Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 19



ஏற்கனவே கட்சியில் உள்ள பெரிய தலைகள் எல்லாம், இந்தத் தேர்தலில் சங்கரப்பாண்டியன் தோற்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை எனவும், அதிலும் ஒரு பெண்ணிடம் தோற்றால் ஆணென்ற அடையாளத்திற்குரிய மீசையையே எடுத்துவிட வேண்டியது தான் எனவும் ஏற்றி விட்டிருந்ததால், தன் முன் நின்ற நாச்சியம்மையையும் முத்துப்பாண்டியனையும் விரோதிகளை போல் முறைத்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன்.


பிரபு தன் பற்ற வைக்கும் வேலையை துவங்கினான்.


"என்ன நாச்சியம்மை தேர்தல்ல நிக்கிறாப் போலயிருக்கு? புருஷன் செத்துட்டான்னா, புள்ளக்குட்டிகளோட ஆஃப் பண்ணின மிஷின் மாதிரி வீட்டுல கிடக்கறது தான் பொறுப்பான ஒரு பொம்பளைக்கு அழகு. அதை விட்டுட்டு உனக்கு எதுக்குமா இந்த வேண்டாத வேலை எல்லாம்?" என்றான் நக்கலாக.


"ஹேய்! யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசு. இல்ல பேசவே முடியாத மாதிரி பண்ணிடுவேன்" என முத்துப்பாண்டியன் பிரபுவை மிரட்டவும், வரம்பு மீறிப்பேசினான் அவன்.


"மரியாதையா? அவளுக்கென்ன, உனக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன்டா. எல்லாம் பொம்பளப் பின்னாடி போய் கூட்டமா நிக்கிறீங்களேடா. நீங்களும் சேலை கட்டிக்கிட்டு வர வேண்டியது தானே? என்ன கட்டிக்க சேலையில்லையா? நான் வேணும்னா வாங்கித் தரவா?" என்றதும், கோபமடைந்த முத்துப்பாண்டியன் பட்டென்று பதிலடி கொடுத்தான்.


"நாங்க எதுக்குடா சேலை கட்டிட்டு வரணும்? இந்தப் பெரிய மனுசனோட குடும்பத்துக்கே நல்லா ஜிங்ஜாங் போட்டுட்டு திரியுறியே, நீ தான் உன் கையில ஜால்ராவை தூக்கிக்கிட்டு வரணும்" என்றதும், தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டிய பிரபு முத்துப்பாண்டியனை அடிக்குமாறு அவர்களை ஏவிவிட்டான்.


அவர்களும் வேல் கம்புடன் அவனை அடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாளாக நின்று அடித்து நொறுக்கினான் முத்துப்பாண்டியன்.


இரு தரப்பினருக்கிடையேயும் கலகம் வெடிக்க, அந்த இடமே போர்க்களமானது.


இன்னும் அதிக அடியாட்கள் வருவதைப் பார்த்து பயந்து போன நாச்சியம்மை சங்கரப்பாண்டியனிடம் கெஞ்சி நின்றார்.


"ஐயா, உங்க ஆளுகளை சண்டப்போட வேணாம்னு சொல்லுங்க. மொதல்ல தப்பா பேசினது அவங்க தான். எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்கய்யா" என்றார்.


"என் குலம் என்ன? அந்தஸ்து என்ன? நேத்து முளைச்ச காளான் நீ. என்னையே எதிர்த்து நிற்கறியா? உனக்கு எவ்வளவு தைரியம்? என்னது? என் ஆளுங்க தான் தப்பாப் பேசினாங்களா? சரியாத்தானே பேசினாங்க? பிரபு சரியாத் தானே கேட்டிருக்கான்? வீட்ல இருக்க வேண்டிய மெஷின் நீ. எதுக்காக அரசியலுக்கு வந்த? ஒருவேளை சம்பாதிக்கற காசுப் பத்தலையோ?" என்று குத்தலாய் கேட்டார்.


இதில் பிரபுவும் அவருடன் கூட்டு சேர்ந்துக் கொண்டான்.


"சரியா சொன்னீங்க மாமா. பணம் சம்பாரிக்கத் தான் இவங்க அரசியலுக்கு வந்திருக்காங்க. அது தெரியாம இந்த சேரி பயலுகளும் இவங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுக. எளிமையா பணம் சம்பாரிக்க நான் ஒரு வழி சொல்லவா நாச்சியம்மா? உன் புருஷன் வேற மண்டைய போட்டுட்டான்ல?" என நாச்சியம்மையை மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
தன்னை அனல் மேல் நிற்க வைத்தது போல் துடிதுடித்துப் போனார் நாச்சியம்மை.


அந்நேரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிரவுவை 'பளார்' என காது ஜவ்வு கிழிய அறைந்திருந்தான் முத்துப்பாண்டியன்.


உடன் பிரவுவின் கைகளை பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டு "அறைங்க அண்ணி" என்றும் ஊக்கினான்.


நாச்சியம்மை யோசிக்கவெல்லாம் இல்லை. பளார் பளார் என்று இரண்டு அப்புவிட்டார்.


கையுடனே சங்கரப்பாண்டியனையும் பார்த்து, "இதுவரை உங்களை நல்ல மனுஷனு தான் நினைச்சிக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க பெண்ணை இழிவா நினைக்கற, தரம் தாழ்ந்த மிருகக் கூட்டத்தைச் சேர்ந்தவர்னு இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன். இதுக்காகவாவது நான் இந்த தொகுதியில நின்னு ஜெயிச்சிக் காட்டுறேன்" என்று அவரிடம் சவால் விட்டார்.


"யாருக்கிட்டடி சவால் விடுற?" என சங்கரப்பாண்டியன் நாச்சியம்மையை அடிக்க கை ஓங்க, முத்துப்பாண்டியன் இடையில் புகுந்து அவரின் ஓங்கிய கையை தடுத்துப் பிடித்து கீழே தள்ளிவிட்டான்.


வயோதிகத்தால் சமநிலை தவறி தொப்பென்று கீழேப்போய் விழுந்தார் சங்கரப்பாண்டியன்.


இவ்வளவு நேரம் தன் தந்தைக்காக வெளியே நின்று காத்திருந்த உதயச்சந்திரன், கூச்சல் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த சமயம் பார்த்தது முத்துப்பாண்டியன் தள்ளிவிட்டு கீழே விழுந்த சங்கரப்பாண்டியனை தான்.


தந்தையை ஒருவன் அடிக்க தனயன் பார்த்துக் கொண்டிருப்பானா என்ன?


கோபத்தில் புயலாய் புறப்பட்டவன் முத்துப்பாண்டியனின் சட்டைக் காலரை கொத்தாகப் பற்றி கீழேத் தள்ளி உருள ஆரம்பித்தான்.


நாச்சியம்மை மிரண்டு போய் இதனைப் பார்த்திருக்க, தேர்தல் ஆணைய அலுவலர்களின் தகவலால் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.


இரு தரப்பினரையும் பிரித்து வைத்த காவல் துறையினர், இனி எந்த தகராறும் செய்யக்கூடாது எனப்பேசி, கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்தனர்.


வெளியே வந்த முத்துப்பாண்டியனை அனைவரின் முன்பும், உதயச்சந்திரன் ஒற்றை விரல் காட்டி எச்சரித்தான்.


"என் அப்பாவையே அடிச்சிட்டல்லடா? உன் குடும்பத்தையே உரு தெரியாம அழிக்கிறேனா இல்லையானு பாரு. உன் சாவு என் கையால தான்டா" என தொடை தட்டினான்.


பயந்து நடுங்கி நின்றிருந்த நாச்சியம்மையிடம் முத்துப்பாண்டியன், "விடுங்க அண்ணி, மக்களுக்கு நல்லது செய்யணும்னு வந்தாலே இப்படித்தான் நாலு பேர் இடைஞ்சல் பண்ணுவானுங்க. இவனுக மிரட்டலுக்கெல்லாம் பயந்தா வாழ முடியாது" என தெம்பூட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


அன்றைய நாள் சாயுங்காலம் தன் சக்கர நாற்காலியில் படுத்திருந்த சங்கரப்பாண்டியன், தன்னை முத்துப்பாண்டியன் அறைந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.


அப்பொழுது அவரின் அறைக்குள் நுழைந்த பிரபுவும் உதயச்சந்திரனும் அவரையேப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
உதயச்சந்திரன் "அப்பா" என்று அவரின் கை தொடவும் நினைவுக்கு வந்தவர்,


"அவனை ஏதாவது செய்யணும்டா. அப்போ தான் என் மனசு ஆறும். அவ்வளவு பேர் முன்னாடியும் என்னை அசிங்கப் படுத்திட்டான்டா. அவனை ஏதாவது செய்யணும். பிரபு, உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளு தர்றேன். ஆனா, இந்தத் தேர்தல்ல நான் தான் ஜெயிக்கணும். அதுவும் அமோக வாக்குகள் வித்தியாசத்துல ஜெயிச்ச வெற்றியா இருக்கணும். இனி எல்லாப் பொறுப்பையும் உன்கிட்ட ஒப்படைக்கறேன். அவனை ஏதாவது செய்" என மறுபடியும் சொன்னதையே சொல்லிக்கொண்டு கண்மூடி சாய்ந்தார்.


கண்ணுக்குள் முத்துப்பாண்டியன் அவரை தள்ளிவிட்ட காட்சியே ஓடிக் கொண்டிருந்தது.


வீட்டைவிட்டு வெளியேறிய பிரபு இது தான் சமயம் என்று உதயச்சந்திரனை மதுபானவிடுதிக்கு அழைத்துச் சென்றான். அவனை மூக்குமுட்டும் அளவுக்கு குடிக்க வைத்தான்.


போதையில் இருந்தவனிடம், "மச்சான், மாமா சொன்ன மாதிரி அவளையும் அவனையும் ஏதாவது பண்ணனும் மச்சான்" எனக்கூற, உதயச்சந்திரன் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் தூரத்தில் வெறித்துக் கொண்டிருந்தான்.


தன் அடுத்த வார்த்தைத் தூண்டிலை வீசினான் பிரபு.


"நம்ம வேலு சொல்றான் மச்சான். இதேயிது எங்கப்பனை எவனாவது என் கண்ணு முன்னாடி இப்படி அடிச்சிருந்தா, இந்நேரம் அவன் அடிச்ச கையவே வெட்டியிருப்பேனு. ஒரு அப்பனுக்கு பொறந்த எவனாயிருந்தாலும் அப்படி தான் செய்வானு சொல்றான் மச்சான். அப்போ நீங்க.." என இழுக்கவும்,


மேசையிலிருந்த பாட்டில்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டு எழுந்த உதயச்சந்திரன், பிரவுவின் சட்டைக் காலரைப் பற்றி, "என்னடா சொன்ன?" எனக் கண்கள் சிவப்பாகி உறுமினான்.


"அய்யோ மச்சான்! நான் எதுவும் சொல்லல. வேலு சொன்னதை தான் சொன்னேன்" என உயிர் பயத்தில் உளறினான் பிரபு.


அவன் காலரை விட்டு நாற்காலியில் அமர்ந்தவன் தான் தெளிவாய் இருப்பது போல் கேள்விகேட்டான். "சரி, இப்போ நான் என்ன செய்யனும்?" என்று.


தான் எதிர்பார்த்த வார்த்தை அவனின் வாயிலிருந்து வந்த மகிழ்ச்சியில், "ஒண்ணுமில்ல மச்சான். உங்க அப்பாவை அறைஞ்ச அவன் கையை மட்டும் வெட்டணும்" என நைச்சியமாக கூறினான் பிரபு.


தள்ளாடியபடியே வேகமாக எழுந்தவனை, "அய்யோ! இப்போ இல்ல மச்சான். நாளைக்கு" என கைத்தாங்கலாக அவர்களின் அரிசி குடவுனுக்கு அழைத்துச் சென்றான்.


அரிசிக்குடவுனில் ஏற்கனவே சங்கரப்பாண்டியனின் விசுவாசிகள் நால்வர் கூடியிருக்க, போதையிலிருந்தவனை அவர்களிடம் அழைத்துச் சென்று, "இதோ நம்ம சந்திரனே சொல்லிட்டான். அவனை வெட்டிருங்க" என்றான்.


என்னது அவன் உயிரையே எடுக்கணுமா? என அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சூழ்ச்சி பண்ணினான் பிரபு.


சுயநினைவிழந்து கிடக்கும் உதயச்சந்திரனிடம், "மச்சான் நீங்க தானே சொன்னீங்க அவனை வெட்டணும்னு?" என அவன், அவன் கையை வெட்ட வேண்டும் என்று சொன்னதை மாற்றித் திரித்துக் கேட்டான்.


போதையிலிருந்த உதயச்சந்திரனும் "ஆமா வெட்டனும்" என்று உளறினான்.


"சரிங்கய்யா, உங்கக் கை கரைபட வேணாம். நாங்களே நம்ம முருகேசனை வச்சி முடிச்சிடுறோம்" என அவனின் விசுவாசிகள் கூறவும், பிரபு தான் காரியம் சாதித்த நிம்மதியில் சந்திரனை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
உதயச்சந்திரனின் விருப்பப்படி சங்கரப்பாண்டியனின் விசுவாசிகள் முத்துப்பாண்டியனை ஒரேடியாக தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர். அதன்படி மறுநாள் அவன் செல்லும் காரை, லாரி வைத்து தூக்கவும் ஏற்பாடு செய்தனர்.


மறுநாள் காலையில் தங்கள் திருமணநாள் என்பதால் வீட்டிலுள்ள அனைவரிடமும் வாழ்த்துப் பெற்று, தங்கள் குலதெய்வக் கோவிலுக்கு புறப்பட்டனர் முத்துப்பாண்டியனும் அலமேலுமங்கையும்.


விக்ரமனை அவர்கள் அழைக்க அவன் தன் அண்ணன்மார்களுடன் விளையாடப் போவதாகக் கூறி, வர மறுத்துவிட்டான். எனவே, அவனை வீட்டில் விட்டுவிட்டு தாங்கள் மட்டும் செல்ல முடிவெடுத்தனர்.


அவர்கள் பண்ணைபுரத்திலிருந்து கிளம்பும் நேரத்தில், இனி தன் பெற்றோரை தான் காணப்போவதில்லை என்பதை அறியாத விக்ரமன் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கையசைத்து வழியனுப்பி வைத்தான்.


வேண்டாம்! செல்ல வேண்டாம்! என விக்ரமனின் கையாட்டல் மூலம் விதி அவர்களுக்கு சொல்ல நினைத்ததோ?


காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது, "ஏன்டி அம்முலு எப்பப் பார்த்தாலும் கோவில் குளம்னு அலையுறதையே வேலையா வச்சிருக்க? வீட்ல இருந்தாலாவது ஏதாவது ரெடி பண்ணலாம். கோவிலுக்கு போய் நாம என்ன செய்யப்போறோம்?" என அமைதியாய் வரும் தன் மனைவியை வம்புக்கிழுத்தான் முத்துப்பாண்டியன்.


"ம்? புளியோதரை கிண்டி பூசாரிக்கு தராம சாப்பிடப்போறோம். போகும்போதே வாயைக் கிளறாதீங்க மாமா. பேசாம வாங்க." என்றவள் சலித்துக் கொள்ளவும்,


"ஹேய்! கோவிலுக்குப் போய் என்ன செய்யப்போறோம்? ஒழுங்கா சொல்லு?" என விடாமல் கேட்டவனிடம்,


"ச்சோ! நம்ம ரெண்டு பேரோட பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு, அப்படியே அக்கா தேர்தல்ல ஜெயிக்கணும்னு சிறப்பு பூஜையும் செய்யப்போறோம் மாமா. நேரா ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க." என அவனின் கவனச் சிதறலை சுட்டிக் காட்டினாள்.


"புருஷன் கூட ஒன்றாவடி சண்டை போட்டுட்டு பிள்ளை வரம் கிடைக்க மரத்துல தொட்டில் கட்டுறது. இருக்கற மரத்தையும், குளத்தையும் அழிச்சிட்டு மழை வரணும்னு சாமிக்கு பூஜை செய்றது. திருப்பதிக்குப் போய் கட்டு கட்டாப் பணம் போடுறது. ஆனா, வீட்டுக்கு வர பிச்சைக்காரனுக்கு ஒத்தப் பருக்கை சோறு போடுறது கிடையாது. உங்களையெல்லாம் என்ன தான்டி பண்றது? உங்க அக்கா தேர்தல்ல ஜெயிக்கணும்னா கை வலிக்க சுவத்துல போஸ்டர் ஒட்டு. அந்தத் தொகுதியில கஷ்டப்படுறவங்களுக்குப் போய் உங்க அக்கா பேரைச்சொல்லி உதவி பண்ணு. கட்சிப் பொறுப்புகளை கூட சேர்ந்து கவனி. அதை விட்டுட்டு சிறப்பு பூஜை செஞ்சா அண்ணி ஜெயிச்சிடுவாங்களா?" என்றவனின் கழுத்தை நெறிப்பது போல் கைகளை கொண்டு சென்றவள்,


"நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க மாமா. நாளைலயிருந்து உங்களுக்கு வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் குழம்பு கட்." எனவும், மந்தகாசம் புரிந்தான் முத்துப்பாண்டியன்.


"பரவாயில்ல அம்முலு. அதுக்குப் பதிலா முருங்கைக்காய் குழம்பு, முருங்கைக்காய் கூட்டுனு வச்சி சரிகட்டிடு" என்றான்.


"அய்யோ! கோவிலுக்கு போகும் போது எப்படி பேசுறீங்க மாமா?" என்று சிணுங்கியதும்,


"ஹேய்! நான் அந்த குழம்புக்கு பதிலா இந்த குழம்பு வைனு தான் சொன்னேன். என் மனசுல எந்தத் தப்பும் இல்லப்பா. நீ தான் தப்புத் தப்பா யோசிக்கிற." என்று அவள்பக்கம் திருப்பி விட்டான்.


"போங்க மாமா. என்ன தான் நம்மளோட வெற்றிக்குக் காரணம் உழைப்பா இருந்தாலும் நம்மை மீறின சக்தி ஒன்னு இருக்கு மாமா. அதை மொதல்ல நம்பணும்" என்று தன் விளையாட்டுத் தனத்தை கை விட்டவள் தீவிரமாகக் கூறினாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"நானும் அந்த சக்தியை நம்புறேன் அம்முலு. ஆனா, அந்த சக்தியை மட்டுமே பெருசுனு சொல்லிக்கிட்டு, மக்களை ஏமாத்தி பிரச்சினை செஞ்சிக்கிட்டு இருக்கிறவங்களைத் தான் நம்பாதனு சொல்றேன்." என்றவன் திரும்பிப் பார்க்க, ஜீவனற்றுக் கிடந்தாள் அம்முலு.


அவளைக் கண்டு திடுக்கிட்டவன், அம்முலு என்றழைக்க வாயைத் திறக்க முயல, சட்டென்று ஏதோவொன்று அவனின் தொண்டையை வந்து கவ்வியது.


கண்கள் இருட்டாகி சுயநினைவிழந்தவனின் கைகள் மட்டும் தானாக காரை ஓட்டிக் கொண்டிருந்தது.


பாதை மாறிய காரானது சாலையோரமாய் நின்றிருந்த லாரியின் மீது மோதி தூக்கியெறியப்பட்டது.


ஏற்கனவே இவ்வுலகை விட்டு தங்கள் ஜீவக்கூட்டிலிருந்து இணை பிரியாமல் பறந்து சென்ற இரு காதல் பறவைகள், தூரமாய் நின்று அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தன.


பின், தங்களுக்கு வந்த ஆணையை ஏற்று கரம் கோர்த்து மேகப்படிகளில் வானேறிச் சென்றனர்.


மறுபுறம் வீட்டில் தன் மகன்களுடன் கேரம் விளையாடிக் கொண்டிருந்த நாச்சியம்மையோ விசயமறிந்து, அதில் தான் கேட்ட செய்தியை ஜீரணிக்க முடியாமல், நெஞ்சைப் பிடித்து நிலத்தில் சரிந்தார்.


அவரின் அலறலில் தங்கள் அறையிலிருந்து ஓடி வந்த ராதாவும், ஹரியும் வீழ்ந்துக் கிடந்தவரை கரம் தாங்கி என்னவாகிற்று என விசாரித்தனர்.


அவர் கூறிய செய்தியில் தாங்களும் கலங்கி நின்றவர்கள் பின், அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் முன் நின்று செய்தனர்.


இதில் தன் அன்னை தந்தையை கேட்டழும் விக்ரமனை சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனார் நாச்சியம்மை.


நாச்சியம்மை பிரம்மை பிடித்தது போல் விக்ரமனுடன் தன்னறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட பிரபு தன் ஆட்கள் மூலம் அனைவருக்கும் பணம் கொடுத்து சங்கரப்பாண்டியனை தேர்தலில் ஜெயிக்க வைத்தான்.


ஆம், பணநாயகத்தால் ஜனநாயகம் கொல்லப்பட்டது.


அவர் எம்.எல்.ஏவாக பதவியேற்ற இரண்டு நாட்கள் கழித்து நாச்சியம்மையைக் காண வந்த காவல் துறையினர், அலமேலுவும் முத்துப்பாண்டியனும் கார் விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு தான் கொல்லப்பட்டுள்ளார்கள் எனக்கூற, அச்செய்தியில் திகைப்பூண்டை மிதித்தாற் போலானார் நாச்சியம்மை. யார்? எப்படி? என கேள்விகளிலேயே ரௌத்திரம் காட்டினார்.


காவலதிகாரி விரிவாக சொன்னார். "முத்துப்பாண்டியனோட கார் ஒரு லாரி மேல மோதியிருந்ததுமா. அந்த லாரியோட டிரைவரை விசாரிச்சப்போ, மொதல்ல அவன் நான் இந்த விபத்தை செய்யலைனு சொன்னான். பின்னாடி நீ ஏன்டா அந்த வழில வந்தனு அடிச்சு விசாரிச்சப்போ தான் எம்.எல்.ஏவோட பையன் உதயச்சந்திரன் முத்துப்பாண்டியன் மேல உள்ள விரோதத்துல அவரை கொல்லச் சொன்னார்னு சொன்னான். ஸோ, இது ஒரு திட்டமிட்ட கொலைமுயற்சி. நீங்க ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா நாங்க ஆக்ஷன் எடுக்க வசதியா இருக்கும்." என்றார்.


அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நாச்சியம்மை, "அய்யோ! உரு தெரியாம அழிச்சிருவேனு அன்னைக்கே சொன்னானே பாவி. சொன்ன மாதிரியே செஞ்சுட்டானே. நான் இப்போ என்ன பண்ணுவேன் கடவுளே? டேய்! உங்களை சும்மா விடமாட்டேன்டா. நான் இப்போ எப்படி கதறுறேனோ அதே மாதிரி உங்களையும் ஒருநாள் கதற வைப்பேன்" என பொங்கி வந்த ஆத்திரத்தில் திரௌபதியாய் சூளுரைத்தார்.


முதல்வேலையாய் காவலர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி, புகார் எழுதிக் கொடுத்தார். அதன்படி உதயச்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் தங்களிடமிருந்த ஆதாரத்தை காண்பித்து, அவனுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom