Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 20

புன் சிரிப்புடன் வீட்டில் நுழைய வாசலிலே நின்றிருந்த அம்மாவின் கோபமான குரல் பவியை திடுக்கிடச் செய்தது..!

" ஏன்டி.. எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றது.. எங்கடி போய்ட்டு வர.. " பங்கஜம் சத்தமாகக் கேட்க பவிக்கு திக்கென்று இருந்தது.. விழித்தாள்..

" நீ போனை எடுக்கலையேன்னு ரம்யாவுக்கு போன் பண்ணா அவ என்னவோ இப்ப வந்துடுவா அப்ப வந்துடுவான்னு சொல்றா.. மணி என்ன ஆறது.. ம்ம்ம்.. உங்கப்பா உனக்காக எவ்ளோ நாழி வெயிட் பண்றார் தெரியுமா.. உனக்கு செல்லங்குடுத்தது தப்பா போயிடுத்து.. இது சரியில்ல பவி சொல்லிட்டேன்.." பங்கஜம் கடுமையாக பேச வெலவெலத்து போனாள் பவி..

" இ.. இல்லம்மா.. ரம்யா ஆத்லேந்து கெளம்பிட்டேன்.. பஸ் கெடைக்கல.. அ.. அதான்.." தயங்கி தயங்கி பொய் சொன்னாள்.

" டைம் ஆயிடுத்துன்னா ஒரு போன் பண்ண மாட்ட.. மனசு கெடந்து அடுச்சுக்கறது.. எத்தன போன்கால் பண்றது.. போன பாரு.."

தடுமாறி பேக்கினுள் இருந்த போன எடுத்து பார்த்தாள்.. வீட்டிலிருந்தும் ரம்யாவிடமிருந்தும் பத்து கால்களுக்கு மேல் வந்திருந்தது.. ரிஷியுடன் இருக்கும் போது ரம்யா போன் செய்து வம்பு செய்வாளோ என சைலன்ட் மோடில் போட்டது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது..

" போன்.. வைப்ரேட்ல இருந்ததால கவனிக்கலம்மா.. "

" நன்னாதான் இருக்கு போ... அப்பா ரொம்ப கோபமா இருக்கார். உன்கிட்ட முக்கியமா பேசனும்னு ஆறுமணிலேந்து காத்துண்டு இருக்கார்.. இப்டி பண்றியே பவி.. மொதல்ல உள்ள போ.. " அவள் இழுத்துக் கொண்டு நடக்க பதட்டத்துடன் உள்ளே சென்றாள் பவி..!

பாட்டி குழப்பமாக அமர்ந்திருக்க , நடேசன் பொறுமையின்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.. பவி உள்ளே நுழைய..

" என்ன பவி இது.. உன் இஷ்டத்துக்கு வெளில போயிட்டு வர்ரே.. வயசாயிடுத்து இல்ல.. ஒரு பொறுப்பு வேண்டாம்.. ஆத்ல தேடுவாளேன்னு ஒரு பயம் இருக்கா.. அப்டி என்ன ப்ரண்டாத்துக்கு போய் படிக்கறது.. இங்க படிச்சா ஆகாதா.. வயத்துல நெருப்ப கட்டிண்டு நாங்க இங்க இருக்கனும்.. நீ எதுக்கும் கவல படாதைக்கு போயிடுவே.. அப்டிதானே.." நடேசன் படபடவென கொட்ட பயத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் பவி..

" இ... இல்லப்பா.. சீக்கறம் கெளம்பிட்டேன்.. போன் சைலன்ட்ல இருந்தது.. சா.. சாரிப்பா.." தலையை கவிழ்ந்து கொண்டாள்.. தொண்டையை அடைத்தது.. அப்பா எதற்காகவும் இவ்வளவு உணர்ச்சிவசப் பட்டதில்லை..

" உனக்கு நல்ல மாப்ள அமையனுமேன்னு நான் அங்கயும் இங்கயும் அலஞ்சுண்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. நேரங்கெட்ட நேரத்ல வர்ரே.." நடேசன் மறுபடியும் பொறும.. சுகுமாரி பாட்டி இடைமறித்தாள்..

" சரிடா... எதோ ஃப்ரண்டோட படிக்கனும் போயிருக்கா.. போன்தான் சைலன்ட்ல இருந்திருக்கே.. அதுக்கு அவோ என்ன பண்ணுவா.. அதுக்கு குழந்தைய இப்டி பேசறியே.. விடு.. " பாட்டி பேச கோபமானார் நடேசன்.

" அவளச் சொல்லி குத்தமில்ல , எல்லாம் நீ குடுக்கற செல்லம்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ.. இப்டி பொறுப்பில்லாம இருந்தா எப்டிமா.."

பாட்டியின் முகம் மாறியது.. " நடேசா.. கோபத்ல பொறுமை இழக்காத.. அதான் காரணத்த சொல்லிட்டாளே.. பவித்ரா பொறுப்பில்லாத பொண்ணு இல்ல.. அவள எதுவும் சொல்லாத.. நேக்கு சங்கடமா இருக்கு.." அவரை கடிந்து கொண்டு பவியை அழைத்தாள்.." வாடி கண்ணு.. பாட்டிட்ட வா.."

பாட்டியிடம் சென்று அமர்ந்தவள் பாட்டி தலையை வருட தொண்டை அடைத்த அழுகை குபுக்கென கண்களில் நீராய் வழிந்தது.. பாட்டியின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்..

அவ்வளவு நேரம் கோபமாய் இருந்த நடேசனுக்கு அவளது கண்கள் கலங்குவதைக் கண்டு மனம் தவித்தது..

" பவி... அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றேன்.. இனிமே இப்டி இருக்காதம்மா.. என்ன... சந்தோஷமான விஷயம் உன்ன வெச்சுண்டு எல்லார்கிட்டயும் சொல்லனும் காத்துண்டு இருந்தேன்.. நீ வரலைன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.. " வாஞ்சையுடன் அவளை பார்த்தார்..

என்ன விஷயம் என எல்லோரும் அவரை பார்க்க..

" என்னடா சந்தோஷமான விஷயம்.. மத்யானம் வெளில போய்ட்டு வந்ததுலேந்து எதுவும் சொல்லவே இல்லையே.. " பாட்டி நடேசனை ஆர்வமாக பார்க்க.. பவிக்கு குழப்பத்துடன் கலக்கமும் சேர்ந்து கொண்டது..

" பகவான் கண்ண தெறந்துட்டார்.. நம்ம பவிக்கு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு.. அதச் சொல்லனும்னு தான் காத்துண்டு இருந்தேன்.." அவர் கூற கூற பவியின் அடிவயிற்றில் பயம் பற்றிக் கொண்டது..

" ஜாதகம் பார்க்க குடுத்திருக்கேளா.." பங்கஜம் சலிப்புடன் கேட்க..

" ஜாதகம் குடுத்து பொறுத்தமும் பாத்துட்டா.. நம்ம சோம சேகரோட ஒன்னுவிட்ட தங்கை பையன். அவன் ஆத்துக்குதான் போய்ட்டு வரேன்.. ரெண்டு பேரோட ஜாதகத்லயும் ஏழு பொருத்தம் இருக்கு.. அடுத்த வாரம் பாக்க வரேன்னு சொல்லிருக்கா..." கண்கள் ஒளியேற அவர் கூற..

பவிக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது.. பேரிடி விழுந்ததுபோல் தலையில் கையால் அழுத்திக் கொண்டாள். இதயம் தாறுமாறாய் எகிரியது..

கலங்கிய கண்களுடன் அப்பாவையே வெறித்துப் பார்த்தாள்.. தன் காதல் கனவு இப்படி ஒரே நொடியில் தரைமட்டமாகும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.. சிறிது நேரத்திற்கு முன்வரை இருந்த அத்தனை சந்தோஷமும் கரைந்து வடிந்து காய்ந்து போனது..

பாட்டியின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி பரவ பவியை பார்த்தாள்.. மெள்ள அவளை அணைத்துக் கொண்டாள்..

" என்ன.. எல்லாருக்கும் சந்தோஷம் தானே.. பொண்ணு பாக்கறது சிம்பிளா இருந்தா போதும்னு சொல்லிட்டா அவா.. பையன் போட்டோ குடுத்திருக்கா.. இத பாருங்கோ.. பவி நீயும் பாரு.." அவர் படத்தை காமிக்க அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள் பவி..

" நம்ப பவி போட்டாவ பாத்து அவாளுக்கு ரொம்ப புடுச்சு போச்சாம்.. எதையும் பெருசா எதிர்பார்க்க மாட்டாளாம்.. சம்பிரதாயத்துக்கு அடுத்த வாரம் நல்ல நாள் பாத்து பொண்பாக்க வராளாம்.. ஓகே ஆயிடுத்துன்னா அப்பவே தட்டு மாத்திண்டுடலாம்னு சொல்லிருக்கா.." நிம்மதியுடன் சிரித்தார்.

" பையன் எப்டி ஏதுன்னு நன்னா விஜருச்சியா.. நல்ல குடும்பம் தானே.." பாட்டி கொஞ்சம் கலக்கத்துடன் கேட்டாள்..

" நல்ல பையன்.. நல்ல கம்பெனில வேல பாக்கறான்.. வசதியான குடும்பம்தான்.. ஒரே பையன்தான்.. பிக்கல் பிடுங்கல் இல்லை.. நம்ம சோமசேகரன் குடும்பம் பத்தி நோக்கு தானே தெரியுமேம்மா.."

" பவிக்கும் பிடிக்கனுமே.. அவ விருப்பத்தையும் கேக்க வேண்டாமா.."

" அவ என்னமா சின்ன பொண்ணு.. பிடிச்சுருக்கு பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு.. நம்ப பவி அப்டிலாம் வேண்டாம்னு சொல்ல மாட்டா.. இல்லையா பவி.. பையன் ராஜாவாட்டம் இருக்கான்.. அப்புறம் என்ன.. என்ன பங்கஜம்.. போட்டோவ நீயும் பாத்துக்கோ.." அவளிடம் போட்டோவை குடுத்தார்.. பங்கஜத்திற்கும் இந்த வரன் சரியானதென தோன்றியது.. புன்னகையுடன் தலையாட்டினாள்..

" இல்லடா... இன்னும் படிப்பு முடிக்கலையே... அதுக்குள்ள.. " பாட்டி ஆரம்பிக்க..

" அம்மா , திரும்ப ஆரம்பிக்காதே.. படுச்சு முடுச்சாலும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு அவாத்துக்கு தானே போயாகனும்.. இந்த வரன் கைகூடட்டும்.. வேனும்னா அப்பறம் சொல்லிக்கலாம்.. அதுக்கும்மேல அவா உடனே கல்யாணத்த முடிக்கனும்னா பண்ணிட வேண்டியதுதான்.. உன் பேத்திக்கு நல்ல வரன் அமைஞ்சதேன்னு சந்தோஷ பட்டுக்கோ.. வேற எதுவும் சொல்லாதே.." அவர் கொஞ்சம் கோபத்துடன் கூற பாட்டி அமைதியானாள்..

உள்ளுக்குள் ஆயிரம் பூகம்பம் வெடிக்க அமர்ந்திருந்தாள் பவித்ரா.. என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடி போனாள்.. ஒருபக்கம் கோபமும் ஒரு பக்கம் அழுகையும் வந்தது.. ரிஷியை விரும்புவதை சொல்லிவிடுவோமா என எண்ணம் அவளை தூண்டியது.. வாய் வரை வந்த வார்த்தைகள் மேலெழ தைரியமின்றி தொண்டைக்குழியில் சிக்கி வெளிவர இயலாமல் மூழ்கி மூழ்கி நெஞ்சுக்குள் புதைந்தது.. கனத்த எண்ணங்கள் நெஞ்சம் அடைக்க கண்களில் ஏனோ நீர் வழிந்தது.. கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.. வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..

பின்னால் உள்ளே வந்த பங்கஜம்.. " பவி.. எதுக்கிப்ப கண்ண கசக்கிண்டு இருக்கே.. அப்பா ஏதோ கோபத்ல பேசிட்டார்... அதுக்கு போய் அழலாமா.. குழந்த மாதிரி.." கண்களை துடைத்துவிட்டாள்.

அவளிடமாவது தன் காதலை சொல்லிவிடலாமா என இருந்தது.. பவி வாயெடுக்க..

" பவி... ஒரு விஷயம்.. அப்பா சொல்றதும் நியாயம் தானே.. எப்டியும் படிப்பு முடுச்சாலும் கல்யாணம் பண்ணின்டு அடுத்தாத்துக்கு போய்தான் ஆகனும்.. நல்ல குடும்பமா அமஞ்சிருக்கு.. அது இதுன்னு மனச குழப்பிண்டு இருக்காதே.. நடக்கறது நல்லபடியா நடக்கும்.. உனக்கேத்தவனா தான் இருப்பான் பாரு.. கல்யாணம் ஆயிடுத்துன்னா , போகப் போக எல்லாம் பழகிடும்.. அப்பறம் வேல பாக்கனும் அது இதுன்னு நீ நெனச்சுண்டு இருந்ததெல்லாம் சில்லியான விஷயமா போய்டும்.. அதனால அவா வரும்போது எதுவும் உணர்ச்சி வசப்பட்டுடாதே.. அப்பறம் அப்பா ஒடஞ்சு போயிடுவார்.."

" அ... அது.. அது இல்லமா.. நா.. நா..." பவி திக்கி திணற..

" படிக்கனும் , வேல பாக்கனும்.. அதானே.. கல்யாணம் ஆயிடுத்துன்னா உன் ஆத்துகாரர் ஒப்புதலோட வேலைக்கு போயேன்... யார் வேண்டாம்கறா.. அவர் சரின்னு சொல்லிட்டா வேற யார் கேக்க போறா உன்ன... சரியா.. மனச விடாம இரு.. உன் மனசுபோல நடக்கும்.. இன்னும் என்ன கண்ண கசக்கிண்டு.. சிரி.. சிரி.. " பங்கஜம் அவள் கன்னத்தை கிள்ள..

வெடிக்க காத்திருந்த உணர்வுகளை அழுத்தி அடக்கி மெள்ள சிரித்தாள் பவி... விதியின் சதியை எண்ணி..

" சரி.. சரி.. ட்ரெஸ்ஸ மாத்திண்டு முகத்த அலம்பிண்டு வா சாப்படலாம்.. அப்பா காத்துண்டு இருப்பார்.." கூறிக் கொண்டே சென்றாள் பங்கஜம்..

யாரிடமும் சரியாக பேசாமல் , சாப்பிடப் பிடிக்காமல் ஏனோதானோவென கொறித்துவிட்டு தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்..

ரிஷியிடம் உடனே கூற வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. அவனை பிரிவதா என நினைக்கையிலே உடல்நடுங்க
உணர்வு பீறிட்டு எழுந்தது.. மெள்ள அழுதாள்.. சத்தம் வெளியில் கேட்டுவிடுமோ என தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.. அந்த வேளையில் அரவணைப்பு தேவைப்பட்டது பவிக்கு.. ஆறுதல் கூற யாருமின்றி தலையணையை இறுக பற்றிக் கொண்டு கரைந்தாள்.. ரிஷி பார்த்த தினம் முதல் அவன் காதல் சொன்னது அவன் விரல் ஸ்பரிசம் அவனது அணைப்பு முதல் முத்தம் என அத்தனையும் கண்முன்னே தோன்றி அவளை இம்சித்தது... ரிஷியின் முகம் கண்முன் நிழலாடி அவளை சோகக் கடலில் ஆழ்த்தியது.. இரவு முழுக்க உறக்கமின்றி தீவிர சிந்தனையில் இருந்தாள்..

மறுநாள் காலை..

உடலெல்லாம் வலிக்க , சிவந்த கண்கள் தூக்கமின்றி பொங்கி போய் எரிந்தது.. மெள்ள எழுந்து வெளியே வந்தாள்.. காலை வெகுநேரமாகி இருந்தது.. அப்பா வேலைக்கு சென்றிருந்தார்.. அம்மா அடுக்களையில் இருக்க தள்ளாடியபடி வெளியே வந்தாள்.. ஹாலில் பாட்டி அமர்ந்திருந்தாள்..

" என்ன பவி.. உடம்பு சரியில்லையா.. அம்மா வந்து எழுப்பினா எந்திரிக்கவே இல்லையே.. நான் தான் தூங்கட்டும்னு விட சொல்லிட்டேன்.. என்னாச்சு கண்ணு.."

" ஒ.. ஒன்னுமில்ல பாட்டி... " சுரத்தில்லாமல் கூறியபடி அங்கிருந்து அகன்றாள். மனம் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது..

குளித்து முடித்து ஏதோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தாள்.. உணவு உண்ண பிடிக்கவில்லை.. ரிஷியிடம் உடனே இதைப் பற்றி கூற வேண்டும் என மனம் பதைபதைத்தது.. அவனிடம் கூறினாள் என்ன செய்வான்.. எனை கூட்டிப் போக வருவானா.. இல்லை அப்பா பேச்சை கேட்டு எனை விட்டுவிடுவானா.. குழப்பத்தில் மனம் அலைந்தது..

" பவி.. கண்ணு.. இங்க கொஞ்சம் வாயேன்.. " பாட்டி அழைக்க.. விருப்பமின்றி மெள்ள எழுந்து சென்றாள்.

" என்னம்மா.. என்ன ஆச்சு.. "

.................

" சொல்லும்மா.. அப்பா வரன் பாத்தது பிடிக்கலையா.. என்ன செய்யறது பவி.. அவன் அவசரப் படறானே.. திரும்ப திரும்ப எத்தன தடவ சொல்றது.. அவன் பிடிவாதமா இருக்கானே.. எனக்கும் ரொம்ப கவலையாத்தான் இருக்கு.. வர்ர வரன் நல்ல குடும்பமா இருக்கனும்.. உனக்கு சம்மதம்னாத் தான் இந்த கல்யாணம் இல்லைனா வேண்டாம்னு நானே அவன்ட்ட சொல்லிடறேன். என்ன சரியா.. அதுக்காக கவல பட்டுண்டு உடம்ப கெடுத்துக்காதடி செல்லம்.."

பீறிட்டு வந்த அழுகையை அடக்க இயலாமல் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து குலுங்கினாள்..

" பவி... என்னம்மா இது.. குழந்த மாதிரி இருக்கியே.. அழாத.. தைரியமா இருக்கனும் என்ன மாதிரி.. எது இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. உன் விருப்பம் தான்.." சுகுமாரி தலையை வருடிக் கொடுத்தாள்..

பாட்டியிடம் தன் காதலைப் பற்றி சொல்லி விடலாமா என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது பவிக்கு.. கண்களை துடைத்தபடி பாட்டியை பார்த்தாள்..

" சொல்லுமா.. "

" பாட்டி... எ.. எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்ல பாட்டி.."

" ம்ம்ம்.. பொண் பார்க்கதானே வரேன்னு சொல்லிருக்கா.. பாக்கலாம்.. அதுக்குள்ள எதுவும் முடிவெடுக்காதே.. உன் அப்பாவும் கேக்க மாட்டேங்கறானே.."

" அ... அது.. இல்ல பாட்டி... நா... நா... " திணறினாள்..

" சொல்லு கண்ணு.. பாட்டிட்ட தானே சொல்ற.. பயப்படாத.."

" நா... நா.... வேற... ஒருத்தர... " தடுமாறி தலை குனிந்தாள் பவி.. பாட்டி புரிபடாமல் குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி.." பவி திக்கி திக்கி கூற.. சுகுமாரியின் முகத்தில் அதிர்ச்சி அலை பரவியது..

" எ.. என்னடி சொல்றே..." அதிர்ந்து போனாள்..

மெள்ள அசைத்தபடி தலையை குனிந்தாள் பவி..

" ஆமாம் பாட்டி.. நான் கல்யாணம் பண்ணின்டா அவரத் தான் பண்ணிப்பேன்.. " அழுத்தமாக கூறினாள்..

அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக சுகுமாரி ஒரு கணம் வாய்பேச இயலாமல் தடுமாறினாள்.. " எ.. என்ன சொல்றே பவி.. நே.. நேக்கு புரியலை.."

" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி . அவரும் என்ன விரும்பறார்.. கல்யாணம்னா அவரோட மட்டும் தான்... வேற யாருக்கும் என் வாழ்க்கைல இடமில்ல பாட்டி." தீர்க்கமாக மெல்லிய குரலில் கூறினாள் பவி..

" என்னடி.. திடீர்னு தலைல கல்லத் தூக்கிப் போடறயே.. யார்டி பவி அது.." பாட்டி பதட்டத்துடன் கேட்க..

