Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம் - Full Story

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் கை கால் நடுங்கியது . எப்படியோ இன்று நம் மூவரின் கதை வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்து பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்
அப்பொழுது பரந்தாமனின் மனைவி மூவரையும் கவனித்தாள் ஏன் இவர்கள் மூவரும் ஊர் மக்களைப் பார்த்து இப்படி பயந்த சுபாவத்தில் இருக்கிறார்களே . ஒருவேளை இந்த பிரச்சனையில் இவர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்று லேசான சந்தேகம் ஏற்பட்டது.

ஐயா நாங்கள் எல்லோரும் இதுநாள் வரைக்கும் தைரியமாக தோட்டத்தில் வேலை செய்து வந்தோம் . ஆனால் இப்பொழுது எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது .ஏனென்றால் ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போனது .அப்போது நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் ஏதோ அவங்க குடும்ப சூழ்நிலை காரணமாக இருக்கும் அதனால் தான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள் எங்கேயோ . என்று நினைத்திருந்தோம் ஆனால் அதே தோட்டத்தில் வேலை செய்த நம்ம கனகா குடும்பமும் இப்போது காணாமல் போனது எங்களுக்கு பெரிய பயத்தை உண்டாக்குகிறது இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. அதனால் இனி எங்களால் தோட்டத்தில் நிம்மதியாக வேலை செய்வதற்கு இனி தயக்கம் தான் அதனால் எங்களை நீங்கள் தான் மன்னிக்கவேண்டும் . இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுடைய பயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் ஐயா என்று கூட்டத்தில் ஒரு தொழிலாளி பண்ணையாரிடம் கூறினார்.
உடனே பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தினவுக்கும் சற்று பயம் குறைந்தது . கனகா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவட்டால் போல் தெரிகிறது ஏற்கனவே அந்தப் பெரியவரின் மருமகள் ஓடிப் போனது போல இவளும் ஒடிவிட்டால் விஷயத்தை புரிந்து கொண்டு பரந்தாமன் பெருமூச்சு விட்டான்.
ஊர்மக்கள் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன் . அதேபோல நான் என்ன செய்யவேண்டும் என்பதும் நீங்களே சொல்லுங்கள் இந்த விஷயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை . ஒன்று மட்டும் புரிகிறது இதுவரைக்கும் எனக்கு எதிரி இல்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் அது என் முட்டாள்தனம் என்று இப்போது எனக்கு நன்றாக தெரிகிறது அதனால் நீங்களே ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள் எனக்கு எந்த முடிவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் காணாமல் போன இரண்டு குடும்பம் உண்மையாகவே ஓடி விட்டார்களா அல்லது யாராவது அவர்களை கொன்று விட்டார்களா என்ற உண்மை தெரிந்தே ஆக வேண்டும் . அப்பொழுதுதன் இந்த ஊருக்கு நிம்மதி பிறக்கும் எனக்கும் நிம்மதி பிறக்கும் என்று பண்ணையார் ஒரு குறிக்கோளுடன் ஊர் மக்களுக்கு சொன்னார்.
முத்தையாவுக்கு பண்ணையார் தலைகனிந்து நிற்பதை பார்த்து அவர் கண்கள் லேசாக கலங்கியது அப்போது பண்ணையாரை கட்டியணைத்துக் கொண்டார் முத்தையா.
இந்த ஊரே உன் தோட்டத்தை நம்பிதன் குடும்பத்தை நடத்துகிறார்கள் . அதுமட்டுமல்ல இந்த ஒரே உன்ன தெய்வமாகவும் பார்க்கிறார்கள் .தனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை ஊர் மக்களுக்கு வேலை இல்லை என்று சொல்லக் கூடாது என்ற குறிக்கோளோடு நீ இந்த தோட்டத்தை நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறாய் இப்படிப்பட்ட உன் நல்ல மனசுக்கு இப்படி ஒரு கஷ்டத்தை கொடுத்துவிட்டார் கடவுள் கவலைப்படாதே நீ செய்த புண்ணியத்திற்கு நிச்சயம் நீ மீண்டு வருவே . உனக்கு நாங்கள் என்ன முடிவு சொல்ல போறோம் உங்கள் குடும்பத்தின் மீது இன்னும் எங்களுக்கு நம்பிக்கை குறையவில்லை எங்களுக்கு வேலை செய்வதற்குத் தான் பயமாக இருக்கிறதே தவிர உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு துளிகூட சந்தேகம் கிடையாது அதனால் நீ கவலைப்பட வேண்டாம் இரண்டு குடும்பங்களும் காணாமல் போனது உன் பிரச்சனை அல்ல இது ஊர் பிரச்சனை எங்களுக்கும் இந்தப் பிரச்சினையில் பங்கு இருக்கிறது இதை கண்டுபடிப்பதில் நாங்களும் முயற்சி செய்கிறோம் அதனால் நீ தலைகுனிந்து நிற்க தட என்று முத்தையா பண்ணையாருக்கு தைரியம் சொன்னார்.
நீங்கள் என் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நினைத்துப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது அதேசமயம் இரண்டு குடும்பங்கள் காணவில்லை என்பது நினைத்தால் என் மனம் ரொம்ப கவலையா இருக்கு அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் என்னைக்கு காணாமல் போனவர்களை பற்றின தகவல் கிடைக்கிறதோ அதுவரைக்கும் என் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்காது ஏனென்றால் இரண்டு குடும்பத்தை தொலைத்துவிட்டு என் வீட்டில் நல்ல காரியத்தை செய்வதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை இந்த முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இதில் யாரும் கவலைப்பட வேண்டாம் .அப்போதுதான் அனைவருக்கும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு முழுமூச்சாக செயல்படுவார்கள் என் குடும்பத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன் . என்று பண்ணையார் உருக்கமாக சொன்னார்.
நம்ம ஊருக்கு சோதனை காலம் வரப் போகுதுன்னு இந்த சாட்டையடி சாமியார் சொன்னது சரியாதான் போச்சு அவரு எப்படி கனிச்சு சொன்னாரு என்று தெரியல அவர் சொன்னபடியே நம்ம ஊருக்கு சோதனை காலம் வந்துருச்சு அய்யோ இதற்கு என்னதான் தீர்வு என்று ஒரு கூலித்தொழிலாளி கூட்டத்தில் புலம்பினார்.
பண்ணையாரின் முடிவு ஊர் மக்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியது இந்தப் பிரச்சினைக்காக பண்ணையார் தனது மகன் திருமணத்தையே நிறுத்தி விட்டாரே என்று கவலைப்பட்டார்கள் ஊரே கோலாகலமாக இந்த கல்யாணத்தை கொண்டாட வேண்டுமென்று நினைத்தார்கள் ஆனால் இப்படி தலைகீழா மாறி போச்சு என்று ஊர் மக்கள் கவலையோடு நின்றார்கள்.
சந்திரனுக்கு மனம் உடைந்து போனது தேவையில்லாமல் தவறு செய்து வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது அவனால் தனது எச்சி கூட முழுங்க முடியவில்லை துக்கம் தொண்டையை இறுக்கப் பிடித்துக் கொண்டது இப்படி நம் வாழ்க்கை வீணாக போய் விட்டதே என்று நினைத்து தலைகுனிந்து கொண்டான்.
ஊர் மக்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் சோகத்தோடு திரும்பிச் சென்றார்கள்
ஒன்றுமே தெரியாதவனை போல பரந்தாமன் தனது தந்தையை தாங்கிப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.
தீனாவுக்கு அண்ணன் திருமணம் நின்றுவிட்டதே. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் இந்த தவறை நான் செய்திருக்க மாட்டேனே ஐயோ அண்ணன் என் மீது கோபப்படுவார் போல் தெரிகிறதே நான் என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக்கள்ள மாட்டார் இனி அண்ணனுக்கும் நமக்கும் திருமணமே நடக்காது போல் தெரிகிறது . காணாமல் போனவர்கள் கிடைத்து விட்டாலும் பிரச்சனை மீண்டும் வெடிக்கும் கனகாஉண்மையை சொல்வாள் அப்போதும் நம் தந்தை அண்ணன் திருமணத்தை நிறுத்துவார் நம்ம திருமணமும் நின்றுவிடும் போல் தெரிகிறதே இப்படி தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்டோமே என்று எண்ணி தீனாவும் கவலையில் ஆழ்ந்தான்.
சந்திரன் கவலையோடு அவன் அறைக்கு சென்று விட்டான் தீனாவும் அவன் அறைக்கு சென்று விட்டான் பண்ணையார் வருத்தத்தோடு பூஜை அறையில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார் பரந்தாமனும் அவனது மனைவியும் அவர்கள் அறைக்கு சென்றார்கள்
நீங்கள் மூன்று பேருமே ஒரே பயத்தோடு இன்று இருப்பதை நான் கவனித்தேன் ஏன் ஊர் மக்களைப் பார்த்து நீங்கள் மூவரும் பயப்படுறீங்க என்று பரந்தாமனின் மனைவி பரந்தாமனிடம் கேட்டாள்.
ஊரே ஒன்று கூடி சோகத்தோடு வந்து நம்ம வீட்டு வாசல்ல நின்னா பயம் வராதா ஊருக்கு என்ன ஆச்சு என்றுதான் நான் பயந்தேன் அதேபோலத்தான் தம்பிகளும் பயந்து இருப்பானுங்க ஏன் எங்க அப்பா கூட பயத்தோடு தான் ஊர் மக்களை பார்த்தாரு. அவங்க நம்ம மேல பாசமா இருக்காங்க நாமளும் அவங்க மேல பாசமா இருக்கிறோம் அப்படி இருக்கிறப்போ எல்லாரும் ஒன்று கூடி நம்ம வீட்டு வாசல் முன்னாடி வந்து நின்னா சோகத்தோடு பயம் இருக்காதா என்றான் பரந்தாமன்
அதுக்குத்தான் பயம் திங்களா நான் என்னமோ ஏதோ என்று நினைத்து பயந்து போனேன்.
இனிமேல் மாமா யாரு கூடவும் பேசமாட்டார் போல் தெரிகிறது இந்த பிரச்சினைகளிலிருந்து எப்படித்தான் மீண்டு வரப் போகிறோமோ என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் மனைவி சோகத்தோடு வீட்டு வேலையை பார்ப்பதற்கு கிளம்பினாள்.
பரந்தாமன் நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்தான் நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று இந்த கனகா நம் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வாள் என்று நினைத்தோம் ஆனால் அவள் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டு ஓடிவிட்டாள் எப்படியோ தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டோம் ஆனால் விவசாய வேலைக்கு இனி யாரும் வரமாட்டேன் என்று ஊர்மக்கள் சொன்னது கவலையாக இருக்கிறது விவசாயம் நடக்கவில்லை என்றால் நமக்கு வருமானம் குறைந்து விடும் நாம் திட்டம் போட்டது எல்லாம் விவசாய நிலத்தையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆனால் இப்படி தலைகீழா மாறி விட்டதே மீண்டும் எப்படி இந்த ஊர் மக்களை வேலைக்கு வர வைப்பது என்று தெரியவில்லையே நம்ம போட்ட திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லையே என்று எண்ணி பரந்தாமனும் சற்று சோகத்தில் ஆழ்ந்தான்.

தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
இதுநாள் வரைக்கும் செழிப்பாக இருந்த பண்ணையார் தோட்டம் கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் ஊர் மக்கள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு வராததால் நெற்பயிர்கள் கரும்புத் தோட்டங்களும் மற்ற எல்லா விவசாயமும் தண்ணீர் இல்லாமலும் சரியான பராமரிப்பு இல்லாமலும் விவசாயம் வீணாகப் போகும் அவலம் ஏற்பட்டது பண்ணையார் தோட்டத்திற்கு.

சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் ஒருநாள் வழக்கம்போல அவர்களின் பூஜை அறையில் பேசிக்கொண்டார்கள்.

இனிமே நமக்கு நல்ல காலம் தான் இந்த ஊர் மக்கள் நம்ம எது சொன்னாலும் நம்புவாங்க செ ல்போனை வச்சுக்கிட்டே இந்த ஊரையே என்னம்மா பயன்படுத்தி வருகிறோம் இப்போ என்னுடைய வாக்கு இந்த ஊர் மக்களுக்கு ஒரு தெய்வ வாக்காக மாறிடுச்சு. நம்ம இந்த ஊருக்கு சோதனை காலம் வரப்போகிறது என்று சொல்லி இருந்தோம் . அதேபோல சோதனை காலமா இந்த ஊருக்கு வந்துடுச்சு நம்ம போட்ட கணக்கு வேற நடந்தது வேறு நம்ம பண்ணையார் ஓட கரும்பு தோட்டத்தை தீ வச்சிவிட்டு இந்த ஊருக்கு சோதனை காலத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தோம் ஆனா நம்ம சொன்ன நேரம் பண்ணையார் தொட்டதில்ல பம்புசெட்டில் வேலை செஞ்ச கனகா குடும்பம் காணாமல் போயி இன்னியோட மூணு நாளாச்சு அதனால ஊர் மக்கள் எல்லாம் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போக பயப்படுறாங்க நம்ம சொன்னபடியே இந்த ஊருக்கு சோதனைக்காலம் வந்துடுச்சுடா கடவுள் நம்ம பக்கமும் இருக்கார் என்பது நல்லாவே தெரியுது இனிமே நம்ம ராஜாங்கம் தான் இந்த ஊருல கொடிகட்டி பறக்க போகுதுடா என்று ரொம்ப சந்தோஷமா சாட்டையடி சாமியாரு தனது இரண்டு சிஷ்யர்கள் இடமும் சொல்லிக்கிட்டு இருந்தான்.

இனிமேல் தான் நம்ம ரொம்ப கவனமா இருக்கணும் குருவே ஏன் என்றால் இந்த ஊர் மக்களுக்கு நம்ம சோதனையை கொடுத்துகிட்டே இருக்கணும் நம்ம எப்போ இந்த ஊருக்கு நல்ல காலம் வருதுன்னு சொல்கிறோமோ அது வரைக்கும் இந்த ஊரையே நம்ம கைவசத்தில் வச்சுக்கணும் கூறுவேன் என்றார் ஒரு சிஷ்யன்.

மற்றொரு சிஷ்யனும் ஆமாம் ஆமாம் குருவே . . இவன் சொன்னதை போலவே இந்த உரை இனி நம் கைவசத்தில் வச்சுக்கணும் முடிஞ்ச அளவுக்கு பண்ண யாரோட குடும்பத்தை நம்ம பக்கம் இருக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கனம் குருவே அப்பதான் நமக்கு நல்ல காசு வரும் என்றார் மற்றொரு சிஷ்யன்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் நீங்கள் இருவரும் என் கூட இருக்கும் வரை இந்த ஊரையே என் வசம் நான் வைத்துக் கொள்வேன் அதேபோல இந்த ஊருக்கு ஒரு நல்ல காலம் வருவதை போல தெரிந்தாள் .உடனே நாம் திட்டம் போட்டது போல பண்ணையார் கரும்புத் தோட்டத்திற்கு தீ வைத்து விடலாம் அப்போதுதான் இந்த ஊரு நம்ம வார்த்தையே நம்புவாங்க அதுக்கப்புறம் பண்ணையார் குடும்பம் கூட நம்ம வழிக்கு வந்துடுவாங்க எனக்கு நம்பிக்கை இருக்கிறது . சரி சரி பேசினது போறும் யாராச்சும் வந்துடப் போறாங்க நம்ம வேலையை பார்க்கலாம் என்றான் சாட்டையடி சாமியார்.



ஊரு ஒரு சோகத்தில் ஆழ்ந்தது வேலையிலலாமல் அனைவரும் சுற்றி சுற்றி வந்தார்கள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் வீடு திரும்புவோம் இல்லை காணாமல் போய்விடுமோ என்ற பயத்தில் அனைவரும் சுற்றி சுற்றி வந்துகண்டிருந்தனர் அப்பொழுது முத்தையா தனது மகனை அழைத்தார்.

இந்த ஊரே பயப்பட்டாலும் நீ பயப்படலாமா உன் மூலமாக இந்த ஊர் மக்களுக்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். நீ நாளையிலிருந்து பண்ணையார் தோட்டத்துக்கு உன் நண்பர்களை கூட்டிக்கிட்டு வேலைக்கு போ அப்பதான் ஒவ்வொருவருக்கும் தைரியம் வரும். இப்படி நீயும் அவங்களைப் போல பயந்துகிட்டு இருந்தா நல்லா இருக்காது . என்ன காரணம்னு தெரியல இரண்டு குடும்பம் காணாமல் போனது எனக்கும்தான் மனசு சங்கடமா இருக்கு. ஏதோ ஒரு மர்மமான சம்பவம் நடந்து இருக்குன்னு புரியுது நடந்தது நடந்து போச்சு அதை கண்டுபிடிக்கிற வேலையில பண்ணை யாரு ஒரு முடிவோட இருக்காரு அதனால பண்ணையார் ஓட தோட்டத்தை காயப் போடுவது ஒரு நல்ல தொழிலாளிக்கு அழகு இல்லப்பா இந்த ஊரே அந்த தோட்டத்தை நம்பி தான் இருக்குது அதனால நீயாச்சு உன் நண்பர்களோட போயிட்டு வேலை செஞ்சிட்டு வாப்பா என்று முத்தையா சங்கரிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னார்.

எனக்கு பயம் ஒன்றும் இல்லை அப்பா நான் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போக ரெடி ஆனா இந்த ஊர் மக்களின் பயம் போகுமா என்று எனக்குத் தெரியாது நாளைக்கு நான் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்புகிறேன் என்று சங்கர் சொல்லும்போது. நீங்க வேலைக்கு போகக்கூடாது என்ற குரல் கேட்டது .சங்கர் திரும்பிப் பார்த்தான். ரேகா நின்றிருந்தாள்

ஊரே பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது இந்த வேலையில இவரை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை தாத்தா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் காணாமல் போன வங்கள பத்தி ஏதாச்சும் தகவல் கிடைத்ததா என்று பார்ப்போம் அதுக்கப்புறம் இவரை வேலைக்குப் போகச் சொல்லலாம் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் தாத்தா எனக்கு என்னமோ பயமா இருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணத்த வச்சிருக்கோம் அதனால கொஞ்ச நாள் போகட்டும் தாத்தா என்று முத்தையா விடும் தாழ்மையாக கேட்டாள் ரேகா.

சரிமா அப்படியே ஆகட்டும் உன் பயம் உனக்கு . உன் கணவனுக்கு ஏதாச்சும் நடந்திட போகிறது என்ற பயம் உனக்கு அதனால் நீ வேண்டாம் என்று சொல்ற நியாயம்தானே சரி பொறுமையா இருப்போம் என்றார் முத்தையா.

வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் கிளம்புவது வழக்கம் அதே போல இந்த வாரத்தின் முதல் நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக மூவரும் கிளம்பிச் சென்றார்கள் அப்போது பண்ணையார் மூவரையும் முறைத்துப் பார்த்தார்..

மூன்று பேரும் எங்க கிளம்பிட்டீங்க.



காணாமல்போனவர்களை தேடுவதற்காக கிளம்புறோம் .அப்பா என்று மெல்லிய குரலில் சொன்னான் பரந்தாமன்.

யாரும் எங்கேயும் போகத் தேவையில்லை இனிமே காணாமல் போனவர்களை நீங்கள் ஒன்றும் தேடத் தேவையில்லை என்று சற்று விரைப்பாக சொன்னார் பண்ணையார்.

எப்போதுமே அப்பா இப்படி கோபப்பட மாட்டார் ஒருவேளை அப்பாவுக்கு நம்மிது . சந்தேகம் வந்துவிட்டதோ என்ற பயத்தில் முகம் பதட்டம் அடைந்தது அப்போது பரந்தாமன் மெதுவாக கேட்டான்.

ஏன்பா என்ன ஆச்சு எப்பவுமே நாங்க வாரத்துல ரெண்டு நாள் தேடபோவது வழக்கம்தானே.

மொதல்ல என்னுடைய எதிரி யாருன்னு தெரியணும் அதுக்கப்புறம் தான் இந்த வேலையெல்லாம் . இதுவரைக்கும் நீங்க காணாமல்போனவர்களை பற்றி எந்தத் தகவலையும் தரல இனிமேலும் நீங்க கண்டுபிடிப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு குறைஞ்சிடுச்சு ஏதோ என் மருமகள் அடிக்கடி எனக்கு தைரியத்தை சொல்லுவா அந்த நம்பிக்கை மில் உங்கள நான் தேடுவதற்கு அனுப்பியிருந்தேன் இனியும் உங்களை நம்புவதில் பயனில்லை அதனால் இனி என் விரோதி யார் என்று தெரியும் வரை நீங்கள் காணாமல் போனவர்களை தேட போக வேண்டாம் . என்னுடைய விரோதி எனக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கான் அவனை எப்படியாவது நான் கண்டுபிடிக்க வேண்டும் ஏனென்றால் அவனால் மேலும் ஒரு அசம்பாவிதம் நடக்கக்கூடாது அதற்கு முன்னாடியே அவனை கண்டுபிடிக்க வேண்டும் . இனி அதுவரை உங்களுடைய வேலை என் விரோதியை கண்டுபிடிபதுதான் அதுக்கு அப்புறம் காணாமல்போனவர்களை நீங்கள் தேடிச் செல்லுங்கள் இப்போது ஒரே வேலை நம் குடும்ப விரோதியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக பண்ணையார் கோபத்தோடு சொன்னார். அப்பொழுது வெளியில் ஐயா என்ற குரல் சத்தம் கேட்டது பண்ணையாரும் பரந்தாமனும் வெளியே வந்து பார்த்தார்கள் கல்யாணத்திற்கு ஊர் மக்களுக்கு புது துணி ஆடர் செய்திருந்தது வந்திருந்தது.

ஆர்டர் செய்து இருக்கும் துணி வந்திருப்பதை பார்த்த சந்திரனுக்கு மனம் தீயாய் கொதித்தது சிறப்பாக நடக்க வேண்டிய திருமணம் இப்படி நாமே கெடுத்து விட்டோமே என்று நினைத்து அவன் மனம் மேலும் வேதனையில் தலைகுனிந்தான்.

பண்ணையாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சந்திரனை பார்த்தார் . சந்திரனும் கவலையில் நின்றிருந்தான் அப்பொழுது பரந்தாமன் அவனது மனைவி மற்றும் தீனா அனைவரும் சந்திரனைப் பார்த்து கவலைப்பட்டார்கள் அப்பொழுது பண்ணையார் ஒரு முடிவுக்கு வந்தார்.

நான் எடுத்த முடிவுக்கு என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு வழி தெரியவில்லை. திருமணத்தை நடத்துவதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை .அதனால்தன் நான் இந்த முடிவு எடுத்தேன் என்னை மன்னித்து விடுங்கள் இப்பொழுது நாம் ஆர்டர் செய்த துணி வந்துவிட்டது திருப்பி அனுப்ப முடியாது அதனால் திருமணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை .என்னைக்கோ ஒரு நாளைக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும் அதனால் இப்போது இந்த புது துணியை நாம் திட்டமிட்டபடி ஊர் மக்களுக்கு இன்று மாலை நீங்கள் மூவரும் சென்று அனைவருக்கும் கொடுத்து விடுங்கள் என்றார் பண்ணையார்.

அப்படியே செய்கிறோம் அப்பா இன்று மாலை ஊரில் உள்ள அனைவருக்கும் புது துணி கொடுத்து விடுகிறோம் என்று பரந்தாமன் சொல்லிவிட்டு புதுத் துணியை இறக்கி வைக்கும் இடத்தை காட்டினான் கொண்டு வந்தவரிடம்.

மாலை நேரம் ஆனது ......சொன்னபடி பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் ஊருக்குள் புதுத்துணி கொடுக்கும் வேளையில் இருந்தார்கள் அப்பொழுது ஊர் மக்கள் தயங்கிக்கொண்டே புது துணியை வாங்கினார்கள்.

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு கடவுள் இப்படிப்பட்ட சோதனையை கொடுத்துட்டாரு இருந்தாலும் பண்ணையார் அவசரப்பட்டு இருக்கக் கூடாது .திருமணத்தை நடத்தி விட்டு பிறகு ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கலாம் பாவம் சந்திரன் என்று அங்கு கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.

நீ ஒன்றும் கவலைப்படாதே தம்பி உன் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன் கொஞ்சநாள் பொறுத்துக்க எல்லாம் சரியாப் போகும் . ஏதோ தெரியாம மூணு பேரும் தப்பு செஞ்சுட்டோம் இனி எந்த தப்பையும் நம்ம செய்ய மாட்டோம் செஞ்ச தப்புக்கு நம்ம மேல யாருக்கும் இதுவரைக்கும் சந்தேகம் வரல அதனால இப்போ இந்த துணியை நம்ம சந்தோஷமா கொடுக்குறது நாளா நம்ம மேல யாருக்கும் சந்தேகம் வராது அதனால நீ கொஞ்சம் கவலைப்படாம இரு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பரந்தாமன் சந்திரனிடம் ரகசியமாக சொன்னாள்.



எப்படியோ திருமணத்தையும் நிறுத்தி விட்டோம். இப்போ ஊருக்குள்ள எல்லாருக்கும் புது துணியை கொடுத்து நல்ல பெயரையும் எடுத்துவிட்டோம் . என்ன விவசாய வேலை தான் கொஞ்சம் பாதிப்பு பரவாயில்லை போகப்போக அதையும் சரி பண்ணி விடலாம் என்று மனசுக்குள் நினைத்து பரந்தாமன் மட்டும் நிஜமான சந்தோசத்துடன் ஊர் மக்களுக்கு துணியை கொடுத்துக்கொண்டிருந்தான் பரந்தாமன்...



பரந்தாமனின் வெற்றி தொடருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்



தொடரும்........

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் அந்த ஊர் மக்களும் பண்ணையார் குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது நாட்களும் நகர்ந்தது..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வழக்கம்போல தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அவர்கள் முகத்தில் எந்த ஒரு உற்சாகமே தென்படவில்லை . சற்று சோகத்தோடு கிளம்பினார்கள் பண்ணையாரும் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. அமைதியாக எதையோ பறிகொடுத்தவர் போல யோசித்துக் கொண்டிருந்தார். பரந்தாமனின் மனைவி மூவரையும் வழக்கம்போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் பண்ணையார் சோகத்தில் இருப்பதை கவனித்தால்.

மாமா குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரவா..

அதெல்லாம் ஒன்னும் வேணாம் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் இப்படி உட்காருமா என்று பண்ணையார் பொறுமையாக சொன்னார்.

எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் சந்திரனுக்கு கல்யாணத்தை பண்ணப் போறோம் என்று . ஆனால் கடைசியில இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு ரொம்ப பயமா இருக்கு . மா அந்த காலத்துல நான் எதுக்குமே பயந்தது கிடையாது எப்படிப்பட்ட சவால்களையும் சமாளித்து விடுவேன் .எனக்கு பக்க பலமா என் நண்பன் முத்தையா இருந்தான் . அதனால எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் அதை முறியடித்து விடுவோம் ஆனால் இப்போ ஒரு சின்ன பிரச்சனை நடந்தால் கூட என்னால தீர்க்க முடியல மா அதுக்கு காரணம் என்னோட வயசு தான் என்னால ஓடிப்போய் காணாமல்பனவர்களை தேட முடியுமா அவங்க எதனால காணாமல் போனார் என்ற தகவல் கூட என்னால இப்போதைக்கு சேகரிக்க முடியலையே இதெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா எனக்கு ஆரம்ப காலத்துல ஞாயம் தர்மத்துக்கு நான் பாடுபடுவேன் அதேபோல இப்போதும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நியாயம் தர்மத்தை நான் பாக்குற அம்மா. என் மனசுக்கு வயசு ஆகல என் பிடிவாதத்துக்கு வயசு ஆகல என் தர்மத்துக்கு வயசு ஆகல ஆனா ஆனால் என் உடலுக்கு வயசு ஆயிடுச்சு மா அதனால என்னால முன்ன மாதிரி எதையமே ஜெயிக்க முடியல என்று உருக்கமாக பண்ணையார் தனது மருமகளிடம் சொன்னார்..

ஒரு பிரச்சனை எப்போது உச்சத்திற்கு போகுதோ . அப்போவே அந்தப் பிரச்சனைக்கு தீர்வும் சீக்கிரம் கிடைத்துவிடும் . இதுதான் காலத்தின் கட்டாயம் அதனால இப்போதான் நீங்க ரொம்ப தைரியமா இருக்கணும் மாமா நீங்க வேணா பாருங்க இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு மாற்றம் வர போகுது பாருங்க மாமா.

எனக்கு என்ன வருத்தம் என்ன நம்ப குடும்ப விரோதி ரொம்ப பக்கத்திலே இருக்கிற மாதிரிதான் எனக்கு தோன்றுதம்மா . நீ என்ன நினைக்கிற.

எனக்கும் அப்படித்தான் தெரியுது மாமா நடந்ததை எல்லாம் பார்க்கும் போது இதை யாரோ திட்டமிட்டு தான் செஞ்சிருக்காங்க . அது யாருன்னு தான் தெரியல உங்களுக்கு யார் மேல சந்தேகம் இருக்குதா மாமா

தினமும் உன் கணவனும் அவனது தம்பிகளும் தோட்டத்திற்கு சென்று வராங்க அவனுங்களுக்கே இது யார் செஞ்சி இருப்பாங்கன்னு தெரியல வீட்ல இருக்குற எனக்கு எப்படிமா தெரியும் நான் யார் மேல சந்தேகம் பாடுறத அது மட்டும் இல்ல ஊர் மக்களும் யார் மேலேயும் சந்தேகம் படல இந்த காரியத்தை யார் செஞ்சு இருப்பாங்கன்னு. அவங்களுக்கும் தெரியல நம்ம வீட்டுல இருக்கிற ஆம்பளைக்கும் தெரியல வயசானவன் எனக்கு எப்படி தெரியுமா.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க ஒரு திருப்பம் ஏற்பட போது பாருங்க . உங்கள் நண்பர் முத்தையாவின் மகன் சங்கருக்கு திருமணம் நடக்கப் போது அல்லவா அந்த திருமணத்திற்கு நாம் குடும்பத்தோட போகப்போறோம் அல்லவா நம்ம வீட்டு திருமணத்தை தான் தள்ளிப் போட்டுட்டீங்க உங்க நண்பர் வீட்டுத் திருமணத்தை நல்ல சந்தோசமா முடிச்சுட்டு வரலாம் அந்தத் திருமணம் முடிந்ததும் உங்களுக்கு ஒரு திருப்பம் ஏற்படும் பாருங்க என்று சொல்லி சமாதானம் செய்தாள்.



வழக்கம்போல பரந்தாமன் சந்திரன் தீனா தோட்டத்திற்கு சென்று ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப்பார்க்க . அப்பொழுது பச்சை பசுமையாக இருந்த தோட்டம் எல்லாம் வதங்கி விநாகம் அளவிற்கு இருந்தது இதைப்பார்த்த மூவருக்கும் சோகம் மேலும் அதிகரித்தது நாம் செய்த தவறினால் இப்படி விவசாயமே நாசமாகிவிட்டது என்று கவலைப்பட்டார்கள் அப்போது பரந்தாமன். சந்திரனிடம் என்னை மன்னித்து வீடு தம்பி என்றான் தலைகுனிந்தபடி.

அண்ணே பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க என்றால் சந்திரன்.

நான் உங்கள் மீது உள்ள பாசத்தினால் இப்படி ஒரு தவறை செய்துவிட்டேன் எனக்கு உங்கள் ஆசை தான் பெரிதாக தெரிந்ததே தவிர அதன் விளைவுகள் எனக்கு அப்போது தெரியவில்லை . தம்பிகள் ஆசை தான் முக்கியம் என்று நினைத்து தான் இந்த தவறுக்கு சம்மதித்தேன் . ஆனால் இப்படி உன் திருமணமே நின்று போகும் என்று தெரிந்திருந்தால் நான் இதுபோன்ற தவறை செய்து இருக்கவே மாட்டேன் . அந்த கனகா நம் வழிக்கு வந்து விடுவாள் என்று எண்ணி தான் உங்களை அவளுடன் சேர சொன்னேன் . ஆனால்நாம் நினைத்தது ஒன்று இப்போது நடந்தது ஒன்று . எப்படியோ இனி எந்தத் தவறையும் நான் உங்களை செய்ய அனுமதிக்கமாட்டேன் இனி உங்கள் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் நான் செய்த தவறுக்கு என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள் என்று உருக்கமாக சொல்வதைப்போல நடித்தான் பரந்தாமன்.

எப்போதும் போலவே சந்திரனும் தீனாவும் அண்ணனின் பாசத்தை பார்த்து பெருமை அடைந்தார்கள் பிறகு பரந்தாமனுக்கு ஆறுதலும் சொன்னார்கள்.

சந்திரனும் தினாவும் ஆளுக்கொரு திசையில் சென்றார்கள் தோட்டத்தைப் பார்க்க பரந்தாமன் மட்டும் கவலையோடு பம்பு செட்டின் அருகிலேயே நின்றிருந்தான் தம்பிகள் சற்று தூரத்தில் சென்றதும் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்பு நின்று பேசத் தொடங்கினான்.



அம்மா நான் உன்கிட்ட வேண்டியது போல தம்பி திருமணத்தை நிறுத்திவிட்டேன் . அது எனக்கு சந்தோசம் தான் . ஆனால் விவசாயமும் சேர்ந்து நின்னு போச்சு எதுக்காக நான் இந்த திட்டத்தை போட்டேன் . விவசாயம் சிறப்பாக நடக்கணும் லாபம் எனக்கு மட்டுமே கிடைக்கணும் என்று நினைத்துதான் இந்த திட்டத்தை போட்டேன் ஆனால் நடந்தது வேறு. அம்மா நீ எனக்கு நல்லது செய்றியா இல்ல கெட்டது செய்றியா எனக்கு தெரியவில்லை . எப்பவுமே நீ எனக்கு நல்லது தான் செய்வே அந்த நம்பிக்கையில்தான் நான் இருக்கேன் ஆனா இப்போ நடந்திருப்பதை வச்சு பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியல இந்த விவசாயத்துல கிடைக்கிற லாபத்தை எல்லாம் அப்பாவிடம் கொஞ்சம் கொடுத்து விட்டு மீதி பணத்தை எல்லாம் உன் பக்கத்துல தானே வச்சிருக்கேன் . எதனால நீ பத்திரமா பாத்துக்குவே என்ற நம்பிக்கையில் தானே வச்சிருக்கேன் இப்போ எனக்கு இந்த விவசாயத்துல வருமானம் கிடைக்காது போல தெரிகிறது நான் நினைத்தபடி தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் உன்னோட துணையோடு ஆனா இந்த ஊர் மக்கள் எல்லாம் நம்ம விவசாயத்தை நிறுத்திவிட்டார்கலே . நான் உன்கிட்ட வேண்டி கேட்கிறது இந்த விவசாய நிலமும் அதுல கிடைக்கிற லாபம் எனக்கு மட்டுமே சேரனும் என்னோட குறிக்கோளே அது தானே உனக்கு தெரியாதா . ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டு இன்னொரு ஆசையே தடைபோட்டு விட்டாயே அம்மா . எனக்கு தெரியாது .நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இன்னும் கொஞ்ச நாள்ல இந்த விவசாயம் பழையபடி செழிப்பாக வளர வேண்டும் அதுக்கு நீதான் உறுதுணையா நிக்கணும் எப்படி என்னோட ஆசையை நீ ஒன்னொன்னா நிறைவேற்றினியோ அதேபோல இந்த ஆசையும் .நீதான் நிறைவேற்ற வேண்டும் . எனக்கு உன்ன விட்டா யாரும் கிடையாது அதனால தான் நான் சேர்த்த பணத்தை எல்லாமே உன் படத்துக்குப் பின்னாடி மறைச்சு வச்சு இருக்கேன் அந்த அளவுக்கு உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அம்மா நீதான் என் தெய்வம் என்னை நல்ல நிலைமைக்கு நீதான் கொண்டு வரணும் . தம்பிகளை நான் சந்தோஷமா பார்த்துகிறேன் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் ஆனால் திருமணத்தை மட்டும் நடத்த மாட்டேன் மத்த எல்லா சந்தோசத்தையும் அவங்களுக்கு நான் கொடுக்கிறேன் . அதனால நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம் அம்மா இப்போ என்னுடைய ஒரே வேண்டுதல் பழையபடி நம்ம தோட்டம் செயிப்பா வளரனும் எனக்கு லாபம் வரணும் இதுதான் என்னோட ஆசையும் . இதை நீ கூடிய சீக்கிரத்துல நிறைவேத்தி வெப்ப என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாவே இருக்கு என்னோட ஆசையை நீ இதுவரைக்கும் தட்டிக் கழித்தது இல்லை அந்த நம்பிக்கையில் நான் இப்போ காத்துகிட்டு இருக்கேன் அம்மா என்று பரந்தாமன் மீண்டும் தனது தாயிடம் வேண்டிக்கொண்டான். பிறகு தாயின் படத்தின் பின்புறமாக சென்று பணமெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்தான் . வச்ச பணம் அப்படியே இருக்கிறது பிறகு வெளியே வந்தான் . தம்பிகளும் வயல்களை சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார்கள் .அப்பொழுது தீனா பரந்தாமன்னிடம் சொன்னான்.

நம்ம தோட்டம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல மொத்தமா காஞ்சிவிடும் அளவுக்கு வந்துடுச்சு அண்ணா . சரியா தண்ணி போகாள அதனால எல்லா வாழலும் காஞ்சி போச்சு. பாக்குறதுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா இது போல நான் என்னைக்குமே நம்ம தோட்டத்தை பார்த்ததில்லை என்று வருத்தத்தோடு சொன்னான் தீனா

என்னோட அனுபவத்துல கூட நம்ம தோட்டத்தை நான் இதுபோல பார்த்ததில்லை என்ன பண்றது நம்ம செஞ்ச தப்பு . இப்போ நாம தானே அனுபவிச்சே ஆகணும் என்று நிஜமாகவே கவலைப்பட்டான் பரந்தாமன்.



நாட்கள் நகர்ந்தது . ஊரில் உள்ள வாலிபர்கள் எல்லாம் சங்கரின் திருமணத்தை கோவிலில் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணி கோலாகலமாக ஊரையே அலங்கரித்தனர் சந்தோஷமாக . ஒரு சிலர் லேசான வருத்தத்தோடு இருந்தார்கள் முத்தையாவும் முழுமையான சந்தோசத்தில் இல்லை பண்ணையார் வீட்டு திருமணம் நின்றுவிட்டது நம்முடைய மகன் திருமணம் மட்டும் சிறப்பாக நடக்கிறது பண்ணையாரும் கவலையில் இருக்கிறார் இரண்டு குடும்பம் காணாமல் போய்விட்டது என்ற கவலையில் இந்த நிலைமையில் நமது மகன் திருமணத்திற்கு வருவானோ வர மாட்டானோ என்றன்ற கவலையும் இருந்தது முத்தையாவுக்கு.

ஷங்கரும் ரேகாவும் நாளை முதல் நம் கணவன் மனைவியாக குடும்பத்தை நடத்தப் போகிறோம் என்று பேசிக்கொண்டு நண்பர்களோடு ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

ரேகாவின் அம்மா மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் தனது ஒரே மகளின் திருமணம் இப்படி ஊரே மகிழ்ச்சியாக கொண்டாடுவதை பார்த்து பெருமை கொண்டாள் அதேசமயம் சங்கர் மருமகனாக கிடைத்ததற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து பெருமைப் பட்டாள் ரேகாவின் அம்மா லட்சுமி.

பண்ணையார் வாங்கி கொடுத்த புது துணியை உடித்துக்கொண்டு ஊர் மக்கள் அனைவரும் பளிச்சென்று இருந்தார்கள் ஒரு சிலர் வருத்தப்பட்டார்கள் பண்ணையார் அவருடைய மகன் திருமணத்துக்காக புதுத்துணி ஆர்டர் செய்து இருந்தார் ஆனால் பண்ணையாரின் வீட்டு திருமணம் நின்று போய்விட்டது அவர் ஆர்டர் செய்த துணி மட்டும் அவர் நினைத்தபடி ஊர்மக்களுக்கு கொடுத்துவிட்டார் அப்படிப்பட்ட நல்ல மனசு காரருக்கு இப்படி ஒரு சோதனை . இருந்தாலும் முத்தையாவின் ஒரே மகன் திருமணத்தை யாவது நல்லபடி செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு சில பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.......,



பண்ணையார் மருமகள் சொன்னது போல .சங்கர் ரேகா திருமணத்திற்கு பிறகு பண்ணையார் குடும்பத்தில் மாற்றம் ஏற்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.,



தொடரும்....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
அதிகாலை நான்கு மணி இருக்கும் அந்த அழகிய கிராமத்தில். மங்களகரமான நாதஸ்வர மேளதாளங்கள் நல்ல உற்சாகமாக ஒலிக்கத் தொடங்கியது . ஊரில் உள்ளவர்கள் சட்டென்று விழித்துக் கொண்டார்கள் கோவிலில் கல்யாணம் மேளச்சத்தம் கேட்கிறது சங்கர் ரேகாவின் திருமணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகிறது அதனால் உடனே கோவிலுக்கு கிளம்ப வேண்டும் என்று ஊர் மக்கள் அனைவரும் விழித்துக்கண்டு கல்யாணத்திற்கு கிளம்பினார்கள் சந்தோஷமாக.

பண்ணையார் வீட்டிலும் சங்கர் திருமணத்திற்கு மும்மரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது பண்ணையார் மருமகளை அழைத்து.

அம்மாடி பீரோ வில் புதுத்தாலி வைத்து இருக்குமே அதை மறக்காமல் எடுத்துக்கோ அவசரத்துல மறந்துட்டு போக போறோம் என்று சொன்னார்.

மொத வேலையா குளிச்சி முடிச்சதும் தாலியை எடுத்து பேக்குல வெச்சுட்டேன் மாமா என்று சிரித்தபடியே சொன்னாள் மருமகள்.

பிறகு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வழக்கம்போல திருமணத்திற்கு தயாராகி விட்டு மூவரும் ஒரே பைக்கில் திருமணத்திற்கு கிளம்பினார்கள்.

பண்ணையார் அவருடைய மருமகள் மற்றும் பேரன் இவர்களும் திருமணத்திற்கு கிளம்பிச் சென்றார்கள்.

அந்த அழகிய கிராமத்தில் அற்புதமான அம்மன் கோவிலில் மாவிலை தோரணங்கள் ஓடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது சங்கர் ரேகாவின் திருமணம் . ஊரே ஒன்று கூடி சந்தோஷமாக திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தனர் . ஒரு பக்கம் சமையல் வேலையும் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

பண்ணையாரின் குடும்பம் திருமணம் நடக்கும் அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள் ஊர்மக்களுக்கு பெரும் சந்தோஷம் பண்ணையார் குடும்பத்தோடு திருமணத்திற்கு வந்துவிட்டார் என்று எண்ணி. முத்தையா மற்றும் அங்கிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று பண்ணையாரை வரவேற்றார்கள் . பண்ணையாரும் ஊர் மக்களை அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் பெருமகிழ்ச்சி கொண்டார் சந்தோஷம் அவர் முகத்தில் பொங்கியது. அனைவரையும் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார் பண்ணையார். ஊர் மக்களும் பண்ணையார் குடும்பத்தை வணங்கி திருமணத்தை நடத்தி வைக்கும் படி சொன்னார்கள் . அப்பொழுது பண்ணையார் தனது மருமகளிடம் இருக்கும் தாலியை வாங்கி பூசாரியிடம் கொடுத்து சடங்கு சம்பிரதாயம் செய்யச் சொன்னார்.

ரேகாவின்அம்மா லட்சுமி அம்மாவுக்கு தனது மகள் திருமணத்தை பார்த்து கண் கலங்கியபடி சந்தோசததில் நின்று கொண்டிருந்தார் . நமது மகள் திருமணம் இந்த அளவுக்கு சிறப்பாக நடப்பதைப் பார்த்து சந்தோசத்தில் கண் கலங்கினாள் அப்போது முத்தையா வைப் பார்த்து அவளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் பாசத்தில் திகழ்ந்தால் . கணவனை இழந்து அனாதையாக நின்றபோது . சொந்த மகளாக நினைத்து ஆதரவு கொடுத்தார் இப்பொழுது ஒரு பெரிய பாச பந்தத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் . இவருக்கு நாம் என்ன செய்து இவர் நன்றிக்கடனை தீர்க்க முடியும் . இந்த ஜென்மத்தில் அது முடியாது நீங்கள் உண்மையிலே என்னைபெத்த அப்பாதன் என்று நினைத்து . இரு கைகளால் கும்பிட்டாள் முத்தையா வை பார்த்து.

லட்சுமி இரு கைகளால் வணங்கி கும்பிடுவதை பார்த்த முத்தையா புரிந்துகொண்டார்.

இன்னும் கொஞ்ச நேரத்துல மகள் திருமணம் நடக்கப்போகுது இந்த நேரத்தில் கண் கலங்க த அம்மா என்று லட்சுமி அம்மாளுக்கும் பாசமாய் சொன்னார் முத்தையா.

பிறகு பண்ணையார் முன்னிலையில் சங்கர் ரேகா திருமணம் சிறப்பாக நடந்தது பண்ணையார் தாலியை எடுத்துக்கொடுக்க சங்கர் ரேகா கழுத்தில் தாலியை கட்டினான் மேலம்கொட்டினார்கள்.

பிறகு விருந்து உபசரிப்பு நடந்தது பண்ணையாரும் குடும்பத்தோடு அமர்ந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டனர் அப்போது சந்திரனின் முகம் சற்று வாடியபடி இருந்தது இதை கவனித்த பண்ணையாரும் முகம் வாடினார் . மகன் திருமணத்தை நிறுத்தி விட்டோமே என்று எண்ணி லேசாக கவலைப்பட்டார்.

பிறகு முத்தையாவும் பண்ணையாரும் இருவரும் மனம்விட்டு பேசத் தொடங்கினார்கள் கடந்த கால நினைவுகளை இருவரும் பகிர்ந்துகொண்டார்கள் . எனக்கு உன்னை விட்டால் ஆளில்லை என்பதுபோல பண்ணையாரின் பேச்சு இருந்தது . முத்தையாவும் நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது போல இருவரும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது முத்தையா சொன்னார்.

இதுநாள் வரைக்கும் என் நினைவு தெரிந்த நாள் முதல் நமது தோட்டம் தண்ணி இல்லை என்று வாடி போனதே கிடையாது . ஆனால் இன்று தண்ணீர் இருந்தும் தோட்டங்கள் எல்லாம் பராமரிக்க ஆள் இல்லாததால் வாடிக் கொண்டு இருப்பதை பார்த்தாள் என் மனம் ரொம்ப கவலைப்படுகிறது. என்று உருக்கமாக சொன்னார் முத்தையா.

அதை நினைத்தால்தான் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது இப்படியே நம் தோட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அது மட்டும் இல்ல இந்த பம்புசெட்டில் தங்கி வேலை செய்த இரண்டு குடும்பமும் காணாமல் போனது மேலும் என் பயத்தை அதிகரிக்கிறது . நான் இந்தப் பிரச்சனையில் இருந்து எப்படித்தான் வெளியே வரப் போகிறானோ என்று எனக்குத் தெரியலை . இந்த பிரச்சனையிலிருந்து நான் வெளியில வந்தா தான் . என் இரண்டாவது மகன் சந்திரனுக்கு திருமணத்தை நடத்துவதா முடிவு பண்ணியிருக்கேன் . இதனால என்னால நிம்மதியாக இருக்க முடியல ஒரு பக்கம் தோட்டம் வீணா போது ஊர் மக்களும் வேலைக்கு வர பயப்படுகிறார்கள் அதனால அவங்க குடும்பத்திலும் கஷ்டம் இருக்கு வேலை இல்லை ஆனா அவங்க எப்படி குடும்பம் நடத்த முடியும் இது நாள் வரைக்கும் விவசாயத்தில் எனக்கு லாபம் இல்லாவிட்டாலும் ஊர் மக்களுக்கு வேலை இல்லாம நான் விட்டதே இல்லை . ஆனா இன்னைக்கு நலமைஅப்படி இல்ல . வேலை இருந்தும் அவங்களால் வேலை செய்ய முடியல அப்படி ஒரு நிலைமைக்கு வந்துருச்சு நம்ம உருவாக்கின இந்த தோட்டம் இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்கு எனக்கு வயசு இல்ல என் மகன்களும் இந்தப் பிரச்சனையை சரி செய்வார்கள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்ல இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு என்று உருக்கமாக சொல்லி கவலைப்பட்டார் பண்ணையார். முத்தையா விடம்.

நீ ஒன்றும் கவலைப்படாதே நிச்சயமா ஒரு நல்ல முடிவு பொறக்கும் பொறுமையா இரு என்று தோளைத் தட்டிக் கொடுத்தார் முத்தையா

என் மருமகளும் இதையேதான் சொன்னாள் சங்கர் திருமணம் முடிந்ததும் ஒரு நல்ல வழி பொறக்கும் உங்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று என் மருமகள் சொன்னால் . அதே போல தான் நீயும் சொல்ற. பார்க்கலாம் இனியாச்சும் என் குடும்பத்திற்கும் ஏன் தோட்டத்திற்கும் இந்த ஊர் மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பொறக்குத என்று இதோ இந்த அம்மன் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்று பண்ணையார்சொன்னார் . பிறகு அனைவரும் புறப்பட தயாரானார்கள் பண்ணையார் குடும்பத்தை மக்கள் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார்கள் முத்தையாவும் சங்கர் ரேகா லட்சுமி அம்மாளும் பண்ணையாரை கையசைத்து சந்தோஷமாக வழிஅனுப்பினார்கள் பிறகு ஊர் மக்கள் கல்யாண சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டார்கள்.

மாலைப்பொழுது முத்தையா தனது வீட்டின் திண்ணை மீது அமர்ந்தபடி டீ குடித்துக் கொண்டு லட்சுமி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார் வீட்டின் கதவு லேசாக சாத்தியிருந்தது

வீட்டுக்குள் சங்கரும் ரேகாவும் கட்டில் மீது கட்டியணைத்தபடி ஒருவரையொருவர் செல்லமாக பேசிக்கொண்டிருந்தனர் . இருவரின் இதழ்கள் உரசிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாமா இனிமே என்ன கேக்காம எங்கேயுமே நீ போகக்கூடாது சின்ன பிள்ளை மாதிரி கபடி எல்லாம் இனிமே விளையாடக்கூடாது இந்த சேத்துல போயிட்டு நீங்கள் கபடி விளையாடுவது எனக்கு பிடிக்கல நீங்க எங்க வேலைக்கு போனாலும் அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடனம் அப்புறம் தினமும் பூ வாங்கிட்டு வரணும் அப்புறம் தினமும் நல்லா சாப்பிடணும் அப்பத்தான் ....அப்பத்தான்..... என்று இழுத்தாள் ரேகா.

என்னடி சொல்ல வர இவ்வளவு நாளா நல்லா தானே சாப்பிட்டுகிட்டு இருக்கேன் . இப்ப என்ன புதுசா நல்லா தான் சாப்பிடணும்னு இயுக்குற என்றான் செல்லமாய் சங்கர்.

நான் எதுக்கு சொல்றேன்னு இப்ப புரியாது உங்களுக்கு அப்புறமா தான் புரியும் இப்போ நான் சொல்றதை கேளு மாமா நல்லா சாப்பிடுங்க.

சரி சரி நீ சொல்ற மாதிரியே நல்லா சாப்பிடுறேன் ஆனா இப்ப என்ன வச்சி இருக்க நான் சாப்பிடுறதுக்கு என்று சொன்னான் சங்கர்.

ஐயோ மக்கு நீ சாப்பிடறதுக்கு இப்போ எதுவுமே இல்லையா நல்லா பாரு என்று. சிரித்துக்கொண்டே தன் இடுப்பு அழகை வளைத்துக் காட்டினாள்ரேகா

ஓ இதைத்தான் நல்லா சாப்பிடணும் சாப்பிடணும்னு சொன்னியா பரவாயில்லை உம்மை போல இருந்துகிட்டு இவ்வளவு நாளா என்னை ஏமாத்திகிட்டு இருந்தய.

இப்ப பாரு எப்படி சாப்பிட போறேன் .நீ மெதுவா போய் அந்த கதவ கொஞ்சம் தாப்பால் போட்டுட்டு வா அதுக்கு அப்புறம் பாரு மாமா எப்படி சாப்பிடுறேன். என்று நாக்கை மடித்துக் கொண்டே சொன்னான் சங்கர் . ரேகாவல் வெட்கம் தாங்க முடியவில்லை .தலை குனிந்தபடியே எழுந்துசென்று மெதுவாக கதவை தாப்பால்போட்டாள் . முத்தையாவும் லட்சுமி அம்மாளும ரேகா கதவை சாத்துவதை கவனித்தும் கவனிக்காதது போல இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் பிறகு லட்சுமி அம்மாள் இனியும் நம்ம இங்கே உட்கார்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்து . சிரித்துக் கொண்டே முத்தையா விடம் நான் எல்லோருக்கும் சமையல் செய்கிறேன் நேரமாச்சு அப்பா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் எதிரில் இருக்கும் அவள் வீட்டுக்கு.

சங்கரும் ரேகாவும் இனிமையான மாலைப் பொழுதை இருவரும் காமதேவனின் உதவியோடு சந்தோஷமாக கழித்தனர் இரவு நேரம் ஆனது கதவின் தாழ்ப்பாள் திரந்தது. அப்பொழுது ரேகா தனது தாய் செய்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு முத்தையாவுக்கு சங்கருக்கும் பரிமாறினாள் . இருவரும் ரசித்து சாப்பிட்டார்கள் பிறகு வழக்கம்போல முத்தையா மீண்டும் திண்ணை மீது அமர்ந்து கொண்டார் . சங்கர் ரேகாவும் மறுபடியும் கட்டில்மது படுத்துக்கொண்டார்கள் அப்பொழுது சங்கரின் முகம் லேசாக வாடியது சங்கரை கவனித்தாள் ரேகா.

ஏ மாமா ஒரு மாதிரியா இருக்கீங்க நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தீங்க.

இவ்வளவு நாளா நல்ல வேலைக்குப் போய் சம்பாதித்து கிட்டு இருந்தேன் ஆனா நமக்கு திருமணமானதும் இனி பண்ணையார் தோட்டத்தில எப்ப தான் வேலைக்கு போவேன் என்று எனக்கே தெரியல . அதுதான் மனசுக்கு ஒரு சங்கடமா இருக்கு அப்பா சொன்னபடி உன்னை நான் ராணிபோல பாத்துக்கணும். அப்பா ஆசைப்பட்டார் இப்படி நான் வேலைக்கு போகாம இருந்தா எப்படி நான் உன்ன ராணி போல பாதிக்கிறது. என்று சங்கர் கவலையோடு ரேகா விடம் சொன்னான்.

பணம் நகை இருந்தாத்தான் ராணியா . உன் பக்கத்துல இருந்தாலே நான் ராணி தான் மாமா இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம் . தாத்தா என் மேல உள்ள பாசத்துல அப்படி சொல்லி இருக்காரு நான்தான் ஏற்கனவே சொன்னேன் நான் கடைசி வரைக்கும் உன் கூடவே இருந்தலே அதுவே நான் செஞ்ச பாக்கியம் அந்த ஒரு சந்தோசம் மட்டும் எனக்கு போதும் நம்ம ரெண்டு பேரும் என்னிக்குமே பிரியாம வாழனும் அதுதான் என்னோட ஆசை மத்தபடி பணத்தின் மிதும் நகைகள் மேலேயும் எனக்கு ஆசை எதுவும் கிடையாது மாமா புரிஞ்சுக்குங்க நீங்க மட்டும் தான் எனக்கு சொத்து தாத்தா அப்படிதான் சொல்லுவாரு ஒரு பேரனோ பேத்தியோ பாத்துட்டா அதுக்கப்புறம் எல்லாமே பேற பிள்ளைகளுக்காக மட்டும்தான் அவரு பாசத்தை காட்டுவாரு அப்புறம் நம்ம ரெண்டு பேரையும்கூட கண்டுக்க மாட்டார் என்று சிரித்தபடி சொன்னாள் ரேகா.

ரேகாவின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கு மீண்டும் உற்சாகம் வந்தது இருவரும் மறுபடியும் ரொமான்ஸ் வேலையில் இறங்கினார்கள்....



பரந்தாமனுக்கு எப்படியாவது விவசாயத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசை.....

பண்ணையாருக்கு நம் குடும்பத்திற்கும் இந்த ஊருக்கும் கெடுதலை செய்யும் அந்த தீய சக்தியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை..,...

சங்கரின் திருமணத்தினால் ஒரு திருப்பம் ஏற்படுமா...

இனி யார் திட்டம் பலிக்கபோகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
ஒரு நாள் அந்த ஊரில் அக்கம்பக்கத்தினர் தனது வீட்டு வாசலில் கட்டில் போட்டு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் . இரவு எட்டு மணி இருக்கும் அப்பொழுது ஒருவர் பக்கத்து வீட்டு நண்பரிடம் கட்டிலில் அமர்ந்தபடி பேச்சுக் கொடுத்தார்.

என்னப்பா ....முத்தையாவின் வீட்டு திருமணம் எப்படியோ நல்லபடியா முடிஞ்சிடுச்சு நம்ம பண்ணையார் ஓட மகன் திருமணம் தான் தள்ளிப் போயிருச்சு . என்னைக்கு நடக்கும் தெரியல . இந்த பம்புசெட்டில் வேற நம்ம கனகா குடும்பம் ஏற்கனவே நம்ம பெரியவரின் மகனும் மருமகளும் காணாம போய் இருக்காங்க .இந்த ரெண்டு குடும்பத்தால் இந்த ஊருக்கே வேலை இல்லாம போச்சு . பாவம் அந்த ரெண்டு குடும்ப என்ன ஆனாங்கதெரியல . யாரைத்தான் நம்புவதோ ஒன்னும் புரியல நம்ம ஊர்ல என்னதான் நடக்குதுன்னு தெரியல . இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் எப்போது வருமோ வேலை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்று சொன்னார்.

நீ சொல்றதும் சரிதான் ......இப்போ இருக்கிற நிலைமைக்கு யாரைத்தான் நம்புவது என்று தெரியல . வேலைக்கு போனா இரண்டு குடும்பம் காணாம போனது எல்லோருக்கும் பயத்தை ஏற்படுத்தி ருச்சி . போதாத குறையாக நம்ம சாட்டையடி சாமியார் வேற இந்த ஊருக்கே சோதனை காலம் வரப் போகுதுன்னு சொல்லிட்டாரு . அவர் சொன்னபடியே நமக்கெல்லாம் வேலை இல்லாம போச்சு . இப்படியே இன்னும் ஒரு மாசம் போனா சாப்பிடுவதற்கு வழி கிடையாது பண்ணையாரும் . பண்ணையார் பசங்களும் தங்கமான பசங்க அவங்கதான் இன்னைக்கு கூட வேலைக்கு வாங்க என்றுதான் சொல்றாங்க . ஆனா வேலைக்கு போறதுக்கு நம்மளுக்குத்தான் தைரியம் இல்லை . ஏன்னா நமக்கு ஏதாச்சு ஆகிவிடுமோ என்ற பயத்தில் . நம்மசும்மாவே வீட்ல உட்கார்ந்து கொண்டு இருக்கும் இதுக்கெல்லாம் ஒரு முடிவு பண்ணனும் அப்பாதன் நாமளும் நிம்மதியா இருப்போம் . இந்த ஊரும் நிம்மதியா இருக்கும் என்று பதிலுக்கு மற்றொரு தொழிலாளி சொன்னார் .இப்படி இருவரும் பேசிக் கொண்டதில் நேரம் 10 ஆனது இருவரும் தூங்குவதற்கு ஆயத்தமானார்கள் வீட்டு வாசலில் கட்டில்மீது அவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லாம் வீட்டுக்குள் தூங்கினார்கள் . இந்த இரண்டு நண்பர்கள் மட்டும் வெளியில் காற்றோட்டமாக கட்டில்மீது ஓரங்க தயாரானார்கள் .

