Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
5
அனைவரும் அமைதியாக இருக்க அவ்விடத்தில் குச்சி விழுந்தால்கூட ஒசைகேட்டும் திறத்தைய நிசப்தம் நிலவியது. அது ‘குண்டூசி கீழே விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும்’ என்னும் உவமைதான்; ஆனாலும் இவர்கள் இருப்பது மணல் தரையிலல்லவா?! ஆகவேதான் சூழ்நிலைக்குத் தக்கதாக வளைத்துவிட்டேன்.
அந்த அமைதியைக் கண்ணுற்ற பிடிவாதம் கொண்ட வயதான குழந்தை, “என்னல அமைதியா இருக்கிய... வாயைத் தொறந்து போடுங்கன்னு சொன்னாதான் என்ன?? வாய்க்குள்ள என்ன பழமா வச்சிருக்கிய??” என அதட்டும் தொனியில் பேச, அவருக்குத் துணையாக வந்தனர் மேலும் இரண்டு வயதுமுதிர்ந்த குழந்தைகள்.
“எலேய்.. வயசுக்கு மரியாதை குடுக்க மாட்டியளோ.. அவருதான் அவ்ளோ சொல்லுதாருல்லா... போடுங்கலே...” எனக் கரத்தை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு சட்டமாகச் சம்மணமிட்டு அமர்ந்து, பிடிவாதம் பிடிக்க, “காலம் போன கடைசியில பிடிவாதத்தைப் பாரு... இன்னும் தரையில உக்கார்ந்து காலை உதைச்சு அடம்பிடிக்காதது ஒண்ணு தான் பாக்கி..” என முணுமுணுத்தவாறே, “சரி சார்.. போடுங்க... அவரு இஷ்டப்படியே நடக்கட்டும்.. கழுத மொத்தமா பார்த்துட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கவாவது செய்யலாம்...” என இசைந்தனர் ஏனையோர். உண்மையில் அவர்களுக்கும் அதைத் தொடர்ந்து காண வேண்டுமென விருப்பமே; ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதாகப் பவுசு காட்டினர் அனைவரும்.
அனைவரின் கோரிக்கையையும் ஏற்றுத் தொடர் ஒளிபரப்புத் தொடரப்பட்டது.
இப்போது அர்ஜுன் – ரோஜா குடும்பத்தை விடுத்துப் புதிதாக இன்னொரு குடும்பம் காட்டப்பட்டது.
“ஏலே.. அந்தப் படத்தைத் தான் போட்டியா?? நான் வைதேன்னு வேற என்னத்தையும் போட்டுட்டியா?? வேற யாரோ வாரானுவ...” என அந்தப் பெரியவர் அதற்கும் கூச்சலிடத் தொடங்க, “தாத்தா.. கத்தாதிய.. அதே படம்தான்.. படத்துல நாலைஞ்சு ஜோடி வருவாவ...” என அலுவலர் ஒருவர் அடக்க, குறுந்தொடர் இனிதே தொடங்கியது.
அது நடுத்தரத்திற்கும் சற்றே குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் இடம் என்பதை அதன் தோற்றமே பாங்காக எடுத்துக் காட்டியது.
முன்னும் பின்னும் ஒழுங்கற்ற வீடுகள் அமைந்திருக்க, அனைத்தும் ஓடால் வேயப்பட்டவையாகவோ, சென்ட்ரிங் செய்யப்பட்டுத் தரைதளம் மட்டுமே கொண்டிருந்த வீடுகளாகவோ இருந்தன. அரிதிலும் அரிதாக ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் மாடியில் ஒரு அறை அமைக்கப்பட்டிருந்தது. அநேகமாக அது மாத சம்பளம் பெறும் நபர்களின் சொந்த வீடுகளாகவோ வாடகை வீடுகளாகவோ இருக்கக்கூடும்.
இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் ஆங்காங்கு கழிவுநீர் செல்லும் வாராங்கால்களும் அதைச் சுற்றிலும் சிறுபுற்களும் அமைந்திருக்க, இருமருங்கிலும் குச்சிகள் நாட்டப்பட்டுத் துணிகளைக் காய வைக்கும் அசை போன்றதொரு அமைப்பை ஏற்பாடு செய்திருந்தனர் அவற்றில் வசிப்போர்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலோ இல்லை மொட்டைமாடியிலோ உடைந்து போன தண்ணீர் குடத்தைப் பாதியாக வெட்டி, அதற்குள் மண்ணை நிரப்பி, ரோஜா செடிகளோ பட்டன் ரோஜா செடிகளோ இல்லை சவுக்கு முதலான அலங்கார செடிகளோ நாட்டப்பட்டிருந்தன.
சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் சாக்கடை அமைந்திருக்க, அவற்றில் சில சென்டிமீட்டர் முன்னதாகத் தெருகுழாய் நாட்டப்பட்டிருந்த்து. முந்தைய ஆட்சியின் இறுதியில் அடுத்தப் பஞ்சாயத்துத் தேர்தலில் கண்துடைப்புக்காகப் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் ஆங்காங்கு பெயர்ந்து கொண்டு நின்றன. ஒருபுறம் மேடாகவும் மறுபுறம் சாய்வாகவும் அமைக்கப்பட்டிருந்த சாலையில் துவைத்த கழிவுநீரும் பாத்திரம் தேய்த்துக் கழிவு நீரும் தேங்கி நிற்க, “ஏய்.. கவிதா வெளியே வா... உன் வீட்டு தண்ணி என் வீட்டு முத்தத்துல வந்து நிக்கி பாரு... நானும் பேசக்கூடாது பொறுமையா இருக்கணும்ன்னு பார்த்தா ஒருநாளைக்கு ஒருநாள் உன்னோட அட்டூழியம் தாங்க முடியாம போய்க்கிட்டு இருக்கு... வேணும்ன்னு அதம்பத்துக்குப் பண்ணுதியோ??” எனக் கத்தினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
“ஆமா... உங்க வீட்டு வாசல்ல தண்ணிய திறந்து உடணும்னு எனக்கு வேண்டுதல் பாருங்க.. அவன் ரோடு போடுதவன் அப்டி போட்டுட்டு போயிருக்கான்.. அவன்கிட்டே போய்க் கேக்கதை வுட்டுட்டு என்கிட்டே வந்து கனைச்சிட்டு நிக்கிய...” என உள்ளிருந்து வெளியே வந்த மற்றொரு பெண்மணி பதில் அளித்தார்.
“அடேய்... நாங்க கனைச்சிக்கிட்டு கிடக்கோம்... எங்களுக்கு வேற வேலையே இல்ல பாத்தியா?? வம்புக்கு தண்ணியயும் ஊத்தி விட்டுட்டு எவ்ளோ ஆங்காரமா பேசுத... உனக்கு எவ்ளோ கீராமிட்டித்தனம் இருக்கணும்??”
“நீங்க பொறுமையா சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அமைதியா கேட்டுட்டு ஓரமா போயிருப்பேன்.. நீங்க கத்துனிய.. நானும் பதிலுக்குக் கத்துனேன்.. கடைசியில என்னைக் குறை சொல்ல வந்துட்டிய..”
“ஆமா நான் பொறுமையா சொன்னா மட்டும் இவ அப்டியே கேட்டு கிழிச்சிருவா... நானும் ரெண்டு மாசமா சொல்லிக்கிட்டு தானே இருக்கேன்.. நீ காதுல வாங்குவேனாங்கிய... உன் மாமியா இருந்தவரைக்கும் பொட்டிப்பாம்பா இருந்துட்டு இப்போ என்ன வரத்து வார...”
“இப்போ தேவையில்லாம என்னத்துக்குப் பேசுதிய.. ஒழுங்கா தண்ணி வராம பாத்துக்கோன்னு சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அடைச்சி விட்டிருப்பேன்.. தாம்தூம்ம்னு குதிச்சா யாருதான் சொன்ன பேச்சை கேப்பா??”
இவ்வாறாகச் சண்டைகள் ஒருபுறம் நிகழ்ந்த வண்ணமிருக்க, ஆண்கள் தங்களது தனி உலகத்தில் தங்களுக்குத் தெரிந்த அரசியலையும் நாட்டு நடப்புகளையும் விவாதித்த வண்ணம் ‘டீ கடை’யில் கண்ணாடி தம்ளரில் தேநீரைப் பருகியவாறு அமர்ந்திருந்தனர்.
அங்கே ஒரு வீட்டில் பிள்ளைகள் குளிப்பதற்காகத் தங்கள் இல்லத்தின் குளியலறையில் வரிசையில் நின்றுகொண்டிருக்க, ஒவ்வொருவருக்காகத் தலைக்கு எண்ணெய் தேய்த்து, தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள் தனம்.
அவளது பிரதிநிதியாகச் சமையலறையில் சோற்றை வடித்துக் கொண்டிருந்த அவளது கணவன் மூர்த்தி, “ஏ தனம்.. சீக்கிரம் தலையைச் சீவி விட்டுட்டு வா... அடுப்புல குழம்பு கொதிச்சிட்டு.. தாளிச்சு ஊத்திட்டா எல்லாருக்கும் பாத்திரத்துல எடுத்து வச்சிருவேன்..” எனக் குரல் கொடுத்தான்.
“இந்தா வாரேன் மாமா...” என்றவள் அருகே நின்று கொண்டிருந்த தன் முதல் மகளிடம், “வித்யா... தங்கச்சிக்கு இந்த ரிப்பனை மட்டும் கெட்டி விட்டிரு..” எனக் கூறிவிட்டுச் சமையலறை நோக்கி விரைந்தாள்.
உள்ளே சென்றவள் சாம்பாருக்கும் கூட்டிற்குமாகப் பொதுவாகத் தாளித்து இரண்டிற்கும் சிக்கனமாகச் சரிபாதியாக ஊற்றிவிட்டு தன் கணவனிடம், “மாமா.. நீங்க எல்லாருக்கும் சம்படத்துல எடுத்து வச்சிருங்க.. நான் போய்க் கஸ்தூரி அக்காகிட்டே ரெண்டு செல்லி பீடி வாங்கிட்டு வந்துர்றேன்.. நேத்து குறையுதுன்னு வாங்கிட்டுப் போனாவ.. இன்னும் தரலை...” எனக் கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.
“இந்தா தனம்.. இதெல்லாம் நல்ல பழக்கமில்ல.. வாங்கிட்டுப் போனா கொண்டு வந்து தர்ற பழக்கத்தை ஏற்படுத்திக்க.. நீயே போய் வாங்குறதுக்கு நீ என்ன வட்டியா வசூல் பண்ற.. இந்தத் தடவ இருக்கட்டும்.. அடுத்ததடவ வந்து தாரதா இருந்தா தருவேன் இல்லைன்னா வேற பக்கம் பார்த்துக்கன்னு கறாரா சொல்லிரு...” என மூர்த்திக் கூற, “ஆங்.. ச்சேரி சேரி...” என்ற தனம் கால்களில் வெந்நீரை ஊற்றியது போலப் பறந்து விட்டாள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான குடிசைத் தொழில்களில் ஒன்று பீடி சுற்றுதல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பீடிகளை அளக்கும் அளவைகளில் ஒன்றுதான் செல்லி என்பதும் வண்டல் என்பதும். ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை.
பீடி கடனாகக் கொடுப்பதும் வாங்குவதும் பெண்களின் இயல்பு. ஒவ்வொருவரும் பீடியை ஒப்படைக்கப் பீடிக்கடை என அழைக்கப்படும் பீடி நிறுவனத்திற்குச் செல்வதற்கெனத் தனியே நேரம் ஒதுக்கப்படும். தனத்திற்கு எட்டு மணிக்கு ஒப்படைக்க ஒதுக்கப் பட்டிருந்தது. அதாவது அவளுக்கு எட்டு மணி கணக்கு. அதற்காகத் தான் இவ்வாறு பணிக்குச் செல்லும் தன் கணவனையும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் தயார் செய்து அனுப்பிவிட்டு தனது வேலைகளையும் சுனங்காமல் சுதாரித்துக் கொண்டிருக்கிறாள்.
(இது குறித்தும் இந்த மக்களின் வாழ்வியல் குறித்தும் விரிவாக எனது ‘மாறிலி மானிடர்கள்’ கதையில் எழுதியிருக்கிறேன். அதுவும் சஹாப்தம் தளத்தின் போட்டிக் கதைதான். பச்சை வண்ணத்தில் உள்ளது. விருப்பம் இருப்பின் முயன்று பாருங்கள்.)
பள்ளிக்குத் தயாராகி வந்த அவளது மூன்று பிள்ளைகளும் காலை உணவாகக் கொஞ்சமாகப் பழைய சோறையும் துவையலையும் உண்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்புவதற்காகத் தயாராகினர்.
கிளம்புகையில் தான் வீட்டின் கடைக்குட்டி மெதுவாக ஆரம்பித்தாள் “ப்பா... பண்டம் வாங்க துட்டு..” என. மற்ற பிள்ளைகளும் “ஆமாப்பா.. பண்டம் வாங்க துட்டு...” எனக் கேட்க, “மாசக் கடைசி வேற.. துட்டு இருக்கா என்னனு தெரியலையே...” என்றவாறே பையைத் துழாவினான் மூர்த்தி.
பைக்குள் இருந்து இரண்டு ஒரு ஐந்து நாணயங்களை எடுத்து தன் பிள்ளைகளிடம் கொடுத்தவன்; “பாப்பா... நீங்க ரெண்டு பேரும் இந்த அஞ்சு ரூபாய்க்குப் பண்டம் வாங்கிட்டு தம்பிக்கு இன்னொரு அஞ்சு ரூபாயைக் குடுத்துருங்க.. சரியா?” என்கவும், “சரிப்பா... டாட்டா...” எனக் கூறிவிட்டு விடைபெற்றுவிட, தான் பணிபுரியும் மரம் அறுக்கும் கடைக்குச் செல்லலானான் மூர்த்தி.
அந்த அமைதியைக் கண்ணுற்ற பிடிவாதம் கொண்ட வயதான குழந்தை, “என்னல அமைதியா இருக்கிய... வாயைத் தொறந்து போடுங்கன்னு சொன்னாதான் என்ன?? வாய்க்குள்ள என்ன பழமா வச்சிருக்கிய??” என அதட்டும் தொனியில் பேச, அவருக்குத் துணையாக வந்தனர் மேலும் இரண்டு வயதுமுதிர்ந்த குழந்தைகள்.
“எலேய்.. வயசுக்கு மரியாதை குடுக்க மாட்டியளோ.. அவருதான் அவ்ளோ சொல்லுதாருல்லா... போடுங்கலே...” எனக் கரத்தை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு சட்டமாகச் சம்மணமிட்டு அமர்ந்து, பிடிவாதம் பிடிக்க, “காலம் போன கடைசியில பிடிவாதத்தைப் பாரு... இன்னும் தரையில உக்கார்ந்து காலை உதைச்சு அடம்பிடிக்காதது ஒண்ணு தான் பாக்கி..” என முணுமுணுத்தவாறே, “சரி சார்.. போடுங்க... அவரு இஷ்டப்படியே நடக்கட்டும்.. கழுத மொத்தமா பார்த்துட்டு வீட்டுக்குப் போய் நிம்மதியா தூங்கவாவது செய்யலாம்...” என இசைந்தனர் ஏனையோர். உண்மையில் அவர்களுக்கும் அதைத் தொடர்ந்து காண வேண்டுமென விருப்பமே; ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதாகப் பவுசு காட்டினர் அனைவரும்.
அனைவரின் கோரிக்கையையும் ஏற்றுத் தொடர் ஒளிபரப்புத் தொடரப்பட்டது.
இப்போது அர்ஜுன் – ரோஜா குடும்பத்தை விடுத்துப் புதிதாக இன்னொரு குடும்பம் காட்டப்பட்டது.
“ஏலே.. அந்தப் படத்தைத் தான் போட்டியா?? நான் வைதேன்னு வேற என்னத்தையும் போட்டுட்டியா?? வேற யாரோ வாரானுவ...” என அந்தப் பெரியவர் அதற்கும் கூச்சலிடத் தொடங்க, “தாத்தா.. கத்தாதிய.. அதே படம்தான்.. படத்துல நாலைஞ்சு ஜோடி வருவாவ...” என அலுவலர் ஒருவர் அடக்க, குறுந்தொடர் இனிதே தொடங்கியது.
அது நடுத்தரத்திற்கும் சற்றே குறைவான வருமானம் கொண்ட குடும்பங்கள் வாழும் இடம் என்பதை அதன் தோற்றமே பாங்காக எடுத்துக் காட்டியது.
முன்னும் பின்னும் ஒழுங்கற்ற வீடுகள் அமைந்திருக்க, அனைத்தும் ஓடால் வேயப்பட்டவையாகவோ, சென்ட்ரிங் செய்யப்பட்டுத் தரைதளம் மட்டுமே கொண்டிருந்த வீடுகளாகவோ இருந்தன. அரிதிலும் அரிதாக ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் மாடியில் ஒரு அறை அமைக்கப்பட்டிருந்தது. அநேகமாக அது மாத சம்பளம் பெறும் நபர்களின் சொந்த வீடுகளாகவோ வாடகை வீடுகளாகவோ இருக்கக்கூடும்.
இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில் ஆங்காங்கு கழிவுநீர் செல்லும் வாராங்கால்களும் அதைச் சுற்றிலும் சிறுபுற்களும் அமைந்திருக்க, இருமருங்கிலும் குச்சிகள் நாட்டப்பட்டுத் துணிகளைக் காய வைக்கும் அசை போன்றதொரு அமைப்பை ஏற்பாடு செய்திருந்தனர் அவற்றில் வசிப்போர்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலோ இல்லை மொட்டைமாடியிலோ உடைந்து போன தண்ணீர் குடத்தைப் பாதியாக வெட்டி, அதற்குள் மண்ணை நிரப்பி, ரோஜா செடிகளோ பட்டன் ரோஜா செடிகளோ இல்லை சவுக்கு முதலான அலங்கார செடிகளோ நாட்டப்பட்டிருந்தன.
சாலையின் இருபுறத்திலும் கழிவுநீர் சாக்கடை அமைந்திருக்க, அவற்றில் சில சென்டிமீட்டர் முன்னதாகத் தெருகுழாய் நாட்டப்பட்டிருந்த்து. முந்தைய ஆட்சியின் இறுதியில் அடுத்தப் பஞ்சாயத்துத் தேர்தலில் கண்துடைப்புக்காகப் போடப்பட்ட சிமென்ட் சாலைகள் ஆங்காங்கு பெயர்ந்து கொண்டு நின்றன. ஒருபுறம் மேடாகவும் மறுபுறம் சாய்வாகவும் அமைக்கப்பட்டிருந்த சாலையில் துவைத்த கழிவுநீரும் பாத்திரம் தேய்த்துக் கழிவு நீரும் தேங்கி நிற்க, “ஏய்.. கவிதா வெளியே வா... உன் வீட்டு தண்ணி என் வீட்டு முத்தத்துல வந்து நிக்கி பாரு... நானும் பேசக்கூடாது பொறுமையா இருக்கணும்ன்னு பார்த்தா ஒருநாளைக்கு ஒருநாள் உன்னோட அட்டூழியம் தாங்க முடியாம போய்க்கிட்டு இருக்கு... வேணும்ன்னு அதம்பத்துக்குப் பண்ணுதியோ??” எனக் கத்தினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
“ஆமா... உங்க வீட்டு வாசல்ல தண்ணிய திறந்து உடணும்னு எனக்கு வேண்டுதல் பாருங்க.. அவன் ரோடு போடுதவன் அப்டி போட்டுட்டு போயிருக்கான்.. அவன்கிட்டே போய்க் கேக்கதை வுட்டுட்டு என்கிட்டே வந்து கனைச்சிட்டு நிக்கிய...” என உள்ளிருந்து வெளியே வந்த மற்றொரு பெண்மணி பதில் அளித்தார்.
“அடேய்... நாங்க கனைச்சிக்கிட்டு கிடக்கோம்... எங்களுக்கு வேற வேலையே இல்ல பாத்தியா?? வம்புக்கு தண்ணியயும் ஊத்தி விட்டுட்டு எவ்ளோ ஆங்காரமா பேசுத... உனக்கு எவ்ளோ கீராமிட்டித்தனம் இருக்கணும்??”
“நீங்க பொறுமையா சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அமைதியா கேட்டுட்டு ஓரமா போயிருப்பேன்.. நீங்க கத்துனிய.. நானும் பதிலுக்குக் கத்துனேன்.. கடைசியில என்னைக் குறை சொல்ல வந்துட்டிய..”
“ஆமா நான் பொறுமையா சொன்னா மட்டும் இவ அப்டியே கேட்டு கிழிச்சிருவா... நானும் ரெண்டு மாசமா சொல்லிக்கிட்டு தானே இருக்கேன்.. நீ காதுல வாங்குவேனாங்கிய... உன் மாமியா இருந்தவரைக்கும் பொட்டிப்பாம்பா இருந்துட்டு இப்போ என்ன வரத்து வார...”
“இப்போ தேவையில்லாம என்னத்துக்குப் பேசுதிய.. ஒழுங்கா தண்ணி வராம பாத்துக்கோன்னு சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு அடைச்சி விட்டிருப்பேன்.. தாம்தூம்ம்னு குதிச்சா யாருதான் சொன்ன பேச்சை கேப்பா??”
இவ்வாறாகச் சண்டைகள் ஒருபுறம் நிகழ்ந்த வண்ணமிருக்க, ஆண்கள் தங்களது தனி உலகத்தில் தங்களுக்குத் தெரிந்த அரசியலையும் நாட்டு நடப்புகளையும் விவாதித்த வண்ணம் ‘டீ கடை’யில் கண்ணாடி தம்ளரில் தேநீரைப் பருகியவாறு அமர்ந்திருந்தனர்.
அங்கே ஒரு வீட்டில் பிள்ளைகள் குளிப்பதற்காகத் தங்கள் இல்லத்தின் குளியலறையில் வரிசையில் நின்றுகொண்டிருக்க, ஒவ்வொருவருக்காகத் தலைக்கு எண்ணெய் தேய்த்து, தலைவாரி விட்டுக் கொண்டிருந்தாள் தனம்.
அவளது பிரதிநிதியாகச் சமையலறையில் சோற்றை வடித்துக் கொண்டிருந்த அவளது கணவன் மூர்த்தி, “ஏ தனம்.. சீக்கிரம் தலையைச் சீவி விட்டுட்டு வா... அடுப்புல குழம்பு கொதிச்சிட்டு.. தாளிச்சு ஊத்திட்டா எல்லாருக்கும் பாத்திரத்துல எடுத்து வச்சிருவேன்..” எனக் குரல் கொடுத்தான்.
“இந்தா வாரேன் மாமா...” என்றவள் அருகே நின்று கொண்டிருந்த தன் முதல் மகளிடம், “வித்யா... தங்கச்சிக்கு இந்த ரிப்பனை மட்டும் கெட்டி விட்டிரு..” எனக் கூறிவிட்டுச் சமையலறை நோக்கி விரைந்தாள்.
உள்ளே சென்றவள் சாம்பாருக்கும் கூட்டிற்குமாகப் பொதுவாகத் தாளித்து இரண்டிற்கும் சிக்கனமாகச் சரிபாதியாக ஊற்றிவிட்டு தன் கணவனிடம், “மாமா.. நீங்க எல்லாருக்கும் சம்படத்துல எடுத்து வச்சிருங்க.. நான் போய்க் கஸ்தூரி அக்காகிட்டே ரெண்டு செல்லி பீடி வாங்கிட்டு வந்துர்றேன்.. நேத்து குறையுதுன்னு வாங்கிட்டுப் போனாவ.. இன்னும் தரலை...” எனக் கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.
“இந்தா தனம்.. இதெல்லாம் நல்ல பழக்கமில்ல.. வாங்கிட்டுப் போனா கொண்டு வந்து தர்ற பழக்கத்தை ஏற்படுத்திக்க.. நீயே போய் வாங்குறதுக்கு நீ என்ன வட்டியா வசூல் பண்ற.. இந்தத் தடவ இருக்கட்டும்.. அடுத்ததடவ வந்து தாரதா இருந்தா தருவேன் இல்லைன்னா வேற பக்கம் பார்த்துக்கன்னு கறாரா சொல்லிரு...” என மூர்த்திக் கூற, “ஆங்.. ச்சேரி சேரி...” என்ற தனம் கால்களில் வெந்நீரை ஊற்றியது போலப் பறந்து விட்டாள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான குடிசைத் தொழில்களில் ஒன்று பீடி சுற்றுதல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பீடிகளை அளக்கும் அளவைகளில் ஒன்றுதான் செல்லி என்பதும் வண்டல் என்பதும். ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை.
பீடி கடனாகக் கொடுப்பதும் வாங்குவதும் பெண்களின் இயல்பு. ஒவ்வொருவரும் பீடியை ஒப்படைக்கப் பீடிக்கடை என அழைக்கப்படும் பீடி நிறுவனத்திற்குச் செல்வதற்கெனத் தனியே நேரம் ஒதுக்கப்படும். தனத்திற்கு எட்டு மணிக்கு ஒப்படைக்க ஒதுக்கப் பட்டிருந்தது. அதாவது அவளுக்கு எட்டு மணி கணக்கு. அதற்காகத் தான் இவ்வாறு பணிக்குச் செல்லும் தன் கணவனையும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் தயார் செய்து அனுப்பிவிட்டு தனது வேலைகளையும் சுனங்காமல் சுதாரித்துக் கொண்டிருக்கிறாள்.
(இது குறித்தும் இந்த மக்களின் வாழ்வியல் குறித்தும் விரிவாக எனது ‘மாறிலி மானிடர்கள்’ கதையில் எழுதியிருக்கிறேன். அதுவும் சஹாப்தம் தளத்தின் போட்டிக் கதைதான். பச்சை வண்ணத்தில் உள்ளது. விருப்பம் இருப்பின் முயன்று பாருங்கள்.)
பள்ளிக்குத் தயாராகி வந்த அவளது மூன்று பிள்ளைகளும் காலை உணவாகக் கொஞ்சமாகப் பழைய சோறையும் துவையலையும் உண்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்புவதற்காகத் தயாராகினர்.
கிளம்புகையில் தான் வீட்டின் கடைக்குட்டி மெதுவாக ஆரம்பித்தாள் “ப்பா... பண்டம் வாங்க துட்டு..” என. மற்ற பிள்ளைகளும் “ஆமாப்பா.. பண்டம் வாங்க துட்டு...” எனக் கேட்க, “மாசக் கடைசி வேற.. துட்டு இருக்கா என்னனு தெரியலையே...” என்றவாறே பையைத் துழாவினான் மூர்த்தி.
பைக்குள் இருந்து இரண்டு ஒரு ஐந்து நாணயங்களை எடுத்து தன் பிள்ளைகளிடம் கொடுத்தவன்; “பாப்பா... நீங்க ரெண்டு பேரும் இந்த அஞ்சு ரூபாய்க்குப் பண்டம் வாங்கிட்டு தம்பிக்கு இன்னொரு அஞ்சு ரூபாயைக் குடுத்துருங்க.. சரியா?” என்கவும், “சரிப்பா... டாட்டா...” எனக் கூறிவிட்டு விடைபெற்றுவிட, தான் பணிபுரியும் மரம் அறுக்கும் கடைக்குச் செல்லலானான் மூர்த்தி.
Last edited: