Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
15
சத்யாவின் வீட்டில் குடும்பத்தைக் கவனிப்பதில் அவள் பின்தங்கியிருந்தால், இங்கே மூர்த்தி வேலைக்குச் சென்ற இடத்திலும் இதையே பிரதானமாகச் செய்து கொண்டிருந்தான்.
அன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்த சாரதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் என எடுத்து பார்க்க, அவர்களின் உறவினர் ஒருவர் தான் அழைத்திருந்தார்.
“என்னாச்சு அண்ணி?” என அவர் விசாரிக்க, உன் பொண்ணை சரியா கவனிக்க மாட்டியா?? அவ என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்க மாட்டியா? இப்ப பாரு டிவியில அவளோட வீடியோ வருது..” என அவர் சற்றே திட்டும் தொனியில் பேசவும், திடுக்கிட்டுச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்தார் சாரதா.
அதற்குள் அந்த நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தது. “என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன ப்ரோக்ராம்ல வந்தா?? புரியல நீங்க சொல்றது..” எனச் சாரதா அவரிடம் வினவ, “அதான் அந்தக் கிங்காங்ன்னு.. டிவியில என்னமோ போட்டு ஆடிக்கிட்டு இருக்கா உன் பொண்ணு... என் பையன் தான் சொன்னான் இது நம்ம வெண்பா அப்படின்னு.. அதான் உனக்குக் கால் பண்ணி கேட்கலாம்னு நினைச்சேன்... நம்ம வெண்பாவா இல்ல அந்த மாதிரி இருக்கிற வேற எதுவும் பொண்ணா??” என அவர் விசாரிக்க, இப்போது தன் மகளைக் குறித்தும் தன் மகளின் முன்னேற்றத்தை குறித்தும் வெளிவிட்டுவிட வேண்டாம் என எனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்த சாரதா, “இல்ல அண்ணி... அவ ஸ்கூலுக்குப் போறா... அவளுக்கு எப்படி இதுக்கெல்லாம் நேரம் கிடைக்கும்?? கிளாஸ்ல முதல் மார்க்கு வாங்குறா.. இதுக்கெல்லாம் நினைச்சுப் பார்த்தா கூட நேரமில்லை...” எனச் சமாளித்து அழைப்பை துண்டித்துவிட்டார் ஏனெனில் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும், தன் மகளின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் (அ) பதவிஉயர்வு கிட்ட வேண்டும் என்பதற்காகச் சாரதாதான் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் காணொளிகளை அனுப்பியிருந்தார்.
இவ்வாறாக இரண்டு மூன்று நாட்களாகப் பலர் ராதாவிடம் நேரிலும் அலைபேசியிலும் தொடர்புகொண்டு பேசியவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் உண்மையைத் தெரிவிக்காமல் தவிர்த்திருந்தார் சாரதா.
அப்போதுதான் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எப்படியும் இதுவும் உறவினர் எவரிடமாவது இருந்து வரும் எச்சரிக்கை அழைப்புதான் என நினைத்தவர் முதலிலேயே அழைப்பை ஏற்கவில்லை.
“இவங்களுக்கு வேற வேலையே இல்ல...” எனச் சலித்துக் கொள்ள, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு...
அலட்சியத்துடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, அவள் ‘ஹலோ’ சொல்லும் முன்னரே, “ஹலோ... மிஸ்.வெண்பா இருக்கிறாங்களா??” என எதிர் முனையில் நாகரிகமாக ஒரு ஆணின் குரல்.
