Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL ஏ.எஸ் வைரஸ் - Tamil Novel

Status
Not open for further replies.

15

சத்யாவின் வீட்டில் குடும்பத்தைக் கவனிப்பதில் அவள் பின்தங்கியிருந்தால், இங்கே மூர்த்தி வேலைக்குச் சென்ற இடத்திலும் இதையே பிரதானமாகச் செய்து கொண்டிருந்தான்.

அன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்த சாரதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் என எடுத்து பார்க்க, அவர்களின் உறவினர் ஒருவர் தான் அழைத்திருந்தார்.

“என்னாச்சு அண்ணி?” என அவர் விசாரிக்க, உன் பொண்ணை சரியா கவனிக்க மாட்டியா?? அவ என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்க மாட்டியா? இப்ப பாரு டிவியில அவளோட வீடியோ வருது..” என அவர் சற்றே திட்டும் தொனியில் பேசவும், திடுக்கிட்டுச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்தார் சாரதா.

அதற்குள் அந்த நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தது. “என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன ப்ரோக்ராம்ல வந்தா?? புரியல நீங்க சொல்றது..” எனச் சாரதா அவரிடம் வினவ, “அதான் அந்தக் கிங்காங்ன்னு.. டிவியில என்னமோ போட்டு ஆடிக்கிட்டு இருக்கா உன் பொண்ணு... என் பையன் தான் சொன்னான் இது நம்ம வெண்பா அப்படின்னு.. அதான் உனக்குக் கால் பண்ணி கேட்கலாம்னு நினைச்சேன்... நம்ம வெண்பாவா இல்ல அந்த மாதிரி இருக்கிற வேற எதுவும் பொண்ணா??” என அவர் விசாரிக்க, இப்போது தன் மகளைக் குறித்தும் தன் மகளின் முன்னேற்றத்தை குறித்தும் வெளிவிட்டுவிட வேண்டாம் என எனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்த சாரதா, “இல்ல அண்ணி... அவ ஸ்கூலுக்குப் போறா... அவளுக்கு எப்படி இதுக்கெல்லாம் நேரம் கிடைக்கும்?? கிளாஸ்ல முதல் மார்க்கு வாங்குறா.. இதுக்கெல்லாம் நினைச்சுப் பார்த்தா கூட நேரமில்லை...” எனச் சமாளித்து அழைப்பை துண்டித்துவிட்டார் ஏனெனில் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும், தன் மகளின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் (அ) பதவிஉயர்வு கிட்ட வேண்டும் என்பதற்காகச் சாரதாதான் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் காணொளிகளை அனுப்பியிருந்தார்.

இவ்வாறாக இரண்டு மூன்று நாட்களாகப் பலர் ராதாவிடம் நேரிலும் அலைபேசியிலும் தொடர்புகொண்டு பேசியவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் உண்மையைத் தெரிவிக்காமல் தவிர்த்திருந்தார் சாரதா.

அப்போதுதான் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எப்படியும் இதுவும் உறவினர் எவரிடமாவது இருந்து வரும் எச்சரிக்கை அழைப்புதான் என நினைத்தவர் முதலிலேயே அழைப்பை ஏற்கவில்லை.

“இவங்களுக்கு வேற வேலையே இல்ல...” எனச் சலித்துக் கொள்ள, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு...

அலட்சியத்துடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, அவள் ‘ஹலோ’ சொல்லும் முன்னரே, “ஹலோ... மிஸ்.வெண்பா இருக்கிறாங்களா??” என எதிர் முனையில் நாகரிகமாக ஒரு ஆணின் குரல்.

“யாராக இருக்கும்?” என யோசித்தவாறே சாரதா வினவ “மேம்... நாங்க கேகேஆர் புரோடக்சன் ஹவுஸில் இருந்து பேசுறோம்... லயனிகா டிவி இருக்குதுல்ல... அந்தச் சேனல்ல மாறிலி மானிடர்கள்ன்னு ஒரு சீரியல் போயிட்டு இருக்குது தெரியுமா?? அதில் செகண்ட் ஹீரோயின் ஒரு ரோல் புதுசா இன்ட்ரடியூஸ் ஆகுது... நாங்க வெண்பா மேடத்தோட பப்ஸ்மாஷ், கிங்காங் வீடியோஸ் பார்த்தோம்... அவங்க இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுது...” என அவன் கூறவும் சாரதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மகள் எடுத்த எடுப்பிலேயே சின்னத்திரையில் நடிப்பதா?? அதுவும் இரண்டாவது கதாநாயகியாக....?? அப்படியானால் அனைவரின் பார்வையும் அவள்மீது விழவே விழாதே.. இறுதிவரை துணைநடிகையாக மட்டுமே இருந்து மடிந்து போவாளே பதைபதைத்தவர் பின்னர் யோசித்துக் கூறுவதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.

அழைப்பை துண்டித்த பிறகு நன்றாக அமர்ந்து யோசித்துப் பார்த்தார். ‘மடத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..’ எனக் காத்திருந்தால் காலமும் நேரமும் வயதும் சென்றுவிடும்; அதன்பின்னர் வருந்திப் பயனில்லை. எனவே ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்பதற்கிணங்க கிடைத்த வாய்ப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு தன்னைதான் முன்னேற்றிக் கொண்டே வாய்ப்புகளைத் தேடவேண்டும் எனத் தீர்மானித்தவர்; தன் மகளிடம் இதுகுறித்துத் தெரிவிக்க முடிவு செய்தார்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த வெண்பாவை ஆர்வமாக வரவேற்று அமர வைத்தார் சாரதா. அவளுக்குப் பிடித்த ரவாலட்டு, சமோசா தயாரித்து வைத்திருந்தார். அவர் வெகுவிமரிசையாக அவளை வரவேற்க, சற்றே துணுக்குற்றவள்; “அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?? இவ்ளோ பாசமா வரவேற்கிற... அப்பா ஏதும் சொன்னாரா?? ஏதும் நல்ல விஷயமா??” என விசாரித்தவாறே உள்ளே வந்தாள் வெண்பா.

அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு, அவளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும் குளம்பியையும் அவனிடம் உண்ணக் கொடுத்தார் சாரதா. “என்னம்மா நீ.... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லமாட்ற... நான் எவ்ளோ ஆர்வமா கேட்கிறேன்...” என அவள் சினுங்க, “இரு... இரு... சொல்றேன்...” என்றவர்; “இப்போ ஒருவேளை சீரியல்ல உன்னை நடிக்கச் சொன்னா நீ என்ன பண்ணுவ??” என நேரடியாகவே கேட்டார்.

“அம்மா எனக்கு நடிக்க வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் அது என்னோட ஆம்பிஷனும் இல்ல பேஷனும் இல்ல... படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்... அதுதான் அப்பா எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறாங்க... ஆனாலும் நம்ம கிங்காங் ஆப்பை விடச் சீரியல்ல நடிச்சா நிறைய ரீச் கிடைக்கும்... இங்கே ஆப் வச்சிருக்கிறவங்க மட்டும்தான் நம்மைப் பாப்பாங்க, பாராட்டுவாங்க, கொண்டாடுவாங்க... ஆனால் சீரியல்ல நடிச்சா நிறையப் பேரு நம்மள பார்ப்பாங்க... ஒரு விதமா எமோஷனலி கனெக்ட் ஆகலாம்... குடும்பத்தோட ஆணிவேராய் இருக்கிற குடும்பத் தலைவிகள் நம்மையும் குடும்பத்துல ஒருத்தரா பாப்பாங்க அப்படின்னு எப்பவோ யாரோ சொன்னதா பேட்டியில் பார்த்த ஞாபகம்... இப்ப ஏன் கேக்குற??”

“ஒண்ணும் இல்லடா... நீ லயனிகா டிவி பார்த்திருக்கிறியா?? அதிலே மாறிலி மானிடர்கள் சீரியல் பார்த்திருக்கிறியா?? அதிலே செகண்ட் ஹீரோயின நடிக்கச் சொல்றாங்க... உன்னோட கிங்காங் வீடியோஸ் நல்லா இருக்குதாம்... முதல்ல செகண்ட் ஹீரோயினா என்ட்ரி இருக்குமாம்... போகப்போகக் கதை உன்னைச் சுத்தி நடக்கிற மாதிரி மாறும் அப்படின்னு சொன்னாங்க...” எனச் சாரதா விளக்கமளிக்க வெண்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

(மேலே குறிப்பிட்ட லயனிகா எனது அபிஷியல் ஆடியோ சேனல். மாறிலி மானிடர்கள் சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் பச்சை வண்ணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போட்டிக்கதை. நேரம் இருப்பின் அதையும் முயற்சித்துப் பாருங்கள்)

பதினைந்து வயது சிறுமிக்கு என்ன தெரியும்?? தன் வாழ்வில் முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கு அவளுக்கு எந்த முதிர்ச்சியும் இல்லை; பகட்டாக இருப்பவை, கண்களைக் கவரும் தன்மையுடன் இருப்பவைதான் அவளைப் பொருத்தவரையில் சிறந்தவையாகத் தெரியும். தாய்தந்தையர் தான் எது சரி எது தவறு எனச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இங்கே சாரதா அவளைத் தீயவழியில் நடத்தினார் என்று நான் சாடவில்லை, உலகநாயகனின் கூற்றைப் போல நல்லவழியில் ஆக்கப்பூர்வமாக நடத்தியிருக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பு. அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவுதான்.

அவளைக் குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைக்க முடிவு செய்தார் சாரதா. வெண்பா அவரது மகள் மட்டுமின்றி நாராயணனின் மகளும் அல்லவா?? அவள்மீது இருவருக்கும் சம உரிமையும், சம பொறுப்புகளும் இருக்கிறதல்லவா??? அவளது வாழ்வில் எந்த முடிவாக இருந்தாலும் நாராயணனிடமும் கேட்டுத்தானே முடிவு செய்ய இயலும்?? எனவே அவரிடம் கேட்டு, முறைப்படி அனுமதி பெற்றுவிட்டு,; தன் மகளை நடிப்பதற்கு அனுமதிக்கலாம் என நினைத்தவர் அன்று மாலை வீடு திரும்பிய தன் கணவரிடம் இதற்கு அனுமதி கோரினார்.

இரவு உணவை உண்டுகொண்டிருந்த தன் கணவனிடம் மென்மையாக எடுத்துரைக்க வேண்டி, “ப்பா... நீங்க சீரியல்லாம் பார்த்திருக்கிறீங்களா??” என மெதுவாக ஆரம்பித்தார்.

“அதெல்லாம் வேஸ்ட்... வீட்டில நேரம் போகாம இருக்கவங்க மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்க... எனக்கு ஆயிரம் வேலை இருக்குது... இப்படிக் கால் காசுக்கும் பெறாத சீரியல்ஸ் பாக்குறதுல எனக்கு விருப்பமில்ல...” என அவர் கூறிவிட, கோபமாக வந்தது சாரதாவுக்கு.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படித் தன் மகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது எனக் கூற எனத் தயக்கமாக இருந்தது. இருப்பினும் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லப்பா.. நம்ம வெண்பாவை சீரியல்ல நடிக்கக் கூப்பிடுறாங்க...” எனச் சாரதா கூறியதுதான் தாமதம்; ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டார் நாராயணன்.

“என்ன பேச்சு பேசுற நீ??! நாட்டுல பாதிக் குடும்பம் கெட்டுப் போறதே இந்தச் சீரியல் பார்க்கிற ஆளுங்களாலதான்.. எந்தச் சீரியல்லயாவது உருப்படியா ஏதாவது ஒரு விஷயம் வருதா?? எப்ப பாரு அழுகாச்சிதான்... ஊர்ல இருக்கிற எல்லாப் பிரச்சனையும் ஹீரோயினுக்கு மட்டும் தான் வரும், அந்தப் பிரச்சினையும் கண்டிப்பா அவளுக்குச் சாதகமாகதான் முடியும்... இதுக்குப் பேசாம பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே.. எல்லாச் சீரியல்லேயும் ஒரே பிளாட்... இந்தச் சொசைட்டிக்கு நல்லது சொல்ற மாதிரி, நல்ல கருத்து சொல்ற மாதிரி எதுவுமே இல்லை... எல்லாச் சீரியல்லேயும் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், அந்த ஹீரோ ஹீரோயினுக்கு நடக்காத ஃபர்ஸ்ட் நைட்... அவனைப் பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு அதே வீட்டுக்குள்ளேயே குடியிருக்கிற வில்லி... மருமக பணக்கார வீட்டில் பொறக்கல, வரதட்சனை அதிகம் கொண்டு வரலன்னு நிதமும் குத்திக்காட்டிட்டு இருக்கிற மாமியார், படிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா மாறணும், புருஷனுக்குச் சேவை செஞ்சே தேயணும்ன்னு வற்புறுத்துற மாமியார்... இதுக்கு எல்லாத்துக்கும் அல்டிமேட்டா பெண்டாட்டி வயித்துல இருக்கிற குழந்தை தன்னோடது இல்லைன்னு சந்தேகப்பட்டு விரட்டி விடுற ஹீரோ, இதுல அவனால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அவனுக்குத் தன் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற அப்பா... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதுல ஏதாவது ஒரு விஷயம்... ஏதாவது ஒரு விஷயம் இந்தச் சொசைட்டி முன்னேத்துற மாதிரி இருக்குதா?? அப்படிப்பட்ட ஒரு சாக்கடையைப் பாக்குறதே தப்புன்னு சொல்றேன்... அதுல என் பொண்ணை நடிக்க வேற சொல்லுறியா?? உனக்கு ஒண்ணு தெரியுமா?? திரையில் வர்றது மூலமா எல்லாரையும் சிரிக்க வச்சு, அழ வச்சு, ரசிக்க வச்சிருந்தாலும் அவங்களோட வாழ்க்கை போராட்டம் அவ்ளோ கஷ்டம். ஒவ்வொரு நிமிஷமும் ஓடிட்டே இருக்கணும்... தனக்காக, தன் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்காம அடுத்தடுத்த வாய்ப்புகள தேடி, ஓடிட்டே இருந்தா மட்டும்தான் அவங்களால அந்தத் துறையில் நிலைத்து நிற்கமுடியும்... அப்படிப்பட்ட ஒருத்தியா என் பொண்ணு போராடுறத நான் விரும்பலை... இப்போ நான் அந்தத் துறையை இழிவாகவும் தரக்குறைவாகவும் சித்தரிக்கல... நம்ம செய்யுற டாக்டர், டீச்சர் தொழில் மாதிரி அதுவும் ஒரு தொழில்தான்... ஆனால் நிரந்தரமான வருமானமும் நிரந்தரமான பொசிஷனும் இல்லாத ஒரு துறை அது. தினமும் 100 ரூபாய், 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவாங்க எத்தனை பேர் தெரியுமா?? வாரத்தில் ரெண்டு மட்டுமே வேலை இருக்கும் அவங்களுக்கு... இப்படிப்பட்ட ஒரு துறையில் போராடி, சர்வைவ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாரு... நம்ம பொண்ணு ஹீரோயினாவே நடிச்சாலும் கடைசிவரை ஹீரோயினாவேதான் நடிக்கப் போறாளா?? வெளியே இருந்து பாக்குறதுக்கு இது பஈசியா இருக்கலாம்.. ஆனா அவ்வளவு கஷ்டம் அவங்களுடைய ஜீவனம்... சோ எதையும் அரைகுறையா பார்த்துட்டு வந்து பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத... என் பொண்ணு நல்லா படிச்சு ஒரு நல்ல ஜாப்ல செக்யூர்டா இருக்கணும்னு ஆசைப்படறேன்... தேவையில்லாம எதையாவது பேசி அவ மனசை கெடுத்துடாத... அவ படிக்கிற பொண்ணு... படிக்கட்டும்..” எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் நாராயணன்.

நாராயணனிடம் வாக்குவாதம் செய்வது சரிப்பட்டு வராது எனத் தெளிந்த சாரதா; தன் தரப்பிலிருந்து என்ன முயற்சி எடுக்கலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினார்
 
Last edited:

16

அதன்படி, மறுநாள் மாலை எந்த வேலையும் செய்யாமல், வீட்டை சுத்தம் செய்யாமல், பாத்திரங்களையும் துலக்காமல், வீட்டில் விளக்கு ஏற்றாமல், ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்தார்.

முந்தைய நாள் நடந்த நிகழ்வுகளால் சற்று துணுக்குற்ற நாராயணன்; தன் மகளைத் தன் மனைவி எங்கே தவறான பாதையில் வழிநடத்தி விடுவாரோ என அஞ்சி, டியூஷனில் சேர்க்க சென்றிருந்தார்.

டியூஷனில் சேர்த்து விட்டு மாலை 7 மணிக்கு அவர் வீடு திரும்புகையில் வீடு கும்மிருட்டாக இருந்தது. “என்னாச்சு?? இந்த மாசம் சரியா கரண்ட் பில் கட்டிட்டேனே?? என்னவா இருக்கும்???” எனச் சிந்தித்தவாறே உள்ளே வந்து ஹாலில் விளக்கை ஒளிரவிட, சோபாவில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல அமர்ந்திருந்தார் சாரதா.

“ஏய்... என்னாச்சு உனக்கு?? ஏன் லைட் போடாம பிசாசு மாதிரி உட்கார்ந்திருக்கிற??” எனச் சற்றே கண்டிப்பான குரலில் கேட்க, பிடித்துக்கொண்டார் சாரதா.

“ஏதோ உங்களுக்கு மட்டும் தான் பொண்ணு வாழ்க்கையில அக்கறை இருக்கிற மாதிரி ஓவரா பண்றீங்க... அவளைப் பத்து மாசம் சுமந்து பெத்தவ நான்... அவளுக்கு எது சரி, எது தப்புன்னு எனக்குத் தெரியாதா?? ஏதோ நான் அவளைக் கெடுத்துடுவேன். அவ வாழ்க்கையைச் சிதைத்துடுவேன் என்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க?? அவ வாழ்க்கையில் முன்னேறணும், அவளுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கணும், அவளுடைய திறமையைப் பலர் அங்கீகரிக்கணும் அப்படிங்கறதுக்காகத் தான் அந்த வாய்ப்பை தேடினேன்... என்னென்னவோ பேசுறீங்க...” எனச் சாரதா பொரிந்து தள்ளத் தொடங்க, “என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?? ஏன்டி... அவ ஒன்பதாவதுதான் 9வது தான் படிக்கிறான் 15 வயது தான் ஆகுது இப்போ போய்ப் படிக்கிறா... இதுதான் அவ வாழ்க்கையை சரியா அமைச்சிக்க வேண்டிய நேரம்.. இப்ப போய்ச் சினிமாவில் நடிக்க வைக்கிறேன், டிவில வர வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்குற... இதெல்லாம் நிறந்தரம் இல்லன்னு தெளிவா சொன்னேனே... புரியலையா உன் மரமண்டைக்கு?? இன்னைக்குச் சூப்பர் ஃபிகர், கனவுக்கன்னி கொண்டாடுறவன் நாளைக்கே மார்கெட் போயிருச்சுனா கண்டுக்கவே மாட்டான்... அழகா இருக்கா, நல்லா ஆடுறா அப்படின்னு யாராவது நாலுபேர் உசுப்பேத்திவிட்டா அதை நம்பி மோசம் போய்டாதே... நாளைக்குப் பிரச்சனைன்னு வந்தா வெண்பாவுக்கு நாமதான் நிக்கணும்... அவங்க வரமாட்டாங்க அதை முதலில் புரிஞ்சுக்கோ... இதுக்கு மேல இது பத்தி என்கிட்ட பேசாத...” என அவர் கறாராகக் கூறிவிட, தனது முடிவில் உறுதியாக இருந்தார் சாரதா.

“சரியான கண்ட்ரி ப்ரூட்டா இருக்கீங்க நீங்க.... உங்களுக்குப் போய் எங்க அப்பா கட்டிக் கொடுத்து என் வாழ்க்கையிலேயே மண்ணள்ளி போட்டுட்டாரு.. எனக்குச் சின்ன வயசுல ஆடணும், பாடணும்ன்னு நெறைய ஆசைகள் இருந்துச்சு... ஆனா அதையெல்லாம் நாலு சுவத்துக்குள்ள முடக்கி வச்சுட்டார் எங்க அப்பா... அப்புறம் அவரையேமாதிரி பெண்களை அடிமைப்படுத்துற உங்க தலையில என்னைக் கட்டிவச்சு, என் மொத்த வாழ்க்கையையும் முடமாக்கிட்டார்..” எனச் சாரதா பேச, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் நாராயணன்.

“என்னடி சொன்ன?? நான் உன்னை அடக்கி வைக்கிறேனா?? கல்யாணமான புதுசுல எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.. ஏதாவது வேலைக்குப் போ, புதுசா ஏதாவது கத்துக்கோன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்... இப்போ கூட ஒண்ணும் கெட்டு போகல... உனக்கு ஆடணும் பாடணும்னு ஆசை இருந்தா கத்துக்கோ... பரதமோ கதக்களியோ குச்சுப்புடியோ ஏதோ ஒண்ணைக் கத்துக்கோ... உன் வயதில் இருக்கிறவங்களுக்குத் தனியா அரங்கேற்றம், போட்டிகள்ன்னு ப்ரோபஷனலா நெறைய விஷயங்கள் இருக்குது.. அது ஒரு தனி ட்ராக்... அங்கே நீ போ, கலையை வளர்க்க முயற்சி பண்ணேன்... ஆனா என் பொண்ணைச் சீரழிச்சிடாதே... ஒருவேளை அவளுக்கும் இந்த மாதிரி விஷயத்துல இன்ட்ரஸ்ட் இருந்தா டான்ஸ் கிளாஸ் சேர்த்துவிடு... அவளும் கலையைக் கத்துக்கட்டும்.. ஆனா இந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....” என அவர் உறுதியாகக் கூறி விடவும் கத்த தொடங்கிவிட்டார் சாரதா.

“உங்கள மாதிரி ஒருத்தருக்கு பொண்டாட்டியா வாழுறதுக்கு நான் விஷத்தை குடித்துச் செத்திருக்கலாம்...” எனக் கையில் வைத்திருந்த விஷத்தை திறந்து வாயில் ஊற்றப்போக, அதைத் தட்டிவிட்ட நாராயணன்; அதே வேகத்தில் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதைச் சாக்காக எடுத்துக்கொண்ட சாரதா என்னை அடித்து விட்டாய் அல்லவா இனி நீயே வந்து என்னைக் கெஞ்சாத வரையில் நான் உன்னைத் தேடி வரமாட்டேன் எனச் சபதம் பூண்டவராக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார்.

“நீ போவதாக இருந்தால் போ... ஆனா என் பெண்ணைக் கூட்டிட்டு போகாதே... உன்னால வந்த சண்டை உன்னாலேயே போகட்டும்... கொஞ்ச நாள் உன் அம்மா வீட்ல இரு... உனக்குப் புரியும் நான் எதுக்காக வேணாம்னு சொன்னேனேன்னு... அமைதியா யோசிச்சு பார்த்துட்டு ஒரு வாரம் தங்கி இருந்துட்டு வா...” என நாராயணன் கூற, அவருக்குப் பதில் எதுவும் பேசாமல் அமைதியாகத் தயாரான சாரதா செல்லும் வழியில் வெண்பாவையும் அழைத்துக்கொண்டு சென்று விட்டார்.

இரவு தாமதமாகியும் வெண்பா வீட்டிற்கு வரவில்லை என்பதனால் அவள் படிக்கும் டியூஷனுக்குச் சென்று விசாரிப்பதற்காகக் கிளம்பினார் நாராயணன். அங்கே வெகுநேரத்திற்கு முன்னரே சாரதா வந்து அழைத்துக் கொண்டு சென்றுவிட்டதாக அவர்கள் தெரிவிக்கவும் அதிர்ந்தார் நாராயணன்.

உடனடியாகச் சாரதாவின் பெற்றோருக்கு அழைத்து நடந்த விவரத்தை தெரிவிக்க, அவர்களுக்கு நாராயணன் மீது சற்றே வருத்தம்!!

“என்ன இருந்தாலும் நீங்க அவளைக் கைநீட்டி அடிச்சிருக்கக் கூடாது மாப்பிள்ளை...” என அவர்கள் கூற, “தப்புதான்... ஆனா அந்த நேரத்தில் என் பொண்ணைக் கெடுத்து விடக்கூடாது அப்படிங்கிற பயம்தான் இருந்ததே தவிர அவளைக் கைநீட்டி அடிக்கணும் அப்படிங்கிற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை... அந்த இடத்தில் நான் ஒரு புருஷனாக நடந்து கொள்வதைக் காட்டிலும் வெண்பாவின் அப்பாவாக நடந்தேன்.. இருந்தாலும் சாரி மாமா..” எனத் தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டார் நாராயணன்.

அதற்கு மேல் அவர்களிடம் பேசி பயனில்லை என முடிவு செய்தவர்; சாரதாவும் வெண்பாவும் அங்கே வந்தால் தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

மேலும் சாரதா அவரது சகோதரர்களின் வீட்டிற்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை யூகித்தவர் அவர்களுக்கும் அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார். அவர்களும் நிலைமையைப் புரிந்துகொண்டு சாரதா அங்கு வந்தால் தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

ஆனால் மறுநாள் காலை வரையில் சாரதா அவ்விடம் சென்றதாகத் தகவல் வந்தபாடில்லை. அனைவருக்கும் பயமாகிவிட்டது. இரண்டு பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ சென்றுவிட்டால் குடும்பத்தினருக்கு எத்தகைய அச்சம் தோன்றும் என்பது அனைவரும் அறிந்தவொன்றுதான். இங்கே வயதுப்பெண்ணைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார் சாரதா; எனவே அச்சத்துடன் சேர்ந்து பதைபதைப்பும் தொற்றிக்கொண்டது.

என்ன செய்வதென யோசித்தவர்கள்; காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்னும் முடிவுக்கு வந்தனர். அப்போதுதான் நாராயணனின் ஒரு அழைப்பு வந்தது சாரதாவின் எண்ணிலிருந்து. பதற்றத்துடன் அழைப்பை ஏற்றவர்; “எங்கே இருக்கிறா?? உன்னை யாரும் வெண்பாவை கூட்டிட்டுப் போகச் சொன்னது?? அவ என் பொண்ணு ஒழுங்கா... வீட்டுக்கு வந்துடு... எதுவாயிருந்தாலும் உட்கார்ந்து பேசிக்கலாம் நாம்.. நான் சொல்றதை கேளு...” எனப் பொறுமையாகப் பேச. “நான் வர மாட்டேன்...” என்றார் சாரதா உறுதியாக.

“சொன்னா கேளு... எந்தப் பிரச்சனை இருந்தாலும் பொறுமையாகப் பேசி தீர்த்துக்கலாம்...” என நாராயணன் அமைதி உடன்படிக்கைக்கு அடிகோல, “அதெல்லாம் எனக்குத் தெரியாது... நீங்க என்னைக் கைநீட்டி அடிச்ச மாத்திரத்தில் நான் அங்கே வரமாட்டேன்... எனக்கும் சுயமரியாதைன்னு ஒண்ணு இருக்குது... நானும் என் பொண்ணும் உங்கள பிரிஞ்சு போனதா நினைச்சுக்கோங்க... என்னைக்காவது ஒரு நாள் நாங்க பெரிய ஆளா வருவோம், என் பொண்ணு உயர்ந்து நிற்பா... எல்லாரும் அவருடைய வளர்ச்சியைப் பார்த்து பெருமைப்படுவீங்க... அப்போ நீங்க எல்லாரும் தேடி வந்து ஒட்டிக்குவீங்க... அப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன்... அதுவரைக்கும் குட்பாய்...” எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் சாரதா.

பின்தொடர்பவர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாங்கள் இருவரும் சேர்ந்து காணொளியில் தோன்றலாம் என முடிவு செய்து கொண்டனர் அர்ஜுனும் ரோஜாவும். முதலில் இருவரும் சேர்ந்து சமைக்கலாமா அல்லது வேறு ஏதேனும் ஒன்றை செய்யலாமா என யோசித்தவர்கள்; பின்னர் அனைவரும் விரும்பும் ‘கப்பிள் சீரிஸ்’ என அழைக்கப்படும் ஒன்றையே தொடர முடிவு செய்தனர்.

முதலில் சிறுசிறு லவ் டிப்ஸ், ரிலேஷன்ஷிப் டிப்ஸ் எனக் கலகலப்புடன் வழங்கிக் கொண்டிருந்தவர்கள்; ஒரு கட்டத்தில் கிங்காங் செயலிக்குள் நுழைந்து விட்டனர். மற்ற செயலிகளைக் காட்டிலும் இங்கே பதிவிடுவது எளிதாக இருந்ததால் இதிலேயே தொடர முடிவு செய்தனர். பெரிதாக வரவேற்பு இல்லையாயினும் ஒருவித நிம்மதியுடன் இருந்தனர்.

ஒரு நாள் நேரலையில் ரோஜா எதையோ பேசிக்கொண்டிருக்க, அதைக் கவனியாமல் அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அர்ஜுன் பின்னாலிருந்து அணைத்து விட்டான். “அச்சோ அர்ஜுன் சார்... லைவ் போய்க்கிட்டு இருக்குது...” என அவள் சற்றே குழைவான குரலில் மிழற்ற, அவனோ சிறு புன்னகையுடன் விலகிசென்றுவிட்டான்.

இதைக் கண்டவர்கள் இதுவரை பொருத்தத்தையும் “ஆஹா... ஓஹோ...” எனப் புகழ்ந்துரைக்கத் தொடங்கினர். அவளுக்கு ஆனந்தம்!! “ஜாடிக்கேத்த மூடி..” என்பது போன்ற விமர்சனங்கள் பதிவிடப்பட, உண்மையிலேயே நெக்குருகிப் போனாள் ரோஜா.

மெய்யாகவே இருவரும் சிறந்த கணவன் - மனைவி தான். ஆனால் நிம்மதியை குலைக்கும்/குடிக்கும், இந்தக் கவனயீர்ப்பு செய்யத்தூண்டும் நுண்ணுயிரிகள் உள்ளே புகுந்த பின்னரும் அவ்வாறாக இருப்பாரா என்பதுதான் சந்தேகமே!! அவர்களது அப்பழுக்கற்ற அதீத நேசம் இயற்கையாக அடி மனதில் இருந்து பிரவாகித்ததாக இருக்குமா இல்லையேல் பட்டனை தட்டியவுடன் எரியும் விளக்கைப் போல ஆகுமா என்பது காலத்தின் கையிலேயே....!! இல்லை இல்லை அந்த நுண்ணுயிரிகளின் கையிலேயே....!! அவற்றின் வளர்ச்சிக்கு தீனி போடுவரா இல்லையா என்பதுதான் காலத்தின் கையில்!!
 
Last edited:

17

அன்று வழக்கம்போலக் கப்பிள் டிப்ஸ் வழங்கிவிட்டு அமர்ந்த ரோஜாவுக்கு இரண்டு நாட்களில் வரப்போகும் தன் கணவனின் பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. அதற்கு என்ன வாங்கலாம் என யோசித்தவள் எதுவும் கிட்டாமல் போகவே, தனது கிங்காங் நண்பர்களிடம் அதாவது பின்தொடர்பவர்களிடம் கேட்கலாம் என முடிவு செய்தாள்.

அதன்படி, கேமராவை ஆன் செய்தவள்; “ஹலோ பிரண்ட்ஸ்... எப்படி இருக்கீங்க?? உங்க எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் கேக்குறதுக்கு வந்திருக்கிறேன்.. என்னோட அர்ஜுன் சாருக்கு நாளைக்கு மறுநாள் பர்த்டே வருது... எங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கப்புறம் வர்ற முதல் பர்த்டே.. சோ இதுவரைக்கு அவர் லைப்ல கொண்டாடி இருக்காத ஒரு மறக்கமுடியாத பர்த்டேவா அதைக் கொண்டாட ஆசைப்படுறேன்.. அதுக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான ஒரு கிப்ட் கொடுக்க ஆசைப்படுறேன்... ஆனா என்ன கொடுக்கிறதுன்னு தெரியல... லவ் பண்ணி லவ் மேரேஜ் பண்ணி இருந்தாலாவது ஏதாவது தெரிந்து இருக்கும் நாங்க அரேஞ்ச் மேரேஜ்... சோ நீங்க ஏதாவது டிப்ஸ் கொடுங்க... உங்களுக்கு நாங்கஎத்தனை டிப்ஸ் கொடுக்கிறோம்... இந்த விஷயத்தில் மட்டும் எனக்கு ஹெல் பண்ணுங்கபா...” எனப் பேசி, அந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தாள்.

சில மணி நேரங்களிலேயே பலன் கிடைத்திருந்தது. ஆயிரம் பார்வைகள் (வியூக்கள்) சென்றிருக்க, சில நூறு கருத்துகள் (கமெண்டுகள்) வந்திருந்தன. தன் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிலும் அக்கறையும் உச்சி குளிர்ந்து போனவள் அவற்றிலிருந்து சிறந்த ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அவனுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என முடிவு செய்தாள்.

மறுநாள் காலையிலேயே “சிஸ்டர்... உங்க அர்ஜுன் சாருக்குக் கிப்ட்ஸ் வாங்கிட்டீங்களா...” என அவர்கள் கேட்க, “இல்ல... இன்னிக்கு ஈவ்னிங் தான் வாங்க போறேன்...” எனப் பதிலளித்தாள் ரோஜா.

“ஓகே சிஸ்டர் நீங்க வாங்கிட்டு வந்ததும் வீடியோ எடுத்து அப்லோட் பண்ணுங்க... நாங்க பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கிறோம்...” என அவர்கள் கேட்க, “சரி...” எனச் சம்மதித்தாள் ரோஜா.

அன்று மாலையே அருகிலிருந்த ஜவுளி கடை ஒன்றிற்குச் சென்றவள் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் தனது அர்ஜுனுக்கு ஒரு சட்டையையும் வேஷ்டியும் வாங்கினாள். ஏனென்றால் அர்ஜுன் ஒரு பழமை விரும்பி; அவனுக்கு டிரடிஷனல் ஆக இருப்பது பிடிக்கும், ஆகவே அவனுக்குப் பிடித்ததை வாங்கியிருந்தாள்.

மறுநாள் காலையில் அவனுக்குச் சிறப்பான உணவாகத் தயார் செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு, மேலும் அவனுக்கு ஒரு வாட்ச் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ரோஜா. அந்தப் பொருள்கள் அனைத்தையும் மேஜையில் பரப்பி வைத்து, “இங்க பாருங்க ப்ரெண்ட்ஸ்... இந்த ஷர்ட், வேஷ்டி இரண்டும் அர்ஜுன் சாருக்கு... அப்புறம் இந்த வாட்ச் அவருக்குத் தான்... எப்பவும் வார் வச்ச வாட்ச் தான் கட்டுவாரு... எனக்கு அவர் கோல்டன் கலர் செயின் வச்ச வாட்ச் போட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு...” என அவனிடம் கூற வேண்டிய காரியங்கள் அனைத்தையும் காணொளியிலேயே கூற, கேட்பவர்களுக்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

இங்கே பலருக்கும் அப்படித்தான்; அடுத்தவரின் காரியங்கள் என்றால் சுவாரசியமாக இருக்கும். அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் அவர்களின் அந்தரங்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள அதீத ஆர்வம் காட்டுவர். இதில் ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர் என்பதெல்லாம் எவ்வித பாகுபாடும் கிடையாது அடுத்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவே. இது ஒரு வகையில் மானுபேக்ச்சரிங் டிபெக்ட் என்றுகூட வைத்துக் கொள்ளலாம். ரோஜா தன் கணவனின் பிறந்தநாள் பரிசுகளைக் காணொளியாகப் பதிவிடவும், அனைவரும், “அக்கா... அப்படியே நீங்க சாருக்குக் கிப்ட் கொடுக்கும்போது அவர் எப்படி ரியாக்ட் பண்றாருன்னு வீடியோ எடுத்து போடுங்க...” எனக் கேட்டனர்.

தனக்குப் பிறந்தநாள் பரிசை தேர்வு செய்ய உதவியாக இருந்தவர்கள் தானே, மேலும் அனைவரும் தங்களைப் பின்தொடர்பவர்கள் - அவர்களும் தங்களது குடும்பத்தில் ஒரு அங்கம்தான், எனவே அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டும், அனைவரது பார்வையையும் கருத்தையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகச் சரியெனச் சம்மதித்தாள் ரோஜா.

மறுநாள் காலையில் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் என அனைத்தையும் செய்து தயாராக வைத்தவள்; அவனை எழுப்பினாள்;

“குட் மார்னிங் ரோஜா...” என்றவாறு எழுந்து கொண்டவன்; தேநீருக்காகக் கையை நீட்ட, அவன் நெற்றியில் முத்தமிட்டவள்; “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன் சார்...” என்றாள்.

“தேங்க்யூ...” எனப் பதிலுக்குக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டுக் குளியலறை நோக்கி சென்றுவிட்டான் அவன். அவன் தயாராகிக் கீழே வரவும், தான் சமைத்து வைத்து இருந்த அனைத்து பொருட்களையும் அவனுக்கு ஆசை தீர பரிமாறினாள்.

அவன் அலுவலகத்திற்குக் கிளம்புகையில், “அர்ஜுன் சார்... இன்னிக்குச் சீக்கிரம் வந்துடுங்க..” எனக் கூறவும், அவள் நெற்றியில் முட்டியவன்; “உத்தரவு மகாராணி...” எனச் சிரித்தவாறே கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சென்றான்.

முன்னரே காலை உணவுகளைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தாள் ரோஜா. அவற்றைக் காணொளியாகத் தயாரித்து, தன் நண்பர்களுக்கு அதாவது பின்தொடரும் நண்பர்களுக்குக் காண்பிக்க முடிவு செய்தாள்.

“இங்க பாருங்க ஃபிரண்ட்ஸ்... இது அர்ஜுன் சார் பர்த்டேக்காக நான் ஆசை ஆசையா சமைத்தது... இட்லி அவருக்கு ரொம்பப் பிடிக்கும், பொங்கல் எனக்கு ரொம்பப் பிடிக்கும், தோசை-பூரி எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கும்... தோசையும் தக்காளி சட்னியும் கொடுத்தா அர்ஜுன் சார் ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவார்.. பூரிக்குச் சட்னிதான் அவருக்குப் பிடிக்கும்...” என அவள் கூற, “சூப்பர் சிஸ்டர்... உங்க ரியல் லைஃப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்குது...” என ஆமோதித்தனர் பின்தொடர்வோர்.

அவளைப் பின்தொடர்வோர்களில் பாதிப் பேர் கல்லூரி மாணவிகளாக இருக்க, அவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் உடன்பயிலும் மாணவிகளிடமும் மாணவர்களிடமும் அர்ஜுன் - ரோஜாவின் அன்னியோன்யத்தைக் குறித்து விவரித்துக் கொண்டிருப்பர்; ஓய்வு வேளைகளில் எல்லாம் வருங்காலத்தில் தாங்களும் அப்படியானதொரு ஜோடிகளாக இருக்க விரும்புவதாகக் கூறி சிலாகித்னர். தங்கள் நண்பர்களையும் அவர்களைப் பின் தொடருமாறு அறிவுறுத்துவர். அவர்களும் சரி எனச் சம்மதிக்க அர்ஜுன் ரோஜாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. ஆம், நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் பெருக்கத்தினால் உயரவே தொடங்கியது.

அன்று மதியம் அவனுக்காகப் பிரத்தியேக உணவை தயாரித்து,நேரிலேயே சென்று பரிமாறிவிட்டு வந்தாள் ரோஜா. அதையும் ஒரு காணொளியாகப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.

அன்று மாலை அவன் வீட்டிற்கு வரவும், தான் வாங்கி வைத்திருந்த புதுச் சட்டையையும் வேட்டியையும் அவனிடம் கொடுத்து, “இதை மாத்திட்டு வாங்க அர்ஜுன் சார்...” என்றாள் ரோஜா. அவனும் அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன், “என் பொண்டாட்டி எனக்காக எல்லாம் வாங்கி வைத்திருக்கிறா...” எனச் சிரித்துக்கொண்டே உடைமாற்ற சென்றான்.

அவன் உடைமாற்ற விட்டு வெளியே வருகையில், அவனது அலுவலக நண்பர்களும் அண்டை வீட்டில் உள்ளவர்களும் வந்திருந்தனர். அனைவரும் “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன்...” எனக் கத்த, அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஏனென்றால் அவனைப் பொருத்தவரையில் பிறந்தநாள் என்றால் புதுச் சட்டை அணிந்து கோவிலுக்குச் சென்று வருவது, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இனிப்பு தருவது, மதிய உணவில் சிறப்பு உணவாக எக்ஸ்ட்ராவாகச் சக்கரைப்பொங்கல் இடம் பிடித்திருக்கும், இரவு உணவாகச் சப்பாத்தியும் குருமாவும் கிடைக்கும், அரிதிலும் அரிதாக எப்போதாவது விடுமுறையில் பிறந்தநாள் வந்தால் மதிய உணவில் அசைவம் இருக்கும்.

இதுநாள் வரையில் அவன் கொண்டாடிய பிறந்த நாள்கள் எல்லாம் இப்படியானவையே. ஆனால் முதல் முறை தன் மனைவி இவ்வாறாகக் கொண்டாடவும் சிலிர்த்துப் போய் விட்டான். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிட்டவில்லை அவனுக்கு.

முன்னரே கூறியது போல் அவனது மகிழ்ச்சி கலந்த முகத்தை அண்டை வீட்டு சிறுவன் ஒருவன் காணொளியில் பதிவு செய்து கொண்டிருந்தான். “வாங்க அர்ஜுன் சார் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்...” என அவன் கண்களைக் கட்டி, கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

ஒரு அறையில் அழகாக அலங்காரம் செய்து, அதன் நடுவில் “ஹாப்பிப் பர்த்டே அர்ஜுன் சார்...” என எழுதப்பட்ட கேக் இருந்தது. அதைப் பார்த்ததும் அவனது கண்கள் பனிக்க, “ஐயோ அர்ஜுன் சார்... சின்னப் பிள்ளைங்க மாதிரி கண்கலங்கிட்டு... முதல்ல கண்ணைத் துடைங்க... வாங்க... எனக்கூறிவிட்டுக் கேக்கை வெட்டுமாறு கூறினாள். கேக்கை வெட்டி, அவளுக்கு முதல் துண்டை ஊட்ட, அவனிடமிருந்து அந்தக் கேக்துண்டை வாங்கி, அவன் வாயில் திணித்தாள் ரோஜா.

பின்னர் வந்தவர்கள் அனைவருக்கும் கேக்கை அவன் கொடுக்க, அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து நன்றி தெரிவித்தாள் ரோஜா. இதுவரையும் வாழ்த்திவிட்டு அனைவரும் சென்றுவிட, காணொளியை பதிவிடுவதற்குக் காமிராவை ஆன் செய்து வைத்துவிட்டு, அவனருகில் வந்தாள் ரோஜா.

“அர்ஜுன் சார்... நான் உங்களுக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கிறேன்..” என அவள் கூற இவ்வளவு நேரம் கொடுத்தது எல்லாமே சர்ப்ரைஸ் கிப்ட் தானே...” என அவன் கேட்க, “இது வேற சார்...” எனத் தான் வாங்கி வைத்திருந்த கைக்கடிகாரத்தை அவனிடம் நீட்டினாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவளது முத்தமிட, முத்தமிட அவளும் மகிழ்ச்சியுடன் அவனுக்குக் கொடுத்தாள்.

இந்தக் காட்சியை மட்டும் நீக்கிவிட்டு, காணொளியை பதிவிட, அவர்கள் அனைவரும் மொத்த காணொளியையும் பதிவிடுமாறு கேட்டனர். அதுகுறித்து யோசித்து விட்டுப் பதிவிடுகிறேன் என்றவள் அர்ஜுனிடம் வந்தாள். தயங்கியவாறே அவள் தன்னருகில் வருவதைக் கண்ணுற்றவன்; “என்னாச்சு ரோஜா... இவ்வளவு தயங்குற...” என அவளது முகத்தைப் பிடித்து நிமிர்த்த, “அது ஒன்னும் இல்ல அர்ஜுன் சார்... உங்க பர்த்டேக்கு என்ன கிப்ட் கொடுக்கிறதுன்னு தெரியல.. அதனால நம்ம பாலோவர் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டேன்... அவங்க நிறைய ஐடியாஸ் குடுத்தாங்க... அப்புறம் உங்க பர்த்டே நல்லா செலிபிரேட் பண்றத அவங்க கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்னு வீடியோஸ் போட்டேன்... இப்போ அவங்க உங்க பர்த்டே செலிப்ரேஷன் ஃபுல்வீடியோ கேக்குறாங்க.. அதை ஃபார்வேர்ட் பண்ணி போடட்டுமா...” எனக் கேட்க, “இதுக்குத் தான் இவ்ளோ யோசிச்சியா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கப்பிளா வீடியோஸ் போட்டதுக்கு அப்புறம் நல்ல வியூஸ் இருக்குதுதானே... அதெல்லாம் ஒண்ணுமில்ல...” என்றுவிட்டான் அர்ஜுன்.

அவர்கள் எதிர்பார்த்ததைவிட அந்தக் காணொளி அதிகப் பார்வைகளைச் சம்பாதித்தது. ஆச்சரியப்பட்டுப் போய்விட்டான் அர்ஜுன். “ரோஜா... நாம ப்ரீ டைம்ல இந்த மாதிரி குட்டி குட்டி வீடியோஸ் போட்டா என்ன?? நமக்குள் நடக்குற சின்னச் சின்ன விஷயங்கள், அதுல கொஞ்சமா பாட்டு அந்தச் சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி... அப்புறம் நிறையக் காதல்... கொஞ்சம் ஊடல்... இப்படி ஒவ்வொரு எமொசனையும் குட்டிக்குட்டியா பதிவு பண்ணா அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்.. நிறையப் பேர் நம்மைப் பாலோ பண்ணுவாங்க.... அப்புறம் நமக்கும் நம்ம இளமை காலத்தைக் கேப்ச்சர் பண்ணி வச்சு பின்னாடி பாக்குறதுக்கு ஒரு மெமரி இருக்கும்..” என்க, அவளுக்கும் அது சரி எனவே தோன்றியது.

“ஓகே அர்ஜுன் சார்...” எனச் சம்மதித்தாள். அதன் பெயரில் அவர்களது அவர்கள் பல காணொளிகளைப் பதிவேற்ற ஆரம்பித்தனர். அப்போதுதான் மானட்டைசேஷன் என்கிற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட அளவு பின்தொடர்பவர்கள், ஹார்ட் வியூஸ் வைத்திருப்பவர்கள் அந்த அம்சத்தைப் பெற தகுதியானவர்கள்; அவர்கள் அந்தச் சிறப்பு வசதிக்கு தகுதிபெற்ற பின்னர் நாம் பதிவேற்றும் காணொளிகள் அனைத்திற்கும் பார்வைகளுக்கு ஏற்ப பணம் கொடுக்கப்படும், இது ஒருவகையான சம்பாத்தியம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

முதலில் பொழுதுபோக்கிற்காகப் பதிவிட்டுக் கொண்டிருந்த அர்ஜுன் ரோஜாவிற்கு இதுவும் ஒரு வகையில் ஊக்கமாகிப்போனது.
 
Last edited:

18

அர்ஜுனும் ரோஜாவும் ஜோடியாக இணைந்து பதிவிட்ட காணொளிகள் வரவேற்பைப் பெறவே, அதைத்தொடர்ந்து செய்யலாயினர். முதல் காணொளியில் மிக எளிமையான வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷயங்களாக ஆரம்பித்தனர்.

அதன்படி அவர்கள் பதிவிட்ட சிறுசிறு காணொளிளின் சாராம்சம் பின்வருமாறு :

• அர்ஜுன் கூடத்தில் அமர்ந்து அன்றைய நாளின் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கிறான். பின்னணியில் மெலிதான இசை ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது. “ரோஜா... காபி...” என அவன் கேட்க, குளித்து முடித்துவிட்டுத் தலையில் துண்டுடன் கையில் குளம்பிக் கோப்பையுடன் வருகிறாள் ரோஜா. அவனிடம் குவளையை நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டு அவளைப் பார்த்தவாறே குடித்தவன்; அடுத்த நொடியே துப்பி விடுகிறான். அவன் குடித்த குளம்பியைத் துப்பவும், “அச்சோ... என்னாச்சுங்க...” என வினவுகிறாள் ரோஜா. “நீயே குடிச்சு பாரு... சர்க்கரை இல்லை...” என்பதாக அவன் அவளிடம் நீட்ட, அதை வாங்கிக் குடித்துப் பார்த்தவள் “இல்லையே... சரியாதான இருக்குது...” எனக் கூறவும், அவளிடமிருந்து கப்பை வாங்கிக் கொண்டவன்; மீண்டும் குடித்துப் பார்த்துவிட்டு, “இப்ப சரியா இருக்குது...” எனக் கூறிவிட்டு புன்னகையுடன் குடிக்கத் தொடங்கும் தொடங்கவும் அவனது புன்னகைகேகான காரணத்தை அறிந்து கொண்டவள்; செல்லமாக அவனது தோளில் தட்ட, பின்னணியில் ‘ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்... அவை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்...” என்னும் பாடல் ஒலிக்கிறது.

• அர்ஜுன் ரோஜாவை எழுப்புகிறான். அவள் சோர்வின் மிகுதியால் எழுந்து கொள்ள இயலாமல் புரண்டு படுக்க, எதேசையாக அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மாதவிலக்கிற்கான உபயோகப் பொருள் அவனது கண்களில் சிக்கியது. அதைக் கண்ணுற்றவன்; அவளுக்கு மாதவிலக்கு எனப் புரிந்துகொண்டு, தேநீருடன் வந்து அவளை எழுப்பி, குடிக்க வைக்க, அவன் தோளில் சாய்ந்து கொள்கிறாள் “நோய்மடியுடன் நீ விழுந்தால் தாய்மடியாவேன்...” என்னும் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

• அன்று அவர்களது வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை. வீட்டில் மின்சாரமும் இல்லை. என்ன செய்வதென யோசித்தவள்; தண்ணீர் தொட்டியை திறந்து பார்க்க, அங்கே தண்ணீர் இல்லை... அவனது ஐந்து சட்டைகள், ஐந்து பேன்ட்டுகள், அவளது ஐந்து நைட்டிகள் என அனைத்தும் துவைக்கப்படாமல் இருக்க, வேறு வழியின்றி இருந்த தண்ணீரில் அவற்றை ஊற வைத்துவிட்டுத் தெருமுனையில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடிக்கச் செல்ல முடிவு செய்கிறாள். அதைக் கண்ணுற்றவன்; இடுப்பில் குடத்தைத் தூக்க முற்படும் போதே, “ரோஜா கொஞ்சம் தலை வலிக்குது... தைலம் தேய்ச்சு விடுறியா?” எனக் கேட்கிறான் அர்ஜுன். அவளும் அவனுக்குத் தைலம் தேய்த்துவிட்டு, தேவையான பணிவிடைகள் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, தன்னருகில் படுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறான் அவன். வேறுவழியின்றிப் படுத்துக் கொண்டவள் சோர்வின் மிகுதியால் கண்ணயர்ந்துவிட, சிறிது நேரம் கழித்துத் தன்னுணர்வு வந்து எழுந்து கொள்கிறாள் நேரத்தை அலைபேசியை எடுத்துப் பார்க்க, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்து இருக்கிறது. பதறியடித்துக் கொண்டு வெளியே வந்து பார்க்க அவள் ஊற வைத்த துணிகள் அனைத்தும் துவக்கப்பட்டு, கொடியில் காயப் போடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறாள் அவள். பின்னணியில் “உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது... உன் துயரம் சாய என் தோள் உள்ளது...” எனப் பாடல் இசைக்கிறது.

இவ்வாறானதொரு ‘முற்றிலும் காதல் - மெல்லிய காதல்’ என்பதாகக் காணொளிகளை இவர்கள் பதிவேற்றிக் கொண்டிருக்க, அதீத காதலை காட்சிப்படுத்திக் கொடுத்துக் கொண்டிருந்தனர் இன்னொரு தம்பதியர். சற்றே நெருக்கமான காட்சிகளையும் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளையும் காதல் என்ற பெயரில் பதிவு செய்து, பதிவேற்றிக் கொண்டிருக்க, பார்ப்பவர்களுக்குச் சற்றே எரிச்சலாக இருந்தது. இவற்றையெல்லாமா பதிவிடுவது என ஆதங்கம் தோன்றாமல் இல்லை; ஆனால் இப்படியான காணொளிகளைப் பதிவிடுபவர்களுக்குதான் மிகுந்த வரவேற்பு இருந்தது.

இவர்களைப் போன்றே ஜோடியாகக் காணொளிகளைப் பதிவேற்றம் ஒவ்வொருவரும் தங்களுக்கு இயன்ற வகையில் தங்களுக்கான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, தங்களைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் இருந்தனர். இவ்வாறு ஜோடியாகக் காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் பலவிதம்.

அர்ஜுன் ரோஜாவை போலத் தம்பதியர்களுக்கு இடையே நடக்கும் சிறுசிறு காதல் ஊழல் ஆகியவற்றைக் காட்சி படுத்துபவர்கள் ஒரு ரகம், ‘தாமதமாக வரும் கணவனின் சட்டையைக் கூட மோப்பம் பிடித்து, சந்தேகப்பட்டுச் சண்டையிடும் மனைவி’ இதுபோன்ற காட்சிகளைப் பதிவிடுபவர்கள் ஒரு ரகம், ‘மனைவியை வேலையைச் செய்ய விடாமல் அனைத்து வேலைகளையும் செய்யும் கணவன் - அதைச் சோபாவில் அமர்ந்து ரசித்துவிட்டு இறுதியாக நெற்றியில் முத்தாய்ப்பாக முத்தமிடும் மனைவி ‘இது ஒரு ரகம். ‘சோபாவில் அமர்ந்துகொண்டு அவனைக் காலை அமுக்கிவிடச் சொல்லும் மனைவி’ காணொளிகள் ஒரு ரகம், “என்னங்க கடைக்குப் போயிட்டு வரேன்.... என்னை மாதிரியே மாவு பிசைந்து வைங்க...” எனக்கூறிவிட்டு கடைக்குச் செல்லும் மனைவி - வந்து பார்த்தால் அபாயத்தில் வரும் எலும்புக்கூடு போன்ற வடிவமைப்பில் இருக்கும் மாவு - ஏன் எனல் கேட்டால் உன்னை மாதிரியே தானே பிசைந்து வைக்கச் சொன்னேன் அதுதான் எனக் கூறும் கணவன் – அவனைப் பிரம்பால் வெளுக்கும் மனைவி ஒரு ரகம், சாப்பாட்டில் உப்புக் குறைந்துவிட்டது என்பதற்காக மனைவியைக் கன்னத்தில் அறையும் கணவன் – ஷூவுக்குச் சரியாகப் பாலிஷ் போடவில்லை என்பதற்காகக் கூட அடிக்கிறான், வெறுத்துப் போனவள் ஒரு கட்டத்தில் அவனைத் திருப்பி அடிப்பதும் பின்னணியில் ‘ஆண் அடக்கணும், பெண் அடங்கணும், எழுதி வச்சவன் யாரு??’ பாடல் ஒலிப்பது - இது ஒரு ரகம்... இவ்வாறாகக் கணவன்-மனைவி இணைந்து பதிவேற்றும் காணொளிகள் கணக்கிலடங்காதவை.

இவற்றைப் பார்ப்பதற்குத் தனியே ஒரு கூட்டம் வேறு. சாமானியர்கள் அனைவரும் இவற்றைப் பார்ப்பதிலேயே பாதி நேரத்தை செலவிட்டுகே கொண்டிருந்தனர் அலுவலக இடைவெளியிலும் கல்லூரி இடைவேளையிலும் இதுபோன்றதான காணொளிகளைப் பார்த்து, தங்களுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் உருவாக்கிக்கொண்டு, கனவுலகில் சிறகடிடிக்கத் துவங்கியிருக்கும் இளைஞர்கள் பலர்.

இவர்களைப் பார்த்து பலரும் தாங்களும் காணொளியை பதிவிடத் தொடங்கியிருந்தனர். ‘சொல்லாத கதை என்றும் பேசாத பேச்சு என்றும் எதுவும் இல்லை... ஒருவரை மாற்றி ஒருவர் பரவி வருவது தான்’, ‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன்; தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்பதெல்லாம் இங்குத் தேவையே இல்லை. ஒருவரது காணொளியில் காணக் கிட்டாத ஏதேனுமொரு சிறப்பம்சத்தைப் புதிதாகத் தங்களது காணொளியில் இணைத்து, புதிதாக ஒரு ஜோடி கிளம்பியிருக்கும்.

இவ்வாறாக ‘கிங் காங்’ செயலியில் ஜோடியாகச் செய்யும் காணொளிகளுக்குத் தனி மவுசு இருந்தது. இவற்றைக்கண்ட பல முரட்டு சிங்கிகளும் என்றேனும் ஒரு நாள் தங்களுக்கும் இதைப்போன்ற வாய்ப்பு கிட்டாதா என ஏங்கத்துவங்கினர். இளம்பெண்களுக்குத் திருமண வாழ்வென்பது இவ்வாறாகச் சிவப்பு கம்பளத்தின் மீது தூவப்பட்ட ரோஜா இதழ்களின் மீது நடப்பது போன்றதொரு பயணம், எப்போது தங்களை ‘பேம்பர்’ செய்து கொண்டிருக்கும் ஒருவனே கணவனாகக் கிடைப்பான் எனத் தவறாகக் கற்பனை செய்துகொண்டு, கனவில் மிதக்க தொடங்கினர்.

இங்கே இந்தச் செயலியைத் தவிர உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்கிற ஒருவித பிரம்மை உருவாகியிருந்தது; காணொளி பதிவர்களுக்கு நிதமும் அடுத்ததாக எந்த மாதிரியான காணொளியை பதிவிடலாம்?? நேற்றைய பார்வைகளில் இருந்து அதிகமான பார்வைகளைப் பெறலாம்?? நேற்றைய கருத்துகளிலிருந்து அதிகமான கருத்துகளை, கருத்துரைகளைப் பெறலாம்?? என்கிற ரீதியான சிந்தனை; பார்ப்பவர்களுக்கும் அவர் எப்போது காணொளியை பதிவேற்றுவார்?? என்கிற ரீதியான சிந்தனை.

இவ்வாறாக நிஜம் தொலைத்து போலியான ஒரு மமதை கொண்ட உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர் ஒரு கும்பல்.

இவ்வாறாக ஜோடிகளாக இணைந்து, காணொளிகளை அதாவது குறுங்காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் ஒரு உட்பிரிவு என்றால், பெரும் பிரிவுகள் கணக்கிலடங்காதவை; இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள் அடக்கம்.

வெண்ணிலாவும் தனது தோழிகளின் எதிர்பார்ப்பிற்கேற்ப இப்போது சமூக வலைதளத்திற்கு அடியெடுத்து வைத்து விட்டாள். தன் மகனின் காணொளிகள் ஏற்கனவே கைவசம் இருக்க, அதை ஒவ்வொன்றாகப் பதிவேற்றிக் கொண்டிருந்தாள். ஒருகட்டத்தில் அது அனைவருக்கும் பிடித்துப் போகவே, தினமும் அவனை முன்னிலும் அதிகமாக நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள்.

அவனது பாடல் பாடும் திறமை, நடிக்கும் திறமை ஆகியவற்றைக் கண்டு, அவனுக்காகத் தனியே ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டனர். பள்ளியில் ஆசிரியர்கள் கூட அவனது திறமையைப் புகழ்ந்துரைப்பர்.

வெறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமின்றி அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் ஏதேனும் ஒன்றைக் குறித்து விழிப்புணர்வு காணொளிகளைப் பதிவேற்றுமாறு கூறுவாள் வெண்ணிலா. அதாவது மக்கள் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கும் ஏதேனும் ஒன்றைக் குறித்துச் சிறு கருத்துரை ஒன்றை தயார் செய்து, அதைச் சிறுவனை மனப்பாடம் செய்யச் சொல்லி, காணொளியில் தானாகப் பேசுவது போல நடிக்கச் செய்வாள்.

உதாரணத்திற்கு விவசாயிகள் ஏதேனும் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறி, அரசை கண்டனம் செய்யும் விதமாகக் காணொளியை பேசுவான் அவன். இதற்கிடையில் அவன் புகழை சம்பாதித்திருந்தானே தவிர, குழந்தைத்தனத்தை முற்றிலுமாகத் தொலைத்திருந்தான்.

எப்போதும் புலனக் குழுக்களில் அடிக்கடி பகிரப்படும் பார்வேர்ட் மெசேஜ் போலத்தான். “14 வயதிற்குக் கீழே உள்ள குழந்தைகளைப் பணியில் அமர்த்தினால், அது குழந்தை தொழிலாளர்; இதுவே 14 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைச் சினிமாவில் நடிக்க வைத்தால், அவர்கள் குழந்தை நட்சத்திரம்...” இதுதான் நமது சமூகத்தின் இன்றைய சூழ்நிலை.

திருத்தணிகையும் அப்படியே ஆனான். பள்ளிக்குச் செல்வதெல்லாம் அருகிப் போனது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளி - ஒவ்வொரு விஷயங்கள் என அவன் பேசிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகிப் போனான். வைரஸைக் காட்டிலும் அவனது புகழ் பெருகி நின்றது.

வெண்ணிலாவும் தன் மகனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நெக்குருகிப் போனாள். அவளுக்கு அவனது அங்கீகாரத்தைக் குறித்து இருந்த சிலிர்ப்பு அவனது எதிர்காலத்தைக் குறித்துச் சிறிதும் இல்லை; ஏதோ மறுநாளிலேயே உலகம் அழிந்து விடுவதைப்போல அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் துரிதப்படுத்தினாள்.
 
Last edited:

19

குழந்தையின் ‘திறமையை உலகறியச் செய்கிறேன் பேர்வழி’ என உந்தித் தள்ளும் பெற்றோர் ஒருபுறம், குழந்தைகளை வயதுக்கு மீறிய வசனங்களையும் உரையாடல்களையும் பேசுமாறு கூறி அவர்களைப் பிஞ்சிலேயே பழுக்கச் செய்யும் பெற்றோர் ஒரு புறம், இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக இருக்கும் இன்னொரு பெற்றோர் - அவர்கள் புகழுக்காக எதையும் செய்யத் துணியும் ரகம்.

பதின்ம வயதிலேயே தங்கள் குழந்தைகளைக் காட்சி பொருளாக்கி விடுபவர்கள் பலர். உதாரணத்திற்குக் குறிப்பிட வேண்டுமானால் சாரதாவை எடுத்துக் கொள்ளலாம்.

தன் மகளின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும், அவளைக் குறித்து அனைவரும் புகழ்ந்துரைக்க வேண்டும் என்கிற ஆசையில் மிதந்தவர்; அந்த வழி பாதுகாப்பானதுதானா, ஆயுளுக்கும் நிரந்தரமான ஒன்றா என்பது குறித்துச் சிந்திக்க மறந்து விட்டார். அவரைப் பொருத்த வரையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும், அனைவரது பார்வையும் அவளை நோக்கி வரவேண்டும் அவ்வளவே.

சிலர் இருக்கின்றனர் வாழை மரத்தைப் போல. வாழை மரம் எவ்வாறு தான் வாழ்ந்து முடித்த பின்னர்த் தனக்குக் கீழே இன்னொரு சந்ததியை அவ்விடத்தில் விட்டுவிட்டு மடிகிறதோ அதைப் போலவே தனக்குப் பிந்தைய தனது குழந்தைகள் அவ்விடத்தில் கோலோச்ச வேண்டும் என விரும்புவர், அதன்பொருட்டு எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டர். நேபாடிசம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

தாங்கள் செல்லுமிடத்திற்கெல்லாம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது, கேமிராவின் வெளிச்சத்தை அவர்கள்மீது பட வைக்க வேண்டும் என்பதற்காகப் பிரத்தியேகமாக ஏதேனும் ஒன்றை செய்யத் தூண்டுவது, இல்லையேல் அதீத மெச்சூரிட்டி அடைந்தது போலக் காட்டிக் கொண்டு ஏதேனுமொன்றை பிதற்றச் செய்வது என இருப்பர்.

இங்கே திருத்தணிகையின் படிப்புதான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சரியாகக் கற்காமல், தன் தாய் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தான். நன்றாக அமர்ந்து சிந்தித்தோமானால் ஒரு காரியம் கண்ணுக்குப் புலப்படும். அது யாதெனில் இங்கே ‘குழந்தை நட்சத்திரம்’ எனப் புகழப்படும், கொண்டாடப்படுபவர்கள் எல்லாம் ஒரு கட்டடத்திற்கு மேல் காணாமல் போயிருப்பர்.

அவர்களே காணாமல் போய்விட்டனர் என்றால் அவர்களின் எதிர்காலம்??? புகழேணியில் உச்சத்தில் இருந்தவர்கள் ஒரு கட்டத்தில் கண்டுகொள்ளப்படாமல் போனால் அவர்களின் மனசிதைவு??? படிப்பையும் சரிவரக் கற்காததால் போதிய கல்வித்தகுதியையும் பெற்று, அந்த வழியிலும் முன்னேற இயலாது; மேலும் கடந்தகாலப் புகழின் எதிரொலிகள் அனைத்து புறமும் எதிரொலித்ததைக் காட்டிலும் புறக்கணிப்புகள் மிகுந்திருக்கும். இப்படியானதொரு சூழலை சமாளிக்க இயலாமல் தடுமாறி, அவர்கள் எந்தத் திசையில் வேண்டுமானாலும் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

இங்கே கண்டிக்க வேண்டிய பெற்றோரும் புகழுக்கு மயங்கி, அவர்களைத் தவறான வழியில் வழிநடத்துவதே வேதனைக்குரிய விஷயம்.

இங்கே இவ்வாறாகச் சென்றுகொண்டிருக்க, மூர்த்தியின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகமானது. “ஏலே... முட்டாப்பயலுவளா... வெளங்காத பயலுவளா...” என ஒவ்வொருவரையும் வசைபாடிக் கொண்டிருந்தவன்; ஒரு கட்டத்தில் காதுகூசும் அளவிலான வார்த்தைகளை வீசத் தொடங்கிவிட்டான்.

அவனின் காணொளிகளைத் தொடர்ந்து காணும் பலர் அந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்க மாட்டர்; மேலும் தங்களால் பேச இயலாத வார்த்தைகளை இவன் பேசுகிறானே என்னும் குஷியில் மேலும் மேலும் அவனைச் சீண்டி, உத்வேகப்படுத்தி, அது போலப் பேசுமாறு தூண்டுவர்.

அவனும் அது குறித்ததான எந்தப் பயமும் இல்லாது பலர் உலா வரும் அந்தச் சமூக வலைத்தளச் செயலியில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் விமர்சித்து, அர்ச்சித்து வந்தான்.

பலரும் வேண்டுமென்றே அவனை “தலைவரே...” எனக் கலாய்த்து உசுப்பேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களும் பதிலுக்கு அவனை மோசமான வார்த்தைகளால் கருத்துரையில் புகழ்ந்துரைக்க, அவனும் அடுத்தக் காணொளியில் அவர்களை வறுத்தெடுத்து விடுவான்.

ஒருநாள் அவனது வீட்டிற்கு ஒரு பார்சல் வந்திருக்க, “மாமா... உங்க பேருக்கு ஒரு பார்சல் வந்திருக்கு...” எனக் கொண்டு வந்து கொடுத்தாள் தனம்.

அது என்னவெனப் பிரித்துப் பார்த்தால், குழந்தைகள் பயன்படுத்தும் ‘பேம்பர்ஸ்...’. கோபத்தில் அவனது மனைவி அவனைப் பார்த்து முறைக்க, “ஏய்... என்ன முறைக்கா?? நான் என்ன பண்ணுனேன்?? எவனோ அகம்பிடிச்ச பய அனுப்பி விட்ருக்கான்... இரு எவன்னு விசாரிக்கேன்??” என்றவாறே கிங்காங் செயலிக்குள் நுழைந்தான்.

“நண்பர்களே.. வணக்கம்.. எவனோ ஒருத்தன் எனக்கு வீட்டுக்குப் பேம்பர்ஸ் அனுப்பிருக்கான்... ஏலே கொஞ்சமாவது அறிவு இருக்கால?? என்னத்த அனுப்புதோம்ன்னு தெரிஞ்சுதான் அனுப்புதியலா?? யாம்ல இப்டி பண்ணுதிய??” என அவன் திட்டி பதிவிட, காண்போர் குதூகலமாயினர்.

அவனைச் சீண்டுவதற்கு மேலும் ஒரு வழியாகிப் போனது. அன்று முதல் அவனுக்கு வரும் கடிதங்கள், பார்சல்களின் எண்ணிக்கை கூடிப் போனது.

ஆனால் எதையும் ஸ்போர்டிவ்-ஆக எடுத்துக் கொள்ளும் மூர்த்தி இதற்கெல்லாம் அசரவில்லை. அவனைப் பொருத்த வரையில் அவர்கள் அனுப்புவதும் அவனுக்கு ஒரு கன்டென்ட் அவ்வளவுதான். அவர்கள் அனுப்பியிருப்பதைக் குறித்து, மோசமான வார்த்தைகளால் வர்ணித்து, காதுகூசுமளவிற்கு வார்த்தைகளால் திட்டி பதிவிடுவான். அவனுக்குதான் குறிப்பிடத்தகுந்த அளவிற்குப் பணம் வருகிறதே!

இப்போது அவன் செய்து வந்த மரக்கடை மரம் அறுக்கும் வேலையையும் விட்டுவிட, குடும்பம் அன்றாடத் தேவைகளுக்கே அல்லாட ஆரம்பித்தது. தனம் தான் பீடிசுற்றி, தோட்ட வேலைகளுக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்தாள். மூர்த்தியோ கிஞ்சித்தும் அதுகுறித்துச் சிந்தித்தானில்லை. அவனைப் பொருத்தவரையில் அந்தச் செயலியில் இருப்பவர்களைத் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும், அவனது கவனத்தையும் அவனை நோக்கி ஈர்க்க வேண்டும். அவ்வளவே அவ்வளவுதான்.

இங்கே பலருக்கு சமூக வலைத்தளம் என்பது மனதின் வக்கிரங்களையும், வெளிப்படுத்த இயலாத குரூரங்களையும் இறக்கி வைக்கப் பயன்படும் ஒரு குப்பைத் தொட்டி. அவர்களைப் பொருத்தவரையில் பிரபலமானவர்களின் புகைப்படத்தின் கீழே இருக்கும் கருத்துப் பெட்டிகள் எல்லாம் தங்களின் மனதின் கழிவுகளை வெளியேற்றும் கழிப்பறை. எவரிடமும் கூற இயலாத, மனதிற்குள் இத்தனை நாட்களாக வெளிவிடாமல் அடக்கி வைத்திருந்த கழிவு கசடுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அவ்விடம் கொட்டுவதில் அலாதி இன்பம் அவர்களுக்கு. எத்தனை இடங்களில் பார்க்கிறோம் பிறரின் அங்கங்களையும் செயல்களையும் நாகூசும் வார்த்தைகளால் வர்ணித்துக் கருத்துகளைப் பதிவிட்டிருப்பதை.

கண்டுகொள்ளாமல் செல்பவர்களுக்கே இந்த நிலை என்றால் உடனுக்குடன் பதிலளித்து, செமையாக என்டர்டெயின் செய்யும் மூர்த்தியின் விஷயத்தில் கேட்கவா வேண்டும்? நாயைக் கல்லைக் கொண்டு எறிந்தால் அது குரைக்கத் தானே செய்யும்! அதன் ஓலத்தில் இன்பம் காண்பதில் அதீத இன்பம் இவர்களுக்கு.

இவ்வாறு நிதமும் கடிதங்கள் வருவதும், “எத்தனை போஸ்டுதான்மா வரும்?? உன் வீட்டுக்காகவே இந்தத் தெருவுக்கு அடிக்கடி வர வேண்டியதா இருக்கு?” எனத் திட்டியவாறே அஞ்சல்காரர் கொடுத்துவிட்டு செல்வது வழக்கமாகிப் போனது.

தன் கணவன் இவ்வாறான காணொளிகளைப் பதிவிட்டு வருகிறான் என அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிட்டது, ஏற்கனவே துச்சமாக எடைபோடுவோர் இன்னும் கேவலமாக நடத்துகின்றனர் என அறிந்தும் அவனைக் கண்டிக்க இயலாத நிலையில் இருந்தாள் தனம்.

ஏனென்றால் அவன் கோபத்தில் தன்னை அடித்தாலும் பரவாயில்லை, எங்கேனும் சென்றுவிட்டால்?? மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என அஞ்சினாள். எனவே தன்னால் இயன்றமட்டும் அமைதியாகக் காலத்தைக் கடத்தி வந்தாள்.

இப்படியாகக் காலங்கள் கடந்து கொண்டிருக்கையில், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கடிதங்கள் வந்த வண்ணமிருந்தன. நாளுக்குநாள் அவற்றின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டிருந்ததே தவிரக் குறைந்தபாடில்லை.

அவன் எப்போதும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் கடிதத்ததில் எழுதியிருப்பதை அப்படியே படித்து விடுவான். அருகில் அவனது பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டான். அன்றும் அதைப் போலப் படித்துவிட, மிகவும் கொச்சையான வார்த்தை ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவனது குழந்தைகள் மூவரும் அதிர்ந்து போய் அவனை நோக்க, சமையலறையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த தனம் ஓடிவந்தாள். குழந்தைகள் மூவரையும் தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்; “மாமா... என்னதான் நெனச்சிட்டு இருக்கிய?? நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டேன்... தினந்தினம் உங்க அட்டூழியம் கூடிக்கிட்டு போவுதே தவிரக் குறைஞ்சபாடில்ல... உங்களுக்குப் பிடிச்சிருந்தா என்னத்தையோ பண்ணிட்டு போங்க... பிள்ளைய இருக்க இடத்துல இருந்து பேசி ஏன் அதுவ மனசையும் நஞ்சாக்குதிய?? அதுவளாவது நாளைக்கு வாழ்க்கையில உருப்படணுமா இல்ல உங்களை மாதிரி கெட்டுக் குட்டிச்சுவரா போவணுமா??” என ஆதங்கத்தில் வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவள் பேசிய வார்த்தைகளில் கோபம் வந்தாலும் தான் நடந்து கொண்ட விதம் தவறு எனப் புரிந்தது அவனுக்கு. என்னதான் குடும்பத்தின் மீது அக்கறை இல்லாதவன் போல நடந்து கொண்டாலும் அவனும் சராசரி தந்தைதானே!! ஆகவே எதுவும் பேசாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

வெளியே சென்றவன் மனம் வருந்தி, மனங்கசந்து அழுது, திருந்தி வருவான் என நினைத்தால் அதுதான் தவறான விஷயம். அவனுக்குள் புகுந்திருக்கும் ஏஎஸ் வைரஸ்கள் எவ்வாறு அவனை மீண்டுவர அனுமதிக்கும்?? வீட்டில் அவ்வாறான கடிதங்களை வாசித்துப் பதிவிடாமல் இருக்க முடிவு செய்திருந்தான் அவ்வளவுதான். திருந்திவிட்டான் எனப் பேராசை கொள்வதெல்லாம் கூடாது.

அன்றுமுதல் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு திடலில் தன் நண்பர்கள் சிலருடன் சென்று அமர்ந்து கடிதங்களைப் படித்துப் பதிவிடுவான்.

மூர்த்தியின் இந்தக் காணொளிகளுக்கு இருந்த ரசிகர்களுக்கு ‘ரவுடி பேபி’ சத்யாவும் ஒருத்தி. என்ன பதிவிட்டாலும் ‘சூப்பர் மூர்த்தி மாமா...” எனப் பதில் பதிவிடுவாள். அவளும் இப்போது கிங்காங் செயலில் ஒரு பிரபலம்தான். அவள் என்ன காணொளி பதிவிட்டாலும் பார்வைகளும் கருத்துரைகளும் குவிந்து கிடக்கும்.

மாடர்ன் உடைகள், ஷார்ட்ஸ்கள் அணிந்து அசால்டாகக் காணொளி பதிவேற்றும் நிலைக்கு உயர்ந்திருந்தாள் அவள். பிரபுவும் அவளது குழந்தைகளும் உடனிருக்கையில் இது எவ்வாறு சாத்தியம் எனச் சிந்திப்போருக்காக ஒரு குறும்படம்.... அதாவது ப்ளாஷ்பேக்...

@@@@அன்று ஆலையில் வேலைநிறுத்த போராட்டம் நடந்திருக்க, சீக்கிரமாகவே வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டான் பிரபு. வீட்டிற்கு வருகையில் கதவு பூட்டப்பட்டிருக்க, திருடர் பயத்தினால்தான் தன் மனைவி பூட்டிக் கொண்டு உள்ளே இருக்கிறாள் என அனுமானித்துக் கொண்டான். ஒருவேளை அவள் அசதியினால் உறங்கிக் கொண்டிருந்தால் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதால் தன்னிடமிருந்த மாற்றுச்சாவியின் உதவியுடன் திறந்து கொண்டு உள்ளே வர, அவனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!!

புடவையைத் தவிர வேறெதையும் கட்டியிராத தனது மனைவி, விலையுயர்ந்த சுடிதாரை அணிந்து, அளவுக்கு அதிகமான ஒப்பனையுடன் நின்றுகொண்டிருக்க, ஒருகணம் விக்கித்து நின்றான். கையிலிருந்த அலைபேசியின் திரையில் டூயட் பேசிக் கொண்டிருந்தான் மூர்த்தி.

அலைபேசித் திரையில் மூர்த்தியைப் பார்த்ததும் ருத்ர மூர்த்தியாக மாறிவிட்டான் பிரபு.

என்ன நடந்தது, என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து எல்லாம் அவளிடம் விசாரிக்கும் நிலையில் அவன் இல்லை. நிதானமிழந்தவனாக, “என்னடி பண்ணிட்டு இருக்கிற??” எனக் கர்ஜிக்க, “மாமா.... அது வந்து...” எனத் தயங்கினாள் சத்யா.
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom