Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
ரேகா வழக்கம்போல அதிகாலையில் எழுந்து தனது புகுந்த வீட்டையும் பிறகு எதிரே இருக்கும் தனது தாய் வீட்டையும் வழக்கம்போல சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
ரேகாவுக்கு தான் நெஞ்சுக்குள்ளே யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ளே காதல் செய்துவந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார் சந்தோசத்தில் இந்த உலகமே தன் கைக்குள் அடங்கி விட்டது போல ஒரு உணர்வு ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.
திருமணம் நடந்த பிறகு .....சங்கருக்கு கண் விழித்த உடனே தனது மனைவியான ரேகாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார் . இப்படி சங்கர் ரேகாவும் திருமணம் முடிந்த பிறகுதான் அவர்கள் காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் . இதற்கு முன்னாடி இருவரும் கண்களால் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிந்த பிறகு தான் பேச ஆரம்பித்தார்கள். அதனால் இவர்களின் காதல் மயக்கம் இப்போது தான் ஆரம்பிக்கிறது இருவரும் கணவன் மனைவி போல தெரியவில்லை. காதலர்கள் போல கொஞ்சி கிட்டும் சிரித்துக் கொண்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக நாட்களை கடந்து கொண்டிருந்தார்கள்
ஒரு நாள் ரேகா வழக்கம்போல முத்தையாவுக்கு சிறிது சாதம் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடுங்க தாத்தா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தால் முத்தையா சாப்பாட்டை சாப்பிடாமல் கவலையோடு உட்கார்ந்திருந்தார் . அப்பொழுது ரேகாவுக்கு சிறிது கவலை ஏற்பட்டது என்ன தாத்தா சாப்பிடாம இருக்காரு நம்ம மேல ஏதாச்சும் கோவமா நான் ஏதாச்சும் தப்பா நடந்துக் கிட்டேனா என்னன்னு தெரியலையே என்று சற்று லேசாக பதறிப் போனாள் எப்போதுமே சாப்பாடு கொடுத்தால் உடனே சாப்பிட்டு விடுவார் நேற்று பாதி சாப்பாடு வச்சுட்டாங்க இன்னிக்கி சாப்பிடாமலே இருக்காரே என்று கவலையோடு உள்ளே சென்று தனது கணவன் சங்கரிடம் கூறினால்
உங்க அப்பா நேற்றிலிருந்து சரியாக சாப்பிட லங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு என் மேலே ஏதாச்சும் கோவமா எனக்கு தெரியல நீங்க போயிட்டு என்னன்னு கேளுங்க என்று ரேகா சொன்னாள். சங்கர் உடனே எழுந்து வந்து வெளியில் திண்ணையில் அமர்ந்து இருக்கும் தனது தந்தையை பார்த்தான்.
கை கால் தலை அனைத்தையும் ஒன்று சேர்த்த தை போல ஒடுங்கிக் கொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் முத்தையா.
தோல் சுருங்கி இருக்கும் முத்தையாவின் கைகளை .சங்கர் தன் கைகளால் அழுத்தமாக பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான் பாசமாய்.
என்னப்பா .......என்ன ஆச்சு நேத்துக்கூட சாப்பாடு சரியா சாப்பிடலாமே உடம்புக்கு முடியலையா . வாங்கப்பா வைத்தியர் கிட்ட போகலாம் என்று பாசத்தோடு பொறுமையாக கேட்டான் சங்கர்.
பொறுமையாக தலைநிமிர்ந்து சங்கரை பார்த்து. உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசுதான் சரி இல்லை என்று சற்று கவலையோடு முத்தையா சொன்னார்.
தாத்தா உங்களுக்கு என்ன கவலை தாத்தா எதுவாக இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் சொல்லி விடுவீர்கள் ஆனா. இப்போ உங்க மனசுல இருக்குற கவலையை மட்டும்ஏன் என்கிட்ட சொல்லாம இப்படி நீங்களே கவலைப்பட்டுக்கிட்டு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் தாத்தா . என்று ரேகா முத்தையாவின் தலையைத் தடவி விட்டுக் கொண்டே கேட்டாள் .
யாருகிட்ட சொன்னாலும் என் கவலை போகாதம்மா அதனாலதான் நான் உன் கிட்ட சொல்லல.
அப்படி என்ன கவலை சொல்லு தாத்தா.
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நம்ம பண்ணையார் தோட்டம் இப்போ பராமரிப்பில்லாமல் வெயில்ல விவசாயம் எல்லாம் காஞ்சி போச்சு அதனால பண்ணையார் மனசு ரொம்ப கவலைப் படுது அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை .தனது தோட்டம் இதுநாள் வரைக்கும் இதுபோல நிலைமை வந்ததே கிடையாது அதை எண்ணி பண்ணையாரு ரொம்ப கவலைப் படுகிறார் என்கிட்ட சொல்லி . மற்றவர்களைப் போல நானும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்க முடியாது ஏன்னா பண்ணையார் தோட்டம் இந்த அளவுக்கு செழிப்பா வளர்ந்ததற்கு காரணம் நானும் பண்ணையாரும் மட்டும்தான் .அந்த காலத்துல நாங்க எப்படி கஷ்டப்பட்டு அந்த நிலத்தை பராமரித்து வந்தோம் தெரியுமா ஆனா இன்னிக்கி . யாரோ செய்த சதியால் இப்படிப்பட்ட பண்ணையார் தோட்டம் இன்னைக்கு வீணாகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு .ஊர் மக்களுக்கு எல்லாம் வேலை இல்லை என்ற வருத்தம் மட்டும் தான் அவங்களுக்கு இருக்கு . ஆனா நானும் பண்ணையாரும் சேர்ந்து வளர்த்த தோட்டம் இன்னிக்கி வீணா போகுது என்பது நெனச்ச என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா . இதேபோல இன்னும் கொஞ்ச நாள் தோட்டம் காஞ்சிகிட்ட போச்சுன்னா பண்ணையாரை உயிரோடு பார்க்க முடியாது. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் அவனுக்கு இந்த பண்ணையார் தோட்டமும் இந்த ஊர் மக்களும் தான் அவன் மூச்சு .இப்போ ரெண்டுக்குமே பாதிப்பு ஏற்பட்டு இருக்கு . இதுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட இல்லனா கொஞ்ச நாள்ல என் நண்பனை நான் இழந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க முத்தையா உருக்கமாக சங்கர் இடமும் ரேகாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.
கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டம் வீணாக போகுது என்பதை எண்ணி தாத்தா வருத்தப்படுகிறார் என்பதை உணர்ந்தால் ரேகா.
தனது உயிருக்குயிரான நண்பனுக்கு ஏதாச்சும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா சரியாக சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்ட சங்கம் பிறகு முத்தையாவுக்கு ஆறுதலாக சொன்னான்.
நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் அப்பா ....நான் என் நண்பர்களை அழைத்துக்கொண்டு பண்ணையர் தோட்ட வேலைக்கு செல்கிறேன் .எங்களால் முடிந்தவரை தோட்டங்களை வீணாக போகாமல் பார்த்துக் கொள்கிறேன். பிறகு ஊர்மக்களும் பயம் தெளிந்து எங்களைப் பார்த்து ஒவ்வொருவராக வேலைக்கு வருவார்கள் பிறகு பண்ணையார்தோட்டம் எப்போதும்போல செழிப்பாக வளர ஆரம்பித்துவிடும் . நீங்கள் கவலைப்படாமல் இப்பொழுது சாப்பிடுங்கள் என்று சங்கர் முத்தையாவின் கைகளை மீண்டும் இருக்கமாக பிடித்து அன்போடு சொன்னான்.
மகனின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மகன் சொல்வது போல அவன் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் . பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக வேலைக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஏற்பட்டது பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு தொடங்கினார்.
முத்தையா சாப்பிடுவதைப் பார்த்த சங்கருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது பிறகு இருவரும் உள்ளே சென்று கட்டில் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டார்கள்.
இந்த வயசுலேயும் .....நண்பருக்கு ஒண்ணுன்னா அவர் மனசு துடிக்குது இவர்களைப் போல பாசமான நண்பர்கள் எங்கேயுமே இருக்க மாட்டாங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னார்.
எங்க அப்பா நெனச்சா பண்ணையார் ஓட நிலத்தை பாதி வாங்கிட்டு இருப்பார் . அந்த அளவுக்கு பண்ணையாருக்கு எங்க அப்பா மேல பாசம் ஆனா இது வரைக்கும் எங்க அப்பா இந்த ஊர் மக்களோடு மக்களாய் தான் பண்ணையார் ஓட பழகிக் கொண்டு வரார் . பண்ணையார் நம்ம நண்பன் தானே என்று நினைத்து . பண உதவியோ பொருள் உதவியோ எங்கப்பா வாங்கி இருந்தால் . இந்த ஊர் மக்கள் எல்லாம் எங்க அப்பாவைப் பார்த்து பயந்து இருப்பாங்க . ஏன்ன இவர் பண்ணையார்ரோட நண்பர் .இவர் எதை கேட்டாலும் பண்ணையார் கொடுப்பாரு என்ன சொன்னாலும் கேட்பாரு . என்ற பயம் இந்த ஊர் மக்களுக்கு இருந்திருக்கும் பண்ணையாருக்கு கொடுக்கிற மரியாதையை போலவே எங்க அப்பாவுக்கும் இந்த ஊர் மக்கள் கொடுத்திருப்பாங்க ஆனா எங்க அப்பா பண்ணையார் உயிர் நண்பனாக மட்டும்தான் பார்த்தாரு அவர்கிட்ட இருந்து எந்த ஒரு பொருளையும் பணமும் இதுவரைக்கும் அவர் வாங்கியது கிடையாது . ஆரம்ப காலத்துல பண்ணையார் அவங்க அப்பா அம்மா இல்லாம தனியா தவித்தபோது . எங்க அப்பாதான் அவருக்கு தோள் கொடுத்து இந்தப் பண்ணையார் தோட்டத்தை இவ்வளவு பசுமையாக வளர பாடுபட்டார் . அதனால பண்ணையாருக்கு எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்கிறது இந்த ஊர் மக்களுக்கும் எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்குது ஏன்னா முத்தையா நெனச்சா வசதியா பண்ணையார் போல வாழ்ந்து இருக்கலாம் . ஆனால் அவர் நம்மை போல கூலித்தொழிலாளி யகவே நம்மோடு ஒற்றுமையாக வாழ்ந்து இருக்காரு .அதை நினைச்சு இந்த ஊர் மக்கள் என் அப்பாவுக்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள் . இப்படி பாசத்தில் பணம் பொருளை சேர்க்காமல் சுத்தமான நட்பை மட்டும் வச்சு பழகுற பண்ணையாரும் எங்கப்பாவும் இந்த ஊருக்கு பெரிய மனுஷங்க ... உனக்கு புத்தி தெரிஞ்ச வரைக்கும் கொஞ்சம் தான் தெரியும் ஆனா ஆரம்பத்துல எப்படி இருந்தாங்க என்று உனக்குத் தெரியாது உங்க அம்மா சொல்லி இருப்பாங்க எனக்கும் .இந்த ஊர் மக்கள் சொல்லித்தான் தெரியும் எங்க அப்பா அவரோட பெருந்தன்மையை இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே கிடையாது இப்படி நண்பன் மீது பாசத்தோடு இருக்கிறார் அதனால தான் அவங்க நட்பு வயசானாலும் இன்னும் பாசம் குறை யலை .என்று சங்கர் ரேகா விடும் சொன்னான்.
எந்த ஒரு உற்சாகமின்றி சோர்வாக பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் வழக்கம் போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.
தோட்டம் எல்லாம் காய்ந்து கிடப்பதை பார்த்து பரந்தாமன் மனம் தீயாய் கொதித்தது . இனி நமக்கு வருமானம் குறைவு தான் பம்புசெட்டில் தனது தாயின் படத்திற்கு பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணம் இனி குறைந்துகொண்டே வரப்போகுது செலவுக்கு அந்தப் பணத்தில் இருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்து கவலையோடு பைக்கை ஓட்டி வந்தான் பரந்தாமன். பிறகு பைக்கை வழக்கமாக நிறுத்தும் களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் .பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காட்சியளித்த பண்ணையார் தோட்டம் அன்று காய்ந்துபோய் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது பரந்தாமனுக்கு கவலை மேலும் அதிகமானது . பிறகு பம்புசெட்டில் அருகே மூவரும் வந்து சேர்ந்தார்கள்
அப்போது அந்த தென்னை மரத்து நிழல் பலா மரத்தின் நியல் அவர்களுக்கு குளு குளு குளுவென இருந்தது காற்றோட்டமாக .பக்கத்தில் இருக்கும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது மூவரும் அமர்ந்தார்கள் .
அப்போது சந்திரனுக்கும் தினாவுக்கும் பம்பு செட்டில் கனகாவை கற்பழித்ததை நினைத்து பார்த்தார்கள் . கனகா தனது இரு கைகளால் கும்பிட்டு என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி எதை நினைத்துப் பார்த்தார்கள் கனகா சொன்னதைப்போல அன்று நாம் தவறு செய்யவில்லை என்றால் இன்னைக்கு நமது தோட்டம் இப்படி வீணாக போயிரக்காது பாவம் அவள் வாழ்க்கையும் வீணா போச்சு நம்ம வாழ்க்கையும் வீணா போச்சு அண்ணன் அப்பாவும் கவலையோடு இருக்கிறார்கள் தோட்டமும் வீணா போச்சு இப்படி எல்லாத்துக்கும் நாம் காரணமாகி விட்டோமே என்று சந்திரனும் தீனாவும் நடந்ததை எண்ணி பெரும் சோகத்தில் அழுதார்கள்.
தம்பிகளை தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாங்கள் என்று சொல்வதற்கும் பரந்தாமனுக்கு மனம் இல்லை . ஏனென்றால் தோட்டம் எல்லாம் வீணாக தானே போய்க்கொண்டு இருக்கிறது அதனால் இவர்கள் இங்கேயே இருக்கட்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டான் . அவனுக்கு தனது பம்புசட்டில் இரண்டாவது அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்து தம்பிகளிடம் நான் அம்மா படத்தின் முன்புவணங்கி விட்டு வருகிறேன் நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் எழுந்து சென்றான்.
தீனாவுக்கு கனகாவை கற்பழித்ததை நினைத்து வெட்கப்பட்டான் சந்திரன் முகத்தை பார்ப்பதற்கே அவனுக்கு வெட்கமாக இருந்தது மதுபோதையில் பெரிய தவறு செய்து விட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரனே கையைப் பிடித்தான்.
என்னை மன்னித்துவிடு அண்ணா உன் திருமணம் நின்று போவதற்கு நானும் காரணம் ஆகி விட்டேன் இனி நான் எந்த தவறையும் செய்யப்போவதில்லை குடிப்பதை கூட நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தீனா சொன்னான்.
நானும் இனி குடிக்கப் போவதில்லை யார் குடும்பத்தையும் கிடைக்கப்போவதில்லை இனி அண்ணனுக்கு நம்மால் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது நாம் செய்த தவறால் அண்ணன் தலை குனிந்து நிற்கிறார் நாம் கனகா மீது ஆசைப்பட்ட காரணத்தினால் அண்ணன் தவறு என்று தெரிந்தும் கனகாவை கற்பழிக்க சம்மதித்தார் அவர் நம்மீது பாசத்தில் அப்படிப்பட்ட தவறை செய்து வீட்டார் . ஆனால் நம் இனி இதுபோன்ற தவறை செய்யக்கூடாது . அண்ணனுக்கும்எந்த தர்மசங்கடத்தை யும் நாம் ஏற்படுத்தக்கூடாது என்று சந்திரன் உருக்கமாக தீணாவிடம் சொன்னான் எப்படி இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்டு. திருந்துவதற்கு தயாரானார்கள்.
பரந்தாமன் பம்புசெட்டில் இரண்டாவதுஅறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை சரி பார்த்துவிட்டு பிறகு தாய் படத்தின் முன்னால் நின்று மௌனமாக வேண்டினான்.
அம்மா நான் வேண்டியது போல எனக்கு நீ துணையாய் நின்றய் நான் நினைத்ததை முடித்து விட்டேன். எப்படியோ ஒரு வகையில் தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் ஆனால் என்னுடைய நோக்கம் விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை நான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் அது உனக்கே தெரியும் .அதனால்தான் தம்பியின் திருமணத்தை நான் சூழ்ச்சி செய்து நிறுத்தினேன் . நான் அப்பாவுக்கு என் மனைவிக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் உன் படத்தின் பின்னாலேயே சேர்த்து வைத்திருக்கிறேன் . இனி விவசாயத்தில் எனக்கு லாபம் வருமா என்ற சந்தேகம் வந்துவிட்டது . தாயே அதனால் எப்போதும் போல நீ என் கூட இருந்து என் எண்ணங்களுக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் நான் செய்வது உனக்கு தவறு என்று நல்லாவே தெரியும் . இருந்தாலும் நீ என் மீது உள்ள பாசத்தில் எனக்கு நீ துணையாய் நிற்பாய் என்பதும் எனக்குத் தெரியும் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து நீ என்னை விடுவித்துக் கொண்டு வருகிறாய் அதே போல இந்த பிரச்சினைக்கும் நீதான் என்னை விடுவிக்கவேண்டும் எப்போதும் போல நம் தோட்டம் செழிப்பாக வளர வேண்டும் என்று தனது தாயிடம் பரந்தாமன் . தீய செயலுக்கு துணை நிற்க வேண்டும் என்று . வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்
வெளியே வந்ததும் அவன் முகம் லேசாக மலரத் தொடங்கியது காரணம். சங்கர் அவனது நண்பர்களுடன் வேலைக்கு வருவதை பார்த்தான் பரந்தாமன்.
ஐயா நாங்க பதினைந்து பேர் இருக்கும் இன்னைக்கு முடிஞ்சவரை தோட்டத்தை தண்ணி பாச்சி பராமரிக்கிறோம் என்று சங்கர் சொன்னான்.
இதைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சந்தோசம் முகத்தில் மலரத் தொடங்கியது.
நீங்க வேலைக்கு வந்ததில்ல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாளைக்கும் வருவீங்களா என்று பரந்தாமன் சங்கரை பார்த்து கேட்டான்.
இனி தினமும் நாங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருவோம் நாங்கள் இனி யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று சங்கர் ஆணித்தரமாக சொன்னான்.
கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த சந்திரனுக்கும் தினாவுக்கும் சற்று லேசான சந்தோசம் ஏற்பட்டது. உடனே எழுந்து ஓடிவந்து சங்கரின் நண்பர்களின் . கைப்பிடித்து நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம் இனி இந்த ஊருக்கு நல்லதே நடக்கும் நீங்கள் பயப்படாமல் வேலை செய்யுங்கள் என்று சந்திரனும் தீனாவும் சங்கருக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் தைரியத்தை சொன்னார்கள்.
ஊரே வந்து பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வார்கள் அந்த அளவுக்கு பண்ணையார் தோட்டத்தில் வேலை இருக்கும் அவ்வளவு நிலத்தை 15 பேர் வேலை செய்து சரி செய்ய முடியாது.என்பது பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் சீனவுக்கும் தெரியும் இருந்தாலும் மெல்ல மெல்ல மற்றவர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக சங்கரும் அவனுடைய நண்பர்களும் தோட்டத்தில் வேலை செய்யும் அழகை பார்த்து ரசித்தபடி நின்றார்கள். பண்ணையார் மகன்கள்.
பரந்தாமன் தனது சுயநலத்துக்காக ஒவ்வொரு தவறாக அடுக்கடுக்காக செய்து கொண்டு வருவதும் பிறகு அதிலிருந்து அவன் மீண்டு வருவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது இப்பொழுதும் அவன் நினைத்தபடி தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டான் விவசாயமும் இனி மெல்ல மெல்ல வளரத் தொடங்கும்.
சந்திரனும் தீனாவும் ....இனி எந்தத் தவறையும் செய்ய மாட்டோம் என்று உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால் அவன் அண்ணன் செய்யும் சூழ்ச்சியில் இனி சிக்காமல் அவர்களால் இருக்க முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....
தொடரும்.....
ரேகாவுக்கு தான் நெஞ்சுக்குள்ளே யாரிடமும் சொல்லாமல் மனசுக்குள்ளே காதல் செய்துவந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார் சந்தோசத்தில் இந்த உலகமே தன் கைக்குள் அடங்கி விட்டது போல ஒரு உணர்வு ரொம்ப சந்தோஷமாக இருந்தாள்.
திருமணம் நடந்த பிறகு .....சங்கருக்கு கண் விழித்த உடனே தனது மனைவியான ரேகாவை கட்டியணைத்து முத்தம் கொடுத்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பார் . இப்படி சங்கர் ரேகாவும் திருமணம் முடிந்த பிறகுதான் அவர்கள் காதலிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் . இதற்கு முன்னாடி இருவரும் கண்களால் மட்டும் தான் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிந்த பிறகு தான் பேச ஆரம்பித்தார்கள். அதனால் இவர்களின் காதல் மயக்கம் இப்போது தான் ஆரம்பிக்கிறது இருவரும் கணவன் மனைவி போல தெரியவில்லை. காதலர்கள் போல கொஞ்சி கிட்டும் சிரித்துக் கொண்டும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக நாட்களை கடந்து கொண்டிருந்தார்கள்
ஒரு நாள் ரேகா வழக்கம்போல முத்தையாவுக்கு சிறிது சாதம் கொண்டு வந்து கொடுத்து சாப்பிடுங்க தாத்தா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து பார்த்தால் முத்தையா சாப்பாட்டை சாப்பிடாமல் கவலையோடு உட்கார்ந்திருந்தார் . அப்பொழுது ரேகாவுக்கு சிறிது கவலை ஏற்பட்டது என்ன தாத்தா சாப்பிடாம இருக்காரு நம்ம மேல ஏதாச்சும் கோவமா நான் ஏதாச்சும் தப்பா நடந்துக் கிட்டேனா என்னன்னு தெரியலையே என்று சற்று லேசாக பதறிப் போனாள் எப்போதுமே சாப்பாடு கொடுத்தால் உடனே சாப்பிட்டு விடுவார் நேற்று பாதி சாப்பாடு வச்சுட்டாங்க இன்னிக்கி சாப்பிடாமலே இருக்காரே என்று கவலையோடு உள்ளே சென்று தனது கணவன் சங்கரிடம் கூறினால்
உங்க அப்பா நேற்றிலிருந்து சரியாக சாப்பிட லங்க எனக்கு என்னமோ பயமா இருக்கு என் மேலே ஏதாச்சும் கோவமா எனக்கு தெரியல நீங்க போயிட்டு என்னன்னு கேளுங்க என்று ரேகா சொன்னாள். சங்கர் உடனே எழுந்து வந்து வெளியில் திண்ணையில் அமர்ந்து இருக்கும் தனது தந்தையை பார்த்தான்.
கை கால் தலை அனைத்தையும் ஒன்று சேர்த்த தை போல ஒடுங்கிக் கொண்டு தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் முத்தையா.
தோல் சுருங்கி இருக்கும் முத்தையாவின் கைகளை .சங்கர் தன் கைகளால் அழுத்தமாக பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான் பாசமாய்.
என்னப்பா .......என்ன ஆச்சு நேத்துக்கூட சாப்பாடு சரியா சாப்பிடலாமே உடம்புக்கு முடியலையா . வாங்கப்பா வைத்தியர் கிட்ட போகலாம் என்று பாசத்தோடு பொறுமையாக கேட்டான் சங்கர்.
பொறுமையாக தலைநிமிர்ந்து சங்கரை பார்த்து. உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசுதான் சரி இல்லை என்று சற்று கவலையோடு முத்தையா சொன்னார்.
தாத்தா உங்களுக்கு என்ன கவலை தாத்தா எதுவாக இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் சொல்லி விடுவீர்கள் ஆனா. இப்போ உங்க மனசுல இருக்குற கவலையை மட்டும்ஏன் என்கிட்ட சொல்லாம இப்படி நீங்களே கவலைப்பட்டுக்கிட்டு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் தாத்தா . என்று ரேகா முத்தையாவின் தலையைத் தடவி விட்டுக் கொண்டே கேட்டாள் .
யாருகிட்ட சொன்னாலும் என் கவலை போகாதம்மா அதனாலதான் நான் உன் கிட்ட சொல்லல.
அப்படி என்ன கவலை சொல்லு தாத்தா.
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நம்ம பண்ணையார் தோட்டம் இப்போ பராமரிப்பில்லாமல் வெயில்ல விவசாயம் எல்லாம் காஞ்சி போச்சு அதனால பண்ணையார் மனசு ரொம்ப கவலைப் படுது அவருக்கு வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை .தனது தோட்டம் இதுநாள் வரைக்கும் இதுபோல நிலைமை வந்ததே கிடையாது அதை எண்ணி பண்ணையாரு ரொம்ப கவலைப் படுகிறார் என்கிட்ட சொல்லி . மற்றவர்களைப் போல நானும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக்க முடியாது ஏன்னா பண்ணையார் தோட்டம் இந்த அளவுக்கு செழிப்பா வளர்ந்ததற்கு காரணம் நானும் பண்ணையாரும் மட்டும்தான் .அந்த காலத்துல நாங்க எப்படி கஷ்டப்பட்டு அந்த நிலத்தை பராமரித்து வந்தோம் தெரியுமா ஆனா இன்னிக்கி . யாரோ செய்த சதியால் இப்படிப்பட்ட பண்ணையார் தோட்டம் இன்னைக்கு வீணாகும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு .ஊர் மக்களுக்கு எல்லாம் வேலை இல்லை என்ற வருத்தம் மட்டும் தான் அவங்களுக்கு இருக்கு . ஆனா நானும் பண்ணையாரும் சேர்ந்து வளர்த்த தோட்டம் இன்னிக்கி வீணா போகுது என்பது நெனச்ச என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா . இதேபோல இன்னும் கொஞ்ச நாள் தோட்டம் காஞ்சிகிட்ட போச்சுன்னா பண்ணையாரை உயிரோடு பார்க்க முடியாது. அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும் அவனுக்கு இந்த பண்ணையார் தோட்டமும் இந்த ஊர் மக்களும் தான் அவன் மூச்சு .இப்போ ரெண்டுக்குமே பாதிப்பு ஏற்பட்டு இருக்கு . இதுக்கு ஒரு நல்ல முடிவு ஏற்பட இல்லனா கொஞ்ச நாள்ல என் நண்பனை நான் இழந்து விடுவேன் என்று கண்ணீர் மல்க முத்தையா உருக்கமாக சங்கர் இடமும் ரேகாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.
கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டம் வீணாக போகுது என்பதை எண்ணி தாத்தா வருத்தப்படுகிறார் என்பதை உணர்ந்தால் ரேகா.
தனது உயிருக்குயிரான நண்பனுக்கு ஏதாச்சும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் அப்பா சரியாக சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்ட சங்கம் பிறகு முத்தையாவுக்கு ஆறுதலாக சொன்னான்.
நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் அப்பா ....நான் என் நண்பர்களை அழைத்துக்கொண்டு பண்ணையர் தோட்ட வேலைக்கு செல்கிறேன் .எங்களால் முடிந்தவரை தோட்டங்களை வீணாக போகாமல் பார்த்துக் கொள்கிறேன். பிறகு ஊர்மக்களும் பயம் தெளிந்து எங்களைப் பார்த்து ஒவ்வொருவராக வேலைக்கு வருவார்கள் பிறகு பண்ணையார்தோட்டம் எப்போதும்போல செழிப்பாக வளர ஆரம்பித்துவிடும் . நீங்கள் கவலைப்படாமல் இப்பொழுது சாப்பிடுங்கள் என்று சங்கர் முத்தையாவின் கைகளை மீண்டும் இருக்கமாக பிடித்து அன்போடு சொன்னான்.
மகனின் பேச்சைக் கேட்டதும் முத்தையாவுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது மகன் சொல்வது போல அவன் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றால் . பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக வேலைக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஏற்பட்டது பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சாப்பிடுவதற்கு தொடங்கினார்.
முத்தையா சாப்பிடுவதைப் பார்த்த சங்கருக்கும் மிகவும் சந்தோசம் ஏற்பட்டது பிறகு இருவரும் உள்ளே சென்று கட்டில் மீது அமர்ந்தபடி பேசிக் கொண்டார்கள்.
இந்த வயசுலேயும் .....நண்பருக்கு ஒண்ணுன்னா அவர் மனசு துடிக்குது இவர்களைப் போல பாசமான நண்பர்கள் எங்கேயுமே இருக்க மாட்டாங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னார்.
எங்க அப்பா நெனச்சா பண்ணையார் ஓட நிலத்தை பாதி வாங்கிட்டு இருப்பார் . அந்த அளவுக்கு பண்ணையாருக்கு எங்க அப்பா மேல பாசம் ஆனா இது வரைக்கும் எங்க அப்பா இந்த ஊர் மக்களோடு மக்களாய் தான் பண்ணையார் ஓட பழகிக் கொண்டு வரார் . பண்ணையார் நம்ம நண்பன் தானே என்று நினைத்து . பண உதவியோ பொருள் உதவியோ எங்கப்பா வாங்கி இருந்தால் . இந்த ஊர் மக்கள் எல்லாம் எங்க அப்பாவைப் பார்த்து பயந்து இருப்பாங்க . ஏன்ன இவர் பண்ணையார்ரோட நண்பர் .இவர் எதை கேட்டாலும் பண்ணையார் கொடுப்பாரு என்ன சொன்னாலும் கேட்பாரு . என்ற பயம் இந்த ஊர் மக்களுக்கு இருந்திருக்கும் பண்ணையாருக்கு கொடுக்கிற மரியாதையை போலவே எங்க அப்பாவுக்கும் இந்த ஊர் மக்கள் கொடுத்திருப்பாங்க ஆனா எங்க அப்பா பண்ணையார் உயிர் நண்பனாக மட்டும்தான் பார்த்தாரு அவர்கிட்ட இருந்து எந்த ஒரு பொருளையும் பணமும் இதுவரைக்கும் அவர் வாங்கியது கிடையாது . ஆரம்ப காலத்துல பண்ணையார் அவங்க அப்பா அம்மா இல்லாம தனியா தவித்தபோது . எங்க அப்பாதான் அவருக்கு தோள் கொடுத்து இந்தப் பண்ணையார் தோட்டத்தை இவ்வளவு பசுமையாக வளர பாடுபட்டார் . அதனால பண்ணையாருக்கு எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்கிறது இந்த ஊர் மக்களுக்கும் எங்க அப்பா மேல தனி மரியாதை இருக்குது ஏன்னா முத்தையா நெனச்சா வசதியா பண்ணையார் போல வாழ்ந்து இருக்கலாம் . ஆனால் அவர் நம்மை போல கூலித்தொழிலாளி யகவே நம்மோடு ஒற்றுமையாக வாழ்ந்து இருக்காரு .அதை நினைச்சு இந்த ஊர் மக்கள் என் அப்பாவுக்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள் . இப்படி பாசத்தில் பணம் பொருளை சேர்க்காமல் சுத்தமான நட்பை மட்டும் வச்சு பழகுற பண்ணையாரும் எங்கப்பாவும் இந்த ஊருக்கு பெரிய மனுஷங்க ... உனக்கு புத்தி தெரிஞ்ச வரைக்கும் கொஞ்சம் தான் தெரியும் ஆனா ஆரம்பத்துல எப்படி இருந்தாங்க என்று உனக்குத் தெரியாது உங்க அம்மா சொல்லி இருப்பாங்க எனக்கும் .இந்த ஊர் மக்கள் சொல்லித்தான் தெரியும் எங்க அப்பா அவரோட பெருந்தன்மையை இதுவரைக்கும் என்கிட்ட சொன்னதே கிடையாது இப்படி நண்பன் மீது பாசத்தோடு இருக்கிறார் அதனால தான் அவங்க நட்பு வயசானாலும் இன்னும் பாசம் குறை யலை .என்று சங்கர் ரேகா விடும் சொன்னான்.
எந்த ஒரு உற்சாகமின்றி சோர்வாக பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் வழக்கம் போல ஒரே பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.
தோட்டம் எல்லாம் காய்ந்து கிடப்பதை பார்த்து பரந்தாமன் மனம் தீயாய் கொதித்தது . இனி நமக்கு வருமானம் குறைவு தான் பம்புசெட்டில் தனது தாயின் படத்திற்கு பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணம் இனி குறைந்துகொண்டே வரப்போகுது செலவுக்கு அந்தப் பணத்தில் இருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும் வேறு வழியில்லை என்று நினைத்து கவலையோடு பைக்கை ஓட்டி வந்தான் பரந்தாமன். பிறகு பைக்கை வழக்கமாக நிறுத்தும் களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் .பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காட்சியளித்த பண்ணையார் தோட்டம் அன்று காய்ந்துபோய் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது பரந்தாமனுக்கு கவலை மேலும் அதிகமானது . பிறகு பம்புசெட்டில் அருகே மூவரும் வந்து சேர்ந்தார்கள்
அப்போது அந்த தென்னை மரத்து நிழல் பலா மரத்தின் நியல் அவர்களுக்கு குளு குளு குளுவென இருந்தது காற்றோட்டமாக .பக்கத்தில் இருக்கும் கிணற்றின் தடுப்பு சுவர் மீது மூவரும் அமர்ந்தார்கள் .
அப்போது சந்திரனுக்கும் தினாவுக்கும் பம்பு செட்டில் கனகாவை கற்பழித்ததை நினைத்து பார்த்தார்கள் . கனகா தனது இரு கைகளால் கும்பிட்டு என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி எதை நினைத்துப் பார்த்தார்கள் கனகா சொன்னதைப்போல அன்று நாம் தவறு செய்யவில்லை என்றால் இன்னைக்கு நமது தோட்டம் இப்படி வீணாக போயிரக்காது பாவம் அவள் வாழ்க்கையும் வீணா போச்சு நம்ம வாழ்க்கையும் வீணா போச்சு அண்ணன் அப்பாவும் கவலையோடு இருக்கிறார்கள் தோட்டமும் வீணா போச்சு இப்படி எல்லாத்துக்கும் நாம் காரணமாகி விட்டோமே என்று சந்திரனும் தீனாவும் நடந்ததை எண்ணி பெரும் சோகத்தில் அழுதார்கள்.
தம்பிகளை தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாங்கள் என்று சொல்வதற்கும் பரந்தாமனுக்கு மனம் இல்லை . ஏனென்றால் தோட்டம் எல்லாம் வீணாக தானே போய்க்கொண்டு இருக்கிறது அதனால் இவர்கள் இங்கேயே இருக்கட்டும் என்று மனதோடு நினைத்துக்கொண்டான் . அவனுக்கு தனது பம்புசட்டில் இரண்டாவது அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்து தம்பிகளிடம் நான் அம்மா படத்தின் முன்புவணங்கி விட்டு வருகிறேன் நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் எழுந்து சென்றான்.
தீனாவுக்கு கனகாவை கற்பழித்ததை நினைத்து வெட்கப்பட்டான் சந்திரன் முகத்தை பார்ப்பதற்கே அவனுக்கு வெட்கமாக இருந்தது மதுபோதையில் பெரிய தவறு செய்து விட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரனே கையைப் பிடித்தான்.
என்னை மன்னித்துவிடு அண்ணா உன் திருமணம் நின்று போவதற்கு நானும் காரணம் ஆகி விட்டேன் இனி நான் எந்த தவறையும் செய்யப்போவதில்லை குடிப்பதை கூட நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக தீனா சொன்னான்.
நானும் இனி குடிக்கப் போவதில்லை யார் குடும்பத்தையும் கிடைக்கப்போவதில்லை இனி அண்ணனுக்கு நம்மால் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது நாம் செய்த தவறால் அண்ணன் தலை குனிந்து நிற்கிறார் நாம் கனகா மீது ஆசைப்பட்ட காரணத்தினால் அண்ணன் தவறு என்று தெரிந்தும் கனகாவை கற்பழிக்க சம்மதித்தார் அவர் நம்மீது பாசத்தில் அப்படிப்பட்ட தவறை செய்து வீட்டார் . ஆனால் நம் இனி இதுபோன்ற தவறை செய்யக்கூடாது . அண்ணனுக்கும்எந்த தர்மசங்கடத்தை யும் நாம் ஏற்படுத்தக்கூடாது என்று சந்திரன் உருக்கமாக தீணாவிடம் சொன்னான் எப்படி இருவரும் மனம் திறந்து பேசிக்கொண்டு. திருந்துவதற்கு தயாரானார்கள்.
பரந்தாமன் பம்புசெட்டில் இரண்டாவதுஅறையில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணத்தை சரி பார்த்துவிட்டு பிறகு தாய் படத்தின் முன்னால் நின்று மௌனமாக வேண்டினான்.
அம்மா நான் வேண்டியது போல எனக்கு நீ துணையாய் நின்றய் நான் நினைத்ததை முடித்து விட்டேன். எப்படியோ ஒரு வகையில் தம்பி திருமணத்தை நிறுத்தி விட்டேன் ஆனால் என்னுடைய நோக்கம் விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை நான் ஒருவனே அனுபவிக்க வேண்டும் அது உனக்கே தெரியும் .அதனால்தான் தம்பியின் திருமணத்தை நான் சூழ்ச்சி செய்து நிறுத்தினேன் . நான் அப்பாவுக்கு என் மனைவிக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் உன் படத்தின் பின்னாலேயே சேர்த்து வைத்திருக்கிறேன் . இனி விவசாயத்தில் எனக்கு லாபம் வருமா என்ற சந்தேகம் வந்துவிட்டது . தாயே அதனால் எப்போதும் போல நீ என் கூட இருந்து என் எண்ணங்களுக்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் நான் செய்வது உனக்கு தவறு என்று நல்லாவே தெரியும் . இருந்தாலும் நீ என் மீது உள்ள பாசத்தில் எனக்கு நீ துணையாய் நிற்பாய் என்பதும் எனக்குத் தெரியும் எத்தனையோ பிரச்சனைகளில் இருந்து நீ என்னை விடுவித்துக் கொண்டு வருகிறாய் அதே போல இந்த பிரச்சினைக்கும் நீதான் என்னை விடுவிக்கவேண்டும் எப்போதும் போல நம் தோட்டம் செழிப்பாக வளர வேண்டும் என்று தனது தாயிடம் பரந்தாமன் . தீய செயலுக்கு துணை நிற்க வேண்டும் என்று . வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்
வெளியே வந்ததும் அவன் முகம் லேசாக மலரத் தொடங்கியது காரணம். சங்கர் அவனது நண்பர்களுடன் வேலைக்கு வருவதை பார்த்தான் பரந்தாமன்.
ஐயா நாங்க பதினைந்து பேர் இருக்கும் இன்னைக்கு முடிஞ்சவரை தோட்டத்தை தண்ணி பாச்சி பராமரிக்கிறோம் என்று சங்கர் சொன்னான்.
இதைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சந்தோசம் முகத்தில் மலரத் தொடங்கியது.
நீங்க வேலைக்கு வந்ததில்ல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் நாளைக்கும் வருவீங்களா என்று பரந்தாமன் சங்கரை பார்த்து கேட்டான்.
இனி தினமும் நாங்கள் தோட்டத்திற்கு வேலைக்கு வருவோம் நாங்கள் இனி யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று சங்கர் ஆணித்தரமாக சொன்னான்.
கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்த சந்திரனுக்கும் தினாவுக்கும் சற்று லேசான சந்தோசம் ஏற்பட்டது. உடனே எழுந்து ஓடிவந்து சங்கரின் நண்பர்களின் . கைப்பிடித்து நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம் இனி இந்த ஊருக்கு நல்லதே நடக்கும் நீங்கள் பயப்படாமல் வேலை செய்யுங்கள் என்று சந்திரனும் தீனாவும் சங்கருக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் தைரியத்தை சொன்னார்கள்.
ஊரே வந்து பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வார்கள் அந்த அளவுக்கு பண்ணையார் தோட்டத்தில் வேலை இருக்கும் அவ்வளவு நிலத்தை 15 பேர் வேலை செய்து சரி செய்ய முடியாது.என்பது பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் சீனவுக்கும் தெரியும் இருந்தாலும் மெல்ல மெல்ல மற்றவர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் சந்தோசமாக சங்கரும் அவனுடைய நண்பர்களும் தோட்டத்தில் வேலை செய்யும் அழகை பார்த்து ரசித்தபடி நின்றார்கள். பண்ணையார் மகன்கள்.
பரந்தாமன் தனது சுயநலத்துக்காக ஒவ்வொரு தவறாக அடுக்கடுக்காக செய்து கொண்டு வருவதும் பிறகு அதிலிருந்து அவன் மீண்டு வருவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது இப்பொழுதும் அவன் நினைத்தபடி தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டான் விவசாயமும் இனி மெல்ல மெல்ல வளரத் தொடங்கும்.
சந்திரனும் தீனாவும் ....இனி எந்தத் தவறையும் செய்ய மாட்டோம் என்று உறுதியோடு இருக்கிறார்கள். ஆனால் அவன் அண்ணன் செய்யும் சூழ்ச்சியில் இனி சிக்காமல் அவர்களால் இருக்க முடியுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....
தொடரும்.....