" நான் கோயிலுக்கு போகும் போது ஒரு மாமி பாப்பேன்னு சொல்வேன்ல.. அவங்க பையன்.. பேரு ரிஷி.."

" இதுவரைக்கும் எதுவும் என்கிட்ட சொன்னதில்லையே.. திடீர்னு எப்டி பவி.. நீ அப்டி பட்ட பொண்ணு இல்லையே.. " ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பொங்க பார்த்தாள் சுகுமாரி..

தலையை குனிந்து கொண்டாள் பவி.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..

" பவி... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.. உன் வயசுல இந்த மாதிரி வர்ரது சகஜம் தான் பவி.. அ.. ஆனா.. அதெல்லாம் ஒரு நிலைல ஒன்னுமில்லைனு ஆயிடும்.. வயசு கோளாரு.. யாரு எப்டின்னுலாம் பாக்காது.. மனசு பேதலிச்சுதான் போகும்.. எங்க காலத்லே பத்து பதினஞ்சு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வெக்க இதுவும் ஒரு காரணம்..

புரியாத வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா , இவன் தான் உனக்கு இவ தான் உனக்குன்னு ஒருத்தரோட பந்தத்த ஏற்படுத்தி விட்டுட்டா,மனசு கண்டதத் தேடி அலையாது.. ஒரு கட்டுப்பாடு ரெண்டுபேருக்குள்ளயும் இருக்கும்னு நம்பினா.. ஆனா, இப்போ காலம் மாறி பருவ வயச தாண்டி கல்யாணம் பண்ணி வைக்கும் போது தன் விருப்பம் தனக்கானது இதுதான்னு மனசு தேவையில்லாதத கற்பனை பண்ணிக்கறது.. அது மாதிரி நீயும் வெறும் படோடோபத்தையோ அழகையோ பாத்து ஏமாந்துடாத பவி.. காலம் ரொம்ப கெட்டுகிடக்கு.. அவன் எப்படி ஏதுன்னு எதுவும் யோசிக்காம மனச லயிக்க விட்டுடாதே.. அப்பறம் எல்லாருக்குமே சங்கடம் தான்.. உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது பவி.." பாட்டியின் கண்களில் நீர் கோர்க்க..

" இல்ல பாட்டி.. நான் விரும்பறது வெறும் பணத்த பாத்தோ , அழக பாத்தோ இல்ல பாட்டி.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பேசி புருஞ்சுண்டுதான் விருப்பத்தையே சொன்னோம்.. அவரும் என்ன மனப்பூர்வமாதான் விரும்பறார்.. பார்த்ததும் காதல் , அதுக்காக உயிரையே தருவேன்கற மாதிரியான சினிமா காதல் இல்ல பாட்டி.. எனக்கும் வயசாயிடுத்து.. யோசிக்கற பக்குவம் இருக்கு.. அவரோட குணத்த பாத்துதான் சம்மதிச்சேன்.. அவருக்கும் என்மேல உண்மையான ப்ரியம் இருக்கு.. அத என்னைக்கும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்.. எப்போ இருந்தாலும் , எனக்கு வாழ்க்கை துணையா இருந்தா அது அவர் மட்டும் தான்.." தெளிவாகக் கூறினாள் பவி..

என்ன சொல்வது என பேச இயலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. அமைதியில் சிலநிமிடங்கள் கரைந்தது..

" அ.. அப்பாட்ட பேசி நீதான் சம்மதிக்க வைக்கனும் பாட்டி.." பவி கூற சுகுமாரி முகம் கலக்கத்தில் சுறுங்கியது..

" எ.. எப்டி பவி அவன்கிட்ட சொல்றது.. ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைய பாத்து வரச் சொல்லிருக்கான்.. இப்போ போய் அவன்கிட்ட எப்டி சொல்றதுடி.. வானதுக்கும் பூமிக்கும் குதிப்பானே.. அவன் ஒத்துக்கனுமே பவி.." பெருமூச்செறிந்தாள் சுகுமாரி.

" எனக்கு உன்னவிட்டா வேறு யாரும் இருக்கா.. நீ... நீ தான் பேசி சம்மதிக்க வைக்கனும்.. ப்ளீஸ் பாட்டிம்மா.. " பவி கண்கள் கசிந்தது.

குழப்பமும் மன பாரத்துடனும் பெருமூச்செரிந்து அரைகுறையாக தலை அசைத்தாள் சுகுமாரி..

இங்கு..

ஊரிலிருந்து அகிலா வந்துவிட்ட சேதி அறிந்த சுந்தரவல்லி உடனே அவளுக்கு கால் செய்தாள்..!

" ஹாய் அகிலா.. ஊர்லேந்து வந்தாச்சா.. ப்ரோக்ராம்லாம் எப்டி இருந்தது.. ஜனு குட்டி நன்னா ஆடினாளா.. அவள பாத்து ரொம்ப நாளாச்சு.. உன்னையும் பாத்துதான்.. ஹாஹா.. "

" யா.. எஸ் சுந்தரி.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. ரொம்ப நன்னா ஆடிட்டா.. ஒரே பாராட்டு மழைதான் போ.. ஹ்ம்.. கிளப் ஆக்ட்டிவிட்டீஸ்லாம் எப்டி போயிண்டு இருக்கு.. அப்பறம் ஹவ் இஸ் ரிஷி.. " அகிலா கேட்டாள்.

" அவன் நன்னா இருக்கான்.. அதான் ஏற்கனவே ரிஷி ஜனனி பத்தி உன்கிட்ட பேசனும்னு சொல்லிருந்தேனே.. நீ கூட ஊருக்கு போய்ட்டு வந்து பேசறேன் சொன்னியே.. "

" ஓ... எஸ்.. எஸ்... நியாபகம் இருக்கு.. பேசலாம்.. ஃப்ரீயா இருந்தா ஆத்துக்கு வா..."

" கண்டிப்பா.. நான் ஒரு யோஜன பண்ணி வெச்சுருக்கேன்.. அத உன்கிட்ட கலந்து பேசி ஒரு முடிவெடுத்திடலாமேன்னு நினச்சேன்.."

" ம்ம் சரி சுந்தரி.. வா.. கொஞ்சம் வெளில போனும் போனை வெச்சுடவா.."

" ஓகே.. ஓகே.. பாக்கலாம்.." சிரிப்புடன் போனை கட் செய்தாள் சுந்தரவல்லி.. மனதில் எப்படியும் இதை நடத்திவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..

போனை கட்செய்து திரும்பிய அகிலா முன் நின்றிருந்தாள் ஜனனி..

" யாரும்மா போன்ல.."

" சுந்தரி.. ஏதோ முக்கியமா பேசனுமாம்.. வரேன் சொன்னா.. அபோட் யுவர் மேரேஜ்.."

" அம்மா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லமா.. சொல்லிடு அவங்கள்ட்ட.."

" ஒய் ஜனு.. என்ன திடீர்னு.. வாட் ஹேப்பண்ட்.." அதிர்ச்சியாக பார்த்தாள் அகிலா..

" எஸ்.... எனக்கு ரிஷி வேண்டாம்.."

" என்ன ஜனு.. இப்டி சொல்ற.. நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா தானே இருந்தேள்.. உனக்கு அவன புடுச்சுருக்குன்னு தானே சுந்தரிகிட்ட இந்த ப்ரபோஸையே ஒத்துண்டேன்.. அதபத்தி பேசதான் அவ வரேன்னு சொல்லிருக்கா.. நெள.. நீ இப்டி சொல்றே.. எதாவது சண்ட போட்டுண்டேளா.. நீ அவன விரும்பறே தானே.." அகிலா குழப்பத்துடன் கேட்க..

" நான் அவன விரும்பறேன்... பட்.. அவன் என்ன விரும்பலயே..." ஜனனி சொல்ல அகிலாவிற்கு அதிர்ச்சி முகத்தில் பரவியது..

" வாட் டு யூ மீன்..."

" எஸ் மம்மி.. ஹீ லவ்ஸ் சம் அதர் கேர்ள்... அவன் வேறொருத்திய லவ் பண்றான்.."

" என்னது.. என்ன சொல்ற ஜனு.. ஹி.. ஹி இஸ் நாட் லைக் தட் பெர்சன்.. எப்படி சொல்றே ஜனு.."

" ஆமாம்மா.. அவனுக்கு என்ன பிடிக்கலையாம்.. வேற பொண்ண லவ் பண்றேன்.. என்கிட்ட வராதன்னு நேரடியாவே சொல்லிட்டான்.. எ.. எனக்கு அவமானமா போச்சும்மா.." ஜனனி கண்கள் கலங்க அகிலா துடித்து போனாள்..!

அவள் முகம் கோபத்தில் இறுகியது.!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 21

ஜனனி சொன்னதைக் கேட்டு கோபமானாள் அகிலா..!

" ஹூம்.. ஏதோ தெரிஞ்ச குடும்பமாச்சே.. பையனும் பாக்க நன்னா இருக்கான்.. உனக்கும் புடுச்சிருக்குன்னு சொன்னதாலதான் இந்த ப்ரபோசலுக்கே ஒத்துண்டேன்.. நம்ம அந்தஸ்துக்கு அவ ஈடா.. பழகின தோஷத்துக்கு ரொம்ப விருப்பப்பட்டு கேக்கறாளேன்னு சரின்னு சொன்னா இந்த சுந்தரி இப்டி பண்ணிட்டாளே.. இப்பவே கால் பண்ணி அவள்ட்ட கேக்கறேன்.. என்ன நெனச்சுண்டு இருக்கா அவ.." படபடப்புடன் கத்திய அகிலாவை சமாதானப் படுத்தினாள் ஜனனி..

" மாம்.... வெயிட்.. இந்த லவ் மேட்டர் அவங்களுக்கு தெரியாது.. சுந்தரி ஆன்டிக்கு தெரியவேண்டாம்னு ரிஷி சொன்னான்.. லீவ் இட் மா.. நமக்கு தேவையில்லாதது.. நெக்ஸ்டைம் அவங்க கேட்டா எனக்கு பிடிக்கலன்னு சொல்லிடு.. தட்ஸ் இட்..."

" ஹவ் கேன் ஐ லீவ் இட் ஜனு.. இத நான் சும்மா விடமாட்டேன்.. உனக்கென்ன வேற பையனா கிடைக்க மாட்டான்.. நம்ம ராஜசேகர் பையன் நிதேஷ் யூஎஸ்ல வேலை பாத்துண்டு இருக்கான்.. ராஜசேகர் உன்ன பொண் தர சொல்லி கேக்காத நாளில்லே.. ஹூம் அதெல்லாம் விட்டுட்டு..... " முகத்தில் வெறுப்பு தாண்டவமாடியது..

" ப்ச்... மாம்.. ஐ' ம் சோ டிஸ்டர்ப்டு.. இப்போ எந்த பையனும் வேண்டாம்.. ஐ நீ்ட் சம் பிரீத்.." கூறிவிட்டு சலிப்புடன் சென்றாள் ஜனனி..

அகிலாவிற்கு மனம் தாங்கவில்லை.. சுந்தரவல்லி வரும் பொழுது நன்றாக கேட்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டாள்..

இங்கே பவி நிலைகொள்ளாமல் இருந்தாள்.. ரிஷியை நேரில் பார்த்து பேச வேண்டும் என இருந்தது.. உடல் வேறு சோர்ந்திருந்ததால் அன்று எங்கும் வெளியில் செல்ல அம்மா விடவில்லை.. தவித்துப் போனாள் பவி.. அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாமா என போனை எடுத்தாள்.. அவனை மறுநாள் சந்திக்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காத்திருந்தாள்.. அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் அயர்ந்து போய் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.. உள்ளுக்குள் ஏதேதோ சிந்தனை அவளை அலைக்கழித்தது..

அரைமணி நேரம் செல்ல.. அவனிடமிருந்து அழைப்பு வந்தது.. வீட்டுக்குள் இருப்பதால் அவனிடம் பேச வழியின்றி கட் செய்தாள்.. மறுபடியும் இரண்டு மூன்று முறை அழைப்பு வர கட் செய்து , நாளை பேசுகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு செய்திகளை அழித்தாள்..!

மறுநாள் அவனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற தவிப்பில் காலையில் வேகமாக எழுந்து கிளம்பினாள்..!

" ஏன்டி பவி.. நேத்து நாரா கிடந்தே.. உடம்பு சரியாயிடுத்தா.. இன்னிக்கு ஒரு நாள் லீவப் போடேன்.. " பங்கஜம் பாந்தமாய் கேட்க ,

" இல்லமா.. சரியாயிடுத்து.. நான் கிளம்பரேன்.." கூறியவாரே பாட்டியிடம் வந்தாள்..

" பாட்டி.. நா... நான் காலேஜ் கிளம்பரேன்.. பாத்துக்கோ.." அர்த்தத்துடன் பார்த்துவிட்டு கிளம்பினாள் பவி.

ஆழ்ந்த சிந்தனையுடன் தலை ஆட்டினாள் சுகுமாரி.. நடேசனிடம் எப்படி கூறுவது என்ற எண்ணம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டு இருந்தது.. அவன் சம்மதிப்பானா , இல்லை பூகம்பம் வெடிக்குமா.. என்ன முடிவெடுப்பான், கோபத்தில் ஏதாவது செய்துவிட்டால்.. நினைக்க கொஞ்சம் பயம் மனதை கவ்வியது.. பவியின் ஆசை சரியானதா என்ற குழப்பமும் மனதை குடைந்தது.. அவள் வளர்ந்திருந்தாலும் வெளிவிஷயங்கள் , வெளி மனிதர்களை எடைபோடத் தெரியாத பருவமாயிற்றே.. அவன் எப்படி பட்டவனோ.. தன் கணவன் போல இருந்தால்.. நினைக்க நினைக்க கொஞ்சம் நடுங்கியது சுகுமாரி பாட்டிக்கு.. இருப்பினும் பவி இவ்வளவு தீர்மானமாக இருப்பது கொஞ்சம் அவள் மீது ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது.. பவியின் பார்வை சரியானதாக இருக்கும் என்று..!

காலேஜிற்கு சென்ற பவி அங்கு எந்த கலகலப்பும் இன்றி வெறுமையாய் இருப்பது ரம்யாவிற்கு குழப்பத்தையும் வருத்தத்தையும் அளித்தது..

" என்னடி பவி.. வந்ததுலேந்து பாத்துட்டு இருக்கேன்.. உம்முனே இருக்க.. என்ன ஆச்சு.. நேத்துவேற லீவு.. எத கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்கற.. என்னடி ஆச்சு.. என்கிட்ட கூட சொல்லமாட்டியா.." ரம்யா கேட்க.

அதுவரை அடக்கி வைத்திருந்த பாரம் மனதை அசைக்க கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு..

" ஹே... என்னடி ஆச்சு.. எதுக்கு அழற.. ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ப்.. இது க்ளாஸ்.. என்கூட வா.. கார்டன் பக்கம் போலாம்.." பதறிப் போன ரம்யா பவியை தனியாக இழுத்துக் கொண்டு சென்றாள்.. வாயை திறக்காமல் பவி விசும்ப...

" ஏய்.. என்னதான்டி ஆச்சு.. பவி.. ப்ளீஸ் சொல்லு.."

" ஹ்ம்.. எ.. எங்க வீட்ல மாப்ள பா... பாத்துட்டாங்க.."

" ஃபிக்ஸ் ஆயிருச்சா.." அதிர்ந்து கேட்டாள்..

" கிட்ட தட்ட அப்டித்தான்.. அவங்களுக்கு என்ன பிடிச்சு போச்சாம்.. இந்த வாரம் பொண்ணு பாக்க வராங்க.."

" ஓ.. நேரப் பாத்து உன்ன பிடிக்கனுமே.. ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துவரனுமே.. அதுக்குள்ள ஏன் பவி பயப்படற.."

" இ.. இல்ல பவி.. கண்டிப்பா ஒத்துப்பாங்கன்னு அப்பா.. அப்பா சொல்லிட்டார்... எ.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலடி."
தொண்டை அடைத்தது பவிக்கு..

" ஹே.. பவி.. பயப்படாத.. ரிஷிக்கு சொல்லிட்டியா.. "

" நேத்து வீட்ல இருந்ததால பேச முடியல.. மெசேஜ் அனுப்சேன்.. இ.. இன்னிக்கு பாக்கலாம்னு.."

" லூசு.. காலைலே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல.. மொதல்ல அவனுக்கு போனப் போடு.. இப்பவே அவன பாத்துட்டு விஷயத்த சொல்லிடுவோம்.. நானும் வரேன்.."

" இ... இப்போ எப்டிடி.. க்ளாஸ் இருக்கே.."

" அடியே.. வாழ்க்கையே கேள்விக்குறி ஆகப்போகுது.. இப்ப போய்.. அதெல்லாம் உடம்பு சரியில்லன்னு சொல்லிட்டி பெர்மிஷன் போட்டுக்கலாம்.. அவனுக்கு போன் பண்ணி ஹாபனவர்ல வரானான்னு கேளு.." ரம்யா அவசரப்படுத்த போனை எடுத்து அவனை அழைத்தாள் பவி.. ரிங் போய் கொண்டே இருந்தது.. திரும்பவும் போன் செய்தாள்.. கட் ஆனது.. அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.. மீட்டிங்கில் இருப்பதாய்..

" சே.. நிலமை புரியாம.. ஹூம்.. சரி வா.. அவன் கால் பண்ணின உடனே சொல்லிட்டு கிளம்பலாம்.. வா.. " ரம்யா அலுத்துக்கொண்டே பவியுடன் க்ளாஸ் ரூமை அடைந்தாள்..

நேரம் மதியத்தை தாண்டியது.. அவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.. சோர்ந்து போனாள் பவி..

மணி மூன்றைத் தாண்ட போன் ஒலித்தது.. அறையில் எல்லோரும் அமைதியாய் இருக்க போன் அலறல் மட்டும் சப்தமாக கேட்டது.. பாடம் நடத்திக் கொண்டிருந்த மிஸ் இவளை முறைத்து பார்க்க.. வேகமாக எழுந்து வெளியில் வந்தாள், அட்டண்ட் செய்ய..

" ஹாய் பவி குட்டி.. என்ன காலைலயே போன் பண்ணிருக்க.. ம்ம்ம்.. என்ன பாக்க அவ்ளோ அவசரமா.. முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்.. அதான் பேச முடியல.. எப்போ பாக்கலாம்.. இன்னிக்கு லீவா.." அவன் ஆர்வமாக பேசிக் கொண்டே போக..

" ரிஷி.. ஒரு நிமிஷம்.. உங்கள்ட முக்கியமா பேசனும்.. அ.. அதான் கால் பண்ணேன்.." குரலில் ஓர் படபடப்பு தெரிந்தது..

" எ.. என்னாச்சு பவி.. எனி திங் ப்ராப்ளம்.." கொஞ்சம் கலவரமானான்..

" ம்ம்ம்.. ஆமா.. உங்கள பாக்கனும்.. வரமுடியுமா.."

" ஷூயர்.. ஷூயர்.. காஃபி ஷாப் வந்திடறயா.. ஐ'ல் பி தெயர் வித் இன் ஹாபனவர்.. "

" ம்ம்ம்.. சரி... "

உள்ளே வந்து ரம்யாவின் அருகில் அமர்ந்தாள்..

" போன்ல யாரு.. ரிஷியா.."

" ம்ம்ம்..."

" வரேன் சொல்லிட்டானா.." அவள் தலை அசைக்க.. அப்போ கிளம்பலாம் வா.." ரம்யா பரபரத்தாள்.. பவி ஆசிரியரை பார்க்க , வேகமாக எழுந்த ரம்யா பவியை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தாள்..

நேராக ஆசிரியரிடம் சென்று.. " மிஸ்.. இவ பாட்டிக்கு சீரியஸ்.. இப்போதான் கால் வந்தது... நாங்க உடனே போனும்.." முகத்தை பதட்டமாக வைத்துக் கொண்டு கூறினாள்.. ஆசிரியர் தலை அசைக்க.. பவியை இழுத்துக் கொண்டு வெளியேறினாள் ரம்யா..

இருவரும் அந்த காபி ஷாப்பை அடைந்திருந்தனர். அங்கு காத்துக் கொண்டிருந்தான் ரிஷி..

" என்னாச்சு பவி.. வா.. உள்ள போய் பேசலாம்.." இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.. தனி பகுதியில் மூவரும் அமர்ந்தனர்..

" சொல்லு பவி.. " அவன் கேட்க , சொல்ல முடியாமல் வார்த்தை அடைத்து வந்தது பவிக்கு.. தலையை கவிழ்ந்து கொண்டாள்.. அருகில் இருந்த ரம்யா அவளது தோளை ஆதரவாக பற்றியபடி அவனிடம் கூற ஆரம்பித்தாள்..

" ரிஷி.. இவங்க வீட்ல இவளுக்கு மாப்ள பாத்துட்டாங்க.. இந்த வீக் பொண்ணு பாக்க வராங்களாம்.. அல்மோஸ்ட் பிக்ஸ் ஆன மாதிரிதான்.."

" என்ன சொல்றீங்க.." அதிர்ந்து போனான் ரிஷி..

" எஸ்... இவங்க அப்பா இதுக்கு ஒத்துக்குவாரான்னு தெரியாது.. வீட்ல யார்கிட்டயும் சொல்லமுடியாம தடுமாறறா.. நீங்கதான் இதுக்கு வழி சொல்லனும்.." ரம்யா படபடவென கூற சிந்தனையில் ஆழ்ந்தான் ரிஷி.. சிறிது நேரம் மெளனத்தில் கரைய, அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரம்யா கொஞ்சம் கோபமானாள்..

" என்ன மிஸ்டர் ரிஷி.. எதுவும் பேசாம இருக்கீங்க.. நீங்க அவள உண்மைலே லவ் பண்றீங்கதானே.. இல்ல ஜஸ்ட் டைம் பாஸூக்கா.. ஒன்னுமே சொல்லமாட்டிக்கிறீங்க..." ரம்யா கேட்க..

" நீங்க நினைக்கற மாதிரி நான் இல்ல.. ரைட்... பவிய என் உயிருக்கு உயிரா நேசிக்கறேன்.. எப்படி இவங்க வீட்ல பேசறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.. இப்போ கூட இவ வீட்டுக்கு போய் இவங்க அப்பாகிட்ட பேசிடுவேன்.. எனக்கொன்னும் பயமில்ல.. சினிமாத்தனமா சண்ட போட்டு தூக்கிட்டு வர நான் முட்டாள் இல்ல.." கொஞ்சம் விரைப்புடன் கூற ரம்யா தலைகவிழ்ந்தாள்...

" அதுக்கப்பறம் இவ நிலைய நினச்சு பாருங்க.. நிம்மதியா இருக்க முடியுமா.. எங்க கல்யாணம் எல்லாரோட ஒப்புதலோட ஊரறிய ஜாம்ஜாம்னு நடக்கனும்.. நாங்க ரெண்டு பேரும் தப்பு எதுவும் பண்ணல.. ஓடி போறதுக்கு..! எதையும் சிந்திக்காம எமோஷனலா முடிவெடுக்கறது முட்டாள்தனம்.. அத நான் என்னிக்கும் பண்ண மாட்டேன்.. எங்க வீட்ல நான் பேசி சம்மதம் வாங்கறேன்.. நீ ஒன்னும் பயப்படாத பவி , நான் இருக்கேன்.. பொண்ணு பாக்கத்தான வராங்க.. பாத்துட்டு போட்டும்..." ரிஷி பவியின் கைகளை பற்ற , அவன் பார்வையில் தெரிந்த நேசத்தில் நெஞ்சம் நிறைந்தாள் பவித்ரா.!

பவியை சமாதான படுத்தி அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தான் ரிஷி..
அம்மா சமையல்கட்டில் இருக்க , அப்பா ஹாலில் பேப்பருடன் அமர்ந்திருந்தார்..

எப்படி சொல்வதென்ற தயக்கத்துடன் நேராக தன் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டான்.. எதுவாக இருந்தாலும் அம்மாவின் மூலம் அப்பாவிடம் ஒப்புதல் பெறுவது ரிஷியின் வழக்கம்.. ஆனால் , காதல் விஷயத்தை சுந்தரவல்லியிடம் வெளிப்படையாகக் கூற தயக்கமும் ஒருவித பயமும் உள்ளுக்குள் ஓடியது..!
இருப்பினும் அவளிடம் பேச வேண்டிய கட்டாயம் அவனை தூண்டிக் கொண்டே இருந்தது.. தவிப்புடன் இருந்தான்..

இன்னும் ஓரிரு தினங்களுக்குள் சுந்தரவல்லி கொஞ்சம் இலகுவாக இருக்கும் சமயத்தில் தனிமையில் பேசி சம்மதத்தை பெற வேண்டும் என்ற தீர்மானத்தான் ரிஷி..! அப்பாவிடம் நேரடியாக இந்த விஷயத்தை சொல்வது சரியல்ல என நினைத்துக் கொண்டான்.. உள்ளுக்குள் ஒருவித படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.. பவியிடம் தைரியமாக கூறிவிட்டாயிற்று.. எப்டி எல்லோருடைய சம்மதத்தையும் பெற்று அவளை கரம் பிடிப்பது என நினைக்கையில் மலைப்பாக இருந்தது.. மனம் தளரக் கூடாது.. தனக்குள் சொல்லிக் கொண்டான்.." என்னோட பவிய நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. அவ இல்லாம என் வாழ்க்கைய நினச்சு பாக்கவே முடியாது.." நினைக்க நினைக்க அவனுள் ஓர் வைராக்யம் ஊற்றெடுத்தது.. அவள் நினைவுகளோடு உறங்கிப் போனான்..

இரண்டு நாட்கள் இப்படியே செல்ல , அம்மாவிடம் அவ்வப்பொழுது மகிழ்ச்சியாகப் பேசி அவளிடம் இந்த விஷயத்தை பற்றி பேச தயாராக்கிக் கொண்டிருந்தான்.. ரிஷி மகிழ்ச்சியாக இருப்பது சுந்தரவல்லிக்கும் அவனை சரிகட்டிவிடலாம் என்ற எண்ணம் ஓடியது..

அன்று ,

" ரிஷி கண்ணா... இன்னும் எவ்ளோ நாளைக்குத் தான் இப்டியே கல்யாணம் வேண்டாம்ன்னு தள்ளிப் போட்டுண்டே இருப்பே.. ம்ம்ம்.." சுந்தரவல்லி ஆரம்பித்தாள்..

" ஹாஹா.. பண்ணிக்க வேண்டியதுதான்.. இனிமே என்னம்மா.. அதுக்குதான் நேரம் வந்துடுத்தே.." மேலோட்டமாக விஷயத்தை ஆரம்பித்தான் ரிஷி.. சுந்தரவல்லிக்கு தன் கணக்கு பலிக்கபோகும் நேரம் வந்ததென குஷியானது..

" ரிஷி கண்ணா.. அம்மா பேச்சத்தான் நீ தட்டமாட்டியே.. சரின்னு ஒரு வார்த்த சொன்னேனா உடனே வேலைல இறங்கிடுவேன்.." ஜனனியை மனதில் வைத்து அவள் கேட்க..

" உன்கிட்ட தானேம்மா எல்லாத்தையும் ஷேர் பண்றேன்.. என்னோட ஆசைய நீ நிறைவேத்தி வைக்கமாட்டியா என்ன.." ரிஷி தன் ஆசையை கூறினான்..

" உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் ரிஷி.. உனக்கு அழகா ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சுட்டு நீ நல்லபடியா ஜாம் ஜாம்னு வாழறத பாக்கனும்னுதான் ஆசப்படறேன். ஆனா உங்கப்பா தான் எதுக்கெடுத்தாலும் அது இதுன்னு பேசி எதையும் செய்ய விடமாட்டேங்கறார்.. நீ எப்பவும் என் பேச்ச கேப்பன்னு நேக்கு தெரியும்.." அவள் புன்னகைக்க.. தன் காதலைப் பற்றி சொல்ல சந்தர்ப்பம் வந்ததென நினைத்தான் ரிஷி.

" அ.. அப்போ.. எனக்கு.. " வார்த்தைகளை கோர்க்குமுன்னே..

" ரிஷி.. உன் ஒப்புதல் போதும்.. அம்மாட்ட விட்டுடு நான் பாத்துக்கறேன்.. நீ எதுக்கும் கவலப்படாத.. அப்பாவ சமாளிக்க ஒரு வழி வெச்சுருக்கேன். அதிரடியா இறங்கினாத்தான் சரிவரும்.. இன்னிக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடறேன்.." சுந்தரவல்லி இடை மறித்து பேசிக் கொண்டே போனாள்..

கொஞ்சம் குழம்பிப் போன ரிஷி..." அ.. அது... நான் சொல்ல வந்தது..."

" நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. கொஞ்சம் கிளப் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு.. போயிட்டு வந்துட்டு பேசறேன்.. " மடமடவெனக் கிளம்பினாள் சுந்தரவல்லி.. என்ன சொல்வதெனத் தெரியாமல் குழம்பிப் போனான் ரிஷி..

ரிஷியையும் அழைத்துச் செல்ல வேண்டாமென ஆட்டோவை வைத்துக் கொண்டு அகிலா வைத்யநாதன் வீட்டிற்கு கிளம்பினாள் சுந்தரவல்லி..

பெரிய காம்பவுன்ட் வாலினுள் நுழைந்து நின்றது ஆட்டோ.. மனதில் ஓர் படபடப்புடன் உள்ளே நுழைந்தாள் சுந்தரி..

ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த அகிலாவை பார்த்ததும் சந்தோஷம் பீரிட்டது..

" ஹாய் அகிலா.. எப்டி இருக்கே.. உன்கிட்ட அவசரமா பேசனும்னு தான் சொல்லாம கொள்ளம கிளம்பி வந்துட்டேன்.. ஹவ் ஆர் யூ.."

" யா... குட்... " வேண்டா வெறுப்பாய் கூறினாள் அகிலா.. அவளருகில் சென்று அமர்ந்து கொண்ட சுந்தரவல்லி பேச்சை ஆரம்பித்தாள்..

" ஜனு இல்லையா.. வெளில போயிருக்காளா.. அப்பறம் , ரிஷி ஜனு கல்யாண விஷயமா நான் ஒன்னு யோசனை பண்ணிருக்கேன்.. என் ஆத்துக்காரர் கொஞ்சம் முரண்டு.. ரிஷி அப்டி இல்ல.. அவன் சம்மதம் சொல்லிட்டான்.. அதான்.. நீயும் உங்க ஆத்துக்காரரும் எங்காத்துக்கு ஒருதரம் ஃபார்மல் விசிட் வந்தேள்னா எல்லாருமா பேசி ஒரு முடிவுக்கு வந்துடலாம்.. என்ன சொல்றே.." சுந்தரி படபட வென கொட்டினாள்..

" ஃபார் வாட்... " கொஞ்சம் கோபம் ஏற , கேட்டாள் அகிலா..

" என்ன அகிலா... எதுக்குன்னு கேக்கறே... எல்லாம் ஜனி ரிஷி கல்யாணத்த பத்திதான்.. உங்க ஆத்துக்காரர் வந்து பேசினா , இவருக்கு
உங்க அருமை பெருமை புரியும்.. நிச்சயம் சம்மதிச்சுடுவார்.. அப்பறம் நல்ல நாளா பாத்து தட்ட மாத்திண்டிட வேண்டியதுதான்.. இந்த கல்யாணம் முடுஞ்சா நேக்கு நிம்மதி.."

" எதுக்காக நாங்க வரனும்.. ஹ்ம்.. உன் பையனுக்கு எத்தனபேர பாப்பே.. காதலிக்க ஒருத்தி.. கல்யாணம் பண்ணிக்க வசதியா ஒருத்தியா.. ஹவ் க்ளவர்.. "

" எ.. எத்தன பொண்ணா.. என்ன சொல்றே.. " கொஞ்சம் அதிர்ந்தாள் சுந்தரி..

" லுக் சுந்தரி.. நீ இப்டி என்னை ஏமாத்துவேன்னு நான் கனவுல கூட நெனச்சு பாக்கல.. என் ஸ்டேட்டஸூக்கு, ஜனுவோட அழகுக்கு , பசங்க க்யூல வந்து நிப்பாங்க.. பெரிய இடத்தையெல்லாம் விட்டுட்டு ஸ்டேட்டஸ் பாக்காம உன் பையனை பாத்தேன் பாரு.. என்ன சொல்லனும்.. அவனுக்கு என்ன அவ்ளோ ஹெட்வெயிட்.. வேற பொண்ண காதலிக்கறான்னா முதல்லயே சொல்ல வேண்டியதுதானே.. அது இல்லாம என் பொண்ண இன்சல்ட் பண்ணி... சே.. அவள வேண்டாம்னானாமே.. அவன் யாரு என் பொண்ண ரிஜக்ட் பண்ண.. நான் இப்ப சொல்றேன்.. ரிஷி ஜனுக்கு வேண்டாம்.. எனக்கும் உன் சம்பந்தம் வேண்டாம்.. இனிமே இதப் பத்தி பேச என்கிட்ட வராதே.. பழகின ப்ரண்ட்னால இதோட நிறுத்திக்கறேன்.." கொந்தளித்த அகிலாவைக் கண்டு மூச்சடைத்துப் போனாள் சுந்தரவல்லி.. ஒரு நிமிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் முழித்தாள்..

" எ.. என்ன சொல்ற அகிலா.. ரிஷி.. ரிஜக்ட் பண்ணானா.. காதல் அது இதுங்கறே.. என் பையன் அப்டிபட்டவன் இல்ல.." படபடத்தாள் சுந்தரவல்லி.

" ஹூம்.. நல்ல அம்மா நல்ல பையன்.. நல்ல ட்ராமா.. ஜனு ரிஷிய வேண்டாம்னு சொல்லிட்டா.. எனக்கும் தான்.. தட்ஸ் இட்.. இதோட இந்த பேச்ச நிப்பாட்டிப்போம்.." முகத்தை திருப்பிக் கொண்டாள் அகிலா..

" இங்க பார் அகிலா.. உன் பொண்ணுக்கு இஷ்டமில்லைங்கறதுக்காக என் பையன் மேல பழி போடாத.. அவன் அப்படிபட்டவன் இல்ல.."

" ஹோ... ரியலி.. புவர் மதர்.. போ.. போய் உன் பையன்கிட்டயே கேளு.. என்ன சொன்னான்னு.. அப்போ தெரியும் அவனோட லக்ஷனம்.. ஜனு நாட் லைக் தட்.. என் பொண்ணுக்கு பொய் சொல்லனும்கற அவஷ்யம் இல்லே.. அவளுக்கு ரிஷி மாதிரி ஒரு பையன் தேவையும் இல்ல.. யூ கேன் கோ நெள.." முகத்தில் அடித்தார்போல் அகிலா கூற , கோபமும் அதிர்ச்சியும் அவமானமும் ஒரு சேர அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக கிளம்பினாள் சுந்தரவல்லி.. மனதில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் முளைத்து அவள் மென்னையை பிடித்தது.. ரிஷி அப்படி எதுவும் செய்திருக்க மாட்டான் என திட்டவட்டமாக நம்பினாள்.. ஜனனி மீதும் அகிலா மீதும் இனம்புரியாத கோபம் பொங்கியது.. ஆற்றாமையும் தோல்வியும், உடைந்து போன கனவுகளும் அவளுக்குள் கோபக் கனலை ஊற்றியது..

ஆட்டோவிலிருந்து இறங்கி வேகவேகமாக வீட்டின் உள்ளே வந்தவள் கிச்சனுக்கு சென்று மடமடவென நீரினை அருந்தினாள்.. மனம் சாந்தமடைய மறுத்தது.. தன் மகனை விட்டுக்குடுக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.. துவண்டுபோய் சோஃபாவில் அமர்ந்தாள்.. வெளியில் சென்ற சந்திரசேகர் உள்ளே நுழைந்தார்..

" என் சுந்து அசந்து உட்காந்து இருக்கியே.. என்ன ஆச்சு... வெயில்ல போய்ட்டு வந்தியா.."

அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.. அவரிடம் சொன்னால் தன்னை எங்கு அவமானப்படித்தி விடுவாரோ என உள்ளுக்குள் பொறுமியபடி முனுமுனுத்தாள்.. " ஒன்னுமில்ல.. லேசா தலைவலி.. அவ்ளவுதான்.."

அவர் சிரித்தபடி மாடிக்கு சென்றுவிட வெளியில் சென்றிருந்த ரிஷி உள்ளே நுழைந்தான்.. சுந்தரி கவலையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

" என்னம்மா.. ஒருமாதிரியா இருக்கே.. கிளப்புக்கு போயிட்டு வரேன்னு சொன்னே.. என்ன ஆச்சு.."

அவனை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..

" என்னம்மா ஆச்சு.. ஏன் இப்டி பாக்கற.." ரிஷிக்கு கொஞ்சம் கலக்கம் பிறந்தது..

நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி எழ அவனை ஊடுருவப் பார்த்து அவன் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்.. தன் மகன் தன்னிடம் எதையும் மறைப்பதில்லை என்ற நம்பிக்கை அவளது பார்வையில் ஓர் எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருந்தது.. மெள்ள கண்களை தாழ்த்திக் கொண்டான் ரிஷி..

" எ.. என்ன ஆச்சுமா.. "

" அகிலா வீட்டுக்கு போயிருந்தேன்.." அவனை முழுமையாக பார்த்தபடியே கூறினாள்..

" யா.. யாரு... உ.. உங்க பிரெசிடென்ட் வீட்டுக்கா.." தடுமாறினான்.. முகத்தில் வியர்வை பூத்தது..

" ஆமா.. எல்லாம் உன் கல்யாண விஷயமாத்தான்.. அவள்ட்ட பேசி ஒரு முடிவெடுத்திடலாம்னு போனேன்.. ஹூம்.. அந்த அகிலா இப்டி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.."

" எ... என்ன.. சொன்னா.."

" அவ பொண்ண உனக்கு தர மாட்டாளாம்.. உன்னபத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி சப்ப கட்டுகட்றா.. நீ ஏதோ ஒரு பொண்ண லவ் பண்றியாம்.. ஜனனிய இன்ஸல்ட் பண்ணிட்டியாம்.. என்னலாமோ சொல்றா.. அவ பொண்ணுக்கு மாப்ளைகள் க்யூல நிக்கறாளாம்.. ஏன் , உனக்குந்தான் என்ன குறை.. இவோ இல்லைனா , வேற பொண்ணே கிடைக்காதா.. உன் அழகுக்கும் திறமைக்கும் ஆயிரம் பொண்கள் வருவா.. நமக்கென்ன அந்தஸ்து இல்லையா.. ஆஸ்தி இல்லையா.. என்னமோ இவ மட்டும் தான் பணக்காரின்னு நெனப்பு.. ஹூம் , அப்பா ஏற்கனவே சொன்னார்.. வெளிநாட்டுக்கு போய் டாம்பீகமா திரிஞ்சதுகள்லாம் சரிப்பட்டு வராதுன்னு.. சரியா போச்சு.. ஹூம்.. உன்ன இப்டி பேசுவான்னு நெனச்சே பாக்கலை.. நேக்கு படபடவென வந்துடுத்து.. போட்டும் போன்னு வந்துட்டேன்.. இனி அவோ சவகாசமே வேண்டாம்.." கண்களில் வெறுமை இழையோடியது..

அமைதியாகவே இருந்தான் ரிஷி..

" கண்ணா.. ரிஷி.. உன்ன பத்தி நேக்கு நன்னாத் தெரியும்.. அவ சொல்றத நம்பிடுவேனா... அவ முன்னாடியே உனக்கு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி அவோ மூக்க ஒடைக்கறேன்.. நம்ம கிளப் மெம்பர் அருணா சீதாராம் இருக்காளே.. அவ பொண்ணு நளினா , சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்கா.. அவ அப்பா கோடீஸ்வரர்.. சொத்து பத்து ஏராளம்.. நமக்கு ஏத்த இடம்.. அவள்ட்ட பேசி உனக்கு முடுச்சுபுடறேன்.. அவ எம்பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டா.. அந்த பொண்ணும் லக்ஷ்ணமா இருப்போ.. அருணாவ இங்கயே வரச் சொல்லி...." சுந்தரவல்லி பேசிக் கொண்டே போக ரிஷி இடைமறித்தான்..

" அம்மா.......... நா.... நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.. " ரிஷி அமைதியாகக் கூற , பாதியில் பேச்சை நிறுத்தி அவனை புரியாமல் பார்த்தாள்...

" என்ன.... என்ன சொன்னே..." அவனை குழப்பத்துடன் ஏறிட்டாள்..

" நான் ஒருத்திய லவ் பண்றேன்.. அவள மனசார விரும்பறேன்.. அவளத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. " ரிஷி தெளிவாகக் கூற..

அவன் மீது வைத்திருந்த அத்தனை நம்பிக்கையும் ஒரு நொடியில் இடிந்து விழுந்து தரைமட்டமாகி அவள் இதயத்தை தாக்க விரிந்த கண்களுடன் அதிர்ச்சியாய் பார்த்தாள் சுந்தரவல்லி.. " எ.. என்னடா சொல்ற.. அ.. அப்போ அகிலா சொன்னது.. உ.. உண்மையா.."

" ம்ம்ம்....." மெள்ள தலை அசைத்தான் ரிஷி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 22

அறையில் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் பவித்ரா.. இன்னும் மூன்று நாட்களில் பெண்பார்க்க வருவதாய் அப்பா சொன்னது அவளை இனம் புரியாத கலக்கத்தில் ஆழ்த்தியது.. தனக்கிருக்கும் ஒரே துணை பாட்டி மட்டும் தான்.. அவளும் அமைதி காப்பது பவிக்கு அச்சத்தை ஊட்டியது.. எழுந்து பாட்டியின் அறைக்கு சென்றாள்.. சுகுமாரி பாட்டி படுத்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.. அருகில் சென்று அவள் கால்மாட்டில் அமர்ந்தாள் பவி.. மெள்ள கால்களை பவி பிடிக்க , நினைவு திரும்பியவளாய் பவியை ஏறிட்டாள் சுகுமாரி..

" என்ன கண்ணு.. எப்ப வந்தே.. பாக்கவே இல்ல பாரு.. நெனப்பு முழுக்க ஏதோ பழய சிந்தனை.. எப்பத்தான் என் மனசு ஆறுமோ.. ஹ்ம்ம்.." பெருமூச்செறிந்தாள்..

பவி எதுவும் பேசாது அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.. பார்வையில் தவிப்பேற கண்களால் பாட்டியிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள்..

" ஹ்ம்ம்.. கொஞ்சம் பொறுமையா இரு பவி.. உங்கப்பாட்ட நேரம் பாத்து பதவீசாத் தான் பேசனும்.. அவன் குணம் தான் நோக்கு தெரியுமே.."

" இன்னும் பொறுமையா இருந்தா என் வாழ்க்கையே போய்டும் போல இருக்கே பாட்டி.. அவா மூனு நாள்ல பாக்க வரேன்னு சொல்லிருக்காளே.. பிக்ஸ் ஆயிடுத்துன்னா நான் என்ன பண்றது பாட்டி.. மனச வேற இடத்துல வெச்சுண்டு ஜடம் மாதிரி இன்னொருத்தனோட வாழ முடியாது பாட்டி.. அதுக்கு பேசாமா போயிடலாமான்னு தோன்றது..." பவி குலுங்க...

" சீ... அசடு.. எல்லாமே முடுஞ்சு போயிடுத்தா என்ன.. வாழ்க்கைல எல்லாத்தையும் சந்திக்கற தைர்யம் வேணும்.. ஒத்த புள்ளையோட தன்னந்தனியா இருந்து , அவன வளத்து ஆளாக்கி என் கடமைய செஞ்சிருக்கேன்.. மனசுல வைராக்யம் இருக்கனும்.. கடைசி வரைக்கும் போரடற குணம் வேனும்.. அதவிட்டுட்டு இப்படி அபத்தமாலாம் யோசிக்கப்டாது.. புரியறதா.. இன்னிக்கு அவன் வரட்டும்.. பேசிடலாம்.. உன் சந்தோஷம் தான் நேக்கு முக்கியம்.. அதுக்கு உன் செலக்ஷன் சரியான்னு நேக்கு தெரியனும்.. அவன் என்ன பண்றான்.. அவன் அப்பாம்மாலாம் என்ன பண்றா.. அவா குடும்பத்த பத்தி சொல்லு.."

கண்களை துடைத்துக் கொண்டாள்.." அவர் மெடிக்கல் லைன்ல இருக்கார் பாட்டி.. பெரிய கம்பெனி தான்.. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. அவர் அப்பா ரிடயர்ட் பேங்க் மேனேஜர்.. அம்மா ஆத்லதான் இருக்கா.. ரொம்ப நல்ல டைப்.. நல்ல பேமிலி.. கொஞ்சம் வசதியானவா தான்.. ஒரே பையன்.."

" அவா பூர்வீகம் எதுவும் தெரியுமா.."

" அ.. அதெல்லாம் தெரியல பாட்டி.. அவர் தாத்தா கோயம்புத்தூர் பக்கம் பெரிய கப்பெனில மேனேஜரா இருந்தாராம்.. அம்மாவோட பூர்வீகம் எதுவும் சொன்னதில்ல.."

" ஹ்ம்.. நல்ல குடும்பம் தானே.. அவனுக்கு உன்மேல விருப்பம் இருக்குதானே.. கடைசி வரைக்கும் உன்ன கண் கலங்காம பாத்துக்கனுமே.. அவன் அம்மா அப்பாலாம் எப்டி , நல்லவாளா.."

" அவர் அம்மா மூலமாத்தான் அவரே பழக்கமானார்.. அவா ரொம்ப நல்ல டைப்.. ஜோவியலா பழகுவா.. என்னை அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.. அவாத்துக்கு ஒருதரம் கூட்டிண்டு போயிருக்கா.. அவர் அப்பா தான் கொஞ்சம் பழமைவாதி.. "

" அப்போ.. அவாளுக்கு விஷயம் தெரியுமா.. "

" இ... இல்ல பாட்டி.. அவர்ட்ட பொண் பார்கற விஷயத்த சொல்லிட்டேன்.. அவர் ஆத்ல பேசி சம்மதம் வாங்கறேன்னு சொல்லிருக்கார்.. அதுக்குள்ள அப்பா எதாவது முடிவெடுத்துட்டார்னா என்ன பண்றது.. நீ கொஞ்சம் பேசிடு பாட்டி.."

" ஹ்ம்... நல்ல குடும்பமாத் தான் தெரியறது.. நடேசன் வரட்டும் பேசறேன்.." பாட்டி சொல்ல கொஞ்சம் மன ஆறுதல் கொண்டாள் பவித்ரா..

மாலை வேலை முடித்து வீட்டிற்கு திரும்பினார் நடேசன்.. கைகால் அலம்பிக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தார்.. பாட்டியுடன் அமர்ந்திருந்த பவித்ராவிற்கு அடிவயிற்றை பிசைந்தது.. பாட்டியை பார்த்தாள்.. அவளிடம் கை அமர்த்திவிட்டு மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.. புன்னகையுடன் அம்மாவை பார்த்து " ம்ம்... இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு வர்ர வெள்ளி கிழமை சாயங்காலம் வர்ரேன்னு சொல்லிருக்கா.. இன்னிக்கு தான் நேரடியா பையனோட அப்பாட்ட பேசினேன்.. ரொம்ப நல்ல மனுஷன். அவ்ளோ மரியாதை.. பொண்ணாத்துக்காரான்னு எந்த இளக்காரமும் இல்லாதைக்கு நன்னா பேசிண்டு இருந்தார்.. அவர் பையனுக்கு ரெண்டு மூனு இடத்துலேந்து பொண்கள் வந்துருக்காம்.. மாப்ளையாண்டனுக்கு நம்ம பவித்ராவத்தான் ரொம்ப புடுச்சு போய்டுத்தாம்.. வெள்ளிக்கிழமை அன்னிக்கே தாம்பூலம் மாத்திண்டிடலாம்னு சொல்லிட்டார்.. ஹாஹா.."

" ம்ம்ம்.. சந்தோஷம்.." சுகுமாரி சுரத்தில்லாம் பதிலளித்தாள்..

" நேக்கு பரிபூரண சம்மதம்னு சொல்லிட்டேன்.. இதவிட நல்ல வரன் நம்ம பவித்ராக்கு அமையாது.. பகவானா பாத்து அமச்சு குடுத்துட்டார்.. நான் பண்ண பூஜைக்கு கைமேல பலன் கெடச்சுடுத்து.. அவா வெரி சிம்பிள்.. அவர் பையன் அவ்ளோ ரிசர்வுடு டைப்பாம்.. அப்பா சொல்றதுக்கு மறுத்து பேச மாட்டானாம்.. அப்பறம்..." அவர் பேசிக் கொண்டே போக பாட்டி அவரையே பார்த்து
கொண்டிருந்தாள்..

அவர் புகழாரத்தை முடித்து நிறுத்த , " நடேசா.. உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் சொல்லனும்.." பாட்டி நிதானமானத் தொடங்கினாள்..

" சொல்லு.. உன் பேத்தி முரண்டு புடிக்கறாளா.. கல்யாணம் வேண்டாம்னு
.. எங்க அவோ.. ரூம்ல உட்காந்துண்டு உன்ன அனுப்சுவிட்டாளா.. ஹூம்.." பார்வையில் சிறிது கோபம் தெரிந்தது..

" நடேசா.. நான் சொல்றது கொஞ்சம் நிதானமா கேப்பியா... படபடன்னு இருக்காதே.. "

" ம்ஹ்ம்.. இவ்வளவு வருஷம் நிதானமாத் தானேம்மா நடந்துண்டு இருக்கேன்... அப்டி தானே நீ என்ன வளத்திருக்கே.."

" கல்யாணம்கறது ஆயிரம் காலத்து பயிர்.. பயிரிடற நிலமும் சோட போயிடப்படாது.. விதையும் சோடையா இருக்கப்டாது.. அப்பத்தான் சம்சார வாழ்க்கை வளந்து பரிமளிக்கும்.. அந்த காலம் மாதிரி இவன் தான் உனக்கு ஆத்துக்காரர்.. இவ தான் ஆத்துக்காரி.. இவர் சொல்படித்தான் நடக்கனும்.. அவர் ஆடுன்னா ஆடனும் , பாடுன்னா பாடனும்கறது இந்த காலத்துக்கு சரியா வராது.. உனக்கு பங்கஜத்த பாக்கும்போதே அவளோட விருப்பத்த கேட்டுட்டுத்தான் கல்யாணத்தையே பண்ணினேன்.. நியாபகம் இருக்கா.. என்னிக்காவது உங்க ரெண்டுபேருக்கும் பிணக்கம் வந்துருக்கா.. இவ்ளோ வருஷம் ஒருத்தருக்கொருத்தர் தோள் கொடுத்து தானே வாழ்ந்திருக்கேள்.."

சுகுமாரியை விநோதமாக பார்த்தார் நடேசன்..

" இப்போ காலம் மாறிடுத்து.. பொண்கள படிக்க வைக்கறோம்.. வேலைக்கு அனுப்பறோம்.. அவாளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கோம்.. " நிறுத்தினாள்.

" இப்போ என்ன சொல்ல வர்ரே.. அவளுக்கு கல்யாணம் வேண்டாம்னா விட்டுடறதா.. அவளுக்கு என்ன தெரியும் சொல்லு.. எதாவது அனுபவப் பட்ருப்பாளா.. இல்ல இந்த பந்தத்தோட அருமைதான் தெரியுமா.. படிப்பு வேலை மட்டுமே எல்லாம்னு ஆயிடுமா.. அதத் தாண்டி வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கு.. ஒரு துணை வேணும்.. குழந்தை குட்டிகள் வேணும்.. அப்பத்தான் வாழ்க்கை முழுமை அடையும்.. அதுக்கு காலாகாலத்ல ஒரு கல்யாணம் பண்ணிக்கனும்.. அத சரியான நேரத்ல பண்ணி வெக்க வேண்டியது பெத்தவா கடமை.. அதத்தான் நான் செஞ்சுண்டு இருக்கேன்.. அது அவளுக்கு புரியாட்டியும் நோக்கு புரியும் தானே.. மூனு தலைமுறைய பாத்தவளாச்சே.. வாழ்க்கையோட சாராம்சத்த அனுபவஸ்தி நீதானம்மா அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கனும்.. அதவிட்டுட்டு உன் பேத்தி சொல்றான்னு என்கிட்ட பேசறியே..."

இவர்கள் பேச பங்கஜமும் அங்கு வந்து நின்று கொண்டாள்..

" டி பங்கஜம்... பாரு அம்மாவ , அவ பேத்திய விட்டுக் கொடுக்க மனசில்லாதைக்கு என்னோட மல்லுகட்டிண்டு இருக்கா.." அவர் கூற பங்கஜமும் சேர்ந்து கொண்டாள்.

" அம்மா.. அவளுக்கு செல்லங்குடுத்தது போதும்னு தோன்றது.. வேளை கெட்ட வேளைல வெளில போய்ட்டு வர்ரா.. வயத்துல நெருப்பக் கட்டிண்டு இருக்க வேண்டி இருக்கு... ஊரும் ஒலகமும் கெட்டு கடக்கு.. வயசு பொண்ணு வெளில போய்ட்டு வர்ரதுக்குள்ள உசுர கைல புடுச்சுண்டு இருக்க வேண்டிருக்கு.. கல்யாணம்னு ஒன்னு ஆயிடுத்துன்னா ஆம்படையான் பாத்துப்பானா.. ஒருத்தன் கைல புடுச்சு குடுத்தா நமக்கு நிம்மதிதானே.."

இருவரையும் மாறி மாறி பார்த்த சுகுமாரி மெள்ள செருமிக் கொண்டாள்..

" நடேசா.. ரெண்டு பேரும் சொல்றது நியாயம் தான்.. இல்லைனு சொல்லலை.. ஆனா சொல்ல வந்த விஷயத்த சொல்ல விடாதைக்கு ரெண்டு பேரும் அனுமானம் பண்ணின்டு பேசினேள்னா என்ன பண்றது..."

" அப்படி என்ன விஷயம்.. சொல்லு.." நடேசன் தயாராக..

" ம்ஹ்ம்..... பவிக்கு கல்யாணத்லே இஷ்டம் இருக்கு.. ஆனா..."

" ஆனா... என்னவாம்.."

" இந்த பையன் வேண்டாம்.."

" ஏன்.. இவனுக்கு என்ன குறச்சலாம்.. நல்ல பேமிலி , நல்ல பையன் , கைநெறய சம்பாதிக்கிறான்.. வேறென்ன வேணும்.. இதவிட நல்ல மாப்ளை எங்க கெடைப்பான்... முடுஞ்சா அவளையே பாக்க சொல்றியா.. நல்ல பையனா.."

மெல்லிய படபடப்பு மேலிட வேகமாக கிளம்பிய மூச்சினை நிறுத்தி , நிதானமாக கூறினாள் சுகுமாரி.." ஆமாம்.. அவளே ஒரு பையன பாத்துட்டா.."

புரியாமல் நடேசனும் பங்கஜமும் விழிக்க..

" பவித்ரா ஒரு பையன விரும்பறா.. அ.. அவன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறா.." சுகுமாரி கூற , நடேசனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது..

" என்னது.. விரும்பறாளா... லவ்வா.. எங்க அவ.. பவி.. பவி.. வாடி இங்க.." கோபத்துடன் கத்தினார் நடேசன்..

ரூமிற்குள் அமர்ந்து இவர்களை பேசியதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவிற்கு அப்பா சத்தமாகக் கூப்பிட உடலெல்லாம் நடுங்கியது.. மிரட்சியுடன் மெள்ள எழுந்து தடுமாறியபடி ஹாலுக்கு வந்தாள்..

" என்னடி.... பாட்டி என்னவோ சொல்றா.. அவ்ளோ பெரிய மனிஷி ஆய்ட்டியா.. ஆ.. தோ பார்.. லவ்வு அது இதுன்னு எவனையாவது கூட்டிண்டு வந்தே பொலி போட்டுவேன்.. உன்ன வெளில அனுப்சது படிக்கத்தான்.. கண்டவனோட ஊர் சுத்த இல்லே.."

அவரை பார்க்க இயலாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள்.. கண்களில் நீர் முட்டியது..

" இதுக்குதான் தினம் ஸ்நேகிதி ஆத்துக்கு படிக்க போறேன்னு ஊர் சுத்திட்டு வரியா.. இதுக்கு உன் ஸ்நேகிதியும் உடந்தையா.. ம்ம்ம்.... இனி அவாத்துக்கு போனே.. அவ்ளவுதான்.. நீ லேட்டா வரும்போதே சந்தேகப் பட்டேன்.. என் பொண்ணு அப்டிலாம் இல்லைன்னு நம்பினேன்.. என் தலைலயே மண்ணள்ளி கொட்ட பாக்கறியா.. இந்த கன்றாவில்லாம் இந்த ஆத்ல நடக்கப்டாது.. ஒழுங்கா மரியாதையா நான் சொல்ற பையன கல்யாணம் பண்ணிக்கறே.. அவாளுக்கு நான் வாக்கு குடுத்துட்டேன்.. என்ன தலை குனிய வெச்சுடாதே.. அப்பறம் நான் என்ன செய்வேன்னு நேக்கே தெரியாது... லவ்வாம் லவ்வு.. பொழப்பத்து போய் திரியறியா... இதுக்கு பாட்டி துணை வேற.. ஏம்மா.. அவதான் எதோ கூறுகெட்டு போய் சொல்றான்னா.. பெரிய மனிஷி நீயும் அவளுக்கு புத்திமதி சொல்றத விட்டுட்டு , ஒன்னுந்தெரியாம என்கிட்ட பேச வந்துட்டே.. " நடேசன் கொதித்தெழ பவி கண்களில் நீர் கொட்ட ஆரம்பித்தது..

" நடேசா......." பாட்டியின் குரல் அதிர ஒரு கணம் அறையே அமைதியானது.. அனைவரும் ஸ்தம்பித்து அவளை பார்த்தனர்..

" கோபத்ல என்ன பேசறோம்னு புரியாம குதிக்காதே.. நான் அனுபவஸ்தி தான்.. கல்யாணம் பண்ணின்டு அத்தன கொடுமையும் பாத்தவ.. அத்தனையும் அனுபவிச்சவ.. எது சரி எது தப்புன்னு புரியாதவ இல்லே... நோக்கென்ன தெரியும் உன் அம்மாவ பத்தி.. ஹ்ம்ம்.. எடுத்தமா கவுத்தமா ஆச்சுன்னு போறவ இல்ல உங்கம்மா.." பாட்டியின் குரல் உயர அடங்கினார் நடேசன்..

" அ... அது இல்ல அம்மா... அவ சின்ன பொண்ணு.. அவ எதோ சொல்றான்னு நீயும்...."

" என்ன மாதிரி என் பேத்தியும் கஷ்டபடப்டாதுன்னு தான் இத்தன தூரம் உன்கிட்ட பேச வந்தேன்.. எல்லா ஆசையும் தொலச்சுட்டு , ஜடம் மாதிரி ஒருத்தனோட ஆசைக்கு தலையாட்டிண்டு அவன சந்தோஷப்படுத்தறது மட்டுமே வாழ்க்கைனு வாழ்ந்துட்டு செத்துப் போயிட கூடாதுனு தான் சொல்றேன்.. என் பேத்தியாவது சுதந்திரமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கைய வாழனும்னு தான் நான் விரும்பறேன்.. அவளுக்கு மனசுக்கு புடிக்காம நம்ம கட்டாயத்துக்காக ஒருத்தன கட்டிண்டு அவனுக்கு பிள்ளை பெத்து குடுத்துட்டு ஒரு அடிமை மாதிரி அவ வாழக் கூடாது.."

கொஞ்சம் அதிர்ச்சியுடனே எல்லாரும் பாத்துக் கொண்டிருந்தனர்..

" என் வாழ்க்கைய பத்தி சொன்னா இந்த நாள் முழுக்க போதாது.. ஹ்ம்ம்.. அதெல்லாம் மீறி உன்ன வளத்து ஆளாக்கி , ஒரு குடும்பத்த அமைச்சிருக்கேன்.. என் குழந்தைக்கு எந்த இடஞ்சலும் வரப்டாதுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் பாத்து பாத்து உன்ன இத்தன தூரம் காத்து வளத்த எனக்கா ஒன்னுந் தெரியாது... " பொறிந்தவள் மெள்ள சாந்தமானாள்.. பெருமூச்சு எழுந்து அடங்கியது..

சிறிது நேரம் அமைதியாகக் கடந்தது.

" ம்ஹ்ம்ம்... அதெல்லாம் விடு.. என் கதை என்னோடையே போட்டும்.. அது ஆராத ரணம்.. ம்ஹ்ம்ம்.. பவி வாழ்க்கையாவது நன்னா இருக்கனும். அவ யாரையோ எவரையோ கூட்டிண்டு வந்து இவனத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு முன்னாடி வந்து நிக்கலை.. நம்ம சம்மதத்தோட தான் எதுவும் நடக்கனும் நெனச்சதனால தான் தன் விருப்பத்த சொல்றா.. நாமும் பெரியவாளாட்டம் நடந்துக்கனும்.. அந்த பையன் நல்ல வேலைல இருக்கான். அவாத்துப் பேரும் இவளுக்கு நல்ல பரிச்சயமாம்.. வாழப்போறவ அவதானே.. உன் ஒப்புதலுக்குதான் காத்துண்டு இருக்கா... இனி பவியோட வாழ்க்கை உன் முடிவுலதான் இருக்கு.. நல்லதோ கெட்டதோ உன் பொண்ணு வாழ்க்கை எப்டி அமையனும் நீயே முடிவெடு.. ஆனா , அவ மனச நோகடுச்சுடாதப்பா.. " பாட்டி முத்தாய்பாய் முடிக்க..

தலையை குனிந்தபடி அமர்ந்தார் நடேசன்.. உள்ளுக்குள் புகைந்தது.." இப்டி இவ என்ன இக்கட்ல விடுவான்னு நெனச்சு பாக்கலை.. ஏற்கனவே பொண்ணு பாக்க அவாள வரச் சொல்லியாச்சு.. இந்த சூழ்நிலைல நான் என்னம்மா முடிவு பண்றது.. எனக்கு துளி கூட இஷ்டமில்லை.. காதல் அது இது எல்லாம் ஆரம்பத்ல நன்னாருக்கும்.. போகப் போகக் கசந்து போய்டும்.. கல்யாண வாழ்க்கைங்கறது வேற.. எல்லா சங்கடங்களும் வரும்.. அப்பறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இருக்காது.. அது அவளுக்கு புரியலையே.. " வெறுப்புடன் பவியை பார்த்தார்..

நேரம் வெறுமையில் கரைந்தது..

பவித்ரா கண்களை துடைத்தபடி பேச ஆரம்பித்தாள்.

" அ... அப்பா.. உங்க பேச்சுக்கு மீறி நான் எதுவும் இதுவரை பண்ணதில்லே.. என்னோட முடிவும் தப்பா இருக்காதுப்பா.. அவர வேனும்னா வரச் சொல்றேன்.. பேசிப் பாருங்கோ.. ரொம்ப நல்லவர்ப்பா.. எ.. என்ன மனசார நேசிக்கறார்.. "

அதற்கும் அவர் மனம் ஏற்கவில்லை.. அமைதி காத்தார்..

" நடேசா.. நம்மாத்து பொண்ணு வாழ்க்கை சந்தோஷமா அமஞ்சா நமக்கும் தானே சந்தோஷம்.. அதுக்கு தடையா நாம இருக்க கூடாதில்லையா.. அம்மா சொல்றேன் கேளு நடேசா.. வேற வரன் அமஞ்சுடுத்துன்னு அவாள்ட்ட பேசிச் சொல்லிடு.. இந்த பையன் ஆத்லேந்து பெரியவாள வரச் சொல்லி பேசலாம்.." சுகுமாரி வழி சொல்ல எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியில் சென்றார் நடேசன்.. அவரது மனம் சஞ்சலத்தில் உழன்றது..

பங்கஜமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்..

கலக்கத்துடன் பார்த்த பவிக்கு புன்னகையுடன் நம்பிக்கை ஊட்டினாள்
சுகுமாரி.

இங்கு..

" என்னடா சொல்றே... ல.. லவ் பண்றியா.. என்ன விளையாடிண்டு இருக்கே.. யாருடா அது..."

" பவித்ரா..."

அதிர்ந்து போனாள் சுந்தரவல்லி..

" யாரு.. ந.. நம்ம.. கோயிலுக்கு வருவளே.. அ.. அந்த... பவித்ரா வா.."

" ம்ம்ம்.." மெள்ள தலை அசைத்தான்..

சுந்தரவல்லியின் முகம் சுருங்கியது..
" நல்ல அடக்கமான பொண்ணு , நன்னா பேசறாளேன்னு ஆத்துக்கு கூட்டிண்டு வந்தா இப்டி பண்ணிட்டாளே.. இந்த காலத்து பொண்கள நம்ப முடியல.."

கொஞ்சம் சூடானான் ரிஷி..

" அம்மா.. ஸ்டாப்.. நீ நெனைக்கற மாதிரி அவ கிடையாது.. சொல்லப் போனா நான் தான் முதல்ல அவள பிரபோஸ் பண்ணேன்.. நேக்கு அவள பிடிச்சிருக்கு.. எனக்கு கல்யாணம்னா அவ கூடத்தான்.. அப்பாகிட்ட நீதான் பேசனும்.. " தீர்க்கமாய் கூறினான்.

" ஏன்டா ரிஷி.. அம்மாகிட்டையே இப்டி பேசறயேடா.. அந்த அளவுக்கு முத்திடுத்தா... சொத்து பத்தோட இருக்கற பொண்களையெல்லாம் விட்டுட்டு அவள பிடிச்சிருக்குங்கறயே.. இது உனக்கே நியாயமா இருக்கா.. அந்த பவித்ரா நம்ப அந்தஸ்துக்கு ஏத்தவளா.. அவள லவ் பண்றேங்கறியே.." பொங்கினாள்..

அமைதியாக இருந்தான் ரிஷி..

" சொல்லுடா.. அம்மா அம்மான்னு பின்னாடியே வருவியே.. அம்மா பேச்ச தட்ட மாட்டேன்னு கனவுக் கோட்டையெல்லாம் கட்டிண்டு இருந்தேனே.. ஹ்ம்.. இப்டி ஷாக் மேல ஷாக்கா குடுக்கறயே.." கொஞ்சம் கண் கலங்கினாள் சுந்தரவல்லி..

இவர்கள் சத்தத்தை கேட்டு மாடியிலிருந்து வேகமாக இறங்கி வந்தார் சந்திர சேகர்..!

" என்ன ஆச்சு.. எதுக்கு சத்தமா பேசிண்டு இருக்கே சுந்து.. ஆத்து பொண்கள் கத்திண்டும் கீசிண்டும் இருந்தா ரொம்ப நன்னாருக்கும்.." கடிந்து கொண்டார்..

" எதுக்கெடுத்தாலும் என்னையே குத்தஞ்சொல்லுங்கோ.. இந்தாத்துக்கு வந்ததுலேந்து வாயை மூடிண்டு தானே இருக்கேன்.. அதுதான் வாழ்க்கைன்னு ஆயிடுத்து.. எங்காத்ல இருந்தப்போ நான் தான் ராணி.. தாங்கி தடுக்கிடுவா.. ஒத்தப் பொண்ணா பொறந்து ராஜாத்தி மாதிரி வாழ்ந்துட்டு இங்க வந்து கஷ்டப்படறேன்.. எங்காத்து மனுஷாளக் கண்டா ஊரே பணிஞ்சு போகும்.. எங்கப்பா டாம்பீகம் என்ன, அம்மாவோட பவிசு என்ன... ஹ்ம்.. நான் தான் தப்பி பொறந்துட்டேன்.. வாயில்லா பூச்சியா..!"

" இப்போ எதுக்கு உங்காத்து புராணத்த பாடறே..."

" அதுதான் ஒன்னுமில்லைன்னு ஆயிடுத்தே.. ஹ்ம்ம்.. இவனக் கேளுங்கோ.. உங்க சீமந்த புத்ரன் லவ் பண்றானாம்.. அவன கண்டிக்கறத விட்டுட்டு.. என்னையே குறை சொல்லுங்கோ.." முறைத்தாள்..

கொஞ்சம் அதிர்ந்து ரிஷியையும் சுந்தரவல்லியையும் மாறி மாறி பார்த்தார்..

" என்னடி பித்துக்குளி மாதிரி உளரரே.. ரிஷி லவ் பண்றானா.. என்னடா ரிஷி.. அம்மா என்னமோ சொல்றா.." குழப்பத்துடன் அவனை பார்த்தார்..

" ஆமாப்பா.. " தலை அசைத்தான் ரிஷி..

" யாருன்னு கேளுங்கோ... உங்க பரம்பரைன்னு பெருமையா பீத்திப்பேளே.. ராஜகோபாலச்சாரியார் பரம்பரை.. "

" யாருடா.. அவோ... யாரு... ம்ம்ம்.. ஜனனியா.. இவ பிரெசிடென்ட் பொண்ணு.. அது மாதிரி எதாவது இழுத்துண்டு வந்துட்டியா... "

" இல்லப்பா.. நம்ப பவித்ரா.."

" ந.. நம்ப பவித்ராவா... யாருடா அது.. நம்ப பவித்ரா.." புருவம் நெறித்தார்..

" அதான் நான் கோயில் பாத்து ஸ்நேகிதம் பண்ணின்டேனே.. அந்த பொண்ணு... நம்பாத்துக்கு வந்திருக்காளே.." சுந்தரவல்லி இடைமறித்தாள்.

கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தவர்.. " ஓ... அந்த பொண்ணா.. ஹ்ம்ம்.. அந்த பொண்ணு கொஞ்சம் தலைகனம் ஆச்சே.. வேலைக்கு போவேன் அது இதுன்னு தன் சுதந்திரத்த பேசித்தே.. நம்பாத்துக்கு ஒத்து வருமா.. "

" அ.. அவ அடக்கமான பொண்ணுதாம்ப்பா.. நான் சொன்னா கேட்டுப்பா.. அவளை வேலைக்கு அனுப்புற அளவுக்கு நான் ஒன்னும் குறஞ்சு போயிடலயே.. ந.. நம்பாத்துக்கு ஏத்த பொண்ணா இருப்பா.."

" ம்ம்ம்.. அவ அப்பா ஏதோ கவர்மன்ட் உத்யோகம் பாக்கறார்னு சொன்னா மாதிரி ஞாபகம்.. மிடில்கிளாஸ் ஃபேமிலி.. ம்ஹ்ம்.. " யோசனையில் ஆழ்ந்தார்..

இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..

" ஹ்ம்.. நம்பாத்துக்கு ஏத்த பொண்ணா அடக்க ஒடுக்கமா இருந்த சரி.. பணம் காசு நம்பகிட்ட இல்லாததா.. ஏன்டி சுந்தரி.. நோக்கென்ன.. சரியா.. நீ பாக்கற பாக்கறன்னு காத்துண்டு இருந்து அவனே ஒரு பொண்ண தேடின்ட்டான்.. இன்னும் என்ன சொல்ல இருக்கு.. "

மனசு அடங்காமல் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தாள் சுந்தரவல்லி.. பணக்கார பெண்ணை ரிஷிக்கு கட்டிக் கொடுத்து பவிசோடு வாழலாம் என்று நினைத்ததெல்லாம் கனவாகிப் போனது அவளுக்கு கோபத்தை உண்டாக்கியது..

" ரிஷி.. அம்மாவ கொஞ்சம் தனியா விடு.. அவளே யோஜனை பண்ணிட்டு சொல்லட்டும்.. நேக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.." ரிஷியின் அப்பா பச்சை விளக்கு காட்ட , சுந்தரவல்லியின் ஒப்புதலுக்காக காத்திருந்தான் ரிஷி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 23

எதுவுமே பிடிக்காமல் மனம் வெதும்ப காலேஜில் பெயருக்கு அமர்ந்திருந்தாள் பவித்ரா.. உள்ளமெல்லாம் கசந்துபோய் இருந்தது.. இனி என்ன நடக்கும் என்பது அறியாமல் கண்ணை கட்டிவிட்டது போல் எதிர்காலம் கருமை மூடி இருந்தது.. படிக்கப் பிடிக்கவில்லை.. அருகில் இருந்த தோழிகளுக்கு அவளது இந்த அமைதி குழப்பத்தை தருவித்தாலும் ரம்யாவிற்கு புரிந்தது அவள் ஏதோ இக்கட்டில் மாட்டியுள்ளாள் என.. அதைப் பற்றி கேட்டு அவளை காயப்படுத்த வேண்டாம் அவளே கூறட்டும் எனக் காத்திருந்தாள்..

ரம்மியுடன் கூட சரியாக பேசவில்லை பவித்ரா.. தனக்குள்ளே புழுங்கிக் கொண்டிருந்தாள்.. ரிஷியும் இந்த இரண்டு மூன்று நாட்களாக எதுவும் பேசவில்லை.. அவனும் கைவிட்டுவிட்டானோ என்ற எண்ணம் மூலையில் அச்சத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.. இன்னும் இரண்டு நாள் கழிய பெண்பார்க்க அவர்கள் வந்துவிடுவார்கள்.. அவர்களுக்கு பிடித்துப் போனால் அவ்வளவு தான்.. எல்லாம் முடிந்தது.. படிப்பும் பாதியில் நிறுத்திவிடுவார்கள்.. என் வாழ்க்கையும் இன்னொருத்தன் கைப்பிடியில்.. பொம்மையாக..!

மனம் அடித்துக் கொண்டது.. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் போல இருந்தது பவிக்கு.. சொல்லும் தெம்பில் மனம் இல்லை.. இதழ்களின் மூடியால் மனதிற்கு பூட்டுப்போட்டுக் கொண்டிருந்தாள்..

பவியின் தவிப்பும் வேதனையும் முகத்தை வாட்ட , அதற்கு மேல் பொறுமையின்றி அவளிடம் பேசினாள் ரம்யா..

" ஹே.. பவி.. என்னடி ஆச்சு.. ஏன் இப்டி ஒக்காந்திருக்க.. என்கிட்ட சொல்ல மாட்டியா.."

" ம்ம்.. ஒன்னுமில்ல.. என்கிட்ட எதுவும் கேக்காத.. எனக்கு எதுவும் பிடிக்கல.. "

" யேய்.. என்னடி இது.. அப்படி என்னதான் ஆச்சு.. எதுவும் பிடிக்காம போக.. சொல்லுடி.. ஊருல ஒலகத்துல நடக்காததா உனக்கு நடந்திருச்சு.. இடுஞ்சு போறதுக்கு.. இப்ப சொல்லப் போறியா இல்லையா.. ஒழுங்கா சொல்லு.. " ரம்யா நச்சரிக்க..

" இ... இங்க சொல்ல முடியாது.. லஞ்ச்ல சொல்றேன்.." பவி தனிந்து வர புன்னகையுடன் அவள் கைகளை கோர்த்துக் கொண்டாள் ரம்யா..

மதிய இடைவேளையில் , பவியை இழுத்துக் கொண்டு தனி பெஞ்சில் போய் அமர்ந்தாள் ரம்யா..

" ம்ம்ம்.. இப்போ சொல்லு.. பைசல் பண்ணிடுவோம்.. " ரம்யா பரபரத்தாள்..

வீட்டில் நடந்தது அத்தனையும் ஒன்றுவிடாமல் தயங்கித் தயங்கிக் கூறினாள் பவித்ரா.. முழுவதும் அக்கரையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரம்யா முகத்தில் சிரிப்பு படர்ந்தது..

" ஹூம்.. இவ்ளோ தானா.. அதான் வீட்ல சொல்லியாச்சுல.. அப்பறம் என்ன.. நீ லவ் பண்றேன்னு சொன்னதும் வாடி செல்லக்குட்டின்னு மடில வெச்சு கொஞ்சுவாங்களா.. உனக்காவது பரவால்ல உங்கப்பா திட்டிட்டு விட்டுட்டார்.. வெளில இதவிட கொடுமைலாம் நடக்குது.. ஹ்ம்.. நீதான் ஸ்ட்ராங்கா இருக்கனும்.. கப்பல் கவுந்தாமாதிரி உக்காந்தா கெடச்சுருமா.. போராடனும்.."

அவளை முறைத்த பவி சோகமானாள்.. " எனக்கு தைரியம் இல்லாம இல்லடி.. ஆனா அப்பா , சரி இல்லைனு எதுவுமே சொல்லாமாட்டேங்கறார்.. என்கிட்ட பேசறது கூட இல்ல.. அதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.. அவர் பாட்டுக்கு வர்ர மாப்பிளைய கட்டிகிட்டு தான் ஆகனும்னு சொல்லிட்டார்னா நா.. நான் என்ன பண்றது.. ரிஷியும் ஒன்னும் சொல்லல.. அதான் பயமா இருக்கு.. அவங்க வீட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியல.. மனசுல நிம்மதியே போச்சு ரம்மி.. இந்த வெறுமையான அமைதி என்ன கொல்லுது.. எங்கயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போயிடலாமான்னு இருக்கு.." கண்களில் நீர் துளிர்த்தது..

" அடச்சீ.. லவ்னா பேரண்ட்ஸ் உடனே ஒத்துக்க மாட்டாங்க பவி.. இது எல்லா இடத்துலயும் நடக்கறது தானே.. என்னதான் நாம லவ் பண்ற ஆள் உத்தமனா நல்ல வேல பாக்கறவனா இருந்தாலும் அவங்க பாத்து வைக்கற மாப்பிள்ளைதான் ஒசத்தின்னு அவங்களுக்கு நம்பிக்கை.. லவ் பண்றவங்க சுத்த வேஸ்ட்டுன்னு அவங்களுக்கு நெனப்பு.. ஹூம்.. இத எந்த காலத்லயும் மாத்த முடியாது.. நாம தான் பேசி பேசி சரி பண்ணனும்.. நம்ம நிலைலேந்து எந்த காரணத்துக்காகவும் பின்வாங்கக் கூடாது.. அதுதான் உன் பாட்டி உனக்கு சப்போர்ட்டா இருக்காங்கல்ல.. அப்பறம் எதுக்கு பயப்படற.. கண்டிப்பா உங்கப்பா ஏத்துப்பார் பாரு.. என்ன பத்தி அவர் என்ன வேணா நெனச்சுட்டு
போட்டும்.. லவ்வுக்கு ஹெல்ப் பண்ணாத பிரண்ட் ஒரு பிரண்டா.. அதனால அவர் சொன்னத மனசுல வெச்சுட்டு நீயே குழம்பிக்காத.. சரியா.. அவன்ட்ட பேசிக் கேட்டுடுவோம்.. அவனுக்கு போன் அடி.." ரம்யா கூற..

பவி தயங்கினாள்.. " அவர்தான் சம்மதம் வாங்கிட்டு பேசறேன்னு சொன்னாரே.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியலியே.. அவரும் என்ன சங்கடத்துல இருக்காறோ.. இப்ப போய்.. கால் பண்ணா...."

" அடியே.. என்ன பேசற.. அவன் எப்ப சம்மதம் வாங்கறது.. எப்ப பேசறது... இதெல்லாம் ஆறப் போடக் கூடாது.. சட்டுபுட்டுன்னு முடுச்சுடனும்.. எஸ் ஆர் நோ.. எஸ்ஸூனா ஓகே.. இல்லைனா அதிரடி ஆட்டத்த தொடங்க வேண்டியதுதான்.. நேர அவன் வீட்டுக்கே போய் ஒக்காந்திட வேண்டியதுதான்.. கால் பண்ணி குடுடி போன.. நான் பேசறேன்..." ரம்யா பவியிடம் போனை பிடிங்கி ரிஷிக்கு டயல் செய்தாள்..

இரண்டு ரிங்கில் போனை எடுத்தான் ரிஷி... " ஹாய் பவி.. நானே பேசனும்னு நெனச்சேன்.. எப்டி இருக்க.. என்ன ஆச்சு..."

" இங்க நிலமை ரொம்ப கவலைக்கிடமா இருக்கு.. உங்க நிலமை எப்டி இருக்கு மிஸ்டர் ரிஷி.."

குரலில் வித்யாசம் தெரிய கொஞ்சம் குழம்பினான்.. " யா.. யாரு.. பவி... தானே.."

" ஹலோ.. நான் ரம்மி பேசறேன். பவி ஃப்ரெண்ட்.. என்ன ஆச்சு சார்.. இன்னும் எவ்ளோ நாள் ஆகும் உங்க வீட்ல சம்மதம் குடுக்க.. அதுக்குள்ள பவியோட மேரேஜே முடுஞ்சிடும் போலவே.. பேசினீங்களா இல்ல அப்டியே டீல்ல விட்டுட்டீங்களா.. ஆ.. " ரம்யா படபடக்க போனை பிடிங்கினாள் பவி..

ரம்யாவை முறைத்துவிட்டு ரிஷியிடம் பேசினாள்.. " ரிஷி.. பவி.. எப்டி இருக்கீங்க.. சொ.. சொல்லிட்டீங்களா.." கலக்கம் மேலிட கேட்டாள்..

" ஹ்ம்ம்ம்.. " பெருமூச்சு எழுந்தது அவனிடம்.. " சொல்லிட்டேன் பவி.. அப்பாக்கு சம்மதம்... அம்மாதான் இன்னும் ஏத்துக்கல.. என் கூட பேச மாட்டேங்கறாங்க.. ரெண்டு மூனுநாள் விட்டுட்டு திரும்ப பேசலாம்னு இருக்கேன்.."

" நா.. நானும் வீட்ல சொல்லிட்டேன்.. அப்பா ரொம்ப கோவப் பட்டார்.. என்கூட பேசல.. அ.. அம்மாக்கும் இதுல இஷ்டம் இல்ல.. பாட்டி மட்டும் தான் இப்போதைக்கு எனக்கு துணை.. அவங்கதான் அப்பாட்ட சொன்னாங்க... நீ... நீங்க வந்து பேசறீங்களா.."

" கண்டிப்பா வரேன்.. ஒரு டூ த்ரீ டேஸ் டைம் குடேன்.. ப்ளீஸ்.. அதுக்குள்ள அம்மாட்ட பேசி கன்வீன்ஸ் பண்ணிடறேன்.. கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு.. அம்மா ஒத்துப்பாங்க.." நம்பிக்கை அளித்தான் ரிஷி..

" எவ்ளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க ரிஷி.." கெஞ்சலாகக் கூறினாள்.. அவன் சம்மதம் தெரிவிக்க மனமின்றி போனை அணைத்தாள் பவித்ரா..

பவியின் கலக்கம் ரிஷியையும் தொற்றிக் கொள்ள வேலையில் கவனம் செலுத்தாமல் அமர்ந்திருந்தான்.. அம்மா ஏன் இப்படி இருக்கிறாள் என வெறுப்பாய் வந்தது.. வேலையை முடித்தும் முடிக்காமல் வீட்டிற்கு கிளம்பினான்..

வீட்டிற்குள் நுழைய , இவனைக் கண்ட சுந்தரவல்லி முகத்தைத் தூக்கிக் கொண்டு சமையல்கட்டிற்குள் நுழைந்தாள்.. இவனுடன் எதுவும் பேசவில்லை..

ரிஷியும் பின்னால் சென்றான்..

" அம்மா.. அம்மா.." அமைதி மட்டுமே பதிலாய் வந்தது..

" அம்மா... இங்க பாரு.. எதுக்கு இப்ப மவுனப் போராட்டம் நடத்தற.. "

"................"

" அம்மா.... " அவளைப் பிடித்து திருப்பினான்.. " என்னதாம்மா உன் பிரச்சனை.. என்னமோ எதிரிய பாக்கறமாதிரி பாக்கற.. நடந்துக்கற.. என்கிட்ட பேச மாட்டியா.. அப்டி என்னதான்மா தப்பு பண்ணேன்.. இப்போ என் கூட பேசுவியா மாட்டியா.."

" என்னடா பேச சொல்ற.. அம்மா ஆசைல மண்ணள்ளி கொட்டிட்டு பேசு பேசுங்கற.. "

" அ.. அப்போ.. என்னோட விருப்பத்துக்கு இங்க இடம் கிடையாதா.. சின்ன வயசுலேந்து என்னோட எல்லா ஆசையும் நிறைவேத்தி வெச்சியே.. இத.. இத மட்டும் ஏன்மா.."

" ரிஷி.. நீ ஆசப்படறது எல்லாத்துக்கும் என்னால தலையாட்ட முடியாது.. இத்தன நாளா கூட இருந்தும் எல்லாத்தையும் மறச்சுட்டியே.. நா.. நான்.. என்னெல்லாம் கனவு கண்டுண்டு இருந்தேன்.. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கனும்னு தான்டா இவ்ளோ செஞ்சேன்.. ஆனா.. நீ.. நீ.. உன் வாழ்க்கையை நீயே முடிவு பண்ணிட்ட.. இனிமே பேச என்ன இருக்கு.. அம்மாவ கிறுக்கச்சி ஆக்கிட்டேல்யோ.. ம்ம்ம்.. அதுதான்ட தாங்கல.." கண்களில் துளி நீர் எட்டிப் பார்த்தது சுந்தரவல்லிக்கு.

" அ.. அம்மா... அதுக்கு....." அவன் பேச வாயெடுக்க அங்கிருந்து நகர்ந்தாள் சுந்தரி..

இப்படி இரண்டு நாட்கள் அவள் பின்னால் சுற்றி சுற்றி ஒப்புதல் பெற ரிஷி போராட போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..

வெள்ளிக்கிழமை அன்று..

" அம்மா... இன்னும் எத்தன நாளைக்குத் தான் இப்டி இருப்பே.. என்னதான் முடிவு பண்ணி இருக்கே.." ரிஷி பொறுமை இழந்து சுந்தரவல்லியை கேட்டான்

" இனிமே நான் முடிவு பண்ண என்ன இருக்கு.. அதான் எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டியே.."

" அம்மா.. ப்ளீஸ்.. முடிவு பண்ணிட்டேன்.. முடிவு பண்ணிட்டேன்கறயே.. என் வாழ்க்கை துணையை நான் தேர்ந்தெடுத்தேன்.. அவள கல்யாணம் பண்ணிட்டேனா என்ன.. உன் சம்மதமும் வேணும்னு தானே இவ்ளோ தூரம் காத்துண்டு இருக்கேன்.. சொல்லு பாப்போம்.. பெத்தவா எப்டி போனா என்ன.. என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருந்தாப்போதும்னு நெனைக்கறவன் இல்லமா நான்.. பவியும் அப்படித் தானே இருக்கா.. இன்னும் என்னம்மா உன் பிரச்சனை.. பவியை எனக்கு அறிமுகம் பண்ணதே நீ தான்.. ரொம்ப அடக்கமான பொண்ணு.. பொறுமை.. இந்த காலத்ல இப்டி ஒரு பொண்ணானு அவள பத்தின இமேஜ ஒசத்தி விட்டது நீதான்.. இப்போ நீயே இப்டி சொன்னா.. என்னம்மா நியாயம்..! " ரிஷி பொங்க..

" உண்மைதான்.. கோயில்ல முதன் முதலா அவள பாக்கும்போது அவளோட மென்மையான பேச்சு , சாத்வீகம் எல்லாமே அவமேல ஒரு பரிச்சயத்த உண்டு பண்ணித்து.. இல்லைனு சொல்லல.. ஆனா.. உனக்கு ஒய்ஃபா , நம்பாத்துக்கு மாட்டுப்பொண்ணா வர அவளுக்கு என்ன குவாலிட்டிஸ் இருக்கு.. அவ பேமிலிக்கு தான் என்ன தகுதி இருக்கு.. அவா பேமிலி எப்டி என்னவோ.. ஒன்னுந்தெரியாம என்ன சொல்லச் சொல்றே.. மனசுக்கு புடுச்சா எல்லாம் ஆச்சா.. லவ் மேரேஜ் பண்ணவாள்ல பாதிக்கு மேல கோர்ட்லதான் நிக்கறா.. டிவோர்ஸ்க்கு..!" அலட்சியமாக அவனை பார்த்தாள்.

" ஹூம்.. எங்களப் பத்தின உன் அபிப்ராயம் இவ்ளோதானாமா.. ரியலி சேட்.. சரி.. உன் பேச்சுக்கே வரேன்.. உனக்கு அவ பேமிலிய பிடிச்சா ஓகே தானே.. அப்போ நேர்ல போய் பேசிடலாம்.. அப்பறமும் உனக்கு பிடிக்கலைனா விட்டுடலாம்..
என்ன சொல்றே..."

சுந்தரவல்லி இந்த அதிரடி முடிவை எதிர்பார்க்கவில்லை.. " அ... அது.." தடுமாறினாள்..

" தட்ஸ் இட்.. ஈவினிங் அவாத்துக்கு போறோம்.. ரெடியாகு.." கூறிவிட்டு வெளியேறினான் ரிஷி..

மாலை

காலேஜ் முடித்து தயக்கம் பயத்துடனும் வீட்டிற்குள் நுழைந்தாள் பவி.. இன்று பெண்பார்க்க வருகிறார்களே.. அதை எப்படி சமாளிப்பது.. அப்பா முடித்துவிடுவாரா என்ற பயம் மனமெல்லாம் பரவி இருந்தது..

எப்பொழுதும் கலகலவென இருக்கும் வீடு மூன்று நாட்களாக அமைதியில் வெறுமையாக இருந்தது.. யாரும் யாரிடமும் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை.. பாட்டி மட்டுமே பவியை ஆறுதலாக நடத்தினாள்..

உள்ளே நுழைந்தவள் நேராகப் பாட்டியின் அறைக்குள் சென்றாள்.. சேரில் சாய்ந்து அமர்ந்தபடி புத்தகம் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. பவியைக் கண்டு புன்னகைத்தாள்.. " வாடி கண்ணு.. காலேஜ் முடுஞ்சதா.."

" ம்ம்ம்..." தலை அசைத்துவிட்டு சோகமாக பாட்டியை பார்த்தாள்.. " பாட்டிமா.. அப்பா.. எதாவது சொன்னாளா.. இன்னிக்கு அவா பொண் பார்க்க வரான்னு சொல்லிருந்தாளே.."

" அவன்தான் ஒருவாரமா ஒன்னும் பேச மாட்டேங்கறானே.. இன்னிக்கு வெள்ளிக் கிழமைதானே.. அவா வருவான்னுதான் தோன்றது.. உன் அப்பா இன்னும் வரலையே.. ஒரு வேளை அவாள கூட்டிண்டு வரானோ என்னவோ.. எதுக்கும் நீ முகத்த அலம்பின்டு நல்ல புடவையா கட்டிக்கோ.. வெளிமனுஷா வரும்போது அழுது வடுஞ்சுண்டு இருக்கப்டாது.. போ.."

" பா... பாட்டி... எனக்கு இஷ்டமே இ.. இல்ல பாட்டி.. எதுவுமே பிடிக்கல..."

" பவி... உன் அப்பாகிட்ட உரைக்கறமாதிரி சொல்லிட்டேன்.. அப்படியும் அவாள வரச் சொல்லிருந்தான்னா வர்ரவாள்ட்டயே பேசிடறேன்... என்ன ஆனாலும் நான் பெத்துக்கறேன்.. போதுமா.. நீ போய் ரெடியாகு..." பாட்டி கட்டளையிட மனமில்லாமல் தயாராகச் சென்றாள் பவி..

பங்கஜம் எந்தவித சந்தோஷமின்றி சமையல்கட்டிலேயே இருந்தாள்.. பவி தயாராகி அடுக்களைக்குள் நுழைந்தாள்..

" அ... அம்மா... காபி தரியா.."

எந்த பதிலும் கூறாமல் காபியை கலந்து டங்கென்று மேடையில் வைத்தாள் பங்கஜம்..

" அம்மா.. ஏம்மா நீயும் இப்டி பேசாம என்ன இம்சிக்கறே.. அப்படி என்ன கொலைக் குத்தம் பண்ணேன்.. சொல்லு.." பவி உடைந்து போக.. அவளை முறைப்புடன் பார்த்தாள் பங்கஜம்..

" உயிரக் கொல்றத விட மனசக் கொல்றது பெரிய பாவம் டி.. அதப் பண்ணிட்டு என்ன பண்ணேன்னு கேக்கறியே..."

பவி அமைதியாக இருந்தாள்..

" உங்கப்பா இதுவரை இப்டி இருந்ததே இல்ல.. என்னன்ட கூட முகம் குடுத்து பேச மாட்டேங்கறார்.. அவர் மனச நோகடுச்சுட்டியேடி.. இத்தன நாளா கல்யாணம் வேண்டாம்னு தான் தள்ளிப் போடறேன்னு நெனச்சுண்டு இருந்தான்... ஹ்ம்.. நம்பினேன்.. ஆனா , நீ காதல் கத்ரிக்காய்னு சொல்வேன்னு எதிர் பாக்கலே.. குழந்தைன்னு உன்ன நம்பின என்னையும் ஏமாத்திட்டே.. பெத்தவள்ட்ட பொய் சொல்ற அளவுக்கு தைர்யம் வந்துடுத்து உனக்கு.. இதுக்குமேல உன்கிட்ட என்ன பேசச் சொல்றே

" அ... அம்மா.. பொய் சொல்லி உங்கள ஏமாத்தி இருந்தா காத்துண்டு இருப்பேனா.. என் மனச புருஞ்சு என்னோட நியாயமான ஆசைய நிறைவேத்துவேள்னு தானே உண்மைய பூரா சொன்னேன்.. என்ன ஏம்மா புருஞ்சுக்க மாட்டேங்கறே.."

" பெத்தவா மனச குளிர வைக்கறது தான் புள்ளைகளோட கடன்.. அதப் புரிஞ்சிண்டு உன் அப்பா சொல்றத கேட்டு நட.. அவர நிம்மதியா இருக்கவிடு.. அவ்ளவுதான் சொல்ல முடியும்.. அதுக்குமேல உன் இஷ்டம்.." கூறுவிட்டு வெளியேறினாள் பங்கஜம்..

உள்ளே அப்பா நுழையும் சப்தம் கேட்க ஹாலுக்கு விரைந்தாள் பவி.. யாரிடமும் எதுவும் பேசாமல் வழக்கம்போல தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் நடேசன்.. ஹாலில் அமர்ந்திருந்த பாட்டியை குழப்பத்துடன் பார்த்தாள் பவி..

பாட்டி மெள்ள பேச்சை ஆரம்பித்தாள்.. " நடேசா... அவா வரலையா.."

" யாரு...."

" அதான் பவிய பாக்க வரான்னு சொன்னியே.. அவா..."

" யாரும் வரலை.. இனியும் யாரையும் வரச் சொல்லப் போறது இல்லை.. அவாள ஆத்துக்கு கூட்டிண்டு வந்து அசிங்கப்படுத்தி நானும் அசிங்கப்பட விரும்பலை... அதனால என் பொண்ணுக்கு இஷ்டமில்லைன்னு நேரடியாவே சொல்லிட்டேன்.. அதான் அவளே பார்த்தப்பறம் நான்வேற கிறுக்கு மாதிரி மாப்ளையத் தேடி அலையனுமா.. எப்டியோ போட்டும்..." வெறுப்புடன் கூறிவிட்டு பேப்பரில் மூழ்கினார்.

திடீரென வாசலில் அரவம் கேட்க அனைவரும் பார்த்தனர்..

அங்கே , ஸ்ரீதருடன் ரிஷியும் சுந்தரவல்லியும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்..

பார்த்த பவிக்கு ஒரு நிமிடம் நெஞ்சம் அடைப்பது போல் இருந்தது.. இதயம் படபடவென அடித்தது.. ரிஷி எதுவும் கூறாமல் இப்படி திடீரென சுந்தரவல்லியுடன் வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.. உடல் கொஞ்சம் நடுங்க வியர்த்தது பவிக்கு..!

சந்தேகத்துடன் நடேசன் மாறி மாறி ஸ்ரீதரையும் ரிஷியையும் பார்த்தார்..

" யா.. யாரு.. வேணும்.. ஸ்ரீதரா யாருடா இவா.." நடேசன் புரியாமல் விழிக்க பவிக்கு என்ன சொல்வதென நா எழவில்லை..

" அப்பா.. இவர் பவியோட ஃப்ரண்ட்.. நம்பாத்த தேடிண்டு வந்தா , கூட்டிண்டு வந்தேன்.. ஏய் பவி , அன்னிக்கு சூப்பர்மார்கெட்ல இவர பாத்தோமே , நீ கூட பயந்துண்டு ஓடி வந்தியே.." நக்கலாக சிரித்தான்..

நடேசன் பவியை பார்க்க.. கண்கள் விரித்து எச்சிலை விழுங்கிக் கொண்டாள்... " அ.. அப்பா.. இவர்தான் ரிஷி.. இது.. அவங்க அம்மா.."

சுற்றுமுற்றும் வீட்டினை ஆராய்ந்து கொண்டிருந்த சுந்தரவல்லியை பார்த்து மரியாதை நிமித்தமாய் அழைத்தார்.. " வாங்கோ... உட்காருங்கோ.."

இருவரும் வந்து அமர்ந்துகொள்ள, அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் நேரம் அமைதியில் கடந்தது..

பவியை பார்த்து சுகுமாரி கண்களால் கேட்க , மெள்ள தலை அசைத்தாள் பவி..

" எப்டி இருக்கேள்.. நீங்க வந்ததுல சந்தோஷம்.. " அமைதியை உடைத்தாள் சுகுமாரி..

பாட்டி கேட்க தலை அசைத்தாள் சுந்தரவல்லி.. " நன்னா இருக்கோம்.. "

" இவன்தான் உங்க பையனா.. லக்ஷனமா இருக்கான்.. முகம் களையா இருக்கு.. என்ன பண்ணின்டு இருக்கேப்பா " பாட்டி ரிஷியை பார்த்து கேட்க சுந்தரவல்லிக்கு பெருமையாக இருந்தது..

" அவன் மெடிக்கல் லைன்ல இருக்கான்.. பெரிய உத்யோகம்.. கை நெறய சம்பாதிக்கறான். என் ஒரே பையன்.." சந்தோஷம் முகத்தில் பூத்தது..

" ஓ.. அப்படியா.. பவி குடுத்து வெச்சவ.. இப்டி ஒரு பையன் மாப்பிள்ளையா வர.. இது என் பையன் நடேசன்.. கவர்மன்ட் உத்யோகத்லே இருக்கான்.. இது என் மாட்டுப் பொண்ணு பங்கஜம்.. ஒரு பேரன் ஒரு பேத்தி.. " பாட்டி அறிமுகப் படுத்த அவர்களைப் பார்த்து மெள்ள தலையாட்டினாள் சுந்தரி..

நடேசனுக்கும் அவர்கள் இருவரையும் பார்த்து நல்லவிதமாகப் பட மென்மையாகப் புன்னகைத்தார். பங்கஜம் அமைதிகாத்தாள்.. பாட்டி பங்கஜத்திடம் சாப்பிடக் குடுக்கச் சொல்ல உள்ளே சென்றாள்.. பின்னால் பவியும் செல்ல.. மெள்ள சுகுமாரி விஷயத்தை ஆரம்பித்தாள்..

" அப்பறம் பவி விஷயத்தச் சொன்னா.. உங்களுக்கு.."

சுந்தரவல்லியின் முகம் கொஞ்சம் இறுகியது.. " ரிஷியும் அவன் விருப்பத்தச் சொன்னான்.. இருந்தாலும் இந்த காலத்லே பசங்க ஸ்பீடாத்தான் இருக்கா.. பெத்தவாளுக்கு சிரமம் குடுக்கறது இல்லே.. ஹ்ம்.. அந்த காலம் மாதிரியா..." ரிஷியை ஏளனமாகப் பார்த்தாள்..

" அதுவும் சரிதான்.. இருந்தாலும் அவா சரியான முடிவத்தான் எடுக்கறா.. இல்லையா.." சுகுமாரி சரிக்கட்டப் பார்த்தாள்..

" ஹூம்.. இவனுக்கு பெரிய பெரிய இடத்திலேந்து பொண்கள் க்யூல வந்து நிக்கறா.. அதெல்லாம் வேண்டானுட்டு... ஹ்ம்.. என்ன பண்றது.. " சலிப்புடன் முகத்தை சுழித்தாள் சுந்தரவல்லி..

" அதனால என்னம்மா.. வாழப் போறவா அவா தானே... ஒருத்தருக்கொருத்தர் அந்யோன்யமா வாழனும்லயா.. மனசுக்கு புடுச்சா தானே வாழ்க்க இனிக்கும்.." பாட்டி பதவீசாகப் பேசினாள்.

" ஹ்ம்.. அதமட்டும் தானே இந்த காலத்ல பாக்கறா.. பெத்தவா மத்தவா சந்தோஷத்த பத்திலாம் யோசிக்கறது இல்லையே.. அந்த காலம் மாதிரியா.. சொந்த பந்தங்களோட கலந்து பேசி , ஒன்னுமன்னா கூடி பெரியா சம்மததுக்கு காத்து கெடப்பா.. ஹ்ம்.. இப்போ அதெல்லாம் கனாவாயிடுத்து.. யாரை குறை சொல்றது.. " குறைபட்டுக் கொண்டாள் சுந்தரி..

" காலம் மாறின்டே தானே இருக்கு.. என் காலம் வேறே.. உங்க காலம் வேறே.. இப்போ இருக்கற ஜெனரேஷன் வேற.. கால மாற்றத்த ஏத்துண்டு தானே ஆகனும்.. " சுகுமாரிப் பாட்டி அவளை சமாதானம் செய்தாள்..

"ஹ்ம்ம்ம்.. " பெருமூச்சு எழுந்து அடங்கியது சுந்தரிக்கு.. " சரிதான்.. ஒத்தபுள்ளையா போய்ட்டான்.. அவன் வாழ்க்கை நன்னா இருக்கனும்கறது தான் என்னோட ஆசையெல்லாம்.. அந்தஸ்து வசதிக்கு ஏத்த இடம்தான் இல்லைன்னு ஆய்டுத்து.." குத்தலாகக் கூறினாள் சுந்தரி..

நடேசனுக்கு சுறுக்கென்று இருந்தது.. " மாமி.. சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்கோ.. எங்காத்ல எல்லா வசதியோடையும் தான் எம்பொண்ண வளத்திருக்கேன்.. ஒரு கொறை வெச்சதில்லை.. அவ கல்யாணத்துக்குன்னு வேண்டியதை சேமிச்சிருக்கேன்... கண்கலங்காம பாத்துக்கற ஒரு நல்ல வரனாத்தான் பாத்துண்டு இருந்தேன்.. திடுதிப்புன்னு இப்டி சொல்லிட்டா.."

சுந்தரவல்லியின் முகம் மாற , அங்கு நிசப்தம் சூழ்ந்தது.. காபி பலகாரத் தட்டுடன் பவியும் பங்கஜமும் உள்ளே நுழைய சுகுமாரி பாட்டி பேச்சை மாற்றினாள்..

" போனது போட்டும் விடுங்கோ.. இனி நல்லதாவே யோசிப்போம்.. பவி எல்லாருக்கும் குடுமா.. எடுத்துக்கோங்கோ.. பவி நன்னா சமைப்பா.. நல்ல படிப்பாளி.. எதையும் சட்டுனு புருஞ்சுக்கறவ.. உங்க ரெண்டு பேரையும் எங்களுக்கு புடுச்சிருக்கு.. உங்களுக்கு சம்மதம்னா ஒரு நல்ல நாள் பாத்து பேசி முடுச்சுப்புடலாம்.."

காப்பி கோப்பையை உறிஞ்சியபடியே மெள்ள யோசனையில் ஆழ்ந்தாள் சுந்தரி.. ரிஷிக்கும் பவிக்கும் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது..

" ஹ்ம்ம்... ரிஷி சொன்னப்போ நேக்கு அவ்வளவா விருப்பமில்லை தான்.. பொய் சொல்லப்டாதில்யோ.. நான் எதையும் ஃப்ராங்க்கா பேசிடறவ.. உங்களலாம் ஒருதரம் பாத்துட்டு முடிவச் சொல்லுன்னு கம்பல் பண்ணிதான் கூட்டிண்டு வந்தான்.. எங்களவுக்கு வசதி இல்லாட்டாலும்... நல்ல பேராத்தான் இருக்கேள்.. எங்காத்துக்காரரும் சரின்னுட்டார்.. ஹூம்ம்ம்.. அதுக்குமேல நான் என்ன சொல்ல இருக்கு.. பகவான் விட்ட வழி.. "

" அ... அப்போ உங்களுக்கு சம்மதம் தானே.." பாட்டி மறுபடியும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள.. புன்னகையுடன் தலை அசைத்தாள் சுந்தரி..

" நடேசா.. நீ என்ன சொல்றே.. பங்கஜம் நீயும் சொல்லிடுமா.. எல்லாரோட சம்மதத்தோடதான் இந்த கல்யாணம் நடக்கனும்னு குழந்தைகள் பெரியவா ஒப்புதலுக்காக காத்துண்டு இருக்கா.. அவாளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்கறது நம்ம பொறுப்பு.." சுகுமாரி கேட்க நடேசன் பங்கஜத்தை பார்த்தார்.. அவள் புன்னகையுடன் தலை அசைக்க..

" எம்பொண்ணு போற எடத்துல நன்னா இருந்தா எனக்கும் பங்கஜத்துக்கும் சந்தோஷம்.. எனக்கு சம்மதம்மா.." நடேசன் முடிவைக் கூறினார்..

பவிக்கு ஆனந்தத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.. தன்னை அறியாமல் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது.. தலையை குனிந்து கொண்டாள்... ரிஷியும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய் அம்மாவை அணைத்துக் கொண்டான்..!

" ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. நேக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. ஹ்ம்ம்.. இந்த சமயத்ல உங்காத்துக்காரர் இருந்திருந்தா இங்கயே தட்ட மாத்திண்டு இருந்திருக்கலாம்." சுகுமாரி பாட்டி சஞ்சலம் கொண்டாள்..

" ஹாஹா.. அவர் எப்பவும் பிசி.. அவா பரம்பரையே அப்டித்தான்.."

" அவர் பூர்வீகம் எந்தூரு.." சுகுமாரி கேட்க..

" புலியூர் கோட்டை... அவர் தாத்தா பெரிய வக்கீல்.. பேரு ராஜகோபாலச் சாரியார்... என்னோட கொள்ளுதாத்தா தயவுலதான் அவர் தாத்தா படுச்சு வக்கீலானவர்.. அந்த விஸ்வாசத்துக்கு அவர் பேரன எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சா.. எங்கம்மா ஆத்து பரம்பரை பத்தி சொல்லனும்னா இந்த நாள் போதாது.. என் முப்பாட்டனார் புலியூர் கோட்டை ஜட்ஜா இருந்தவர்.. அவருக்கு நாலு பையன்கள்.. என் கொள்ளுத் தாத்தா மாஜிஸ்தரேட்டரா இருந்தவர்.. சுந்தரேசன்னு சொன்னா ஊருக்கே தெரியும்... " சுந்தரவல்லிக் கூறிக் கொண்டிருக்க சுகுமாரிப் பாட்டியின் முகம் சட்டென இருண்டது..

" என் தாத்தா சதாசிவம் வெள்ளக்காரா கோட்டைல வேலை பாத்தவர்.. பாட்டியும் தாத்தாவும் அத்தன கம்பீரம்.. டாம்பீகம்.. சொத்துக்காரா.. ம்ஹ்ம்.. நாலு மாமாக்களோட பெருங்குடும்பத்லே வாழ்ந்தவ நான்.. எங்கப்பா தான் ஒன்னுமில்லாதைக்கு புரோகிதம் பாத்துண்டு இருந்தார் , ஆத்து மாப்ளையா.. எங்கம்மாக்கு ஒத்த பொண்ணா பொறந்ததால என்ன தாங்கிதடுக்கிடுவா.." சுந்தரவல்லி ஆலாபிக்க சுகுமாரி பாட்டிக்கு கண்கள் சிவந்து முகம் இறுக ஆரம்பித்தது..

" நீ.... நீ.. கோமதியோட பொண்ணா.." பாட்டி தடுமாறிக் கேட்க.. ஆச்சர்யத்தில் கண் விரித்தாள் சுந்தரவல்லி..

" ஆ... ஆமா... உங்களுக்கு என்னத் தெரியுமா... "

பாட்டிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.. " தட்டுதடுமாறி வேகமாக எழுந்தாள்..

" எங்காத்து பொண்ண உன் பையனுக்கு தர முடியாது... நீ... நீங்க கெளம்புங்கோ.. இனிமே இங்க வர வேண்டாம்..."

சுகுமாரி முகம் சிவந்து சத்தமாகக் கூற அனைவரும் அதிர்ந்து போயினர்..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்.!

அத்யாயம் - 24

ஒன்றும் விளங்காமல் அனைவரும் திகைத்து நிற்க சுகுமாரி சத்தமாகக் கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்..!

அத்தனை சந்தோஷமும் ஒரு கணத்தில் புயலாய் மாற , விக்கித்துப் போய் நின்றாள் பவி.. என்ன நடக்கிறது எனப் புரியாமல் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டிருந்தனர் ரிஷியும் , சுந்தரவல்லியும்..!

" பா... பாட்டி.. பாட்டி.. எ... என்ன சொல்ற.." பவி பதறிக்கொண்டு பின்னால் போக...

" இந்த கல்யாணம் நடக்காது.. அவன மறந்துடு.. " கோபமாகக் கூறிவிட்டு அறைக்குள் நுழைந்து கொண்டாள் சுகுமாரி..

சுந்தரவல்லியை சமாதானப் படுத்த பவி திரும்ப ஹாலுக்கு ஓடினாள்..

அதற்குள் சுதாரித்த சுந்தரவல்லி கோபம் மேலிட அங்கிருந்து விடுவிடுவென வெளியேறினாள்.. யாரை சமாதானப் படுத்துவது எனத் தெரியாமல் ரிஷி அவளை கூப்பிட்டுக் கொண்டு பின்னால் ஓட.. படபடக்கும் நெஞ்சமுடன் வாசலையும் அறையையும் மாறி மாறி பார்த்து , கண்களில் நீர் நிறைய உள்ளறைக்குள் ஓடி கதவை மூடிக் கொண்டாள் பவித்ரா..

ஸ்தனங்கள் இரண்டும் வேகமாக ஏறி இறங்க முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.. இத்தனை தூரம் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டி இப்படி ஒரு நிமிடத்தில் மாறுவாள் என அவள் கனவிலும் நினைக்கவில்லை..!

சுகுமாரி பாட்டி அறைக்குள் சென்று அமர்ந்து திக்கு முக்காட நடேசனும் பங்கஜமும் பின்னால் சென்றனர்... " அம்மா.. அம்மா.. என்ன ஆச்சு.. ஏ இப்டி.. மூச்சு வாங்கறது பார்.. படுத்துக்கோ.. என்ன ஆயிடுத்து உனக்கு.. எதுக்கு இவ்ளோ கோவப் பட்டே.. நே.. நேக்கு ஒன்னும் புரியலை.. அவா.. அவா யாரு..." நடேசன் கேட்க.

" இப்போ எதுவும் கேட்காதே நடேசா.. எ.. எனக்கு படபடன்னு இருக்கு.. எது.. எது நடக்கக் கூடாதுன்னு நெனச்சேனோ.. அது.. அது நடந்துடுத்து.. போதும்.. நான் பட்ட கஷ்டம் போதும்.. அவளுக்கும் அது நடக்க வேண்டாம்... பவிக்கு இந்த சம்பந்தம் வேண்டாம் நடேசா.. அ.. அவளுக்கு வேண்டாம்.." கூறிக் கொண்டே தலைசாய்த்து கண்களை மூடினாள் சுகுமாரி.. எதுவும் பேச இயலாமல் அங்கிருந்து நகர்ந்தனர் இருவரும்..

பழைய நினைவுகள் அத்தனையும் பெருமழையாய் மனதில் அடிக்க , கண்கள் படபடக்க முனகிக் கொண்டிருந்தாள் சுகுமாரி..

பங்கஜம் எவ்வளவோ வற்புறுத்தியும் எதுவும் சாப்பிடாமல் அறைக்குள்ளே அழுது கொண்டு இருந்தாள் பவித்ரா.. பாட்டி மீது கோபமும் வெறுப்பும் மனதில் உற்பத்தி ஆகிக் கொண்டே இருந்தது.. இரவு முழுக்க மன சஞ்சலத்துடன் உறங்காமல் இருந்தாள்..

இரண்டுநாளும் எந்த சிந்தனையின்று அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்தாள்.. பவியை பார்க்க வேதனை கொண்டு பங்கஜம் தான் போராடிக் கொண்டிருந்தாள்.. சுகுமாரி பாட்டியும் வெளியில் வராமல் உள்ளேயே இருந்தாள்..

திங்கட்கிழமை..

உறக்கமின்றி எழுந்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் காலேஜிற்கு கிளம்பினாள் பவி.. பாட்டியின் மீது த்ரேஷம் வளர்ந்தது மனதில்..

" ஏம்மா பவி.. கண்ணெல்லாம் வீங்கி போயிருக்கே.. காலேஜூக்கு போனுமா.. கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா.. பாட்டி எதோ பழைய கோபத்லே அப்டி பேசிட்டா... அவா யாரு என்னன்னு தெரியலை.. இது வரை பாட்டி இப்படி த்ரேஷமா எதுவும் சொன்னதில்ல.. என்ன ஏதுன்னு கேட்டு சரி பண்ணுவோம் பவி.. நீ மனசு உடஞ்சு போயிடாதே.. நேக்கே தாங்கள.. " பவியை மெள்ள அணைத்து கண்களை துடைத்து விட்டாள் பங்கஜம்..

அம்மாவின் அணைப்பு உள்ளிருந்த சோகத்தை மேலும் பெரிதாக்க அவள் தோள் சாய்ந்து கண்ணீர் வடித்தாள் பவி.. " ம்ஹ்ம்.. பா.. பாட்டி இப்படி பேசுவான்னு நான் எதிர்பாக்கலேம்மா.. சுந்தரி மாமியும் கோவமா போய்ட்டா.. எ.. எனக்கும் மட்டும் ஏம்மா இப்டி.. " மெள்ள குலுங்கினாள்..

" அழாதடி தங்கம்.. எல்லாம் சரியாப் போகும்.. இதுக்குத்தான் இந்த காதல் கத்ரிகாய்லாம் வேண்டாம்னு சொல்றது.. யார் எவர்னு தெரியாம மனச பறிகுடுத்துட்டு இப்டி நிக்கறே பாரு.. " ஆசுவாசப் படுத்தினாள் பங்கஜம்..

நீண்ட பெருமூச்சு எழுந்தது பவிக்கு.. " நான் காலேஜ் கெளம்பறேன்மா.. இங்க இருக்க பிடிக்கல.."

கொஞ்சம் பயம் கொண்டாள் பங்கஜம்.. " போய்தான் ஆனுமா.. ம்ம்ம்.. ஜாக்ரதையா போய்ட்டுவா.. எதுவும் தப்பிதமா யோசிக்காதே.. குழப்பத்துல புத்தி ஏதேதோ யோசிக்கும்.. மனச அலட்டிக்காத பவி.. எல்லாம் நல்லதா நடக்கும்.. பெருமாள வேண்டிண்டு போ.. சரியா.. போன் கைல வெச்சிருக்கேள்யோ.. அம்மா அப்பறமா லட்ச் டைத்ல பேசறேன். என்ன.. சாந்தமா இரு பவி.." பயத்தில் நூறுமுறை அவளைத் தேற்றி அனுப்பினாள் பங்கஜம்.. பெத்த மனம் பித்தாகிப் போனது..

வழியில் பெருமாள் கோயிலைக் கண்டவள் நின்று வாசலில் இருந்தே அவனிடம் யாசகம் கேட்டாள்.. முதல் சந்திப்பு கண்களில் காட்சியாய் விரிந்தது.. "எங்க ரெண்டு பேரையும் உன் சன்னதிலயே பாக்க வெச்சு , மனச சேர்த்துட்டு இப்டி விளையாடறயே.. ஏ இப்டி பண்றே.. எனக்கு ரிஷி வேணும்.. நீ தான் சேர்த்து வைக்கனும் பெருமாளே.." அங்கிருந்தே மனமுருக வேண்டிவிட்டு கிளம்பினாள்

காலேஜின் அத்தனை சத்தத்திற்கு இடையிலும் அமைதியாக இருந்தாள் பவி..யாரிடமும் பேசவில்லை..

அஜீரணமாகிப் போன நினைவுகள் மேலெழுந்து மேலெழுந்து தொண்டையை அடைத்தது.. விழுங்க இயலாமல் நெஞ்சத்தில் சேர்ந்து மூச்சு முட்டியது.. ரம்யாவிற்கு புரிந்து போனது.. தனிமையில் அவளிடம் பேசினாள்..

" என்ன பவி.. ரிஷி அவங்க வீட்ல பேசிட்டானாமா.. என்ன சொல்றான்.."

" ஹ்ம்ம்.... எல்லாம் முடுஞ்சிருச்சு.. இ... இனிமே ஒன்னுமில்ல.."

" ஏய்.. என்னடி ஆச்சு.. இப்டி பேசற.." கலவரமானாள் ரம்யா.. எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள் பவி.. கண்கள் சிவந்திருந்தது..

" பவி.. ப்ளீஸ்.. சொல்லு.. என்ன ஆச்சு.."

" என் லைஃப் அவ்ளோ தான்.. நா.. நான் அவர் மேல ஆசப் பட்டிருக்கக் கூடாது.. என் தப்புதான்.. இந்த மனசு வேதனைலதான் இருக்கனும்னு தலை எழுத்து.. "

" ஹே.. ஏன்டி இப்டிலாம் பேசற.. எனக்கு பயமா இருக்கு பவி.. என்னதான்டி நடந்தது.. அவங்க வீட்ல ஒத்துக்கமாட்டேன்டாங்களா.. நா.. நான் வேணா பேசி பாக்கவா.." ரம்யா அச்சப்பட..

மெள்ள இருபுறமும் தலை அசைத்தாள் பவி.. " அ.. அவங்கவீட்ல சம்மதம் வாங்கி அவங்க அம்மாவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு.. ம்ஹ்ம்.. எல்லாமே நல்லபடியா முடியற நேரம்.. எ.. என் பாட்டி.. அவங்கள வெளில போகச் சொல்லிட்டாங்க.. இனிமே எங்க வீட்டுக்கு வரவேண்டாம்னு.."

"எ.. என்னடி உளர்ர.." ரம்யா அதிர்ந்து போனாள்.. பவி நடந்ததை முழுமையாகக் கூற விக்கித்து போனாள் ரம்யா.. " உங்க பாட்டிக்கு என்ன பைத்தியமா.. அவங்கதான்டி உனக்கு சப்போர்ட்டா இருந்தாங்கன்னு சொன்ன.. கூடி வர்ர நேரத்துல இப்டி உடைச்சு போடறாங்க.. ரொம்ப மோசம்.. கூட இருந்தே இப்டி கழுத்தறுத்துட்டாங்களே.. "

பவி எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தாள். வெறுமை முழுமையாய் பரவி இருந்தது..

" அப்டி என்னடி அவங்கமேல கோபம்.. அவங்களுக்கும் உங்க பாட்டிக்கும் என்ன சம்பந்தம்.. அப்டியே இருந்தாலும் வாழப் போறவ நீதான.. உன் விருப்பத்துக்கு தடை போட அவங்க யாரு.. எல்லாரும் ஒத்துக்கிட்ட நேரம் இப்டி கெடுத்துவிட்டுடாங்களே.. பவி... அதான் உங்க அப்பா அம்மாவும் , அவங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்கள்ல.. பேசாம உங்க அப்பாவ அவங்க வீட்ல பேசி சமாதானம் பண்ண சொல்லு.. பாட்டி கெடக்காங்க.."

" ஹ்ம்.. அ.. அப்பா பாட்டி சம்மதம் இல்லாம எதுவும் பண்ணமாட்டாங்க.. ஏற்கனவே காதலிக்கறேங்கறதுக்கே கோவப்பட்டாரு.. இப்போ பாட்டியும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. அவர் எப்டி போவாரு.. என் லைப் அவ்வளவு தான்.. "

" சே.. உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு பவி.. என்ன சொல்றதுன்னு தெரியல.. பொறுமையா இரு.. உன் லவ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு அவங்களுக்கு தெரிஞ்சாதான் எதாவது வழி பிறக்கும்..வெயிட் பண்ணு வேறெதாவது வழி இருக்கான்னு பாப்போம்.. " ரம்யா வேறெதும் சொல்லத் தோன்றாமல் அமைதியானாள்..

இடையிடையே பங்கஜம் போனில் பவியிடம் பேசினாள்..

அந்த பொழுதை கழித்துவிட்டு வீட்டிற்கு வந்தாள் பவி.. எப்பொழுதும் பாட்டியிடம் சென்று பேசிவிட்டு வரும் பவி அன்று அவளறைக்கு செல்வதை தவிர்த்தாள்.. ஏனோ எதிரியாகத் தெரிந்தாள் பாட்டி..
ரிஷியிடமும் பேச மனம் வரவில்லை.. அவனை அவமானப் படுத்திவிட்டு திரும்ப எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது எனத் தடுமாறினாள்..

நடேசனும் சுகுமாரிப் பாட்டியிடம் இதைப் பற்றி பேசாமல் அமைதி காத்தார்.. அம்மா கொஞ்சம் ஆஸ்வாசம் ஆகட்டும் என்று..

இப்படியே தவிப்புடன் ஒருவாரம் ஓடியது..

அன்று ஞாயிற்றுக் கிழமை..

ரிஷியிடமிருந்து கால் வந்தது.. எடுத்துப் பேசவே பயமாக இருந்தது பவிக்கு.. மாடிக்கு சென்று தயக்கத்துடன் மெள்ள எடுத்தாள்..

" ஹலோ... பவி... "

" ம்ம்ம்.. சொல்லுங்க ரிஷி.. எ.. எப்டி இருக்கீங்க.."

" ஹ்ம்ம்.. எதோ இருக்கேன்.. என்ன ஆச்சு உங்க பாட்டிக்கு.. அம்மா ரொம்ப கோபத்ல இருக்காங்க.. உங்க பாட்டி ஏன் அப்டி பேசினாங்க.. எதனால.. நான் அத எதிர்பாக்கல.. ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது.. ரொம்ப மூட் அவுட் ஆயிருச்சு.. அ.. அதான் உன்கிட்ட கூட பேசல.. நீயாவது கால் பண்ணுவேன்னு பாத்தேன்.. ப்ச்.. பண்ணல.. மனசு கேக்கல.. அதான் கால் பண்ணேன்.."

பெருமூச்செறிந்தாள் பவி.." எ.. எனக்கும் உங்கள்ட்ட பேச ரொம்ப தயக்கமா இருந்தது ரிஷி.. வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவமானப் படுத்தினமாதிரி ஆச்சே.. எந்த முகத்த வெச்சுட்டு உங்கள்ட்ட பேசறதுன்னு பயமாயிருச்சு.. அதான் கால் பண்ணல.. ஐ... ஐ' ம் ரியலி சாரி ரிஷி.. எ.. என்ன மன்னிச்சிடுங்க.."

" ஹே.. இதுல உன்மேல என்ன தப்பு இருக்கு.. நீ என்ன பண்ணுவ பாவம்.. உங்க பாட்டி பண்ணினதுக்கு.. இப்போ இவங்கள எப்டி சமாளிக்கறதுன்னு தான் ரொம்ப யோசனையா இருக்கு.. "

" நம்ப கல்யாணம் நடக்குமான்னு ரொம்ப பயமா இருக்கு ரிஷி.. உ.. உங்கள விட்டுட்டு வேறொருத்தரோட வாழ என் மனசு இடம் குடுக்காது.. நா.. நா... செத்.." அவள் தேம்பி அழ..

" பவி.... ப்ளீஸ்.. நம்ப கல்யாணம் நிச்சயம் நடக்கும்.. நீ எனக்குத்தான்.. எல்லாரோட ஒப்புதலோடதான் நம்ம கல்யாணம் நடக்கனும்னு காத்திட்டு இருக்கேன்.. ஹூம்.. உன்ன கூட்டிட்டு போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க எவ்வளவு நேரம் ஆகும்.. ம்ம்ம்.. அது வேண்டாம்னுதானே பொறுமையா இருக்கேன்.. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியனும்.. உங்க பாட்டிக்கு எங்க அம்மா என்ன உறவு.. அவங்களுக்கு என்ன துரோகம் செஞ்சாங்க... இது எனக்கு தெரியனும் பவி.. எங்க அம்மாக்கும் அது தெரியாம ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்க.. உங்க பாட்டி எதாவது சொன்னாங்களா.."

" இல்ல ரிஷி.. அன்னிக்கு நடந்ததுலேந்து நான் பாட்டிட்ட பேசல.. பிடிக்கல.. வெறுப்பா வருது.. அவங்கள்ட பேசினா வெடுச்சிடுவேனோன்னு இருக்கு.."

" பவி.. பொறுமையா கேளு.. நமக்காகத் தானே.."

" சரி.. உங்களுக்காகத்தான்.."

" ம்ம்ம்... நீ எதுவும் மனச போட்டு குழப்பிக்காத.. நான் இருக்கேன்.." ரிஷி கூற கொஞ்சம் தெம்பாய் இருந்தது பவிக்கு..

போனை அணைத்து கீழே இறங்கி வந்தவள் மெள்ள பாட்டியின் அறைக்கு சென்றாள்.. சுகுமாரி கண்ணயர்ந்திருந்தாள்.. மெள்ள அழைத்தாள் பவி.. " பா.. பாட்டி.. பாட்டி.." எழுந்திருக்கவில்லை.. கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்..

" ஆ.... " திடுக்கிட்டு விழித்தாள் சுகுமாரி.. எதிரே பவி நிற்க கண்களை குறுக்கி என்ன என்பது போல் பார்த்தாள்.. பவிக்கு எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் தயங்கினாள்.. மனதை திடப்படுத்திக் கொண்டு தொண்டையை செறுமினாள்..

" பா.. பாட்டி... சுந்தரவல்லி மாமி உ... உங்களுக்கு உறவா..."

சுகுமாரியின் முகம் இறுகியது.. அமைதியாக இருந்தது..

" சொ... சொல்லு பாட்டி.. " பவி அழுத்திக் கேட்க பாட்டி தலை நிமிர்ந்து அவளை முழுமையாகப் பார்த்தாள்..

" உனக்கெதுக்கு அதெல்லாம்.. அவ யாராவாவது இருந்துட்டுப் போட்டும்.. அந்த கதையெல்லாம் உனக்கெதுக்கு.."

பவி கொஞ்சம் சூடானாள்.. " இ.. இதுல என்னோட லைஃப் ச... சம்பந்தபட்டிருக்கறதால தான் கேக்கறேன்.."

அவளை ஆழமாக பார்த்தாள் சுகுமாரி.. " உன்னோட வாழ்க்கை.. ம்ம்.. இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கல பவி.. அவாளபத்தி நீ ஒன்னும் தெருஞ்சுக்க வேண்டாம்..."

" ஏன் தெருஞ்சுக்கக் கூடாது.. நான் வாழப் போற இடம்.. அவாளப் பத்தி நான் தானே தெரிஞ்சுக்கனும்.. "

பவியை முறைப்புடன் பார்த்தாள் சுகுமாரி.. " பவி.. அந்த கனவெல்லாம் மறந்துடு.. உனக்கு அவா சம்பந்தமே வேண்டாம்.. இந்த கல்யாணம் நடக்காது.."

பவிக்கும் கோபமும் அழுகையும் கொப்பளித்தது.. " ஏன் பாட்டி... ஏன் நடக்காது... உனக்கும் அவாளுக்கும் என்ன பகை.... உங்க பகைல என் வாழ்க்கைய ஏன் சீரழிக்கறேள்.. இது உனக்கே நியாயமா இருக்கா.." சத்தமாகக் கத்தினாள்.. ஹாலில் அமர்ந்திருந்த நடேசனும் பங்கஜமும் கலவரத்துடன் உள்ளே நுழைந்தனர்..

பாட்டி ஒருகணம் அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.. " நான்... நான் உன் வாழ்க்கைய சீரழிக்கறேனா.. உன்ன காப்பத்த தான்டி அவாள வெளியேத்தினேன்.. என்ன தெரியும் உனக்கு.. ஹூம்... பேச வந்துட்டா..." முகத்தை திருப்பிக் கொண்டாள்..

" பவி.. நீ கொஞ்சம் அமைதியா இரு.. அம்மா.. நீ தானே இவா கல்யாணம் நடக்கனும்னு பிரியபட்டே.. இப்போ நீயே வேண்டாம்னு சொன்னா என்னம்மா அர்த்தம்.. உனக்காகத் தானே நானும் ஒத்துண்டேன்.. இப்போ இவள இப்படியே பட்டமரமா நிக்க வைக்கட்டுமா சொல்லு.." நடேசன் கேட்க..

கொஞ்சம் அமைதிகாத்த சுகுமாரி.. " நான்.. சொல்றத புருஞ்சுக்கோ நடேசா.. அ.. அவளுக்கு வேற நல்ல வரனா பாக்கலாம்.." தயங்கிக் கூறினாள்..

" அதுக்கு நான் உயிரோட இருக்கனும்.. வேற யாருக்காவது என்ன தானம் பண்ணேள் அன்னிக்கே மருந்த குடுச்சுடுவேன்..." பவி பொங்கிக் கதற அனைவரும் ஸ்தம்பித்தனர்.

" பவி... என்னடி இதெல்லாம்.. அபசகுனமா பேசின்டு.. அம்மா உண்மையச் சொல்லுங்கோ.. என்ன காரணம்னு தெரியாம எதுவும் பண்ண முடியாது.. " பங்கஜம் தன்மகளின் வேதனை கண்டு கோபமானாள்.

சுகுமாரிப் பாட்டியின் கண்கள் ஓரித்தில் நிலைத்திருந்தது.. கண்களுக்குள் பழைய காட்சிகள் படமாய் ஓட நீர் திரண்டு மெல்லிய கோடாய் வழிந்தது..

" டேய் குருமூர்த்தி... மொதராத்திரி.. பாத்து பதவீசா நடந்துக்கோ.. அவோ சின்ன பொண்ணு.. என்ன.." பட்டு மாமா காதைக் கடிக்க வெட்கச் சிரிப்புடன் தலை அசைத்தான் குருமூர்த்தி..

பெரிய கூடத்தின் ஓரமாய் அமைந்திருந்த அந்த அறை பூக்களால் நிறைந்திருந்தது. குருமூர்த்தி அசட்டுச் சிரிப்புடன் நிற்க , வேர்வையில் குளித்து விரித்த கண்களுடன் பயந்தபடி நின்றிருந்தாள் சுகுமாரி..

வாத்யார் வந்து நல்ல நேரம் பார்த்து மந்திரங்கள் ஓதி பையனை உள்ளே அனுப்ப.. சுகுமாரியை தைலாவும் , அத்தையும் மாமியும் கையில் பால் சொம்பை திணித்து ஏதேதோ சீண்டி விளையாடினர்.. அவர்கள் ஜாடைமாடையாய் ஏதேதோ கூற ஒன்றும் புரியாமல் விழித்தாள் சுகுமாரி.. சுற்றி நின்றவர்கள் அவளை உள்ளே அனுப்ப ஓர் பெருங்குரல் அவளைத் தடுத்தது..

திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க , பர்வதம் கம்பீரமாக வந்து நின்றாள்.. " இதோ பாருங்கோ.. எம்பையனுக்கு ரவைக்கு காபி சாப்ட்டுதான் பழக்கம்.. பாலெல்லாம் அவன் குடிக்கமாட்டான்.. பொண்ணு கைல காப்பி சொம்ப குடுத்து அனுப்புங்கோ.. சாயங்காலம் போட்டுத் தந்த காபி கழனித்தண்ணா இருந்தது.. அதமாதிரி இல்லாதைக்கு திக்கா போட்டு குடுங்கோ.. கவனிப்புஞ் சரியில்லே.. ஒன்னுஞ்சரியில்லே.. டி சுகுமாரி... மலங்க மலங்க நிக்காதே.. என்ன புருஞ்சதா.." பர்வதத்தின் முறைப்பு குலை நடுங்கச் செய்தது சுகுமாரிக்கு..

வழக்கமே இல்லாமல் முதலிரவிற்கு காபியை கேட்கிறாளே என ருக்மணியும் , வேதவல்லியும் அடுக்களைக்கு ஓடினர்.. தயாராக நேரம்பிடிக்க...

" ஹூம்... எல்லாம் தாமசம்.. உங்காத்ல யாருமே சுறுசுறுப்பு கெடையாதா.. ஏங்கானும் சுப்ரமண்யம்.. என் சொந்தக் காராளுக்கு படுக்க அறை தயார் பண்ணி குடுக்க சொன்னா கூடத்லே படுக்கச் சொன்னேளாமே.. ம்ம்ம்.. தட்டுகெட்டு போனவான்னு நெனச்சீரோ.. " பர்வதம் உச்சஸ்தாயில் கத்த..

" ஹையோ.. அ... அதெல்லம் இல்ல மாமி.. இருந்தது நாலு ரூம்புதான் அதுல உங்காத்து பேர் தான் இருக்கா.. பத்தாதைக்கு கூடத்ல படுத்துக்கலாம்னு சொன்னேன்.. அவ்ளவு தான்.." குறுகினார் சுப்ரமண்யம்..

" நன்னாத்தான் கவனிக்கிறீர் ஓய்.. பெருங்குடும்பம்னு தெரியும்லயோ.. வாடகைக்கு ஒரு எடத்த புடுச்சு விடறது.. எலிவலை மாதிரி இந்த இத்துணூன்டு மண்டபம் யாருக்கு பத்தும்.. ஒன்னுமில்லாதவா குடும்பத்லே பொண்ணெடுத்தா இப்டித் தான்.. ஹூம்.." இளக்காரமாய் பார்த்தாள் பர்வதம்..

பேச வாயின்றி அமைதியாக இருந்தார் சுப்ரமண்யம்..

சுடசுட காபி சொம்பை துணியில் பிடித்தபடி ஓடி வந்தாள் தைலா.. அதை சுகுமாரியின் கையில் திணித்து பால் சொம்பை வாங்கிக் கொண்டாள்..

மெள்ளிய துணியில் சூடுதாங்காமல் விரல்கள் சுட்டது சுகுமாரிக்கு..

" நாழி ஆயிடுத்து.. நல்ல நேரம் போயிண்டு இருக்கு.. பொண்ண உள்ள அனுப்புங்கோ.. டி குமாரி.. அவனுக்கு கொதிக்க கொதிக்க குடுக்காதே.. நன்னா ஆத்தி குடு.. என்ன.. ஒன்னுந்தெரியாதவள தானம் பண்ணிட்டு.. ஹூம்.. ஏம்மா ருக்மிணி.. பொண்ணுக்கு மாத்துத் துணி குடுத்துவிட்டேளா.. " பர்வதம் சத்தமாகக் கேட்க பெற்றவள் கூனிப் போனாள்.. மெள்ள தலை அசைத்தாள்..

காப்பி சொம்புடன் சுகுமாரி உள்ளே நுழைய கதவு மூடப்பட்டது.. மடிசார் புடவை மூட்டையாக உடலை சுற்றி இருக்க , நகைகள் முள்ளாய் குத்த , தலையில் சுற்றிய பூச்சடை பின் முதுகில் நீர் பொழிய கசகசத்து போயிருந்தாள்.. அடுத்து என்ன நடக்க போகிறது.. எதற்கு அவனுடன் இருக்க வேண்டும் , எதற்கிந்த சம்பிரதாயம் என எதுவும் புரிபடாமல் ஒருவித பயத்துடன் மருண்ட கண்களுடன் உள்ளே நடந்தாள் சுகுமாரி..

சின்ன விளக்கு மட்டும் எறிய , பல்லைக் காட்டிக் கொண்டு கட்டிலின் மையத்தில் அமர்த்திருந்தான் குருமூர்த்தி.. முன்பின் தெரியாத ஒருவனுடன் தனித்து விடப்பட்டது பெரும் அச்சத்தை உண்டாக்கியது சுகுமாரிக்கு.. தட்டுத் தடுமாறி அருகில் சென்று நின்றாள். அவனைப் பார்க்க தைரியமின்றி தலையைக் குனிந்து கொண்டாள்..

" சுகு.. ஏன் பயப்படறே.. வா.. வந்து உட்காரு..." அழைத்தான்..

மெள்ள தலை நிமிர்ந்து பார்த்தவள்.. " உங்க... உங்க பக்கத்ல சரிசமமா ஒக்காந்துக்கப்டாதுன்னு அம்மா சொன்னா.. மொதல்ல சேவிக்கனும் சொன்னா... சேவிச்சுடவா.." மெலிதாகக் கேட்டாள்..

முகத்தில் ஆண் கர்வம் விரிந்தது அவனுக்கு.. " ம்ம்ம்... சேவி.. சேவி.. நன்னாத்தான் வளத்திருக்கா.."

அவன் காலைத் தொட்டு வணங்கிவிட்டு எழுந்து நின்றாள்.. அதன் பின் நகர்ந்த அந்த இரவு அவளுக்கு கலவரத்தையே தந்தது..!!

மறுநாள்..

விடிந்தும் விடியாத காலையில் கதவு அடித்துத் தட்டப்படும் ஓசை கேட்டது.. கீழே தரையில் படுத்திருந்தவள் திடுக்கிட்டு எழுந்தாள்.. குருமூர்த்தி கட்டிலில் ஏகாந்தமாய் கிடந்தான்.. அவனைப் பார்க்க பயமாக இருந்தது.. ஒதுங்கி வந்து வேகமாக கதைவைத் திறந்தாள்..

வாசலில் பெரியவர்கள் நிற்க.. பர்வதம் அவளை தலையோடு காலாய் உற்றுப் பார்த்தாள்.. கூசியது சுகுமாரிக்கு..

சடங்குகள் எல்லாம் முடிந்து படையோடு கிளம்பினார்கள்..

லோக நாயகி எங்கு சிண்டு முடியலாம் என பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிடைத்தது வாய்ப்பு.. வேகமாக பர்வதத்திடம் வந்து காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.. கேட்டு பர்வதம் முகம் கோபத்தில் சிவந்தது..

" ஓய் சுப்ரமண்யம்.. இங்க வாரும்.. என்னங்கானும் கட்டு சாதக் கூடைல இட்லியக் காணம்.. ம்ம்ம்.. புளுச்சுப்போன தயிருஞ்சாதமும் , புளியோதரையும் கட்டிருக்கேள்.. எங்களப் பாத்தா என்ன இழுச்சவாயின்னு எழுதி ஒட்டி இருக்கா.. என்ன ஓய் கல்யாணம் நடத்தினீர்.. நேத்தைக்கு என்னடான்னா இலைல ரெண்டே ரெண்டு பதார்த்தப் போட்டு சப்பக் கட்டு கட்டினீர்.. இன்னிக்கு என்னடான்னா பழயஞ்சாத்த பெசஞ்சு கொடுக்கறே.. ம்ம்ம்.. உம்பொண்ண தானம் பண்ணியாச்சுங்கற திமிரா...

ஆமா.. பாக்கி இருக்கற இருபது பவுன் நகைய எப்பப் போடப்போறேள்.. இந்தாங்கோ அண்ணா.. எல்லாத்தையும் நானே கேக்கனுமா.. ஊமையா நிக்கறேளே.. " சுப்ரமணியத்திடம் கத்திவிட்டு சதாசிவத்திடம் கடிந்து கொண்டாள்..

பதறிப் போன சுப்ரமண்யம்.. " ஐயோ.. மன்னிக்கனும்.. எதோ தெரியாம பண்ணிட்டா , இட்லிய இப்பவே தயார் பண்ணச் சொல்றேன்.. கொஞ்சம் பொறுத்துக்கோங்கோ.." பம்மினார்..

" என்னங்கானும்... நகையப்பத்தி கேட்டா இட்லிய குடுக்கறேங்கறே.. இப்போ மீதி நகையப் போடலயோ உம்ம பொண்ண இங்கயே விட்டுட்டு போயிடுவேன்.. உம்மாத்லயே வெச்சுக்கோ.."

" அய்யோ.. அப்டிலாம் பண்ணிடாதேள்.. ஆ.. ஆறுமாசம் அவகாசம் கேட்ருந்தேனே.. நீங்களும் ஒப்புத்துண்டேளே.." பதறினார் சுப்ரமண்யம்..

" ஹூம்.. உம்ம உபசாரத்தப் பாத்து நேக்கு நம்பிக்கையே போய்டுத்து.. நகைய தயார்பண்ணிட்டு பொண்ண நீயே கூட்டிண்டு வாரும்... டேய் குரு மூர்த்தி கெளம்புடா.. லோகா எல்லாத்தையும் வண்டில ஏத்துடி.. அண்ணா வாங்கோ போலாம்.." அவள் கர்ஜித்துக் கொண்டே நகர.. பின்னால் குருமூர்த்தியும் எந்தவித உணர்வுமின்றி சென்றான்..

" ஐயயோ.. மாமி.. மாமி... கோபப்படாதேள்.. எப்டியாவது.. என் தலைய அடமானம் வெச்சாவது நகைய குடுத்தடறேன்.. என் பொண்ண வாழவெட்டி ஆக்கிடாதேள்.. சம்பந்தி நீங்களும் கொஞ்சம் சொல்லுங்கோ.." காலில் விழாத குறையாகக் கெஞ்சினார் சுப்ரமண்யம்.. அதிர்ச்சி மேலிட கண்களை விரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி..

கொஞ்சம் மனசிறங்கியவளாய் " ஹூம்.. ஏதோ பாவம் பாத்து விடறேன்.. இந்த மாசத்துக்குள்ள நகையப் போடலே உம்ம பொண்ண உம்மாத்துக்கு அனுப்ச்சு புடுவேன்.. ஜாக்ரதை... அடியே குமாரி.. போய் வண்டில ஏறு.. பொண்ண பெத்ருக்கார் பாரு பொண்ண.. ஜடம் மாதிரி.. போ.. போ..." பர்வதம் இளக்காரமாக மிரட்ட பின்னால் நின்ற லோகநாயகி வாய் பொத்தி சிரித்தாள்..

மனதில் சுமையுடன் பயத்தையும் கலவரத்தையும் சுமந்து கொண்டு மெள்ள குதிரை வண்டியில் ஏறினாள் சுகுமாரி.. அடுத்து நடக்கப் போகும் கொடுமைகள் அறியாமல்..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom