அத்தியாயம் 20
வீட்டை அடைந்ததும், அவளுடைய அம்மா வாஸந்தி வாசலிலே காத்திருந்தாள், என்னடி இவ்வளவு நேரம்? ஒரு நாள் மெடிக்கல் கேம்ப் இல்லையா? மாணவிகள் எல்லோரையும் பரிசோதித்து, மருந்துகள் எல்லாம் எழுதிக் கொடுத்து, நாங்க எல்லோரும் கிளம்பி பேருந்தில் ஏறி மருத்துவமனையை அடைந்து அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வர நேரம் ஆயிடுச்சிம்மா! என்று அவள் விவரிக்கவும் வாஸந்தி கொஞ்சம் சமாதானம் அடைந்தார். அம்மா! "நான் குளிச்சிட்டு வரேன்", இரவு சாப்பாடு எடுத்து வைம்மா! என்று கூறி குளிக்க சென்ற கயல், ஏதோ ஒரு யோசனையிலேயே டவலை எடுக்க மறந்து குளிக்க சென்று விட்டாள்.
குளித்து முடித்தவுடன் தான் டவலை மறந்து விட்டதை அறிந்து குளியறையில் இருந்தவாறே அம்மாவுக்கு குரல் கொடுக்க, வாஸந்தி இதோ வரேன்! என்று கூறியவாறு அவள் அறையில் இருந்த கதவு வைத்த பெரிய அலமாரியில் இருந்த டவலை எடுத்து கயலிடம் நீட்டினாள், அவள் அதை வாங்கி கொண்டு வெளியில் வந்தது தான் தாமதம், வாஸந்தி அவளை திட்ட ஆரம்பித்து விட்டாள்.
ஏண்டி, இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கே? பொறுப்பான டாக்டர் பணியில் வேற இருக்கே! ஒரு டவல் குளிக்க போகும்போது எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஞாபகம் இருக்காதா? என்று கேட்கவும், அம்மா! டவலுக்கும் நான் மருத்துவம் படித்ததுக்கும் என்னம்மா சம்பந்தம்? என்னாலே தாங்க முடியலேம்மா! என்று அலுத்துக் கொண்டே தன் உடையை சரி செய்தவாறே கூறிய பெண்ணை பார்த்த வாஸந்தி, நீ எப்படி கல்யாணம் பண்ணி உன் புருஷனையும் உன் புகுந்த வீட்டாரையும் கவனிக்க போறேனு தெரியலே ! என் பெயரை காப்பாத்துடி! என்று கெஞ்சலாக கூற,
நீ ஏம்மா அதை பத்தி எல்லாம் கவலைபடுறே? கல்யாணம் ஆனதும் பாரு, என் புருஷன் என்னை எப்படி தாங்குவார்னு ? நான் அவரையும் அவரின் குடும்பத்தையும் எப்படி கவனிச்சிப்பேனு என்று கண் சிமிட்டி கூறியதை கேட்ட வாஸந்தி அவளுடைய அழகிலும் குறும்பிலும் மயங்கி தான் போனாள் என்றாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,நானும் உன்னை கவனிச்சிட்டு தான் வரேன்! நீ கொஞ்ச நாளாகவே சரியில்லை. எப்ப பார்த்தாலும் ஏதோ யோசனையிலேயே இருக்க. கேட்டா ஒண்ணுமில்லை, மருத்துவமனையில், வேலையில் ஒரே டென்ஷன் என்று சொல்ற, என்னதாண்டி ஆச்சு உனக்கு? என்று ஒரு தாயாக கேட்க, கயலுக்கு என்னை நம்ம அம்மா சி,ஐ.டி வேலையெல்லாம் பாக்குறாங்க! இவர்களிடத்தில் நான் ஒருவனை ஒரு தலையாய் காதலிக்கிறேன், அவனை எப்படி என்னை காதலிக்க வைப்பது என்று யோசனையாய் இருக்கு, என்று உண்மையை சொல்ல முடியுமா?
என்னம்மா நீங்க? நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். பொண்ணு வேலை செஞ்சிட்டு வந்திருக்காளே, அவளுக்கு சோர்வா இருக்காதா! பசி எடுக்காதா! சாப்பாடு கொடுக்க வேண்டாமா, என்ற எண்ணமே இருக்காதாம்மா, என்று அவள் பேச்சை வேறு திசையில் திருப்ப, வாஸந்தியும் , அடாடா ! என் செல்ல குட்டிக்கு ரொம்ப பசிக்குதா ? வாம்மா! சாப்பாடு எடுத்து வைக்கிறேன்! என்று கூறியபடி சமையல் அறை நோக்கி சென்றாள். கயலுக்கு அப்பாடா ! தப்பிச்சாச்சு சாமி! என்றிருந்தது. அவள் மூச்சை ஆழமாக உள் இழுத்து விட்டவளாக சாப்பிட சென்றாள்.
துர்கா, சுஹேல் சென்று இரு நாள் கழித்து அவன் வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்றாள். அவள் தன்னுடைய அலுவலகத்தில் 3 மணிக்கே செல்லவேண்டும் என்ற அனுமதி கேட்டு விட்டு தான் சென்றாள். மருத்துவமனையை அடைந்ததும் வரவேற்பறையில் சொல்லிவிட்டு காத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பெண்மணி வந்து அவளை அழைத்துக் கொண்டு கயல் இருக்கும் இடத்தில் விட்டு விட்டு சென்றாள். ஐந்து நிமிடத்தில் கயல் வர, அவளை பார்த்ததும் துர்கா, அசந்து தான் போனாள். அப்பா! என்ன அழகு! பளிங்கு சிலை போல் இருக்கிறாளே! இவளையெல்லாம் மருத்துவமனையில் வைத்துக் கொண்டு தான் என்னை அழகு என்று சொல்லிக் கொண்டு திரிகிறானா இவன் ? இந்த மாதிரி அழகை விடவா என் அழகு சுஹேலை கவர்ந்தது? என்று மனதில் அதிசயத்துக் கொண்டே கயலை பார்த்தாள்.
கயலும் துர்காவை பார்த்தவுடன், "என்ன ஒரு அமைதியான அழகு! அலட்டல் இல்லாத இயற்கை அழகு! துடைத்து விட்ட குத்து விளக்கு போல் இருக்கிறாளே? பார்த்தால் கை எடுத்து கும்பிடவேண்டும் போல் இருக்கிறதே! எனக்கு தெரிந்து ஸுஹேலுக்கு பெண் தோழிகள் என்று யாரும் இல்லை! இங்கு உள்ள பெண் மருத்துவர்களிடம் கூட வீணாக பேசுவதும் அரட்டை அடிப்பதும் சுஹேலுக்கு பிடிக்காது, அப்படிப்பட்டவன் இந்த பெண்ணுக்காக ஏதோ ஒரு கவரை கொடுக்க சொல்லுகின்றான் என்றால் இவள் அவனுக்கு ப்ரதேகமானவளாக இருப்பாளோ? ஒரு வேலை காதலியாக இருப்பாளோ? என்று பலவாறு சிந்தித்தவாறே அவளும் துர்காவைப் பார்த்து புன்னகை புரிந்தாள், " நீங்க தான் துர்காவா?" என சிரித்த முகத்துடன் கேட்க, துர்காவும், ஆமாம், டாக்டர் ! நான் தான் துர்கா, சுஹேலின் அத்தை வீடு, எங்கள் பக்கத்து வீடுதான், தற்போது சுஹேல் அங்கிருந்து தான் வருகிறான், நாங்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்று தன்னை அறிகுமுகபடுத்திக்கொள்ள, கயலும், நான் சுஹேலுக்கு உதவி செய்யும் மருத்துவர், என்னை நீங்கள் கயல் என்றே கூப்பிடலாம் என்று சிநேக பாவனையுடன் புன்னகை புரிந்தாள். பிறகு சுஹேல் தந்த கவரை அவளிடம் நீட்டி, இதை வாங்க தானே வந்துள்ளீர்கள்? இந்தாருங்கள், என்று கவரை கொடுத்தாள். துர்கா அதை பெற்றுக் கொண்டு நன்றி! கயல், இது CA நுழைவு தேர்வு விண்ணப்ப படிவம். நான் CA படிக்க எனக்காக வாங்கி இருக்கிறார் என்று அவள் கன்னங்கள் சிவக்க கூறியதைக் கேட்ட கயலுக்கு, இதுங்க இரண்டு பேரின் செயலை பார்த்த நண்பர்கள் போல தெரியலையே! சுஹேல் என்னவோ இவளுக்காக படிக்க விண்ணப்பம் வாங்கி கொடுக்கிறார், அதை வீட்டில் தராமல் மருத்துவமனைக்கு வந்து வாங்கிக் கொண்டு போக சொல்லறான், இவள் அதை நாணத்தோடு வாங்குகிறாள், கண்டிப்பாக ஏதோ சம்திங் சம்திங் தான் என்று மனதிற்குள் நினைத்தவளாக, நீங்க நல்லா படிச்சு CA தேர்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்! என்று கூறிய பின், சுஹேல் என்னிடம் இது என்னவென்று கூட சொல்லவில்லை. நீங்கள் வந்தால் உங்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று மட்டும் தான் கூறினான், நீங்கள் சொல்லித்தான் எனக்கு விஷயமே தெரியும் என்று சொல்லவும், துர்காவிற்கு அட கடவுளே! நாமாகத்தான் தானாகவே எல்லா விஷயத்தையும் உளறிவிட்டோமா? என்று தயங்கியவாறு அவளைப் பார்த்து புன்னகை புரிந்தாள். சரிங்க! கயல், எனக்கு நேரமாச்சு! நான் வரேன்! என்று அங்கிருந்து விடைப் பெற்றுக்கொண்டு சென்றாள்.
அவள் சென்றதும் கயல், பார்க்க சாதுவாக இருக்காரு நம்ம டாக்டர், ஆனா காதல் எல்லாம் செய்யறாரு! என் ஆளும் இருக்கே! நான் என்ன சொன்னாலும் புரியாம, என்ன செஞ்சாலும் தெரியாம! சாம்ஸ் ! நீ ரொம்ப வேஸ்ட் ! உன்னை நான் தான் டா தேத்தனும்! என்று தனக்கு முணுமுணுத்துக்கொண்டே தன் வேலையை பார்கலானாள்.