Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
10
அவளது மௌனம் அவரது கோபத்தை மேலும் அதிகரிக்க, “நான் பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கிறேன்... நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்??” என அடிப்பதற்குக் கையை ஓங்கவும், அதற்குள் குறுக்கே வந்தார் சாரதா.
“என்னங்க... தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ணை இப்படித்தான் அடிக்கிறதா?? இப்போ என்ன?? இந்த ஒரு தடவை மார்க் கம்மி ஆயிட்டா அவ்வளவுதானே... எதோ குடி முழுகிப் போன மாதிரி கத்திக்கிட்டு இருக்கிறீங்க?? இந்தத் தடவை விட்டதை அடுத்தத் தடவை பிடிப்பா... தேவையில்லாம கத்துறதை விட்டுட்டு வந்து டீ குடிங்க...” எனக் கூறவும், சாரதாவை முறைத்தார் நாராயணன்.
“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கிறேன்.. நீ வந்து டீ குடிக்கச் சொல்ற... இது ஒன்னும் குடி முழுகி போற காரியம் இல்லைதான்... மார்க் எல்லாம் இரண்டாம் பட்சம், ஆனா நம்ம பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கணும்... அதற்கான தீர்வை நாம சொல்லணும்.. அவளுக்கு ஏதாவது பிரச்சனை அப்படினா அவ கூடவே இருந்து அவளைச் சரி பண்ற வழியே பார்க்கணும்... அதற்கு நான் ட்ரை பண்ணா நீ பாட்டுக்கு ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கிற?? என அவர் சீற, தன் மகளை அமைதியாக இருக்குமாறு கண்களால் ஜாடை செய்தார் சாரதா.
தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை எப்படிப் பெத்தவங்க கிட்ட ஓபனா சொல்லுவா? மனசு திறந்து பேசுறவரைக்கும் வெயிட் பண்ணுவோம்... அவளாவே சொல்லுவா...” எனக் கூற, “சரி... நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்... டீ எடுத்துட்டு வா..” எனத் தனது அறைக்குச் சென்றுவிட்டார் நாராயணன்.
தன் மகளைத் தனியே அழைத்துக் கொண்டு சென்ற சாரதா, “வெண்பா.. உன்னை வீட்டில் இருக்கும்போது மட்டும் தானே அந்தப் பப்ஸ்மாஷ் யூஸ் பண்ண சொன்னேன்? இப்படி மார்க் குறைஞ்சிட்டு வந்து நிக்கிற?? உங்க அப்பாவைப் பார்த்தியா?? எப்படிக் கத்திட்டு இருக்கிறார்ன்னு... பார்த்து பக்குவமா நடந்துக்கோ... இனி இந்த மாதிரி நடக்கக் கூடாது...” எனக் கூறவும், “சரிமா..” என்றுவிட்டாள் வெண்பா.
உண்மையில் அவளுக்குச் சற்றே குற்ற உணர்வாக இருந்தது; ஏனெனில் எப்போதும் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் நல்ல தரங்களும் பெறுபவள் அவள். ஆனால் இப்போது தன்னைப் பாராட்டிய ஆசிரியைகளே தன்னைப்பற்றித் தந்தையிடம் புகார் அளிக்கும் நிலைமைக்கு வழிவகுத்து விட்டோமே என வெகுவாக வருந்தினாள். இனி இவ்வாறான சூழ்நிலைக்கு வழிவகுக்கக் கூடாது என நினைத்தவள் அந்தச் செயலியை வீட்டில் விடுமுறை நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கான குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் மற்ற நேரங்களில் படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்னும் தீர்மானத்திற்கு வந்தாள்.
மறுநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முகம், கை, கால்களை அலம்பி விட்டு, தனது அறைக்குச் சென்று வீட்டுப் பாடங்களைச் செய்யத் தொடங்கினாள். இத்தனை நாட்களாக வீட்டிற்கு வந்ததும் அதிக ஒப்பனை செய்து கொண்டு, அந்தச் செயலில் மூழ்கிக் கிடப்பவள் இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கவும், என்னவாயிற்று இவளுக்கு? ஏன் வீடியோ பதிவு செய்யாமல் போய் உட்கார்ந்து கொண்டான் எனச் சிந்தித்தார் சாரதா. அதைத் தன் மகளிடம் கேட்கவும் செய்துவிட்டார்.
அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள்; “அம்மா... அது ஒரு பொழுதுபோக்கு தானே தவிர அது மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன் ம்மா... அப்பா திட்டும்போது நான் பதில் சொல்லாம தலைகுனிந்து நிற்கும் போது ரொம்பவே அவமானமா போச்சு... இனி நான் அதைப் பயன்படுத்த வேண்டாம்ன்னு முடிவுக்கு வரலை... ஆனா குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் யூஸ் பண்ண போறேன்...” எனத் தன் முடிவைத் தெரிவித்து விட்டு, வேலைகளில் மூழ்கிப் போனாள்.
தனது வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, அலைபேசியை எடுத்து, அவள் அறிவிப்புகள் பெட்டகத்தைத் திறந்து பார்க்க அவளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து இருந்தது. அதில் ஆனந்தக் கூத்தாடியவள், தன் தாயிடம் சென்று அம்மா தெரிவிக்க, அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. “சூப்பர்... சூப்பர்... வெண்பா... உன் ஸ்கூல்லகூட மொத்தம் 800 பேர் தான் படிக்கிறாஞா... ஆனா ஆயிரம் பேர் உன்னை ஃபாலோ பண்ணி இருக்கிறாங்க... ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி நானு... ரொம்பப் பெரிய ஆளா வரப் போற பாரு.. இலவோ நாளா இது எனக்கே தெரியாம இருந்து இருக்குது... இப்ப அதை உலகம் தெரிஞ்சு ரெகக்நைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... இந்த ஆயிரம் பாலோவர்ஸ் வந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ போடு என வழிகாட்டினார்.
“எப்படிமா ஸ்பெஷல் வீடியோ போடுறது??” என அவள் தன் தாயிடமே வினவ, “புதுசா ஒரு புடவை எடுத்து வச்சிருக்கிறேன்... அதைக் கட்டிக்கிட்டு, அப்படியே கொஞ்சம் பூ வச்சிக்கிட்டு, கொஞ்சமா மேக்கப் போட்டு.. ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு...’ பாட்டுக்கு வாயசைச்சு பேசு... அப்டேட் பண்றப்போ அபவுட் கேக்கும்ல அங்கே ‘தேங்க்ஸ்... நீங்க எல்லாரும் என்னுடைய கான்பிடன்ஸ் லெவலை அதிகமாக அதிகமாக்கி இருக்கிறீங்க... நம்ம ஃபேமிலி ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஃபேமிலியா விரிந்து நிற்கிறது...’ அப்படின்னு சொல்லி போடு” எனத் தன் மகளுக்குக் கற்றுக் கொடுத்தார் அந்தத் தாய்.
உண்மையில் இவர் போன்ற தாய்கள் இருக்கவே செய்கின்றனர். பொதுவாகத் தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளும் தனக்குக் கிடைக்காத காரியங்களும் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைப்பவர் தான் தாய். இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தான் சிறுவயதில் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட ஒப்பனைகள், நடனம் ஆட வேண்டும் என ஆசைப்பட்ட தருணங்கள், பாட வேண்டும் என விரும்பிய பாடல்கள் என அனைத்து ஆசைகளையும் தன் மகள் வாயிலாக நிறைவேற்ற சித்தம் கொண்டிருந்தார் சாரதா.
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் திரையில் தோன்ற வைப்பதற்காக முதல் கட்டமாகதான் அந்தச் செயலியின் வாயிலாக முயற்சி செய்து பார்க்க தொடங்கினார். அவருக்கு வெண்பா பெரியவள் ஆகும் வரை எல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை; முன்னேற்றம் என்பது இன்றைய நிகழ்ந்துவிட வேண்டும் என்றும், அவள் உலகம் போற்றும் ஒரு திரைப்பட நாயகியாகவோ இல்லை கதாநாயகியாகவோ ஆகிவிட வேண்டும் எனும் பேராசை அவருக்குள்.
ஒருவிஷயம் அவருக்குப் புரியவில்லை இது நிரந்தரம் இல்லை என்பது. நாம் நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு காரியம் புலப்படும்; இங்கே நாம் “கனவுக்கன்னி”, “ஆசை நாயகி”, “ட்ரீம்கில்லர்...” “லேடி சூப்பர் ஸ்டார்” எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்கு அதே துறையிலேயே சிறப்பான எதிர்காலம் இருக்கிறது, எத்தனை பேரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது என எவராலும் அறுதியிட்டு கூற இயலாது.
ஏனெனில் இங்கே கொண்டாடுபவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான். இங்கே ட்ரென்ட் என விளிக்கப்படும் காரியம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.
அந்தக் காலத்தில் நடிகைகளுக்குப் பஞ்சம் இருந்தது நடிகைகளுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு கலைஞருக்கும் சற்றே பஞ்சம் இருந்தது; திரையில் தோன்றுபவர் என்றால் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அடுத்தடுத்துத் தன்னை முன்னேற்றிக் கொண்டே இருந்தால் மட்டுமே மனதில் தங்குவர். சிறிதுநேரம் கண்களையாவது உறுத்தும் தூசிபோல நிற்பார். இல்லையேல் நீரின் மேல் விழுந்த ஒருதுளி மையாகக் கரைந்து விடுவர்.
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பல பேருக்குக் கொண்டாடப்படும் காலம் மட்டுமே அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வின் வாழ்வுக்காலமாக இருக்கும். மற்ற பக்கங்கள் எல்லாம் அவர்களது வாழ்வில் கரிய பக்கங்களாக இருக்கும். இருப்பினும் அதை அறிந்தே அந்தத் தற்காலிக மகிழ்ச்சிக்காகவும் கொண்டாடப்படுவதற்காகவும் மயங்கி, அதன் மேல் ஆசை கொண்டு அனைத்து பக்கங்களையும் சிதைத்துக் கொள்பவர்களும் கருமையாக்கி கொள்பவர்களுமே அதிகம்.
இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் சாரதா தன் மகளை ஏதேனுமொரு புகழேணியின் உச்சியில் ஏற்றி வைத்து அழகு பார்க்க ஆசை கொண்டார். தன் மகள் புடவை கட்டி, தலை நிறையப் பூவுடன் அமர்ந்து வாயசைத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டவருக்குக் கண்களில் நீர் சுரந்தது.
என் மகள் இத்தனை வளர்ந்து விட்டாள், அவளது அழகு இத்தனை ஆராதிக்கத் தக்கதா எனத் தன்னைத் தானே வியந்து, தன் மகளின் நிலை குறித்துப் பெருமிதம் கொண்டார் ‘தன்னைத் தான் மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுப்பய மொச்சைக் கொட்ட... ஊரையே மீசிக் கொள்ளுமாம் உளுத்தபய மொச்சக் கொட்ட...’ என ஊரில் பெரியவர்கள் கூறுவதைப் போல.
தன் மகள் இத்தனை அழகாக இருக்கிறாள் என்பதில் அவருக்குக் கர்வம் பிறந்தது. திரைத்துறையைத் தன் மகள் தான் கோலோச்சப் போகிறாள் என்கிற அளவுக்கு அவர் கற்பனை கோட்டையைக் கட்டி, அதற்குக் கிரகப்பிரவேசம் நிகழ்த்தி அங்கே நிரந்தர முதலாளியாகத் தன் மகளை அமரவைக்கும் அதிரவைக்கும் கனவையும் வெகு சிறப்பாகக் கண்டு முடித்துவிட்டார்.
இப்போது அவருக்கு இருக்கும் பொறுப்பெல்லாம் கனவை நனவாக்கி, அவரது மகளை மகா பேரரசியாக - நிரந்தரப் பேரரசியாக – தன்னிகரற்ற பேரரசியாக ;முடி சூட்டுவது மட்டுமே அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர் தயாராகவே இருந்தார்.
உண்மையில் இது சாரதாவின் இயல்பு குணம் என்றாலும் அந்த இயல்பை வெகு விரைவாக ஊக்குவித்தது அவரது உடலில் கலந்திருக்கும் ஏஎஸ் வைரஸ் ஆகும். ஏனென்றால் முன்பே தெரிவித்தபடி ஏஎஸ் வைரஸ் நமக்குள் புகுந்துவிட்டால் ஒளியைவிட வேகமாக அனைத்து செல்களுக்குள்ளும் ஊடுருவும், பரவும், பிரியும் தன்மை கொண்டது. ஒருமுறை தாக்கிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்றுச் சிரமம் தான். இந்த ஏஎஸ் வைரஸ் என்றால் என்ன எனத் தாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன்.
ஆகவே அதன் அர்த்தம் யாதென விளக்கவேண்டிய பொறுப்பு இவ்விடம் என்னுடையது. ஏஎஸ் என்பதன் முழுப்பதம் அட்டென்ஷன் சீக்கிங் (Attention Seeking) அதாவது கவனயீர்ப்பு, ஒருவரது கவனத்தைத் தன்னை நோக்கி திருப்புவது; இங்கே அனைவரது கவனத்தையும் தன் மகளின் மீது திருப்ப வேண்டும் என ஆசை கொண்டார் சாரதா.
ஆனாலும் இது அவளது பள்ளிப் படிப்பின் காலம், அவளுக்குப் போதிய வயது நிரம்பவில்லை என நினைத்தவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவள் நன்றி நவில்ந்த வீடியோவை பதிவேற்றி விட்டு தனது வேலைகளில் மூழ்கிப் போக, அந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டது. எண்ணிக்கை குறைவென்றாலும் அப்போதைக்கு அந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள் குறைவு எனத் தன்னைத் தான் தேற்றிக் கொண்டார் சாரதா.
ஏனென்றால் அந்தச் செயலி அப்போதுதான் புழக்கத்திற்கு வந்திருந்தது; ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு காணொளியிலும் காணும் இடம்தோறும் அந்தச் செயலியை குறித்து விளம்பரம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்பதற்கிணங்க, முதலில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்றால் அவனுள் உறங்கிக் கிடக்கும் ஆசையைத் தூண்ட வேண்டும்.
இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது; திரையில் ஒளிரும் பிறரது நிழல் உருவங்களைப் பார்க்கையில் நாமும் அதுவாக இருந்தால் எப்படி இருக்கும், தன்னையும் அத்தனை பேர் பார்த்தால் எப்படி இருக்கும் என ஒருவித ஆவல் பிறப்பது இயல்புதான். அது ஒரு தனி மனிதனுக்கான எதிர்பார்ப்பும் கூட. அது சரி தவறு என நியாயத்தீர்ப்புக்கு ஆட்படாது.
ஏனெனில் அது எவருள்ளும் உறங்கிக் கிடக்கும் ஒரு ஆசை தான் அது. தனது செயல்களை எவரேனும் பாராட்டி விட மாட்டரா எனும் ஏக்கம் பிறப்பது இயல்புதான். ஏனெனில் மனித மனம் மயங்குவதும் ஏங்குவதும் ஒரு சிறு பாராட்டுக்காகத் தானே இப்போது சாரதாவின் மனம் தன் மகளை எவரேனும் பாராட்டி விட மாட்டாரா என ஏங்கித் தவித்தது.
“என்னங்க... தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ணை இப்படித்தான் அடிக்கிறதா?? இப்போ என்ன?? இந்த ஒரு தடவை மார்க் கம்மி ஆயிட்டா அவ்வளவுதானே... எதோ குடி முழுகிப் போன மாதிரி கத்திக்கிட்டு இருக்கிறீங்க?? இந்தத் தடவை விட்டதை அடுத்தத் தடவை பிடிப்பா... தேவையில்லாம கத்துறதை விட்டுட்டு வந்து டீ குடிங்க...” எனக் கூறவும், சாரதாவை முறைத்தார் நாராயணன்.
“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கிறேன்.. நீ வந்து டீ குடிக்கச் சொல்ற... இது ஒன்னும் குடி முழுகி போற காரியம் இல்லைதான்... மார்க் எல்லாம் இரண்டாம் பட்சம், ஆனா நம்ம பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கணும்... அதற்கான தீர்வை நாம சொல்லணும்.. அவளுக்கு ஏதாவது பிரச்சனை அப்படினா அவ கூடவே இருந்து அவளைச் சரி பண்ற வழியே பார்க்கணும்... அதற்கு நான் ட்ரை பண்ணா நீ பாட்டுக்கு ஏதேதோ உளறிக்கிட்டு இருக்கிற?? என அவர் சீற, தன் மகளை அமைதியாக இருக்குமாறு கண்களால் ஜாடை செய்தார் சாரதா.
தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை எப்படிப் பெத்தவங்க கிட்ட ஓபனா சொல்லுவா? மனசு திறந்து பேசுறவரைக்கும் வெயிட் பண்ணுவோம்... அவளாவே சொல்லுவா...” எனக் கூற, “சரி... நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்... டீ எடுத்துட்டு வா..” எனத் தனது அறைக்குச் சென்றுவிட்டார் நாராயணன்.
தன் மகளைத் தனியே அழைத்துக் கொண்டு சென்ற சாரதா, “வெண்பா.. உன்னை வீட்டில் இருக்கும்போது மட்டும் தானே அந்தப் பப்ஸ்மாஷ் யூஸ் பண்ண சொன்னேன்? இப்படி மார்க் குறைஞ்சிட்டு வந்து நிக்கிற?? உங்க அப்பாவைப் பார்த்தியா?? எப்படிக் கத்திட்டு இருக்கிறார்ன்னு... பார்த்து பக்குவமா நடந்துக்கோ... இனி இந்த மாதிரி நடக்கக் கூடாது...” எனக் கூறவும், “சரிமா..” என்றுவிட்டாள் வெண்பா.
உண்மையில் அவளுக்குச் சற்றே குற்ற உணர்வாக இருந்தது; ஏனெனில் எப்போதும் வகுப்பில் நல்ல மதிப்பெண்களும் நல்ல தரங்களும் பெறுபவள் அவள். ஆனால் இப்போது தன்னைப் பாராட்டிய ஆசிரியைகளே தன்னைப்பற்றித் தந்தையிடம் புகார் அளிக்கும் நிலைமைக்கு வழிவகுத்து விட்டோமே என வெகுவாக வருந்தினாள். இனி இவ்வாறான சூழ்நிலைக்கு வழிவகுக்கக் கூடாது என நினைத்தவள் அந்தச் செயலியை வீட்டில் விடுமுறை நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கான குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் மற்ற நேரங்களில் படிப்பில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்னும் தீர்மானத்திற்கு வந்தாள்.
மறுநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முகம், கை, கால்களை அலம்பி விட்டு, தனது அறைக்குச் சென்று வீட்டுப் பாடங்களைச் செய்யத் தொடங்கினாள். இத்தனை நாட்களாக வீட்டிற்கு வந்ததும் அதிக ஒப்பனை செய்து கொண்டு, அந்தச் செயலில் மூழ்கிக் கிடப்பவள் இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கவும், என்னவாயிற்று இவளுக்கு? ஏன் வீடியோ பதிவு செய்யாமல் போய் உட்கார்ந்து கொண்டான் எனச் சிந்தித்தார் சாரதா. அதைத் தன் மகளிடம் கேட்கவும் செய்துவிட்டார்.
அவரைத் தீர்க்கமாகப் பார்த்தவள்; “அம்மா... அது ஒரு பொழுதுபோக்கு தானே தவிர அது மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன் ம்மா... அப்பா திட்டும்போது நான் பதில் சொல்லாம தலைகுனிந்து நிற்கும் போது ரொம்பவே அவமானமா போச்சு... இனி நான் அதைப் பயன்படுத்த வேண்டாம்ன்னு முடிவுக்கு வரலை... ஆனா குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் யூஸ் பண்ண போறேன்...” எனத் தன் முடிவைத் தெரிவித்து விட்டு, வேலைகளில் மூழ்கிப் போனாள்.
தனது வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு, அலைபேசியை எடுத்து, அவள் அறிவிப்புகள் பெட்டகத்தைத் திறந்து பார்க்க அவளைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்து இருந்தது. அதில் ஆனந்தக் கூத்தாடியவள், தன் தாயிடம் சென்று அம்மா தெரிவிக்க, அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. “சூப்பர்... சூப்பர்... வெண்பா... உன் ஸ்கூல்லகூட மொத்தம் 800 பேர் தான் படிக்கிறாஞா... ஆனா ஆயிரம் பேர் உன்னை ஃபாலோ பண்ணி இருக்கிறாங்க... ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி நானு... ரொம்பப் பெரிய ஆளா வரப் போற பாரு.. இலவோ நாளா இது எனக்கே தெரியாம இருந்து இருக்குது... இப்ப அதை உலகம் தெரிஞ்சு ரெகக்நைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... இந்த ஆயிரம் பாலோவர்ஸ் வந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ போடு என வழிகாட்டினார்.
“எப்படிமா ஸ்பெஷல் வீடியோ போடுறது??” என அவள் தன் தாயிடமே வினவ, “புதுசா ஒரு புடவை எடுத்து வச்சிருக்கிறேன்... அதைக் கட்டிக்கிட்டு, அப்படியே கொஞ்சம் பூ வச்சிக்கிட்டு, கொஞ்சமா மேக்கப் போட்டு.. ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு...’ பாட்டுக்கு வாயசைச்சு பேசு... அப்டேட் பண்றப்போ அபவுட் கேக்கும்ல அங்கே ‘தேங்க்ஸ்... நீங்க எல்லாரும் என்னுடைய கான்பிடன்ஸ் லெவலை அதிகமாக அதிகமாக்கி இருக்கிறீங்க... நம்ம ஃபேமிலி ஆயிரம் பேர் கொண்ட ஒரு ஃபேமிலியா விரிந்து நிற்கிறது...’ அப்படின்னு சொல்லி போடு” எனத் தன் மகளுக்குக் கற்றுக் கொடுத்தார் அந்தத் தாய்.
உண்மையில் இவர் போன்ற தாய்கள் இருக்கவே செய்கின்றனர். பொதுவாகத் தனக்குக் கிடைக்காத வாய்ப்புகளும் தனக்குக் கிடைக்காத காரியங்களும் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும், அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என நினைப்பவர் தான் தாய். இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தான் சிறுவயதில் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட ஒப்பனைகள், நடனம் ஆட வேண்டும் என ஆசைப்பட்ட தருணங்கள், பாட வேண்டும் என விரும்பிய பாடல்கள் என அனைத்து ஆசைகளையும் தன் மகள் வாயிலாக நிறைவேற்ற சித்தம் கொண்டிருந்தார் சாரதா.
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் திரையில் தோன்ற வைப்பதற்காக முதல் கட்டமாகதான் அந்தச் செயலியின் வாயிலாக முயற்சி செய்து பார்க்க தொடங்கினார். அவருக்கு வெண்பா பெரியவள் ஆகும் வரை எல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை; முன்னேற்றம் என்பது இன்றைய நிகழ்ந்துவிட வேண்டும் என்றும், அவள் உலகம் போற்றும் ஒரு திரைப்பட நாயகியாகவோ இல்லை கதாநாயகியாகவோ ஆகிவிட வேண்டும் எனும் பேராசை அவருக்குள்.
ஒருவிஷயம் அவருக்குப் புரியவில்லை இது நிரந்தரம் இல்லை என்பது. நாம் நன்றாகச் சிந்தித்துப் பார்த்தோமானால் ஒரு காரியம் புலப்படும்; இங்கே நாம் “கனவுக்கன்னி”, “ஆசை நாயகி”, “ட்ரீம்கில்லர்...” “லேடி சூப்பர் ஸ்டார்” எனக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எத்தனை பேருக்கு அதே துறையிலேயே சிறப்பான எதிர்காலம் இருக்கிறது, எத்தனை பேரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது என எவராலும் அறுதியிட்டு கூற இயலாது.
ஏனெனில் இங்கே கொண்டாடுபவர்கள் குறிப்பிட்ட காலம் வரைதான். இங்கே ட்ரென்ட் என விளிக்கப்படும் காரியம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று.
அந்தக் காலத்தில் நடிகைகளுக்குப் பஞ்சம் இருந்தது நடிகைகளுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு கலைஞருக்கும் சற்றே பஞ்சம் இருந்தது; திரையில் தோன்றுபவர் என்றால் ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அடுத்தடுத்துத் தன்னை முன்னேற்றிக் கொண்டே இருந்தால் மட்டுமே மனதில் தங்குவர். சிறிதுநேரம் கண்களையாவது உறுத்தும் தூசிபோல நிற்பார். இல்லையேல் நீரின் மேல் விழுந்த ஒருதுளி மையாகக் கரைந்து விடுவர்.
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் பல பேருக்குக் கொண்டாடப்படும் காலம் மட்டுமே அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வின் வாழ்வுக்காலமாக இருக்கும். மற்ற பக்கங்கள் எல்லாம் அவர்களது வாழ்வில் கரிய பக்கங்களாக இருக்கும். இருப்பினும் அதை அறிந்தே அந்தத் தற்காலிக மகிழ்ச்சிக்காகவும் கொண்டாடப்படுவதற்காகவும் மயங்கி, அதன் மேல் ஆசை கொண்டு அனைத்து பக்கங்களையும் சிதைத்துக் கொள்பவர்களும் கருமையாக்கி கொள்பவர்களுமே அதிகம்.
இந்த உண்மை நன்கு தெரிந்திருந்தும் சாரதா தன் மகளை ஏதேனுமொரு புகழேணியின் உச்சியில் ஏற்றி வைத்து அழகு பார்க்க ஆசை கொண்டார். தன் மகள் புடவை கட்டி, தலை நிறையப் பூவுடன் அமர்ந்து வாயசைத்துக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டவருக்குக் கண்களில் நீர் சுரந்தது.
என் மகள் இத்தனை வளர்ந்து விட்டாள், அவளது அழகு இத்தனை ஆராதிக்கத் தக்கதா எனத் தன்னைத் தானே வியந்து, தன் மகளின் நிலை குறித்துப் பெருமிதம் கொண்டார் ‘தன்னைத் தான் மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுப்பய மொச்சைக் கொட்ட... ஊரையே மீசிக் கொள்ளுமாம் உளுத்தபய மொச்சக் கொட்ட...’ என ஊரில் பெரியவர்கள் கூறுவதைப் போல.
தன் மகள் இத்தனை அழகாக இருக்கிறாள் என்பதில் அவருக்குக் கர்வம் பிறந்தது. திரைத்துறையைத் தன் மகள் தான் கோலோச்சப் போகிறாள் என்கிற அளவுக்கு அவர் கற்பனை கோட்டையைக் கட்டி, அதற்குக் கிரகப்பிரவேசம் நிகழ்த்தி அங்கே நிரந்தர முதலாளியாகத் தன் மகளை அமரவைக்கும் அதிரவைக்கும் கனவையும் வெகு சிறப்பாகக் கண்டு முடித்துவிட்டார்.
இப்போது அவருக்கு இருக்கும் பொறுப்பெல்லாம் கனவை நனவாக்கி, அவரது மகளை மகா பேரரசியாக - நிரந்தரப் பேரரசியாக – தன்னிகரற்ற பேரரசியாக ;முடி சூட்டுவது மட்டுமே அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர் தயாராகவே இருந்தார்.
உண்மையில் இது சாரதாவின் இயல்பு குணம் என்றாலும் அந்த இயல்பை வெகு விரைவாக ஊக்குவித்தது அவரது உடலில் கலந்திருக்கும் ஏஎஸ் வைரஸ் ஆகும். ஏனென்றால் முன்பே தெரிவித்தபடி ஏஎஸ் வைரஸ் நமக்குள் புகுந்துவிட்டால் ஒளியைவிட வேகமாக அனைத்து செல்களுக்குள்ளும் ஊடுருவும், பரவும், பிரியும் தன்மை கொண்டது. ஒருமுறை தாக்கிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்றுச் சிரமம் தான். இந்த ஏஎஸ் வைரஸ் என்றால் என்ன எனத் தாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என நினைக்கிறேன்.
ஆகவே அதன் அர்த்தம் யாதென விளக்கவேண்டிய பொறுப்பு இவ்விடம் என்னுடையது. ஏஎஸ் என்பதன் முழுப்பதம் அட்டென்ஷன் சீக்கிங் (Attention Seeking) அதாவது கவனயீர்ப்பு, ஒருவரது கவனத்தைத் தன்னை நோக்கி திருப்புவது; இங்கே அனைவரது கவனத்தையும் தன் மகளின் மீது திருப்ப வேண்டும் என ஆசை கொண்டார் சாரதா.
ஆனாலும் இது அவளது பள்ளிப் படிப்பின் காலம், அவளுக்குப் போதிய வயது நிரம்பவில்லை என நினைத்தவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அவள் நன்றி நவில்ந்த வீடியோவை பதிவேற்றி விட்டு தனது வேலைகளில் மூழ்கிப் போக, அந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டது. எண்ணிக்கை குறைவென்றாலும் அப்போதைக்கு அந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள் குறைவு எனத் தன்னைத் தான் தேற்றிக் கொண்டார் சாரதா.
ஏனென்றால் அந்தச் செயலி அப்போதுதான் புழக்கத்திற்கு வந்திருந்தது; ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு காணொளியிலும் காணும் இடம்தோறும் அந்தச் செயலியை குறித்து விளம்பரம் செய்து கொண்டுதான் இருந்தார்கள். “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என்பதற்கிணங்க, முதலில் ஒருவனை வீழ்த்த வேண்டும் என்றால் அவனுள் உறங்கிக் கிடக்கும் ஆசையைத் தூண்ட வேண்டும்.
இங்கேயும் அதுதான் நிகழ்ந்து கொண்டிருந்தது; திரையில் ஒளிரும் பிறரது நிழல் உருவங்களைப் பார்க்கையில் நாமும் அதுவாக இருந்தால் எப்படி இருக்கும், தன்னையும் அத்தனை பேர் பார்த்தால் எப்படி இருக்கும் என ஒருவித ஆவல் பிறப்பது இயல்புதான். அது ஒரு தனி மனிதனுக்கான எதிர்பார்ப்பும் கூட. அது சரி தவறு என நியாயத்தீர்ப்புக்கு ஆட்படாது.
ஏனெனில் அது எவருள்ளும் உறங்கிக் கிடக்கும் ஒரு ஆசை தான் அது. தனது செயல்களை எவரேனும் பாராட்டி விட மாட்டரா எனும் ஏக்கம் பிறப்பது இயல்புதான். ஏனெனில் மனித மனம் மயங்குவதும் ஏங்குவதும் ஒரு சிறு பாராட்டுக்காகத் தானே இப்போது சாரதாவின் மனம் தன் மகளை எவரேனும் பாராட்டி விட மாட்டாரா என ஏங்கித் தவித்தது.
Last edited: