- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அவளை உரசிக்கொண்டு அருகில் அமர்ந்தவன் தொலைவில் விளையாடும் தன் மகன் மேல் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, "அம்முலு யூ ஆர் மை லைஃப். ஐ காண்ட் இமாஜின் மை லைஃப் வித்தவுட் யூ" என சொல்ல திருதிருத்தாள் அலமேலு.
கூடவே, "என்ன வேணும் மாமா?" என்ற கேள்வியுடனே எழுந்து நின்றாள்.
அவளின் கையைப் பிடித்திழுத்து மடியில் விழச்செய்தவன், "ம்? நீதான் வேணும்" என அவளின் பூவிதழை விரலால் வருட, சரியாக அப்பாவென்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் விக்ரமன்.
இருவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் விலகியமர்ந்து, "என்னடா?" என ஏகக்காலத்தில் குரல் கொடுத்தனர்.
"அப்பா இந்த வண்டியை மாட்டிக் கொடுங்க" என்று சக்கரம் கழன்ற நுங்கு வண்டியை அவனிடம் நீட்டினான் விக்ரமன். சக்கரம் தயாரானதும் மறுபடியும் தன் மண்புழு வேட்டைக்குச் சென்றுவிட்டான்.
விளையாடும் அவனையே பார்த்திருந்த அலமேலுவிடம், "பின்னாடி நம்ம விக்கி பெரிய ஆளா வருவான் இல்ல அம்முலு?" என்றவன் கேட்கவும்,
"பின்னாடி என்ன மாமா, இப்போவே அவன் பெரிய மனுஷ வேலையெல்லாம் பார்க்கறானே" என அங்களாய்த்துக் கொண்டாள் அலமேலு.
"அப்படி என்ன பண்ணினான் என் புள்ள?" என்றவன் சுவாரசியமாய் கேட்க,
"ஆமா, பெரிய புள்ள. சரியான தொல்ல மாமா இவன். உங்கப் புள்ளைய நீங்க தான் மெச்சிக்கனும். இவன் டீச்சரம்மா இவனைப் பத்தி என்ன சொல்றாங்க தெரியுமா? உங்கப் பையனுக்கு வயசுக்கு மீறின ஃபீலிங்ஸ் எல்லாம் வருது. நீங்க உடனே டீசியை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க" என்றதும் விளக்கெண்ணெய் குடித்தது அவன் முகம்.
"அப்படி அவன் என்ன பண்ணினானு கேட்டியா?" என்றான் ஆர்வம் தாங்காமல்.
"கேட்டேனே. அந்த கருமத்தை என் காதால கேட்டேனே. அவன் கிளாஸ்ல இருக்கற குட்டி குட்டி பொம்பளப் பசங்களையெல்லாம் கிளாஸுக்கு வெளில தூக்கிட்டுப் போய் விடுறானாம் மாமா. அந்தப் புள்ளைங்களும் விக்கி விக்கினு இவன் பின்னாடி தான் சுத்துதுங்களாம். வருங்காலத்துல இப்படி யாரை கடத்தி கொண்டுவரப்போறானோ தெரியல." என கண்ணை உருட்டி உருட்டிக் கூறினாள் அலமேலு.
"இதுல என்னடி இருக்கு? சின்ன புள்ளைங்களுக்கு உதவியிருக்கான் என் பையன். என்னை மாதிரியே சேவை செய்றதுல இறங்கியிருக்கான். இதுல என்ன தப்பிருக்கு?" எனத் தன் அணில் வால் மீசையை நீவிவிட்டுக்கொண்டே பெருமை பேசினான் முத்துப்பாண்டியன்.
"ஹுக்கும், சரி அதை விடுங்க. இதைக் கேளுங்க. அவனோட கிளாஸ் மிஸ்ஸோட பொண்ணைப் பார்த்து தினமும் கண்ணடிக்கிறானாம் மாமா. அதான் அந்த டீச்சர் காண்டாகி தினமும் வார்ன் பண்ணி அனுப்புறாங்க" எனத்தன் மகனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி முத்துப்பாண்டியனை விழி பிதுங்கச் செய்தாள் அலமேலு.
பின், அவனைப் பார்க்க பாவமாக இருந்ததோ என்னவோ, "விடுங்க மாமா. இதுல விக்கியாவது தன் டீச்சரோட பொண்ணைப் பார்த்து தான் கண்ணடிச்சான். ஆனா, இந்த கௌதமன் பயபுள்ள அந்த டீச்சரையேப் பார்த்து கண்ணடிச்சிருக்கான்." என்றதும், குபீரென சிரித்துவிட்டான் முத்துப்பாண்டியன்.
அவனைப் பார்த்து முறைத்தவள், "இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா மாமா?" எனக் கேட்க, முத்துப்பாண்டியன் ஆர்வமானான்.
"யாருன்னு சொல்லு அம்முலு. உடனே வேலையை விட்டு தூக்கிடலாம்" என்றான்.
"ஹான்! அப்படினா உங்களை தான் மாமா தூக்கனும். எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? பசங்க முன்னாடி என்னைப் பார்த்து கண்ணடிக்காதீங்க, தூக்காதீங்கனு? அதைப் பார்த்து தான் இந்தப் பயலுக இப்படியெல்லாம் பண்றானுக" என முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டவளை ஆசையாகக் கண்டவன்,
"ஏன் அம்முலு இப்படி டென்ஷன் ஆகற? பாரு உன் முகமெல்லாம் எப்படி செவந்து போயிடுச்சின்னு. அப்புறம் மாமாவுக்கு மூடாகுமா இல்லையா?" என்று கூறிக்கொண்டே நெருக்கியவனை தோளில் அடித்தவள்,
"மாமா நான் என்ன சொல்லிட்டிருக்கேன்? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க?" என விலகி அமர்ந்தாள்.
கூடவே, "என்ன வேணும் மாமா?" என்ற கேள்வியுடனே எழுந்து நின்றாள்.
அவளின் கையைப் பிடித்திழுத்து மடியில் விழச்செய்தவன், "ம்? நீதான் வேணும்" என அவளின் பூவிதழை விரலால் வருட, சரியாக அப்பாவென்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் விக்ரமன்.
இருவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல் விலகியமர்ந்து, "என்னடா?" என ஏகக்காலத்தில் குரல் கொடுத்தனர்.
"அப்பா இந்த வண்டியை மாட்டிக் கொடுங்க" என்று சக்கரம் கழன்ற நுங்கு வண்டியை அவனிடம் நீட்டினான் விக்ரமன். சக்கரம் தயாரானதும் மறுபடியும் தன் மண்புழு வேட்டைக்குச் சென்றுவிட்டான்.
விளையாடும் அவனையே பார்த்திருந்த அலமேலுவிடம், "பின்னாடி நம்ம விக்கி பெரிய ஆளா வருவான் இல்ல அம்முலு?" என்றவன் கேட்கவும்,
"பின்னாடி என்ன மாமா, இப்போவே அவன் பெரிய மனுஷ வேலையெல்லாம் பார்க்கறானே" என அங்களாய்த்துக் கொண்டாள் அலமேலு.
"அப்படி என்ன பண்ணினான் என் புள்ள?" என்றவன் சுவாரசியமாய் கேட்க,
"ஆமா, பெரிய புள்ள. சரியான தொல்ல மாமா இவன். உங்கப் புள்ளைய நீங்க தான் மெச்சிக்கனும். இவன் டீச்சரம்மா இவனைப் பத்தி என்ன சொல்றாங்க தெரியுமா? உங்கப் பையனுக்கு வயசுக்கு மீறின ஃபீலிங்ஸ் எல்லாம் வருது. நீங்க உடனே டீசியை வாங்கிக்கோங்கனு சொல்றாங்க" என்றதும் விளக்கெண்ணெய் குடித்தது அவன் முகம்.
"அப்படி அவன் என்ன பண்ணினானு கேட்டியா?" என்றான் ஆர்வம் தாங்காமல்.
"கேட்டேனே. அந்த கருமத்தை என் காதால கேட்டேனே. அவன் கிளாஸ்ல இருக்கற குட்டி குட்டி பொம்பளப் பசங்களையெல்லாம் கிளாஸுக்கு வெளில தூக்கிட்டுப் போய் விடுறானாம் மாமா. அந்தப் புள்ளைங்களும் விக்கி விக்கினு இவன் பின்னாடி தான் சுத்துதுங்களாம். வருங்காலத்துல இப்படி யாரை கடத்தி கொண்டுவரப்போறானோ தெரியல." என கண்ணை உருட்டி உருட்டிக் கூறினாள் அலமேலு.
"இதுல என்னடி இருக்கு? சின்ன புள்ளைங்களுக்கு உதவியிருக்கான் என் பையன். என்னை மாதிரியே சேவை செய்றதுல இறங்கியிருக்கான். இதுல என்ன தப்பிருக்கு?" எனத் தன் அணில் வால் மீசையை நீவிவிட்டுக்கொண்டே பெருமை பேசினான் முத்துப்பாண்டியன்.
"ஹுக்கும், சரி அதை விடுங்க. இதைக் கேளுங்க. அவனோட கிளாஸ் மிஸ்ஸோட பொண்ணைப் பார்த்து தினமும் கண்ணடிக்கிறானாம் மாமா. அதான் அந்த டீச்சர் காண்டாகி தினமும் வார்ன் பண்ணி அனுப்புறாங்க" எனத்தன் மகனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி முத்துப்பாண்டியனை விழி பிதுங்கச் செய்தாள் அலமேலு.
பின், அவனைப் பார்க்க பாவமாக இருந்ததோ என்னவோ, "விடுங்க மாமா. இதுல விக்கியாவது தன் டீச்சரோட பொண்ணைப் பார்த்து தான் கண்ணடிச்சான். ஆனா, இந்த கௌதமன் பயபுள்ள அந்த டீச்சரையேப் பார்த்து கண்ணடிச்சிருக்கான்." என்றதும், குபீரென சிரித்துவிட்டான் முத்துப்பாண்டியன்.
அவனைப் பார்த்து முறைத்தவள், "இதுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா மாமா?" எனக் கேட்க, முத்துப்பாண்டியன் ஆர்வமானான்.
"யாருன்னு சொல்லு அம்முலு. உடனே வேலையை விட்டு தூக்கிடலாம்" என்றான்.
"ஹான்! அப்படினா உங்களை தான் மாமா தூக்கனும். எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? பசங்க முன்னாடி என்னைப் பார்த்து கண்ணடிக்காதீங்க, தூக்காதீங்கனு? அதைப் பார்த்து தான் இந்தப் பயலுக இப்படியெல்லாம் பண்றானுக" என முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டவளை ஆசையாகக் கண்டவன்,
"ஏன் அம்முலு இப்படி டென்ஷன் ஆகற? பாரு உன் முகமெல்லாம் எப்படி செவந்து போயிடுச்சின்னு. அப்புறம் மாமாவுக்கு மூடாகுமா இல்லையா?" என்று கூறிக்கொண்டே நெருக்கியவனை தோளில் அடித்தவள்,
"மாமா நான் என்ன சொல்லிட்டிருக்கேன்? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க?" என விலகி அமர்ந்தாள்.