விமலனும் தஷினாவும் ஹாஸ்பிடலில் இருந்து வெளியில் வர சரியாக ஆராதனா வந்த பஸ்சும் அங்கு நின்றது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விமலன் தக்ஷினாவோடு பஸ்சில் ஏறினான். காலை கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. விமலன் ஆராதனாவிடம் பேச ஆர்வம் காட்டினான்.
"மார்னிங் சார்"
"மார்னிங்… என்னஆஃபிஸா?"
"ஆமா சார்" என புன்னகை சிந்த தக்ஷினாவை ஒரு பார்வை பார்த்தான் விமலன்.
அதில் "நான் சொன்னேன்ல நீயே பார்த்துக்கோ" என செய்தி இருக்க ஆராதனாவை உற்றுப் பார்த்தாள் தக்ஷினா. அந்த பார்வையில் ஏதோ இருப்பதாக தான் தோன்றியது ஆராதனாவிற்க்கு.
"உனக்கு சென்னைதான் சொந்த ஊரா?" விமலன்
"இல்ல சார் நான் பிறக்குறதுக்கு முன்னாடி தான் சென்னைல செட்டில் ஆகிட்டாங்க"
"ஓஓ... சரி சரி சாப்டாச்சா?"
"ம்ம் நீங்க சார்?"
"சார் சொல்லாத… அண்ணானே சொல்லு" எனவும் சந்தோஷமாக "சரி அண்ணா சாப்டாச்சா" என்றாள்.
"அட அதெல்லாம் விமி சாப்டாச்சு. விமி உனக்கு ஒன்னு தெரியுமா இவ உனக்கு பெரிய ரசிகையாம்" என "எனக்கா?" ஆச்சரியமாக விமலன் கேட்க தலையை ஆட்டினாள் ஆராதனா.
"அதிசயம் தான்… இத உங்க ஆபிஸ்க்கு வருவான்ல புவி அவன்கிட்ட சொல்லிடு" என மிரண்டு விழித்தாள் அவள்.
"ஏன்? ஏன் இப்படி பயம்? " விமலன்.
"அவரா…? நான் எப்படி? அவங்கள பாத்தாலே பயமாருக்கும்" என
"குழந்தை பயன் மா அவன்… வெளில தான் விரப்பா திரிவான். பாசகார பயபுள்ள" என மீசையை முறுக்கி விட்டான் அவன்.
"ஆர் நீ புவி கூட பேசுனதே இல்லையா?" தீ
"ம்ம்... என்ன இண்டர்வியூ பண்ணதே அவர் தான் தீ"
"அப்புறம் ஏன் பயப்படுற?"
"அது அவர் போலீஸ்" எனவும் இருவரும் அவளை முறைத்தனர்.
"நாங்களும் போலீஸ் தான்" என திருதிருவென முழித்தாள் அவள்.
விமலன் கண்ணை காட்ட ஒற்றை கண்ணடித்த தக்ஷினா "ஆமா ஆர் நீ எப்போ ஃப்ரீ? ஒரு நாள் நீ எங்க வீட்டுக்கு வரனும்" பேசிக் கொண்டே அவள் வாட்டர் பாட்டிலை எடுத்து விமலனிடம் கொடுக்க அதை மறைத்துக் வைத்துக் கொண்டான் அவன்.
"சரி" என தலையசைத்தாள் ஆராதனா.
கூட்டம் ஏற விமலன் பின்னால் சென்றுவிட்டான். இருவரும் அப்போது தான் கவனித்தனர் பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிசங்கள் செய்துக் கொண்டு இருக்க நெளிந்துக் கொண்டு இருந்தாள் அவள். தக்ஷினா அவனை அடிக்க எழ தடுத்து அமர சொன்ன ஆராதனாவை கேள்வியாக பார்த்தாள்.
"இது அந்த பொண்ணு தான் தண்டனை கொடுக்கனும். இன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவிங்க ஆனா நாளைக்கு.. அடுத்து அடுத்து நீங்களா உதவி பண்ண முடியும்" என அவளை முறைத்தாள் தக்ஷினா.
"அதுக்குனு பார்த்துட்டு இருக்க சொல்றியா" என "உதவி தேவை படுற இடத்துல தான் செய்யனும்" அதில் அத்தனை ஆளுமை ஏனோ அவளால் மீற தோனவில்லை.
"இது என் கடமை" விடாமல் அவள் சொல்ல "இருக்கலாம் தன்னை தானே காப்பாத்திக்கிறது தான் நமக்கான முதல் கடமை. அத தடுக்காதிங்க" என்றவள் அவர்களை வெறித்து பார்க்க "நிச்சயமா இவளுக்கு ஏதோ நடந்திருக்கு" என மனதில் நினைத்தாள் தக்ஷினா.
அவன் மிகவும் அத்துமீற அப்பெண் எழுந்து நகர்ந்து நின்றுக் கொண்டாள். அவ்விடத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுமி அமர அவன் அவளையும் உரசிக் கொண்டு இருந்தான். தொடகூடாது இடத்தை எல்லாம் மறைமுகமாக தொடவும் தீ கோபமாக ஆராதனாவை "பார் அவனை" என பார்க்க அவள் முகமோ தீயாக ஜொலித்தது.
"பொறுக்கி நாயே கைய எடுடா" அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் ஆராதனா. பின் சிறுமியை பிடித்து இழுத்தவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து மேலே எழுப்பினாள்.
அனைவரும் வேடுக்கை பார்க்க "செய்வியா செய்வியா" என வெறிபிடித்து அறைய திகைத்து பார்த்தாள் தக்ஷினா.
விமலன் கூட்டத்தை நகர்த்திவிட்டு வர "அண்ணா உங்க பெல்ட்டை தாங்க" என அவனோ தக்ஷினாவை பார்க்க "கொடு" என்றாள். அவனும் கழட்டி கொடுக்க கையில் சுற்றிக் கொண்டு அவனை சீட்டை விட்டு வெளியே தள்ளியவள் வெளுத்து வாங்கினாள்.
"எம்மா எம்மா ஏன் அடிக்கிற?" என நடத்துனர் வர "பொறுக்கி தனம் பண்றான்… சின்ன பொண்ண.. ஸ்கூல் போற பிள்ளைய என்ன பண்ணான் தெரியுமா சார்.. இவன" என மதம்பிடித்து பெல்டை வீச அவரே சற்று நடுங்கி போனார்.
"இரும்மா... சார் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என கத்திவிட்டு "நீயா அடிக்காத… வந்துட்டாங்க ஜான்சிராணி" என முனுமுனுக்க உக்கிரமாக பார்த்தாள் அவள்.
பயணசீட்டு கொடுக்கும் சாக்கில் பெண்களை உரசுவதே வேலையாக வைத்துக் கொண்டு இருந்தவனுக்கு ஆராதனாவை கண்டு கடுப்பாக தான் இருந்தது.
"யோவ்.. என்ன சொன்ன?" விமலன் கோபமாக வர உயிரே போய்விட்டது அவனுக்கு.
"சார் நீங்கள… ஒன்னும் சொல்லல சார்" என பின்னடித்தவன் பிறகு பேசவேயில்லை. அவளை விமலனும் தக்ஷினாவும் பிடித்து இழுத்து அமைதி படுத்தினர். அதற்குள் அந்த பெண்ணும் குடையை எடுத்து அவனை ரெண்டு அடி அடித்துவிட்டு அவளிடம் நன்றி சொன்னாள். அவனை அங்கு இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரிடம் ஒப்படைத்து தான் வந்தனர்.
"ஆர் அவன நீ தான் அடிக்க வேண்டாம்னு சொன்ன. இப்போ நீ தான் வெளுத்து வாங்கின. எனக்கு புரியலையே" என்றாள் தக்ஷினா.
"அதுவா தீ.. அவ சின்ன பொண்ணு இன்னைக்கு நான் செஞ்சது அவளுக்கு நல்லாவே பதிஞ்சிருக்கும். இப்படி தப்பு பண்ணா இந்த மாதிரி தண்டனை தரனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன். இனிமே யாராச்சும் அவகிட்ட வம்பு பண்ணா அந்த பொண்ணு மாதிரி விலகி போகம எதிரித்து நிப்பா. அவள பார்த்து நாலுபேர் எதிர்பாங்க. அமைதியா போறநால தானே கட்டுப்பாடு இல்லமா இப்படி நடந்துக்குறாங்க. ஒரு ஒருத்தனுக்கும் பயம் வேனும் தப்பு பண்ணா அடிச்சிருவாங்கனு நடுங்கனும். இப்போ இருக்க சமூகத்தை என்னால மாத்த முடியமா இருக்கலாம் பட் இந்த குழந்தைங்க தான் வருங்காலம். நாம நினைச்சா அத நல்லதா மாத்தலாம் அதுக்கான என்னோட சின்ன விதை" என்றவளை இருவரும் பரவசமாக பார்த்தனர்.
