Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மார்கழித் திங்கள்..!
அத்யாயம் - 15
பூத்துக் குலுங்கும் பூங்கொத்தாய் பூரிப்புடன் வீட்டிற்கு வந்த பவித்ரா நேராக பாட்டியின் அறைக்குள் நுழைந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள்..!
" என்ன கண்ணு போய்ட்டு வந்துட்டியா..."
" ஆமா பாட்டி... ப்ரோக்ராம் ரொம்ப நல்லாருந்தது.. எனக்கு... ரொம்ப பிடிச்சுருக்கு... " கண்களில் அவன்..!
" அப்படியா.. ஹ்ம்ம்.. அந்த காலத்லலாம் இப்டி வெளிவாசல்லாம் போய் பாட்டு டான்ஸெல்லாம் பாத்ததில்லே.. ஆமும் அடிப்படியும் தான் கதி.. அப்படியே எப்டி எப்டியோ மாறி காலம் போயிடுத்து.. ஹ்ம்ம்.. நானும் நன்னா பாடுவேன்.. ம்ம்ம்.." கண்கள் மின்ன தேய்ந்து போன மெல்லிய குரலில் பக்தி பாடல் ஒன்றை பாடியபடி சிரித்தாள் பாட்டி.. முகத்தில் சங்கோஜம் வெட்கமும் பூத்தது.. பவித்ராவும் சிரித்தாள்.. ஏனோ சந்தோஷம் முழுமையாகப் பரவி இருந்தது அவளுள்.. பவித்ராவின் சந்தோஷம் பாட்டியின் சந்தோஷமாகியது..!
" சரியா வரலை.. குரல் போயுடுத்து.. ஹாஹா.. "
" ரொம்ப நன்னா பாடறே பாட்டி... அழகாத்தான் இருக்கு உன் குரல்.."
பாட்டியின் முகத்தில் பெருமிதம் தவழ்ந்தது.. " சரி கண்ணு.. நாழி ஆயுடுத்து.. பேச ஆரம்பிச்சா நான் பாட்டுக்கு பழங்கதைய பேசின்டு இருப்பேன்.. மனசு பூரா பழைய நெனப்பு தான் இருக்கு.. ம்ஹ்ம்.. போய் சாப்ட்டு தூங்கு பவி.. போ.." கூறிக்கொண்டே தனக்குள் ஏதோ பேசியபடி படுத்துக் கொண்டாள் சுகுமாரி பாட்டி..
தன் அறைக்குள் வந்து உடைமாற்றி தரையில் படுத்துக் கொண்டாள் பவி.. சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. பசி இல்லை.. மனம் நிறைந்து பொங்க வயிறும் நிறைவானது..! இன்று அவனை பார்த்த நொடியில் ஏற்பட்ட மாற்றம் மறுபடியும் மறுபடியும் மனம் அசைபோட்டு அவனை வேறு வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தது.. கண்மூடினாலும் மாலையில் நடந்த நிகழ்வுகள் ஒளிநாடாவைப் போல் உருண்டு ஓடிக் கொண்டே இருந்தது. எப்டி இதை எடுத்துக் கொள்வதென அவளுக்கு புரியவில்லை.. எதனால் அவனை இத்தனை பிடித்துப் போனது.. தெரியவில்லை.. அவனது பார்வை இன்று புதிதாய் இருந்தது.. அதில் ஏதோதோ அர்த்தங்கள் பொதிந்தது போல்.. பருவம் திடீரென விழித்தெழுந்தது போல் ஓர் உணர்ச்சி பீரிடல்..! ஏனோ ஏகாந்த தவிப்பாய் இருந்தது அவளுக்கு.. எதனால் இத்தனையும் என அவளால் அனுமானிக்க இயவில்லை.. ஆனால் ஏதோ ஒன்றை மனம் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வித்தை விதைத்த வண்ணம் இருந்தது.. அது சரியா தவறா என முறையிட புத்தி குறுக்காக வரவில்லை.. ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை.. அந்த நினைவுகள் மட்டுமே சுவையாக சுவைத்து சுவைத்து பார்த்தது.. புதிய ருசி... அறியாத ருசி.. உண்மையா பொய்யா,சாதகமா பாதகமா.. எதையும் ஆராயவில்லை.. எண்ணக் கோர்வைகள் அவனை அழாக காட்சிப் படுத்தியபடி..! அந்த சிந்தனையில் மூழ்கியவாறே உறங்கிப் போனாள் பவித்ரா..
மறுநாள் காலை..
உள்ளங்கைகளில் கண்விழிப்பவள் அன்று விட்டுப் போன நினைவுகளுடன் விழித்துக் கொண்டாள்.. ஆழ்நிலை உறக்கத்தில் மேலோடிய நினைவுகள் விழிப்புடன் அவளை பற்றிக் கொண்டன. புது உற்சாகம் பிறக்க காலை பணிகளை துள்ளலுடன் ஆரம்பித்தாள்..
நமக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகம் தொற்றுநோயாய் சுற்றி உள்ளவர்களையும் பற்றிக் கொள்ளும் என்பது போல பவியின் புத்துணர்ச்சி அனைவரது முகத்திலும் காரணமறியா சந்தோஷத்தை பரவச் செய்திருந்தது..!
கல்லூரியிலும் எந்தவித சங்கடமோ ஊடலோ இன்றி இலகுவாக நகர்ந்தது போன்ற உணர்வு..! கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.. கையிலிருந்த அலைபேசி அழைத்தது..!!
எடுத்துப் பார்த்தவள் கண்கள் ஒரு கணம் விரிந்து நிலைத்தது.. !
அலைபேசியில் ரிஷி காத்துக் கொண்டிருந்தான்.. மூளைக்குள் ஏதோ மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது.. சுற்றுமுற்றும் பார்வையை ஓட விட்டாள்.. போனை எடுப்பதா வேண்டாமா என.. சுதாரித்து வாயிலின் அருகில் இருந்த மாடிபடியில் வேகமாக ஏறினாள்.. போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவள் மொட்டை மாடியை சரியாக அடைய கட் ஆனது போன்.. சோர்ந்து போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. திரும்ப அவனை அழைக்க ஒருவித தயக்கம் வந்தது.. " போன் பண்ணலாமா.. வேண்டாமா.." யோசித்தபடி இருக்க திரும்பவும் அழைத்தான்..
கண்கள் மின்ன போனை எடுத்தாள். " ஹ.. ஹலோ... "
" ஹாய் பவித்ரா.. ரிஷி பேசறேன்.."
" ம்ம்ம்.... சொல்லுங்க... "
" எ.. எப்டி இருக்கீங்க... "
" ம்ம்ம்..... "
..............
சில நிமிடங்கள் மெளன பரிபாஷை நடந்தது.
" அப்பறம்..... " இவளே கேட்டாள்.
" நேத்து ப்ரோக்ராம் நல்லா இருந்ததா.."
" ஹாஹா.. நல்லாருந்தது.. "
" புடுச்சுருக்கா.."
" ஆ.... என்னது.... " திடுமென மின்னல் வெட்டியது அவளுக்குள்.
" இ.. இல்ல.. ப்ரோக்ராம் புடுச்சுருக்கான்னு கேட்டேன்.. " சிரித்தான்.
" ஹாஹா.. ம்ம்ம்... "
" அ.. அப்பறம்.. உ.. உங்க... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. "
" ம்ம்.. சொல்லுங்க.."
" அது... போன்ல பேச முடியாது.. அது... கொஞ்சம் காபி ஷாப் வரீங்களா.."
" கா... காபி ஷாப்பா.... எ.. என்ன விஷயம்..."
" ............."
கொஞ்சம் படபடவென இருந்தது அவளுக்கு..
" கொஞ்சம் உன்கிட்ட பேசனும்.. அதான்... நேத்திலேந்து மைன்ட் டிஸ்டர்ப்டா இருக்கு... அதான்... உன்னோட பேசி...."
" என்கிட்ட பேசி.... ம்ம்ம்..."
" கொஞ்சம் வரியா.. ப்ளீஸ்... "
தன்னைப் போல் அவனது தவிப்பும் வார்த்தைகளில் தெரிவதை உணர்ந்தாள்..
" ம்ம் சரி.. எப்போ வரனும்.. "
" ஆறரை மணிக்கு வர முடியுமா.."
" ஹ்ம்.... சரி.... "
மெல்லிய சிரிப்புடன் போனை அணைத்தான்.
அவனை திரும்ப பார்க்க செல்வது பவிக்கு உள்ளுக்குள் சந்தோஷத்தை அளித்தது.. அவன் அழைத்த காரணம் என்னவென்று அறிந்தும் அறியாமல் இருந்தது அவளுக்கு..
வேகமாக கீழே இறங்கி வந்தவள் யாரிடமும் பேசாமல் அறைக்குள் தயாராக ஆயத்தமானாள்..
" பவி... வந்துட்டியா.. ஏன் இவ்ளோ நேரமாச்சு.. க்ளாஸ் லேட் ஆயுடுத்தா.." பங்கஜம் கேட்டுக் கொண்டே உள்ளறைக்குள் வந்தாள்..
பவி பரபரப்புடன் இருக்க.. " என்னடி இத்தன பரபரப்பு.. எந்த ட்ரெயின பிடிக்க போறே.. எங்க கிளம்பறே.."
பவிக்கு பக்கென்று இருந்தது.. அவனை பார்க்க போகிறேன் என சொல்ல முடியுமா... " இ... இல்லமா.. இங்க.. கோயிலுக்கு தான்.. ப்ரெண்ட்.... வரேன்னு சொல்லிருக்கா.. அ.. அதான்.."
" அதுக்கெதுக்குடி இவ்ளோ டென்ஷனா இருக்கே... காபி கலந்துண்டு வரேன்.. சாப்டு மெதுவாப் போ... கால்ல வெந்நீர ஊத்திண்டாப்ல பறக்கறியே.."
பவிக்கு தன்னை நினைத்து கோபம் வந்தது... " சே... எதுக்கு இத்தன பரபரப்பு.. சந்தேகப்பட மாட்டாளா.. நானே காட்டிக்குடுத்திடுவேன் போலவே.." கொஞ்சம் அமைதியாகி சிரித்தாள்..
" அதெல்லாம் ஒன்னுமில்லமா.. அவ ஆறரைக்கு வந்துடறேன்னா.. அதான்.. நீ காபி கொண்டு வா.."
" ஹ்ம்.. இங்க இருக்கற கோயிலுக்கு போக எவ்ளோ நாழி ஆயிடப் போறது.. மணி ஆறுதானே ஆறது.. "
" ஆ... ஆமால்ல.. சரி.. நான் மொகத்த அலம்பிண்டு வரேன்.. காபி கொண்டுவா.." கூறுவிட்டு கொள்ளை பக்கம் சென்றாள்.. என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் ஒருவித படபடப்பு தெரிந்தது..
அம்மா கொடுத்த காபியை மண்டிக் கொண்டு வேகமாக தயாரானாள்.. பசும் மஞ்சள் நிறப் புடவையில் தேவதை போல நின்றாள்.. தலையில் அம்மா மல்லிகை பூ வைத்துவிட இன்னும் அழகு கூடியது..
" என் கண்ணே பட்டும்.. இந்த புடவையில அழகா இருக்கே பவி.." நெட்டி முறித்தாள் பங்கஜம்.
மொபைலை பர்சுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஹாலில் ரெடியாக ஸ்ரீதர் நின்று கொண்டிருந்தான்.. " பவி.. நானும் வரேன் கோயிலுக்கு.. எனக்கு போர் அடிக்குது.."
பக்கென்று இருந்தது.." ஏய்.. நீ ல்லாம் வரப்டாது.. போய் படிடா.. உயிரெடுத்துண்டு.."
சங்கூத ஆரம்பித்தான்..
" சே... அம்மா.... இங்க பாரு இவன.."
" அவனையும் கூட்டிண்டு போயேன்டி... கோயிலுக்கு தானே.. குழந்தை அவனே வரேங்கறான்.. ஒரு எட்டு கூண்டின்டு போய்ட்டு வா பவி.." பங்கஜமும் சேர்ந்து கொள்ள குலைநடுங்கியது பவித்ராவிற்கு..
" ஐயோ.... அ... அம்மா.. வெளையாடறியா.. அங்க என் ப்ரென்ட்ஸெல்லாம் வர்ரா... கோயிலுக்கு போயிட்டு அப்டியே கடைக்கு போறோம்.. வர நாழி ஆயிடும்.. இந்த கோட்டான கூட்டிண்டு போனா அத வாங்கு இத வாங்குன்னு உயிர எடுப்பான்.. என் ப்ரென்ட்ஸ் முன்னாடி என்ன அவமான படச் சொல்றியா... டேய்.. ஒழுங்க இங்கயே இருந்தா பைவ் ஸ்டார் பெரிய சாக்லேட் வாங்கிண்டு வருவேன்.. இல்லைனா ஒன்னும் கெடையாது.. சும்மாதான் வரனும்.. என்ன.." டீல் செய்ய ஆரம்பித்தாள் பவி..
அழுது புரண்டவன் படக்கென எழுந்து அமர்ந்தான்.. காதுவரை வாய் பிளந்து பற்களை காட்டியது.. " சாக்லேட்டா... அப்டினா ரெண்டு வேனும்.. அப்பதான் இருப்பேன்.. இல்லைனா வருவேன்.." அவன் டீமான்டை ஆரம்பித்தான்..
" சே... சனி... வாங்கித் தரேன்.. வாய மூடின்டு போய் பாடத்தபடி.. இன்னிக்கு ஹோம் ஒர்க் முடுச்சாத்தான் ரெண்டு தருவேன்... புருஞ்சதா.. "
கண் கண்ணாடி கீழே விழும் அளவிற்கு தலையை வேகமாக ஆட்டி இளித்தான்..
நிம்மதி பெருமூச்சு வந்தது பவிக்கு.. கைக்கடிகாரத்தை பார்த்துகொண்டே கிளம்பினாள்.. மணி ஆறேகால் எனக் காட்டியது..
வேக நடையுடன் புறப்பட்டாள்..
மணி ஆறு நாற்பத்தைந்து..
உள்ளுக்குள் ஒருவித பயம் பரவி இருந்தது.. அம்மாவிடம் பொய் சொன்னது மனதை என்னவோ செய்தது.. தான் ஏதோ தவறு செய்வதாக உள்ளுக்குள் ஓர் போராட்டமாக இருந்தது.. அதையும் மீறி அவனை காணவேண்டும் என்ற ஆவல் அவளை தூண்டி நடையை துரிதப்படுத்தியது..
ஒரு வித தயக்கமும் அச்சமும் சேர அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.. குப்பென வியர்த்தது.. கால் நடக்க இயலாமல் தடுமாறியது.. கண்கள் நாலாபுறமும் சுழல தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்களா என்ற எச்சரிக்கை உணர்வு மூச்சடைக்க செய்தது.. வேறொரு ஆடவனை காண இது வரை தனியாக சென்றது இல்லை.. கல்லூரி நண்பர்களுடன் கூட இப்படி எங்கும் சென்றதில்லை..
கையிலிருந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி உள்ளே
நகர்ந்து சென்றாள்.
அவன் இருக்கிறானா எனக் கண்கள் தேடியது.. கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.. கடைசியாக இருந்த இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.. இவளைப் பார்த்து எழுந்து கை அசைத்தான்..
ஏதோ ஒரு நிம்மதி பரவ புன்னகையுடன் அவனிடம் சென்று நின்றாள்...
" ஹாய்.... உட்காருங்க... லேட் ஆயிருச்சா... நான்.. ஆறுமணிக்கே வந்துட்டேன்.." கண்கள் மின்னியது.. அருகில் இருந்த இருக்கையை காட்டினான்.
அவனுடன் அருகில் அமர தயக்கப்பட்டு எதிர் இருக்கையில் தயங்கி தயங்கி நுனியில் அமர்ந்து கொண்டாள். அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் முகத்தில் வியர்வை முத்துக்கள் உருண்டோடியது..
அவன் முகத்திலும் ஒரு படபடப்பு இழையோடியது..
இருவரும் பேசாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்..
" என்ன சாப்படறீங்க... " அவன் ஆரம்பித்தான்.
" எ..எதுவேனா ஓகே.... "
அவன் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்.. இருவரது பார்வையும் அவ்வப் பொழுது உரசி ஆராய்ந்து கொண்டிருந்தது..
" அப்பறம்... அ... வீட்ல கூட சொல்லல.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.. அதான்.. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா..."
" ஓ... நானும்.. வெளில போறேன்னு சொல்லிட்டு.. " சிரித்தான்.. அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்ல துடித்தது..
" எனக்கு... என்ன... யாரும் இவ்ளோ டிஸ்டர்ப் பண்ணதில்ல.. ரெண்டு நாளா மனசுல ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு.. "
" யாரு... " அவள் சட்டென கேட்க அவன் தடுமாறிப் போனான்..
" அ.. அது... உன்ன பாத்தா மனசுல ஒரு நிம்மதி.... சந்தோஷம்.. ஏன்னு தெரியல.. "
மெள்ள தலைசாய்ந்து சிரித்தாள்..
" ஓ..... ம்ம்ம்..... அப்பறம்.."
" விளையாட்டுக்கு சொல்லல.. கொஞ்ச நாளா உன்கிட்ட பேசனும் பார்க்கனும்னு தோனுது.. "
பவிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.. அவனும் தன்னைப் போல உணர்வது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது..
" எ.. என்ன பேசனும்னு... "
" தெரியல......" கடகடவென சிரித்தான்.. அவன் பற்கள் தெரிய சிரித்தது அவளுக்கு பிடித்திருந்தது.. அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.. தனக்குள்ளும் அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை சொல்ல தயக்கமாக இருந்தது..
" எ.... எப்டி.. சொல்றதுன்னு தெரியல.. எ.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.... ஐ திங்க்....."
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தடதடக்கும் இதயத்தோடு நெஞ்சம் அவசரமாய் ஏறி இறங்க , கண்கள் விரிய அவன் சொல்லப்போகும் வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தாள் பவி..
ஐ திங்க்... ஐ 'ம் இன் ல......" வார்த்தையை முடிக்கும் முன்னே பின்னாலிருந்து ஒரு குரல் அவன் கவனத்தை கலைத்தது..
திடுக்கிட்டு இருவரும் திரும்பினர்..
" ஹாய்.. ரிஷி.... " அதிசய பார்வையுடன் அங்கு வந்து கொண்டிருந்தாள் ஜனனி..
அவளைப் பார்த்த கணத்தில் இருவருக்கும் கோபமும் வெறுப்பும் பொங்கி சட்டென மனநிலையை மாற்றியது..
" ஹே..... ரிஷி.. சர்ப்ரைசிங்... நீங்க இங்க இருப்பேள்னு எதிர்பார்க்கலே.." வேகமாக வந்தவள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..
" ஹாய்...." மரியாதை புன்னகையை உதிர்த்தான் ரிஷி.. இதயம் தவித்தது..
பவித்ராவின் முகம் கோபத்தில் இறுகியது.. இருவரையும் மாறி மாறி பார்த்தவன் சங்கடத்தில் நெளிந்தான்..
" என்னோட ஃப்ரெண்ட ட்ராப் பண்ணிட்டு அப்டியே ஷாப்பிங் போலாம்னு வந்தேன் கார்ல.. ஹாஹா.. காட் சேக்.. உங்கள பாப்பேன்னு எதிர்பாக்கவே இல்லை.. " பவியை சட்டை செய்யாது அவனது கைகளை கோர்த்துக் கொண்டாள்..
பவி கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
நாசூக்காக அவளது பிடியிலிருந்து விலகியவன்.. " ஓ... க்ரேட்... "
" கூட யாருமே இல்லை போர் அடிக்குமேன்னு நெனச்சேன்.. அம்மா கூட க்ளப் மீட்டிங்க்கு போய்ட்டா.. லக்கீலி நீங்க இங்க இருக்கேள்.. கம் வித் மீ ரிஷி.. ஜாலியா ஷாப்பிங் பண்ணின்டு வரலாம்.. உங்களோட தனியா பேச டைம் கெடச்சது.. ஹாஹா.."
" இ... இல்ல... ஒரு முக்கியமான விஷயமா... இவங்களோட.. "
" ஹே ரிஷி... கமான்.. லெட்ஸ் கோ..."
அவள் இங்கிதமே இன்றி தன்னை இழுத்துச் செல்வது ரிஷிக்கு கோபத்தை மூட்டியது.. அதுவுமின்றி இந்த சமயத்தில் பவிக்கு எதிரே... நினைக்க நினைக்க முகம் சிவந்தது..
" இல்ல ஜனனி.. இவங்க எனக்காக வந்திருக்காங்க.. வி ஆர் இன் இம்பார்ட்டன்ட் கான்வர்சேஷன்... சோ..."
" ஹே.... ப்ளீஸ் டா... கம்... இவங்க கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணட்டும்.. வெய்ட் பண்ண மாட்டாங்களா..ம்ம்.. கமான்... " பவித்ராவை ஓர் வெறுப்புடன் பார்த்தபடி அவன் கைகளை பிடித்து எழுந்து நிப்பாட்டினாள்.
அதற்கு மேல் பொறுக்காமல்.. " பவி... ப்ளீஸ்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்... வந்தர்ரேன்... சாரி.. ப்ளீஸ் வெயிட் பண்ணு.. " பவியிடம் கூறிவிட்டு ஜனனியுடன் நடந்தான்.
துள்ளியபடி அவன் கைகளை பிடித்துக் கொண்டு வாசலைத் தாண்டி சிறிது தூரம் ஜனனி நடக்க..
" ஜனனி.. நில்லு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.." அவளை நிப்பாட்டினான்.. முகம் கொஞ்சம் இறுகி இருந்தது..
" யா.... டெல் மி ரிஷி...." கண்களை விரித்து கேட்டாள்.
" ஜனனி.. ஐ யம் நாட் இன்ட்ரஸ்ட்டட் வித் யூ.."
" வாட்... " புரியாமல் விழித்தாள்..
" எனக்கு உன்மேல இஷ்டம் இல்ல.. நா.. நான்.. வேறொரு பொண்ண லவ் பண்றேன்.."
" எ... என்ன... என்ன சொல்றீங்க.." அதிர்ச்சியில் முகம் சுறுங்கியது அவளுக்கு.
" சாரி.. இப்போ என்கூட பேசிட்டு இருந்தாளே அவளதான் லவ் பண்றேன்.. மனசார.. என்னோட லவ்வ ப்ரபோஸ் பண்ணதான் அவள இங்க வரச் சொன்னேன்.. "
அவன் கூறக் கூற அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தவள் மெள்ள தலை குனிந்தாள்.. சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது..
மெள்ள தலை நிமிர்த்தியவள்.. " சுந்தரி ஆன்டி உங்களுக்கு சம்மதம் உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே.. அ.. அது.."
அவளை தீர்க்கமாக பார்த்தவன்.. " அம்மாவுக்கு என் காதல் விஷயம் தெரியாது.. அவங்களுக்கு வசதியா இருக்கற நீங்க மருமகளா வரனும்னு ஆசை.. பட்... எனக்கும் பிடிக்கனுமே.. டூ த ஃப்ராங்க்... உங்க திங்கிங் லெவல் வேவ் லெங்க்த் வேற.. என்னோட வேவ் லெங்க்த் வேற.. அது ஃப்யூசர்ல நம்ம ரெண்டுபேரோட வாழ்க்கையுமே பாதிக்கும்.. அதுவுமில்லாம.. எனக்கும் உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்ல.. பவித்ராதான் எல்லா விதத்துலயும் எனக்கு ஏத்தவளா இருப்பா... இருக்கா..."
அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
" எங்க முதல் சந்திப்பே மோதல்ல தான் ஆரம்பிச்சது... ஆனா... போகப் போக...." அவன் சிரித்தபடி கூறிக் கொண்டிருக்க..
" ஸ்டாப்.... ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்பலனேஷன் அன்ட் யுவர் புல்ஷிட் லவ் ஸ்டோரிஸ்.. பிடிக்கலன்னு முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தான.. என்ன ஏன் டிஸ்டர்ப் பண்ணிங்க... " கொஞ்சம் சத்தமாக கேட்டாள்... கைகள் மெள்ள நடுங்கியது..
" ஜ.. ஜனனி.. நீ தான் என்ன சுத்தி சுத்தி வந்த... நா.... "
அவள் முகத்தில் வெறுப்பு புன்னகை விரிந்தது.. " ஹூம்... நான்தான் முட்டாள்... சாரி... இனிமே உங்ககிட்ட வரமாட்டேன்.. பை.." அவனை பார்க்காமல் வேகமாக நடந்து சென்றாள்..
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் கண்களிலிருந்து மறைய பவியின் நினைவு வந்தது... வேகமாக காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தான்..
அங்கே கோபமும் குழப்பமுமாக எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இவன் வந்து எதிரே அமர்ந்ததும் வெடுக்கென எழுந்தாள்.
" நான் கெளம்பரேன்.. நேரம் ஆச்சு.." போகப் போனாள்.
" ஹே... பவி.. வெய்ட் வெய்ட்.. என்ன ஆச்சு.. "
" இல்லைங்க.. உங்களுக்கு நெறைய வேல இருக்கும்.. கேர்ள் ப்ரண்ட்ஸ்ஸ வேற மேனேஜ் பண்ணனும்.. பிசியா இருப்பீங்க.. நான் வேற எதுக்கு.. "
" பவி.. ப்ளீஸ்.... நீ நெனைக்கற மாதிரி எதுவும் இல்ல.. கொஞ்சம் உட்காரு..." அவன் கண்கள் கெஞ்ச மெள்ள அமர்ந்தாள்..
" அவங்க ஜனனி.. வீட்ல அம்மா எனக்கு தெரியாம பாத்த பொண்ணு.. என்னோட விருப்பத்த கேக்காம அவங்கள்ட சம்மதம் சொல்லிட்டாங்க... பட்.. எனக்கு இஷ்டம் இல்ல.. "
நம்பிக்கை இன்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. நேத்து நான் பங்ஷனுக்கு வந்தது கூட உனக்காகத்தான்.. உன்ன பாக்கனும்கறதுக்காக மட்டும் தான்.."
கொஞ்சம் கண்களில் மகிழ்ச்சி பூக்க அவனை பார்த்தாள்..
" எஸ் பவி.. என்னமோ தெரியல.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னோட அமைதியா.. உன்னோட கோபமா.. எது... எதுன்னு சொல்லத் தெரில... நீ என் தப்ப.. அந்த இன்சிடென்ட விளக்கின முறை எல்லாம் என்ன உன்கிட்ட கட்டி போட்டுருச்சு.. உன் கூட பேசினா சந்தோஷமா இருக்கு.. உன் கூட இருக்கனும்னு தோனுது.. உன்கிட்ட சொல்லிடனும்னு நேத்து உன்ன பாத்ததிலேந்து ஒரே தவிப்பு.. அ.. அதான் நானே போன் பண்ணி உன்ன வர சொன்னேன்.."
கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க முகம் மெள்ள மலர்ந்தது அவளுக்கு..
" நீ எனக்கு வேனும் பவி... என்ன புரிஞ்சுக்கற.. என்ன மதிக்கற... என் மனசுக்கு புடுச்ச ஒரு பொண்ணு தான் எனக்கு வாழ்க்கை துணைவியா வரனும்னு எதிர்பார்த்தேன்.. நீ எனக்கு கெடச்ச.. மத்த பசங்க மாதிரி டேட்டிங் சாட்டிங்னு மூனுமாசம் பேசி எல்லாம் முடுச்சுட்டு போற சீப் லவ் இல்ல.. என் மனசுல நீதான் எனக்குன்னு புரிஞ்சப்பறம் தான் உன்கிட்ட சொல்லனும் வந்தேன்.."
மூச்சுவிடாமல் அவன் கூறக் கூற முகத்தில் சந்தோஷ ஒளி பரவ வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் பவித்ரா..
" இதுக்கு மேல என்ன எப்டி வெளிப்படுத்தறதுன்னு தெரியல... ஐ.... ஐ லவ் யூ பவித்ரா.." கையில் இருந்த சின்ன அட்டை பெட்டியில் வைத்திருந்த ஒற்றை ரோஜாவை அவளிடம் நீட்டி சிரித்தான்..
உடலெங்கும் மின்சாரம் பரவி சூடாக, மயிர்கால்கள் சிலிர்க்க தனைமீறி வந்த ஆனந்த சிரிப்பை அடக்க இயலாமல் நடுங்கும் கைகளில் அந்தப் பூவை பற்றினாள்.. சம்மதமாக..!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
அத்யாயம் - 15
பூத்துக் குலுங்கும் பூங்கொத்தாய் பூரிப்புடன் வீட்டிற்கு வந்த பவித்ரா நேராக பாட்டியின் அறைக்குள் நுழைந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள்..!
" என்ன கண்ணு போய்ட்டு வந்துட்டியா..."
" ஆமா பாட்டி... ப்ரோக்ராம் ரொம்ப நல்லாருந்தது.. எனக்கு... ரொம்ப பிடிச்சுருக்கு... " கண்களில் அவன்..!
" அப்படியா.. ஹ்ம்ம்.. அந்த காலத்லலாம் இப்டி வெளிவாசல்லாம் போய் பாட்டு டான்ஸெல்லாம் பாத்ததில்லே.. ஆமும் அடிப்படியும் தான் கதி.. அப்படியே எப்டி எப்டியோ மாறி காலம் போயிடுத்து.. ஹ்ம்ம்.. நானும் நன்னா பாடுவேன்.. ம்ம்ம்.." கண்கள் மின்ன தேய்ந்து போன மெல்லிய குரலில் பக்தி பாடல் ஒன்றை பாடியபடி சிரித்தாள் பாட்டி.. முகத்தில் சங்கோஜம் வெட்கமும் பூத்தது.. பவித்ராவும் சிரித்தாள்.. ஏனோ சந்தோஷம் முழுமையாகப் பரவி இருந்தது அவளுள்.. பவித்ராவின் சந்தோஷம் பாட்டியின் சந்தோஷமாகியது..!
" சரியா வரலை.. குரல் போயுடுத்து.. ஹாஹா.. "
" ரொம்ப நன்னா பாடறே பாட்டி... அழகாத்தான் இருக்கு உன் குரல்.."
பாட்டியின் முகத்தில் பெருமிதம் தவழ்ந்தது.. " சரி கண்ணு.. நாழி ஆயுடுத்து.. பேச ஆரம்பிச்சா நான் பாட்டுக்கு பழங்கதைய பேசின்டு இருப்பேன்.. மனசு பூரா பழைய நெனப்பு தான் இருக்கு.. ம்ஹ்ம்.. போய் சாப்ட்டு தூங்கு பவி.. போ.." கூறிக்கொண்டே தனக்குள் ஏதோ பேசியபடி படுத்துக் கொண்டாள் சுகுமாரி பாட்டி..
தன் அறைக்குள் வந்து உடைமாற்றி தரையில் படுத்துக் கொண்டாள் பவி.. சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. பசி இல்லை.. மனம் நிறைந்து பொங்க வயிறும் நிறைவானது..! இன்று அவனை பார்த்த நொடியில் ஏற்பட்ட மாற்றம் மறுபடியும் மறுபடியும் மனம் அசைபோட்டு அவனை வேறு வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தது.. கண்மூடினாலும் மாலையில் நடந்த நிகழ்வுகள் ஒளிநாடாவைப் போல் உருண்டு ஓடிக் கொண்டே இருந்தது. எப்டி இதை எடுத்துக் கொள்வதென அவளுக்கு புரியவில்லை.. எதனால் அவனை இத்தனை பிடித்துப் போனது.. தெரியவில்லை.. அவனது பார்வை இன்று புதிதாய் இருந்தது.. அதில் ஏதோதோ அர்த்தங்கள் பொதிந்தது போல்.. பருவம் திடீரென விழித்தெழுந்தது போல் ஓர் உணர்ச்சி பீரிடல்..! ஏனோ ஏகாந்த தவிப்பாய் இருந்தது அவளுக்கு.. எதனால் இத்தனையும் என அவளால் அனுமானிக்க இயவில்லை.. ஆனால் ஏதோ ஒன்றை மனம் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வித்தை விதைத்த வண்ணம் இருந்தது.. அது சரியா தவறா என முறையிட புத்தி குறுக்காக வரவில்லை.. ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை.. அந்த நினைவுகள் மட்டுமே சுவையாக சுவைத்து சுவைத்து பார்த்தது.. புதிய ருசி... அறியாத ருசி.. உண்மையா பொய்யா,சாதகமா பாதகமா.. எதையும் ஆராயவில்லை.. எண்ணக் கோர்வைகள் அவனை அழாக காட்சிப் படுத்தியபடி..! அந்த சிந்தனையில் மூழ்கியவாறே உறங்கிப் போனாள் பவித்ரா..
மறுநாள் காலை..
உள்ளங்கைகளில் கண்விழிப்பவள் அன்று விட்டுப் போன நினைவுகளுடன் விழித்துக் கொண்டாள்.. ஆழ்நிலை உறக்கத்தில் மேலோடிய நினைவுகள் விழிப்புடன் அவளை பற்றிக் கொண்டன. புது உற்சாகம் பிறக்க காலை பணிகளை துள்ளலுடன் ஆரம்பித்தாள்..
நமக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகம் தொற்றுநோயாய் சுற்றி உள்ளவர்களையும் பற்றிக் கொள்ளும் என்பது போல பவியின் புத்துணர்ச்சி அனைவரது முகத்திலும் காரணமறியா சந்தோஷத்தை பரவச் செய்திருந்தது..!
கல்லூரியிலும் எந்தவித சங்கடமோ ஊடலோ இன்றி இலகுவாக நகர்ந்தது போன்ற உணர்வு..! கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.. கையிலிருந்த அலைபேசி அழைத்தது..!!
எடுத்துப் பார்த்தவள் கண்கள் ஒரு கணம் விரிந்து நிலைத்தது.. !
அலைபேசியில் ரிஷி காத்துக் கொண்டிருந்தான்.. மூளைக்குள் ஏதோ மின்சாரம் பாய்ச்சியது போல் இருந்தது.. சுற்றுமுற்றும் பார்வையை ஓட விட்டாள்.. போனை எடுப்பதா வேண்டாமா என.. சுதாரித்து வாயிலின் அருகில் இருந்த மாடிபடியில் வேகமாக ஏறினாள்.. போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவள் மொட்டை மாடியை சரியாக அடைய கட் ஆனது போன்.. சோர்ந்து போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. திரும்ப அவனை அழைக்க ஒருவித தயக்கம் வந்தது.. " போன் பண்ணலாமா.. வேண்டாமா.." யோசித்தபடி இருக்க திரும்பவும் அழைத்தான்..
கண்கள் மின்ன போனை எடுத்தாள். " ஹ.. ஹலோ... "
" ஹாய் பவித்ரா.. ரிஷி பேசறேன்.."
" ம்ம்ம்.... சொல்லுங்க... "
" எ.. எப்டி இருக்கீங்க... "
" ம்ம்ம்..... "
..............
சில நிமிடங்கள் மெளன பரிபாஷை நடந்தது.
" அப்பறம்..... " இவளே கேட்டாள்.
" நேத்து ப்ரோக்ராம் நல்லா இருந்ததா.."
" ஹாஹா.. நல்லாருந்தது.. "
" புடுச்சுருக்கா.."
" ஆ.... என்னது.... " திடுமென மின்னல் வெட்டியது அவளுக்குள்.
" இ.. இல்ல.. ப்ரோக்ராம் புடுச்சுருக்கான்னு கேட்டேன்.. " சிரித்தான்.
" ஹாஹா.. ம்ம்ம்... "
" அ.. அப்பறம்.. உ.. உங்க... உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. "
" ம்ம்.. சொல்லுங்க.."
" அது... போன்ல பேச முடியாது.. அது... கொஞ்சம் காபி ஷாப் வரீங்களா.."
" கா... காபி ஷாப்பா.... எ.. என்ன விஷயம்..."
" ............."
கொஞ்சம் படபடவென இருந்தது அவளுக்கு..
" கொஞ்சம் உன்கிட்ட பேசனும்.. அதான்... நேத்திலேந்து மைன்ட் டிஸ்டர்ப்டா இருக்கு... அதான்... உன்னோட பேசி...."
" என்கிட்ட பேசி.... ம்ம்ம்..."
" கொஞ்சம் வரியா.. ப்ளீஸ்... "
தன்னைப் போல் அவனது தவிப்பும் வார்த்தைகளில் தெரிவதை உணர்ந்தாள்..
" ம்ம் சரி.. எப்போ வரனும்.. "
" ஆறரை மணிக்கு வர முடியுமா.."
" ஹ்ம்.... சரி.... "
மெல்லிய சிரிப்புடன் போனை அணைத்தான்.
அவனை திரும்ப பார்க்க செல்வது பவிக்கு உள்ளுக்குள் சந்தோஷத்தை அளித்தது.. அவன் அழைத்த காரணம் என்னவென்று அறிந்தும் அறியாமல் இருந்தது அவளுக்கு..
வேகமாக கீழே இறங்கி வந்தவள் யாரிடமும் பேசாமல் அறைக்குள் தயாராக ஆயத்தமானாள்..
" பவி... வந்துட்டியா.. ஏன் இவ்ளோ நேரமாச்சு.. க்ளாஸ் லேட் ஆயுடுத்தா.." பங்கஜம் கேட்டுக் கொண்டே உள்ளறைக்குள் வந்தாள்..
பவி பரபரப்புடன் இருக்க.. " என்னடி இத்தன பரபரப்பு.. எந்த ட்ரெயின பிடிக்க போறே.. எங்க கிளம்பறே.."
பவிக்கு பக்கென்று இருந்தது.. அவனை பார்க்க போகிறேன் என சொல்ல முடியுமா... " இ... இல்லமா.. இங்க.. கோயிலுக்கு தான்.. ப்ரெண்ட்.... வரேன்னு சொல்லிருக்கா.. அ.. அதான்.."
" அதுக்கெதுக்குடி இவ்ளோ டென்ஷனா இருக்கே... காபி கலந்துண்டு வரேன்.. சாப்டு மெதுவாப் போ... கால்ல வெந்நீர ஊத்திண்டாப்ல பறக்கறியே.."
பவிக்கு தன்னை நினைத்து கோபம் வந்தது... " சே... எதுக்கு இத்தன பரபரப்பு.. சந்தேகப்பட மாட்டாளா.. நானே காட்டிக்குடுத்திடுவேன் போலவே.." கொஞ்சம் அமைதியாகி சிரித்தாள்..
" அதெல்லாம் ஒன்னுமில்லமா.. அவ ஆறரைக்கு வந்துடறேன்னா.. அதான்.. நீ காபி கொண்டு வா.."
" ஹ்ம்.. இங்க இருக்கற கோயிலுக்கு போக எவ்ளோ நாழி ஆயிடப் போறது.. மணி ஆறுதானே ஆறது.. "
" ஆ... ஆமால்ல.. சரி.. நான் மொகத்த அலம்பிண்டு வரேன்.. காபி கொண்டுவா.." கூறுவிட்டு கொள்ளை பக்கம் சென்றாள்.. என்னதான் அமைதியாக இருக்க நினைத்தாலும் ஒருவித படபடப்பு தெரிந்தது..
அம்மா கொடுத்த காபியை மண்டிக் கொண்டு வேகமாக தயாரானாள்.. பசும் மஞ்சள் நிறப் புடவையில் தேவதை போல நின்றாள்.. தலையில் அம்மா மல்லிகை பூ வைத்துவிட இன்னும் அழகு கூடியது..
" என் கண்ணே பட்டும்.. இந்த புடவையில அழகா இருக்கே பவி.." நெட்டி முறித்தாள் பங்கஜம்.
மொபைலை பர்சுக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
ஹாலில் ரெடியாக ஸ்ரீதர் நின்று கொண்டிருந்தான்.. " பவி.. நானும் வரேன் கோயிலுக்கு.. எனக்கு போர் அடிக்குது.."
பக்கென்று இருந்தது.." ஏய்.. நீ ல்லாம் வரப்டாது.. போய் படிடா.. உயிரெடுத்துண்டு.."
சங்கூத ஆரம்பித்தான்..
" சே... அம்மா.... இங்க பாரு இவன.."
" அவனையும் கூட்டிண்டு போயேன்டி... கோயிலுக்கு தானே.. குழந்தை அவனே வரேங்கறான்.. ஒரு எட்டு கூண்டின்டு போய்ட்டு வா பவி.." பங்கஜமும் சேர்ந்து கொள்ள குலைநடுங்கியது பவித்ராவிற்கு..
" ஐயோ.... அ... அம்மா.. வெளையாடறியா.. அங்க என் ப்ரென்ட்ஸெல்லாம் வர்ரா... கோயிலுக்கு போயிட்டு அப்டியே கடைக்கு போறோம்.. வர நாழி ஆயிடும்.. இந்த கோட்டான கூட்டிண்டு போனா அத வாங்கு இத வாங்குன்னு உயிர எடுப்பான்.. என் ப்ரென்ட்ஸ் முன்னாடி என்ன அவமான படச் சொல்றியா... டேய்.. ஒழுங்க இங்கயே இருந்தா பைவ் ஸ்டார் பெரிய சாக்லேட் வாங்கிண்டு வருவேன்.. இல்லைனா ஒன்னும் கெடையாது.. சும்மாதான் வரனும்.. என்ன.." டீல் செய்ய ஆரம்பித்தாள் பவி..
அழுது புரண்டவன் படக்கென எழுந்து அமர்ந்தான்.. காதுவரை வாய் பிளந்து பற்களை காட்டியது.. " சாக்லேட்டா... அப்டினா ரெண்டு வேனும்.. அப்பதான் இருப்பேன்.. இல்லைனா வருவேன்.." அவன் டீமான்டை ஆரம்பித்தான்..
" சே... சனி... வாங்கித் தரேன்.. வாய மூடின்டு போய் பாடத்தபடி.. இன்னிக்கு ஹோம் ஒர்க் முடுச்சாத்தான் ரெண்டு தருவேன்... புருஞ்சதா.. "
கண் கண்ணாடி கீழே விழும் அளவிற்கு தலையை வேகமாக ஆட்டி இளித்தான்..
நிம்மதி பெருமூச்சு வந்தது பவிக்கு.. கைக்கடிகாரத்தை பார்த்துகொண்டே கிளம்பினாள்.. மணி ஆறேகால் எனக் காட்டியது..
வேக நடையுடன் புறப்பட்டாள்..
மணி ஆறு நாற்பத்தைந்து..
உள்ளுக்குள் ஒருவித பயம் பரவி இருந்தது.. அம்மாவிடம் பொய் சொன்னது மனதை என்னவோ செய்தது.. தான் ஏதோ தவறு செய்வதாக உள்ளுக்குள் ஓர் போராட்டமாக இருந்தது.. அதையும் மீறி அவனை காணவேண்டும் என்ற ஆவல் அவளை தூண்டி நடையை துரிதப்படுத்தியது..
ஒரு வித தயக்கமும் அச்சமும் சேர அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.. குப்பென வியர்த்தது.. கால் நடக்க இயலாமல் தடுமாறியது.. கண்கள் நாலாபுறமும் சுழல தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்களா என்ற எச்சரிக்கை உணர்வு மூச்சடைக்க செய்தது.. வேறொரு ஆடவனை காண இது வரை தனியாக சென்றது இல்லை.. கல்லூரி நண்பர்களுடன் கூட இப்படி எங்கும் சென்றதில்லை..
கையிலிருந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி உள்ளே
நகர்ந்து சென்றாள்.
அவன் இருக்கிறானா எனக் கண்கள் தேடியது.. கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.. கடைசியாக இருந்த இருக்கையில் அவன் அமர்ந்திருந்தான்.. இவளைப் பார்த்து எழுந்து கை அசைத்தான்..
ஏதோ ஒரு நிம்மதி பரவ புன்னகையுடன் அவனிடம் சென்று நின்றாள்...
" ஹாய்.... உட்காருங்க... லேட் ஆயிருச்சா... நான்.. ஆறுமணிக்கே வந்துட்டேன்.." கண்கள் மின்னியது.. அருகில் இருந்த இருக்கையை காட்டினான்.
அவனுடன் அருகில் அமர தயக்கப்பட்டு எதிர் இருக்கையில் தயங்கி தயங்கி நுனியில் அமர்ந்து கொண்டாள். அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் முகத்தில் வியர்வை முத்துக்கள் உருண்டோடியது..
அவன் முகத்திலும் ஒரு படபடப்பு இழையோடியது..
இருவரும் பேசாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்..
" என்ன சாப்படறீங்க... " அவன் ஆரம்பித்தான்.
" எ..எதுவேனா ஓகே.... "
அவன் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்.. இருவரது பார்வையும் அவ்வப் பொழுது உரசி ஆராய்ந்து கொண்டிருந்தது..
" அப்பறம்... அ... வீட்ல கூட சொல்லல.. கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்.. அதான்.. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பனும்.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா..."
" ஓ... நானும்.. வெளில போறேன்னு சொல்லிட்டு.. " சிரித்தான்.. அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்ல துடித்தது..
" எனக்கு... என்ன... யாரும் இவ்ளோ டிஸ்டர்ப் பண்ணதில்ல.. ரெண்டு நாளா மனசுல ஏதோ சொல்லத் தெரியாத உணர்வு.. "
" யாரு... " அவள் சட்டென கேட்க அவன் தடுமாறிப் போனான்..
" அ.. அது... உன்ன பாத்தா மனசுல ஒரு நிம்மதி.... சந்தோஷம்.. ஏன்னு தெரியல.. "
மெள்ள தலைசாய்ந்து சிரித்தாள்..
" ஓ..... ம்ம்ம்..... அப்பறம்.."
" விளையாட்டுக்கு சொல்லல.. கொஞ்ச நாளா உன்கிட்ட பேசனும் பார்க்கனும்னு தோனுது.. "
பவிக்கு லேசாக புரிய ஆரம்பித்தது.. அவனும் தன்னைப் போல உணர்வது அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது..
" எ.. என்ன பேசனும்னு... "
" தெரியல......" கடகடவென சிரித்தான்.. அவன் பற்கள் தெரிய சிரித்தது அவளுக்கு பிடித்திருந்தது.. அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது.. தனக்குள்ளும் அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை சொல்ல தயக்கமாக இருந்தது..
" எ.... எப்டி.. சொல்றதுன்னு தெரியல.. எ.. எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.... ஐ திங்க்....."
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க தடதடக்கும் இதயத்தோடு நெஞ்சம் அவசரமாய் ஏறி இறங்க , கண்கள் விரிய அவன் சொல்லப்போகும் வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்தாள் பவி..
ஐ திங்க்... ஐ 'ம் இன் ல......" வார்த்தையை முடிக்கும் முன்னே பின்னாலிருந்து ஒரு குரல் அவன் கவனத்தை கலைத்தது..
திடுக்கிட்டு இருவரும் திரும்பினர்..
" ஹாய்.. ரிஷி.... " அதிசய பார்வையுடன் அங்கு வந்து கொண்டிருந்தாள் ஜனனி..
அவளைப் பார்த்த கணத்தில் இருவருக்கும் கோபமும் வெறுப்பும் பொங்கி சட்டென மனநிலையை மாற்றியது..
" ஹே..... ரிஷி.. சர்ப்ரைசிங்... நீங்க இங்க இருப்பேள்னு எதிர்பார்க்கலே.." வேகமாக வந்தவள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..
" ஹாய்...." மரியாதை புன்னகையை உதிர்த்தான் ரிஷி.. இதயம் தவித்தது..
பவித்ராவின் முகம் கோபத்தில் இறுகியது.. இருவரையும் மாறி மாறி பார்த்தவன் சங்கடத்தில் நெளிந்தான்..
" என்னோட ஃப்ரெண்ட ட்ராப் பண்ணிட்டு அப்டியே ஷாப்பிங் போலாம்னு வந்தேன் கார்ல.. ஹாஹா.. காட் சேக்.. உங்கள பாப்பேன்னு எதிர்பாக்கவே இல்லை.. " பவியை சட்டை செய்யாது அவனது கைகளை கோர்த்துக் கொண்டாள்..
பவி கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்..
நாசூக்காக அவளது பிடியிலிருந்து விலகியவன்.. " ஓ... க்ரேட்... "
" கூட யாருமே இல்லை போர் அடிக்குமேன்னு நெனச்சேன்.. அம்மா கூட க்ளப் மீட்டிங்க்கு போய்ட்டா.. லக்கீலி நீங்க இங்க இருக்கேள்.. கம் வித் மீ ரிஷி.. ஜாலியா ஷாப்பிங் பண்ணின்டு வரலாம்.. உங்களோட தனியா பேச டைம் கெடச்சது.. ஹாஹா.."
" இ... இல்ல... ஒரு முக்கியமான விஷயமா... இவங்களோட.. "
" ஹே ரிஷி... கமான்.. லெட்ஸ் கோ..."
அவள் இங்கிதமே இன்றி தன்னை இழுத்துச் செல்வது ரிஷிக்கு கோபத்தை மூட்டியது.. அதுவுமின்றி இந்த சமயத்தில் பவிக்கு எதிரே... நினைக்க நினைக்க முகம் சிவந்தது..
" இல்ல ஜனனி.. இவங்க எனக்காக வந்திருக்காங்க.. வி ஆர் இன் இம்பார்ட்டன்ட் கான்வர்சேஷன்... சோ..."
" ஹே.... ப்ளீஸ் டா... கம்... இவங்க கொஞ்ச நேரம் இங்கயே வெயிட் பண்ணட்டும்.. வெய்ட் பண்ண மாட்டாங்களா..ம்ம்.. கமான்... " பவித்ராவை ஓர் வெறுப்புடன் பார்த்தபடி அவன் கைகளை பிடித்து எழுந்து நிப்பாட்டினாள்.
அதற்கு மேல் பொறுக்காமல்.. " பவி... ப்ளீஸ்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்... வந்தர்ரேன்... சாரி.. ப்ளீஸ் வெயிட் பண்ணு.. " பவியிடம் கூறிவிட்டு ஜனனியுடன் நடந்தான்.
துள்ளியபடி அவன் கைகளை பிடித்துக் கொண்டு வாசலைத் தாண்டி சிறிது தூரம் ஜனனி நடக்க..
" ஜனனி.. நில்லு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.." அவளை நிப்பாட்டினான்.. முகம் கொஞ்சம் இறுகி இருந்தது..
" யா.... டெல் மி ரிஷி...." கண்களை விரித்து கேட்டாள்.
" ஜனனி.. ஐ யம் நாட் இன்ட்ரஸ்ட்டட் வித் யூ.."
" வாட்... " புரியாமல் விழித்தாள்..
" எனக்கு உன்மேல இஷ்டம் இல்ல.. நா.. நான்.. வேறொரு பொண்ண லவ் பண்றேன்.."
" எ... என்ன... என்ன சொல்றீங்க.." அதிர்ச்சியில் முகம் சுறுங்கியது அவளுக்கு.
" சாரி.. இப்போ என்கூட பேசிட்டு இருந்தாளே அவளதான் லவ் பண்றேன்.. மனசார.. என்னோட லவ்வ ப்ரபோஸ் பண்ணதான் அவள இங்க வரச் சொன்னேன்.. "
அவன் கூறக் கூற அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தவள் மெள்ள தலை குனிந்தாள்.. சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது..
மெள்ள தலை நிமிர்த்தியவள்.. " சுந்தரி ஆன்டி உங்களுக்கு சம்மதம் உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களே.. அ.. அது.."
அவளை தீர்க்கமாக பார்த்தவன்.. " அம்மாவுக்கு என் காதல் விஷயம் தெரியாது.. அவங்களுக்கு வசதியா இருக்கற நீங்க மருமகளா வரனும்னு ஆசை.. பட்... எனக்கும் பிடிக்கனுமே.. டூ த ஃப்ராங்க்... உங்க திங்கிங் லெவல் வேவ் லெங்க்த் வேற.. என்னோட வேவ் லெங்க்த் வேற.. அது ஃப்யூசர்ல நம்ம ரெண்டுபேரோட வாழ்க்கையுமே பாதிக்கும்.. அதுவுமில்லாம.. எனக்கும் உங்க மேல எந்த அபிப்ராயமும் இல்ல.. பவித்ராதான் எல்லா விதத்துலயும் எனக்கு ஏத்தவளா இருப்பா... இருக்கா..."
அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
" எங்க முதல் சந்திப்பே மோதல்ல தான் ஆரம்பிச்சது... ஆனா... போகப் போக...." அவன் சிரித்தபடி கூறிக் கொண்டிருக்க..
" ஸ்டாப்.... ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்பலனேஷன் அன்ட் யுவர் புல்ஷிட் லவ் ஸ்டோரிஸ்.. பிடிக்கலன்னு முன்னாடியே சொல்லிருக்க வேண்டியது தான.. என்ன ஏன் டிஸ்டர்ப் பண்ணிங்க... " கொஞ்சம் சத்தமாக கேட்டாள்... கைகள் மெள்ள நடுங்கியது..
" ஜ.. ஜனனி.. நீ தான் என்ன சுத்தி சுத்தி வந்த... நா.... "
அவள் முகத்தில் வெறுப்பு புன்னகை விரிந்தது.. " ஹூம்... நான்தான் முட்டாள்... சாரி... இனிமே உங்ககிட்ட வரமாட்டேன்.. பை.." அவனை பார்க்காமல் வேகமாக நடந்து சென்றாள்..
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்... அவள் கண்களிலிருந்து மறைய பவியின் நினைவு வந்தது... வேகமாக காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தான்..
அங்கே கோபமும் குழப்பமுமாக எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இவன் வந்து எதிரே அமர்ந்ததும் வெடுக்கென எழுந்தாள்.
" நான் கெளம்பரேன்.. நேரம் ஆச்சு.." போகப் போனாள்.
" ஹே... பவி.. வெய்ட் வெய்ட்.. என்ன ஆச்சு.. "
" இல்லைங்க.. உங்களுக்கு நெறைய வேல இருக்கும்.. கேர்ள் ப்ரண்ட்ஸ்ஸ வேற மேனேஜ் பண்ணனும்.. பிசியா இருப்பீங்க.. நான் வேற எதுக்கு.. "
" பவி.. ப்ளீஸ்.... நீ நெனைக்கற மாதிரி எதுவும் இல்ல.. கொஞ்சம் உட்காரு..." அவன் கண்கள் கெஞ்ச மெள்ள அமர்ந்தாள்..
" அவங்க ஜனனி.. வீட்ல அம்மா எனக்கு தெரியாம பாத்த பொண்ணு.. என்னோட விருப்பத்த கேக்காம அவங்கள்ட சம்மதம் சொல்லிட்டாங்க... பட்.. எனக்கு இஷ்டம் இல்ல.. "
நம்பிக்கை இன்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
" உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. நேத்து நான் பங்ஷனுக்கு வந்தது கூட உனக்காகத்தான்.. உன்ன பாக்கனும்கறதுக்காக மட்டும் தான்.."
கொஞ்சம் கண்களில் மகிழ்ச்சி பூக்க அவனை பார்த்தாள்..
" எஸ் பவி.. என்னமோ தெரியல.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னோட அமைதியா.. உன்னோட கோபமா.. எது... எதுன்னு சொல்லத் தெரில... நீ என் தப்ப.. அந்த இன்சிடென்ட விளக்கின முறை எல்லாம் என்ன உன்கிட்ட கட்டி போட்டுருச்சு.. உன் கூட பேசினா சந்தோஷமா இருக்கு.. உன் கூட இருக்கனும்னு தோனுது.. உன்கிட்ட சொல்லிடனும்னு நேத்து உன்ன பாத்ததிலேந்து ஒரே தவிப்பு.. அ.. அதான் நானே போன் பண்ணி உன்ன வர சொன்னேன்.."
கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க முகம் மெள்ள மலர்ந்தது அவளுக்கு..
" நீ எனக்கு வேனும் பவி... என்ன புரிஞ்சுக்கற.. என்ன மதிக்கற... என் மனசுக்கு புடுச்ச ஒரு பொண்ணு தான் எனக்கு வாழ்க்கை துணைவியா வரனும்னு எதிர்பார்த்தேன்.. நீ எனக்கு கெடச்ச.. மத்த பசங்க மாதிரி டேட்டிங் சாட்டிங்னு மூனுமாசம் பேசி எல்லாம் முடுச்சுட்டு போற சீப் லவ் இல்ல.. என் மனசுல நீதான் எனக்குன்னு புரிஞ்சப்பறம் தான் உன்கிட்ட சொல்லனும் வந்தேன்.."
மூச்சுவிடாமல் அவன் கூறக் கூற முகத்தில் சந்தோஷ ஒளி பரவ வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் பவித்ரா..
" இதுக்கு மேல என்ன எப்டி வெளிப்படுத்தறதுன்னு தெரியல... ஐ.... ஐ லவ் யூ பவித்ரா.." கையில் இருந்த சின்ன அட்டை பெட்டியில் வைத்திருந்த ஒற்றை ரோஜாவை அவளிடம் நீட்டி சிரித்தான்..
உடலெங்கும் மின்சாரம் பரவி சூடாக, மயிர்கால்கள் சிலிர்க்க தனைமீறி வந்த ஆனந்த சிரிப்பை அடக்க இயலாமல் நடுங்கும் கைகளில் அந்தப் பூவை பற்றினாள்.. சம்மதமாக..!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/