Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL பொதிகையின் மைந்தன் - TamilNovel

Status
Not open for further replies.

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 4:

வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.

"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு வேறு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஐயன் உன்னை வரச் சொன்னார்" என்றான் சிவநேசன் எரிச்சல் கலந்த குரலில்.

"இந்த இரவு நேரத்திலா?"

"ஆம்! ரகசியங்களைப் பேச, இரவு தானே சரியான நேரம்?" என்றான் சிவனேசன்.

மௌனமாக விந்தையன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போது சட்டென யாரோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிவது போலத் தோன்ற நின்றான் தித்தன்.

"என்ன தித்தா?"

"யாரோ மரத்தின் பின்னால் இருப்பது போல ஒரு ஓசை கேட்டதே?"

"ஆம்! எனக்கும் கேட்டது. இந்தப்பகுதியில் விலங்குகள் அதிகம். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வா! இருவரும் சென்று பார்ப்போம்." என்று பாதையை விட்டு சற்றே விலகி நடந்தனர்.

இருளில் நடப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சென்றனர். சற்று தொலவில் சரசரவென எதுவோ காய்ந்த சருகின் மீது நகர்ந்து போகும் சத்தம் கேட்டது. தீவட்டியை அந்தப் பக்கம் திருப்ப பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பாம்பு தான் தித்தா" என்றான் சிவநேசன்.

"உம்! இருக்கலாம்!"

"நமக்கு நேரமாகிறது தித்தா! குரு நாதரை அதிக நேரம் காக்க வைப்பது முறையல்ல. வா" என அழைத்துச் சென்றான்.

பெரிய நிலவிளக்கின் ஒளியில் கம்பீரமாக அமைதியாக அமர்ந்திருந்தார் விந்தையன்.

"ஐயனே! தித்தனை அழைத்து வந்து விட்டேன்." என்றான் சிவநேசன். இருவரும் வணங்க ஆசீர்வதித்தார் பெரியவர்.

"உன் நண்பன் வேலன் சமாதானமாகி விட்டானா தித்தா?" என்றார் ஐயன்.

"இல்லை ஐயனே! இன்னமும் கோபம் குறைந்தபாடில்லை. என் சிறு வயதுத் தோழன் அவன். இப்போது விலகியிருப்பது வேதனையளிக்கிறது."

"புரிகிறது தித்தா! கூடிய சீக்கிரமே உன் வேதனை மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது உங்கள் இருவரையும் அழைத்தது மிகவும் முக்கியமான விஷயம். ரகசியமானதும் கூட. நீங்கள் இருவரும் நான் சொல்லும் விஷயங்களை வெளியில் கசியக் கூட விடக் கூடாது. சத்தியம் செய்து தர வேண்டும்." என்றார்.

"அப்படியே செய்கிறோம் ஐயனே!" என்றான் சிவநேசன். விந்தையன் தித்தனை நோக்க அவனும் அப்படியே செய்கிறேன் என்றான். விளக்கின் மேல் இருவரும் ஆணையிட்டதும் திண்டுகள் ஒன்றிலிருந்து சிறு ஓலைச் சுவடியை எடுத்தார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் மதுரை செல்ல வேண்டும். அங்கே...கொடுங்கண்ணனாருக்கு நான் அளிக்கும் ஓலையை அளிக்க வேண்டும். "

"அவ்வளவு தானா ஐயனே? இந்தச் சிறு வேலைக்கா இத்தனை பீடிகை?" என்றான் தித்தன்.

"இது சிறு பணியே அல்ல தித்தா! வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கப் போகும் நிகழ்ச்சி இது. செண்பகப் பொழிலின் தலையெழுத்தையே மாற்றப் போகும் மகத்தான பணி அது. செய்ய முடியுமா உங்களால்?"

"இறைவன் அருளால் செய்வோம் ஐயனே!" என்றான் தித்தன்.

"சரி! இரு ஓலைகள் தருகிறேன். ஒன்றை நீங்கள் கொடுங்கண்ணனிடம் கொடுக்க வேண்டும். பிறகு அவன் உங்களை யாரிடம் அழைத்துச் செல்கிறானோ அவர்களிடம் மற்றொரு ஓலையைக் கொடுக்க வேண்டும். இறைவன் கருணையினால் நான் எதிர்பார்ப்பது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் ஐயன் விந்தன்.

"எப்போது புறப்பட வேண்டும் குருதேவா?"

"இன்னும் மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினால் போதும். கால் நடையாகச் சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் குதிரை வேண்டும். உங்களிடம் குதிரை இருக்கிறதா?"

"என்னிடம் ஒரு குதிரை தான் இருக்கிறது ஐயனே! ஆனால் சிவநேசனுக்கு ...?" என்று இழுத்தான் தித்தன்.

"கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் ஒரே குதிரையில் பயணியுங்கள். சிவநேசா உன்னால் குதிரையில் பயணிக்க முடியும் அல்லவா?"

"குதிரையேற்றமே அறிவேன் குருதேவா! மதுரை இங்கிருந்து இரு நாட்கள் பயணம், அவ்வளவு தானே? போய் விடுவோம்."

"அது மட்டுமல்ல! மிக மிக முக்கியமானது, நீங்கள் வழியில் வரும் எந்த ஊரின் வழியாகவும் செல்ல வேண்டாம். காட்டு வழியே சென்றால் போதும். உணவு கையில் எடுத்துப் போய் விடுங்கள். ஆங்காங்கே ஆறுகளில் ஊற்று தோண்டி நீர் அருந்துங்கள். நீங்கள் இருவரும் ஓலை கொண்டு செல்கிறீர்கள் என தெரியத் தேவையில்லை. மேலும் சந்திக்கப் போகும் நபரிடமிருந்து பதில் ஓலை வாங்கி வர வேண்டும். புரிகிறதா?"

"புரிந்தது ஐயனே"

"சிவநேசா, தித்தா இது எளிமையான பணியல்ல. நீங்கள் காட்டு வழியில் செல்லும் போது சதிகாரர்கள் உங்களை கொலை செய்யக் கூட முயற்சி செய்யலாம். எப்படியாவது ஓலையை மதுரையில் இருக்கும் கொடுங்கண்ணனிடம் சென்று சேர்த்து விடுங்கள். நமது நாட்டுக்கு இப்போது அது மிகவும் முக்கியம்." என்றார் விந்தையன்.

"சரி! குருதேவா! வழியில் எனக்கோ, தித்தனுக்கோ ஆபத்து ஏற்பட்டால் யாராவது ஒருவராவது தப்பித்து மதுரையில் ஓலையை சேர்த்து விடுகிறோம்."

"அந்த அளவுக்கு நிலை மோசமாகாது என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்றார்.

எழுந்து நின்றனர் இளைஞர்கள் இருவரும். தயங்கினான் தித்தன்.

"என்ன தித்தா?"

"ஐயனே! ஓலைகள்..."

"நீங்கள் கிளம்ப இன்னமும் மூன்று தினங்கள் இருக்கிண்றதே? கிளம்பும் போது தருகிறேன். அது வரையில் என்னிடமே இருக்கட்டும்" என்றார். மீண்டும் பெரியவரை வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர். இப்போது நிலவு வானில் வந்து விட்டது. முழு நிலவு அல்ல என்றாலும் ஓரளவு வெளிச்சம் இருக்கவே செய்தது. அழகான அந்த வனம் நிலவொளியில் குளித்து இன்னமும் அழகாக காட்சியளித்தது. நண்பர்கள் இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இரவு விலங்குகளின் ஒலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அதுவே பெரிய ஓசையாகக் கேட்டது இருவருக்கும். எதை எதையோ சிந்தித்தபடி மௌனமான நடந்தான் தித்தன். ஆனால் அவனது எச்சரிக்கை உணர்வு அவனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்கள் நடந்து வந்த ஒற்றையடிப்பாதையை ஒட்டி சில கஜங்கள் தொலைவில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதன் பின்னால் யாரோ நின்று கொண்டு இவர்களையே பார்ப்பது போண்ற உள்ளுணர்வு சொல்ல தயங்கினான். ஆனால் சிவநேசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தான்.

நடக்க நடக்க அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இப்போது தித்தனின் சிந்தனை எல்லாம் தற்காப்பு பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவன் படித்த போர்ப்பயிற்சிகள் நிச்சயம் யாரோ அந்த மரத்தின் பின்னாலிருந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என எச்சரித்தது. ஆனால் அந்தத் தாக்குர்தல் திடீரன நிகழும் நேரடித்தாக்குதலா? இல்லை கோழைகள் போல முதுகுக்குப் பின்னால் செய்யும் தாக்குதலா? என அவனால் கணிக்க முடியவில்லை. சிவநேசன் எதையோ பேசிக்கொண்டே வந்தான். அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும் கண்களும் காதுகளும் படு கூர்மையாக இயங்கின தித்தனிக்கு.

அந்த மரத்த்துக்கும் அவர்களுக்கும் இடயே ஐம்பதடி தான் இடைவெளி. அப்போது தித்தனின் கூரிய செவிக்கு யாரோ இடுப்பிலிருந்து வாளோ, கத்தியோ உருவும் சத்தம் கேட்டது. சற்றே நிதானித்து கணக்குப் போட்டான். ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் ஆனது அந்த ஆயுதத்தை உருவ. அப்படியானால் அது சிறு கத்தியாத்தான் இருக்க வேண்டும். கூர்மையானதாகத்தான் இருக்க வேண்டும். விஷம் கூடத் தோய்க்கப்பட்டிருக்கலாம். சிறு கத்தி என்பதால் நிச்சயம் நெஞ்சுக்குத்தான் குறி வைப்பார்கள். மனமும் உடலும் முழுமையாகத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில் பளபளவென ஒளி வீசியபடி ஒரு சூரிக்கத்தி முழு வேகத்தோடு சுழன்று வந்தது. தன்னை நோக்கியத்தான் தாக்குதல் என்ற நினைப்பிலேயே இருந்த தித்தனுக்கு அந்தக் கத்தி அவனை விடுத்து சிவநேசனைக் குறி பார்த்து வந்ததை அவதானிக்க சில நொடிகள் பிடித்தன.

அதற்குள் கத்தியைப் பார்த்து விட்ட சிவநேசன் ஓவென அலறினான். ஆனால் மிகவும் விரைந்து செயல்பட்டு அவனது காலை இடறினான் தித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சிவநேசன் தடாரென்ற சத்தத்தோடு விழுந்தான். கத்தி அவனைத் தாண்டிச் சென்று மற்றொரு மரத்தில் ஆழப் பதிந்தது அந்தக் கத்தி. அது சிவநேசன் நெஞ்சில் பதிந்திருந்தால் அடுத்த கணமே அவன் உயிர் போயிருக்கும். சிவநேசன் தப்பித்து விட்டான் என்றதும் கத்தியை எறிந்த ஆளைப் பிடிக்க வேண்டும் என மரத்தை நோக்கிப் பாய்ந்தான் தித்தன். அந்த இருளிலும் யாரோ சரசரவென ஓடும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த கல்லை எடுத்து அவனது குதிகாலைக் குறி வைத்து எறிந்தான். மிகச் சரியாகச் சென்று தாக்கியது அது. ஆனாலும் ஓடியவன் மிகவும் நன்றாகப் பயிற்சி எடுத்திருப்பவன் போல. அவனது ஓட்டம் தள்ளாடினாலும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் தொடர்ந்து ஓடினான்.

"தித்தா! என்னால் நடக்கவே முடியவில்லை. என்னைக் காப்பாற்று" என்று தீனமாக அலறினான் சிவநேசன்.

"பாவம்! ஆசிரமத்தில் வேலைகள் செய்தவன். இது போன்ற தாக்குதலுக்கு பழக்கமில்லாதவன். ஆனால் நன்றாகத்தான் இருக்கிறான். கத்தி எறிந்த ஆளைப் பிடித்தால் பல விஷயங்கள் வெளியாகும் என்ன செய்ய? என்று தத்தளித்தான். இறுதியில் அவனது இரக்கமே வெல்ல சிவநேசனை நோக்கிப் போனான். பயத்தில் முகம் வெளுத்துக் கிடந்தது அவனுக்கு.

"தித்தா! எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாய் அப்பா! இந்த நன்றி எப்படிச் செலுத்துவேன்?" என்றான் உணர்ச்சி மிக்க குரலில்.

"இது என் கடமை தான் சிவநேசா! கத்தியை எறிந்தவன் ஓடி விட்டான். என்னால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. நீ எப்படி இருக்கிறாய்?"

"இந்த இரவு நேரத்தில், இந்தக் காட்டில் சாதாரணமாக ஓடுகிறான் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்."

"ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனது கத்தி இருக்கிறது. அதை வைத்து ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா பார்க்கலாம். உன்னால் நடக்க முடியுமா? இரவு நேரத்தில் நாம் இங்கு ஆயுதமின்றி இருப்பது அவ்வளவு நல்லதல்ல." என்றான் தித்தன்.

சிவநேசன் எழ முயன்றான். ஆனால் காலிலம் வேதனையை முகம் காட்டியது. அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி மெல்ல நடக்க வைத்து அழைத்துச் சென்றான்.

"அப்பப்பா! என்ன பயங்கரம்? என்னை எதற்காகக் கொல்ல முயன்றார்கள்? எனக்கு யாரும் பகையே இல்லையே?" என்றான் சிவநேசன் வேதனை மிக்கக் குரலில்.

"உனக்குப் பகையில்லாமல் இருக்கலாம் சிவநேசா! ஆனால் நாம் செய்யப் போகும் பணிக்கு எதிரிகள் இருக்கலாமே? உன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் நமது அத்தனை திட்டங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறதே? ஆனால் நமக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே? அது தான் எனக்கு ஆத்திரமாக வருகிறது." என்றான் தித்தன்.

"அடேயப்பா! இந்தத் தாக்குதலின் பின்னால் இத்த்னனை அரசியல் இருக்கிறதா? ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள். வேறு யார்?"

"ஒற்றர்கள் தான். ஆனால் யாருடைய ஒற்றார்கள்? சோழரா? சேரரா? இல்லை வேறு ஏதேனும் குறுநில மன்னரா? இப்படி நிறையக் கேள்வி இருக்கிறதே? எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் ஒருவர் மீது பழி சுமத்த முடியாதே?" என்றான் தித்தன்.

"உனக்கு போர்க்கலைகளோடு நன்றாக அரசியலும் தெரிகிறது. அதனால் தான் குநாதர் உன்னைத் தேர்ந்தெடுத்தார் போல. ஆனால் என்னால் உனக்கு உதவி கிடைக்காது போலத் தோன்றுகிறது. மேலும் நான் தொந்தரவு ஆகிவிடுவேனோ எனத்தான் அஞ்சுகிறேன்." என்றான் சிவநேசன் மெல்லிய குரலில்.

"இல்லை நண்பா! அப்படி இல்லை. உனக்கு சிறிது கூடப் போர்க்கலைகளில் பழக்கமில்லையா?"

"சுத்தமாக இல்லை! நான் கற்றதெல்லாம் மருத்துவம், மூலிகைகள் நோய்களை எப்படிக் குணப்படுத்துவது அவ்வளவு தான். "

பேசிக்கொண்டே இருவரும் ஊருக்குள் வந்து விட்டனர்.

"ஊர் வந்து விட்டது சிவநேசா! உன் வீடு எங்கே என்று சொல்! முதலில் கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்கிறாயா?" என்றான் தித்தன்.

"நான் எப்போதும் ஆசிரமத்திலேயே வசிப்பவன் தான் தித்தா! இது போன்ற சில சமயங்களில் எனது சிறிய தந்தையார் வீடு வாய்க்கால் கரைத்தெருவில் இருக்கிறது. அங்கே தங்கிக்கொள்வேன். அவரும் வைத்தியர் தான். ஆகையால் என்னை அங்கே கொண்டு விடு போதும்" என்றான்.

சிவநேசன் சொன்ன வாய்க்கால் கரைத்தெரு சற்றே தொலைவில் உள்ளது. அதை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் வேலன் கையில் ஈட்டியோடு எதிரே வந்து கொண்டிருந்தான். தித்தனைக் கண்டதும் விலகிச் சென்றான். ஆனால் அவனது நடை சற்றே வித்தியாசமாக இருக்கக் கூர்ந்து நோக்கினான் தித்தன். இடது காலை சற்றே சாய்த்து நடந்தான்.

"நான் எறிந்த கல் ஓடியவனின் இடக்காலைத்தானே பதம் பார்த்தது? இவனுக்கும் இடக்காலில் அடி? அப்படியானால்....?" நினைக்கவே மனம் வேதனைப் பட்டது. தித்தன் கவனிப்பதை பார்த்து விட்ட வேலன் சாய்க்காமல் நடந்தான். ஆனாலும் வலி அதிகம் என்பதை அவனது முகம் காட்டியது. வேலனது கால் வலியை விட தித்தனுக்கு மனம் மிக அதிகமாக வலித்தது.

"வேலா! பொறாமை குணத்தால் நீ என்ன செய்து விட்டாய்? போகக் கூடாத பாதையில் போகிறாயா? சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து விட்டாயா? அப்ப்டியென்ன கோபம் உனக்கு? பகைவர்களோடு சேர்ந்தால் உனக்கு நல்லதா? மனம் மாறி நீ மீண்டும் வர விரும்பினால் அவர்கள் விடுவார்களா? இப்படி ஒரு புதை குழியில் போய்ச் சிக்கிக் கொண்டாயே?" என வேதனையோடு எண்ணினான். கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

"என்ன தித்தா? அப்படியே நின்று விட்டாய்? அதோ தெரிகிறதே அது தான் என் சிற்றப்பனின் வீடு. வா போகலாம்" என்றான் சிவநேசன்.

தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு மெல்ல அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்த்தான். அங்கு இருந்த சிறிய தந்தை அவரது மகன் என அனைவரும் மனமாற வரவேற்றனர். சிவநேசன் நடந்ததை சற்றே மிகைப்படுத்திக் கூற அவர்கள் தித்தனுக்கு மிகவும் நன்றி செலுத்தினார்கள். அவனது வீரத்தையும் சமயோஜித அறிவையும் மிகவும் புகழ்ந்தார்கள். தித்தனுக்கு சங்கடமாக ஆகி விட்டது.

"ஐயா! நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் பெரியவன் அல்ல. பாவம் சிவநேசன். வலியில் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். நான் சென்று வருகிறேன். இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறி விடை பெற்றான். அவர்கள் ஏதாவது பானம் அருந்தியே தீர வேண்டும் என்று மோர் கொடுக்க அதை அருந்தி விட்டுக் கிளம்பினான். தன் வீட்டுக்குச் சென்று ஈட்டி எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். போகும் வழியில் மீண்டும் வேலனைக் கண்டான்.

"வேலா! கொஞ்சம் நில்லேன்" என்றான் கெஞ்சும் குரலில்.

"என்னை ஏனப்பா நிற்கச் சொல்கிறாய்? உன் புது நண்பன் உடன் வரவில்லையா? அவனோடு பேசுவது தானே? நான் தான் நம்பிக்கைக்கு உரியவன் இல்லையே?" என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டான் வேலன். மனதில் குழப்பமும், வேதனையும் போட்டி போட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தித்தன்.
 

Ram.R

New member
Messages
3
Reaction score
0
Points
1
அத்தியாயம் 2:

தித்தனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை. மனைவி கல்யாணி சோர்ந்து காணப்பட்டாள்.

"அத்தான்! எப்படி இருக்கிறான் நம் மகன்?"

"அவனுக்கென்ன கல்யாணி! அழகும் ஆரோக்கியமுமாக இருக்கிறான். நீ தான் சோர்ந்து காணப்படுகிறாய்."

"ஆம் அத்தான்! குழந்தை பிரண்டு விட்டதால் சற்றே பிரச்சனை ஏற்பட்டது. இறைவன் அருளால் தாதி வெள்ளையம்மாள் வந்து எப்படியோ என்னையும் காப்பாற்றிக் குழந்தையையும் காப்பாற்றி விட்டாள்."

"மிகவும் நன்று! அவளுக்கு ஏதேனும் பரிசு அளிக்கிறேன்."

கல்யாணியின் தாய் வந்தாள். மருமகனும் மகளும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு சற்றே ஒதுங்கி நின்றாள்.

"என்னிடம் என்ன வெட்கம் அத்தை? நான் உங்கள் மகன் போல அல்லவா?" என்றான் தித்தன்.

"உண்மை தான்! ஆனாலும் சம்பிரதாயம் என்ற ஒன்று இருகிறதல்லவா?"

"சரி உங்கள் விருப்பம்!"

"வந்து..வந்து...இப்போது கல்யாணியை குளிக்க வைத்து குழந்தையையும் குளிக்க வைக்க வேன்டும். ஆகையால் நீங்கள்....தவறாக எண்ணக் கூடாது"

"அதற்கென்ன? நான் வெளியில் இருக்கிறேன். இல்லையென்றால் மாலை வந்து பார்க்கிறேன். அருகில் தானே எங்கள் வீடும். கல்யாணி எப்போது வீட்டுக்கு வருவாள்?" என்றான் ஆர்வமாக.

" இப்போது தான் பிரசவம் ஆகியிருக்கிறது. உடல் நலம் தேற வேண்டிய நேரம் இது. பச்சை உடம்பு! எப்படியும் நான்கு மாதங்களாவது ஆகும். உங்களுக்குக் குழந்தையைப் பார்க்க வேண்டுமானால் எந்நேரமும் வரலாம். ஆனால்..."

"புரிகிறது அத்தை! கல்யாணி! நான் சென்று வரவா கண்ணே!" என விடை பெற்று வெளியில் வந்தான். தெருவில் காற்று அடித்து புழுதியைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அந்தப் புழுதியில் எதிரே யாரோ நடந்து வந்தார்கள்.

"ஐயா! இங்கே கல்யாணி என்பவரின் வீடு எங்கே இருக்கிறது?" என்றான் அந்தத் தலைப்பாகை அணிந்த ஆள்.

"இது தான் கல்யாணியின் வீடு. அவள் என் மனைவி தான். நீங்கள் யார் ஐயா?" என்றான் தித்தன்.

"மிகவும் நல்லதாகப் போய் விட்டது. நான் வந்ததே உங்களைத் தேடித்தான்." என்றான் அந்த ஆள்.

"என்னையா? என்னைத் தேடி வர வேண்டுமானால் மேட்டுத்தெருவில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு அல்லவா வர வேண்டும்? இங்கு ஏன் வந்தீர்?"

"ஐயா! உங்களைத் தேடி நீங்கள் சொன்ன மேட்டுத்தெருவுக்குத்தான் போனேன். நீங்கள் உங்கள் குழந்தையைக் காண இங்கே வந்திருக்கிறீர்கள் எனச் சொன்னதால் வந்தேன்."

"சரி! யார் நீங்கள்? என்னைத் தேடி வந்த காரணம் என்ன?"

"ஐயா! என் பெயர் சிவநேசன். என் குரு விந்தையன் தான் என்னை அனுப்பி உங்களை அழைத்து வரச் சொன்னார்"

"என்ன? விந்தையனா? அவருக்கு எப்படி என்னைத் தெரியும்?"

"ஐயா! என் குரு பெரிய ஞானி! முக்காலமும் உணர்ந்தவர். அவருக்கு எப்படி உங்களைத் தெரியும்? உங்களை ஏன் அழைத்து வரச் சொன்னார் போன்ற விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. தயவு செய்து வருகிறீர்களா?"

தயங்கினான் தித்தன்.

"இவர் யாரோ என்னவோ? இவர் சொல்லும் விந்தையன் எப்படிப்பட்டவரோ? இது ஏன் கொள்ளையர்களின் சதியாக இருக்கக் கூடாது? தனியாக அழைத்துப் போய் ஏதாவது சதி வேலையில் ஈடுபடும் எண்ணம் இருந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பது நல்லதல்லவா?" என யோசித்தான்.

"என்ன யோசிக்கிறீர்கள் ஐயா? கிளம்புங்கள்"

"வருவதில் தயக்கமில்லை. ஆனால் என் நண்பன் வேலனும் வரலாமா?"

"தாராளமாக வரலாம்."

"ஐயா! ஏற்கனவே எனக்கொரு பணி இருக்கிறது. அது விந்தன் என்பவரைத் தேடி அலைவது. அதனைச் செய்யச் சொல்லி குள்ளமான ஒரு நபர் கூறினார். அவரைத் தேடி சந்தித்து விட்டு பிறகு வருகிறோமே?" என்றான்.

கடகடவெனச் சிரித்தான் சிவநேசன்.

"உங்களை என்னவென்று சொல்ல? தேடிய மூலிகை காலில் தென்பட்டது என்பார்களே? அது போல நீங்கள் தேடும் நபர் வேறு யாரும் அல்ல. என் குருவே தான். நீங்கள் சொன்னது அவரது இயற்பெயர். மரியாதை கருதி ஐயன் சேர்த்தோம். இப்போது அவர் அனைவருக்கும் விந்தையன் ஆகி விட்டார்" என்றான்.

சொல்லத்தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சி தோன்றியது தித்தனுக்கு. நாமாகத் தேட வேண்டிய அவசியமே இன்றி அவரே என்னை அழைக்கிறார் என்றால் நிச்சயம் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராகத்தான் இருக்க வேண்டும். வேலனையும் அழைத்துச் சென்று பார்த்தால் என்ன?" என எண்ணினான்.

"போகலாமா?" என்றான் சிவநேசன்.

"போகும் வழியில் என் நண்பனையும் அழைத்துச் செல்லலம்" எனக் கூறி நடந்தான் தித்தன். முன்னால் சென்றான் சிவநேசன். வேலனும் இணைந்து கொள்ள மூவரும் கடுமையான அந்த வெயிலையும் அதனைத் தணிக்கும் குளிர் காற்றையும் அனுபவித்தபடி நடந்தனர். கிட்டத்தட்ட ஊரில் எல்லை வந்து விட்டது.

"எங்கே உங்கள் குருவின் வீடு?" என்றான் வேலன்.

"குருவின் வீடு எனச் சொல்ல முடியாது. ஆசிரமம் என்று வேண்டுமானால் சொல்லலாம். மக்களின் தொந்தரவு அதிகம் இருக்கக் கூடாது என ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்கிறார் குரு நாதர்" என்றான் சிவநேசன்.

சற்று தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்தார்கள். சிற்றாறு ஐந்து கிளைகளாப் பிரிந்து விழும் அழகான இடம். அதற்கு முன்னே பக்கவாட்டில் கதவு ஒன்று இருந்தது. அதனைத் திறந்து கொண்டு சென்றான் சிவநேசன். உள்ளே மிகவும் குளுமையாக மரங்கள் நிறைந்து காணப்பட்டது. ஆங்காங்கே சிறு ஓலை வேயப்பட்ட குடில்கள். அகவும் மயில். குயிலோசை என அந்த இடமே அழகின் இலக்கணமாக விளங்கியது. மூன்று படிகள் ஏறி கதவே இல்லாத அந்த வட்டமான கூடத்தின் ஓரத்தில் நின்றான் சிவநேசன்.

"ஐயா! நீங்கள் சொன்னது போல தித்தனை அழைத்து வந்திருக்கிறேன். உடன் அவரது நண்பன் வேலனும் இருக்கிறார்" என்றான் சிவநேசன் மரியாதையாக.

"சரி! அவர்களை அழைத்து வா" என்ற கம்பீரமான ஆனால் மென்மையான குரல் கேட்டது. கண் சாடை காட்ட தித்தனும், வேலனும் உள்ளே சென்றார்கள். அந்த வட்டமான கூடத்தின் நடுவே சற்றே உயரமாகப் போடப்பட்டிருந்த பலகையில் அமர்ந்திருந்தார் விந்தையன். தாடி, மீசை புருவம் என எல்லாமே நரைத்திருந்தது. ஆனாலும் முகத்திலோ கரங்களிலோ சுருக்கமே இல்லை. முதுகு கூட வளையாமல் நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் வணங்கினார்கள் இரு நண்பர்களும்.

"நலமே விளைக" என வாழ்த்தினார் விந்தையன். அமரச் சொல்லி கை காட்டினார். அவருக்கு எதிரே போடப்பட்டிருந்த இரு பலகைகளில் அமர்ந்து கொண்டனர்.

"உங்களோடு பேசச் சொல்லி எனக்கு கனவு மூலம் குரு உத்தரவு வந்தது. நீங்கள் யார்? உங்களது பணி என்ன? எல்லாம் விசாரித்து விட்டேன். ஆனால் என்னை எதற்கு நீங்கள் தெடுகிறீர்கள் எனப் புரியவில்லை. குருவின் கட்டளை என்பதால் உங்களை அழைத்து வரச் செய்தேன்." என்றார் விந்தையன்.

"ஐயா! எங்களுக்கு உங்களையே இப்போது தான் தெரியும். உங்களது குருவைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது. அதில் குள்ளமான ஒரு நபர் உங்களை வந்து பார்க்கும்படி சொன்னார். நாங்களே உங்களை எங்கே தேடுவது எனத் தயங்கிய போது நீங்களே அழைத்து விட்டீர்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"என்ன? என்ன? என்னைப் பார்க்க வரச் சொல்லி குள்ளமான ஒருவர் கூறினாரா? அதுவும் முழு நிலவு நாளிலா? சற்றே விவரமாகச் சொல்லுங்களேன்" என்றார் விந்தையன். அவரது குரலில் பரபரப்பு இருந்தது.

"ஐயா! என் பெயர் தித்தன். இரவு நேரக் காவலன்" என ஆரம்பித்து எல்லாவற்றையும் கூறினான் தித்தன். இடை இடையே வேலனும் சில விட்டுப் போன விவரங்களைக் கூறி வந்தான். அவர்கள் பேசப் பேச விந்தையன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். கண்களைத் துடைத்துக்கொண்டார். தித்தன் பேசி முடித்ததும் எழுந்து வந்தார். பெரியவர் எழுந்ததைத் தொடர்ந்து தித்தனும் வேலனும் எழுந்து நின்றனர். இருவரையும் அணைத்துக்கொண்டார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் என்ன பேறு பெற்றீர்களோ தெரியவில்லை! குருவின் தரிசனம் கிடைத்திருக்கிறதே" என்றார்.

சிவநேசன் அவரை ஆசுவாசப்படுத்தி குடிக்க நீர் கொடுத்தான்.

"ஐயா! எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் சந்தித்ததவர் தான் உங்கள் குருவா?" என்றான் தித்தன்.

"இளைஞர்களே! அவர் சாதாரண மனிதரில்லை. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த என் 13ஆம் தலைமுறை குரு, தமிழ் காத்த அண்ணல் அகத்தியர் தான் அவர்." என்றார். பேசப் பேசவே குரல் கம்மியது.

விந்தையனின் பேச்சின் தாக்கம் தெரிய அப்படியே அமர்ந்திருந்தார்கள் இளைஞர்கள்.

"நாம் பார்த்தது அகத்திய முனிவரா? அவரா அத்தனை எளிமையாக இருந்தார்? என்ன அன்பான பேச்சு? எவ்வளவு அக்கறை நிறைந்த வார்த்தைகள்? என் மகன் பிறந்த நேரம் எனக்கு மிகப்பெரிய முனிவரின் தரிசனம் கிடத்தது" என எண்ணிக்கொண்டிருந்தான் தித்தன்.

"தித்தா! நீ உண்மையிலேயே கொடுத்து வைத்தவன். எனக்குக் கூட நிஜத்தில் தரிசனம் தராத குருநாதர் உங்களுக்கு தரிசனம் தந்தது மட்டுமல்ல என்னை வந்து காணவும் அறிவுறுத்தி இருக்கிறார் என்றால், உங்களது நல்லூழ் எவ்வளவோ" என்றார்.

சற்று நேரம் அமைதி நிலவியது.

"தித்தா! நீ ஏதாவது கேள்வி எழுப்பினாயா குருவிடம்?" என்றார் விந்தையன்.

"ஆம் ஐயனே! செண்பகப் பொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனக் கவலைப்பட்டேன். அதோடு பெண்களும் தெருவில் நடமாட வேண்டும், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்ய வேண்டும் என சொன்னேன். அப்போது தான் குரு நாதர் உங்களை வந்து காணும் படி கட்டளையிட்டார்." என்றான்.

தாடியை நீவிக்கொண்டு யோசித்தார் விந்தையன்.

"அப்படியா? மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?"

"ஐயா! மதுரையில் எப்போது பாண்டியர்கள் மீண்டும் நிலையான ஆட்சி செய்வார்கள் எனவும் கேட்டோம்" என்றான் வேலன்.

பளிச்சென மலர்ந்தது விந்தையனின் முகம்.

"அப்படிச் சொல்லுங்கள்! ஒரு வாரத்திற்கு முன்பு தான் மதுரை பட்டத்தரசி அங்கையற்கண்ணி தேவியாருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகச் செய்தி வந்தது. அதன் சாதகத்தை எப்போது கணிப்பது என யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் குருவின் அருள்வாக்கு வந்தது" என்றார்.

"ஐயனே! மதுரை எங்கோ இருக்கிறது. அங்கு குழந்தை பிறந்த செய்தி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றான் வேலன்.

மெல்ல நகைத்தார் விந்தையன்.

"அங்கே என் மாணவர்களில் ஒருவனான கொடுங்கண்ணன் இருக்கிறான். அவன் அரசனுக்கு முக்கியமான அமைச்சன். சாதகம் கணிக்க அவன் தான் செய்தி அனுப்பி வைத்தான்." என்றார்.

தித்தனும் வேலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

எங்கோ தென்னகத்தின் ஓரத்தில் இருக்கும் செண்பகப் பொழிலில் இருந்து கொண்டு மதுரை அரசர் வரை ஆள் வைத்திருக்கிறாரே இந்த மகான்" என எண்ணிக் கொண்டனர் இருவரும். ஆனால் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.

"சிவநேசா! அந்தச் சுவடிக்கட்டுகளை எடுத்து வா" என்றார் அந்த மகான்.

சிவநேசன் அரையடி உயரம் இருந்த இரு சுவடிக்கட்டுகளை எடுத்து வந்து முன்னால் பணிவோடு வைத்தான்.

"தித்தா! வேலா! இதில் இரு சுவடிக்கட்டுக்கள் இருக்கின்றன. பொதுவாக அரச குலத்தில் குழந்தை பிறக்கும் போது பொதுப்பலன் பார்க்க ஒரு கட்டும், அந்தக் குழந்தையின் எதிர்காலம் குறித்துப் பார்க்க இன்னொரு கட்டும் பயன் படும். இப்போது உங்கள் முதல் கேள்விக்கு வருகிறேன். தித்தா நீ சொல், குருவிடம் என்ன கேட்டாய்?"

"மதுரையில் மீண்டும் எப்போது நிலையான ஆட்சி அமையும் எனக் கேட்டேன் ஐயனே! தவறானால் மன்னியுங்கள்" என்றான் தித்தன் பணிவாக.

"இல்லை இல்லை! தவறொன்றுமில்லையப்பா! இந்த பிரபஞ்சத்தில் எந்த விஷயமுமே காரணமின்றி நடப்பதில்லை. அனைத்துமே கண்ணுக்குத் தெரியாத நூலால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் கவலை கொள்ளத் தேவையில்லை. சரி குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து பொதுப்பலன் பார்க்கிறேன்" என்றார்.

முதலில் இருந்த சுவடிக்கடை எடுத்து பயபக்தியோடு பிரித்து ஒவ்வொரு ஏடாகத் தள்ளிக்கொண்டே வந்தார். சில ஏடுகளே மிஞ்சியிருந்த நிலையில் ஒரு ஏட்டைக் கையில் எடுத்துப் படித்தார். படிக்கப் படிக்க அவர் முகம் சுருங்கியது.

"என்ன இது? பலன் இப்படி வந்திருக்கிறதே?" என்றார். தாடியை வருடியபடி எதிரில் அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் ஏறிட்டார்.

"ஐயனே! என்ன பலன்? நாங்களும் தெரிந்து கொள்ளலாமா?" என்றான் வேலன் பணிவாக.

தலையை ஆட்டிவயர் மேலும் ஒரு முறை கையிலிருந்த ஏட்டைப் படித்தார். மீண்டும் ஒரு முறை பிறந்த நாழிகையையும் ஏட்டில் இருந்த கணக்கையும் ஒப்பு நோக்கினார். முகம் ஏமாற்றத்தைத்தான் பிரதிபலித்தது.

"நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தேன். அதுவும் குரு அகத்திய மாமுனியே உங்களுக்குக் காட்சியளித்ததால் நிச்சயம் நல்ல பலன் தான் இருக்கும் என இறுமாந்தேன். என் இறுமாப்புக்கு சரியான அடி." என்றார்.

"ஐயா! ஏடு சொல்லும் செய்தி என்ன?"

"ஹூம்" என நீண்ட பெருமூச்சொன்றை உதிர்த்து விட்டுப் பேசினார்.

"என்னவென்று சொல்வது? இளவசரன் சடையவர்மன் பிறந்த நேரத்தைக் கொண்டு பொதுப்பலன் பார்த்தால் நல்ல பலனே இல்லையப்பா. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் மதுரையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரலாம். அதுவும் நிரந்தரமாக என்றல்லவா பலன் இருக்கிறது?" என்றார் கவலையுடன்.

கேட்டுக்கொண்டிருந்த தித்தனுக்கு தலையில் அடித்தது போல இருந்தது.

அப்படியானால்..மீண்டும் மதுரையில் பாண்டியர் ஆட்சி மலரவே மலராதா? செண்பகப் பொழிலில் மட்டுமல்லாமல் நெல்லையிலும், இன்னும் பிற இடங்களிலும் மக்கள் அச்சமின்றி வாழவே முடியாதா? என எண்ணி ஏங்கினான். ஏமாற்றத்தில் ஆழ்ந்திருந்த அவன் மனதில் சிறு நம்பிக்கை ஒளி தோன்றியது.

"ஐயா! நான் குரு நாதரிடம் இரு கேள்விகள் கேட்டேன். அதில் முதல் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டாவது கேள்விக்கான பதில் கிடைக்க வில்லையே? ஒரு வேளை அந்தக் கேள்விக்கு நற்பலன் இருக்கலாம் அல்லவா?" என்றான் சற்றே உற்சாகமாக. அப்போது செம்பொத்து எனப்படும் பறவை அந்த ஆசிரமத்தில் மாமரத்தில் வந்து அமர்ந்தது. அதனைக் கண்ட விந்தையன் மகிழ்ச்சி பொங்கக் கூவினார்.

"நீ சொல்வது சரி தான் தித்தா! உன் இரண்டாவது கேள்வி என்ன? சீக்கிரம் சொல்" என்றார்.

"செண்பகப் பொழில் எப்போது உலகமே போற்றும் நகரமாக மாறும்? என்பதே என் இரண்டாவது கேள்வி. இதற்குக் கூட முனிவர் பிரான் கூடிய விரைவில் அது நடக்கும், அதுவும் செண்பகப் பொழிலின் பெயரே மாறி வரலாற்றில் நிலையாக இருக்கும் என்றாரே?" என்றான்.

மகிழ்ச்சியே உருவாக இரண்டாவது சுவடிக்கட்டிலிருந்து சுவடிகளைத் தேடினார் விந்தையன். பாதியில் அவர் தேடிய சுவடி அகப்பட வாசித்தார். வாசிக்க வாசிக்க அவரது முகம் மகிழ்ச்சியால் பூரித்தது. அவரையே பார்த்தபடி இரு நண்பர்களும் காத்திருந்தனர்.
Very interesting
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
பொதிகையின் மைந்தன்....

அத்தியாயம் 4:

வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.

"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு வேறு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஐயன் உன்னை வரச் சொன்னார்" என்றான் சிவநேசன் எரிச்சல் கலந்த குரலில்.

"இந்த இரவு நேரத்திலா?"

"ஆம்! ரகசியங்களைப் பேச, இரவு தானே சரியான நேரம்?" என்றான் சிவனேசன்.

மௌனமாக விந்தையன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போது சட்டென யாரோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிவது போலத் தோன்ற நின்றான் தித்தன்.

"என்ன தித்தா?"

"யாரோ மரத்தின் பின்னால் போவது போல ஒரு ஓசை கேட்டதே?"

"ஆம்! எனக்கும் கேட்டது. இந்தப்பகுதியில் விலங்குகள் அதிகம். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வா! இருவரும் சென்று பார்ப்போம்." என்று பாதையை விட்டு சற்றே விலகி நடந்தனர்.

இருளில் நடப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சென்றனர். சற்று தொலவில் சரசரவென எதுவோ காய்ந்த சருகின் மீது நகர்ந்து போகும் சத்தம் கேட்டது. தீவட்டியை அந்தப் பக்கம் திருப்ப பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பாம்பு தான் தித்தா" என்றான் சிவநேசன்.

"உம்! இருக்கலாம்!"

"நமக்கு நேரமாகிறது தித்தா! குரு நாதரை அதிக நேரம் காக்க வைப்பது முறையல்ல. வா" என அழைத்துச் சென்றான்.

பெரிய நிலவிளக்கின் ஒளியில் கம்பீரமாக அமைதியாக அமர்ந்திருந்தார் விந்தையன்.

"ஐயனே! தித்தனை அழைத்து வந்து விட்டேன்." என்றான் சிவநேசன். இருவரும் வணங்க ஆசீர்வதித்தார் பெரியவர்.

"உன் நண்பன் வேலன் சமாதானமாகி விட்டானா தித்தா?" என்றார் ஐயன்.

"இல்லை ஐயனே! இன்னமும் கோபம் குறைந்தபாடில்லை. என் சிறு வயதுத் தோழன் அவன். இப்போது விலகியிருப்பது வேதனையளிக்கிறது."

"புரிகிறது தித்தா! கூடிய சீக்கிரமே உன் வேதனை மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது உங்கள் இருவரையும் அழைத்தது மிகவும் முக்கியமான விஷயம். ரகசியமானதும் கூட. நீங்கள் இருவரும் நான் சொல்லும் விஷயங்களை வெளியில் கசியக் கூட விடக் கூடாது. சத்தியம் செய்து தர வேண்டும்." என்றார்.

"அப்படியே செய்கிறோம் ஐயனே!" என்றான் சிவநேசன். விந்தையன் தித்தனை நோக்க அவனும் அப்படியே செய்கிறேன் என்றான். விளக்கின் மேல் இருவரும் ஆணையிட்டதும் திண்டுகள் ஒன்றிலிருந்து சிறு ஓலைச் சுவடியை எடுத்தார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் மதுரை செல்ல வேண்டும். அங்கே...கொடுங்கண்ணனாருக்கு நான் அளிக்கும் ஓலையை அளிக்க வேண்டும். "

"அவ்வளவு தானா ஐயனே? இந்தச் சிறு வேலைக்கா இத்தனை பீடிகை?" என்றான் தித்தன்.

"இது சிறு பணியே அல்ல தித்தா! வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கப் போகும் நிகழ்ச்சி இது. செண்பகப் பொழிலின் தலையெழுத்தையே மாற்றப் போகும் மகத்தான பணி அது. செய்ய முடியுமா உங்களால்?"

"இறைவன் அருளால் செய்வோம் ஐயனே!" என்றான் தித்தன்.

"சரி! இரு ஓலைகள் தருகிறேன். ஒன்றை நீங்கள் கொடுங்கண்ணனிடம் கொடுக்க வேண்டும். பிறகு அவன் உங்களை யாரிடம் அழைத்துச் செல்கிறானோ அவர்களிடம் மற்றொரு ஓலையைக் கொடுக்க வேண்டும். இறைவன் கருணையினால் நான் எதிர்பார்ப்பது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் ஐயன் விந்தன்.

"எப்போது புறப்பட வேண்டும் குருதேவா?"

"இன்னும் மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினால் போதும். கால் நடையாகச் சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் குதிரை வேண்டும். உங்களிடம் குதிரை இருக்கிறதா?"

"என்னிடம் ஒரு குதிரை தான் இருக்கிறது ஐயனே! ஆனால் சிவநேசனுக்கு ...?" என்று இழுத்தான் தித்தன்.

"கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் ஒரே குதிரையில் பயணியுங்கள். சிவநேசா உன்னால் குதிரையில் பயணிக்க முடியும் அல்லவா?"

"குதிரையேற்றமே அறிவேன் குருதேவா! மதுரை இங்கிருந்து இரு நாட்கள் பயணம், அவ்வளவு தானே? போய் விடுவோம்."

"அது மட்டுமல்ல! மிக மிக முக்கியமானது, நீங்கள் வழியில் வரும் எந்த ஊரின் வழியாகவும் செல்ல வேண்டாம். காட்டு வழியே சென்றால் போதும். உணவு கையில் எடுத்துப் போய் விடுங்கள். ஆங்காங்கே ஆறுகளில் ஊற்று தோண்டி நீர் அருந்துங்கள். நீங்கள் இருவரும் ஓலை கொண்டு செல்கிறீர்கள் என தெரியத் தேவையில்லை. மேலும் சந்திக்கப் போகும் நபரிடமிருந்து பதில் ஓலை வாங்கி வர வேண்டும். புரிகிறதா?"

"புரிந்தது ஐயனே"

"சிவநேசா, தித்தா இது எளிமையான பணியல்ல. நீங்கள் காட்டு வழியில் செல்லும் போது சதிகாரர்கள் உங்களை கொலை செய்யக் கூட முயற்சி செய்யலாம். எப்படியாவது ஓலையை மதுரையில் இருக்கும் கொடுங்கண்ணனிடம் சென்று சேர்த்து விடுங்கள். நமது நாட்டுக்கு இப்போது அது மிகவும் முக்கியம்." என்றார் விந்தையன்.

"சரி! குருதேவா! வழியில் எனக்கோ, தித்தனுக்கோ ஆபத்து ஏற்பட்டால் யாராவது ஒருவராவது தப்பித்து மதுரையில் ஓலையை சேர்த்து விடுகிறோம்."

"அந்த அளவுக்கு நிலை மோசமாகாது என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்றார்.

எழுந்து நின்றனர் இளைஞர்கள் இருவரும். தயங்கினான் தித்தன்.

"என்ன தித்தா?"

"ஐயனே! ஓலைகள்..."

"நீங்கள் கிளம்ப இன்னமும் மூன்று தினங்கள் இருக்கின்றதே? கிளம்பும் போது தருகிறேன். அது வரையில் என்னிடமே இருக்கட்டும்" என்றார். மீண்டும் பெரியவரை வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர். இப்போது நிலவு வானில் வந்து விட்டது. முழு நிலவு அல்ல என்றாலும் ஓரளவு வெளிச்சம் இருக்கவே செய்தது. அழகான அந்த வனம் நிலவொளியில் குளித்து இன்னமும் அழகாக காட்சியளித்தது. நண்பர்கள் இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இரவு விலங்குகளின் ஒலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அதுவே பெரிய ஓசையாகக் கேட்டது இருவருக்கும். எதை எதையோ சிந்தித்தபடி மௌனமான நடந்தான் தித்தன். ஆனால் அவனது எச்சரிக்கை உணர்வு அவனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்கள் நடந்து வந்த ஒற்றையடிப்பாதையை ஒட்டி சில கஜங்கள் தொலைவில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதன் பின்னால் யாரோ நின்று கொண்டு இவர்களையே பார்ப்பது போண்ற உள்ளுணர்வு சொல்ல தயங்கினான். ஆனால் சிவநேசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தான்.

நடக்க நடக்க அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இப்போது தித்தனின் சிந்தனை எல்லாம் தற்காப்பு பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவன் படித்த போர்ப்பயிற்சிகள் நிச்சயம் யாரோ அந்த மரத்தின் பின்னாலிருந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என எச்சரித்தது. ஆனால் அந்தத் தாக்குர்தல் திடீரன நிகழும் நேரடித்தாக்குதலா? இல்லை கோழைகள் போல முதுகுக்குப் பின்னால் செய்யும் தாக்குதலா? என அவனால் கணிக்க முடியவில்லை. சிவநேசன் எதையோ பேசிக்கொண்டே வந்தான். அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும் கண்களும் காதுகளும் படு கூர்மையாக இயங்கின தித்தனுக்கு.

அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடயே ஐம்பதடி தான் இடைவெளி. அப்போது தித்தனின் கூரிய செவிக்கு யாரோ இடுப்பிலிருந்து வாளோ, கத்தியோ உருவும் சத்தம் கேட்டது. சற்றே நிதானித்து கணக்குப் போட்டான். ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் ஆனது அந்த ஆயுதத்தை உருவ. அப்படியானால் அது சிறு கத்தியாத்தான் இருக்க வேண்டும். கூர்மையானதாகத்தான் இருக்க வேண்டும். விஷம் கூடத் தோய்க்கப்பட்டிருக்கலாம். சிறு கத்தி என்பதால் நிச்சயம் நெஞ்சுக்குத்தான் குறி வைப்பார்கள். மனமும் உடலும் முழுமையாகத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில் பளபளவென ஒளி வீசியபடி ஒரு சூரிக்கத்தி முழு வேகத்தோடு சுழன்று வந்தது. தன்னை நோக்கித்தான் தாக்குதல் என்ற நினைப்பிலேயே இருந்த தித்தனுக்கு அந்தக் கத்தி அவனை விடுத்து சிவநேசனைக் குறி பார்த்து வந்ததை அவதானிக்க சில நொடிகள் பிடித்தன.

அதற்குள் கத்தியைப் பார்த்து விட்ட சிவநேசன் ஓவென அலறினான். ஆனால் மிகவும் விரைந்து செயல்பட்டு அவனது காலை இடறினான் தித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சிவநேசன் தடாரென்ற சத்தத்தோடு விழுந்தான். கத்தி அவனைத் தாண்டிச் சென்று மற்றொரு மரத்தில் ஆழப் பதிந்தது அந்தக் கத்தி. அது சிவநேசன் நெஞ்சில் பதிந்திருந்தால் அடுத்த கணமே அவன் உயிர் போயிருக்கும். சிவநேசன் தப்பித்து விட்டான் என்றதும் கத்தியை எறிந்த ஆளைப் பிடிக்க வேண்டும் என மரத்தை நோக்கிப் பாய்ந்தான் தித்தன். அந்த இருளிலும் யாரோ சரசரவென ஓடும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த கல்லை எடுத்து அவனது குதிகாலைக் குறி வைத்து எறிந்தான். மிகச் சரியாகச் சென்று தாக்கியது அது. ஆனாலும் ஓடியவன் மிகவும் நன்றாகப் பயிற்சி எடுத்திருப்பவன் போல. அவனது ஓட்டம் தள்ளாடினாலும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் தொடர்ந்து ஓடினான்.

"தித்தா! என்னால் நடக்கவே முடியவில்லை. என்னைக் காப்பாற்று" என்று தீனமாக அலறினான் சிவநேசன்.

"பாவம்! ஆசிரமத்தில் வேலைகள் செய்தவன். இது போன்ற தாக்குதலுக்கு பழக்கமில்லாதவன். ஆனால் நன்றாகத்தான் இருக்கிறான். கத்தி எறிந்த ஆளைப் பிடித்தால் பல விஷயங்கள் வெளியாகும் என்ன செய்ய? என்று தத்தளித்தான். இறுதியில் அவனது இரக்கமே வெல்ல சிவநேசனை நோக்கிப் போனான். பயத்தில் முகம் வெளுத்துக் கிடந்தது அவனுக்கு.

"தித்தா! எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாய் அப்பா! இந்த நன்றி எப்படிச் செலுத்துவேன்?" என்றான் உணர்ச்சி மிக்க குரலில்.

"இது என் கடமை தான் சிவநேசா! கத்தியை எறிந்தவன் ஓடி விட்டான். என்னால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. நீ எப்படி இருக்கிறாய்?"

"இந்த இரவு நேரத்தில், இந்தக் காட்டில் சாதாரணமாக ஓடுகிறான் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்."

"ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனது கத்தி இருக்கிறது. அதை வைத்து ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா பார்க்கலாம். உன்னால் நடக்க முடியுமா? இரவு நேரத்தில் நாம் இங்கு ஆயுதமின்றி இருப்பது அவ்வளவு நல்லதல்ல." என்றான் தித்தன்.

சிவநேசன் எழ முயன்றான். ஆனால் காலின் வேதனையை முகம் காட்டியது. அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி மெல்ல நடக்க வைத்து அழைத்துச் சென்றான்.

"அப்பப்பா! என்ன பயங்கரம்? என்னை எதற்காகக் கொல்ல முயன்றார்கள்? எனக்கு யாரும் பகையே இல்லையே?" என்றான் சிவநேசன் வேதனை மிக்கக் குரலில்.

"உனக்குப் பகையில்லாமல் இருக்கலாம் சிவநேசா! ஆனால் நாம் செய்யப் போகும் பணிக்கு எதிரிகள் இருக்கலாமே? உன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் நமது அத்தனை திட்டங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறதே? ஆனால் நமக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே? அது தான் எனக்கு ஆத்திரமாக வருகிறது." என்றான் தித்தன்.

"அடேயப்பா! இந்தத் தாக்குதலின் பின்னால் இத்தனை அரசியல் இருக்கிறதா? ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள். வேறு யார்?"

"ஒற்றர்கள் தான். ஆனால் யாருடைய ஒற்றார்கள்? சோழரா? சேரரா? இல்லை வேறு ஏதேனும் குறுநில மன்னரா? இப்படி நிறையக் கேள்வி இருக்கிறதே? எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் ஒருவர் மீது பழி சுமத்த முடியாதே?" என்றான் தித்தன்.

"உனக்கு போர்க்கலைகளோடு நன்றாக அரசியலும் தெரிகிறது. அதனால் தான் குநாதர் உன்னைத் தேர்ந்தெடுத்தார் போல. ஆனால் என்னால் உனக்கு உதவி கிடைக்காது போலத் தோன்றுகிறது. மேலும் நான் தொந்தரவு ஆகிவிடுவேனோ எனத்தான் அஞ்சுகிறேன்." என்றான் சிவநேசன் மெல்லிய குரலில்.

"இல்லை நண்பா! அப்படி இல்லை. உனக்கு சிறிது கூடப் போர்க்கலைகளில் பழக்கமில்லையா?"

"சுத்தமாக இல்லை! நான் கற்றதெல்லாம் மருத்துவம், மூலிகைகள் நோய்களை எப்படிக் குணப்படுத்துவது அவ்வளவு தான். "

பேசிக்கொண்டே இருவரும் ஊருக்குள் வந்து விட்டனர்.

"ஊர் வந்து விட்டது சிவநேசா! உன் வீடு எங்கே என்று சொல்! முதலில் கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்கிறாயா?" என்றான் தித்தன்.

"நான் எப்போதும் ஆசிரமத்திலேயே வசிப்பவன் தான் தித்தா! இது போன்ற சில சமயங்களில் எனது சிறிய தந்தையார் வீடு வாய்க்கால் கரைத்தெருவில் இருக்கிறது. அங்கே தங்கிக்கொள்வேன். அவரும் வைத்தியர் தான். ஆகையால் என்னை அங்கே கொண்டு விடு போதும்" என்றான்.

சிவநேசன் சொன்ன வாய்க்கால் கரைத்தெரு சற்றே தொலைவில் உள்ளது. அதை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் வேலன் கையில் ஈட்டியோடு எதிரே வந்து கொண்டிருந்தான். தித்தனைக் கண்டதும் விலகிச் சென்றான். ஆனால் அவனது நடை சற்றே வித்தியாசமாக இருக்கக் கூர்ந்து நோக்கினான் தித்தன். இடது காலை சற்றே சாய்த்து நடந்தான்.

"நான் எறிந்த கல் ஓடியவனின் இடக்காலைத்தானே பதம் பார்த்தது? இவனுக்கும் இடக்காலில் அடி? அப்படியானால்....?" நினைக்கவே மனம் வேதனைப் பட்டது. தித்தன் கவனிப்பதை பார்த்து விட்ட வேலன் சாய்க்காமல் நடந்தான். ஆனாலும் வலி அதிகம் என்பதை அவனது முகம் காட்டியது. வேலனது கால் வலியை விட தித்தனுக்கு மனம் மிக அதிகமாக வலித்தது.

"வேலா! பொறாமை குணத்தால் நீ என்ன செய்து விட்டாய்? போகக் கூடாத பாதையில் போகிறாயா? சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து விட்டாயா? அப்படியென்ன கோபம் உனக்கு? பகைவர்களோடு சேர்ந்தால் உனக்கு நல்லதா? மனம் மாறி நீ மீண்டும் வர விரும்பினால் அவர்கள் விடுவார்களா? இப்படி ஒரு புதை குழியில் போய்ச் சிக்கிக் கொண்டாயே?" என வேதனையோடு எண்ணினான். கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

"என்ன தித்தா? அப்படியே நின்று விட்டாய்? அதோ தெரிகிறதே அது தான் என் சிற்றப்பனின் வீடு. வா போகலாம்" என்றான் சிவநேசன்.

தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு மெல்ல அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்த்தான். அங்கு இருந்த சிறிய தந்தை அவரது மகன் என அனைவரும் மனமாற வரவேற்றனர். சிவநேசன் நடந்ததை சற்றே மிகைப்படுத்திக் கூற அவர்கள் தித்தனுக்கு மிகவும் நன்றி செலுத்தினார்கள். அவனது வீரத்தையும் சமயோஜித அறிவையும் மிகவும் புகழ்ந்தார்கள். தித்தனுக்கு சங்கடமாக ஆகி விட்டது.

"ஐயா! நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் பெரியவன் அல்ல. பாவம் சிவநேசன். வலியில் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். நான் சென்று வருகிறேன். இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறி விடை பெற்றான். அவர்கள் ஏதாவது பானம் அருந்தியே தீர வேண்டும் என்று மோர் கொடுக்க அதை அருந்தி விட்டுக் கிளம்பினான். தன் வீட்டுக்குச் சென்று ஈட்டி எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். போகும் வழியில் மீண்டும் வேலனைக் கண்டான்.

"வேலா! கொஞ்சம் நில்லேன்" என்றான் கெஞ்சும் குரலில்.

"என்னை ஏனப்பா நிற்கச் சொல்கிறாய்? உன் புது நண்பன் உடன் வரவில்லையா? அவனோடு பேசுவது தானே? நான் தான் நம்பிக்கைக்கு உரியவன் இல்லையே?" என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டான் வேலன். மனதில் குழப்பமும், வேதனையும் போட்டி போட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தித்தன்.
 

Venkatesh

New member
Messages
9
Reaction score
3
Points
3
அத்தியாயம் 4:

வேலனுடன் சமாதானம் பேச எவ்வளவோ முயன்றான் தித்தன். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.

"நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய்! என்னைப் பற்றி இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது?" என்று அதையே திருப்பிச் சொல்லி அனுப்பி விட்டான்.

"நீ ஏன் அவனுடன் பேச மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறாய்? நமக்கு வேறு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. ஐயன் உன்னை வரச் சொன்னார்" என்றான் சிவநேசன் எரிச்சல் கலந்த குரலில்.

"இந்த இரவு நேரத்திலா?"

"ஆம்! ரகசியங்களைப் பேச, இரவு தானே சரியான நேரம்?" என்றான் சிவனேசன்.

மௌனமாக விந்தையன் ஆசிரமத்தை நோக்கி நடந்தான். ஒற்றையடிப்பாதையில் நடக்கும் போது சட்டென யாரோ ஒரு மரத்தின் பின்னால் ஒளிவது போலத் தோன்ற நின்றான் தித்தன்.

"என்ன தித்தா?"

"யாரோ மரத்தின் பின்னால் இருப்பது போல ஒரு ஓசை கேட்டதே?"

"ஆம்! எனக்கும் கேட்டது. இந்தப்பகுதியில் விலங்குகள் அதிகம். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வா! இருவரும் சென்று பார்ப்போம்." என்று பாதையை விட்டு சற்றே விலகி நடந்தனர்.

இருளில் நடப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு சென்றனர். சற்று தொலவில் சரசரவென எதுவோ காய்ந்த சருகின் மீது நகர்ந்து போகும் சத்தம் கேட்டது. தீவட்டியை அந்தப் பக்கம் திருப்ப பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

"பாம்பு தான் தித்தா" என்றான் சிவநேசன்.

"உம்! இருக்கலாம்!"

"நமக்கு நேரமாகிறது தித்தா! குரு நாதரை அதிக நேரம் காக்க வைப்பது முறையல்ல. வா" என அழைத்துச் சென்றான்.

பெரிய நிலவிளக்கின் ஒளியில் கம்பீரமாக அமைதியாக அமர்ந்திருந்தார் விந்தையன்.

"ஐயனே! தித்தனை அழைத்து வந்து விட்டேன்." என்றான் சிவநேசன். இருவரும் வணங்க ஆசீர்வதித்தார் பெரியவர்.

"உன் நண்பன் வேலன் சமாதானமாகி விட்டானா தித்தா?" என்றார் ஐயன்.

"இல்லை ஐயனே! இன்னமும் கோபம் குறைந்தபாடில்லை. என் சிறு வயதுத் தோழன் அவன். இப்போது விலகியிருப்பது வேதனையளிக்கிறது."

"புரிகிறது தித்தா! கூடிய சீக்கிரமே உன் வேதனை மாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இப்போது உங்கள் இருவரையும் அழைத்தது மிகவும் முக்கியமான விஷயம். ரகசியமானதும் கூட. நீங்கள் இருவரும் நான் சொல்லும் விஷயங்களை வெளியில் கசியக் கூட விடக் கூடாது. சத்தியம் செய்து தர வேண்டும்." என்றார்.

"அப்படியே செய்கிறோம் ஐயனே!" என்றான் சிவநேசன். விந்தையன் தித்தனை நோக்க அவனும் அப்படியே செய்கிறேன் என்றான். விளக்கின் மேல் இருவரும் ஆணையிட்டதும் திண்டுகள் ஒன்றிலிருந்து சிறு ஓலைச் சுவடியை எடுத்தார் விந்தையன்.

"நீங்கள் இருவரும் மதுரை செல்ல வேண்டும். அங்கே...கொடுங்கண்ணனாருக்கு நான் அளிக்கும் ஓலையை அளிக்க வேண்டும். "

"அவ்வளவு தானா ஐயனே? இந்தச் சிறு வேலைக்கா இத்தனை பீடிகை?" என்றான் தித்தன்.

"இது சிறு பணியே அல்ல தித்தா! வரலாற்றில் நீங்க இடம் பிடிக்கப் போகும் நிகழ்ச்சி இது. செண்பகப் பொழிலின் தலையெழுத்தையே மாற்றப் போகும் மகத்தான பணி அது. செய்ய முடியுமா உங்களால்?"

"இறைவன் அருளால் செய்வோம் ஐயனே!" என்றான் தித்தன்.

"சரி! இரு ஓலைகள் தருகிறேன். ஒன்றை நீங்கள் கொடுங்கண்ணனிடம் கொடுக்க வேண்டும். பிறகு அவன் உங்களை யாரிடம் அழைத்துச் செல்கிறானோ அவர்களிடம் மற்றொரு ஓலையைக் கொடுக்க வேண்டும். இறைவன் கருணையினால் நான் எதிர்பார்ப்பது நடக்கும் என நம்புகிறேன்." என்றார் ஐயன் விந்தன்.

"எப்போது புறப்பட வேண்டும் குருதேவா?"

"இன்னும் மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினால் போதும். கால் நடையாகச் சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் குதிரை வேண்டும். உங்களிடம் குதிரை இருக்கிறதா?"

"என்னிடம் ஒரு குதிரை தான் இருக்கிறது ஐயனே! ஆனால் சிவநேசனுக்கு ...?" என்று இழுத்தான் தித்தன்.

"கவலை வேண்டாம். நீங்கள் இருவரும் ஒரே குதிரையில் பயணியுங்கள். சிவநேசா உன்னால் குதிரையில் பயணிக்க முடியும் அல்லவா?"

"குதிரையேற்றமே அறிவேன் குருதேவா! மதுரை இங்கிருந்து இரு நாட்கள் பயணம், அவ்வளவு தானே? போய் விடுவோம்."

"அது மட்டுமல்ல! மிக மிக முக்கியமானது, நீங்கள் வழியில் வரும் எந்த ஊரின் வழியாகவும் செல்ல வேண்டாம். காட்டு வழியே சென்றால் போதும். உணவு கையில் எடுத்துப் போய் விடுங்கள். ஆங்காங்கே ஆறுகளில் ஊற்று தோண்டி நீர் அருந்துங்கள். நீங்கள் இருவரும் ஓலை கொண்டு செல்கிறீர்கள் என தெரியத் தேவையில்லை. மேலும் சந்திக்கப் போகும் நபரிடமிருந்து பதில் ஓலை வாங்கி வர வேண்டும். புரிகிறதா?"

"புரிந்தது ஐயனே"

"சிவநேசா, தித்தா இது எளிமையான பணியல்ல. நீங்கள் காட்டு வழியில் செல்லும் போது சதிகாரர்கள் உங்களை கொலை செய்யக் கூட முயற்சி செய்யலாம். எப்படியாவது ஓலையை மதுரையில் இருக்கும் கொடுங்கண்ணனிடம் சென்று சேர்த்து விடுங்கள். நமது நாட்டுக்கு இப்போது அது மிகவும் முக்கியம்." என்றார் விந்தையன்.

"சரி! குருதேவா! வழியில் எனக்கோ, தித்தனுக்கோ ஆபத்து ஏற்பட்டால் யாராவது ஒருவராவது தப்பித்து மதுரையில் ஓலையை சேர்த்து விடுகிறோம்."

"அந்த அளவுக்கு நிலை மோசமாகாது என நினைக்கிறேன். எல்லாம் இறைவன் செயல். இப்போது நீங்கள் புறப்படலாம்" என்றார்.

எழுந்து நின்றனர் இளைஞர்கள் இருவரும். தயங்கினான் தித்தன்.

"என்ன தித்தா?"

"ஐயனே! ஓலைகள்..."

"நீங்கள் கிளம்ப இன்னமும் மூன்று தினங்கள் இருக்கிண்றதே? கிளம்பும் போது தருகிறேன். அது வரையில் என்னிடமே இருக்கட்டும்" என்றார். மீண்டும் பெரியவரை வணங்கி விட்டு இருவரும் வெளியில் வந்தனர். இப்போது நிலவு வானில் வந்து விட்டது. முழு நிலவு அல்ல என்றாலும் ஓரளவு வெளிச்சம் இருக்கவே செய்தது. அழகான அந்த வனம் நிலவொளியில் குளித்து இன்னமும் அழகாக காட்சியளித்தது. நண்பர்கள் இருவரும் மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். இரவு விலங்குகளின் ஒலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அதுவே பெரிய ஓசையாகக் கேட்டது இருவருக்கும். எதை எதையோ சிந்தித்தபடி மௌனமான நடந்தான் தித்தன். ஆனால் அவனது எச்சரிக்கை உணர்வு அவனை கூர்ந்து கவனிக்க வைத்தது. அவர்கள் நடந்து வந்த ஒற்றையடிப்பாதையை ஒட்டி சில கஜங்கள் தொலைவில் பருத்த மரம் ஒன்று இருந்தது. அதன் பின்னால் யாரோ நின்று கொண்டு இவர்களையே பார்ப்பது போண்ற உள்ளுணர்வு சொல்ல தயங்கினான். ஆனால் சிவநேசன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொண்டிருந்தான்.

நடக்க நடக்க அந்த மரத்துக்கும் அவர்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. இப்போது தித்தனின் சிந்தனை எல்லாம் தற்காப்பு பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவன் படித்த போர்ப்பயிற்சிகள் நிச்சயம் யாரோ அந்த மரத்தின் பின்னாலிருந்து தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என எச்சரித்தது. ஆனால் அந்தத் தாக்குர்தல் திடீரன நிகழும் நேரடித்தாக்குதலா? இல்லை கோழைகள் போல முதுகுக்குப் பின்னால் செய்யும் தாக்குதலா? என அவனால் கணிக்க முடியவில்லை. சிவநேசன் எதையோ பேசிக்கொண்டே வந்தான். அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தாலும் கண்களும் காதுகளும் படு கூர்மையாக இயங்கின தித்தனிக்கு.

அந்த மரத்த்துக்கும் அவர்களுக்கும் இடயே ஐம்பதடி தான் இடைவெளி. அப்போது தித்தனின் கூரிய செவிக்கு யாரோ இடுப்பிலிருந்து வாளோ, கத்தியோ உருவும் சத்தம் கேட்டது. சற்றே நிதானித்து கணக்குப் போட்டான். ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தான் ஆனது அந்த ஆயுதத்தை உருவ. அப்படியானால் அது சிறு கத்தியாத்தான் இருக்க வேண்டும். கூர்மையானதாகத்தான் இருக்க வேண்டும். விஷம் கூடத் தோய்க்கப்பட்டிருக்கலாம். சிறு கத்தி என்பதால் நிச்சயம் நெஞ்சுக்குத்தான் குறி வைப்பார்கள். மனமும் உடலும் முழுமையாகத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில் பளபளவென ஒளி வீசியபடி ஒரு சூரிக்கத்தி முழு வேகத்தோடு சுழன்று வந்தது. தன்னை நோக்கியத்தான் தாக்குதல் என்ற நினைப்பிலேயே இருந்த தித்தனுக்கு அந்தக் கத்தி அவனை விடுத்து சிவநேசனைக் குறி பார்த்து வந்ததை அவதானிக்க சில நொடிகள் பிடித்தன.

அதற்குள் கத்தியைப் பார்த்து விட்ட சிவநேசன் ஓவென அலறினான். ஆனால் மிகவும் விரைந்து செயல்பட்டு அவனது காலை இடறினான் தித்தான். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத சிவநேசன் தடாரென்ற சத்தத்தோடு விழுந்தான். கத்தி அவனைத் தாண்டிச் சென்று மற்றொரு மரத்தில் ஆழப் பதிந்தது அந்தக் கத்தி. அது சிவநேசன் நெஞ்சில் பதிந்திருந்தால் அடுத்த கணமே அவன் உயிர் போயிருக்கும். சிவநேசன் தப்பித்து விட்டான் என்றதும் கத்தியை எறிந்த ஆளைப் பிடிக்க வேண்டும் என மரத்தை நோக்கிப் பாய்ந்தான் தித்தன். அந்த இருளிலும் யாரோ சரசரவென ஓடும் சத்தம் கேட்டது. கீழே கிடந்த கல்லை எடுத்து அவனது குதிகாலைக் குறி வைத்து எறிந்தான். மிகச் சரியாகச் சென்று தாக்கியது அது. ஆனாலும் ஓடியவன் மிகவும் நன்றாகப் பயிற்சி எடுத்திருப்பவன் போல. அவனது ஓட்டம் தள்ளாடினாலும் சிறு சத்தம் கூட எழுப்பாமல் தொடர்ந்து ஓடினான்.

"தித்தா! என்னால் நடக்கவே முடியவில்லை. என்னைக் காப்பாற்று" என்று தீனமாக அலறினான் சிவநேசன்.

"பாவம்! ஆசிரமத்தில் வேலைகள் செய்தவன். இது போன்ற தாக்குதலுக்கு பழக்கமில்லாதவன். ஆனால் நன்றாகத்தான் இருக்கிறான். கத்தி எறிந்த ஆளைப் பிடித்தால் பல விஷயங்கள் வெளியாகும் என்ன செய்ய? என்று தத்தளித்தான். இறுதியில் அவனது இரக்கமே வெல்ல சிவநேசனை நோக்கிப் போனான். பயத்தில் முகம் வெளுத்துக் கிடந்தது அவனுக்கு.

"தித்தா! எனக்கு உயிர்ப்பிச்சை அளித்தாய் அப்பா! இந்த நன்றி எப்படிச் செலுத்துவேன்?" என்றான் உணர்ச்சி மிக்க குரலில்.

"இது என் கடமை தான் சிவநேசா! கத்தியை எறிந்தவன் ஓடி விட்டான். என்னால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. நீ எப்படி இருக்கிறாய்?"

"இந்த இரவு நேரத்தில், இந்தக் காட்டில் சாதாரணமாக ஓடுகிறான் என்றால் அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும்."

"ஆம்! எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அவனது கத்தி இருக்கிறது. அதை வைத்து ஏதாவது கண்டு பிடிக்க முடியுமா பார்க்கலாம். உன்னால் நடக்க முடியுமா? இரவு நேரத்தில் நாம் இங்கு ஆயுதமின்றி இருப்பது அவ்வளவு நல்லதல்ல." என்றான் தித்தன்.

சிவநேசன் எழ முயன்றான். ஆனால் காலிலம் வேதனையை முகம் காட்டியது. அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி மெல்ல நடக்க வைத்து அழைத்துச் சென்றான்.

"அப்பப்பா! என்ன பயங்கரம்? என்னை எதற்காகக் கொல்ல முயன்றார்கள்? எனக்கு யாரும் பகையே இல்லையே?" என்றான் சிவநேசன் வேதனை மிக்கக் குரலில்.

"உனக்குப் பகையில்லாமல் இருக்கலாம் சிவநேசா! ஆனால் நாம் செய்யப் போகும் பணிக்கு எதிரிகள் இருக்கலாமே? உன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்றால் நமது அத்தனை திட்டங்களும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறதே? ஆனால் நமக்கு அவர்களைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே? அது தான் எனக்கு ஆத்திரமாக வருகிறது." என்றான் தித்தன்.

"அடேயப்பா! இந்தத் தாக்குதலின் பின்னால் இத்த்னனை அரசியல் இருக்கிறதா? ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள். வேறு யார்?"

"ஒற்றர்கள் தான். ஆனால் யாருடைய ஒற்றார்கள்? சோழரா? சேரரா? இல்லை வேறு ஏதேனும் குறுநில மன்னரா? இப்படி நிறையக் கேள்வி இருக்கிறதே? எந்த ஆதாரமும் இல்லாமல் நாம் ஒருவர் மீது பழி சுமத்த முடியாதே?" என்றான் தித்தன்.

"உனக்கு போர்க்கலைகளோடு நன்றாக அரசியலும் தெரிகிறது. அதனால் தான் குநாதர் உன்னைத் தேர்ந்தெடுத்தார் போல. ஆனால் என்னால் உனக்கு உதவி கிடைக்காது போலத் தோன்றுகிறது. மேலும் நான் தொந்தரவு ஆகிவிடுவேனோ எனத்தான் அஞ்சுகிறேன்." என்றான் சிவநேசன் மெல்லிய குரலில்.

"இல்லை நண்பா! அப்படி இல்லை. உனக்கு சிறிது கூடப் போர்க்கலைகளில் பழக்கமில்லையா?"

"சுத்தமாக இல்லை! நான் கற்றதெல்லாம் மருத்துவம், மூலிகைகள் நோய்களை எப்படிக் குணப்படுத்துவது அவ்வளவு தான். "

பேசிக்கொண்டே இருவரும் ஊருக்குள் வந்து விட்டனர்.

"ஊர் வந்து விட்டது சிவநேசா! உன் வீடு எங்கே என்று சொல்! முதலில் கால் வலிக்கு வைத்தியம் செய்து கொள்கிறாயா?" என்றான் தித்தன்.

"நான் எப்போதும் ஆசிரமத்திலேயே வசிப்பவன் தான் தித்தா! இது போன்ற சில சமயங்களில் எனது சிறிய தந்தையார் வீடு வாய்க்கால் கரைத்தெருவில் இருக்கிறது. அங்கே தங்கிக்கொள்வேன். அவரும் வைத்தியர் தான். ஆகையால் என்னை அங்கே கொண்டு விடு போதும்" என்றான்.

சிவநேசன் சொன்ன வாய்க்கால் கரைத்தெரு சற்றே தொலைவில் உள்ளது. அதை நோக்கி நடந்தார்கள் இருவரும். வழியில் வேலன் கையில் ஈட்டியோடு எதிரே வந்து கொண்டிருந்தான். தித்தனைக் கண்டதும் விலகிச் சென்றான். ஆனால் அவனது நடை சற்றே வித்தியாசமாக இருக்கக் கூர்ந்து நோக்கினான் தித்தன். இடது காலை சற்றே சாய்த்து நடந்தான்.

"நான் எறிந்த கல் ஓடியவனின் இடக்காலைத்தானே பதம் பார்த்தது? இவனுக்கும் இடக்காலில் அடி? அப்படியானால்....?" நினைக்கவே மனம் வேதனைப் பட்டது. தித்தன் கவனிப்பதை பார்த்து விட்ட வேலன் சாய்க்காமல் நடந்தான். ஆனாலும் வலி அதிகம் என்பதை அவனது முகம் காட்டியது. வேலனது கால் வலியை விட தித்தனுக்கு மனம் மிக அதிகமாக வலித்தது.

"வேலா! பொறாமை குணத்தால் நீ என்ன செய்து விட்டாய்? போகக் கூடாத பாதையில் போகிறாயா? சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து விட்டாயா? அப்ப்டியென்ன கோபம் உனக்கு? பகைவர்களோடு சேர்ந்தால் உனக்கு நல்லதா? மனம் மாறி நீ மீண்டும் வர விரும்பினால் அவர்கள் விடுவார்களா? இப்படி ஒரு புதை குழியில் போய்ச் சிக்கிக் கொண்டாயே?" என வேதனையோடு எண்ணினான். கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

"என்ன தித்தா? அப்படியே நின்று விட்டாய்? அதோ தெரிகிறதே அது தான் என் சிற்றப்பனின் வீடு. வா போகலாம்" என்றான் சிவநேசன்.

தன் எண்ணத்தை மறைத்துக்கொண்டு மெல்ல அவனை அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்த்தான். அங்கு இருந்த சிறிய தந்தை அவரது மகன் என அனைவரும் மனமாற வரவேற்றனர். சிவநேசன் நடந்ததை சற்றே மிகைப்படுத்திக் கூற அவர்கள் தித்தனுக்கு மிகவும் நன்றி செலுத்தினார்கள். அவனது வீரத்தையும் சமயோஜித அறிவையும் மிகவும் புகழ்ந்தார்கள். தித்தனுக்கு சங்கடமாக ஆகி விட்டது.

"ஐயா! நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் பெரியவன் அல்ல. பாவம் சிவநேசன். வலியில் இருக்கிறார். அவரைக் கவனியுங்கள். நான் சென்று வருகிறேன். இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறி விடை பெற்றான். அவர்கள் ஏதாவது பானம் அருந்தியே தீர வேண்டும் என்று மோர் கொடுக்க அதை அருந்தி விட்டுக் கிளம்பினான். தன் வீட்டுக்குச் சென்று ஈட்டி எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் செல்ல வேண்டும் என்பது அவன் எண்ணம். போகும் வழியில் மீண்டும் வேலனைக் கண்டான்.

"வேலா! கொஞ்சம் நில்லேன்" என்றான் கெஞ்சும் குரலில்.

"என்னை ஏனப்பா நிற்கச் சொல்கிறாய்? உன் புது நண்பன் உடன் வரவில்லையா? அவனோடு பேசுவது தானே? நான் தான் நம்பிக்கைக்கு உரியவன் இல்லையே?" என்று சொல்லி விட்டு நிற்காமல் சென்று விட்டான் வேலன். மனதில் குழப்பமும், வேதனையும் போட்டி போட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான் தித்தன்.
👍👍
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 5:

இரவு வேலனிடம் பேசியதை சிவநேசனிடம் கூறினான் தித்தன். பகல் பொழுதில் ஊரில் எல்லையில் இருந்த சத்திரத்தின் முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் தித்தனும் சிவநேசனும். அவனது கால்களில் வலி குறைந்திருந்தது என்றாலும் முழுகையாகக் குணமாகைவ்ல்லை. துணியை வைத்துக் கட்டுப் போட்டிருந்தான் சிவநேசன்.

"நீ ஏன் அவனோடு மீண்டும் மீண்டும் பேசி அவமானத்துக்கு ஆளாகிறாய் தித்தா?"

"என்ன செய்ய? எனக்கு உடன் பிறந்தவனைப் போல அவன். அவனை எப்படி நான் அழிவுப் பாதையில் செல்ல விட முடியும்?"

"அழிவுப் பாதையா? என்ன சொல்கிறாய் நீ? உன்னோடு அவன் பேசவில்லையெனில் அது அவனுக்கு அழிவா? நல்ல நகைச்சுவை தான் போ"

"இல்லை! சிவநேசா! இல்லை! நிலைமையின் தீவிரம் தெரியாமல் பேசுகிறாய். நாம் ரகசியமாக ஏதோ ஒரு வேலையில் ஈடுபடப் போகிறோம் என்ற விஷயம் வேலனுக்குத் தெரியும்" என்றான் தித்தன். அவன் மனம் படபடத்தது.

சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது.

"சிவநேசா! என்ன ஆயிற்று? கால் வலியா?"

"ஹூம்! இது போல எத்தனை கால் வலி வந்தாலும் என்னால் தாங்க முடியும் தித்தா! ஆனால் நீ என்ன செய்து விட்டாய்? அப்படியானால் நேற்று தாக்கியது வேலனாக இருக்கலாம் என நினைக்கிறாயா?"

"தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் உன்னைத் தாக்கியவனை துரத்திச் செல்லும் போது அவனது இடது காலில் கல்லெறிந்தேன். சரியான காயம். வேலனும் இடது காலைத் தாங்கித்தாங்கி நடந்தான். ஆகையால்....."

"ஓ! என்ன பயங்கரம்? அதை அவன் செய்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒருவேளை நீ அவன் நண்பன் என்பதால் தான் உன்னை விடுத்து என்னைத் தாக்கினான் போலும். விடு! இதுவும் நன்மைகே என எடுத்துக்கொள்வோம்."

"இதுவும் நன்மைக்கா? எப்படி?"

"நேற்று இரவு நம் பகைவர்கள் யார்? எந்த நாட்டு ஒற்றர்ர்கள் என எதுவுமே தெரியவில்லை என ஆத்திரப்பட்டாய் அல்லவா? இனி அந்தக் கவலை இல்லை. வேலனை விழிப்பாகக் கண்காணித்தால் போதும். அவன் யாரோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறான் எனத் தெரிந்து விடுமே?"

"ஆஹா! அருமையான யோசனை நண்பா! அரசியல் படிக்கவில்லை என்றாலும் உன் மதி நுட்பம் வியக்க வைக்கிறது." என்றான் தித்தன்.

"இருக்கட்டும் நண்பா! ஆனால் இந்த விஷயத்தை நாம் ஐயன் காதில் போட வேண்டாம். அதே போல என் மீது நடந்த தாக்குதலைப் பற்றியும் அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம்."

திடுக்கிட்டான் தித்தன்.

"ஏன்? ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

"இது கூடப் புரியவில்லையா? வேலன் உன் நெருங்கிய நண்பன். ஆகையால் அவன் மீது நீ பொய்க்குற்றச் சாட்டு சுமத்த மாட்டாய். அப்படியானால் வேலன் சதிகாரன் என்பது உறுதியாகி விடும். நீயும் அவனுடன் ஏன் சேர்ந்து சதியில் ஈடுபட்டிருக்கலாமே என்ற ஐயம் குருநாதருக்கு வரலாம் அல்லவா?"

"சிவநேசா! என்ன வார்த்தை இது? நானாவது சதியில் ஈடுபடுவதாவது?"

"இப்படித்தான் வேலனைப் பற்றியும் சொன்னாய். ஆனால் என்ன ஆயிற்று? அவன் மாறவில்லையா? அது போல நீயும் மாறலாம் என ஐயன் நினைத்து விட்டால் என்ன செய்வாய்?"

"அந்த ஐயம் உனக்கு இல்லையா சிவநேசா?"

"சுத்தமாக இல்லை தித்தா! நேற்று இரவு என் உயிரைக் காப்பாற்றியவன் நீ! அத்தோடு உன் உற்ற நண்பனே ஆனாலும் கூட அவனைப் பற்றிய உன் சந்தேகத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாய். ஒரு சதிகாரன் இப்படிச் செய்ய மாட்டான். ஆகையால் எனக்கு உன் மீது அத்தனை நம்பிக்கை இருக்கிறது." என்றான் சிவநேசன்.

தித்தனின் கண்களில் நீர் குளம் கட்டியது. மூன்று வயது முதல் என்னோடு பழகியவன் வேலன். நண்பர்கள் என்பதை விட நாங்கள் உடன் பிறந்தவர்கள் என்றே தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அவன் சிறு காரணத்துக்காக என் நட்பை முறித்துக்கொண்டதும் இல்லாமல் நாட்டையே காட்டிக்கொடுக்கத் தீர்மானித்து விட்டான். ஆனால் சிவநேசன் ? அவனோடு பழகி ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆனால் என்னை முழுமையாக நம்புகிறான். அவன் தான் இனி என் நண்பன். என் நட்பை விட நாடு முக்கியம். ஆகையால் இனி நான் வேலனோடு எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. அதோடு அவனைக் கண்காணிக்கவும் போகிறேன். குரு நாதர் என்ன திட்டம் வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது நாட்டுக்கு நல்லது தான். அதை நல்லபடியாக முடித்துக்கொடுக்க வேண்டும். அப்போது தான் எனக்கு மனம் அமைதிப்படும்" என யோசித்துக்கொண்டிருந்தான்.

"என்ன சிந்தையில் மூழ்கி விட்டாய் தித்தா? நண்பன் ஞாபகமா?"

"இனி அவனை என் நண்பன் எனச் சொல்லாதே! நீ தான் என் நண்பன்."

பேசிய தித்தனை அணைத்துக்கொண்டான் சிவநேசன்.

"சிவநேசா! குருநாதர் ஏதேனும் செய்தி அனுப்புவதாக இருந்தால் எப்படி அனுப்புவார்? நீயும் இப்போது ஆசிரமத்தில் இல்லையே?"

"அந்தக் கவலை வேண்டாம் உனக்கு. அவருக்கு நான் ஒருவன் மட்டும் தானா சீடன்? என்னைப் போல இன்னமும் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக செய்தி அனுப்புவார். ஆனால் எக்காரணம் கொண்டும் நேற்று இரவு நடந்ததை அவரிடம் சொல்லி விடாதே!"

"உம் சரி! நம்மை ஓலை கொண்டு போகச் சொல்கிறாரே அதில் என்ன எழுதியிருக்கும்? கொடுங்கண்ணானாரிடம் ஓலையைக் கொடுத்ததும் அவர் நம்மை யாரிடம் அழைத்துச் செல்வார்? குருநாதர் செய்ய உத்தேசித்திருக்கும் செயல் தான் என்ன? எதுவுமே தெரியவில்லையே?"

"எனக்கும் இத்தனை கேள்விகளும் உண்டு. ஆனால் அதற்கான விடையை அறிய நாம் முயலக் கூடாது! அப்படிச் செய்தால் நாமும் துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம்" என்றான் சிவநேசன்.

"ம்ச்! எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் பணியை செய்! உன் கடமையை நிறைவேற்று என்றால் என்ன செய்ய? நமது நோக்கம் என்னவெனத் தெரிந்தால் தானே அதை சிறப்பாக நிறைவேற்ற முடியும்?"

"தித்தா! உன் பேச்சு எனக்குக் கவலை அளிக்கிறது! எங்கே நாம் மதுரை நோக்கிச் செல்லும் போது ஓலையை வாசித்து விடுவாயோ என அஞ்சுகிறேன். அப்படிச் செய்ய மாட்டாய் தானே?"

மௌனம் காத்தான் தித்தன்.

"உன் மௌனம் எனக்கு பயத்தைக் கொடுக்கிறது நண்பா! அப்படி ஏதும் நோக்கம் இருக்கிறதா சொல். அப்படி இருந்தால் அதை முளையிலேயே களைந்து விடு. நாம் வெறும் தூதுவர்கள். நமது பணி ஓலையை உரியவரிடத்தில் கொண்டுஇ சேர்ப்பது. அவ்வளவு தான். இதை நன்றாக மனதில் வைத்துக்கொள்" என்றான் சிவநேசன் அழுத்தமாக.

"சரி சிவநேசா! இந்தப் பயணம் முடுவதும் நான் உனது கட்டுப்பாட்டில் தான். போதுமா?"

மீண்டும் தித்தனை அணைத்துக்கொண்டான் சிவநேசன்.

"உனக்கு அவப்பெயர் வரக் கூடாது என்று தான் நான் சொன்னேனே தவிர உன் மனதைப் புண் படுத்த அல்ல."

"அது கூடத் தெரியாதா என்ன?"

"வேலனைக் குறித்து ஏதேனும் செய்தி கிடைத்ததா? நேற்று இரவு நீ அவனைத் தொடர்ந்து போனாயா?"

"ஆம் சிவநேசா! உன்னை வீட்டில் விட்டு விட்டு ஈட்டியை எடுத்துக்கொண்டு இரவுக்காவலுக்குச் சென்றேன். அவனும் சுற்றிச் சுற்றி வந்தானே தவிர சந்தேகத்துக்கு இடமாக எதையும் செய்யவில்லையே? அது தான் எனக்குக் குழப்பமாக இருக்கிறது."

"அப்படியா? அப்படியானால் அவனை சந்தேகத்திலிருந்து நீக்கி விட வேண்டியது தானே?"

"ஒரே ஒரு இரவு அவன் எதுவும் செய்யவில்லை என்பதை வைத்து எப்படி முடிவு செய்ய முடியும்?" தித்தன் பேசிக்கொண்டிருக்கும் போதே சற்றே தொலைவில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஏதோ ஒரு உருவம் தயங்கித்தயங்கிச் செல்வது போல இருந்தது.

"சிவநேசா! சத்தம் எதுவும் செய்யாமல் நான் சொல்லும் திசையில் பார்! வடக்குப் பக்கம் காட்டுப் பகுதியில் யாரோ ஒருவன் போவது போல இல்லை?" என்றான் மிகவும் மெல்லிய குரலில். திரும்பிப் பார்த்த சிவநேசனின் விழிகள் விரிந்தன.

"தித்தா? உலகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது?"

"என்ன உளறுகிறாய்? நான் என்ன சொன்னேன்? நீ என்ன பேசுகிறாய்?"

"உளறவில்லை நண்பா! நீயும் அந்த உருவத்தை நன்றாகப் பார். அது ஒரு பெண். அதுவும் இள வயதினள் எனத் தோன்றுகிறது. இளம் பெண் எதற்காக இப்படி ஒளிந்து ஒளிந்து காட்டுக்குள் செல்ல வேண்டும்? அவள் நோக்கம் எதுவானாலும் அது நிச்சயம் நல்ல நோக்கமாக இருக்க முடியாதே?"

"அதுவே தான் என் கருத்தும். நீ இங்கேயே இரு! நான் போய் அவள் என்ன செய்யப் போகிறாள் எனப் பார்த்து வருகிறேன்." என்றவன் குதித்து இறங்கி வேகமாக ஆனால் யாரும் பார்க்காத வண்ணம் அந்த வனப்பகுதியை நோக்கிப் போனான்.

நூறடிகள் நடந்திருப்பான் அந்தப் பெண் கண்ணுக்குத் தெரிந்தாள். ரகசியமாகச் செல்வதால் வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது என அவள் பச்சை நிறச் சேலை அணிந்திருந்தாள். காலிலும் கொலுசு இல்லை. மிகவும் மெல்ல பூனை போல அவள் அக்காட்டுப்பகுதியில் நடந்தாள். கொஞ்சம் கூடத் தயக்கமோ பயமோ இல்லாமல் அவள் நடந்து சென்ற விதம் அவள் பல முறை அங்கு வந்திருக்கிறாள் என்பதை உணர்த்தியது. அவள் அறியாமல் மெதுவாகப் பின் தொடர்ந்தான் தித்தன். மேலும் மேலும் அடர்ந்த காட்டினுள்ளே சென்றாள். மேலும் பல கல் தொலைவு நடந்ததும் சட்டென நின்றாள். அங்கே ஒரு பெரிய தாழம் புதர் பூக்கள் பூத்து வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது. ஓசைப்படாமல் அதன் பின் புறம் சென்றாள். பக்கத்தில் இருந்த அடர்ந்த மரம் செடி கொடிகளை விலக்கினாள். அங்கே குகை ஒன்று இயற்கையாகவே அமைந்திருந்தது. ஆனால் அதன் நுழைவு வாயில் மூங்கில் படலால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு குகை இருப்பது சட்டெனப் பார்த்தால் யாருக்குமே தெரியாது.

அந்தப் பெண் முக்காட்டை விலக்கினாள். அவள்து பின் புறம் தான் தெரிந்ததே தவிர முகம் தெரியவில்லை. மூங்கில் படலில் மென்மையாக மூன்று முறை தனது விரல் நகங்களால் மெல்லிய ஓசை எழுப்பினாள். உடலெங்கும் கண்ணாக மிகவும் கவனமாகப் பார்த்திருந்தான் தித்தன். ஈட்டியோ, வில்லோ எடுக்காமல் வந்த மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த மூங்கில் படல் விலகியது. அதிலிருந்து வந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்தான் தித்தன். வந்தவன் வேலனே தான். கை கொடுத்து அந்தப் பெண்ணை மேலே ஏற்றினான்.

"நீ வருவதை யாரும் பார்க்கவில்லையே?" என்றான் மெல்லிய குரலில்.

"இல்லை! இல்லை! தித்தனும் சிவநேசனும் சத்திரத்து மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்."

"முதலில் உள்ளே வா! வெளியில் வைத்து எதையும் பேச முடியாது. எதற்கும் ஒரு முறை சுற்றி முற்றிப் பார்த்து விடு" என்றான் வேலன். அந்தப் பெண் மிகுந்த எச்சரிக்கையோடு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது பார்வை சில வினாடிகள் தித்தன் இருக்கும் இடத்தில் நிலைத்தது. ஆனால் எதுவும் தெரியவில்லை போல. இப்போது தித்தனுக்கு அந்த்ப் பெண்ணின் முகம் தெரிய மீண்டும் அதிர்ந்தான். அது.. அது....பிரம்ம நாயகி! தித்தனின் ஒன்று விட்ட சகோதரி. அவளுக்கும் வேலனுக்கும் தான் மணம் பேசி இருந்தார்கள். ஆனால் அவள் எப்படி? எப்போது சதியில் ஈடுபட்டாள்? வேலன் கட்டாயப் படுத்தியிருப்பானோ?ஆனல் நாயகியின் நடத்தையைப் பார்த்தால் கட்டாயத்துக்காகச் செய்பவள் போலத் தெரியவில்லையே? யோசித்தபடியே மூச்சும் கூட விடாமல் அமர்ந்திருந்தான்.

"யாரும் இல்லை அத்தான்" என்று பிரம்ம நாயகி சொல்ல மூங்கில் படலை மூடி விட்டு இருவரும் உள்ளே சென்று விட்டார்கள்.

அவமானத்தில் முகம் சிவந்து போனது தித்தனுக்கு. இவள் இப்போது என்ன காரணத்துக்காக வந்திருந்தாலும் வந்தது தவறு தான். இது ஊருக்குள் இருக்கும் குடும்பத்தாருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? எவ்வளவு பெரிய அவமானம் நேரும்? தித்தன் குடும்பத்துப் பெண்கள் அனைவருமே இப்படித்தான் எனச் சொல்ல மாட்டார்களா? சே! மான அவமானத்துக்குக் கூட பயப்படாமல் பிரம்ம நாயகி இப்படிச் செய்கிறாளே? " என யோசித்தான்.

அந்த யோசனை எல்லாம் சில விநாடிகள் தான். அதற்குள் அவனது கடமை உணர்வு விழித்துக் கொண்டது.

"யாராக இருந்தால் என்ன? என் சகோதரியாகவே இருந்தாலும் சதிச் செயலில் ஈடுபட்டால் அதைக் கண்காணிக்க வேண்டியது என் கடமை. இப்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்க வேண்டுமே? குகையின் உள்ளே அவர்கள் பேசுவதை எப்படிக் கேட்க? சட்டென போர்ப்பயிற்சியில் சொல்லிக்கொடுத்த ஒரு உத்தி நினைவுக்கு வர தன்னைச் சுற்றி தீவிரமாகத் தேடினான். அவன் தேடிய கட்டுக்கொடியின் காய்ந்த தண்டுகள் சற்று தொலைவில் இருந்தன. பாய்ந்து அவற்றை எடுத்தான். அவை ஒரு மெல்லிய தண்டு போல சற்றே தடித்த நூல் போல கையோடு வந்தன. அதன் இரு முனைகளையும் நீக்கிய பிறகு அது ஒரு குழல் போலக் காட்சியளித்தது. அதன் ஒரு முனையை மெதுவாகச் சென்று குகையின் மூங்கில் தடுப்பின் கீழ் வைத்தான். மற்றொரு முனையை தான் மறைந்திருந்த இடத்துக்குச் சென்று காதில் வைத்துக்கொண்டான். இப்போது அவர்கள் பேசுவது மெலிதாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான்.

"சிவநேசனைத்தான் தாக்க வேண்டும். அவன் கையில் தான் ஓலை இருக்கும்." என்றான் வேலன்.

இதை ஓரளவு தித்தன் எதிர்பார்த்தான் என்றாலும் வேலனின் குரலில் அந்த சதிச் செயலைக் கேட்ட போது விக்கித்துப் போனான் தித்தன். தன்னைச் சுற்றி உலகமே சுழல்வதாகத் தோன்றியது. "அப்படியானால் சதி பற்றிப் பேசத்தான் வந்தாளா பிரம்ம நாயகி? அவள் எப்படி இதில் ஈடுபட சம்மதித்தாள்? வேலன் ஏதேனும் மந்திரம் செய்து விட்டானோ?" என எண்ணினான் தித்தன். மேலும் அவர்கள் பேசுவது கேட்டது.

"இன்னும் இரு நாட்களில் அவர்கள் கிளம்புவார்கள். அதற்கு முன்னாலேயே நாம் முன்பே சொன்ன இடத்தில் மறைந்து கொள்ள வேண்டும். அவர்கள் அப்படியும் அந்த வழியில் தான் வந்தாக வேண்டும். அவர்களைத் தாக்கி ஓலையைக் கைப்பற்ற வேண்டும்."

"நல்ல யோசனை தான் அத்தான். இதில் என் பங்கு என்ன?"

"ஓலை கைமாறிய பிறகு நீயும் நானும் விந்தையன் அனுப்பிய ஆட்களைப் போல நடித்து ஓலையை கொடுங்கண்ணனாரிடம் அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் என்ன செய்ய உத்தேசித்தேசித்திருக்கிறார்கள் எனத் தெரிய வரும்."

"உம்! சரி அத்தான்!"

"உனக்கு இன்னொரு வேலை கூட இருக்கிறது."

"சொல்லுங்கள்"

"இன்றும் நாளையும் நீ அந்த சிவநேசனைக் கண்காணி! அவன் எங்கு போகிறான்? யாரோடு பேசுகிறான்? என்ற விவரங்களை சேகரி"

"சரி அத்தான். ஆனால் என் அண்ணன் தித்தன்?"

"அதைப் பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம் நாயகி! முதலில் இந்த வேலையை முடி."

"உம்! சரி அத்தான்! ஆனால் எப்படி உங்களிடம் நான் விசயத்தைச் சொல்வது? இப்போதே பருவப்பெண்ணான நான் இப்படி தனியாக வருவதை யாரேனும் பார்த்தால் தவறாக நினைப்பார்கள் அல்லவா? "

"ஆமாம்! நீ சொல்வதும் சரி தான். ஒன்று செய்! நீ விசயத்தைச் சேகரித்ததும் என்னிடம் சொல்ல வேண்டுமானால் சித்திர நதியின் வட கரைக்கு வந்து விடு. அங்கு பெண்கள் பலரும் துணி துவைக்க, குளிக்க வருவது வழக்கம் தானே? அங்கு நீ வந்தால் யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். நதிக்கரையை ஒட்டியபடி கோயில் ஒன்று இருக்கிறதல்லவா? அங்கு நான் காத்திருக்கிறேன்."

"நீங்கள் அங்கு வந்து விட்டீர்கள் என நான் எப்படி தெரிந்து கொள்ள?"

"நல்ல கேள்வி தான். இன்று செவ்வாய்க் கிழமை. நாளை மாலை பொழுது சாயும் நேரம் நான் சாமி கும்பிடப் போவது போல வந்து விடுவேன். கோயில் மணியை மூன்று முறை தொடர்ந்து அடிக்கிறேன். அது தான் நான் அங்கே வந்து விட்டதற்காகன் சங்கேதம். நீயும் வந்து விடு."

"மிகவும் நல்ல யோசனை அத்தான். கோயிலில் வைத்து நான் உங்களோடு பேசினால் கூட கல்யாணம் செய்துகொள்ளப் போகும் இருவரும் தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள், அதுவும் கோயிலில் வைத்துப் பலர் முன்னிலையில் தானே? என யாருக்கும் எதுவும் சந்தேகம் தோன்றாது."

"பிறகென்ன? அப்படியே செய்வோம். இப்போது நீ புறப்படு. வந்து நேரமாகி விட்டது."

"அத்தான்! நீங்கள் ஈடுபட்டிருப்பதோ மிகவும் ஆபத்தான பணி! ஆகையால் மிகவும் கவனமாக இருங்கள். என் உயிர் உங்கள் கையில் தான் என்பதை மறக்க வேண்டாம்."

"கவலைப் படதே நாயகி! இந்தப் பணி நல்ல படியாக முடியட்டும். பிறகு நம் திருமணம் தான். செல்வச் செழிப்போடு வாழ்வோம்."

"இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக முடியட்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்."

"நாயகி! உன்னைப் போன்ற பெண்ணை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. மாலை மயங்கியதும் பெண்கள் வெளியே வரவே தயங்கும் காலத்தில் நீ எனக்காக காட்டிலும் மேட்டிலும் இரவு பகல் பாராது பயணம் செய்யவும். இப்படி உளவு வேலை செய்யவும் ஒப்புக்கொண்டாயே? உனக்கு நிகரே இல்லை."

"நீங்கள் தானே சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் பெண்கள் போர் வீரர்களாகவும், இன்னும் பல தீரச் செயல்கள் புரிபவர்கள்களாகவும் இருந்தார்கள் என்று சொன்னீர்கள்? அவர்கள் வழி வந்தவள் தானே நான்? உங்களுக்காக இதைக் கூடவா செய்ய மாட்டேன்?" என்றாள் பிரம்ம நாயகி.

"இனியும் நீ இங்கிருந்தால் நல்லதில்லை. கிளம்பு. வழியில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் நாயகி! யாரேனும் கேட்டால் என்ன சொல்வாய்?"

"காட்டில் மூலிகை பறிக்க வந்ததைச் எனச் சொல்லி விடுவேன். அதற்காக போகும் வழியில் சில மூலிகைகளையும் பறித்துப் போவேன். சென்று வரட்டுமா அத்தான்?" என்றாள்.

கேட்டுக்கொண்டிருந்த தித்தனுக்கு ரத்தம் கொதித்தது.

"வேலன் என்ன மனிதன் தானா? பெண் என்றும் பாராமல் இப்படிப்பட்ட கேவலமான ஆபத்தான வேலையில் பிரம்ம நாயகியை ஈடுபடுத்துகிறானே? இந்தப் பெண்ணும் 1500 ஆண்டுகளுக்கு முன்..என ஏதோ பிதற்றுகிறாள்? இப்போது என் முதல் வேலை என்ன? இதைப் பற்றி ஐயனிடம் சொல்ல வேண்டுமா கூடாதா? மதுரை போகும் வழியில் எங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என்பது உறுதியாயிற்று. ஆனால் அது எங்கே நடக்கும்? இவனுடன் இன்னும் எத்தனை பேர் வருவார்கள்? இறைவா! இது என்ன சோதனை? சதியில் ஈடுபட்டிருப்பது என் தங்கையும் உற்ற நண்பனும். அதோடு அவர்கள் குறி வைத்திருப்பதோ மற்றொரு நண்பனை. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு வழியாட்டியருள்வாய் சிவனே!" எனக் கண் மூடிப் பிரார்த்திதான்.

பிரம்ம நாயகி சென்று விட்டாள். போகும் வழியில் ஏதேதோ பச்சிலைகளைப் பறித்தபடி அவள் செல்வதை கவலையோடும், வேதனையோடும் பார்த்துக்கொண்டிருந்தான் தித்தன்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 6:

தான் பார்த்தது கேட்டது அனைத்தையும் சிவநேசனிடம் ஒளிக்காமல் கூறினான் தித்தன். தன் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருத்தி இது போன்ற சதி வேலையில் ஈடுபடுவது அவமானம் என்றாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த விஷயத்தை சாதாரணமாக நினைக்கவில்லை சிவநேசன்.

"ஆணோ பெண்ணோ? யாராக இருந்தாலும் சதியில் ஈடுபடுவது மிகவும் தவறு தான். நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக வேலையை முடிக்க வேண்டுமே அன்றி இதைப் பற்றி குரு நாதரிடம் சொல்வது அத்தனை நல்லதாகப் படவில்லை." என்றான் சிவநேசன்.

"இல்லை சிவநேசா! இந்த முறை விட எனக்கு மனம் இல்லை. இது மிகப்பெரிய சதியாக இருக்கிறது. ஒரு வேளை நம்மால் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் போனால் கூட நம்மைப் போல வேறு இருவரை குரு நாதர் அனுப்புவார் அல்லவா? அதற்காகவாவது நாம் சொல்லத்தான் வேண்டும்." என்றான்.

சில நிமிடங்கள் சிந்தித்தான் சிவநேசன். பிறகு அரை மனதாக ஒப்புக்கொண்டான். இருவரும் நேராக விந்தையன் ஆசிரமத்துக்குச் சென்றனர். அவரும் ஆவலாக வரவேற்றார்.

"வாருங்கள் மக்களே! நாளை மறு நாள் நீங்கள் புறப்பட வேண்டும். எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டீர்கள் அல்லவா?"

"குதிரை தயாராக இருக்கிறது ஐயனே! புதிதாக லாடம் கூட அடித்தாகி விட்டது. ஆனால்...உங்களிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்."

"தாராளமாகச் சொல்லலாம்"

"ஐயனே! என்னையும் சிவநேசனையும் சில ஒற்றர்கள் வேவு பார்க்கிறார்கள். அதோடு எங்களை வழியிலேயே மடக்கி ஓலைகளைக் கவர்ந்து செல்லவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது." என்றான் தித்தன்.

குருதேவரின் முகம் மாறியது.

"என்ன? என்ன? நமக்கு எதிராக சதியா? இந்த விவரமெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் தித்தா?"

"ஐயனே! இதைச் சொல்வதால் எனக்கு அவமானம் தான் மிஞ்சும். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியாமல் சில விஷயங்களை நாங்கள் மறைத்து விட்டோம். அது கூட நன்மை கருதித்தானே தவிர பொய் சொல்ல வேண்டும் என்ற காரணத்திறகாக அல்ல." என்றான் தித்தன்.

"நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள். நீங்கள் செய்தது நன்மைக்கா அல்லது தீமைக்கா என்பதை நான் முடிவு செய்து கொள்கிறேன்." என்றார். அவர் குரல் மிகவும் கடுமையாக இருந்தது. எப்போதும் இனிமையாகப் பேசும் ஐயன் கடுமையாகப் பேசியது தித்தனுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

ஆசிரமத்திலிருந்து திரும்பும் இரவில் சிவநேசன் மீது தாக்குதல் நடந்தது, பிறகு ஒரு பெண்ணைத் தொடர்ந்து போய் வேலனின் சதியைக் கண்டறிந்தது அவர்களது திட்டம் என அனைத்தையும் கூறி முடித்தான் தித்தன். அவன் பேசப் பேசவே கூடத்தின் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தார் விந்தையன். பேசி முடித்ததும் அங்கே அமைதி நிலவியது. அது புயலுக்கு முன்னே இருக்கும் அமைதியைப் போலிருந்தது.

"நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என உங்களுக்குப் புரிகிறதா?" என்றார் விந்தையன் கர்ஜிக்கும் குரலில்.

"மன்னிக்க வேண்டும் ஐயனே"

"நான் மன்னிப்பதால் எல்லாம் சரியாகி விடுமென்றால் இப்போதே உன்னை மன்னித்து விடுகிறேன் தித்தா! ஆனால் அப்படி இல்லையே? சதியை முறியடிக்க வேறு ஒரு திட்டத்தை நாம் செயல்படுத்தியாக வேண்டுமே? அதற்கான சமயம் இல்லையே?"

"ஐயனே! வீணே கோபப்படுவதால் என்ன பயன்? அடுத்து என்ன என்பதைப் பார்க்கலாமே?" என்றான் சிவநேசன். அவனை உறுத்து நோக்கினார் விந்தையன்.

"நீ என்ன சொல்ல வருகிறாய்?"

"ஐயனே! நாளையே தான் கிளம்ப வேண்டுமா? ஒரு வாரம் அல்லது பாத்து நாட்கள் கழித்து நிதானமாக திட்டமிட்டு ஓலையைக் கொண்டு செல்லலாமே?"

"ஹூம்! இது தான் உன் அதி புத்திசாலித்தனமான யோசனையா? மிகவும் பிரமாதம். நான் அதைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டேனா? ஆனால் அப்படிச் செய்ய இயலாது. காரணம் கொடுங்கண்ணன் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பான். நீங்கள் இந்த தேதியில் வருவீர்கள் என நான் ஏற்கனவே செய்தி அனுப்பி விட்டேன். அப்படி நீங்கள் குறித்த நாளில் செல்லா விட்டால் இங்கே நிலைமை சரியில்லை என உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த ஓலையில் குறிப்பிட்டுள்ளேன்."

கல்லாய்ச் சமைந்து போனான் தித்தன்.

"ஐயோ! எத்தனை பெரிய தவறைச் செய்து விட்டேன்? குருதேவரிடம் முன்பே சொல்லியிருந்தால் இந்த நெருக்கடி இல்லையே?" என எண்ணி ஏங்கினான் தித்தன். அவனுக்கு தான் கடமை தவறி விட்டோம் என உறுத்தியது.

"அது மட்டும் அல்ல! நீங்கள் செல்லவில்லை என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் கொடுங்கண்ணனுக்குத் தெரியாது. அதை ஒற்ரார்கள் பயன்படுத்திக்கொண்டு போலி ஓலை தயரித்து உங்களைப் போல நடித்தால் என்ன செய்ய? அவர்கள் ஏற்கனவே அந்த யோசனையில் தான் இருக்கிறார்கள் என நீங்களே கூறினீர்களே?" என்றார் கடுமையாக.

பதிலே பேசாமல் நின்றிருந்தனர் இருவரும். தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருந்தான் தித்தன். அவன் போர்க்கலைகள் பழகிய போது கற்பித்த குரு சில அரசியல் தந்திரங்களையுக் கற்பித்தார். அவற்றை நினைவுக்குக் கொண்டு வர முயன்றான். சட்டென ஒரு யோசனை பளிச்சிட்டது.

"ஐயனே! என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் செய்தது மன்னிக்கவே முடியாத தவறு தான். ஆனால் அதற்கான பிராயச் சித்தமும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது அதன் படி செய்தால் நேர விரயமும் இல்லை, குறித்த நேரத்தில் ஓலை கொடுங்கண்ணனாரிடம் சென்று சேரும். சொல்லலாமா?"

"சீக்கிரம் சொல்லேன். அதற்கென்ன நான் நாள் பார்த்தா கொடுக்க வண்டும்?" என்றார் விந்தையன் கோபமாக.

"ஐயனே! நானும் சிவநேசனும் குறிப்பிட்ட படி ஓலை எடுத்துச் செல்கிறோம். ஆனால் அது போலி ஓலையாக இருக்கட்டும். சாதாரண நலம் விசாரிப்பு அல்லது ஏதாவது நோய்க்கான மருந்து இப்படி. நாங்கள் கிளம்பும் அதே நேரம் உங்களின் சீடர்களில் வேறு இருவர் அசல் ஓலைகளை எடுத்துச் செல்லட்டும். பகைவர்களுக்கு நாங்கள் செல்வது தானே தெரியும்? ஆகையால் எங்களைத் தான் தாக்குவார்கள். அப்படியே எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் கூட அவர்கள் கைகளுக்குப் போகும் ஓலைகளால் எந்த விளைவும் இருக்காது. அதே நேரம் மற்ற இருவரும் சரியான ஓலைகளோடு மதுரைக்குச் சென்று விடுவார்கள்." என்றான்.

தித்தனைக் கூர்ந்து நோக்கிய விந்தையனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"சபாஷ்! சரியான யோசனை! அப்படியே செய்வோம்." என்றார்.

"ஐயனே! வேறு இருவரை அனுப்பும் பட்சத்தில் நாங்கள் செல்லவே தேவையில்லையே? அவர்கள் செல்வது தான் பகைவர்களுக்குத் தெரியாதே?"

"இருக்கலாம் சிவநேசா! ஆனால் நீங்கள் செல்லவில்லையென்றால் அவர்களுக்கு சந்தேகம் வரலாம் அல்லவா? அதற்காக நீங்கள் இருவரும் செல்லத்தான் வேண்டும். கவலைப் படாதே! உன் உயிருக்கு ஆபத்து நேராது." என்றார் பெரியவர்.

மௌனமானான் சிவநேசன்.

"சிவநேசா நீ ஆசிரமத்தின் சமையற்கட்டுக்குச் சென்று வெளியனையும், குருகூரானையும் வரச் சொல். அவர்கள் தான் சரியான ஓலையை எடுத்துச் செல்லப் போகிறார்கள்." என்றார் விந்தையன்.

அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது சிவநேசனுக்கு.

"ஐயனே! அவர்களா? இருவரும் சரியான மடையர்களாயிற்றே? அதுவும் போக பகைவர்கள் மிரட்டினால் மிரட்டுவது என்ன? கோபமாகப் பார்த்தாலே ஓலையை எடுத்துக் கொடுத்து விடுவார்களே? அவர்களையா அனுப்பப் போகிறீர்கள்?" என்றான்.

"ஆம்! நீ சொன்ன அத்தனை காரணங்களுக்காகவும் தான் நான் அவர்களை அனுப்பப் போகிறேன். இது போன்ற ஆட்களிடம் நிச்சயம் விந்தையன் ஓலைகளைக் கொடுத்தனுப்ப மாட்டார் என பகைவர்கள் நினைப்பார்கள் அல்லவா? அதுவும் போக அவர்களிடம் தான் அசல் ஓலை உள்ளது என எப்படித் தெரியும்? சமையல் வேலை தேடி தலை நகருக்குச் செல்கிறார்கள் இருவர். அவ்வளவு தானே?" என்றார் நிதானமாக.

மீண்டும் மௌனமானான் சிவநேசன்.

விந்தையன் வெளியனையும், குருகூரானையும் அழைத்து விவரங்கள் கூறினார். அவர்களுக்கு முதலில் புரியவே இல்லை. மூன்று முறை கூறிய பிறகே தாங்கள் ஓலையை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது புரிந்தது.

"அப்படியே செய்கிறோம் ஐயனே! நீங்கள் கொடுக்கும் ஓலையை கொடுங்கண்ணனாரிடம் கொடுத்து விட்டுத் திரும்பி விடுகிறோம். ஆனால் அதுவரை இங்கே இருப்பவர்களுக்கு உணவு யார் தயரிப்பார்கள்?" என்றான் குருக்கூரான்.

"அதற்கு நான் ஊரிலிருந்து யாரையாவது ஏற்பாடு செய்து கொள்கிறேன். நீங்கள் நாளை அதிகாலை புறப்படத் தயாராகுங்கள். உங்களுக்குத் தேவையான உணவை தயார் செய்து கொள்ளுங்கள். அது தான் நல்லது. ஊருக்குள் சென்று உணவு உண்ண வேண்டாம்."

"சரி ஐயனே! புளி சாதம் செய்து எடுத்துக்கொண்டால் மூன்று நாட்கள் ஆனாலும் கெடாது. அதற்கு துணையாக அப்பளமும், வற்றல் வகைகளையும் பொரித்து எடுத்துக்கொள்கிறோம். அது போதுமல்லவா?" என்றான் வெளியன்.

கோபம் மீறியது சிவநேசனுக்கு.

"நீங்கள் என்ன வன போஜனத்துக்கா செல்கிறீர்கள்? ஓலையை பாதுக்காப்பாக வைத்திருந்து வேலையை முடிக்கப் பாருங்கள். அதை விடுத்து, புளி சாதமாம் வற்றலாம்." என்றான்.

குருதேவர் சிரிக்க தித்தனும் சிரித்து விட்டான். வேறு வழியின்றி சிவநேசனும் சிரிக்க சூழ்நிலை சற்றே இலகுவானது.

"தித்தா! நீங்களும் அதே நேரத்தில் தான் புறப்பட வேண்டும். நீங்களும் காட்டு வழியே பயணம் செய்யுங்கள். ஆனால் சில ஊர்களுக்குள்ளும் நுழைந்து வாருங்கள். மாங்குடி, இடைநாடு போன்ற நகரங்களுக்குள் நீங்கள் சென்றால் நல்லது."

"அப்படியே செய்கிறோம் ஐய்னே!"

"அப்படியானால் குருதேவா! இவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உணவு தயாரிக்க வேண்டாமா?" என்றான் குருகூரான். அவனை முறைத்தான் சிவநேசன். வேண்டாம் என மறுத்து விட்டார் விந்தையன். அதன் பிறகு குருகூரானுக்கும், வெளியனுக்கும் எப்படிச் செல்ல வேண்டும்? இரவு எங்கே தங்க வேண்டும்? ஓலைகளை எப்படி பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள வெண்டும்? என்பவற்றைக் கற்பித்தார் விந்தையன். இருவரும் தலையை ஆட்டினார்கள். அவர்களை போகச் சொல்லி விட்டார் விந்தையன்.

"தித்தா! சிவநேசா! நீங்கள் கொண்டு செல்வது முக்கியமான ஓலை இல்லை என்பது நமக்குத்தான் தெரியும். பகைவர்களுக்குத் தெரியாது, ஆகையால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உயிருக்கே ஆபத்து நேரிட்டாலும் உங்கள் கையில் உள்ள ஓலை போலி என்று சொல்லி விடாதீர்கள். நீங்கள் காட்டு வழியில் போகும் போது வெளியனுக்கும், குருகூரானுக்கும் அவர்களுக்குத் தெரியாமலே பாதுகாப்புக் கொடுங்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர்கள் அசல் ஓலையை கொடுங்கண்ணனிடம் கொண்டு சேர்க்கும் வரையில் நீங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருங்கள்" என்றார்.

அதன் பிறகே சிவநேசன் முகத்தில் நிம்மதி பிறந்தது.

"ஐயனே! நாங்கள் எப்போது திரும்பி வருவது?" என்றான் சிவநேசன்.

"இறைவன் அருளால் நீங்கள் ஆபத்தில்லாமல் தப்பித்தால் அவர்கள் ஓலையைக் கொடுத்த உடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு நீங்கள் திரும்பி விடுங்கள். அதன் பிறகு எல்லாவற்றையும் கொடுங்கண்ணன் பார்த்துக்கொள்வான்." என்றார்.

மௌனமாகத் தலையசைத்தான் தித்தன். அவனுக்கு தான் உயிரோடு திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனாலும் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. நாட்டுக்காக உயிர் நீத்தால் மங்காப் புகழ் கிடைக்கும் என அவன் மனம் நினைத்தது. நாளை அதிகாலை வருமாறும் அப்போது ஓலைகளைக் கொடுப்பதாகவும் கூறி அவர்களை அனுப்பி விட்டார் விந்தையன். பகல் பொழுதில் அந்த காட்டின் வழியே நடந்தார்கள் சிவநேசனும் தித்தனும்.

"இப்போது என்ன செய்ய தித்தா? அசல் ஓலை வெளியன் வசம் போய் விட்டதே?" என்றான் சிவநேசன் வருத்தமாக.

"இப்போது வருந்தி என்ன பயன்? முதலிலேயே குருநாதரிடம் சொல்லியிருக்க வேண்டும். எப்படியோ ஓலைகள் பாதுகாப்பாக மதுரை சென்று சேர்ந்து விடும். அது போதும் எனக்கு."

"சுயநலமில்லாத சுத்த வீரன் நீ தித்தா! உன்னை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. இவன் தான் உங்களிடம் சொல்ல வேண்டாம் எனச் சொன்னான் என நீ ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே? அது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது நண்பா!"

"நீ சொன்னாய் தான். ஆனால் நானும் யோசிக்காமல் சரியென்றேனே? அது என் தவறு தானே?அப்படி இருக்க உன் மேல் பழி போடுவானேன்?" என்றான் தித்தன்.

"இதற்குப் பெயர் தான் பெருந்தன்மை தித்தா! அது இருக்கட்டும். நம் திட்டம் என்ன?"

"பெரிதாக ஒன்றும் இல்லை. போலி ஓலைகளைகாக இருந்தாலும் நாம் அவற்றைக் கவனமாகப் பாதுக்காக்க வேண்டும். அப்போது தான் பகைவர்களுக்கு சந்தேகம் வராது. அதோடு வெளியனுக்கும், குருகூரானுக்கும் தெரியாமல் அவர்களைத் தொடர்ந்து போய் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும். அதே நேரம் நம்மையும் பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். இது தான் திட்டம்."

"சே! குருநாதர் எப்படித்தான் அசல் ஓலையை அந்த மடையர்களை நம்பிக் கொடுக்க முடிவெடுத்தாரோ? என் மனம் ஆறவே இல்லை. அவர்களுக்கு வாசிக்கத் தெரியுமா தெரியாதா என்பதே தெரியவில்லை." என்றான் சிவநேசன் எரிச்சலான குரலில்.

"அதுவும் நன்மை தான். வாசிக்கத் தெரியாவிட்டால் தொல்லையே இல்லை பார்." எனச் சொல்லிச் சிரித்தான் தித்தன்.

"இந்த நிலையிலும் உனக்கு சிரிப்பு வருகிறதா?"

"ஏன் பதற்றப்படுகிறாய் சிவநேசா! இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இனி வீண் பேச்சில் காலம் கடத்திப் பயன் இல்லை. நான் விடை பெறுகிறேன். என் மனைவியிடமும் மற்றவர்களிடமும் பயணம் சொல்ல வேண்டும். அதிகாலை எழ வேண்டும் என்பதால் இரவு சீக்கிரமே உறங்குவது நல்லது. நாளை சந்திப்போம்" எனக் கூறி விடை பெற்றுக் கொண்டான் தித்தன். மனைவி வீடு வந்து மனைவியிடமும் மற்றவர்களிடமும் வேலை விஷயமாக மதுரை செல்ல இருப்பதாகச் சொன்னான். எப்படியும் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் என உறுதி கூறினான். தொட்டிலில் அமைதியாக உறங்கும் மகனின் முகத்தைப் பார்த்ததும் துக்கம் அடைத்தது.

"என் மகனே! செண்பகப் பொழிலா! எல்லாம் உனக்காகத்தான். நான் திரும்பி வருவேனோ மாட்டேனோ தெரியவில்லை. ஆனால் நான் செய்ய இருப்பது நல்ல காரியம். அதை உன் தாய் உன்னிடம் கூறுவாள். நன்றாக வளர்ந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்க வெண்டும்." என்று கூறினான். பிறகு தன் வீட்டுக்குத் திரும்பி உணவு உண்டு படுத்தவனுக்கு உறக்கம் இலகுவில் வரவில்லை. தன்னையும் மீறி உறங்கிய போது வேலன் ஒரு கூரிய வாளால் தன்னை வெட்ட வருவது போலக் கனவு கண்டு அலறி விழித்தான். நேரம் பார்க்க வானத்தின் விடி வெள்ளி அதிகாலை எனச் சொன்னது. மௌனமாக தயாராகத் தொடங்கினான் தித்தன்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாம் 7:

பயணம் நல்ல விதமாகவே தொடங்கியது. சிவநேசனும் தித்தனும் அதிகாலையில் குருநாதர் சொன்னபடியே ஆசிரமத்துக்குச் சென்று போலி ஓலைகளைப் பெற்றுக் கொண்டார்கள். வெளியனும், குருகூரானும் தயாராக சற்று நேரமாகி விட்டது. அவர்கள் வேலை தேடி செல்வதாகத்தான் அனைவரிடமும் சொல்லச் சொல்லி அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அந்த விஷயம் புரிந்து கிரகித்துக்கொண்டு கிளம்புவதற்கு தாமதமாகி விட்டது. அதோடு கைகளில் பெரிய பெரிய சோற்று மூட்டைகள் வேறு. சிவநேசனுக்கு வந்த கோபத்தில் அவர்களை அடித்தே இருப்பான். ஆனால் விந்தையன் இருந்ததால் பொறுமை காத்தான். கால்நடையாகவே கிளம்பினார்கள் வெளியனும் குருகூரானும். அவர்களை முன்னால் போக விட்டு யாருக்கும் தெரியாமல் குதிரையில் பின் தொடர்வ வேண்டும் என்பது விந்தையனின் கட்டளை தித்தனுக்கும் சிவநேசனுக்கும். அவ்வாறே கிளம்பினார்கள்.

அவர்கள் போகும் இடமெல்லாம் தாங்களும் போனால் சந்தேகம் வரலாம் என்பதால் அவர்கள் காட்டு வழியே செல்லும் போது தாங்கள் ஊர்களின் வழியே செல்வது எனவும். ஊர் எல்லை வந்தவுடன் காட்டுப் பாதையில் போய் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுவது எனவும் திட்டமிட்டுக்கொண்டார்கள். அது எளிதாகவும் இருந்தது. ஏனெனில் தித்தனும், சிவநேசனும் குதிரையில் விரைவாகச் செல்ல முடிந்தது. அதனால் அவர்களை கண்காணிப்பதும் பாதுகாப்புக் கொடுப்பதும் எளிமையாக இருந்தது. ஞயிறன்று அதிகாலைக் கிளம்பினார்கள். பகல் பொழுது எந்த தடங்கலும் இல்லாமல் கடந்தது. நண்பகலில் குருகூரானும் வெளியனும் காட்டில் ஒரு ஓடையின் அருகே நின்றார்கள். அதற்கு சற்று தொலைவில் தான் சிவநேசனும், தித்தனும் அவர்களுக்காகக் காத்திருந்தார்கள்.

"அருமையான இடம் குருகூரா! இங்கேயே உணவு உண்ணலாம் அல்லவா? புளி சாதத்தை நினைத்தாலே நாவில் நீர் ஊறுகிறது." என்றான் வெளியன்.

"ஆம்! உணவருந்த வேண்டியது தான். தண்ணீரும் பக்கத்திலேயே இருக்கிறது. நான் சென்று தேக்கு இலைகளைப் பறித்து வருகிறேன். நீ உணவை தயாராக எடுத்து வை" என்று சொல்லி விட்டு நேராக தேக்கு மரங்களை நோக்கி நடந்தான் குருகூரான். அந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் தான் தித்தனும் சிவநேசனும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்.

"சிவநேசா! யாரோ வரும் ஓசை கேட்கிறது. குதிரையை மறைத்து வைக்க நான் செல்கிறேன். நீ இந்தப் புதரில் ஒளிந்து கொள்." என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல் குதிரையை இழுத்துக்கொண்டு மற்றொரு பெரிய புதர் மறைவுக்குச் சென்றான் தித்தன். அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது. குருகூரான் ஒரு கத்தியைக் கொண்டு தேக்கு இலைகளை அறுத்துக்கொண்டிருந்தான். ஏதோ பாட்டை வேறு பாடினான். சிரித்து விட்டான் தித்தன். அவனது சிரிப்பொலி அந்த வனப்பகுதியில் எதிரொலிக்க பயந்து போனான் குருகூரான்.

"யா....யார் சிரித்தது? யாராக இருந்தாலும் வெளியில் வாருங்கள்! என் கையில் கத்தி இருக்கிறது. எறிந்து விடுவேன்." என்றான்.

சிவநேசன் சிரித்து விட்டான். அதற்கு மேல் தாங்க முடியாத குருகூரான் இலைகளை கீழே போட்டு விட்டு ஓடினான்.

"வெளியா! வெளியா! இந்தக் காட்டில் பேய் பிசாசுகள் இருக்கின்றன. இங்கே நின்றால் ஆபத்து தான். ஓடு ஓடு" என்று கத்திக்கொண்டே ஓடினான். வெளியனுக்கு காது கேட்டது என்றாலும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.

"குருகூரா! என்ன உளறுகிறாய்? பட்டப்பகலில் சூரியன் இப்படிக் காயும் போது பேயாவது பிசாசாவது?"

"ஐயோ! உனக்கு மூளையே இல்லையே! மடையன் என்பது சரியாகத்தான் இருக்கிறது. நன்றாகக் கேள்! நான் இலை அறுக்கப் போன போது இரு கொள்ளிவாய்ப்பிசாசுகள் சிரித்தன." என்றான் மூச்சு வாங்கியபடி.

அவனைத் தொடர்ந்து வந்த நண்பர்கள் இருவருக்கும் தங்களை அவன் கொள்ளிவாய்ப்பிசாசு எனச் சொன்னதைக் கேட்டு மேலும் சிரிப்பு தாங்க முடியாமல் வந்தது. கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தார்கள். ஆனாலும் உம்ஃப்ஹ் என்ற சத்தம் அந்தப் பகுதியில் எதிரொலித்தது. சட்டென நின்றான் வெளியன்.

"இப்போதாவது நம்புகிறாயா? பார் அவைகள் இங்கேயே வந்து விட்டன. இப்போது என்ன செய்ய?" என்றான் குருகூரான் பயந்த குரலில்.

"கவலைப் படாதே! எனக்கு என்னவோ இது பேய் வேலை எனத் தோன்றவில்லை. யாரோ காட்டு வாசிகள் நமது உணவை அபகரிக்க இப்படிச் செய்கிறார்கள் என நினைக்கிறேன். அதோ அந்தப் புதர்ப்பகுதியிலிருந்து தான் சத்தம் வந்தது. உன் கத்தியைக் கொடு. எறிந்து பார்க்கிறேன். ஏதாவது விலங்கானால் ஓடி விடும் அல்லவா?" என்றான் வெளியன்.

"தித்தா! இந்தப் பைத்தியக்காரன் நம் மீது கத்தியை எறிந்தாலும் எறிந்து விடுவான். ஆகையால் நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்வது தான் நல்லது." என்றான் சிவநேசன்.

தித்தனுக்குமே அது தான் சரியான யோசனையாகப் பட்டது. உணவுக்காக வந்தோம். பிறகு நாங்கள் ஊருக்குள் போய் விடுவோம் என்றால் நம்பி விடுவார்கள் குருகூரானும், வெளியனும். என திட்டமிட்டுக்கொண்டு குரல் கொடுத்தான் தித்தன்.

"வெளியா! கத்தியை எறிந்து விடாதே! நாங்கள் தான். சிவநேசனும் தித்தனும்." என்று குரல் கொடுத்துக்கொண்டே புதரின் மறைவிலிருந்து வெளிப்பட்டான் தித்தன். அவனைத் தொடர்ந்தான் சிவநேசன்.

"நீங்களா? நீங்கள் எப்படி இந்தக் காட்டுப்பகுதிக்கு வந்தீர்கள்? உங்களை ஊருக்குள் போகச் சொல்லித்தானே குருநாதர் கட்டளையிட்டார்? அவரது கட்டளையை நீங்கள் மீறலாமா?" என்றான் வெளியன்.

"அது மட்டுமா? நான் இலை பறிக்கப் போன போது என்னை ஏன் பயமுறுத்தினீர்கள்? அப்போதே நான் கத்தியை எறிந்திருந்தால் உங்கள் நிலை என்ன?" என்றான் குருகூரான். மீண்டும் சிரிப்பு வந்தது சிவநேசனுக்கு.

"இப்போது எதற்காக சிரிக்க வேண்டும்? பயமுறுத்தி விளையாட நான் தானா அகப்பட்டேன்?" என்றான் குர்கூரான் கோபமாக.

"மன்னித்து விடப்பா! உன்னை பயப்படுத்த வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. சிவநேசன் ஏதோ சொன்னான். அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தது. அப்போது பார்த்து நீ அங்கு வந்து என்னவோ ஏதோ என்று பயந்து போய் விட்டாய்." என்றான் தித்தன் சமாதானமாக.

பதிலே பேசவில்லை குருகூரான். ஆனால் அவனது கோபமும் தணியவில்லை என்பதை அவனது கடுகடுத்த முகம் சொல்லியது. ஆனால் வெளியன் விடவில்லை.

"ஊருக்குள் பயணம் செய்ய வேம்டிய நீங்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? அதற்கு பதிலே சொல்லவில்லையே?" என்றான்.

"இல்லை...வந்து எங்களுக்குப் பசி எடுத்தது. அது தான் சாப்பாடு வேண்டும் என்று....:" என இழுத்தான் சிவநேசன்.

"நீங்கள் ஊருக்குள் தானே சென்றீர்கள்? அங்கே இல்லாதா சாப்பாடா? சத்திரங்களுக்குச் சென்றால் அறுசுவை விருந்தே கொடுப்பார்களே?" என்றான் வெளியன் சந்தேகமாக.

என்ன பதில் சொல்ல? என சிவநேசனும் தித்தனும் யோசித்துக்கொண்டிருக்கும் போதே பேசினான் குருகூரான்.

"புரியவில்லையா வெளியா? நமது புளி சாதத்துக்கு முன்னால் அறுசுவை விருந்து எம்மாத்திரம்? நேற்று அதை நாம் தயர் செய்யும் போதே சிவநேசன் இரு முறை சமையற்கட்டை சுற்றிச் சுற்றி வந்தான். தித்தனும் மூக்கை உறுஞ்சி உறுஞ்சி வாசனை பார்த்தான். அதனால் தான் பசி வந்ததும் நம்மைத் தேடி வந்து விட்டார்கள்." என்றான் குருகூரான்.

"ஆமாம்! அதே தான். அதே தான். உங்கள் சமையற் திறமைக்கு முன்னால் மற்றவர்களின் உணவு எங்களுக்கு ருசிக்காது." என்றான் சிவநேசன்.

"இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே? உங்களுக்குத் தனியாகக் கட்டிக்கொடுத்திருப்பேனே?"

அசடு வழிந்து சமாளித்தார்கள் நண்பர்கள் இருவரும்.

"சரி பரவாயில்லை. நாம் பகிர்ந்து உண்ணுவோம். இம்முறை நீங்களே சென்று தேக்கு இலைகளைப் பறித்து வருங்கள்." என்றான் குருகூரான்.

ஒருவரை ஒருவர் பார்த்தவாறு தேக்கு இலைகளை பறிக்கச் சென்றனர் சிவநேசனும், தித்தனும். புதர் மறைவு வந்ததும் தித்தனின் தோளைப் பற்றி நிறுத்தினான் சிவநேசன்.

"இப்போது என்ன செய்ய தித்தா? இவர்களுக்கு நாம் இருப்பது தெரிந்து விட்டதே?"

"அதனால் ஒன்றும் பாதகமில்லை! உணவு உண்டு விட்டு, மீன்டும் நாங்கள் ஊருக்குள் போய் விடுவோம் என்றால் நம்பி விடுவார்கள். பிறகு வழக்கம் போல நாம் அவர்களைக் கண்காணிப்போமே?" என்ரான் தித்தன்.

"நல்ல யோசனை தான். ஆனால் அவர்கள் நம்ப வேண்டும் அவ்வளவு தான் என் கவலை."

"நம்பும்படி சொல்ல வேண்டும். வேறு வழியில்லையே?"

மீண்டும் மௌனமாக இலைகளை அறுத்துக்கொண்டு திரும்பினார்கள். வாழையிலையில் பொதியப்பட்ட சூடான புளி சாதம் இப்போது சூடு இல்லயென்றாலும் கம்மென மணத்தது. வாழையிலையின் மணமும் சேரவே உண்மையாகே தித்தனுக்கு நாவூறியது. இலை நிறையச் சோற்றை வைத்து அப்பளம் வற்றல் வகைகளைப் பரிமாறினான் குருகூரான். அமைதியாக உணடனர் நால்வரும். உண்மையிலேயே சுவை அபாரமாகத்தான் இருந்தது. வாழைக்காய் வறுவல், வெண்டைக்காய் வறுவல் எனப் பறிமாறினான் குருகூரான். வயிறாற உண்டு முடித்தனர்.

"சுவையான உனவு குருகூரா! மிக்க நன்றி" என்றான் சிவநேசன்.

"ஆம்! சுவை நாவிலேயே நிற்கிறதப்பா! உங்கள் திறமை பாராட்டப்பட வேண்டியது." என்றான் தித்தன்.

"நன்றி! நான் தான் முதலிலியேயே உங்களுக்கும் சேர்த்து உணவு கட்டிக்கொள்ளட்டுமா என்று கேட்டேனே? அப்போது வேண்டாம் என்றீர்கள். இப்போது பாராட்டுகிறீர்கள்" என்றான் குருகூரான்.

"உணவு மட்டுமே முக்கியமல்ல குருகூரா! அதனால் தான் அப்படிச் சொன்னோம். உன்னை புண் படுத்த அல்ல" என்றான் தித்தன் மென்மையாக.

"பிறகு ஏன் எங்களைத் தேடி வந்தீர்கள் உணவுக்கு?" என்றான் வெளியன்.

"உணவுக்காக மட்டும் உங்களைத் தேடி வரவில்லை. நீங்கள் இருவரும் பத்திராமாக இருக்கிறீர்களா? எனப் பார்க்கவும் தான் வந்தோம்." என்றான் சிவனேசன்.

குருகூரானும், வெளியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"உண்மையாகவா?"

"ஆம் வெளியா! நீங்கள் இருவரும் போர்ப்பயிற்சி சிறிதும் இல்லாதவர்கள். அதோடு காட்டுப்பாதை வேறு. அது தான் நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா எனப் பார்க்க வந்தோம்." என்றான் தித்தன். அது உண்மையும் தானே என்ற மன சமாதானம் அவனுக்கு.

"அப்படியானால் என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அதன் படி செய்வோமா?" என்றான் வெளியன்.

வெளியன் தனக்கு இருக்கும் மூளையை வைத்துக்கொண்டு திட்டம் வேறு போடுகிறானா என எண்ணிக் கொண்டான் சிவநேசன். மௌனமாகக் காத்திருந்தா தித்தன்.

"நீங்கள் சொல்வது போல எங்களுக்கு ஆயுதங்களைக் கையாளத் தெரியாது. காட்டுப்பகுதியில் எந்த விதமான ஆபத்தும் நேரலாம். அதனால் நீங்கள் ஏன் எங்களுடனே பயணிக்கக் கூடாது? அப்படிச் செய்வதால் எங்களுக்கு பாதுகாப்பு, உங்களுக்கு சுவையான உணவு. சரி தானே?" என்றான் வெளியன்.

இதைக் கொஞ்சமும் எதிர்பாராத தித்தன் தயங்கினான். சிவநேசனுக்கும் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

"நாங்கள் இருவரும் கலந்து பேசி விட்டுச் சொல்கிறோமே?" என்றான் தித்தன்.

தலையாட்டினார்கள் இரு சமையற்கலைஞர்களும். சிவநேசன் பின் தொடர மீண்டும் அந்தப் புதர்ப்பக்கம் போனார்கள்.

"நீ என்ன யோசித்திருக்கிறாய் தித்தா?"

"இப்படிக் கேட்ப்பார்கள் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. மறுத்தால் நம்மை தவறாக நினைப்பார்கள். சரியென்றாலோ குருவின் கட்டளையை மீறுவது போலாகி விடுமே? தர்ம சங்கடமாக அல்லவா இருக்கிறது?" என்றான் தித்தன்.

"அப்படி ஒன்றும் பெரிய சங்கடமில்லை. குருநாதர் என்ன சொன்னார்? குருகூரானும், வெளியனும் அசல் ஓலையை சரியான ஆளிடம் ஒப்படைக்கும் வரை நமது பொறுப்பு என்றார். அதோடு அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் நம் கடமை என்று தானே சொன்னார்? அவர்களுடனேயே சென்றால் அவர்களுக்கு இன்னமும் கூடுதல் பாதுகாப்புத்தானே? அப்படியானால் நாம் குருவின் கட்டளையை மீறவில்லையே?" என்றான் சிவநேசன்.

சில நிமிடங்கள் யோசித்தான் தித்தன்.

"இதை விட்டால் வேறு வழியும் இல்லை. காட்டுப்பகுதியில் பகல் நேரத்திலேயே பேய் பிசாசு என பயந்து ஓடும் இவர்கள், இரவில் என்ன செய்வார்கள்? கால்நடைப்பயணம் என்பதால் எப்படியும் மதுரை சென்று சேர மூன்று தினங்கள் பிடிக்கும். மூன்று இரவுகளை அவர்கள் கடக்க வேண்டும். காட்டு வழியில் எங்காவது தங்கும் போது எதையாவது பார்த்துப் பயந்து ஓலையைக் கூடப் போட்டு விட்டு ஓடி விட்டால் என்ன ஆகும்? குருநாதரின் திட்டம், எங்களின் முயற்சி அத்தனையும் பாழாகி விடுமே? ஆனால் மற்றொரு அபாயமும் உள்ளதே? எங்களைத் தாக்க வேலனும் அவனது ஆட்களும் வரலாமே? அப்படி வரும் போது குருகூரானையும், வெளியனையும் பார்த்தாம் சந்தேகம் வராதா அவர்களுக்கு?" என யோசித்தான்.

"என்ன யோசிக்கிறாய் தித்தா?" என்றான் சிவநேசன் அவசரமாக.

"நம்மைத் தாக்க வேலனும் அவன் ஆட்களும் கட்டாயம் வருவார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் இவர்களையும் ஆபத்துக்கு உள்ளாக்குவானேன்? அதோடு அசல் ஓலை அவர்களிட தான் இருக்கிறது என்பது தெரிந்து விட்டால் நம் அத்தனை முயற்சியும் பலனின்றிப் போய் விடுமே?" என்றான்.

"அதைப் பற்றி நானும் யோசித்தேன். ஆனால் நாம் இந்த ஆபத்தை எதிர் நோக்கித்தான் தீர வேண்டும். அசல் ஓலையை குருகூரானிடமும் வெளியனிடமும் கொடுத்தனுப்பும் திட்டம் கூட பகைவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை தெரிந்திருக்கிறது என வைத்துக்கொள், அந்த சமயத்தில் வீரன் ஒருவன் அவர்களுடன் இருப்பது நல்லது அல்லவா?" என்றான் சிவநேசன்.

"சரி! சிவநேசா! இந்தத் திட்டமிட்ட ஆபத்தை நாம் எதிர்கொள்வோம். வா! போய் அவர்களிடம் சொல்லலாம்" எனறான் தித்தன்.

நண்பர்கள் இருவரும் சமையற்கலைஞர்களை நோக்கி வந்தனர்.

"எவ்வளவு நேரம்? என்ன முடிவு செய்தீர்கள்?" என்றான் வெளியன்.

"நல்ல முடிவு தான் வெளியா. நாங்கள் உங்களுடனே பயணப்படுகிறோம். உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம்." என்றான் சிவநேசன்.

"நன்றி! நாங்களும் உங்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கிறோம். இதோ பார்த்தாயா இதில் தோசைகள் இருக்கின்றன. இதில் பணியாரங்கள். புளி சாதமும் கூட இருக்கிறது. மூன்று நாட்களுக்கு உணவுப் பற்றிய கவலையே வேண்டாம் உங்களுக்கு." என்றான் குருகூரான்.

பதிலே பேசாமல் நின்றனர் நண்பர்கள் இருவரும்.

"உணவைப் பற்றிப் பேசாதே குருகூரா! நம்மைக் கிண்டல் செய்வார்கள். ஏனெனில் இவர்கள் கடமை தவறாத மனிதர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உணவைப் பற்றிக் கவலைப்படுவது கேவலம் என்பது இவர்கள் எண்ணம்." என்றான் வெளியன் கசப்பாக.

"பிறகு ஏன் மதியம் உணவருந்தினார்களாம்? பட்டினியாக இருக்க வேண்டியது தானே? இவர்கள் தான் கடமை தவறாத மனிதர்கள் ஆயிற்றே?" என்றான் குருகூரான் கிண்டலாக.

"தவறாக நினைக்க வேண்டாம் சமையற்கலைஞர்களே! உணவைப் பற்றி கவலைப் படுவதும் அவசியம் தான். அதைப் புரிந்து கொண்டோம்." என்றான் தித்தன். அவனை நெருப்புப் பார்வை பார்த்தான் சிவநேசன்.

"உம்! அப்படி வாருங்கள் வழிக்கு! எப்போதுமே போர் வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் சமையற்காரர்கள் என்றால் இளக்காரம் தான். ஆனால் வேளா வேளைக்கு சாப்பிடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை." என்றான் குருகூரான்.

"சமையல் ஒரு கலை! அதை நாங்கள் பழிக்கவில்லை. ஆனால் தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கவும் தயாராக இல்லை." என்றான் சிவநேசன்.

அங்கே ஒரு வாக்குவாதம் உருவாவதற்கான சாத்தியக் கூறு எழவே, சமாதானம் செய்தான் தித்தன்.

"எந்த கலையும், திறமையும் சிறப்பானது தான், முக்கியத்துவம் வாய்ந்தது தான். அவரவர்க்கு அவரவர் திறமை உயர்வானது. இதில் பேசவோ, வாதம் செய்யவோ எதுவுமே இல்லை. ஆகையால் இருவரும் பேசாமல் இருங்கள்." என்றான். மீண்டும் நெருப்புப் பார்வை பார்த்து விட்டு அமைதியானான் சிவநேசன்.

குருகூரான் காதில் வெளியன் ஏதோ சொல்ல அவனும் மௌனமானான். பிறகே நிம்மதியானது தித்தனுக்கு. நால்வரும் ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள். இன்னமும் மூன்று நாட்கள் இருக்கின்றன. அதற்குள் வாக்குவாதங்கள் முற்றி சண்டையாக மாறினால் நல்லதல்லவே? நல்லவேளை இருவரும் மௌனமாகி விட்டார்கள் இந்தப் பயணம் முழுவதும் சிவநேசன் குருகூரானிடமும், வெளியனிடமும் பேசாமல் பர்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து கொண்டான் தித்தன்.

"சரி! புறப்படலாமா?" என்றான் சிவநேசன்.

"இப்போது தானே உணவு உண்டோம். சற்றே இளைப்பாறி விட்டுச் செல்லலாமே?" என்றான் குருகூரான்.

"இல்லை நண்பா! எவ்வளவு சீக்கிரம் மதுரையை அடைகிறோமோ அத்தனை நல்லது. ஆகையால் இளைப்பாற நேரமில்லை. புறப்படுங்கள்" என்றான் தித்தன்.

வாய்க்குள் ஏதேதோ முனகிக்கொண்டே கிளம்பினான் குருகூரான்.

"உணவு மூட்டைகளை குதிரையின் மேல் ஆறி விடுங்கள். நாங்களும் இப்போது உங்களுடன் கால்நடையாகவே பயணம் செய்வதால் குதிரையை உணவைச் சுமந்து வரப் பயன்படுத்திக்கொள்ளலாம்." என்றான் சிவநேசன். மகிழ்ச்சியாகி விட்டான் குருகூரான்.

"நல்ல மூளையப்பா உனக்கு. சோற்று மூட்டைகளை சுமந்து செல்வது மிகவும் சிரமமான விஷயம் தான். அதனாலேயே எங்களின் பயணம் தாமதப்பட்டது." என்றான்.

வெளியன் எதுவும் பேசாமல் தித்தன் கொண்டு வந்த குதிரையில் உணவு மூட்டைகளை வைத்துக் கட்டினான். இருவரின் பாரத்தைச் சுமந்து வந்த குதிரை, எடை குறைவான உணவைச் எளிதாகச் சுமந்தது. ஓடைக்கரையை விடுத்து கிளம்பினார்கள் நால்வரும். காட்டு வழி என்பதால் நால்வரும் ஒன்றாகச் செல்ல இயலவில்லை. முதலில் சிவநேசன், அவன் பின்னாக் குருகூரனும் வெளியனும் பின்னால் காவலாக தித்தன், அவனோடு குதிரை என அணிவகுத்துப் புறப்பட்டனர்.

"இன்னும் ஐந்து நாழிகையில் பொழுது சாய்ந்து விடுமே? நாம் எங்கே தங்குவது?" என்றான் வெளியன்.

"காட்டில் ஏதாவது மரத்தின் பெரிய கிளையில் தங்க வேண்டியது தான். இங்கே என்ன சத்திரங்களும், வீடுகளுமா இருக்கும்?" என்றான் சிவநேசன்.

"அது எனக்கும் தெரியும். ஆனால் மரக்கிளையில் தங்குவது ஆபத்தல்லவா? வன விலங்குகள், பாம்புகள் இருக்கலாமே?" என்றான் வெளியன்.

"உன்னைப் போன்ற ஒரு பயந்தாங்கொள்ளியை நான் பார்த்தாதே இல்லை. நீ ஏன் இந்தப் பயணத்துக்கு ஒப்புக்கொண்டாய்? பேசாமல் ஆசிரமத்தில் சமைத்துக்கொண்டிருப்பது தானே?" என்றான் சிவநேசன்.

"மீண்டும் என் தொழிலைப் பற்றி இழிவாகப் பேசுகிறாய். எச்சரிக்கை" என்றான் குருகூரான்.

"இல்லை! இல்லை! சிவநேசன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. காட்டுவழிப்பயணம் என்பதால் இது போன்ற இடர்ப்பாடுகள் இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தானே? அப்படி இருக்க பயப்படுவதால் பயனில்லை என்று தான் சொல்ல வந்தான்." என்று சமாதானம் செய்வித்தான். அதிகம் பேச்சு இல்லாமல் பகல் பொழுது கழிந்தது. மெல்ல மெல்ல சூரியன் மேலை வானத்தில் இறங்கலானான். இருளும் சூழ ஆரம்பித்தது.

"இனி நடந்தால் நாம் வழி தவறவும் வாய்ப்பு உண்டு. ஆகையால் இந்தப் பகுதியில் ஏதாவது ஒரு இடம் தேடி இரவைக் கழிக்க வேண்டியது தான்." என்றான் தித்தன். அதற்காகவே காத்திருந்தது போல நின்றார்கள் வெளியனும், குருகூரானும்.

"சரியாகச் சொன்னாய். ஆனால் இடம் எப்படித் தேடுவது? தெரியவில்லையே?" என்றான் குருகூரான்.

"அதைப் பற்றிக் கவலைப் படாதேயப்பா! இக்காட்டில் எங்காவது பெரிய மரம் பருத்த கிளைகளோடு இல்லாமல் போகாது. அதோடு மலைப்பகுதி என்பதால் ஏதேனும் குகைகள் கூட இருக்கலாம். நான் சென்று பார்த்து வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்" எனச் சொல்லி விட்டு நடந்தான் தித்தன். உத்தேசமாக மரங்கள் அடர்ந்த பகுதியைக் குறி வைத்து நடந்தான். வழி தவறாமல் இருக்க ஆங்காங்கே மரத்தில் அடையாளம் வைத்துக்கொண்டே சென்றான். மேலும் போகப் போக மரங்களின் பருமனும் அடர்த்தியும் அதிகமானது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகப்பெரிய மரம் ஒன்று பெரிய கிளைகளைப் பரப்பியபடி நின்றிருந்தது. அதன் கிளைகளே தாராளமாக ஒரு ஆள் படுக்கும் அளவுக்கு இருக்கவே அந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தான் தித்தன். மீண்டும் வந்த வழியே சென்று மற்றவர்களை அழைத்து வந்து காட்டினான். பாவம் குருகூர்ரான் மிகவும் பயந்து ப்பய் விட்டான்.

"ஏதோ குகைகள் கூட இருக்கலாம் எனச் சொன்னாயே?"

"இருக்கலாம் தான். ஆனால் அதில் புலியோ, கரடியோ இருந்தால் பரவாயில்லையா?" என்றான் சிவநேசன்.

"வேண்டாம்! வேண்டாம்! நான் மரக்கிளையிலேயே படுத்துக்கொள்கிறேன். பூண்டின் வாசனைக்கு பாம்புகளோ மிருங்களோ வராதாம். முன்னால் ஒரு முறை குருநாதர் சொல்லியிருக்கிறார். நான் பூண்டு கொண்டு வந்திருக்கிறேன். அதை நசுக்கி வைத்துக்கொள்கிறேன்." என்றான் குருகூரான். வெளியனும் பூண்டு கேட்டு வாங்கிக்கொண்டான்.

சுருக்கமாவே இரவு உணவை முடித்துக்கொண்டு மரத்தின் கிளைகளில் ஏறிப்படுத்தனர் நால்வரும். இருப்பதிலேயே கீழே உள்ள கிளையில் குருகூரானும், உயரமான கிளையில் தித்தனும் படுத்துக்கொண்டார்கள். இரவு நேர விலங்குகள் வேட்டையாடும் சத்தம், சில பறவைகளின் இறக்கையொலி, வேட்டையாடப்படும் விலங்கின் தீனமான அலறல் என சூழ்நிலையே அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனாலும் நடந்த களைப்பு மேலிட கண்கள் மூடின நால்வருக்கும்.

தொலைவில் நான்கு உருவங்கள் கையில் வேல், வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களோடும் இவர்களைத் தேடி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை போலக் காணப்பட்டான் வேலன். மெல்ல மெல்ல நால்வரும் உறங்கும் மரத்தை நெருங்கியது அந்தக் கூட்டம்.
 

Srija Venkatesh

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
123
Points
18
அத்தியாயம் 8:

நால்வரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஏதோ சத்தம் கேட்க முதலில் கண் விழித்தவன் சிவநேசன் தான். அவனுக்கு யாரோ சிலர் தங்கள் மரத்தை நெருங்குவது போல சத்தம் கேட்டது. ஆனால் உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. கவனமாகக் கேட்டான். மீண்டும் சரசரவென சத்தம். இம்முறை தித்தனும் சட்டென விழித்துக்கொண்டான். வானத்தில் அரை நிலவு தன்னால் இயன்ற அளவு வெளிச்சத்தைக் கொடுத்தது. அந்த வெளிச்சத்தில் பார்க்க எதுவும் தென்படவில்லை. ஆனாலும் தித்தனும் உள்ளுணர்வு ஏதோ ஆபத்து நெருங்குகிறது எனச் சொன்னது. சட்டென நன்கு விழிப்புத் தட்ட எழுந்தான் தித்தன். இம்முறை நிச்சயமாகக் காலடி ஓசைகள் தான். வேலனும் அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டபடி தாக்க வந்து விட்டார்கள் போலும் என எண்ணினான். சிவநேசனைப் பார்க்க அவனது முகத்திலிருந்து எதையும் ஊகிக்க முடியவில்லை.

மரத்தைச் சுற்றி யாரோ நிற்பது போலத் தென்பட அதிர்ந்து போனான் தித்தன். அவன் தாக்குதலை எதிர்பார்த்தான் என்றாலும் இத்தனை விரைவாக அதிலும் காட்டில் எத்தனையோ இடங்கள் இருக்க மிகச் சரியாக இவர்கள் உறங்கும் இடத்தைத் தேடி வந்து சுற்றி நிற்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. சுதாரித்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் கண்ட காட்சி கண்களில் நெருப்பு வைத்தது போல இருந்தது. வெளியன் ஒரு சிறு குச்சியில் கங்கு உண்டாக்கி அதனை அடையாளமாகப் பிடித்துக்கொண்டிருந்தான். இதயம் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது தித்தனுக்கு. அதே நேரம் அந்தக் காட்சியை சிவநேசனும் கண்டி விட்டான். அவன் முகம் குழப்பம், ஆத்திரம் என எல்லாவற்றையும் பிரதிபலித்தது.

வெளியனா? முட்டாள் என நாங்கள் நினைத்த வெளியனா ஒற்றன்? அவனா எங்களைக் காட்டிக்கொடுத்தான்? ஏன்? குருகூரானும் ஒரு வேளை ஒற்றனோ? முட்டாள்கள் போல நடித்தார்களோ? என்ற ஐயம் தோன்ற தாழ்ந்த கிளையைப் பார்த்தான் தித்தன். எதுவுமே தெரியாமல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் குருகூரான். அப்படியானால் வெளியன் மட்டும் தான் ஒற்றனா? இது தெரியாமல் அவனிடம் அசல் ஓலையைக் கொடுத்து ஏமாந்து விட்டாரே குருநாதர்? இப்போது என் முதல் கடமை அந்த அசல் ஓலையைக் காப்பாற்றுவது தான். சிவநேசனையும், குருகூரானையும் காப்பாற்றுவது பிறகு தான் என முடிவு செய்து கொண்டான்.

அந்த நேரத்திற்குள் கண்ணைக் கூசும் வெளிச்சம் வர கண்களை சற்றே மூடினான். திறக்கும் போது தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வேலன், பிரம்ம நாயகி, அவளது தோழி முல்லை, மற்றும் வேலனுக்கும் தித்தனுக்கும் தோழனான தங்கமணி நின்றிருந்தனர். வேதனையால் இதயம் சுருங்கியது தித்தனுக்கு. போயும் போயும் என் நண்பர்களும் சகோதரிகளுமா இப்படி துரோகிகளாக மாற வேண்டும்? என எண்ணிக் கொண்டான். ஆனால் உள்ளம் வலுவாக ஆனது. என்ன ஆனாலும் சரி, அசல் ஓலை அவர்கள் கைக்குப் போகக் கூடாது. இதில் யார் உயிர் போனாலும் சரி. என தீர்மானித்துக்கொண்டான். இதற்குள் குருகூரானும் விழித்துக் கொண்டான்.

கீழே நின்றிருந்த வேலன் கட்டளையிட்டான்.

"முதலில் தித்தனைக் குறி வையுங்கள். அவனது கை கால்களைக் கட்டி ஓரமாகப் போடுங்கள். அதன் பிறகு நமது வேலை சுலபம்." என்று கத்தினான் வேலன். அவனது குரல் மிகுந்த பலத்தைக் கொடுக்க மரத்திலிருந்து குதித்து இறங்கினான் தித்தன்.

"அது அத்தனை சுலபமில்லை வேலா! நீங்கள் எத்தனை பேர் இருந்தாலும் என் வீரத்துக்கு ஈடு கொடுத்தே ஆக வேண்டும்."

"தித்தா! இவர்களோடு என்ன பேச்சு? தாக்கு! உன் கையில் ஈட்டி இருக்கிறதல்லவா? கொல் அவர்களை" என்று கத்தினான் சிவநேசன்.

அதற்குள் தங்கமணியும், முல்லையும் தித்தனைத் தாக்கத் தொடங்கினார்கள். முல்லைக்கு தங்கமணி பயிற்சி அளித்திருப்பான் போலும் மிகத் திறமையாகத் தாக்கினாள். அவர்களோடு இப்போது வேலனும், பிரம்ம நாயகியும் சேர்ந்து கொண்டார்கள். சிவநேசன் ஒரு பக்கம் தன்னால் இயன்ற அளவு தாக்கினான்.

"தித்தா! நீ வீரன் தான். ஆனால் நால்வருக்கு முன்னல் உன்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் குருகுருகூரானும் அசல் ஓலையோடு தப்பித்துப் போய் விடுகிறோம். நீ இவர்களை கவனித்துக்கொள். குருகூரா! ஓலையை என்னிடம் கொடு" எனக் கத்தினான்.

"வேலா! நீ தித்தனைக் கட்டிப் போடு! சிவநேசன் கையில் அசல் ஓலை போகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். முல்லை நீ எனக்கு உதவு" என்று கத்தினான் வெளியன்.

"சீ! நீ ஒரு துரோகி! உன்னை நம்பி குருநாதர் ஓலையைக் கொடுத்தாரே? அவரது நம்பிக்கையை இப்படி நாசப்படுத்துகிறாயே?" என்றான் தித்தன். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.

எதுவுமே பேசாமல் அவன் மேல் பாய்ந்தான் வெளியன். மிகுந்த திறமையோடு தித்தனின் வாள் வீச்சுக்குத் தப்பித்தான். சிறு சிராய்ப்பு கூட அவனுக்கு ஏற்படவில்லை. அங்கே சிவநேசனும் மிகுந்த வீரத்தோடு போரிட்டான். ஆனால் அவனால் வெளியனின் வெறித்தனமான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. குருகூரான் ஓடப்பார்த்தான். ஆனால் அவனை முல்லை கீழே விழ வைத்து கால்களையும் கைகளையும் கொடிகளால் கட்டிப் போட்டு விட்டாள்.

தித்தனும் வேலனும் சரிக்குசமமாகப் போராடிக் கொண்டிருந்தனர். நண்பன் என இருவருமே பார்க்கவில்லை. அப்போது எதிர்பாராத காரியத்தை பிரம்ம நாயகியும் முல்லையும் செய்தனர். தித்தனுக்குப் பின் புறமாகச் சென்று அவனது காலை இடறி விட்டாள் பிரம்ம நாயகி. தடேரென்ற சத்தத்தோடு கீழே விழுந்தவனை எழ முடியாமல் கைகளை இழுத்துக்கட்டினாள் முல்லை. அதற்கு உதவி செய்தான் வேலன். தன்னைக் கட்ட விடாமல் போராடினான் தித்தன். ஆனால் கீழே விழுந்த அதிர்ச்சி, அதோடு பெண்கள் பின்னால் இருந்து தாக்கியதன் அதிர்ச்சி என எல்லாம் சேர அவனது வலு குறையத் தொடங்கியது. இப்போது முல்லை அவனது கால்களையும் சேர்த்துக் கட்டி விட்டாள். சிவநேசன் பாவம்! தனியாகப் போராடிக் கொண்டிருந்தான். சட்டென குனிந்து வெளியனின் வாள் வீச்சுக்குத் தப்பித்தவன், நழுவி குருகூரானை நோக்கி ஓடினான். அவனது இடுப்புக் கச்சையில் அவசரமாகத் தேடினான். அவன் எதிர்பார்த்த ஓலை கிடைக்கவில்லை.

"என்ன தேடுகிறாய் நீ சிவநேசா? நீ தேடும் ஓலை எப்போதோ என்னிடம் வந்து விட்டது. உன் முயற்சிகள் பலன் தராது. மரியாதையாக சரணடைந்து விடு." என்றான் வேலன்.

"இரவில் தாக்கும் உன்னைப் போல கோழையிடமா என்னைச் சரணடையச் சொல்கிறாய். ஒரு நாளும் இல்லை. முடிந்தால் என்னைப் பிடியுங்கள்" என்று கத்தியபடி இருளில் தாறுமாறாக ஓடினான். அவனைத் தொடர்ந்து சென்றான் வெளியன். சற்று நேரத்தில் தண்ணீரில் தொபுகடீர் என யாரோ விழும் சத்தம் கேட்டது. மூச்சைப் பிடித்தபடி பார்த்திருந்தான் தித்தன். சில நிமிடங்களில் ஈர உடையோடு வெளியன் வந்தான்.

"பக்கத்தில் ஓடும் காட்டாற்றில் குதித்து விட்டான் கோழை! நானும் தொடர்ந்து செல்லப் பார்த்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. மன்னித்து விடு வேலா!" என்றான்.

"ஓ! இங்கே ஓடும் காட்டாற்றிலா குதித்தான்? மிகவும் நல்லதாகப் போய் விட்டது. சற்று தூரம் சென்றால் அங்கே முதலைகள் உண்டு. இன்றைய இரவு விருந்து அவைகளுக்கு சிவநேசன் தான். கவலை வேண்டாம்." என்றான் வேலன்.

கண்ணீரும் துக்கமும் போட்டி போட்டு வந்தன. "என் அருமை நண்பனே! நாட்டுக்காக நீ உன் உயிரையும் விட்டு விட்டாய்! ஆனால் நான் இப்படிக் கோழை போலக் கட்டுண்டு கிடக்கிறேன்." என எண்ணிக் கொண்டான். வேலன் நெருங்கி வந்தன். அவனைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொண்டான்.

"என்னை மன்னித்து விடு நண்பா! உன்னை கட்டிப் போடும் நிலை உண்டாகி விட்டாதே?" என்றான் வேலன்.

கண்கள் நெருப்பைக் கக்க வெறித்து நோக்கினான் தித்தன்.

"உன் துரோகம் செய்த வாயால் என்னை நண்பன் என அழைக்காதே! ஏன் என்னை இன்னமும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறாய்? கொன்று விடுவது தானே? ஏனம்மா பிரம்ம நாயகி? நம் குலத்தில் பெண்க்ள் செய்யும் வேலையா இது? முல்லை உன்னையும் நான் என் தங்கை போல பாவித்தனே? அதற்கு நீ கொடுத்த பரிசா இது?" என்றான்.

அவனை நெருங்கி வந்தார்கள் முல்லையும் பிரம்ம நாயகியும்.

"எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணா! எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. உங்களைக் கட்டிப் ப்படுவது மிகவும் முக்கியமாகப்பட்டது எங்களுக்கு." என்றாள் முல்லை.

"உங்களைச் சொல்லி என்ன பயன்? ஏனப்பா வெளியா? ஒன்றுமே தெரியாதவன் போல இருந்து விந்தையன் ஆசிரமத்தில் புகுந்து உளவு வேலை செய்கிறாயே? நீ யாருக்காக வேலை செய்கிறாய்? உன்னைப் பற்றி குருநாதர் அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? ஏன் இந்த நம்பிக்கை துரோகம்?" என்றான் தித்தன்.

மௌனமாக நின்றான் வெளியன்.

"உண்மையான வீரன் நீ என்றால் என் கட்டுகளை அவிழ்த்து விடு வேலா! நீயும் நானும் நேருக்கு நேர் மோதுவோம். அப்போது பார்க்கலாம் உன் வீரத்தை. இப்படிக் கூட்டமாக சேர்ந்து தாக்க நீ என்ன குள்ள நரியா?" என்றான் தித்தன் கோபமாக.

"நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்! ஆனால் உன் கட்டை அவிழ்த்து விட முடியாது. என்றான் வேலன்.

"வெளியா! உன்னை சாதாரண சமையற்காரன் என நம்பினேனே? என்னை உயிரோடு விடும் தவறைச் செய்யாதே! அப்படிச் செய்தால் உன் துரோகத்தைப் பற்றி குருநாதரிடம் சொல்லிவிடுவேன். உனக்கு அவரது சாபம் கிட்டும்." என்றான் ஆத்திரம் தலைக்கேற.

"குருநாதரிடம் என்னவென்று சொல்லுவாய்?" என்றான் வெளியன் அமைதியாக.

"நீ ஒரு குரு துரோகி என்று! உளவாளி என்று சொல்லுவேன்."

"நீ சொல்வதை அவர் நம்ப மாட்டார். ஏனெனில் நான் யாரென அவருக்கு ஏற்கனவே தெரியும்" என்றான் மீண்டும் அமைதியாக.

"என்ன? என்ன?"

"ஆம்! தித்தா! நான் உளவாளி என குருநாதருக்கு ஏற்கனவே தெரியும் என்றேன்." என்றான் மெல்லிய குரலில்.

விர்ரென தலை சுற்றியது தித்தனுக்கு. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவனுக்குப் புரியவில்லை. குருநாதருக்கு வெளியன் ஒரு உளவாளி எனத் தெரியும் என்பது உண்மையானால் அவர் ஏன் அசல் ஓலையை அவனிடம் கொடுத்தார்? குருநாதரே நாட்டுக்கு துரோகம் செய்வாரா? எல்லாம் தெரிந்திருந்தும் என்னையும் சிவநேசனையும் ஏன் அனுப்ப்ப வேண்டும்? எங்களைக் கொல்வதால் அவருக்கு என்ன லாபம்? ஐயோ! நான் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும்? எதுவுமே புரியவில்லையே"

"அதிகம் யோசிக்க வேண்டாம் தித்தா! நீ எப்போதும் என் நண்பன் தான். ஆனால் சில உண்மைகளை நாங்கள் உன்னிடத்திருந்து மறைத்து விட்டோம். அவற்றைத் தெரிந்து கொண்ட பிறகு உனக்கு எல்லாம் தெளிவாக விளங்கி விடும்." என்றான் வேலன்.

"எனக்கு எல்லாம் தெரியும். நீயும் பிரம்ம நாயகியும் சேர ஒற்றர்கள். என் கையில் தான் அசல் ஓலை இருக்கிறதென எண்ணி என்னைத் தாக்க முயன்றீர்கள். உங்கள் சதிக்கு அப்பாவி சிவநேசன் பலியாகி விட்டான்." என்றான் தித்தன்.

"இவை மட்டுமே உண்மை அல்ல நண்பா! இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன நீ தெரிந்து கொள்ள. வெளியனை ஏன் குருநாதர் அனுப்பினார்? உன்னைக் கொல்லக் கூடிய எல்லா சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்திருந்தும் நாங்கள் ஏன் உன்னைக் கொல்லாமல் கட்டிப் போட்டோம்? உனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, குருகூரானிடமிருந்து ஓலையைக் கைப்பற்றியாக வேண்டும் என ஏன் சிவநேசன் துடித்தான்? ஓலை கிடைக்காது என்றவுடன் ஏன் தப்பித்து ஓடினான்? சொல் தித்தா! இவற்றுக்கெல்லாம் உன்னால் விளக்கம் சொல்ல முடியுமா?" என்றான் வேலன்.

தலை சுழன்றது தித்தனுக்கு. ஒருவனுக்கு எத்தனை அதிர்ச்சிகள் தான் கொடுப்பது? இங்கே என்ன நடக்கிறது? அனைவரும் சேர்ந்து என்னைச் சுற்றி ஏதோ சிலந்தி வலை பின்னியிருக்கிறார்கள் போலவே?

"தித்தா! குருகூரான் கையில் இருப்பது அசல் ஓலை அல்ல! உன் கையில் இருப்பது தான் அசல் ஓலை" என்றான் வெளியன்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கத்தினான் தித்தன்.

"ஐயோ! என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவிலை. தயவு செய்து சொல்லுங்கள். நீங்கள் உளவாளிகளா? இல்லை குருநாதரே துரோகியா?" என்றான்.

"ஒரு நாளும் நம் குருநதரைப் பற்றி அப்படி நினைக்காதே தித்தா! அவரது அறிவாற்றல், திறமை எல்லாமே பாண்டிய நாட்டிற்குப் பயன்பட வேண்டும் என்ற தீர்மானமான முடிவோடு இருப்பவர் அவர். நாங்களும் துரோகிகள் அல்ல." என்றான் வெளியன்.

ஏதேதோ புரிவது போலத் தோன்றியது. அதே நேரம் மிகவும் குழப்பமாகவும் இருந்தது.

"நீ எங்களைத் தாக்க மாட்டாய் என உத்திரவாதம் கொடுத்தால் உன் கட்டை அவிழ்த்து விடுகிறேன். உன் கையில் இருக்கும் ஓலையைப் படி. பிறகு நீயே புரிந்து கொள்வாய்" என்றான் வேலன்.

வெளியன் கட்டுகளை அவிழ்த்து விட தன் இடுப்புக் கச்சையின் ரகசிய அறையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த ஓலை அடங்கிய மூங்கில் குழலை எடுத்தான். ஓலையை வெளியில் எடுக்கும் போதே இரு சுவடிகள் வந்தன. ஆச்சரியத்துடன் எடுத்தான். அதில் ஒன்றில் அன்புள்ள தித்தா, எனத் தொடங்கியது. பரபரப்புடன் அதை முதலில் எடுத்து வாசித்தான்.

"அன்புள்ள தித்தா,

இந்த ஓலையை நீ வாசிக்கிறாய் என்றால் வேலன், வெளியன், முல்லை மற்றும் பிரம்ம நாயகி ஆகிய நால்வரும் நான் கட்டளையிட்ட காரியத்தை நிறைவேற்றி விட்டார்கள் என்று அர்த்தம். நீ நினைப்பது போல வேலனோ, உன் தங்கை பிரம்ம நாயகியோ உளவாளிகளோ ஒற்றர்களோ அல்ல. அவர்கள் பாண்டிய நாட்டுக்காக உழைப்பவர்கள். இதை நம்புவது உனக்குக் கடினமாக இருக்கலாம். முழுமையாகப் புரிந்து கொள்ள வேலன், வெளியன் மற்றும் இரு பெண்களும் சொல்வதைக் கேள். உன் சந்தேகங்கள் விலகும்.

இப்படிக்கு,

விந்தையன்."

படித்து முடித்தவன் குழப்பம் மிகுந்த விழிகளோடு ஏறிட்டான்.

"படித்து விட்டாயா? இப்போதாவது எங்களை நம்புகிறாயா?" என்றான் வேலன்.

"நம்புகிறேன் வேலா! ஆனால் பல விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் இருக்கின்றன. அவற்றை விளக்குங்களேன்." என்றான் தித்தன்.

"ஐயாமாரே! இங்கே நான் ஒருவன் கட்டுண்டு கிடக்கிறேன். என்னை மறந்து விட்டு நீங்கள் பாட்டுக்க பேசிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? வெளியா! நீயும் என்னை மறந்து விட்டாயா?" என்று குரல் எழுப்பினான் குருகூரான். வேகமாகச் சென்று அவனது கட்டையும் அவ்ழ்த்தான் வெளியன்.

"நண்பா! அமர்ந்து கொள்! எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறேன்." என்றான் வேலன்.

அனைவரும் வட்டமாக அமர்ந்தி கொண்டனர்.

"தித்தா! குருநாதர் ஆசிரமத்தில் வெறும் சமையல் செய்யும் வேலைக்காரனில்லை வெளியன். அவன் பாண்டிய மன்னரின் ஒற்றர்களில் ஒருவன். அதுவும் சாதாரண ஒற்றனல்ல. மிகவும் திறமை வாய்ந்தவன். அவன் தான் நமக்கு சேர ஒற்றர்களின் சதியைப் பற்றிக் கூறினான்." என்றான் வேலன். இப்போது வெளியன் தொடர்ந்தான்.

"உனது மகன் தான் துணைவன் என்றும் அவன் தான் இளவரசர் சடையவர்மருக்கு வருங்காலத்தில் உதவ இருக்கிறான் என்ற செய்தியும், இளவரசர் சடையவர்மர் பிறந்த நேரம் அவரால் அதிக நாட்கள் மதுரையில் இருக்க முடியாது என்ற செய்தியும் சேர ஒற்றர்களை சென்றடைந்தது. அது தான் சதியின் தொடக்கப் புள்ளி" என்றான் வெளியன்.

"எப்படி? அந்த விஷயங்கள் அவர்கள் வரை எப்படி எட்டியது?" என்றான் தித்தன்.

"புரியவில்லையா தித்தா? உன்னை நம்ப வைத்து ஏமாற்றிய சிவநேசன் தான் உண்மையிலேயே சேர ஒற்றன். அவன் மூலம் தான் இந்தச் செய்திகள் சேரர்களுக்குப் போயிற்று. அதை வெளியன் கண்டு பிடித்து விட்டான். சிவநேசன் ஒற்றன் என்பதை குருநாதரிடம் தெரிவித்தான். பிறகு தான் அவர் இரு தனிப்பட்ட திட்டாங்களைத் தீட்டினார். வேலன், தங்கமணி மற்றும் அவர்களது காதலிகளை தனியே அழைத்து ஒரு திட்டம், உன்னையும் சிவநேசனையும் அழைத்து வேறொரு திட்டம் எனப் பேசினார்." என்றான் வெளியன்.

"புரியவில்லையே?"

"உன் மகனின் பிறந்த நேரத்தை வாங்கி வருமாறு என்னை வெளியில் அனுப்பினார் நினைவிருக்கிறதா? அப்போது என்னை சந்தித்த வெளியன் சிவநேசனைப் பற்றியும் அவனது சதிக்கூட்டத்தைப் பற்றியும் எடுத்துரைத்தான். அதோடு பிரம்ம நாயகி, முல்லை இருவரின் உதவியையும் கேட்டான்."

"ஏன் பெண்கள்?"

"அவர்களால் ஊருக்குள் இலகுவாகச் செல்ல முடியும். அதோடு மறைந்து கொண்டலும் வெட்கம் எனத்தான் நினைப்பார்கள். அதனால் பல விஷயங்களை ஒற்றியலாம். அதற்காகத்தான் பெண்களைத் தேர்ந்தெடுத்தார் குருநாதர். அது சரியெனவே நிரூபணம் ஆகி விட்டது." என்றான் தங்கமணி.

"நீயும் சிவநேசனும் சென்ற பிறகு நாங்கள் அனைவரும் சென்று குருநாதரை ரகசியமாக சந்தித்தோம். அப்போது தான் சிவநேசனைத் தாக்கும் திட்டமும், உனக்கு என் மீது சந்தேகம் வரும் வண்ணம் செய்யும் திட்டமும் எழுந்தது. அதன்படியே எல்லாம் நடந்தது. உன்னை கொஞ்சம் கூட சந்தேகிக்கவில்லை சிவநேசன். நீங்கள் புறப்படும் நேரம், உண்மையான ஓலை குருகூரானிடம் கொடுக்கப்பட்ட விஷயம் என எல்லாவற்றையும் சிவநேசன் சேர உளவாளிக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலன் மீது கூட சந்தேகம் வரவில்லை. காரணம் பிரம்ம நாயகியின் நடிப்பு." என்றான் வெளியன்.

"ஆ! நடிப்பா? அப்படியானால் நான் உன்னைத் தொடர்ந்து வந்தது உனக்குத் தெரியுமா?"

"நன்றாகத் தெரியும் அண்ணா! குருநாதரின் திட்டமே அது தானே? அவர் எண்ணியபடியே நீங்கள் செய்தீர்கள். நீங்கள் பயணப்படும் போது இரண்டாம் நாள் இரவு உங்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து உங்கள் அனைவரையும் கொன்று விட்டு ஓலைகளைக் கைப்பற்ற வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தான் சிவநேசன். அதை வெளியன் அறிந்து கொண்டான்." என்றான் வேலன்.

"எப்படி?"

"சேர உளவாளிகள் தங்களுக்குள் செய்தி தெரிவிக்க சங்கேத மொழியைப் பயன் படுத்துகிறார்கள். அதை நான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தேன். உதாரணமாக நீர் என்று சொல்ல வேண்டுமானால் நெருப்பு என்று எழுதுவார்கள். கொலை செய்ய வேண்டும் என்றால் வாழ வைக்க வேண்டும் என எழுதுவார்கள். ஒரு வேளை வேறு யாரேனும் படித்தால் கூட தவறான பொருள் தெரியாது. அதற்காக அந்த ஏற்பாடு. அப்படி ஒரு செய்தி காட்டுக்குள் இருந்த மரத்தில் எழுதி வைத்தான் சிவநேசன். அதை நான் படித்து அவர்களது சதி முழுவதையும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் குருநாதர் இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். " என்றான் வெளியன்.

பேசவும் மறந்து அமர்ந்திருந்தான் தித்தன்.

"அவன் நினைத்தபடி இரண்டாம் நாள் இரவு அதாவது நாளை இரவு அவன் உங்கள் அனைவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருந்தான். பிறகு அவனது ஆட்களோடு சேர்ந்து அசல் ஓலையில் என்ன எழுதியிருக்கிறது எனப்படித்து அதற்கேற்றப் போல திட்டம் தீட்டுவது என எண்ணிக் கொண்டார்கள். ஆனால் பாவம். இன்றைய இரவு எங்களை அவன் எதிர்பாக்கவில்லை. வெளியனின் போர்த்திறமையைக் கண்டதும் அவன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே?" என்றாள் பிரம்ம நாயகி.

ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தான். அவன் மனம் இன்னமும் முழுமையாக அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. இத்தனை நாளும் நல்லவன் போல நடித்து நட்பு பாராட்டிய சிவநேசன் தன்னைக் கொல்லவும் துணிந்தான் என்ற செய்தி அதிர்ச்சியை அதிகரித்தது. அதோடு வெளியன் மட்டும் சேரர்களின் சதியை அறியாமல் போயிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதும் அவனை துயரம் கொள்ளச் செய்தது. தான் ஏன் இப்படி இருந்தோம்? எந்த ஒரு கட்டத்திலும் தனக்கு ஏன் சிவநேசன் மீது சந்தேகமே வரவில்லை? ஏன் குருநாதர் வேலனைத் தேர்ந்தெடுத்தார்? என்னிடம் ஏன் உண்மையைச் சொல்லவில்லை? என பல சிந்தனைகளால் அவன் உள்ளம் புண்ணானது.

தித்தனின் அருகே வந்து அவனை அணைத்துக்கொண்டான் வேலன்.

"உன்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை தித்தா! ஆனால் அப்படிச் செய்தால் அந்த சிவநேசனால் உனக்கு ஆபத்து நேரலாம் என்று தன் நான் மௌனம் காத்தேன்." என்றான் வேலன்.

"ஆனால் வேலா! குருநாதர் என்னையும் உங்கள் திட்டத்தில் சேர்த்திருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை? என் திறமை மேல் அவருக்கு நம்பிக்கை இல்லையா?" என்றான் மெல்ல.

"அப்படி இல்லை தித்தா" என ஒரே குரலில் சொன்னார்கள் வெளியனும் வேலனும்.

"எப்படி இல்லை?"

"உன் போர்த்திறமை மீதும், உன் அறிவின் மீதும் குருநாதருக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆனால் உனது நடிப்புத் திறமையின் மீது தான் நம்பிக்கை இல்லை. அதுவும் கூட உன்னால் தான். உனக்கு இருக்கும் நாட்டு பற்றினால் சிவநேசனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்து விடுவாய் என்று தான் உன்னிடம் சொல்லவில்லை. உன் வீரமும் நேர்மையும் தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை." என்றான் வேலன்.

"ஆம்! இவர்கள் சொல்வதும் உண்ணை தானே? குருநாதர் என்னிடம் சிவநேசன் உளவாளி என்ற உண்மையைக் கூறியிருந்தால் ஏதாவது ஒரு கட்டத்தில் நான் அவன் மேல் பாய்ந்தே இருப்பேன். ஆனால் வேலன் மிகத்திறமையாகக் கையாண்டு விட்டான். எப்படியோ! நான் வீரமும் நேர்மையும் நிறைந்தவன் என குருநாதர் புரிந்து கொண்டரே அதுவே போதும்" என எண்ணிக் கொண்டு புன்னகையோடு நண்பர்களை ஏறிட்டான் தித்தன்.

"இனி நமது அடுத்த திட்டம் என்ன?" என்றான்.

"வெளியன் பெண்களை அழைத்துக்கொண்டு மீண்டும் செண்பகப் பொழில் சென்று விடுவான். தங்கமணி, நீ, நான் மூவரும் மதுரை நோக்கிச் செல்லப் போகிறம். ஓலையை ஒப்படைப்பது மட்டும் நமது பணி அல்ல நண்பா! அங்கே கொடுங்கண்ணனாரை சந்தித்துப் பேசி மன்னரை சந்தித்து குருநாதர் அளித்த ஓலையை கொடுக்க வேண்டும். அவரும் மற்ற அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரும் செண்பகப் பொழிலை நோக்கி வர நாம் சம்மதிக்கச் செய்ய வேண்டும். அது மட்டும் அல்ல, இளவரசரௌச் சுற்றி ஏதோ சதி வலை பின்னப்பட்டொருக்கிறது எனத் தெர்கிறது. அது என்ன? அதை தீட்டியவர்கள் யார்? அதன் நோக்கம் என்ன? இவற்றையெல்லாம் அறிந்து நாம் அந்த சதியை முறியடிக்க வேண்டும். இது நான் சொல்லவது அல்ல. குருநாதர் இட்ட கட்டளை. அதை நிறைவேற்றும் வரை நமக்கு இருப்பிடம் மதுரை தான்." என்றான் தங்கமணி.

"அப்படியா? இத்தனை முக்கிடமான பணியில் என்னையும் ஈடுபத்தியிருக்கிறாரே குருநாதர் அவருக்கு என் நன்றிகள். ஆனால் நான் என் மனைவியிடம் ஒரு வாரத்தில் வந்து விடுவேன் எனச் சொன்னேனே?" என்றான் தித்தன்.

"அதற்கான ஏற்பாடுகளையும் குருநாதர் செய்து விட்டார். உனக்கு மதுரையில் வேலை கிடைத்து விட்டதாகவும் இனி நீ குடும்பத்தோடு அங்கே தான் வாழப் போவதாகவும் செய்தி பரப்பப்படும். பிரம்ம நாயகி, முல்லை இருவரின் துணையோடு கல்யாணியும் உன் மகனும் இன்னும் இரு மாதங்களில் மதுரை வந்து விடுவார்கள். ஆகையால் நீ கவலைப்பட வேண்டாம்." என்றான் வெளியன்.

திருப்தியான புன்னகை மலர்ந்தது தித்தனிடம்.

"என் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை மதுரை முடிவு செய்யட்டும். பல சதிகளையும், சூழ்ச்சிகளையும் நான் வென்றாக வேண்டும். ஆனால் நான் தனி ஆள் இல்லை. நல்லவேளையாக திறமை மிகுந்த தங்கமணி,வேலன் மற்றும் என் சகோதரிகள் எனக்குத் துணையாக இருக்கிறார்கள். மதுரை நகரம் வாழும் சொக்கேசா! பாண்டிய நாட்டைக் காப்பாறியருள வேண்டும்." என வேண்டிக் கொண்டான். கிழக்கு வானத்தில் தங்க நிற சூரியன் தக தகவென மேலே வந்து கொண்டிருந்தான்.
 
Status
Not open for further replies.
Top Bottom