Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம் - Full Story

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பரந்தாமன் எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகினான் தனது தம்பிகளின் மீது மிகுந்த அக்கறையோடு தம்பிகளுக்கு பணிவிடை செய்தான் நேரத்தோடு சாப்பிட வேண்டும் நேரத்தோடு தூங்க வேண்டும் போன்ற அன்பான கட்டளைகளை தம்பிகளுக்கு சொன்னான்.

மனைவி சாந்தியிடம் மற்றும் மகனிடம் இப்படி எல்லோரிடமும் அன்பாக இருந்தான் காரணம் அவன் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது அவன் என்ன படி விவசாயத்தில் வரும் லாபம் அவனே யாருக்கும் தெரியாமல் பம்புசெட்டில் சேர்த்து வைக்கிறான் சிறிது பணத்தை மட்டும் மனைவியிடம் கொடுத்துவிட்டு இதுதான் லாபம் என்று கணக்குக் காட்டுகிறான் அதனால் பரந்தாமனுக்கு பெரும் சந்தோஷமாக இருந்தான் .

சங்கரும் ரேகாவும். பண்ணையார் தோட்டத்தில் சந்தோசமாக வேலைபார்த்து வந்தார்கள் புதிதாக திருமண ஜோடிகள் என்பதால் நினைக்கும் போதெல்லாம் சங்கரும் ரேகாவும் முத்தங்களை பரிமாறிக் கொள்வார்கள் ஒரு சில நேரங்களில் இயற்கையோடு இயற்கையாக கலந்து தனது காம இச்சையை தீர்த்துக் கொள்வார்கள் இப்படி உல்லாசமாக பண்ணையார் தோட்டத்தில் காதல் ஜோடிகளாக வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்

ஒரு நாள் இரவு பம்புசெட்டில் ரேகா சங்கரின் மார்பின் மீது தலை வைத்து படுத்துக் கொண்டு. மாமா நான் ஒன்று சொன்னால் என் மேல கோச்சிக்க மாட்டீங்களே என்றாள் ரேகா.

என்னடி சொல்ற இதுவரைக்கும் உன் மேல நான் கோபப்பட்டது இல்ல இன்னைக்கு ஏன் இந்த வார்த்தையை சொல்ற எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நான் உன்மேல கோபப்பட மாட்டேன் என்றான் சங்கர்.

எனக்கு இங்கே இருக்கிறதுக்கு பயமா இருக்கு மாமா.

என்ன புள்ள சொல்ற அப்போ இத்தனை நாளா பயந்துகிட்டு தான் என் கூடயே இருந்தியா

ரொம்ப பயம் இல்ல லேசான பயத்தோடு தன் இருக்கேன்.

உனக்கு பயமா இருந்தா நாளைக்கு நீ ஊருக்குள்ள போயிட்டு தாத்தாவோட உங்க அம்மாவோட இருந்துக்க பகலில் இங்க வந்துடு என்றான் சங்கர்.

உன்னை விட்டுட்டா ஐயோ நான் போக மாட்டேன் எதுவாக இருந்தாலும் நான் உன்னோட தான் இருப்பேன் இனிமே உன்னை விட்டு பிரியவே மாட்டேன்.

நீதானே பயமா இருக்குன்னு சொல்ற அதனாலதான் இரவிலே நம்ம வீட்டுக்கு போயிடு பகல்ல இங்க வந்துடு.

எனக்கு இங்க பயமா இருக்குதுன்னு தான் சொன்னேன் அதுக்காக உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியாது மாமா..

இங்கே உனக்கு என்னடி பயம் உன் பக்கத்திலேயே நான் இருக்கேன் பண்ணையார் பசங்களும் பாசமாக பழகுகிறார்கள் ஊர்ல நம்மள பத்தி பெருமையா பேசிக்கிறாங்க நம்மோடு தைரியத்தை பத்தி நீ என்னடான்னா பயமா இருக்குன்னு சொல்லுறீயே அப்படி என்ன பயம் சொல்லு என்றான் சங்கர்.

எனக்கு பண்ணையாரின் பெரிய மகன் பரந்தாமன் அவரை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு மாமா அவர்தான் ஏதோ ஒரு தவறு செய்யறாரு போல எனக்குத் தெரியுது மாமா இத நான் சொன்னா நீங்க எங்க கோச்சுக்க போறீங்க என்று பயந்துகிட்டு தான் நான் உங்க கிட்ட சொல்லல சொல்லாமலும் என்னால இருக்க முடியல அதனால தான் இன்னைக்கு உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன் என்றாள் ரேகா.

அவர் மேலேய..... என்ன சொல்ற புள்ள பண்ணையாருக்கு அடுத்தபடியா இந்த ஊரே அவரைத்தான் தெய்வமா பார்க்குது அவரு போய் தவறு செய்யறாருன்னு சொல்ற.

ஆமா மாமா நம்ம இங்கே வந்தோம்மே முதல் நாள் அன்னைக்கு பண்ணையார் மனைவி படத்தின் முன்னால் பரந்தாமன் ஐயா நமக்கு முன்னாடி சாமி கும்பிட்டு இருந்தாரு அவர் பின்னாடி நம்ம நின்று வேண்டிக்கிட்டு நின்றிருந்தோம் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா

ஆமாம் ஞாபகம் இருக்கு முன்னாடி அவர் நின்றிருந்தார் பின்னாடி நம்ம நின்னு சாமி கும்பிட்டோம் அதுக்கு என்ன இப்போ

நம்ம ரெண்டு பேரும் கண்ண மூடி வேண்டிக் கொண்டு இருந்தோம் அப்போ நான் சீக்கிரமாக வேண்டி முடித்துவிட்டேன் கண் திறந்து பார்த்தாள் அந்தப் பரந்தாமன் மெதுவாக ஏரி படத்தின் பின்பக்கமாக எட்டிப்பார்த்து சிறிது நேரம் எதையோ சரி பார்ப்பது போல பார்த்துவிட்டு கீழே இறங்கியவர் நம்ம இருவரையும் பார்த்து அவர் பயந்து போனார் . அவர் நம்மை பார்த்ததும் நான் உடனே லேசாக கண்களை மூடிக்கொண்டேன் அப்போது அவர் உடம்பே நடுங்கியது நான் கவனித்தேன் . அந்த இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது அதனால்தான் அவர் நம்மளைப் பார்த்து பயந்து விட்டார் ஆனால் நாம் இருவரும் கண்களை மூடி இருந்ததால் அவருக்கு சந்தேகம் வரவில்லை உடனே சிறிது நேரத்தில் அவர் இயல்பாக மாறிவிட்டார் . எனக்கு என்னமோ அந்த படத்தின் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது போல் தெரிகிறது மாமா அன்று மட்டுமல்ல அவர் வரும்போதெல்லாம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் பின்னால் ஏறி ஏதோ செய்துவிட்டு வருவது போல் எனக்கு தெரிகிறது நான் இதை மூன்று முறை நான்கு முறை ஒளிந்திருந்து பார்த்தேன் அதனால்தான் சொல்றேன் எனக்கு இங்கே இருக்கிறதுக்கு பயமா இருக்குதுன்னு.

ரேகா சொன்னதை கேட்டதும் சங்கர் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான். இந்த விஷயத்தில் யாரையும் நம்ப கடாது என்று முடிவு செய்தான் சங்கர் தனது தந்தை சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் கவனமாக இருக்கவேண்டுமென்று முத்தையா சொன்னது சங்கர் நினைத்துப் பார்த்தான் உடனே ரேகாவிடம் சொன்னான்.

இப்போதே நான் பக்கத்து அறையில் சென்று அந்தப் படத்தின் பின்னால் என்னதன் இருக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றான் சங்கர்.

வேண்டாம் மாமா இந்த நேரத்தில் நீங்க அங்கு செல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கலம் இப்போது அமைதியாக இரு மாமா என்று சங்கரை தடவிக் கொடுத்துக் கொண்டே படுக்க வைத்தாள் ரேகா.

சங்கருக்கு ஒரே குழப்பம் அப்படி என்னதான் இருக்கும் படத்தின் பின்னால் காலையில் எழுந்தவுடன் முதல் வேலை படத்தின் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு உறங்க ஆரம்பித்தான் சங்கரும் ரேகாவும்.

பொழுது விடிந்தது..... இருவரும் எழுந்து வெளியே வந்து பக்கத்து அறைக்கு சென்றார்கள்.

நீ வெளியே நின்று பண்ணையார் மகன்கள் வருகிறார்களா என்று பார்த்துக்கொள் நான் படத்தின் பின்னால் என்ன தான் இருக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் பூஜை அறைக்குள் நுழைந்தான் பிறகு மெதுவாக ஏறி படத்தின் பின்னால் பார்த்தான். பெரிய அலமாரி போல தோற்றம் தெரிந்தது வெளியிலிருந்து பார்ப்பதற்கு மேடை போல காட்சியளித்தாலும் பின்பக்கமாக பார்த்தால் அது ஒரு பெரிய அலமாரி போல இருந்தது ஒரு பிரோவை படுக்க வைத்தாள் எப்படி இருக்குமோ அதேபோல பின் பக்கமாக இருந்தது இரண்டு பூட்டுகள் பூட்டியிருந்தது. உடனே சங்கர் நம் மனைவி சொன்னது உண்மைதான் பரந்தாமன் எதையோ இங்கு மறைத்து வைத்திருக்கிறார் இந்த விஷயம் பண்ணையாரிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கீழே இறங்கி விட்டான் சங்கர்.

பிறகு சங்கரம் ரேகாவும் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் தோட்டத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.

இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே இது பெரிய இடத்து விவகாரம் நம்ம ஏதாச்சும் சொல்லி அது வேற மாதிரியா இருந்தா அதுக்கப்புறம் பண்ணையார் குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் விரிசல் ஏற்படும் அதனால நம்ம மனசோட இதை வச்சுக்கணும் என்று சங்கர் ரேகாவிடம் சொன்னான்.

ஆமா மாமா நம்ம இங்க எதையுமே தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது காணாமல் போன இரண்டு குடும்பத்துக்கும் இந்த மர்மத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குதுன்னு எனக்கு தோணுது மாமா.

அப்படியெல்லாம் உடனே முடிவு பண்ணக்கூடாது மா அந்த பெட்டிக்குள்ள என்ன இருக்குன்னு தெரியாம நம்ம எதையும் முடிவு பண்ண கூடாது இருந்தாலும் இந்த விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று இருவரும் பேசிக்கொண்டு வயல் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது பரந்தாமனும் அவனது தம்பிகளும் மூவரும் பைக்கில் வருவது சங்கர் ரேகாவும் பார்த்தார்கள்.

பைக்கை வழக்கம் போல களத்துமேட்டில் நிறுத்திவிட்டு மூவரும் நடந்து வந்தார்கள் பம்புசெட்டை நோக்கி அப்பொழுது ரேகாவும் சங்கரும் பண்ணையார் மகன்களை நோக்கி வந்தார்கள்.

பம்புசெட்டின் சுற்றியிரக்கும் பலா மரத்தின் நிழலில் அனைவரும் நின்றார்கள் அப்போது.

நாங்கள் இருவரும் இன்று மதியம் அப்பாவைப் பார்ப்பதற்கு போயிட்டு வருகிறோம் ஐயா என்றான் சங்கர்.

தாராளமாக போயிடுவாங்க இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். உங்களுடைய விருப்பம் நீங்க எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள்ள போங்க எப்போது வேண்டும் என்றாலும் இங்கு தோட்டத்துக்கு வந்து வேலை செய்யுங்கள் உங்களுக்கு நான் எந்த கட்டுப்பாடும் விதிக்க மாட்டேன் உங்களுக்கு மட்டும் இல்ல ஏற்கனவே இருந்த அந்தப் பெரியவரின் மகனுக்கும் அதற்கு அடுத்தபடியாக இருந்த கனகா குடும்பத்திற்கும் நான் என்னைக்குமே கட்டுப்பாடுகள் விதித்து இல்லை அதனால நீங்க இந்த விஷயத்தை எல்லாம் என்னிடம் கேட்கணும் என்று அவசியமில்லை என்று சிரித்துக்கொண்டே பாசமாக சொன்னான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சங்கருக்கும் ரேகாவுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது இவரைப்பற்றி தேவையில்லாமல் நம் சந்தேகப்படுகிறோமோ என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்பிவிட்டார்கள்.

அண்ணன் சந்தோசமாக இருப்பதை பார்த்த சந்திரனும் தீனாவும் தலையை தடவியபடி நின்றார்கள்.

என்னப்பா ஏதோ கேட்கணும் போல நிக்கிறீங்க ரெண்டு பேரும் என்றான் பரந்தாமன்.

லேசாக சிரித்துக் கொண்டே .. ஒன்னும் இல்லன்னா எல்லாம் இப்போ நல்லபடியா நடந்துகிட்டு வருது அதேபோல நின்னு போன என்னோட கல்யாணமும் நடந்தா நல்லா இருக்கும் என்றான் சந்திரன் தயக்கத்தோடு.

ஆமாம் அண்ணே நீங்கதான் எப்படியாவது அப்பாகிட்ட பேசி அண்ணனோட கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் அண்ணன் அண்ணியை நினைச்சுகிட்டே இருக்காரு தினமும் அவருக்கு அண்ணிய ரொம்ப புடிச்சு போச்சு அப்பா திருமணம் வேணாம்னு சொன்னாலும் அண்ணன் விடறமாதிரி இல்ல என்று தீனா தரையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

பரந்தாமனுக்கு லேசாக கோபம் ஏறியது ...இன்னும் நீங்க கல்யாண நினைப்பிலேயே தான் இருக்கீங்களா உங்கள வகையா வேற ஏதாச்சும் ஒரு சிக்கலில் மாட்டி விட்டால் தான் நீங்கள் அடங்கி இருப்பிங்க என்று மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு லேசாக சிரித்தபடி.

எனக்கு மட்டும் ஆசை இல்லையா உங்கள் திருமணத்தை பார்ப்பதற்கு என்ன செய்வது அப்பா ஒரே பிடிவாதமாக இருக்கிறார் காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடக்காது என்று ஒருவேளை காணாமல் போனவர்கள் கிடைத்தாலும் திருமணம் நடக்காது என்பது நம்ம மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும் இப்படி பல சிக்கல் இருக்கு தம்பி இதை பொறுமையாகத் தான் அப்பாவிடம் சொல்லி திருமணத்தை பற்றி பேச வேண்டும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு தம்பி என்றான் பரந்தாமன்.

எனக்கு அந்தப் பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு அந்த பொண்ணுக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு இப்படியே திருமணம் தள்ளிப் போனால் அந்த பொண்ணுக்கு வேற ஒரு இடத்தில மாப்பிள்ளை பார்க்க போறத சொல்றாங்க அதனாலதான் நீங்க அப்பா கிட்ட பேசுங்க அண்ணே என்று சந்திரன் சொன்னான்.

எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது இன்னைக்கே பேசுறேன் அப்பாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத தம்பி. உன் திருமணத்தை நல்லபடியா நடத்துவதற்கு இந்த அண்ணன் இருக்கான் உன் தம்பி தீனா இருக்கான் உனக்கு என்ன குறை நீ நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று பரந்தாமன் பாசமாக நடித்துக்கொண்டே சொன்னான்.

பிறகு மூவரும் வழக்கமாக ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க.

இரவு நேரம்.... பரந்தாமன் சந்திரனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை இருக்கும் அறைக்கு சென்றார்கள் பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்த பண்ணையார்

வாங்கப்பா விவசாயம் எல்லாம் நல்லபடியா போகுதா என்றார் பண்ணையார்.

விவசாயத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் தம்பிக்கு தான் வருத்தம் என்றான் பரந்தாமன்.

சந்திரனுக்கு மட்டும் வருத்தம் இல்லை இந்த குடும்பத்திற்கே வருத்தம் தான் அது என்ன வருத்தம் என்று எனக்கும் தெரியும் என்றார் பண்ணையார்.

இவனோட திருமணத்தை பத்தி நம்ம ஒரு நல்ல முடிவை எடுக்கலனா அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்துவிடுவார்கள் அதனால் சீக்கிரம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் அப்பா என்று பரந்தாமன் தம்பிக்காக பணிந்து கேட்பதுபோல் நடித்துக் கொண்டு கேட்டான் .

சந்திரன் திருமணத்தைப் பற்றி நான் தினமும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் அதற்கான நேரமும் இப்போது வந்து விட்டது நான் உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் நீங்களே வந்து விட்டீர்கள் சந்தோஷம் நாளைக்கே பெண்ணோட அப்பாவை வர சொல்லுங்கள் பேசலாம் என்றார் பண்ணையார்.

பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவன் அப்பாவின் பேச்சு என்ன இவர் காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் கிடையாது என்று சொல்லுவார் என்ற நம்பிக்கையில் தானே நாம் இங்கு வந்தோம் ஆனால் இவர் திருமணத்தை நடத்தலாம் என்று சொல்கிறாரே என்று குழப்பத்தோடு நின்றான் பரந்தாமன் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனான்.

பண்ணையார் மெதுவாக எழுந்து வந்து சந்திரனை பாசமாக கட்டியணைத்துக் கொண்டு உன் திருமணத்தை நான் எப்படியாவது நடத்த வேண்டும் என்றுதான் தினமும் யோசித்திருப்பேன் அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது

காணாமல் போனவர்கள் எப்போது கிடைக்கிறார்களோ அப்போது தான் திருமணம் என்று சொன்னாரே இப்போது திருமணம் செய்யலாம் என்று சொல்கிறாரே என்று தானே நினைக்கிறீர்கள் காணாமல் போனவர்களை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் நிச்சயமாக இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க கிடைச்சுடுவாங்க அதனாலதான் சொல்றேன் சந்திரன் திருமண வேலைகளை இப்போது ஆரம்பித்து விடலாம் என்று நினைக்கிறேன் என்றார் பண்ணையார்.

பரந்தாமன் சந்தோசப் படுவதா வேதனைப் படுவதா என்று தெரியாமல் முகத்தை மாற்றி மாற்றி சிரித்தபடி இப்போதுதான் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு அப்பா என்று சொல்லிக்கொண்டே சந்திரனை கட்டி அணைத்துக் கொண்டான்.

நாளை காலையில் பொண்ணோட அப்பாவை வரச்சொல் அதே நேரத்தில் என்னோட நண்பன் மகன் சங்கரும் அவனுடைய மனைவியும் இங்கே வரச்சொல் ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்றார் பண்ணையார்.

பரந்தாமனுக்கு மேலும் குழப்பம் அதிகமானது சங்கரையும் ரேகாவையும் எதற்கு வர சொல்கிறார் அப்பா என்று தெரியாமல் முழித்தான் அதுவும் முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்கிறாரே இதில் நமக்கு ஏதாவது இந்த முடிவில் சிக்கல் ஏற்படுமா இன்று பரந்தாமனுக்கு மீண்டும் மன குழப்பம் ஏற்பட்டது.



பொழுது விடிந்ததும் பண்ணையார் எடுக்கப்போகும் முடிவு பரந்தாமனுக்கு ஒரு வலுவான முட்டுக்கட்டை போடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....



தொடரும்.......

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
சந்திரன் காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக தனது தம்பியை அழைத்து தனக்கு என்னை தேய்த்து விடும்படி சொன்னான்.

தீனாவும் சட்டையை கழட்டிவிட்டு பனியன் அணிந்தபடி சந்திரனுக்கு என்னை தேய்ப்பதற்கு தயாரானான்.

சந்திரனும் வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு தனது கட்டுமஸ்தான கூடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டான் சந்திரன்.

சந்திரனுக்கு இதமாக என்னைத் தேய்த்து விட்டபடி பேச்சுக் கொடுத்தான் தீனா.

எப்படியோ நீங்க நினைச்ச மாதிரியே அன்னிய திருமணம் செஞ்சுக்க போறீங்க ஊருக்குள்ள மறுபடியும் திருவிழா போல கோலாகலமா உங்க கல்யாணத்த அப்பா செய்ய போறாரு இதெல்லாம் நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணே என்று தீனா சொன்னான்.

ஆமாண்டா என்னோட வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன் ரொம்ப பெரிய பெரிய தப்பலாம் நம்ம செஞ்சுட்டோம் கண்டபடி குடிச்சோம் கண்டபடி சுத்திக்கிட்டு இருந்தோம் அது மட்டுமா நம்ம தோட்டத்துல வேலை செஞ்ச ரெண்டு பொண்ணுங்களையும் கெடுத்துவிடும் இப்படி தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருந்தோம் அதற்கு ஏற்றாற்போல கடவுளும் நமக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார் என்று நினைச்சேன் என் திருமணம் நின்று போன பிறகுதான் எனக்கு குடும்ப என்றாள் என்னன்னு தெரிஞ்சது தம்பி ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டு அவளை அடைய முடியாமல் போகும் நேரத்தில் தான் வாழ்க்கையை பத்தி நான் ரொம்ப தெரிஞ்சுகிட்டேன் அப்போதுதான் நம்ம செஞ்ச தப்பு எல்லாம் எனக்கு. தப்பா பட்டது அதுவரைக்கும் நம்ம சந்தோசம் தான் முக்கியம் என்று இருந்தேன் ஆனால் மத்தவங்களுக்காக வாழனும் என்ற ஆசை உன் அண்ணியை பார்த்ததும் தான் என் புத்தி தெரிஞ்சது தம்பி இன்று சந்திரன் பொறுப்போடு தம்பியிடம் சொன்னான்.

ஆமாம் அண்ணே எனக்கு கூட உன் திருமணம் நின்னு போனதும்தான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என்று வருத்தமா இருந்தது அண்ணே அதேபோல காணாமல்போன குடும்பத்துக்கு நம்ம செஞ்ச தவறுக்கு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கலாம் போல தோணுது ஆனா அவங்க நம்மள மன்னிப்பார்கள என்று எனக்கு தெரியல மறுபடியும் இந்த ஊருக்கு வருவாங்களா இன்னும் எனக்கு தெரியல அவங்க ரெண்டு குடும்பமும் நம்மள மன்னிச்சிட்ட அதைவிட சந்தோஷம் வேறு எதுவுமே இல்லை அண்ணா என்றான் தீனா.

சரிடா தம்பி இதெல்லாம் வீட்டில் பேசுற விஷயமில்லை. இன்னைக்கு என் மாமனார் வரப்போறார் அவருக்கு பிடிச்ச மாதிரி நான் நடந்துக்கணும் என்றான் சந்திரன் லேசாக சிரித்தபடி.

சாந்தி அண்ணி எல்லாவிதமான கறி மீன் நண்டு போன்றவை வாங்கிட்டு வரச் சொல்லியது இன்னைக்கு உங்க மாமனாருக்கு நல்ல விருந்துதான் என்று தினா கிண்டல் அடித்தான்.

ஒரு வழியாக சந்திரனுக்கு நல்லெண்ணெய் தேய்த்து முடித்துவிட்டான் தீனா சந்திரனும் குளிப்பதற்கு தயாரானான்.

பரந்தாமன் எந்த ஒரு உற்சாகமின்றி சோர்வாக இருந்தான் அன்று இரவு அவன் சரியாக தூங்கவில்லை அப்பா ஒரு முக்கியமான முடிவு எடுக்கப் போகிறேன் என்று சொன்ன வார்த்தை அவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது கண்டிப்பாக அப்பா எடுக்கும் முடிவில் நமக்கு ஏதோ ஒரு பெரிய சங்கடத்தை ஏற்படுத்த போகுது என்று நினைத்துக்கொண்டே அவன் சரியாக தூங்காமல் சோர்வாக காணப் பட்டான் பரந்தாமன். அப்பொழுது வீட்டில் ஏதோ தடபுடலாக நடப்பதை போல உணர்ந்தான் பரந்தாமன் தனது மனைவி இங்குமங்குமாக பேசிக்கொண்டு பரபரப்பாய் இருப்பதை உணர்ந்தான் பரந்தாமன் பிறகு மெதுவாக எழுந்து வந்து பார்த்தான் அப்பொழுது சந்திரனும் தினாவும் வெள்ளை வேட்டி குங்குமக் கலர் ஆஃ சர்ட் பளிச்சென்று அணிந்திருந்தான் சந்திரன் நல்லெண்ணெய் தேய்த்து குளித்ததால் அவன் முகம் பள பள வென ஜொலித்தது தீனாவும் பளிச்சென்று இருந்தான் இருவரும் சந்தோசமக பேசிக்கொண்டிருந்தார்கள் இவர்களைப் பார்த்ததும் பரந்தாமனுக்கு மேலும் லேசாக கோபம் அதிகமானது.

என்னங்க இன்னைக்கு போய் இவ்வளவு லேட்டா எந்திரிச்சு வரீங்க வீட்ல எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா இன்னைக்கு உங்க தம்பியோட மாமனார் வரப்போறாரு அதுமட்டுமல்ல நம்ம தோட்டத்துல வேலை செய்யற சங்கரும் ரேகாவும் நம்ம வீட்டுக்கு வர போறாங்க நாளையிலிருந்து கல்யாண வேலை ஆரம்பிக்க போறோம் இப்படி இவ்வளவு வேலையை வெச்சுகிட்டு இவ்வளவு நேரமா தூங்குவீங்க என்று சொல்லிக்கொண்டே சாந்தி பரபரப்பாய் காணப்பட்டாள்.

சாந்தியின் பேச்சு பரந்தாமனுக்கு மேலும் எரிச்சலாக இருந்தது இன்னைக்கு. நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன் என்று பரந்தாமன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். பிறகு அவனும் குளிப்பதற்கு சென்றுவிட்டான்.

பண்ணையார் வீட்டின் மையப்பகுதியில் அமர்ந்துகொண்டு சம்மந்தி வருகையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தபடியே சந்திரனின் மாமனார் வந்தார் தனது மனைவியை அழைத்துக்கொண்டு.

பண்ணையார் வந்தவர்களை நல்லபடி கவனித்து விருந்து கொடுத்தார்.

என் பேச்சுக்கு மதிப்பளித்து எத்தனை நாள் நீங்கள் காத்திருந்தாதற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பண்ணையார் அவர்களைப் பார்த்து இருககளால் கும்பிட்டார்.

உங்கள் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது எங்களுக்கும் அதில் பங்கு உண்டு நீங்கள் காணாமல் போனவர்கள் கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என்று சொன்னபோது அதில் எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை ஏனென்றால் நீங்கள்ஊர் மக்கள் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அந்த நேரத்தில் புரிந்துகொண்டோம் இப்படிப்பட்ட குடும்பத்தில் தான் நமது பெண்ணை கொடுக்க வேண்டும் என்ற முடிவு எங்களுக்கு மேலும் அதிகமானது அதனால் தான் உங்கள் வார்த்தைக்காக நாங்கள் இவ்வளவு நாளாக பொறுமையாக காத்திருந்தோம் என்றார் பண்ணையாரின் சம்பந்தி.

இனி கல்யாண வேலையை நீங்கள் ஆரம்பித்து விடுங்கள் நாளை எனக்கு பிடித்தமான வியாழக்கிழமை நாளையிலிருந்து நாங்களும் கல்யாண வேலையை ஆரம்பித்து விடுகிறோம் இதில் உங்களுக்கு விருப்பம் தானே என்றார் பண்ணையார்.

எங்களுக்கு இதில் முழு சந்தோஷம் என்று சொல்லிக்கொண்டே சந்திரனைப் பார்த்து சிரித்தார்கள் புன்னகையோடு.

சந்திரனும் பதிலுக்கு லேசாக சிரித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் தனது மாமனார் இடமும் மாமியாரிடமும்.

பரந்தாமன் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான். சென்றமுறை எப்படியோ தம்பிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கனகாவை கற்பழிக்க வைத்து பிரச்சனையை உண்டாக்கி திருமணத்தை நிறுத்தி விட்டோம் ஆனால் மீண்டும் திருமணத்தை நடத்துவதற்கு அப்பா தயாராகிவிட்டார் இனி எப்படி இந்த திருமணத்தை நிறுத்த முடியும் என்ற யோசனையில் அவனால் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்

பிறகு சந்திரனின் மாமியார் எழுந்து சாந்தியின் அருகில் சென்று நீ இன்று செய்த சமையல் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது மா என் மகளுக்கும் இதே போல சமைக்க நீ தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே சாந்தியின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு நாங்கள் போயிட்டு வருகிறோம் மா என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்து இரு கைகளால் கும்பிட்டபடி அங்கிருந்து கிளம்பினார்கள் சந்திரனின் மாமனார் மாமியார்.

பண்ணையார் குடும்பத்தோடு வெளியே வந்து சந்தோசமாக கையை அசைத்தபடி வழியனுப்பினார். அப்போது சங்கரும் ரேகாவும் வருவதை அனைவரும் பார்த்தார்கள் மீண்டும் பண்ணையாருக்கு சந்தோசம் பொங்கியது.

சாந்தி ஓடிச்சென்று ரேகாவின் கையை பிடித்துக் கொண்டு அன்போடு அழைத்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

அப்பொழுது பரந்தாமனின் மனம் சற்று சந்தோசமாக இருந்தது சங்கரையும் இறை ரேகாவையும் பார்த்து ஏனென்றால் சங்கர் முயற்சி நாள்தன் இன்று நமது தோட்டம் செழிப்பாக இருக்கிறது நமக்கும் வருமானம் கிடைக்கிறது நம்முடைய எண்ணத்திற்கு சங்கர் உதவியாக இருக்கிறான் அதனால் பரந்தாமனுக்கு சங்கரை பார்த்ததும் சற்று சந்தோசப்பட்டான் அவர்களை பரந்தாமனும் சாந்தியும் நன்றாக கவனித்தார்கள்.

சங்கரும் ரேகாவும் பரந்தாமனின் மனைவி செய்து வைத்திருந்த உணவுகளை ரசித்து சாப்பிட்டார்கள் அப்பொழுது ரேகா பரந்தாமன் அன்போடு உணவுகளை பரிமாறுவதை பார்த்து தேவையில்லாமல் இவர் மீது நாம் தப்பா சந்தேகப்படுகிறோம் என்று எண்ணினாள்

பிறகு அனைவரும் வீட்டின் மையப் பகுதிக்கு ஒன்று சேர்ந்தனர்.

சங்கரையும் ரேகாவும் எதற்கு வரச்சொன்னார் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

பண்ணையார் சங்கரிடம் தனது நண்பன் முத்தையாவின் உடல்நலத்தை விசாரித்தார் பிறகு உனக்கு நான் ஒரு முக்கியமான வேலை கொடுக்கப் போகிறேன் என்றார் பண்ணையார்.

அப்பொழுது பரந்தாமன் சந்திரன் தீனா சாந்தி மற்றும் சங்கர் ரேகா அனைவரும். என்ன வேலையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு நின்றார்கள்.

என் நண்பன் முத்தையா விடும் இருக்கும் துணிச்சலும் தைரியமும் அப்படியே உன்னிடத்தில் இருக்கிறது அதேசமயம் பொறுமையும் புத்திசாலித்தனமும் உன்னிடம் இருக்கிறது இனி நீதான் என் குடும்ப பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். உனக்கு நான் முழு அதிகாரம் கொடுக்கிறேன் நீ காணாமல் போன இரண்டு குடும்பங்களையும் தேடி கண்டுபிடித்து தரவேண்டும் இனி அந்த வேலைதான் உனக்கு நான் கொடுக்கப் போகிறேன் உன்னோட உழைப்பும் திறமையும் இந்த இரண்டு குடும்பங்களை கண்டுபிடிப்பதில் நீ கவனம் செலுத்த வேண்டும். ஏன் மூன்று மகன்களும் வாரத்தில் இரண்டு முறை காணாமல் போனவர்களை தேடுவதற்காக சென்று வருவார்கள் ஆனால் இதுவரைக்கும் ஒரு தகவல் கூட கொடுத்ததில்லை இனியும் அவர்களை நம்பி காத்திருந்தாள் பிரச்சனைக்கு முடிவு ஏற்படாது அதனால்தான் நான் ஒரு முடிவு செய்தேன் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் நீ அதை தீர்த்து வைப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது அதனால் இனிமேல் உன் வேலை பகலில் காணாமல்போனவர்களை தேடும் வேலை இரவில் தோட்ட வேலையை பார்த்துக்கொள் என்றார் பண்ணையார்.

இந்தப் பிரச்சினை உங்கள் குடும்ப பிரச்சினை மட்டுமல்ல இது நம்முடைய ஊர் பிரச்சனை கூட இந்த பொறுப்பை என்னிடம் கொடுத்ததற்கு நான் சந்தோஷப்படுகிறேன் ஐயா நான் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உங்கள் முன்னாள் நிற்க வைக்கிறேன் அவர்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஒரு நல்ல முடிவை சொல்லுங்கள் என்றான் சங்கர்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயம் உச்சத்திற்கு ஏறியது இனி நாம் செய்த தவறு மறைக்க முடியாது இங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தான் காரணம் என்று தெரிந்தால் அப்பா நம்மை கொன்றுவிடுவார் என்று எண்ணி பயந்துபோய் மூவரும் நின்று கொண்டிருந்தார்கள்.

சாந்தியின் முகத்தில் உற்சாகம் பொங்கியது. சரியான முடிவு செய்திருக்கிறீர்கள் மாமா நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவிற்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கீங்க ஏன்றால் பரந்தாமனின் மனைவி சாந்தி.

என் மூன்று மகன்களும் காணாமல்போனவர்களை சரியாக தேடவில்லை என்று நான் குறை சொல்லவில்லை காணாமல் போனவர்களை சரியான திட்டம் போட்டு தேடிச் சென்றால்தான் அவர்களை கண்டுபிடிக்க முடியும் அந்தத் திட்டத்தை என் மகன்கள் சரியாக போட்டு இருக்க மாட்டார்கள் அதனால் தான் அவர்களிடம் காணாமல் போனவர்கள் தென்படவில்லை அதனால் நீயும் சரியான திட்டத்தை போட்டுக்கொண்டு எங்கு சென்றால் அவர்கள் கிடைப்பார்கள் என்று முடிவு செய்துகொண்டு தேடுவதற்கு புறப்படு என்றார் பண்ணையார் சங்கரிடம்.

நாளை முதல் நான் காணாமல் போனவர்களை தேடி செல்கிறேன் ஐயா என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று சங்கரும் ரேகாவும் பண்ணையாரின் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.

வெற்றியும் சந்தோசத்தையும் கடவுள் உனக்கு எப்போதுமே கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பண்ணையார் ஆசீர்வதித்தார் சங்கருக்கும் ரேகாவுக்கும்.

பிறகு சங்கரம் ரேகாவும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

பண்ணையாரும் அவரது அறைக்கு கிளம்பினார் சாந்தி தனது மகனின் துணிகளை துவைப்பதற்கு கிளம்பினாள். பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சிலையாக நின்ற இடத்திலேயே நின்றார்கள். காணாமல் போனவர்களை சங்கர் கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவான் நம்முடைய கதையும் முடிந்துவிடும் என்ற பயத்தில் சிலைபோல மூவரும் நின்றார்கள்





தொடரும்......

 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பண்ணையார் வீட்டில் இருந்து கிளம்பிய சங்கரும் ரேகாவும் நேராக ஊருக்குள்ளே சென்றார்கள் சங்கரின் வீட்டிற்கு.

முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவை வருவதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்கள் பிறகு சங்கர் முத்தையா விடம் நடந்ததை விரிவாக சொன்னான்.

நடந்ததை கேட்டு முத்தையாவுக்கு பெரும் சந்தோஷம் பண்ணையாருக்கு நம் மகன் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று நினைத்து பெருமைப் பட்டார்.

நானே இன்னும் கொஞ்ச நாள்ல இதைப் பற்றி ஒரு முடிவு செய்யலாம் என்று இருந்தேன் . ஆனால் எனக்கு முன்னாடியே என் நண்பன் முந்திக் கொண்டான் பரவாயில்லை எப்படியோ காணாமல் போனவர்களை நீ கண்டுபிடித்துவிட்டால் எனக்கு அதைவிட வேறு எந்த சந்தோஷமும் கிடையாது என் வாழ்க்கையில் இதுபோன்ற சவால்களை நான் சந்தித்தது கிடையாது ஆனால் உனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது அதனால் நீ இதை பயன்படுத்திக் கொள் அதேசமயம் கவனமாக நடந்து கொள் உனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது நீ பண்ணையார் சொல்லிவிட்டாரே என்பதற்காக காணாமல் போனவர்களை தேடுவதற்கு ரொம்ப உடலை அலட்டிக் கொள்ளாதே சிறிது நேரம் தேடினால் கூட திட்டமிட்டு தேட வேண்டும் என்றார் முத்தையா சங்கரிடம்.

பண்ணையாரும் இதையதான் சொன்னார் அப்பா தேடுவதற்கு முன்னாள் திட்டமிட்டு தேட வேண்டும் அப்போதுதான் அவர்கள் கிடைப்பார் என்று சங்கர் சொன்னான்.

சரி சரி இரண்டு பேரும் ஏதாச்சும் சாப்பிடுவீங்க வாங்க என்று லட்சுமி அம்மாள் சங்கரையும் ரேகாவையும் அழைத்தாள்.

நாங்க ரெண்டு பேரும் பண்ணையார் வீட்டில் நல்லா சாப்பிட்டோம் பண்ணையார் மருமகள் எங்களுக்கு எல்லாவிதமான சாப்பாடும் ருசியா செஞ்சி வச்சிருந்தாங்க நாங்க போனதுமே எங்களை பண்ணையார் அவரோட பெரிய மகன் பரந்தாமன் ஐயா அவரோட மனைவி சாந்தி அம்மா மத்தவங்க எல்லாருமே எங்களை அன்பாக கவனித்தார்கள் என்று ரேகா புன்னகையோடு சொன்னாள்.

என் நண்பன் வீட்டுக்கு யார் போனாலும் அவர்களை பாசமாக கவனிப்பான் இது அவனோட கூட பொறந்த குணம் என்றார் முத்தையா.

உடனே சங்கரும் ரேகாவும் முத்தையாவின் காலில் விழுந்து ஆசீர்வதிக்க சொன்னார்கள் நான் செய்யப்போகும் இந்த வேலை வெற்றி பெற வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா என்றான் சங்கர்.

நேர்மையான வெற்றி எப்போதுமே கடவுள் உனக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான் என்னோட ஆசீர்வாதம் உனக்கு எப்போதுமே கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு இருவரையும் தன் கைகளால் தடவிக்கொடுத்து தூக்கினார் முத்தையா.

பிறகு ரேகாவின் அம்மாவிடமும் சங்கரும் ரேகாவும் ஆசீர்வதிக்க சொன்னார்கள் லட்சுமி அம்மாளும் சந்தோஷமாக அவர்களை வாழ்த்தினாள்.

பிறகு சங்கரும் ரேகாவும் பண்ணையார் தோட்டத்திற்கு கிளம்பிவிட்டார்கள்

ஊர் மக்கள் அனைவரும் சங்கரின் துணிச்சலை கண்டு பெருமையாக பேசினார்கள். சங்கர் அவன் அப்பா போலவே ஊருக்காக உழைப்பவன் என்று பெருமையாக பேசினார்கள்.



பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் இதுவரைக்கும் அவர்கள் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை அவர்களுக்கு வந்ததே கிடையாது மூவரும் சோகமாக காணப்பட்டார்கள் சுறுசுறுப்பு இல்லாமல் நோயாளி போல காணப்பட்டார்கள் வழக்கம் போல தோட்டத்திற்கு மூவரும் கிளம்பினார்கள்

சீக்கிரம் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு உடனே வந்துடுங்க கல்யாண வேலை நிறைய இருக்கு இன்னைக்கு ஒரு நல்ல நாளா தேதி முடிவு பண்ணிக்குங்க அதுக்கப்புறம் டவுனுக்கு போயிட்டு ஒரு பெரிய மண்டபம் பார்த்து பாதி பணத்தை அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துருங்க நீங்கதான் எங்க போனாலும் மூணு பேருமே ஒண்ணா போவீங்க ஆளுக்கொரு வேலை செஞ்சா சீக்கிரம் முடிஞ்சிடும் ஆனா நீங்க தனித்தனியா எங்கேயுமே போக மாட்டீங்க மூணு பேருமே ஒன்னதான் போவேன் என்று அடம் பிடிப்பீங்க அதனால சீக்கிரம் வந்துடுங்க என்றார் பண்ணையார் பரந்தாமனிடம்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்பா எல்லா வேலையும் அந்தந்த நேரத்துல நாங்க முடிச்சுடுவோம் என்று பரந்தாமன் சோர்வாக சொன்னான்.

சரி சரி நீங்க கிளம்புறதே லேட் சீக்கிரம் போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு பண்ணையார் உள்ளே சென்றார் பரந்தாமனும் அவனது தம்பிகளும் பைக்கில் தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.

பம்புசெட்டு கதவு சாத்தி இருந்தது சங்கரும் ரேகாவும் ஊருக்குள்ளே போயிருப்பார்கள் என்று நினைத்து பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் கிணற்றில் தடுப்பு சுவர் மீது அமர்ந்தார்கள்.

மூவரும் ஆளுக்கு ஒரு திசை பார்த்து அமர்ந்திருந்தார்கள் ஒருவருக்கொருவர் யாரும் பேசவில்லை மௌனமாக தலை குனிந்தபடி சோகமாக இருந்தார்கள்.

யாருக்கும் தெரியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையனோம் பிறகு இரண்டு குடும்பப் பெண்களை கற்பழித்தோம் ஆனால் அப்பொழுது இந்த ஊருக்கும் நம் குடும்பத்திற்கும் நல்ல பிள்ளைகளாக தெரிந்தோம். ஆனால் இப்பொழுது குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டோம் எந்த குடும்பத்தையும் கெடுக்க கூடாது என்று திருந்தி விட்டோம் ஆனால் இந்த ஊருக்கும் நம் குடும்பத்திற்கும் மோசமானவன் என்ற பெயர் வரப்போகிறது என்று நினைத்து சந்திரன் வருத்தப்பட்டான்.



நம்ம செய்த தவறு சாந்திஅண்ணிக்கும் அப்பாவிற்கும் தெரிந்தால் அவர்களின் முகத்தில் எப்படி முழிப்பது மூன்று பேரும் ஒற்றுமையாக பைக்கில் வரும்போது ஊர் மக்கள் நமக்கு கைகூப்பி மரியாதை கொடுப்பார்கள் இப்படிப்பட்ட நல்ல மரியாதையை நம் கெடுத்துக்கொண்டோம் தேவையில்லாத குடிப்பழக்கத்தினால் தேவையில்லாத செயலை செய்து இப்படி தலைகுனிந்து வாழ்வதை விட உயிரை விட்டு விடலாம் என்று நினைத்து தீனா வருத்தப்பட்டான்.

செய்த தவறை உணர்ந்து சந்திரனும் தீனாவும் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.



காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை திருமணம் நடக்காது என்று நினைத்து சந்தோஷமாக இருந்தோம் ஆனால் இப்போது காணாமல் போனவர்களை சங்கர் தேடுவதற்கு போகப்போறான் மற்றொருபுறம் அப்பா தம்பி திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் தம்பியும் திருமணம் செய்துகொள்வதற்கு ஆசைப்படுகிறான் இப்படி எல்லாமே நமக்கு பிரச்சனையாக மாறிவிட்டது இனி என்ன சதி செய்து தம்பியின் திருமணத்தை நிறுத்துவது காணாமல் போனவர்களை சங்கர் கண்டு பிடித்து விட்டாலும் திருமணம் நின்று போகும் அந்த கனகாவும் அந்தப் பெரியவரின் மருமகளும் நடந்ததை விரிவாக அப்பாவிடம் சொல்லி மூன்று பேரையும் காட்டிக் கொடுத்து விடுவார்கள் பிறகு என்ன நடக்கும் அப்பா மூன்று பேரையும் கொன்றுவிடுவார் அப்படி இல்லை என்றால் இந்த ஊரை விட்டு துரத்தி விடுவார் இருக்கிற எல்லா நிலத்தையும் ஊர்மக்களுக்கு கொடுத்துவிடுவார் இதுதான் நடக்கும நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் எல்லா பணமும் ஒரு நாளைக்கு தெரியபோகுது அப்போதும் நம்முடைய மனம்தான் போகப்போகுது இனி எந்த திட்டத்தை திட்டினாலும் நம்மால் தப்பிக்க முடியாது சங்கரையும் நேருக்கு நேராக மோதவும் முடியாது அவன் புத்திசாலி பலசாலி என்ன செய்து சங்கரை தடுத்து நிறுத்த முடியும் இனி நம்முடைய வாழ்க்கை சில தினங்களில் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எண்ணி பரந்தாமன் மிகவும் கவலைப்பட்டான்.

இப்படி மூவரும் பேசிக்கொள்ளாமல் மனதுக்குள்ளே நடந்ததை நினைத்துக்கொண்டு சோகத்தோடு கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்திருந்தார்கள்.

பரந்தாமன் எப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தாலும் தப்பிக்க வழியில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தலை சுற்றியது உடல் சோர்வானது உடனே பரந்தாமன் மெதுவாக கிணற்று சுவர் மீது இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டான்

பரந்தாமனை பார்த்ததும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் கவலை மேலும் அதிகமானது அண்ணன் ரொம்ப கவலைப் படுகிறார் என்று நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களும் குழம்பிப் போனார்கள்.

பரந்தாமன் முகத்தை துடைத்துக்கொண்டு மெதுவாக எழுந்தான் தம்பிகளின் முகத்தை பார்ப்பதற்கு கூட அவனுக்கு மனமில்லை. மெதுவாக எழுந்து சென்று பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்றான்.

அம்மா உன்னிடத்தில் நான் என்ன வேண்டுவது என்று எனக்குத் தெரியவில்லை நான் செய்த சதி திட்டங்களை என் விருப்பப்படியே நீ நிறைவேற்றி வைத்தாய் தவறு என்று தெரிந்தும் என் திட்டத்திற்கு நீ உரு துணையாய் இருந்தாய். ஆனால் இப்போது என்னால் எந்த ஒரு சதித் திட்டமும் போடுவதற்கு சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எனக்கு இடம் கொடுக்கவில்லை தம்பிகளும் இனி எந்த தவறையும் செய்ய மாட்டேன் என்று திருந்தி விட்டார்கள் நானும் நமக்கு இனி நல்ல காலம் பொறந்தாச்சு என்று நினைத்து எல்லோரிடத்திலும் அன்பாக பழகினேன் இப்படி உன் பிள்ளைகள் மூன்று பேரும் நல்லவர்களாக இருக்கும் இந்த நேரத்தில் ஏற்கனவே செய்த தவறினால் இன்னும் கொஞ்ச நாள்ல இந்த ஊருக்கு பண்ணையார் மகன்கள் கொடூரமானவர்கள் என்ற பெயர் வரப்போகுது தாயே இப்போது உன்னிடத்தில் நான் என்ன வேண்டிக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை என் பிரச்சனைகளை உன்னால் தீர்க்க முடியுமா என்றும் எனக்கு தெரியவில்லை இருந்தாலும் உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை நீதான் என்னை இந்தப் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற வேண்டும் தாயே அப்படி இல்லை என்றால் என்னை உன்னிடத்தில் அழைத்துக் கொள் தாயே என்று சொல்லிவிட்டு பரந்தாமன் உடனே ஆவேசமாக தனது வலது கையில் கற்பூர தீபத்தை ஏற்றி அவன் தாய் படத்தின் முன்னால் நின்றான் கற்பூரம் மளமளவென எரிந்தது பரந்தாமனின் வலது கையில் வெளியே சந்திரனும் தீனாவும் கற்பூரத்தில் இருந்து வரும் புகை பார்த்தார்கள் அண்ணன் ஏதோ செய்கிறார் என்று நினைத்து ஓடி வந்து பார்த்தார்கள் அப்போது சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது அண்ணன் வெறும் கையில் கற்பூர தீபத்தை ஏற்றி இருப்பதை பார்த்து உடனே கையிலிருந்த கற்பூரத்தை தீனா தட்டிவிட்டான் .

அப்போது பரந்தாமன் கதறி அழுதபடி சந்திரனையும் தீனாவையும் இருக்கைகளாள் கட்டிப்பிடித்துக்கொண்டு கத்தி அழுதான். பரந்தாமன் அழுவதைைப் பார்த்து தம்பிகளும் அழுதார்கள்.

அப்போது சங்கரும் ரேகாவும் பம்புசட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள் மூவரும் அழுகும் குரல் அவர்களுக்கு கேட்டது யார் இந்த நேரத்தில் அழுகிறார்கள் என்று சங்கரும் ரேகாவும் பதட்டத்தோடு பம்புசெட்டை நோக்கி ஓடிவந்தார்கள்.

தீனா ......சங்கர் ரேகா ஓடிவருவது பார்த்துவிட்டான் உடனே கண்களைத் துடைத்துக்கொண்டு அண்ணன்களை உஷார் ஆக்கினான் பரந்தாமனும் சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டான். இயல்பாக முகத்தை மாற்றிக் கொண்டான் சந்திரன் தனது வேட்டியை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டு பிறகு அவனும் இயல்பாக நின்றான்.

ஐயா இங்கே யாரோ அழுகுற சத்தம் எங்களுக்கு கேட்டதே என்றன் சங்கர்.

யாரு யாரு இங்க அழகுறங்க நாங்க மூணு பேரு தான் இங்கே இருக்கும் எங்களுக்கு கேட்கலையே இன்றன் சந்திரன்.

ரேகா அவர்களின் முகத்தை கவனித்தாள் மூவரும் திருதிருவென்று முழித்துக்கொண்டு பதில் சொல்வதை கவனித்தாள்

சங்கரும் பரந்தாமனின் வலது கையில் இருக்கும் காயத்தை கவனித்தான் ஏதோ இங்கு நடந்திருக்கிறது இவர்கள்தான் நம்மிடம் எதையோ மறைக்கிறார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு சரி ஐயா நாங்கள்தன் தப்பா புரிந்துகொண்டு வந்துட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் பம்புசெட்டில் அவர்களது அறைக்கு.

உடனே பரந்தாமனும் அவனது தம்பிகளும் அங்கிருந்து பதட்டமாய் வீட்டுக்கு கிளம்பினார்கள்.



பரந்தாமனின் கற்பூர தீபத்தின் வேண்டுதல் நிறைவேறுமா அல்லது அவன் திட்டத்தை சங்கர் முறியடிப்பானா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.....



தொடரும்........​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பம்புசெட்டில் இருந்து பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அவசரமாக வீட்டுக்கு வந்துவிட்டார்கள் எங்கு சங்கரும் ரேகாவும் நம் மூவரும் அழுததை கண்டு பிடித்துவிட போகிறார்களோ என்ற பயத்தில் அவசரமாக வீட்டுக்கு கிளம்பினார்கள் .
அப்போது வழக்கமாக பரந்தாமன் தான் பைக்கை ஓட்டி வருவான் அன்று தீனா ஓட்டி வந்தான் பைக்கை .
வீட்டின் அருகில் வந்ததும் மொட்டை மாடியில் துணியை எடுத்துக்கொண்டிருந்த பரந்தாமனின் மனைவி இவர்கள் வருவதை கவனித்தாள் சற்று அவளுக்கு வித்தியாசமாக தெரிந்தது எப்போதுமே நம் கணவர் தானே பைக் ஓட்டி வருவார் இன்று சின்னவர் ஓட்டி வருகிறாரே என்று ஆச்சரியத்தோடு பார்த்தாள் . அவர்கள் கிட்ட நெருங்கி வரும் பொழுது மூன்று பேரின் முகமும் வாடி இருந்ததை கவனித்தால் சாந்தி உடனே கீழே இறங்கி வந்து துணிகளை ரூமில் போட்டு விட்டு வெளியே வந்து பார்த்தாள்
பரந்தாமன் வலது கையை லேசாக தூக்கிப் பிடிப்பது போல இறங்கி நடந்து வந்தான் . கணவருக்கு ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று பதறிப் போனாள் சாந்தி
என்னங்க ....என்னங்க ஆச்சு கையை ஏங்க இப்படி தூக்கிட்டு வரீங்க என்று பரந்தாமனின் கையை பிடித்து பார்த்தாள் வலது கை உள்ளங்கை பெரிதாக தீபுண் இருந்ததைப் பார்த்து சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது
உடனே அவள் அழ ஆரம்பித்து விட்டாள் அய்யோ என்னங்க ஆச்சு உங்களுக்கு எங்கெங்கே போய் கைய வச்சீங்க என்று பதறினாள் சாந்தி
அழுகும் குரல் கேட்டு பண்ணையாருக்கு உள்ளே திக்கென்றது என் மருமகள் எதற்கு இப்படி கூச்சல் போடுகிறாள் என்று லேசான பயத்தோடு பொறுமையாக நடந்து வந்து வெளியே பார்த்தார் பண்ணையார் .
மூவரும் மௌனமாக இருக்கிறார்கள் சாந்தி மட்டும் வலது கையை பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் பண்ணையாருக்கு மனசு சங்கடமானது .
என்னப்பா ஆச்சு ......என்னப்பா ஆச்சு என்று பண்ணையாரும் பதட்டத்தோடு கேட்டார் .
பரந்தாமன் மெதுவாக ..... ஒன்றும் இல்லை ஏன் இப்படி அழுகிறாய் கம்முனு இருடி எனக்கு ஒன்னும் ஆகல என் கையை விடு என்று உதறிக்கொண்டு உள்ளே நடந்து சென்றான்.
சந்திரனுக்கும் தீனாவுக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்கள். அண்ணன் எதற்காக திடீரென்று இப்படி செய்தார் என்றும் அவர்களுக்கு புரியவில்லை வெறும் கையில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொள்ளும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் என்று இவர்களுக்கு புரியவில்லை அன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தார்கள்.
பரந்தாமன் சோகமாக தன் அறைக்கு சென்றன். பின்னாலேயே சாந்தியும் அழதுக்கொண்டே உள்ளே சென்றாள் பரந்தாமன் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
பண்ணையாருக்கு மனசு தாங்க வில்லை கையில் இவ்வளவு பெரிய தீக்காயம் எப்படி ஆனது என்று புரியாமல் அவரும் பரந்தாமன் அறைக்குச் சென்றார் .
சந்திரனும் தீனாவும் வழியிலேயே நின்றிருந்தார்கள்.
அண்ணன்.. காணாமல் போனவர்கள் கிடைக்கக்கூடாது என்று அம்மாவிடம் வேண்டிக்கொண்டு கற்பூர தீபத்தை ஏற்றி இருப்பார் என்று தீனா மெதுவாகச் சந்திரனிடம் சொன்னான்.
அப்படி இருக்காது. காணாமல் போனவர்கள் கிடைக்கவில்லை என்றால். என் திருமணம் நின்று விடும் என்று அண்ணனுக்கு தெரியும் அதனால் அப்படி வேண்டி இருக்க மாட்டார் வேறு எதுவோ வேண்டிக் கொண்டிரக்கிறார் அது என்னென்னு நமக்குத் தெரியவில்லை என்று சந்திரன் சொன்னான்.
உண்மைதான்... அண்ணனுக்கு உன் வாழ்க்கை தான் முக்கியம் இதை அவரே அடிக்கடி சொல்லி இருக்காரே பிறகு எதற்காக இப்படி ஒரு வேண்டுதலை செய்தார் என்று தீணா புரியாமல் சொன்னான்.
சாந்தியின் அழுகை பரந்தாமனுக்கு எரிச்சலாக இருந்தது அவனுடைய அப்பாவும் பரந்தாமா பரந்தாமா என்று முனங்கிகொண்டு அருகில் நின்று இருப்பதும் அவனுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியது.
எப்படிங்க இவ்வளவு பெரிய தீக்காயம் ஏற்பட்டது என்று சொல்லிக்கொண்டே சாந்தி பரந்தாமனின் கையை தன் முகத்தின் அருகில் கொண்டு பார்த்தாள்.
கற்பூரம் கையோடு சேர்ந்து எறிந்ததால் கற்பூர வாடை தீ காயத்தோடு மனமானத்தாதூ.
என்னங்க ..கற்பூர வாசனை வருது வெறும் கையால கற்பூரம் ஏத்தி சாமிகிட்ட வேண்டி கிட்டீங்களா என்று சாந்தி சந்தேகத்தோடு கேட்டாள்.
பரந்தாமனுக்கு திக்கென்று ஆனது இனியும் இவளிடம் மறைக்க முடியாது என்று முடிவுக்கு வந்தான் என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான் அப்பொழுத அவன் ஒரு முடிவுக்கு வந்தான் உடனே மெதுவாக தலையை அசைத்தான் ஆமாம் என்று.
பண்ணையாருக்கு மேலும் படபடப்பு அதிகமானது நம் குடும்பம் சந்தோசமாக இருக்கும் வேளையில் எதுக்காக வெறும் கையில் தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டான் நம் மகன் அப்படி என்ன அவனுக்கு ஒரு கவலை என்று அவர் மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமனின் பதிலை எதிர்பார்த்து நின்றார்.
தம்பி திருமணம் ஏற்கனவே கை கூடி வந்த நிலையில் யாரோ ஒருவர் தம்பியைப் பற்றி தவறாக சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார்கள் அதன்பிறகு இப்பொழுது ஒரு நல்ல வரன் கிடைத்து இருக்கிறது திருமணமும் நடக்க இருந்த நேரத்தில் இந்த கனகா குடும்பம் காணாமல் போனதால் அப்பா திருமணத்தை நிறுத்தி விட்டார் இப்போது மீண்டும் திருமணம் கைகூடி வருகிறது இப்போதாவது தம்பியின் திருமணம் நடக்க வேண்டுமென்று வேண்டி என் அம்மா படத்தின் முன்னால் இந்த கற்பூர தீபத்தை என் கையில் காண்பித்து வேண்டினேன் என் தம்பி இந்த முறை திருமணம் நின்று விட்டால் அவன் மனசு தாங்காது. என் மனசும் தாங்காது அதனால் நான் இந்த வேண்டுதலை செய்தேன் என்று உருக்கமாக நடித்துக்கொண்டு பரந்தாமன் சாந்திக்கும் அவன் அப்பாவிற்கும் பிறகு வெளியில் நின்று கொண்டிருக்கும் தம்பிகளுக்கும் கேட்கும்படி சொன்னான்.
இதை கேட்டதும் அனைவரும் பரந்தாமனை நினைத்து பெருமைப் பட்டார்கள்
சாந்திக்கு தம்பிகள் மீது இவ்வளவு பாசமா என்று நெகிழ்ந்து போனாள் பிறகு வாங்க ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வரலாம் என்றாள் சாந்தி.
ஹாஸ்பிடலுக்குகெல்லாம் வேண்டாமா நான் என் வேண்டுதலுக்காக இந்தக் தீ காயம் உண்டானது அது தானாக தான் ஆர வேண்டும் அப்போதுதான் என் வேண்டுதல் பலிக்கும் அதனால் ஹாஸ்பிடல்லுகெல்லாம் வேண்டாமா என்று சுருக்கமாக சொன்னால் சாந்தியிடம்.
பண்ணையாருக்கு ..... உண்மையாகவே அந்த பரந்தாமனே எனக்கு மகனாகப் பிறந்து இருக்கிறான் என்று நினைத்தார்
சந்திரனும் தீனாவும் அண்ணனின் பாசத்தில் கண்கள் லேசாக இருவருக்கும் கலங்கியது இப்படிப்பட்ட அண்ணன் கிடைத்திருப்பது இந்த ஜென்மத்தில் நாம் செஞ்ச புண்ணியம் என்று நினைத்தார்கள் .
ஒரு பொய் சொல்லி பரந்தாமன் குடும்பத்தார் மனதில் பாசவலை வீசினான்.
உடனே பண்ணையார் ஆவேசமாக சொன்னார்..... நீ உன் தம்பியின் திருமணத்தை நடத்துவதற்கு இவ்வளவு தீவிரமாக இருப்பாய் என்று எனக்குத் தெரியாது இப்படிப்பட்ட உன் நல்ல மனசை நான் ஏன் சுயநலத்துக்காக கஷ்டப்படுத்தி விட்டேன் பரந்தாமா ...என்று உருக்கமாக சொன்னார். காணாமல் போனவர்கள் எப்போது கிடைக்கிறார்களோ அப்போது தான் திருமணம் என்று சொன்னேனே அப்போது உன் மனம் எந்த அளவிற்கு நொந்து போயிருக்கும் என்பதை நான் இப்போது உணர்கிறேன் பரந்தாமா .....இனி உன் மனசை நான் நோகடிக்க மாட்டேன் நீ எப்போது தம்பியின் திருமணத்துக்காக கையை எரித்துக் கொண்டாயோ இனியும் உன்னை நான் கஷ்டப்படுத்த மாட்டேன் காணாமல் போனவர்களை சங்கர் இன்னும் சில தினங்களில் கண்டுபடிக்கவில்லை என்றால் நான் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு பத்து ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுக்கிறேன் என்று பத்திரிக்கையில் அறிவிக்க சொல்கிறேன் அப்போது காணாமல் போனவர்களின் விபரம் பத்து நாட்களில் கிடைத்துவிடும் நீ கவலைப்படாதே பரந்தாமா ....எனக்கு சொத்து முக்கியம் கிடையாது நீங்கள் தான் எனக்கு முக்கியம் நீ திருமணத்துக்காக கையை எரித்து கொண்டாய் மறுபடியும் நீ இதுபோன்ற விபரீத செயலை செய்யக் கூடாது பரந்தாமா... இனிமேல் நான் திருமணத்தை நிறுத்த மாட்டேன் திருமணத்துக்குள் காணாமல் போனவர்களும் கிடைத்து விடுவார்கள் அதனால் ஏன் சொத்தில் பாதி போனாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் தான் முக்கியம் என்று ஆவேசத்தோடு பண்ணையார் பரந்தாமனிடம் சொன்னார்.
திருமணம் நடக்கப் போகிறது என்று சந்தோசப் படுவதா இல்லை காணாமல் போனவர்கள் கிடைக்கப் போகிறார்கள் அதனால் கவலைப்படுவதா என்று புரியாமல் சந்திரனும் தீனாவும் நின்றார்கள்.
பரந்தாமனுக்கு அவன் கை எரிச்சலை விட அவன் அப்பா சொன்ன வார்த்தை அவனின் மன எரிச்சல் அதிகமானது அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை தம்பியின் திருமணத்தை நிறுத்துவதற்கு எத்தனையோ திட்டத்தைப் போட்டு ஜெயித்தோம் அதுக்கு பதிலக இந்தக் கிழவனை ஏதாவது ஒரு திட்டம் போட்டு கழுத்தை நெரித்து கொள்ளாமல் விட்டுட்டோமே இப்படி வயசான காலத்துல நமக்கு எதிரியா இருக்கானே இந்தாளு என்று நினைத்து கவலைப்பட்டான் நமக்கு நேரம் சரியில்லை நான் எது பேசினாலும் அது நமக்கு விரோதமாகவே முடிகிறதே என்று நினைத்து கோபப்பட்டான் கோபத்தில் அவன் பற்களை கடித்தான் நறநற வென.
என்னங்க.... வலி தாங்க முடியலையா பல்லை கடிக்கிறீங்க என்றாள் சாந்தி.
பரந்தாமனுக்கு மேலும் கோபம் ஏறியது. ஐயோ கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க என்று ஆவேசமாக சொன்னான் பரந்தாமன்.
உடனே பண்ணையாரும் சாந்தியும் வெளியே வந்துவிட்டார்கள் ஓய்வெடுக்கட்டும் என்று.
பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மேலும் அவன் மனம் நொந்து போனது. சங்கர் நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றி விட்டான் என்று நினைத்து பெருமைப்பட்டோம். ஆனால் அவனே நம் வாழ்க்கையை கெடுக்க போகிறான் என்று இப்போதுதான் தெரிகிறது. இனி தம்பியின் திருமணத்தையும் நிறுத்த முடியாது காணாமல் போனவர்களையும் அப்பா கண்டுபிடித்து விடுவார் இனிமேல் அம்மா நம்மை காப்பாத்துவாங்கள என்ற நம்பிக்கை அவனுக்கு குறையத் தொடங்கியது இருப்பினும் அவன் மனம் அம்மா அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டிருந்தது பிறகு அவன் உதடுகளும் அம்மா அம்மா என்று முனங்கிக் கொண்டு தூங்கினான் பரந்தாமன்.
சங்கருக்கும் ரேகாவுக்கும் ஒரே புதிராக இருந்தது ஆரம்பத்தில் சந்தோஷமாக பம்புசெட்டில் இருந்தார்கள் இப்போது ஒரே மர்மமாக இருக்கிறது என்று குழம்பினார்கள்.
அழுகிற சத்தம் எனக்கு நல்லா கேட்டது உனக்கும் கேட்டு தா புள்ள என்று சங்கர் ரேகாவிடம் கேட்டான்.
நல்லாவே கேட்டுது மாமா ....மூன்று பேருமே அழுதார்கள் மூன்று பேரின் முகமும் அழுதது போலதான் இருந்தது நான் கவனித்தேன் ஆனால் அவர்கள் நம்மிடம் மறைக்கிறார்கள் என்னதான் நடக்குது என்று தெரியல மாமா என்றாள் ரேகா.
பண்ணையாரின் மனைவி படத்தின் பின்னாடி என்னதான் மறைச்சு வச்சு இருக்காரு இந்த பரந்தாமன் ஒன்னுமே புரியல. பண்ணையாரின் இரண்டாவது மகன் சந்திரனுக்கும் இப்போது திருமணம் செய்யப் போறாங்க குடும்பமே சந்தோசமா இருக்கிறாங்க ஆனா இவங்க மூணு பேரும் மட்டும் தனியா இங்கே வந்து ஏன் அழுவுறாங்க ஒன்னுமே புரியலையே காணாமல் போனவர்களுக்கு இந்த மர்மத்துக்கும் கண்டிப்பா சம்மந்தம் இருக்கு புள்ள. ஏன்னா காணாமல் போன வாங்க இங்க சந்தோசமாத்தான் இருந்தாங்க திடீர்னு காணாம போயிட்டாங்க அதே போல தான் இந்த பம்புசெட்டில் தேவையில்லாத வேலைகளை பண்ணையார் பாசங்கதான் ஏதோ செய்றாங்கன்னு எனக்கு தோணுது அதனால நான் நாளையிலிருந்து காணாமல் போனவர்களை தேடுவதற்கு போனதும் நீ இங்க தனியா இருக்காதே ஊருக்குள்ள போயிட்டு அம்மாவையும் தாத்தாவையும் பாத்துக்க சாயங்காலமா வந்துடு நானும் சாயங்காலமா வந்துடுறேன் என்றான் சங்கர்.
சரி மாமா.. எனக்கும் பண்ணையார் பசங்கள பார்த்தா பயமா இருக்கு நீங்க தேட போனதும் நான் கொஞ்சம் வேலையை பார்த்துட்டு அப்புறமா ஊருக்குள்ள போகிறேன் என்றாள் ரேகா.
பிறகு ஊருக்குள்ளே ...சந்தோசம் களைகட்டியது காரணம் பண்ணையாரின் இரண்டாவது மகன் சந்திரன் திருமணம் நடக்கப்போகிறது கோலாகலமாக காணாமல் போனவர்களையும் சங்கர் விரைவில் கண்டு பிடித்து விடுவான் பிறகு எல்லோருக்குமே நிம்மதிதான் என்று ஊர் மக்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டு சந்தோசமாக இருந்தார்கள்
முத்தையாவுக்கு சந்தோஷம். நம் மகனால் பண்ணையார் குடும்பத்திலும். இந்த ஊருக்கும் ஒரு திருப்பம் ஏற்பட்டுவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டார்.
இப்படி ஊரே சந்தோஷமாக இருக்கும் வேளையில் சாட்டையடி சாமியார் மட்டும் வருத்தமாக இருந்தார்.
என்ன குருவே இப்படியே மௌனமாக இருந்தாள் இந்த ஊர்ல நம்ம இருக்கிறதே மறந்துடுவாங்க ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருந்தா தான் நம்மள பத்தி பேசுவாங்க குருவே என்றான் ஒரு சிஷ்யன்.
எனக்கு மட்டும் ஏதாச்சும் சொல்லனும் போல தான் தோணுது ஆனால் நான் எதையாச்சும் சொல்லி பண்ணையார் பசங்களும் இந்த சங்கரம் வந்து நம்மள அடிப்பார்களோ என்ற பயம் தான் டா என்றார் சாட்டையடி சாமியா.
சரிசரி கூறவே ...ரொம்ப பயப்படாதீங்க ஏதாச்சும் ஐடியா பண்ணுங்க நாங்க ரெண்டு பேரும் போயிட்டு உங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வரோம் என்று சொல்லிவிட்டு இரண்டு சிஷ்யர்களும் கிளம்பினார்கள்.
என்ன நண்பா எப்பவுமே நீ மட்டும்தான் கடைக்கு போவ இன்னைக்கு என்னையும் கூட்டிகிட்டு வர என்றான் ஒரு சிஷ்யன்.
ஆமாண்டா இனியும் நம்ம அந்த ஆளு கிட்ட சும்மா இருக்க கூடாது நாமளும் பொழைக்கிறதுக்கு ஏதாச்சும் தனியா செய்ய வேண்டும் ஏன்றான் மற்றொரு சிஷ்யன்
தனியாவ... அது எப்படிடா.
அந்தாளு நம்மள வச்சிதான் ஒரு பூஜைக்கு 2000 ரூபா வாங்குறான் பேய் ஓட்டுகிறேன் என்று அதில் நமக்கு 300 ரூபா 300 ரூபாய் இரண்டு பேருக்கும் கொடுக்கிறான் மீதி மொத்த பணத்தை அந்தாளு எடுக்கிறான் கஷ்டப்பட்டு நான் மரத்து மேல். அப்படி இல்லேன்னா புதரில் செல்போனை மறைத்து வைத்துவிட்டு வரேன் நீயும் நம்ம பூஜையறையில் இருந்துகிட்டு மூணு மணி வரை நான்கு மணி வரை போன் செய்து கொண்டு இருக்க அந்த ஆளு என்ன கூட்டிகிட்டு பேய் ஓட்டுவது போல அங்கு நடிச்சுட்டு பணத்தை ஊர் மக்களிடம் புடுங்குற ஏன் இந்த வேலைய நம்ம ரெண்டு பேரு செய்யக்கூடாது அந்த ஆளுக்கு தெரியாம என்றான் சிஷ்யன்.
நீ சொல்றத பார்த்தா நமக்கும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் ஆனா சரியா வருமா இந்த விஷயம் அந்த ஆளுக்கு தெரிஞ்சுதான நம்மள அத்தோட காலி பண்ணிடுவான் என்றார் மற்றொரு சிஷ்யன்.
நீ ஒன்னும் கவலைப்படாதே நான் பாத்துக்குறேன் செல்போனை இன்னைக்கு நான் ஒரு குடிகாரன் வீட்டின் அருகில் ஒரு புதரில் மறைச்சு வச்சுட்டு வந்துடுறேன் நைட்டுக்கு நீ போன் பண்ணு அந்தக் குடிகாரன் வீட்டில் நம்ம செல் போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அந்த குடிகாரனும் அவனோட மனைவியும் ராத்திரி முழுக்க தூங்க மாட்டார்கள் பயத்தில் பொழுது விடிஞ்சதும் இரண்டு பேரும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போவாங்க அவங்க தனியா போரப்பா. நம்ம ரெண்டு பேருமே அவங்க கிட்ட நம்ம குரு கேக்குற மாதிரி என்னப்பா ராத்திரி எல்லாம் தூங்கி இருக்க மாட்டீங்க என்று கேட்கலாம் பதிலுக்கு அவங்களும் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேப்பாங்க அப்படி இல்லன்னா ஆமானு சொல்லுவாங்க அதுக்கு அப்புறம் நம்ம இன்னைக்கு ராத்திரிக்கு நான் வருகிறேன் அதுக்கப்புறம் நீங்க நிம்மதியா தூங்கலாம் என்று சொல்கிறேன் அதுக்கு எங்களுக்கு 2000 கொடுக்கணும்னு என்று சொல்லிடலாம் என்று அந்த சிஷ்யன் சொன்னான்.
ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு நீயும் திட்டம் எல்லாம் போட்டு வச்சு இருக்க இது நல்லபடியா செஞ்சுட்டுமனா அதுக்கப்புறம் நம்ம குருவுக்கு தெரியாமலே நம்மா சம்பாதிக்கலாம் எத்தனை நாளைக்குத்தான் 300 ரூபாயை வாங்கிட்டு இருக்க முடியும் இப்படி ஏதாவது செஞ்சாதான் நம்மளும் முன்னேற முடியும் இல்லைன்னா நம்ம குரு மட்டும்தான் முன்னேறுவார் என்று பேசிக்கொண்டு இரண்டு சிஷ்யர்களும் திட்டத்திற்கு தயாரானார்கள்.

குருவை மிஞ்சின சிஷ்யர்கள என்று பொறுத்திருந்து பார்க்கலாம்...


தொடரும்.....​
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
அந்த ஊர் மக்களுக்கு தொழில் என்று எடுத்துக் கொண்டால் பண்ணையார் தோட்டத்தில் வேலை செய்வதுதான் தொழில் வேறு எந்தத் தொழிலும் கிடையாது. அழகு நிறைந்த அந்த சிறிய கிராமம் பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசுமையாக காணப்படும். அந்த ஊர் மக்கள் பறவைக் கூட்டம் போல ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் . யாருக்கும் போட்டி பொறாமை கிடையாது எல்லோருமே பண்ணையார் தோட்டத்தில் ஒற்றுமையாக வேலை செய்து பசி இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள் ... அந்த ஊரில் இருக்கும் எல்லா நிலங்களுக்கும் சொந்தக்காரர் பண்ணையார் மட்டுமே பண்ணையாருக்கு இந்த நிலம் எல்லாம் பூர்வீக சொத்தாகும் பண்ணையார் நிலம் பச்சை பசுமையாக காணப்படுவது போல பண்ணையாரின் மனசும் அப்படிதான் . ஊர் மக்கள் மீது பண்ணையாருக்கு மிகுந்த அக்கறை கொண்டவர் . தன்னுடைய நிலத்தில் வேலை செய்பவர்களுக்கு வஞ்சனை இல்லாமல் வாரி கொடுப்பார் ... யாரும் பசியோடு இருக்கக்கூடாது அவருக்கு விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தை விட . ஊர்மக்கள் சந்தோசம் தான் முக்கியமாக நினைப்பார் . இப்படி பண்ணையாரும் ஊர் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் பண்ணையாருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் . முத்தையா ஆரம்ப காலத்தில் பண்ணையாரின் அப்பா அம்மா இறந்து விட்டதும் பண்ணையார் இந்த நிலங்களை எல்லாம் எப்படி பராமரிப்பது என்று குழப்பத்தோடு இருந்த நிலை ..... ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த முத்தையா .. பண்ணையாருக்கு யோசனைகளை சொல்லி இவ்வளவு நிலத்தையும் பச்சை பசுமையாக்கிய பெருமை முத்தையாவுக்கு சேரும் அதிலிருந்து பண்ணையாருக்கு முத்தையா என்றால் உயிர்... பண்ணையார் முத்தையாவுக்கு நிறைய உதவிகள் செய்வதற்கு ஆசைப்படுவார் ஆனால் முத்தையா அதனை மறுத்து விடுவார் ... ஏனென்றால் ஊர் மக்களோடு மக்களாக இருப்பதைத்தான் விரும்பினார் முத்தையா பண்ணையாரிடம் அன்பை மட்டுமே எதிர்பார்ப்பார் முத்தையா மற்றபடி எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார் முத்தையா ... இப்படி பண்ணையார் முத்தையாவும் நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள் .. காலம் கடந்தது பண்ணையாருக்கும் வயதாகிவிட்டது முத்தையாவுக்கும் வயதாகிவிட்டது இருவரும் வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துவிட்டார்கள் ... பண்ணையாருக்கு மூன்று மகன்கள் முதல் மகன் பெயர் .. பரந்தாமன் இரண்டாவது மகன் பெயர் .... சந்திரன் மூன்றாவது மகன் பெயர் ... தீனா இப்படி பண்ணையாருக்கு மூன்று மகன்கள் . இதில் மூத்த மகன் பரந்தாமனுக்கு மட்டும் திருமணம் நடந்து பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான் அதேபோல முத்தையாவுக்கு ஒரே மகன் அவன் பெயர் . சங்கர் ... சங்கர்பிறந்து சில தினங்களில் முத்தையாவின் மனைவி இறந்துவிட்டார் .. முத்தையா சங்கரை சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு காப்பாத்தி அலகிவிட்டார் இப்போது பண்ணையார் வீட்டில் ஓய்வு எடுக்கிறார் ... முத்தையாவும் வீட்டில் ஓய்வு எடுகிறார்கள் .... விவசாய நிலங்களை எல்லாம் பண்ணையாரின் மூன்று மகன்களும் கவனித்து வருகிறார்கள் இப்போது அதேபோல முத்தையாவின் மகன் சங்கர் பண்ணையார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார் பண்ணையாரும் முத்தையாவும் நண்பர்களாக இருப்பதை போல பண்ணையார் மகன்களும் முத்தையாவின் மகனும் நண்பர்களாக இல்லை ..... அவரவர் வேலைகளை மட்டுமே பார்ப்பார்கள் இப்படி பண்ணையார் முத்தையா தலைமுறை முடிந்து அவர்கள் மகன்கள் பண்ணையார் தோட்டத்தை எந்த ஒரு குறையில்லாமல் பச்சை பசுமையாக விவசாயம் செய்து வருகிறார்கள் ஒற்றுமையாக. பண்ணையாரின்் கடைசிமகன் தீனாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் ... ஏனென்றால் தீனா பிறந்தவுடன் பண்ணையாரின்் மனைவி இறந்துுுுு விட்டார் .. அதனால் ஊரில் அனைவரும் தீனா பிறந்தநாள் அன்று யாரும்் கவலையோடு இருக்கக்் கூடாது என்பதற்காக பண்ணையார் தீனாவில் பிறந்த நாளன்று ஊரில் உள்ளவர்களை அனைவரையும் ஒன்றாக அழைத்து புதுத் துணி மணிகளைை கொடுத்து இனிப்பும்்்்்்்்் கொடுப்பார் இது வழக்கமாக நடந்து வந்தது ..... இப்படி அன்று தீனாவின் பிறந்தநாள்் பண்ணையாரின் மனைவி நினைவுு நாள் அதனால். ஊர் மக்கள்்்்் அனைவரும் பண்ணையார் தோட்டத்தில் ஒன்றுகூடிிி காத்திருந்தார்கள் பண்ணையார் குடும்பத்தோடு தோட்டத்திற்கு வந்தார். பம்புசெட்டு இரண்டு களாக இருக்கும் முதல் அறையில் பண்ணையார் தோட்டத்தில் தங்கிிி வேலை செய்யும் குடும்பம் இருக்கும் இரண்டாவதுுு அறையி பண்ணையாரின்்் மனைவிபடம். வைத்து பூஜை அறைபோல் காணப்படுு.. 2 அறைகளுக்கும் தனி தனி வழி இருக்கும்து. பண்ணையார் தனது குடும்பத்தோடு தோட்டத்திற்கு வந்தார். .. வழக்கம்போல பம்புசெட்டில் தங்கி வேலை செய்யும் . கனகா அவளது கணவன் ஊமையன் இருவரும் பண்ணையாரின்் மனைவி படத்திற்கு பூஜை செய்தார்கள் .. அனைவரும் கையெடுத்துக் கும்பிட்டார்கள் பண்ணையாரின்் மனைவி படத்தை பார்த்து ... நல்லபடியாக பூஜை முடிந்தது ... பண்ணையார் இரு கைகளால் ஊர் மக்களை கும்பிட்டு விட்டு இதேபோல எல்லா வருடமும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு .. பிறகு தனது மருமகளைை அழைத்தார்.. அம்மாா சாந்தி வந்து உன் கையால இந்த ஊர் மக்களுக்கு புதுத் துணியை கூடுமா என்றார் பண்ணையார் சாந்தியும்்் புன்னகையோ சிரித்த முகத்துடன் ஊர் மக்களுக்கு புதுத் துணியை கொடுத்து ..இனிப்பும் கொடுத்தாள் .. இப்படி பண்ணையார் தோட்டம் சந்தோசமாக கூட்டுக் குடும்பம் போல ஊர் மக்கள் சந்தோசமாக புது துணியை வாங்கிச் சென்றார்கள். தொடரும்........
 
Top Bottom