"வன்முறை மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது ஆராதனா" விமலன்.
"நிஜம் தான் அண்ணா. ஆனா இந்த மாதிரி கொடுமைகளுக்கு இத விட சிறந்த வேற தண்டனை எனக்கு தெரியல"
விமலனுக்கு தீயும் ஆருவும் வேறாக தெரியவில்லை. சிந்தனையிலும் நடத்தையிலும் ஒற்றுமை அதிகம் தான் இருந்தது. ஆராதனாவை முதலில் பயந்த சுபாவம் என்று தான் நினைத்தான். இப்போது புரிந்தது அவள் இயற்கையாக வே தைரியமானவள் என்று. சந்தர்ப்ப சூழ்நிலை தான் அவளுடய பயமும் அமைதியும் என உணர்ந்தான்.
"ஆராதனாவும் தங்களோடு வளர்ந்திருந்தால்..." என ஒரு தொடர் அவன் மனதில் ஓடியது. அவள் கிளம்பி சென்றதும் கலக்கமாக விமலனை பார்தாள் தக்ஷினா.
"நீ சொன்னது நிஜம் தான் விமி… நானும் கவனிச்சேன்" என "இத சும்மா விட முடியாது நான் என்னனு பார்கிறேன்" என அவள் கையை தட்டிக் கொடுத்தான்.
"மேடம் ஒரு முக்கியமான விசயம்" வேகமாக வந்து நின்றார் முரளி.
"சொல்லுங்க" என்றவள் சாய்ந்து அமர விரலி நினைவகத்தில் உள்ளதை ஓட விட்டார். அதில் ஒரு படம் சத்தியா இருக்க மற்றொன்று ராதிகாவின் சடலம். சில இடங்கள் ஒவ்வொரு படத்திலும் சிகப்பு கலர் வட்டம் போடபட்டு இருக்க அதை பார்தவளின் கண்கள் கோபமாக மின்னின.
"மேடம் இத பாருங்க அந்த காயம் எல்லாம் பாதி ஒரே மாதிரி தான் இருக்கு. இந்த ரெண்டு பாடிலையும் சில வித்தியாசம் தான் இருக்கு. இந்த ராதிகாவையும் கம்பியால் அடிச்சி தாடையை நகத்திருக்காங்க. அட்டாப்ஸீ ரிப்போட்ல தெரிஞ்சிரும்"
"பாடி எப்போ இங்க வருது?"
"இன்னைக்கு மதியம் வந்திரும் மேடம்"
"ம்ம் அந்த பாடிய நான் சொல்ற டாக்டர்கிட்ட ஒப்படைசிட்டு வேற அனாதை பாடிய டிஸ்போஸ் பண்ணுங்க" என்றவளை பார்த்தார் முரளி.
"இது சட்டத்துக்கு புறம்பான விசியம் மேடம்"
"நம்ம நாட்டுல சட்டம் பல விசியத்துல ஓழுங்கில்லாம தான் இருக்கு முரளி. மன்னிப்பு மன்னிக்க வேண்டிய தப்புக்குதான் தரனும். சட்டம் கடுமையா மாற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது. மக்களுக்கு தான் நம்ம வேலை செய்யனும் ஆரசாங்கமே மக்களோட வேலைகாரங்கதான். நான் சொன்னத செய்ங்க. இனிமேல் ஒரு பொண்ணும் இவனுங்களால செத்தா அது நாம கொண்ண மாதிரிதான்" என முடித்துவிட்டாள்.
நம் நாட்டு சட்டங்கள் அனைத்தும் திருந்தி வாழ வாய்ப்பு கொடுப்பவைதான். ஆனால் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை வேண்டும் அல்லவா. மனிதமே இல்லாமல் கொடூரங்கள் செய்பவர்களிடம் ஏன் மனித தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும்? இறந்த உயிருக்கு என்ன தான் பதில்? வாழவே தகுதியற்றவர்களுக்கு திருந்தி வாழ எதற்கு இந்த வாய்பு? என் கேள்விக்கு என்ன பதில்? சட்டம் கடுமையாக மாறாதவரை 1000 நிர்பயாக்கள் 1000 ஆசிபா 1000 பிரியங்கா தினமும் உயிர் விட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.