“யாராக இருக்கும்?” என யோசித்தவாறே சாரதா வினவ “மேம்... நாங்க கேகேஆர் புரோடக்சன் ஹவுஸில் இருந்து பேசுறோம்... லயனிகா டிவி இருக்குதுல்ல... அந்தச் சேனல்ல மாறிலி மானிடர்கள்ன்னு ஒரு சீரியல் போயிட்டு இருக்குது தெரியுமா?? அதில் செகண்ட் ஹீரோயின் ஒரு ரோல் புதுசா இன்ட்ரடியூஸ் ஆகுது... நாங்க வெண்பா மேடத்தோட பப்ஸ்மாஷ், கிங்காங் வீடியோஸ் பார்த்தோம்... அவங்க இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுது...” என அவன் கூறவும் சாரதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மகள் எடுத்த எடுப்பிலேயே சின்னத்திரையில் நடிப்பதா?? அதுவும் இரண்டாவது கதாநாயகியாக....?? அப்படியானால் அனைவரின் பார்வையும் அவள்மீது விழவே விழாதே.. இறுதிவரை துணைநடிகையாக மட்டுமே இருந்து மடிந்து போவாளே பதைபதைத்தவர் பின்னர் யோசித்துக் கூறுவதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
அழைப்பை துண்டித்த பிறகு நன்றாக அமர்ந்து யோசித்துப் பார்த்தார். ‘மடத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..’ எனக் காத்திருந்தால் காலமும் நேரமும் வயதும் சென்றுவிடும்; அதன்பின்னர் வருந்திப் பயனில்லை. எனவே ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்பதற்கிணங்க கிடைத்த வாய்ப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு தன்னைதான் முன்னேற்றிக் கொண்டே வாய்ப்புகளைத் தேடவேண்டும் எனத் தீர்மானித்தவர்; தன் மகளிடம் இதுகுறித்துத் தெரிவிக்க முடிவு செய்தார்.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த வெண்பாவை ஆர்வமாக வரவேற்று அமர வைத்தார் சாரதா. அவளுக்குப் பிடித்த ரவாலட்டு, சமோசா தயாரித்து வைத்திருந்தார். அவர் வெகுவிமரிசையாக அவளை வரவேற்க, சற்றே துணுக்குற்றவள்; “அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?? இவ்ளோ பாசமா வரவேற்கிற... அப்பா ஏதும் சொன்னாரா?? ஏதும் நல்ல விஷயமா??” என விசாரித்தவாறே உள்ளே வந்தாள் வெண்பா.
அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு, அவளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும் குளம்பியையும் அவனிடம் உண்ணக் கொடுத்தார் சாரதா. “என்னம்மா நீ.... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லமாட்ற... நான் எவ்ளோ ஆர்வமா கேட்கிறேன்...” என அவள் சினுங்க, “இரு... இரு... சொல்றேன்...” என்றவர்; “இப்போ ஒருவேளை சீரியல்ல உன்னை நடிக்கச் சொன்னா நீ என்ன பண்ணுவ??” என நேரடியாகவே கேட்டார்.
“அம்மா எனக்கு நடிக்க வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் அது என்னோட ஆம்பிஷனும் இல்ல பேஷனும் இல்ல... படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்... அதுதான் அப்பா எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறாங்க... ஆனாலும் நம்ம கிங்காங் ஆப்பை விடச் சீரியல்ல நடிச்சா நிறைய ரீச் கிடைக்கும்... இங்கே ஆப் வச்சிருக்கிறவங்க மட்டும்தான் நம்மைப் பாப்பாங்க, பாராட்டுவாங்க, கொண்டாடுவாங்க... ஆனால் சீரியல்ல நடிச்சா நிறையப் பேரு நம்மள பார்ப்பாங்க... ஒரு விதமா எமோஷனலி கனெக்ட் ஆகலாம்... குடும்பத்தோட ஆணிவேராய் இருக்கிற குடும்பத் தலைவிகள் நம்மையும் குடும்பத்துல ஒருத்தரா பாப்பாங்க அப்படின்னு எப்பவோ யாரோ சொன்னதா பேட்டியில் பார்த்த ஞாபகம்... இப்ப ஏன் கேக்குற??”
“ஒண்ணும் இல்லடா... நீ லயனிகா டிவி பார்த்திருக்கிறியா?? அதிலே மாறிலி மானிடர்கள் சீரியல் பார்த்திருக்கிறியா?? அதிலே செகண்ட் ஹீரோயின நடிக்கச் சொல்றாங்க... உன்னோட கிங்காங் வீடியோஸ் நல்லா இருக்குதாம்... முதல்ல செகண்ட் ஹீரோயினா என்ட்ரி இருக்குமாம்... போகப்போகக் கதை உன்னைச் சுத்தி நடக்கிற மாதிரி மாறும் அப்படின்னு சொன்னாங்க...” எனச் சாரதா விளக்கமளிக்க வெண்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
(மேலே குறிப்பிட்ட லயனிகா எனது அபிஷியல் ஆடியோ சேனல். மாறிலி மானிடர்கள் சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் பச்சை வண்ணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போட்டிக்கதை. நேரம் இருப்பின் அதையும் முயற்சித்துப் பாருங்கள்)
பதினைந்து வயது சிறுமிக்கு என்ன தெரியும்?? தன் வாழ்வில் முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கு அவளுக்கு எந்த முதிர்ச்சியும் இல்லை; பகட்டாக இருப்பவை, கண்களைக் கவரும் தன்மையுடன் இருப்பவைதான் அவளைப் பொருத்தவரையில் சிறந்தவையாகத் தெரியும். தாய்தந்தையர் தான் எது சரி எது தவறு எனச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இங்கே சாரதா அவளைத் தீயவழியில் நடத்தினார் என்று நான் சாடவில்லை, உலகநாயகனின் கூற்றைப் போல நல்லவழியில் ஆக்கப்பூர்வமாக நடத்தியிருக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பு. அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவுதான்.
அவளைக் குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைக்க முடிவு செய்தார் சாரதா. வெண்பா அவரது மகள் மட்டுமின்றி நாராயணனின் மகளும் அல்லவா?? அவள்மீது இருவருக்கும் சம உரிமையும், சம பொறுப்புகளும் இருக்கிறதல்லவா??? அவளது வாழ்வில் எந்த முடிவாக இருந்தாலும் நாராயணனிடமும் கேட்டுத்தானே முடிவு செய்ய இயலும்?? எனவே அவரிடம் கேட்டு, முறைப்படி அனுமதி பெற்றுவிட்டு,; தன் மகளை நடிப்பதற்கு அனுமதிக்கலாம் என நினைத்தவர் அன்று மாலை வீடு திரும்பிய தன் கணவரிடம் இதற்கு அனுமதி கோரினார்.
இரவு உணவை உண்டுகொண்டிருந்த தன் கணவனிடம் மென்மையாக எடுத்துரைக்க வேண்டி, “ப்பா... நீங்க சீரியல்லாம் பார்த்திருக்கிறீங்களா??” என மெதுவாக ஆரம்பித்தார்.
“அதெல்லாம் வேஸ்ட்... வீட்டில நேரம் போகாம இருக்கவங்க மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்க... எனக்கு ஆயிரம் வேலை இருக்குது... இப்படிக் கால் காசுக்கும் பெறாத சீரியல்ஸ் பாக்குறதுல எனக்கு விருப்பமில்ல...” என அவர் கூறிவிட, கோபமாக வந்தது சாரதாவுக்கு.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படித் தன் மகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது எனக் கூற எனத் தயக்கமாக இருந்தது. இருப்பினும் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லப்பா.. நம்ம வெண்பாவை சீரியல்ல நடிக்கக் கூப்பிடுறாங்க...” எனச் சாரதா கூறியதுதான் தாமதம்; ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டார் நாராயணன்.
“என்ன பேச்சு பேசுற நீ??! நாட்டுல பாதிக் குடும்பம் கெட்டுப் போறதே இந்தச் சீரியல் பார்க்கிற ஆளுங்களாலதான்.. எந்தச் சீரியல்லயாவது உருப்படியா ஏதாவது ஒரு விஷயம் வருதா?? எப்ப பாரு அழுகாச்சிதான்... ஊர்ல இருக்கிற எல்லாப் பிரச்சனையும் ஹீரோயினுக்கு மட்டும் தான் வரும், அந்தப் பிரச்சினையும் கண்டிப்பா அவளுக்குச் சாதகமாகதான் முடியும்... இதுக்குப் பேசாம பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே.. எல்லாச் சீரியல்லேயும் ஒரே பிளாட்... இந்தச் சொசைட்டிக்கு நல்லது சொல்ற மாதிரி, நல்ல கருத்து சொல்ற மாதிரி எதுவுமே இல்லை... எல்லாச் சீரியல்லேயும் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், அந்த ஹீரோ ஹீரோயினுக்கு நடக்காத ஃபர்ஸ்ட் நைட்... அவனைப் பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு அதே வீட்டுக்குள்ளேயே குடியிருக்கிற வில்லி... மருமக பணக்கார வீட்டில் பொறக்கல, வரதட்சனை அதிகம் கொண்டு வரலன்னு நிதமும் குத்திக்காட்டிட்டு இருக்கிற மாமியார், படிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா மாறணும், புருஷனுக்குச் சேவை செஞ்சே தேயணும்ன்னு வற்புறுத்துற மாமியார்... இதுக்கு எல்லாத்துக்கும் அல்டிமேட்டா பெண்டாட்டி வயித்துல இருக்கிற குழந்தை தன்னோடது இல்லைன்னு சந்தேகப்பட்டு விரட்டி விடுற ஹீரோ, இதுல அவனால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அவனுக்குத் தன் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற அப்பா... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதுல ஏதாவது ஒரு விஷயம்... ஏதாவது ஒரு விஷயம் இந்தச் சொசைட்டி முன்னேத்துற மாதிரி இருக்குதா?? அப்படிப்பட்ட ஒரு சாக்கடையைப் பாக்குறதே தப்புன்னு சொல்றேன்... அதுல என் பொண்ணை நடிக்க வேற சொல்லுறியா?? உனக்கு ஒண்ணு தெரியுமா?? திரையில் வர்றது மூலமா எல்லாரையும் சிரிக்க வச்சு, அழ வச்சு, ரசிக்க வச்சிருந்தாலும் அவங்களோட வாழ்க்கை போராட்டம் அவ்ளோ கஷ்டம். ஒவ்வொரு நிமிஷமும் ஓடிட்டே இருக்கணும்... தனக்காக, தன் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்காம அடுத்தடுத்த வாய்ப்புகள தேடி, ஓடிட்டே இருந்தா மட்டும்தான் அவங்களால அந்தத் துறையில் நிலைத்து நிற்கமுடியும்... அப்படிப்பட்ட ஒருத்தியா என் பொண்ணு போராடுறத நான் விரும்பலை... இப்போ நான் அந்தத் துறையை இழிவாகவும் தரக்குறைவாகவும் சித்தரிக்கல... நம்ம செய்யுற டாக்டர், டீச்சர் தொழில் மாதிரி அதுவும் ஒரு தொழில்தான்... ஆனால் நிரந்தரமான வருமானமும் நிரந்தரமான பொசிஷனும் இல்லாத ஒரு துறை அது. தினமும் 100 ரூபாய், 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவாங்க எத்தனை பேர் தெரியுமா?? வாரத்தில் ரெண்டு மட்டுமே வேலை இருக்கும் அவங்களுக்கு... இப்படிப்பட்ட ஒரு துறையில் போராடி, சர்வைவ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாரு... நம்ம பொண்ணு ஹீரோயினாவே நடிச்சாலும் கடைசிவரை ஹீரோயினாவேதான் நடிக்கப் போறாளா?? வெளியே இருந்து பாக்குறதுக்கு இது பஈசியா இருக்கலாம்.. ஆனா அவ்வளவு கஷ்டம் அவங்களுடைய ஜீவனம்... சோ எதையும் அரைகுறையா பார்த்துட்டு வந்து பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத... என் பொண்ணு நல்லா படிச்சு ஒரு நல்ல ஜாப்ல செக்யூர்டா இருக்கணும்னு ஆசைப்படறேன்... தேவையில்லாம எதையாவது பேசி அவ மனசை கெடுத்துடாத... அவ படிக்கிற பொண்ணு... படிக்கட்டும்..” எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் நாராயணன்.
நாராயணனிடம் வாக்குவாதம் செய்வது சரிப்பட்டு வராது எனத் தெளிந்த சாரதா; தன் தரப்பிலிருந்து என்ன முயற்சி எடுக்கலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினார்
அன்று மதியம் சமைத்துக் கொண்டிருந்த சாரதாவின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் என எடுத்து பார்க்க, அவர்களின் உறவினர் ஒருவர் தான் அழைத்திருந்தார்.
“என்னாச்சு அண்ணி?” என அவர் விசாரிக்க, உன் பொண்ணை சரியா கவனிக்க மாட்டியா?? அவ என்ன பண்றான்னு பார்த்து கண்டிக்க மாட்டியா? இப்ப பாரு டிவியில அவளோட வீடியோ வருது..” என அவர் சற்றே திட்டும் தொனியில் பேசவும், திடுக்கிட்டுச் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பார்த்தார் சாரதா.
அதற்குள் அந்த நிகழ்ச்சி முற்றுப்பெற்றிருந்தது. “என்ன அண்ணி சொல்றீங்க?? என்ன ப்ரோக்ராம்ல வந்தா?? புரியல நீங்க சொல்றது..” எனச் சாரதா அவரிடம் வினவ, “அதான் அந்தக் கிங்காங்ன்னு.. டிவியில என்னமோ போட்டு ஆடிக்கிட்டு இருக்கா உன் பொண்ணு... என் பையன் தான் சொன்னான் இது நம்ம வெண்பா அப்படின்னு.. அதான் உனக்குக் கால் பண்ணி கேட்கலாம்னு நினைச்சேன்... நம்ம வெண்பாவா இல்ல அந்த மாதிரி இருக்கிற வேற எதுவும் பொண்ணா??” என அவர் விசாரிக்க, இப்போது தன் மகளைக் குறித்தும் தன் மகளின் முன்னேற்றத்தை குறித்தும் வெளிவிட்டுவிட வேண்டாம் என எனக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்த சாரதா, “இல்ல அண்ணி... அவ ஸ்கூலுக்குப் போறா... அவளுக்கு எப்படி இதுக்கெல்லாம் நேரம் கிடைக்கும்?? கிளாஸ்ல முதல் மார்க்கு வாங்குறா.. இதுக்கெல்லாம் நினைச்சுப் பார்த்தா கூட நேரமில்லை...” எனச் சமாளித்து அழைப்பை துண்டித்துவிட்டார் ஏனெனில் குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டும், தன் மகளின் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் (அ) பதவிஉயர்வு கிட்ட வேண்டும் என்பதற்காகச் சாரதாதான் அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்குக் காணொளிகளை அனுப்பியிருந்தார்.
இவ்வாறாக இரண்டு மூன்று நாட்களாகப் பலர் ராதாவிடம் நேரிலும் அலைபேசியிலும் தொடர்புகொண்டு பேசியவண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் உண்மையைத் தெரிவிக்காமல் தவிர்த்திருந்தார் சாரதா.
அப்போதுதான் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. எப்படியும் இதுவும் உறவினர் எவரிடமாவது இருந்து வரும் எச்சரிக்கை அழைப்புதான் என நினைத்தவர் முதலிலேயே அழைப்பை ஏற்கவில்லை.
“இவங்களுக்கு வேற வேலையே இல்ல...” எனச் சலித்துக் கொள்ள, மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு...
அலட்சியத்துடன் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, அவள் ‘ஹலோ’ சொல்லும் முன்னரே, “ஹலோ... மிஸ்.வெண்பா இருக்கிறாங்களா??” என எதிர் முனையில் நாகரிகமாக ஒரு ஆணின் குரல்.
“யாராக இருக்கும்?” என யோசித்தவாறே சாரதா வினவ “மேம்... நாங்க கேகேஆர் புரோடக்சன் ஹவுஸில் இருந்து பேசுறோம்... லயனிகா டிவி இருக்குதுல்ல... அந்தச் சேனல்ல மாறிலி மானிடர்கள்ன்னு ஒரு சீரியல் போயிட்டு இருக்குது தெரியுமா?? அதில் செகண்ட் ஹீரோயின் ஒரு ரோல் புதுசா இன்ட்ரடியூஸ் ஆகுது... நாங்க வெண்பா மேடத்தோட பப்ஸ்மாஷ், கிங்காங் வீடியோஸ் பார்த்தோம்... அவங்க இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கன்னு தோணுது...” என அவன் கூறவும் சாரதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. என் மகள் எடுத்த எடுப்பிலேயே சின்னத்திரையில் நடிப்பதா?? அதுவும் இரண்டாவது கதாநாயகியாக....?? அப்படியானால் அனைவரின் பார்வையும் அவள்மீது விழவே விழாதே.. இறுதிவரை துணைநடிகையாக மட்டுமே இருந்து மடிந்து போவாளே பதைபதைத்தவர் பின்னர் யோசித்துக் கூறுவதாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
அழைப்பை துண்டித்த பிறகு நன்றாக அமர்ந்து யோசித்துப் பார்த்தார். ‘மடத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு..’ எனக் காத்திருந்தால் காலமும் நேரமும் வயதும் சென்றுவிடும்; அதன்பின்னர் வருந்திப் பயனில்லை. எனவே ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்பதற்கிணங்க கிடைத்த வாய்ப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு தன்னைதான் முன்னேற்றிக் கொண்டே வாய்ப்புகளைத் தேடவேண்டும் எனத் தீர்மானித்தவர்; தன் மகளிடம் இதுகுறித்துத் தெரிவிக்க முடிவு செய்தார்.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த வெண்பாவை ஆர்வமாக வரவேற்று அமர வைத்தார் சாரதா. அவளுக்குப் பிடித்த ரவாலட்டு, சமோசா தயாரித்து வைத்திருந்தார். அவர் வெகுவிமரிசையாக அவளை வரவேற்க, சற்றே துணுக்குற்றவள்; “அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?? இவ்ளோ பாசமா வரவேற்கிற... அப்பா ஏதும் சொன்னாரா?? ஏதும் நல்ல விஷயமா??” என விசாரித்தவாறே உள்ளே வந்தாள் வெண்பா.
அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்துவிட்டு, அவளுக்குப் பிடித்த தின்பண்டங்களையும் குளம்பியையும் அவனிடம் உண்ணக் கொடுத்தார் சாரதா. “என்னம்மா நீ.... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லமாட்ற... நான் எவ்ளோ ஆர்வமா கேட்கிறேன்...” என அவள் சினுங்க, “இரு... இரு... சொல்றேன்...” என்றவர்; “இப்போ ஒருவேளை சீரியல்ல உன்னை நடிக்கச் சொன்னா நீ என்ன பண்ணுவ??” என நேரடியாகவே கேட்டார்.
“அம்மா எனக்கு நடிக்க வராதுன்னு உனக்கு நல்லாவே தெரியும்.. அப்புறம் அது என்னோட ஆம்பிஷனும் இல்ல பேஷனும் இல்ல... படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்... அதுதான் அப்பா எனக்குச் சொல்லி கொடுத்திருக்கிறாங்க... ஆனாலும் நம்ம கிங்காங் ஆப்பை விடச் சீரியல்ல நடிச்சா நிறைய ரீச் கிடைக்கும்... இங்கே ஆப் வச்சிருக்கிறவங்க மட்டும்தான் நம்மைப் பாப்பாங்க, பாராட்டுவாங்க, கொண்டாடுவாங்க... ஆனால் சீரியல்ல நடிச்சா நிறையப் பேரு நம்மள பார்ப்பாங்க... ஒரு விதமா எமோஷனலி கனெக்ட் ஆகலாம்... குடும்பத்தோட ஆணிவேராய் இருக்கிற குடும்பத் தலைவிகள் நம்மையும் குடும்பத்துல ஒருத்தரா பாப்பாங்க அப்படின்னு எப்பவோ யாரோ சொன்னதா பேட்டியில் பார்த்த ஞாபகம்... இப்ப ஏன் கேக்குற??”
“ஒண்ணும் இல்லடா... நீ லயனிகா டிவி பார்த்திருக்கிறியா?? அதிலே மாறிலி மானிடர்கள் சீரியல் பார்த்திருக்கிறியா?? அதிலே செகண்ட் ஹீரோயின நடிக்கச் சொல்றாங்க... உன்னோட கிங்காங் வீடியோஸ் நல்லா இருக்குதாம்... முதல்ல செகண்ட் ஹீரோயினா என்ட்ரி இருக்குமாம்... போகப்போகக் கதை உன்னைச் சுத்தி நடக்கிற மாதிரி மாறும் அப்படின்னு சொன்னாங்க...” எனச் சாரதா விளக்கமளிக்க வெண்பாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
(மேலே குறிப்பிட்ட லயனிகா எனது அபிஷியல் ஆடியோ சேனல். மாறிலி மானிடர்கள் சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் பச்சை வண்ணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் போட்டிக்கதை. நேரம் இருப்பின் அதையும் முயற்சித்துப் பாருங்கள்)
பதினைந்து வயது சிறுமிக்கு என்ன தெரியும்?? தன் வாழ்வில் முக்கியமான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுப்பதற்கு அவளுக்கு எந்த முதிர்ச்சியும் இல்லை; பகட்டாக இருப்பவை, கண்களைக் கவரும் தன்மையுடன் இருப்பவைதான் அவளைப் பொருத்தவரையில் சிறந்தவையாகத் தெரியும். தாய்தந்தையர் தான் எது சரி எது தவறு எனச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இங்கே சாரதா அவளைத் தீயவழியில் நடத்தினார் என்று நான் சாடவில்லை, உலகநாயகனின் கூற்றைப் போல நல்லவழியில் ஆக்கப்பூர்வமாக நடத்தியிருக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பு. அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவுதான்.
அவளைக் குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்க வைக்க முடிவு செய்தார் சாரதா. வெண்பா அவரது மகள் மட்டுமின்றி நாராயணனின் மகளும் அல்லவா?? அவள்மீது இருவருக்கும் சம உரிமையும், சம பொறுப்புகளும் இருக்கிறதல்லவா??? அவளது வாழ்வில் எந்த முடிவாக இருந்தாலும் நாராயணனிடமும் கேட்டுத்தானே முடிவு செய்ய இயலும்?? எனவே அவரிடம் கேட்டு, முறைப்படி அனுமதி பெற்றுவிட்டு,; தன் மகளை நடிப்பதற்கு அனுமதிக்கலாம் என நினைத்தவர் அன்று மாலை வீடு திரும்பிய தன் கணவரிடம் இதற்கு அனுமதி கோரினார்.
இரவு உணவை உண்டுகொண்டிருந்த தன் கணவனிடம் மென்மையாக எடுத்துரைக்க வேண்டி, “ப்பா... நீங்க சீரியல்லாம் பார்த்திருக்கிறீங்களா??” என மெதுவாக ஆரம்பித்தார்.
“அதெல்லாம் வேஸ்ட்... வீட்டில நேரம் போகாம இருக்கவங்க மட்டும்தான் சீரியல் பார்ப்பாங்க... எனக்கு ஆயிரம் வேலை இருக்குது... இப்படிக் கால் காசுக்கும் பெறாத சீரியல்ஸ் பாக்குறதுல எனக்கு விருப்பமில்ல...” என அவர் கூறிவிட, கோபமாக வந்தது சாரதாவுக்கு.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படித் தன் மகளுக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது எனக் கூற எனத் தயக்கமாக இருந்தது. இருப்பினும் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லப்பா.. நம்ம வெண்பாவை சீரியல்ல நடிக்கக் கூப்பிடுறாங்க...” எனச் சாரதா கூறியதுதான் தாமதம்; ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டார் நாராயணன்.
“என்ன பேச்சு பேசுற நீ??! நாட்டுல பாதிக் குடும்பம் கெட்டுப் போறதே இந்தச் சீரியல் பார்க்கிற ஆளுங்களாலதான்.. எந்தச் சீரியல்லயாவது உருப்படியா ஏதாவது ஒரு விஷயம் வருதா?? எப்ப பாரு அழுகாச்சிதான்... ஊர்ல இருக்கிற எல்லாப் பிரச்சனையும் ஹீரோயினுக்கு மட்டும் தான் வரும், அந்தப் பிரச்சினையும் கண்டிப்பா அவளுக்குச் சாதகமாகதான் முடியும்... இதுக்குப் பேசாம பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே.. எல்லாச் சீரியல்லேயும் ஒரே பிளாட்... இந்தச் சொசைட்டிக்கு நல்லது சொல்ற மாதிரி, நல்ல கருத்து சொல்ற மாதிரி எதுவுமே இல்லை... எல்லாச் சீரியல்லேயும் ஒரு ஹீரோ, ஒரு ஹீரோயின், அந்த ஹீரோ ஹீரோயினுக்கு நடக்காத ஃபர்ஸ்ட் நைட்... அவனைப் பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு அதே வீட்டுக்குள்ளேயே குடியிருக்கிற வில்லி... மருமக பணக்கார வீட்டில் பொறக்கல, வரதட்சனை அதிகம் கொண்டு வரலன்னு நிதமும் குத்திக்காட்டிட்டு இருக்கிற மாமியார், படிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா மாறணும், புருஷனுக்குச் சேவை செஞ்சே தேயணும்ன்னு வற்புறுத்துற மாமியார்... இதுக்கு எல்லாத்துக்கும் அல்டிமேட்டா பெண்டாட்டி வயித்துல இருக்கிற குழந்தை தன்னோடது இல்லைன்னு சந்தேகப்பட்டு விரட்டி விடுற ஹீரோ, இதுல அவனால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அவனுக்குத் தன் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற அப்பா... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் இதுல ஏதாவது ஒரு விஷயம்... ஏதாவது ஒரு விஷயம் இந்தச் சொசைட்டி முன்னேத்துற மாதிரி இருக்குதா?? அப்படிப்பட்ட ஒரு சாக்கடையைப் பாக்குறதே தப்புன்னு சொல்றேன்... அதுல என் பொண்ணை நடிக்க வேற சொல்லுறியா?? உனக்கு ஒண்ணு தெரியுமா?? திரையில் வர்றது மூலமா எல்லாரையும் சிரிக்க வச்சு, அழ வச்சு, ரசிக்க வச்சிருந்தாலும் அவங்களோட வாழ்க்கை போராட்டம் அவ்ளோ கஷ்டம். ஒவ்வொரு நிமிஷமும் ஓடிட்டே இருக்கணும்... தனக்காக, தன் குடும்பத்துக்காக நேரம் செலவழிக்காம அடுத்தடுத்த வாய்ப்புகள தேடி, ஓடிட்டே இருந்தா மட்டும்தான் அவங்களால அந்தத் துறையில் நிலைத்து நிற்கமுடியும்... அப்படிப்பட்ட ஒருத்தியா என் பொண்ணு போராடுறத நான் விரும்பலை... இப்போ நான் அந்தத் துறையை இழிவாகவும் தரக்குறைவாகவும் சித்தரிக்கல... நம்ம செய்யுற டாக்டர், டீச்சர் தொழில் மாதிரி அதுவும் ஒரு தொழில்தான்... ஆனால் நிரந்தரமான வருமானமும் நிரந்தரமான பொசிஷனும் இல்லாத ஒரு துறை அது. தினமும் 100 ரூபாய், 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவாங்க எத்தனை பேர் தெரியுமா?? வாரத்தில் ரெண்டு மட்டுமே வேலை இருக்கும் அவங்களுக்கு... இப்படிப்பட்ட ஒரு துறையில் போராடி, சர்வைவ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாரு... நம்ம பொண்ணு ஹீரோயினாவே நடிச்சாலும் கடைசிவரை ஹீரோயினாவேதான் நடிக்கப் போறாளா?? வெளியே இருந்து பாக்குறதுக்கு இது பஈசியா இருக்கலாம்.. ஆனா அவ்வளவு கஷ்டம் அவங்களுடைய ஜீவனம்... சோ எதையும் அரைகுறையா பார்த்துட்டு வந்து பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காத... என் பொண்ணு நல்லா படிச்சு ஒரு நல்ல ஜாப்ல செக்யூர்டா இருக்கணும்னு ஆசைப்படறேன்... தேவையில்லாம எதையாவது பேசி அவ மனசை கெடுத்துடாத... அவ படிக்கிற பொண்ணு... படிக்கட்டும்..” எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார் நாராயணன்.
நாராயணனிடம் வாக்குவாதம் செய்வது சரிப்பட்டு வராது எனத் தெளிந்த சாரதா; தன் தரப்பிலிருந்து என்ன முயற்சி எடுக்கலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினார்
Last edited: