Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
25
அந்தக் குட்டி விவேக் என்னும் சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் அந்தச் சிறுபெண்ணால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. தாங்கள் நேரலையில் பேசிக் கொண்டிருக்கிறோம், தங்களைச் சில ஆயிரம் நபர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து கத்தத் துவங்கிவிட்டாள்.
“யாருடா நீங்க?! எதுக்காகடா சேனலை ஹேக் பண்ணினீங்க?? உங்களுக்கு என்னதான் வேணும்?? பேமஸ் ஆகணும்ன்னா தனியா வீடியோ போடுங்கடா... இப்படி அடுத்தவன் உழைப்பை திருடாதீங்க.. இவன் ஒவ்வொரு நாளும் தூங்காம வீடியோ பண்ணினது எனக்குதான் தெரியும்... இதெல்லாம் என்ன பொழப்புடா? ஒழுங்கா அவன் ஐடியைத் திருப்பிக் கொடுத்துடுங்க... இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” எனத் தன்னவனைத் தேற்றும் விதமாகப் பேசி முடிக்க, அவனின் விசும்பல் அதிகமானதேயன்றி குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
அவளும் தளராமல் நேரலையிலேயே, “பேபி... நீ அழாத பேபி.. எல்லாம் சரியாயிடும்... நீ இப்போ என்னாத்துக்கு அழுதுட்டு இருக்கிற?? இவனுங்கதான் அழனும்... நீ அழாத பேபி...” எனப் பலவாறாகக் கூறிக் கொண்டிருந்தாள்.
அவன் நிறுத்தாமல் அழுது கொண்டேயிருக்க, “பேபி... அழாத பேபி...” என்பதை மந்திரம்போலத் தொடர்ந்து கூறி ஜெபிக்கத் தொடங்கிவிட்டாள் அந்தச் சிறுமி.
அதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனை ஈன்றெடுத்த தியாகச் செம்மல், “மருமகளே... மருமகளே...” எனக் குரல்கொடுக்க, இந்த முனையில் பேசிக் கொண்டிருந்த சிறுமி, “அத்தை... அத்தை... அவரை அழ வேணாம்னு சொல்லுங்க அத்தை... எனக்குக் கஷ்டமா இருக்கு..” என்றாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த தொண்ணூறுகளில் பிறந்த அனைவரின் இருதயமும் ஒருநிமிடம் நின்று துடித்தது. அன்றைய நாளுக்குப் பின்வந்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டின் “ஹாட் ட்ரோல் டாப்பிக்” இவர்கள்தான்.
அங்கே காணொளி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வெண்ணிலாவை நோக்கித் திரும்பினாள் ஜெனிதா. “மேம்.. நீங்க படிச்சவங்க... இங்கே நடந்துட்டு இருக்கிற சில விஷயங்களை வச்சு நாங்க ஏன் இங்கே உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கிறோம்ன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒப்பீனியன் இருக்கலாம்.. ஆனா எல்லாத்தையும் மொத்தமா முடிஞ்சதுக்கு அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாமே... இது சுதந்திர தேசம்... தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லை.. அதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் நாங்க நிச்சயமா தருவோம்... அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...” எனச் சற்றே தணிந்த குரலில் பேச, மௌனமாகத் தலையசைத்தாள் வெண்ணிலா.
சில நொடிகளில் நிமிர்ந்தவள்; “ஓகே மேம்... ஆனா தயவு செஞ்சு இந்த வீடியோவை மட்டும் ரெஸ்யூம் பண்ணி ஓட விட்டுடாதீங்க.. பார்க்கவே ரொம்பக் கொடூரமா இருக்குது.. திருத்தணிகையோட அம்மாவா என்னால இதை ஏத்துக்கவே முடியல.. என் பையனை இந்த மாதிரியான சமுதாயத்துல எப்படி வளர்த்தெடுக்கப் போறேன்னு எனக்குப் பயம் வந்துருச்சு... என் பையனோட திறமையை உலகறிய செய்யணும்ன்னு நான் வீடியோ பண்ணினேன்... ஆனா இப்படியானதொரு இருட்டு உலகம் இங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது...” என வருத்தத்துடன் பேசினாள்.
“ஆக்சுவலி இங்கே எல்லாருக்கும் அட்டென்ஷன் சீக் பண்றது மட்டும்தான் மோட்டிவ்... ஆனா அந்தத் தாகத்தோட அளவும் அதற்குத் தேர்ந்தெடுத்த வழிகளும்தான் வேற வேற.. பிரச்சனையோட தீவிரத்தைப் பொருத்துதான் ஒவ்வொருத்தரும் நல்லவங்களா கெட்டவங்களான்னு மெஷர் பண்றோம்... இன்னைக்கு உங்க பையனை உலகறிய செய்யுறதுக்காக வற்புறுத்தி பேச வச்ச நீங்க நாளைக்கே அவனை இந்த மாதிரியான வீடியோக்கள் செய்யுறதுக்கு அலோவ் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?? பேமஸ் ஆகுறதுதான் குறிக்கோள்ன்னு ஆனதுக்கு அப்புறம் எந்த வகையில் பேமஸ் ஆனா என்ன??” எனக் காட்டமாகக் கேட்கத் துடித்த உதடுகளை வெகுசிரமப்பட்டு அடக்கியவாறு அமர்ந்திருந்தான் ஜுபின். ஏனென்றால் இப்போது இதைக் கேட்டுவிட்டால் அவர்களது திட்டம் சரிவரச் செயல்படாதே!
“இப்போ வரைக்கும் இவங்க இப்படித்தான் சுத்திட்டு இருக்கிறாங்களா மேம்?” என வெண்ணிலா வேதனையின் உச்சத்தில் வினவ, “இல்லம்மா... இவங்களை அரெஸ்ட் பண்ணியாச்சு... இவங்களை மாதிரி இன்னும் நெறய பசங்க இருந்தாங்க.. ஸ்கூல் யூனிபார்ம்ல வீடியோ போடறது, லைவ்ல இன்டிமேசி க்ரியேட் பண்றவங்கன்னு நெறைய பேர்... நாங்க ஒரு சாம்பிளுக்காக டீசன்டா இதை எடுத்து உங்களுக்குக் காட்டறோம்... இவங்க எல்லார் மேலேயும், பேரன்ட்ஸ் மேலயும் சோசியல் ஆக்டிவிஸ்ட் ஒருத்தங்க கம்ப்ளெயின்ட் கொடுத்ததால அரெஸ்ட் பண்ணி கவுன்சலிங் கொடுத்திருக்கிறோம்... வீடியோ போடமாட்டோம்னு இவங்களும் வாக்கு கொடுத்திருக்கிறாங்க..” என ஜெனிதா கூறவும்தான் நிம்மதியில் பெருமூச்சு விட்டாள் வெண்ணிலா.
“இந்தப் போல்டர்ல இன்னும் ஒரே ஒரு ஃபைல் மட்டும் பார்க்க வேண்டியது இருக்குது மேம்... அதையும் ப்ளே பண்ணிடவா?” என வினித் கேட்க, “ம்ம்ம்... போடுங்க...” எனக் கண்களால் ஜாடை செய்தாள் ஜெனிதா. ஏனெனில் வெண்ணிலாவை உக்கிரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகும் காணொளியல்லவா அது?!!!!
அவளது கட்டளையை ஏற்று, அவன் அதை ஒளிபரப்ப, திரையில் இருவர் “காதல் மன்னனா... நீயும் கண்ணனா...” என்னும் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் பத்திற்கும் மேல் இருக்குமெனத் தோன்றியது. கண்களைக் குறுக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, “இவங்களை உங்களுக்குத் தெரியாதா?? விஷு – கார்த்திக்... இவங்களும் நம்ம ஆப்ல ட்ரென்டிங் கப்பிள்தான்.. அப்பாவும் பொண்ணும் செமையா இருக்குதுல்ல...” என்றார் அருகிலிருந்தவர்.
இதைக் கேட்டதும் திக்கென்றிருந்தது அங்கிருந்த சிலருக்கு. அடுத்தடுத்த காணொளிகளில் பாரபட்சமே இல்லாமல், அம்மா – மகன், அக்கா – தம்பி, அண்ணன் – தங்கை, பாட்டி – பேரன், அப்பா – மகள், அக்கா கணவன் – கொளுந்தியாள் என இஷ்டமான பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்க, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிலர்மீது வீசத் தொடங்கி விட்டாள் வெண்ணிலா.
அவளைப் பார்த்து முகத்தைச் சுளித்த அங்கிருந்த ஒருவர், “இந்தப் பொம்பளையை இங்கே இருந்து கூட்டிட்டு போங்கம்மா... மனநிலை சரியில்லாதவளை அழைச்சிட்டு வந்திருக்கிறீங்க..” எனக் கூறி முடிக்கும்முன்னரே, “யாருடி பைத்தியம்... யாரு பைத்தியம்... நானா?! இப்படிக் கேவலமான வீடியோவை அப்டேட் பண்றவங்களுக்கும், ரசிக்கிறவங்களுக்கும் நல்லவங்க... நான் பைத்தியமா??” என எதிர்த்து நின்றாள் வெண்ணிலா.
“உங்களுக்குத் தெரியுமா?? உறவுகளோட உன்னத வாழ்க்கையை வாழுற ஒரே நாடு நம்ம நாடுதான்... வெளிநாட்டுல எல்லாம் அங்கிள், ஆன்ட்டின்னு ஒரே வார்த்தையில முடிச்சிடுவாங்க... நம்ம ஊருலதான் பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி, மாமா – அத்தைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு உறவுமுறை வச்சு கொண்டாடுறோம்... ஒண்ணுவிட்ட அக்கா, சகலை, பங்காளி, சொக்காரன் இப்படி நெறைய நெறைய சொல்லலாம்.. சில உறவுகள் எப்பவுமே போற்றத்தக்கவை.. அதிலே அப்பா – பொண்ணு, அம்மா – பையன் போன்ற புனிதமான உறவுகளும் அடக்கம்... எல்லாருக்கும் அந்த உன்னதமான உறவுகள் கிடைச்சிடாது... அதைப் போய்.... ச்சே... நெனச்சு பார்த்தாலே உடம்பெல்லாம் கூசுது...” என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் அருகே சென்ற ஜெனிதா, “மேம்.. ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம்தான்.. இந்த வீடியோசை எல்லாருக்கும் போட்டு காட்டணும்ன்னு பி.எம் சொல்லியிருக்கிறார்... மொத்தமா பார்த்து முடிச்சிட்டா எல்லாரும் மொத்த்த்த்தமா.... போயிடலாம்...” எனக் கூற, “சாரி மேம்...” எனத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
“ம்ம்ம்... தொடங்கட்டும்... அடுத்தக் காட்சி!!” என நாதன் இங்கிருந்தவாறே தன் தோழர்களுடன் கூற, காணொளி தொடங்கியது.
இதுவரை ஓடிய இணையர் காணொளி காட்சிகளைக்கூடச் சற்றே சகித்துக் கொண்டு பார்த்துவிடலாம் போல, இது அந்தளவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதற்கு அதுவே மேல் என எண்ண வைத்தது.
முதல் காட்சியிலேயே திரையில் காட்டப்பட்டது வெண்பாதான். அதைக் கண்டதும் தன் மகளைப் பார்த்து புன்னகைத்தார் சாரதா. அது அவள் ஆரம்பக் காலத்தில் பதிவேற்றிய காணொளி அன்று. வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்த் தங்களுக்கான வாய்ப்புத் தேடலின்போது பதிவேற்றிய ஒன்று.
தன் குடும்பத்தை விட்டு வெளியேறிய தாயும் மகளும் தங்களை அழைத்த குறிப்பிட்ட சின்னத்திரை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தாங்கள் சவுகரியமாகத் தங்குவதற்கு வீடும் வாடகைக்குப் பிடித்து, குடியேறினர்.
வழக்கமாக மற்றவர்களின் கதைகளில் கேள்விப்படுவதைப் போலல்லாமல் எவ்வித ஏய்ப்புமின்றி அந்த வாய்ப்பு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. பள்ளியிலும் மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) பெற்றுச் சென்றிருந்த சாரதா அவளை அருகிலேயே தங்களது படப்பிடிப்பைத் தடைசெய்யாத வண்ணம் தோதுவான ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார்.
கிடைத்த வாய்ப்புடன் சாரதாவின் ஆசை அடங்கிவிடவில்லை. மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதாகத் தழைத்து நின்றது அவருக்குள் இருந்த கவனமீர்ப்பு செய்யும் நுண்கிருமிகளின் தாக்கம்.
தங்களது இருப்பைக் கிங்காங் செயலியிலும் உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டுமென முடிவு செய்தவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கும் காணொளிகளைப் பதிவிட ஆவன செய்திருந்தார்.
மற்றவர்களைப் போலத்தான். ஆரம்பத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து காணொளி பதிவுசெய்த வெண்பாவை சற்றே இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ள வலியுறுத்தினார். பாவம் பதின்பருவ பெண்! என்ன செய்வாள்? உற்றவளான தாய் உரைப்பதுதானே அவளுக்கு வேதமும் உபநிடதமும்!! எனவே ஏன், எதற்கு என்னும் கேள்விகளின்றிச் சாரதாவின் கட்டளைகளை அவ்வாறே சிரமேற்கொண்டு செய்தாள் அவள்.
“Costume Sponsor” என்பதெல்லாம் பெரிய விஷயமல்ல. சாதாரணமாகத் தொடர்ந்து காணொளி பதிவேற்றுபவர்களுக்கே உடைகளை வழங்குவதற்கு வரிசைகட்டி நிற்கையில், குறிப்பிடத்தக்கதொரு தொலைக்காட்சி சேனலில் நெடுந்தொடரில் நடிக்கும் வெண்பாவிற்கு ஆடைகளை வடிவமைத்து வழங்கமாட்டரா என்ன?? ஸ்பான்சர் செய்பவர்கள் குவிந்தனர்.
அவர்கள் அளிக்கும் ஆடைகளை அணிந்து விதவிதமான புகைப்படங்களைக் ‘க்ளிக்’க்கி புகைப்படங்களைப் பதிவிட்டு அவர்களைக் குறிப்பிடுவது, அவர்களைத் தொடர்புகொண்டு ஆடைகளைப் பெறுவது எல்லாம் சாரதாவின் வேலை. கிட்டத்தட்ட அவளின் மேலாளர் போல நடந்து கொண்டார்.
சின்னத்திரை காட்சிகள் என்றாலே தற்போதெல்லாம் நெருக்கமான காட்சிகள் வெகுசாதாரணமாகக் காட்டப்படுகின்றன. வெண்பாவின் காட்சிகள் காதல் காட்சிகளிலிருந்து அடுத்தகட்டத்திற்குப் பரிணமிக்கும் போது சற்றே நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கும் இருவரும் சம்மதித்தனர்.
ஏற்கனவே கூறியதைப் போல, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்பதெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த சிறுசிறு கூலித் தொழில்களுக்குத் தான் போல, திரைத்துறையில் எவரும் அதுகுறித்துச் சிந்திப்பதே இல்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத வெண்பா நெருக்கமான காட்சிகளில் வெகுதாராளமாக நடித்தாள்.
அதன்பின்னர் அவளை அணுகும் ஆடைவடிவமைப்பாளர்கள்கூடச் சற்றே கவர்ச்சிகரமான ஆடைகளையே வடிவமைத்து வழங்கினர். அதற்கெல்லாம் அசருவதாக இல்லை இருவரும். எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் அணியத் தொடங்கினாள் வெண்பா.
இருப்பினும் சாரதா எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளோ புகழோ கிட்டவில்லை. குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பவர்களைத் தவிர எவருக்கும் அவளைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. எனவே ஒரு சிறந்த திட்டத்துடன் குதித்தார் சாரதா.
மற்றொரு சமூக வலைத்தளத்தில் கணக்கைத் தொடங்கியவர்; அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றத் தொடங்கினார். உடல்வளைவுகள் எல்லாம் தெரியும் வகையில் அவளை விதவிதமாகக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் எல்லாம் பெரும்வரவேற்பைப் பெற்றன.
அவருக்குப் புரிந்துவிட்டது, எதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என. எனவே தினமும் ஆடைகுறைப்புச் செய்ய முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினார். அதன் கீழிருக்கும் கருத்துப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் கமெண்டுகள் காண சகிக்காது. அந்த அளவிற்கு மனதின் வக்கிரங்களைக் கொட்டித் தீர்த்திருப்பர் அனைவரும்.
“ஸ்வீட்டி, செல்லம், புஜ்ஜி....” என இன்னும் என்னன்னவோ... பல கருத்துரைகள் குவிந்தாலும் எதிர்மறையிலாவது தன் மகள் பிரபலமடைந்திருக்கிறாளே என மனதிற்குள் மகிழ்ந்தாள் அந்த ஏ.எஸ் வைரஸ் தாக்கப்பட்ட தாய்.
அவரின் அந்த வியூகம் வெற்றிபெற்று, பல வாய்ப்புகள் கிட்டின வெண்பாவின் பதினைந்தாவது வயதிலேயே. அவள் பிரபலமாக இருந்தாளே தவிர அவளின் எதிர்காலம் என்ன எனபது கேள்விக்குறிதான்?! உண்மையில் அநுதினமும் அவளை அப்டேட் செய்து கொண்டிருந்தாலொழிய அந்தத் துறையில் நிலைத்து நிற்பது சிரமம். ஏனென்றால் அவள் பிடித்திருப்பது புலிவாலை.
அதெப்படி எனில் அனைவரையும் தன்னை நோக்கி இழுக்கிறேன் என்னும் பெயரில் ஏதேதோ தகிடதத்தோம் வேலைகள் செய்து வைத்திருக்கின்றனர் இருவரும். இதற்குமேல் என்ன இருக்கிறது?? வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியில் இருந்த வெண்பாவின் இடம் சற்றே ஆட்டம் காணுவதைப் போல இருக்கவும், அவளைப் பட்டினிபோட்டு உடலை இளைக்கச் செய்தார் சாரதா.
இவ்வாறாக அவர்களின் வளர்ச்சியும் , மேற்படி விஷயங்களும் வெண்பாவின் தந்தைக்குத் தெரியாமல் இல்லை. அவரும் எத்தனையோ முறை அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துவிட்டார். சாரதா அழைப்பை ஏற்றாரில்லை. இரண்டு முறை நேரில் வந்தும், அவரைப் பார்க்காமல் தவிர்த்துவிட்டார் அவர்.
“நிகழ்காலத்தின் அற்ப சந்தோஷத்திற்காகத் தன் மகளின் எதிர்காலத்தை அடமானம் வைத்து, சிதைத்து விட்டாளே” என்னும் வேதனைதான் வெண்பாவின் தந்தைக்கு. அவளும் இவரது பேச்சைக் கேட்பதாக இல்லை. ஏனெனில் அவளுக்காக இத்தனை ரசிகர்களும், ரசிகப்பக்கங்களும் இருக்கின்றனரே. பின் தந்தையாவது, தக்காளியாவது?!
சாதாரணமாகப் பதிவிடும் காணொளிகளில் கூட உச்சக்கட்ட கவர்ச்சியும் ஆபாசமும் கலந்திருந்தது. இருவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி செலவில் நடத்தும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பல கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.
இத்தனை அபரிமிதமான வளர்ச்சியும் பதினைந்து வயதிலேயே என்றால் பாராட்டத்தக்கதுதான், வியந்து நோக்கத்தக்கதுதான். ஆனாலும் இதன் பின்னதான வெண்பாவின் வளமான, நலமான, உத்திரவாதம் மிக்க எதிர்காலம் என்பது சற்றே கேள்விக்குரிய ஒன்றுதான்.
இதை வெறும் அனுமானம் என்றுகூடப் பலரும் சிந்திக்கலாம். அதற்கு நடைமுறை உதாரணங்கள் என அடுக்கத் தொடங்கினால் பட்டியல் பத்தைத் தாண்டும். மாதிரிக்கு இங்கே சிலரை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.
சில்க் ஸ்மிதா...
ஷகீலா...
நமீதா....
சோனா...
யாஷிகா ஆனந்த்...
இவர்கள் அனைவரும் தங்களுக்குள் சமகாலத்தவர்கள் அல்லதான். இருப்பினும் கடந்த காலத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் இருந்த பட்டியல் இப்போதெல்லாம் “Big Data” என்னும் அளவிற்கு மீமீமீமீ பெரிது. (ஷகீலா மம்மியை இங்கே சேர்த்து விட்டமைக்காக மன்னித்தருள்க. ஒருவேளை CWCக்கு வரவில்லை எனில் அவரது எதிர்காலம் கருமையன்றோ!?)
“யாருடா நீங்க?! எதுக்காகடா சேனலை ஹேக் பண்ணினீங்க?? உங்களுக்கு என்னதான் வேணும்?? பேமஸ் ஆகணும்ன்னா தனியா வீடியோ போடுங்கடா... இப்படி அடுத்தவன் உழைப்பை திருடாதீங்க.. இவன் ஒவ்வொரு நாளும் தூங்காம வீடியோ பண்ணினது எனக்குதான் தெரியும்... இதெல்லாம் என்ன பொழப்புடா? ஒழுங்கா அவன் ஐடியைத் திருப்பிக் கொடுத்துடுங்க... இல்லைன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” எனத் தன்னவனைத் தேற்றும் விதமாகப் பேசி முடிக்க, அவனின் விசும்பல் அதிகமானதேயன்றி குறைவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
அவளும் தளராமல் நேரலையிலேயே, “பேபி... நீ அழாத பேபி.. எல்லாம் சரியாயிடும்... நீ இப்போ என்னாத்துக்கு அழுதுட்டு இருக்கிற?? இவனுங்கதான் அழனும்... நீ அழாத பேபி...” எனப் பலவாறாகக் கூறிக் கொண்டிருந்தாள்.
அவன் நிறுத்தாமல் அழுது கொண்டேயிருக்க, “பேபி... அழாத பேபி...” என்பதை மந்திரம்போலத் தொடர்ந்து கூறி ஜெபிக்கத் தொடங்கிவிட்டாள் அந்தச் சிறுமி.
அதற்குள் பக்கத்தில் அமர்ந்திருந்த அவனை ஈன்றெடுத்த தியாகச் செம்மல், “மருமகளே... மருமகளே...” எனக் குரல்கொடுக்க, இந்த முனையில் பேசிக் கொண்டிருந்த சிறுமி, “அத்தை... அத்தை... அவரை அழ வேணாம்னு சொல்லுங்க அத்தை... எனக்குக் கஷ்டமா இருக்கு..” என்றாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த தொண்ணூறுகளில் பிறந்த அனைவரின் இருதயமும் ஒருநிமிடம் நின்று துடித்தது. அன்றைய நாளுக்குப் பின்வந்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டின் “ஹாட் ட்ரோல் டாப்பிக்” இவர்கள்தான்.
அங்கே காணொளி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, வெண்ணிலாவை நோக்கித் திரும்பினாள் ஜெனிதா. “மேம்.. நீங்க படிச்சவங்க... இங்கே நடந்துட்டு இருக்கிற சில விஷயங்களை வச்சு நாங்க ஏன் இங்கே உங்களைக் கூட்டிட்டு வந்திருக்கிறோம்ன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஒப்பீனியன் இருக்கலாம்.. ஆனா எல்லாத்தையும் மொத்தமா முடிஞ்சதுக்கு அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாமே... இது சுதந்திர தேசம்... தன்னோட கருத்துகளைப் பகிர்ந்துக்கிறது தப்பில்லை.. அதுக்கான டைம் அண்ட் ஸ்பேஸ் நாங்க நிச்சயமா தருவோம்... அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...” எனச் சற்றே தணிந்த குரலில் பேச, மௌனமாகத் தலையசைத்தாள் வெண்ணிலா.
சில நொடிகளில் நிமிர்ந்தவள்; “ஓகே மேம்... ஆனா தயவு செஞ்சு இந்த வீடியோவை மட்டும் ரெஸ்யூம் பண்ணி ஓட விட்டுடாதீங்க.. பார்க்கவே ரொம்பக் கொடூரமா இருக்குது.. திருத்தணிகையோட அம்மாவா என்னால இதை ஏத்துக்கவே முடியல.. என் பையனை இந்த மாதிரியான சமுதாயத்துல எப்படி வளர்த்தெடுக்கப் போறேன்னு எனக்குப் பயம் வந்துருச்சு... என் பையனோட திறமையை உலகறிய செய்யணும்ன்னு நான் வீடியோ பண்ணினேன்... ஆனா இப்படியானதொரு இருட்டு உலகம் இங்கே இருக்கும்ன்னு எனக்குத் தெரியவே தெரியாது...” என வருத்தத்துடன் பேசினாள்.
“ஆக்சுவலி இங்கே எல்லாருக்கும் அட்டென்ஷன் சீக் பண்றது மட்டும்தான் மோட்டிவ்... ஆனா அந்தத் தாகத்தோட அளவும் அதற்குத் தேர்ந்தெடுத்த வழிகளும்தான் வேற வேற.. பிரச்சனையோட தீவிரத்தைப் பொருத்துதான் ஒவ்வொருத்தரும் நல்லவங்களா கெட்டவங்களான்னு மெஷர் பண்றோம்... இன்னைக்கு உங்க பையனை உலகறிய செய்யுறதுக்காக வற்புறுத்தி பேச வச்ச நீங்க நாளைக்கே அவனை இந்த மாதிரியான வீடியோக்கள் செய்யுறதுக்கு அலோவ் பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்?? பேமஸ் ஆகுறதுதான் குறிக்கோள்ன்னு ஆனதுக்கு அப்புறம் எந்த வகையில் பேமஸ் ஆனா என்ன??” எனக் காட்டமாகக் கேட்கத் துடித்த உதடுகளை வெகுசிரமப்பட்டு அடக்கியவாறு அமர்ந்திருந்தான் ஜுபின். ஏனென்றால் இப்போது இதைக் கேட்டுவிட்டால் அவர்களது திட்டம் சரிவரச் செயல்படாதே!
“இப்போ வரைக்கும் இவங்க இப்படித்தான் சுத்திட்டு இருக்கிறாங்களா மேம்?” என வெண்ணிலா வேதனையின் உச்சத்தில் வினவ, “இல்லம்மா... இவங்களை அரெஸ்ட் பண்ணியாச்சு... இவங்களை மாதிரி இன்னும் நெறய பசங்க இருந்தாங்க.. ஸ்கூல் யூனிபார்ம்ல வீடியோ போடறது, லைவ்ல இன்டிமேசி க்ரியேட் பண்றவங்கன்னு நெறைய பேர்... நாங்க ஒரு சாம்பிளுக்காக டீசன்டா இதை எடுத்து உங்களுக்குக் காட்டறோம்... இவங்க எல்லார் மேலேயும், பேரன்ட்ஸ் மேலயும் சோசியல் ஆக்டிவிஸ்ட் ஒருத்தங்க கம்ப்ளெயின்ட் கொடுத்ததால அரெஸ்ட் பண்ணி கவுன்சலிங் கொடுத்திருக்கிறோம்... வீடியோ போடமாட்டோம்னு இவங்களும் வாக்கு கொடுத்திருக்கிறாங்க..” என ஜெனிதா கூறவும்தான் நிம்மதியில் பெருமூச்சு விட்டாள் வெண்ணிலா.
“இந்தப் போல்டர்ல இன்னும் ஒரே ஒரு ஃபைல் மட்டும் பார்க்க வேண்டியது இருக்குது மேம்... அதையும் ப்ளே பண்ணிடவா?” என வினித் கேட்க, “ம்ம்ம்... போடுங்க...” எனக் கண்களால் ஜாடை செய்தாள் ஜெனிதா. ஏனெனில் வெண்ணிலாவை உக்கிரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகும் காணொளியல்லவா அது?!!!!
அவளது கட்டளையை ஏற்று, அவன் அதை ஒளிபரப்ப, திரையில் இருவர் “காதல் மன்னனா... நீயும் கண்ணனா...” என்னும் பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் பத்திற்கும் மேல் இருக்குமெனத் தோன்றியது. கண்களைக் குறுக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, “இவங்களை உங்களுக்குத் தெரியாதா?? விஷு – கார்த்திக்... இவங்களும் நம்ம ஆப்ல ட்ரென்டிங் கப்பிள்தான்.. அப்பாவும் பொண்ணும் செமையா இருக்குதுல்ல...” என்றார் அருகிலிருந்தவர்.
இதைக் கேட்டதும் திக்கென்றிருந்தது அங்கிருந்த சிலருக்கு. அடுத்தடுத்த காணொளிகளில் பாரபட்சமே இல்லாமல், அம்மா – மகன், அக்கா – தம்பி, அண்ணன் – தங்கை, பாட்டி – பேரன், அப்பா – மகள், அக்கா கணவன் – கொளுந்தியாள் என இஷ்டமான பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்க, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சிலர்மீது வீசத் தொடங்கி விட்டாள் வெண்ணிலா.
அவளைப் பார்த்து முகத்தைச் சுளித்த அங்கிருந்த ஒருவர், “இந்தப் பொம்பளையை இங்கே இருந்து கூட்டிட்டு போங்கம்மா... மனநிலை சரியில்லாதவளை அழைச்சிட்டு வந்திருக்கிறீங்க..” எனக் கூறி முடிக்கும்முன்னரே, “யாருடி பைத்தியம்... யாரு பைத்தியம்... நானா?! இப்படிக் கேவலமான வீடியோவை அப்டேட் பண்றவங்களுக்கும், ரசிக்கிறவங்களுக்கும் நல்லவங்க... நான் பைத்தியமா??” என எதிர்த்து நின்றாள் வெண்ணிலா.
“உங்களுக்குத் தெரியுமா?? உறவுகளோட உன்னத வாழ்க்கையை வாழுற ஒரே நாடு நம்ம நாடுதான்... வெளிநாட்டுல எல்லாம் அங்கிள், ஆன்ட்டின்னு ஒரே வார்த்தையில முடிச்சிடுவாங்க... நம்ம ஊருலதான் பெரியப்பா – பெரியம்மா, சித்தப்பா – சித்தி, மாமா – அத்தைன்னு ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு உறவுமுறை வச்சு கொண்டாடுறோம்... ஒண்ணுவிட்ட அக்கா, சகலை, பங்காளி, சொக்காரன் இப்படி நெறைய நெறைய சொல்லலாம்.. சில உறவுகள் எப்பவுமே போற்றத்தக்கவை.. அதிலே அப்பா – பொண்ணு, அம்மா – பையன் போன்ற புனிதமான உறவுகளும் அடக்கம்... எல்லாருக்கும் அந்த உன்னதமான உறவுகள் கிடைச்சிடாது... அதைப் போய்.... ச்சே... நெனச்சு பார்த்தாலே உடம்பெல்லாம் கூசுது...” என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் அருகே சென்ற ஜெனிதா, “மேம்.. ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம்தான்.. இந்த வீடியோசை எல்லாருக்கும் போட்டு காட்டணும்ன்னு பி.எம் சொல்லியிருக்கிறார்... மொத்தமா பார்த்து முடிச்சிட்டா எல்லாரும் மொத்த்த்த்தமா.... போயிடலாம்...” எனக் கூற, “சாரி மேம்...” எனத் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.
“ம்ம்ம்... தொடங்கட்டும்... அடுத்தக் காட்சி!!” என நாதன் இங்கிருந்தவாறே தன் தோழர்களுடன் கூற, காணொளி தொடங்கியது.
இதுவரை ஓடிய இணையர் காணொளி காட்சிகளைக்கூடச் சற்றே சகித்துக் கொண்டு பார்த்துவிடலாம் போல, இது அந்தளவிற்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதற்கு அதுவே மேல் என எண்ண வைத்தது.
முதல் காட்சியிலேயே திரையில் காட்டப்பட்டது வெண்பாதான். அதைக் கண்டதும் தன் மகளைப் பார்த்து புன்னகைத்தார் சாரதா. அது அவள் ஆரம்பக் காலத்தில் பதிவேற்றிய காணொளி அன்று. வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்த் தங்களுக்கான வாய்ப்புத் தேடலின்போது பதிவேற்றிய ஒன்று.
தன் குடும்பத்தை விட்டு வெளியேறிய தாயும் மகளும் தங்களை அழைத்த குறிப்பிட்ட சின்னத்திரை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தாங்கள் சவுகரியமாகத் தங்குவதற்கு வீடும் வாடகைக்குப் பிடித்து, குடியேறினர்.
வழக்கமாக மற்றவர்களின் கதைகளில் கேள்விப்படுவதைப் போலல்லாமல் எவ்வித ஏய்ப்புமின்றி அந்த வாய்ப்பு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. பள்ளியிலும் மாற்றுச் சான்றிதழை (Transfer Certificate) பெற்றுச் சென்றிருந்த சாரதா அவளை அருகிலேயே தங்களது படப்பிடிப்பைத் தடைசெய்யாத வண்ணம் தோதுவான ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார்.
கிடைத்த வாய்ப்புடன் சாரதாவின் ஆசை அடங்கிவிடவில்லை. மென்மேலும் முன்னேற வேண்டும் என்பதாகத் தழைத்து நின்றது அவருக்குள் இருந்த கவனமீர்ப்பு செய்யும் நுண்கிருமிகளின் தாக்கம்.
தங்களது இருப்பைக் கிங்காங் செயலியிலும் உணர்த்திக் கொண்டேயிருக்க வேண்டுமென முடிவு செய்தவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கும் காணொளிகளைப் பதிவிட ஆவன செய்திருந்தார்.
மற்றவர்களைப் போலத்தான். ஆரம்பத்தில் நாகரீகமான உடைகளை அணிந்து காணொளி பதிவுசெய்த வெண்பாவை சற்றே இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ள வலியுறுத்தினார். பாவம் பதின்பருவ பெண்! என்ன செய்வாள்? உற்றவளான தாய் உரைப்பதுதானே அவளுக்கு வேதமும் உபநிடதமும்!! எனவே ஏன், எதற்கு என்னும் கேள்விகளின்றிச் சாரதாவின் கட்டளைகளை அவ்வாறே சிரமேற்கொண்டு செய்தாள் அவள்.
“Costume Sponsor” என்பதெல்லாம் பெரிய விஷயமல்ல. சாதாரணமாகத் தொடர்ந்து காணொளி பதிவேற்றுபவர்களுக்கே உடைகளை வழங்குவதற்கு வரிசைகட்டி நிற்கையில், குறிப்பிடத்தக்கதொரு தொலைக்காட்சி சேனலில் நெடுந்தொடரில் நடிக்கும் வெண்பாவிற்கு ஆடைகளை வடிவமைத்து வழங்கமாட்டரா என்ன?? ஸ்பான்சர் செய்பவர்கள் குவிந்தனர்.
அவர்கள் அளிக்கும் ஆடைகளை அணிந்து விதவிதமான புகைப்படங்களைக் ‘க்ளிக்’க்கி புகைப்படங்களைப் பதிவிட்டு அவர்களைக் குறிப்பிடுவது, அவர்களைத் தொடர்புகொண்டு ஆடைகளைப் பெறுவது எல்லாம் சாரதாவின் வேலை. கிட்டத்தட்ட அவளின் மேலாளர் போல நடந்து கொண்டார்.
சின்னத்திரை காட்சிகள் என்றாலே தற்போதெல்லாம் நெருக்கமான காட்சிகள் வெகுசாதாரணமாகக் காட்டப்படுகின்றன. வெண்பாவின் காட்சிகள் காதல் காட்சிகளிலிருந்து அடுத்தகட்டத்திற்குப் பரிணமிக்கும் போது சற்றே நெருடலாகத்தான் இருந்தது. ஆனாலும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதற்கும் இருவரும் சம்மதித்தனர்.
ஏற்கனவே கூறியதைப் போல, ‘குழந்தைத் தொழிலாளர்’ என்பதெல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த சிறுசிறு கூலித் தொழில்களுக்குத் தான் போல, திரைத்துறையில் எவரும் அதுகுறித்துச் சிந்திப்பதே இல்லை. பதினெட்டு வயதுகூட நிரம்பாத வெண்பா நெருக்கமான காட்சிகளில் வெகுதாராளமாக நடித்தாள்.
அதன்பின்னர் அவளை அணுகும் ஆடைவடிவமைப்பாளர்கள்கூடச் சற்றே கவர்ச்சிகரமான ஆடைகளையே வடிவமைத்து வழங்கினர். அதற்கெல்லாம் அசருவதாக இல்லை இருவரும். எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் அணியத் தொடங்கினாள் வெண்பா.
இருப்பினும் சாரதா எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளோ புகழோ கிட்டவில்லை. குறிப்பிட்ட தொடரைப் பார்ப்பவர்களைத் தவிர எவருக்கும் அவளைக் குறித்துத் தெரிந்திருக்கவில்லை. எனவே ஒரு சிறந்த திட்டத்துடன் குதித்தார் சாரதா.
மற்றொரு சமூக வலைத்தளத்தில் கணக்கைத் தொடங்கியவர்; அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விதவிதமான புகைப்படங்களைப் பதிவேற்றத் தொடங்கினார். உடல்வளைவுகள் எல்லாம் தெரியும் வகையில் அவளை விதவிதமாகக் காட்சிப்படுத்திய புகைப்படங்கள் எல்லாம் பெரும்வரவேற்பைப் பெற்றன.
அவருக்குப் புரிந்துவிட்டது, எதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என. எனவே தினமும் ஆடைகுறைப்புச் செய்ய முடிவெடுத்து அதைச் செயல்படுத்தினார். அதன் கீழிருக்கும் கருத்துப் பக்கத்தில் போய்ப் பார்த்தால் கமெண்டுகள் காண சகிக்காது. அந்த அளவிற்கு மனதின் வக்கிரங்களைக் கொட்டித் தீர்த்திருப்பர் அனைவரும்.
“ஸ்வீட்டி, செல்லம், புஜ்ஜி....” என இன்னும் என்னன்னவோ... பல கருத்துரைகள் குவிந்தாலும் எதிர்மறையிலாவது தன் மகள் பிரபலமடைந்திருக்கிறாளே என மனதிற்குள் மகிழ்ந்தாள் அந்த ஏ.எஸ் வைரஸ் தாக்கப்பட்ட தாய்.
அவரின் அந்த வியூகம் வெற்றிபெற்று, பல வாய்ப்புகள் கிட்டின வெண்பாவின் பதினைந்தாவது வயதிலேயே. அவள் பிரபலமாக இருந்தாளே தவிர அவளின் எதிர்காலம் என்ன எனபது கேள்விக்குறிதான்?! உண்மையில் அநுதினமும் அவளை அப்டேட் செய்து கொண்டிருந்தாலொழிய அந்தத் துறையில் நிலைத்து நிற்பது சிரமம். ஏனென்றால் அவள் பிடித்திருப்பது புலிவாலை.
அதெப்படி எனில் அனைவரையும் தன்னை நோக்கி இழுக்கிறேன் என்னும் பெயரில் ஏதேதோ தகிடதத்தோம் வேலைகள் செய்து வைத்திருக்கின்றனர் இருவரும். இதற்குமேல் என்ன இருக்கிறது?? வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியில் இருந்த வெண்பாவின் இடம் சற்றே ஆட்டம் காணுவதைப் போல இருக்கவும், அவளைப் பட்டினிபோட்டு உடலை இளைக்கச் செய்தார் சாரதா.
இவ்வாறாக அவர்களின் வளர்ச்சியும் , மேற்படி விஷயங்களும் வெண்பாவின் தந்தைக்குத் தெரியாமல் இல்லை. அவரும் எத்தனையோ முறை அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துவிட்டார். சாரதா அழைப்பை ஏற்றாரில்லை. இரண்டு முறை நேரில் வந்தும், அவரைப் பார்க்காமல் தவிர்த்துவிட்டார் அவர்.
“நிகழ்காலத்தின் அற்ப சந்தோஷத்திற்காகத் தன் மகளின் எதிர்காலத்தை அடமானம் வைத்து, சிதைத்து விட்டாளே” என்னும் வேதனைதான் வெண்பாவின் தந்தைக்கு. அவளும் இவரது பேச்சைக் கேட்பதாக இல்லை. ஏனெனில் அவளுக்காக இத்தனை ரசிகர்களும், ரசிகப்பக்கங்களும் இருக்கின்றனரே. பின் தந்தையாவது, தக்காளியாவது?!
சாதாரணமாகப் பதிவிடும் காணொளிகளில் கூட உச்சக்கட்ட கவர்ச்சியும் ஆபாசமும் கலந்திருந்தது. இருவரும் எதிர்பார்த்தது போலவே ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி செலவில் நடத்தும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பல கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டாள்.
இத்தனை அபரிமிதமான வளர்ச்சியும் பதினைந்து வயதிலேயே என்றால் பாராட்டத்தக்கதுதான், வியந்து நோக்கத்தக்கதுதான். ஆனாலும் இதன் பின்னதான வெண்பாவின் வளமான, நலமான, உத்திரவாதம் மிக்க எதிர்காலம் என்பது சற்றே கேள்விக்குரிய ஒன்றுதான்.
இதை வெறும் அனுமானம் என்றுகூடப் பலரும் சிந்திக்கலாம். அதற்கு நடைமுறை உதாரணங்கள் என அடுக்கத் தொடங்கினால் பட்டியல் பத்தைத் தாண்டும். மாதிரிக்கு இங்கே சிலரை குறிப்பிடுகிறேன் கேளுங்கள்.
சில்க் ஸ்மிதா...
ஷகீலா...
நமீதா....
சோனா...
யாஷிகா ஆனந்த்...
இவர்கள் அனைவரும் தங்களுக்குள் சமகாலத்தவர்கள் அல்லதான். இருப்பினும் கடந்த காலத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் இருந்த பட்டியல் இப்போதெல்லாம் “Big Data” என்னும் அளவிற்கு மீமீமீமீ பெரிது. (ஷகீலா மம்மியை இங்கே சேர்த்து விட்டமைக்காக மன்னித்தருள்க. ஒருவேளை CWCக்கு வரவில்லை எனில் அவரது எதிர்காலம் கருமையன்றோ!?)
Last edited: