Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.
10. மாய நிலா

ஒரு வழியா மனோவ பிடிச்சி ஆகாஷ் என் பக்கத்துல உட்கார வச்சான், அந்த வீனா போன ஆகாஷ் எனக்கு முதுக காமிச்சு உட்காந்து பாட்டுக்கு பாட்டு போட்டி போட்டு விளாடிட்டு வரவும் நான் கடுப்பாகி தூங்க ஆரமிச்சிட்டேன்.

இறங்க வேண்டிய இடம் வந்தது, ஆகாஷ் பாட்டுக்கு பசங்க கூட பேசிட்டு ரூம்க்கு போய்ட்டான், எல்லோருக்கும் தனித்தனியா ரூம் புக் செஞ்சி இருந்தான், ஸ்டாப்ல ரெண்டு பேருக்கு ஒரு ரூம் ஓகேன்னு மாத்தி, மிச்சம் ரூம்ஸ் கேன்சல் செஞ்சிட்டாங்க.

மனோ, ஆகாஷ் ஷைலுக்கு ஆப்போசிட் ரூம்ல இருந்தாங்க. ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து சுத்திப் பாக்கலாம்னு பிளான் போட்டாங்க.

நைட் கேம்ப் பையர், பார்பிக்யூன்னு பிக்ஸ் செஞ்சிட்டு ஆப்டர்னூன்ல இருந்து நைட் வர நல்லா தூங்கிட்டோம். ஒருவாரம் இருந்த ட்ரிப் ரெண்டு நாளா மாறிடுச்சு.

கல்யாணத்துக்கு நகை எடுக்கணும்னு சொல்லவும். ஆகாஷ் வேணான்னு தான் சொன்னான், மனோ தான் ஷ்டாப்ஸ் கிட்டலாம் பேசி, பேட்சிலர் பார்ட்டி சிறப்பா செஞ்சிடலாம்னு முடிவு செஞ்சிட்டாங்க.

ஷைலு ஸ்பின்டர்ஸ் பார்ட்டி வைக்கிறதாவும் சொன்னதால, மத்தவங்களும் சமாதானம் ஆயிட்டாங்க.

ஒரு நாள் ஏதோ காடு, மலைனு ஏதேதோ மரம் செடின்னு சுத்திக் காட்டி, ஷைலுக்கு ஒரே கடுப்பு, பாய்ஸ் கேர்ள்ஸ் தனி தனியா வேற வேற இடத்துக்கு போறது போல ஏற்பாடு செஞ்சிட்டாங்க.

பசங்க உயரமான இடத்துக்கும், பொண்ணுங்க ஒரு ரெண்டு மணிநேரத்துல ரிட்டர்ன் ஆகுறது போலவும்.

"ஆகாஷ காலைல பத்ததோட சரி, இப்போ ரூம்க்கு வந்து இருப்பானா?" யோசிச்சிட்டே, ஆகாஷ் மனோ இருந்த ரூம்க்கு போய் தட்டினால் ஷைலு.

மனோ டையர்ட்ல டோர துறக்கவும், கண்ணு சிமிட்டுர நேரத்துக்குள்ள ஷைலு மனோவ வெளியே இழுத்து தள்ளி கதவை சாத்த.

"ஷைலு டையர்டா இருக்கு தூங்கணும், கதவை தொற".

நீ போய் என் ரூம்ல படுத்துக்கோ, ஷைலுக்கு பேர் இல்ல தனியாதான் ஆகாஷ் ரூம் போட்டு இருந்தான், முன்னாடி இதுபோல அவளுக்கு ரூம் ஷேர் செஞ்சி பழக்கம் இல்ல அதனால, ஆகாஷ் அவளுக்கு தனியா ரூம் இங்கே செஞ்சி இருந்தான்.

மனோ ஷைலு ரூம்ல போய் படுத்துட்டான், இந்த ஷைலுக்கு அறிவே இல்ல, இப்போ அவன் பேய் ஆட்டம் ஆடிட்டு இருப்பான்.

அப்போதான் ஆகாஷ் குளிச்சிட்டு வெளியே வரான், ஷைலுவ பாத்துட்டு, "இங்க என்ன பண்றா, யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க", ஆகாஷ் சீரியஸ் ஆக பேச.

"ஆகாஷ் உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணேன், காலைல இருந்து உன்ன பாக்கவே இல்ல", னு நெருங்கி ஆகாஷ் சோல்டர பிடிச்சிட்டு இருந்தா.

"ஷைலு உன் ரூம்க்கு போ காலைல பேசிக்கலாம்,"

"ஆகாஷ் என்னால முடில, உனக்கு எந்த பீலிங்கும் வரலையா, கல்யாணம் பண்ணிக்க போர பொண்ணு மேல வர பீல் கூட வரலையா". ஷைலு எவ்வளவோ நார்மலா இருந்தாலும் முடில அவளால, ஆகாஷ பக்கம் வச்சிட்டு.

"அப்படிலாம் இல்ல, ஐ லவ் யூ" கீழ குனிஞ்சி மென்மையான ஒரு முத்தம் கொடுத்து ஆகாஷ் விலக.

"இது போதும் ஆகாஷ்," ஷைலு துள்ளல்லோட வெளியே போய் மனோவா இழுத்து வெளியே தள்ளி அவ ரூம் சாத்திக்கிட்டா. மனோ செம காண்டுல கோபமா வந்து படுத்துட்டான், 'மனோ இப்போ நீ கோபப்பட்டா, ஷைலுவை ஏன் விட்டன்னு சண்டைக்கு வருவான்' அமைதியா படுத்துட்டான்.

ஆகாஷ்க்குதான் தூக்கம் எங்கயோ போயிடுச்சி. ஷைலு நினைப்பாவே இருந்தது, அங்க ஷைலு நிம்மதியா ஆகாஷ நினைச்சிட்டு தூங்கிட்டா.

அன்னைக்கு நடக்க இருந்த கேம்ப் பையர் வந்தனால முடில.. இந்த லாஸ்ட் டே ஆப்டர்னூன் மேல எல்லோரும் ரெஸ்ட் எடுத்துட்டு நைட் கேம்ப் பையர்க்கு வராங்க.

ஷைலுக்கு திடீர் கிளைமேட் சேஞ்க்கே அவ உடம்பு ஏத்துக்களை, ஒரு மாதிரி தும்பிடேய் இருக்கா, கோல்டு வேற. ஆகாஷ் கேம்ப் பையர்ல ஒரு ஓரமா உட்காந்து இருக்குற ஷைலுவை பாத்துட்டு போய் பக்கம் உட்கார்ரான்.

"நீ போ ஆகாஷ், நான் பாத்துக்கிறேன்".

"ஷைலு நெருப்பு பக்கம் உட்காந்தா கொஞ்சம் பெட்டர்ரா பீல் பண்ணுவா" னு ஆகாஷ் கூட்டிட்டு போய் உட்கார வைக்கிறான். எல்லோரும் பாத்து தானவே என்ஜாய் பண்றாங்க.

இங்க ஆகாஷ் ஷைலுவை சோல்டர்ல தலைய சாச்சிவச்சி அவள இஞ்சி டீ குடிக்க வச்சிட்டு இருக்கான். ஷைலு ஆகாஷை கண்கள் மின்ன பார்த்துக் கொண்டே குடித்து முடித்தாள்.

"ஆகாஷ் நான் ரூம்க்கு போறேன்",

"வா ஷைலு நான் உன்ன கூட்டிட்டு போறேன்"

"இல்ல மா நீ இங்க என்ஜாய் பண்ணு".

சைலுவை கூட்டிட்டு போன ஆகாஷ் அவளை படுக்க வைச்சிட்டு பக்கத்தில் அமர்ந்து தலையை வருடிக் கொண்டு இருந்தான்... இன்னும் ஒரு வாரத்துல இவ என் பொண்டாட்டி, ஆனா அதுக்கு அப்புறம் எவ்ளோ சீக்கிரமா அவளை புரிஞ்சிக்கறானோ அப்போதான் என் வாழ்க்கை எனக்கு சேப், என்று நினைத்தவன் அவள் அறையில் கிழே படுத்தான்.

ஆகாஷ் நன்றாக தூங்கிவிட்டான். ஆகாஷ்க்கு ஒரு பக்கம் படுத்து இருந்ததால் கை வழி திரும்பி படுத்தான். ஷைலு நல்லா ஆகாஷ் மீது முழு பாரத்தை போட்டு தூங்கிக்கொண்டு இருந்தாள்.

"இவ எப்போ இங்க வந்தா, சரியான இம்சை" அவளை திட்டிக்கொண்டே நகர்ந்து படுத்து ஷைலு முகத்தில் இருந்த முடியை ஊதித் தள்ளினான்.

"ஆகாஷ் கூசுது அமைதியா இரு என்று சிணுங்கினாள்".

"கழுதை, பைத்தியக்காரி தூக்கத்துல கூட என்ன தான் நினைச்சிட்டு இருப்பா போல" என்று நினைத்தவனுக்கு, உள்ளுக்குள் இனித்தது. ஷைலுவை நெருங்கி முத்தம் கொடுக்க போன போது ஷைலு ஏதோ குறுகுறுக்க எந்திரித்து.

"ஆகாஷ் என்ன பண்ற, என்று கண்களை தேய்க்க" அந்த கேப் பயன் படுத்திக் கொண்ட ஆகாஷ், தூங்குவது போல கண்களை மூட. ஷைலு கண்களை தேய்த்துவிட்டு ஆகாஷை பார்க்க அவன் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க, ஆகாஷை நெருங்கி படுத்து, "இம்சை பிடிச்சவனே, ஏன்டா என்னைவிட்டு தூரம் படுத்து இருக்க, எப்போ பாரு கனவுல வந்து கடிக்க வேண்டியது இல்ல கிஸ் கொடுக்கவேண்டியது நேர்ல ஏதும் தரமாட்டல்ல ராட்சசா..." என்று திட்டிக்கொண்டே ஆகாஷ் மூக்கை நன்கு கடித்து வைத்தாள்.. வழி பொறுக்காமல் ஆகாஷ் கத்தத் தொடங்கினான்.

"எதுக்குடி கடிச்ச".

"அது அழகா ஷார்ப்பா இருக்கு அதான் கடிச்சேன்" என்று சாதாரணமா சொல்லிட்டு. அவன் இடைல ஒரு கடி கடிக்க.

"இங்க எதுக்கு டி கடிச்ச",

"அதும் அழகா இருக்கு, அதான் கடிச்சேன்" னு சிறுபிள்ளை விளக்கம் சொல்லிவிட்டு தூங்கினாள். ஆகாஷ் மேல ஒரு கை கால் போட்டுகொண்டு.

இம்ச பிடிச்சவ, அவள் தலையை தொட்டுப் பார்த்து, இப்போ சரியா போச்சி போல உடம்பு.. அவள் தூங்கும் வரை இருந்தவன், ஷைலு தூங்கிட்டாளான்னு பார்த்து தூக்கி பெட்ல படுக்க வச்சிட்டு... ஆகாஷ் அவன் ரூம்க்கு போய்ட்டான்.. கேம்ப் பையர் முடிச்சிட்டு ஒரு ஒருவராக விடியர் காலை வரத் தொடங்கினர்... ஒரு நாளு மணிநேரம் தூங்கிட்டு ரிட்டர்ன் போர பிளான்.

காலைல ஒரு 8 மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு தயாராக, "மனோ ஷைலுவ காணோம்?"

"நேத்து ஒடம்பு சரி இல்ல நல்லா தூங்குவா போல" என்று மனோ சொல்ல.. ஆகாஷ் அவள் அறையை நோக்கிச் சென்றான்.

ஷைலு பெட்ல படுத்து இருக்கா, "என்ன இன்னும் என்ன தேடி வரல அவன்?" கதவு தொறக்கும் சத்தம் கேட்கவும் ஷைலு கண்ணை மூடி படுக்க.

"ஷைலு டைம் ஆச்சி எந்திரி கிளம்பனும்".

"ஆகாஷ் முடிலடா தூக்கமா வருது, இல்ல இல்ல மயக்கமா வருது, எனக்கு எதாவது ஆய்டுமா" என்று ட்ராமாவை துவங்க, ஆகாஷ் கண்டு பிடித்துவிட்டான். "இவளுக்கு ஒடம்பு சரி இல்லனா பேசவே மாட்டா, பக்கம் பக்காம எழுதி குடுத்தது போல பேசிட்டு இருக்கா இப்போ" என்று நினைத்தவன்.

சரி வா நான் தூக்கிட்டு போறேன் என்று ஆகாஷ் சொன்ன உடனே ஆர்வமாக கையை நீட்ட, "அடிச்சிடுவேன் நாயே, எந்திரிச்சி வா அங்க வெயிட் செய்றாங்க".

ஷைலு சோகமா ஆகாஷ் பக்கம் போய் உட்கார... இந்த முறை ஆகாஷ் ஜன்னல் ஓரம் உட்காந்து இருக்க ஷைலுக்கு நல்ல வசதியா போச்சி அவன திரும்ப கூட விடல ஷைலு. ஏதேதோ பேசிட்டு, அவன் வாயில இருந்து நினைத்த பதிலை வாங்கிக்கொண்டு வந்தா...

"நாளைக்கு டிரஸ் எடுக்க போறோம் ஆகாஷ், உனக்கு நான் செலக்ட் செய்வேன், எனக்கு நீ செய்யணும் புரியுதா" என்று ஆகாஷ்க்கு சொல்ல "சரி டி" சொன்னவன் தூங்க ஆரம்பித்தான். ஷைலுவும் அவன் தோல்மீது சாய்ந்து தூங்கத் தொடங்க, மனோ இவர்கள் தூங்கும் அழகை போட்டோ எடுத்து ஆகாஷ்க்கு அனுப்பி வைத்தான். இப்போ ஆரம்பித்த பழக்கம் தான் மனோக்கு, ஷைலு செய்யும் சேட்டைகளை ரெகார்ட் வீடியோ செஞ்சி ஆகாஷை தனிமையில் வாடாமல் நன்றாக பார்த்துக் கொண்டான், ஆனால் இவள விட்டுட்டாங்க ரெண்டு பேரும்.

ஷைலு கல்யாணத்துக்கு ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து செய்தான் ஆகாஷ்... திருமணமும் சிறப்பாக முடிய.

ஷைலு அட்ராசிட்டி சுத்தமா ஆகாஷ் ஆள பொறுக்கவே முடில, எப்போ பாரு ஆகாஷ் ஆகாஷ்னு பின்னாடியே திரிஞ்சிட்டு, அப்படித்தான் ஒரு நாள் "உன்ட பேசணும் டா" போகும் அவன் கையை பிடித்துக்கொண்டு அவளும் போக. ஆகாஷ் தான் பதறிட்டான்.

"ஹேய் எங்க டி வர,"

"அதான் சொன்னனே தனியா பேசணும்".

ஆகாஷ் காண்டாகி, "எங்க பாத்ரூம்ல வச்சி பேசணுமா" அப்போவர ஷைலு கவனிக்கல.
 
11. மாய நிலா

சாரி ஆகாஷ்னு சொல்லி ஓடினவள், ஒரு நாள் ஆகாஷை பாக்கும் போது சங்கடமாக நெளிந்துகொண்டு இருந்தாள்.

கிருஷ்ணன், அகிலாவிடம் சொல்லிவிட்டு கொஞ்ச நாளைக்கு வேற வீட்ல இருக்கோம்ன்னு சொல்லி வேறு வீட்டுக்கு சென்றார்கள் இருவரும்.

அத்தனை பேர் முன்னாடி சுத்திக்கொண்டு இருந்த சைலு தனியா இருந்தா சும்மா விடுவாளா, ஆகாஷ் அது இதுன்னு பேசுனது மட்டும் இல்லாமல் நினைக்கும் போது முத்தம் கொடுப்பது கடித்து வைப்பதுனு ஆகாஷை வச்சி செய்தாள்.

ஆகாஷ் உணர்வுகங்களை அடக்கத்தான் பெரும் பாடுபட்டான், "இவளை சும்மா விடக்கூடாது இன்னைக்கு பக்கம் வரட்டும் இருக்கு," என்று நினைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான் ஆகாஷ்.

ஷைலு அப்போதுதான் எந்திரித்து ரெடி ஆகி ஆகாஷை தேட, சாப்பிடும் ஆகாஷை பார்த்து ஓடிவந்து ஆகாஷ் மடி மீது உட்கார்ந்து "ஊட்டிவிடு" என்றாள்.

ஆகாஷ்க்கு வந்தது பாரு கோபம் "வேணும்னா போட்டு தின்னு, மனுசன சாப்பிட கூட விடாம டார்ச்சர் செய்ற இடியட்னு" திட்டிட்டு போனவன், நைட் லேட்டா தான் வீட்டுக்கு வந்தான்.

ஷைலு அவனை மிரட்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தாள், அவன் போற இடத்துக்கெல்லாம் மெதுவா ரெண்டடி தள்ளி நடக்க ஆகாஷின் பொறுமை எங்கோ பறந்தது.

"எதுக்குடி இப்போ பாலோவ் செஞ்சிட்டு இருக்க" என்று கத்திட்டு இருக்கவனை பார்த்த ஷைலு ரெண்டு அடி பின்னாடி போய் பயந்து நடுங்க ஆரம்பிக்க. ஆகாஷ்க்கு இந்த ஷைலு புதிது, "என்னாச்சி உனக்கு" என்று ஆகாஷ் நெருங்க ஷைலு வேறு ஒரு அறையில் நுழைத்து கதவை சாத்திக்கிட்டா.

ஆகாஷ்க்கு என்ன செய்றதுனு தெரியல, வேற சாவி தேடி பிடித்து, கதவை திறந்து பார்த்தால் ஷைலு எங்கும் இல்லை.

எங்க போனான்னு தெரியல பாத்ரூம் ஸ்டோர் ரூம்னு எல்லாம் பாத்தவன், கட்டில் கீழே பார்க்க ஷைலு முகத்தை பொத்திக்கொண்டு படுத்து இருந்தாள், "ஷைலு இங்க வா, அங்க என்ன செய்ற?"

"நான் வரல நீ அடிப்ப ஆகாஷ், எனக்கு இப்போலாம் உன்ன பாத்தா பயமா இருக்கு, ட்ரீம்ஸ்ல வந்தது போலவே நீ என்னை விட்டுட்டு போய்டுவியா" என்று ஷைலு ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்க, ஆகாஷ்க்கு ஒன்னும் புரியல. இந்த ஷைலு புதியவள், எப்போதும் பயப்படாமல் திரிந்து கொண்டு இருக்கும் இவளை, காதல் இவ்வளவு பலவீனம் ஆக்கிவிட்டது என்றுதான் ஆகாஷ்க்கு தோன்றியது.

"பேபி, உன் ஆகாஷ் உன்ன விட்டு எப்பவும் போகமாட்டேன்" என்று சமாதானப் படுத்தி, ஆகாஷ் மடி மேல உட்கார வச்சி சாப்பாடு ஊட்டிவிட, ஷைலு அமைதியா சாப்பிட்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை கண்களை நல்லா துடைச்சிவிட்டு, "ஒன்னும் இல்ல பாப்பா ஆல் ரைட் இப்போ சமத்தா தூங்கணும்னு சொல்லி, ஆகாஷ் அவளை படுக்க வைத்து அருகில் படுத்து ஷைலு கையை எடுத்து அவன் மீது போட்டுக்கொண்டு நெருங்கி படுக்க வைத்தான்.

ஷைலுக்கு ஏதோ போல இருந்தது, ஆகாஷின் அருகாமையில் ஏதோ கூச்சமாக இருக்க, "ஆகாஷ் விடு நான் தனியா படுத்துக்கிறேன்" என்ற ஷைலுவை வினோதமா பார்த்து.

"என்னாச்சி மா" என்று ஆகாஷ் கேட்க.

"எனக்கு இப்போ ஏதோ கூச்சமா இருக்கு, உன் பக்கம் வந்தா. நான் எதாவது செஞ்சிட்டா உன்ன, அப்புறம் பேபி வரும், உனக்கு ஒன் இயர் டைம் வேணும்ல" என அந்த குழப்பமான பயச்சூழலிலும் அவனுக்காக யோசித்தாள்.

காதல் வந்தால் அனைவருக்கும் ஏதோ ஆகிவிடும் போல.

"ஹேய் பேபி, அதுலாம் ஒன்னும் இல்ல பக்கம் வா, வந்து ஒரு முத்தம் தா என்று ஆகாஷ் இதழை காமிக்க" ஷைலு கண்களை பொத்திக்கொண்டு திரும்பி படுத்துக்கிட்டா. ஆகாஷ் அவளை நெருங்கி "தங்கமே இங்க வா ஒரு உம்மா கிடைக்குமா?" என ஷைலுவை வெக்கப்படுத்திக்கொண்டு இருந்தான்.

அவளது உடல்மொழி ஆகாஷ்க்கு புரியாமல் போகுமா என்ன, பிடித்தவன் அருகில் இருந்தும் விலகி இருப்பது அவளுக்கு வலிக்கத்தான செய்தது.

"ஷைலு, ஷல் வி மேக் லவ்?"

ஷைலு அதிர்ச்சியிலே ஆகாஷை பார்க்க.

"பிடிக்கலையா" என்று ஆகாஷ் கேட்க.

"பிடிக்கும், ஆனா இப்போ வேண்டாம்" என்று ஷைலு இப்போது தெளிவாக பேச.

ஆகாஷ்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது, ஒருமுறை நெருங்கினாள், அவனால் அவளை எப்போதும் பிரிய முடியாது. அந்த நபரை வேறுகண்டு பிடிக்கணும், அவன் நிறைய சிக்கல் செய்து வைத்து இருந்தான், அதையும் சரி செய்யனும் என்று யோசித்தவன். "ஷைலு சாரி, ஒன் இயர் இப்படியே போய்டும்" என்று அவளுக்கு சமாதானம் சென்னான்.

ஷைலு தலையை ஆட்டி, "ஆனா டெய்லி வீடியோ கால் பேசணும் இல்லாட்டி நான் கிளம்பி வந்துடுவேன்", ஆமா ஆகாஷ் நல்லா சொல்ல போகிறான் இன்னும் ஒரு வருடத்துக்கு எங்களது வாழ்க்கை வீடியோ கால்ல தான் போகும், சில முறை ரொம்ப பிஸி அப்போ மட்டும் பேசலனா அதுக்கு சார்ஜ் செஞ்சி வட்டி குட்டி என அடுத்த கால் பல மணி நேரம் தொடரும்.

அடிக்கடி சண்டை வரும், இவன் எந்த போஸ்ட்டும் போடமாட்டான், ஆனால் இவனை டேக் செய்து நிறைய அதும் பெண்கள் கூட இருக்க போட்டோ பாத்தா பொங்கிடுவா அப்படித்தான் ஒரு நாள் பொங்கி, சரக்கு அடிச்சி உங்கட்ட வந்து கதை சொன்னேன் என்று ஷைலு கதையை சொல்லி முடித்தாள்.

கதை சூப்பர் தான் ஹாப்பி எண்டிங் தான், "ஆனா அந்த முகம் ஒரே போல இருக்கிறது யாரு ஒரு வேலையா இருக்கும்?".

"இல்ல சான்சே இல்ல அந்த பேஸ்க்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்ல, ஏதோ சர்ஜரி செஞ்சி விளையாடறாங்கன்னு ஷைலு சொல்ல".

மனோ ஷைலுவை வியப்பாக பார்த்தான், இதை கண்டுபிடிக்க அவங்க ஒரு வருஷம் எடுத்து கிட்டாங்க, ஆனா ஷைலு ஒரு டைம் போட்டோ பாத்து சொல்லியிருக்கா.

ஆகாஷ்க்கு இதை மெசேஜ் தட்டிவிட்டா, மனோவை வைத்த கண் வாங்காமல் பார்த்தது, ஆனால் இந்த முறை அவளை சட்டை கூட செய்யல.

அளவுக்கு மீறி குடித்ததால் ஷைலு வாமிட் செய்தால், இப்போது தெளிவாகவே இருந்தாள், இப்போது போய் பார்ட்டிய நல்லா என்ஜாய் செய்தால், அந்த புது நட்பு வட்டாரத்தோடு. என்னதான் ஷைலு சிரித்துக்கொண்டு இருந்தாலும் ஆகாஷை அடிக்கடி கண்கள் தேடத்தான் செய்தது.
ஆகாஷ் முடியும் வரை வரல, ஷைலு பொறுத்தது போதும் அத்தை மாமா இருக்குற வீட்டுக்கு போய்டலாம்னு அவளோட திங்ஸ் எல்லாம் பேக் செஞ்சிட்டு நைட்டே அவங்க கூட கிளம்பிட்டா.

ஆகாஷ் அங்கு அந்த பொண்ணை எப்படி மிரட்டியும் அவன் யார் என்பதை சொல்லலை, எல்லை மீற நெருங்கின போதும் கூட சொல்லலை. "என்னமாதிரியான பொண்ணு இவ, ஒன்னும் புரியலயே".

ஷைலு நினைவு வேறு ஒரு பக்கம் அவளை வாட்ட ஆகாஷ் கிளம்பி சென்றான் அடுத்த நாள், வீடு வெறிச்சோடி இருந்தது. 'எங்க போனா அம்மா வீட்டுக்கு போயிருப்பாளோ' என்று யோசித்தவன் நேரா ஷைலு வீட்டுக்கு போக அங்கு அவள் இருந்தாள் தான.

"என்ன ஆகாஷ் தனியா வந்து இருக்க", அப்போ இவ இங்க வரல நம்ம வீட்டுக்கு தா போய் இருப்பா என்று யோசித்த ஆகாஷ்.

"அது மாமா பிசினஸ்ல ஒரு டவுட்னு மொக்கையா ஓரு டவுட் கேட்டுட்டு, விட்டா போதும்னு ஓடிட்டான். நேரா அவன் வீட்டுக்கு தான் போனான் ரூம் போக இருந்த கால்கள் கிட்சேன்ல பேச்சி சத்தம் கேட்கவும் அங்கு சென்றான் ஆகாஷ். கண்கள் தானாகவே விரிந்தது கண்ட காட்சி அப்படி.

கிருஷ்ணன் தோசை சுட்டுக் கொண்டு இருக்க மாமியாரும் மருமகளும் திட்டில் ஏறி உட்காந்து "மாமா, ஆனியன் தோசை, முட்ட தோசை" னு மாறி மாறி ஆர்டர் செய்ய அவரும் சலிக்காம சுட்டு போட்டுக்கொண்டு இருந்தார்.

அப்பா எனக்கும் தோசை வேணும் பேப்பர் தோசைனு சொல்லி, ஆகாஷ் ஷைலுவை இடிச்சிக்கிட்டே உட்கார ஷைலுக்கு ஏதோ போல ஆக.

"மாமா எனக்கு போதும்னு பிலேட்டை வச்சிட்டு ரூம்க்கு ஓடிடுறா."

"என்ன இவன் போக்கே சரி இல்லையே அன்னைக்கு ட்ரீம்ஸ்ல நடந்தது இப்போ நடந்துடுமோ" என்று பயந்துட்டே ஷைலு படுத்து தூங்கிட்டா.

ஆகாஷ் அப்பா அம்மாட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு, "இனி இங்கதான் இருக்க போறோம் வீடு காலி செய்ய வேலைக்காரங்கட்ட சொல்லிட்டு வந்துட்டேன்" னு சொல்ல ரெண்டு பேருக்கும் ஒரே ஹாப்பி.

'எங்க இந்த சுண்டெலிய காணோம்' யோசிச்சிட்டே போக, "நம்ம பெரிய பிளான் போட்டுட்டு வந்தா என்ன இவ அதுக்குள்ள தூங்கிட்டா", ஆகாஷ் சத்தமா பேசிட்டு மெதுவா அவ பக்கம் போய் படுத்துட்டான்.

ஷைலுக்கு பதறிடுச்சி, இந்த ஒரு வருசத்துல, ரெண்டு பேரும் ஒன்னா உட்காந்தது கூட கம்மிதான், ஷைலு பக்கம் போன ஆகாஷ் எந்திரிச்சி ஓடிடுவான், அவன் வந்து படுக்கவும் ஷைலுக்கு லைட்டா ஜெர்க் ஆகிடுச்சி.

இப்போ என்ன செய்றதுன்னு அவளுக்கு ஓரு ஐடியாவும் இல்ல, எந்திரிச்சி ஒரே ஓட்டமா ஓடிட்டா.

ஆகாஷ் ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு சாப்பிட கீழே வந்தான்.

ஷைலு சாரீல லைட்டா இடுப்பு தெரிய, ஆகாஷ் மெதுவா கையை வைக்க, 'ஷைலு கண்ட்ரோல் அவனே ஸ்டார்ட் செஞ்சி அப்புறம் அட்வைஸ் செஞ்சி கொள்ளுவான், அதும் பாத்தாதுன்னு ஒன் இயர் டைம் கேட்டுட்டு ஒரு மாசம் கழிச்சி வந்து இருக்கான், இவனிடம் பேசக் கூடாது,' என்று யோசித்தாள் ஷைலு. அமைதியா அவன் கையை ஓரகண்ணால பாத்துட்டு இருக்க, வேண்டா வேண்டா ஆகாஷும் கையெடுத்துட்டேன் ஷைலு நெழிவதை பார்த்துட்டு. 'நம்ம ஆளு நம்ம விருப்பமில்லாம எதும் பண்ணமாட்டாங்க' என்று நிம்மதியா ஆகி ரெண்டு நிமிஷம் கூட ஆகல. அடுத்த சீண்டல்கலோடு சாப்பிட்டு முடித்தார்கள், அதன்பின் ஷைலு அறை பக்கமே போகவில்லை.

அகாஷ் விட்டுட்டு அவன் வேலை பார்க்க சென்று விட்டான், இரவு விழாக்கு போயிட்டு வந்து கவனிக்கலாம்ன்னு விட்டுட்டான்.

அன்று ஒரு விழாக்கு போக வேண்டி இருந்து, இருவரும் கிளம்பி செல்லும்போது ஆகாஷ்க்கு ஒரு அழைப்பு வந்ததும் ஷைலுவை இறக்கி விட்டுட்டு கிழம்பினான்.

"டேய் அவன் கிடைச்சானா, எத்தனை முறை பிடிச்சி பிடிச்சி அவனை தப்பிக்க வைக்க முடிவு செஞ்சி இருக்கீங்க, உங்களுக்கு சம்பளம் கொடுத்ததுக்கு என்ன பிச்ச எடுக்க வச்சிடுங்க டா."

இங்கு வேண்டா வெறுப்பாக ஷைலு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, டாக்ஸி புக் செய்துவிட்டு அமர்ந்து இருந்தாள், டாக்ஸி வந்ததும் ஏறும் போது ஏதோ ஒரு ஸ்ப்ரே செய்ய, மயக்கம் போட்டு விழுந்தாள்.

ஷைலுவை கடத்திய விசயம் ஆகாஷ்க்கு சொல்லப்பட்டது.

ஒரு வினோதமான பெண் குரல் "ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு இன்னும் அறை மணி நேரத்துல வந்துடு".

ஆகாஷ் வண்டியை திருப்பிக்கொண்டு அந்த வினோத குரல் சொன்ன இடத்துக்கு விரைந்தான்.

மாயா, மாயம் செய்ய வருவாள்.
 
12 மாய நிலா

வசியும் சாந்தியும் இங்கு யார் இந்த கொலையை செய்ததுன்னு ஒரு மாசம் அலைந்து திரிந்துகொண்டு இருந்தார்கள்.

உடனே வீட்டுக்கு போகணும் என்று நினைத்த ருத்ரனின் மனம், கப்பலில் இருந்து இறங்கியதும் மாறியது. சீக்கிரம் சென்று எப்படியும் பெரியதாக கலட்டப் போவதில்லை. திரும்ப ஊரை சுற்றிப்பார்க்க நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ இந்த நிரந்திரம் இல்லாத உலகில் நேரம் கிடைக்கும் போதே உபயோகித்துக்கொள்ள வேண்டும் என திட்டம் போட்ட வசி.

இந்த இடத்தில் விடுதியில் தங்குவது சரி வராது எதாவது ஒரு வீடு எடுத்தால்தான் சரிவரும் என்று எண்ணிய ருத்ரா, அவனது செல்வாக்கை வைத்து இருபது நிமிடத்தில் இருவரையும் அழைத்து செல்ல கார் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டவர்களை ஒரு அழகிய அரண்மனை போல ஒரு வீட்டில் இறக்கி விட்டார்கள்.

அக்னி நிலாவுக்கு எதுவும் நியாபகம் இல்லை தனக்காக யாரோ காத்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு இருந்துக்கொண்டிருந்தது. அதை ஒதுக்கிவைத்தவள் களைப்பு தீர இருவரும் படுத்து தூங்கிக்கொண்டிருக்க, அக்னிக்கு ஒரு கனவு வந்துகொண்டிருந்தது "வேண்டாம் எரிக்காதிங்க" என கத்த துவங்கினாள், ருத்ரா அவளை சமாதானப் படுத்திவிட்டு, மனதை மாற்ற ஊர் சுற்ற கிளம்பினார்கள்.

அக்னியை அதன் பிறகு ருத்ரா ஒரு முறை கூட கலங்க விடவில்லை. இப்படியே நாட்கள் நகர்ந்து, அக்னி நிலாவை கூட்டிக்கொண்டு, இரண்டு வாரம் ஊர் சுற்றிவிட்டு, ருத்ரனுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஆபீஸ் வந்து சேர்ந்தனர் இருவரும்.
வசிக்கும் அக்னி நிலாவை பார்த்து, 'இந்த முகம் எங்கோ பார்த்தது போல இருக்கே?' இவன் குழம்புவதை பார்த்த ருத்ரா.

"இவ என்னோட புது தோழி, இவங்க யாரு" சாந்தியை பார்த்து கேட்டான் ருத்ரா.

"இவள் தான் மிஸ்டர். ஜீரோ ஓட லவ்வர்".

" ஓ... நீ சொன்ன அரை கிறுக்கு இதுதானா".

"டேய்ய் யார பார்த்து அரை கிறுக்கு சொல்ற, சாந்தி சராசரி உயரம் தான், ருத்ரா பக்கத்தில் ரொம்ப குட்டியாக இருந்தாள்.

"போ போய் பால் குடி, நாங்க பேச வேண்டியது நிறைய இருக்கு" சாந்தியை ஒரு விரல் கொண்டு தள்ளி விட்டுட்டு வசி அருகில் சென்ற சமயம். சாந்தி "இரு டா உனக்கு இருக்கு, என்னோட ஆளை கண்டு பிடிச்சி உன்ன அடிக்க சொல்றேன்."

"யாரு அந்த பொறுக்கி பையனை‍, அவன் ஏன் கையில் கிடைக்கட்டும் அப்போ இருக்கு அவன் சாவு என் கையால் தான்". சாந்திக்கு இந்த ருத்ராவை சுத்தமா பிடிக்கல ஏன்னு அவளுக்கே புரியவில்லை.

வசியும், ருத்ராவும் பேசிட்டு இருக்க, அக்னி நிலா அவள் கையில் ஒரு போட்டோ பிரேமோடு நின்று இருந்தாள். வசியிடம் குடுக்க சொன்னான் ருத்ரா, வசி என்ன நினைத்தான்னே தெரியவில்லை "அதை நீயோ வச்சிக்கோ".

ருத்ராக்கு சாந்திக்கூட விளாடுவது பிடித்து இருக்க, கோபமாக சாந்தி ஒரு அடி எடுத்து வைக்க‌ அவள் ஜடையை பிடித்து இழுத்து விளாடிக் கொண்டு இருந்தான். சாந்தி கோவத்தில் அடித்தாலும் ருத்ராக்கு எறும்பு கடித்தது போல இருந்தது.

ருத்ராக்கு சாந்தியை கண்டதும் காதல் பொங்கியது, ஆனால் அவள் மனதில் வேறு ஒருவன் இருக்க இனி சாந்தியை தொந்தரவு செய்யக் கூடாது என நினைத்து ருத்ரன் அவளிடம் ஒரு ஒதுங்கி இருந்தான்.

இங்கு வசி அக்னி நிலாவை பார்த்து "உன் பேர் என்ன," அவன் சாதாரணமாக பேசியது அவளுக்கு எதோ மிரட்டுவது போல தெரிய அக்னி நிலா திக்கித்திணறினாள்.

"அக்னி நிலா" என்றாள்.

"பேர் நல்லா இருக்கு, இனி நீதான் என் லவ்வர், லவ் பண்ற நீயும் புரியுதா?" அக்னி நிலா சற்றும் யோசிக்காமல்.

"நான் ருத்ராவை லவ் செய்றேன்" அக்னி நிலா சொல்லிவிட்டு ருத்ரா கையை இறுக்கமாக பிடித்து நின்றாள் அக்னி நிலா.

வசிக்கே சற்று முன்பு அக்னி நிலாவிடம் பேசியது ஆச்சரியம், கனவில் வந்த ஒரு பெண்ணுக்காக இவ்ளோ வருடம் காத்து இருந்தான், ஆனால் இப்போ முன் பின் தெரியாத ஒரு பெண்ணிடம் அதிரடியாக திருமணம் வரை பேசியது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, வசிக்கும் சிறு அதிர்ச்சி இருக்கத்தான் செய்தது.

வசியை முறைத்துக்கொண்டே, அக்னி நிலா சாந்தி ருத்ரா சண்டை போடுவதை பார்த்து, "ஏன் ருத்ரா என்ட மட்டும் நீ சண்டையே போட்டதில்ல?".

"நீ என் தங்க குட்டி உன்ட போய் சண்டை போட முடியுமா, சில அராத்து பொண்ண பாத்தாதான் சண்டை பிடிக்க தோணும்" என்றான் ருத்ரா, அக்னியை ஒரு பெட் அனிமல் போல கொஞ்சும் குரலில்.

அக்னி நிலா கண்களில் அன்பு மின்ன, "நிஜமா வா ருத்ரா?".

அக்னி நிலா தலையை கலைத்து விட்டு, ஆமாடி என் தங்கம் அக்னி நிலா கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தான் ருத்ரா, இவர்கள் நெருக்கத்தை பார்த்து இருவரும்,

வசி, சாந்தி இருவரும் ஒரு நிமிடம் ரசித்து தான் பார்த்தார்கள் இவர்கள் ஒன்னும் பாசத்தில் சளைத்தவர்கள் இல்லை, ஆனால் சண்டைதான் போட்டுக் கொள்வார்கள் எப்போ பார்த்தாலும்.

ருத்ராவை முதல் முறை பார்த்தவுடன், சாந்தி அனுமதி இல்லாமல் நுழைந்து கொண்டான். ஆனால் ருத்ராவை பார்த்ததும் சாந்திக்கு பிடித்திருந்தாலும் மிஸ்டர் ஜீரோதான் முக்கியம். அது தெரியாம எங்கோ இருக்கும் ஒரு கொலைகாரனை காதலிப்பது தெய்வீக காதல் போல சாந்தி நினைத்துக்கொண்டு இருக்கிறாள், யாருக்கு யார் ஜோடி என எழுதியவனுக்குதான் தெரியும்.

அதி வேகமாக காரை ஓட்டி வந்து, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்த சமயம்,

ஆகாஷை பார்த்த இருவரும் அதிர்ந்தார்கள் 'இவன் இங்க என்ன செய்றான்.'

வசி, ருத்ரா இருவரும் "ஆகாஷ் எப்படிடா இருக்க" அவனை கட்டிக்கொள்ள வர, ஆகாஷ் வசி, ருத்ரா இருவரையும் சரமாரியாக அடிக்கத் துவங்கினான், சில அடி வாங்கினாலும் ரெண்டு பேரும் இவன் பைத்தியம் மாதிரி செய்றதை பார்த்து நாலு அடி போட்டுட்டு பிடித்துக் கொண்டார்கள்.

வசி ஆகாஷை பின்னாடி இருந்து பிடித்துக்கொள்ள, ருத்ரா அவன் கைகளை பிடித்து கொண்டு.

"எதுக்கு டா சம்பந்தம் இல்லாமல் அடிக்கிற".

"என் பொண்டாட்டிய கடத்தி வச்சிட்டு பிளாக் மெயில் செஞ்ச உங்கள கொஞ்சனுமா" என ஆகாஷ் கோபமாக கத்தினான்.

"டேய்ய் நாங்க எதுக்கு டா உன் பொண்டாட்டிய கடத்த போறோம், நீ பைத்தியமா, ஆகாஷ் இருவர் கைகளில் இருந்து விடுபட்டு, அவன் போனில் ரெகார்ட் செய்து வைத்து இருந்ததை போட்டு காண்பிக்க.

ருத்ரா, வசி இருவரும் புரியாமல் பார்க்க, பின்னாடி ஒரு அறையில் இருந்து சத்தம் வரத் துவங்கியது, மூவரும் ஓடிச் சென்றார்கள். அங்கு சைலு கட்டப்பட்ட நிலையில் கதவை தட்டிக்கொண்டிருந்தாள், அவள் பலத்தை உபயோகித்து.

சாந்தி அக்னி நிலா, இங்க நடப்பது ஒன்றும் புரியாமல் நின்று இருக்க.

ஆகாஷ் ஷைலுவை கட்டிக்கொண்டு நின்று இருந்தான் ஆகாஷை பிரித்து இழுத்து வசியும் ருத்ராவும் "அறிவு கெட்டவன் காதல் கண்ணை மறைக்குதோ முதல்ல கட்டை அவிழ்த்து விடுடா" அப்போதுதான் ஆகாஷ் சைலுவின் நிலை புரிந்தது.

மூவரும் சைலு கால், கை, வாய் கட்டுக்களை கழட்டி விட்டு வசி ருத்ரா வெளியே சென்றதும், ஆகாஷ் ஷைலுவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வர, இதழுக்கு இடையில் கை வைத்தவள்.

"இவ்ளோ நாள் எப்படி இருந்தாயோ அப்படியே இருந்துக்கோ, பொண்ணுங்கனா உனக்கு விளாட்டா போச்சா, உன் இஷ்டத்துக்கு ஆட நான் ஒன்னும் பொம்மை இல்ல", ஆகாஷை தள்ளி விட்டு வெளியே போக.

"அண்ணா எப்படி இருக்கீங்க பாத்து ரொம்ப வருஷம் ஆச்சி" என்றாள் சைலு.

"ம்ம்ம் நாங்க நல்லா இருக்கோம், நீ எப்படி இருக்க, யாரு கடத்திட்டு வந்தாங்க"

"கட்டிக்கிட்டது உங்க பிரண்டை எப்படி நல்லா இருப்பேன், தெரியல பழைய படம் போல மயக்க மருந்து வச்சி கடத்திட்டானுங்க" சைலு ஏதோ பிக்னிக் வந்தது போல கடத்தலை சாதாரணமாக சென்னாள்.

"அவங்க அடையாளம் எதாவது தெரியுமா?".

"தெரில அண்ணா பிளாக் டிரஸ் போட்டு இருந்தா ஒரு பொண்ணு, கிராமத்து பொண்ணு போல இருந்தா, ஹிப்ல ஒரு பட்டர்பிளை டாட்டூ போட்டு இருந்தா" ருத்ரா சட்டென்று ஷைலுவை நெருங்கி, "வேற எதாவது அடையாளம் சொல்லு".

"அவ தோள் பட்டையில் ஒரு தழும்பு இருந்தது, எதுக்கு விசாரிக்கிறீங்க?" என வசியை சைலு விசித்திரமாக பார்த்தாள்.

"அது இவ்ளோ வருசமா நான் ஒரு பொண்ண தேடிட்டு இருக்கேன் அவதான்" சாந்தி குதுகலமாக, "சீக்கரம் அவளை கண்டு பிடிச்சிடலாம் சரியா".

"இன்னொரு விஷயம் சொல்லணும், அங்க அகழ்வாராய்ச்சியில நடந்த கொலைக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்கு".

"வசி சூப்பர், உன்னோட ஆளும் கடத்தல்காரி, என் ஆளு கொலை காரங்க சீக்கரம் இரண்டுபேரையும் கண்டு பிடிப்போம் கவலைப்படாத" சாந்தி தோளில் கைப்போட்டு வசி இருவரும் போலிஸ் குடும்பத்துக்கு கொலை கொள்ளை அடிக்கும் மருமகள் மருமகன் கொண்டுவருவதற்க்கு, இரண்டு போலிசும் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆகாஷ் ஷைலு கிட்ட, ருத்ரா சாந்தி பேசிட்டு இருந்தாங்க, இன்னொருத்தர் யாரோ இங்க இவர்களை வைத்து விளாடுவது ஆகாஷ்க்கு புரிந்தது.

அக்னி வசியை பார்த்து, "ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் செஞ்சிட்டு, என்ட இத பத்தி பேச எப்படி மனசு வந்தது?" வசி பற்றி தவறான எண்ணம் விதைத்திருந்தான், வசி அக்னி நிலா மனதில்.

"ஏன் காதல் ஒருத்தர் மேல்தான் வரணுமா, ரெண்டு பேர் மேல கூட வரலாம்". வசி சொல்லி முடித்ததும் அக்னி வசியை கொடூர மிருகத்தை போல பார்த்து 'இவனிடம் இனி சவகாசம் வைத்துக்கொள்ளக்கூடாது' என நினைத்து ருத்ரா அருகில் போய் அமர்ந்து கொண்டாள் அக்னி நிலா. வசியை விட்டு விளக நினைத்தாலும் வசி முகத்தை பார்த்துக்கொண்டு இருக்க எண்ணம் அக்னிக்கு இயல்பாக தோன்றியது. அக்னி மனம் போன திசையை அடக்கிக்கொண்டவள், அதன் பிறகு வசி பக்கம் திரும்பவே இல்லை.

வசி அவளிடம் அப்படி பேசினாலும், ஏதோ போலத்தான் இருந்தது அவனை நினைத்து.

சாந்தி ருத்ராவை முறைத்துக்கொண்டே திரிந்தாள்.

பல வருட கதைகள் பேசிவிட்டு, சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டுட்டு ஆகாஷ் ஷைலுவை கூப்பிட்டு கிளம்பும் சமயம்.

வசி ருத்ரா இருவரும், இதில் எதோ ஆபத்து இருக்கு முதலில் கண்டு பிடித்த அப்புறம் போ ஆகாஷ், அவனுக்கும் இவர்கள் சொல்வதுதான் சரி என்றுபட்டது.

ஆகாஷ் ஷைலுக்கு ஒரு அறையை கொடுத்துவிட்டு, ருத்ரா, வசி ஒரு ஓரம் படுத்து கிட்டாங்க. அக்னி நிலா, சாந்தி ஏதோ கதை பேசிக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருக்க.

ஆகாஷ் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், அன்று சரக்கு அடித்து பர்ஸ்ட் நைட் முடிந்தது சொன்ன மறு நொடி, சைலு காளியாக மாறி, அவனை வெளியே தள்ளி "அக்னி நிலா, சாந்தி வாங்க நம்ம 3 பேரும் ஒன்னா படுத்துக்கலாம்".

"ஆகாஷ்க்கு வடை போச்சே," இரு நண்பர்களும் சொல்ல.

ஆகாஷ் கோபமாக படுத்து இருந்தான் இவனுங்க முன்னாடி என் மானத்தை நல்லா வாங்கிட்டா ராட்சசி என சைலுவை செல்லமாக கொஞ்சினான் ஆகாஷ்.
வசி, ருத்ரா இரு பக்கமும் படுத்துக்கொண்டு ஆகாஷை தூங்க விடாமல் நச்சரித்துக் கொண்டு இருந்தார்கள்.

பொறுமை இழந்த ஆகாஷ் எந்திரித்து உட்காந்துட்டான் இப்போ என்னடா உனக்கு பிரச்சனை.

"எனக்கு தெளிவா ஆக வேண்டியது நிறைய இருக்கு, அது தெரிஞ்சிக்கற வரை கொஞ்சம் தள்ளியே இருங்க நீங்க."

வசி ருத்ரா எந்திரித்து இன்னும் நெருங்கி அமர்ந்து உட்காந்து "இந்த தள்ளி போதுமா" என்று கிண்டல் செய்ய.

"போங்கடா நீங்களும் உங்க மொக்கை ஜோக்கும், நான் எவ்ளோ பாவம் தெரியுமா?".

"நீ என்னடா பாவம், நல்லா கல்யாணம் செஞ்சிட்டு உன் பிசினஸ் நல்லா வேர்ல்ட் லெவல் பேமஸ், நாங்கதான் பாவம் இன்னும் கல்யாணம் செய்யாம மொட்டை பயலா செத்து போயிடுவோம் போல".

"அதான் ரெண்டு பொண்ணுக இருக்கே, அது உங்க லவ்வர் இல்லையா?" ஆகாஷ் அவனது சந்தேகத்தை கேட்க.

"இல்ல ஒருத்தி என் அத்தை பொண்ணு அவ சி. பி. ஐ ல இருக்கா" வசி அக்னி நிலாவை பற்றி பேச வாய் திறக்கும் முன்பு, ருத்ரா முந்திக்கொண்டு "அக்னி நிலா இனி கடைசி வர என் கூடதான் இருக்க போறா, என் உயிர் அவ" வசிக்கு அந்த கருப்பு நிற ஆடை போட்டவள் மீதும் காதல், அக்னி நிலா மீதும் காதல் என்ன சொல்ல.

மிஸ்டர் ஜீரோவும் அந்த கருப்பு நிற ஆடை அணிந்த அந்த மாயாவி எதற்காக தொடர்ந்து கொலை செய்கிறார்கள், கொலை செய்வது முடிந்ததா அல்ல இது தான் ஆரம்பமா?

ஆகாஷ் தேடும் பதில் யாரிடம் இருந்து கிடைக்க போகிறது? அவனை போல ஒருவன் இங்கு ஆகாஷ் பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவனை ஆகாஷ் கண்டு பிடிப்பானா?
பொறுத்து இருந்து பார்ப்போம்.

மாயா மாயம் செய்ய வருவாள்...
 
13. மாய நிலா

அடுத்தநாள் அனைவருக்கும் இனிமையான காலைப் பொழுதாக அமைந்தது.

அனைவரும் எந்திரித்து வர, இந்த அக்னி நிலா மட்டும் பெட்ல உருண்டுட்டு இருந்தாள். புது இடம் வேறு தூக்கம் வராமல் இரவு முழுவதும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இப்போவரை தூக்கம் வரவில்லை.

“அக்னி என்னாச்சி இன்னும் எந்திரிக்காம”, ருத்ரா அக்னி தோள் வரை இருக்கும் முடியை கலைத்துக் கொண்டு இருக்க.

“என் ஹேர் ஸ்டைல கலைக்காத, என்ன இன்னைக்கு வெளியே கூட்டிட்டு போ, அப்போதான் எந்திரிப்பேன்” என சிறுப்பிள்ளையாக கொஞ்சினாள்.

“சரி கூட்டிட்டு போறேன் முதல்ல நீ ரெடி ஆகு, உனக்கு வாங்கித்தந்த டிரஸ் எல்லாம் எங்க”.

இவர்கள் பேசுவது எரிச்சல் கிளப்பியது வசிக்கு, மனதில் வேறு ஒரு பெண் இருந்தாலும் அக்னி நிலாவை பிடித்திருந்தது.

“அது வெளியே எங்கயோ இருக்கு, போய் எடுத்துட்டுவா” ருத்ரா எடுத்து வந்து கொடுக்க “எதாவது பொறுப்பு இருக்கா இவளுக்கு, பேக் எப்படி போட்டு வச்சி இருக்கா பாரு” என ருத்ரா அக்னி நிலாவை திட்டிக்கொண்டே தயாராகிக் கொண்டு இருந்தான்.

வசிக்கும் ஒரு பெரிய சந்தேகம், அக்னி நிலாவும் அந்த மாய கருப்பு ஆடையில் வரும் பெண்ணும் ஒருவள் போல, ஒரு முறை அவளை தொட்டுப் பார்த்தால் தெரிஞ்சிடும். இரண்டு முறை முத்தம் வேற கொடுத்து இருக்கா எப்படியும் கண்டு பிடித்திடலாம் என்று நினைத்த வசி. இன்று அவளோடு ஷாப்பிங் போக முடிவு எடுத்தான் ருத்ராவை கழட்டி விட்டுட்டு. முதலில் ருத்ராவை அப்புறப்படுத்த நினைத்த வசிக்கு முதலில் நினைவுக்கு வந்தது ரோஸ்தான், கொஞ்சமும் தாமதிக்காமல் வசி ரோஸ்ஸை அழைத்து, “ரோஸ் ஒரு ஹெல்ப், இன்னைக்கு ருத்ராவை எதாவது சொல்லி உங்க லேப்க்கு வர வச்சிடு”.

“ஐயோ அவரையா!! முடியாது வசி” என பதறினாள் ரோஸ், அன்று ருத்ரா விடுப்பு எடுக்க நடந்துகொண்டதுதான் ரோஸ் நினைவுக்கு வந்தது.

“ப்ளீஸ் எனக்காக” ஒருவழியாக ரோஸ்சை சரி கட்டி, அவளும் ஒப்புக் கொண்டாள்.

மறு புறம் ரோஸ் “என்ன சொல்லி வர வைக்கிறது”, அவளது லேபில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டு இருக்க.

ரோஸை பார்க்க அந்த பக்கம் வந்து கொண்டு இருந்த ராஜா, “என்ன ரோஸ் ஏதோ தீவிரமாக யோசனையில் இருக்க?”.

“வசி சார் ஒரு ஹெல்ப் கேட்டாங்க, அதான் எப்படி முடிக்கறதுனு யோசனையா இருக்கு, நீங்க எதாவது ஒரு ஐடியா இருந்தா கொடுக்கறீங்களா?” என ரோஸ் ராஜாவை கேட்க.

“மொட்டையா ஐடியானு கேட்டா, என்ன சொல்றது தெளிவா எனக்கு புரியும்படி சொல்லு”.

“வேற ஒன்னும் இல்ல சார், ருத்ராவை இங்க வர வைக்கணும்”.

“அவன் வளக்கற முயல் குட்டிக்கு சின்ன அடி சொன்னா போதும், பிலைட் பிடிச்சி கூட ஓடி வந்துடுவான், இங்க பக்கத்து ஊருல இருக்கவன் வர மாட்டானா என்ன?” ராஜா அவனது ஒற்றை புருவத்தை உயர்த்தி சொல்ல. முதல் முறை ரோஸ் கண்களுக்கு ராஜாவின் வசிகர அலகு தெரிந்தது. நினைத்த மறு நொடி அவள் எண்ணம் போன போக்கை கட்டுப்படுத்தி.

“சூப்பர் ஐடியா சார், இது பாருங்க எனக்கு ஞாபகமே இல்ல” ரோஸ் ருத்ராக்கு போன் செய்த சமையம். அங்கு அக்னி நிலா ருத்ராக்கு டிரஸ் செலக்ட் செய்றேன்னு.

அவ போட்டு இருக்கும் பஞ்சி மிட்டாய் கலர் டிரஸ் போல ஒரு சட்டையை எடுத்து “ருத்ரா இது போட்டுக்கோ, நம்ம ரெண்டு பேரும் ஒரே கலர்ல டிரஸ் போட்டு, இன்னைக்கு ஜாலியா சுத்த போறோம்” என அக்னி நிலா குதுகலமாக கூறினாள்.

ருத்ரா, அக்னி நிலா கைகளில் இருந்த அந்த பஞ்சிமிட்டாய் சட்டையை பார்த்து, “அக்னி வேண்டா, பசங்க எல்லாம் இந்த கலர் டிரஸ் போட மாட்டாங்க சொன்னா கேளு”. ருத்ரா நாலு அடி தள்ளியே நின்று பேசிக் கொண்டு இருந்தான், பாவம் பையன் அந்த சட்டையை பார்த்து மிரண்டுட்டான்.

அக்னி நிலா சிணுங்கிக் கொண்டே “நீ இத போட்டுக்கோ, இல்லாட்டி நான் சாப்பிடமாட்டேன், உன்கூட பேசவும் மாட்டேன்” என முறுக்கிக்கொண்டு ஒரு நாற்காலியை உடைப்பது போல டமால் என்று சத்தத்தோடு அமர்ந்தாள்.

அக்னி நிலா அருகில் வந்த வசி “நான் வேணும்னா இந்த சட்டையை போட்டுக்கவா?” அக்னி வசியை முறைத்து விட்டு ருத்ராவை முறைத்தாள்.

“சரி மூஞ்சை அப்படி வைக்காத நான் போட்டுக்கிறேன்” என்றதும் தான் அக்னி முகத்தில் புன்னகை தவழ்ந்து. ருத்ராவை ஒரு வழியாக அக்னி பிடித்து அவனது டீ ஷர்ட்டை உருவிக்கொண்டு இருந்தாள்.

ஆகாஷ் அக்னி நிலாக்கு உதவி செய்ய, ஒரு வழியா ருத்ரா அந்த பஞ்சி மிட்டாய் சட்டையை போட்டுக்கொண்டு இருக்க, சைலு சாந்தி இருவரும் இங்கு நடக்கும் கலவரத்தை பார்த்து, ருத்ரா கோலத்தையும் பார்த்து வயிறு பிடித்துக்கொண்டு சிரித்தனர்.

“சரி எல்லாம் சிரித்தது போதும் கிளம்பு அக்னி”.

சைலு இருவரையும் தடுத்து “சாப்பிட்டுட்டு போங்க, நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”. ஆகாஷ் சைலு பின்னாடி போக இங்க என்ன செய்ற வெளியே போடான்னு சைலு ஆகாஷை துரத்தி விட்டுட்டாள்.

அக்னி நிலாவை முறைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட, சாந்தி தான் “முன்ன விட சயின்டிஸ்ட் இப்போ தான் செம பிகரு என்ன அழகு” என சாந்தி ருத்ராவை பார்த்து ஒரு பாடல் வேறு பாடி வைத்தாள்.

சாந்தியை ருத்ரா முறைக்க, அவன் முறைப்பில் இவள் வாயை மூடிக்கொண்டாள். வசி அக்னி நிலாவை பார்க்க, அவள் ருத்ராவை முறைத்துக்கொண்டு இருந்தாள்.

‘எதுக்கு இவ ருத்ராவை முறைக்கிறா?’.

ருத்ரா சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், ருத்ரா சாப்பிட்டதும், வேகமா ருத்ரா முன்னாடி போய் நின்று, போராடி போட்டு விட்ட சட்டையை கழட்டி கசக்கி பிழிந்து தூக்கி போட்டு மிதித்து அவன் மீது வந்த அனைத்து கோபத்தையும் அந்த சட்டை மீது காண்பித்து கோவமா ரூம்க்கு போய்ட்டா.

“இவ வேற எப்போ பாரு கோச்சிகிட்டு”.

“மச்சான் நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டா?” வசி அக்னி நிலாவை சமாதானம் செய்ய முன் வர.

“வேண்டா நல்லவனே நல்லா இருப்பவளை இன்னும் அதிகம் கிளப்பி விட்டுடாத” வசி ருத்ரா சொன்னதை கேட்டு சிரிக்க, சாந்தி வசியை பார்த்து, “டேய்ய் மாமா இந்த பல்பு உனக்கு தேவையா?” என நக்கலடித்தாள்.

“உன் வேலையை பாரு” வசி சொல்லிவிட்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்க.

ருத்ரா, அக்னி நிலா மிதித்து போட்ட சட்டையை எடுத்து உதறிக்கொண்டு, அக்னி இருக்கும் இடம் நோக்கி சென்றான், அந்த கசக்கிய சட்டையை போட்டுக் கொண்டு.

“அக்னி இங்க பாரு சட்டையை நானே போட்டுக்கிட்டேன் நல்லா இருக்கா”.

“நல்லா இல்ல போ” அக்னி முறைப்போடு உட்கார்ந்து இருந்தாள்.

“என்ன நல்லா இல்ல, ரெண்டு பேரையும் பாரு ஒரே சட்டை, ஒரே கலர் சூப்பர்ல”.

“கழட்டிட்டு ருத்ரா உனக்கு பிடிக்கும்ன்னு ஆசையா வாங்கினேன், இனி உனக்கு பிடிச்ச லைட் கலர்ல வாங்குறேன்”. ருத்ராக்கு அக்னி நிலா முகம் சுருங்கினால் சுத்தமா பிடிக்கறதுயில்லை.

“நம்ம வெளியில எங்காவது ஊருக்கு போனா இது ஓகே டா, இங்க கொஞ்சம் கோமாளி போல பாப்பானுங்க, எனக்கு பிடிச்சி இருக்கு, வா நம்ம செல்ஃபீ எடுத்து போட்டோ வால் பேப்பர்ல வைக்கலாம்”.

“சரி என் நிலா குட்டி சமாதானம் ஆகிடுச்சா.”

நிலா யோசிச்சிட்டு “இல்லை இன்னும் எவ்ளோ சட்டை வச்சி இருக்கேன் அது எல்லாம் யார் போடுவா?” அக்னி நிலா மூக்கை உறிந்து கொண்டு சொல்ல.

“இன்னும் இருக்கா எல்லாம் பத்திரமா வை என் மச்சானுக்கு போட்டு வீட்டுடலாம்”.

“ருத்ரா ஐடியா சூப்பர்”, இதுங்க ரெண்டும் கெட்டது பத்தாதுனு இன்னொருத்தனை கெடுக்க பிளான் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள்.

சண்டை போட்டுக்கொண்டு இருந்தவர்கள் உள்ளே இருந்து சிரித்த முகமாக வர, இங்கு நடந்த கலவரத்தில் இவ்ளோ நேரம் ஓயாமல் அடித்துக் கொண்டு இருந்த போனை எடுத்து பார்க்க, ரோஸ் பல முறை அழைத்து இருந்தாள் ருத்ராவிற்க்கு.

சாந்திக்கு ஏதோ வேலை என்று கிளம்ப, ஆகாஷ் பர்ஸில் இருந்த சில துண்டு காகிதத்தை அக்னி நிலா எடுத்து வைத்துக் கொண்டாள் யாருக்கும் தெரியாமல், சைலு ஆகாஷ் கிளம்பும் சமயம்.

“டேய்ய் எதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடுங்க, எனக்கும் என் வைப்க்கும் பேசி தீர்க்க வேண்டியது நிறைய இருக்கு, அத முடிச்சிட்டு வரேன். அதுக்கு அப்புறம் உங்களுக்கு நான் ஒரு குட் நியூஸ் சொல்றேன்” சொல்லிட்டு ஆகாஷ், கிளம்பிட்டாங்க.

வசி, ருத்ரா அக்னி நிலா இருக்க ருத்ரா இவர்களை வழி அனுப்பிவைத்துவிட்டு, ரோஸ்க்கு அழைக்க “என்னாச்சி ரோஸ் இவ்ளோ கால்,” டாக்டர் உங்க முயலுக்கு ஏதோ ஆகிடுச்சு, உங்கள தேடுதுனு நினைக்கிறேன், உங்க ரூம்க்கு வர டிரை செட்சிட்டு இருக்கு”.

“சரி இரு நான் உடனே வரேன்” ருத்ரா அக்னி நிலாவை பார்த்துக்க, முயலுக்கு ஏதோ ஆகிடுச்சாம், நான்தான் சரி செய்யணும் போய்ட்டு வரேன், நீ வசியை கூட்டிட்டு வெளியே போய்ட்டு வா”. ருத்ரா சட்டையை மறக்காமல் மாற்றிவிட்டு பல பத்திரம் அக்னி நிலாவுக்கு சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் போய்ட்டான்.

அங்கு ரோஸ் முயலை பிடித்து சிறு கட்டு போட்டு விட்டுக்கொண்டு இருந்தாள், ராஜா இவளை ரசித்துக் கொண்டு இருந்தான், ருத்ரா வேகமா வந்தவன், முயலை தேடி போக. அது ருத்ராவை பார்த்ததும் தாவி குதித்து அவன் முகத்தை வந்து கட்டிக் கொண்டது.

“ஏண்டி தங்கம் என்ன பிரிஞ்சி இருக்க முடிலயா, சாப்டியா வா நம்ம வாக்கிங் போய்ட்டு வரலாம்” அங்கு இரண்டு ஜீவன்கள் இருப்பதை கண்டு கொல்லாமல், ருத்ரா தூக்கிக்கொண்டு லேப் சுற்ற போய்ட்டான்.

“ரோஸ், எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு, உனக்கு புரியுதா இல்லையா?” என இன்று வெளிப்படையாகவே கேட்டு வைத்தான்.

“சார் இது எதும் சரி வராது, என்ன விட்டு கொஞ்சம் விலகியே இருங்க” என முகத்தில் அவ்வளவு கடுமை இருந்தது.

“சொல்லு ரோஸ் நான் எப்படி இருந்தா என்னை உனக்கு பிடிக்கும்,” என்று ராஜா ரோஸ் கையை பிடித்து கேட்க, ரோஸ் லாவகமாக கையை உருவிக்கொண்டு.

“என்னை இனி நீங்க தொல்லை செய்யாமல் இருந்தா பிடிக்கும், அப்புறம் எனக்கு கொஞ்சம் ரிசர்ச் செய்யணும், ஒரு கையேடு வேணும் அப்புறம் கொஞ்சம் டிபார்ட்மென்ட் பண்ட் வேணும், வன துறை அனுமதி வேணும், வசி சார் கேஸ்க்கு கொஞ்சம் டீடெயில்ஸ் கலேக்ட் பண்ணனும்”.

“சரி…” என்று மட்டும் சொல்லிட்டு ராஜா கிளம்பி அவள் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தான்.

ருத்ரா முயலிடம் விளாடிக்கொண்டு அந்த நாளை கடந்தான்’ அக்னி நிலாவை வசி வெளியே சுற்றி காட்ட கூட்டிக்கொண்டு போனான். அக்னி நிலா வசியிடம் ஒரு வார்த்தை கூட பேசும் நிலையில் இல்லை, அவன் முகத்தை பார்த்தாலே ஒரு கோபம் உருவானது அக்னி மனதில்.

இவனை பார்த்தாவே அக்னி நிலா முகத்தை வெட்டிக்கொண்டு திரும்பி சென்று விடுவாள். பார்த்த அப்போ இருந்து இப்போ வரை இது தான் இருவருக்கும் இடையில் நடந்து கொண்டு இருக்கிறது.

“அக்னி எந்த இடத்துக்கு போலாம்” அக்னி நிலா சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு மனக்கண்ணில் பார்த்தாள். “பழைய சிற்பங்கள், பாரம்பரிய இடத்துக்கு கூட்டிட்டு போ” என்றாள்.

“அது போல ஒரு இடம் எனக்கு தெரியும், ஆனால் அங்கு நார்மல் மனுசங்களுக்கு அனுமதி இல்லை”.

“நான் நார்மல் மனுஷியில்லை, ரத்த காட்டேரி இப்போ அனுமதி கிடைக்குமா” வசி சிரித்துக்கொண்டே.

“அம்மா பயந்துட்டேன்” என்று நடித்து காம்பித்தான், பயம் முகத்தில் தாண்டவம் ஆட.

“போலீஸ் ஆகரத்துக்கு பதில் ஆக்ட்டிங் போய் இருக்கலாம், அதுக்கு தான் நீ சரி பட்டு வருவ” அவள் அவனது கோபத்தை தீண்ட எது செய்தும் வசிக்கு சிரிப்புதான் வந்தது. அக்னி நிலாவின் சிவந்து போன மூக்கை ரசித்துக்கொண்டு இருந்தவன், காரில் வைத்திருந்த சில போட்டோக்களை எடுத்தான். அதில் அவன் ஒரு போட்டோ காண்பித்து அந்த இடத்தை பற்றி சொல்ல, கடைசியாக கொலை நடந்த இடம், வசி சாந்தி தவிர வேறு யாரும் அங்கு உள்ளே நுழைய முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் சுற்றிலும் பலத்த பாதுகாப்போடு இருந்தது.

அந்த புகைப்படம் எல்லாம் பார்த்தது அக்னி நிலாக்கு அந்த இடம் மிகவும் பிடித்துப் போனது, அது மட்டும் இல்லாமல் அவளுக்கு அங்கு உள்ளே போய் ஆக வேண்டிய சூழ்நிலை இப்போது. ஏதோ ஒரு குரல் அவளை கட்டளையிட்டுக்கொண்டிருந்தது ஒரு பொருள் அங்கு இருந்து எடுக்கணும்” என வசி அக்னி நிலா கண்களை பார்த்து, ‘இவளுக்கு பிடிச்சி போச்சி, நம்ம நினைச்சது நடக்கும்’.

“என்ன இங்க கூட்டிட்டு போங்க சார் ப்ளீஸ்,” அக்னி நிலா அணில் குட்டி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்க.

“கொஞ்சம் கஷ்டம் தான் இந்த போலீஸ்க்கு, ஒரு லஞ்சம் கொடுத்தால் உன்ன உள்ள கூட்டிட்டு போறேன்” என வசி இவளிடம் கூற.

அக்னி நிலாக்கு அங்கு போய் ஆக வேண்டும், வேறு வழி இல்லை, அந்த குரல் சொல்வதை தட்டவும் அவளுக்கு தோன்றவில்லை. “சரி சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?” என வசியை பார்க்க, வசி அவன் கைகள் பின் புறம் நீட்டி, அக்னி என்ன என்பது போல பார்க்க.

“இங்க கிஸ் கொடு கூட்டிட்டு போறேன்” வசி ஒரு முடிவோடதான் இருந்தான், அக்னி நிலா யார் என்று இன்று தெரிந்து கொள்ளவேண்டும் என.

அக்னி வசியை கோபமாக முறைத்து, திரும்பிக் கொண்டாள், வசி வண்டியை திருப்பி மீண்டும் வந்த இடத்துக்கு செல்ல வேகம் எடுத்தவனை அக்னி பாவமாக பார்த்தாள்.

அக்னி ருத்ரா சொன்ன செயலை செய்வாளா? அல்லது அக்னி நிலா வேறு வழி தேடுவாளா அந்த புதைந்த நகரம் உள்ளே செல்ல.

காட்டுக்கு செல்லும் முன்பு இந்த விஷயம் ருத்ரா, வசிக்கிட்ட ரோஸ் சொல்லிட்டு கிளம்பிட்டா, அந்த காடு உள்ளே போக பையோடு காத்துக்கொண்டு இருக்க, அங்கு வந்த உருவத்தை பார்த்த ரோஸ் பயந்து ரெண்டு அடி பின்னால் போன சமையம் கையில் ஒரு கட்டை கிடைக்க, அந்த உருவம் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தாள்.

யார் அந்த உருவம்? அக்னி நிலா வசி சொன்ன லஞ்சதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்?



மாய நிலா மாயம் செய்ய வருவாள்.
 
14 மாய நிலா

ரோஸ் ஒரு அடி போட்டாள் அந்த உருவத்தை, கட்டையால். அந்த உருவம் ஆஆஆஆ என கத்திக்கொண்டே ரோஸ் கையில் இருந்த கட்டையை தடுத்து இறுக்க பிடித்துக்கொண்டது.

“ஹேய் ரோஸ் எதுக்கு அடிக்கிற” தலையை தேய்த்துக்கொண்டே நின்று இருந்தான் ராஜா.

“ராஜா சார் நீங்களா நான்கூட ஏதோ மிருகம் தான் என்னை தாக்க வந்தது என்று நினைச்சிட்டேன்.”

“என்ன பார்த்தா மிருகம் மாதிரியா தெரியுது உனக்கு ராட்சசி, அடிச்ச அடியில் மூளை கலங்கிடும் போல” என ராஜா தலையை தேய்த்துக்கொண்டே நின்று பேசினான்.

“ஆமா ஒரு சின்ன அடிக்கு இவ்ளோ சீன், நீங்க இங்க என்ன செய்றிங்க? அத முதலில் சொல்லுங்க” என்று ரோஸ் ராஜாவிடம் கேட்க ஆரம்பிக்கும் போது தினறிய ராஜா ஒருவழியா, தெளிவா சொல்ல ஆரம்பித்தான்.
“அதுவா, டிபார்ட்மென்ட் ஆர்டர், இவ்ளோ அறிவாளியான சயின்டிஸ்ட்டை தனியா அனுப்ப கூடாதாம், அதனால நாட்டுக்கு பெரும் இழப்பு என்று என்னை அனுப்பி இருகாங்க”.

ரோஸ் ராஜாவை மேலையும் கீழையும் பார்த்து, “நீங்க சொல்றது எதும் நம்புவது போல இல்லையே?”.

“நீ நம்ப மாட்டன்னு தெரியும் அதான் ஆர்டர் எடுத்துட்டு வந்து இருக்கேன்”.

ரோஸ், ராஜா நீட்டிய ஆர்டர் காப்பியை பார்த்துட்டு வாங்கி பொறுமையா ஒரு வரி கூட விடாமல் படிச்சிட்டு திரும்பி கொடுத்துட்டா.

“ரோஸ் என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு.
“நிறைய நம்பிக்கை இருக்கு சார், ஆனா என் விசயத்துல உங்கள நம்ப முடியல” ராஜா எதும் பேசாமல் அங்கு பக்கத்தில் இருந்த கடையில், ஏதோ வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு இருந்தான், ராஜாக்கு பாதுக்காப்புக்கு ஒரு மூன்று பேர் வந்து இருந்தாங்க.
டிபார்ட்மென்ட்டில் இருந்து ஐந்து பேர் மொத்தம், கையோடு வருவதற்காக அனைவரும் காத்துக்கொண்டு இருந்த சமயம், இவர்களை பார்த்தவாறு மரத்துக்கு பின்னாடி பேசிக்கொண்டு இருந்தார்கள் இருவர். அவர்களுக்கு சற்று தள்ளி கார் நின்று இருந்தது டிரைவர் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்.

“நான் சொன்னது ஞாபகம் இருக்கா, அந்த கல்லு ரொம்ப முக்கியம், அதை விட அந்த புக் எவ்ளோ சீக்கரம் நம்ம கைக்கு வருதோ அவளோ சீக்கரம் நம்ம எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு, நாம் இழந்த வாழ்க்கையை நாம் திரும்ப வாழலாம். உன் ஆளுக்கு எதுவும் ஆகாது நான் அவளை பாத்துக்கிறேன், நீ தைரியமா போய்ட்டு வா” என ஆறுதல் சொல்ல.

“எனக்கு நீங்க இரண்டு பேரும் தான் முக்கியம் உன்னையும் பார்த்துக்கோ.”

ஆகாஷ் போல உருவத்தில் இருந்தவனிடம், கருப்பு நிற உடை அணிந்த மாயாவி பேசிக்கொண்டு இருந்தாள். தலையில் இருந்து மூக்கு வரை முகமூடி அணிந்து இருந்தாள். சாயம் பூசாத சிவப்பு உதடுகள் மின்னியது, வட நாட்டு பெண் போல ஒரு தாவணி, அவள் இடையில் ஒரு பட்டாம்பூச்சி பச்சை குத்தி இருந்தாள். கை நிறைய வெள்ளி வளையல் அவள் கை ஆட்டி பேசும்போது, அவளது வளையல் தனியாக ஏதோ பாஷை பேசிக்கொண்டு இருந்தது. இடையில் ஒரு மெல்லிய வைரம் பதித்த செயின் அவள் கொடி இடையை இன்னும் அழகாக காட்டியது. அவள் கருப்பு ஆடை முழுவதும் ரோஸ் வண்ண பூக்கள் கையால் எம்பிராய்டர் போட்டு இருந்தது. அழகு தேவதை ஆனால் செய்வது மாய வேலைகள் கொடூரமாக இருக்க போகிறது.
ஆகாஷிடம் இருந்து எடுத்த மேப், அவளிடம் இருந்த இன்னொரு மேப் இரண்டையும் ஒட்டி மாயா, ஆகாஷ் போல உருவம் கொண்டவனிடம் கொடுக்க, அதை வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டு.

“இந்த உருவம் என்ன செய்றது, அங்க இருக்கவங்களுக்கு தெரிஞ்சிட போது”.

“உன் உருவத்துக்கு மாத்திடறேன், நீ இனி உருவம் மாற தேவையில்லை” என கருப்பு நிற உடை அணிந்து இருந்த மாயா, அவனது நெற்றிப் பொட்டில் ஒரு விரல் வைத்து, எதோ மந்திரம் சொல்ல அவனது பழைய உருவத்திற்கு வந்தான்.

“அவளையும், உங்களையும் பாத்துக்கோங்க, நம்மை விட இந்த மனிதர்கள் ஆபத்தானவர்கள்” என்று அர்ஜுன் சொல்ல.

“சரி நான் பாத்துக்கிறேன், விடியும் முன்பு நீங்க அந்த கோட்டை இருந்த இடத்துக்கு போய்டுங்க, நான் சொன்ன மந்திரம் சொல்லு, அதன் கதவு தானா திறக்கும், ஆண்கள் மட்டும் உள்ளே போங்க, அந்த பொண்ணு எக்காரணத்தைக்கொண்டும் உள்ள போகக் கூடாது, போனால் உள்ள இருக்கும் ஆத்மாக்களுக்கும் கோபம் வந்தாலும் வரும், ஆனா அது நமக்கு சரியா தெரில முன்னெச்சரிக்கை அவசியம்”.
“அர்ஜுன், ஆதிராவை ஒருமுறை பார்த்துட்டு போறியா?”
“இல்லை மாயா மா, நான் வந்து பாத்துக்கிறேன்”.

அர்ஜுன் வேறு யாரும் இல்லை, ஆகாஷிடம் இருக்கும் மேப் எடுக்க அனுப்பிய மாயாவின் உயிர் நண்பன். ஆகாஷ் போல உருமாறி எடுக்க நினைத்தான், ஆனால் ஆகாஷ் கையில் வகையாக மாட்டிய சமையம். இங்கு மாயா வேறு ஒரு பிளான் போட்டுட்டா, ஆகாஷ் அவன் நண்பர்கள் கூட இருக்கும் போது அந்த மேப் எடுப்பதுதான் சரி என்று சைலுவை கடத்திவந்து. வசி, ருத்ரா இருந்த இடத்துக்கு வர வைத்து எடுத்துவிட்டாள். அக்னியை வைத்து மாயா சொல்வதை கேட்கும் ஒரு சேவகி போல, மாயாக்காக சொல்வது அனைத்தும் செய்யும் மாயாவின் அக்னி நிலா, இருவருக்கும் என்ன தொடர்ப்பு என பொறுத்திருந்து பார்ப்போம்.

அர்ஜுன் அங்கு நான்கு பேர் இருக்கும் இடத்துக்கு விரைந்தான். அர்ஜுன் பார்க்க ஏதோ போர் வீரன் போல உடலை வளர்த்து வைத்து இருந்தான்.
“சார் நான்தான் கைய எடு” என்றால் மிரட்டும் குரலில்.
“அதுக்கு ஏன் பா மிரட்டுர, உன் பேர் என்ன?” என ராஜா கேட்க
“அர்ஜுன் சார்” என்றான் அதே குரலில்.

மாயா ஆதிரா அமர்ந்து இருக்கும் கார் நோக்கி சென்றாள். “அர்ஜுன் கிளம்பிட்டான்” ஆதிரா சிறிது நேரம் யோசித்துவிட்டு.
“மாயா நானும் அவர் கூட போகவா?”, மாயா சிறிது நேரம் யோசித்துவிட்டு “சரி போய்ட்டு வா அந்த கோட்டைக்குள்ள நீயும் போக கூடாது, அந்த பெண்ணையும் போக விடக் கூடாது புரியுதா?” என மாயா சொன்னதை தலையில் ஏற்றிக்கொண்டாள் ஆதிரா.
ஆதிரா தூரமாக வருவதை பார்த்த அர்ஜுன், அனைவரையும் சீக்கிரம் அந்த இடத்தை விட்டு கிளப்புவத்தில் குறியாக இருந்தான்.

“ம்ம்ம்” ஆதிரா வேகமாக ஓடி வந்து அர்ஜுனை பிடித்துக் கொண்டாள்.
“இவ்ளோ ஆபத்தான இடத்துக்கு என்னை விட்டுட்டு போறியா மாமா,” ஆதிரா அர்ஜுனை கட்டிக்கொண்டு அழுகத் துவங்க.
ராஜா, ரோஜா இருவரையும் விசித்திரமாக பார்க்க, மற்ற மூவரும் சார் உங்க பாதுகாப்புக்கு நாங்க இங்கயே இருக்கோம்.” ஏற்கனவே பயந்து கொண்டு வந்த அந்த மூன்று காவலாளிகள் ஆதிரா அழுததும், பின் வாங்கினார்கள்.

அர்ஜுன் ஆதிராவை பார்த்து நீ எங்க வர கிளம்பு என்று சொன்னவன் பாதி வார்த்தையை முழுங்கிக்கொண்டான். காரணம் மாயா எதுவும் யோசிக்காமல் செய்பவள் இல்லை. இவள் அனுப்பியதுக்கு எதாவது காரணம் இருக்கும் என்று எண்ணினான்.
ராஜாக்கு இவனுங்களை கூட்டிட்டு போக கொஞ்சம் கூட விருப்பமில்லை. ராஜா சிறு தலை அசைப்போடு. அர்ஜுனை பார்க்க, “சார் நாங்க ரெண்டு பேர் வர சம்மதித்தால், நாங்க உங்களுக்கு உதவி செய்ய காட்டுக்கு உள்ள வரோம்,” என்று அர்ஜுன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசினான்.

“ராஜா சார் ப்ளஸ் எனக்கு இந்த அக்கா ரொம்ப பிடிச்சி போச்சி எனக்கு துணையாக வரட்டுமே” என ரோஸ் சொல்ல.
“நீ கேட்டு என்னைக்காவது நான் இல்லனு சொல்லி இருக்கேனா ரோஸ்”.

“தேங்க்ஸ் ராஜா சார்,” ஆதிரா இருவரையும் பார்த்து “அர்ஜுன் மாமா இவங்க இருவரும் புருஷன் பொண்டாட்டியா?”.

ரோஸ் ஆதிராவை நோக்கி “இல்லை என்று சொல்ல வரும் முன்பு ராஜா முந்திக்கொண்டு.
“இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சது, எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம்” ராஜா சொல்ல.

“மாமா நம்ம போலவே, இவங்களும், நாங்களும் காட்டுக்கு போய்ட்டு வந்து கல்யாணம் செஞ்சிக்கிறதா தான் இருந்தோம்”.
நால்வரும் காட்டை நோக்கி நடக்கத் துவங்கினர் காலை ஏழு மணி போல.

அக்னி நிலா திருத்திரு என்று முழித்துக்கொண்டு வசியை பார்க்க. “ஏன் நீங்க இப்படி செய்றிங்க”
வசி காரை வேகமா ஓட்டிக்கொண்டே, “எப்படி செய்றேன்?” என்றான்.
“அதான் முத்தம் கொடுக்க சொல்றிங்களே.”

“நான் உன்ன வற்புறுத்தல, கொடுத்தா கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னேன்”.

“வேற எதாவது கேளுங்க நான் செய்றேன் இது வேண்டாமே” அவளது அணில் கண்ணை வைத்து பாவமாக பார்க்க.
“நான் சொன்னது சொன்னதுதான்” வசி பேச்சில் உறுதி தெரிந்தது.

“சரி கொடுக்கறேன், வண்டிய திருப்புங்க”.

“முடியாது, நீ முதல்ல கொடு திருப்புறேன்” வசி வண்டியை நிறுத்திவிட்டு, அக்னி நிலா முகத்துக்கு நேராக அவனது கையை நீட்டினான்.

அக்னி வேண்டா வெறுப்பாக, அவன் கைக்கு முத்தம்கொடுக்க வர, வசி கொஞ்சம் கொஞ்சமா கையை தன் புறம் இழுத்தான். அக்னியும் அவன் கையை பிடித்து முத்தம் கொடுக்க அவனிடம் நெருங்க, வசி அக்னி நிலாவை அவள் எதிர் பார்க்காத போது ஒரு நொடியில் இழுத்து, ஆவள் மெல்லிய இதழுக்கு ஒரு மெல்லிய முத்தம் கொடுக்க.

“அக்னி நிலா கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது, வசி விலகிய சமயம்.

அக்னி நிலா கண்களில் குளம் கட்டி இருந்தது, வசிக்கு நெற்றி பொட்டில் அடித்தது போல இருந்தது ‘அந்த பெண் இவள் இல்லை’.

அக்னி நிலா முகத்தை திருப்பி அழுதுகொண்டே வந்தாள், அவளால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அந்த இடத்துக்கு போகும் முன்பு, சாப்பிட கூட்டிக்கொண்டு போனான். வசி, அக்னி நிலா குணிந்து கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு, காரில் போய் அமைதியா உட்கார்ந்து கொண்டாள். வசியை பார்த்து பயப்பட துவங்கி விட்டாள் அக்னி நிலா, அவள் உடலில் சிறு நடுக்கம் தெரிந்தது.

அக்னி நிலா வசி அருகில் இருக்கும் போது உடல் அதிர்வதை உணர்ந்து கொண்டவன்.
“அக்னி நீ உள்ள போ, நான் இங்க இருக்கேன், ப்ரியா இரு, ஒரு மணி நேரம் கழித்து நான் வந்து கூட்டிட்டு போறேன்.”

வசி பக்கம் இருக்கும் ஒரு வேலை செய்யும் பெண்ணிடம், “இவங்கள பத்திரமா பாத்துக்கோங்க” சொல்லிட்டு கேஸ் பற்றி கொஞ்சம் பார்த்துக்கொண்டு இருந்தான்.
உள்ளே சென்ற அக்னி நிலா, ஒரு கல்லை காலால் மிதித்தாள், ஒரு துவாரம் ஏற்பட்டது அதனில் கை விட்டு ஒரு துணியை எடுத்து அவள் பையில் மறைத்து வைத்துக்கொண்டு, அங்கு காளி சிலை அடியில் இருந்த மண்ணை கொஞ்சம் எடுத்துக் கொண்டாள் அந்த துணியில். காளி கையில் இருந்த ஒரு குட்டி கத்தியும் எடுத்து ஆவள் பையில் மறைத்துக்கொண்டு, வெளியே வர வசி அவளுக்காக ஏதோ வாங்கி வைத்து இருந்தான்.
“தேங்ஸ்” சொல்லி வாங்கிக் கொண்டவள், வசிக்கு தெரியும் அக்னி நிலாக்கு அதிகம் பசிக்கும் என்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எதாவது வாங்கிக் கொடுத்து கொண்டே வசி வீட்டுக்கு வந்துட்டான்.
ருத்ராவும் வேகமாக, முயலை சமாதானப் படுத்தி, அங்கு விட்டுட்டு அக்னி நிலாவை பார்க்க ஓடி வந்துட்டான்.

ருத்ரா வசிக்கும் போன் போட்டு “வசி அக்னிக்கு கொஞ்சம் நைட் டிரஸ் வாங்கணும், நான் வங்க மறந்துட்டேன் அவளை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா”.

“சரி டா, நீயே அவ கிட்ட சொல்லு
“சரி டா, நீயே அவ கிட்ட சொல்லிடு, நான் சொன்னா ஏதோ என்னை பொறுக்கி போல பார்ப்பாள்”.

“இவன் ஒரு லூசு, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுவான், அக்னி கிட்ட கொடு”.

“அக்னி வசி கூட ஷாப்பிங் போய்ட்டு வா, நீ வரத்துக்குள்ள நான் உனக்கு பிடித்தது எல்லாம் சமைச்சி வைக்கிறேன் ஓகே வா”.
அக்னி நிலா “ம்ம்...” மட்டும் சொன்னா.

வசி கடைக்கு கூட்டிட்டு போக, அக்னி நிலா மனதில் வசியை நன்றாக திட்டிக்கொண்டே வந்தாள்.

ஆகாஷ் அங்கு சைலுவை ஏதேதோ சொல்லி சமாதானப் படுத்த படாத பாடு பட்டான். ஷைலுவும் போனா போதுனு விட்டுட்டா, அவனது பர்ஸ்ஸில் இருந்த மேப் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியில் இருக்கும் சமயம்.

சைலு ஆகாஷை கட்டிக்கொண்டு “ஆகாஷ் நமக்கு பாப்பா வர போது”. சற்று முன் நடந்த அதிர்ச்சி மாறி, ஆகாஷ்க்கு அவ்ளோ சந்தோசம் நான் விலகி போக நினைத்தால் கூட அந்த மேப் என்னை வச்சி செய்து.
‘இந்த நேரம் சைலுவை பாத்துக்கணும், பாவம் அவள் எனக்காக நிறைய வருஷம் காத்துக்கொண்டு இருந்தது போதும், இனியும் இவளை வருத்தப்பட விடக்கூடாது’ என நினைத்தான் ஆகாஷ்.
சைலுவை ஆதரவாக பிடித்து கொண்டு ‘கோட்டையை தேடி போறது யாரா இருந்தாலும் கடைசியா என்கிட்ட தான் வரணும்.’
அவர்கள் தேடி போற பொருளின் சாவி ஆகாஷ் கழுத்தில் இருந்ததை அவன் வருடிக்கொண்டு இருந்தான்.
மாயாக்கு அந்த கோட்டையில் என்ன வேண்டும், ஆகாஷ்கும் அந்த கோட்டைக்கும் என்ன சம்பந்தம்.

மாயா, அக்னி நிலா வேற வேற என்றால் வசி யாரை விரும்புகிறான்?

மாயா மாயம் செய்ய வருவாள்...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom