயிர் பிரிந்திருந்தது.

அப்போது தான் இந்த பார்க்கில் நுழைந்த வசி ஒரு அழகான குட்டி முயலை அடித்தே சாகடித்த இந்த ராட்சசியை உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டனும் என நினைத்தவன்.

"ஏய் யாரு நீங்க, எதுக்கு இப்படி வாயில்லா மிருகத்தை துன்புருத்துறிங்க" என வசி குரல் கேட்ட சகுந்தலா முதுகு தான் தெரிந்தது அவனுக்கு.

"நான் பேசிட்டு இருக்கேன் அங்க எங்க திரும்பியிருக்க... திரும்பு" என சகுந்தலாவிடம் வசி சொல்ல.
'வசி இப்போ நம்மலை பார்த்தா அனைத்தும் கெட்டுப்போய்டும்' என அவசரமாக அவள் கைப்பையிலிருந்த ஒரு தாரவத்தை எடுத்து வசி முகத்தில் வீச தற்காலிகமாக அவனது பார்வை பறிக்கப்பட்டிருக்க.

சகுந்தலா… அவளது பி. எ வையும் இறந்துகிடந்த ரூபியையும் விட்டுட்டு சென்றிருக்க.

சகுந்தலா பி. எ அருகில் வந்து வசி எறிச்சலில் தள்ளாடிக் கொண்டிருந்தான் "சார் ஒரு வாரத்தில் சரியா போய்டும்" என் கூட வாங்க என வசியை ஒரு இருக்கையில் அமரவைத்துவிட்டு பி. எ அக்னி நிலாவை அந்த பார்க் மூலையில் புதைத்தான், இவை அனைத்தும் தூரமிருந்து ருத்ரன் கைகள் கட்டப்பட்ட நிலையில் பார்த்திருந்தான்.

நண்பனுக்கு உன்னால் இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என நினைக்க பி. எ வசியை பார்த்துப்பான் என் ரூபி அக்னி நிலாயில்லை. கடைசியாக கூட பார்க்க முடியாத பாவி நான் அக்னி முகம் எப்படியிருக்கும் என்று கூட தெரியவில்லை ருத்ராக்கு.

சகுந்தலா ருத்ரா அருகில் அமர்ந்தவள் அன்று நடந்த ருத்ராவின் நினைவுகளை மொத்தமாக எடுத்திருந்தாள். ரூபி சோதனைக்கு புதிய மருந்து செலுத்தும் போது இறந்துவிட்டாள் என அவன் மூளையில் பதிய வைத்திருந்தாள்.

அதன் பிறகு ரூபியை நினைத்து வருத்தப்பட்டவன் அவனது தினமும் செய்யும் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தான்.

ருத்ரா முகத்தில் வந்துபோகும் உணர்ச்சிகளை படித்த சாந்தி "ஜீரோ ஒன்னுமில்ல ஒன்னுமில்ல" என அவனை ஆறுதல் படுத்த அருகிலிருந்த தண்ணீர் எடுத்து குடிக்கவைத்தபின்.

"இந்த ஜீரோவை ஏத்துப்பியா…" ருத்ராவின் வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டவள், சரி ஆனா என்னை எப்போதும் மனுசனா இருக்கனாலத்தான் கட்டிக்கிட்டைன்னு சொல்லிக்காட்ட கூடாது" என சாந்தி அவளது பயம் கலந்த குரலில் தயக்கத்தோடு சொல்ல.

"மக்கு மாமி வா" என மகிழ்வாக இந்த ஜோடியும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மோதிரத்தை மாற்றிக்கொள்ள.

அந்த இரவு ஆட்டம் பாட்டம் கும்மாலமாக இந்த இரவு நீண்டுகொண்டே போனது.

ஆகாஷ் தான் இவர்களை பிரித்தெடுத்து ஒழுங்க படுங்கபோய் இல்லை கல்யாணத்தை கேன்சல் செஞ்சிடுவேன்" என அனைவரையும் மிரட்ட.

வசி மனதில் அப்படி ஒரு ஆனந்தம்... "சரிடா சீக்கரமா நிறுத்து, ஒரே டென்ஷன்". "மகனே உனக்கு மட்டும் கல்யாணம், நீ எது செய்தாலும்" என சொல்ல அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கும் போதே மாய புகை ஒன்று அனைவரையும் ஆக்ரமித்து இவர்கள் வீட்டில் கொண்டு சேர்த்தது.

அடுத்தநாள் அழகாக விடிந்தது, அனைவரும் உற்சாகமாகயிருக்க, என்ன தானிருந்தாலும் இந்த இனிமையை யாராலும் விவரிக்க முடியவில்லை அனைத்தும் சரியாகி இரண்டு ஜென்மத்தின் வாழ்வை தன் துணையோடு வாழ காத்துக் கொண்டிருக்கிறார்கள் அனைவரும்.

வசி அழிச்சாட்டியம் செய்துக்கொண்டிருந்தான்.
"டேய் நேரா கல்யாணம் செய்தா நல்லாயிருக்காது டா. எப்படி எப்படியோ காதலித்து பொழுதை கழிக்க திட்டமிட்ட என் ஆசையில் மண் அள்ளி போட்டுட்டிங்களே, என கல்யாணத்துக்கு தயாராகமாட்டேன் என அடங்காமல் வீட்டை வட்டமடித்துக் கொண்டிருக்க, பின் இவனை துறத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் ஆகாஷும் அவனை இழுத்துபிடித்துக்கொண்டு பட்டுசட்டை வேட்டி மாற்றிவிட்டு மணமேடைக்கு இழுத்து வந்திருந்தார்கள். குடும்ப உறுப்பினர் மற்றும் சில நண்பர்களை மட்டும் அழைத்து மூன்று ஜோடியும் சிறப்பாக திருமணம் நடக்க இரண்டு தினங்கள் வீட்டில் சொந்தங்கள் நிறைந்து வழிந்தது. முதலிரவை ஒரு வாரம் தள்ளிவைத்து, புது மணத் தம்பதிகளின் சாபத்தை அனைவரும் வாங்கிக்கொண்டிருக்க.
இப்படியே நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க சொந்தங்கள் அனைவரும் கிளம்பிவிட, இத்தனை நாள் தங்களது சக்தி தெரிந்தும் பயன் படுத்த முடியாமல் அனைவரும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

அனைவரும் கிளம்பிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு மூன்று பெண்கள், வசி வீட்டிலிருக்கும் அனைத்து பொருட்களையும் பறக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.

வீடே எதோ ஒரு போர்கள பூமிபோல காட்சி அளிக்க அக்னி நிலா குடும்பத்தை சேர்ந்தவர்கள்‍, "போங்கடா சிறு பிள்ளை தனமா ஆட்டம் போட்டுட்டிருக்கிங்க" என கல்யாண கலைப்பில் படுத்து தூங்கிக்கொண்டிருக்க.

அக்னி அருகில் படுத்துக்கொண்டு சமத்தாக தூங்கிக்கொண்டிருந்தான் ரிஷி. சக்தியை பயன்படுத்தி டயார்டு ஆகி படுத்து விட்டார்கள்.

அந்த நாள் அப்படியே நகர அடுத்த நாள் ஆகாஷ் அனைவரையும் ஆளுக்கு ஒரு இடத்துக்கு டிக்கட் போட்டு அனுப்ப படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். வீட்டை அளங்கோளப் படுத்தி விட்டு தான் சென்றிருந்தார்கள்.

அனைவரையும் கார் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் வீட்டை தலைகீழாக மாற்றிவிட்டு தான் சென்றிருந்தார்கள்.

ஆகாஷ்க்கு வீட்டின் நிலையை பார்த்து கலங்கி நின்றார்கள் அது பத்தாது என தூங்கிக்கொண்டிருந்த ரிஷி எழுந்து சுற்றலில் விட்டுக்கொண்டிருந்தான்.

ஆகாஷ் நிலையை பார்த்த சைலு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

"மகனே என்னை எப்படி சுத்தலில் விட்ட அதுக்கு வட்டி போட்டு என் மகன் உனக்கு கொடுக்கயிருக்கான்" என சைலு ஆகாஷின் நிலை பார்த்து அகமகழ்ந்து நின்றாள். எப்படி எப்படி எல்லாம் என்னை டார்ச்சர் செய்த, அதுமட்டுமில்லாமல் காதலிச்சி நடிச்சி கஷ்டப்பட்டு கல்யாணம் செய்தா பெரிய இவன் மாதிரி ஒரு வருசம் டைம் கேட்டு மயக்கத்துல எல்லாம் முடிச்சிட்டு பாவிபயன் நான் லூசு போல கனவுல நடந்ததுக்கு எப்படி பிரக்னென்ட் ஆனேன்னு குழப்பிவச்சி, குடிகாரிக்கு ரோட்டில் போரவரவங்ககிட்ட எல்லாம் பைத்தியம் போல புலம்பி சொல்லும் போதே இப்படி மூச்சி வாங்குது. எனக்கு எல்லாம் நடக்கும் போது எப்படியிருந்திருக்கும் என சைலு சொல்லிக்காட்ட, ஆகாக்ஷ்க்கு அவளின் நிலையை நினைத்துப் பார்க்கும் போதே மனதில் ஒரு மலைப்பு வந்தது.

சைலுவை ஒரு சுழற்று சுழற்றி "நல்லா வச்சி செஞ்சிட்டேன்ல, உனக்கு நிறைய கஷ்டமில்ல" என ஆகாஷ் உண்மையில் வருந்தமாகயிருந்தான்.

"அதுக்கு தான் இந்த தங்கக்கட்டி அவனோட அப்பாவை டார்ச்சர் செய்ய வந்துட்டானே" என சைலு தன் குழந்தை அடுத்து எங்கு தாவி ஓடலாம் என தனது மின்னும் கண்களை மின்ன சொல்ல. அவனும் அடுத்த இலக்கை நோக்கி பறக்க மகன் ஆகாக்ஷ்க்கு டிமிக்கி கொடுத்து ஓடுவதை ரசித்துக்கண்டிருந்தாள் சைலு.

ஆகாஷ் இங்கு நடந்துக்கொண்டிருந்த கலவரத்தில் அனைத்து பொருப்பையும் மனோ இருவரையும் அழைத்திருந்தான்.

சைலு போனை எடுத்து பேச, "சொல்லுடா இப்போ தான் போன் செய்ய தெரிந்ததா குழந்தை வச்சிட்டு இங்க ஒருத்தி கஷ்டப்பட்டுட்டு இருக்காலேன்னு எதாவது அறிவுயிருக்கா டா" என பொறிந்து தள்ள.

"சைலு என்னை திட்டுறதுயிருக்கட்டும் என்னை வந்து காப்பாத்து, ரொம்ப ஆபத்து" என அவன் பதட்டமாக பேசிக்கொண்டிருக்கும் போதே மனோவின் போன் கட் ஆனது.

மனோக்கு என்ன தான் சரக்கு அடித்து தள்ளாடிய போது தோள் கொடுத்த நண்பனாயிற்றே, அவனுக்கு உதவி செய்ய ஆகாஷையும் ரிஷியையும் தூக்கிக்கொண்டு பதற்றத்தோடு கிளம்பப் போகும் வழியில் மனோக்கு அழைத்துக்கொண்டே போக தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக பதில் வந்துகொண்டிருந்தது.

மனோக்கு என்னாச்சி?
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom