தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
அவள் 13
காவ்யா சோர்வினால் மயங்கியவள் ஊசியின் வீரியத்தால் அயர்ந்து தூங்கியதால் காலை விடிந்து தாமதமாகவே கண்விழித்தாள். மெல்ல படுக்கையைவிட்டு எழுந்தாள். கடிகாரத்தைப் பார்த்தவள் மணியைப் பார்த்து அதிர்ந்தாள்.
'என்ன!! விடிஞ்சிருஞ்சா??!! அப்ப நைட்டு வந்த மயக்கம் இப்பதான் தெளியுதா?! ஆனா, எப்பவுமே இப்டி நடந்தது இல்லையே!!' என்று தனக்குள் சந்தேகித்து எண்ணிக்கொண்டே எழுந்து குளியறை சென்றாள். குளித்து முடித்துவிட்டபின் தான் அவளுக்கு நியாபகம் வந்தது, தன்னுடைய உடைகள் எதுவும் இல்லையென்று. என்ன செய்வதென்று அறியாமல் நின்றவள், பூந்துவாலையை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
அறையின் அலமாரிகளில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியவள் எந்த உடையும் இல்லாமல் வெறுமையாக இருந்ததைப் பார்த்து சலித்தவள் அப்படியே சோர்வாகி படுக்கையில் அமர்ந்திட, அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து வேகமாக குளியலறைக்குள் சென்று சாத்திக்கொண்டாள். அறையை முழுமையாகத் திறந்து உள்ளே யாரோ வரும் ஓசையைக் கேட்டவள், யாரது?? என்று வினவிட, எதிர்த்திசையில், "நான்தான்மா! கமலா!" என்று கூறியதைக் கேட்டதும்தான் சற்று நிம்மதி எழுந்தது.
அவரிடம் எதற்காக வந்ததாய் வினவிட, அவரும் ராணா உடையைக் கொடுத்தனுப்பியதாய்க் கூறிவிட்டு அதை மெத்தையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதும் இவள் உள்ளே வந்து அந்த உடையை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஆடம்பரமில்லாத எளிமையான மற்றும் அணிவதற்கு இலகுவான காட்டன் புடவையாக இருந்தபோதிலும் அதன் தரமே அதன் அதிக விலையை எடுத்துக்கூறியது. அதனுடன் இதர உடைகளும் இருந்திட, அதை அணிந்து தயாரானாள்.
ஏற்கனவே, நேற்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள, என்ன செய்வதென்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள். அவளது தோழிகளுடன் இருக்கையில் பசியே இல்லாமல் இருந்தாலும் சாப்பிட தோன்றாமல் இருந்தாலும் உணவு ஊட்டிவிட்டுக் கவனித்துக் கொண்டதை நினைத்து வருந்தினாள். அந்நேரம், கதவைத் தட்டிவிட்டு திறந்துகொண்டு உள்ளே வந்தார், கமலாம்மா.
கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவர் இவளருகில் வைத்துவிட்டு, தண்ணீர் ஜாடியையும் வைத்துவிட்டு சாப்பிடுமாறு சொல்லிச் சென்றார். இவளுக்கு என்ன சொல்வது? என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. எனினும், பசியின் பிடியில் இருந்தவள், தட்டில் இருந்த நான்கு இட்லி மற்றும் வடையையும் நன்றாக சாப்பிட்டு முடித்தாள். பல நாட்களுக்குப்பின் அவளாக பசித்து உண்ணும் உணவு இதுதான் என்பதை இந்நிலையில் இவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
உணவருந்தி முடித்தவள் தட்டைக் கழுவி வைத்துவிட்டு நகர, அந்நேரம் அறைக்குள் நுழைந்தான், ராணா. அவன் திடீரென்று வந்ததும் பதறியவள் இவனைக் கண்டதும் பயந்து தலை கவிழ்ந்துகொண்டாள். அதை எதையும் கவனிக்காது அவன் அவளருகில் வந்து,
"நீ ப்ரக்ணன்டா இருக்க!! தெரியுமா??" என்று நேராகக் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி இவனுக்கு எப்படி தெரியவந்தது? என்று அதிர்ந்தாலும் அவள் குனிந்திருந்ததால் அவனுக்கு அது தெரியவில்லை. அவள் அமைதியாகவே நின்றிட, கோபம் கொண்டவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி,
"உன்னத்தான் கேக்குறேன்!! நீ ப்ரக்ணன்டா இருக்கிறது உனக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கேட்டிட, அவளும் வலி தாளாமல் திணறியவள், "தெரியும்!" என்று திக்கித் திணறி கூறிட, அவன் லேசாக அதிர்ந்தான்.
"அப்போ! உண்மைய சொல்லு!! இது யாரோட குழந்த??" என்று இவன் சந்தேகமாய் கேட்டதைக் கேட்டு அவள் அதிர்ந்து இவனைப் பார்த்தவள், மறுநொடி தலைகவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்ததைப் பார்த்த ராணா,
"இங்க செண்டிமெண்ட் சீன பாக்க
ஒண்ணும் நான் வரல! நான் கேட்டதுக்கு பதில்!! இது யாரோட குழந்த?? உனக்கு லவ்வர்னு யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்! அப்போ...இது என்னோட குழந்தையா?? சொல்லு!!" என்று அழுத்தமாகக் கேட்டிட, அதைக் கேட்டவள் அவனது திமிர்ப் பேச்சையும் சந்தேகப் பார்வையையும் தாளமுடியாமல் நின்றவள்,
"ஆமா...!! ஆமா!! ஆமா!! இது உன்னோட குழந்ததான்!" என்று கத்தியவள் மடிந்து கீழே அமர்ந்துவிட்டாள். ஆனால், காவ்யா
கூறியதைக் கேட்ட ராணா மனதில் தோன்றிய வெற்றிக் களிப்பு சிரிப்பாய் மலர்ந்திட, உதட்டில் பூத்த ஏளனப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
"நான் நினச்சது சரிதான். இது என்னோட குழந்ததான். நீ இப்டி ப்ரக்ணன்டா இருக்கிறது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னய கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே!!" என்று இவன் ஏளனமாகக் கூறிட, அதில் அவனை சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தவாறே,
"நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலே நான் நினச்சதவிட உன்னய சூப்பரா பழி வாங்கிருக்கலாம்போல!! நீ கல்யாணம் ஆகாம வயித்துல குழந்தையோட இருந்திருந்தா இந்த சொசைட்டில உனக்கு நிறைய அவமானங்கள் பரிசா கிடச்சிருக்கும். நான் நினச்சதும் நடந்திருக்கும். ஆனா, நான்தான் உன்னய கல்யாணம் பண்ணி கூடவே வச்சு பழி வாங்க நினச்சு இப்டி பண்ணிட்டேனே!!" என்று பொய்யாக வருந்துவதைப் போல நடித்தவன், அடுத்தநொடி சிந்தித்து,
"இப்ப அதனால என்ன ஆயிடுச்சு?? இப்பவும் ஒரு பிரச்சினையும் இல்ல! உன்னய இடிச்சதுக்கே அடிச்சவ நீ! இப்ப என்னோட குழந்தயே உன் வயித்துல வளருது!! இதுவே உனக்கு பெரிய தண்டனைதான்! இப்ப உன்னோட பொறுப்பு என்னன்னா இந்த குழந்தைய பத்திரமா பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது!! இது நம்ம குழந்தையில்லயா!!" என்று நக்கலாகப் பேசி அவளை சீண்டிட, அவளோ இவன் பேசுவதைக் கேட்டு இவனது கீழ்த்தரமான எண்ணத்தை நினைத்து முகம்சுழித்துத் தலைகவிழ்ந்தாள்.