நேரம் 12 .30 அப்பொழுது திடீரென்று ஒரு பெண் சத்தமாக சிரிப்பதை போன்ற குரல் கேட்டது வெளியில் படுத்து இருக்கும் நண்பர்கள் இருவருக்கும் இந்தக் குரல் கேட்டது இருவருக்கும் மனதில் லேசான பயம் ஏற்பட்டது . இந்த நேரத்தில் யார் சிரிப்பது என்று யோசித்தார்கள் மறுபடியும் ஒய்யாரமாக சிரிக்கும் குரல் கேட்டது அப்போது ஒரு நண்பர் கண்விழித்து சட்டென்று எழுந்து நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார் யாருமே இல்லை . எங்கு இந்த சிரிப்பு குரல் வருகிறது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார் யாருமே இல்லை அவருக்கு மேலும் பயம் அதிகரித்தது. மறுபடியும் விட்டு விட்டு ஒரு பெண் சிரிக்கிறாள். மற்றொரு நண்பரும் பயத்தில் எழுந்துகொண்டார் .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நடுங்கினார்கள் இந்த நேரத்தில் யார் இப்படி பேய் போல சிரிக்கிறார்கள் உண்மையாகவே பேய்தான் சிரிக்கிறதா என்று இருவரும் பேசினார்கள் . அப்போதும் திடீரென்று ஒரு பெண் சத்தமாக சிரிக்கிறாள் . இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் வாசலையே சுற்றி சுற்றி வந்தார்கள் பிறகு அவர்கள் வாசல் முன்பு இருக்கும் தென்னை மரத்தின் உச்சியில் தான் இந்த சத்தம் வருகிறது என்று இருவரும் உணர்ந்தார்கள் . அப்போது இருவரும் பயத்தில் கைகள் நடுங்கின என்ன செய்வது வீட்டுக்குள்ளே ஓடி விடலாமா என்று பேசினார்கள் . அப்பொழுதுஅந்தப் பெண் மறுபடியும் விட்டு விட்டு சிரித்தாள் . இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டார்கள். வீட்டிலுள்ளவர்கள் பயந்துபோய் எழுந்து ஒக்காந்து கொண்டார்கள் . என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று மனைவி கேட்டாள் . நம்ம வாசலில் இருக்கும் தென்னை மரத்தின் உச்சியில் ஒரு பெண் சிரிப்பது போல சத்தம் வருது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மறுபடியும் அந்தப் பெண் சிரிக்க ஆரம்பித்தாள் . வீட்டிலுள்ள அனைவரும் பயந்து போனார்கள் இவ்வளவு நாளா இந்த பிரச்சனை இல்லையே இப்பொழுது நம்ம வீட்டு தென்னை மரத்தில் பேய் வந்து இருக்கிறது போல் தெரிகிறது என்று எண்ணி குடும்பமே பயப்பட்டார்கள் மற்றொரு குடும்பத்தில் இதே போல அவர்களும் பயந்தார்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு குடும்பமும் பயத்தில் அன்று இரவு முழுவதும் உறங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தார்கள் ஜன்னல் வழியாக தென்னை மரத்தின் உச்சியை பார்த்து பயந்து கொண்டிருந்தார்கள் அந்தப் பெண் சிரிக்கும் போதெல்லாம். அதிகாலை மூன்று முப்பது மணி .....அதிலிருந்து அந்தப் பெண் சிரிக்கவில்லை இவர்களும் தூங்காத இருந்த களைப்பில் லேசான பயத்தோடு உறங்க ஆரம்பித்தார்கள் .

பிறகு பொழுதும் விடிந்தது ..நேரம்... ஆறு மணி ......இரண்டு குடும்பமும் கதவைத்திறந்து கொண்டு பயத்தோடு வெளியே வந்து தென்னை மரத்தை பார்த்தார்கள் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள் இனிமே நம்மால் நிம்மதியாய் உறங்க முடியாது . இந்த தென்னை மரத்தின் பேய் வந்து தங்கிவிட்டது அந்தப் பேய் இனிமே நம்மளை சும்மா விடாது இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இரண்டு குடும்பத்தாரும் பேசிக்கொண்டிருந்தனர் . அப்பொழுது அடுத்த தெருவில் இருக்கும் நண்பர் ஒருவர் இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்தார் . உடனே அவர் சொன்னார் .இதற்கெல்லாம் ஒரே வழி நம்ம சாட்டையடி சாமியாரிடம் முறையிட வேண்டும் மற்றதை எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் அவருக்கு இதுபோன்ற விஷயம் எல்லாம் சர்வ சாதாரணம் இப்படித்தான் ஒருநாள் நம்ம மூணாவது தெருவுல யாருமே இல்லாத வீட்டில் ஒரு பேய் தங்கியிருந்தது அவர்தான் அந்த பேய் இருக்கும் இடம் தெரியாமல் ஒட்டி விட்டார் அதேபோல இந்த தென்னை மரத்தில் இருக்கும் பேய் அவரால்தான் ஓட விட முடியும் நீங்கள் உடனே சாட்டையடி சாமியாரை பார்த்து உங்கள் குறையை சொல்லுங்கள் என்று சொன்னார் உடனே இரண்டு குடும்பமும் முடிவு செய்தார்கள் ஆமாம் அவர்தான் இதற்கு சரியான ஆள் என்று முடிவு செய்துகொண்டு சாட்டையடி சாமியாரிடம் சென்றார்கள்.

சாட்டையடி சாமியார் வழக்கம்போல வலதுபுறம் ஒரு சிஷ்யன் இடதுபுறம் ஒரு சிஷ்யனை அமர வைத்துக் கொண்டு . கண்களை மூடிக்கொண்டு தியனம் செய்வது போல அமர்ந்திருந்தார் .இந்த இரண்டு குடும்பமும் அவரிடம் சென்றது. இவர்கள் வாசலில் வெளியே நின்று கொண்டு சுவாமி சுவாமி என்று குரல் கொடுத்தார்கள் சிஷ்யர்கள் உள்ளே வாருங்கள் என்று சொன்னார்கள் . பிறகு இந்த இரண்டு குடும்ப தலைவர்களும் உள்ளே சென்று அமர்ந்தார்கள் அப்பொழுது சாட்டையடி சாமியார் கண்களை மூடியபடியே சொன்னார் நேற்று இரவு முழுக்க நீங்கள் தூங்கவில்லை அந்தப் பெண் பேய் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது என்று சொன்னார் இதைக் கேட்டதும் அந்த நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது . எப்படி இவருக்கு தெரியும் இவ்வளவு சக்தியா இவருக்கு என்று ஆச்சரியத்தோடு சாமியாரைப் பார்த்து மறுபடியும் சாமியாரை பக்தியோடு வணங்கி சொன்னார்கள் . ஆமாம் சுவாமி நீங்கள்தான் எங்க இரணடு குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் அந்தப் பேயிடம் இருந்து எங்களுக்கு உங்களை விட்டால் யாரும் கிடையாது அதனால் நீங்கள்தான் எங்களையும் இந்த ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்று பயபக்தியோடு சொன்னார்கள்

பிறகு சிஷ்யர்கள் இந்த விஷயம் எல்லாம் எங்கள் குருவுக்கு சர்வசாதாரணம் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று சொன்னார்கள் அப்போது சாட்டையடி சாமியார் கண்களை விழிபிதுங்க திறந்தார் அவர்களை முறைத்தபடி . அதற்கு கொஞ்சம் செலவாகும் நீங்கள் கொண்டு வந்துள்ள பணத்தை சிஷ்யர்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் நான் என் சாட்டைக்கு பூஜை செய்ய வேண்டும் அதன் பிறகு இன்று இரவு அந்த பேயை நான் விரட்டி விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று ஆக்ரோஷமாக சொன்னார் . அந்த நண்பர்களும் அவர் சொன்னபடி கையில் இருந்த 2000 ரூபாய் கொடுத்தார்கள் சிஷ்யர்களிடம் அதை வாங்கி எண்ணிப் பார்த்தார்கள். இது பத்தாது இந்த பணம் சாட்டைக்கு பூஜை செய்வதற்கு சரியாகிவிடும் பிறகு எங்களுக்கு ஏதாச்சும் கொஞ்சம் பணம் கொடுங்கள் நாங்கள் அந்த பேயை இன்று இரவு விரட்டி விடுகிறோம் அப்பொழுது மீதி பணத்தை கொடுங்கள் என்று சிஷ்யர்கள் சொன்னார்கள் . பிறகு அந்த கூலித் தொழிலாளிகளும் நீங்கள் சொல்வதைப்போல இன்று இரவு அந்தப் பேயை விரட்டியவுடன் மீதி பணத்தை உங்களுக்கு கொடுத்து விடுகிறோம் என்று வாக்குறுதி சொன்னார்கள் . பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள் அந்த தொழிலாளி நண்பர்கள்.

இரவு நேரம் ஆனது. நேரம் 11 அந்த இரண்டு குடும்பமும் தென்னை மரத்தை பார்த்தபடியே பயந்துகொண்டு வீட்டுக்குள்ளே இருந்தார்கள் . அப்போது சாட்டையடி சாமியார் சின்ன பைக்கில் தனது ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் வாசலில் வந்து நின்றார் . அப்பொழுது அந்தக் கூலி தொழிலாளிகள் இருவரும் வெளியே வந்தார்கள் மற்றவர்களெல்லாம் வீட்டுக்குள்ளே பயந்து கொண்டு இருந்தார்கள் பிறகு சாட்டையடி சாமியார் கேட்டார்

எங்கே அந்த பேய் சிரிக்கிறது காட்டுங்கள் இன்னைக்கே அந்த பேய் கதையை முடித்து விடுகிறேன் என்று ஆக்ரோஷமாக சொன்னார்

அப்பொழுது ஒரு கூலித் தொழிலாளி சொன்னார் . இதோ இந்த தென்னை மரத்தின் உச்சியில் தான் சுவாமி அந்தப் பேய் சிரிக்கிறது என்று சொன்னார்

இந்த மரத்தில்தான் இருக்கிறதா அந்தப் பேய் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் நீங்கள் இங்கேயே நின்று பாருங்கள் நான் எப்படி அந்த பேயை விரட்டுகிறேன் என்று என்று சாமியார் சொன்னார்

எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது நாங்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் சாமி நீங்கள் அந்தப் பேயை விரட்டி விடுங்கள் சுவாமி

சரி உங்களுக்கு பயமாக இருந்தால் பரவாயில்லை நீங்கள் உள்ளே இருங்கள் நான் அந்த பேயை விரட்டி விடுகிறேன் என்று தனது சட்டையை எடுத்து ஒரு அடி தென்னை மரத்தின் மீது அடித்தார் . அப்பொழுது வீட்டுக்குள்ளே இருந்து சிறுவர்கள் மற்றும் இவர்களின் மாணைவிகள் எல்லாம் சாட்டையடி சாமியாரின் தைரியத்தைப் பார்த்து ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த பேய் சாமியாரை ஏதாச்சுும் செய்து விடுமோ என்ற பயம். சாமியார் நம்மிடம் பேய் முகத்தைைக் காட்டிவிடுவாரோ அந்த பேய் முகத்தை பார்த்து நாம் பயந்து விட போகிறோமோ என்ற பயத்தில் எல்லோரும் கண்ணிமைக்காமல் சாமியாரைப் பார்த்து நடுங்கினார்கள் .

அப்பொழுது சாமியார் சிஷ்யனிடம் சொன்னார் . சிஷ்யா இந்த திருநீரை எடுத்து இந்த தென்னை மரத்தை சுற்றி தூவு என்றார்

அப்பொழுது சிஷ்யனும் தென்னை மரத்தை சுற்றி திருநீரை தூவிகிக்கொண்டிருக்கும் பொழுது சத்தமாக அந்தப் பெண் பேய் சிரிக்கும் சத்தம் கேட்டது அப்போது சாமியார் பதிலுக்கு குரல் கொடுத்தார்

என்னிடம் நீ வால் ஆட்டாதே உன் கதையை இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிக்கப் போகிறேன் என்று ஆவேசமாக சொன்னார் .

அந்த பேய் சிரிக்கும் பொழுது சாமியார் முகத்தில் எந்த ஒரு பயமும் தெரியவில்லை சிஷ்யன் முகத்திலும் எந்த ஒரு பயமும் தெரியவில்லை ஆனால் இரண்டு தொழிலாளர்களின் குடும்பத்தினர் மட்டும் நடுங்கினார்கள் இன்று ஏதோ நடக்கப்போகிறது நம் வசமாக மாட்டிக் கொண்டோம் அந்தப் பேயிடம் என்று எண்ணி பயந்தார்கள் . அதேசமயம் சாட்டையடி சாமியார் ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்து வந்து இருக்கிறாரே இன்னொரு சிஷ்யனும் வந்திருந்தல் அவருக்கு மேலும் தைரியமாக இருந்திருக்குமே என்று அந்தக் கூலி தொழிலாளிகள் பேசிக்கொண்டார்கள் அப்பொழுது அந்தப் பெண் பேய் விட்டுவிட்டு சிரிக்கத் தொடங்கினாள்.

உடனே சாட்டையடி சாமியார் சிறிதும் தயங்காமல் தென்னை மரத்தின் மீது ஏறத் தொடங்கினார் .இதைபார்த்த அந்த இரண்டு குடும்பத்தார்களுக்கும் மேலும் பயம் அதிகரித்தது சாமியார் மரத்தின் மீது ஏறி அந்தப் பேய் இருக்கும் இடத்திற்கு செல்கிறாரே அவர்கள் ஜன்னல் வழியாக சாமியாரை தென்னை மரத்தின் மீதுஏறுவதை பார்த்து நடுங்கினார்கள்.

இதோ வருகிறேன் என்னிடமா உன் சிரிப்பு வேலையை காட்டுகிறாய் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு சாட்டையடி சாமியார் தென்னை மரத்தின் உச்சியில் ஏறி சாட்டையால் ரெண்டு அடி அடிப்பதைப் போல அடித்து அங்கே மறைத்து வைத்திருக்கும் தனது செல்போனை எடுத்து யாருக்கும் தெரியாமல் சுட்ச் ஆஃப் செய்துவிட்டு தனது இடுப்பில் வைத்துக்கொண்டு இறங்கினார்

மரத்தை விட்டு இறங்கியதும் இடதுகையால் கையை உயர்த்தி யாரையே தலைமுடி பிடித்து இருப்பதைப்போல கையை வைத்துக்கொண்டு சாட்டையால் அடிப்பது போல அடித்துக் கொண்டே வந்தார் .இனிமேல் இங்கு வந்த உன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன் இதுதான் இந்த ஊரில் உனக்கு கடைசி நாள் இனிமே இந்த ஊர் பக்கமே நீ வரக்கூடாது என்று குரல் உயர்த்தி ஆக்ரோஷமாக சொல்லியபடியே சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார்.

பிறகு கொஞ்சம் தூரம் ஓடி அந்தப் பேயை விரட்டி விட்டது போல திரும்பி வந்தார் .

அந்த குடும்பத்தாரை அவர்களை வெளியே வரச் சொன்னார் அவர்களும் நடுங்கிக் கொண்டே வந்தார்கள் .

இனிமேல் உங்களுக்கு இந்தப் பேய் தொல்லை கொடுக்காது அதை நான் தூரத்தில் விரட்டி விட்டேன் நீங்கள் நிம்மதியாக இருங்கள் என்று சொன்னார் .

அந்த கூலித்தொழிலாளி நண்பர்களும் .........அப்படியே சாமி ரொம்ப சந்தோஷம் இனிமேல் அந்த பேய் பிடிக்காத .

நீங்கள் இன்று இரவு முழுக்க நிம்மதியாக தூங்குங்கள் ஒருவேளை அந்த பேய் சிரித்தாள் அந்த மீதி பணத்தை எனக்கு நீங்கள் தர வேண்டாம் நான் நாளைக்கு வந்து அந்தப் பேயை விரட்டி விடுகிறேன் அப்படி அந்தப் பேய் இன்று இரவு உங்களை பயமுறுத்தவில்லை என்றால் காலையில் என் சிஷ்யர்களிடம் மீதி பணத்தை கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு சாமியார் தனது சிஷ்யனை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் .

அந்த கூலித் தொழிலாளிகளும் சற்று தைரியத்தோடு இனி இங்கு பேய் இல்லை ஓடி விட்டது என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் அமைதியாக உறங்க தொடங்கினர் பொழுதும் விடிந்தது.

அந்தக் கூலித்தொழிலாளியின் நண்பர்களுக்கு பெரும் சந்தோஷம் அதேசமயம் சாமியாரின் மீதும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது . இப்படி ஒரு சாமியார் நம்மூரில் இருப்பது நமக்கெல்லாம் பெருமை என்று பேசிக்கொண்டார்கள்.

இவ்வளவுநேரம் சிரித்துக் கொண்டிருந்தது செல்போனின் ரிங்டோன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் வைத்துக்கொண்டு அதை பயப்படும்படியான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு சாட்டையடி சாமியார் தனது பூஜை அறையில் இருந்து கொண்டு . அந்த செல்போனுக்கு போன் செய்வார் அந்த செல்போன் ரிங்டோன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் இதை அக்கம்பக்கத்தினர் கேட்டு இங்கு பேய் இருக்கிறது என்று பயப்படுவார்கள் . பிறகு சாமியாரிடம் சொல்வார்கள் சாட்டையடி சாமியாரும் பேய் விரட்டுவது போல சென்று செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வந்துவடுவார் . இவர் பேயை விரட்டுவதற்காக வரும்பொழுது ஒரு சிஷ்யனை மட்டும் அழைத்து வருவார் மற்றொரு சிஷ்யனை பூஜை அறையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் அந்த செல்போனுக்கு கால் செய்யும்படி சொல்லிவிட்டு வந்துவிடுவார் .

இப்படித்தான் இந்த மூன்று பேரும் இந்த ஊரையே பயமுறுத்தி தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள் . இது தெரியாமல் அந்த ஊர் மக்கள் இவர் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இவர்கள் எதர்ச்சியாக சொல்லும் வார்த்தைகள் பலித்துவிடும் . இது அவர்களுக்கு சாதகமாகி விடும் இப்படித்தான் இந்த சாட்டையடி சாமியார் இந்த ஊரில் பிழைப்பு நடத்தி வருகிறார்.

ஒரு பக்கம் பண்ணையார் தோட்டத்தில் காணாமல் போனவர்கள் மர்மம் நீடித்துக் கொண்டு இருக்கும் வேளையில் சாட்டையடி சாமியாரின் தந்திர வேலையும் அந்த ஊரில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது.

தந்திர வேலை எத்தனை நாளைக்கு என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
ரேகா வழக்கம்போல அதிகாலையில் எழுந்து தனது புகுந்த வீட்டையும் பிறகு எதிரே இருக்கும் தனது தாய் வீட்டையும் வழக்கம்போல சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.

ரேகாவுக்கு தான் நெஞ்சுக்குள்ளே யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ளே காதல் செய்துவந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார் சந்தோசத்தில் இந்த உலகமே தன் கைக்குள் அடங்கி விட்டது போல ஒரு உணர்வு ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.

திருமணம் நடந்த பிறகு .....சங்கருக்கு கண் விழித்த உடனே தனது மனைவியான ரேகாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார் . இப்படி சங்கர் ரேகாவும் திருமணம் முடிந்த பிறகுதான் அவர்கள் காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் . இதற்கு முன்னாடி இருவரும் கண்களால் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிந்த பிறகு தான் பேச ஆரம்பித்தார்கள். அதனால் இவர்களின் காதல் மயக்கம் இப்போது தான் ஆரம்பிக்கிறது இருவரும் கணவன் மனைவி போல தெரியவில்லை. காதலர்கள் போல கொஞ்சி கிட்டும் சிரித்துக் கொண்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக நாட்களை கடந்து கொண்டிருந்தார்கள்

ஒரு நாள் ரேகா வழக்கம்போல முத்தையாவுக்கு சிறிது சாதம் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடுங்க தாத்தா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தால் முத்தையா சாப்பாட்டை சாப்பிடாமல் கவலையோடு உட்கார்ந்திருந்தார் . அப்பொழுது ரேகாவுக்கு சிறிது கவலை ஏற்பட்டது என்ன தாத்தா சாப்பிடாம இருக்காரு நம்ம மேல ஏதாச்சும் கோவமா நான் ஏதாச்சும் தப்பா நடந்துக் கிட்டேனா என்னன்னு தெரியலையே என்று சற்று லேசாக பதறிப் போனாள் எப்போதுமே சாப்பாடு கொடுத்தால் உடனே சாப்பிட்டு விடுவார் நேற்று பாதி சாப்பாடு வச்சுட்டாங்க இன்னிக்கி சாப்பிடாமலே இருக்காரே என்று கவலையோடு உள்ளே சென்று தனது கணவன் சங்கரிடம் கூறினால்

உங்க அப்பா நேற்றிலிருந்து சரியாக சாப்பிட லங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு என் மேலே ஏதாச்சும் கோவமா எனக்கு தெரியல நீங்க போயிட்டு என்னன்னு கேளுங்க என்று ரேகா சொன்னாள். சங்கர் உடனே எழுந்து வந்து வெளியில் திண்ணையில் அமர்ந்து இருக்கும் தனது தந்தையை பார்த்தான்.

கை கால் தலை அனைத்தையும் ஒன்று சேர்த்த தை போல ஒடுங்கிக் கொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் முத்தையா.

தோல் சுருங்கி இருக்கும் முத்தையாவின் கைகளை .சங்கர் தன் கைகளால் அழுத்தமாக பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான் பாசமாய்.

என்னப்பா .......என்ன ஆச்சு நேத்துக்கூட சாப்பாடு சரியா சாப்பிடலாமே உடம்புக்கு முடியலையா . வாங்கப்பா வைத்தியர் கிட்ட போகலாம் என்று பாசத்தோடு பொறுமையாக கேட்டான் சங்கர்.

பொறுமையாக தலைநிமிர்ந்து சங்கரை பார்த்து. உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசுதான் சரி இல்லை என்று சற்று கவலையோடு முத்தையா சொன்னார்.

தாத்தா உங்களுக்கு என்ன கவலை தாத்தா எதுவாக இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் சொல்லி விடுவீர்கள் ஆனா. இப்போ உங்க மனசுல இருக்குற கவலையை மட்டும்ஏன் என்கிட்ட சொல்லாம இப்படி நீங்களே கவலைப்பட்டுக்கிட்டு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் தாத்தா . என்று ரேகா முத்தையாவின் தலையைத் தடவி விட்டுக் கொண்டே கேட்டாள் .

யாருகிட்ட சொன்னாலும் என் கவலை போகாதம்மா அதனாலதான் நான் உன் கிட்ட சொல்லல.

அப்படி என்ன கவலை சொல்லு தாத்தா.

எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நம்ம பண்ணையார் தோட்டம் இப்போ பராமரிப்பில்லாமல் வெயில்ல விவசாயம் எல்லாம் காஞ்சி போச்சு அதனால பண்ணையார் மனசு ரொம்ப கவலைப் படுது அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை .தனது தோட்டம் இதுநாள் வரைக்கும் இதுபோல நிலைமை வந்ததே கிடையாது அதை எண்ணி பண்ணையாரு ரொம்ப கவலைப் படுகிறார் என்கிட்ட சொல்லி . மற்றவர்களைப் போல நானும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்க முடியாது ஏன்னா பண்ணையார் தோட்டம் இந்த அளவுக்கு செழிப்பா வளர்ந்ததற்கு காரணம் நானும் பண்ணையாரும் மட்டும்தான் .அந்த காலத்துல நாங்க எப்படி கஷ்டப்பட்டு அந்த நிலத்தை பராமரித்து வந்தோம் தெரியுமா ஆனா இன்னிக்கி . யாரோ செய்த சதியால் இப்படிப்பட்ட பண்ணையார் தோட்டம் இன்னைக்கு வீணாகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு .ஊர் மக்களுக்கு எல்லாம் வேலை இல்லை என்ற வருத்தம் மட்டும் தான் அவங்களுக்கு இருக்கு . ஆனா நானும் பண்ணையாரும் சேர்ந்து வளர்த்த தோட்டம் இன்னிக்கி வீணா போகுது என்பது நெனச்ச என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா . இதேபோல இன்னும் கொஞ்ச நாள் தோட்டம் காஞ்சிகிட்ட போச்சுன்னா பண்ணையாரை உயிரோடு பார்க்க முடியாது. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் அவனுக்கு இந்த பண்ணையார் தோட்டமும் இந்த ஊர் மக்களும் தான் அவன் மூச்சு .இப்போ ரெண்டுக்குமே பாதிப்பு ஏற்பட்டு இருக்கு . இதுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட இல்லனா கொஞ்ச நாள்ல என் நண்பனை நான் இழந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க முத்தையா உருக்கமாக சங்கர் இடமும் ரேகாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.

கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டம் வீணாக போகுது என்பதை எண்ணி தாத்தா வருத்தப்படுகிறார் என்பதை உணர்ந்தால் ரேகா.

தனது உயிருக்குயிரான நண்பனுக்கு ஏதாச்சும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா சரியாக சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்ட சங்கம் பிறகு முத்தையாவுக்கு ஆறுதலாக சொன்னான்.

நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் அப்பா ....நான் என் நண்பர்களை அழைத்துக்கொண்டு பண்ணையர் தோட்ட வேலைக்கு செல்கிறேன் .எங்களால் முடிந்தவரை தோட்டங்களை வீணாக போகாமல் பார்த்துக் கொள்கிறேன். பிறகு ஊர்மக்களும் பயம் தெளிந்து எங்களைப் பார்த்து ஒவ்வொருவராக வேலைக்கு வருவார்கள் பிறகு பண்ணையார்தோட்டம் எப்போதும்போல செழிப்பாக வளர ஆரம்பித்துவிடும் . நீங்கள் கவலைப்படாமல் இப்பொழுது சாப்பிடுங்கள் என்று சங்கர் முத்தையாவின் கைகளை மீண்டும் இருக்கமாக பிடித்து அன்போடு சொன்னான்.

மகனின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மகன் சொல்வது போல அவன் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் . பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக வேலைக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஏற்பட்டது பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு தொடங்கினார்.

முத்தையா சாப்பிடுவதைப் பார்த்த சங்கருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது பிறகு இருவரும் உள்ளே சென்று கட்டில் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டார்கள்.

இந்த வயசுலேயும் .....நண்பருக்கு ஒண்ணுன்னா அவர் மனசு துடிக்குது இவர்களைப் போல பாசமான நண்பர்கள் எங்கேயுமே இருக்க மாட்டாங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னார்.

எங்க அப்பா நெனச்சா பண்ணையார் ஓட நிலத்தை பாதி வாங்கிட்டு இருப்பார் . அந்த அளவுக்கு பண்ணையாருக்கு எங்க அப்பா மேல பாசம் ஆனா இது வரைக்கும் எங்க அப்பா இந்த ஊர் மக்களோடு மக்களாய் தான் பண்ணையார் ஓட பழகிக் கொண்டு வரார் . பண்ணையார் நம்ம நண்பன் தானே என்று நினைத்து . பண உதவியோ பொருள் உதவியோ எங்கப்பா வாங்கி இருந்தால் . இந்த ஊர் மக்கள் எல்லாம் எங்க அப்பாவைப் பார்த்து பயந்து இருப்பாங்க . ஏன்ன இவர் பண்ணையார்ரோட நண்பர் .இவர் எதை கேட்டாலும் பண்ணையார் கொடுப்பாரு என்ன சொன்னாலும் கேட்பாரு . என்ற பயம் இந்த ஊர் மக்களுக்கு இருந்திருக்கும் பண்ணையாருக்கு கொடுக்கிற மரியாதையை போலவே எங்க அப்பாவுக்கும் இந்த ஊர் மக்கள் கொடுத்திருப்பாங்க ஆனா எங்க அப்பா பண்ணையார் உயிர் நண்பனாக மட்டும்தான் பார்த்தாரு அவர்கிட்ட இருந்து எந்த ஒரு பொருளையும் பணமும் இதுவரைக்கும் அவர் வாங்கியது கிடையாது . ஆரம்ப காலத்துல பண்ணையார் அவங்க அப்பா அம்மா இல்லாம தனியா தவித்தபோது . எங்க அப்பாதான் அவருக்கு தோள் கொடுத்து இந்தப் பண்ணையார் தோட்டத்தை இவ்வளவு பசுமையாக வளர பாடுபட்டார் . அதனால பண்ணையாருக்கு எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்கிறது இந்த ஊர் மக்களுக்கும் எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்குது ஏன்னா முத்தையா நெனச்சா வசதியா பண்ணையார் போல வாழ்ந்து இருக்கலாம் . ஆனால் அவர் நம்மை போல கூலித்தொழிலாளி யகவே நம்மோடு ஒற்றுமையாக வாழ்ந்து இருக்காரு .அதை நினைச்சு இந்த ஊர் மக்கள் என் அப்பாவுக்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள் . இப்படி பாசத்தில் பணம் பொருளை சேர்க்காமல் சுத்தமான நட்பை மட்டும் வச்சு பழகுற பண்ணையாரும் எங்கப்பாவும் இந்த ஊருக்கு பெரிய மனுஷங்க ... உனக்கு புத்தி தெரிஞ்ச வரைக்கும் கொஞ்சம் தான் தெரியும் ஆனா ஆரம்பத்துல எப்படி இருந்தாங்க என்று உனக்குத் தெரியாது உங்க அம்மா சொல்லி இருப்பாங்க எனக்கும் .இந்த ஊர் மக்கள் சொல்லித்தான் தெரியும் எங்க அப்பா அவரோட பெருந்தன்மையை இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே கிடையாது இப்படி நண்பன் மீது பாசத்தோடு இருக்கிறார் அதனால தான் அவங்க நட்பு வயசானாலும் இன்னும் பாசம் குறை யலை .என்று சங்கர் ரேகா விடும் சொன்னான்.

எந்த ஒரு உற்சாகமின்றி சோர்வாக பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் வழக்கம் போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.

தோட்டம் எல்லாம் காய்ந்து கிடப்பதை பார்த்து பரந்தாமன் மனம் தீயாய் கொதித்தது . இனி நமக்கு வருமானம் குறைவு தான் பம்புசெட்டில் தனது தாயின் படத்திற்கு பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணம் இனி குறைந்துகொண்டே வரப்போகுது செலவுக்கு அந்தப் பணத்தில் இருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்து கவலையோடு பைக்கை ஓட்டி வந்தான் பரந்தாமன். பிறகு பைக்கை வழக்கமாக நிறுத்தும் களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் .பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காட்சியளித்த பண்ணையார் தோட்டம் அன்று காய்ந்துபோய் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது பரந்தாமனுக்கு கவலை மேலும் அதிகமானது . பிறகு பம்புசெட்டில் அருகே மூவரும் வந்து சேர்ந்தார்கள்

அப்போது அந்த தென்னை மரத்து நிழல் பலா மரத்தின் நியல் அவர்களுக்கு குளு குளு குளுவென இருந்தது காற்றோட்டமாக .பக்கத்தில் இருக்கும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது மூவரும் அமர்ந்தார்கள் .

அப்போது சந்திரனுக்கும் தினாவுக்கும் பம்பு செட்டில் கனகாவை கற்பழித்ததை நினைத்து பார்த்தார்கள் . கனகா தனது இரு கைகளால் கும்பிட்டு என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி எதை நினைத்துப் பார்த்தார்கள் கனகா சொன்னதைப்போல அன்று நாம் தவறு செய்யவில்லை என்றால் இன்னைக்கு நமது தோட்டம் இப்படி வீணாக போயிரக்காது பாவம் அவள் வாழ்க்கையும் வீணா போச்சு நம்ம வாழ்க்கையும் வீணா போச்சு அண்ணன் அப்பாவும் கவலையோடு இருக்கிறார்கள் தோட்டமும் வீணா போச்சு இப்படி எல்லாத்துக்கும் நாம் காரணமாகி விட்டோமே என்று சந்திரனும் தீனாவும் நடந்ததை எண்ணி பெரும் சோகத்தில் அழுதார்கள்.

தம்பிகளை தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாங்கள் என்று சொல்வதற்கும் பரந்தாமனுக்கு மனம் இல்லை . ஏனென்றால் தோட்டம் எல்லாம் வீணாக தானே போய்க்கொண்டு இருக்கிறது அதனால் இவர்கள் இங்கேயே இருக்கட்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டான் . அவனுக்கு தனது பம்புசட்டில் இரண்டாவது அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்து தம்பிகளிடம் நான் அம்மா படத்தின் முன்புவணங்கி விட்டு வருகிறேன் நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் எழுந்து சென்றான்.

தீனாவுக்கு கனகாவை கற்பழித்ததை நினைத்து வெட்கப்பட்டான் சந்திரன் முகத்தை பார்ப்பதற்கே அவனுக்கு வெட்கமாக இருந்தது மதுபோதையில் பெரிய தவறு செய்து விட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரனே கையைப் பிடித்தான்.

என்னை மன்னித்துவிடு அண்ணா உன் திருமணம் நின்று போவதற்கு நானும் காரணம் ஆகி விட்டேன் இனி நான் எந்த தவறையும் செய்யப்போவதில்லை குடிப்பதை கூட நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தீனா சொன்னான்.

நானும் இனி குடிக்கப் போவதில்லை யார் குடும்பத்தையும் கிடைக்கப்போவதில்லை இனி அண்ணனுக்கு நம்மால் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது நாம் செய்த தவறால் அண்ணன் தலை குனிந்து நிற்கிறார் நாம் கனகா மீது ஆசைப்பட்ட காரணத்தினால் அண்ணன் தவறு என்று தெரிந்தும் கனகாவை கற்பழிக்க சம்மதித்தார் அவர் நம்மீது பாசத்தில் அப்படிப்பட்ட தவறை செய்து வீட்டார் . ஆனால் நம் இனி இதுபோன்ற தவறை செய்யக்கூடாது . அண்ணனுக்கும்எந்த தர்மசங்கடத்தை யும் நாம் ஏற்படுத்தக்கூடாது என்று சந்திரன் உருக்கமாக தீணாவிடம் சொன்னான் எப்படி இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்டு. திருந்துவதற்கு தயாரானார்கள்.

பரந்தாமன் பம்புசெட்டில் இரண்டாவதுஅறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை சரி பார்த்துவிட்டு பிறகு தாய் படத்தின் முன்னால் நின்று மௌனமாக வேண்டினான்.

அம்மா நான் வேண்டியது போல எனக்கு நீ துணையாய் நின்றய் நான் நினைத்ததை முடித்து விட்டேன். எப்படியோ ஒரு வகையில் தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் ஆனால் என்னுடைய நோக்கம் விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை நான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் அது உனக்கே தெரியும் .அதனால்தான் தம்பியின் திருமணத்தை நான் சூழ்ச்சி செய்து நிறுத்தினேன் . நான் அப்பாவுக்கு என் மனைவிக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் உன் படத்தின் பின்னாலேயே சேர்த்து வைத்திருக்கிறேன் . இனி விவசாயத்தில் எனக்கு லாபம் வருமா என்ற சந்தேகம் வந்துவிட்டது . தாயே அதனால் எப்போதும் போல நீ என் கூட இருந்து என் எண்ணங்களுக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் நான் செய்வது உனக்கு தவறு என்று நல்லாவே தெரியும் . இருந்தாலும் நீ என் மீது உள்ள பாசத்தில் எனக்கு நீ துணையாய் நிற்பாய் என்பதும் எனக்குத் தெரியும் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து நீ என்னை விடுவித்துக் கொண்டு வருகிறாய் அதே போல இந்த பிரச்சினைக்கும் நீதான் என்னை விடுவிக்கவேண்டும் எப்போதும் போல நம் தோட்டம் செழிப்பாக வளர வேண்டும் என்று தனது தாயிடம் பரந்தாமன் . தீய செயலுக்கு துணை நிற்க வேண்டும் என்று . வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்

வெளியே வந்ததும் அவன் முகம் லேசாக மலரத் தொடங்கியது காரணம். சங்கர் அவனது நண்பர்களுடன் வேலைக்கு வருவதை பார்த்தான் பரந்தாமன்.

ஐயா நாங்க பதினைந்து பேர் இருக்கும் இன்னைக்கு முடிஞ்சவரை தோட்டத்தை தண்ணி பாச்சி பராமரிக்கிறோம் என்று சங்கர் சொன்னான்.

இதைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சந்தோசம் முகத்தில் மலரத் தொடங்கியது.

நீங்க வேலைக்கு வந்ததில்ல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாளைக்கும் வருவீங்களா என்று பரந்தாமன் சங்கரை பார்த்து கேட்டான்.

இனி தினமும் நாங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருவோம் நாங்கள் இனி யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று சங்கர் ஆணித்தரமாக சொன்னான்.

கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த சந்திரனுக்கும் தினாவுக்கும் சற்று லேசான சந்தோசம் ஏற்பட்டது. உடனே எழுந்து ஓடிவந்து சங்கரின் நண்பர்களின் . கைப்பிடித்து நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம் இனி இந்த ஊருக்கு நல்லதே நடக்கும் நீங்கள் பயப்படாமல் வேலை செய்யுங்கள் என்று சந்திரனும் தீனாவும் சங்கருக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் தைரியத்தை சொன்னார்கள்.

ஊரே வந்து பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வார்கள் அந்த அளவுக்கு பண்ணையார் தோட்டத்தில் வேலை இருக்கும் அவ்வளவு நிலத்தை 15 பேர் வேலை செய்து சரி செய்ய முடியாது.என்பது பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் சீனவுக்கும் தெரியும் இருந்தாலும் மெல்ல மெல்ல மற்றவர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக சங்கரும் அவனுடைய நண்பர்களும் தோட்டத்தில் வேலை செய்யும் அழகை பார்த்து ரசித்தபடி நின்றார்கள். பண்ணையார் மகன்கள்.



பரந்தாமன் தனது சுயநலத்துக்காக ஒவ்வொரு தவறாக அடுக்கடுக்காக செய்து கொண்டு வருவதும் பிறகு அதிலிருந்து அவன் மீண்டு வருவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது இப்பொழுதும் அவன் நினைத்தபடி தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டான் விவசாயமும் இனி மெல்ல மெல்ல வளரத் தொடங்கும்.

சந்திரனும் தீனாவும் ....இனி எந்தத் தவறையும் செய்ய மாட்டோம் என்று உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால் அவன் அண்ணன் செய்யும் சூழ்ச்சியில் இனி சிக்காமல் அவர்களால் இருக்க முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்.....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
மாமா ....மாமா... என்று குரல் கொடுத்தபடி பரந்தாமனின் மனைவி சிரித்துக்கொண்டே உற்சாகமாக பண்ணையாரை நோக்கிச் சென்றாள்.

என்ன மருமகள் இவ்வளவு சந்தோஷமாக வருகிறாரலே என்ன விஷயமாக இருக்கும் . என்ற எதிர்பார்ப்போடு பண்ணையார் வாம்மா நான் இங்கேதான் இருக்கேன் என்றார்.

நான் தான் சொன்னேன் இல்ல. உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிந்ததும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று . அதே போல நடந்திருச்சு பாருங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் பரந்தாமன் மனைவி.

என்னம்மா சொல்ற அப்படின்னா காணாமல் போன ரெண்டு குடும்பமும் வந்துட்டாங்களா என்றார் பண்ணையார்.

அவங்க வரல மாமா ...நம்ம விவசாய தோட்டத்துக்கு உங்க நண்பரோட மகன் சங்கர் .அவரோட நண்பர்கள் எல்லாம் வேலைக்கு வந்து இருக்காங்களா இப்பத்தான் உங்க பெரியபிள்ளை என்கிட்ட சொன்னார் இதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா . நம்ம தோட்டம் இப்படியே வீணாக போய்விடுமோ என்று எனக்கு ரொம்ப பயமா இருந்தது . அவரும் ரொம்ப பயப்பட்டார். ஆனா இப்போ வேலைக்கு ஆட்கள் வந்திருப்பதை நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா . இப்படி நம்மளோட கஷ்டம் ஒன்னொன்னா தீர்ந்து கிட்டே வரும். நீங்க பாருங்களேன் இன்னும் கொஞ்ச நாள்ல .காணாமல் போனவர்களும் கிடைக்கத்தான் போறாங்க பாருங்க உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிஞ்சிடுச்சு இனிமே நமக்கு நல்ல காலம்தான் மாமா. நம்ம சந்திரன் திருமணமும் நடக்கத்தான் போகுது என்று சந்தோசமாக சொன்னாள்.

என் நண்பனுக்கு எப்போதுமே தோட்டத்து மேலதான் அக்கறை அவனுக்கு . எனக்கு ஊர்மக்கள் மேல தான் அக்கறை. இந்த விவசாயம் செய்வது ஒன்றும் எனக்கு ரொம்ப சந்தோசம் கிடையாது ஊர் மக்களுக்காக தான் இதை நான் செய்யறேன் அவங்க நல்லதுக்காக தான் பொறுப்போடு செய்து வருகிறேன். நம் குடும்பத்தின் கடமையாக நினைக்கிறேன் . ரெண்டு குடும்பம் காணாமல் போனது தான் எனக்கு பெரிய வருத்தம் இந்த விவசாயம் அதை பத்தி எனக்கு கவலை இல்லை காணாமல் போனவர்கள் கிடைச்சிருந்தா எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கும் பரவாயில்லை நீ சொல்ற மாதிரி அதுவும் ஒரு நாள் நடந்தா எல்லாரும் சந்தோசமா இருக்கலாம் என்று பண்ணையார் சொன்னார்.

வேலைக்கு யாரும் வர மாட்டோம் என்று ஊரே சொல்லிக்கிட்டு இருந்தது . இப்போ உங்க நண்பர் முயற்சியாள கொஞ்சம் பேர் வேலைக்கு வந்து இருக்காங்க இப்படித்தான் நல்லது கொஞ்சம் கொஞ்சமாக தான் வரும் மாமா . நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா. நான் உங்கள் பிள்ளைகளுக்கு டீ போடணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் பரந்தாமனின் மனைவி.

பரந்தாமன். சந்திரன் .தீனா .மூவரும் ஒன்றாக அமர்ந்து மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.

எப்படியோ ஊர் மக்கள் வேலைக்கு வந்துட்டாங்க இனிமே நம்ம பொறுப்போடு நடந்து கொல்லனும் இதுக்கு முன்னாடி நம்ம எப்படியோ இருந்தோம் ஆனா இனிமே நம்ம நல்லபடியா நடந்துகிட்டா தான் நம் குடும்பம் நிம்மதியா இருக்கும் இப்போ மெல்ல மெல்ல நம்ம விவசாயம் முன்னேறி வரும் அடுத்தது சந்திரன் திருமணத்தை நடத்த வேண்டியதுதான் என்று பரந்தாமன் தம்பிகளிடம் உணர்ச்சிபூர்வமாக சொன்னான்.

அப்பாதான் காணாமல் போனவர்கள் கிடைச்சா தான் . கல்யாணம்னு சொல்லிட்டாரே அண்ணா என்று சந்திரன் கேட்டான்.

அப்பா இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் அப்படி சொல்லிக்கிட்டு இருப்பாரு அதுக்கப்புறம் அவர் மனசு மாறிவடும் அதுக்கப்புறம் திருமணத்தை ஜாம் ஜாம்னு முடிச்சிடலாம் தம்பி.

எனக்கென்னமோ அப்பா மனசு மாறனும் நம்பிக்கை இல்லை அதனால நம்ம உண்மையாவே இரண்டு குடும்பத்தை தேடி கண்டுபிடிச்சு விட்டாள் . அண்ணன் திருமணத்தை நீங்க சொன்ன மாதிரி நல்லபடியா முடிக்கலாமா அண்ணா என்று தீனா சொன்னான்.

தீனா பேச்சைக் கேட்ட பரந்தாமனுக்கு சற்று எரிச்சலாக இருந்தது . என்ன பேசுற தம்பி . காணாமல் போனவர்களை கண்டுபிடித்து கொடுத்து விட்டாள் . சந்திரன் திருமணம் நடந்து விடுமா . எப்படி நடக்கும் . காணாமல்போன வாங்க வந்து எல்லா உண்மையும் சொல்லிட்டா இந்த ஜென்மத்துல உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் நடக்காது . அதனால காணாம போனவங்க கிடைக்காமல் இருக்கிற வரைக்கும் நமக்கு நல்லது இப்படி முட்டாள்தனமான யோசனையே சொல்லாத என்று பரந்தாமன் சற்று குரல் உயர்த்திப் பேசி நான் தீணாவிடம்.

அண்ணன் திருமணத்தை எப்படியாச்சும் நடத்தலாம் என்ற யோசனையிலேயே எனக்கு இப்படிப்பட்ட யோசனை வந்துடுச்சு என்னை மன்னிச்சிடு அண்ணா என்று தீனா சொன்னான்.

நான் உயிரோடு இருக்கும் வரைக்கும் உங்களுக்கு திருமணமே கிடையாது நீ என்னடான்னா திருமணத்தை எப்படியாச்சும் நடத்தனும் என்ற எண்ணத்தில் இருக்கீங்களா என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரந்தாமன்.அப்பொழுது என்னங்க என்ற குரல் கேட்டது . மூவரும் திரும்பி பார்த்தார்கள் பரந்தாமனின் மனைவி மூவருக்கும் டி எடுத்து கொண்டு வந்தாள் உடனே மூவரும் ரகசியப் பேச்சை கலைத்துவிட்டு . சிரித்த முகத்தோடு டீயை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தார்கள்.



ஒரு வாரம் கழித்து . ஒவ்வொருவராக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள் ரேகாவின் அம்மா லட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து . நாமளும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லலாம் நமக்கு வேறெந்தத் தொழிலும் கிடையாது பண்ணையார்தோட்டத்தை நம்பித்தான் இந்த ஊர் மக்கள் இருக்கிறோம் . யாரோ ஒருவர் செய்த தவறால் நாம் ஏன் பட்டினியக கிடப்பது நாமும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லலாம் என்று யோசனை சொன்னார் மற்ற பெண்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்கள் பிறகு பண்ணையார் தோட்டத்திற்கு ஊர் மக்களும் திரளாக வேலைக்கு சென்றார்கள்

ஆனால் பண்ணையார் தோட்டத்தில் தான் வேலை இல்லை ஏனென்றால் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தால்தான் இரவு பகல் என்று பாராமல் தண்ணீர் பாய்க்கமுடியும் நிலத்திற்கு . பம்புசெட்டில் தங்கி வேலை பார்ப்பதற்கு யாருக்கும் விருப்பமில்லை அதனால் சரியாக நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை வேலையும் பாதி பேருக்கு தான் கிடைக்கிறது

இப்படி பண்ணையார் தோட்டம் மெல்ல மெல்ல பசுமையாக மாறி வந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நம்ம சாட்டையடி சாமியாருக்கு ஒரு பயம் ஏற்பட்டது. இந்த ஊருக்கு சோதனைக்கலம் வரப் போகுதுன்னு சொல்லி இருந்தோம் அதேபோல பண்ணையார் ஓட மகன் திருமணம் நின்னுபோச்சு அவரோட விவசாயமும் நின்னு போச்சு நம்ம பேச்சுக்கு இந்த ஊர் மக்கள் ஒரு மதிப்பு கொடுத்து கிட்டு இருந்தாங்க ஆனா இப்போ பண்ணையார் தோட்டத்துக்கு எல்லோரும் வேலைக்கு போறாங்க அப்போ எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க நம்ம சொன்ன வார்த்தை பொய்யா ஆகிடுமே என்ன செய்கிறது என்று சிஷ்யர்களிடம் கேட்டான் சாட்டையடி சாமியார்.

அப்படின்னா ...நம்ம ஏற்கனவே திட்டம் போட்டபடி கரும்புத் தோட்டத்துக்கு தீ வச்சிடலாம் குருவே . பற்றி எரியட்டும் அப்பாதான் இந்த ஊர் மக்கள் நம்ம வார்த்தைக்கு கட்டுப்படு வாங்க குருவே என்று ஒரு சிஷ்யன் சொன்னான்.

தீவைக்கிறது என்ன சாதாரண காரியமா டா நீ தீ வைக்கிறது பண்ணையார் பசங்க பாத்துட்டா அவ்வளவுதான் மூன்று பேரும் இந்த ஊரிலேயே தூக்குல தொங்க விட்டுடுவாங்க அதுவும் இந்த சங்கர் இருக்கான் பாரு அவன் பாக்குறதுக்கு தாண்டா சாதாரணமா தெரிவன் அவன் சேத்துலகபடி விளையாடும் போது பார்த்தியா அவன் முதுகுல மூன்றுபேரை தூக்கிகொண்டு வருவான் சேத்துலியே இப்படி விளையாடுவன் நம்ம தான் தீவைத்து எரித்து விட்டோம் என்று தெரிந்தால் அவ்வளவு லேசுல நம்மள விட மாட்டான் . நமக்கு எதிரிகளே நாலு பேரு தன் பண்ணையார் ஓட மூன்று பசங்களும் இந்த சங்கரும் தான் இந்த ஊரிலேயே இவனுங்க நாலு பேரு தான் முரட்டுத்தனமான ஆளுங்க நல்லது செஞ்ச மரியாதை கொடுப்பாங்க . ஆனா நம்மளோட விவகாரம் கண்டி அவனுக்கு தெரிந்தது அதோட நம்ம கதை முடிஞ்சது அதனால ரொம்ப அவசரப்படக்கூடாது சிஷ்யா கொஞ்சம் நிதானமா தான் இதை கையாள வேண்டும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நமக்கு சாதகமா ஏதாச்சும் கிடைக்கும் அந்த நேரம் பார்த்து கரும்பு தோட்டத்திற்கு தீவைக்கலாமா இல்ல இந்த ஊருக்கே தீ வைக்கலாமா என்று அப்புறம் முடிவு பண்ணலாம் என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

நம்ம மாட்டிக்கிட்டா கண்டிஷனா சொல்லலாம் குருவே நீங்கள் எல்லாம் எங்களை அடிக்கக் கூடாது சட்டப்படி குற்றம் அதனால எங்கள போலீசிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லலாம் குருவே . எப்படி என்னோட ஐடியா

போலீஸிடம் ....குரு தான் தீ வைக்கச் சொன்னார் என்று சொல்லிட்டு நீ தப்பித்து விடலாம் என்று பார்க்கிறியா . அது தாண்டா நடக்காது எது நடந்தாலும் நம்ம மூணு பேருக்குமே நடக்கும் . அதனால தப்பிக்கிர ஐடியாவை விட்டுட்டு பொழப்ப பாருங்கடா என்று சாட்டையடி சாமியார் எரிச்சலாய் சொன்னார்.

ஒரு நாள் முத்தையா சங்கரை அழத்து நமது ஊர் மக்களை எல்லோரையும் இன்று இரவு நமது வீட்டிற்கு வரச் சொல் . ஒரு முக்கியமான முடிவு செய்ய வேண்டும் என்று சொன்னார் சங்கரும் ஒவ்வொரு வீடாக சென்று இன்று இரவு அப்பா எல்லோரையும் வரச் சொல்லி இருக்காரு ஏதோ ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டுமாம் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வந்தான் சங்கர்

அப்போது எல்லோரும் என்ன முடிவாக இருக்கும் என்று முணுமுணுத்தார்கள் . முத்தையா எதை செய்தாலும் இந்த ஊர் நன்மைக்காகத்தான் இருக்கும் அதனால் இன்று இரவு எல்லோரும் முத்தையா வீட்டிற்கு சென்று என்ன முடிவு சொல்கிறார் என்று கேட்கலாம் வாருங்கள் என்று ஊர்மக்கள் முடிவு செய்தார்கள்.



முத்தையா அப்படி என்ன முடிவு எடுக்கப் போகிறார் . இந்த முடிவினால் யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்......





தொடரும்........​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
இரவு நேரம் ஆனது ஒவ்வொருவராக முத்தையா வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். முத்தையா எதற்காக எல்லோரையும் வரச்சொன்னார் என்று தெரியாமல் எல்லோரும் புரியாமல் சென்றனர்

பிறகு முத்தையா வீட்டுவாசல் ஊர் மக்களால் நிரம்பியது கூட்டத்தில் ஒவ்வொருவராக முணுமுணுக்க ஆரம்பித்தார்கள் எதற்காக இருக்கும். என் முத்தையா அனைவரையும் வரச் சொன்னார் என்று முணுமுணுத்தனர் அந்த சமயத்தில் முத்தையா சர்ட் பட்டனை போட்டபடி முத்தையா வீட்டிலிரந்து மெதுவாக வெளியில் வந்தார் வந்தவர் கூட்டத்தை பார்த்து இருக்கைகளல் கும்பிட்டார் பிறகு அவரும் அவர்களை பார்ப்பது போன்று அமர்ந்தார் சங்கர் ரேகாவும் கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் ஜோடியாக அமர்ந்தார்கள்.

அப்போது ரேகா மெதுவாக சங்கரிடம் கேட்டாள் தாத்தா எதுக்காக எல்லோரையும் இங்கு வரச் சொன்னாரு உங்களுக்கு ஏதாவது தெரியுமா மாமா என்று சங்கரின் இடதுபுற கையை இருக்கமாக தன் மார்பில் அணைத்தபடி கேட்டாள். எனக்குத் தெரிந்த நீ கேட்கிற வரைக்கும் சும்மா இருப்பேன அந்த விஷயத்தை முதல்ல உன் கிட்ட தானே நான் சொல்லுவேன் . எனக்கே தெரியாது அப்பா எல்லோரையும் வரச் சொல்லி சொன்னாரு நானும் எல்லோரையும் வரச் சொன்னேன் இப்போ எல்லோரும் வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா எல்லோரையும் ஏன் வரச் சொன்னார் என்பது தெரியப்போகுது அதுக்குள்ள என்னடி அவசரம் உனக்கு இன்று செல்லமாய் ரேகாவின் தொடையை கிள்ளி நான் சங்கர்.

முத்தையா முகத்தைத் துடைத்தபடியே மெதுவாக கேட்டார் நீங்க எல்லோரும் பண்ணையார் குடும்பத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சொன்னார் . இதில் என்ன சந்தேகம் இந்த ஊரு எப்படி உங்களுக்கு மரியாதை கொடுக்கிறதோ அதேபோல பண்ணையாருக்கும் மரியாதை கொடுத்து கிட்டுதான் வருகிறோம் இன்னும் சொல்லப்போனால் பண்ணையார் குடும்பம் இந்த ஊருக்கே கோவில் மாதிரி அவங்க குடும்பத்தினால்தான் நாம் அனைவரும் அன்றாடம் சாப்பிடுகிறோம் என்று ஒரு பெரியவர் சொன்னார்.

அப்படியான ஏன் பண்ணையாரின் தோட்டத்திலுள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு யாரும் போகவில்லை. என்றார் முத்தையா

முத்தையா அண்ணே உங்களுக்கு எல்லாமே தெரியும் . ஏற்கனவே அங்கு இரண்டு குடும்பம் காணாமல் போயிருக்கங்க அவங்கள பத்தி விவரம் கிடைக்கிற வரைக்கும் நம்ம யாரும் வேலைக்கு போகக் கூடாதுன்னு அன்னிக்கி உங்க தலை மேல தான் பண்ணையார் வீட்டுக்கு போயிட்டு எல்லோரும் சொல்லிட்டு வந்துட்டோம் இப்ப நீங்களே ஏன் வேலைக்கு போக மாட்டேங்கறீங்க என்று கேட்டால் எப்படி அண்ணே ஒன்னும் புரியலையே அண்ணே என்று மற்றொருவர் முத்தையா வை பார்த்து சொன்னார்.

நீங்க சொல்றது எனக்கு புரியுது ஏதோ ஒரு வகையில் இரண்டு குடும்பம் காணாம போச்சு அதையே காரணம் காட்டி ஒட்டுமொத்த ஊரே அந்த வேலைக்கு போகலான. நமக்கு சாப்பாடு எப்படி கிடைக்கும் பண்ணையார் தொடத்தொட வேலையை நம்பித்தான் நாம் எல்லோரும் இருக்கிறோம் ஆனால் இரண்டு குடும்பத்தை காரணம் காட்டி நாம் யாரும் பம்பு செட்டுக்கு தங்கி வேலை செய்யறதுக்கு யாரும் போறதுக்கு பயப்படுகிறோம் இப்படியே பயந்துகட்டே இருந்தா எப்ப தான் ஒரு முடிவுக்கு வராது

சரியா தண்ணி எல்லா நிலத்திற்கும் போகாதது னால எல்லோருக்கும் வேலை கிடைக்கவில்லை கொஞ்சம் பேருக்குத்தான் வேலை கிடைக்குது அதனால யாராச்சும் ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்சா எல்லோருக்கும் வேலை கிடைக்கும் எல்லோரும் நிம்மதியா இருக்கலாம் அதுக்கப்புறம் ரெண்டு குடும்பத்தை பத்தி நாமே ஒரு முடிவு செய்யலாம் அவஙகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று

அப்போது ஒரு பெரியவர் எழுந்து ஐயா என் மகன் என் மருமகள் பண்ணையார் தோட்டத்துக்கு பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்சாங்க அவங்க திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாங்க நம்மை எல்லோரும் நினைச்சோம் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் எங்கயாச்சும் இருப்பாங்கன்னு எனக்கும் நீங்க எல்லாம் தைரியம் சொன்னீங்க ஆனா இதுவரைக்கும் என் மகனும் என் மருமகளும் கிடைக்கவே இல்ல அதுக்கு அப்புறம் வேலைக்கு வந்த கனகா குடும்பமும் நல்லா தான் குடும்பம் நடத்தி வந்தார்கள் அவங்களுக்குள்ள எந்த ஒரு சண்டையும் சச்சரவும் இருந்ததா யாருக்குமே சந்தேகம் கிடையாது அப்படி அவங்க அழகா குடும்பம் நடத்திட்டு வந்தார்கள் . அவங்களும் என் மகன் குடும்பம் போல திடீர்னு ஒரு நாள் காணாம போயிட்டாங்க இப்படி ஒவ்வொரு குடும்பமா காணாமல் போய் கிட்டே வந்தா நம்ம கதி என்ன ஆகும் . முதல்ல காணாமல்போன குடும்பத்துக்கு ஒரு முடிவு கட்டிட்டு அதுக்கப்புறம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதை பத்தி பேசலாம் ஐயா என்றார் ஒரு பெரியவர்.

சரி காணாமல் போனவர்களை பத்தி என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்களேன் என்றார் முத்தையா.

அப்பொழுத ஒரு தொழிலாளி எழுந்து சொன்னார் . ஐயா நம்ம ஊரில் இருக்கும் சாட்டையடி சாமியார் கிட்ட போயிட்டு அவங்க எங்க இருக்கிறாங்க னு கேட்கலாம் அவர் சக்தியில் எங்கு இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி விடுவார் அதுக்கு அப்புறம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு தெரியும் என்றார்.

உடனே சங்கர் எழுந்து .... அண்ணே காணாமல்போனவர்களை நம்ம தான் கண்டுபிடிக்கணும் அவங்கள பத்தி நம்மதான் விசாரிச்சு தேடணும் அப்பதான் அவங்க கிடைப்பாங்க சாமி யார் கிட்ட போனா அவங்கள இந்த ஜென்மத்துல கண்டுபிடிக்க முடியாது . ஏதோ பேய் பிசாசு ஒன்னா சாமியார் விரட்டி விடலாம் ஆனால் காணாமல் போனவர்களை எல்லாம் கண்டு பிடிச்சு கொடுத்துட்டார்ன்ன அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் எதுக்கு என கிண்டலாய் சொன்னான் சங்கர்.

எல்லோருக்குமே பொதுவான பயநதான். நாம பம்புசெட்டில் வேலைக்கு போனா நாம காணாமல் போய் விடுவோம் என்ற பயம் எல்லோருக்குமே வருவது சகஜம் தான் . ஆனால் இப்படியே பயந்துகிட்டு இருந்தா எப்படி . கொஞ்ச நாளுக்கு முன்னாடி பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போறதுக்கு எல்லோரும் பயப்படுவார்கள் . ஆனா என் மகன் சங்கர் அவனுடைய நண்பர்களோடு வேலைக்குச் சென்று வேலை செய்து வந்த பிறகு ஒவ்வொருவராக வேலைக்கு சென்றார்கள். அங்கு இப்போ வேலைக்கு தைரியமாக போறோம் . பொம்பளைங்க எல்லாம் போகாமல் இருந்தாங்க அதையும் நம்ம லட்சுமி அம்மாள் தைரியம் சொல்லி இப்போ எல்லாம் பொம்பளைங்களும் வேலைக்கு போறாங்க இப்போ எல்லோருமே வேலைக்கு போறதுக்கு தைரியம் வந்துச்சு . அதனாலதான் சொல்றேன் பம்புசெட்டு வேலைக்கு யாராச்சும் ஒரு குடும்பம் வேலைக்குப் போனாள் அடுத்தடுத்து ஒவ்வொரு குடும்பமாக பம்புசெட் வேலைக்கு போக தைரியம் வந்துவிடும் . அதனால முதல்ல எல்லோரும் வேலை செஞ்சு நிம்மதியா இருப்போம் அதுக்கு அப்புறம் அந்த ரெண்டு குடும்பத்தை பத்தி ஒரு முடிவு பண்ணுவோம் என்றார் முத்தையா.

இது வரைக்கும் உங்க பேச்சுக்கு நாங்கள் என்னிக்குமே மறுப்பு தெரிவித்தது கிடையாது அதனால நீங்களே ஒரு முடிவு சொல்லுங்கள் என்றார் ஒரு பெரியவர்.

பண்ணையார் என் நெருங்கிய நண்பன் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை . அதேபோல இந்த ஊர் மக்களும் எனக்கு ரொம்ப முக்கியம் . ஒரு கண் என் நண்பன் என்றால் மறு கண் இந்த ஊர் மக்கள். எனக்கு இரண்டுமே முக்கியம். அதனால் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் யாராச்சும் ஒரு குடும்பம் பம்புசெட் வேலைக்கு செல்ல வேண்டும் அப்படி அங்கு சென்று வேலை செய்து வந்தால் தான் மற்ற பிரச்சனைகளை நம்மாள் ஈஸியாக கையாள முடியும் இல்லை என்றால் வறுமையால் நம் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் அதனால் யார் பம்புசெட்டு வேலைக்கு செல்லப் போகிறோம் என்று ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார் முத்தையா.

அனைவரும் மௌனமாக தலை குனிந்து கொண்டார்கள் யாரும் பம்புசெட் வேலைக்கு செல்வதற்கு தைரியம் கிடையாது அனைவரும் மவுனமாக இருந்தார்கள்.

எல்லோரும் மௌனமாக இருந்தால் எப்படி ஏதாச்சும் சொன்னாதனே தெரியும் பம்புசெட் வேலைக்கு செல்ல விருப்பம் இருக்கு இல்லை என்று.

அப்பொழுது ஒரு தொழிலாளி எழுந்து சொன்னார்....... நான் ஒரு யோசனை சொல்கிறேன் நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது அண்ணே.

நம்ம எல்லோரும் ஒரு நல்ல முடிவை எடுப்பதற்காக தான் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம் . இதில் தவறாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம் தைரியமாக சொல்லு தம்பி என்றார் முத்தையா.

பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல எல்லோரும் பயந்துகிட்டு இருந்த சமயத்துல உங்க பிள்ளை சங்கர்தான் எல்லோருக்கும் தைரியத்தை கொடுத்தாரு அவர் முதல் முதல்ல அங்க வேலை செஞ்சிட்டு வந்து மத்தவங்களையும் கூட்டிட்டு போனாரு அதுக்கு அப்புறம் இப்போ ஊரே அங்க தைரியமா வேலை செஞ்சுட்டு வருது அதேபோல பம்புசெட் வேலைக்கும் உங்க பிள்ளை சங்கர் முதல்ல நாலு மாசம் செய்யட்டும் அதுக்கு அப்புறம் என் மகனையும் மருமகளையும் நான் அனுப்பி வைக்கிறேன் அடுத்த நாலு மாசத்துக்கு இன்னொரு குடும்பமும் அனுப்பி வைப்பாங்க இப்படி எல்லோருக்குமே பயம் தெளிந்து விடும் அதனால முதல் நாள் மாசத்துக்கு உங்க மகன் சங்கர் தான் இதை தொடங்கி வைக்கணும் என்று அந்தத் தொழிலாளி சொன்னார்.

முத்தையா மவுனமாக தலை குனிந்தார்.

ரேகாவுக்கு சற்று பயமாக இருந்தது என்ன இப்படி ஒரு முடிவா ஆயிடுச்சு என்ன செய்வது பம்புசெட்டில் வேலைக்கு சென்றல் நானும் என் கணவரும் காணாமல் போய் விடுவோமோ என்ற பயம் ரேகாவுக்கு ஏற்பட்டது.

கூட்டத்தில் ஒருவர் சொன்னார் முத்தையா அண்ணன் தன் மகனை வேலைக்கு அனுப்புவதற்கு தயங்குகிறார் அதனால்தான் தலைகுனிந்தபடி இருக்கிறார் என்று முணுமுணுத்தார்கள்.

இப்படியே மௌனமாக இருந்தால் எப்படி அண்ணே ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ஒரு தொழிலாளி சொன்னார்.

சங்கர் என் மகனாக மட்டும் இருந்தாள் நான் உடனே பதில் சொல்லி இருப்பேன் ஆனால் அவன் ஒரு பெண்ணுக்கு கணவன் அதனால் அவனும் அவன் மனைவியும் தான் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என்றார் முத்தையா.

சிறிதும் தயங்காமல் சங்கர் எழுந்து நின்று சொன்னான். பம்புசெட் வேலைக்கு நானும் என் மனைவியும் அங்கு தங்கி வேலை செய்கிறோம் நான்கு மாதம் இல்லை . ஒரு வருடம் ஆனாலும் நாங்கள் அங்கு வேலை செய்கிறோம் மற்ற குடும்பத்திற்கு எப்போது தைரியம் வருகிறதோ அது வரைக்கும் நாங்கள் அங்கு வேலை செய்கிறோம் முத்தையாவின் மகன் பயந்தவன் அல்ல என்பதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ஆவேசமாக சொன்னான் சங்கர்.

முத்தையாவின் முகம் மலர்ந்தது எந்த நேரத்திலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டான் நம்மகன் என்று மனதில் நினைத்துக்கொண்டு சொன்னார். நீங்கள் சொன்னதைப் போலவே முதலில் என் மகன் பம்புசெட்டு வேலைக்கு சென்று வேலை செய்து வரட்டும் அடுத்தகட்டமாக காணாமல் போனவர்களைப் பற்றி ஒரு நல்ல முடிவை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு அனைவரையும் கைகூப்பி வணங்கிவிட்டு கூட்டத்தை முடித்தார் முத்தையா.

இலட்சுமி அம்மாளுக்கு பயம் மெல்ல மெல்ல அதிகமானது இப்போதுதான் நம் மகளுக்கு திருமணம் நடந்தது இதற்குள் அந்த பம்புசெட்டு வேலைக்கு செல்வது சரிதானா என்ற குழப்பம் ஏற்பட்டது பெரியவரின் சொல்லை மீறவும் முடியாது அவர் தான் நம் மகளுக்கு நல்ல ஒரு வாழ்க்க ஏற்படுத்திக் கொடுத்து இருக்காரு இப்போ அவரே ஒரு மர்மமான வேலைக்கு அனுப்புகிறார் அவருக்கு அவர் மகன் மீது நம்பிக்கை இருக்கிறது நாமும் நம் மருமகன் மீது நம்பிக்கை வைப்பது தான் நல்லது . நம் மருமகனால். இந்த ஊருக்கு ஒரு நல்லது நடந்தால் அது நமக்குத் தானே பெருமை என்று நினைத்து ஆறுதலாக இருந்தாலும் அவள் உள் மனசில் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வார்களோ என்ற பயம் அவள் உள் மனசில் சொல்லிக் கொண்டே இருந்தது.

சங்கர் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போயிட்டா எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வரும் என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டே கடநது சென்றார்கள்.....



இனி பண்ணையார் குடும்பத்திலும் பண்ணையார் தோட்டத்திலும் பரபரப்புக்கு குறை இருக்காது ஏனென்றால் சங்கரும் ரேகாவும் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்யப் போகிறார்கள் இனி பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா . இல்லை பிரச்சனை உண்டாகும்மா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்....



தொடரும்.......

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
நேற்று இரவு இந்த முத்தைய கிழவன் தலைமையில் கூட்டம் நடந்தது அதைப் பற்றி விசாரிச் சிங்கள டா என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் கேட்டான்.

விசாரிச்சோம் குருவே . ஊர் மக்கள நம்ம கிட்ட சிக்கின ஒரு அடிமை நம்முடைய மந்திர தந்திரங்களை பெருமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறது . ஆனால் இந்த முத்தைய கிழவன் அவன் மகன் சங்கர் நம்மளை பத்தி எளக்காரமாக பேசியிருக்கிறார்கள் இவனுங்களுக்கு ஒரு பாடத்தை நம்ம புகட்டுனம் குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

இந்த ஊர்ல பண்ணையார் குடும்பமும் இந்த முத்தையா குடும்பமும்தான் நம்மள மதிக்கிறதே கிடையாது மத்த எல்லோரும் நம்மள மதிக்கிறார்கள் சிலபேர் ஓரளவுக்கு மதிக்கிறார்கள் ஆனா இந்த ரெண்டு குடும்பம்தான் நம்மள பத்தி எளக்காரமா பேசறது மரியாதை இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த ஏலக்காரணமான பேச்சு நிறுத்தினாலே போதும் நம்ம வளர்ச்சிக்கு இந்த ரெண்டு குடும்பம் தான் தடையாக இருக்கிறார்கள் இவனுங்கள என்ன செய்யறதுன்னு எனக்கே தெரியல ஆனா நிச்சயமா ஒன்னு சொல்றேன் இவனுங்க ரெண்டு பேருமே ஒரு நாளைக்கு இல்லைனாகூட ஒருநாள் நிச்சயமா நம்ம உதவியை தேடி வருவான் அவங்களை அன்னிக்கு பாத்துக்கலாம் விடுங்கடா என்றார் சாட்டையடி சாமியார்.

இல்லை குருவே ....இதை இப்படியே சும்மா விட்டா அவங்க நம்மளை பத்தி கேவலமா பேசிக்கிட்டே இருப்பாங்க அதனால நீங்க இன்னிக்கு ஒரு வாக்குறுதியை ஊர்மக்களுக்கு சொல்லுங்க வேலைக்கு போய் இருக்கிற சங்கரும் ரேகாவுக்கும் ஆபத்து வரப் போகுதுன்னு சொல்லுங்க அதுக்கப்புறம் மத்ததை பார்த்துக்கலாம் . என்றான் இன்னொரு சிஷ்யன்.

அதுக்கப்புறம் நீ என்னத்த பாக்க போற. நான் அந்த சங்கர்கிட்ட செம அடி வாங்குவதைப் பார்க்க போறியா.நானும் கொஞ்ச நாளா பார்த்துகிட்டே இருக்கேன் வம்புல மாட்டி விடுற மாதிரியே நீ ஐடியா சொல்ற. பாத்துக்க அப்புறம் உனக்கே நான் வாக்குறுதி கொடுத்து விடுவேன். ஒழுங்கா செல்போனை மறைத்து வைக்கிற வேலைய மட்டும் பாரு மத்ததெல்லாம் நான் பாத்துக்கறன் என்றார் சாட்டையடி சாமியார்.



சங்கரும் ரேகாவும் துணிமணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு சிறிது பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு பம்புசெட் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

முத்தையா சங்கரை அழைத்து கட்டி அணைத்துக் கொண்டார். அப்பொழுது முத்தையாவின் கண்கள் லேசாக கலங்கியது.

ஊரே பம்புசெட் வேலைக்கு போகமாட்டோம் என்று சொல்லி பயந்துகிட்டு இருக்காங்க . நீ எனக்கு ஒரே ஒரு மகன் .வேறு யாரும் எனக்கு கிடையாது நீ ஒருவன் தான் எனக்கு உன்னை நான் சில நாட்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்பதை நினைத்தால் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் பரவாயில்லை. இந்த ஊருக்காக நீ செய்யப் போகும் இந்த வேலை எனக்கு மட்டும் பெருமை தராது இந்த ஊருக்கே நீ பெருமை சேர்த்திருப்பாய் அதனால் நீ எந்த கவலையும் படாமல் யாருக்கும் பயப்படாமல் கொஞ்சநாள் பண்ணையார் பம்புசட்டில் இரவும் பகலும் வேலை செய் . பிறகு எல்லோருக்கும் பயம் தெளிந்து விடும் அதுக்கப்புறம் மற்றொரு குடும்பம் போய் வேலை செய்யட்டும் இப்படி மாறி மாறி வேலை செய்து கொள்ளலாம் ஆனால் ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் காணாமல் போயிருப்பது நீ மறந்து விடக்கூடாது நீ கவனமாக அங்கு வேலை செய்ய வேண்டும் உனக்கு ஏதாவது சின்ன சந்தேகம் என்றாலும் உடனே பண்ணையாரிடமும் என்னிடமும் நீ தெரியப்படுத்தி வீடு அதுதான் உனக்கும் நல்லது. உன் குடும்பத்துக்கும் நல்லது. நீ இப்போது தனி ஆள் கிடையாது உனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொண்டாய் அதனால் எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது பொறுமையாக கையாள வேண்டும் நிச்சயமா நீ இந்த காரியத்திலும் ஜெயிச்சிடுவ என்ற நம்பிக்கையில உன்னை அனுப்பி வைக்கிறேன் பத்திரமா போயிட்டு வாப்பா என்று சங்கரை ஆசீர்வாதம் செய்தார் முத்தையா.

அப்போது அங்கு வந்த லட்சுமி அம்மாள் ரேகாவை அழைத்து தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்த அம்மன் திருநீரை எடுத்து காக்காவுக்கும் சங்கருக்கும் நெற்றியில் தடவினாள் பிறகு ரேகாவை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று பாசமாக சொன்னாள்.

தம்பி கிட்ட சொல்லுமா... இரவு நேரத்துல கண்டபடி வயல் வேலையில் சுற்றித் திரிய வேண்டாம் தேவையானல் மட்டும் போக சொல்லு. அது ஆர்வத்துல அங்குமிங்குமாய் ஓடுவான் நீதான் அவனை. கவனமா பாத்துக்கணும் நீயும் வாரத்தில் இரண்டு நாள் மூன்று நாள் வீட்டுக்கு வந்துட்டு போங்க அங்கேயே தங்கி விடாதீங்க வேலை முக்கியம்தான் அதேசமயம் இங்க வந்துட்டு போன உனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் அதனால தான் சொல்றேன். எனக்கென்னமோ மனசு கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு எதுக்குன்னு தெரியல இருந்தாலும் இனி வரப்போற நாள நம்ம தான் உஷாரா வாழ்ந்து காட்டணும் என்றால் லட்சுமி அம்மாள்.

நீ ஒன்னும் பயப்படாதமா அவரு என் பக்கத்துல இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த கவலையும் கிடையாது அதேபோல அவரும் எப்படிப்பட்ட காரியத்தையும் ஜெய் சுடுவார் எனக்கு அந்த நம்பிக்கை இருக்குமா நீ பயப்படாம இரு அதுக்கப்புறம் தாத்தாவை அப்பப்பா வந்து பாத்துக்கோ அவருக்கு சுடுதண்ணி வச்சு உடம்புக்கு ஊத்தி விடுமா கரெக்டா சாப்பாடு குடு கொஞ்சமா குடும்மா அவர் நிறைய சாப்பிடமாட்டார் என்று பாச மழையில் நனைந்தபடி சொன்னாள் ரேகா

பிறகு அங்கிருந்து சங்கர் ரேகாவும் விடைபெற்றுக்கொண்டு தனது துணிமணிகள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பண்ணையார் தோட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்கள் பம்புசெட்வேலைக்கு.

நடந்தது எல்லாம் பண்ணையார் கேள்விபட்டு சந்தோஷமாக இருந்தார் நமது நண்பனின் மகன் பம்புசெட் வேலைக்கு இன்று குடும்பத்தோடு வரப்போகிறான் என்ற சந்தோஷத்தில் பண்ணையாருக்கு சற்று உற்சாகம் காணப்பட்டது அப்போது மகன்களை அழைத்தார் பண்ணையார்.

பரந்தாமா சீக்கிரம் கிளம்புங்க பா இந்நேரம் பம்பு செட்டுக்கு என் நண்பனின் மகனும் மருமகளும் இன் நேரம் வந்துட்டு இருப்பாங்க என்றார் பண்ணையார்.

இதோ கிளம்பிட்டோம் அப்பா என்று சொல்லிக்கொண்டுப பரந்தாமன் அவசரமாக கிளம்பினான் பரந்தாமனுக்கும் அவன் தம்பிகளுக்கும் சந்தோஷம் இனி வழக்கம்போல நமது தோட்டம் செழிப்பாக மாறிவிடும் என்று எண்ணி சந்தோஷமாக மூவரும் பம்புசெட் செல்வதற்கு கிளம்பினார்கள்.

வழக்கம்போல புல்லட் பைக்கில் மூவரும் ஒன்றாக சென்றார்கள் தோட்டத்திற்கு.

சங்காரும் ரேகாவும் பம்பு செட்டுக்கு சென்று அங்கு இருக்கும் பெரிய கிணறு மற்றும் பண்ணையாரின் மனைவியின் பூஜை அறை மற்றும் சுற்றியிருக்கும் தென்னை மரம் பலா மரங்களை ரசித்தபடி காத்திருந்தார்கள் அப்போது சங்கர் மனதில் ஏற்கனவே தங்கி வேலை செய்த பெரியவரின் மகன் மருமகள் இருவரும் அங்கு சந்தோசமாக ஓடித்திரிந்தை நினைத்துப்பார்த்தான் பிறகு கனகாவும் அவள் கணவனும் குழந்தைகளும் இங்கு சந்தோசமாக வந்ததை நினைத்துப் பார்த்தான் சங்கர் இப்படி நன்றாக இருந்தவர்கள் எப்படி காணாமல் போயிருப்பார்கள் என்று எண்ணி சற்று சோகத்தோடு காணப்பட்டான் சங்கர்.

என்ன மாமா ..வருத்தமா இருக்கீங்க அப்பாவா எல்லாம் விட்டுட்டு வந்துட்டோம் என்று வருத்தம இருக்கா என்றாள் ரேகா.

அதெல்லாம் ஒன்னும் இல்ல இங்க ஏற்கனவே வேலை செஞ்சவங்க எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க என்பதை நான் நேரடியா பார்த்து இருக்கேன் இப்படிப்பட்டவர்கள் ஏன் காணாமல் போனார்கள் என்பதை நினைச்சாதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்குமா என்றான் சங்கர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது புல்லட்டில் பண்ணையார் மகன்கள் வருவதை இருவரும் பார்த்தார்கள்

உடனே ரேகாசற்று கூச்சத்தோடு நின்றாள் இதுவரைக்கும் அவள் பண்ணையார் தோட்ட வேலைக்கு வந்தது கிடையாது முதல் முறை என்பதால் பண்ணையாரின்மகன்களை பார்த்ததும் சற்று சங்கடத்தோடு நெளிந்தபடி நின்றால் ரேகா சங்கருக்கு இது இயல்பான விஷயம்.

புல்லட்டை சற்று தூரத்தில் நிறுத்தி விட்டு பரந்தாமனும் அவன் தம்பிகளும் பம்புசெட்டை நோக்கி வந்தவர்கள். சங்கர் ரேகாவை பார்த்து பரந்தாமன் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு மரியாதை கொடுத்தார். பதிலுக்கு சங்கரும் ரேகாவும் இரண்டு கைகளால் கும்பிட்டார்கள் பிறகு பரந்தாமன் முகத்தில் சந்தோசம் ஜொலித்தது சிரித்தபடியே சங்கரை கட்டி அணைத்துக்கொண்டான் சந்திரனும் தீனாவும் அவர்களைப் பார்த்து சிரித்தபடியே பின்கை கட்டிக் கொண்டு நின்றார்கள்.

நீங்க இந்த வேலைக்கு வந்து இருப்பது இந்தப் பண்ணையார் தோட்டத்தை பசுமை ஆகுறதுக்கு மட்டுமில்ல பண்ணையார் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பதற்கும் தான் நீங்க இங்க வேலைக்கு வந்து இருக்கீங்க எங்க அப்பாவும் உங்க அப்பாவும் உண்மையான நண்பர்கள்தான் என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் நீங்க செஞ்சி இருக்கும் இந்த உதவியை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன் நீங்க இங்க உங்க விருப்பம் போல சந்தோசமா இருங்க உங்களுக்கு என்னென்ன வேலை செய்யணும் என்று நான் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை உங்களுக்கே எல்லாமே தெரியும் நீங்க இங்க அதிகமா வேலை பார்த்து இருக்கீங்க அதனால என்ன செய்யணும்னு உங்களுக்கே தெரியும் நீங்க உங்க வேலைய இன்னிலிருந்து சந்தோஷமா தொடங்குங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் தம்பிகளை தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு அனுப்பி விட்டான்.

சங்கருக்கும் ரேகாவுக்கும் சற்று சந்தோசமாக இருந்தது பண்ணையார் மகன்கள் இவ்வளவு பாசமாக பழகுகிறார்களே என்று நினைத்து.

பிறகு பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது அம்மாவின் பூஜை அறைக்கு சென்று மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

அம்மா இனி எந்தத் தவறையும் நான் செய்யப் பவதில்லை ஏனென்றால் எல்லாம் எனக்கு சாதகமாகவே அமைந்து விட்டது . இனி நம்முடைய தோட்டம் செழிப்பாக வளரும் வழக்கம்போல எனக்கு வருமானம் கிடைக்கும். நான் தம்பிகளையும் சந்தோசமாக பார்த்துக் கொள்வேன் இதேபோல என்னை சந்தோசமாக பார்த்துக்கொள்ளும் தாயே என்று வேண்டிக்கொண்டு .யாரும் நம்மை பார்க்கவில்லை என்று நினைத்து வழக்கம்போல மெதுவாக தாய் படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டி பூட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு கீழே இறங்கி திரும்பிப்பார்த்தான் . பரந்தாமன்னுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அவன் கைகள் நடுங்கியது வாசலில் சங்கரும் ரேகாவும் நின்றிருப்பதை பார்த்து..



தொடரும்.....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
எப்போதும் போல... பரந்தாமன் தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டிக்கொண்டான் தாயே இதேபோல விவசாயம் நல்ல படியாக முன்னேற வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு பிறகு நம்மை யாரும் கவனிக்கவல்லை என்ற எண்ணத்தில் அவனுடைய தாய் படத்தின் பின்னால் பணப்பெட்டி பூட்டு சரியாக இருக்கிறதா என்று சரி பார்ப்பதற்கு சற்று மேலே ஏறி பார்த்துவிட்டு கீழே இறங்கி திரும்பி பார்த்தான் . அவன் மனம் இடி விழுந்தது போல் இருந்தது கை கால் உதற ஆரம்பித்தது காரணம் வாசலில் சங்கரும் ரேகாவும் நின்று கொண்டிருப்பதை பார்த்து

என்ன செய்வது என்று திகைத்து போனான் பரந்தாமன் பிறகு சங்கரையும் ரேகா வையும் உற்றுப் பார்த்தான் அவர்கள் இருவருமே கண்களை மூடியபடி வேண்டிக் கொண்டிருந்தார்கள் பரந்தாமனின் தாய் படத்தின் முன்பு அப்பொழுதுதான் பரந்தாமனுக்கு சற்று லேசான தகிரியம் ஏற்பட்டது இவர்கள் நாம் ஏறி பணப்பெட்டியை சரி பார்த்ததை இவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் இவர்கள் வந்த உடனே கண்களை மூடி கொண்டு வேண்டிக்கண்டு இருந்திருப்பார்கள்என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு ஏற்பட்டது

பிறகு சிறிது நேரத்தில் சங்கர் ரேகாவும்கண் திறந்து பார்த்தார்கள் பார்த்தவுடன் . சங்கர் உடனே கையிலிருந்த மண்வெட்டியை பரந்தாமனின் தாய் படத்தின் முன்பாக வைத்து கும்பிட்டுவிட்டு பிறகு அந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பரந்தாமனிடம் ....ஐயா நாங்கள் இப்பொழுதே எங்கள் வேலையை தொடங்கி விட்டோம் என்று கூறிவிட்டு சங்கர் ரேகாவும் அங்கிருந்து புறப்பட்டார்கள் வயல் பகுதிக்கு

பரந்தாமனுக்கு ஒருகணம் மூச்சே நின்று விடும்போல் அளவிற்கு அதிர்ச்சியானது எங்கே இவர்கள் நம்முடைய பணப்பெட்டியை கண்டுபிடித்து விட்டார்களோ என்ற பயம் பரந்தாமனுக்கு ஏற்பட்டது . பிறகு மனம் லேசாக படபடப்பு குறைந்தது அங்கிருந்து வெளியே வந்த பரந்தாமன் கிணற்று சுவர் மீது உட்கார்ந்தான். இருப்பினும் அவன் கைகள் நடுங்குவது குறையவில்லை சற்று லேசாக வே நடுங்கி கொண்டிருந்தது அவன் இதயமோ லேசாக படபடத்துக் கொண்டிருந்தது பிறகு அவன் பம்புசெட்டில் போய்க்கொண்டிருக்கும் தண்ணீரை சிறிது . இரு கைகளால் அள்ளி குடித்துவிட்டு மீண்டும் கிணற்று சுவர் மீது அமர்ந்தான் .

சிறிது நேரத்தில் தம்பிகளும் வந்தார்கள் அண்ணே வீட்டுக்கு கிளம்பலாமா .

கிளம்பலாம் ..அதுக்கு முன்னாடி கொஞ்சம் உங்க கிட்ட நான் பேசனும் என்றான் பரந்தாமன்

சொல்லுங்க அண்ணே என்று சந்திரன் சொன்னான்.

நான் என்ன சொல்றேன்னா இப்பத்தான் நம்முடைய குடும்ப பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா சரியாகி கொண்டே வருதுஅதனால இனிமே நம்ம குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சினையும் நம்மளால ஏற்படக் கூடாது தம்பி . இதோ வந்திருக்கிற சங்கரும் ரேகாவும் இங்க நிம்மதிய வேலை செய்யட்டும் நம்ம அவங்கள எந்த தொந்தரவும் செய்யக்கூடாது ஏற்கனவே நம்ம செஞ்ச தவறு நாளா நம்ம குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம் . இனிமேலாவது நமோ எந்த தவறும்செய்யக் கூடாது என்றான் பரந்தாமன் .

அண்னே ....இனிமே எந்த தவறும் நாங்க செய்ய மாட்டோம் .குடிக்கக்கூட மாட்டோம் நாங்கள் .அதனால எங்க மேல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் . மறுபடியும் நாங்க ரேகாமேலே ஆசைப்படுவோம் என்றுதானே நீங்க இந்த மாதிரி சொல்றீங்க என்றான் தீனா.

இல்ல தம்பி ஏற்கனவே இருந்த குடும்பம் வேற. இப்போது வந்திருக்கிற குடும்பம் வேற நம்ம செஞ்ச தப்பு வெளியே சொல்லாமல் நம்ம மேல இருக்கிற பயத்தினால் அந்த இரணடு குடும்பமும் ஓடிட்டாங்க ஆனா இப்போ இருக்கிற சங்கர் ரொம்ப முரட்டுத்தனமான ஆளு அவனை பத்தி நமக்கும் தெரியும் இந்த ஊருக்கும் தெரியும் அவனை ஜெயிக்கிறது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை அதனால சொல்றேன் நீங்க மறுபடியும் பழக்க தோஷத்தில். இந்த ரேகா அழகா இருக்கிறதுனால அவள் மீது ஆசை வைத்து விடாதீர்கள் உங்க ஆசையை அப்புறம் நான் நிறைவேற்ற முடியாது . அதனால தான் சொல்ல வரேன் என்றான் பரந்தாமன்

உங்களுக்கு அந்த பிரச்சினையே வேண்டாம் இனி நீங்களா சொன்னாலும் நாங்க செய்ய மாட்டோம் எங்களுக்கும் மனசாட்சி இருக்குது என்றார்கள் சந்திரனும் தீனாவும் .

பிறகு பரந்தாமனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது இனி நம்ம ராஜாங்கம் தான் நாம் நினைத்தது போல விவசாயம் செழிப்பாக வளர அந்த வேலையை சங்கர் பார்த்துக்கொள்வான் .அவன் இரவும் பகலுமாக உழைத்து இந்த தோட்டத்தை பழையபடி பச்சை பசுமையாக மாற்றி விடுவான் வழக்கம்போல நமக்கு வருமானம் கிடைக்கும் என்று பரந்தாமன் நினைத்து சந்தோஷப்பட்டான்

பிறகு அங்கிருந்து மூவரும் கிளம்பி விட்டார்கள் .

அதன் பிறகு சங்கரும் ரேகாவும் தனது வேலைகளை சந்தோஷமாக செய்யத் தொடங்கினார்கள் முதல் நாள் இரவு ரேகாவுக்கு சற்று லேசான பலத்தோடு பம்புசெட்டில் தங்குவதற்கு சற்று லேசான பயம் இருந்தது பிறகு அங்கு இருக்கும் பெரிய பெரிய பலா மரம் தென்னை மரத்தைப் பார்த்து இரவில் சற்று லேசான பயத்தோடு இருந்தால் ரேகா.

அப்பொழுது பலா மரத்தில் கனகாவின் குழந்தைக்காக கட்டிய ஆணை புடவை துணி தொங்கிக்கொண்டிருந்தது அதை பார்த்த சங்கர் ரேகாவும் இருவரும் சென்று அந்தத் துணியை கையால் பிடித்து கொண்டு . கனகாவின் குழந்தையை நினைத்துப் பார்த்தார்கள் . எப்போதுமே இந்த குழந்தை இந்த அணையில் தான் தூங்கிக் கொண்டிருக்கும் என்று சங்கர் சொன்னான் . அப்போது ரேகா சொன்னாள் .....அப்படி என்றால் இந்த துணி கூட எடுத்துக்கொண்டு செல்ல முடியாத அளவுக்கு அவர்களுக்கு அவசரமாக இருந்திருக்கிறது. அவர்கள் ஏற்கனவே திட்டம் போட்டு இருந்தாள் இந்த துணி எல்லாம் அவிழ்த்து பேக்கேஜ் செய்து கொண்டிருப்பார்கள் . அவசரத்தினால் இந்த குழந்தைக்கு கட்டிய ஆணை துணை கூட அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை அந்த அளவுக்கு அவர்கள் அவசரப்பட்டு இருக்கிறார்கள் அப்படி என்றால் அது என்ன பிரச்சினையாக இருக்கும் என்று ரேகா கேட்டாள் . சங்கருக்கும் ரேகாவின் பதில் சற்று யோசிக்க வைத்தது குழந்தைக்கு கட்டிய ஆணை துணை கூட எடுக்க முடியாமல் உடனே புறப்படும் அளவிற்கு அவர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டு இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தான்

பிறகு இருவரும் பம்பு செட்டுக்குள் உறங்க சென்று விட்டார்கள்

மெல்ல மெல்ல நாட்கள் நகர்ந்தது ஊருக்குள்ளே சங்கர் மிகவும் சிறப்பாக வேலை செய்து வருகிறார்கள் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது.

ஊர் மக்களும் சந்தோஷமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றார்கள் பயம் தெளிந்து.

ஊர் சந்தோசமாக இருப்பதை கவனித்த சாட்டையடி சாமியாருக்கு சற்று எரிச்சலாக இருந்தது இனியும் சும்மா இருந்தால் நம்ம பேச்சை இந்த ஊரில் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்து சிஷ்யர்களிடம் யோசனை கேட்டார் சாட்டையடி சாமியார்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க குருவே இன்னைக்கு இரத்திரி நான் நம்ம செல்போனை எடுத்துக்கொண்டு போய் பம்புசெட்டில் வைத்துவிடுவேன் அதுக்கு அப்புறம் வழக்கம் போல நடுராத்திரியில் கால் பண்றேன் அங்க நம்ம செல்போன். பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போ அந்த சங்கரும் ரேகாவும் அலறி அடிச்சுக்கிட்டு இங்க ஓடி வந்திடுவாங்க அதுக்கு அப்புறம் நம்ம ராஜாங்க தான் குருவே என்ற ஒரு சிஷ்யன்.

அந்த சங்கர் பயந்து அவன் பொண்டாட்டியை கூட்டிகிட்டு வந்துட்டான்னா நம்ம ஜெயிச்சிட்டோம் அவனுக்கு இருக்கிற தைரியத்துக்கு இந்தப் பேய் எங்கதான் சிரிக்குது என்று தேடிக்கிட்டு போனா நம்ம செல்போன் மாட்டிக்கும். அப்புறம் அவ்வளவுதான் நம்ம மூணு பேருமே மாட்டிக்குவோம் அதுக்கு அப்புறம் இந்த ஊர்ல இல்ல வேற எந்த ஊரிலும் நம்மல வாழ விட மாட்டான் அந்த சங்கர் . அவன பேய் இருக்குதுன்னு எல்லாம் பயமுறுத்த முடியாது டா வேற ஏதாவது ஒரு யோசனை சொல் என்றார் சாட்டையடி சாமியார்.

அப்படின்னா ஏற்கனவே போட்ட திட்டம் தான் செய்யணும் குருவே.

என திட்டம் அந்த கரும்பு தோட்டத்தை கொளுத்தி விடலாம் என்று சொன்னேனே அதுவா.

ஆமாம் குருவே வேற வழி இல்லை ஏதாச்சும் செஞ்சாதன் நம்மள இந்த ஊர் பசங்க மதிப்பானுங்க குருவே என்றான் சிஷ்யன்.

இந்த வேலையை கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும் ஏன்னா கரும்பு தோட்டத்திற்கு தீவைகிரப்பா யாராச்சும் பார்த்துட்டா நம்மள இந்த ஊர் மக்கள் மட்டும்மில்ல பண்ணையார் ஓட பசங்கள் நம்மள உயிரோட விட மாட்டானுங்க இந்த பிரச்சனை ரொம்ப பெருசா ஆயிடும் அதனால ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து விடலாம் என்றார் சாட்டையடி சாமியார்.

பிறகு ரேகா வாரத்தில் இரண்டு முறை .மூன்று முறை தனது அம்மாவையும் தாத்தாவையும் ஊருக்குள் சென்று பார்த்துவிட்டு சிறிதுநேரம் சந்தோசமாக பேசிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தால் ரேகா.

முத்தையாவுக்கு ம் சந்தோஷமாக இருந்தது அடுத்தது இந்த ஊரை கூட்டி காணாமல் போனவர்களை பற்றி தேடுவதற்கான வேலையை ஆரம்பித்து விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் முத்தையா.

பரந்தாமனின் மனைவி சாந்தி. முருங்கைக்கீரையை உருவிக்கொண்டு பண்ணையாரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

நான் சொன்ன மாதிரி நம்ம பிரச்சனை மெல்லமெல்ல சரியாகி கொண்டு வருது . என்ன மாமா என்றால் சாந்தி.

நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நம்முடைய தோட்டம் இவ்வளவு சீக்கிரமா பழைய நிலைமைக்கு வந்திடும் என்று நான் நெனச்சு பாக்கலை இந்த கனகா குடும்பம் காணாமல்போன அன்னைக்கே நான் முடிவு பண்ணினேன் நம்ம தோட்டம் இதோட பசுமையா மாறாது என்று நினைத்தேன். என் நண்பனோட மகன் வந்து என்னோட தோட்டத்தை பழைய நிலைமைக்கு மாற்றிவிட்டான் . ஆரம்ப காலத்தில் முத்தையா எனக்கு எப்படி உதவியாக இருந்தானோ அதேபோல அவன் மகன் என் பிள்ளைகளுக்கு உதவியாய் இருக்கிறன். எனக்கு ரொம்ப சந்தோசம இருக்கு மா நீ சொல்றது உண்மைதான் அப்படியே என்னோட பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு மா என்றார் பண்ணையார்.

உங்களுடைய விரோதி. கூடிய சீக்கிரத்துல உங்க முன்னாடி நின்னு மன்னிப்பு கேட்கத் தான் போறன் நீங்களும் அவன் முகத்தை பாக்கத்தான் போறீங்க என்றாள் சாந்தி.

அதுக்காகத்தான் ஒரு யோசனை வச்சிருக்கேன் அந்த யோசனை கண்டி நான் நினைச்சது போல நடந்தா என்னுடைய விரோதி யாருன்னு கூடிய சீக்கிரத்தில் கண்டு பிடித்து விடுவோம் என்றார் பண்ணையார்.

யோசனையா அப்படி என்ன யோசனை வச்சிருக்கீங்க மாமா என்றாள் சாந்தி.

இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வந்தார்கள் இவர்களைப் பார்த்ததும் பண்ணையாருக்கும் பரந்தாமனின் மனைவி சாந்திக்கும் சந்தோசமாக இருந்தது.

என்ன யோசனை அப்படி இப்படி என்றுபேசிக்கிட்டு இருக்கீங்க என்றான் பரந்தாமன்.

நீங்களே கேளுங்க மாமா எனக்கு தெரியாமலே ஏதோ ஒரு பெரிய திட்டம் போட்டிருக்காரு என்றாள் சாந்தி

என்னப்பா இவ ஏதோ திட்டங்கள் என்று உளறிக்கொண்டு இருக்கா என்றான் பரந்தாமன்.

ஆமாம்பா நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன் அந்தத் திட்டம் நான் நினைத்தபடி நடந்தா காணாமல் போனவர்கள் இரண்டு குடும்பமும் கிடைத்து விடுவாங்க என்னோட விரோதியும் எனக்கு அடையாளம் தெரியும் என்றார் பண்ணையார்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் இடி விழுந்தது போல் சற்று நேரத்தில் உடம்பு ஆடியது என்ன திட்டம் அப்பா போட்டிருப்பார் நம்மளை கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு கிடுகடு கிடுவென தலைக்கு ஏறியது பிறகு இலேசான பதட்டத்தோடு பரந்தாமன் கேட்டான்

என்ன திட்டம் பா சொல்லுங்களேன் எங்களுக்கும் என்றான் பரந்தாமன்.

இது சரியான நேரம் இல்லை அதுக்கும் ஒரு நாள் வரட்டும் அப்பொழுது சொல்கிறேன் உங்களிடம் சொல்லாமல் இந்த திட்டத்தை போட மாட்டேன் சிறிது நாள் போகட்டும் என்றார் பண்ணையார்.

உடனே மூவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டார்கள்.

இப்போ இது தான் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிட்டது என்று அம்மா படத்தின் முன்னால் வேண்டிக் கொண்டு வந்தோம் மறுபடியும் அப்பா பிரச்சனையை உண்டாக்குவார் போல் தெரிகிறதே என்று நினைத்து பரந்தாமனுக்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது.





முத்தையாவின் திட்டப்படி பண்ணையார் தோட்டம் செழிப்பாக வளர ஆரம்பித்துவிட்டது அதேபோல பண்ணையார் காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..



தொடரும்.......
 
Top Bottom