Bindu sarah
Member
- Messages
- 59
- Reaction score
- 54
- Points
- 18
15 மாய நிலா
இங்கு நான்கு பேர் ஆபத்தை நோக்கி பயணம் மேற்க்கொண்டார்கள்.
ஒன்னும் பெருசா ஆபத்து வராது என்று நினைத்து, பயணத்தை துவங்க.
ஆதிரா, ரோஸிடம் நன்றாக பேசிக்கொண்டே வந்தாள். ரோஸ் அமைதியான பொண்ணு, ஆனா ஆதிராவிடம் மட்டும் ஏதோ ஒன்று பேசிக்கொண்டே வந்தாள்.
ராஜா ரோஸை பார்த்து “என்ட பேசுறதுக்கு மட்டும் மேடம்க்கு கசக்கும் போல” அவன் செல்லமா கோச்சிச்கிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
ராஜாக்கு மனதில் ஒரு வெறுமை சூழ்ந்துக்கொண்டது ‘ராஜா போதும் அவளை தொந்தரவு செய்தது, பிடிக்காத பொண்ணை வற்புறுத்துவது தப்பு, ராஜாக்கு மறக்கறது கஷ்டம்தான் ஆனா வேற வழி இல்லை’ என்று தனது காயம்பட்ட மனதுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு வந்தான்.
ரோஸ்க்கு இப்போ வரை ராஜா மேல எந்த விருப்பமும் இல்லை, எதாவது கண்டு பிடிக்கணும் அவளது விருப்பம் வேறு புறம் ஒரு போதும் சென்றது இல்லை. ஆனா ராஜா கூட பேசுறது அவளுக்கு மிகவும் பிடிக்கும், முழுதாய் ரெண்டு மணி நேரம் கூட முடியல ராஜா பேசாமல் விட்டு.
இவர்கள் மூவரையும் விட்டு அரை கிலோமீட்டர் உள்ளே நடந்து போய்ட்டான் ராஜா, மேப் வைத்து.
அர்ஜுன் ரோஸ், ஆதிராக்கு பாதுகாப்பாக பெண்களுடன் மெதுவா நடந்து வந்து கொண்டு இருந்தான்.
அவன் கையில் இருந்த மேப் வைத்து, சில ஆபத்துக்கள் வந்தது அர்ஜுன் அதனை லாவகமாக யாருக்கும் தெரியாமல் கட்டுப்படுத்திவிட்டான், அர்ஜுன் அவனது மந்திரசக்தி உதவியோடு.
அவர்கள் சேருமிடம் வந்ததும், ராஜா நின்று விட்டான். சுற்றி பார்த்தால் எதும் இருப்பது போல தெரியவில்லை.
அர்ஜுன் மாயா சொன்ன மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான், பூமிக்கு அடியில் இருந்து ஒரு குகை போல ஒன்று வெளியே வர.
ராஜா கண்ணில் அந்த குகை பட்டது, சுற்றியும் முள் செடிகள் கொடிகள் படர்ந்து இருந்தது. அவன் பேக் திறந்து ஒரு வித்யாசமான சிறு கத்தியை எடுத்து கொடிகளையும், செடிகளையும் சுத்தம் செய்யத் துவங்கினான் ராஜா.
அர்ஜுன் தீப்பந்தம் தயார் செய்துகொண்டு இருந்தான், உள்ளே இருட்டாக இருப்பதால், பல மணி நேரம் நடந்த களைப்பு வேறு. ரோஸ், ஆதிரா ஒய்வாக அமர்ந்து இருக்க, ராஜா சுத்தம் செய்து முடித்து அவன் மலைக்கு கீழே வாங்கி நிரப்பிய தின்பண்டங்களை, அவள் கையில் திணித்தான்.
“ஆதிரா நீங்க ரெண்டு பேரும் இங்கவே இருங்க, நாங்க உள்ள போய் அந்த புக் எடுத்துட்டு வரோம்”. ஆதிராவுக்கு செய்தி சொன்னாலும், ராஜா பார்வை முழுவதும் என்னவோ ரோஸ் மீது தான் இருந்தது.
இங்கு நடப்பது எல்லாம் அவனது பாட்டி சொன்ன கதை போல இருந்தது ராஜாக்கு, உள்ளே ஆபத்து வர வாய்ப்பு உள்ளதால் சில ஆயுதங்கள் சிறு பையில் போட்டுக்கொண்டான் ராஜா. தேவையான பொருட்கள் எடுத்துக் கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
ராஜா ரோஸை பார்த்து, ஒரு தலை அசைப்போட்டு உள்ளே சென்றான்.
ரோஸ்க்கு மனம் கனத்தது ராஜாவின் மீது ஏதோ எண்ணம் தோன்றியது சரியாக அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை எவ்வகையான உணர்வு இது என.
உள்ளே சென்று ஒரு மணி நேரம் ஆனது எந்த சத்தமும் இல்லை. ஆதிரா, ரோஸ் அந்த குகை வாசலில் நின்று உள்ளே எதாவது சத்தம் கேட்கிறதா என்று பார்த்து கொண்டு இருந்தார்கள் இருவரும்.
அர்ஜுன் கோட்டைக்கு வழி என்று தான் முதலில் நினைத்தான், ஆனால் உள்ளே சென்றதும் தான் தெரிந்தது, கோட்டையை தேடி வருபவர்களுக்கு இது சவக்குழி என்று.
உள்ளே செயற்கையாக உருவாக்கப் பட்டு இருந்த புதை குழியில் தவறுதலாக கால் வைத்து ராஜா மாட்டிக்கொண்டான், அவனை காப்பாற்ற போய் அர்ஜுனும் மாட்டிக்கொண்டன்.
இருவரும் உள்ளே புதைய புதைய, ஏதோ அவர்கள் கால்களுக்கு தட்டுப்பட, அதனை ஓங்கி இருவர் முழு பலம் கொண்டு ஒரு எம்பி மிதித்து அந்த குளியில் இருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.
அந்த குழி மின்னல் வேகத்தில் மூடி ஒரு வேல் கிடைத்தது.
அர்ஜுன் ராஜாவை பார்த்து “இதே போல என்டயும் ஒன்னு இருக்கு” என்று அவன் காண்பிக்க. இரண்டு வேலுக்கும் ஏதோ ஒரு காந்த சக்தி இருப்பது போல ஒன்று சேர்ந்தது, ஒரு சாவி போல தெரிந்தது.
சுற்றி பார்த்தார்கள் சாவி போட எதாவது துளை இருக்கிறதா என்று ஒன்றும் தெரியவில்லை.
இன்னும் முன்னேறி சென்றார்கள் ஏதோ அமானுசிய சத்தம் கேட்க, ஒளிந்து இருந்து பார்த்தார்கள்.
அங்கு பழங்கால வேலையை செய்யும் இரு பெண்கள் பேசிக் கொண்டு இருப்பது போல தெரிந்தது. இது எதோ அடுத்த மாய டிராப் என இருவரும் தெரிந்துக்கொண்டு.
அந்த இரு பெண்கள் பேசி கொண்டவையை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கானார்கள்.
“அந்த புரத்தில் அரசியை அடைத்து வைத்து இருப்பது ராஜாவா அல்லது இரண்டாம் மனைவியா?”.
“எனக்கு தெரில” என்றாள் மற்றொருவள்.
ராஜாக்கு இந்த கதையை எங்கோ கேட்டு இருக்கோம் என்று சிறிது நேரம் யோசித்தவன், ஞாபகம் வந்தவன் வாய் விட்டே சொன்னான்.
“இருவரும் இல்லை, இரண்டாம் மனைவியை பழி வங்க அரசியே அவளை சிறை வைத்து இருக்கிறார்” ராஜா சொன்ன மறு நொடி அந்த இரு பெண்களும் மறைந்தார்கள். அங்கு சட்டென்று ஒரு வெளிச்சம் நிறைத்து இருவரையும் தூக்கி விசியடித்தது. தூக்கி அடித்த வேகத்தில் இருவருக்கும் பயங்கரமான உடல் வலி, மாயா இதனால் தான் பெண்கள் உள்ளே போகக்கூடாது என சொன்னாள் என அர்ஜின் புரிந்துக்கொண்டான்.
வெளியே இருந்த இருவரும், சற்று முன்பு இருந்த குகை கண் முன்னே மறைந்ததை பார்த்து.
ஆதிரா அர்ஜுன்… அர்ஜுன் என்று அலற.
ரோஸ் பதற்றத்தில் உள்ளே மறைத்துவைத்திருந்த காதல் வெளியே வந்தது “ராஜா… ராஜா… வந்துடுங்க நானும் உங்கள காதலிக்கிறேன்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.
ரோஸ்க்கு ஏற்கனவே தெரியும் சுற்றி பார்க்க வருபவர்களுக்கு வசந்தம் அளிக்கும் இந்த காடு புத்தகத்தை தேடி வருபவர்களுக்கு நரகமாகத்தான் இருக்கும் என்று, நான் உங்கள கொண்ணுட்டேன். என்னோட சுய நலத்துக்காக ரெண்டு உயிர கொண்ணுட்டேன்.
ஆதிரா வேறு எதாவது வழி கிடைக்கிறதா என்று சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள், ஆனால் ஒரு துப்பும் கிடைக்க வில்லை, ரோஸ்க்கு பைத்தியம் பிடித்தது போல ஆனது.
அவன் வாங்கித் தந்த பையை கட்டி பிடித்துக்கொண்டு ராஜா வந்துடு, நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன், எனக்கு எந்த புக்கும் வேண்டாம், நீ மட்டும் போதும்” என்று கதறிக்கொண்டு இருந்தாள்.
இங்கு சாந்திக்கு ஒரு துப்பு கிடைத்தது மிஸ்டர். ஜீரோ பற்றி.
கடைசியாக நடந்த கொலையில் ஏதோ ஒரு துணியில் மிஸ்டர். ஜீரோ என்று எழுதி இருந்தான் அந்த கொலைகாரன். இந்த துணியை வைத்து ஏதோ சாந்திக்கு செய்தி சொல்வது போல இருக்க.
காலையில் வீட்டுக்கு போய் அவள் ரூமை பூட்டிக்கொண்டு “டேய் இந்த துணி வச்சி என்னடா சொல்லவர” என்று கையில் வைத்து பலமணி நேரம் சாந்தி யோசித்துக்கொண்டு இருக்க. பதில் தான் கிடைக்கல சாந்திக்கு, எப்போது அவனை பார்ப்போம் என தவித்துக்கொண்டிருந்தாள்.
“ஒரு வேலை எழுதும்போது பேப்பர் கிடைக்காம போய் இருக்குமா, அதனால துணில எழுதி போட்டுட்டு போய் இருப்பானா?”.
சாந்தி பெட்டில் படுத்துக்கொண்டு அந்த துணியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட்டுக்கொண்டு இருந்தாள்.
அவள் ஒரு ஒரு முறை தள்ளும் போதும் ஏதோ மாய சக்தி உள்ள துணி போல, எழுத்துக்கள் போல மடிந்து கொண்டு, எழுத்துக்கள் எழுதிக்கொண்டு இருந்தது. முதலில் சாந்தி பெரியதாக கண்டுகொள்ள வில்லை, தொடர்ந்து இது போல நடக்க,
சாந்தி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் “இப்போ நீ எனக்கு என்ன தான் விஷயம் சொல்ல வர?” சாந்தி திரும்ப துணியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட.
“ஐ” என்ற ஆங்கில எழுத்து வர பக்கம் இருந்த பேப்பர் பேனா எடுத்து எழுத ஆரம்பித்தாள் சாந்தி.
திரும்ப தள்ள “எல்” என்று வார்த்தை போல அந்த சிறு துணி சுருண்டது ஒரு ஒரு முறையும் தள்ளி, சாந்தி அந்த வார்த்தையை எழுதி வைத்துக் கொண்டாள்.
“ஐ லவ் யூ என்று முடிய நான் ஒரு வேலை மிஸ்டர், ஜீரோ மேல லூசா ஆகிட்டானா? அதனாலதான் எனக்கு இப்படி தோணுதா? இந்த முறை அவள் விரல் கொண்டு தள்ளாமலே அந்த சிறு துண்டு துணி அசைந்து “நோ” என்றது.
சாந்திக்கு நம்பிக்கையேயில்லை “எல்லாம் மன ப்ராந்தி” என்று நினைத்தவள், எனக்கு தெரிந்த விஷயம் தானே இது சொல்லிட்டு இருக்கு,
“தனக்கு தெரியாத சில விஷயம் கேட்டு பார்த்தால் இது உண்மையா இல்லையா என்று தெரிஞ்சிடும்,” லைவ் நியூ போட்டாள்.
லைப்ட்டில் இரு நபர்கள் மாட்டிக்கொண்டார்கள், பல மணி நேரம் இருவரையும் வெளிக்கொண்டு வர போராடிக்கொண்டு இருக்கிறார்கள் மீட்புத்துறையினர், உள்ளே இருப்பவர்கள் உயிரோடு இருக்க ஒரு சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது” என செய்தி ஓடிக்கொண்டிருந்தது.
“இதுக்கு பதில் சொல்லு, உன்னை நம்புறேன்,” சாந்தி கேட்க “L. I. V. E.” என்று அந்த துணி உருண்டு சொன்னது.
அந்த துணியின் பதில் தெரிந்ததும், அந்த நியூஸ் சேனலை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள், சாந்தி சில நிமிடங்கள் கழித்து.
பாதுகாப்பு துறையும் தீயணைப்பு துறையும் சேர்ந்து இருவரையும் உயிருடன் மீட்டு அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இருவர் உயிருக்கும் எந்த பாதிப்புமில்லை என மருத்துவர் கூறினார்.
சாந்தி பயந்து ரெண்டு அடி பின்னால் நடந்தாள் “ஏய் நீ பேயா, என்னை பழிவாங்க வந்து இருக்கியா?”
அந்த துணி ஒரு பொம்மை போல வடிவம் எடுத்தது, அதை பார்த்து சாந்தி பயந்து முகத்தை மூடிக் கொண்டாள்.
“ஹேய் நீ பேய் தான், நான் ஒருத்தனை பிடித்து ஜெயில்ல போட்டேன்னு தூக்கு மாட்டி செத்துப் போன அந்த ரவுடி குமாரு நீதான? எனக்கு தெரியும்” என்று சாந்தி ஓட்டம் பிடித்தவள். ருத்ரா, வசி இப்போது தங்கி இருக்கும் இடத்தில் தான் வந்து நின்றாள்.
“ஐயோ கனவா இருக்கணும் கனவுல இருந்து சாந்தி எந்திரிச்சிக்கோ” என்று ஓடிக்கொண்டே கண்கள் மூடி அவளது கன்னத்தை வலிக்கும் அளவுக்கு தட்டிக் கொண்டு இருந்தாள்.
அந்த துணி காற்றில் பறந்து வந்து உதடு போல வடிவம் எடுத்து “சாந்தி மை ஸ்வீட் ஹார்ட் உம்மா” அவ்ளோதான் சாந்தி தெறிச்சி தெருத் தெருவா ஓடிக்கொண்டு இருந்தாள். அந்த துணி இவளை காற்றில் பறந்து துரத்திக்கொண்டு இருந்தது.
சாந்தி தெறித்து ஓடுவதை அங்கு இருப்பவர்கள், விசித்திரமாக பார்த்தார்கள்.
இங்கு ரோஸ் இருவருக்கும் தன் கையால் சாக வழி செய்து விட்டத்தை எண்ணி அழுது கரைந்தாள். இருவரும் உயிர் பிழைப்பார்களா? அந்த குகையில் இவர்களுக்கு கேட்ட கேள்விக்கு சரியான பதில் ராஜா சொன்னானா?
இந்த துணியின் ரகசியம் என்ன?
சாந்தி ஒரு புறம் ஓடிக்கொண்டு இருக்க அந்த துண்டு துணி அவளை விடுவதாக இல்லை. எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.
ஆகாஷ் ஒரு புறம், அந்த மேப் எப்படி அவன் கைக்கு கிடைத்ததை யோசித்துக்கொண்டு இருந்தான். முதலில் அந்த மேப்பின் ஒரு பாகம் தான் கிடைத்தது.
ஆகாஷ்க்கு புதுமையான விஷயங்கள், மற்றும் கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகம். தேடல் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று, வேலை ஒரு பக்கம். இதை தேடல் ஒரு பக்கம் என்று பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து கிடைத்தது.
அவனது நண்பர்களும் சில உதவி செய்தார்கள், அந்த மீதி பாகத்தை கண்டுபிடிக்க, அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டியது, ஆகாஷ்க்கு கொடுக்க மனம் இல்லை, அவன் பல வருட உழைப்பு அதில் இருக்கிறது.
அனைத்து பாகங்களும் கையில் கிடைத்த போதும் இன்னும் அந்த மேப் பற்றி அறிந்துகொள்ள நினைத்த ஆகாஷ்க்கு இவர்களின் பிரிவு இவனை பாதித்து இந்த மேப் பற்றி அவன் மறந்துவிட்டான். ஆனால் ஏதோ குழந்தை சுமப்பது போல எந்த நேரமும் அவன் உடன் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டு இருப்பது தான் ஆகாஷ் வேலை. ஒரு இனம் புரியாத பந்தம் அவனுக்கும் அந்த மேப்க்கும்.
ஓய்வு கிடைக்கும் நேரங்களில் அந்த மேப் தேடிச் சென்ற போது நடந்த நிகழ்வுகளை நினைப்பது ஆகாஷ்க்கு பிடித்த ஒன்று.
சைலுவுக்கு பிடித்த ரசகுல்லா செய்துகொண்டே நடந்ததை நினைத்தவன், எடுத்தது யார் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஷைலுவை கண் இமைபோல பார்த்துக்கொண்டான் ஆகாஷ். அவளும் நினைத்த நேரம் அவன் இரண்டு வருடம் காக்க வைத்ததற்கு, ஒரு ஒரு நிமிடமும் பழி வாங்கிக்கொண்டு இருந்தாள், ஆகாஷை படுத்தி எடுத்தாள். அவள் செய்வதை நினைத்து கோபப்படாமல் ரசித்து அவளுக்கு சேவகனாக மாறிப்போனான் ஆகாஷ்.
அனைத்து வேலையையும் விட்டு விட்டு, அவளுக்கு சமைப்பது ஊட்டி விடுவது என்று அனைத்து வேலையும் செய்துகொண்டு இருந்தான்.
சமைப்பது கூட அவனுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை, சைலுக்கு ஊட்டி விடுவதுதான் பெரும் பாடாக இருந்தது ஆகாஷ்க்கு. இருவரும் காதல் வானில் பறந்து கொண்டு இருந்த சமயம்.
அடுத்த கட்டமாக மாயா அவளது வேலையை காட்டத் துவங்கினாள். உலகில் பழமையான பொருட்கள் ஒரு பக்கம் திருட்டு பொய்க் கொண்டு இருந்தது. திருட்டு போன பொருளை ஆராய்ச்சி செய்ய தனிக்குழு நியமிக்கப்பட்டது.
தினமும் ஒரு திருட்டு, அகழ்வாராய்ச்சி கஷ்டப்பட்டு எடுத்து வைத்து இருந்த அனைத்தும், ஒவ்ஒன்றாக மர்மமான முறையில் களவாடப்பட்டது.
திருட்டுப்போன பொருள் எல்லாம் சாதாரண சிறிய சிறிய பொருள்.
ரெண்டு திருட்டுக்கு அப்புறம் மிக முக்கியமான பொருட்களுக்கு பாதுகாப்பு போட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத பொருள் காணாமல் போனது.
ஒரு வாரத்தில் 8 பொருள் காணவில்லை, ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அனைவர்க்கும் தோன்றியது ஒன்று தான், ஏதோ மாய வேலை போல.
இந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டத்தை மக்கள் மறந்தார்கள்.
8 பொருளும் ஒரே காலத்தை சேர்ந்த வேல். விரல் அளவுகூட இருக்காது அங்கு இருப்பவர்கள் முடிவே செய்துவிட்டார்கள், இந்த சிறிய பொருளை வைத்து ஏதோ பெரியதாக செய்ய போறார்கள் என்று.
மாயா அனைத்து வேலையும் ஒன்று சேர்த்து கையில் வைத்து இருந்தாள்.
இரண்டு மட்டும் அர்ஜுனிடம், அவள் நினைத்ததை முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் இருந்தது. அதற்குள் வேண்டிய அனைத்தும் தயார் செய்து கொண்டு இருந்தாள் மாயா.
வசியை பார்த்து பயந்த அக்னி நிலா ருத்ராவை விட்டு ஒரு இன்ச் கூட விலக வில்லை.
‘வசி தப்பு செஞ்சிட்டோம் ஒரு பொண்ணுக்கு இப்படி பயம் காட்டிவிட்டேன். சாந்தி உதவி இப்போது தேவை என்று நினைத்த வசி, சாந்திட்ட சொல்லி இவளை சமாதானப் படுத்த சொல்லணும்’ என்று நினைத்தவன் சாந்தியை அழைக்க.
அவள் ஒரு புறம் ஓடிக்கொண்டே போனை அட்டென்ட் செய்தாள்” வசி என்ன காப்பாத்து, என்ன துரத்துராங்க” போன் பேட்டரி காலி ஆகி, போன் அதன் உயிரை விட்டது.
“ச்சை போன் கூட பழி வாங்குது நம்மை” ஓடுவதை சாந்தி விடவில்லை, ஒரே பயம், படத்தில் இது போல காட்சி பார்த்தால் கூட கிண்டல் செய்யும் கேஸ் முன்னால், இப்படி ஒரு மாயம் நடந்தால் என்னதான் வீரனாக இருந்தாலும் முதலில் பயம் தான் வரும்.
ஏதோ ஆபத்து என்று புரிந்து கொண்டவன், அவள் கடைசியாக இருந்த லொகேஷன் கண்டுபிடித்து வசி ருத்ராவிடம் சொல்லிவிட்டு போக நினைத்தான். விஷயம் சொல்லியவுடன் “நாங்களும் வரோம், தனியா எப்படி தேடமுடியும்” என்று ருத்ராவும் அக்னி நிலாவும் கிளம்பினார்கள் சாந்தியை தேட.
அந்த துணி நன்றாக பறந்து கொண்டே”ஓய்ய்ய் சாந்தி ஓய்ய்ய் சாந்தி ஓஓஓ மை சாந்தி” என்று கத்திக்கொண்டே வந்தது. அங்கு இருக்கும் மக்களுக்கு எதோ ஒரு துணி பறந்து வருவது மட்டும் தான் தெரிந்தது. அது பேசுவது சாந்திக்கு மட்டும் கேட்ட காரணத்தால் மக்கள் பதறி அடித்து ஓடவில்லை. இது பேசுவது மட்டும் அனைவர்க்கும் கேட்டு இருந்தால் ஊருக்குள்ள கலவரம் ஆகி இருக்கும்.
இதில் அந்த துணி காதலே காதலே என்னை என்ன செய்ய போகிறாய், நான்ஓவியன் என்று தெரிந்தும் நீ என் கண்ணு ரெண்டும் கேக்குற”. நல்லா பாட்டை லோக்கல் பாசையிலே பாடிக்கொண்டு வந்தது அந்த மிஸ்டர் ஜிரோ துணி.
ரோடுல ஓடி கடுப்பாகிய சாந்தி, பக்கத்தில் இருந்த பார்க் பக்கம் ஓடிச் சென்றாள். அந்த துணி பறந்து வருவதை பார்த்த அங்கு இருந்த தெரு நாய் ஒன்று அந்த துணியை கவ்விக்கொண்டு வேறு ஒரு தெருவுக்கு ஓடிவிட்டது.
“அப்பாடா தப்பிச்சோம்” என்று சாந்தி பக்கம் வசிப்பவர்களிடம் போன் வாங்கி இப்போது இருக்குமிடம் சொல்ல.
மூவரும் வருவதற்குள் அந்த மந்திர துணி அந்த நாயிடம் இருந்து தப்பித்து கிழிந்த நிலையில் பறந்து அந்த பார்க்குக்குள் வந்தது.
சாந்தி அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தாள். சாந்தி காதுக்கு அருகில் பறந்து கொண்டே வந்த துணி. “சாந்தி தண்ணீர் ரொம்ப தாகமா இருக்கா?” என ரகசியமாக கேட்டது அவ்ளோதான் அந்த துணி பேசியதும் சாந்தி குடிக்க கையில் பிடித்து வைத்து இருந்த தண்ணீரை எடுத்து அந்த துணி மீது எரிந்து விட்டு, அந்த பார்க் ஓரமாக போய் நின்று கொண்டாள்.
அங்கும் அந்த சிறு துணி பறந்து வந்து இங்க என்ன தேடிட்டு இருக்க அவள் காதுக்கு அருகில் ரகசியம் பேச, அப்போது சாந்தி பயந்து ரெண்டு அடி எடுத்து வைக்க உள்ளே இருந்து ஏதோ ஒரு சக்தி சாந்தியை இழுப்பது போல தெரிய.
“அச்சோ சாந்தி பாத்து” என்று மிஸ்டர். ஜீரோ துணி கத்த, அங்கு இருந்த மணலில் கால் புதைந்து கொண்டது. இந்த துணிக்கு பயந்து காலை வேகமாக இழுக்க, ஒரு செயின் அவனது கலோடு வந்தது, அதை கையில் எடுத்துக்கொண்டு சாந்தி ஓடி வந்து ருத்ரா மீது மோதிட்டா.
“என்னாச்சி சாந்தி?”.
“அந்த துணி என்னை துரத்திட்டு வருது” சாந்தி பதட்டமாக, மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க திக்கி தினறிச் சொன்னாள்.
“என்ன? துணி துரத்திட்டு வருதா!” மூவரும் ஆச்சர்யமாக அங்கு பறந்து வந்த துணியா? என்று எட்டிப் பார்க்க, ஒரு பொம்மை போல உருவம் எடுத்து ருத்ரா முகத்துக்கு நேராக வந்து நின்று” எனக்கு ஏன்னு தெரில உன்ன பிடிச்சி இருக்கு” பக்கம் இருந்த அக்னியை பார்த்து.
“அக்னி நிலா பயந்து கொண்டு ருத்ரா கையை பிடித்துக்கொண்டு பின்னால் ஒளிந்து கொண்டாள், என்ன துணி பேசுது என்பது போல.
“உனக்கும் எனக்கும் ஏதோ கனெக்சன் இருப்பது போல எனக்கு தெரியுது” அந்த உருவம் எடுத்து துணி சொல்ல.
“ஐயோ எனக்கு உன்ன தெரியாது, உன்ன பாத்தாவே பயமா இருக்கு” அக்னி நிலா ருத்ரா பின்னால் நின்று கொண்டு பாதி முகம் தெரிய எட்டி பார்த்து சொன்னாள்.
“சரி விடு உன்ட நான் அப்புறம் வரேன்”. வசியை பார்த்து “உன்ன எனக்கு, எங்கோ பார்த்தது போல தெரியுது ஆனா ஞாபகம் இல்ல சரி விடு” என்று நான்கு பேருக்கும் முன்னால் வந்து நின்றது.
வசிக்கும் சாந்திக்கும் தான் இவை அனைத்தும் புதிது, ருத்ரா இதவிட அதிகமா பார்த்து இருக்கிறான் அதனால் சாதாரணமாக நின்றிருந்தான்.
ருத்ரா பொறுமையாக “யார் நீ, எதுக்கு சாந்திய பயம் காட்டுற, நீதான் எல்லா கொலையும் செஞ்சதா?”.
“நான் பயம் காட்டலை, ஆமா நீ சயின்டிஸ்ட் தான எப்போ போலீஸ் போல கேள்வி கேட்க ஆரம்பித்தாய். அதுமட்டும் இல்லாமல் அவ தான் என் லவ்வர்னு சொல்லி பேசிட்டு இருந்தா, அதான் என்ன ஒரு பொண்ணு உருகி உருகி காதலிக்கறாளேன்னு பார்க்க வந்தேன்” மொத்த பழியும் சாந்தி மேல் தூக்கி போட்டது அந்த அடங்காத சிறு துணி.
பயந்து கொண்டு இருந்த சாந்திக்கு இத கேட்டதும், கோபமாக சீரத் துவங்கினாள்.
“டேய்ய் நான் என் ஆளு மிஸ்டர். ஜீரோவை லவ் செய்றேன், உன்ன நான் எங்க லவ் பண்ணேன்?”.