அவளின் நிலையைப் பார்த்து மனதில் சிரித்தவன் அறையைவிட்டு அகன்றான். அவன் பேசியதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென குமட்டல் ஏற்பட, வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள். வெளியே வந்து மெத்தையில் சரிந்தவள் அப்படியே கிடந்தாள். மதியம், அறைக்கு வந்து கமலாம்மா உணவை வைத்துவிட்டு, காலை உணவு கொண்டுவந்த தட்டை எடுத்துச் சென்றுவிட, இவளோ அதைக் கவனிக்கவும் தோன்றாமல் அப்படியே இருந்தாள்.
காவ்யா போனில் பேசியபிறகு அவளை நினைத்துக் கதறி அழுதவர்கள் அப்படியே நிலைகுலைந்தனர். எவ்வளவு நேரம் அழுதிருப்பார்கள் என்று அவர்களும் அறியார்! அவர்கள் கண்ணில் இனி சிந்த ஒருதுளி கண்ணீரும் இல்லை என்று வற்றும் அளவிற்கு அழுதார்கள்.
எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தவர்களால் இப்போது எதுவும் பேசக்கூட தோன்றாமல் கண்ணீர் சிந்தினர். தங்கள் தோழியைப் பிரிந்த சோகம் ஒருபக்கம் இதயத்தை தைக்க, இவர்களுக்காகவும் எடுத்த முடிவுதான் அது என்ற எண்ணம் மறுபக்கம் அவர்களை முள்ளாய் குத்தியது. அந்த வேதனையைத் தாளமுடியாமல் அந்நேரத்தில் அவர்களால் முடிந்தது கண்ணீர் சிந்துவது மட்டுமே! என்பதை அறிந்த அவர்கள் இதயமும் கண்களும் ஆறுதலாய் கைகோர்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தின.
விடியும்வரை அழுதவர்கள், எப்போது தூங்கினார்களோ?!... சரண்யா, அழுது வீங்கி கண்களுடன் இணைந்திருந்த இமைகளை மெதுவாகப் பிரித்து விழித்தாள். சூரிய ஒளி கண்களில் பட்டு கூசச் செய்திட, கண்களை மூடித் திறந்தவள் தன்னைச் சுற்றி ஒருவர் மடியில் ஒருவராய் தூங்கிக் கிடந்த தன் தோழிகளைப் பார்த்தாள்.
காவ்யாவின் பிரிவு வேதனையைத் தந்திட, முகம் வாடியவள், மெல்ல எழுந்துசென்று முகம் கழுவினாள். காலைநேரம் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அதனால், சமையல் செய்வதற்காகச் சென்றாள். அவளுக்கென பசி எடுக்காதபோதிலும் தோழிகளுக்காய் சமைக்கச் சென்றாள்.
அவள் எழுந்துசென்ற அதிர்விலே அனுயாவும் கண்விழித்திட, அவளும் முகம் கழுவிவிட்டுச் சென்று சரண்யாவுக்கு உதவி செய்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் எதுவும் தோன்றாமல் வெறுமையான சிந்தனையுடன் சமையல் மட்டுமே செய்துகொண்டிருந்தனர்.
தன்யா கண்விழித்திட, இருவரையும் காணாமல் எழுந்து செல்லப்போகும் முன் தன்மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த ரம்யாவின் தலையை மெதுவாக நகர்த்தி தலையணையில் வைத்துவிட்டு எழ, ரம்யாவும் கண்விழித்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, முகத்தில் சோகம் மட்டுமே உரையாடியது.
பின்பு, இருவரும் எழுந்துசென்று மற்ற இருவரும் சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வந்து அவர்களுடன் இணைந்தனர், மௌன உரையாடலில். எவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் உணவு தயாரித்து முடித்தனர்.
உணவருந்தும் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர்கள் அமைதியாய் இருந்தனர். ஒருவர் மற்றவர்க்குப் பரிமாறிட, அதை மற்றவர் மறுத்திட, என்று நால்வரும் உண்ணாமலே இருந்தனர். எவரும் இப்போது உணவருந்தும் நிலையில் என்பதை அறிந்த சரண்யா,
"இப்போ! சாப்ட வரப்போறீங்களா? இல்லையா??" என்று கேட்டதற்கும் மௌனமே பதிலாய் வந்திட,
"எனக்கு பசிக்குது! இப்போ, நீங்க சாப்ட வந்தாதான் நானும் சாப்பிடுவேன்! இல்லன்னா இப்டியே பட்டினியாவே இருக்கேன்! உங்களுக்கு சந்தோசமா??" என்று சற்று கோபமாகக் கூறிட, மற்றவர்கள் அவளை வேதனையோடு பார்த்தனர்.
அவளுக்குள்ளும் இதே வேதனை இருப்பதை அவர்களும் அறிவர். அவள் பசிப்பதுபோல் நடிப்பதையும், எதற்காக இப்படி நடிக்கிறாள் என்பதையும் அறிந்தவரகள், அதே காரணத்திற்காக அவர்களும் சாப்பிடத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து சரண்யாவும் சாப்பிட்டாள். எப்போதும் கலகலவெனப் போகும் சாப்பாட்டுநேரம் இன்று மௌனத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.
மகிழ்ச்சி, கஷ்டம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பகிர்ந்தவர்களால் தங்கள் சோகத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதன் காரணமும் அவர்களிடத்தில் உள்ள அதீத அன்புதான். அந்த அன்பும் பிணைப்பும்தான் காவ்யாவை இவர்களிடம் அப்படி பேசச் செய்தது! அவளை எண்ணி இவர்களையும் இப்படி சோகத்தில் ஆழ்த்தியது!
மாலைநேரம், காவ்யாவின் அறையைத் திறந்து உள்ளே வந்தவன், அவள் கிடந்த நிலையைப் பார்த்து அருகில் வந்திட, சாப்பாடு அப்படியே இருந்ததைக் கண்டான். அதில் அவனுக்குக் கோபம் எழ,
"காவ்யா!!!" என்று கர்ஜித்திட, அதைக் கேட்டவள் சுயநிலைக்கு வந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தாள். இவன் நிற்பதைப் பார்த்திட, அவனோ எரிமலையாய் நின்றான். இவள் கண்களில் பயத்தை ஏந்தி மிரட்சியுடன் அவனைப் பார்க்க,
"எதுக்காக இன்னும் சாப்டல?? நீ மட்டும் சாப்டலன்னா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! ஆனா, வயித்துல வளருரது என்னோட குழந்த! அது உனக்கு பிடிக்காட்டியும் ஏத்துகிட்டுதான் ஆகணும்! நீ சாப்டாம கவனிக்காம அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா..அப்றம் உனக்குத்தான் இன்னும் கஷ்டம்!! அதுக்குப்றம் நான் உன்னய பழி வாங்குற விதம் இன்னும் கொடுமையா இருக்கும்! ஜாக்கிரத!!" என்று கர்ஜித்தவன், கமலாம்மாவை அழைத்து உணவு கொண்டுவரச் சொல்ல, அவரும் கொண்டு வந்தார்.
அதை வாங்கியவன் இவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்க மறுத்து அப்படியே நின்றாள். அது இவன் கோபத்தை இன்னும் அதிகரிக்க, தட்டை தூக்கி ஏறிந்திட, அது கீழே விழும் சத்தமும் அவனது கோப முகமும் பழைய நினைவுகளை அவள் கண்முன் காட்டிட, பயந்தவள் அப்படியே மயங்கி படுக்கையிலே சரிந்தாள்.
ராணாவின் கோபத்தில் பயந்துபோன கமலாம்மாவும் காவ்யா மயங்கியதைக் கண்டு அவளருகில் வந்து அவளைச் சரியாகப் படுக்கவைத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,
"அவள பாத்துக்கோங்க! நைட்டு சாப்பாடு கொடுத்து பக்கத்துலயே இருந்து சாப்ட வையுங்க!" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
நேற்று இரவு இவன் பேசியதற்கும் இன்று இவன் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர முடிந்த அவரால், அதன் காரணத்தை யூகிக்க முடியவில்லை. காவ்யா கற்பாமனதால் வந்த அக்கறை என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்த அக்கறைகூட அவளை பழி வாங்குவதன் முதலீடுதான் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்தவளுக்கு கமலாம்மா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். அவளும் மறுத்திட, "இந்தமாறி நேரத்துல இப்படி பட்டினியா இருக்கக்கூடாதும்மா! அது உங்களையும் பாதிக்கும், குழந்தையையும் பாதிக்கும்மா! சாப்டுங்கம்மா!!" என்று அக்கறையாகக் கூறியதைக் கேட்டவளுக்கு அவளது தோழிகளின் நினைவே வந்துசென்றது.
அவர்களின் அக்கறையை இவரின் முகத்தில் பார்த்தவள், என்ன நினைத்தாளோ?? அவர் கொடுத்த உணவை அமைதியாக உண்டாள். பாதிக்குமேல் உண்ணமுடியாமல் சென்று வாந்தியெடுத்துவிட்டாள். அவளுக்குப் பின்னே சென்று அவளின் தலையைப் பிடித்துவிட, முழுவதும் வாந்தியெடுத்தவள், முகம் கழுவி வந்து அப்படியே சோர்வாக அமர்ந்தாள். அவளுக்கு பருக நீரைக் கொடுத்தவர், சாப்பாட்டுத் தட்டைக் கீழே எடுத்துச் சென்றுவிட்டார்.
இரவின் அமைதியும் அறையின் தனிமையும் அவளை அச்சுறுத்திட, மெத்தையில் மடங்கி அமர்ந்தவள் கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலையை வைத்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தாள். சிறிதுநேரத்தில் அறையைத் தட்டும் சத்தம்கேட்டு திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க, கமலாம்மா கையில் பழரத்துடன் வருவதைப் பார்த்தாள். இவளருகில் வந்தவர் அதை இவள் கையில் கொடுத்து,
"இதை குடிங்கம்மா!! சாப்பாடு முழுக்க வாந்தி பண்ணிட்டீங்க! இத குடிங்க! அப்பதான் கொஞ்சமாச்சும் தெம்பு வரும்மா" என்று கூறி கொடுத்திட, காவ்யாவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தது, அவள் தோழிகளின் நினைவில். அமைதியாக அதைப் பருகி முடித்தவள், அந்தக் கண்ணாடி குவளையை அவரிடம் கொடுத்துவிட்டு,
"ரொம்ப தேங்க்ஸ்ம்மா!!" என்று கூறிட, அவரும், "எதுக்கும்மா தாங்க்ஸெல்லாம்!! இது என்னோட வேலம்மா!! பண்ண வேண்டியது என்னோட கடம!" என்று பதில் கூறியதைக் கேட்டவள்,
"சாப்பாடு கொடுக்குறது கடம! ஆனா வாந்தி எடுக்கும்போது அக்கறையா தலையப் பிடிச்சீங்களே! அது என் சொந்தத்த நியாபக படுத்துச்சு! இப்பக்கூட ஜூஸ் கொடுத்தீங்களே! அதுல உங்க கடமைய தாண்டின அக்கற தெரிஞ்சது! நீங்க என்ன நினச்சு செஞ்சீங்களோ? எனக்கு தெரியாது! ஆனா, நீங்க பண்ணதுக்காக தேங்க்ஸ்!" என்று பொறுமையாக விளக்கிக் கூறியதைக் கேட்டவர், இவள் இந்தளவுக்கு தன்னை கவனித்து அதற்காக நன்றி கூறுமளவு உயர்ந்த உள்ளம் கொண்டவள் என்பதை எண்ணி வியந்தார்.
அவளை வாஞ்சையோடு பார்த்தவர், "படுத்துக்கோங்கம்மா! நல்லா ரெஸ்ட் எடுங்க!" என்று கூறிட, "நான் உங்க பொண்ணு வயசுதான இருப்பேன்! என்னய எதுக்கு வாங்க போங்கனு சொல்றீங்க? வா போனு சாதாரணமாவே பேசுங்கம்மா!" என்று காவ்யா கூறிட, அதை அவர் மறுத்தார்.
"இல்லம்மா!! நீங்க என்னோட முதலாளியம்மா!! உங்களப்போய்...நான் அப்டிலாம் கூப்டக்கூடாதுங்கம்மா!!" என்று பதறியபடி கூறினார்.
ஆனால், அது அவள் மனதை சற்று வேதனையடையச் செய்தது. அவள் தோழிகளுடன் இருந்தவரை கொடுமையிலும் ஆறுதல்போல! இருளில் தெரிந்த விளக்கொளி போல! இந்த ரணமான நினைவுகளின் இடையில் அவர்களின் அன்பும் அக்கறையும் இவளுக்குச் சிறிய ஆறுதலாக இருந்தது!
ஆனால், அப்போது அதை அறிந்திடாமல் கவலையில் மூழ்கிக் கிடந்தவள், இங்கே கொடுமை என்னும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க, ஆறுதலுக்கு வழியில்லாமல் திணறினாள். அதற்கிடையில் கிடைத்த சிறு மின்மினி பூச்சியின் ஒளியாய் கமலாம்மாவின் அக்கறை இவளுக்குத் தெரிந்ததால் அவரிடம் ஆறுதல் தேடினாள்.
அவரோ மரியாதையை முன்வைத்திட இவளுக்கு கவலையாக இருந்தது. "எனக்கு அம்மா கிடையாது. உங்கள என் அம்மா மாதிரி நினச்சுதான் அப்டி சொன்னேன்! நீங்க என்னய வா போன்னு கூப்டுறதால மரியாதை இல்லனு ஆகிடாது இல்லயா! ஆனா, ஒரு நெருக்கம் வரும்னுதான் அப்டி சொன்னேன்!" என்று கவலையாகக் கூறியதைக் கேட்டவரும் மனமுருகி நெகிழ்ந்தார்.
அவள் கட்டளையிட்டாலே அதை மறுக்க இவரால் இயலாது! அப்படியிருக்க, அவள் தன்மையாய் கேட்டது இவருக்கு அவள்மேல் உள்ள மரியாதையை இன்னும் அதிகமாக்கியதோடு, அவளின் ஏக்கம் இவரின் மனதையும் உருகச்செய்தது.
"சரிம்மா! உனக்கு அதுதான் பிடிச்சிருக்குன்னா! நான் அப்டியே கூப்டுறேன். சரியாம்மா! இனிமேல் அம்மா இல்லன்னு சொல்லாத! என்னய அம்மா மாதிரின்னு சொன்னேல்ல..அம்மாவாவே நினச்சுக்கோ. கவலப்படாதம்மா!" என்று அவள் தலைவருடி கூறிட, காவ்யாவின் கண்கள் குளமாகின. ஆதரவாய் அவள் தலையை வருடிகொடுத்தவர் அவளைப் படுக்கவைத்து போர்வையைப் போர்த்திவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவர் கையைப் பிடித்துத் தடுத்தவள்,
"எனக்கு தனியா தூங்க பயமா இருக்கு! என்கூட இங்கயே படுத்துக்கிறீங்களா?" என்று சிறுகுழந்தைபோல் கேட்டவளைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? என்றே தெரியவில்லை அவருக்கு.
"இல்லம்மா! ஐயாகிட்ட கேட்காம என்னால எதுவும் பண்ணமுடியாதுமா! அவரு பாத்தாருனா கோபப்படுவாரு! நீ தூங்குறவர வேணா நான் பக்கத்துலயே இருக்கேன்! சரியா!!" என்று கூறிட, அவளும் அரைமனதாய் சம்மதித்தாள். அவளைப் படுக்கவைத்து அருகில் அமர்ந்தவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்திட, சோர்வினாலும் கமலாம்மாவால் மனபாரம் சற்று குறைந்திருந்த காரணத்தாலும் மெதுவாகக் கண்ணயர்ந்தாள். சிறிதுநேரம் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினார்.
ராணா வெளியே சென்றிருந்தவன் வீட்டிற்கு வந்ததும் கீழிறங்கி வரும் கமலாம்மாவைப் பார்த்தவன் காவ்யாவைப் பற்றி விசாரிக்க, அவரும் அவள் சாப்பிட்டதையும் அதை முழுவதும் வாந்தி எடுத்ததால் பழரசம் குடித்து தூங்கிவிட்டதை மட்டும் கூறிச் சென்றார். இவனும் வேறெதுவும் பேசாமல் உணவருந்திவிட்டு சென்று அவனறையில் நுழைந்துகொண்டான்.
ராணாவின் அலுவல் சம்பந்தமாக பார்த்துக்கொண்டிருந்ததால் நடுஇரவு வரை முழுத்திருந்தான். இது அவனது தினசரி வழக்கம். அப்போது யாரோ அலறும் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தவன், அந்தக் குரல் பக்கத்தில் இருக்கும் காவ்யாவின் அறையிலிருந்து வருவதைக் கேட்டு அங்கே ஓடினான். அறையைத் திறந்து உள்ளே சென்றவன், இருட்டாக இருந்திட, அறையின் விளக்குகளைப் போட்டான்.
விளக்குகளைப் போட்டுவிட்டு படுக்கையைப் பார்க்க, காவ்யா அங்கில்லாததால் கண்களால் அவளைத் தேட,
அறையின் மூலையில் அமர்ந்து கால்களைக் கட்டியபடி முகத்தைப் பொத்திக்கொண்டு கத்திக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தான். அவளை அந்நிலையில் கண்டவன் முகம் குழப்பத்தில் சுருங்கிட, அவளருகில் வேகமாகச் சென்று அவள் தோள்தொட்டு எழுப்ப முயற்சிக்க அவள் பதறி இன்னும் அலறினாள்.
இவனும் அதை அலட்சியம் செய்து அவளை மெல்ல எழுப்பி நிற்கவைத்திட, சுற்றியும் பார்த்தவள் கொஞ்சம் பயம் தெளிந்து அமைதியானாள். அவளை எரிச்சலோடு பார்த்தவன், அவள் தோளைப் பற்றியபடி, "ஏய்!! எதுக்கு கத்திகிட்டு இருக்க?? உனக்கு என்ன பைத்தியமா?? இனி இப்டி எதாச்சும் பண்ணுன...அப்றம் நான் மோசமானவனா ஆயிடுவேன். ஒழுங்கா போய் படு!" என்று கோபமாக கத்திட, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இவனின் கத்தலில் அதிர்ந்து மயங்கிச் சரிந்தாள்.
கீழே விழப்போனவளை கைகளால் பிடித்தவன், எரிச்சலோடு தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்துவிட்டு அறையின் விளக்குகளை அணைக்காமலே கதவை சாத்திவிட்டுச் சென்றான். ராணா உள்ளே செல்லும்போது கதவை திறந்து வைத்ததால் இவளது அலறல் சத்தம் கீழே உள்ள அறையில் படுத்திருந்த கமலாம்மாவிற்கும் லேசாகக் கேட்டிட, என்னவென்று மேலே வந்து இங்கு நடந்ததைப் பார்த்தவர், இவன் காட்டுவது வெறுப்பா?? அக்கறையா?? என்று புரியாமல் யோசித்தவர், சத்தமின்றி கீழே சென்றுவிட்டார்.
காவ்யாவின் நிலை மாறுவது எப்போது?? ராணாவின் பழி தீர்க்கும் எண்ணம் மாறுவது எப்போது?? வஞ்சம் மறைந்து வெறுப்பு மாறிடுமா??
❤வருவாள்❤...
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
காவ்யா சோர்வினால் மயங்கியவள் ஊசியின் வீரியத்தால் அயர்ந்து தூங்கியதால் காலை விடிந்து தாமதமாகவே கண்விழித்தாள். மெல்ல படுக்கையைவிட்டு எழுந்தாள். கடிகாரத்தைப் பார்த்தவள் மணியைப் பார்த்து அதிர்ந்தாள்.
'என்ன!! விடிஞ்சிருஞ்சா??!! அப்ப நைட்டு வந்த மயக்கம் இப்பதான் தெளியுதா?! ஆனா, எப்பவுமே இப்டி நடந்தது இல்லையே!!' என்று தனக்குள் சந்தேகித்து எண்ணிக்கொண்டே எழுந்து குளியறை சென்றாள். குளித்து முடித்துவிட்டபின் தான் அவளுக்கு நியாபகம் வந்தது, தன்னுடைய உடைகள் எதுவும் இல்லையென்று. என்ன செய்வதென்று அறியாமல் நின்றவள், பூந்துவாலையை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.
அறையின் அலமாரிகளில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியவள் எந்த உடையும் இல்லாமல் வெறுமையாக இருந்ததைப் பார்த்து சலித்தவள் அப்படியே சோர்வாகி படுக்கையில் அமர்ந்திட, அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து வேகமாக குளியலறைக்குள் சென்று சாத்திக்கொண்டாள். அறையை முழுமையாகத் திறந்து உள்ளே யாரோ வரும் ஓசையைக் கேட்டவள், யாரது?? என்று வினவிட, எதிர்த்திசையில், "நான்தான்மா! கமலா!" என்று கூறியதைக் கேட்டதும்தான் சற்று நிம்மதி எழுந்தது.
அவரிடம் எதற்காக வந்ததாய் வினவிட, அவரும் ராணா உடையைக் கொடுத்தனுப்பியதாய்க் கூறிவிட்டு அதை மெத்தையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதும் இவள் உள்ளே வந்து அந்த உடையை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஆடம்பரமில்லாத எளிமையான மற்றும் அணிவதற்கு இலகுவான காட்டன் புடவையாக இருந்தபோதிலும் அதன் தரமே அதன் அதிக விலையை எடுத்துக்கூறியது. அதனுடன் இதர உடைகளும் இருந்திட, அதை அணிந்து தயாரானாள்.
ஏற்கனவே, நேற்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள, என்ன செய்வதென்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள். அவளது தோழிகளுடன் இருக்கையில் பசியே இல்லாமல் இருந்தாலும் சாப்பிட தோன்றாமல் இருந்தாலும் உணவு ஊட்டிவிட்டுக் கவனித்துக் கொண்டதை நினைத்து வருந்தினாள். அந்நேரம், கதவைத் தட்டிவிட்டு திறந்துகொண்டு உள்ளே வந்தார், கமலாம்மா.
கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவர் இவளருகில் வைத்துவிட்டு, தண்ணீர் ஜாடியையும் வைத்துவிட்டு சாப்பிடுமாறு சொல்லிச் சென்றார். இவளுக்கு என்ன சொல்வது? என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. எனினும், பசியின் பிடியில் இருந்தவள், தட்டில் இருந்த நான்கு இட்லி மற்றும் வடையையும் நன்றாக சாப்பிட்டு முடித்தாள். பல நாட்களுக்குப்பின் அவளாக பசித்து உண்ணும் உணவு இதுதான் என்பதை இந்நிலையில் இவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
உணவருந்தி முடித்தவள் தட்டைக் கழுவி வைத்துவிட்டு நகர, அந்நேரம் அறைக்குள் நுழைந்தான், ராணா. அவன் திடீரென்று வந்ததும் பதறியவள் இவனைக் கண்டதும் பயந்து தலை கவிழ்ந்துகொண்டாள். அதை எதையும் கவனிக்காது அவன் அவளருகில் வந்து,
"நீ ப்ரக்ணன்டா இருக்க!! தெரியுமா??" என்று நேராகக் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி இவனுக்கு எப்படி தெரியவந்தது? என்று அதிர்ந்தாலும் அவள் குனிந்திருந்ததால் அவனுக்கு அது தெரியவில்லை. அவள் அமைதியாகவே நின்றிட, கோபம் கொண்டவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி,
"உன்னத்தான் கேக்குறேன்!! நீ ப்ரக்ணன்டா இருக்கிறது உனக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கேட்டிட, அவளும் வலி தாளாமல் திணறியவள், "தெரியும்!" என்று திக்கித் திணறி கூறிட, அவன் லேசாக அதிர்ந்தான்.
"அப்போ! உண்மைய சொல்லு!! இது யாரோட குழந்த??" என்று இவன் சந்தேகமாய் கேட்டதைக் கேட்டு அவள் அதிர்ந்து இவனைப் பார்த்தவள், மறுநொடி தலைகவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்ததைப் பார்த்த ராணா,
"இங்க செண்டிமெண்ட் சீன பாக்க
ஒண்ணும் நான் வரல! நான் கேட்டதுக்கு பதில்!! இது யாரோட குழந்த?? உனக்கு லவ்வர்னு யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்! அப்போ...இது என்னோட குழந்தையா?? சொல்லு!!" என்று அழுத்தமாகக் கேட்டிட, அதைக் கேட்டவள் அவனது திமிர்ப் பேச்சையும் சந்தேகப் பார்வையையும் தாளமுடியாமல் நின்றவள்,
"ஆமா...!! ஆமா!! ஆமா!! இது உன்னோட குழந்ததான்!" என்று கத்தியவள் மடிந்து கீழே அமர்ந்துவிட்டாள். ஆனால், காவ்யா
கூறியதைக் கேட்ட ராணா மனதில் தோன்றிய வெற்றிக் களிப்பு சிரிப்பாய் மலர்ந்திட, உதட்டில் பூத்த ஏளனப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
"நான் நினச்சது சரிதான். இது என்னோட குழந்ததான். நீ இப்டி ப்ரக்ணன்டா இருக்கிறது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னய கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே!!" என்று இவன் ஏளனமாகக் கூறிட, அதில் அவனை சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தவாறே,
"நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலே நான் நினச்சதவிட உன்னய சூப்பரா பழி வாங்கிருக்கலாம்போல!! நீ கல்யாணம் ஆகாம வயித்துல குழந்தையோட இருந்திருந்தா இந்த சொசைட்டில உனக்கு நிறைய அவமானங்கள் பரிசா கிடச்சிருக்கும். நான் நினச்சதும் நடந்திருக்கும். ஆனா, நான்தான் உன்னய கல்யாணம் பண்ணி கூடவே வச்சு பழி வாங்க நினச்சு இப்டி பண்ணிட்டேனே!!" என்று பொய்யாக வருந்துவதைப் போல நடித்தவன், அடுத்தநொடி சிந்தித்து,
"இப்ப அதனால என்ன ஆயிடுச்சு?? இப்பவும் ஒரு பிரச்சினையும் இல்ல! உன்னய இடிச்சதுக்கே அடிச்சவ நீ! இப்ப என்னோட குழந்தயே உன் வயித்துல வளருது!! இதுவே உனக்கு பெரிய தண்டனைதான்! இப்ப உன்னோட பொறுப்பு என்னன்னா இந்த குழந்தைய பத்திரமா பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது!! இது நம்ம குழந்தையில்லயா!!" என்று நக்கலாகப் பேசி அவளை சீண்டிட, அவளோ இவன் பேசுவதைக் கேட்டு இவனது கீழ்த்தரமான எண்ணத்தை நினைத்து முகம்சுழித்துத் தலைகவிழ்ந்தாள்.
அவளின் நிலையைப் பார்த்து மனதில் சிரித்தவன் அறையைவிட்டு அகன்றான். அவன் பேசியதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென குமட்டல் ஏற்பட, வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள். வெளியே வந்து மெத்தையில் சரிந்தவள் அப்படியே கிடந்தாள். மதியம், அறைக்கு வந்து கமலாம்மா உணவை வைத்துவிட்டு, காலை உணவு கொண்டுவந்த தட்டை எடுத்துச் சென்றுவிட, இவளோ அதைக் கவனிக்கவும் தோன்றாமல் அப்படியே இருந்தாள்.
காவ்யா போனில் பேசியபிறகு அவளை நினைத்துக் கதறி அழுதவர்கள் அப்படியே நிலைகுலைந்தனர். எவ்வளவு நேரம் அழுதிருப்பார்கள் என்று அவர்களும் அறியார்! அவர்கள் கண்ணில் இனி சிந்த ஒருதுளி கண்ணீரும் இல்லை என்று வற்றும் அளவிற்கு அழுதார்கள்.
எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தவர்களால் இப்போது எதுவும் பேசக்கூட தோன்றாமல் கண்ணீர் சிந்தினர். தங்கள் தோழியைப் பிரிந்த சோகம் ஒருபக்கம் இதயத்தை தைக்க, இவர்களுக்காகவும் எடுத்த முடிவுதான் அது என்ற எண்ணம் மறுபக்கம் அவர்களை முள்ளாய் குத்தியது. அந்த வேதனையைத் தாளமுடியாமல் அந்நேரத்தில் அவர்களால் முடிந்தது கண்ணீர் சிந்துவது மட்டுமே! என்பதை அறிந்த அவர்கள் இதயமும் கண்களும் ஆறுதலாய் கைகோர்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தின.
விடியும்வரை அழுதவர்கள், எப்போது தூங்கினார்களோ?!... சரண்யா, அழுது வீங்கி கண்களுடன் இணைந்திருந்த இமைகளை மெதுவாகப் பிரித்து விழித்தாள். சூரிய ஒளி கண்களில் பட்டு கூசச் செய்திட, கண்களை மூடித் திறந்தவள் தன்னைச் சுற்றி ஒருவர் மடியில் ஒருவராய் தூங்கிக் கிடந்த தன் தோழிகளைப் பார்த்தாள்.
காவ்யாவின் பிரிவு வேதனையைத் தந்திட, முகம் வாடியவள், மெல்ல எழுந்துசென்று முகம் கழுவினாள். காலைநேரம் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அதனால், சமையல் செய்வதற்காகச் சென்றாள். அவளுக்கென பசி எடுக்காதபோதிலும் தோழிகளுக்காய் சமைக்கச் சென்றாள்.
அவள் எழுந்துசென்ற அதிர்விலே அனுயாவும் கண்விழித்திட, அவளும் முகம் கழுவிவிட்டுச் சென்று சரண்யாவுக்கு உதவி செய்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் எதுவும் தோன்றாமல் வெறுமையான சிந்தனையுடன் சமையல் மட்டுமே செய்துகொண்டிருந்தனர்.
தன்யா கண்விழித்திட, இருவரையும் காணாமல் எழுந்து செல்லப்போகும் முன் தன்மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த ரம்யாவின் தலையை மெதுவாக நகர்த்தி தலையணையில் வைத்துவிட்டு எழ, ரம்யாவும் கண்விழித்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, முகத்தில் சோகம் மட்டுமே உரையாடியது.
பின்பு, இருவரும் எழுந்துசென்று மற்ற இருவரும் சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வந்து அவர்களுடன் இணைந்தனர், மௌன உரையாடலில். எவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் உணவு தயாரித்து முடித்தனர்.
உணவருந்தும் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர்கள் அமைதியாய் இருந்தனர். ஒருவர் மற்றவர்க்குப் பரிமாறிட, அதை மற்றவர் மறுத்திட, என்று நால்வரும் உண்ணாமலே இருந்தனர். எவரும் இப்போது உணவருந்தும் நிலையில் என்பதை அறிந்த சரண்யா,
"இப்போ! சாப்ட வரப்போறீங்களா? இல்லையா??" என்று கேட்டதற்கும் மௌனமே பதிலாய் வந்திட,
"எனக்கு பசிக்குது! இப்போ, நீங்க சாப்ட வந்தாதான் நானும் சாப்பிடுவேன்! இல்லன்னா இப்டியே பட்டினியாவே இருக்கேன்! உங்களுக்கு சந்தோசமா??" என்று சற்று கோபமாகக் கூறிட, மற்றவர்கள் அவளை வேதனையோடு பார்த்தனர்.
அவளுக்குள்ளும் இதே வேதனை இருப்பதை அவர்களும் அறிவர். அவள் பசிப்பதுபோல் நடிப்பதையும், எதற்காக இப்படி நடிக்கிறாள் என்பதையும் அறிந்தவரகள், அதே காரணத்திற்காக அவர்களும் சாப்பிடத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து சரண்யாவும் சாப்பிட்டாள். எப்போதும் கலகலவெனப் போகும் சாப்பாட்டுநேரம் இன்று மௌனத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.
மகிழ்ச்சி, கஷ்டம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பகிர்ந்தவர்களால் தங்கள் சோகத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதன் காரணமும் அவர்களிடத்தில் உள்ள அதீத அன்புதான். அந்த அன்பும் பிணைப்பும்தான் காவ்யாவை இவர்களிடம் அப்படி பேசச் செய்தது! அவளை எண்ணி இவர்களையும் இப்படி சோகத்தில் ஆழ்த்தியது!
மாலைநேரம், காவ்யாவின் அறையைத் திறந்து உள்ளே வந்தவன், அவள் கிடந்த நிலையைப் பார்த்து அருகில் வந்திட, சாப்பாடு அப்படியே இருந்ததைக் கண்டான். அதில் அவனுக்குக் கோபம் எழ,
"காவ்யா!!!" என்று கர்ஜித்திட, அதைக் கேட்டவள் சுயநிலைக்கு வந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தாள். இவன் நிற்பதைப் பார்த்திட, அவனோ எரிமலையாய் நின்றான். இவள் கண்களில் பயத்தை ஏந்தி மிரட்சியுடன் அவனைப் பார்க்க,
"எதுக்காக இன்னும் சாப்டல?? நீ மட்டும் சாப்டலன்னா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! ஆனா, வயித்துல வளருரது என்னோட குழந்த! அது உனக்கு பிடிக்காட்டியும் ஏத்துகிட்டுதான் ஆகணும்! நீ சாப்டாம கவனிக்காம அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா..அப்றம் உனக்குத்தான் இன்னும் கஷ்டம்!! அதுக்குப்றம் நான் உன்னய பழி வாங்குற விதம் இன்னும் கொடுமையா இருக்கும்! ஜாக்கிரத!!" என்று கர்ஜித்தவன், கமலாம்மாவை அழைத்து உணவு கொண்டுவரச் சொல்ல, அவரும் கொண்டு வந்தார்.
அதை வாங்கியவன் இவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்க மறுத்து அப்படியே நின்றாள். அது இவன் கோபத்தை இன்னும் அதிகரிக்க, தட்டை தூக்கி ஏறிந்திட, அது கீழே விழும் சத்தமும் அவனது கோப முகமும் பழைய நினைவுகளை அவள் கண்முன் காட்டிட, பயந்தவள் அப்படியே மயங்கி படுக்கையிலே சரிந்தாள்.
ராணாவின் கோபத்தில் பயந்துபோன கமலாம்மாவும் காவ்யா மயங்கியதைக் கண்டு அவளருகில் வந்து அவளைச் சரியாகப் படுக்கவைத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,
"அவள பாத்துக்கோங்க! நைட்டு சாப்பாடு கொடுத்து பக்கத்துலயே இருந்து சாப்ட வையுங்க!" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
நேற்று இரவு இவன் பேசியதற்கும் இன்று இவன் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர முடிந்த அவரால், அதன் காரணத்தை யூகிக்க முடியவில்லை. காவ்யா கற்பாமனதால் வந்த அக்கறை என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்த அக்கறைகூட அவளை பழி வாங்குவதன் முதலீடுதான் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்தவளுக்கு கமலாம்மா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். அவளும் மறுத்திட, "இந்தமாறி நேரத்துல இப்படி பட்டினியா இருக்கக்கூடாதும்மா! அது உங்களையும் பாதிக்கும், குழந்தையையும் பாதிக்கும்மா! சாப்டுங்கம்மா!!" என்று அக்கறையாகக் கூறியதைக் கேட்டவளுக்கு அவளது தோழிகளின் நினைவே வந்துசென்றது.
அவர்களின் அக்கறையை இவரின் முகத்தில் பார்த்தவள், என்ன நினைத்தாளோ?? அவர் கொடுத்த உணவை அமைதியாக உண்டாள். பாதிக்குமேல் உண்ணமுடியாமல் சென்று வாந்தியெடுத்துவிட்டாள். அவளுக்குப் பின்னே சென்று அவளின் தலையைப் பிடித்துவிட, முழுவதும் வாந்தியெடுத்தவள், முகம் கழுவி வந்து அப்படியே சோர்வாக அமர்ந்தாள். அவளுக்கு பருக நீரைக் கொடுத்தவர், சாப்பாட்டுத் தட்டைக் கீழே எடுத்துச் சென்றுவிட்டார்.
இரவின் அமைதியும் அறையின் தனிமையும் அவளை அச்சுறுத்திட, மெத்தையில் மடங்கி அமர்ந்தவள் கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலையை வைத்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தாள். சிறிதுநேரத்தில் அறையைத் தட்டும் சத்தம்கேட்டு திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க, கமலாம்மா கையில் பழரத்துடன் வருவதைப் பார்த்தாள். இவளருகில் வந்தவர் அதை இவள் கையில் கொடுத்து,
"இதை குடிங்கம்மா!! சாப்பாடு முழுக்க வாந்தி பண்ணிட்டீங்க! இத குடிங்க! அப்பதான் கொஞ்சமாச்சும் தெம்பு வரும்மா" என்று கூறி கொடுத்திட, காவ்யாவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தது, அவள் தோழிகளின் நினைவில். அமைதியாக அதைப் பருகி முடித்தவள், அந்தக் கண்ணாடி குவளையை அவரிடம் கொடுத்துவிட்டு,
"ரொம்ப தேங்க்ஸ்ம்மா!!" என்று கூறிட, அவரும், "எதுக்கும்மா தாங்க்ஸெல்லாம்!! இது என்னோட வேலம்மா!! பண்ண வேண்டியது என்னோட கடம!" என்று பதில் கூறியதைக் கேட்டவள்,
"சாப்பாடு கொடுக்குறது கடம! ஆனா வாந்தி எடுக்கும்போது அக்கறையா தலையப் பிடிச்சீங்களே! அது என் சொந்தத்த நியாபக படுத்துச்சு! இப்பக்கூட ஜூஸ் கொடுத்தீங்களே! அதுல உங்க கடமைய தாண்டின அக்கற தெரிஞ்சது! நீங்க என்ன நினச்சு செஞ்சீங்களோ? எனக்கு தெரியாது! ஆனா, நீங்க பண்ணதுக்காக தேங்க்ஸ்!" என்று பொறுமையாக விளக்கிக் கூறியதைக் கேட்டவர், இவள் இந்தளவுக்கு தன்னை கவனித்து அதற்காக நன்றி கூறுமளவு உயர்ந்த உள்ளம் கொண்டவள் என்பதை எண்ணி வியந்தார்.
அவளை வாஞ்சையோடு பார்த்தவர், "படுத்துக்கோங்கம்மா! நல்லா ரெஸ்ட் எடுங்க!" என்று கூறிட, "நான் உங்க பொண்ணு வயசுதான இருப்பேன்! என்னய எதுக்கு வாங்க போங்கனு சொல்றீங்க? வா போனு சாதாரணமாவே பேசுங்கம்மா!" என்று காவ்யா கூறிட, அதை அவர் மறுத்தார்.
"இல்லம்மா!! நீங்க என்னோட முதலாளியம்மா!! உங்களப்போய்...நான் அப்டிலாம் கூப்டக்கூடாதுங்கம்மா!!" என்று பதறியபடி கூறினார்.
ஆனால், அது அவள் மனதை சற்று வேதனையடையச் செய்தது. அவள் தோழிகளுடன் இருந்தவரை கொடுமையிலும் ஆறுதல்போல! இருளில் தெரிந்த விளக்கொளி போல! இந்த ரணமான நினைவுகளின் இடையில் அவர்களின் அன்பும் அக்கறையும் இவளுக்குச் சிறிய ஆறுதலாக இருந்தது!
ஆனால், அப்போது அதை அறிந்திடாமல் கவலையில் மூழ்கிக் கிடந்தவள், இங்கே கொடுமை என்னும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க, ஆறுதலுக்கு வழியில்லாமல் திணறினாள். அதற்கிடையில் கிடைத்த சிறு மின்மினி பூச்சியின் ஒளியாய் கமலாம்மாவின் அக்கறை இவளுக்குத் தெரிந்ததால் அவரிடம் ஆறுதல் தேடினாள்.
அவரோ மரியாதையை முன்வைத்திட இவளுக்கு கவலையாக இருந்தது. "எனக்கு அம்மா கிடையாது. உங்கள என் அம்மா மாதிரி நினச்சுதான் அப்டி சொன்னேன்! நீங்க என்னய வா போன்னு கூப்டுறதால மரியாதை இல்லனு ஆகிடாது இல்லயா! ஆனா, ஒரு நெருக்கம் வரும்னுதான் அப்டி சொன்னேன்!" என்று கவலையாகக் கூறியதைக் கேட்டவரும் மனமுருகி நெகிழ்ந்தார்.
அவள் கட்டளையிட்டாலே அதை மறுக்க இவரால் இயலாது! அப்படியிருக்க, அவள் தன்மையாய் கேட்டது இவருக்கு அவள்மேல் உள்ள மரியாதையை இன்னும் அதிகமாக்கியதோடு, அவளின் ஏக்கம் இவரின் மனதையும் உருகச்செய்தது.
"சரிம்மா! உனக்கு அதுதான் பிடிச்சிருக்குன்னா! நான் அப்டியே கூப்டுறேன். சரியாம்மா! இனிமேல் அம்மா இல்லன்னு சொல்லாத! என்னய அம்மா மாதிரின்னு சொன்னேல்ல..அம்மாவாவே நினச்சுக்கோ. கவலப்படாதம்மா!" என்று அவள் தலைவருடி கூறிட, காவ்யாவின் கண்கள் குளமாகின. ஆதரவாய் அவள் தலையை வருடிகொடுத்தவர் அவளைப் படுக்கவைத்து போர்வையைப் போர்த்திவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவர் கையைப் பிடித்துத் தடுத்தவள்,
"எனக்கு தனியா தூங்க பயமா இருக்கு! என்கூட இங்கயே படுத்துக்கிறீங்களா?" என்று சிறுகுழந்தைபோல் கேட்டவளைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? என்றே தெரியவில்லை அவருக்கு.
"இல்லம்மா! ஐயாகிட்ட கேட்காம என்னால எதுவும் பண்ணமுடியாதுமா! அவரு பாத்தாருனா கோபப்படுவாரு! நீ தூங்குறவர வேணா நான் பக்கத்துலயே இருக்கேன்! சரியா!!" என்று கூறிட, அவளும் அரைமனதாய் சம்மதித்தாள். அவளைப் படுக்கவைத்து அருகில் அமர்ந்தவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்திட, சோர்வினாலும் கமலாம்மாவால் மனபாரம் சற்று குறைந்திருந்த காரணத்தாலும் மெதுவாகக் கண்ணயர்ந்தாள். சிறிதுநேரம் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினார்.
ராணா வெளியே சென்றிருந்தவன் வீட்டிற்கு வந்ததும் கீழிறங்கி வரும் கமலாம்மாவைப் பார்த்தவன் காவ்யாவைப் பற்றி விசாரிக்க, அவரும் அவள் சாப்பிட்டதையும் அதை முழுவதும் வாந்தி எடுத்ததால் பழரசம் குடித்து தூங்கிவிட்டதை மட்டும் கூறிச் சென்றார். இவனும் வேறெதுவும் பேசாமல் உணவருந்திவிட்டு சென்று அவனறையில் நுழைந்துகொண்டான்.
ராணாவின் அலுவல் சம்பந்தமாக பார்த்துக்கொண்டிருந்ததால் நடுஇரவு வரை முழுத்திருந்தான். இது அவனது தினசரி வழக்கம். அப்போது யாரோ அலறும் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தவன், அந்தக் குரல் பக்கத்தில் இருக்கும் காவ்யாவின் அறையிலிருந்து வருவதைக் கேட்டு அங்கே ஓடினான். அறையைத் திறந்து உள்ளே சென்றவன், இருட்டாக இருந்திட, அறையின் விளக்குகளைப் போட்டான்.
விளக்குகளைப் போட்டுவிட்டு படுக்கையைப் பார்க்க, காவ்யா அங்கில்லாததால் கண்களால் அவளைத் தேட,
அறையின் மூலையில் அமர்ந்து கால்களைக் கட்டியபடி முகத்தைப் பொத்திக்கொண்டு கத்திக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தான். அவளை அந்நிலையில் கண்டவன் முகம் குழப்பத்தில் சுருங்கிட, அவளருகில் வேகமாகச் சென்று அவள் தோள்தொட்டு எழுப்ப முயற்சிக்க அவள் பதறி இன்னும் அலறினாள்.
இவனும் அதை அலட்சியம் செய்து அவளை மெல்ல எழுப்பி நிற்கவைத்திட, சுற்றியும் பார்த்தவள் கொஞ்சம் பயம் தெளிந்து அமைதியானாள். அவளை எரிச்சலோடு பார்த்தவன், அவள் தோளைப் பற்றியபடி, "ஏய்!! எதுக்கு கத்திகிட்டு இருக்க?? உனக்கு என்ன பைத்தியமா?? இனி இப்டி எதாச்சும் பண்ணுன...அப்றம் நான் மோசமானவனா ஆயிடுவேன். ஒழுங்கா போய் படு!" என்று கோபமாக கத்திட, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இவனின் கத்தலில் அதிர்ந்து மயங்கிச் சரிந்தாள்.
கீழே விழப்போனவளை கைகளால் பிடித்தவன், எரிச்சலோடு தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்துவிட்டு அறையின் விளக்குகளை அணைக்காமலே கதவை சாத்திவிட்டுச் சென்றான். ராணா உள்ளே செல்லும்போது கதவை திறந்து வைத்ததால் இவளது அலறல் சத்தம் கீழே உள்ள அறையில் படுத்திருந்த கமலாம்மாவிற்கும் லேசாகக் கேட்டிட, என்னவென்று மேலே வந்து இங்கு நடந்ததைப் பார்த்தவர், இவன் காட்டுவது வெறுப்பா?? அக்கறையா?? என்று புரியாமல் யோசித்தவர், சத்தமின்றி கீழே சென்றுவிட்டார்.
காவ்யாவின் நிலை மாறுவது எப்போது?? ராணாவின் பழி தீர்க்கும் எண்ணம் மாறுவது எப்போது?? வஞ்சம் மறைந்து வெறுப்பு மாறிடுமா??
❤வருவாள்❤...
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/