சட்டம் கடமையை மறக்கும் போது நாங்கள் அதை கையில் எடுக்கும் நாள் மிக அருகில். பாவிகளை கொன்று எங்கள் விலங்கை திறக்கும் நாள் அருகில். கரண்டியை பிடித்த கை கத்தி ஏந்தும் நாள் அருகில். தூளி கட்டி ஆட்டிய கை துப்பாக்கி ஏந்தும் நாள் அருகில்.
தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்தார் முத்து வேல்.
"நீங்க குணமுதிதன்… சரியா? கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்" என்றவரை பார்த்து சிரித்தான் அவன்.
"நீங்க கேட்டது இதுல இருக்கு சார்" என ஒரு பைலை நீட்ட அவசரமாக புரட்டியவர் கண்களில் கண்ணீர் தேங்கியது. அவனை நன்றியோடு பார்த்தார்.
"நன்றிப்பா… அத தவற என்கிட்ட சொல்ல ஒன்னும்மே இல்ல… நீ எனக்கு என் உயிர மீட்டு கொடுத்திருக்க" என அவன் கையை பிடித்து கண்கலங்கினார் அவர்.
"நான் இத உங்களுக்காக செய்யல சார். தக்ஷினாக்காக செஞ்சேன்… அவங்க மாதிரி ஒரு பொண்ண இந்த நாட்டுக்கு கொடுத்த உங்களுக்கு என் சார்பா ஒரு பரிசு இது. எத்தன பேர் இன்னைக்கு அவங்களால சந்தோஷமா நிம்மதியா இருங்காங்க. ஷீ இஸ் ஏ ஜெம் சார்" என எழுந்துக் கொண்டான் அவன்.
"குணமுதிதன் எதாச்சும் ஹெல்ப் வேனும்னா சொல்லுங்க… உங்களுக்கு உதவ நான் காத்துட்டு இருக்கேன்" என்றவரை ஒரு நிமிடம் பார்தவன் சிறு புன்னகையோடு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டான் அந்த டிடக்டிவ்.
அதில் "தேவைபட்டா சொல்றேன்" என்ற அர்த்தம் இருப்பதை உணர்ந்தவர் "கண்டிப்பா" என மனதில் சொல்லிக் கொண்டார்.
வருவாள்…
www.sahaptham.com
"மார்னிங் சார்"
"மார்னிங்… என்னஆஃபிஸா?"
"ஆமா சார்" என புன்னகை சிந்த தக்ஷினாவை ஒரு பார்வை பார்த்தான் விமலன்.
அதில் "நான் சொன்னேன்ல நீயே பார்த்துக்கோ" என செய்தி இருக்க ஆராதனாவை உற்றுப் பார்த்தாள் தக்ஷினா. அந்த பார்வையில் ஏதோ இருப்பதாக தான் தோன்றியது ஆராதனாவிற்க்கு.
"உனக்கு சென்னைதான் சொந்த ஊரா?" விமலன்
"இல்ல சார் நான் பிறக்குறதுக்கு முன்னாடி தான் சென்னைல செட்டில் ஆகிட்டாங்க"
"ஓஓ... சரி சரி சாப்டாச்சா?"
"ம்ம் நீங்க சார்?"
"சார் சொல்லாத… அண்ணானே சொல்லு" எனவும் சந்தோஷமாக "சரி அண்ணா சாப்டாச்சா" என்றாள்.
"அட அதெல்லாம் விமி சாப்டாச்சு. விமி உனக்கு ஒன்னு தெரியுமா இவ உனக்கு பெரிய ரசிகையாம்" என "எனக்கா?" ஆச்சரியமாக விமலன் கேட்க தலையை ஆட்டினாள் ஆராதனா.
"அதிசயம் தான்… இத உங்க ஆபிஸ்க்கு வருவான்ல புவி அவன்கிட்ட சொல்லிடு" என மிரண்டு விழித்தாள் அவள்.
"ஏன்? ஏன் இப்படி பயம்? " விமலன்.
"அவரா…? நான் எப்படி? அவங்கள பாத்தாலே பயமாருக்கும்" என
"குழந்தை பயன் மா அவன்… வெளில தான் விரப்பா திரிவான். பாசகார பயபுள்ள" என மீசையை முறுக்கி விட்டான் அவன்.
"ஆர் நீ புவி கூட பேசுனதே இல்லையா?" தீ
"ம்ம்... என்ன இண்டர்வியூ பண்ணதே அவர் தான் தீ"
"அப்புறம் ஏன் பயப்படுற?"
"அது அவர் போலீஸ்" எனவும் இருவரும் அவளை முறைத்தனர்.
"நாங்களும் போலீஸ் தான்" என திருதிருவென முழித்தாள் அவள்.
விமலன் கண்ணை காட்ட ஒற்றை கண்ணடித்த தக்ஷினா "ஆமா ஆர் நீ எப்போ ஃப்ரீ? ஒரு நாள் நீ எங்க வீட்டுக்கு வரனும்" பேசிக் கொண்டே அவள் வாட்டர் பாட்டிலை எடுத்து விமலனிடம் கொடுக்க அதை மறைத்துக் வைத்துக் கொண்டான் அவன்.
"சரி" என தலையசைத்தாள் ஆராதனா.
கூட்டம் ஏற விமலன் பின்னால் சென்றுவிட்டான். இருவரும் அப்போது தான் கவனித்தனர் பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிசங்கள் செய்துக் கொண்டு இருக்க நெளிந்துக் கொண்டு இருந்தாள் அவள். தக்ஷினா அவனை அடிக்க எழ தடுத்து அமர சொன்ன ஆராதனாவை கேள்வியாக பார்த்தாள்.
"இது அந்த பொண்ணு தான் தண்டனை கொடுக்கனும். இன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவிங்க ஆனா நாளைக்கு.. அடுத்து அடுத்து நீங்களா உதவி பண்ண முடியும்" என அவளை முறைத்தாள் தக்ஷினா.
"அதுக்குனு பார்த்துட்டு இருக்க சொல்றியா" என "உதவி தேவை படுற இடத்துல தான் செய்யனும்" அதில் அத்தனை ஆளுமை ஏனோ அவளால் மீற தோனவில்லை.
"இது என் கடமை" விடாமல் அவள் சொல்ல "இருக்கலாம் தன்னை தானே காப்பாத்திக்கிறது தான் நமக்கான முதல் கடமை. அத தடுக்காதிங்க" என்றவள் அவர்களை வெறித்து பார்க்க "நிச்சயமா இவளுக்கு ஏதோ நடந்திருக்கு" என மனதில் நினைத்தாள் தக்ஷினா.
அவன் மிகவும் அத்துமீற அப்பெண் எழுந்து நகர்ந்து நின்றுக் கொண்டாள். அவ்விடத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுமி அமர அவன் அவளையும் உரசிக் கொண்டு இருந்தான். தொடகூடாது இடத்தை எல்லாம் மறைமுகமாக தொடவும் தீ கோபமாக ஆராதனாவை "பார் அவனை" என பார்க்க அவள் முகமோ தீயாக ஜொலித்தது.
"பொறுக்கி நாயே கைய எடுடா" அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் ஆராதனா. பின் சிறுமியை பிடித்து இழுத்தவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து மேலே எழுப்பினாள்.
அனைவரும் வேடுக்கை பார்க்க "செய்வியா செய்வியா" என வெறிபிடித்து அறைய திகைத்து பார்த்தாள் தக்ஷினா.
விமலன் கூட்டத்தை நகர்த்திவிட்டு வர "அண்ணா உங்க பெல்ட்டை தாங்க" என அவனோ தக்ஷினாவை பார்க்க "கொடு" என்றாள். அவனும் கழட்டி கொடுக்க கையில் சுற்றிக் கொண்டு அவனை சீட்டை விட்டு வெளியே தள்ளியவள் வெளுத்து வாங்கினாள்.
"எம்மா எம்மா ஏன் அடிக்கிற?" என நடத்துனர் வர "பொறுக்கி தனம் பண்றான்… சின்ன பொண்ண.. ஸ்கூல் போற பிள்ளைய என்ன பண்ணான் தெரியுமா சார்.. இவன" என மதம்பிடித்து பெல்டை வீச அவரே சற்று நடுங்கி போனார்.
"இரும்மா... சார் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என கத்திவிட்டு "நீயா அடிக்காத… வந்துட்டாங்க ஜான்சிராணி" என முனுமுனுக்க உக்கிரமாக பார்த்தாள் அவள்.
பயணசீட்டு கொடுக்கும் சாக்கில் பெண்களை உரசுவதே வேலையாக வைத்துக் கொண்டு இருந்தவனுக்கு ஆராதனாவை கண்டு கடுப்பாக தான் இருந்தது.
"யோவ்.. என்ன சொன்ன?" விமலன் கோபமாக வர உயிரே போய்விட்டது அவனுக்கு.
"சார் நீங்கள… ஒன்னும் சொல்லல சார்" என பின்னடித்தவன் பிறகு பேசவேயில்லை. அவளை விமலனும் தக்ஷினாவும் பிடித்து இழுத்து அமைதி படுத்தினர். அதற்குள் அந்த பெண்ணும் குடையை எடுத்து அவனை ரெண்டு அடி அடித்துவிட்டு அவளிடம் நன்றி சொன்னாள். அவனை அங்கு இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரிடம் ஒப்படைத்து தான் வந்தனர்.
"ஆர் அவன நீ தான் அடிக்க வேண்டாம்னு சொன்ன. இப்போ நீ தான் வெளுத்து வாங்கின. எனக்கு புரியலையே" என்றாள் தக்ஷினா.
"அதுவா தீ.. அவ சின்ன பொண்ணு இன்னைக்கு நான் செஞ்சது அவளுக்கு நல்லாவே பதிஞ்சிருக்கும். இப்படி தப்பு பண்ணா இந்த மாதிரி தண்டனை தரனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன். இனிமே யாராச்சும் அவகிட்ட வம்பு பண்ணா அந்த பொண்ணு மாதிரி விலகி போகம எதிரித்து நிப்பா. அவள பார்த்து நாலுபேர் எதிர்பாங்க. அமைதியா போறநால தானே கட்டுப்பாடு இல்லமா இப்படி நடந்துக்குறாங்க. ஒரு ஒருத்தனுக்கும் பயம் வேனும் தப்பு பண்ணா அடிச்சிருவாங்கனு நடுங்கனும். இப்போ இருக்க சமூகத்தை என்னால மாத்த முடியமா இருக்கலாம் பட் இந்த குழந்தைங்க தான் வருங்காலம். நாம நினைச்சா அத நல்லதா மாத்தலாம் அதுக்கான என்னோட சின்ன விதை" என்றவளை இருவரும் பரவசமாக பார்த்தனர்.
"வன்முறை மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது ஆராதனா" விமலன்.
"நிஜம் தான் அண்ணா. ஆனா இந்த மாதிரி கொடுமைகளுக்கு இத விட சிறந்த வேற தண்டனை எனக்கு தெரியல"
விமலனுக்கு தீயும் ஆருவும் வேறாக தெரியவில்லை. சிந்தனையிலும் நடத்தையிலும் ஒற்றுமை அதிகம் தான் இருந்தது. ஆராதனாவை முதலில் பயந்த சுபாவம் என்று தான் நினைத்தான். இப்போது புரிந்தது அவள் இயற்கையாக வே தைரியமானவள் என்று. சந்தர்ப்ப சூழ்நிலை தான் அவளுடய பயமும் அமைதியும் என உணர்ந்தான்.
"ஆராதனாவும் தங்களோடு வளர்ந்திருந்தால்..." என ஒரு தொடர் அவன் மனதில் ஓடியது. அவள் கிளம்பி சென்றதும் கலக்கமாக விமலனை பார்தாள் தக்ஷினா.
"நீ சொன்னது நிஜம் தான் விமி… நானும் கவனிச்சேன்" என "இத சும்மா விட முடியாது நான் என்னனு பார்கிறேன்" என அவள் கையை தட்டிக் கொடுத்தான்.
"மேடம் ஒரு முக்கியமான விசயம்" வேகமாக வந்து நின்றார் முரளி.
"சொல்லுங்க" என்றவள் சாய்ந்து அமர விரலி நினைவகத்தில் உள்ளதை ஓட விட்டார். அதில் ஒரு படம் சத்தியா இருக்க மற்றொன்று ராதிகாவின் சடலம். சில இடங்கள் ஒவ்வொரு படத்திலும் சிகப்பு கலர் வட்டம் போடபட்டு இருக்க அதை பார்தவளின் கண்கள் கோபமாக மின்னின.
"மேடம் இத பாருங்க அந்த காயம் எல்லாம் பாதி ஒரே மாதிரி தான் இருக்கு. இந்த ரெண்டு பாடிலையும் சில வித்தியாசம் தான் இருக்கு. இந்த ராதிகாவையும் கம்பியால் அடிச்சி தாடையை நகத்திருக்காங்க. அட்டாப்ஸீ ரிப்போட்ல தெரிஞ்சிரும்"
"பாடி எப்போ இங்க வருது?"
"இன்னைக்கு மதியம் வந்திரும் மேடம்"
"ம்ம் அந்த பாடிய நான் சொல்ற டாக்டர்கிட்ட ஒப்படைசிட்டு வேற அனாதை பாடிய டிஸ்போஸ் பண்ணுங்க" என்றவளை பார்த்தார் முரளி.
"இது சட்டத்துக்கு புறம்பான விசியம் மேடம்"
"நம்ம நாட்டுல சட்டம் பல விசியத்துல ஓழுங்கில்லாம தான் இருக்கு முரளி. மன்னிப்பு மன்னிக்க வேண்டிய தப்புக்குதான் தரனும். சட்டம் கடுமையா மாற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது. மக்களுக்கு தான் நம்ம வேலை செய்யனும் ஆரசாங்கமே மக்களோட வேலைகாரங்கதான். நான் சொன்னத செய்ங்க. இனிமேல் ஒரு பொண்ணும் இவனுங்களால செத்தா அது நாம கொண்ண மாதிரிதான்" என முடித்துவிட்டாள்.
நம் நாட்டு சட்டங்கள் அனைத்தும் திருந்தி வாழ வாய்ப்பு கொடுப்பவைதான். ஆனால் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை வேண்டும் அல்லவா. மனிதமே இல்லாமல் கொடூரங்கள் செய்பவர்களிடம் ஏன் மனித தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும்? இறந்த உயிருக்கு என்ன தான் பதில்? வாழவே தகுதியற்றவர்களுக்கு திருந்தி வாழ எதற்கு இந்த வாய்பு? என் கேள்விக்கு என்ன பதில்? சட்டம் கடுமையாக மாறாதவரை 1000 நிர்பயாக்கள் 1000 ஆசிபா 1000 பிரியங்கா தினமும் உயிர் விட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.
சட்டம் கடமையை மறக்கும் போது நாங்கள் அதை கையில் எடுக்கும் நாள் மிக அருகில். பாவிகளை கொன்று எங்கள் விலங்கை திறக்கும் நாள் அருகில். கரண்டியை பிடித்த கை கத்தி ஏந்தும் நாள் அருகில். தூளி கட்டி ஆட்டிய கை துப்பாக்கி ஏந்தும் நாள் அருகில்.
மிளகாய் தூள் நெடியில் என் கைபைக்கு கண்கள் எரிகிறதாம்.
தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்தார் முத்து வேல்.
"நீங்க குணமுதிதன்… சரியா? கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்" என்றவரை பார்த்து சிரித்தான் அவன்.
"நீங்க கேட்டது இதுல இருக்கு சார்" என ஒரு பைலை நீட்ட அவசரமாக புரட்டியவர் கண்களில் கண்ணீர் தேங்கியது. அவனை நன்றியோடு பார்த்தார்.
"நன்றிப்பா… அத தவற என்கிட்ட சொல்ல ஒன்னும்மே இல்ல… நீ எனக்கு என் உயிர மீட்டு கொடுத்திருக்க" என அவன் கையை பிடித்து கண்கலங்கினார் அவர்.
"நான் இத உங்களுக்காக செய்யல சார். தக்ஷினாக்காக செஞ்சேன்… அவங்க மாதிரி ஒரு பொண்ண இந்த நாட்டுக்கு கொடுத்த உங்களுக்கு என் சார்பா ஒரு பரிசு இது. எத்தன பேர் இன்னைக்கு அவங்களால சந்தோஷமா நிம்மதியா இருங்காங்க. ஷீ இஸ் ஏ ஜெம் சார்" என எழுந்துக் கொண்டான் அவன்.
"குணமுதிதன் எதாச்சும் ஹெல்ப் வேனும்னா சொல்லுங்க… உங்களுக்கு உதவ நான் காத்துட்டு இருக்கேன்" என்றவரை ஒரு நிமிடம் பார்தவன் சிறு புன்னகையோடு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டான் அந்த டிடக்டிவ்.
அதில் "தேவைபட்டா சொல்றேன்" என்ற அர்த்தம் இருப்பதை உணர்ந்தவர் "கண்டிப்பா" என மனதில் சொல்லிக் கொண்டார்.
வருவாள்…
போகாதடி என் பெண்ணே! - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம், வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
Last edited: